Search This Blog

7.2.15

உமாசங்கர் அய்.ஏ.எஸ் பிரச்சினையும்-மதப் பிரச்சாரமும்

உமா சங்கர் பிரச்சினை


தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் கிறித்துவ மதப் பிரச்சாரம் செய்கிறார். இது அரசுப் பணியாளர்கள் ஒழுங்கு முறைக்கு எதிரானது  என்கிற சர்ச்சைப் புயலைக் கிளப்பியது.


தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உமாசங்கருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.

துக்ளக் இதழ்கூட அரசுப் பணியாளர்கள் மதப் பிரச்சாரம் செய்வது கூடாது என்று எழுதியிருப்பதுதான் ஆச்சரியம்.


கிறித்துவ மதப்பிரச்சாரம் மட்டுமல்ல; எந்த மதப் பிரச்சாரத்தையும் எந்த அரசு அலுவலரும் செய்யக் கூடாது என்பதில் இரு கருத்துக்கு இடமிருக்க முடியாது.

இதில் பிரச்சினை என்னவென்றால் உயர் நிலைப் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் சங்கர மடத்துக்கு வந்து ஆசிர்வாதம் வாங்கும் போது இவர்கள் எல்லாம் எங்கு போயிருந்தனர்?


தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த டி.என். சேஷன், தான் வகிக்கும் பொறுப்பின் சீலத்தை மறந்து மேல் சட்டையின்றி பூணூல் திருமேனியுடன், சங்கர மடத்திற்குச் சென்றதும், அங்கு அவர் கைத்தடியைச் சுழற்றித் தொண்டர் அணிப் பணியைச் செய்தாரே அப்பொழுது எங்கே போனார்கள் இவர்கள்?


குடியரசுத் தலைவராக இருக்கக் கூடியவர் திருப்பதி வந்து தரிசனம் செய்வதும், சங்கர மடத்திற்கு வந்து தரையில் உட்காருவதும் எந்த வகை மதச் சார்பின்மை?

அரசுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் எல்லாம் இந்து மதச் சடங்காச்சாரத்துடன் நடக்கின்றனவே - பூமி பூஜை நடத்துவதும் அந்த நிகழ்ச்சியும் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து இந்து மதச் சடங்குகளைச் செய்ய வைப்பது எந்த வகையில் சரியானது - சட்ட சம்மதம் பெற்றது - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின்மைக்கு உட்பட்டது? புட்டபர்த்தி சாயிபாபாவிடம் ஆசி பெற்ற அதிகாரிகளின், அமைச்சர்களின் பட்டியல் தேவையா?


ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் அரசுக்குச் சொந்தமான வானொலியைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க இந்து மதப்பிரச்சாரம் செய்தாரா இல்லையா?


இந்தியாவை இந்து மயமாக்குவோம் - இந்தியாவில் உள்ளவர்கள் கிறித்தவராக இருந்தாலும், முசுலிமாக இருந்தாலும் அவர்களும் - இந்துக்கள்தான் என்கிற அளவுக்கு இடம் கொடுத்தது அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள மதச் சார்பின்மைப் பகுதியைக் கிழித்துக் காலில் போட்டு மிதிப்பது ஆகாதா?


அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்ற வார்த்தையையே தூக்கி எறிந்து விளம்பரம் கொடுத்தது அரசுகளின் உள்ளுணர்வை வெளிப்படுத்தக் கூடியதே!


அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில் அரசு அலுவலகங்கள் உண்மையான மதச் சார்பற்ற தன்மையுடன் விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் எந்த மதத் தொடர்பான கடவுள் படங்களும் அரசு அலுவலகத்தில் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பினாரே - அதனைப் பார்ப்பன ஏடுகள் எல்லாம் எப்படி விமர்சித்தன?


நீதிமன்ற வளாகத்திலேயும், காவல் துறை அலுவலக வளாகங்களுக்குள்ளேயே கோயில்களைக் கட்டுவதும் பூஜை செய்வதும் எல்லாம் மதச் சார்பற்ற தன்மைக்கு உகந்தது தானா?


மதச் சார்பின்மை என்றால் எந்த மதத்தோடும் தொடர்பு இல்லாதது; அரசுக்கு மதம் கிடையாது என்ற உண்மைக்கு மாறாக தங்கள் வசதிக்கு ஏற்ப, எல்லா மதங்களையும் சமமாக மதிப்பது என்று விளக்கம் சொல்லுவது பச்சையான மோசடியல்லவா!


காவல் நிலையங்களில் ஆயுத பூஜை என்ற பெயரால் வாழை மரம் கட்டி ஒலி பெருக்கி வைத்துத் தடபுடலாகக் கொண்டாடுவது எந்த வகை மதச்சார்பின்மை?


அரசுக்குச் சொந்தமான இடங்களில் அத்துமீறிக் கோயில்களைக் கட்டுவது, அக்கோயில்களில் நடைபெறும் குட முழுக்கு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்வது இரட்டை சட்ட மீறல் தானே!


அதுவும் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவையில் உள்ள அத்தனை அமைச்சர்களும் தாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் திருநீறும், குங்குமமும் பூசி  விளம்பரம் செய்வது ஒழுங்கு மீறல் அல்லவா?


மத உணர்வும், ஜாதி உணர்வும் பொங்கி வழியும் ஒரு நாட்டில் இத்தகைய மத அடையாளங்கள் நேர்மை தவறுவதற்கு வழி வகுக்காதா?

உமா சங்கர் அய்.ஏ.எஸ். பிரச்சினைக்குப் பிறகாவது உண்மையான மதச்சார்பின்மை உறுதிப்படுத்தப்படுமா எங்கே பார்ப்போம்!

                          ----------------------------”விடுதலை” தலையங்கம் 7-2-2015

40 comments:

Babu said...

mathathai yarum kurai kuravilai,yesu eranthavanai eluppa enakku asirvathithullar entu sounnal,solruvan madaiyana,ella ketkiravani madayan akuurala.apadina yesu vai muthalil eluppi erukka vendiathu thane,yenya onntum ellathathai, perithu paduthirr.

தமிழ் ஓவியா said...

முதலில் மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள்!

பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம் மோடிக்கு அரியானா பெண்கள் அறிவுறுத்தல்

ஜின்த், பிப்.8-_ அரி யானா மாநிலம், ஜின்த் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று முதலில் மோடி தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து காட்டிய பிறகு ஊருக்கு உபதேசம் செய்யட்டும் என்று கூறியுள்ளது. அரியானா மாநிலத் தில் சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை யைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தையை படிக்க வையுங்கள் என்ற முழக்கத்துடன் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி சில திட்டங்களை அறி வித்தார். அங்கு பேசும் போது அரியானாவில் தான் பெண்கள் நிலை மிகவும் மோசமாக உள் ளது. இங்கு தான் பெண் களை கணவன்கள் சரி யாக நடத்த மறுக்கி றார்கள்; பெண்கள் சமூக அக்கறையின்றி வாழ் கிறார்கள் என்று பேசி னார். மாதம்தோறும் 10,000 கடிதங்கள் மோடிக்கு!

இதற்கு அரியா னாவைச் சேர்ந்த பல் வேறு அமைப்புகள் கண் டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் அரி யானா ஜின்த் மாவட்டத் தில் உள்ள பெண்கள் அமைப்பு முதலில் மோடி தனது மனைவியுடன் வாழ்ந்து காட்டட்டும் என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் வாரம் ஒரு முறை மோடிக்கு மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி 10000 கடிதங்கள் எழுதுவோம். அவர் தனது மனைவி யுடன் சேர்ந்து வாழும் வரை நாங்கள் தொடர்ந்து விடாமல் கடிதம் எழுது வோம் என்று கூறியிருந் தனர். மேலும் அவர்கள் கூறியதாவது: உலகப் புகழ் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, விளை யாட்டு வீராங்கனை சானியா நெய்வால், ஹாக்கி வீராங்கனை சுமன் பால், மல்யுத்த வீராங்கனை சுமன் கத்து போன்றோர் அரியானா பெண்கள்தான், உங்களது அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்களும் அரியானாவைச் சேர்ந்த வர்கள் தான். மேலும் இந்தியாவிலேயே அதிக அளவில் அயல்நாடு சென்று பெரிய பதவியில் இருக்கும் பெண்களில் அரியானாவைச் சேர்ந் தவர் தான் அதிகம். பெண்களுக்கு எதிரான நிலை அரியானாவில் மாத்திரம் இல்லை, இந்தியா முழுவதும் இந்த நிலை உள்ளது. ஆனால் எங்கள் மாநிலத்தை மாத் திரம் சுட்டிக்காட்டியுள் ளார். ஒபாமாவைப் பார்த்தாவது திருந்த வேண்டாமா?

சமீபத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வந்திருந் தார். அவர் இரண்டு முறையும் தனது மனைவி யுடன் வருகை தந்தார். இது அவர் இந்த உலக மக்களுக்கு கூறும் சிறந்த எடுத்துக்காட்டாக கருது கிறேன் என்று அவரே கூறுகிறார். எந்த ஒரு அயல்நாட்டுச் சுற்றுப் பயணத்திற்குச் சென் றாலும் தனது மனை வியை அழைத்துச் செல் லாமலிருப்பதில்லை. அவரை தனது நண்பர் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு இருக்கும் மோடி அவரிடம் இருந்து குடும்பவாழ்க்கையில் மனைவியின் முதன்மைத் துவம் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? முதலில் திருமணம் பிறகு சில ஆண்டு மண வாழ்க்கை அதன் பிறகு அந்தப் பெண்ணை தனி மையில் விட்டுவிட்டு வெளியேறியவர் அந்த பெண்ணின் நிலையைப் பற்றி சிறிதாவது சிந்தித் துப் பார்த்தாரா? பெண்களின் நிலை பற்றிப் பேசும் முன் தான் அதற்கு எடுத்துக்காட் டாக இருக்கவேண்டும். முதலில் தனது மனை வியை அழைத்து வந்து குடும்பம் நடத்திவிட்டு, ஊருக்கு உபதேசம் செய் யட்டும்! அவர் தனது மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தும் வரை வாரத்திற்கு 10,000 கடிதங்கள் தொடர்ந்து எழுதுவோம் என்று கூறி னார்கள் மேலும் ஜின்த் மாவட்டத்தில் உள்ள பல்வா என்ற சிற்றூரைச் சேர்ந்த ஜில்லா பரிஷத் தலைவி சுரீந்தர் தேவி கூறும்போது விரைவில் நாங்கள் எங்கள் ஜில்லா பரிஷத்தின் மூலம் மோடி தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்மானம் இயற்ற வற் புறுத்துவோம் எனக் கூறினார்கள்.

இந்தப் பெண்களின் கோரிக்கை குறித்து அரி யானா பாஜக எந்த கருத் தும் கூற மறுத்துவிட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/95831.html#ixzz3R9bvfYfo

தமிழ் ஓவியா said...

கணவனின் வருவாயை அறிய தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனைவிக்கு உரிமை உண்டு
மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி, பிப். 8_ கணவனின் சொத்து விவ ரங்கள், முதலீடுகள் மற் றும் பிற சொத்துகள் உள் ளிட்ட பல்வேறு வருவாய் குறித்த தகவல்களை அறிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனை விக்கு உரிமை உள்ளது என்று மத்திய தகவல் ஆணையம் அளித்தத் தீர்ப்பில் கூறி உள்ளது.

குடும்ப வன்முறை பாதிப் புக்கு ஆளாகிய மனைவி யின் மனுவின்மீதான வழக் கில் மத்திய தகவல் ஆணை யம் அளித்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அந்த வழக்கில் தனி நபர் வரு வாய் என்பது தனிப்பட்ட தகவல் என்று வாதிடப் பட்டது. அப்பெண்ணின் கணவன் பணிபுரியும் டில்லி டிரான்ஸ்கோ நிறு வனத்துக்கு கணவன் வருவாய் குறித்து, அவர் மனைவியின் வாழ்வாதார உரிமைக்குத் தேவையான தகவலை அளிக்க ஆணை யம் உத்தரவு பிறப்பித்துள் ளது. தகவல் பெறும் உரி மைச்சட்டத்தின்கீழ் தனிப் பட்டவர்களின் தகவலை அளிக்கக்கூடாது என்பதி லிருந்து விதிவிலக்காக மனைவிக்கு கணவனின் வருவாய்குறித்த தகவல் அளிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் வரதட் சணையாக அளிக்கப்பட் டது உள்பட கணவனின் சொத்து விவரங்கள், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயன் றது, மனைவியை பொரு ளாதார ஆதரவின்றி கைவிட்டது உள்ளிட்ட வைகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து தகவல்களை மனைவி கேட்டுள்ளார்.

தீர்ப்பில் கூறும்போது, தனிப்பட்ட பிரச்சினை என்று பார்க்காமல் பொதுப் பிரச்சினையாகவே இதைப்பார்க்க வேண்டும் என்று தகவல் ஆணையர் எம்.சிறீதர் ஆச்சார்யலு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, டில்லி டிரான்ஸ்கோ நிறுவனத்திடம் ஒரு பெண் கேட்டுள்ள தகவல் களை அளிக்காமல் தள்ளி விட முடியாது.

தனிநபர்குறித்த தகவல் பாதுகாப்பு என்பதைத் தாண்டி, ஒரு அரசு அலு வலரின் பொதுவான கடமை என்பதில் குடும்ப வன்முறை என்றில்லாமல் மனைவி மற்றும் குழந் தைகளை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. கண வனின் வருவாய் குறித்த தகவலை மனைவிக்கு 48 மணி நேரத்துக்குள் டிரான்ஸ்கோ நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் டில்லி உயர்நீதிமன்ற உத்தரவில் கசம் சர்மா எதிர் மகிந்தர் குமார சர்மா வழக்கில் மத்திய தகவல் ஆணை யம் எடுத்துக்காட்டி உள் ளது. டில்லி உயர்நீதிமன்றம் கணவன் மற்றும் மனை வியின் வருவாய், சொத்து மற்றும் முதலீடுகள் குறித்த உறுதிமொழி ஆவணங் களை அளிக்க உத்தர விட் டது. அதற்கு முன்னதாக தனிப்பட்டவர்களின் தகவல் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

பொருளாதாரத்தில் சார்பு நிலைகுறித்தும், பெற்றோர்கள் ஆதரவின் றியும், கணவனின் பரா மரிப்பு இன்றியும் உள்ள மனைவி, தன்னுடைய வாழ்வாதார உரிமையை சவாலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இத்தகவல்கள் மனைவி யின் வாழ்வாதார உரிமை யைப் பொருத்துள்ள தாகும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/95854.html#ixzz3R9coyNWh

தமிழ் ஓவியா said...

தகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே! அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் சந்திரிகா!!

கொழும்பு, பிப்.7 இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொறுப்பேற்ற போது அவருக்கு வாழ்த்து சொன்னதற்காக, தம்மை தகாத வார்த்தைகளால் 19 நிமிடம் திட்டினார் என்று அந்நாட்டின் முன் னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டி யுள்ளார். மேலும் ராஜ பக்சேவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி, நான் விவரித்த போது தொலை பேசி இணைப்பை அவர் துண்டித்து விட்டார் என்றும் சந்திரிகா கூறியுள் ளார். இலங்கை அதிபர் தேர்தலை முன்வைத்து மீண்டும் அரசியல் களத் தில் பரபரப்பானவர் முன் னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க. அவர் அண் மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி யில் கூறியுள்ளதாவது:

நான் அதிபர் பதவியி லிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் அடுத்த அதிபர் வேட்பாளராக ராஜபக் சேவை நிறுத்தினேன். அப்போது இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்களில் 61 பேரில் 56 பேர் ராஜபக் சேவை அதிபர் வேட்பாள ராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சித் தலைமைக்கு பொருத்தமற்றவர் எனவும் தெரிவித்தனர். ஆனால் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை அதிபர் வேட் பாளராக நியமித்தோம். அவரோ, ரணில் விக்ரம சிங்கவுடன் இணைந்து கொண்டு, எனக்கு எதிராக பேசுவது உள்ளிட்ட பல் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ராஜபக்சே முதல் முறையாக அதிப ராகப் பொறுப்பேற்ற பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் பேசி னேன். அப்போது, அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். நான் அமைதி யாக அவர் கூறியவற்றை யெல்லாம் கேட்டு விட்டு, குறிப்பிட்ட சிலர் மட்டுமே அறிந்த அவரின் வாழ்க்கை ரகசியத்தை கூறினேன். உடனே அவர் தொலை பேசி அழைப்பை துண் டித்து விட்டார். பின்னர் மகிந்த ராஜபக்சே என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார். என்னை, அரசின் இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து, என்னை மிகவும் கேவலப்படுத்தி னார்.

எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகாலமாக அவர் நடத்திய அரசியல் சீரழிவு களை பொருட்படுத்த முடியாமல் பல்வேறு தரப் பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர். ஆனால் மீண்டும் ஒருமுறை, நான் அரசியலுக்கு வர விரும் பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மா னித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய அதி பர் மைத்திரிபால சிறீ சேனவை நியமித்தேன். இவ்வாறு சந்திரிகா குமார துங்க கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95758.html#ixzz3R9dsiOt4

தமிழ் ஓவியா said...

கோட்சே விவகாரம்பற்றி ஏன் வாயைத் திறக்கவில்லை?

மகாராட்டிர காங்கிரசு எம்.பி., மோடிக்குக் கடிதம்

மும்பை, பிப்.9 இந் துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நாதுராம் கோட்சேவை வீர நாய கனைப்போல் தற்போது சித்தரித்துக்கொண்டு இருக்கின்றனர், அகிம்சை யின் அடையாளமான காந்தியாரை கொலை செய்தவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து மோடி என்ன சொல்லப் போகிறார் என்று மகாராஷ்டிராவை சேர்ந்த மாநிலங்களவை உறுப் பினர் ஹுசைன் தால்வி கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிபீடத்தில் அமர்ந்த தில் இருந்து இந்துத்துவா அமைப்புகள் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளை விக்கும் வகையில் பொது இடங்களில் பேசி வரு கிறது; இது குறித்து உலக நாடுகளும் தற்போது கண்டனம் கூறத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில் மகாராஷ்டி ராவைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஹுசைன் தால்வி இவ் விவகாரம் குறித்து மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாஜக கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பீடத்தில் அமர்ந் தது, அது ஆட்சி பீடத் தில் அமர்ந்தது முதலே இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையினருக்கு எதிராக பேசிவருகின் றனர்.

பாலத்திற்கு கோட்சேயின் பெயரா?

இந்துத்துவ அமைப்பு களின் தாய் அமைப்பான இந்து மகாசபா மிகவும் பாதகமான ஒரு செயலை கையிலெடுத்து அது குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கோட்சே வின் பிறந்த நாளை மிக வும் சிறப்பாக கொண் டாட அனைவரையும் பொது இடத்திற்கு அழைக்கிறது, சிலைகள் அமைக்க முடிவு செய் கிறது. சமீபத்தில் ராஜஸ் தான் மாநிலத்தில் புதி தாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு பாலத்திற்கு நாதுராம் கோட்சே பெயர் வைக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளால் அகிம்சையின் அடையாள மாக பார்க்கப்படும் காந் தியாரைக் கொன்ற ஒருவனுக்கு இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இன்று ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது? அதுவும் மத் தியில் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாஜகவிற்கு நட்புறவாக உள்ள ஒரு அமைப்பு திடீரென கோட்சேவை புனிதமாக்க முயற்சி செய்வது ஏன்? மகாராஷ்டிரா வில் கோட்சே திரைப்படம், புத்தகம், கோட்சே நாட கம் என பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காந்தியிரைக் கொன்ற கொலைகார னுக்கு ஏன் திடீரென இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் இந்தியாவின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் மோடி(நீங்கள்) இந்துத்துவா அமைப்பு களின் செயலுக்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதிகாத்து வருகிறீர் கள்? இதன் தொடர்ச்சி யாக கோட்சேவிவகாரம் வந்துள்ளது. ஆகையால் இந்தச் செயலுக்குத் தங் களின் நிலை என்ன என் பதை உடனடியாக மக் களிடையே தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.

Read more: http://viduthalai.in/page1/95757.html#ixzz3R9e2NBpI

தமிழ் ஓவியா said...

அறிவோடு சிந்திக்க...


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
(விடுதலை, 23.1.1968)

Read more: http://viduthalai.in/page1/95740.html#ixzz3R9eHmKwc

தமிழ் ஓவியா said...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில்
பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா?: கலைஞர் கண்டனம்


சென்னை, பிப்.7_ காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் இடம் பெற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி _ பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி :- காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா என்ற தலைப்பில் 5.-2-.2015 அன்று விடுதலை தலையங்கம் ஒன்று தீட்டியிருக்கிறதே? கலைஞர் :- நானும் அதைப் படித்தேன்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்விப் பாடத் திட்டத்தில் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு பாடத்தில் இக்கால இலக்கியம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் பாடல் வரிகளான தமிழியக்கம் கவிதைத் தொகுப்பு பத்தாண்டுகளுக்கு மேலாக இடம் பெற்றிருந்ததை நீக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பதை அறிந்த திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், பாரதிதாசன் தமிழ்ப் பேரவை, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, பகுத்தறிவாளர் கழகம் போன்ற அமைப்புகளின் சார்பில் அந்தப் பல்கலைக் கழகத் துணை வேந்தரிடம் அதற்கு எதிராக மனு அளித்திருப்பதாகவும், காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத்தின் போராட்டத் திற்கு தங்களின் ஆதரவு உண்டு என்று தெரிவித் திருப்பதாகவும், பல்கலைக் கழகம் பாரதிதாசனின் பாடல்களை நீக்க நடவடிக்கை எடுத்தால் போராட்டம் நடைபெறு மென்றும் அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் இடம்பெற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் நமது முடிவு. பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபோது, அதைக் காரணம் காட்டி பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆனால், அதிமுக அரசு பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முன் வரவில்லை. டீசல் விலை குறைவு காரணமாக ஒடிசா மாநில அரசு பேருந்துக் கட்டணத்தைக் குறைத்து அறிவித்துள்ளது. லாரிகளின் வாடகைக் கட்டணத்தை, லாரி உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு ரூ.300 வரை குறைத்துள்ளனர்.

எனவே, தமிழக அரசும் பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அம்பேத்கர் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் கோரி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய, ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95773.html#ixzz3R9eXBwBh

தமிழ் ஓவியா said...

வெற்றிக்குறி

திருச்சியில் உயர் திருவாளர் எம்.டி. சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீர்திருத்த திருமண நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி பிறிதோரிடம் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. நமதன்பர் சோமசுந்தரம் அவர்கள் சென்னை அரசாங்க அமைச்சர் கனம் பி. டி. ராஜன் அவர்களது சிறிய தந்தை யென்பதும், தொண்டை மண்டல முதலியார் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்தவரென்பதும் நேயர்கள் அறிந்ததே.

அன்னார் தலைமையில் புரோகிதம் ஒழிந்து சீர்திருத்தத் திருமணம் நடந்ததானது மேற்படி சமூகத்தில் ஒரு பெரும் புரட்சியையுண்டாக்கி விட்ட தென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தச் சமூகத்தார் தாங்கள் ஜாதியில் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்புக் கொண்டிருப்பதோடு புரோகிதத்தையோ, வைதிக மதாச்சார சடங்குகளையோ எக்காரணங் கொண்டும் கைவிட ஒறுப்படாதவர்கள்.

அத்தகைய ஒரு பெரிய வகுப்பில் புரோகிதம் ஒழிந்த சீர்திருத்தத் திருமணம் நடந்ததென்றால், அது நமதியக்கத் திற்கு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும். நமதியக்கக் கொள்கைகள் நாட்டில் எவ்வளவு மலிந்து வருகின்ற தென்பதோடு நமது கொள்கைகள் திட்டங்கள் யாவும் மக்களுக்குத் தங்கள் தினசரி வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க இன்றியமையா தனவாய் இருக்கின்றன வென்பது நன்கு புலனாகும்.

நமது கொள்கைகள் நாடெங்கும் பரவி சர்வ வியாபகமாக வேண்டுவதற்குப் பார்ப்பனியக் கோட்டை களும், சைவக் கோட்டைகளும் தகர்த்தெறியப்பபட வேண்டுமென நாம் பன்முறையும் இடித்திடித்துக் கூறிவந்திருக்கிறோம்.

தலைவரவர்கள் தனது முன்னு ரையில் சுயமரியாதை உலகெலாம் பரவவேண்டுமென அவாவுவதையும், இத்தகைய மணங்கள் நாட்டிற்கு எவ்வகையிலும் புதிதன்று எனவும், இது பழங்கால முறையே என்றும் குறித்திருப்பதைப் பாராட்டுவதோடு இத்தகையத் திருமணங்கள் ஏராளமாக நடைபெற வேண்டுமென்றும் விரும்புகிறோம்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 03.07.1932

Read more: http://viduthalai.in/page1/95751.html#ixzz3R9eri9hI

தமிழ் ஓவியா said...

ஏழைகள் கண்ணீர்

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலை களிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையற்றவர்களாக வெளி யேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர் களாயிருந்தாலும், வாரச்சம்பளம் பெறுகின்றவர்களாயிருந் தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்ற வர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியிருக்கவும் சொந்த குடிசை இல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள், இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான்தார்களோ, முதலாளிகளோ மற்றும் யாராயிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்ன?

இருக்க இடமில்லாமலும் உடுக்க உடை யில்லாமலும், உண்ண உணவில்லாமலும், பெண்டு பிள்ளை களுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப் பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப் பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலை களிலும் தனிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற் சாலைகளிலும் ஆட்களை குறைத்து வருகிறார்கள்.

ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலைகளிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தி யோகஸ்த்தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழி லாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகஸ் தர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப்படுகின்றன.

தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர் களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர்கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும்.

இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர்களும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழிலாளர் களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும், முதலாளிகளும் கைப்பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம். ஆனால் இது நிறை வேறுமா என்றுதான் கேட்கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபிமானி களாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம்.

இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

-குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.08.1932

Read more: http://viduthalai.in/page1/95752.html#ixzz3R9f0ujOy

தமிழ் ஓவியா said...

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

செல்வாக்கோ, வன்மையோ பெற்ற எந்தக் கட்சியே யாயினும் எந்த இயக்கமே யாயினும் அதிலுள்ள அங்கத் தினருள் அபிப்பிராய பேதங்கள் எழுவதும், இருப்பதும் சர்வ சாதாரணம். உண்மையுணர்ந்து அத்தகைய அபிப்பிராய பேதங்கள் பரிகரிக்கப்பட்டால் பின்னர் ஆக்க வேலைகள் தீவிரமாய் நடைபெறுவதும், சரித்திர சம்பந்தமான, யாரும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

உலகெங்கும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதைக் கேட்டும் கண்டும் வருகிறோம். இத்தகைய சம்பவங்கள் கட்சியின் முன்னேற்றத்தையும் பலத்தையும் குறிக்கிற தேயன்றி வேறில்லை. பார்ப்பனரல்லாதார் கட்சி ஆதிக்கத்திலிருப்பதும் பார்ப்பனரல்லாத மந்திரிசபை அதிகாரத்திலிருப்பதம் இக்கட்சியை ஒழிக்க அதிகாரத்தைக் குலைக்க எதிரிகள் செய்யும் சூழ்ச்சிகளும் விஷமங்களும் எண்ணிறந்தன.

இதன் உண்மையறியாது நம் மக்கள் இன்னும் ஏமாந்தே வருகின்றனர். சில தினங்களுக்குமன் சென்னை அரசாங்க மந்திரி கனம் முனுசாமி நாயுடு அவர்கள் மீது நம்பிக்கை இல்லைத் தீர்மானம் கொண்டு வருவதாக இருந்த விஷயமே தக்க சான்றாகும். அதற்காகக் கூடிய தென்னிந்திய நலவுரிமைச்சங்க நிர்வாகக் கமிட்டியின் கூட்ட நடவடிக்கைகளைப் பிறிதோரிடம் பிரசுரித்துள்ளோம்.

யாராயிருந்தபோதிலும் தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லவும், குறையைத் தெரிவித்துக் கொள்ளவும் உரிமை உண்டு என்பதை நாம் ஒப்புக் கொண்டபோதிலும், இந்தியாவுக்கு வழங்கப்போகும் சீர்திருத்தங்கள் பிரதாபத் தில் இருக்கின்றன. கட்சி பலத்தை உத்தேசித்து ஏகோபித்த ஆக்க வேலையில் ஈடுபட வேண்டிய பொழுது இத்தகை யதோர் சம்பவம் நடந்ததையறிய உண்மையில் வருந்துகிறோம்.

அஃதெவ்வாராயினும் இத்தகையதோர்த் தீர்மானம் கொணர்ந்த அங்கத்தினரே முன்யோசனையுடனும், பகுத்தறிவுடனும் நடந்து மேற்படி தீர்மானத்தை வாபஸ் வாங்கிக் கொண்டதறிய சந்தோஷிக்கிறோம். பார்ப்பனரல்லாதார் கட்சி கட்டுக் குலைந்து போகப் போகிறது என்று அகந்தையும், வீராப்பும் கொண்டிருந்த எதிரிகள் சூடுண்ட பூனை போலடங்கினறென்றே சொல்லு வோம்.

பார்ப்பனரல்லாத மக்கள் ஒருமைப்பட்டு ஆக்க வேலையில் முழு மனதுடன் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
குடிஅரசு - துணைத்தலையங்கம் - 21.08.1932

Read more: http://viduthalai.in/page1/95753.html#ixzz3R9fA6Tsc

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச்சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது. மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு,

காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவதுதான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

நம்மைப் பற்றி நாமேதான் கவலை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நம் கையூன்றி நாமேதான் கரணம் போடவேண்டும். நமக்காக வாதாடுகிறவர்களோ நமக்கு உதவி செய்கிறவர்களோ யாரும் இல்லை.

நம்முடைய வேலை மிகக் கடினமானது. அதற்கு யாருடைய உதவியும் ஆதரவும் நமக்குக் கிடையாது. ஆனால் நாம் கடைசிவரை போராடித்தான் தீர வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/95756.html#ixzz3R9fGtUHm

தமிழ் ஓவியா said...

காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதத்தை கட்டாயமாக்க முடியாது
மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை, பிப். 7_ காதல் திருமணத்தின்போது பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு என கூறி யுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதி மன்றம் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கவுரவ கொலைகள், காத லால் தற்கொலை, கடத் தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க அரசு தவறிவிட் டது. காதல் என்ற பெய ரில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி, பிற ஜாதி யினரை திருமணம் செய்கின் றனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் வரதட் சணை கேட்டு கொடு மைப்படுத்தும் நிலையும் உள்ளது. இதனால் பெண் கள் பெருமளவு பாதிக்கப் படுகின்றனர். வன்முறை கூட ஏற்படுகிறது. காதல் திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் ஆதரவு கிடைப்பதில்லை.

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கவுரவ கொலை கள் நடந்துள்ள நிலையில், அதை தடுக்க அரசு உறு தியான நடவடிக்கை எடுக்க வில்லை. இவற்றை தடுக் கும் விதமாக ஒவ்வொரு கலப்பு திருமணத்தையும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பதிவு செய்யக் கூடாது எனவும், பெற்றோர் உடன் வருவதை கட்டா யப்படுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எஸ்.தமிழ் வாணன் ஆகியோர், அர சியலமைப்பு சட்டப்படி ஒருவருக்கு, அவரது வாழ்க் கைத் துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு. இதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page1/95793.html#ixzz3R9fcWiwq

தமிழ் ஓவியா said...

யார் அந்த விஷமிகள்?

தேர்தல் நேரமாக இருந்தாலும், தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சிறீரங்கத்தில் தந்தை பெரியார் சிலையை மட்டும் மூடிய அதிகாரிகள் யார்?

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் உயர்நீதிமன்ற ஆணையைக் காட்டி எடுத்துச் சொன்னபின், தந்தை பெரியார் சிலை மீது மூடியிருந்த துணி அகற்றப்பட்டது.

உயர்நீதிமன்ற ஆணைக்கு விரோதமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

Read more: http://viduthalai.in/page1/95795.html#ixzz3R9foKQqW

தமிழ் ஓவியா said...

சட்டம் போட்டால் போதுமா?

வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருளோ கொடுத்தால் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஓராண்டு என்றுதான் இருந்தது - இப்பொ ழுது ஈராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற் கத்தக்கதுதான் என்றாலும் இதனால் மட்டும் எதிர் பார்க்கும் பலன் கிடைத்து விடுமா என்பது சந்தேகமே!

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் பணம் பட்டுவாடா நடைபெற்றதே.

அதற்காக நடைமுறையில் இருந்து வந்த சட்டத்தின்படி ஓராண்டு தண்டிக்கப்பட்ட வர்கள் யார்? அப்படி ஒரு பட்டியல் இருக்கிறதா?

சில நேரங்களில் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி கூட வெளிவந்ததுண்டு.

கைது என்ற செய்தி வெளிவந்ததே தவிர, நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில் யாராவது தண்டிக்கப்பட் டார்களா? இல்லை என்கிற போது இந்தச் சட்டத்தின் மூலம் மட்டும் கையூட்டுக் கொடுப்பது தடுக்கப்பட்டு விடும் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

(பணத்தை நேரடியாகப் பட்டுவாடா செய்வதற்குப் பதில் டோக்கன் கொடுக்கிறார்களாம் - சட்டத்தை உடைக்க வழியா தெரியாது?).

பெரும்பாலும் ஆளும் கட்சியினர் தான் வாக் காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் முன்னணி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது காவல்துறை அவர்களைக் கைது செய்யும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கச்சித மாகப் பணம் பட்டு வாடா செய்ய காவல்துறை பாது காப்பாக இல்லாமல் இருந்தாலே பெரிய காரியம்தான்.

நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கச் செய்து, ஆளும் கட்சி, வாக்காளர் களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய நடை பாதை திறந்துவிட வில்லையா?

தேர்தல் முடிந்தவுடன் தமிழகத் தேர்தல் ஆணையர் என்ன சொன்னார்? வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது உண்மை. அதனைத் தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையரே வெளிப் படையாக ஒப்புக் கொண்டாரே. அவர்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன?

இந்த அதிகார வர்க்கத்தை வைத்துக் கொண்டு எந்த சட்டம் போட்டாலும் வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதை எப்படித் தடுக்கமுடியும்?

நாட்டில் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் எந்தத் தரத்தில் இருக்கின்றன? என்பது கவனத்தில் கொள்ளப் பட வேண்டியதுதான்.

வாக்காளர்களே, வாக்களிக்க பணத்தை எதிர்பார்க் கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதா இல்லையா? பணம் கொடுப்பவர்கள் தான் இதற்குக் காரணமா? வாங்குப வர்கள் தான் காரணமா? என்பது பட்டிமன்றத்திற்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கக் கூடும்.

முறையான ஒரு சான்றிதழைப் பெறுவதாக இருந் தாலும் அடிமட்டத்திலிருந்து இலஞ்சம் தேவைப்படு கிறது ; இப்படி சம்பந்தப்

பட்ட அலுவலகங் களில் அறை போட்டு சதா அந்த வேலையில் ஈடுபடும் நிலை இருக்கின்றதே!

கடவுளுக்குக் கூட லஞ்சம் (நேர்த்திக்கடன்) கொடுத்தால் தான் வரம் கிடைக்கும் என்ற கேவலமான மனப்பான்மை தாண்டவமாடும் நாடு இது என்பதை மறந்து விட வேண்டாம்!

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விளம்பரம் செய்தது போல எங்கு நோக்கினும் பிரச்சார ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டாமா? தொலைக் காட்சிகளில் அதற்கென நேரத்தை ஒதுக்கித் தலைவர் களையும், அறிஞர்களையும், சமூகப் பொறுப்பு வாய்ந்த சான்றோர்களையும் அழைத்துப் பேச வைத்தால் என்ன? அது ஓரளவுக்கு தாக்கத்தை உண்டாக்கத்தான் செய்யும். தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் மக்களைப் பார்த்து ஒரு கேள்வியை நாக்கைப் பிடுங்குமாறு கேட்பார்.

நீ பணம் வாங்கிக் கொண்டு தானே ஓட்டுப் போட்டாய்? உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இலஞ்சம் வாங்கினான் என்று சொல்லுவதற்கு உனக்கு யோக்கிதை ஏது? உரிமை ஏது? முதல் போட்டவன் சம்பாதிக்க மாட்டானா? என்ற அடிப்படைக் கேள் வியை பொதுமக்களைப் பார்த்துக் கேட்பார் - அதற்கும் கை தட்டல் கிடைக்கும்.

தந்தை பெரியாரின் மற்றொரு கேள்வி மிகவும் முக்கியமானது. தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள் இவ்வளவுப் பணம்தான் செலவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது; தேர்தலில் போட்டி யிடுபவர்கள், அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், தோல்வியுற்றவர்களாக இருந்தாலும் சரி, தேர்தலில் செலவழித்த உண்மையான கணக்கைத்தான் காட்டுகிறார்களா? என்ற கேள்விக்குப் பிரதமராக இருந்தாலும், நாணயமாகப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

பணம் பெற்றுக் கொண்டுதான் செய்தி வெளியிட முடியும் என்கிற ஒழுக்கக்கேடு நிர்வாணமாக கூத்தாடும் ஒரு நாட்டில் வெறும் சட்டங்கள் ஏட்டுச் சுரைக் காயாகத்தான் இருக்க முடியும்.

பக்திப் பிரச்சாரத்துக்காக ஒதுக்கப்படும் காலத் தையும் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்து பொது ஒழுக்கத்தைப் பரப்புவதற்காக செயல்படட்டும்.

கண்டிப்பாக நல்லதோர் தாக்கம் ஏற்படத்தான் செய்யும்.

Read more: http://viduthalai.in/page1/95650.html#ixzz3R9guC1tj

தமிழ் ஓவியா said...

கடவுள்பற்றி துணுக்குத் துக்கடா! சித்திரபுத்திரன்

சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே.

ராமன்: அதுமாத்திரம் அதிசயமில்லப்பா, பசியா வரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார். ஒருவன் கூட ஒருகை கூழ் ஊத்த மாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இதுதான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லை என்றால் இது முட்டாள்தனமான சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதோ அதேபோல் சர்வ சக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச் செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- விடுதலை (22.2.1972)

தமிழ் ஓவியா said...

ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரி யங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என் பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.

- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)

Read more: http://viduthalai.in/page1/95692.html#ixzz3R9hjOkSA

தமிழ் ஓவியா said...

ஆயுதம்!

கொஞ்சத் தண்டனையானாலும், அதிகத் தண்டனையானாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

Read more: http://viduthalai.in/page1/95596.html#ixzz3R9ih077w

தமிழ் ஓவியா said...

விடுதலையின் சிறப்பு

எனக்கு வயது 55 ஆகிறது. மாணவப் பருவம் தொட்டு, விடாமல் விடுதலை படித்து வருகின்றேன். ஒருவர் நல்ல மனோதிடமும், பொது அறிவும், அரசியல் தெளிவும் பெற விடுதலையை மட்டும் படித்து வந்தாலே போதும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

ஈமோ என்ற ஓவியத் தொடர் ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான பகுதி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அதில் பெரியவர்களுக்கான செய்திகளும் உள்ளன என்பதை விடாமல் படித்து வரும்போது தெரிந்துகொண்டேன்.

விடுதலை வாசகர் ஒவ்வொரு வரும், தான் படித்த விடுதலை நாளிதழை, விடுதலை நாளிதழ் வாங்காத ஒருவரிடம் கொடுத்து படித்துப் பாருங்கள் என்று சொல்ல வேண்டும். ஏனைய நாளிதழ் களோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கின் றேன்.

- பெரி. காளியப்பன், மதுரை

Read more: http://viduthalai.in/page1/95610.html#ixzz3R9j2v6Ez

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கெட்ட நாள்

கோகுலாஷ்டமி கிருஷ்ணன் பிறந்த நாளாம். ராமநவமி ராமன் பிறந்த நாளாம். அப்படி இருக்கும்போது அஷ்டமி, நவமி கெட்ட நாள் என்று பக்தர்கள் பதறுவது ஏன்? கடவுள்கள் பிறந்தது கெட்ட நாளா?

Read more: http://viduthalai.in/e-paper/96004.html#ixzz3RRgOwKQj

தமிழ் ஓவியா said...

தக்கதோர் அறிவுரை

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியால் நீங்கள் ஆணவம் கொள்ளக் கூடாது. பிஜேபியும் காங்கிரசும் தோல்வி அடைந்த தற்கு அதுவே காரணம். மக்கள் நம்முடன் இருப்ப தைத் தேர்தல் முடிவு உணர்த் துகிறது. மக்கள் நலனில் மட்டுமே கவனம் செலுத்தி, இனி உழைக்க வேண்டும். நமது முதல் நோக்கமே ஊழலை ஒழிப்பதுதான்!

- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெஜ்ரிவால் அறிவுரை

Read more: http://viduthalai.in/e-paper/96004.html#ixzz3RRgWVge0

தமிழ் ஓவியா said...

தேர்தல் தோல்வி மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு கிடைத்த பரிசு அன்னா ஹசாரேவின் ஞானோதயம்


புதுடில்லி, பிப்.11_ டில்லி தேர்தலில் பாஜக விற்குக் கிடைத்த பலத்த தோல்வியை அடுத்து தனது கருத்தை அன்னா ஹசாரே தெரிவித்தார். மத்திய அரசால் குறுக்கு வழியில் இயற்றப்பட்ட நில உரிமைச் சட்டம் மற்றும் கருப்பு பணம் கொண்டு வருவோம் என்று கூறி அதனை செய்யத் தவறியது தான் தோன்றித்தனமாக முடிவு களை எடுத்தது போன்ற சர்வாதிகாரத்தனத்திற்கு கிடைத்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்பு கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்போம் என்று கிளம் பிய இரண்டு பேர்களில் ராம்தேவ் பாபா மற்றும் அன்னா ஹசாரே முக்கிய மானவர்கள். தேர்தல் காலத்தில் மோடியை மிகவும் புகழ்ந்த அன்னா ஹசாரேவிற்கு டில்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மோடி சர்வாதிகாரி யாகத் தெரிகிறார். மோடி கடந்த நாடா ளுமன்ற குளிர்காலக் கூட் டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் விவாதத்தின் மூலம் சட்டத்தை நிறைவேற்றட துணிச்சலில்லாமல் அவசர சட்டமாக பல சட்டங்களைக் கொண்டு வந்தார்.

இதில் முக்கிய மானது நில அபகரிப்புச் சட்டம். இந்தச் சட்டத் தின் மூலம் விவசாயி களின் நிலத்தை அவர் களது அனுமதியின்றி எடுத்துக்கொள்ள முடியும் அதே நேரத்தில் விவசாய நிலங்களுக்கான இழப் பீட்டையும் அந்த நிறு வனங்கள் தர தேவை யில்லை என்ற பல்வேறு விசித்திரமான சட்டவிதி களுடன் நிலஅபகரிப்புச் சட்டம் அவசர அவசர மாக நிறைவேற்றப்பட்டது.

இந்தச்சட்டம் குறித்து அன்னா ஹசாரே கூறி யுள்ளதாவது: நமது நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகிவிட்ட்து. ஆனால் இன்றுவரை விவ சாயிகளின் தற்கொலை தொடர்கிறது. மோடி தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்துள் ளது மிகவும் வேதனை தரக்கூடிய செய்தியாகும். புதிய நில உச்சவரம்பு சட்டம் விவசாயிகளின் தற்கொலையை மேலும் ஊக்கப்படுத்தும் தீமை யான சட்டமாக இருக்கும். மக்களின் நலனில் அக்கறை வைத்துள்ளவர் போல் தேர்தல் காலங் களில் நாடுமுழுவதும் சொல்லிகொண்டு திரிந் தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் விவசாயி களுக்குக் கடுமையான ஏமாற்றத்தைத் தந்து விட்டது. மோடி விவசாயி களை ஏமாற்றி விட்டார். நில அபகரிப்புச் சட்டத் தின் மூலம் விவசாயி களுக்கு தங்களின் நிலத் தின் மீதிருந்த உரிமை முற்றிலும் இல்லாமல் போனது. இது குடிமக் களுக்கு எதிரான சட்ட மாகும். சர்வாதிகார நாட் டில் தான் இதுபோன்று மனம்போன போக்கில் சட்டமியற்றப்படும். கடந்த காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட் டமே மேல், அந்த சட்டத் தில் விவசாயியிடம் வாங்கிய நிலத்தில் அய்ந்து ஆண்டிற்குள் எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்காவிட்டால் திரும்ப விவசாயியிடமே கொடுத்துவிடவேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த அரசு அதை நீக்கி முதலாளி களை முழுமையாக நில உடமையாளராக ஆக்கி விட்டது. ஆங்கிலேயர் களின் காலத்தில் கூட இப்படிப்பட்ட ஒரு கொடூர சட்டம் இல்லை. மோடி முதலாளிகளின் கைப்பாவையாகிவிட்டார். இது போன்ற விவசாயி களுக்கு விரோதமான சட்ட்த்தைக் கொண்டு வந்ததன் மூலம் மோடி மக்களாட்சியில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நடத்த தொடங்கி விட் டார் இதன் காரணமாக டில்லி மக்கள் மோடியை தூக்கி எறிந்துவிட்டார்கள் என கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96000.html#ixzz3RRgdzCNU

தமிழ் ஓவியா said...

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

- ஊசி மிளகாய்

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!

அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க. அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர் உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!

இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!

இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல் மன்னர்களின் ஆணவம் குறையுமா?

எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/96005.html#ixzz3RRglr128

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மனக் குழப்பம்

கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலை வில் உள்ள ஊர் திரு விடை மருதூர் இங்குள்ள மகாலிங்க சுவாமி கோவில் 20 ஏக்கர் பரப் பளவில் 4 கோபுரங் களைக் கொண்டது. இங்குள்ள நந்தி, தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியை விடப் பெரியது. இங்குள்ள மூகாம்பாள் சன்னதி வடநாட்டுப் பாணியில் இருப்பது தனிச் சிறப்பு.

இங்கு பட்டினத்தார் நீண்ட நாட்கள் தங்கி சிவனை வழிபட்டதால் அவருடைய சிலை இக்கோவிலில் உள்ளது. மனக் குழப்பம், மனநிலை பாதிப்பு உள்ளவர்கள் அசுவமேத பிரகாரத்தில் தங்கி நிவர்த்தி பெறலாமாம்.

இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் மகிமை எழுதி வைத்தவர்கள் யார்? தங்கள் கோயி லுக்கு இப்படி ஓர் அற்புத சக்தியிருக்கிறது என்று பிரச்சாரம் செய்தால்தான் கோயில் வியாபாரம் ஜோராக நடக்கும்.

ஒரு கேள்வி: மகா லிங்க சுவாமி இருக்கும் அந்தத் திருவிடை மரு தூரில் மன நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட வர்கள் யாரும் இல்லையா? அல்லது மனநல மருத்துவர்கள்தான் இல் லையா?

Read more: http://viduthalai.in/page1/95964.html#ixzz3RRjCn7am

தமிழ் ஓவியா said...

எத்தனை முதல்வர்களோ!


என்னை முதல்வராக்கிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை என் கட்சித் தொண்டர்களுக்கு இருக்கிறது! என்று சிறீரங்கம் இடைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு இன்னும் எத்தனை முதல்வர்களோ!

Read more: http://viduthalai.in/page1/95977.html#ixzz3RRjLBb3l

தமிழ் ஓவியா said...

மசூதி மற்றும் தேவாலயங்களில் இந்து சாமி சிலைகள் வைக்க வேண்டுமாம்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆதித்யநாத் யோகி ஆவேசக் கூச்சல்!

வாரணாசி பிப் 10 இந்த நாடு இந்து நாடு, இங்கு உள்ளவர்கள் இந் துக்கள் இங்கு இந்து கோவில்கள் மட்டுமே இருக்கவேண்டும், ஆகை யால் மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தலங்களில் இந்து தேவ தைகளின் சிலைகளை இந்து அமைப்புகள் வைக்கவேண்டும் அதை இந்துக்கள் வணங்க முன் வரவேண்டும் என்று ஆதித்திய யோகி கூறினார்.

மத்தியில் பாஜக ஆட்சிப்பீடத்தில் அமர்ந் ததில் இருந்து தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக பேசிவருகின் றனர். இந்து நாடு இந்து மக்கள், அகண்ட இந்து ராஜ்யம் என்ற பேச்சு ஒரு புறம் தொடர்கிறது, மறு புறம் மதமாற்றம் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்களும் தொடர் கிறது, இவை அனைத்தும் ஆட்சியில் இருக்கும் பாஜக எம்பிக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே வாணா சியில் விஷ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆத்தியநாத் ஜோகி பேசிய போது கூறியதாவது: இது இந்து நாடு இங்கு இந்துக்கள் மட்டுமே இருக்கவேண் டும், மக்காவில் யாராது வேற்று மதத்தவர் செல்ல முடியுமா?

வாடிகனில் வேறு மதத்தவர் செல்ல முடியுமா? ஆனால், இந்தி யாவில் யாரும் வருகி றார்கள், இதைக் கேட்க இதுவரை இருந்து வந்த அரசுகளுக்குத் துணி வில்லை. தற்போது இந்துக்களுக்கான அரசு அமைந்துள்ளது. இதை மிகவும் மகிழ்ச்சியுடன் இந்திய சாமியார்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். நான் வாரணாசி விஷ்வநாதர் கோவிலுக்கு வரும் போதெல்லாம் வரும் வழியில் உள்ள மசூதி என்னை பார்த்து நகைக்கிறது, நான் அவ மானத்தால் தலைகுனிந்து போகிறோன், இந்துக் களின் புனித நகரத்தில் மசூதியா? என்ற கேள்வி என்னை அரித்துக் கொண்டே இருக்கிறது. மதர்தெரசா போன் றவர்களை இங்குள்ளவர் கள் புனிதர்களாக பார்க் கின்றனர். அவர் புனித மானவரா? யாருக்குத் தெரியும்? ஆனால், இந்து சாமியார்களை உலகில் உள்ள நாட்டு மக்கள் எல் லாம் மிகவும் புனிதமான வர்களாகப் பார்க்கின்ற னர். அவர்களுக்கு என்று மிக நீண்ட பாரம்பரியம் உண்டு. பாகிஸ்தான் இஸ்லாமியர்களை உலக நாடுகள் விரட்டுகின்றனர். ஆனால், நாம் இங்கே இஸ்லாமியர்களுக்கு வச திகள் செய்து கொடுத்து வருகிறோம். ஆனால் அந்த காலம் முடிந்து விட் டது. இந்துநாடு என்பதற் கான சங்கொலிகள் ஒலித்து விட்டன. இனி நாம் செய்யவேண்டியது இதுதான்; ஒவ்வொரு மசூதி தேவாலயங்களை இந்துக் கோவிலாக மாற்றவேண்டும் அங்கு இந்து சாமிசிலைகளை வைக்கவேண்டும் அனைத்து இந்துக்களும் உள்ளே சென்று வழிபட வேண்டும்.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பிள்ளையார் மற்றும் ராமர் சிலைகளை ஒவ் வொரு மசூதி மற்றும் தேவாலயங்களில் வைப்பேன். யாருக்கு துணி விருக்கிறது என்னை தடுக்க என்று அப்போது நான் பார்க்கிறேன் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/95969.html#ixzz3RRjbOkkY

தமிழ் ஓவியா said...

வேலை வாய்ப்பு அலுவலகம் தேவையில்லையா?


வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட அய்ந்து பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-2008-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம்.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய் கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

இந்த விதி அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் அய்ந்து பேரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்த குமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தர விட்டது.

எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக் கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். இது ஒரு நியாயமானதாகக் கருதப்பட முடியாது.

இந்தத் தீர்ப்பின் படி பார்த்தால் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கே வேலையில்லை என்றாகி விடுகிறதா இல்லையா?

மாநில அரசுப் பணியாளர்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படாத பணிகள் இந்த வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தது.

ஆசிரியர்களுக்கான பணி நியமனமும் அவ்வாறே நீண்ட காலமாக நடந்து வந்தது கல்வி மாநிலப் பட்டியலி லிருந்து பொதுப் பட்டியலுக்கு நெருக்கடிக்காலம் என்ற காரிருள் காலத்தில் களவாடிச் சென்றதிலிருந்து மாநில அரசுகளின் உரிமை ஒவ்வொன்றாகப் பறி போக ஆரம்பித்தன.

மத்திய அரசின் தலையீட்டால் (NCTE) தொடக்கப் பள்ளிக்கான ஆசிரியர்களின் தேர்வுக்கூட நுழைவுத் தேர்வின் மூலம் நடைபெறத் தொடங்கி விட்டது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பத்தாண்டு, பதினைந்து ஆண்டு காலம் காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் கை பிசைந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்தக் குளறுபடி களையாவது செய்து, இப்பொழுது இருந்துவரும் சமூக நீதியின் கழுத்தை நெரிப்பதில்தான் கவனமாகவும், குறியாகவும் இருக்கின்றன - ஆதிக்க சக்திகள்.

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யும் முறையை நிலை நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page1/95948.html#ixzz3RRjogZ9O

தமிழ் ஓவியா said...

தானே வீழ்ந்துவிடும்!


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமும் ஆகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

Read more: http://viduthalai.in/page1/95945.html#ixzz3RRjzfWwY

தமிழ் ஓவியா said...

சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை:
அரசு மறுபரிசீலனை செய்க!

தமிழர் தலைவர் அறிக்கை

இப்பொழுது அம்பேத்கர் பெயரில் உள்ள சென்னை சட்டக் கல்லூரி கட்டடம் - ஒரு நூற்றாண்டுக்கு மேற் பட்ட பழைமையான வரலாற்றுப் பெருமைமிகுந்த ஒன்றாகும்.

தேவையின்றி அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதை, மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பது நியாயமானதேயாகும்.

உயர்நீதிமன்றம் அருகில் இருப்பதே உகந்தது

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மிக அருகிலேயே அத்தகைய அம்பேத்கர் பெயரில் உள்ள சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டதின் நோக்கமே (பிரிட்டிஷ் அரசு காலத்தில்) சட்டம் படிக்கும் மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளையும் பார்த்து, கேட்டு அனுபவம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்த அது உதவ வேண்டும் என்பதாகும்.

இதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாது, தீர்க்க வேண்டிய மக்கள் நலப் பிரச்சினைகள் ஏராளம் இருக்கும் நிலையில், தேவையின்றி, இந்த மாற்றம் தேவைதானா?

பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டாமா?

அதுவும் மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இதனைச் செயல்படுத்த தமிழக அரசு ஏன் தேவையற்ற பிடிவாதம் காட்டவேண்டும்?

சட்டக் கல்லூரி மாணவர்கள் இதை எதிர்க்கிறார்கள்; மாற்றம் கூடாது என்று அறவழியில் அறப்போர் நடத்துகிறார்கள் என்றால், உடனடியாக சட்ட அமைச்சர் பொறுப்பில் உள்ளவரோ, தலைமைச் செயலாளரோ அல்லது சட்டத் துறை செயலாளரோ, முதலமைச்சரோ அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான குறைகளைக் கேட்டு, இடம் மாற்றத்திற்கான காரணம், அவசியம் என்னென்னவென்று விளக்கிடுவதுதானே ஜனநாயக முறை - குடியாட்சி முறை!
அதை விடுத்து, மாணவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்திடுவது, இரத்தம் சிந்த வைப்பது எவ்வகையிலும் நியாயமும் அல்ல; மனிதாபிமானமும் அல்ல!

இது பெரும் மாணவர் கிளர்ச்சியாக நாடு தழுவிய அளவில் மாறிவிடும்; விரும்பத்தகாத நிலையை தமிழக அரசே, தேடிக்கொள்வது எவ்வகையிலும் புத்திசாலித் தனமல்ல!

மறுபரிசீலனை செய்க!

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது பழமொழி; இப்பொழுது ஆண்டிக்குப் பதிலாக அரசே ஊதிக் கெடுக்கலாமா?

உடனடியாக மாணவப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி முடிவு செய்க. மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்து கைவிடுக!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

9.2.2015

Read more: http://viduthalai.in/page1/95901.html#ixzz3RRklzbuR

தமிழ் ஓவியா said...

வயிற்றுக் கொழுப்பை குறைக்கலாம்!

இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும் பாலோர் வயிற்றுக் கொழுப்பால் அவதிப்படு கின்றனர். வயிற்றுக் கொழுப்பை குறைக்க எளிய வழிகள் உள்ளது. அதை கடைப்பிடித்தால் பெருத்த வயிறு, தட்டையான வயிறாக மாறும். வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள் வருமாறு:

துரித உணவுகளை தவிர்த்தல்

சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்க்கவேண்டும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை உண்ணலாம்.

தண்ணீர்

தாகம், அயர்ச்சி ஏற்படும் நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தேவையற்ற கொழுப்பு படியும். எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ளவேண்டும். குறைந்தது 6 முதல் 8 குவளை தண்ணீராவது குடிக்கவேண்டும்.

உடற்பயிற்சி

பல மணிநேர உழைப்பு மற்றும் வெகு தூர ஒட்டப்பயிற்சி ஆகிய இரண்டும், தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கொழுப்பு அதிகமாக குறையும்.

சர்க்கரை வேண்டாம்: நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சர்க்கரையை குறைப்பது நல்லது. இதற்குப் பதிலாக தேன், பனங்கற்கண்டு பயன்படுத்தலாம்.

சோடியம் கலந்த உப்பு தவிர்த்தல்: சோடியம் கலந்த உப்பை தவிர, பொட்டாசியம் கலந்த உப்பு, எலுமிச்சை உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி உணவுகள்: வயிற்றுக் கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக கார்டிசால் உள்ளது. மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலை வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கானிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்.

தூக்கம்: போதுமான அளவு உறங்காமல் இருப்பது உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். 6 முதல் 8 மணி நேரம்வரை உறக்கம் மேற்கொள்ளவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/95914.html#ixzz3RRlza7LJ

தமிழ் ஓவியா said...

குளிர்ச்சி தரும் கற்றாழை

கற்றாழை என்பது ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை கொத்தாக வளரும் அடிப்பாகம் நாற்சதுரமாகவும் வளர, வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்துப் போல வளரும், சாம்பல், சிவப்பு நிறம் கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம் வரை வளரும். வறட்சியைத் தாங்கும்.

நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையான சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும். ஆதி வாசிகள் மலையில் நடக்கும்போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டைச் சாப்பிடுவார்கள். இது கைப்பு, கார்ப்பு, புளிப்பு கலந்த ஒரு சுவை இருக்கும். இதன் இனப் பெருக்கம் வேர், பக்கக்கன்றுகள் அல்லது தண்டுகள் மூலம் நடைபெறும்.

கற்றாழை உமிழ் நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும், குளிர்ச்சியை உண்டாக்கும். செரிமானத்தை விரைவு படுத்தும், உடலை உரம் பெற வைக்கும். குமட்டல் வாந்தியை நிறுத்தும், நாவின் சுவையுணர்வை ஒழுங்குப் படுத்தும், நீர் வேட்கையை அடக்கும்.

துவையல்: இதை சிறு துண்டுகளாக நறுக்கி நெய் விட்டு வதக்கி, உளுந்து, இஞ்சி, கொத்துமல்லி, மிளகு, சீரகம், புளி, வைத்துத் துவையலாக அரைத்து வாரம் ஒருமுறை உணவில் உட்கொள்ள மேற்கண்ட பயனைப் பெறலாம். வாந்தி, நீர் ஊறல் நிற்கும், உடல் வெப்பம் குறையும், உடல் நலம் பெறும்.

பித்த குன்மம், குடல் வாய்வுக்கு மருந்து செய்வோர் இதனைச் சேர்த்துச் செய்வார்கள். மேலை நாடுகளில் கற்றாழையின் தன்மையை ஆராய்ச்சி செய்து அது உடல் பருமனை குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயைக் குணமாக்கும் என்று கண்டுபிடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது தற்போது தமிழ்நாட்டில் வியாபாரப் பயிராகச் செய்கிறார்கள்.

கற்றாழையின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டு நாள்கள் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதிகள் குணமாகும் என்பதை தற்போது அறிந்துள்ளார்கள்.

Read more: http://viduthalai.in/page1/95916.html#ixzz3RRmLdhdM

தமிழ் ஓவியா said...

அங்கும் இங்கும்

அங்கு: அலாஸ்காவில் மெண்டென் ஹால் பனிப் பாறை மிகவும் புகழ் பெற்றது. இந்தப் பாறைப் பிளவுக்குள் 50 அடி ஆழம் கயிறு மூலம் சென்று இறங்கி விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தார் மியரிக் சில இடங்களில் தண்ணீர் மேலே வந்து கொண்டிருந்தது.

இங்கு: 2 கிலோ தங்கக் கம்பியை எல்இடி பல்புகளில் மறைத்து (ஒவ் வொரு பல்புக்குள்ளும் மெல்லிய தங்கக் கம்பிகள் இருந்தன) அபிதாபியில் இருந்து சென்னைக்கு கடத்திய கேரள இளைஞர் கைது.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

தமிழ் ஓவியா said...

இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு...

நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர். நீங்கள் இரயில்வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டு பிடித்தவர் .ஹென்றி போர்டு என்ற கிறித்தவர்.

நீங்கள்கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்றகிறித்தவர்.
நீங்கள்திரைப்படங்களை பார்க்காதீர்கள். ஏன் பார்க்கக் கூடாது என்றசந்தேகம் தோன் றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.

அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராமபோனை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.

நீங்கள் வானொலியை கேட்காதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் மார் கோனி என்ற கிறித்தவர்.
நீங்கள்கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக்கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.
நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத் தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன்பார்க்கேக் ஸடன் என்ற கிறித்தவர்.

பவுண்டன்பேனாவை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும்கிறித்தவர். நீங்கள் டயரை பயன்படுத்தா தீர்கள்.ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர்.

நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.
நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர்.
இந்துக்களே!

உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெ னில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போன இந்துக் களை திரும்பி வரும்படி செய்யுங்கள் ஏனெனில் அது முஸ்லிம் நாடு.

குறிப்பு: நம்நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்தவர்கள் (இந்துக்கள்), கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதகலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியின ரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப்பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டுபிடித் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான்.
(இவை உதகையில் நடந்த இந்து முன் னணி மாநாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டது).

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRo7277O

தமிழ் ஓவியா said...

அலர்ட்டா இருங்க அம்புட்டுதான் சொல்ல முடியும்

தலையில் மயிர் முளைக்க ஒரு கம்பெனி விளம்பரம் தர்றான். அது அமேசான் காட்டில் இருந்து யாருக்கும் கிடைக்காத மூலிகையை வச்சு தயாரிச் சுதுன்னு சொல்றான். எங்கேடா கிடைக் கும்னா, எனக்கு மிஸ்டு கால் கொடு, உடனே அனுப்புறேங்கறான்.
இங்கே இன்னொரு கம்பெனி விளம்பரம் குடுக்குது.

தெருவுக்கு தெரு தட்டி வச்சு விளம்பரம் தருது என்னடான்னு பார்த்தா, இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடு, உடனே எங்க கட்சிலே சேர்த்துக்கு வோம்ங்கிறான்.

முதல்ல சொல்ற கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தா, மயிர் முளைக்குதோ, இன்னும் கொட்டுதோ தெரியாது. கொடுத்த காசோடு போயிடும்.

ஆனா, இந்த இரண்டாவது சொன்ன கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தீங்க. நீங்க மட்டும் மிஸ் ஆக மாட்டீங்க. உங்க வம்சமே ஒன்னும் இல்லாம போயிடும். மானம் மரியாதை எல்லாம் போயி, ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்திடும் இந்த கூட்டம்.
அலர்ட்டா இருங்க. அம்புட்டுதான் சொல்ல முடியும்.

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRoPZJgv

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள்

இந்தியாவிலிருந்து தீண்டாமை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் இன்னமும் நான்கில் ஒருவர் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

தலைநகர் டில்லியில் இயங்கிவரும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research - NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், தீண்டாமை குறித்து நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு, சட்டம், கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தீண்டாமை களையெடுக்கப் பட்டு விட்டதாக கூறப்பட்டு வருவதை இல்லை என்கிறது இந்த ஆய்வு. கடந்த 2011-_12 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பொதுமக்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.

அதாவது, 1. உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? 2. உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழை யவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு ஆய்வில் பங்கெடுத்த நான்கில் ஒருவர், தீண் டாமையைக் கடைபிடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முழு விவரமும் தொகுப்பாக அடுத்தாண்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தற்போதைக்கு ஆய்வுத் தகவல்கள் புள்ளி விவரங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதி அடிப்படையில் 27 சதவீதத்தினர் தீண்டாமை இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

மாநிலவாரியாகப் பார்த்தால் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதமும்,இமாச்சலில் 50 சதவீதமும், சத்தீஸ்கரில் 48 சதவீதமும்,ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 47 சதவீதமும், உத்தரகாண்டில் 40 சதவீதமும் `தீண்டாமை `இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இதேபோல், தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக கூறும் இந்த ஆய்வு, மேற்கு வங்காளத்தில் ஒரு சதவீதமும்,கேரளாவில் 2 சதவீதமும் தீண்டாமை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச் சியாளர் டாக்டர் அமித் தோரட், இந்த ஆய்வின் மூலம் கல்வி பெற்ற மக்களிடையே ஜாதியின் தாக்கம் குறைந்துள் ளதையும், பணம் படைத்தவர்களிடமே தீண்டாமையை செயல்படுத்தும் எண்ணம் மேலோங்கி இருப்பதையும் அமித் சுட்டுக் காட்டியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-1/95711.html#ixzz3RRoyPHiq

தமிழ் ஓவியா said...

வாஸ்துவுக்குப் பின்புறத்தில் ஜாதி இருக்கிறது!

அறிவியல் முன்னேற்றத் தினால், பல தொழில்கள் வளர்ச்சி யடைந்துள்ளன. அவற்றில் ஒன்று, கட்டட கட்டுமானப்பணி, பல கட்டுமானப் பொருட்கள், தொழில் நுட்பங்கள், புதிய சாதனங்கள் ஆகியவை தோன்றி சாதனைகள் பல, ஒன்றை ஒன்று மிஞ்சி நிகழ்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் வாஸ்து முறைப்படி வீடு கட்டுதல் என்ற வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இது கல்வி அறிவு இல்லாத பாமர மக்களிடையே மட்டுமின்றி படித் தவர்களிடையேயும் கூட பரவி யுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், மூட நம்பிக்கையும், பயமும், பேராசையும் ஆகும். எந்த அறிவுப் பூர்வ ஆதாரமும் இல்லாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல கோட்பாடுகள் இங்கு நிலவு கின்றன.

எடுத்துக்காட்டாக, மனை அளவு 8அடி இருந்தால் அரசு பரிபாலனம் என்றும் 9அடி இருந்தால் செல்வம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்று 11அடி இருந்தால், புத்திரப்பேறு அதிகம் என்றும் 12 அடி இருந்தால் மலடாவர் என்று பயமுறுத்துகிறது. 15அடி இருந் தால் தரித்திரம், தாழ்ச்சி என்றும் 16அடி இருந்தால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறுகிறது.

இந்த ஒரு அடி வேறுபாடு ஏன், எப்படி இந்த நன்மை, தீமை களுக்குக் காரணமாக அமைய முடியும் என்று பகுத்தறிவோடு சிந்தித்தால்தான் இவை மக்களை பயமுறுத்துவதற்காகக் கூறப்பட் டவை என்று தெளிவாகும்.

அறையின் நீளத்திற்கும் தரித் திரத்திற்கும் என்ன சம்பந்தம்?

இதேபோல் அறையின் நீளமும், அகலமும் பல நன்மை தீமைகளுக் குக் காரணமாக விளங்கும் என்றும் கூறுகிறது. அறையின் நீளம், அகலம், 19அடி இருந்தால் தரித்திரம், புத்திரபீடை என்றும், 20அடி இருந்தால் இன்பமயம் என்றும் கூறுகிறது. இது 25அடி இருந்தால் மனைவியின் மரணம் என்றும், 26அடி இருந்தால் செல்வம் பெருகும் எனவும் சொல் லப்படுகிறது.

இங்கும் இந்த ஒரு அடி வேறுபாடு இந்த மாற்றங் களை ஏற்படுத்தும் என்பது பகுத் தறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். இதே போன்று ஒரு வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கா விட்டால், இந்த எஜமானன், எஞ்சினீயர், காண்ட்ராக்டர், கொத்து மேஸ்திரி, தச்சு மேஸ்திரி ஆகிய அய்வரின் வாழ்விலும் பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சுறுத்துகிறது.

இந்த சாத்திரம், அடுத்து ஏற்படும் அய்யப்பாடு, ஏன் இந்த அச்சுறுத்தும் கோட் பாடுகள் கூறப்படுகின்றன என்ப தாகும். இதை சற்று சிந்தித்தால் எப்படி சாதகம், சோசியம் போன் றவை பேராசை, பயம், மூடநம் பிக்கை ஆகியவற்றைக் கொண்ட மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றதோ, அதேபோல், வாஸ்துவும் அதில் கூறப்படும் அச்சுறுத்தும் கோட் பாடுகளும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது என்பது தெளிவாகும்.

ஜாதி இதன் பின்னணி! மற்ற தொழில் நுட்பத் துறை களுக்குக் கொடுக்கப்படாத சாஸ்திர அந்தஸ்து ஏன் இந்த வாஸ்துவுக்கு மட்டும் கொடுக்கப் பட்டது என்று ஆராய்வோம். ஜாதி முறையை நிலைநாட்டவும் ஜாதியின் அடிப்படையில் சூழ்ச்சி யாக சில நியதிகள் செயல்படுத் தப்படவும் இந்த வாஸ்து வழி செய்தது.

அ) பொன்னிறமான மண்ணில் -_ இனிப்பு ருசியும், தாமரை மலரின் வாடையும் இருந்தால், அந்தணர் கள் இதில் வீடு கட்டலாம்.

ஆ) சிவந்த நிறமும், கார்ப்பு ருசியும், குதினாயின் வாடையுள்ள மனையில் சத்திரியர்களும்,

இ) பச்சை நிறமும், புளிப்பு ருசியும் வாடையுமுள்ள மனையில் வைசியர்களும்

ஈ) கருப்பு நிறமும், கசப்பு ருசியும், தானிய வாடையுமுள்ள மனையில் மற்ற இனத்தவர்களும் (சூத்திரர்) வீடு கட்ட வேண்டும்.

இதேபோல், அந்தணர் தென்திசை ஆயர்மேற்றிசை
வந்திடு வணிகர்நல்வடக்கு வான்திசை
தொந்தமில் சூத்திரர் தோன்றுங்கீழ்திசை
பிந்திய நடுவது பிரமன்தானமே
என்று ஜாதியின் அடிப்படை யில் வீடுகட்டும் இடத்தை நிர்ண யம் செய்தது, வாஸ்து.

இவ்வாறு ஜாதி முறையை நிலைநாட்டவும், அதன் மூலம் பல வசதிகளை பெறவும், வழி செய்ததால், இக் கலை சாஸ்திர அந்தஸ்தை பெற் றது என்று ஊகிக்கலாம்.

இந்த வாஸ்து முறையைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந் ததே.

ஆனால், இந்த வாஸ்து முறையைச் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள், கட்டடக் கலைகூறும் சில நல்ல கருத் துக்களையும் சேர்த்துக் கூறுவது, நச்சுப் பொருளை, இனிப்பு மேலு றையுடன் கொடுப்பதற்கு இணை யாகும் அல்லவா?

முனைவர் நல். இராமச்சந்திரன், பேரா. எல்.ஜே. சுப்ரமணியம்

Read more: http://viduthalai.in/page-1/95716.html#ixzz3RRqdcwjk

தமிழ் ஓவியா said...

சாமிக்கு சாராய அபிஷேகம்!

மத்தியப்பிரதேசத்தில் காலபைரவர் சிலைக்கு சாராயம் அபிஷேகம் செய்ய அரசு சார்பில் கடை அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினி அருகே காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு காலபைரவரின் மிகப்பெரிய சிலை உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமிக்கு சாராயத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.

சாமியின் கண் வழியே சாராயத்தை ஊற்றுகிறார்கள். இதனால், பக்தர்கள், வியாபாரிகளிடம் அதிக விலை கொடுத்து சாராயம் மற்றும் வெளிநாட்டு மது வாங்குகிறார்கள். அரசு சார்பில் கடை திறப்புபக்தர்களிடம் வியாபாரிகள் அதிக விலைக்கு சாராயம் விற்பதை தடுக்க தற்போது மத்தியப்பிரதேச அரசே கோவில் அருகே கடை திறந்துள்ளது.

இங்கு 2 கவுண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.ஒன்றில் அரசு சாராயமும், மற்றொன்றில் வெளிநாட்டு மதுவும் விற்கப்படுகிறது. 180 மி.லிட்டர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இந்த கோவிலில் பக்தர்களுக்கு சாராயம்தான் பிரசாதமாகவும் கொடுக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-1/95717.html#ixzz3RRqxIEb6

தமிழ் ஓவியா said...

தமிழரை ஏய்க்கும் தருக்கர் கூட்டத்தை முறியடிப்பீர்!

உலகில் தோன்றிய முதல்மொழி தமிழே
தனித்தியங்க வல்ல மொழிதமிழ்
உலகில் வாழும் மொழிகளுள் இன்றும்
உயிர்ப்புடன் வாழ்வது தமிழே!

இறவா இலக்கிய இலக்கணம் படைத்த
எழுத்துப் பேச்சு மொழிதமிழ்
ஆரிய ஆங்கிலத் திணிப்பை மீறி
அழியா மொழி நம் தமிழே!

கிறித்துவச் சமயம் பரப்பவந்த அய்ரோப்பா
பாதிரிகள் தமிழைக் கற்றனர்
அரும்பெரும் தமிழின் ஆற்றலை அதன்
கட்டமைப்பைக் கண்டு வியந்தனர்
தேர்ந்த காவியம் படைத்தார் திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் வரைந்தார்
திருக்குறள் சங்க இலக்கியத்தை மொழி
பெயர்த்து உலகிற்கு உணர்த்தினர்!

ஆரியம் தமிழில் கலந்ததால் தெலுங்கு
கன்னடம், மலையாளம் தோன்றின
புராண இதிகாச புனைவுகள் புளுகுகள்
பொய்யும் புரட்டும் எழுந்தன
இயற்கை வழிபாடு இல்லாத கற்பனை
கடவுள் உருவ வழிபாடாக
ஆயக்கலையெல்லாம் ஆரிய மாக்கி
பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தினர்!

பொறியியல் மருத்துவம் வானியல் இசை
சிற்பம் கட்டடக் கலைபோன்று
அறிவுத் திறமுடை நூல்களை ஆரியத்தில்
பெயர்த்து நீர்நெருப்பில் அழித்தனர்
பெருவுடையார் பிரகதீஸ்வரர் சிற்றம்பலம் சிதம்பரம்
திருவரங்கம் சிறீரங்க மாக்கினர்
திருவுடை தமிழக ஊரை யெல்லாம்
வடமொழியால் ஆக்கியவர் பார்ப்பனர்!

திருவள்ளுவர் நாளைக் கொண்டாட திருகு
தாளங்கள் பாரதியைத் திணிக்கின்றார்
திருக்குறளைத் தேசிய நூலாக்க மறுக்கின்றார்
இங்கே ஒளிந்திருக்கும் ஆர்எஸ்எஸ்
குரங்குதன் குட்டியை விட்டாழம் பார்க்க
தருண்விஜய் பாராட்டு!

காவிகள்
பாராட்டில் கிரங்காதீர் கீதையைத் தேசிய
நூலாக்க ஆடிய நாடகமே!

இந்தி எதிர்ப்பில் இன்றுவரை தமிழகம்
விழிப்புடன் இருப்பதைக் கண்டு
இந்துவியக் கும்பல இப்போது தங்கள்
அணுகு முறையை மாற்றிக் கொண்டு
தமிழைப் போற்றியும் திருக்குறளை ஏற்றியும்
புதிய வடிவமெடுக் கின்றார்
தமிழரை ஏய்க்கும் தருக்கர் கூட்டத்தின்
தந்திரத்தை முறியடிப் பீரே!
கவிஞர் இனியன், திருச்சி

Read more: http://viduthalai.in/page-1/95715.html#ixzz3RRr7RCHX

தமிழ் ஓவியா said...

வாஜ்பேய யாகம்

வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர் பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர் பேரரசாக மாறிய பொழுது வாஜ்பேயி யாகத்தைச் செய்யலாம் இவ்வேள்வி செய்யும்போது கலைமானின் தோலினைப் போர்த்திக் கொண்டு செய்தல் மரபாகும்.

வேள்வியின்போது பணிவிடை செய்வதற்குப் பத்தினிகள் மூவர்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும். இவ்வகையான சடங்குகள் வடநாட்டிலிருந்து பின்னர் தமிழகம் வந்ததாம்.

யாகங்கள் 21-ஆம் சோம யாகங்கள் ஏழு, ஹவியர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜ்பேயி யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப் பெறுமாம்.

- எஸ். நல்ல பெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page-1/95722.html#ixzz3RRrdTEl9

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு முதல் அய்.எஃப்.எஸ். பெண்மணி

இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து சுதந்திரத்திற்கு முன்பு பின்பு என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பெண்ணுரிமைப் போராளிகள் எனப் படுபவர்கள் எல்லாம் மத ரீதியாக பெண்ணடிமைக்கு நியாயம் கற்பித்தனர்.

ஆனால் அக்கால கட்டத்தில் தந்தைபெரியார் ஒருவரே பெண்களை அடிமையாக்குவதில் முதலிடம் மதம் தான் என்று உறுதியாக கூறியது மட்டுமல்லாமல் தானே முன்னின்று பெண்ணுரிமைக்கான சமூகப்போரை வழி நடத்திச்சென்றார். அதன் பயனைத்தான் இன்று இந்தியாவில் உள்ள பெண்கள் அனுபவிக்கின்றனர்.

ஆனால் இதன் ஆரம்பகட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது, அந்த ஆரம்ப கட்டபோராட்டத்தில் வெற்றிபெற்றவர்களும் அன்னை ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, போன்றோரை அனைவருக்கும் தெரிந்திருக்கும், அவர்களின் வரிசையில் முத்தம்மாவை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்போதைய மதராஸ் மாகாணத்தில் பிறந்து சென்னை கிருஸ்தவ கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் பயின்ற முத்தம்மா அவர்கள் அய்.எஃப்.எஸ் படிப்பைத் தொடர விரும்பினார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் மற்றும் அய்.எஃப்.எஸ் ஆவது குதிரைக் கொம்பாகும்; அதை முறியடித்து இந்தி யாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி ஆனார் சி.பி. முத்தம்மா (1924_2009).

1949-ஆம் ஆண்டு இந்திய வெளி யுறவுதுறை அதிகாரியாக இருந்த முத் தம்மாவிற்கு அவரது பொது வாழ்க் கையில் பல்வேறு தடைகள் முக்கியமாக திருமணம் செய்யவேண்டும் என்றால் பதவியில் இருக்ககூடாது என்ற ஒரு விதி இருந்தது, இது மட்டுமல்ல பல்வேறு விதிகள் முக்கியமாக பெண் களுக்கு எதிரான விதிகள் இருந்தன.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் முத்தம்மா, மறைந்த கிருஷ் ணய்யர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது வெளியுறவுத் துறையில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை 8(2) பட்டவர்த்தனமாக காட்டுகிறது என்று கூறி
ஒரு பெண் திருமணத்துக்கு முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டு மென்றால் ஒரு ஆண் அதிகாரியும் அத் தகைய அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியம்.

தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறி போகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?

விதி 18 அரசியல் சாசனத்தின் 16-ஆம் பிரிவுக்கு முரண்பட்டதாகும். திருமண மான ஆண் வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்படுவதை உரிமையாகக் கோரமுடியும் என்றால் திருமணமான ஆணுக்கும் அல்லவா அது பொருந்தும்? பெண்கள் பலவீனமானவர்கள் என்ற மனநிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதான் இந்த பாகுபாடு? சுதந்திரமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது.

அரசியல் சாசனம் சொல்லுகிற சமநீதித்தத்துவம் நடைமுறையில் செயல் படுத்தப்படுவதில்லை என்பதை இந்த விதி கட்டுகிறது,என்றார். கிருஷ்ணய் யரின் இந்தத் தீர்ப்பை அடுத்து அந்த பிரிவு நீக்கப்பட்டது.

கோடானு கோடிப் பெண்களில் ஒரு முத்தம்மா எடுத்த துணிச்சலான நட வடிக்கை அரசுத்துறைகளின் சுதந்திரத் திற்கு பின்பும் இருந்த ஆணாதிக்க திமிர் ஒழிக்கப்பட்டது. அதன் பிறகு முத்தம்மா பல்வேறு உயர்பதவிகளைப் பெற்றார். 35 ஆண்டுகள் பணிக் காலத்தில் அரசு உயர் பதவிகளில் பெண்களுக்கான தடைகளை தேடிக் கண்டுபிடித்து அவற்றை நீக்க போராடினார்.

தனது பணி ஓய்விற்கு பிறகு அவர் செய்த காரியம் இந்தியாவின் பெரும் பணக்காரர்களை வியந்து பார்க்கவைத்தது. டில்லியில் முக்கிய இடத்தில் இருந்த தனது 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடை யாக வழங்கினார். அப்போதே அந்த இடம் பல கோடிகள் மதிப்பு கொண்ட தாகும். அரசுத் துறைகளின் பெண்களுக்கு எதிரான விதிகளை நீக்க அவர் எடுத்துக் கொண்ட போராட்டத்திற்கு உரமாக திகழ்ந்தது பெரியாரின் பெண்ணடிமை ஒழிப்பு போராட்டம் கொடுத்த ஊக்கமாகும்.

கருநாடகத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி கொடவா என்ற பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(அவரின் பிறந்த நாள் 24.1.1924)

Read more: http://viduthalai.in/page-1/95718.html#ixzz3RRsKokch

தமிழ் ஓவியா said...

இந்திய அறிவியல் கழகம்

இந்திய அறிவியல் கழகத்தின் 102 ஆவது கூட்டம் 5, ஜனவரி, 2015 அன்று மும்பையில் நடைபெற்றது. அதில் வேத அறிவியல் என்று சில மூட அறிவியல்களை பரப்பியதுமட்டுமன்றி உலக அறிவியல்களின் மூதாதையர்கள் இந்தியர்கள் என்றும், இவர்களின் கண்டுபிடிப்புகளை மேல்நாட்டார் கவர்ந்து சென்றது போன்றும் கருத் துக்களை பரப்பினர்.

இதனைச் சார்ந்து 06.01.2015 அன்றைய ஆங்கில இந்து நாளேட்டில் டி.கீதா அவர்கள் 'ஆசிரியருக்கு கடிதம்' பகுதியில் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்திருக்கிறார். அவர் குறிப்பிட் டவை: வேத கால அறிவியல் அறிக் கையில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு தொல்துறை நிபுணர்கள், வெட் டெழுத்து நிபுணர்கள் மற்றும் வர லாற்று வல்லுனர்கள் தகுந்த ஆதா ரத்தை வழங்குமாறு உரிமையுடன் கேட்க வேண்டும்.

கடந்த ஆண்டு புதுச்சேரி பல் கலையின் பேராசிரியர் ராஜன் அவர்கள் பொருந்தல் கிராமத்தில் கிடைக்கப் பெற்ற பழங்கால தாழிகளில் கண்ட 'தமிழி' எழுத்து வடிவினை ஆராய்ந்த தில் இந்திய மொழிகளின் வரிவடிவின் அடித்தளமே இந்த தமிழி எழுத்து வரிவடிவங்கள் தான்' என்று ஆணித் தரமாக நிரூபித்தார்.

இதனை சென் னையில் இயங்கும் தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழியில் இருந்த வரிவடிவங்கள் வழியாக மேலும் உறுதி செய்தனர். வெப்பமிளிர்வு சோதனைக்கு உட்படுத்தியதில் பொருந்தல் கிராமத் தில் கிடைக்கப் பெற்ற பானை ஓடுகள் கி. மு 1000 ஆண்டுகளை சார்ந்ததாக்கும் என்று உறுதிப்படுத்தினார்.

இதனை மேலும் உறுதிசெய்ய இந்தத் தாழியை மைசூர் கிளை தொல்லியல் துறை, வெட்டெழுத்து வல்லுனர்களுக்கு அனுப்பப்பட்டது. அவர்களை உறுதி செய்யுமாறு மீண்டும் நினைவுபடுத் தினர். வந்த பதில் "அந்தத் தாழியைக் காணோம் தேடியும் கிடைக்கவில்லை" இது வேண்டுமென்றே செய்யப் பட்ட தகாத செயல் என்ற முடிவுக்குத் தான் வர முடிகிறது.

டி.கீதா, அய்தராபாத்.
நாம் அறிவது - தமிழின் தொன்மை யையும் அதன் சிறப்பையும் கண்டு பொறுக்காத இனங்கள் இன்னமும் உள்ளன.
தகவல்: சி.நடராசன்

Read more: http://viduthalai.in/page-1/95724.html#ixzz3RRskwq5T