tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1986404245948447116..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கற்பூரம்-பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67991449594783642142015-02-20T20:22:10.916+05:302015-02-20T20:22:10.916+05:30அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்
ஆண்டவன் ரகசியம்
ஆதி க...அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்<br /><br />ஆண்டவன் ரகசியம்<br /><br />ஆதி காலத்தில் மனிதன் ஓயாத அலைகளைப் பார்த்தான். அதன் சீற்றத்தால் நாடு அழிவதைக் கண்டான்; கடும்புயல் வீசி பெருமரங்கள் சாய்வதைக் கண்டான்; இடி இடித்து அதன் ஓசையால் புற்றுக்குள் இருக்கும் நாகமும், புதரில் மறைந்து இருக்கும் புலியும் நடுநடுங்கி ஓடுவதை அவன் பார்த்தான்.<br /><br />ஏன் இவை ஏற்படுகின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. இது விளங்காத காரணத்தால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. ஏன் என்று புரியாது அச்சத்துடன் நின்ற அந்த மனிதனின் முன்னே ஒரு எத்தன் நின்றான். அவை என்ன தெரியுமா? அதுதான் ஆண்டவன் செயல் என்று அந்த எத்தன் கூறினான்.<br /><br />அந்த ஆதி மனிதன் முன்னே நின்ற எத்தன்தான் உலகிலேயே முதலில் தோன்றிய பார்ப்பனன் அல்லது புரோகிதன். அச்சத்திலே ஏற்பட்டதுதான் ஆண்டவன் தத்துவம்.<br /><br />முக்தி பெற்ற பார்ப்பான்!<br /><br />மதுரை சோமநாதப் பெருமானின் ஒரு பார்ப்பன பக்தன் காமுகப்பட்டு, கருத்திழந்து தொட்டிலிலே வளர்த்தவளை கட்டிலுக்கிழுத்தான்- பெண்டாடினான். நடக்க கூடாத செயல்! ஆனால் நடந்திருக்கிறது.<br /><br />தாய் அவனைப் பார்த்து பாவி அன்னையையா இந்த அக்கிரமம் செய்தாய் என்று கேட்க அவன் அப்பன் ஒருவன் இருப்பதால் அல்லவோ நீ எனக்கு அன்னையானாய் அவன் இல்லாவிட்டால்...! ஒரு பெண்தானே, என எண்ணி அவனை வெட்டி வீழ்த்தினான்.<br /><br />இரு பாதகம் செய்த அவன் மருட்சி கொண்டு மதுரைக்கு வந்து ஆலவாய் அப்பனிடம் அடைக்கலம் புகுந்தான் அலறினான். அப்போது சோம பெருமானும் மீனாட்சி அம்மையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்க, அவன் குரல் கேட்ட பெருமான் ஆட்டத்தை நிறுத்த, உடனே அம்மை பார்த்து ஏன் ஆடவில்லை என்று கேட்க அய்யன்,<br /><br />அன்னையை பெண்டாடிய அடியாரின் கருத்தை விளக்க, அந்த மாபாவிக்கா அருள்புரிவது என்று மீனாட்சி சிணுங்க உமையவளே, உற்றுக் கேள் எத்தகைய மகா பாதகம் என்றாலும் பிராமணன் என்றால் அருள்புரியத் தான் வேண்டும் என்று கூறினாராம். பிறகு அவன் முக்தி (மோட்சம்) பெற்றானாம்.<br /><br />அக்கினியின் ஆசை!<br /><br />ஒரு காலத்தில் சப்தரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்கு அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமமுற்றா னாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் சொன்னானாம்.<br /><br />ஆண்டவனான அக்கினி பகவான் தன் மனைவியிடம் அதற்கு ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போல உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம்.<br /><br />ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லையாம் அதற்குக் காரணம் அருந்ததி ஒரு ஆதி திராவிடப் பெண்ணாம்.<br />ஆதாரம்: பேரறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100 என்ற நூல்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96560.html#ixzz3SITopAdp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90512085142407553832015-02-20T20:20:55.562+05:302015-02-20T20:20:55.562+05:30கோபுரத்தை தாங்கும் காக்கைகள்!
இங்கு மட்டும்தான் ம...கோபுரத்தை தாங்கும் காக்கைகள்!<br /><br />இங்கு மட்டும்தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று யாரும் நினைக்கவேண்டாம். ஆனால் நம் நாட்டில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் அதிகம்.<br /><br />லண்டனின் லண்டன் டவர் என்ற பிரசித்திபெற்ற கோட்டைக் கோபுரங்களில் பல காக்கைகள் வாழுகின்றன. அந்த காக்கைகளையும் அரண்மனை பணியாளர்கள் கணக்கில் சேர்த்து, அரசாங்க செலவில் அவற்றை பராமரிக்கிறார்கள்.<br /><br />இதற்கு காரணம் என்? அந்தக் காக்கைகள் அகன்று விட்டால் லண்டன் டவர் கட்டடம் இடிந்து விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். என்னே மூட நம்பிக்கை!<br /><br />தகவல்: நாங்கூர் எஸ்.பாஸ்கரன் எம்.ஏ.,<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITVzY67<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82809070873536450732015-02-20T20:20:24.516+05:302015-02-20T20:20:24.516+05:30ரஷ்யாவில் விஷ்ணுவின் மகன் விநாயகன்
ரஷ்யாவில் உள்ள...ரஷ்யாவில் விஷ்ணுவின் மகன் விநாயகன்<br /><br />ரஷ்யாவில் உள்ள லெனின் கிராட் நகரில் உள்ள வினோதங்களில் ஒன்று அங்கு அமைந்திருக்கும் நாத்திகர்கள் காட்சி சாலை. உலகத்தில் உள்ள அனைத்து மதங்கள், கடவுள்கள் பற்றிய விளக்கக் குறிப்புகளும், கடவுள் உருவச் சின்னங்களும் அங்கு வைக் கப்பட்டுள்ளன.<br /><br />மதங்களாலும், கடவுள்களாலும் அல்லது இவை பற்றிய நம்பிக்கையால் மக்களுக்கு ஒருவித பயனும் இல்லை என்பதை விளக்குவதே அந்த கண்காட்சியின் நோக்கம்.<br /><br />அங்கு ஓரிடத்தில் விநாயகர் சிலைக்குக் கீழே விநாயகர் விஷ்ணுவின் மகன் என்ற குறிப்பு இருக்கிறது.<br /><br />அந்தக் கண்காட்சியில் கடவுள், மதம் காரணமாக மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITO14B2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48520223672178384222015-02-20T20:16:19.787+05:302015-02-20T20:16:19.787+05:30கற்றுக் கொள்ள வேண்டியது
இதுவரை எந்தப் பார்ப்பனரா...கற்றுக் கொள்ள வேண்டியது<br /><br /><br />இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.<br />(குடிஅரசு, 7.11.1926)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96550.html#ixzz3SISLaB4F<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19504860515950664852015-02-20T20:12:55.638+05:302015-02-20T20:12:55.638+05:30இன்றைய ஆன்மிகம்?
சாதனையா?
பகவான்தான் தலை எழுத்தை...இன்றைய ஆன்மிகம்?<br /><br />சாதனையா?<br /><br />பகவான்தான் தலை எழுத்தை எழுதுகிறான் என்றால் மக்களின் சராசரி வயது முன்பை விட இப்பொழுது உயர்ந் துள்ளதே - இது கடவுள் சக்தியா? அறிவியல் மருத்துவத்தின் சாதனையா?<br /><br /> <br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96572.html#ixzz3SIRTif7W<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42337216412217193592015-02-20T20:12:13.543+05:302015-02-20T20:12:13.543+05:30செய்தியும் சிந்தனையும்
அடிமாடு
செய்தி: தொழில் து...செய்தியும் சிந்தனையும்<br /><br />அடிமாடு<br /><br />செய்தி: தொழில் துறை எவ்வளவு வளர்ச்சி அடைந் தாலும் போதாது; விவசாயம் தான் வளர்ச்சி அடைய வேண்டும். - பிரதமர் மோடி<br /><br />சிந்தனை: ஆமாம்; அதற்காகத் தான் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடி மாட்டு விலைக்கு வாங்கப் படுகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96569.html#ixzz3SIRKFtrY<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22169356966872223352015-02-19T17:58:31.370+05:302015-02-19T17:58:31.370+05:30வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
-புரட்சிக்கவ...வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?<br /><br />-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்<br /><br />தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்; வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது.<br /><br />- சு.மன்னர்மன்னன்<br /><br />காட்சி<br /><br />தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு-பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலை-யுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.<br /><br />தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.<br /><br />விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.<br /><br />காட்சி _- தொழிற்பெயர். அதில் காண், முதனிலை, சி_-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள _ -ண், என்ற மெய்யானது _- சி, என்ற வல்லினம் வந்தால் _- ட் -_ ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள்.<br /><br />காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்-சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்-கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள்.<br /><br />பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.<br /><br />தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.<br /><br />இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்-கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.<br /><br />அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்று தெரியுமா? வடமொழியினின்றுதான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வ-தோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.<br /><br />அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்-களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்-தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள்.<br /><br />இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24293700175011174942015-02-19T17:57:58.728+05:302015-02-19T17:57:58.728+05:30மோடி ஏன் மறுக்கவில்லை?
இந்தியாவில் மதச் சிறுபான்ம...மோடி ஏன் மறுக்கவில்லை?<br /><br />இந்தியாவில் மதச் சிறுபான்மையர் மீதான வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிடும் போது, மோடியின் மவுனம் ஆபத்தானது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.<br /><br />கிறித்தவர்களின் வழிபாட்டிடங்கள்மீதான தாக்குதல்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்துக் குடிமக்களையும் காப்பாற்ற வேண்டியராக உள்ள பிரதமர் மோடி, எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.<br /><br />அதேபோல், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிக அளவில் கட்டாயப்-படுத்தி அல்லது பணம் கொடுப்பதாக உறுதியளித்து இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவது குறித்தும் எந்தக் கருத்தும் வெளியிடாமல் உள்ளார்.<br /><br />மத சகிப்புத்தன்மை இல்லாத நிலை அதிகரித்து இதுபோன்ற தொல்லைகள் இருந்தபோதிலும், மோடி தொடர்ச்சியாக அமைதியாக இருப்பதன் மூலம், இந்து தேசியவாதிகளின் உரிமைகளைக் குறித்த எல்லைகளுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.<br /><br />அண்மையில் இந்தியாவில் உள்ள ஏராளமான கிறித்தவ வழிபாட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கடந்த டிசம்பரில் கிழக்கு டில்லியில் செயின்ட் செபாஸ்டியன் சர்ச் முழுவதுமாக தீக்கிரை-யாக்கப்-பட்டது.<br /><br />கிறித்தவ மதபோதகர் கூறும்போது, புகைமண்டலமாக இருந்தபோது மண்ணெண்ணெய் மணம் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். டில்லியில் அண்மையில் தீய நபர்களால் செயின்ட் அல்போன்சா சர்ச் தீவைத்து எரிக்கப்பட்டது. சடங்குகளுக்குப் பயன்படுத்தும் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், பணம் நிறைந்திருந்த உண்டியல் பெட்டியை அவர்கள் தொடவில்லை.<br /><br />கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் இந்தியாவுக்கே உரிய மதச் சார்பின்மையை நிலைநிறுத்த அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறித்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.<br /><br />மாபெரும் அளவிலான மதமாற்றங்கள் குறித்தும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் கடந்த டிசம்பரில் 200 முசுலீம்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜனவரியில் மேற்கு வங்கத்தில் நூறு கிறித்தவர்கள்வரை மறு மதமாற்றம் என்கிற பெயரில், இந்துமதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.<br /><br />இந்து தேசியவாதக் குழுக்களாக உள்ள விஸ்வ இந்து பரிஷத், ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஒளிவுமறைவின்றி தாய்மதம் திரும்புதல் என்கிற பெயரில் பிரச்சாரத்தைச் செய்து இந்துக்கள் அல்லாதவர்களை மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார்கள்.<br /><br />இந்தியாவில் 80 விழுக்காட்டினருக்கும் மேலாக இந்துக்கள் உள்ளனர். ஆனால், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த பிரவீன் தொகாடியா கூறும்போது, அவருடைய அமைப்பான வி.எச்.பி., நாட்டில், நூறு விழுக்காட்டளவில் இந்துக்களாக ஆக்குவது-தான் இலக்கு என்று கூறியுள்ளார். அதற்கு ஒரே வழி மதச்சிறுபான்மையரின் மத நம்பிக்கைகளை மறுப்பதுதான்.<br /><br />அயோத்தியில் 3,000 முசுலீம்களை ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்ய உள்ளதாக வி.எச்.பி. கூறுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகளால் 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நாடுமுழுவதும் ஏற்பட்ட வன்முறைக் கலவரங்களில் 2000பேர் உயிரிழந்தனர்.<br /><br />நெருப்போடு விளையாடுவதை வி.எச்.பி. தெரிந்தே செய்கிறது. மோடியின் விருப்பமான திட்டமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதி அளித்திருந்தார். ஆனால், புதுடில்லியில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மதவாதங்களால் பிரித்துக் கொண்டிருக்கும் வரை, இந்தியா வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார். மத சகிப்புத் தன்மையற்ற தன்மையில் கேளாக்காதாக உள்ள மோடியின் அமைதியை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75550348440289151092015-02-19T17:57:30.851+05:302015-02-19T17:57:30.851+05:30புதுப்பா
முகங்கள்
அண்ணனுக்கு ஆனைமுகம்
தம்பிக்கு ஆ...புதுப்பா<br /><br />முகங்கள்<br />அண்ணனுக்கு ஆனைமுகம்<br />தம்பிக்கு ஆறுமுகம்<br />தந்தைக்கும் தாய்க்கும்<br />பாதிப் பாதி முகம்<br />பக்தனே நீ எந்த முகத்தோடு<br />கோவிலுக்குப் போகிறாய்?<br /><br />- வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.<br /><br />புதுப்பா<br /><br />பாதையை மாற்று!<br />விரும்பியதை விரும்பு - உன்னை<br />விரும்பியதை விரும்பு!<br />எறும்புக்குத் தெரியாதா<br />கரும்பின் சுவை!<br />கண்ணின் பார்வை<br />காணும் தூரம் மட்டும்!<br />அறிவின் பார்வையோ<br />ஆகாயத்தை எட்டும்!<br />கீதையைப் போற்றாதே!<br />பாதையை மாற்று! - பெரியார்<br />பாதைக்கு மாற்றேது!<br /><br />- சீர்காழி கு.நா.இராமண்ணாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-92037357949225972672015-02-19T17:56:27.218+05:302015-02-19T17:56:27.218+05:30பழைமையான சூரியக் குடும்பம்
பூமியைப் போன்ற அளவுள்...பழைமையான சூரியக் குடும்பம்<br /><br /><br />பூமியைப் போன்ற அளவுள்ள அய்ந்து கிரகங்கள் சுற்றி வரும் ஒரு நட்சத்திரம் நாசாவின் கெப்ளர் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை கண்டறியப் பட்ட நட்சத்திரங்களிலேயே மிகப் பழைமையான நட்சத்திரமாகக் கருதப்படும் இதற்கு கெப்ளர் 444 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கெப்ளர் 444அய் பூமியை விடச் சிறியதான புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடைப்பட்ட அளவில் உள்ள அயந்து கிரகங்கள் சுற்றி வருகின்றன. கெப்ளர் 444 குடும்பத்திலுள்ள கிரகங்கள் தங்களது சூரியனை 10 நாள்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வந்துவிடுகின்றன. அதேபோல பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கு தூரத்திற்குள் வட்டப் பாதையில் சுற்றி வந்துவிடுகினறன என வானியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற பழைமையான நட்சத்திரத்தைச் சுற்றி ஏராளமான சிறிய கோள்கள் சுற்றி வருவதைப் பார்த்ததில்லை. இது மிகவும் சிறப்பானது. கெப்ளர் 444 சூரியக் குடும்பமானது நமது சூரியக் குடும்பத்தைவிட இரண்டரை மடங்கு பழைமையானது. நமது சூரியக் குடும்பம் 450 கோடி ஆண்டுகள்தான் பழைமையானது என சிட்னி பல்கலைக்கழக இயற்பியல் கல்லூரிப் பேராசிரியர் டேனியர் ஹுபர் கூறியுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73955680567177854742015-02-19T17:55:54.493+05:302015-02-19T17:55:54.493+05:30பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும்
-அறிஞர் அண்ணா
பட...பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும்<br /><br />-அறிஞர் அண்ணா<br /><br />பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப் பாடுபடுவதோடு, சமூகத்திற்-காகப் பணிகளையும் செய்ய வேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை எங்கும் வீசச் செய்பவர்களாக நீங்கள் திகழ வேண்டும்.<br /><br />பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது; எதையும் காரணங் கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்-களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்.<br /><br />அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று ஒருமுறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம். ஆயினும், அந்த முறைகளை இளமை குன்றாத தீவிரத் தன்மையோடு கூடியதாக வைத்திருக்க வேண்டுமானால், மாறுதலை ஏற்றுக் கொள்ளத்தக்க, புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய இளம் இதயத்தைப்போல் நமது இதயம் பசுமையானதாக விளங்க வேண்டும்.<br /><br />பெரியாரைப் பின்பற்றுவோம்<br /><br />நெடுங்காலமாகப் பழைய முறைகளிலேயே ஊறி, அவற்றைத் தாங்கி, அவற்றுக்கெதிரான வாதங்களுக்கு எதிர்ப்புக்கூறி, காலத்தைக் கழித்திருக்கிறோம்.<br /><br />இதே காலத்தில் உலகத்தின் ஏனைய நாட்டவர்கள் எல்லாம் உண்மையை நாடி, பொறுமையோடு தங்களது இடைவிடா ஆராய்ச்சி சோதனை மூலம் பல புதிய முடிவுகளை எய்தியதுடன், உயர்வு பெற்றுள்ளனர். நாம் பண்டைய பழம்பெருமையில் அமர்ந்திருப்பதில் திருப்தி கொள்கிறோம்.<br /><br />நன்மையறியாமல் இவற்றைப் பாதுகாக்கக் கூடியவர்களாக இருந்து வந்துள்ளோம். இந்த வகையில், புரையோடிய சமூகக் கருத்துகளைச் சாகடிக்கும் வீரர் பெரியாரைக் குறைகூறத் துணிவதில் சிறிதுகூட அறிவுத் தெளிவு இல்லை.<br /><br />பழம் பெருமை பேசிக்கொண்டு, மூடப் பழக்கங்களில் ஆழ்ந்து அடிமைப்பட்டிருக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்தி, புரையோடிய சமுதாயக் கருத்துகளை ஒழித்துப் போராடும் வீரரான பெரியாரைக் குறைகூறிப் பயன் என்ன? பகுத்தறிவே எல்லோருடைய உள்ளங்களையும் தங்குதடை-யின்றி ஆளவேண்டும்.<br /><br />ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் அமைக்கும் போர் வீரர்களாக எல்லோரும் முன்வர வேண்டும். நாட்டில் புத்துயிர் ஊட்டிப் பகுத்தறிவாளர்களைப் பெருக்க வேண்டும்.<br /><br />ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுங்கள்<br /><br />பகுத்தறிவு மூலம் சமுதாயத்தினைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறுவோர் இப்பணிக்குத் தூதுவர்களாக விளங்க வேண்டும். ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுத்திடுங்கள் என நான் உங்களை அழைக்கிறேன்.<br /><br />விஞ்ஞானத்தோடு ஒட்டி வாழ முடியாத மூடப் பழக்கங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்படியும் உங்களை வேண்டுகிறேன்.<br /><br />(அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 18.11.1967 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17580831182923099532015-02-19T17:55:49.172+05:302015-02-19T17:55:49.172+05:30பகுத்தறிவு வளர சிறந்த வழி
எங்கள் வழிகாட்டி மாம்ப...பகுத்தறிவு வளர சிறந்த வழி<br /><br /><br />எங்கள் வழிகாட்டி மாம்பலம் ஆ.சந்திரசேகர் அழைப்பு சோதிடம் மறுப்பு...<br /><br />கூடுதல்....மாதம், நாள் மறுப்பு......செய்தால்...!<br /><br />என் திருமண மண்டபத்தில்....<br /><br />ஆடி , மார்கழி, புரட்டாசி.. மாதங்களில் திருமணம் செய்தால் கட்டணத்தில் 75% தள்ளுபடி செய்கிறேன்!<br /><br />அஷ்டமி... நவமி... அமாவாசையில் எந்த மாதம் மணம் செய்தாலும் 75% தள்ளுபடி நிச்சயம்!<br /><br />நான் தயார்..<br /><br />நீங்கள் தயாரா?...<br /><br />- முகநூலிலிருந்துதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54099951286302270392015-02-19T17:41:44.035+05:302015-02-19T17:41:44.035+05:30கர்மவீரன் கோட்சேயாம்!
பாராளுமன்றத்தின் முன் சிலைகள...கர்மவீரன் கோட்சேயாம்!<br />பாராளுமன்றத்தின் முன் சிலைகளாம்!<br /><br /> <br /><br />சந்திரபிரகாஷ் கவுசிக்<br /><br />காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சிலை வைக்க மத்திய அரசை நாடியுள்ளதாக கூறியுள்ளது. நாடு முழுவதும் கோட்சேவிற்கு சிலைகள் அமைக்க வேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந்தது.<br /><br />இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத்தில் சிலை அமைத்துவிட்டு பிறகு மற்ற இடங்களில் அமைக்க வேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.<br /><br />இதுகுறித்து டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சந்திரபிரகாஷ் கவுசிக் கூறியதாவது: இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசுகள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித்தரித்து வந்தது. ஆனால் கோட்சே அப்படியாப்பட்டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.<br /><br />அவரை நாம் கொலைகாரராகப் பார்க்கக்கூடாது. ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேசவிரோத சக்திகள் நம்மை அப்படிப் பார்க்க வைத்துவிட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந்திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம். இதை மத்திய அரசே ஒப்புக்கொண்டு விட்டது.<br /><br />பிரதமர் மோடிகூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறுவதில் தவறு என்ன என்று புரியவில்லை. மோடி ஒன்றும் பாகிஸ்தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை. இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார்.<br /><br />சாக்சி<br /><br />கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நடாளுமன்றத்தில் இருந்தே தொடங்க வேண்டும். தெருவிற்குத் தெரு சிலைவைக்கும் முன்பு நாடாளுமன்றத்தில் சிலை வைத்தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும்.<br /><br />இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே எங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசை அணுகியுள்ளனர். முதலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைத்த பிறகுதான் மற்ற இடங்களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறுகிறோம்.<br /><br />சாக்சி, கோட்சேவைப் பற்றிக் கூறியது, பிறகு பின்வாங்கியது பற்றிக் கேட்டபோது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனைவரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்றுதான் பார்க்கிறார்கள். இந்துக்களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது. இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.<br /><br />இன்று கோட்சே போன்று வீரம், விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர்களுக்கு எல்லாம் இனி சுதந்திரம்தான். இவர்கள் நினைத்தால் இந்து தேசத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல முடியும். அரசியல்வாதிகளுக்கு அரசியல் லாபம்தான் முக்கியம்.<br /><br />அதனால்தான் ஆளும் பா.ஜ.க. அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப்பது இந்து அரசு. ஆகையால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை. கோடான கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பா.ஜ.க. அரசிற்கு உள்ளது என்று கூறினார்.<br /><br />ஆதாரம்: http://www.liveaaryaavart.com/2014/12/demand-for-putting-Godsey-idol-in-parliament.html<br /><br />கோட்சே போன்ற மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலை வைக்காமல் பாகிஸ்தானிலா வைக்க முடியும்?<br /><br />- இந்து மகாசபைத் தலைவர் சந்திரபிரகாஷ் கவுசிக், (எக்னாமிக் டைம்ஸ் 17.12.2014)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29051589813646593412015-02-19T17:40:59.102+05:302015-02-19T17:40:59.102+05:30
கருத்து
’மேக் இன் இந்தியா’ மூலம் வெளிநாட்டு நிற...<br /><br />கருத்து<br /><br />’மேக் இன் இந்தியா’ மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுகிறார் பிரதமர் மோடி. ஆனால், வெளிநாட்டுத் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க சங்பரிவாரின் பொருளாதாரப் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. என்ன முரண் இது?<br /><br />- திக்விஜய் சிங்<br /><br />காங்கிரஸ் பொதுச்செயலாளர்<br /><br />மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் என்ற வார்த்தைகளை அரசியல் சட்டத்தின் முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது அழிவை ஏற்படுத்தக்கூடியது; கண்டிக்கத்தக்கது மற்றும் வெறுக்கத்தக்க அறிக்கையாகும். அறியாமையின் வெளிப்பாடே அந்த அறிக்கை மதச்சார்பின்மை அவசியம் இல்லை என சொல்வது கவலை தருவதாக உள்ளது.<br /><br />- ஜிதன்ராம் மாஞ்சி<br /><br />பிகார் முதல்வர்<br /><br />மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மிகுந்த இந்தியா, தற்போது வெறுப்பு, பெரும் பான்மைத்துவம் மற்றும் சகிப்புத் தன்மை இல்லாத நாடாக மாறியிருக்கிறது. புதிய அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில், சிறுபான்மை கிறித்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்து தேசியவாதிகள் அதிகரித்து இருப்பதாக என்.ஜி.ஓ.க்களின் ஆவணங்-களின் தகவல்கள் கூறுகின்றன.<br /><br />- ஜோ பிட்ஸ்,<br /><br />அமெரிக்காவின் குடியரசு<br /><br />கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர்.<br /><br /> <br /><br />தேர்தல் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில் இந்தியாவில் பல்லாண்டு-களாகப் பலராலும் சொல்லப்-பட்டு வருகின்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.<br /><br />- கலைஞர், தி.மு.க. தலைவர்<br /><br />மனிதனின் வாழ்க்கை உயர்வடைய புத்தகங்கள் மிகவும் முக்கிய-மானவை. ஒருவன் தலைகுனிந்து-படிப்பது-தலைநிமிர்ந்து வாழ்வதற்கே. உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவை புத்தகங்களே. புத்தகம் என்பது ஒவ்வொரு முறை திறக்கும்-போதும் வெடிக்கக்கூடிய சக்தி படைத்தது. சாதாரண மனிதனைக்கூட சாதனை மனிதனாக்க புத்தகங்களால் முடியும்.<br /><br />- இரா.தாண்டவன்,<br /><br />சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.<br /><br /><br />சொல்றாங்க...<br /><br />அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும்.<br /><br />- ஒபாமா, அமெரிக்க அதிபர்<br /><br />சொல்றேங்க...<br /><br />அமெரிக்காவா? நம்ப வைத்துக் கழுத்த அறுக்காம இருந்தா சரி!<br /><br />இந்தியா_பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அய்.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது.<br /><br />- சர்தாஜ் அஜிஸ்,<br /><br />தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான்.<br /><br />ஏன் சீனாதான் நெருக்கமா இருக்கே, அங்க விண்ணப்பித்தாப் போச்சு!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88924738392804094882015-02-19T17:38:50.469+05:302015-02-19T17:38:50.469+05:30உங்களுக்குத் தெரியுமா?
பார்ப்பனர்களுக்கும், பார்...உங்களுக்குத் தெரியுமா?<br /><br /><br />பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி வ.வே.சு. அய்யர் ஜாதிவெறியோடு நடத்திய சேரன்மாதேவி குருகுலம் மலேயா நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தந்த ரூ 20,000 நன்கொடையால் நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59985151480025000792015-02-19T17:38:03.494+05:302015-02-19T17:38:03.494+05:30இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்
இந்தியாவில் மனித உ...இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்<br />இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்<br /><br /> Print<br /> Email<br /><br /><br />இந்தியாவில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.<br /><br />கடந்த ஆண்டு உத்தரபிரதேசம், முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் முதல் அண்மையில் பிகார் மாநிலத்தில் நடந்த கலவரம் வரை குறிப்பிட்ட மதத்தின்மீது கடுமையான தாக்குதல்கள் நடை-பெற்றுள்ளன. இந்தத் தொடர் தாக்குதலின்-மூலம் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்-துள்ளனர்.<br /><br />தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சுதந்திர-மாகச் செயல்பட அனுமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது.<br /><br />ஆந்திரா, ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள இந்த மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மிரட்டி வற்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மத்திய அரசு இந்த அவலத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.<br /><br />அண்மையில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்க அரசு முன்வராததால் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.<br /><br />இந்தியாவில் 13 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்காத நிலையில் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. சில குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.<br /><br />தடுக்க வேண்டிய அரசுகளோ கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றன என பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்-பட்டுள்ளதுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17686961176367175112015-02-19T17:30:52.808+05:302015-02-19T17:30:52.808+05:30நீங்குமா? நீங்காதா?
மதத்தைக் காப்பாற்றவே கோயில்க...நீங்குமா? நீங்காதா?<br /><br /><br />மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.<br />(விடுதலை, 3.12.1962)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/96503.html#ixzz3SBwBKa96<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30033761405193587372015-02-18T17:54:49.316+05:302015-02-18T17:54:49.316+05:30இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடக்கிறதா? ஆர்...இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடக்கிறதா? ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு முஸ்லிம் மத குருக்களின் 6 கேள்விகள்<br /><br />கான்பூர், பிப். 18_ இந் தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடக்கிறதா என்பது தொடர்பாக முஸ்லிம் மத குருக்களின் குழு கேட்ட 6 கேள்வி கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை எரிச்சலூட்டியுள்ளது.<br /><br />அனைத்திந்திய மஜ் லிசே இத்தேயாதுல் முஸ் லிமின் (ஏ.அய்.எம்.அய். எம்.) தலைவர் அசாதுதீன் உவைசி சமீபத்தில் பேசிய பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப் புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உவைசியின் கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் மவுனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.<br /><br />அதைத் தொடர்ந்து சன்னி உலமாக்கள் கவுன் சில் பொதுச் செயலர் ஹாஜி மொகம்மது சலீஸ் தலைமையிலான முஸ்லிம் மத குருக்கள், ஆர்.எஸ். எஸ். மூத்த நிர்வாகி இந்தரேசை சந்தித்துப் பேசினர்.<br /><br />இந்த சந்திப்பு குறித்து ஹாஜி மொகம்மது சலீஸ் கூறியதாவது:<br /><br />உவைசியின் கருத்தை முஸ்லிம் மக்கள் ஏற்க வில்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். பாஜக எம்.பி.க்கள் சாக்ஷி மகராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் பேசி யதுபோல், நாடாளுமன்ற உறுப்பினரான உவைசியும் தேவையில்லாத கருத்தை பேசியுள்ளார். அதை முழுமையாக எதிர்க் கிறோம்.<br /><br />இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றனவா என்பது தொடர்பாக 6 கேள்வி களை கேட்டோம். ஆனால் அது இந்தரேசை எரிச் சலூட்டியுள்ளது என் பதை உணர்கிறோம். அவர் அந்த 6 கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.<br /><br />மாறாக முஸ்லிம்கள் மாநாட்டை நடத்தும்படியும், அதில் தனது பதிலை தெரிவிப்ப தாகவும் கூறினார். ஒரு அறைக்குள் நடந்த கூட் டத்திலேயே இந்த கேள்வி களுக்கு பதிலளிக்க முடிய வில்லை. மாநாட்டில் எப் படி பதிலளிக்க முடியும்.<br /><br />நமது அரசமைப்பு சட்டமானது அனைவருக் கும் மத சுதந்திரத்தை கொடுத்துள்ளது. மதமாற் றம் குறித்த வரைவு சட் டத்தைக் கொண்டுவர ஏன் தயங்குகிறார்கள்.<br /><br />முஸ்லிம் மதத்தை பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து விலகி செல்ல எநதத் தடையும் இல்லை. யாரையும் கட்டாயப் படுத்தி முஸ்லிமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். நாட்டின் நலனுக்காகவே உள் ளோம். அதனால்தான் பிரிவினையின்போது ஜின் னாவையும், பாகிஸ்தா னையும் துறந்தோம். காந் தியாரை தலைவராகவும், இந்தியாவை தாய்நாடா கவும் ஏற்றுக் கொண்டோம்.<br /><br />மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் அதை எதிர்ப் போம். உவைசியின் கருத் தையும் எதிர்க்கிறோம். காந்தியாரின் வழியில் ஒன் றுபட்டு நாட்டு நலனை யோசிப்போம்.<br /><br />இவ்வாறு ஹாஜி மொகம் மது சலீஸ் தெரிவித்தார்.<br /><br />இதனிடையில் முஸ் லிம் மத குருக்கள் குழு வில் இடம்பெறுவதற்கு மறுத்த கான்பூர் நகர முஸ்லிம் மத குருவான ஆலம் ராஜா நூரி, ஆர்.எஸ். எஸ். நிர்வாகியிடம் இது குறித்து பேச வேண்டிய தில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத்தை சந்தித்துக் கேட்க வேண்டும் என்றார்.<br /><br />இந்த சந்திப்பால் எந்தப் பலனும் கிடைக்கப் போவ தில்லை. நான் ஊரில் இல்லை. இருந்திருந்தா லும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க மாட்டேன் என்றார் நூரி.<br /><br />ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை சந்திக்கும் தங்களு டைய குழுவில், நூரியின் பெயர் இடம்பெறவில்லை. கடைசியில்தான் அவரு டைய பெயர் சேர்க்கப்பட் டது என்று சலீஸ் தெரி வித்தார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96466.html#ixzz3S6BiHa7s<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90550158324407481842015-02-18T17:49:43.628+05:302015-02-18T17:49:43.628+05:30மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம் (2)
மகிழ்ச்சி...மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம் (2)<br /><br />மகிழ்ச்சி என்பது இன்ப உணர்வின் வெளிப்பாடு;<br /><br />துயரம், துக்கம் என்பது துன்பத்தின், துயரத்தின் வெளிப்பாடு.<br /><br />வாழ்க்கையில் வெறும் இன்பமோ, வெறும் துன்பமோ எப்போதும் இருந்த தில்லை - எவர்க்கும்.<br /><br />மாறி மாறி மகிழ்ச்சியும், துயரமும் வெளிப்படும் நிகழ்வுகளும், நிலை களும் சகஜம்.<br /><br />உலக வரலாற்றில் எப்போதும் எல்லா பக்கங்களும் தொடர் துன்பத் தாலோ அல்லது அறுபடாத தொடர் இன்பத்தாலோ நிரப்பப்பட்டதல்ல; சில பக்கங்கள் இரண்டுமில்லாத காலி பக்கங்களாகவே இருக்கின்றன என்றார் ஜெர்மன் தத்துவ அறிஞர் ஜார்ஜ் வில் லியம் பிரஃடெரிக் ஹெகல் (1770-1831).<br /><br />(இவர் வரலாற்றுக்கும், தத்துவத் திற்கும் உள்ள இணைப்பைப்பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்த மேதையாவார். காரல் மார்க்ஸ்க்கு இவரது தத்துவம், தர்க்க முறையின் தாக்கம் அதிகம் உண்டு).<br /><br />தத்துவ அறிஞர்களில்கூட நம்பிக் கைக் குறைந்த சலிப்பும், விரக்தியும் மேலோங்கும் அணி (Pessimistic Philosophers); மற்றொரு வகை எப்போதும் நம்பிக்கை தளராத விரிந்த மனப்போக்கு உடைய தத்துவ ஞானிகள் (Optimistic Philosophers).<br /><br />முன்னவர்களை Weeping philosophers - எப்போதும் அழுது புலம்பும் அழுகுணிச் சித்தர்கள் என்றும், பின்ன வர்களை எப்போதும் சிரித்து மகிழும் சிரிப்புத் தத்துவ அறிஞர்கள் Laughing Philosophers என்றும் கூறி மகிழ்வது.<br /><br />சிற்சில நேரங்கள் ஒருவர் மகிழ்ச்சி மற்றவருக்குத் துன்பம் என்ற நிலையே உலகின் நடைமுறையாக உள்ளது! எல்லோருக்கும் எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியும், துயரமும் - இன்பமும், துன்பமும் - எல்லா நேரங்களிலும் ஏற்பட்டுவிடுமா?<br /><br />இயலுமா? என்றால், பதில் இல்லை. கடினம்; எளிதில் இவை இணையாது என்பதே யதார்த்தம் - நடைமுறை.<br /><br />பசியால் மானை வேட்டையாடி சிங்கம் தன் பசியைத் தீர்த்து மகிழ்கிறது.<br /><br />மான், சிங்கத்திடமிருந்து தப்பியோட முயன்று அதில் தோல்வி அடைந்து, சிக்கிக் கொள்கிறது. இரையாகி அது சிங்கத்திற்கு தன்னை இழந்து சிங்கம் மகிழ்ச்சி அடைகிறது.<br /><br />அதுபோலத்தான் ஏழைகளும், பாட்டாளிகளும் தங்கள் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைத்து, தனக்குரிய பலன் கிட்டாவிட்டாலும், பணக்காரர்களின் குதிர் நிரம்பி வழிய உதவுகின்றனர்!<br /><br />ஏழை பாட்டாளிகளின் கண்ணீர், செந்நீர், ஏகபோக முதலாளிகள் - பணக்காரர்களின் பன்னீராக மாற்றப் படுகிறது!<br /><br />ஒரு பக்கம் வலி மிகுந்த துன்பம்; மறுபுறம், குதூகலம், கொள்ளை லாபத் தினை குன்றெனக் குவித்து மகிழும் குவலயச் சுரண்டல்காரர்களின் மகிழ்ச்சி - என்று நியாயமான துன்பம், நியாயம், நீதியற்ற இன்பம் - இவைதான் இன் றைய உலகின் சமூக அமைப்பாகி உள்ளது!<br /><br />பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்<br />புனல் நிறைந்த தொட்டியானார் செல்வர்<br /><br />என்றார் புரட்சிக்கவிஞர்.<br /><br />மகிழ்ச்சியை இன்பத்தால் மட்டுமே அனுபவிப்பதைவிட, துன்பம் துவட்டி எடுக்கும்போதும் அனுபவிக்கப் பழகு வது மிகவும் இன்றியமையாத தேவை யாகும் தொண்டறத்தில்.<br /><br />துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி<br />இன்பம் பயக்கும் வினை (குறள் 669)<br /><br />இதில் துன்பத்தை ஏற்று துக்கம் வராமல் (கொண்ட லட்சியத்திற்கான விலை என்கிறபோது, மகிழ்ச்சியோடு அதை ஏற்கும் வைர நெஞ்சங்களுக்கு, வையகத்தில் பஞ்சமா? வரலாற்றில் கொஞ்சமா?<br /><br />நச்சுக்கோப்பையை ஏற்று குடித்து மகிழ்வுடன் தனது வாழ்வை முடித்து, வரலாறாக வாழுகிறார் சாக்ரட்டீஸ்!<br /><br />தூக்குமேடையை முத்தமிட்ட கொள்கை நாத்திக நன்னெறியார் தீரன் பகத்சிங்,<br /><br />வசதி, வழக்குரைஞர் செல்வ வாழ்வு துறந்து, சிறையில் செக்கிழுத்து, அறி வையும், மானத்தையும் தவிர, மற்ற எல்லாவற்றையும் துறந்த ஒப்பற்ற தியாக மாணிக்கம் - வைர நெஞ்சம் படைத்த வ.உ.சிதம்பரனார், எதிர் நீச்சல், இழிவுகளைச் சுமந்தும் தன் இலட்சியப் பயணத்தை, ஒரு கையில் மூத்திரச் சட்டி, மறுகையில் அணையாத அறிவுச்சுடர் தாங்கி 95 வயது வரை பட்டிதொட்டியெங்கும் பரப்புரை செய்து வாழ்வதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட ஈரோட்டு ஏந்தல் தந்தை பெரியார் - இப்படி எத்தனை எத்தனையோ பேர் துன்பத்தால் துவளாது, இன்பத்தை நெருப்பிலும் கண்டு தூய்மையாலே தொண்டறச் செம்மல்கள் ஏராளம் உண்டே!<br /><br />- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி<br /><br />Read more: http://viduthalai.in/page-2/96424.html#ixzz3S6AP6J52<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44375360879366679172015-02-18T17:47:30.673+05:302015-02-18T17:47:30.673+05:30சிவராத்திரி உபயம்: 2000 பக்தர்கள் மருத்துவமனையில் ...சிவராத்திரி உபயம்: 2000 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி<br /><br />உஜ்ஜைன், பிப். 18_ மத்தியப் பிரதேசம் உஜ் ஜைனியில் உள்ள மகா பைரவர் கோவிலில் சிவராத்திரி அன்று இரவு பிரசாதம் சாப்பிட்ட 2000 சிவ பக்தர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனை யில். சேர்க்கப்பட்டுள் ளனர்.<br /><br />அதில் 200_க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை மோசமாக உள்ளதாம். மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் என்றும், உலகம் அழியும்போதுகூட அழி யாத கோவில் என்றும் கதைகட்டி விடப்பட்ட உஜ்ஜைனி மகாபைரவர் கோவிலில் சிவராத்திரி விழாவன்று ஆயிரக்கணக் கானோர் கூடுவார்கள். இந்த ஆண்டும் உஜ்ஜைனி மகாபைரவர் சிவராத்திரி கோவில் விழா கடந்த ஞாயிறு அன்று துவங்கி யது. மத்தியபிரதேச மாநிலம் மட்டுமின்றி ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். நேற்று மாலைமுதல் சிவராத்திரி விழா தொடங்கி நடந்து வந்ததாம்.<br /><br />நள்ளிரவு விழாவில் கலந்துகொண்ட அனை வருக்கும் பிரசாதம் வழங் கப்பட்டதாம். அத்துடன் விழா நிறைவடைந்தது. பிரசாதம் உண்ட சில மணிநேரத்தில் முதலில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் மற்றும் கடுமை யான வயிற்றுவலி ஏற் பட்டது. இதனை அடுத்து பெண்கள் மற்றும் ஆண் களுக்கும் வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டது. முதலில் சில நூறு பேருக்கு மட்டும் இருந்த வயிற்றுவலி இன்று காலையில் ஆயிரக்கணக் கானோர் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவ திப்பட ஆரம்பித்துவிட் டனர்.<br /><br />இதனால் கோவில் வளாகம் முழுவதுமே அழுகுரல் கேட்கத் தொடங்கியது. நிலைமை மோச மானதைத் தொடர்ந்து அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத் துவமனைகளில் சேர்க்கப் பட்டனர். இச்சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச தலைமை மருத்துவ அதி காரி என்.கே.திரிவேதி கூறியதாவது. காலைமுதல் 2000_க் கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரசு மருத் துவமனை மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் குவிந்தவண்ணம் உள்ள னர்.<br /><br />சுமார் 500 பேர் களுக்கு முதலுதவி கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டோம். இதில் 1500_க்கும் மேற் பட்டோர் உள்நோயா ளிகளாக சேர்க்கப்பட் டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்களில் 200_க்கும் மேற்பட்டோர் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதில் 40 பேரை போபா லில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள் ளோம்.<br /><br />மாவட்ட காவல்துறை இணை ஆணையர் ஆர்.பி. கோலட் கூறும்போது, பிரசாதம் தயாரித்து வழங்கும் உரிமையைப் பெற்றுள்ள தனியார் நிறு வனம் ஒன்று வெளியில் இருந்து உணவு தயாரித் துக் கொண்டுவந்துள்ளது. உணவில் நச்சு கலந் துள்ளதா என கண்டறிய உணவு மாதிரிகள் ஆய் வகத்திற்கு அனுப்பட் டுள்ளது, இவ்விவகாரம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடந்துவரு கிறது என்று கூறினார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96419.html#ixzz3S69qyljo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6376690937279944752015-02-18T17:46:51.684+05:302015-02-18T17:46:51.684+05:30குஜராத்தில் 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்க...குஜராத்தில் 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் படுகொலைக்குக் காரணமாக இருந்த ஆட்சியின் சொந்தக்காரர் மோடி கூறுகிறார்<br /><br />உலக அளவில் நடக்கும் மத ரீதியான மோதல்கள் கவலையளிக்கிறதாம்!<br /><br />புதுடில்லி, பிப்.18_ டில்லி விக்யான் பவனில் நடந்த கிறிஸ்துவ மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி உலக அளவில் நடக்கும் மதரீதியான மோதல்கள் கவலையளிப்பதாக உள் ளது என்று தெரிவித்துள் ளார். கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் மற்றும் கன்னிகாஸ்திரி யூப்ரேசியா ஆகியோருக்கு அண்மையில் வாடிகன் நகரில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் அளிக்கப் பட்டது. புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை நினை வுகூரும் வகையில் டில் லியில் உள்ள விக்யான் பவனில் நடந்த விழாவில் கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில் தங்களுக்கு விருப்பமான மத நம்பிக் கையை பின்பற்ற ஒவ் வொருவருக்கும் பூரண உரிமை உள்ளது இந்தி யாவிலும் அந்த நிலை உள்ளது என்று கூறிய மோடி இதற்கான சுதந் திரத்தை அரசு உறுதி செய்யும் என்றார். அனைத்து மதத்தின ரையும் மதித்து நடக்கும் பண்பாடு ஒவ்வொரு இந்தியனின் உணர்வி லும் கலந்தது என குறிப் பிட்ட மோடி, மத சகிப்புத் தன்மையுடனும், பரஸ்பர மரியாதையுட னும் பிற மதத்தினரை மதிக்கவேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத ரீதியிலான மோதல்களை உருவாக்கு பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றார்.<br /><br />இந்தியா வந்த அமெ ரிக்க அதிபர் ஒபாமாமுதல் அமெரிக்க பத்திரிகையின் தலையங்கம்வரை இந்தி யாவில் மத நல்லிணக்கம் குறைந்து வருவதாக பேசப்பட்டது. பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் மவுனம் கலைத்துப் பேச வேண்டும் எனவும் பல் வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வந்தது.<br /><br />மோடியை அழைக்க எதிர்ப்பு!<br /><br />பிரதமர் மோடியை இந்நிகழ்ச்சிக்கு அழைத் ததில் கிறிஸ்தவ சபை களுக்கு இடையே இரு வேறு கருத்து நிலவுவ தாகவும் தெரிகிறது. ஒரு தரப்பினர், டில்லி யில் தேவாலயங்கள்மீதான தாக்குதலுக்குப் பின்னர் எந்தக் கருத்தும் தெரிவிக் காதவரை ஏன் அழைக்க வேண்டும் என வாதிட்ட தாகவும், மற்றொரு தரப் பினர் இந்த அழைப்பின் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக பிரதமர் மவு னம் கலைக்க வழிவகை ஏற்படும் என தெரிவித் ததாகவும் கூறப்படுகிறது.<br /><br />தலைநகர் டில்லியில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கு தலுக்கு ஆளாகிவருகின் றன. கடந்த வாரம் கிறிஸ் தவ கல்வி நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது. இருப்பினும் மோடி மத மோதல்கள் தொடர்பாக தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்து வந்தார். டில்லி தேர்தல் தோல்வி, அதைத் தொடர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைப் பதில் மீண்டும் தோல்விய டையும் நிலை, உலக நாடுகளின் அழுத்தம் போன்றவைகளால் இறுதி யில் மோடி தனது நிலைப் பாட்டைக் கூறியுள்ளார். அதே நேரத்தில் நேரடி யாக இந்துத்துவா சக்தி களைக் குறிப்பிடாமல், சர்வதேச மத ரீதியான மோதல்கள் என்று குறிப் பிட்டதன்மூலம் சங் பரி வாரத்தின் தலைவர்களை சமாதானப்படுத்துவதுபோல் உள்ளதாகத் தெரிகிறது.<br /><br />மோகன் பகவத், அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா போன்றோர் இந்து ராஷ்டிரம், அகண்ட பாரதம், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந் துக்களே என்றும், விரை வில் 5 கோடி பேரை இந்துமதத்திற்கு மாற் றுவோம் என்று கூறி வரும் நிலையில், மோடி யின் இந்த திடீர்ப் பேச்சு சங் பரிவார் கூட்டங்களி டையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />இதுதான் மோடியின் மதச்சார்பின்மை!<br /><br />இந்துக் கலாச்சாரம், இந்து நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு மத்தியில் அமைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்குச் சற்று அவகாசம் கொடுங்கள். நமது பாரதத் தன்மை குறித்த கனவு களை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.<br /><br />மேற்கண்டவாறு ராகவ் ரெட்டி, வி.எச்.பி. அமைப்பின் சர்வதேசத் தலைவர் கூறியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96418.html#ixzz3S69iOwIi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19351636084708478232015-02-18T17:46:19.886+05:302015-02-18T17:46:19.886+05:30இது உண்மையா? இது உண்மையா? இது உண்மையா?
சென்னை உயர...இது உண்மையா? இது உண்மையா? இது உண்மையா?<br /><br />சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை நிரப்பிடும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, தற்போதுள்ள தலைமை நீதிபதி பார்ப்பனர் (வடக்கே இருந்து வந்தவர்) தற்போதுள்ள பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை 6 (2 அல்லது 3 சதவிகிதம் உள்ள வகுப்பினர்) மேலும் அதே அளவுக்கு நியமனம் செய்யப்பட- பார்ப்பனப் பண்ணையமாக மாற்றிட - தீவிர முயற்சிகளைச் செய்து, பகீரதப் பிரயத்தனம் செய்யும் நிலையில், இதை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் புரிந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.<br /><br />இரண்டு மூன்று பட்டியலின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?<br /><br />ஒரே பட்டியலாகப் புதிய நீதிபதிகளுக்கான நியமனப்பட்டியலுக்குப் பதிலாக - இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து, தனித்தனியே ஒவ்வொரு பட்டியலிலும் ஒன்று அல்லது இரண்டு பார்ப்பனர்கள் பெயரை அவ்வப்போது சேர்ப்பது என்ற தந்திர வித்தை கையாளப்படுவதால் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது உண்மையா?<br /><br />தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாய் வருவதற்கு, மிகவும் பார்ப்பன வெறிபிடித்த ஒரு மாவட்ட நீதிபதி, (டில்லியில் தனக்குள்ள செல்வாக்கால்,) கலைஞர் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள ஆட்சியின் எதிர்ப்பினால், வடக்கே (பஞ்சாபி) மாநிலத்தில் நியமிக்கப்பட்டவர், தற்போது வாரம் இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மந்திராலோசனையின் முக்கிய நபராக உள்ளார் என்பதும், இதில் மற்றொரு ஆலோசகராக சென்னை நீதிமன்ற மூத்த பார்ப்பன நீதிபதி ஒருவரும் முக்கியப் பங்கு வகித்து ஒரு கூட்டுத் திட்டமே உருவாகி அதிகமான பார்ப்பனரை உள்ளே கொண்டு வருவதும், பார்ப்பனரல்லாத மாவட்ட நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பிட, ஏதாவது அற்பக் காரணங்களைத் தேடுவதும், தலைக்குக் கத்தி வைக்கும் மனு நீதி ராஜ்யத்தை நடத்திவரும் கொடுமை தொடர்கிறது என்று உயர்நீதிமன்ற நீதித்துறை வட்டாரங்களிலேயே கூட குமுறலும், கொந்தளிப்பும் பெருகியுள்ளன என்பது உண்மையா?<br /><br />எந்தவித ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டு ஏதும் இல்லாத - கூறவும் முடியாத நிலையில் ஒரு மாவட்ட நீதிபதியை இதற்கு மேலே பதவி உயர்வு (உயர்நீதிமன்ற நீதிபதிக்குத் தகுதி) அவர் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக இம்மாதம் 28 ஆம் தேதி அவரது பதவிக் காலம் (மாவட்ட நீதிபதிக்கானது) முடிவுறும் நிலையில், அவரைப் பரிந்துரை செய்வதைத் தவிர்க்கவே,<br />அவர் அரசியல் செல்வாக்குள்ள தம் ஜாதிக்காரர் ஒருவரை ஒரு குறிப்பிட்டவரைச் சந்திக்கின்றார் என்றெல்லாம் உயர்நீதிமன்ற மேலிடம் ஏனோதானோ என்று குற்றம் சுமத்தி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல நடந்துகொள்வது உண்மையா?<br /><br />மாவட்ட நீதிபதி பதவிகள் நியமனத்திலும் பார்ப்பன சூழ்ச்சி<br /><br />மாவட்ட நீதிமன்ற சார்பு (Subordinate Judiciary) தேர்வுக்கான, தேர்வுத் தாளைத் திருத்துதல், மாவட்ட நீதிபதி முதல் மற்ற நீதித் துறையில் பார்ப்பனர் ஏக போகம் தொடரும் வண்ணம், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு மதிப்பெண் போடுவதில், பாரபட்சம் காட்டி, பார்ப்பனரல்லாதவர்களைத் தடுக்கும் முயற்சியை திருப்பணியாகவே ஒரு பார்ப்பன உயர்நீதிமன்ற நீதிபதி, மேலிடத்தின் ஆதரவோடு நடத்தி, பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக்கட்டும், பரசுராம அவதாரம் எடுத்து வருவது உண்மையா?<br /><br />இதுபற்றி உடனடியான மாற்றம் தேவை; பார்ப்பனரல்லாத மூத்த நீதிபதிகள் பலர் இருந்தும், இந்தப் பொறுப்பு முழுவதும் ஏன் ஒரு பார்ப்பனரிடமே விடப்பட்டுள்ளது? இந்த நிலையால், மேலும் குமுறல் அதிகமாகி, நீதித்துறை கொதி நிலையில் உள்ளது என்பதும் உண்மையா?<br /><br />குறிப்பு: இதற்கான சமூகநீதிப் போராட் டத்தில் பெருமளவு வழக்குரைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம் -<br /><br />திராவிடர் கழகம்)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30670449310128795702015-02-17T20:46:23.204+05:302015-02-17T20:46:23.204+05:30மாணவர்களை முட்டாளாக்க வேண்டாம்!
பிளஸ் 2 மற்றும் ப...மாணவர்களை முட்டாளாக்க வேண்டாம்!<br /><br />பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் இருபால் மாணவர்களுக்கும் சிறப்பு வழிபாடு ஒன்று சென்னை சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.<br /><br />இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். இந்த வழிபாட்டில் பங்கு கொள்ளும் இருபால் மாணவர்களிடம் அகல் விளக்குகள் வழங்கப்படுமாம். அந்த அகல் விளக்கை ஏற்றி எங்கள் வாழ்வில் ஒளியேற்று இறைவா! என்று மாணவர்கள் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட சிறப்பு வழிபாடு நடத்துவார்களாம். அதன் பிறகு பூஜையில் வைக்கப்பட்ட காப்புக் கயிறுகளை மாணவர்களுக்கு வழங்குவார்களாம்.<br /><br />இதனைப் படிக்கும் பொழுது, இந்த 21ஆம் நூற்றாண்டின் நுழைவு வாசலில் ஆன்மீகவாதிகள் எதிர்கால நம்பிக்கை ஒளி விளக்குகளின் கைகளில் அகல் விளக்கைக் கொளுத்தி கடவுளிடம் விண்ணப்பம் போட்டால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முன் வருகிறார்கள் - வெட்கக்கேடு!<br /><br />இது மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக மூடநம்பிக்கையையும், சோம்பேறித்தனத்தையும் தானே வளர்க்கும்.<br /><br />கடவுளிடம் கையேந்தினால் தேர்வில் வெற்றி பெறலாம் என்ற பொய் நம்பிக்கையை மாணவர்களிடம் திணித்தால் அவர்கள் கல்வியில் எப்படிக் கவனம் செலுத்துவார்கள்? அன்றாடம் பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்படும்?<br /><br />அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்வில் சிறப்பாக வெற்றி பெறுவதற்குமான அறிவார்ந்த வழிமுறைகள் உள்ளன. கல்வியாளர்கள் அதைப்பற்றி எல்லாம் எடுத்துக் கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி, அறிவுக்கு ஒவ்வாத முறையில் தவறான வழியில் மாணவர்களைத் திசை திருப்பலாமா!?<br /><br />மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) தெளிவாக, திட்டவட்டமாகக் கூறுகிறது.<br /><br />இந்த நிலையில், இதற்கு முற்றிலும் முரண்பாடாக மூடநம்பிக்கை வலைக்குள் மாணவர்களைச் சிக்க வைப்பது சட்டப்படி குற்றமல்லவா!? மாணவர்களின் எதிர் காலத்தை இருட்டறையில் தள்ளுவது குற்றம் அல்லவா?<br /><br />இது ஏதோ ஒரு மதப்பிரச்சினை என்று கருதி விடக் கூடாது; எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற வேலையில் ஈடுபட்டாலும் அது குற்றம் குற்றமே!<br /><br />இதுகுறித்து ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் விமர்சிக்க வேண்டாமா?<br /><br />ஆனால் நம் நாட்டு ஏடுகளும், இதழ்களும் ஊடகங்களும் ஆன்மீக மலர்களைத்தானே வெளி யிட்டுக் கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு எதை விற்றாவது கல்லாப் பெட்டியை நிரப்ப வேண்டும் என்பதுதானே நோக்கம்.<br /><br />சரி, கல்வியாளர்கள் இல்லையா? அவர்கள் முன்வந்து கருத்துக்களைச் சொல்லக் கூடாதா என்று கேட்கலாம்; அப்படிச் சொல்லுவதற்கு முதுகெலும்பு வேண்டுமே, நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் சுயநல கதகதப்பில் அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!<br /><br />அரசியல்வாதிகள் கருத்துச் சொல்ல பெரும்பாலும் விரும்பாததற்குக் காரணம் இது கடவுளோடு, பக்தி யோடு சம்பந்தப்பட்டது என்பதால் வாக்கு வங்கியை நினைத்து வாய் மூடிக் கொள்ளும் நிலைதான்.<br /><br />கடைசியில் எங்கு வந்து நிற்கிறது என்றால், இது பகுத்தறிவாளர்கள் அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.<br /><br />இதில் உண்மை நிலை என்னவென்றால் எதிர் காலத்தின் உலகை நிர்மாணிக்கக் கூடிய மாணவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக ஆக்கி விடக் கூடாது என்று கருதுகிற ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டிய, தலையிட வேண்டிய ஒன்றாகும். இது வெறும் கழகப் பிரச்சினையல்ல.<br /><br />இதில் இன்னொரு கேள்வியும் உண்டு, தேர்வு களுக்குமுன் இப்படி வழிபாடு நடத்திய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று விட்டனர் என்பதற்கான புள்ளி விவரங்கள் உண்டா?<br /><br />கடவுள் நம்பிக்கை இல்லாத மாணவர்கள் எல்லாம் தேர்வில் தோல்வி அடைந்து விடுகின்றனரா?<br /><br />பக்தி என்பது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் கூடிய மூட உணர்வு என்பதற்கு இந்த ஏற்பாடுகள் ஓர் எடுத்துக்காட்டே!<br /><br />Read more: http://viduthalai.in/page1/96093.html#ixzz3S12M7ryk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83623318043463504252015-02-17T20:45:45.472+05:302015-02-17T20:45:45.472+05:30உயிர் நாடி...
மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது ப...உயிர் நாடி...<br /><br />மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமுமேயல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.<br /><br />- (விடுதலை, 1.4.1950)<br /><br />Read more: http://viduthalai.in/page1/96089.html#ixzz3S12Dp6st<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54869416804697692922015-02-17T20:45:13.764+05:302015-02-17T20:45:13.764+05:30இன்றைய ஆன்மிகம்?
வேண்டுதல்
கடவுள் எல்லாம் அறிந் ...இன்றைய ஆன்மிகம்?<br /><br />வேண்டுதல்<br /><br />கடவுள் எல்லாம் அறிந் தவன் தெரிந்தவன் என் றால், பக்தர்கள் எல்லாம் ஏன் அவனிடம் வேண்டு தலை செய்கிறார்கள் - நேர்த் திக் கடன் கழிக்கிறார்கள்?<br /><br />Read more: http://viduthalai.in/page1/96087.html#ixzz3S127IZTd<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com