Search This Blog

2.7.13

மருத்துவர் பற்றாக் குறையும் தந்தை பெரியார் கூறும் தீர்வும்


இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவர்கள் பற்றாக் குறை ஒரு சவாலாகவே உள்ளது. உலகளவில் ஆயிரம் பேர்களுக்கு 1.5 மருத்துவர் என்ற நிலை உள்ளது. சோமாலியாவில் 10 ஆயிரம் பேர்களுக்கு ஒருவரும், சீனாவில் 1063 பேர்களுக்கு ஒருவரும், கொரியாவில் 951 பேர்க்கு ஒருவரும், பிரேசிலில் 844 பேர்களுக்கு ஒருவரும், ஜப்பானில் 606 பேருக்கு ஒருவரும், இங்கிலாந்தில் 469 பேருக்கு ஒருவரும்; அமெரிக்காவில் 350 பேர்களுக்கு ஒருவரும் மருத்துவராகப் பணியாற்றி வருகின் றனர்.

இந்தியாவில் 1700 பேர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை 6 லட்சம் மருத்துவர்கள், 10 லட்சம் செவிலியர்கள் 2 இலட்சம் பல் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.
2031ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் 1000 பேர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்றுள்ள அளவிற்கு 35 ஆயிரம் மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உருவாக்கப் படுகின்றனர். இதனை 50 ஆயிரமாக உயர்த்தினா லும்கூட 2031ஆம் ஆண்டில்தான் 1: 1000 என்ற நிலையை அடைய முடியும், என்று அகமதாபாத்தில் நடைபெற்ற 66ஆவது மருத்துவர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கின்ற மருத்துவர்களும் நகரங்களில்  பணியாற்ற விரும்புகின்றனரே தவிர, கிராமப் புறங்களுக்குச் செல்ல விரும்புவதில்லை. குறிப்பிட்ட சில ஆண்டுகள் கிராமப்புற மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டும் என்று அரசு நிபந்தனைகள் விதித்தால் போர்க் கொடி தூக்கும் நிலைமை எல்லாம் இங்குண்டு.

இதற்கு என்னதான் தீர்வு? 2031 வரை மக்கள் காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? இதற்கொரு தீர்வினை தந்தை பெரியார் அவர்கள் 1967ஆம் ஆண்டிலேயே கூறியிருக்கிறார்.

கிராமங்களையும், நகரங்களையும் ஒப்பிட்டுக் கணக்குப் பார்த்தால் நகரங்களைவிட அதிகமான மக்கள், நகர மக்களுக்குப் பயன்படும்படி உழைக் கும் மக்கள், பெரும்பாலும் கிராமங்களில்தான் இருக்கின்றனர்.
இதற்குப் பரிகாரம் அதாவது நிவர்த்திமார்க்கம் கிராமங்களுக்கு டாக்டர்கள் போகும்படிச் செய்ய வேண்டும். இதற்கு எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் ஒருபோதும் உதவ மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற வரும்படி கிடைக் காது எனவே எல்.எம்.பி போன்ற குறுகிய கால மருத்துவப் படிப்பை ஏற்படுத்த வேண்டும்
. (விடுதலை 10.8.1967) என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.

தந்தை பெரியார் கூறிய ஒரு வார காலத்திற்குள்ளாகவே அப்பொழுது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவிருந்த டாக்டர் சந்திரசேகர் இதே கருத்தினைத் தெரிவித்தார் (16.8.1967) என்பது குறிப்பிடத்தக்கதாகும். ருசியாவில் குறுகிய கால மருத்துவப் பயிற்சி மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்ற அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று டாக்டர் சந்திரசேகர் கூறியது இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டத் தக்கதாகும்.

இப்படி குறுகிய கால மருத்துவப் பயிற்சி அளிப்பதால் இப்பொழுதுள்ள மருத்துவர்களுக்கு ஒன்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படப் போவதில்லை. இன்னும் மருத்துவர்கள் தேவை என்ற கட்டத்தில்தான் நாடு இருக்கிறது.

கிராமப்புறங்களில் பெரும் அவதிக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பிரசவத்திற்காக பல மைல் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை இன்றும்கூட இருக்கிறது என்பது, கசப்பான உண்மையாகும்.

இதில் குறிப்பிடத்தக்க வேதனை - மருத்துவர்கள் இந்தியாவில் பற்றாக்குறை இருக்கும் ஒரு சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் வெளிநாடு களுக்குச் செல்லுவது தடுக்கப் படுவதில்லை.

ஒவ்வொரு கல்லூரி ஆண்டிலும் இந்தியாவி லிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் டாக்டர்கள் 4400; இதனைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாதது ஏன் என்று தெரியவில்லை.

இது ஒரு பக்கம் நிலை என்றால், பொது மக்கள் மத்தியில் அரசு மருத்துவமனை என்றால் இளக் காரம்தான்! பணம் அதிக செலவானாலும் தனியார் மருத்துவமனைகளை நோக்கித்தான் செல்லு கிறார்கள். இதற்கான காரணம் ஆராயப்பட்டு, குறைகள் களையப்பட வேண்டியதும் மிகவும் அவசியமாகும்.
                 --------------------------"விடுதலை” தலையங்கம்  2-7-2013

16 comments:

தமிழ் ஓவியா said...


என்னே உணர்வு!


இதயம் வெளியில் தெரிவதில்லை, இதயத் துடிப்பும் வெளியில் கேட்பதில்லை. மனசாட்சி வெளியில் தெரிவதில்லை. மனசாட்சியின் குரலும் வெளியில் கேட்பதில்லை. விடுதலையும் தமிழர் தலைவரும் தமிழகத்தின் உயிரும் உடலும், வாழ்க தமிழர் தலைவர்! வளர்க விடுதலையின் யுகப் புரட்சி! ஆகஸ்ட் ஒன்றை எதிர்நோக்கியுள்ளேன்.

- த. ஆதிசிவம், பெரம்பலூர்

விடுதலைக்கு ஆறு மாத சந்தாவுக்கான காசோ லையை அனுப்பி வைத்த பெரம்பலூர் வெங்கடேச புரம் தோழர் மானமிகு ஆதிசிவம் பி.ஏ., அவர்கள் மேற்கண்ட கடிதத்தையும் எழுதி அதில் இணைத் திருந்தார்.

இதனைப் படிக்கும் தோழர்கள் ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும்; யாரும் அவரைப் போய் சந்தா கேட்டு வற்புறுத்த வில்லை. தாமாகவே சந்தா பணம் அனுப்பி வைத்த தோடு அல்லாமல் தன் உணர்வுகளையும் எவ்வ ளவு அழகாக வெளிப்படுத் திக் கொண்டிருக்கிறார்.

இந்த இயக்கத்திற்கு எது பலம் என்றால், இதுபோன்ற அப்பழுக்கற்ற சிப்பாய்களான தொண்டர் களின் பலம்தான்.

இயக்கம் எனக்கு என்ன செய்தது? என்று கேட்க மாட்டார்கள் - இயக் கத்திற்கு நான் இன்னது செய்வேன்! என்று கூறும் இத்தகு இலட்சிய உறு திக்கு முன் துப்பாக்கி களின் ரவைகள்தான் என்ன செய்யும்?

1980ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு கடிதம் விடுதலை ஆசிரியர்கள் அவர்களுக்கு வந்தது. பாளையங்கோட்டை என்பது அவரின் ஊரோ வீடோ அல்ல! பாளையங் கோட்டை சிறையில் ஆயுள் கைதியாக இருக்கக் கூடிய தோழரின் கடிதம் அது.

எனது பெரு மதிப் பிற்கும் மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு தம்பி அ. பக்கிரி முகம்மது எழுதும் விவரம்:

வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனை யில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது. அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக் கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலை இதழ் வந்து கொண்டு இருக்கிறது மிகவும் நன்றி.
- அ. பக்கிரிமுகம்மது
சி.என்.ஓ. 264
மத்திய சிறை, பாளை

33 ஆண்டுகளுக்கு முன் பாளை சிறையில் இருந்த ஆயுள் தண்ட னைக் கைதியின் உணர்வு தான் சாதாரணமானதா?

தந்தை பெரியார் உருவாக்கிய கொள்கையும், அந்தக் கொள்கையில் தோழர்கள் கொண்ட உணர் வும் தொடர்கிறது என்று நினைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நம் தலைகள் நிமிர்கின்றன. மார்பு புடைக்கிறது - நம்மை வெற்றி கொள்ள யார் இருக்கிறார்கள்? எது இருக்கிறது? என்ற எண் ணமே மேலோங்கி நிற்கிறது. தொண்டர்களின் பலமே இந்த இயக்கத்தின் உண்மைப் பலம் என்பதி லும் அய்யம் உண்டோ!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கல்யாணம்

மனிதன் மிருகப் பிராயத்தி லிருந்தபோது காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கல்யாணம்.

(விடுதலை, 10.8.1968)

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடி யார்? ப.சிதம்பரம் படப்பிடிப்பு


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது: பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர்களது நோக்கம் மதச்சார் பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. எனவே அடுத்த மக்களவைத் தேர்தலிலும் மக்கள் அக்கட்சியை நிராகரிப்பார்கள். பொதுசிவில் சட்டம், அயோத்தி விவகாரம், காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் அரசியல்சாசன சட்டப் பிரிவு 370-அய் நீக்குவது என்பது போன்ற பிரிவினைவாத பிரச்சினைகளை பாஜக தொடர்ந்து எழுப்பி வருகிறது என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

பாஜக நிராகரிக்கப்படும்: மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதா? என்ற கேள்விக்கு, "இது பொருத்தமில்லாத கேள்வி. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். மக்கள் சரியான முடிவை அளிப்பார்கள்.

காங்கிரஸ் எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் போராடப் போவது இல்லை. 2004, 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக நிராகரிக்கப்பட்டது போல், அடுத்த ஆண்டு தேர்தலிலும் நிராகரிக்கப்படும்' என்று சிதம்பரம் பதிலளித்தார்.

மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர்

மோடி, பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர். பாஜகவின் உயர் நிலை தலைவர் களில் பலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரால் பாஜகவிலேயே பிரிவினை ஏற்பட்டுள்ளது' என்றார். மோடியை எதிர்த்து எல்.கே. அத்வானி பதவி விலகியதை சிதம்பரம் இவ்வாறு குறிப் பிட்டார்.

யார் இரும்பு மனிதர்? மோடி இரும்பு மனிதர், பலம் வாய்ந்த தலைவர் என்று வர்ணிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, "இரும்புத் தலைவர் என்று வர்ணிக்கப்படுபவர் (அத்வானி) தலைமையில்தான் 2009 ஆம் ஆண்டு தேர்தலை பாஜக சந்தித்தது. ஆனால் தேர்தலில் முன்பைவிட குறைவான இடங் களையே அவர்கள் பெற முடிந்தது. வலுவானவர், பலவீனமானவர் என்று ஊடகங்களே ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன' என்று பதில ளித்தார்.

குஜராத் வளர்ச்சி ஒரு மாயை:

குஜராத் மாநிலத்தை மோடி வளர்ச்சி பெறச் செய்துள்ளார் என்பது உண்மைக்குப் புறம்பாக மிகைப்படுத்தப் பட்ட தவறான தகவல். குஜராத்தில் அவர்கள் காட்டும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான குஜராத் மக்களை பின்னுக்குத் தள்ளி ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி. அது ஒரு மாயை. குஜராத் போன்ற மாநிலத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு வேண்டுமானால் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் நாடு முழுவதற்கும் இந்த வளர்ச்சித் திட்டம் பொருந்தாது.

மோடியின் கட்டுக்கதை:

உத்தரகாண்ட் வெள்ளத்தில் குஜராத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரை மோடி மீட்டதாகக் கூறுகிறார்கள். அது கட்டுக்கதை. அவரது மேலாளர்களும், பணியாளர் களும் ஒன்றரை லட்சம் பேரைக் காப்பாற்றியதாகக் கூட கூறுவார்கள். அவர்கள் கொண்டு வந்ததாகக் கூறும் 80 கார்கள், 4 விமானங்களில் அதிகபட்சமாக 2,300 பேரை வேண்டுமானால் அழைத்துச் செல்ல முடியும் என்று சிதம்பரம் கூறினார்.

பிரதமர் வேட்பாளராக...

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை தொடர்ந்து அதே துறையில் சிறந்த நீங்களும் பிரதமராக முடியு மல்லவா என்ற கேள்விக்கு, எனது குறைபாடுகள் என்ன என்பது எனக்குத் தெரியும். அதற்கு உள்பட்டுதான் நான் பணியாற்ற முடியும். எனது குறைபாடுகளால் பிரச்சினை ஏற்படும் நிலையில், எழுத்து, வாசிப்பு, பயணம் என மாறிவிடுவேன் என்றார் சிதம்பரம்.

உலக வங்கியில் கடன்: உத்தரகாண்ட் மறு நிருமாணப் பணிகளுக்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடனுதவி கேட்கப் பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் உத்தர காண்ட் மாநிலத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கி யுள்ளார். இதில் ரூ.145 கோடி உடனடியாக அளிக்கப் பட்டுள்ளது.

மறுநிர்மாணப் பணிகள் தொடர்பாக மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் ஆகியவை அம்மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் சிதம்பரம் தெரிவித்தார். சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை ஏமாற்று வேலை என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி விமர்சித்திருப்பது முதிர்ச்சியற்ற பேச்சு என்று சிதம்பரம் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மதச்சார்பின்மையின் இலட்சணம் இதுதானா?


இந்திய ரிசர்வ் வங்கி வைஷ்ணவதேவி உருவம் பொறித்த ரூபாய் நாணயத்தை வெளி யிட்டுள்ளது.

படத்திற்குமேல் சிறீமாதா வைஷ்ணவதேவி கோவில் வாரியம் என்று தேவனாகிரி மொழியில் எழுதுக்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் கீழ்ப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. படத்துக்கும் கீழே 2012 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

யார் இந்த வைஷ்ணவதேவி? எதற்காக ரூபாய் நாணயத்தில் பொறிக்கப்பட்டு இருக் கிறது?

யார் இந்த வைஷ்ணவதேவி? அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது!

1. வைஷ்ணவதேவி ஒரு மாயா தேவி. இவள் கருட வாகனத்தில் எழுந்தருளியவளாய் சங்கு, சக்கரம், கதை, வரதம் உடையவளாய் இருப்பாள்.

2. மத்தியான காலத்தில் தியானிக்கப்படும் சந்தியா தேவதை, யௌவனமுள்ளவளாய், வெண்ணிறத்தவளாய், வெண்பட்டுடுத்து வநமாலை, பூணூல், சங்கு சக்கரம் இடக் கரங்களிலும், கதை, அபயம் வலக்கரங்களிலும் உள்ளவளாய் கருட வாகனத்தில் பதுமாசனத்தில் இருப்பவளாய் மகாலக்ஷ்மி உருவமாய் தியானிக் கப்படுபவள் வைஷ்ணவதேவி என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி.

ஆக, இந்து மதத்தின் ஒரு பிரிவுக்குரிய வர்களால் வணங்கப்படும் கடவுளச்சிதான் இந்த வைஷ்ணவதேவி.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவாகவே கூறுகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் உட் பிரிவைச் சார்ந்த ஒரு கற்பனைப் பொம்மையை ரூபாய் நாணயத்தில் பொறிப்பது நாணயமா?

அரசமைப்புச் சட்டம் எதைத்தான் சொல்லட்டுமே! அதைப் பற்றிக் கவலையில்லை என்று கருதும் பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவில் இருக்கும் மட்டும் அவர்கள் வைத்ததுதானே சட்டம்.

இவர்கள் வைத்த சட்டத்தின்முன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டம் எந்த மூலை?

1925 இல் சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இப் பொழுது மறுமுறை நினைவு கூர்ந்து பாருங்கள்.

While Speaking at a public meeting at Salem E.V.Ramasamy Naiker said the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy (A Hundred of the Hindu
page 337)

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும் போதே, பார்ப்பனர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவை ஏற்படுத்திவிடவேண்டும்; இல்லாவிடில் இந்தியாவில் உள்ள மக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுங் கோன்மையின் கீழ் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்று கூறினார் என்று இந்து ஏடு வெளி யிட்ட நூறாவது ஆண்டு மலரில் இடம்பெற்றுள்ளது.

பார்ப்பன வல்லாண்மைக்கு பிராமிணோகிரசி என்ற சொல்லை புதிதாகக் கையாண்டுள்ளார் என்றும் இந்து ஏடு குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியார் கணித்துச் சொன்னது எத்தகைய உண்மை என்பதற்கு பார்ப்பனீயக் கலாச்சாரத்தின் வடிவமான வைஷ்ணவியின் உருவம் பொறித்த ரூபாய் நாணயம் வெளியிட்டு இருப்பது ஒன்று போதாதா?

தமிழ் ஓவியா said...


சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் வேறொரு வழக்கிலும் உறுதி!


புதுடில்லி, ஜூலை 3- திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தை சாட்டி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஸ்சிங் கேஹர் அடங் கிய அமர்வு இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக வாக் குறுதி அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுபோன்று பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப்பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த் திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது.

நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப் பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த்திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் செய்துகொள்வதாக பொய் யாக வாக்குறுதி அளித்து பெண்ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடு விக்க வேண்டுமென்ற அவரது கோரிக் கையை ஏற்க முடி யாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரமான தீர்ப்புபற்றிய விவரம்

இரண்டு குழந்தைகள் பெற்ற ஆண் திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட முடியாது என்று குடும்ப நல நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு (17.6.2013) வருமாறு: சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள்) பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால் அவர்களின் செயல் பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் - மனைவி என்றும் கருதலாம் சட்டப் பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்கின்றனர்.

தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம் மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்தவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்ட பூர்வமான ஆதாரம் என்ன வென்றால் அது அந்த இணையர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான் என தீர்ப்பில் கூறியுள்ளார்.

பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சரியான பாடங்கள் ஆகும்.

தமிழ் ஓவியா said...


ஏமாறாதே!


வறுமையையும், அறி யாமையையும் மய்யப் படுத்தி மூட நம்பிக்கை மாடுகள் மேய ஆரம் பித்துவிடும்.
அப்படித்தான் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் புதிய மூட நம்பிக்கை நான்கு கால் பாய்ச்சலாகச் சுற்றித் திரிகிறது.

மழை இல்லை - வயல் வெளிகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. கிணறுகள் எல்லாம் காய்ந்து கிடக்கின்றன.

நெல் பயிரிட முடியாத நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தென்னை யைப் பயிரிடத் தொடங்கி விட்டனர்.

மூன்று மாதங்களாக தண்ணீர் இல்லாமல் அவையும் தவித்து நிற் கின்றன - வளர்ந்தால் அல்லவா அது தலை யாலே தரும் இளநீரை!

நிலத்தடி நீரும் கிடைக் காத அவலம் பிடுங்கித் தின்கிறது. நூறு அடிக் குக்கீழ் போனால்தான் தண்ணீர் தட்டுத்தடு மாறிக் கிடைக்கும் நிலை!

குழாய்ப் போட குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப் படுகிறது.

இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி மூட நம்பிக்கை வியாபாரிகள் புறப்பட்டுள்ளனர்.

எந்த இடத்தில் எளி தில் தண்ணீர் கிடைக் கும் என்று கண்டு பிடித் துச் சொல்கிறர்களாம்.

குச்சி சுத்தி, தேங் காய்ச் சுத்தி, கடிகாரச் சுத்தி என்று தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனராம்.

நீரோட்டம் கண்டு பிடித்துச் சொல்லுகிறார் களாம். அதற்காக ஆயிரம், இரண்டாயிரம் என்று ரூபாய்களை கறக்கிறார் களாம்.

தனக்குத் தேவை என்கிற வெறி கிளம்பு கிறபோது அறிவைப் பயன்படுத்துகிறவர்கள் எத்தனைப் பேர்?

காக்கை உட்கார்ந் தது பனம் பழம் விழுந் தது என்பதுபோல நூறு இடத்தில் சொன்னால், ஓரிரு இடத்தில் பலித்து விடாதா? சோதிடம்போல குருட்டுத்தனம்தான்.

98 இடத்தில் தோல்வி என்பதுபற்றி யாரும் பேச மாட்டார்கள்; இரண்டு இடத்தில் சொன்னது நடந்தது என்பதைத்தான் விளம்பரப்படுத்துவார்கள்.

ஏமாறுகிறவன் இருக் கின்றவரைக்கும் ஏமாற் றுகிறவனும் இருக்கத் தான் செய்வான். நமது தோழர்கள் இதுபற்றி விழிப்புணர்வுப் பிரச் சாரத்தை நடத்தலாமே!

- மயிலாடன்

குறிப்பு: தகவல் நாமக்கல் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வை.நடராஜன்.

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை!


நீங்கள் குளிர்பானம் அருந்துபவர்களா? நீரிழிவு நோயை நீங்கள் விரைவில் எதிர்நோக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 40 முதல் 70 மில்லிவரை குளிர் பானம் அருந்தும் சிறுவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 முதல் 5 கிலோ வரை எடை எகிறும். தண்ணீர் குடிப்பதையும் புறந்தள்ளிவிட்டு, குளிர்பானம் அருந் தினால், 40 வயதில் வரும் சில நோய்கள் பத்து வயதிலேயே வரக்கூடும் என்கிறார் மும்பை இருதய ஆய்வு மய்ய மருத்துவர் ராமகாந்த பாண்டா!

தமிழ் ஓவியா said...


சபாஷ் வரவேற்கத்தக்க கருத்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம்!


சபாஷ் வரவேற்கத்தக்க கருத்து

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம்!

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சதாசிவம் கருத்து

டில்லி, ஜூலை 4- நமது நாட்டின் உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமிக்கும் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியான தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலை 19-ஆம் தேதியன்று சதாசிவம் பொறுப் பேற்க உள்ளார்.

இதனையொட்டி ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இடஒதுக்கீட்டு முறை பின்பற்ற வேண்டும். இந்நிய மனங்களின் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

இதன் மூலம் நாட்டின் அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்பளிக்கப் படும். அதற்காக ஏற்கெனவே கடைப்பிடித்து வரும் குறிப் பிட்ட தகுதிகளைப் புறக் கணித்துவிட வேண்டும் என்பது அல்ல. அதாவது தகுதியற்ற நபர் களை தேர்வு செய்வது என்பது இதற்கு அர்த்தம் அல்ல..ஆனால் இடஒதுக்கீடு என்ற சலுகை வழங்கப்பட வேண்டும். அரசு நிர்வாகத்துகு நீதிமன்றங்கள் எதிரி அல்ல..

நீதித்துறை, சட்டசபை, அரசு நிர்வாகம் மூன்றும் அரசியல் சாசனத்தின் மூன்று அங்கங்களாகும். ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்து இயங்கி வருகின்றன.

பொதுவாக அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது; அதே போல் தான் நீதிமன்றத்தின் செயல்பாடு களை அரசால் தடுக்கவும், தலையிடவும் முடியாது; நீதித்துறை ஊழல்களுக்கு அப்பாற்பட்டது என நான் சொல்லவில்லை.

ஆனால் இதர துறைகளை ஒப்பிடுகையில் நீதித் துறையில் ஊழல் குறைவுதான். ஊழல் வழக்குகளில் கடந்த 5 ஆண்டுகளில் விசாரணை விரைவு படுத்தப்பட்டிருக்கிறது. குற்றத்தின் அடிப்படையிலேயே பிணை அளிப்பதும், மறுக்கப்படுவதும் முடிவு செய்யப் படுகிறது; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து விவரங்களையும் அளிப்பது தவறல்ல என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...


சேலம் சுயமரியாதைச் சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது


செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சேலம், ஜூலை 4- 1927இல் தொடங்கப்பட்ட சேலம் சுயமரியாதைச் சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது என்றார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள். செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

சேலம் தாய் வீடு என்று சொல்லுவார்கள்; 1927இல் சேலம் சுயமரியாதைச் சங்கம் தொடங்கப்பட்டது. அதற்கான சொந்த இடம் வாங்கி 1931 ஜூன் 29ஆம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. இதில் அப்போதைய அமைச்சர் திவான் பகதூர் பி.டி. ராஜன் கலந்து கொண்டார். 1957இல் இருந்து பழைமை வாய்ந்த சுயமரியாதை சங்க கட்டடத்தில் படிப்பகம் நூலகங்கள் இயங்க ஆரம்பித்தன. இந்த சுயமரியாதை சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருந்த சிலர் 1998இல் மனுகுல தேவாங்கர் சங்கத்தோடு இணைந்தார்கள். இந்த சுயமரியாதை சங்கமானது, பகுத்தறிவைப் பரப்புவதற்கும் ஜாதி பேதங்களை ஒழிப்பதற்கும், பெண்ணடிமை ஒழிப்பிற்காகவும், இயங்கி வந்தது. ஆனால் இந்த சங்கத்தை மனுகுல தேவாங்க சங்கம் என்ற ஜாதிச் சங்கத்தோடு இணைத்தது தவறு என்றும் வழக்கு நடத்தப்பட்டது.

இந்த சங்கத்தின் உறுப்பினராக இருந்த நடேசன் என்பவர் வழக்கு நடத்தி வந்தார். அவர் நோயுற்ற காலத்தில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பிரச்சார செயலாளர் கி.வீரமணி அவர்களே இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கின் இறுதியில் 19.6.2013-இல் பத்திரபதிவுத் துறையின் அய்.ஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் ஜாதி சங்கத்தோடு, சேலம் சுயமரியாதை சங்கத்தை இணைத்தது தவறு என்றும், சேலம் சுயமரியாதை சங்கம் தனித்து இயங்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் சேலம் சுயமரியாதை சங்கத்தின் அலுவலகம் இந்த கட்டடத்தில் இன்று முதல் இயங்குகிறது. தமிழகத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்ட (1927) சேலம் சுயமரியாதை சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது என செய்தியாளர் சந்திப்பில் கூறினார் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள்.

மேலும் வேலூர் பி.ஜே.பி. முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்டதுபற்றி செய்தியாளர் கேள்விக்கு தமிழர் தலைவர் கூறியது:- கொள்கையளவில் வேறுபாடு இருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டுமே தவிர வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அது தவறு தான். தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மிகவும் மலிவாகிவிட்டது. தமிழக அரசு நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து களைய வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

கடவுளுக்கே வறட்சியோ!

பழநி, ஜூலை 4- பழநி இடும்பன் மலைக்கோவிலில், தண்ணீர் இல்லாத தால், பூஜை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதியின்றி, பக்தர்கள் அவதிப்படுகின்றனராம்.

பழநிக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள், முதலில், இடும்பன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, மலைக்கோவில் செல்வர். இடும்பன் மலை கோவில் பூஜைக்கு, கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். வறட்சியால் கிணறு வற்றிவிட்டது.

இதனால், மலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தண் ணீர் கிடைக்காததால், பூஜை முழுமை யாக நடப்பதில்லை. அர்ச்சகர்கள் குடங்களில், அவ்வப்போது கொண்டு செல்லும் தண்ணீரில், பூஜை செய்யப் படுகிறதாம். கோவில் செயற்பொறியாளர் குமரேசன் கூறுகையில்,"இடும்பன் மலை அடிவாரத்தில், புதிய தண்ணீர் தொட்டி கள் கட்டும்பணி நடக்கிறது. லாரி மூலம், இத்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படும். இங்கிருந்து இடும்பன் மலை கோவிலுக்கு, தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இப் பணி, ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும்,'' என்றார்.

தமிழ் ஓவியா said...

கடவுளுக்கே வறட்சியோ!

பழநி, ஜூலை 4- பழநி இடும்பன் மலைக்கோவிலில், தண்ணீர் இல்லாத தால், பூஜை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதியின்றி, பக்தர்கள் அவதிப்படுகின்றனராம்.

பழநிக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள், முதலில், இடும்பன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, மலைக்கோவில் செல்வர். இடும்பன் மலை கோவில் பூஜைக்கு, கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். வறட்சியால் கிணறு வற்றிவிட்டது.

இதனால், மலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தண் ணீர் கிடைக்காததால், பூஜை முழுமை யாக நடப்பதில்லை. அர்ச்சகர்கள் குடங்களில், அவ்வப்போது கொண்டு செல்லும் தண்ணீரில், பூஜை செய்யப் படுகிறதாம். கோவில் செயற்பொறியாளர் குமரேசன் கூறுகையில்,"இடும்பன் மலை அடிவாரத்தில், புதிய தண்ணீர் தொட்டி கள் கட்டும்பணி நடக்கிறது. லாரி மூலம், இத்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படும். இங்கிருந்து இடும்பன் மலை கோவிலுக்கு, தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இப் பணி, ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும்,'' என்றார்.

தமிழ் ஓவியா said...

பழநி முருகன் தீர்த்து வைக்க மாட்டானா?

பழனி, ஜுலை.4- பழனி கோவில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடி சேமநல பிடித்தத்தில் முறைகேடு ஆகிய வற்றை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அறு படை வீடுகளுக்கும் ஆஸ்பிடாலிட்டி பெசிலிட்டி அன்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் துப்புரவு பணியாளர்கள் நியமிக் கப்பட்டனர். பழனி மலைக்கோவில், கிரிவலவீதி, படிப்பாதை, தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கென துப்புரவு பணியாளர் கள் 325 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 125 பேர் ஆண்கள், 200 பேர் பெண்கள். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.3,300 வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு மாதம் கூட குறிப்பிட்ட தேதியான 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கியது கிடையாது. சேமநல நிதியாக ஒவ்வொரு வருக்கும் ஊதியத்தில் இருந்து ரூ.400 பிடித்தம் செய்து அதனுடன் ஒப்பந்தகாரர் சார்பில் ரூ.400 சேர்த்து ரூ.800 வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால் துப்புரவு பணியாளர்கள் ஒருவருக்குகூட சேமநல நிதி வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து நிர்வாகத்திடம் பல முறை கேட் டும் எந்த வித பதிலும் தரவில்லை. இத னால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் இன்று துப்புரவு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேமநல நிதி பிடித்தம் செய்யப்படு கிறதே தவிர அது வரவுவைக்கப்பட வில்லை. கடந்த 5 ஆண்டில் 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்தும் அவர்கள் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்கவில்லை. யாராவது அவர்களை எதிர்த்து கேட்டால் வேலையில் இருந்து நிறுத்தி விடுகிறார்கள். எனவே எங்களை திருக்கோவில் நிர்வாகத்தினரே தினக்கூலி அடிப்படையில் வேலையில் அமர்த்தி னால்கூட நிம்மதியாக பணியாற்றுவோம் என்று தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

மதம் பிடித்த 20 கோயில் யானைகளுக்கு மருத்துவம்!

பாலக்காடு, ஜூலை 4- கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் தேவஸ்தானத் திற்கு சொந்தமாக 62 யானைகள் உள்ளன. இவை, கோயில் அருகேயுள்ள புனத்தூர் கோட்டை யானைதாவளத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு ஆண்டுதோறும் ஆனி, ஆடி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம். ரூ.8 லட்சம் செலவில் இந்தாண்டுக்கான முகாம் நேற்றுமுன்தினம் துவங்கியது. முதற்கட்ட மாக 42 யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. யானைகளுக்கு அரிசி, பாசிபயறு, கொள்ளு மற்றும் அட்டசூர ணம் போன்ற ஆயுர்வேத மூலிகை கலந்த உணவு வகைகள் வழங்கப்படுகிறதாம்.

முகாமை, திருச்சூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஜோந்திர தாஸ் துவக்கி வைத்தார். மீதமுள்ள 20 யானைகளுக்கு தற்போது மதம்பிடித் துள்ளதால், அவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம் முகாம் ஜூலை 31ஆம் தேதி வரை நடக்கிறது.

தமிழ் ஓவியா said...


தவறான தீர்ப்பாம்!


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு பார்ப்பனர்களின் - பிற்போக்குவாதிகளின் அஸ்திவாரத்தைக் கலகலக்க வைத்து விட்டது.

கல்கி துக்ளக் போன்ற பார்ப்பன இதழ்கள் பகிங்கரமாக எதிர்ப்புக் கணைகளை வீசு கின்றனர்.

இன்று வெளி வந்துள்ள துக்ளக் (10.7.2013) இதழில் ஒரு கேள்வி பதில்.

கேள்வி: திருமணமாகாத ஆண் - பெண்ணின் பாலியல் உறவை திருமணமாகவும், அவர்களைத் தம்பதிகளாகவும் கருதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியா?

பதில்: இது தவறான தீர்ப்பு என்பது என் கருத்து. அப்பீல் செய்யப்பட்டால் இந்தத் தீர்ப்பு மாற்றப்படும் என்பது என் எதிர்பார்ப்பு என்று எழுதுகிறது துக்ளக்.

கல்கி (7.7.2013) இதழில் வெளிவந்த கேள்வி பதில் வருமாறு: கேள்வி: ஆண் - பெண் இடையே நடக்கும் பாலியல் உறவே சட்டப்பூர்வமான திருமணம். மற்றவை அல்ல, என்று சென்னை ஹைகோர்ட்டு சொல்வதுபற்றி?

பதில்: மீடியாவும் சமூக வலைத்தளங்களும் பரபரப்படைந்து, நீதிபதி கர்ணனின் தீர்ப்பை விமர்சித்தன. இவ்வாறு விமர்சிப்பதை ஆட்சேபித்துள்ளார் நீதிபதி. தீர்ப்புகளை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று சட்ட வல்லுநர்களே எடுத்துரைக்கின்றனர். அது ஒருபுறமிருக்க, நீதிபதி குறிப்பிட்ட ஒரு வழக்கில் நியாயத் தீர்ப்பை அளித்து ஓர் அநீதிக்குப் பரிகாரம் காண்பதுடன் நின்றிருந்தால் பிரச்சினை தோன்றி இராது. நமது சமூகம் எளிதில் ஏற்க முடியாத பொதுப்படையான சில கருத்துகளைக் கூறப் போகத்தான் எதிர்ப்புக் குரல் ஏராளமாக எழக் காரணமாயிற்று. நீதிபதியின் விளக்கம் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது என்கிறது கல்கி

சென்னை நீதிபதியோடு இந்தக் கருத்து நிற்கவில்லை; உச்சநீதிமன்றத்திலும் நீதியர சர்கள் பி. சதாசிவம், ஜெகதீஸ் சிங் கேஹர் ஆகியோர் அடங்கிய அமர்வும் இதே வகையில் தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவின்மீது உச்சநீதிமன்ற அமர்வு - சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் அவர்களின் தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தீர்ப்பினை வழங்கி விட்டதே!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத் துடன் உடலுறவு கொண்டவரை நிரபாரதி என்று கூற முடியாது என்கிறது உச்சநீதிமன்றம்.

ஆண்கள்தன் ஆதிக்கத் தன்மையுடன் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு விட்டு தப்பித்துக் கொள்வதை துக்ளக் கல்கி வகையறாக்கள் ஏற்றுக் கொள்கின்றனவா?

திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆண் கூறியது உண்மைதானே; அதைக் கூறி பாலியல் உறவு கொண்ட நிலையில் அதனைத் திருமணம் என்று ஏன் கருதக் கூடாதாம்?

நீதியரசர் கர்ணன் தன் தீர்ப்பில் இன்னொன்றையும் சுட்டிக் காட்டியுள்ளார். சடங்கு ஆச்சாரங்களுடன் திருமணம் செய்து கொண்டு அதே நேரத்தில் பாலியல் உறவு கொள்ளவில்லையென்றால் அந்தத் திருமண மும் சட்டப்படி செல்லாது என்றும் கூறியுள் ளாரே! இதன் மூலம் கணவன் - மனைவி என்பதற்கு முக்கியமான அடையாளம் பாலியல் உறவு என்பது வெளிப்படவில்லையா?

பார்ப்பன வட்டாரங்கள் பதறுவதற்கு முக்கிய காரணமே - சடங்குகள் முக்கியமல்ல என்று கூறப்பட்டு இருப்பதுதான்; சடங்குகள் என்று சொல்லும்போது திருமணத்தில் முழுக்க முழுக்க பார்ப்பனக் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதுதான்.

ஓமக் குண்டம் சப்தபதி என்பதற்கும் பார்ப் பனர் அல்லாத மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆணும் ஆணும் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் அய்யப்பன் என்பதை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனர்கள், வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வதை முக்கிய சாட்சியமாக ஏற்றுக் கொள்ளாதது - ஏன்?

பார்ப்பனர் அல்லாத மக்கள் சிந்திக்கட்டும்!