Search This Blog

1.7.13

சாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை - கடவுளைத் திட்டவில்லையே!

சாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை - கடவுளைத் திட்டவில்லையே!

தலைவரவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்குத் தகுதி இல்லை என்று குறிப்பிட் டார்கள். இதற்குத் தனித் தகுதி ஒன்றும் தேவை யில்லை. கூட்டத்தில் ஒழுங்கு முறை தவறாமல் அடக்கி ஆள வேண்டும். அது தவிர தலைமை தாங்க தகுதி தேவை இல்லை.

தலைவரவர்கள் நல்ல ஆராய்ச்சிக் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். முதலில் நீங்கள் பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் சாமி இல்லாதவன் என்பார்கள். 

பகுத்தறிவாளர்களில் ஒரு பகுதியினருக்குத்தான் கடவுள் இல்லை. பகுத்தறிவு என்றால் மனிதன் ஒருவனுக்குத்தான் உண்டு. பகுத்தறிவு என்றால் எதையும் சிந்தித்து அறிவைக் கொண்டு ஆராய்ந்து ஏற்பதாகும். அறிவைப் பிரித்தவர்கள் பகுத்தறிவிற்கு ஆறாவது அறிவு என்று பிரித்திருக்கிறார்கள்.

ஒரு கடையில் போய் ஒரு பொருள் வாங்கினால் அதன் தரம், விலை, மதிப்பு யாவற்றையும் சிந்தித்து அதன் பின்தான் வாங்குகின்றோம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்துச் செய்கிற மனிதன் சில காரியங்களில் முன்னோர் சாஸ்திரம், புராணம், வழக்கம், கடவுள் என்று சொல்லி, சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கின்றான். அதன் காரணமாக மனிதன் தன் அறிவினால் அடைய வேண்டிய அளவு பலன் அடையவில்லை.

மற்ற நாடுகளில் மனிதன் சந்திர மண்டலத்தில் கார் ஓட்டுகிறான் என்றால் அது அவனுடைய அறிவின் பலனாலேயேயாகும். இங்கு நமது மக்கள் அடிப்படையிலேயே அறிவற்றிருக்கிறார்கள். சிந்திக்காமல் எனது மதம், எனது இலக்கியம், எனது சாஸ்திரம், முன்னோர் சொன்னது என்று எதை எதையோ ஏற்றுக் கொண்டிருக்கின்றான்.

பகுத்தறிவாளர் கழகம் என்பது மிருகப் பிரயாயத் திலிருக்கிற மக்களை மனிதப் பிராயத்திற்குக் கொண்டு வருவதேயாகும். அதற்கு முன் நாம் (சுமார் 100, 150 ஆண்டுகளுக்கு முன்) கட்டை வண்டியில் பிரயாணம் சென்று கொண்டிருந்தோம். இப்போது எங்கள் முன்னோர் சென்றது, கடவுள் சென்றது, நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதற்காக எவரும் கட்டை வண்டியில் செல்வது கிடையாது.

மற்ற மதக்காரனை விட்டு நம் மதத்தை எடுத்துக் கொண்டால் உலக மக்களுக்கு அறிமுகமாகிற வகையில் நம்மை அவனுக்கு விளக்க வேண்டுமானால், சுருக்க மாகத் திராவிடன் என்று சொன்னாலும் இங்குள்ள முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் யாவரும் திராவிடர்களே ஆவார்கள்.

நம்மைத் தனித்துக் காட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இந்து என்று சொன்னால் இந்து மதம் என்று சொன்னால் அதன் ஆதி அடிப்படை என்ன? ஒரு கிறிஸ்து வனையோ, துலுக்கனையோ கேட்டால் அவன் தன் மதத் தலைவனையும், மத நூலையும், மதம் ஏற்பட்ட காலத்தையும் கூறுகின்றான். நீ இந்து என்ற சொல்வதற்கு உனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? உன் மதத்திற்குரிய வேத நூல் என்ன? உன் மதம் தோன்றிய காலம் என்ன என்பதற்கு எந்தப் பதிலைச் சொல்ல முடியும்?

இந்து மதம் என்பது ஒரு கற்பனையே தவிர, உண்மையில் அப்படி ஒரு மதம் இல்லை. இதைப் பற்றிக் காந்தியிடமே சொல்லி இருக்கிறேன். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்துமதம் என்று ஒன்று இருந்தது என்பதற்கு நமது இலக்கியங்கள் எதிலும் ஆதாரம் இல்லை.

நாம் எந்தக் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்தி ரத்தையோ திட்டுகிறோமென்றால் அதில் நம்மைத் திட்டியிருக்கிற அளவிற்கு நாம் திட்டவில்லையே! இந்து மதப்படி எடுத்துக் கொண்டால் நீ நான்காம் ஜாதி, இழி ஜாதி சூத்திரன்தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிற முட்டாள் தானே! நீ முட்டாளாக இருப்பதால்தானே  கோயிலுக்குப் போகிறாய், முட்டாளாக இருப்பதால் தானே சாம்பலையும் மண்ணையும் பூசிக் கொள்கின் றாய். அறிவு இருந்தால் இதனைச் செய்வாயா?
கோயிலுக்குப் போகிறவன் முட்டாள் என்று சொல்கிறேன். நீயே சிந்தித்துப் பாரேன். நீ மிகச் சுத்தமாகக் குளித்து முழுகிவிட்டு பயபக்தியோடு கோயிலுக்குப் போகிறாய். அங்கு பார்ப்பான் இருந்து கொண்டு கர்ப்பக்கிரகம் இருக்கிற இடத்திற்கு நீ வரக்கூடாது; நீ சூத்திரன்; வெளியே நில்! என்கின்றான்.
அதைக்கேட்டு நீ வெளியே நின்று கன்னத் திலடித்துக் கொள்கின்றாயே தவிர, நான் ஏன் உள்ளே வரக்கூடாது என்று எவனும் கேட்பதில் லையே! இப்படிச் செய்கிறவன் முட்டாள் இல்லாமல் அறிவாளியா? என்று சிந்தியுங்கள். கோபப்படாமல் சிந்தியுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் சூத்திரனாக - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருந்து கொண்டிருக்கிறதென்றால் அறிவும் - சிந்தனையும் இல்லாததால் தானே!

                ---------------------------------6.12.1970 அன்று கும்பகோணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 23.1.1971

18 comments:

தமிழ் ஓவியா said...

பேயா - பிசாசா - ஆவியா?

சென்னை செங்குன்றம், நார வாரிக் குப்பம் பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் யாகம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாக உடைக்கப்பட்ட தேங்காய் மற்றும் உதிரிப் பூக்கள் அலுவலக நுழைவு வாயிலின் இரு பக்கங்களிலும் வைக் கப்பட்டுள்ளன. திருஷ்டி சுற்றப்பட்ட பூசனிக்காய் உடைக்கப்பட்டு, வாயிலில் உள்ள கொடிக் கம்பத்தின் அடியில் வைக்கப்பட்டது. ஏனிந்த தெருப்புழுதி? ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல் அலுவலராக இருந்தவர் வெளி யூருக்கு மாற்றப்பட்டு 10 மாதங்கள் ஆகி விட்டனவாம். அவர் மன நிலை பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றி இறந்து விட்டாராம். அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப் படவில்லை. சிறிது காலம் கழித்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரும் இறந்து விட்டா ராம்.

இந்த நிலையில் இரவுப் பாது காவலர் ஒருவர் சில கதைகளைக் கிளப்பி விட்டுள்ளார். இரவு நேரத்தில் அலுவலகத்தில் யாரோ நடமாடுவது போல தெரிகிறது. பதிவேடுகள் புரட்டும் சத்தம் கேட்கிறது என்று புரளியைக் கிளப்பி விட்டுள்ளார்.

நம் மக்களைக் கேட்க வேண் டுமா? பேய் நடமாடுகிறது! - ஆவி நடமாடுகிறது என்று கிளப்பி விட்டுள்ளனர்.

அரசுத் துறைகளில் பணியாற்று வோர்க்கு ஊர் மாற்றம் என்பதெல் லாம் சர்வ சாதாரணம்தானே. ஒரு அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் மரணம் அடைவது என்ன அதிசயமான ஒன்றா?

புத்தியைச் செலுத்தாமல், புரளியைக் கண்டு அஞ்சினால் இத்தகைய மூடத்தனங்கள்தான் முளைக்கும் அந்த அலுவலகத்தில் பணியாற்றுவோர் என்ன சொல்லு கிறார்கள்?

பேயும் இல்லை; ஆவியும் இல்லை. பேரூராட்சிப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக யாகம் வளர்த்தோம் என்று சமாதானம் கூறுகின்றனர்.

இது பெருமாள் போய் பெத்த பெருமாள் வந்த கதைதான்! ஒரு முட்டாள்தனத்துக்கு இன்னொரு முட்டாள்தனம் சமாதானம் ஆகுமா?

பகுத்தறிவுச் சிந்தனை மனித னுக்கு எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுதாவது புரிந்தால் சரி.

தமிழ் ஓவியா said...

வில்லியநல்லூரில் நடந்ததென்ன?

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது வில்லியநல்லூர் கிராமம். 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில நாட்களுக்குமுன் அடுத்தடுத்து அய்வர் மரணம் அடைந்தனர். அவ்வளவுதான். மூட நம்பிக்கை தொற்று நோய்ப் பற்றிக் கொள்ளுமே! ஆவி சேட்டைதான் காரணம் என்று எல்லா ஊர்களிலும் இருப்பதுபோல இந்த ஊரிலும் இருந்த வெட்டிப் பேச்சுப் பேர் வழிகள் கிளப்பி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

இந்த மூடநம்பிக்கை தகவலை அறிந்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகத் தோழர்கள் தென்னவன், யாழ் திலீபன், மஞ்சை அழகரசன் ஆகியோருடன் நேரில் சென்று ஊரில் விசாரணை நடத்தினர்.

இறந்தவர்களில் ஒருவர் முதியவர்; இன்னொருவர் உரிய மருத்துவ உதவியின்றி காமாலை நோய் காரணமாக உயிரிழந்த பெண்.

ஊர் நிலைமை எப்படி? சுகாதாரச் சீர்க்கேட்டின் உச்சம். எங்குப் பார்த்தாலும் குப்பை விரிகோலம் தான்! சாக்கடை சங்கமம்தான்! விளக்கு வெளிச்சம் கூட சரியாக இல்லை. 2013ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு கிராமம்.

சுகாதாரச் சீர்கேடு காரணமாக வியாதிகள் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் இங்கு உண்டு என்று கழக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் முதல் தேதி அவ்வூரில் மூடநம்பிக்கை களைத் தோலுரிக்கும் பிரச்சா ரத்தைத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வில்லியநல்லூரில் பொதுச் செய லாளர் தலைமையில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட இது போன்ற பணிகளில் ஆங்காங்கே கழகத் தோழர்கள் ஈடுபடுவார்களாக!

தமிழ் ஓவியா said...


திருநங்கையர்களை அவமானப்படுத்துவதா? திமுக தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூன் 30- மூன்றாவது பாலினத்வராகிய திருநங்கையினரை 9 என்ற எண் குறியிட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியா முழுவதும் ஆறாவது பொரு ளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப் பிடம் போன்ற எல்லா விவரங்களையும் அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட் டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.

இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது. திமு கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்டபோது, திருநங் கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female) என்று அச் சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கை யர்களைக் குறிக்கும் வகையில் T (Transgender) என்ற எழுத்து குறிப்பிடப் பட்டது.

முதல் முதலில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபற்றி அப்போதே 16.3.2008 தேதியில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ், “Third Sex gets its due in T.N. - Karuna Govt. is Country’s First to issue Ration cards with “T” as Gender” என்ற தலைப்பில் பெரிதாக எழுதியிருந்தது.

ஆனால் தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டுவிட்டு, ஆண் பெண் அல்லாத பாலினப்பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, ஏற்கெனவே எங்களை அந்த 9 என்ற எண்ணைக் குறிப் பிட்டுத்தான் கிண்டல் செய்கிறார்கள். இப்போது அரசே அந்த எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவ மானப்படுத்துவதாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

பொருளாதாரக் கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்ட போது, இந்தப்படிவம் பற்றி மத்திய அரசில் தான் கேட்க வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்கள். இந்தத் தவறை யார் செய்திருந்தாலும், மத்திய அரசு செய் திருந்தாலும், மாநில அரசு அதைப்பற்றி கேட்காமல் இருந்தாலும், உடனடியாக இதற்கு உரியவர்கள் இதனைக் கவனித்து இந்தத் தவறினைக் களைய ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஆதி பராசக்தி


கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட் பார்க்குப் புத்தி எங்கே போச்சு? என்ற பழமொழி நாட்டில் புழக்கத்தில் இருப் பது எல்லோருக்கும் தெரி யும்.
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் 12ஆவது வார்டில், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மடத்தில் மாட்டியிருந்த கடவுளர் படத்தில் தேன் வடிகின்றது என்ற புரளியைக் கிளப்பி விட்டனர்.

உண்மைத் தகவல் களைவிட புரளிகளுக்குத் தானே இறக்கைகள் அதி கம். மக்கள் கூடிட ஆரம் பித்து விட்டனர்.

கருஞ்சட்டைத் தோழர் கள் களத்தில் இறங்கினர். மக்களுக்கு விளக்கம் அளித்தனர். காவல்துறைக் கும் தகவல் அறிவிக்கப்பட் டது. செய்தியாளர்களும் கூடினர்; கழகத்தின் விளக் கத்தை அனைவரும் ஏற் றனர்.

நேரில் சென்று பார்த்த போது பொய் மூட்டை என்பதும் தெளிவானது.

காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஊத்துக்கோட்டை என்.பி. சாலையில், நாகவல்லி யம்மன் கோயில் வளா கத்தில் புற்று அருகில் இரண்டு அம்மன் சிலைகள் இருந்தன. ஒரு அம்மன் சிலை, பால் குடித்ததாக புரளி அவிழ்த்து விடப்பட் டது - ஊரே திரண்டது.

செய்தியைக் கேள்விப்பட்ட மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பா ளர் (டி.எஸ்.பி.) பாலச் சந்திரன், ஆய்வாளர் நாக லிங்கம் ஆகியோர் சம்பந் தப்பட்ட கோயிலுக்குள் சென்று, ஒரு கரண்டியின் மூலம் சிலைக்குப் பால் கொடுத்துப் பார்த்தனர். பால் குடிக்கவில்லை - புரட்டு அம்பலமானது.

பூசாரியைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று இனிமேல் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்று பூசாரியிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். (விடுதலை 14.8.2010).

அதுபோன்ற நேர் மையாக சட்டத்தைக் காப்பாற்றும் காவல்துறை அதிகாரிகள் இருந்தால் இந்த மூடநம்பிக்கை வியா பாரிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடு வார்கள்.

1990 ஆகஸ்டில் இதே மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி தொடர்பாக ஒரு துண்டு அறிக்கை வெளி யிடப்பட்டது. ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! என்ற தலைப்பிட்டு, இது ஆதி பராசக்தியிடமிருந்து வரும் கடிதம். இது போன்று 20 அல்லது 50 நகல்கள் எடுத்து தெரிந்தவர் களுக்கு அனுப்பினால் ஆதி பராசக்தியின் அருள் கிட்டும் என்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மேல் மருவத்தூருக்குக் கடிதம் எழுதப்பட்டது.

4.8.1990 நாளிட்டு பதில் கடிதம் வந்தது. அந்தத் துண்டறிக்கை களை நம்ப வேண்டாம் என்று எழுதப்பட்டு இருந் ததை நினைவூட்டுகிறோம்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


விநாயகனிடம் மனு; சபாஷ் சரியான அய்டியா!



சென்னை - கஜவரத பெருமாள் கோயில் ஆலய மீட்புக் குழுவினர் ஒரு வேலையைச் செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையிடம் மனு கொடுக்கச் சென்றனராம்.

ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எண்ணிக் கொண்டு காவல்துறையினரும் கணிசமான எண்ணிக்கையில் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

புஸ் என்று போனது - வந்த பக்தர்கள் வெறும் ஆறு பேர்கள் தானாம்; விநாயகரிடம் மனு கொடுத்துச் சென்று விட்டனராம்.

இது முட்டாள்தனம்தான் என்றாலும் அந்தப் பக்தர்களின் அறிவு நாணயத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

கடவுள்மீது உண்மையிலேயே பக்தி உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பார் என்பதில் கண்டிப்பான வகையில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்.

அயோத்தியில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று துடிக்கிற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., வகையறாக் கள்கூட என்ன செய்ய வேண்டும்? சென்னை கஜவரத பெருமாள் பக்தர்கள், விநாயகரிடம் மனு கொடுத் திருப்பதுபோல ராமனிடம் மனு கொடுக்க வேண்டும்.

அதுபோல சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்தக் கூடாது - ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோஷம் போடுபவர்கள் நீதிமன்றம் சென்றி ருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிறீமான் இராமச்சந்திரமூர்த்தி அவர்களே! உங்களுக்காகத் தான் நாங்கள் பாபர் மசூதியை இடித்தோம். உங்கள் பேரால் உள்ள பாலம் இடிபடக் கூடாது என்பதற்காகத்தான் உச்சநீதிமன்றமும் சென்றுள்ளோம்.

சென்னைவாசிகளின் நடவடிக்கை எங்கள் கண்களைத் திறந்து விட்டது. இனிமேல் நீதிமன்றம், அரசு மன்றம், வீதி மன்றம் என்று செல்லாமல், கொடி பிடித்துக் கோஷம் போடாமல், நேரடியாக கடவுளாகிய தங்களிடம் மனு கொடுப்பது - அதாவது கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்து விட்டோம் என்று முடிவு செய்வார்களேயானால் அவர்களின் அறிவு நாணயத்தைக் கூடப் பாராட்டலாம்.

அப்படி கடவுள் சிலைகளிடம் மனு கொடுத்துக் காரியம் ஆகவில்லையென்றால், அந்தக் கடவுள்களை என்ன செய்யலாம் என்பதை சம்பந்தப்பட்ட பக்தர்களே ஒன்றுகூடி, கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம்.

முடிவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால், அந்தக் கால கட்டத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை அணுகலாம் - அப்பொழுது நல்லதோர் தீர்வினை, முடிவினைக் கொடுப்பதற்கு நாங்கள் தாராளமாகவே இருக்கிறோம்!

சரிதானே?

தமிழ் ஓவியா said...


நெய்வேலி நிலக்கரிப் பிரச்சினை:


5 சதவீத பங்குகளைத் தமிழக அரசு வாங்கிக் கொள்ள
தயார் என்ற முதல் அமைச்சரின் கருத்தை வரவேற்கிறோம்!

மத்திய அரசு விற்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியார்க்கு விற்பதைவிட, தமிழ்நாடு அரசே அதனை வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மறு பரிசீலனை செய்து, கைவிட வேண்டுமென்று, தமிழ்நாடே ஒட்டு மொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசுக்கு - ஜனநாயகத்திலும், சமதர்மத்திலும் நம்பிக்கை இருக்குமானால் இதுகுறித்துச் சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் பிடிவாதமாக விற்றே தீருவோம் என்று கூறி, தமிழக மக்களின் ஏகோபித்த அதிருப்தியை விலைக்கு வாங்குவது தேவைதானா? அரசியல் சாதுர்யமும் ஆகாது!

நெய்வேலி தொழிலாளர்களின் எச்சரிக்கை மணி!

நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்கள்!

இதன் மூலம் அனல் மின் நிலையம் இயங்காது; அதன் விளைவு...? மின் பற்றாக் குறை நாட்டில் பயங்கரமாக இருக்கும் நிலையில், மிகப் பெரும் மின் இழப்பும் பொது அமைதிக்குக் கேடும் ஏற்படும் என்ற நிலை உள்ளது.

இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; மீண்டும் மீண்டும் மத்திய அமைச்சர்கள் சிலர் தொழிலாளர்களுக்கு நல்லது; நெய்வேலி நிறுவன வளர்ச்சிக்காகத்தான் இதைச் செய்கிறோம்! என்று பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடுவதால் பயன் ஏதும் விளையாது.

முதல் அமைச்சரின் கருத்து

வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து, பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிட பிள்ளையாரையே ஏமாற்ற முனைந்த பக்தன் கதை என்று வைதீகர்கள் கூறும் பழமொழிக் கொப்பான கேலிக் கூத்து இது.

அவர்கள் அப்படி 5 சதவீத பங்குகளை விற்றே தீர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இறுதி முடிவானால் அதை மாநில அரசுக்கே விற்கும்படி தமிழக முதல் அமைச்சர் கேட்டுள்ளார்.

அதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தின் தன்மையை மெல்ல மெல்ல தனியார் நிறுவனமாக மாற்றிடும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்பதாலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழக அரசின் அதிகாரமும் ஓரளவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் நாம் (திராவிடர் கழகம்) இதனை வரவேற்கிறோம்.

தேவை மறுபரிசீலனை!

இதுபற்றி மத்திய அரசு உடனடியாக காலதாமதம் செய்யாமல் முடிவைக் கூற வேண்டும்.

மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட சில செபி போன்ற அமைப்புகளைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள மத்திய அரசு முயலக் கூடாது.

தனது முடிவைத் தாமதிக்காமல் வெளியிட வேண்டியதும் - மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசர அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1.7.2013

தமிழ் ஓவியா said...

முதல் கடமை

செய்தி: சேதம் அடைந்த கேதார்நாத் கோவில் புனரமைப்பு வேலையைச் செய்ய நாங்கள்தயார்! குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி

சிந்தனை: குஜராத் தில் ஊட்டச்சத்துக் குறைவால் செத்துக் கொண்டிருக்கும் குஜ ராத் மாநில சிசுக்களைக் காப்பாற்றும் வேலையில் குஜராத் முதல் அமைச் சர் மோடி உடனடியாக இறங்குவதுதான் மிக முக்கியம்.

தமிழ் ஓவியா said...


மெய்ப்பிக்க முடியும்


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப் பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய் யப்பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.

- (விடுதலை, 17.3.1961

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

பாராட்டத்தக்க யோசனை

மய்ய அமைச்சரவை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அய்ந்து விழுக்காட்டுப் பங்குகளை விற்க மேற்கொண்ட முடிவு நெய்வேலித் தொழிலாளர் களை மட்டுமல்லாது, தமிழ் நாட்டு மக்களையே கவலைக்கு உள்ளாக்கியது.

அது மட்டுமல்லாது, காங்கிரசு தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் மய்ய அரசின் இந்த முடிவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன.

தி.மு.க. தலைவர் கலைஞரும், திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்கங்களும் முதலில் கண்டனக்குரல் எழுப்பத் தவறவில்லை. மாநில அரசும் கண்டித்தது. ஜூலை 2-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்புவிடுத்து. நெய்வேலி அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து படிப்படியான போராட்டங்களை அறிவித்து, முதலில் எதிர்ப்பு அட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமிழக அமைச்சரவையில் புதிதாக அமைச்ச ராகியுள்ள சுதர்சன நாச்சியப்பன் நீண்டகாலமாகவே அனைத்து இந்திய அளவில் பிற்பட்டோர் நலனின் அக்கறையுடன் செயல்படுபவர். கதர்ச்சட்டைக்குள் முற்போக்குச் சிந்தனை உடையவராகவும், சமதர்மக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவராகவும் கருதப் படுபவர்.

இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துதான் பாராட்டுக்குரியது.

நெய்வேலியின் அய்ந்து சதவீதப் பங்குகளைப் பண முதலாளிக்குக்கோ, வட நாட்டவருக்கோ, வெளி நாட்டவருக்கோ விற்க வேண்டியதில்லை. தமிழக அரசே அதை வாங்கிக் கொள்ளலாம். இதில் ஆட்சேபனை ஏதுமில்லை.

தமிழக அரசு வாங்கவில்லையா? தொழிலாளர்களே அவற்றை வாங்கிக் கொள்ளலாம். நம் சொத்து நம்மிடையே தான் இருக்கும். வெளியில் எவருக்கும் போய் விடாது. நம்மை விட்டுப் போகாது என்றார்.

இந்த யோசனை நல்ல யோசனை மட்டுமல்ல. தமிழக நலனுக்கு உகந்த யோசனை. தமிழக அரசு போராட்டம், நடத்துவதற்குப் பதிலாக, பங்குகளை வாங்கிக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும். ஏற்கெனவே தமிழக அரசின் இரண்டு இயக்குநர்கள் நெய்வேலி நிறுவனத்தில் இருக்கிறார்கள். இந்தப் பங்குகளைத் தமிழக அரசு வாங்குவதன் வாயிலாக மூன்றாவது இயக்குநர் ஒருவரும் கிடைப்பார். நெய்வேலி நிறுவனம் மய்ய மாநில அரசின் கூட்டு நிறுவனமாகும்.
எதிர்காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாகும் போது தமிழக அரசின் கை ஓங்கும்.

தமிழக அரசுக்கு இந்த நானூறு கோடிப் பங்கு விலை ஒன்றும் அதிகமில்லை. எவ்வளவோ ரூபாய்களை மதுவில் சம்பாதித்துத் தமிழகத்தைச் சீரழிக்கும் அரசு இந்த நல்ல காரியத்தைச் செய்யலாமே.

தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே நெய்வேலி பங்குகள் விற்கப்பட்ட முன் மாதிரியும் அங்கே இருக் கிறது. எனவே தொழிற் சங்கங்கள் ஒன்று சேர்ந்து அப்பங்குகளை வாங்கினால், தொழிலாளர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கையில் ஆதரவுக் குரல் எழும்புமே.
தமிழர் தலைவர்தான் நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி கொடுக்கும் மய்ய அரசு, நெய்வேலி நிலக் கரிக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றுத் தந்தவர்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன் நெய்வேலி மின்சாரத்தின் முழுப் பயனும் தமிழகத்திற்குக் கிடைக்கத் தாமும், தம் வாழ்விணையர் மோகனா அம்மையாருடன் போராட்டம் நடத்திக் கைது ஆனவர்.

எனவே, மய்ய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் இந்த அறிவிப்பும் நம் தமிழர் தலைவரின் பாராட்டையும், வரவேற்பையும் பெறும் என்பதில் அய்யமில்லை.
தமிழர் தலைவர் நினைவு வராமல் நெய்வேலி எந்தப் பிரச்சியும் சிந்திக்க வியலாத அளவுக்கு அவருடைய பங்கு மகத்தானது.
- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...

அதிகப்படியான வியர்வை நாற்றத்தை போக்க சிகிச்சை

கைகளின் இடுக்குகளில் வெளியாகும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடும் புதிய தொழில்நுட்பத்தை பிரபல சரும மற்றும் கேச பாதுகாப்பு மய்யமான ஸ்கின்சிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவலகங்களில் பணி யாற்றுவோர் இந்த பிரச்சினையால் அதிகமாக அவதிப்படுகிறார்கள்.

மொத்தமக்கள் தொகை யில் 3 முதல் 5 விழுக்காட்டினர் இதனால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சினையை போக்க மிரா டிரய் என்ற சிகிச்சையை ஒருமணி என்ற விகிதத்தில் 3 முறை 3 மாதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிறுவனத்தின் இயக்குநர் நிதின் பேகூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


என்னே உணர்வு!


இதயம் வெளியில் தெரிவதில்லை, இதயத் துடிப்பும் வெளியில் கேட்பதில்லை. மனசாட்சி வெளியில் தெரிவதில்லை. மனசாட்சியின் குரலும் வெளியில் கேட்பதில்லை. விடுதலையும் தமிழர் தலைவரும் தமிழகத்தின் உயிரும் உடலும், வாழ்க தமிழர் தலைவர்! வளர்க விடுதலையின் யுகப் புரட்சி! ஆகஸ்ட் ஒன்றை எதிர்நோக்கியுள்ளேன்.

- த. ஆதிசிவம், பெரம்பலூர்

விடுதலைக்கு ஆறு மாத சந்தாவுக்கான காசோ லையை அனுப்பி வைத்த பெரம்பலூர் வெங்கடேச புரம் தோழர் மானமிகு ஆதிசிவம் பி.ஏ., அவர்கள் மேற்கண்ட கடிதத்தையும் எழுதி அதில் இணைத் திருந்தார்.

இதனைப் படிக்கும் தோழர்கள் ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும்; யாரும் அவரைப் போய் சந்தா கேட்டு வற்புறுத்த வில்லை. தாமாகவே சந்தா பணம் அனுப்பி வைத்த தோடு அல்லாமல் தன் உணர்வுகளையும் எவ்வ ளவு அழகாக வெளிப்படுத் திக் கொண்டிருக்கிறார்.

இந்த இயக்கத்திற்கு எது பலம் என்றால், இதுபோன்ற அப்பழுக்கற்ற சிப்பாய்களான தொண்டர் களின் பலம்தான்.

இயக்கம் எனக்கு என்ன செய்தது? என்று கேட்க மாட்டார்கள் - இயக் கத்திற்கு நான் இன்னது செய்வேன்! என்று கூறும் இத்தகு இலட்சிய உறு திக்கு முன் துப்பாக்கி களின் ரவைகள்தான் என்ன செய்யும்?

1980ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு கடிதம் விடுதலை ஆசிரியர்கள் அவர்களுக்கு வந்தது. பாளையங்கோட்டை என்பது அவரின் ஊரோ வீடோ அல்ல! பாளையங் கோட்டை சிறையில் ஆயுள் கைதியாக இருக்கக் கூடிய தோழரின் கடிதம் அது.

எனது பெரு மதிப் பிற்கும் மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு தம்பி அ. பக்கிரி முகம்மது எழுதும் விவரம்:

வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனை யில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது. அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக் கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலை இதழ் வந்து கொண்டு இருக்கிறது மிகவும் நன்றி.
- அ. பக்கிரிமுகம்மது
சி.என்.ஓ. 264
மத்திய சிறை, பாளை

33 ஆண்டுகளுக்கு முன் பாளை சிறையில் இருந்த ஆயுள் தண்ட னைக் கைதியின் உணர்வு தான் சாதாரணமானதா?

தந்தை பெரியார் உருவாக்கிய கொள்கையும், அந்தக் கொள்கையில் தோழர்கள் கொண்ட உணர் வும் தொடர்கிறது என்று நினைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நம் தலைகள் நிமிர்கின்றன. மார்பு புடைக்கிறது - நம்மை வெற்றி கொள்ள யார் இருக்கிறார்கள்? எது இருக்கிறது? என்ற எண் ணமே மேலோங்கி நிற்கிறது. தொண்டர்களின் பலமே இந்த இயக்கத்தின் உண்மைப் பலம் என்பதி லும் அய்யம் உண்டோ!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்ற கொள்கை முடிவுக்குக் கண்டனம் தமிழர் தலைவர் அறிக்கை

நேற்று டீசல் மேலும் விலை உயர்த்தப்பட்டு (ஒரு லிட்டருக்கு 61 காசுகள்) ஒரு லிட்டர் ரூ.54.15 விலை என்று சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இது 6ஆவது முறை உயர்த்தல் ஆகும்!

இதுபோல பெட்ரோல், இயற்கை எரிவாயு விலைகளும் திடீர் திடீரென்று இரண்டொரு நாள் இடைவெளியில் அறிவிக்கப்படுகிறது.

இது மக்கள் விரோதச் செயலாகும்! உலக நிலவரத்திற்கேற்ப, அந்தந்த நிறுவனங்களே அவ்வப்போது விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை இந்திய அரசு அளித்துள்ள கொள்கை முடிவு மிகவும் தவறானது.

அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும் எதிர்ப்பு!

இதை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பல மாதங்களுக்கு முன்பே சுட்டிக் காட்டியுள்ளார். அதுபோலவே தமிழ்நாடு முதல் அமைச்சரும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்தனைக் கட்சிகளும் இந்தக் கொள்கை முடிவைக் கண்டிக்கத் தவறவில்லை. இவற்றையும் மீறி ஏழை - எளிய சாமான்ய மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒரு செயலை மத்திய அரசு செய்யலாமா?

இயற்கை எரிவாயு, டீசல் போன்றவை இன்று விவசாயிகளும் பயன்படுத்தும் அளவுக்கு இன்றியமையாததாகி விட்டது!

பல மணி நேரம் மின்வெட்டு என்ற நிலையில், பம்புசெட் விவசாயத்திற்கு டீசல்தான் பயன்படுத்தப் படுகின்றது; அதன் விலையை இப்படி ஆறு தடவை ஒரே ஆண்டில் ஏற்றி வேடிக்கை பார்ப்பது என்பது நியாயம்தானா?

வேதனை, வேதனை - வெட்கமும்கூட! இதனை மத்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தலையிட்டு திரும்பப் பெற வேண்டும்.

இப்பொருள்களின் விலை நிர்ணயக் கொள்கை களையே மறு ஆய்வுக்கு உட்படுத்துதல் அவசரம் அவசியம் ஆகும்!

எப்போது விடியல்?

காய்கறி விலைகள் உட்பட, சமையல், எண்ணெய் விலை உட்பட உயர்ந்துள்ள நிலையில் அடித்தள மக்களுக்கு எப்போது விடியல்?

என்னதான் விடை - பெருகும் தற்கொலைகள் தானா?

மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கட்டும்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
2.7.2013

தமிழ் ஓவியா said...


கல்யாணம்

மனிதன் மிருகப் பிராயத்தி லிருந்தபோது காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கல்யாணம்.

(விடுதலை, 10.8.1968)

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடி யார்? ப.சிதம்பரம் படப்பிடிப்பு


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது: பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர்களது நோக்கம் மதச்சார் பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. எனவே அடுத்த மக்களவைத் தேர்தலிலும் மக்கள் அக்கட்சியை நிராகரிப்பார்கள். பொதுசிவில் சட்டம், அயோத்தி விவகாரம், காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் அரசியல்சாசன சட்டப் பிரிவு 370-அய் நீக்குவது என்பது போன்ற பிரிவினைவாத பிரச்சினைகளை பாஜக தொடர்ந்து எழுப்பி வருகிறது என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

பாஜக நிராகரிக்கப்படும்: மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதா? என்ற கேள்விக்கு, "இது பொருத்தமில்லாத கேள்வி. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். மக்கள் சரியான முடிவை அளிப்பார்கள்.

காங்கிரஸ் எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் போராடப் போவது இல்லை. 2004, 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக நிராகரிக்கப்பட்டது போல், அடுத்த ஆண்டு தேர்தலிலும் நிராகரிக்கப்படும்' என்று சிதம்பரம் பதிலளித்தார்.

மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர்

மோடி, பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர். பாஜகவின் உயர் நிலை தலைவர் களில் பலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரால் பாஜகவிலேயே பிரிவினை ஏற்பட்டுள்ளது' என்றார். மோடியை எதிர்த்து எல்.கே. அத்வானி பதவி விலகியதை சிதம்பரம் இவ்வாறு குறிப் பிட்டார்.

யார் இரும்பு மனிதர்? மோடி இரும்பு மனிதர், பலம் வாய்ந்த தலைவர் என்று வர்ணிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, "இரும்புத் தலைவர் என்று வர்ணிக்கப்படுபவர் (அத்வானி) தலைமையில்தான் 2009 ஆம் ஆண்டு தேர்தலை பாஜக சந்தித்தது. ஆனால் தேர்தலில் முன்பைவிட குறைவான இடங் களையே அவர்கள் பெற முடிந்தது. வலுவானவர், பலவீனமானவர் என்று ஊடகங்களே ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன' என்று பதில ளித்தார்.

குஜராத் வளர்ச்சி ஒரு மாயை:

குஜராத் மாநிலத்தை மோடி வளர்ச்சி பெறச் செய்துள்ளார் என்பது உண்மைக்குப் புறம்பாக மிகைப்படுத்தப் பட்ட தவறான தகவல். குஜராத்தில் அவர்கள் காட்டும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான குஜராத் மக்களை பின்னுக்குத் தள்ளி ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி. அது ஒரு மாயை. குஜராத் போன்ற மாநிலத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு வேண்டுமானால் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் நாடு முழுவதற்கும் இந்த வளர்ச்சித் திட்டம் பொருந்தாது.

மோடியின் கட்டுக்கதை:

உத்தரகாண்ட் வெள்ளத்தில் குஜராத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரை மோடி மீட்டதாகக் கூறுகிறார்கள். அது கட்டுக்கதை. அவரது மேலாளர்களும், பணியாளர் களும் ஒன்றரை லட்சம் பேரைக் காப்பாற்றியதாகக் கூட கூறுவார்கள். அவர்கள் கொண்டு வந்ததாகக் கூறும் 80 கார்கள், 4 விமானங்களில் அதிகபட்சமாக 2,300 பேரை வேண்டுமானால் அழைத்துச் செல்ல முடியும் என்று சிதம்பரம் கூறினார்.

பிரதமர் வேட்பாளராக...

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை தொடர்ந்து அதே துறையில் சிறந்த நீங்களும் பிரதமராக முடியு மல்லவா என்ற கேள்விக்கு, எனது குறைபாடுகள் என்ன என்பது எனக்குத் தெரியும். அதற்கு உள்பட்டுதான் நான் பணியாற்ற முடியும். எனது குறைபாடுகளால் பிரச்சினை ஏற்படும் நிலையில், எழுத்து, வாசிப்பு, பயணம் என மாறிவிடுவேன் என்றார் சிதம்பரம்.

உலக வங்கியில் கடன்: உத்தரகாண்ட் மறு நிருமாணப் பணிகளுக்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடனுதவி கேட்கப் பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் உத்தர காண்ட் மாநிலத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கி யுள்ளார். இதில் ரூ.145 கோடி உடனடியாக அளிக்கப் பட்டுள்ளது.

மறுநிர்மாணப் பணிகள் தொடர்பாக மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் ஆகியவை அம்மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் சிதம்பரம் தெரிவித்தார். சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை ஏமாற்று வேலை என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி விமர்சித்திருப்பது முதிர்ச்சியற்ற பேச்சு என்று சிதம்பரம் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மதச்சார்பின்மையின் இலட்சணம் இதுதானா?


இந்திய ரிசர்வ் வங்கி வைஷ்ணவதேவி உருவம் பொறித்த ரூபாய் நாணயத்தை வெளி யிட்டுள்ளது.

படத்திற்குமேல் சிறீமாதா வைஷ்ணவதேவி கோவில் வாரியம் என்று தேவனாகிரி மொழியில் எழுதுக்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் கீழ்ப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. படத்துக்கும் கீழே 2012 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

யார் இந்த வைஷ்ணவதேவி? எதற்காக ரூபாய் நாணயத்தில் பொறிக்கப்பட்டு இருக் கிறது?

யார் இந்த வைஷ்ணவதேவி? அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது!

1. வைஷ்ணவதேவி ஒரு மாயா தேவி. இவள் கருட வாகனத்தில் எழுந்தருளியவளாய் சங்கு, சக்கரம், கதை, வரதம் உடையவளாய் இருப்பாள்.

2. மத்தியான காலத்தில் தியானிக்கப்படும் சந்தியா தேவதை, யௌவனமுள்ளவளாய், வெண்ணிறத்தவளாய், வெண்பட்டுடுத்து வநமாலை, பூணூல், சங்கு சக்கரம் இடக் கரங்களிலும், கதை, அபயம் வலக்கரங்களிலும் உள்ளவளாய் கருட வாகனத்தில் பதுமாசனத்தில் இருப்பவளாய் மகாலக்ஷ்மி உருவமாய் தியானிக் கப்படுபவள் வைஷ்ணவதேவி என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி.

ஆக, இந்து மதத்தின் ஒரு பிரிவுக்குரிய வர்களால் வணங்கப்படும் கடவுளச்சிதான் இந்த வைஷ்ணவதேவி.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவாகவே கூறுகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் உட் பிரிவைச் சார்ந்த ஒரு கற்பனைப் பொம்மையை ரூபாய் நாணயத்தில் பொறிப்பது நாணயமா?

அரசமைப்புச் சட்டம் எதைத்தான் சொல்லட்டுமே! அதைப் பற்றிக் கவலையில்லை என்று கருதும் பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவில் இருக்கும் மட்டும் அவர்கள் வைத்ததுதானே சட்டம்.

இவர்கள் வைத்த சட்டத்தின்முன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டம் எந்த மூலை?

1925 இல் சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இப் பொழுது மறுமுறை நினைவு கூர்ந்து பாருங்கள்.

While Speaking at a public meeting at Salem E.V.Ramasamy Naiker said the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy (A Hundred of the Hindu
page 337)

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும் போதே, பார்ப்பனர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவை ஏற்படுத்திவிடவேண்டும்; இல்லாவிடில் இந்தியாவில் உள்ள மக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுங் கோன்மையின் கீழ் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்று கூறினார் என்று இந்து ஏடு வெளி யிட்ட நூறாவது ஆண்டு மலரில் இடம்பெற்றுள்ளது.

பார்ப்பன வல்லாண்மைக்கு பிராமிணோகிரசி என்ற சொல்லை புதிதாகக் கையாண்டுள்ளார் என்றும் இந்து ஏடு குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியார் கணித்துச் சொன்னது எத்தகைய உண்மை என்பதற்கு பார்ப்பனீயக் கலாச்சாரத்தின் வடிவமான வைஷ்ணவியின் உருவம் பொறித்த ரூபாய் நாணயம் வெளியிட்டு இருப்பது ஒன்று போதாதா?

தமிழ் ஓவியா said...


சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் வேறொரு வழக்கிலும் உறுதி!


புதுடில்லி, ஜூலை 3- திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தை சாட்டி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஸ்சிங் கேஹர் அடங் கிய அமர்வு இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக வாக் குறுதி அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுபோன்று பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப்பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த் திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது.

நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப் பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த்திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் செய்துகொள்வதாக பொய் யாக வாக்குறுதி அளித்து பெண்ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடு விக்க வேண்டுமென்ற அவரது கோரிக் கையை ஏற்க முடி யாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரமான தீர்ப்புபற்றிய விவரம்

இரண்டு குழந்தைகள் பெற்ற ஆண் திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட முடியாது என்று குடும்ப நல நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு (17.6.2013) வருமாறு: சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள்) பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால் அவர்களின் செயல் பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் - மனைவி என்றும் கருதலாம் சட்டப் பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்கின்றனர்.

தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம் மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்தவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்ட பூர்வமான ஆதாரம் என்ன வென்றால் அது அந்த இணையர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான் என தீர்ப்பில் கூறியுள்ளார்.

பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சரியான பாடங்கள் ஆகும்.

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை!


நீங்கள் குளிர்பானம் அருந்துபவர்களா? நீரிழிவு நோயை நீங்கள் விரைவில் எதிர்நோக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 40 முதல் 70 மில்லிவரை குளிர் பானம் அருந்தும் சிறுவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 முதல் 5 கிலோ வரை எடை எகிறும். தண்ணீர் குடிப்பதையும் புறந்தள்ளிவிட்டு, குளிர்பானம் அருந் தினால், 40 வயதில் வரும் சில நோய்கள் பத்து வயதிலேயே வரக்கூடும் என்கிறார் மும்பை இருதய ஆய்வு மய்ய மருத்துவர் ராமகாந்த பாண்டா!