Search This Blog

29.7.13

கடவுளும் மதமும் - தந்தை பெரியார்

கடவுளும் மதமும்

உலகில் மக்களிடையேயுள்ள அறியாமைகளில் எல்லாம் தலைசிறந்த அறியாமை கடவுளைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகளேயாகும்.
உலகில் கடவுள் பெயரால் உள்ள மதங்களில் குறிப்பிடத்தக்க பெரிய மதங்கள் மூன்று என்று சொல் லலாம். அவை பெரிதும் உண்மைக்கு மாறுபட்டவை யேயாகும்.

அவை முறையே, கிறிஸ்தவமதம், இஸ்லாமிய மதம், இந்து மதம் - என சொல்லப்படுபவைகளாகும். இவைகளில் முதல் இரண்டு மதங்களும் சரித்திர சம்பந்தமான ஆதாரங் களைக் கொண்ட மதங்களாகும்.

மூன்றாவது மதமான இந்து மதம் என்பது காலப் போக்கில் கற்பனைக் கருத்துகளால் பெருக்கி சமயத்துக்கு ஏற்றபடி மக்களுக்குள் புகுத்தி, மக்களை ஏய்க்கும் ஒரு கதம்பக்கருத்து மதமாகும். இம்மதக் கோர்வைக்கு இந்துமதம் என்கின்ற பெயர் முறையே முன் இரண்டுமத காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயராகும்.

இது வேத மதமாக இருந்து ஆரிய மதம் என்றாகி, பிராமண மதம் என்று கூறப்பட்டு வந்து, கடைசியில் இந்துமதம் என்று சொல்லப்படுவதாகும்.
உலகில் கிறிஸ்தவமதம்தான் மிகப்பெரிய எண் ணிக்கை கொண்ட மக்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் மதம் ஆகும்.

அடுத்தது இஸ்லாம் மதம் என்பதாகும். இது கிறிஸ்தவ மத மக்கள் அளவில் சற்றேறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத மக்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்ப தாகும்.

மூன்றாவதான இந்து மதம் என்பது இஸ்லாம் மதத்தைவிட மிகச் சிறிய கூட்டத்தினரை, அதாவது இஸ்லாம் மத மக்களில் சற்றேறக்குறைய நான் கிலொரு பங்கு மக்களைக் கொண்டதாக இருக்க லாம்.

இவை தவிர `பவுத்த' மதம் என்ற ஒரு மதம் இருக்கிறது. இம்மதத்திற்குக் கடவுள் கிடையாது என்றாலும், கடவுள் நம்பிக்கை மதத்துக்கு உண்டான சடங்குகள் பெரிதும் உண்டு என்பதோடு கிறிஸ்தவ மதத்திற்கு அடுத்தபடியாக பெரிய எண்ணிக்கை கொண்ட மக்களைத் தனக்குள் அடக்கிக் கொண்டு இருக்கிறது.

சீனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன் முதலிய நாடுகளுடன் மற்றும் சில நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்கும் மதமாகும்.

புத்த மதம் என்று சொல்லப்படுவதற்கு மற்றொரு பெயர் சொல்ல வேண்டுமானால், `அறிவு மதம்' என்று சொல்லுவது மிகப் பொருத்தமாகும்.
புத்தி என்ற வடமொழிப் பெயரைக் கொண்ட புத்தமதம் என்பதைத் தமிழில் கூற வேண்டுமானால், அறிவுமதம் என்றுதான் கூறலாம்.

இதற்குப் புத்தமதம், அறிவுமதம் என்று கூறுவ தற்குக் காரணம் என்னவென்றால், முதலில் கூறப்பட்ட மும்மதங்களுக்கும் கடவுள் என்பதாக ஒன்று உண்டு! ஆனால், புத்தமதம், அறிவு மதம் என்பதற்குக் கடவுள் என்பதாக ஒன்று கிடையாது. ஏனென்றால், அறிவுக்கு ஏற்ற கொள்கை என்றால் அதில் கடவுளுக்கிடமில்லை. ஆதலால் புத்தமதம், அறிவு மதம் என்று சொல்ல நேர்ந்தது. அறிவுப்படி கூறும்போது புத்தமதத்தை ஒரு மதம் என்று உண்மையான புத்தர்கள், அறிவாளிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

மதம் என்றால் கடவுள் இருந்தாக வேண்டும்.
கடவுளை நம்ப வேண்டும்.
மற்றும் அறிவுக்கடங்காத சில விஷயங்களைக் கருத்துகளை நம்பியாக வேண்டும்.

ஆதலால் அறிவுக் கருத்துகளை, புத்திக் கொள்கைகளை மதம் என்று சொல்லுவதில்லை. கருத்து, கொள்கை, கோட்பாடு என்று பொதுவாக அறிஞர்கள் சொல்லுவார்கள்.

முற்கூறிய மும் மதங்களுக்கும் கடவுள் உண்டு என்றாலும் இவைகளில் ஒரு கடவுள் மதமும் உண்டு; பல கடவுள் மதமும் உண்டு. இம் மூன்று மதக் காரர்களும் கடவுளை அதாவது ஒரு கடவுளை பல கடவுளைக் கொண்டிருந்தாலும் கடவுளையா கட்டும் மற்றும் தேவர்களையாகட்டும் ஒன்று என்றும், பல என்றும் கொள்கையாகக் கொண்டிருந்தாலும், இவர்கள் எல்லோரும் கடவுளை ஒரே தன்மையாகத்தான் கருதுகின்றார்கள்.
எப்படி என்றால் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் எல் லோரும் கடவுளை மனிதனைப் போலவேதான் கருது கிறார்கள். அதாவது இலக்கணத்தில் அஃறிணை, உயர்திணை எனப்படுகின்ற இரண்டு திணைகளில் ஒன்றான உயர்திணைப் பொருளாக, அதுவும் மனி தனைப் போல் மனிதனுக்குண்டான எல்லாக் குணங் களையும் பொருத்தி, மனிதனாகவே மனிதத் தன்மையுடைய வனாகவே மனிதனைவிட எண்ணத்தில் மனித எண்ணமுடையவனாகவே இருந்தாலும் செய்கையில் சிறிது சக்தி அதிகம் உடையவனாகக் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எப்படி என்றால் மனிதன் தனது எண்ணத்தை நிறைவேற்ற செய்கையில் செய்தாக வேண்டும். ஆனால், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுள் மனிதனைப் போன்ற எண்ணங்களை உடையவனாகவே இருந் தாலும் அந்த எண்ணங்களை நிறைவேற்ற கரியத்தில் செய்யாது `நினைத்த மாத்திரத்தில் ஈடேறக் கூடிய' மாதிரி நினைப் பிலேயே செய்து விடுகிறான்.

இதுதான் மனிதனுக்கும், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுளுக்கும் உள்ள பேதமே தவிர, மற்றபடி தத்துவத்தில் ஒரு பேதமும் இல்லை.

இரண்டு பேரும் மனிதர்களேதான்; இரண்டு பேரும் மனித சுபாவம் உடையவர்களேதான். ஒன்றுக்கொன்று உயர்வுகூற வேண்டுமானால், செய்கையில் சக்தி அதிகம் என்பதைத் தவிர எண்ணத்தில் உயர்வான எண்ணம் என்பதாக என்றோ அல்லது தன்மையில் உயர்வான தன்மை என்பதாக என்றோ இருப்பதாக எதுவும் இல்லை. எதையும் நாம் காண - அனுபவிக்க தக்கதாகக் கற்பிக்கவில்லை.

கிறிஸ்து கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு ஒரு குமாரன் உண்டு.
முகமது நபி கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு ஒரு தூதன் உண்டு.
அதுபோலவே மனிதனுக்கும் குமாரன் உண்டு; தூதன் உண்டு.
கடவுள் ``இவைகளை எண்ணத்தில் உண்டாக்கிக் கொண்டான்'' அதுவும் ஒரே ஒரு தடவைதான். மனிதன் இவைகளைச் செய்கையில் தினமும் உண்டாக்கிக் கொள்கிறான்.

இப்படியே தான் ஒவ்வொரு காரியத்தையும்.

உதாரணமாக, கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்கிறான்; தீமை செய்தவனுக்குத் தீமை செய்கிறான்.

மனிதனும் அப்படியே! தனக்கு நன்மை செய்தவர் களுக்கு நலம் செய்கிறான்; தீமை செய்தவனுக்குத் தீமை செய்கிறான்.

அவன் - கடவுள் - நினைத்த உடன் காரியம் ஆகும்படி செய்கிறான். மனிதன் அதற்காகச்  செயல் செய்தவுடன் காரியம் ஆகும்படி செய்கிறான்.

கடவுள் எவ்வளவு தவறு செய்த மனிதனையும் தன்னைப் பிரார்த்தித்து, தோத்தரித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டவனை மன்னிக்கிறான்.
கடவுளும் சிலரை மன்னிக்காமல் தண்டிக்கிறான்.

மனிதனும் அதுபோலவே மன்னிக்காமல் சிலரைத் தண்டிக்கிறான்.
கடவுளும் பழிவாங்குகிறான். மனிதனும் பழிவாங்குகிறான்.

இப்படியே மனிதனிடத்தில் உள்ள எல்லாக் குணங்களும் கடவுளிடத்திலும் உண்டு; கடவுளிடத்தில் உள்ள எல்லாக் காரியமும் மனிதனிடத்தில் உண்டு!
மனிதனுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு; கடவுளுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு!

மனிதனுக்கும் பிற மனிதனைத் தண்டிக்க ஜெயில் உண்டு; கடவுளுக்கும் தண்டிக்க நரகம் உண்டு!

மனிதனும் தண்டனை கொடுக்கிறான்; கடவுளும் தண்டனை கொடுக்கிறான்!
மனிதனும் மனிதனை - ஜீவனை ஏராளமாகக் கொல்லுகிறான். கடவுளும் ஏராளமான மனிதர்களை - ஜீவன்களைக் கொல்லுகிறான்! அதாவது சாகடிக் கிறான்!

மனிதனும் மக்கள் பட்டினிகிடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்; கடவுளும் ஏராளமான மக்கள் ஜீவன்கள் பட்டினி கிடப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

மற்றும் பல கடவுள்களையும் பல உருவக் கடவுள்களையும் கற்பித்துக் கொண்டவனும் மனிதனே. மனிதத் தன்மையையே தான் கடவுளாக ஆக்கிக் கொண்டான் என்றாலும், இவன் (பல கடவுள்காரன்)  அயோக்கியத்தனத்தையும் இழிகுணத் தன்மையும் கொண்ட மனிதனைத்தான் கடவுளாகக் கற்பித்துக் கொண்டான். ஏனென்றால், பல கடவுள்களை, பல உருவக் கடவுள்களைக் கற்பித்துக் கொண்ட மனிதன் காட்டு மிராண்டியாய், மூர்க்கனாய், மடையனாய், ஒழுக்கம், வரைமுறை என்பவை ஏற்படாதவனாய் இருந்த காலத்தில் கற்பித்துக் கொண்டதால், அன்றைய நிலைக்கு ஏற்ற, பொருந்திய, விளங்கிய தன்மைகளையும் கொண்டே கற்பித்துக் கொள்ள வேண்டியவனானான்.

உதாரணமாக பார்ப்பான் துவக்கத்தில் கடவுள், கடவுள் தன்மை என்பதாக எதையும் கற்பித்துக் கொள்ளவில்லை. ஏன் என்றால் அந்தக் காலத்தில் அவன் மலைவாசியாக இருந்தான். ஆனதால் அவன் `ஆகாயத்தில் மறைவாக சஞ்சரித்துக் கொண்டு இருக்கிற'தாக பல தேவர்களைக் கற்பித்துக் கொண்டான்! இவர்களையும் மிக்க கீழ்த் தரமான மனிதத் தன்மைகொண்டவர்களாகவே கற்பித்துக் கொண்டான்.

இந்தக் கற்பனைத் தேவர்களும்கூட அய்ரோப்பிய காட்டுமிராண்டி மக்களால் பல காரியங்களுக்கு, பல குண முடையவர்களாகக் கற்பித்து, பாவித்துக் கொண்ட தேவர் களையே அவர்களது பெயர்களை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். சைவர்களால் ருத்திரன் என்றும், துர்க்கை என்றும் போற்றப்படும் தேவர்கள் அய்ரோப்பிய காட்டுமிராண்டிகளால் ``தகப்பன் கடவுள்'' என்ற பெயரால் ஏற்பாடு செய்து கொண்ட தேவர்களாவார்கள். அதையேதான் சைவனும் இன்று `அம்மை கடவுள்' `அப்பன் கடவுள்' என்று சொல்கிறார்கள்.

அந்தக் கடவுளுக்குக் காட்டாளர்கள் போலவே ஆயுதங்கள், மழு, சூலாயுதம், மாட்டு வாகனமும், பெண் கடவுளுக்கு அரிவாள் சூலாயுதம், சிங்க வாகனமும், கோரமான உருவமும் கொண்ட பெண்களாகக் கற்பித்து வணங்கி வந்திருக்கிறார்கள். மற்ற தேவர்களும் அப்படியே கற்பிக்கப்பட்டு பரப்பிவிடப் பட்டார்கள்.

அக்காலத்தில் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட தேவர்கள் பஞ்ச பூதங்களுக்கு அய்ந்து தேவர்கள் என, நிலம் - பார்வதி; நீர் - வருணபகவான், காற்று - வாயு பகவான்; நெருப்பு - அக்னி பகவான்; ஆகாயம் - ஆகாச வாணி; சூரியன் - சூரிய பகவான்; சந்திரன் - சந்திர பகவான்; சாவு - எம தர்மன்; உற்பத்தி - பிரம்ம தேவன்; வாழ்வு - விஷ்ணுதேவன்; அழிவு - ருத்திர (சிவ) தேவன்; காலை நேரம் - உஷாதேவி! இன்னும் இப்படியே பல தேவர்கள்! இவர்களுக்கு அரசன் இந்திரன்! இவனைத் தேவேந்திரன் என்றே சொல்லுவார்கள்.

இவ்வளவு பேர்களுக்கும் கணவன், மனைவிகள்! சிலருக்கு மக்களும் உண்டு! இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இத்தனை பேர்களையும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம் இல்லாத அயோக்கியத் தன்மையுடைய மனிதர்களாகவே கற்பித் துக் கொண்டார்கள். இவர்களுக்கு வரைமுறையே இல்லாமல் இருக்கிறது. கூடாதது, இழிவானது. மகாபாதகமானது என்று நாம் இன்று கூறும் முறைகளை ஆண் பெண் சம்பந்தத்திற்குக் கற்பித்துக் கொண் டார்கள். பிற்காலத்தில் நாளா வட்டத்தில் இவர்களைக் கடவுளாகவே ஆக்கி விட்டார்கள்! நாமும் இன்று இவற்றை இவர்களைத்தான் பெண்டு பிள்ளை இழி தன்மை சகிதமாகக் கடவுளாகவும், கடவுள் தன்மை யாகவும் கருதி இவர்களை வணங்கினால் நமக்கு சகல பாக்கியமும் கிட்டும் என்று நம்பித் தொழுது வணங்கி வருகிறோம்.
கடவுள் என்றால், கடவுள் தன்மை என்றால் அது என்ன? எப்படிப்பட்டது? என்பதே தெரியாதவர்களாய் இருக் கிறோம்.

மனித  உருவத்தை - மனிதத் தன்மையை - ``மனிதத் தன்மையிலும் இழி குணமுள்ள மனிதத் தன்மையை'' கடவுளாகக் கருதி வணங்கி வருகிறோம் என்பதோடு, வாய்ப்பேச்சளவில் மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சர்வ சக்தி கொண்ட ``எல்லாம் வல்லவர் கடவுள்'' என்று பேசி மனப்பால் குடித்து வருகிறோம்! ஆனால், ஒன்றையும் காரியத்தில் அறிய முடியவில்லை.
பொதுவாக மனிதன் பெரிதும் எதில் முட்டாள் - மடையன் என்றால், இந்தக் கடவுள் எண்ணத்திலே தான், முதலாவது முட்டாளாக, மடையனாக விளங்கு கிறான்! என்ன காரணமோ இந்த மடைமையை விளக்க, எடுத்துக்கூற அறிவு படைத்த மக்களாகிய நம்மில் எவரும் முன்வருவதில்லை.

உலகிலேயே முதன்முதலாகத் தோன்றிய தத்துவ ஞானி என்பதாக ஒருவரைக் கூற வேண்டு மானால், சரித்திர அகராதிப்படி புத்தரைத்தான் சொல்ல முடி கிறது. அடுத்தாற்போல் மேல் நாடுகளில் தோன்றியவர் சாக்கரட்டீஸ் என்ற விஞ்ஞானியாவார். இவர் புத்தருக்குப் பின் தோன்றியவரே.

இவர்களுடைய விஞ்ஞான போதம் சிந்திப்பாரற்று - சீந்துவாரற்று மறைந்து கிடக்கின்றன. பொய்க் கற்பனையையும் மடமையையும் போதித்தவர்களையே உலகம் போற்றுகிறது, பின்பற்றுகிறது.

அரசன் - ஆட்சி பார்ப்பனர்க்கு அடிமைபட்டவனாகி விட்டான். பார்ப்பான் தன் (இன) சுயநலத்திற்கே அடிமைப்பட்டவனாகி விட்டான். அவன் (பார்ப்பான்) தன்னை மேலான பிறவி என்று ஆக்கிக் கொள்வதில் தான் கவலைகொண்டு, அதற்காகவே கடவுளை வைத்து வருகிறானே ஒழிய, மேலான பிறவி என்பதற்கு தன்னிடம் ஏதாவது மேலான குணமிருக்க வேண்டுமே என்பது பற்றிச் சிறிதுகூடக் கவலைப்படவில்லை.

அதுபோலத்தான் கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் `உள்ள' எல்லா வஸ்துக்களிலும் கடவுள் பெரியவர் என்று சொல்லி கற்பித்தார்களே ஒழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை இருக்கிறது? என்று எதையும் எவரும் நிரூபித்து மெய்ப்பித்துக் காட்டவே இல்லை.

-------------------------------28.4.1968 அன்று ”விடுதலை”யி ல் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

34 comments:

தமிழ் ஓவியா said...


ஒரே நிமிடம்!



நம் மக்களை இந்தப் பாழாய்ப் போன பக்தி என்ன பாடுபடுத்து கிறது! எவ்வளவு பட் டாலும் புத்தி வரவில் லையே என்று எண்ணும் போது குருதி கொதிக் கிறது; இன்னொரு பக்கத்தில் வேதனை விலா எலும்புகளை முறிக்கிறது.

அமர்நாத்தில் பனி லிங்கமாம்! லிங்கத் தில்தான் எத்தனை வகை! தயிர்வடை, மசால் வடை, மெது வடை என்பது மாதிரி - எத்தனை எத்தனை வகை; பிடித்து வைத் தால் போண்டா - தட்டி வைத்தால் வடை என் பது மாதிரி.

குளிர் காலத்தில் பனி நீர் கசிவதால் இறுகி செங்குத்தாக ஒன்று நிற்கிறது - அது தான் பனி லிங்கமாம் - அருகில் ஸ்டவ் பற்ற வைத்தால் பனி உருகி ஓடி விடுகிறது.

எல்லாம் தெரிந்தும் பனி லிங்கத்தைத் தரி சிக்கச் செல்லுகிறார் களாம்; ஜூன் 28 தொடங்கியது இந்தக் கூத்து, இந்நாள் வரை இவ்வாண்டில் மூன் றரை லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்குப் போனார்களாம்.

போனவர்களுக்குப் பாவம் நீங்கிப் புண் ணியம் கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த ஆண்டில் மட்டும் 10 யாத்திரிகர்கள், ஓர் உதவியாளர் உட்பட 11 பேர் மரணம் அடைந் துள்ளனர். கடந்த ஆண்டில் 6 லட்சத்து 21,145 பேர் போனார் களாம். அவர்களில் 93 பேர் உடல் நலக் குறைவு காரணமாகவும், 42 பேர் விபத்துக்கள் காரண மாகவும் பலியானார் களாம்.

2011ஆம் ஆண்டில் 2 லட்சத்து 35611 பேர் சாமி கும்பிட அங்குச் சென்றார்களாம். அவர் களில் 106 பேர் மாண் டார்களாம்.

தம்மை நாடி வந்த வர்களைக் காக்க முடியாத கடவுள் என்ன கடவுள் - மண்ணாங் கட்டிக் கடவுள் - என்ற சிந்தனைப் பொறி வெடித்துக் கிளம்ப வேண்டாமா?

மடிந்தவர்கள் பக்தர்கள் என்பதால் நாம் மகிழவில்லை. விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் இப்படி மலிவாக, நாசமாகப் போகிறதே என்ற மன சங்கடத்தால்தான் எழுதுகிறோம்.
ஒரு கணம் ஒழுங்காகப் புத்தியைப் பயன்படுத்தினால் போதும் - இந்த நம் பிக்கை எனும் பனி உருகி ஓடிவிடுமே! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி.யில் இடஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை


பேராசிரியர் நியமன முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணை நீதியரசர் எஸ். நாகமுத்து அளித்த தீர்ப்பு சமூக நீதிக்கு ஆதரவானது

கலைஞர் கருத்து

சென்னை, ஜூலை 28- சென்னை அய்.அய். டி.யில், இடஒதுக் கீட்டு விதிமுறைகள் சரியாக பின்பற்றப் படாமல் நடைபெற் றுள்ள பேராசிரியர் நியமன முறைகேடு குறித்து சி.பி.அய்., விசாரணை நடத்தப் படும் என்று நீதியரசர் எஸ். நாகமுத்து அவர் கள் சமூகநீதிக்கு ஆதர வாக வழங்கியுள்ள சிறப்பான தீர்ப்பு என்று தி.மு.க. தலைவர் கலை ஞர் கருத்து தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து கலை ஞர் அவர்கள் இன்று (28.7.2013) முரசொலி யில் எழுதியுள்ள கேள்வி - பதில்கள் பகுதியில் கூறியிருப்பதாவது:

கேள்வி :- சென் னையில் அய்.அய்.டி. நிறுவனத்தில் பேரா சிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததா என்பதை சி.பி.அய். விசா ரணை செய்ய வேண்டு மென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் களே?

கலைஞர் :- வர வேற்கப்பட வேண்டிய தீர்ப்புகளில் இது ஒன்றாகும். சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் வசந்தா என் பவர் தான் 1988ஆம் ஆண்டு விரிவுரையாள ராக நியமிக்கப்பட்ட தாகவும், 1995ஆம் ஆண்டு நடைபெற்ற இணைப் பேராசிரியர் பணிக்கான தேர்வின் போதும், 1996ஆம் ஆண்டு நடைபெற்ற பேராசிரியர் பணிக்கான தேர்வின் போதும் தன் னைத் தேர்வு செய்யு மாறு கோரி விண்ணப் பம் செய்ததாகவும், அந்தப் பணிகளுக்கான தகுதியையும், அனுபவத் தையும் தான் பெற்றி ருந்த போதிலும், தன் னைத் தேர்வு செய்ய வில்லை என்றும் தன்னைவிட தகுதிகள் குறைந்தவர்கள் அந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டதாக வும் வழக்குத் தொடுத் துள்ளார். மேலும் இந்தத் தேர்வுகளின் போது இட ஒதுக்கீட்டு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும், அதைப் பின் பற்றியிருந்தால், பிற் படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தான் நிச்சய மாகத் தேர்வாகியி ருப்பேன் என்றும், நிர் ணயிக்கப்பட்ட தகுதி களைத் தேர்வுக் குழு வினர் முறையாகப் பின்பற்றாததால் தனக்கு இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி வாய்ப்புகள் மறுக் கப்பட்டுள்ளன என்றும் தனது மனுவில் குறிப் பிட்டிருக்கிறார். இவரைப் போலவே வேறு சிலரும் வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கினை விசா ரித்த நீதியரசர் திரு. எஸ். நாகமுத்து அவர்கள், 1995ஆம் ஆண்டு முதல் 26-9-2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடை பெற்ற பணி நியமனங் கள் தொடர்பான உண் மைகளை அறிய சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும். இந்தப் பணி நியமனங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது குற்ற வழக்கு களைப் பதிவுசெய்து சட்டப்படி சி.பி.அய். நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் வசந்தா, 27-7-1995 முதல் இணைப் பேராசிரிய ராகவும், 18-12-1996 முதல் பேராசிரியராகவும், அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பளித் திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு ஆதரவாக வழங் கப்பட்ட சிறப்பான தீர்ப்பாகும். தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கிடைத்த மாபெரும் வெற்றியாகத் தான் இந்தத் தீர்ப்பு கருதப்பட வேண்டும்.

கேள்வி :- தமிழ கத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோச மாகிக் கொண்டு வரு கிறதே?

தமிழ் ஓவியா said...


கலைஞர் :- இதி லுமா சரித்திர சாதனை? என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இந்த வாரம் எழுதியுள்ள தலையங்கத்தில் நான் (ஜெயலலிதா) ஆட்சிக்கு வந்த உடனேயே திரு டர்கள் எல்லாம் தமி ழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு ஓடி விட்டார்கள் - தமிழக முதல்வராகப் பொறுப் பேற்ற சமயம் ஜெய லலிதா பூரிப்புடன் இப்படி அறிவித்தார். ஆனால், நாட்டின் நிலவரத்தைப் பார்த் தால், வெளி மாநிலங் களில் இருந்தெல்லாம் கொள்ளை மற்றும் கொலை காரர்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்குத் தொழில் செய்ய வந்து விட்டார்களோ என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்குக் கொலைக் கள மாகி இருக்கிறது தமிழகம்! ரியல் எஸ் டேட் பிரச்சினையால் கொலை, வியாபாரப் போட்டியால் கொலை, ரவுடிகள் இடையே மோதல் காரணமாக கொலை, கொலைக்குப் பழி வாங்கக் கொலை, உள்கட்சி அரசியலால் கொலை என கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 4,000க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியிருக்கின்றன. இதில் ஊடக வெளிச்ச வெள்ளம் பொழிந்த தி.மு.க. வின் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வின் சகோதரர் ராம ஜெயத்தைக் கொலை செய்த குற்றவாளிகள் யார் என்பதைக்கூட காவல் துறையால் இன் னும் கண்டுபிடிக்க முடியாத நிலை! இந்தச் சூழ்நிலையில் சமீபத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சி யின் நான்கு பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அதிலும் கடந்த வாரம் வெட்டிக் கொல்லப் பட்ட அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரமேஷின் கொலை, கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை விதைத்தி ருக்கிறது. சில ஆண்டு களுக்கு முன் இப்படி யான சூழல் காரணமாக பெரிதும் பாதிக்கப் பட்ட கொங்கு மண்ட லத்தை இப்போது மீண் டும் அச்ச மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. தென்னிந்தியாவின் தொழில் தலைநகரத்தில் இப்படி ஒரு பதற்றம் நிலவுவது, ஓராண்டில் நூறாண்டு சாதனை களையும், சரித்திரம் பேசும் ஈராண்டு சாத னைகளையும் படைத்த அரசின் நிர்வாகத் திறனுக்குச் சவால் விடும் நிலவரம் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருந்த போது ஆனந்த விகட னுக்கு திடீரென்று ஏதோ ஞாபகம் வந்துவிட்டது. பயமும் வந்துவிட்டது. தலையங்கத்தைத் தொட ருகிறது..... ரமேஷின் கொலைக்குக் காரண மானவர்களைக் கண்டு பிடிக்க முதல்வர் ஜெய லலிதாவால் சிறப்புப் புல னாய்வுக் குழு அமைக் கப்பட்டுள்ளதைத் தெரி விக்கும் அதே அறிவிப் பில், காவல் துறைக்கு எந்தவிதமான இறுக் கங்களையோ இடர்ப் பாடுகளையோ யாரும் தருவதில்லை. அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும் சுதந்திரம் அவர் களுக்கு வழங்கப்பட்டுள் ளது என்றும் கூறியுள் ளார். முதல்வரின் அந் தக் கூற்று உண்மையே என்பதை, சமீப கொலைச் சம்பவங்களின் சூத்ர தாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தும், இப்படியான கொலை கள் மேலும் நடை பெறாமல் கடிவாளம் இடும் நடைமுறைகள் மட்டுமே நிரூபிக்கும் என்று தலையங்கத்தை ஆனந்தவிகடன் முடித்திருக்கிறது.
ஆனந்தவிகடன் தலையங்கத்தின் தொடக்கத்தில் உண்மை யான நிலைமைகளை எழுதிக் கொண்டு வந்த போது, இப்படியெல் லாம் எழுதினால் எங்கே அவதூறு வழக்கு வந்து விடுமோ என்ற அச்சத் தின் காரணமாக முதல் அமைச்சர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என்பதைப்போல தலை யங்கத்தை முடித்திருக் கிறது.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் அர்ச்சகர் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன? - 9

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற வர்கள், அவற்றை நன்கு அறிந்தவர்கள் தான் பூசை செய்யலாம் என்பது ஆகம விதி. ஆனால், தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களில் பெரும்பாலா னோர் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்லர். பெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் சாதாரணமாக பக்தர்கள் வேண்டுகோள்களுக்கேற்ப செய்யப்படும் அர்ச்சனை செய்யத் தேவையான 108 நாமாவளிகள் மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். மிகப் பெரிய கோயில்களில்கூட, ஒருசில அர்ச்சகர்கள் மட்டுமே ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆகமம் பற்றிய முழுமையான அறிவு பெற்றுள்ளனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயில், வடபழநி முருகன் கோயில், திருவண்ணா மலை அருணாசலேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற பெரிய கோயில் களில்கூட, பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத்துப் பூசை முறை களையும் கற்றுத் தேர்ந்தவர்கள். கபாலீசு வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதி கள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு அஷ்டோத்திரம், குறிப்பான சில மந்திரங் கள், நாமாவளிகள், மட்டுமே தெரியும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள். அவர்களுடைய தந்தையார் செய்யும் பூசை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனு பவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்த வர்கள் என்று சொல்ல இயலாது.

பெரும்பாலான மற்றக் கோயில்களிலும் இதே நிலைதான். கோயில்களில் பூசாரியாகப் பணிபுரியும் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளுக்கு வழி வழியாக நடைமுறைகளைத்தான் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்கள். சுமார் 30,40 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆகமங் களை பயிற்றுவிப்பதற்கான முறையான பயிற்சி நிலையங்கள் எதுவும் இல்லை.

வடபழநி முருகன் கோயிலில் குமார தந்திரமும், காமிக ஆகமமும் பின்பற்றப் படுகின்றன. முறைப்படி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களுக்கு உதவியாக உள்ளவர்கள் அவர் களின் உறவினர்கள் என்பதால், அவர்களுடன் பணியாற்றுவதால், உடனிருப்பதிலிருந்து அறிந்து கொண்ட அஷ்டோத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள். இருப்பினும், அவர்கள் அனைவரும் பூசை செய்கின்றனர். அத்துடன் பக்தர்கள் அதிகம் வருகின்ற காரணத்தால், அர்ச்சகர்களின் தேவை அதிகமாக உள்ளதால், அர்ச்சகர்களாக நிய மிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய உறவினர் பலரை அழைத்து வந்து அர்ச்சகராகப் பணியாற்ற வைத்துள் ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.2/- கோயிலுக்குச் செலுத்திவிட்டு கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்து வருகிறார்கள். இவ்வாறு ரூ.2/- கட்டணம் செலுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று அர்ச்சனை செய்பவர்கள் அஷ்டோத்திரம் மட்டும் செய்பவர்கள். அவர்கள் தீட்சை பெற்றுள்ளார்களா என்பதே ஐயத் திற்குட்பட்டதாக உள்ளது. அவர்கள் ஆகம விதிகள் தெரிந்தவர்கள் அல்ல. அவ்வாறானவர்களே அக்கோயிலில் பூசை செய்து வருகிறார்கள். அதா வது பணி நியமனம் செய்யப்பட்ட ஒருவரின் உறவினர் என்ற ஒரே தகுதியில், ஆகமம் தெரியும் என்று அவர்களே கொடுத்த வாக்குமூலத் தின் அடிப்படையில், பணிபுரி கிறார்கள். இத்தகைய தற்காலிக அர்ச்சகர்கள்கூட கோயிலுக்கு உள்ளே சென்று பூசை செய்கிறார் கள். பல வைணவக் கோயில்களிலும் அர்ச்சகர்கள் இதே நிலையில்தான் உள்ளார்கள். ஆகமம் கற்றறியாத வர்கள், செய்முறை மற்றும் நாமா வளிகள் மட்டுமே தெரிந்தவர்கள் தான் பூசை செய்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நடைபெறும் பூசைகள் அனைத்தும் ஆகம முறைப்படியான பூசைகள் அல்ல. தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப பூசை முறைகள் மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான அர்ச்சகர்கள் ஆகமக் கல்விப் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். சில பெரிய கோயில்களைத் தவிர மற்ற கோயில்களில், திருவிழாக் காலங்கள் போன்ற சமயங்களில் மட்டுமே ஆகமங்கள் பின்பற்றப்படு கின்றன. பெரும்பாலான கோயில் களில் அவ்வாறுகூட நடைபெறுவது இல்லை. சில நடுத்தரக் கோயில் களில் திருவிழாக் காலங்களில் மட்டுமே ஓரளவுக்கு ஆகமப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

-நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன்
(நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்)

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் அர்ச்சகர் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன? - 9

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற வர்கள், அவற்றை நன்கு அறிந்தவர்கள் தான் பூசை செய்யலாம் என்பது ஆகம விதி. ஆனால், தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களில் பெரும்பாலா னோர் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்லர். பெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் சாதாரணமாக பக்தர்கள் வேண்டுகோள்களுக்கேற்ப செய்யப்படும் அர்ச்சனை செய்யத் தேவையான 108 நாமாவளிகள் மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். மிகப் பெரிய கோயில்களில்கூட, ஒருசில அர்ச்சகர்கள் மட்டுமே ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆகமம் பற்றிய முழுமையான அறிவு பெற்றுள்ளனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயில், வடபழநி முருகன் கோயில், திருவண்ணா மலை அருணாசலேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற பெரிய கோயில் களில்கூட, பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத்துப் பூசை முறை களையும் கற்றுத் தேர்ந்தவர்கள். கபாலீசு வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதி கள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு அஷ்டோத்திரம், குறிப்பான சில மந்திரங் கள், நாமாவளிகள், மட்டுமே தெரியும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள். அவர்களுடைய தந்தையார் செய்யும் பூசை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனு பவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்த வர்கள் என்று சொல்ல இயலாது.

பெரும்பாலான மற்றக் கோயில்களிலும் இதே நிலைதான். கோயில்களில் பூசாரியாகப் பணிபுரியும் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளுக்கு வழி வழியாக நடைமுறைகளைத்தான் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்கள். சுமார் 30,40 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆகமங் களை பயிற்றுவிப்பதற்கான முறையான பயிற்சி நிலையங்கள் எதுவும் இல்லை.

வடபழநி முருகன் கோயிலில் குமார தந்திரமும், காமிக ஆகமமும் பின்பற்றப் படுகின்றன. முறைப்படி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களுக்கு உதவியாக உள்ளவர்கள் அவர் களின் உறவினர்கள் என்பதால், அவர்களுடன் பணியாற்றுவதால், உடனிருப்பதிலிருந்து அறிந்து கொண்ட அஷ்டோத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள். இருப்பினும், அவர்கள் அனைவரும் பூசை செய்கின்றனர். அத்துடன் பக்தர்கள் அதிகம் வருகின்ற காரணத்தால், அர்ச்சகர்களின் தேவை அதிகமாக உள்ளதால், அர்ச்சகர்களாக நிய மிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய உறவினர் பலரை அழைத்து வந்து அர்ச்சகராகப் பணியாற்ற வைத்துள் ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.2/- கோயிலுக்குச் செலுத்திவிட்டு கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்து வருகிறார்கள். இவ்வாறு ரூ.2/- கட்டணம் செலுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று அர்ச்சனை செய்பவர்கள் அஷ்டோத்திரம் மட்டும் செய்பவர்கள். அவர்கள் தீட்சை பெற்றுள்ளார்களா என்பதே ஐயத் திற்குட்பட்டதாக உள்ளது. அவர்கள் ஆகம விதிகள் தெரிந்தவர்கள் அல்ல. அவ்வாறானவர்களே அக்கோயிலில் பூசை செய்து வருகிறார்கள். அதா வது பணி நியமனம் செய்யப்பட்ட ஒருவரின் உறவினர் என்ற ஒரே தகுதியில், ஆகமம் தெரியும் என்று அவர்களே கொடுத்த வாக்குமூலத் தின் அடிப்படையில், பணிபுரி கிறார்கள். இத்தகைய தற்காலிக அர்ச்சகர்கள்கூட கோயிலுக்கு உள்ளே சென்று பூசை செய்கிறார் கள். பல வைணவக் கோயில்களிலும் அர்ச்சகர்கள் இதே நிலையில்தான் உள்ளார்கள். ஆகமம் கற்றறியாத வர்கள், செய்முறை மற்றும் நாமா வளிகள் மட்டுமே தெரிந்தவர்கள் தான் பூசை செய்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நடைபெறும் பூசைகள் அனைத்தும் ஆகம முறைப்படியான பூசைகள் அல்ல. தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப பூசை முறைகள் மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான அர்ச்சகர்கள் ஆகமக் கல்விப் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். சில பெரிய கோயில்களைத் தவிர மற்ற கோயில்களில், திருவிழாக் காலங்கள் போன்ற சமயங்களில் மட்டுமே ஆகமங்கள் பின்பற்றப்படு கின்றன. பெரும்பாலான கோயில் களில் அவ்வாறுகூட நடைபெறுவது இல்லை. சில நடுத்தரக் கோயில் களில் திருவிழாக் காலங்களில் மட்டுமே ஓரளவுக்கு ஆகமப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

-நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன்
(நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பங்கேற்கும் சுப. வீரபாண்டியன் அறிவிப்பு



சென்னை, ஜூலை 28- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரி மையைக் கோரி வரும் ஆகஸ்ட் முதல் நாள் (01.08.2013) திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இன்று (28.07.2013) விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

ஏற்றத் தாழ்வுகள் அற்ற, சமத்துவச் சமுதாயம் நோக்கிய பயணத்திற்கு இவ்வறப் போராட்டம் மிகப் பெரும் தேவை யாக உள்ளது. எனவே இந்த ஆர்ப்பாட்டத் தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

ஆகமங்கள் மாற்றமடைந்தது கிடையாதா? - 10


ஆகமங்கள் என்றால் மாற்றப்பட முடியாது வாழையடி வாழையாக வந்தவை. அவைபடிதான் கோயில் பூஜை நடைமுறைகள் இருந்து வருவதாக சாதிக்கப் பார்க்கிறார்களே! அதை உயர்நீதிமன்றத்திலும் முறையிடுகிறார்களே - அதாவது உண்மையா? இல்லை என்று ஆதாரத்துடன் மறுத்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் அவர்கள்.


ஆகமங்களில் குறிப்பிடப்பட் டுள்ள நடைமுறைகளையும், கோயில் களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ் நாட்டிலும் ஆகம விதிகள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வந்துள்ளன என்பதை அறிய முடியும். பெரும்பாலான மற்றும் மிகவும் முக்கியமான விதிகளும்கூட மாற்றப்பட்டுள்ளன.

நீதியரசர் மகாராஜன் அறிக் கையில், திருக்கோயில்களில் ஆக மங்கள் எவ்வாறெல்லாம் மாற்றப் பட்டுள்ளன என்பதை விரிவாகக் கூறியுள்ளார்.

1) உடல் குறைபாடு (ஊனம்) உடையவர்களும், திருமணமாகாத வர்களும், மனைவியை இழந்தவர் களும் பூசை செய்வது ஆகமத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பல கோயில்களில் ஊனமுற்றவர்களும், திருமணம் ஆகாதவர்களும், மனைவியை இழந்தவர்களும் பூசை செய்வதைக் காண இயலும். சிதம் பரம் போன்ற பல கோயில்களில் பூசை செய்யும் தீட்சிதர்களுக்கு இள வயதில் திருமணம் செய்விக்கப் படுவது அதனால்தான். மனைவியை இழந்தவர் மீண்டும் விரைவில் திருமணம் செய்து கொண்ட வழக்க மும்கூட அதனால் ஏற்பட்டிருக்க லாம். சைவ, வைணவ மதங்களில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே சில வழிபாடுகளைச் செய்ய இயலும். ஒருவர் தனியே செய்ய இயலாது. திருப்பதி கோயிலில் திருக்கல்யாணம் மற்றும் சில பூஜைகளைச் செய்விப்பவர்கள் கணவன், மனைவி இருவரும் தம்பதி களாகச் சென்றே செய்விக்க இயலும். கணவனோ, மனைவியோ தனித்துச் செய்ய இயலாது; என்பதும் அதனால்தான்.

2) ஒரு தெய்வத்திற்குரிய மந் திரத்தை மற்றொரு தெய்வத்திற்குச் சொல்வது. ஒவ்வொரு தெய் வத்தைத் தொடும்போதும், வழிபடும் போதும் அந்தந்த தெய்வங் களுக்கென உள்ள சுலோகங்கள் மற்றும் நாமாவளிகள் சொல்லப்பட வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால், நடைமுறையில் மாற்றிச் சொல்லப்படுவதைக் காண இயலும். (ஈமச் சடங்குகளின்போது சொல் லப்பட வேண்டிய மந்திரங்கள், திருமணச் சடங்கின்போது சொல் லப்பட்டது போன்ற நிகழ்ச்சிகள்கூட பல உண்டு);

3) நடராஜர், தட்சிணாமூர்த்தி போன்ற தெய்வங்களுக்கென தனித் தனியாக மந்திரங்கள் இருந்தும்கூட, எல்லா வகையான தெய்வங்களுக் கும் பொதுவாக ஒரே வகையான மந்திரங்களைச் சொல்வது, விநாயகருக்குச் சொல்லப்படும் சுக்லாம் பரதரம் எனத் தொடங் கும் சுலோகத்தினை மற்ற தெய்வங் களுக்கும், கிரகங்களுக்கும் கூடச் சொல்வதைக் காண முடியும். அவ்வாறு சொல்லப்படுவதற்கு, பக்தர்களுக்கு மக்களுக்கு இந்த வித்தியாசம் எல்லாம் தெரியாது என்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

தமிழ் ஓவியா said...


4) ஆகம முறைப்படி பிரதிஷ்டை முதலான கிரியைகள் நடந்த இடங் களில் போதாயன சூத்திரம், அபஸ் தம்ப சூத்திரம் ஆகியவைகளைக் கொண்டு ஆகம விதிகளுக்கு மாறாக ஸ்மார்த்த பிராமணர்கள் வைதீகப் பூசைகள் செய்வது

5) ஐந்து பிரிவான சிவாச்சாரி யார்களுள், பாசகர் (பரிசாரகர்) என்ற பிரிவுக்குரிய சிவாச்சாரியார் நிவேதனம் தயாரிக்காமல், மடப் பள்ளியில், தீட்சைகூட இல்லாத (பெறாத) ஸ்மார்த்தப் பிராமணர்கள் பரிசாரகர் என்ற பெயரில் அன்னம் சமைத்து வந்து நிவேதனமாகத் தருவது

6) கோயிலுக்கென்று மடப் பள்ளி இருந்தும், தம் வீட்டிலேயே சமைத்துக் கொண்டு வந்து நிவேதனம் செய்வது பெரும்பாலான கோயில்களில் இதுதான் நடை முறையில் உள்ளது என்பது அனை வரும் அறிந்ததே.

7) ஆகம விதிகளில் முக்கிய மானதான, ஒரு கோயிலில் பிரதிஷ்டை முதல் கும்பாபிஷேகம், நித்திய பூசை நைமித்திகம் வரையில் எந்த ஆகமப்படி செய்யப்பட்டதோ, அதே ஆகமப்படி தொடர்ந்து நடை பெறாமல், வேறு ஆகமப்படி பூசை செய்வது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், வைகானச சம்ஹிதைப்படி (ஆகமவிதிப்படி) கட்டப்பட்டது. ஆனால் பாஞ்சராத்ர சம்ஹிதையில் (ஆகமத்தில்) பூசை செய்யப்படுவது. இது போன்று பல வைணவக் கோயில்களில் மாற்றப்பட்டுள்ளது. சைவக் கோயில்கள் பல காரண ஆகமப்படி கட்டப்பட்டிருந்தாலும், காமிக (அல்லது காமிய) ஆகம முறைப்படிதான் பூசை நடை பெறுகிறது.

8) பூசை செய்யும் கோயிலின் நடைமுறைகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஒரு பூசகருக்கு என்ன தெரியுமோ அதைக் கொண்டு பூசை செய்வது. பல கோயில்களில் அனைத்துவித சம்பிரதாயங்களுக் குமே 108 நாமாவளிகள் மட்டுமே சொல்லப்படுவதைக் கண்கூடாகக் காணலாம். அதற்குக் காரணம் பல பெரிய கோயில்களிலேகூட அனைத்து விவரமும் அறிந்தவர்கள் அரிதா கவே உள்ளனர். இதிலுள்ள வித்தி யாசம் ஏதும் பெரும்பாலான பக்தர்களுக்குத் தெரியாது.

9) வேதத்தில் அக்கினி காரி யமே தவிர மூர்த்தி பூசை இல்லை. என்றாலும் ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் வைதீக முறைப்படி பூசை செய்வது, குறிப்பாக தில்லையில் மகுடாகமப்படி பூசை செய்யாமல் வைதீக முறையான பதஞ்சலி பத்ததி முறையில் பூசை செய்வது. வேதங்களில் உருவ வழிபாடு இல்லை. ஹோமத் தீ வளர்த்து அக்கினி மூலமாகவே சூரியன், இந்திரன், வாயுதேவன் முதலான பல தெய்வங்களுக்கும் நிவேதனம் ஆஹூதி (ஹோமத் தீ மூலம் சமர்ப்பித்தல்) செய்யப்பட வேண்டும். விக்ரஹத்திற்கு, மூர்த் திக்கு நிவேதனம் படைத்தல் வேதமுறை அல்ல. அது ஆகம வழி பாடாகும்.

-நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன்
(நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள் - பக்.39-41)

தமிழ் ஓவியா said...

2041ஆம் ஆண்டில் மதம் முற்றிலும் மறைந்து போகும் புகழ் பெற்ற அறிவியலறிஞர் நைஜெல் பார்பர் ஆராய்ச்சி முடிவு!


வளர்ந்த நாடுகளில் நாத்திகம் நிலை பெற்று வருகிறது -

2041ஆம் ஆண்டில் மதம் முற்றிலும் மறைந்து போகும்

புகழ் பெற்ற அறிவியலறிஞர் நைஜெல் பார்பர் ஆராய்ச்சி முடிவு!

பிரபல நூலாசிரி யரும் புகழ்பெற்ற உடலியல், மனவியல் வல்லுநர் நைஜெல் பார்பர் அண்மையில் எழுதிய ஆய்வு நூலில் நாத்திகத்தின் வளர்ச்சி குறித்து, மதத்தின் வீழ்ச்சி குறித்தும் விவர மாக எழுதியுள்ளார் விவரம் வருமாறு:

நைஜெல் பார்பர் என்பவர் ஒரு நூலாசிரிய ராக இருப்பதுடன் மட்டுமில்லாமல், புகழ் பெற்ற, உடலியல், மன வியல் வல்லுநரும்கூட. அவர் மேற்கொண்ட அண்மையிலான ஆராய்ச்சி முடிவுகளின் படி வளர்ந்த நாடுகளில் நாத்திகம், அதிகமாக நிலை பெற்று இருப்ப தாகவும், அவருடைய கணிப்பின்படி, 2041 அள வில் மதம் முற்றிலுமாக மறைந்து விடும். அண் மையில் வெளிவரவுள்ள அவரது புத்தகம், ஏன் நாத்திகம் மதத்தின் இடத்தை நிரப்பும் (Why Atheism will Replace Religion?”) அவரது ஆய்வு முடிவுகள் அலசி உள் ளது. அவரது முந்தைய ஆய்வுகளை விளக்கும் முறையில் உள்ள புதிய ஆய்வு ஆகஸ்ட் மாதத் தில் வெளியிடப்பட உள்ளது. அவரது ஆய்வு முடிவுகள் உலகத்தில் உள்ள நாடுகளின் எண்ணப் போக்குகளை மய்யப்படுத்தி, நாத்தி கர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடு களில் அதிகமாகக் குழுமி இருப்பதான உண்மையை உணர்த் துகிறது.

137 நாடுகளில்

நான் ஆராய்ந்த 137 நாடுகளில், நன்கு வளர்ச்சி பெற்ற, பொது மக்களின் தரம் உயர்ந்த நாடுகளின் (அதிக வரி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நாடு கள்) மற்றும் வருமா னத்தை அதிக அளவில் சமத்துவமாகப் பரவ லாக்கி உள்ள நாடுகள் அதிக நாத்திகர்களைக் கொண்டுள்ளன. எனது முந்தைய ஆய்வைவிட மேம்பட்ட முறையில், ஒரு நாடு பெரும்பாலும் முஸ்லிம்களைக் கொண்டதால் (அங்கு நாத்திகம் குற்றமாகும்) அல்லது, முன்பு கம் யூனிச நாடாக இருந்த தால் (அங்கு மதம் அடக்கப்பட்டு இருந் தது) என்பதுடன், முக் கால்வாசி மக்கள் நாத்திகத்தில் வேறுபாடு கொண்டவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது

மத உணர்ச்சி குறைந்து வருகிறது

அவரது முக்கிய கட் டுரைக் கரு, தனிப்பட் டவர் செல்வம் வளரும் போது, மத உணர்ச்சி குறைந்து விடுகிறது என்பதே. மனிதர்களின் தேவைகளுக்கு உரிய வற்றை உலகம் அளிக் கும் போது, இயற்கைக்கு மீறிய நம்பிக்கைகள் குறைந்துவிடும் என்ற உண்மையை அவர் சுட்டிக் காட்டுகிறார். 2041இல் உலகின் பெரும் பான்மையினர் மதம் முற்றிலுமாக தேவை யற்ற ஒன்றாகக் கருது வார்கள் என்று அவர் சொல்லுகிறார்.
ஆனால் அரசியல் அறிவியலாளர் எரிக் காஃப்மேன் (Erickauf Man) இதற்கு எதிர் மாறான கருத்து கொண்டுள்ளார்.

மத நம்பிக்கையுடையவர்களை விட நாத்திகர்கள் குறைந்த அளவில் குழந் தைகளைப் பெற்றுள் ளனர். இது மதத்தின் அடிப்படையிலான மன அமைப்பின் விளை வாகும். அதனால் மத நம்பிக்கை உள்ளவர்கள் அதிகமாகப் பெற்றுத் தள்ளுகின்றனர். அதன் காரணம் என்ன? புவியைத் தன் முன் னோர் சொத்தாக மதம் வரித்துக் கொள்ளுமா? என்ற கட்டுரையில் தாமஸ் ரீஸ் என்ற பயோடெக்னாலஜிஸ்ட் கேள்வி எழுப்புகிறார். அரசியல் அறிவி யலாளர் காஃப் மேன் ஆய்வுகளை அலசி, அவர் குழந்தை பெற்றுக் கொள்வது முழுவது மாக அவர்களிடையே யுள்ள குழந்தை பெறும் வளமையையும், குழந்தை பெறும் விகி தாச்சாரத்தையும் பொது வானதாக அமையும் என்று கூறுகிறார்.

உடல் மனவியலாளர் பார்வரோ குழந்தை பெறும் கருத்தைப் புறந் தள்ளுகிறார். அவர் அவ்விதமான குழுக்கள் மிகச்சிறிய சிறுபான் மையினர் உலகின் வளமை வளரும்போது வாழ்க்கைத் தரம் உயர்ந்து அவர்கள் இன்னும் சிறுபான்மை யினராகிப் புறந்தள்ளப் படுவார்கள் என்று கூறி உள்ளார்.

தமிழ் ஓவியா said...

சிறு குடும்பத்தைத்தான் விரும்புவர்

அவர் பெண்கள் வேலை செய்யும் நிலையில் மேலும் தங்களை ஒன்று படுத்திக்கொள்ளும் போது அவர்கள் அடிப் படை மதக்குழுவைச் சேர்ந்திருந்தாலும் குறைந்த அளவு குழந் தைகளையே பெறுவர், மேலும் பொருளா தாரத்தில் இளம் பெண்கள் தங்களை இணைத்துக்கொள்ளும் போது அவர்கள் சிறு குடும்பத்தைத் தான் விரும்புவார்கள்.

சமீபத்திய மற்ற ஆய்வுகளின் படியும், நாத்திகத்திற்கு ஒருவளர்ச்சி ஏற்பட்டிருப்பதும், தற்பொழுதுள்ள அமெரிக்கர்களில் 20 விழுக்காடு கடவுள் பற்றிய எண்ணங்கள் இல்லாதவர் களாகவும் அல்லது நாத்திகராக வோ, மதத்துடன் தொடர்பு இல்லாதவராகவோ உள்ளனர்

அமெரிக்காவில் நாத்திகம்

அமெரிக்காவில் நாத்திகம் அல்லது, எதோடும் தொடர்பில்லாத மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலக அளவிலும் கூட இந்த எண்ணிக்கை பீறிட்டு வருகிறது.

2010-இல் பிரிட்டனின் டெய்லி மெயில் என்ற பத்திரிக்கை நடத்திய ஆய்வில், மதத்துடன் தொடர் பில்லாத மக்கள் மூன்றாவது பெரிய இடத்தில் உள்ளனர். முதல் இரண்டு இடம் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும்.

நாத்திகர்களே அதிகம்!

அதன்படி இந்துக்கள், புத்த மதத்தினர், யூதர்கள் ஆகிய மதக் குழுக்களைவிட எதிலும் சேராத மத நம்பிக்கை யற்றவர்கள் எண்ணிக்கை அதிகம்!

தமிழ் ஓவியா said...


முடியாது


உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் வியூகம்!


இந்துத்துவா வெறி அமைப்பான பிஜேபி நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களில் வேகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த இரு முறை தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர்ந்து இருந்து வந்திருப்பதாலும் எதிர்ப்புணர்ச்சி (Anti Incumbency) தங்களுக்கு சாதகமாக அமையும்; விலைவாசி உயர்வு போன்ற வையும் கை கொடுக்கும் என்ற எண்ணத்தில் கோயபல்ஸ் பாணியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டுவார்கள் - கொட்டவும் ஆரம்பித்து விட்டனர்.

நரேந்திர மோடி முதல் அமைச்சராகவிருக்கும் குஜராத் மாநிலம்தான் இந்தியாவிலேயே வளம் கொழிக்கும் மாநிலம், பாலாறும், தேனாறும் பெருகி ஓடுகிறது என்று பிரச்சாரம் செய்யப்படவில்லையா?

பொருளாதார மேதை அமர்த்தியாசென் போன்றவர்கள் அதன் பொய்த் திரையைக் கிழித்துக் காட்டி விட்டார்களே! கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலம்தான் குஜராத் என்பதைப் புள்ளி விவரங் களே போதுமான அளவிற்குத் தெரிவிக்கின்றனவே.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் குழந்தைகள் நலன் என்பது முக்கிய அளவீடாகக் கருதப்படும். இதில் இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று சொல்லப்படுகிறது. இதனை எல்லாம் மறைத்துவிட்டு குஜராத்துதான் இந்தியாவின் முன் மாதிரியான மாநிலம் என்று பலூனுக்குக் காற்றடித்து ஆகாயத் தில் பறக்க விடுவது போல பம்மாத்து வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதவாத சக்தி ஆட்சிக்கு வரக் கூடாது என்பதிலே அக்கறை உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் இவற் றையெல்லாம் அம்பலப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

இன்னொரு அதி முக்கிய கடமை இந்தியா முழுமையும் உள்ள வாக்காளர்களுக்கு இருக்கிறது. அதுதான் இந்திய அரசமைப்புச் சட்டப் பீடிகை உத்தரவாதப்படுத்தியுள்ள மதச் சார்பின்மை என்பதாகும்.

இந்த மதச் சார்பின்மையை முற்றிலும் அழித்து, அதன்மீது இந்துத்துவா என்னும் மதவெறி நாடாக மாற்றி, மனுதர்மக் கொடியைப் பறக்கவிடத் துடித்துக் கொண்டிருக்கும் பிஜேபியை - நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மண்ணும் மண்ணடி வேருமின்றித் தூக்கி எறிய வேண்டாமா?
அறிவியல் நுணுக்களைப் பயன்படுத்தி, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல யுக்திகளைக் கையாள இருக்கிறார்கள். அதற்காகப் பெருந் தொகை செலவு செய்து பிரச்சார வெள்ளத்தைப் பெருக்கெடுக்கச் செய்து, மக்களை மயக்கி விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர் - பிஜேபி.யினர்.

உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை என்று சொல்லுவார்கள். அதில் அதிக நம்பிக்கை கொண்ட பிற்போக்குச் சக்திகளைத் தூக்கி வீசிட ஒவ்வொரு வாக்காளரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் (25.7.2013) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளார்.

பிஜேபி - அதன் ஆணி வேர், சல்லி வேர் - பக்க வேர்களான சங்பரிவார்கள் இந்தியாவில் இதுவரை நடத்தி வந்திருக்கும் மதக் கலவரங்கள், வன் முறைகள் அமைதிச் சீர்குலைவுகளைப் பட்டியல் போட்டு, வீதி வீதியாக தெருமுனைக் கூட்டங்கள் போட்டு அம்பலப்படுத்தியாக வேண்டும். இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல.

மதச் சார்பற்ற தன்மையில் அனைத்து மத நம்பிக்கையாளர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் அவரவர்களுக்குள்ள உரிமைகளோடும், வாழ்க்கை உத்தரவாதத்தோடும் அமைதித் தென்றல் வீசும் நாடாக அமைய அனுமதிக்கப் போகிறோமா அல்லது இந்தியாவை குஜராத்போல மதவாதப் பூமியாக்கி அன்றாடம் மனித ரத்தத்தை ஓட விடப் போகிறோமா என்பதுதான் இன்று இந்திய மக்கள் ஒவ்வொரு வரின் முன்பும் எழுந்து நிற்கும் மிக முக்கியமான வினாவாகும்.

மக்களை ஏமாற்ற ஏராளமான திட்டங்களைக் கையில் வைத்துள்ள ஒரு சக்தியை முறியடிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள் ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மதச் சார்பின்மைச் சக்திகள் பிளவுபட்டு, வேண்டாத சக்திக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்து விடக் கூடாது.

தமிழ் ஓவியா said...


ஓதியும் ஓதார் - இருந்தும் வறியார் - புரிந்து கொள்வோம்


பகுத்தறிவுப் புலவர் டாக்டர் மா. நன்னன் அவர்களது நன்னன்குடி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும், மறைந்த அவர்தம் மகன் ந.அண்ணல் நினைவையொட்டி ஜூலை 30-இல் நடைபெறும் நிகழ்வில் நன்னன் அவர்கள் எழுதிய புதிய நூல்கள் வெளியீடும், சொற்பொழிவு களும், நல்ல இலக்கியப் படைப்பாளி களுக்குப் பரிசுகளும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோரைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதும் போன்ற ஆக்கச் செயல்கள் பலவும் நடத்தப் பெறு கின்றன.

இவ்வாண்டு (நாளை) நடைபெற விருக்கும் புதிய (அவரது) நூல் வெளியீடுகளில் ஒன்றான நாலடியார் மூலமும், பொழிப்பு விளக்க உரை களும் என்ற நூல் நேற்றுப் படித்தேன்; சுவைத்தேன். தெவிட்டவில்லை.

திருக்குறளுக்கு அடுத்தபடி, நல்ல அறநூல் நாலடியார் ஆகும்.

சமணப் புலவர்கள் பலரது பாடல்கள் - ஒழுக்க நெறிகளை மிகவும் ஆழமாகச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்கள்போல உள்ளன. நாலும் தெரிந்தவர் என்ற சொல்லுக்கு என்ன சரியான பொருளோ நாம் அறியோம்; ஆனால் நாலடியார் செய்யுள்களை அறிந்தால் பொது அறிவும், வாழ்வி யலில் அறிந்து கொள்ள வேண்டி யவைகளை அறிந்தும், புரிந்து கொள்ள வேண்டியவைகளையும் புரிந்தும் வாழ் வில் வெற்றி பெறலாம். அறிவின்மை என்ற ஒரு தலைப்பில் உள்ள பாடல்களில் ஒன்று இதோ: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல!

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார் - தூயதாக
நல்கூர்ந்துச் செல்வர் இரவாதார் செல்வரும் நல்கூர்ந்தர் ஈயா ரெனின்.

இதன் பொருள்: அறிவிலிகள் கற்றி ருந்தாலும் கல்லாரே; அறிஞர்களோ கற்காதவராயினும் கற்றாரேயாவர். முழுமையாக வறுமையுறினும் இரந்து கைநீட்டாதார் செல்வர்களே; செல்வர் களும் தக்கார்க்கொன்று ஈயாராயினும் வறியோரே.

வாழ்க்கையில் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அடிப்படைப் பாடம் இது.

ஏராளமாக (மெத்தப்) படித்தவர் இவர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினால் உடனே அவர் மரியாதைக்குரியவ ராகிவிட மாட்டார்; காரணம் படிப்பு வேறு; அறிவு வேறு; படித்து முடித்த காரணத் தாலேயே அவர்கள் அறிவாளிகள் ஆகிவிட மாட்டார்கள். அனுபவம், பொது அறிவு, பண்பாடு, பிறரைப் புரிந்து கொள் ளுதலில் தடுமாற்றம், தம்மைவிட குறைந்தவராயின் எதில் இருந்தாலும் - அதற்காக அவர் களை அலட்சியப் பார்வையுடன் பார்ப்பது என்பதன் மூலம், இவரின் அறிவுதான் கேள்விக்குறியாகி விடுகிறது!

தந்தை பெரியார் படித்த பாமரர்கள் அல்லது படித்த தற்குறிகள் என்ற மிகப் பொருத்தமான சொற்றொடர்களைக் கையாளுவார்; இத்தகைய கற்றறி மூடர்களைக் கண்டு; நுண்ணறிவு வேறு; நூலறிவு வேறு; வேண்டுமானால் நுண் ணறிவினை மேலும் கூர்மையாக்கிக் கொள்ள நூலறிவு பற்பல நேரங்களில் பயன்படுமே தவிர, எல்லா நிலை களுக்கும் பொருந்திவராது!

ஓதியும் ஓதார்! என்னே அருமை யான சொற்றொடர்!

இருந்தும் இல்லாதவர் இரண்டு வகையினரும் மிகவும் முக்கியம்.

செல்வத்தின் சிறப்பே பயன் பாட்டைப் பொறுத்ததுதான். புதைந்து கிடக்கும் புதையலால் யாருக்கும் பயன் எப்படி கிடைக்காதோ அதுபோல செல்வம், தேவைப்படுவோருக்கு பயன் படாது இருப்பின் அதைவிட அதைக் கொடுத்து மிகுந்த மனநிறைவை மகிழ்ச்சியைப் பெறாமல் கேடு கெட்ட மானிடராக, வறியார்க்கொன்று ஈயாத வராக வாழ்ந்தவரால் அவருக்கும் பயன் இல்லை; பிறருக்கும் பயன் இல்லை.

அதை எவ்வளவு அழகாக உண்மையாக எவர் வறுமையாளர் என்பதை நாலடியார் விளக்குகிறது?

எவருக்கும் ஈயாது; ஈய்ந்து மகிழ்ச் சியைப் பெற்று உற்சாகமாக வாழத் தெரியாதவர்களுக்கு, எத்தனை கோடிகள் இருந்தும் என்ன பயன்?
அவரை யார் அறிவர்? யார் மதிப்பர்?

தமது செல்வம் முழுவதையும், மக் களுக்கே சேரும்படிச் செய்த தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியாருக்குள்ள பெருமை - அவர்தம் சுயநலம் இல்லாப் பொது நலத்தோடு எல்லாவற்றையும் பொது மக்களுக்குத் தந்துள்ளார்.

தொண்டறத்தால் சிறந்தோங்கி நிற்கும் கல்வி வள்ளல் காமராசரை, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை படிக்காதவர்கள் என்றார்களே,

அவ்விருத் தலைவர்களின் அறிவும், மதி நுட்பமும் எளிதானதல்லவே!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


ஆகமங்கள் மாற்றமடைந்தது கிடையாதா?


பூஜை முறையை பரம்பரை பரம் பரையாக எங்கள் முன்னோர்களிட மிருந்து கற்று வருகிறோம். ஆகம முறைப்படி கோயில் பூஜையை செய்வதற்கு எங்கள் ஜாதிக்கு மட்டுமே உரிமையுண்டு - என்று சொல்ல எந்த சிவாச்சாரியருக்கும் அருகதை இல்லை, என்றே சொல்ல லாம். தில்லை நடராஜரையும் ஸ்ரீரங்க நாதரையும் பூஜை செய்வதற்கு எங்களுக்கும், எங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உரிமை யுண்டு என்று சொல்ல எவருக்குமே அருகதை இல்லை.

காரணம், பூஜை என்பது ஒரு புனிதமான தொழில் என்று காலம் காலமாக ஏமாற்றி வந்த காலம் என்றோ மலையேறி விட்டது. இப் பொழுது இது ஒரு பக்கா பிசினஸ் என்று எல்லோருக்குமே தெரிய ஆரம்பித்து விட்டது.

ஆம்.

இன்று நம் கண் முன்னே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் முதல், ஒழுக்கம் கெட்டவர்கள் வரை கடவுளாகி விட்டார்கள். உனக்கு மார்க்கெட் செய்யத் தெரியுமா? நீ யாரை வேண்டுமானாலும் கடவு ளாக்கி, உன் செலவில் கோவில் கட்டு. நான் குண்டத்துல உக்காந்து நெய்ய ஊத்தி கும்பாபிஷேகம் செய்யறேன் என்ற தவறான முன் னுதாரண நிலைக்கு வந்துவிட்டார் கள் சிவாச்சாரியர்கள். மேலும் நீ எங்க வேண்டுமானாலும் கோயில் கட்டு - எனக்கு தேவை துட்டு என்ற வியாபார நிலைக்கும் வந்து விட்டார்கள் சிவாச்சாரியர்கள்.

இல்லையென்றால் - ஆகமத் திற்கு புறம்பாக அதிக அளவில் அதாவது 77,450 கோயில்களை பொது மக்களுக்கு இடையூறாக, பொது இடங்கள் மற்றும் நடை பாதையில் கோயில் கட்டுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சாதனை படைக்குமா?

இதற்கு மூலகாரணம் யார்? சிவாச்சாரியார்கள்தானே!

அது மட்டுமா?

ஒரு சில திரைப்படங்களுக்கு ஞயசவ - ஐஐ வெளிவருவது போல - புராணங்களை தூசித்தட்டி, அதில் ஒரு கடவுளை தேர்வு செய்து, சிறந்த முறையில் திரைக்கதை வசனம் எழுதி ஞயசவ - ஐஐ உருவாக்கினாலும் - அதற்கும் - நாங்கள் ஆகமமுறைப் படி பூஜை செய்கிறோம் என்று நீங்கள் மணிகண்டனுக்கு கொடுத்த ஆதர வால் நாடு அடைந்த பலன் என்ன?

ஏறத்தாழ 70 ஆண்டுகளில் ஐயா யிரத்திற்கும் அதிகமான வீடுகளில் இழவு விழுந்ததுதான் மிச்சம்.

அது மட்டுமா?

இந்த ஐயப்பன் கோயில்களில் சிவாச்சாரியர்கள் பூஜை செய்கின்ற அழகைப் பார்க்க வேண்டுமே! அட.. அட... அட.. காண கண் கோடி வேண்டுமே!

அடி மடியில் கை வைத்தால் ஆகமம்.. ஆகமம் என்று அலறிக் கொண்டே உச்சநீதிமன்றம் வரை ஓடி ஐயா நீதியரசரே... இந்த பூஜை முறையை எங்கள் முன்னோர்களிட மிருந்து வழி வழியாக கற்று வருகிறோம் என்று கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் கூப்பாடு போடு கின்றீர்களே...! இந்த ஐயப்பனை பூஜை செய்வதற்கு எந்த முன்னோர் களிடமிருந்து கற்றுக் கொண் டீர்கள்? சொல்ல முடியுமா?

அதிகபட்சமாக தாத்தாவிட மிருந்து கற்றுக் கொண்டிருப்பீர்கள் அவ்வளவுதானே! இப்பொழுது சொல்லுங்கள். பூஜை தொழில் புனிதமானதா!

பக்கா பிசினஸ்தானே! எப்பொ ழுது ஒரு தொழில் வியாபாரம் என்ற நிலைக்கு வந்துவிட்டதோ - அப்பொழுதே அந்தத் தொழில் அனைவருக்கும் சொந்தமானது தான். எனவே அனைத்து சாதி யினரும் அர்ச்சகராவதில் தவறே இல்லை. எனவே அரசாங்கம் அனைத்து சாதியினருக்கும் அர்ச் சகர் தொழிலில் பயிற்சி அளித்து, பின் பரீட்சை செய்து, வெற்றி பெற்ற எவரையும் அர்ச்சகராக்குவதில் தவறே இல்லை, என்ற உயர்ந்த நோக்கத்தோடு உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

- குமார் ராமசாமி
நூல்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா?

தமிழ் ஓவியா said...

ஓம் சக்தி கட்டளைப்படி
கணவனைக் கொன்ற மனைவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே லாலா பேட்டைப் பேர்வழி பரதன் (வயது 44) மனைவி உஷாராணி (வயது 38).

கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். ஆத்திரம் அடைந்த மனைவி தூங்கிக் கொண்டிருந்த கணவன் தலையில், அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்ய முயன்றார். கணவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென் றனர். பிழைக்கவில்லை; ஆசாமி மண்டையைப் போட்டு விட்டார். காவல்துறையினர் மனைவியைக் கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது அந்தப் பெண் சொன்னார். கொலை நடந்த அன்று என் கணவன் என்னைத் தாக்கினார். பின்னர் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார். நான் அழுது கொண்டிருந்தேன். அப்பொ ழுது என் கனவில் ஒம் சக்தித் தாய் தோன்றினாள். உன் கணவனை அடித்துக் கொன்று விடு என்று சொன்னதால் குழவிக் கல்லை எடுத்து என் கணவன் தலையில் போட்டேன் என்றார் உஷாராணி.

சபாஷ்! ஓம் சக்தி எதற்கெல்லாம் பயன்படுகிறது பார்த்தீர்களா?

யாரும் யாரையும் கொலை செய்துவிட்டு கடவுள் மீது பாரத்தைப் போட்டு விடலாம். கடவுள் கூப்பிட்டால் சாட்சிக் கூண்டுக்கு வரவா போகிறார்?

தமிழ் ஓவியா said...

சபாஷ்! கடவுளைக் கண்டுபிடித்து விட்டார்கள்?

உத்தரகாண்டில் கொத்துக் கொத்தாக மக்களை வெள்ளம் அடித்துச் சென்றது. தப்பியவர்கள் ஆயிரக்கணக்கில் மலை முகடுகளில் தொற்றிக் கொண்டு தொங்கியபடி மீட்புக்காகக் காத்துக் கிடந்தார்கள். இரு கரைகளுக்கும் கம்பிகளை கட்டி இராணுவ வீரர்கள் வரிசையாக அதில் குறுக்கே படுத்துக் கொண்டார்கள். தங்கள் முதுகின்மீது வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை நடக்கச் செய்து கரை சேர்த்தார்கள். இதில் இந்திய இராணுவ வீரர்களின் சேவையின் மூலம் பேரிடர் பூமியில் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளை நேரில் உணர்ந்தார்கள். இப்படி ஒரு விளம்பரம் தனியார் நிறுவனத்தின் சார்பில் நாளேட்டில் வெளி வந்துள்ளது.

உத்தரகாண்டில் கடவுளைத் தேடிச் சென்றவர்கள் பெரு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்கள் எந்தக் கடவுளும் ஓடி வந்து காப்பாற்றவில்லை.

இராணுவத்தினர் தான் காப்பாற்றினார்கள் அவர் களுக்குத்தானே நன்றி சொல்ல வேண்டும். ஆனால் காக்கத் தவறிய கடவுளை இந்த இராணுவத்தினர் உருவில் கண்டார்களாம். எப்படி இருக்கிறது. எப்படியோ மனிதனைக் கடவுள் காப்பாற்றா விட்டாலும் மனிதன் கடவுளைக் காப்பாற்ற வேண்டியவனாகி விட்டான் - பாவம் கடவுள்!

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவு தான்!


கோயில் சிலைகளை பாதுகாக்க கேமராவாம் : அறநிலையத்துறை நடவடிக்கை

நெல்லை: தமிழகத்தில் விலை உயர்ந்த அய்ம்பொன் சிலைகள் உள்ள அனைத்து கோயில்களிலும் அலாரம் மற்றும் சுழலும் கேமரா அமைக்க அற நிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்து 425 கோயில்கள் மற்றும் 56 மடங்கள் உள்ளன. இந்த கோயில்களில் விலை மதிப்பு மிக்க அய்ம்பொன் னால் ஆன கடவுள் சிலைகள் மற்றும் நகைகள் உள்ளன. சில கோயில்களில் சிலைகள் கொள்ளை போகும் சம்பவம் நடை பெற்றதை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை யப்பர் கோயில், திருவாரூர் கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்களில் சிலை பாதுகாப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டன. கேமரா, அலாரம் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மய்யங்களின் அருகே உள்ள பல கோயில்களின் திருவிழாக்காலங் களில் மட்டும் பயன்படுத்தப்படும் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து திருவிழா நேரங்களில் இவை எடுத்துச் செல்லப்பட்டு திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். இந்த சிலை பாதுகாப்பு மய்யங்களில் கேமரா, அலாரம் மற்றும் அதிநவீன பூட்டு, காவலர்கள் போன்ற வசதி செய்யப்பட்டுள்ளன.

ஆயினும் உற்சவர் உள்ளிட்ட முக்கிய அய்ம்பொன் சிலைகளும் குறைந்த அளவிலான நகைகளும் கோயில்களிலேயே நிரந்தரமாக வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. குறைந்த அள விலான சிலை இருந்தாலும் அனைத்து கோயில்களிலும் வங்கி களில் இருப்பது போன்ற அலாரம் மற்றும் சுழலும் வீடியோ கண் காணிப்பு கேமரா அமைக்க அற நிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் இரவுக் காவலர்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேமரா, அலாரம் போன்ற வசதிகள் அமைக்க நிதி வசதி இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுத்து உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த அறிவு றுத்தப்பட்டுள்ளனர்.

காவடி சுமந்து பாத யாத்திரை சென்ற பக்தர்கள் நான்கு பேர் ரயில் மோதி பலி

ராணிப்பேட்டை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து பாத யாத்திரை செல்கின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி லட்சுமி அம்மாள் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது45) தேநீர்க் கடை வைத் திருந்தார். மேல்கார்கூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ்(18) பாலிடெக்னிக் மாணவர், தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் கொண்டா ரம்பட்டியை சேர்ந்த சிங்கார வேல் (20) கல்லூரி மாணவர் இவர்கள் உள்பட பக்தர்கள் திருத்தணிக்கு காவடி சுமந்து கொண்டு பாத யாத்திரை புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு வேலூர் அருகே உள்ள பொய்கையில் தங்கினர். அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை அடைந் தனர்.

அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத் தனர். அப்போது ஆனந்தன், ஜெக தீஷ், சிங்காரவேல் மற்றும் ஆம்பூரை சேர்ந்த நவீன் (18) ஆகியோர் காலைக் கடன் கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப் போது காலை 5.30 மணிக்கு சென்னை நோக்கி வந்த ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தன், ஜெகதீஷ், சிங்காரவேல் 3 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். நவீன் படுகாயம் அடைந்தார். நவீனை மீட்டு வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது. காட்பாடி ரயில்வே காவல் துறை யினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


வரவேற்கிறோம்.... ஆனால்...


மருத்துவக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக மத்திய நல் வாழ்வுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, திராவிடர் கழகம் தொடக்கத் திலேயே கருத்துத் தெரிவித்துள்ளது. இந்தியா வின் வேறு பகுதிகளில்கூட, எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இந்த வகையிலே ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களும் இப்போது இதனை ஒட்டியே கருத்துத் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு சட்டப்படியாக, திமுக ஆட்சியில் ஒழிக்கப் பட்டு விட்டது.

கல்வியைப் பொதுப் பட்டியலில் நெருக்கடி காலத்தில் கொண்டு சென்ற மத்திய அரசு, தேவையில்லாமல் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிட்டு வருகிறது.

மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு பிரச்சினையை முன் வைத்தாவது கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது; மத்திய அரசும் இணங்கி வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை; மேல் முறையீடும் செய்யக் கூடாது என்று வற்புறுத்தும் அதே வேளையில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், பணி நியமனத்திலும், சமூகநீதிக்கு விரோதமாகச் செயல்பட்டு வருவது பற்றியும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே, நமது முக்கியமான வேண்டுகோளாகும்.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கே வழி காட்டக் கடமைப்பட்டுள்ள தமிழ்நாடு முதல் அமைச்சர், ஆந்திர மாநிலம், பீகார், அஸ்ஸாம், கேரள மாநிலங்கள் பின்பற்றும் சமூக நீதியைக்கூடக் கடைபிடிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் முன்னின்று போராடி வருகிறது; முக்கிய எதிர்க் கட்சியான கலைஞர் அவர்களும் வலுவான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு அமைப்புகளும், தத்தம் வழியில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக் கப்பட்டு வருகின்றன.

இவ்வளவுக்குப் பிறகும் - தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு என்று தவறான முடிவின்மீது கருத்துத் தெரிவித்து விட்டது.

சமூகநீதியில் இவ்வரசுக்கு இருக்கும் அந் தரங்கச் சுத்தியையே சந்தேகத்துக்கு உள்ளாக்கி விட்டதே!

30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று பல்வேறு கல்வி நிபுணர்களின் குழுக்கள் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளன. அதன்படி ஆசிரியர்களை நியமனம் செய்தால் இப்பொழுது ஆசிரியர் பயிற்சி பெற்று அரசுப் பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களுக் கும் பணி வாய்ப்புப் பெற விசாலமான வாய்ப்பு உண்டு. அந்த நிலையில் தகுதித் தேர்வு பிரச்சினைக்கும் இடம் இல்லாமலேயே போகும். அதுபற்றியும்கூட இ.அ.அ.தி.மு.க. அரசு சிந்திப் பது நல்லது; உடனடியாக அதனைச் செயல்படுத்த முடியாத பட்சத்தில், தகுதித் தேர்வில் செய்துள்ள குளறுபடிகளைச் சரி செய்ய முன்வரவேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன் னேறிய ஜாதியினருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரி சேர்க்கைகளில்கூட வெவ்வேறு சத வீதத்தில் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் பொழுது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் அந்த முறை கடைபிடிக்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு அரசு தரப்பிலிருந்து இதுவரை நியாயமான பதில் இல்லாத திலிருந்தே அரசு தரப்பில் தவறு நடந்திருக்கிறது என்பது வெளிப் படையாகவில்லையா? வீண் பிடிவாதம் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக் கின்றோம்.

தமிழ் ஓவியா said...


நாடு



நாடு என்று எதைச் சொல்ல வேண்டும் என்றால், அது பொரு ளாதாரச் சுதந்திரமுடைய நாடாக இருத்தல் வேண்டும்; அது இல்லாத நாடு அடிமை நாடு என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, சுதந்திர நாடு என்று சொல்ல முடியாது.
(விடுதலை, 2.12.1958)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்! (ஜாதி - தீண்டாமை ஒழிப்பு) 1.8.2013 - முழக்கங்கள் (1)


வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) பணி முடிப்போம் பணி முடிப்போம்!
மரண சாசனமாக மரண சாசனமாக
பெரியார் அறிவித்த பெரியார் அறிவித்த
அனைத்து ஜாதியினருக்கும்
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை அர்ச்சகர் உரிமை
பணி முடிப்போம் - பணி முடிப்போம்

(3) ஒழிக ஒழிக ஒழிகவே!
வருணா சிரமம் வருணா சிரமம்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(4) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதியும் - தீண்டாமையும்
ஜாதியும் தீண்டாமையும்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(5) கோயில் கருவறையில் கோயில் கருவறையில்
தீண்டாமை தீண்டாமை ஒழிக ஒழிக ஒழிகவே!

(6) அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு!
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு அர்ச்சகர் ஆக்கு!

(7) பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால் பக்தியின் பெயரால்
மதத்தின் பெயரால் மதத்தின் பெயரால்
பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்!

(8) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா? அர்ச்சகனா?
தமிழன் மட்டும் தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?

(9) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழன் எல்லாம் தமிழன் எல்லாம்
வீதியிலா? வீதியிலா?
குருக்கள் மட்டும் குருக்கள் மட்டும்
கருவறையிலா கருவறையிலா?

(10) தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
நீதிபதியாகலாம் நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆக அர்ச்சகர் ஆக
கூடாதா? கூடாதா?
முடியாதா? முடியாதா?

(11) ஆண்டவன் அனைவருக்கும்
ஆண்டவன் அனைவருக்கும்
பொது என்றால் பொது என்றால்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?

(12) பெரியார் நெஞ்சில் பெரியார் நெஞ்சில்
தைத்த முள்ளை தைத்த முள்ளை
மானமிகு கலைஞர் மானமிகு கலைஞர்
சட்டம் இயற்றி சட்டம் இயற்றி
நீக்கினார் நீக்கினார்
உச்சநீதிமன்றமே உச்சநீதிமன்றமே
தடையை நீக்கு - தடையை நீக்கு!

(13) கட்சியில்லை கட்சியில்லை
ஜாதியில்லை ஜாதியில்லை
உரிமைப் போர் உரிமைப் போர்
மனித உரிமைப் போர் மனித உரிமைப் போர்!

(14) தமிழா தமிழா ஒன்றுபடு-
தமிழா தமிழா ஒன்றுபடு!
தமிழன் பகையை
தமிழன் பகையை
வென்று விடு - வென்று விடு!

(15) வெல்லட்டும் வெல்லட்டும்!
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் - வெல்லட்டும்!

(15) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(17) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(18) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(19) வாழ்க வாழ்க வாழ்கவே
அறிஞர் அண்ணா வாழ்கவே!

(20) வெல்க வெல்க வெல்கவே
தமிழர் உரிமை வெல்கவே!
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்! (ஜாதி - தீண்டாமை ஒழிப்பு) 1.8.2013 - முழக்கங்கள் (1)


வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) பணி முடிப்போம் பணி முடிப்போம்!
மரண சாசனமாக மரண சாசனமாக
பெரியார் அறிவித்த பெரியார் அறிவித்த
அனைத்து ஜாதியினருக்கும்
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை அர்ச்சகர் உரிமை
பணி முடிப்போம் - பணி முடிப்போம்

(3) ஒழிக ஒழிக ஒழிகவே!
வருணா சிரமம் வருணா சிரமம்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(4) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதியும் - தீண்டாமையும்
ஜாதியும் தீண்டாமையும்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(5) கோயில் கருவறையில் கோயில் கருவறையில்
தீண்டாமை தீண்டாமை ஒழிக ஒழிக ஒழிகவே!

(6) அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு!
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு அர்ச்சகர் ஆக்கு!

(7) பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால் பக்தியின் பெயரால்
மதத்தின் பெயரால் மதத்தின் பெயரால்
பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்!

(8) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா? அர்ச்சகனா?
தமிழன் மட்டும் தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?

(9) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழன் எல்லாம் தமிழன் எல்லாம்
வீதியிலா? வீதியிலா?
குருக்கள் மட்டும் குருக்கள் மட்டும்
கருவறையிலா கருவறையிலா?

(10) தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
நீதிபதியாகலாம் நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆக அர்ச்சகர் ஆக
கூடாதா? கூடாதா?
முடியாதா? முடியாதா?

(11) ஆண்டவன் அனைவருக்கும்
ஆண்டவன் அனைவருக்கும்
பொது என்றால் பொது என்றால்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?

(12) பெரியார் நெஞ்சில் பெரியார் நெஞ்சில்
தைத்த முள்ளை தைத்த முள்ளை
மானமிகு கலைஞர் மானமிகு கலைஞர்
சட்டம் இயற்றி சட்டம் இயற்றி
நீக்கினார் நீக்கினார்
உச்சநீதிமன்றமே உச்சநீதிமன்றமே
தடையை நீக்கு - தடையை நீக்கு!

(13) கட்சியில்லை கட்சியில்லை
ஜாதியில்லை ஜாதியில்லை
உரிமைப் போர் உரிமைப் போர்
மனித உரிமைப் போர் மனித உரிமைப் போர்!

(14) தமிழா தமிழா ஒன்றுபடு-
தமிழா தமிழா ஒன்றுபடு!
தமிழன் பகையை
தமிழன் பகையை
வென்று விடு - வென்று விடு!

(15) வெல்லட்டும் வெல்லட்டும்!
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் - வெல்லட்டும்!

(15) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(17) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(18) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(19) வாழ்க வாழ்க வாழ்கவே
அறிஞர் அண்ணா வாழ்கவே!

(20) வெல்க வெல்க வெல்கவே
தமிழர் உரிமை வெல்கவே!
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

ஆகமவிதி மீறல்.... (12)


கோயில்கள் இன்ன இன்ன இடத்தில்தான் இருக்க வேண்டும் என்கிறது ஆகமம். ஆனால் இன்று கண்ட கண்ட இடத்தில் கட்டப்படுகிறது. சிவா விஷ்ணு என்று கோயில் அமைப்பது சைவாகமத்திலோ வைணவாக மத்திலோ சொல்லப்படவில்லை.

- இப்படியொரு ஆகமவிதி

உண்மைதான். இன்று கண்ட கண்ட இடங்களில் கோயில்களைக்கட்டுகின்றார்கள். தெருக்குத்தல் தொடங்கி, ஆட்டோ ஸ்டாண்ட் வரை, கோயில்கள் கட்டுகின்றார்கள். இதில் என்ன தவறு? இவ்வாறு கட்டி னால் என்னவாகும்? கடவுள் ஓடிப்போய் விடுவாரா? அல்லது அந்த இடம் புனிதம் கெட்டுவிடுமா? அப்படி யென்றால் இன்று கண்ட கண்ட இடங்களில் கோயில் கள் இருப்பதால், கடவுளின் புனிதம் கெட்டு வெறும் கல்தான் இருக்கின்றதா! ஆகமத்தை மீறி இத்தனை நபர்கள் கோயில் கட்டி வழிபாடு நடத்துகின்றார்களே அவர்கள் எல்லாம் என்ன முட்டாள்களா?

பக்தர்கள் ஆகமத்தை மீறிவிட்டதால் இதுவரை என்னென்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது பட்டியலிட முடியுமா? சென்னையில் அஷ்டலெட்சுமி என்றொரு கோயில், ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைத்தது போல கட்டியிருக்கிறார்களே! இது ஆகமப்படி தவறு. இதனால் என்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது. கடல் தண்ணீர் கோயிலுக்குள் நுழைந்து விட்டதா?

நடப்பது என்ன?

எட்டு லட்சுமியும் ஒரே இடத்தில் இருந்தல்லவா, பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றது. இது போலதானே அறுபடை முருகனும் ஒரே இடத்தில் இருந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றது.

சரி இத்தனை ஆகம மீறல்களுக்கும் சிவாச்சாரி யார்கள்தானே துணை போகின்றார்கள்! இன்று கண்ட கண்ட இடங்களில் கட்டப்படும் கோயில்களுக்கு சிவாச் சாரியார்கள்தானே கும்பாபிஷேகம் செய்து வைக் கிறார்கள்.

இந்த கோயில் ஆகம விதிகளுக்கு புறம்பாக, ஆகம விதிகளை மீறி கட்டப்பட்ட கோயில். இந்த கோயிலுக்கு நானோ அல்லது என் சமூகத்தைச் சார்ந்த எந்த சிவாச்சாரியரும் கும்பாபிஷேகம் செய்யமாட்டோம் என்று எந்த சிவாச்சரியாராவது, ஏதாவது ஒரு இடத்திலாவது சொல்லியிருக்கிறார்களா?

இதைவிட ஒரு பெரிய கொடுமை இந்தக் கோயிலை நான் கும்பாபிஷேகம் செய்து தருகிறேன் 50,000 ரூபாய் கொடு என்று சிவாச்சாரியார் காண்டிராக்ட் பேசி னால்.. அவருக்குத் தெரியாமல் இன்னொரு சிவாச்சாரி யார் அங்கு சென்று எனக்கு 30,000 ரூபாய் கொடு அவரைவிட சிறப்பாக பண்ணித்தருகிறேன் என் றல்லவா போட்டி போடுகிறார்கள்.

சிவா விஷ்ணு என்று கோயில் அமைப்பது சைவாக மத்திலோ வைணவாகமத்திலோ சொல்லப்படவில்லை.

உருவாக்கப்படாத, விதியை மீறி இன்று உலகம் முழுவதும் சிவா விஷ்ணு கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கோயில்களில் எல்லாம் சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியர்களும் ஒற்றுமையாகத்தானே பூஜை செய்து வருகின்றார்கள்.
இதனால் என்ன இழப்பு ஏற்பட்டு விட்டது? பட்டியலிட முடியுமா? சிவா விஷ்ணு கோயில் அமைப்பது பற்றி எந்த ஆகமத்திலும் ஏன் சொல்லப்படவில்லை?

தமிழ் ஓவியா said...

உண்மை என்ன தெரியுமா?

அவ்வளவு குரோதம்.

சைவத்திற்கும், வைணவத்திற்கும் அவ்வளவு குரோதம். அதனால்தான் அப்படியொரு விதியை உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை.
அடுத்து - இப்பொழுது புதிதாக கட்டுகின்ற கோயில்களில் அல்லது புதுப்பிக்கின்ற கோயில்களில் எல்லாம் லேட்டஸ்ட் கடவுளான ஸ்ரீரடி சாய்பாபா இடம் பிடித்து விட்டாரே!

சிவன் விஷ்ணுவையாவது நாம் புராணங்களில் படித்திருக்கிறோம். ஆனால் இந்த ஸ்ரீரடி சாய்பாபா யார்? அவருக்கு எப்படி கோயில்களில் புராணகால கடவுளுக்கு இணையான சீட் கிடைத்தது. இது ஆகம மீறல் இல்லையா?

இந்த ஆகம மீறல்களால் எதை இழந்தோம்! பட்டியலிட முடியுமா?

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானத்தை யல்லவா பெற்று இருக்கிறோம். எத்தனையோ பக்தர் களுக்கு ஸ்ரீரடி சாய்பாபா கனவிலும், நேரிலும் அருள் புரிவதாகச் சொல்லுகிறார்களே!

ஆக இந்த ஆகம மீறல்களால் எத்தனையோ பக்தர்கள் சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள்.
அடுத்து,

இதைவிட பெரிய அசிங்கம் இன்னும் கொஞ்சகாலத் தில் அதாவது 21-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரங்கேறப் போகிறதே! அதற்கு நாம் எங்கே போய் முட்டிக்கொள்வது?

ஆம்!

இன்று நம் கண் முன்னால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக உலகம் முழுவதும் விமர்சனங்களுக்கு ஆளாகி, தெய்வமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு தனியாக கோயிலும், புதிதாக கட்டப்போகின்ற கோயில்களில் தனி இடமும், புதுப்பிக்கின்ற கோயில்களில் தனி இடமும் கிடைக்கப் போவது உறுதி!

அப்பொழுது என்ன ஆகப்போகிறது இந்த ஆகமவிதி?

உலகம் அழிந்துவிடுமா? அல்லது எதையாவது ஒரு பகுதியை இழந்து விடுவோமா! அப்பொழுது நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா? கோடிக்கணக்கில் கோயி லுக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டப் போவது உறுதி. அதுமட்டுமல்ல - அங்கே அதிகாலை புட்டபர்த்தியை சுப்ரபாதம் சொல்லி எழுப்பி அபிஷேகம், அர்ச்சனை, சகஸ்ரநாமம் சொல்லும் அர்ச்சகர்கள் கோடீஸ்வரனாக ஆகப்போவது உறுதி. இதிலிருந்து என்ன தெரிகிறது?

கண்ட கண்ட இடத்தில் கோயில் கட்டுவதையும், ஆகம விதியில் சொல்லப்படாத கடவுள்களை ஒன்று சேர்ப்பதையும், புராணக் கடவுள்களுக்கு இணையாக நம் கண்முன்னே மலம் போகும் மனிதர்களை கடவுளாக்கி ஒன்று சேர்ப்பதையும் - ஆகமம் ஏற்கவில்லை என்ற ஆகம விதியும், பொய்தானே!

- குமார் ராமசாமி

நூல்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா?

தமிழ் ஓவியா said...


பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலை யத்தின் சார்பில் தமிழகம் முழுக்க நடத்தப்படும் ஜாதி மறுப்பு இணை தேடல் நிகழ்ச்சியான மன்றல் - நெல்லை மண்ட லத்தில் 28.7.2013 அன்று திருநெல்வேலி மாநகரில் ஆர்.கே.வி. மஹாலில் நடைபெற்றது. காலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற் றனர். பகல் முழுவதும் பதிவுகள் ஏற்கப்பெற்று மணமக்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. மதிய உணவுக்குப் பின் னும் அறிமுக நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணை யருக்கான பாராட்டும் நிகழ்ச்சியின் இடையி டையே செய்யப்பட்டது. ஜாதி மறுப்பு இணை யர்களான திருநெல்வேலி இ.தமிழ்மணி- இ.சுகந்தி, தூத்துக்குடி பொ.முருகன் - இ.அருணா, கீழப்பாவூர் ச.தமிழன் - த.கலாவதி, நாகர்கோவில் மு.இராசேந் திரகுமார் - வி.விஜி, நெல்லை பொ.சக்திவேல் - திருமலைகுமாரி ஆகி யோருக்கு பெரியார் சுய மரியாதைத் திருமண நிலையத்தின் மாநில அமைப்பாளரும், தலை மைச் செயற்குழு உறுப் பினருமான திருமகள் பாராட்டுக் கேடயத்தினை வழங்கினார். அனைவருக் கும் கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் அவர் கள் பாராட்டுத் தெரி வித்தார்.

நிறைவு விழாவில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோரைப் பாராட்டியும், மன்றல் நிகழ்ச்சி சிறக்க உழைத் தோரைப் பாராட்டியும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் "கூட்டுமுயற்சியால் வெற்றி பெற முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நெல்லை மன்றல். நமது தோழர்கள் கடுமை யாக உழைத்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அடுத்த மன்றல் நெல் லையில் நடத்தப்பட வேண்டும் என்று தமிழர் தலைவர் அவர்கள் ஆண யிட்டபோது, நெல்லை யிலா? என்று சிலர் வியந் தார்கள். எங்கே தேவைப் படுகிறதோ, அங்கே தானே நடத்த வேண்டும். எனவே நெல்லையில் தான். ஆனால் உடனடி பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவசியமாக நடத்தப்பட வேண்டிய பகுதி என்றார் தழிழர் தலைவர் அவர்கள். அதன் படி தான் இங்கே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. மற்ற ஊர்களோடு ஒப்பிடுகை யில் நெல்லையில் பதிவு குறைவாக இருக்கிறதே என்று கூட நம் தோ ழர்கள் வருத்தப்பட்டார் கள்.

ஆனால், இது ஒரு நல்ல தொடக்கம். ஜாதி யினாலும், மூடநம்பிக்கை யாலும் சூழப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண பணி யல்ல. இதே பகுதியில் தோழர்கள் எதிர்பார்த் ததை விட அதிகமான பதிவுகள் வரும் வரை, இந்தப் பணியை நாங்கள் விடுவதாக இல்லை. தொடர் பிரச்சாரத்தின் வாயிலாகவும், அடுத் தடுத்த தலைமுறையிட மும் இந்தக் கொள்கை யையும், தந்தை பெரியா ரையும் கொண்டு செல்வ தன் வாயிலாகவும் மட்டு மே நாம் வென்றெடுக்க முடியும். அதற்கான திட்ட மிடலோடு செயலாற்று வோம். மீண்டும் மீண்டும் இப்பகுதியில் மன்றல் நடத்தப்படும். தமிழகத் தின் அனைத்துப் பகுதி களிலும் மன்றல் நிகழ்வு களை தொடர்ந்து வெற்றி கரமாக நடத்தி நாம் செய்துவரும் சமூகப் புரட்சி தொடரும் என்று குறிப்பிட்டார். மன்றல் சிறக்க உதவிய, தொண் டாற்றிய அனைவருக்கும் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்!


ஆர்ப்பரித்து எழுகிறது அரிமா தமிழினம்!

சென்னையில் தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார்


சென்னை, ஜூலை 31- திராவிடர் கழகத்தின் சார்பில் நாளை (1.8.2013) காலை தமிழகம் முழுவதும் கழக மாவட்டத் தலைநகரங்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., (தி.மு.க.), தொல்.திருமாவளவன் எம்.பி., (வி.சி.க.), சுப.வீரபாண் டியன் (தி.இ.த.பே.) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்

தந்தை பெரியார்தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த தீண்டாமை ஒழிப்பு - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகை யில் நடவடிக்கை எடுக்கவேண்டும்; உச்சநீதிமன் றத்தில் வழக்கைச் சிறப்பாக நடத்தவேண்டும்; வெற்றி பெறவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் பல கட்டப் போராட்டங்களை நடத்து வது என்று சென்னையில் 9.7.2013 அன்று நடை பெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 43 ஆண்டுகளுக்குமேல் இந்தப் பிரச்சினை யில் திராவிடர் கழகம் - ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பது இந்த இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை என்பதால், உறுதியாக நின்று வென்றே தீருவது என்ற திட சித்தத்துடன், எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்று நாளும் பாடுபட்டு களங்காண, களைப்பின்றிக் கடமையாற்றி வருகின்றது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன் வேண்டும் என்பதை விளக்கி திராவிடர் கழகப் பேச்சாளர்கள் தமிழகமெங்கும் பட்டிதொட்டி யெல்லாம் சென்று தெருமுனைக் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், அதனடிப்படையில் முதற்கட்ட மாக நாளை (1.8.2013) திராவிடர் கழகத்தின் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களில் (புதுச்சேரி, காரைக்கால் உள்பட) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

61 இடங்களில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள கழக மாவட்டங்களான 61 இடங்களில் நடைபெறும், இந்தத் தீண்டாமை ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத் தில் திராவிடர் கழகத்துடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற் கின்றனர்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி தமிழ்நாடெங்கும் நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன் னாள் மத்திய - மாநில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் என பெருந் திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

சென்னை - சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்!

சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நாளை (1.8.2013) காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோன் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென் சென்னை தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன் பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் பங்கேற் கின்றனர்.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் சூதாட்டம்: மூக்கை உடைத்தது மும்பை நீதிமன்றம்



மும்பை, ஜூலை 31-சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இந்த விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழுவை எதிர்த்து ஜார்க்கண்ட், பீகார் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் கிரிக்கெட் வாரியத்துக்குக் கண்டனம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழு சட்ட விரோதமானது. ஒரு தலை பட்சமானது என்று தெரிவித்தது.

மேலும் புதிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தர விட்டது.

அய்.பி.எல். சூதாட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை அய்.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டில்லி காவல்துறையினர் விசாரண நடத்தி வருகின்றனர். சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதான கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி உரையாடல்களை மத்திய தடயவியல் ஆய்வு செய்தபோது, இந்த சூதாட்டத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய டில்லி காவல்துறை, நேற்று டில்லி கூடுதல் அமர்வு நீதிபதி வினய்குமார் கன்னா முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 6000 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், தாவூத் இப்ராகிம், அவனது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல், பணி நீக்கம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிறீசாந்த், அன்கீத் சவான், அஜித் சண்டிலா, ஏஜெண்டுகள் அஷ்வனி அகர்வால், ரமேஷ் வியாஸ், தீபக் குமார், சுனில் பாட்டியா மற்றும் பைரோஸ் பாரித் அன்சாரி, முன்னாள் ரஞ்சி வீரர் பாபுராவ் யாதவ் உள்ளிட்ட 39 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த 39 பேரில் 8 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். 21 பேர் பிணையில் வெளியே வந்துவிட்டனர். 10 பேர் தலை மறைவாக உள்ளனர்.

தமிழ் ஓவியா said...


பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டம்


பணி புரியும் இடங்களில் பெண்களைப் பாது காக்கும் வகையில் சட்டத்தில் புதிய விதிகள் உரு வாக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்களுக்குப் பாலியல் தொல்லை தருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடை முறைக்கு வந்துள்ள பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லைகள் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம்-2013 இல், பெண்கள் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ள வரைவு சட்ட விதிகள் வருமாறு:

பெண் பணியாளர்களை பாலியல் தொல்லை களுக்கு உள்படுத்துபவர்களுக்கு பணி நீக்கம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

பாலியல் புகார் அளிக்கும் பெண் பணியாள ருக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவது என்றும் கூறப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை குறித்து பொய்யான தகவல் அளித்தால், பாலியல் குற்றத்துக்கு குற்றவாளிக்கு என்ன தண்டனை அளிக்கப்படுமோ, அதே தண்டனை பெண்ணுக்கும் கிடைக்கும்.

புகார்களை பெறுவதற்காக உள்ளூர் புகார்கள் குழுவை அமைக்கவேண்டும். அதில் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சமூகசேவகர் ஒருவரும், தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு களில் நன்கு கைதேர்ந்த ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தவிர, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாது காப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தை நிறுவி, மேற் கண்ட குழுவிற்கு தார்மிக ஆதரவு அளிக்க வேண்டும்.

விசாரணையின் போது குற்றம் சாட்டியவர், குற்றம்சாட்டப்பட்டவர் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர், புகார் அளித்த பெண்ணுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ மிரட்டல் விடுக்கவோ, ஆசை வார்த்தை கள் கூறவோ முயற்சிக்கக் கூடாது என எச்சரிக் கப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன.

இது உண்மையில் வரவேற்கப்படவேண்டிய சட்டமாகும். பெண்கள் என்றால், பாலியல் பதுமை என்ற மனப்பான்மை, ஆண்களிடத்தில் உள்ளது. ஆண் ஒருவன் 7 நிமிடத்திற்கு ஒருமுறை, பாலுணர்வுபற்றி யோசிக்கிறான்- என்கிறது ஓர் ஆய்வு.

பெண்கள் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அருமையான சட்டம். அது எந்த வகையில் செயல்வடிவத்தில் இருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.

பாதிப்புக்கு ஆளான பெண்கள் காவல் நிலையத்திற்குச் சென்று துணிவாகப் புகார் கொடுப்பது போன்ற துணிவு, போதுமான அளவுக்கு ஏற்படவில்லை.

இதில் இன்னொன்று - இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்கிற விழிப்புணர்வுகூட சமுதாயத்தில் ஏற்படவில்லை. வெறும் சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது - அதுபற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் நாடு தழுவிய அளவில் செய்ய அரசே திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அரசு தொலைக்காட்சியிலாவது இதுகுறித்து, விளக்கம் அளிக்கலாமே! நாடு தழுவிய அளவில் விவாதங்களை உருவாக்கலாமே!

பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், இதுகுறித்துக் கருத்தரங்குகளை நடத்திடவேண்டும்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது சர்வசாதாரணம். அதனைத் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கவும் ஏற்கெனவே சட்டம் இருக்கத்தான் செய்கிறது.

2012 டிசம்பரில் இத்தகைய சட்டம் குறித்து உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியது இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனைவரை, சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மசோதா ஒன்றும் 2011 ஆம் ஆண்டிலேயே பேசப்பட்ட ஒன்று.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபட்ட ராஜஸ்தான் அரசு ஊழியர் பான்வாரி கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்ச்சி இந்திய அளவில் பெரிய அதிர்வை உண்டாக்கியது. அது தொடர்பான வழக்கில் 1997 இல் உச்சநீதிமன்றத்தால் வழிகாட்டுதல் அம்சங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டம் அலுவலக நடைமுறைக்கே உரித்தான தாமதத்துடன் சட்டம் இப் பொழுதுதான் தலைகாட்டுகிறது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் புகார்க் குழு அமைக்கப்பட வேண்டும். புகார்க் குழுவின் தலைவராக மூத்த (சீனியர்) பெண்மணி நியமிக்கப்படவேண்டும். தன்னார்வ அமைப்புப் பிரதிநிதி ஒருவரும் அதில் இடம்பெறவேண்டும் என்றெல் லாம் தாராளமாக விதிமுறைகள் உண்டு.

இவை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் உயிருள்ள மின்னோட்டமாக இருப்பது அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!



இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.
(குடிஅரசு, 25.8.1940)

தமிழ் ஓவியா said...


திருமுல்லைவாயல் வாசிகளின் குறைபாடு


ஆசிரியருக்குக் கடிதம்

திருமுல்லைவாயல் வாசிகளின் குறைபாடு

கடந்த 2.7.2011 அன்று திருமுல்லைவாயலில் (ஆவடி மாவட்டம்) தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இவர்களின் பெயரில், சாலைகள் திறக்கப்பட்டன. துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், நகராட்சி தலைவர் ச.மு.நாசர், முன்னாள் நகராட்சி தலைவர் எம்.விக்டரிமோகன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் சிறப்பான விழா எடுத்து திறந்து வைக்கப்பட்ட சாலையில், 7 ஆவது வார்டு அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர், வேறு ஒரு பெயரில் சாலைக்கு பெயர் வைத்து போர்டு நடப்பட்டுள்ளது (அதன் பெயர் குளக்கரை சாலை, திருமுல்லைவாயல், ஆவடி நகராட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது) என்பதைத் தங்கள் மேலான கருத்திற்கு தெரியப்படுத்துகிறேன்.

மேலும் அய்யா அறிவது, திருமுல்லைவாயல் பகுதியில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள், அவர்கள் போக்குவரத்திற்கு பேருந்து வசதி கிடையாது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு பேருந்து வந்தது; அதுவும் இப்பொழுது இல்லை, காரணம் சாலை சரியில்லை, குண்டும் குழியுமாக இருக்கிறது என்று நிறுத்தி விட்டார்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மழைக் காலங்களில் சாலையில் நடக்க முடியவில்லை. வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு முதியவர் நடந்து வரும்போது வழுக்கி விழும்போது, லாரி ஒன்று அவர் காலில் ஏறியதில் கால் முறிந்து கொஞ்சம் நாள் கால் வலியால் துயரப்பட்டு இறந்து விட்டார். பல பேர் விழுந்து எழுந்து செல்கிறார்கள். இன்னும் அந்தச்சாலை சீர் செய்யப்படவில்லை. பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, திருமுல்லைவாயல், பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் ராணி அண்ணாதுரை வாழ்ந்த ஊர் என்பதும், பேரறிஞர் அண்ணா எங்கள் ஊரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: எல்லா இடங்களுக்கும் பேருந்து வசதி உண்டு, திருமுல்லைவாயலில் மட்டும் இதுவரை பேருந்து இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும். தவறாமல் வாக்குப்பதிவு அதிகமாக நடப்பதும் இந்த ஊரில்தான். தேர்தல் வாக் குறுதி இலவசங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பெறாத ஊரும் இதுதான். இந்த மக்கள் இலவசத்தை இதுவரை கேட்டது கிடையாது. ஆனால் கொடுத்தால் வாங்குவதற்குத் தயார்! ஏன் கொடுக்கவில்லை என்பதுதான் கேள்வி!

- க.இரணியன், பகுத்தறிவாளர் கழகம், திருமுல்லைவாயல்

தமிழ் ஓவியா said...

நாகை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் வி.எஸ்.டி. அழகப்பன் அவர்கள் தமக்குப் பிறகு தமது மகன் இந்த இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மருத்துவமனையில் அவர் இருந்த போது கையைப் பிடித்து என்னிடம் ஒப்படைத்தார் - அதனை உறுதி செய்யவே இங்கு வந்துள்ளேன் என்றார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திராவிடர் கழக முன்னாள் தலைவர் வேளாங்கண்ணி வி.எஸ்.டி. அழகப்பன் அவர்களின் நினைவுநாளையொட்டி படத்திறப்பு நிகழ்ச்சி 19.7.2013 அன்று காலை 10.30 மணிக்கு அவரது இல்லத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கொட்டகையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

படத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். உரையில் குறிப்பிட்டதாவது:

இயக்க வரலாற்றில் நாகை

நாகைக்கு இயக்க வரலாற்றில் பல சரித்திர சிறப்புகள் உண்டு. ஆர்.வி.கோபால், நாகை மணி, வழக்குரைஞர் டி.கே.விஜயராகவலு, வி.பி.கே.காயா ரோகணம், எஸ்.ஆர். ஆறுமுகம், நாகை கணேசன், பாவா நவநீதகிருஷ்ணன், நாத்திகன் நாகூர் ஆர்.சின்ன தம்பி, அவரது இணையர் ருக்மணியம்மாள், சோழங்க நல்லூர் அந்தோணிசாமி என்று எண்ணற்ற வீரர்கள் பாடுபட்ட தியாகம் செய்த பகுதி நாகைப் பகுதி.

இந்த நாகையில் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இங்கிருந்துதான் குலக்கல்வி திட்ட ஒழிப்பு பிரச்சாரப் படை புறப்பட்டது.

மறைந்த வி.எஸ்.டி.அழகப்பன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த போது, அவரது மகன் நெப்போலியனின் கைப் பிடித்து என்னிடம் ஒப் படைத்தார். இயக்கத்திற்கு தமக்குப் பிறகு இவர் பயன் படுவார், பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

அதனை உறுதி செய்து கொள்வதற்காகவே இங்கு நான் வந்திருக்கிறேன்.

கொள்கை இருப்பிடம் என்றால்...

சில வீடுகளில் தான் மட்டும் கொள்கைவாதிகளாக இருப்பார்கள்; அவர் மறைந்ததற்கு பிறகு நெற்றியில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து விடுவார்கள், திருநீறு பூசி விடுவார்கள், நாமமும் போட்டு விடுவார்கள். சங்கு ஊதுவார்கள். ஆனால் நமது வி.எஸ்.டி. அவர்கள் குடும்பம் கொள்கை குடும்பம் - அவர் ஏற்று கொண்ட கொள்கை தொடர்கிறது.

அதற்காக இயக்கம் இந்த குடும்பத்தாருக்கு தலை தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

மற்றவர்கள் தம்முடைய சொத்துக்களுக்காக உயில் எழுதி வைப்பார்கள். கழகக் கொள்கைகளை ஏற்று கொண்டவர்களோ தம் மறைவிற்குப் பிறகு தனது உடலுக்கு எந்தவித மதச் சடங்குகளும் நடைபெற்று விடக்கூடாது என்று உறுதி செய்யும் வண்ணம் உயில் எழுதி வைப்பார்கள். சிலர் தம் உடலை மருத்துவ மனைக்குக் கொடையாக வழங்குவதற்கு உயில் எழுதி வைத்துச் செல்வார்கள்.

வாழ்நாள் முழுவதும் கொள்கைக்காக வாழ்ந்தவர், கொள்கைக்காரராகவே மறைய வேண்டும் என்பதிலே உறுதியாக இருப்பவர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள்.

இந்த இயக்கம் கொள்கைகளை மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. தனி ஒழுக்கத்தையும், பொது ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்கும் இயக்கம். கொள்கையும் - ஒழுக்கமும்

பெற்றோர்கள் கூட சொல்லுவார்கள் - எங்கள் பிள்ளைகள் தி.க.வில் இருக்க வேண்டும். அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் ஆயிற்றே என்று சொன்னால், பரவாயில்லை. அங்கு சென்றால் ஒழுக்கத்தோடு இருப்பார்கள் என்று சொல்லக் கூடிய இயக்கம் இது.

120 கோடி பேர் உள்ள இந்தியாவில் 1 சதவிகித பேர் தான் இராணுவத்தில் இருக்கிறார்கள். அதைப் போல இந்தச் சமுதாயத்தைப் பாதுகாப்பது திராவிடர் கழகமே!

நாகைப் பகுதியயை மறுபடியும் கழகக் கோட்டை யாக்க வேண்டும். மறைந்த வி.எஸ்.டி.அழகப்பன் அவர்களுக்குச் செய்யக்கூடிய காட்டக்கூடிய மரி யாதை என்பது அது தான்.

அழகப்பனாரின் இரு ஆசைகள்

வி.எஸ்.டி. அவர்களின் இரு விருப்பம். ஒன்று அவரது மகன் நெப்போலியன் தமக்குப் பிறகு இந்த இயக்கத்தில் இருந்து கொள்கைகளோடு பணியாற்ற வேண்டும். இரண்டாவது நாகை கோட்டை வாசல் பெரியார் சிலைக்கு அருகில் பெரியார் படிப்பகம் அமைக்க வேண்டும் என்பதாகும். அதற்காக ரூ.50 ஆயிரம், தம் சொந்த பொறுப்பில் அளித்துள்ளார்.

அவரின் பெயரும் இடம் பெறும் வண்ணம் விரைவில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். அவர் இருந்தால் எப்படி இந்தக் குடும்பம் கழக குடும்பமாக இருக்குமோ அது தொடர வேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் பெரும்படை!


சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத் தான் முதலில் இந்தியைத் திணிக்கிறேன் என்றார் அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி).

தந்தை பெரியார் தலை மையில் தமிழர்கள் கிளர்ந் தெழுந்தனர். முதல் அறி விப்பினை ஆகஸ்டு 10இல் (1937) கொடுத்தார் ராஜாஜி.

தமிழ் மண் கந்தகப் பூமி யாயிற்று! திருச்சி, காஞ்சி என்று மாநாடுகள் நடத்தப் பட்டு, தமிழர்கள் தங்கள் எரிமலை உணர்வை வெளிப்படுத்தினர்.

மக்கள் குரலை எல்லாம் மதிக்கும் மதியுடையோர் அல்லவே ஆச்சாரியார்! - மனு வழி வழி வந்தவரா யிற்றே! பிடிவாதம் காட் டினார் - அதன் விளைவு தான் வந்த வேகத்திலேயே வெளியேறும் நிலைக்கு ஆளானார்.

அந்த இந்தி எதிர்ப்பு வரலாற்றில் இந்நாள் (1.8.1938) எழுச்சிமிகு நாள். இந்நாளில் தான் திருச்சியிலிருந்து தமிழர் பெரும் படை புறப்பட்டது.

பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி, படைத் தளபதி! (இராணுவத்தில் பணியாற்றியவர் அல்லவா!) தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை, படைத் தலைவர். பெருந்சோற்றுத் தலைவி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அந்த நூறு பேரில் இவர் ஒருவரே பெண் போராளி. எண்ணிப் பாரீர்!

திருச்சியில் பய ணத்தைத் தொடங்கிய இந்தத் தமிழர் பெரும் படை வழி நெடுக இந்தியை எதிர்த்து எக்காளமிட்டு வந்தது. தந்தை பெரியார் தலைமையில் வழியனுப்பி விழா ஓகோ என்று திருச்சியில் நடைபெற்றது.

படை இன்ன தேதியில் இத்தனை மணிக்கு இந்த ஊருக்கு வரும் என்ற தகவலை விடுதலை நாள்தோறும் வெளியிட்டு அதன்படி அட்சரம் பிறழா மல் படை வீர நடைபோட்டு வந்தது.

வழி நெடுகத் தமிழர்கள் பெரும் படைக்குச் சீர்மிகு வரவேற்பு. ஆகஸ்டு முதல் தேதி திருச்சி உறையூரி லிருந்து புறப்பட்ட தமிழர் பெரும் படை செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையை வந்தடைந்தது.

திருவல்லிக்கேணி கடற்கரையிலே ஒன்றரை லட்சம் மக்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலை மையில் கூடி மாபெரும் வரவேற்பினை அளித் தனரே!
இங்கே தலைகள்! அங்கே அலைகள்! அப்படி ஒரு காணரும் காட்சி! அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலாக தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் முன் வைத்தார் என்பதை அறிக!

- மயிலாடன்

குறிப்பு: ராமர் படம் எரிப்புப் போராட்டம் நடத்தப் பட்டதும் இதே ஆகஸ்டு ஒன்றில் தான் (1956).

தமிழ் ஓவியா said...


இன்னொரு சேரன்மாதேவியா!


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பல வகைகளிலும் பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அக்கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்கிற பிரச்சினை வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட போதிலிருந்தே ஆரம்பித்தது. இலண்டன் பிரிவிகவுன்சில் வரை வழக்கு சென்றதுண்டு.

சென்னை உயர்நீதிமன்றமோ ஒரு வாரம் வடகலை நாமம் - இன்னொரு வாரம் தென்கலை நாமம் போட்டுக் கொள்ளலாம் என்ற சமரசத் தீர்ப்பினை வழங்கி வழக்கின் கோப்பை முடித்துக் கொண்டது. அக்கோயிலில்தான் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலிலே படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைச் சாலைக்குச் சென்று இப்பொழுது பிணையில் நடமாடிக் கொண்டு திரிகிறார்கள்.

அந்தக் கோயிலில் இன்று வரை பச்சையாக தீண்டாமை அனுசரிக்கப்படுகிறது என்பதுதான் மிகவும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

கோயிலுக்குள் செல்வதற்குக்கூட இரண்டு வாயில்களை வைத்துள்ளனர். ஒரு பாதையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகப் பம்மாத்து அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்கள் செல்லு கிறார்கள். இன்னொரு வாயில் வழியாகத்தான் பார்ப்பனர் அல்லாதார் கோயிலுக்குச் செல்லுமாறு ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர்.

கோயில் பிரசாதம் வழங்குவதில்கூடப் பாரபட்சம் காட்டப்படுகிறது. பார்ப்பனர்கள் மரியாதையாக அமர வைக்கப்பட்டு பவ்வியமாக பிரசாதத்தை வழங்கி வருகின்றனர், கோயில் அர்ச்சகர் பார்ப்பனர்கள்.

பார்ப்பனரல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் கோயிலுக்கு வெளியே நிறுத்திப் பிரசாதம் வழங்கப்படுகிறது. (நேற்றைய விடுதலையில் படத்துடன் அதனை வெளிப்படுத்தினோம்!)

இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், சேரன் மாதேவியில்தான் இத்தகைய பாகுபாடுகள் காட்டப்பட்டன.

பார்ப்பன மாணவர்களுக்குத் தனிப் பந்தியும், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனிப் பந்தியும் வைக்கப்பட்டன; பரிமாறுவதில் வழங்கப்பட்ட உணவில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது.
காங்கிரசின் செயலாளராகவிருந்த தந்தை பெரியாரும், தலைவராக இருந்த டாக்டர் வரதராஜூலு நாயுடுவும், திரு.வி.க.வும் கிளர்ந்தெழுந்தல்லவா அந்தப் பாரபட்சத்தை ஒழித்துக் கட்டினர்.

இப்பொழுது அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதாரிடையே பச்சையான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதாரே இந்த நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கோயில் கருவறைக்குள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஒரு பக்கத்தில் - அதனை எதிர்த் துப் பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

இன்னொரு பக்கம் கோயிலில் பிரசாதம் என்ப தில்கூட நம் மக்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்றால் அதனை எப்படி அனுமதிக்க முடியும்? இது சட்டப்படியும் தவறு, நியாயப்படியும் தவறு அல்லவா; இந்து அறநிலையத்துறை இதில் தலையிட்டுப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்; இல்லையேல் இதற்காகவே தனிப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றோம்.

இன்றளவிலும் பச்சையாக தீண்டாமையும், ஜாதியும் தலை விரித்தாடும் இடம் கோயிலாகத் தானிருக்கிறது.

கோயில் என்பது கடவுள் பக்திக்காக அல்ல - ஜாதியைப் பாதுகாக்கத்தான் என்பது விளங்க வில்லையா? தமிழர்களே, இவற்றை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கப் போகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைத் திருமணம்



சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் வரலாற்றில் 1928-ஆம் ஆண்டு 28-ஆம் தேதி தொடங்கி அவருடைய கருத்துக்கள் 26.8.1953 சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பார்ப்பன நீதிபதிகள் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த பின்னும் தொடர்ந்து சுயமரியாதைத் திருமணத்தை நடத்தியே வந்தார் பெரியார்.
சிலர் சட்டத்தைக் கவனியாமலும் அதனால் சட்ட ரீதியான இழப்புகளைப் புறந்தள்ளியும் எல்லாவற்றிற்கும் துணிந்து பலர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ள முன்வருவதை நாம் காண்கிறோம். ஆகவே இம்மாதிரித் திருமணங்களில் சுயமரியாதைக்காரர்களுக்கு கொள்கைப் பிசகோ, நியாயப்பிசகோ இருப்பதாக நமக்குத்தோன்றவில்லை என்று தலையங்கம் எழுதினார் (குடிஅரசு 12.10.1930) அந்த நீதியே 84 ஆண்டுகளுக்குப்பின்னும் நிலைத்து வெற்றி பெற்று வருகிறது.
நமது அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் 21.8.1967-இல் சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று சட்ட மன்றத்தில் முன் தேதியிட்டு நிறைவேற்றப்பட்டது. 17.6.2013-இல் நீதியரசர் கர்ணன் அவர்களின் தீர்ப்பு, பெரியார் கருத்து உலகமயமாகி வருகிறது என்பதற்கு அடையாளம் என்று 20.6.2013-ஆம் தேதி நமது விடுதலையில் தலைவர் கி.வீரமணி அவர்களின் பாராட்டு அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம் ஜெகதீஷ்சிங் ஆகியோர் உறுதிப்படுத்திய தீர்ப்பும் வரலாற்றுச் சிறப்புடையதாகும். இந்த வரலாறு வரிசைப்படுத்தி எங்கள் எல்லோருக்கும் நூல் வடிவில் வெளியிட வேண்டுகிறேன்.

- அ.இனியன் பத்மநாதன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


குறைந்துபோகும்!



மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந் திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதியையும் ஆராயும் படிச் செய்துவிட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

- (விடுதலை, 16.10.1960)