Search This Blog

10.7.13

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி
முதற்கட்டம், ஆக.1 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
இரண்டாவது கட்டம் ஒத்த கருத்துடையோர்களை அழைத்துப் பொது மாநாடு!  மாவட்டங்களில் கருத்தரங்கங்கள்
மூன்றாவது கட்டம் மறியல் போராட்டம்!!
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள்
சென்னை, ஜூலை 9- ஜாதி தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்ட திட்டங்கள் அறிவிக் கப்பட்டுள்ளன.

9.7.2013 செவ்வாய் காலை சென்னை பெரியார் திடல், துரை. சக்ரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

இரங்கல் தீர்மானம்

தோழர் இளவரசன் மறைவிற்கு இரங்கல்

ஜாதி மறுப்பு - காதல் திருமணம் செய்துகொண்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் தோழர் இளவரசன் அவர்களின் அதிர்ச்சியூட்டக்கூடிய மறைவிற்கு இத்தலைமை செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், சொல்லொணாத் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இளவரசனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற அய்யப்பாடு எழுந்துள்ள நிலையில்,  உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிப்பதில், தமிழ்நாடு அரசு சற்றும் தயக்கம் காட்டக்கூடாது என்று தமிழ்நாடு அரசை, குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மறைவிற்குக் காரணமாக இருக்கக்கூடிய ஜாதிய சிந்தனையையும், வெறியையும், கட்டமைப்பையும் எதிர்த்துப் போராடுவதே - ஒழிப்பதே இதற்குக் கொடுக்கும் பொருத்தமான பதிலடி என்பதால், திராவிடர் கழகம் மேலும் தீவிரத் தன்மையுடனும், ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்தும் ஜாதி ஒழிப்பை முதன்மைப்படுத்திக் கடுமையாகப் பாடுபடுவது - போராடுவது என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.

நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் வி.எஸ்.டி. அழகப்பன் அவர்களின் மறைவிற்கு (28.6.2013) இச்செயற்குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

தீண்டாமை ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம்

தந்தை பெரியார் தம் வாழ் நாளில் இறுதி யாக அறிவித்த தீண்டாமை ஒழிப்பு - ஜாதி ஒழிப் புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தும் வகையிலும் பல கட்டப் போராட் டங்களை நடத்துவது என்று இச் செயற்குழு முடிவு செய்கிறது.

1) முதற்கட்டமாக வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று அனைத்துக் கழக மாவட்டத் தலை நகரங்களில்  (புதுச்சேரி, காரைக்கால் உட்பட) ஆர்ப்பாட்டம் நடத்துவது.

2) இதில் ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு ஒன்றினை நடத்துவது; மாவட்ட தலை நகரங்களில் கருத்தரங்கள் நடத்துவது.
3) மூன்றாவது கட்டமாக மறியல் போராட் டத்தை நடத்துவது என்று இத்தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.

இந்தப் பிரச்சினையில் வெற்றி காணும் வரை போராட்டங்களைத் தொடர்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:
சட்டம் ஒழுங்கின் பரிதாப நிலை

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக நாள் தோறும் கொலைகள், கொள்ளைகள், வன் முறைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. சட்டம்  ஒழுங்கு என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்து நிற்கிறது.

கூலிப் படைகள் தங்குத் தடையின்றி ராஜ நடை போட்டுத் திரிகின்றன. ஜாதிப் பிரச்சி னைகள் தலை எடுத்து வன்முறைகள் தாண்ட வமாடத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சி னையில் போதுமான அளவுக்கு முன்னுரிமை அளித்து வன்முறைகளைத் தடுத்து நிறுத்து மாறு இச்செயற்குழு வலியறுத்துகிறது.

தீர்மானம் 4:

ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமனத்தில் சமூக நீதி தேவை
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 181 ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களை இடை நிலை (SGT)  மற்றும் பட்டதாரி (BT Asst.) ஆசிரியர் பணிகளில் பணி நியமனம் செய்ய வழி செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இனி வருங்காலங்களில் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்கான பணி நியமனத்திற் குத் தேவைப்படும் ஒரு தகுதித் தேர்வில் சமூகநீதி பின்பற்றப்படாமல் அனைத்துப் பிரிவு மக்களும் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ் நிலைக்கான பணியை மறுக்கும் செயலாகும்.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) வகுத்துள்ள விதிமுறைகளின் படியே இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தனித்தனியே தகுதி மதிப்பெண்கள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனைத்துப் பிரிவினருக் கும் 60 சதவீதம் என்பதை கட்டாயமாக்கியது மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு விரோதமான தும், சமூகநீதிக்கு எதிரானதும் ஆகும்.

அரசாணை எண் 181 திருத்தப்பட்டு, வெவ்வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் வெவ்வேறு தகுதி மதிப்பெண்கள் வழங்கி இடஒதுக்கீட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்ற வழி செய்ய வேண்டும் என தலைமை செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

அரசாணை எண் 252 தகுதித் தேர்வின் அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக் கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்திற்கான வழியைக் கூறாமல் வெயிட்டேஜ் முறையை அறிமுகம் செய்துள்ளது. பட்டயம், பட்டம் பெற்றவரின் மேல்நிலைப்பள்ளி (+2) கல்வியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் வழங்கி உள்ளது மிகப் பெரும் சமூக அநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வே தேவையில்லை என்பது நமது நிலைப்பாடு எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது என்ற அரசின் முடிவிலும் சமூகநீதிக்கு எதிராக உள்ள வெயிட்டேஜ் முறையைக் கைவிட்டு, அரசாணை எண் 252-அய் திரும்பப் பெற்று, பதிவு மூப்பையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையிலான பணி நியமனங்கள் /மாற்றுத் திறனாளி/பெண்கள் /திருநங்கை என அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் சமூகநீதி அடிப்படை யிலான வெவ்வேறு கட்-ஆஃப் நிர்ணயித்து இடஒதுக் கீட்டு முறையைக் கடைப்பிடிக்க தலைமைச் செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும், நமது கோரிக்கையின் அடிப்படையில் அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத் தியும் விரைவில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5 (அ)
சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துக!

தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, ராமன் பெயரைச் சொல்லித் தடுப் பது அண்ணாவின் பெயரில் ஆட்சி வைத்திருக் கும் அண்ணா திமுக ஆட்சிக்கு அழகன்று என்பதைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்கினை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு முதலமைச் சரைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5 (ஆ)

காவிரி, முல்லைப் பெரியார் பிரச்சினைகளில் உரிமை மீறல்
காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரி யாறு போன்ற பிரச்சினைகளில் உச்சநீதிமன் றத்தின் தீர்ப்பையும் புறந் தள்ளி நடந்து கொண்டு வரும் கருநாடகம்  மற்றும் கேரள அரசுகளுக்கு இச்செயற்குழு தன் வன்மை யான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. வஞ்சிக்கப்பட்டும் தமிழ்நாட்டின் உரிமை களை மீட்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் ஒன்று திரட்டி, பலமான முறையில் போராடி, உரிமைகளை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. மத் திய அரசு அரசியல் கண்ணோட்டத் தோடு இந் தப் பிரச்சினைகளை அணுகாமல் நடுநிலை யோடு சட்டப்படியான முறையில் சுமூகமாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் கடமையினை மேற்கொள்ளுமாறு இச்செயற் குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6 (அ)
ஈழத் தமிழர் பிரச்சினை

இலங்கை சிங்கள இனவாத அரசு - அய்.நா.வின் தலையிட்டுக்குப் பிறகும்கூட, ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதில்தான் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது.

ஜெயவர்த்தனே - ராஜீவ் காந்தி ஒப்பந்தத் தில் கூறப்பட்டுள்ள மாகாண உரிமைகள் குறித்த 13ஏ சட்டத் திருத்தத்தையும் செயலிழக்க வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் தலையிட்டு நிறைவேற்றப் பட்ட ஒப்பந்தத்தில் கண்டுள்ள சட்டப் பிரிவைச் செயல்படுத்த வைப்பதில் தலையிடவும், வலியுறுத்தவும் இந்திய அரசுக்குக் கூடுதலான தார்மீக உரிமை இருப்பதை இச்செயற்குழு இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டி வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6 (ஆ)
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை

தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைப் பிடிப்பது அன்றாட நடவடிக்கையாகவே ஆகி விட்டது. போர்க்  கப்பல்களை நிறுத்தி அச் சுறுத்தி வருகிறது.

உலகின் வல்லரசு பட்டியலில் இடம் பெறப் போவதாகக் கூறி கொள்ளும் 120 கோடி மக்களைக் கொண்ட இந்திய அரசு, ஒரு சின்னஞ்சிறு குட்டித் தீவான இலங்கை அரசிடமிருந்து தன்னாட்டு மீனவர்களைக் காப்பாற்றும் திறனின்றி இருப்பது - இந்திய அரசுக்கு உலக நாடுகளின் மத்தியில் பொது மரியாதையைப் பெரிதும் குறைக்கக் கூடியது என்பதை இச்செயற்குழு சுட்டிக் காட்டுகிறது. இல்லைலெனில் கடுமையான போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

                 -----------------------------"விடுதலை” 10-7-2013

45 comments:

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...

மதுரை, ஜூலை 9- நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண் டும் என மதுரையில் நேற்று (8.7.2013) நடை பெற்ற பொதுக் கூட்டத் தில் தமிழர் தலைவர் வலியுறுத்தினார்.

அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை, சேது சமுத்திரத் (தமிழன் கால்வாய்) திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி நாகர் கோவில் முதல் மதுரை வரை -ஒரு குழுவும் தென்காசி முதல் மதுரை வரை மற்றொரு குழுவும் தொடர் பிரச்சாரம் நடத்தி வந்தன. இந்த பிரச்சார நிறைவு விழா மதுரை டி.எம். கோர்ட் அருகே 8.7.2013 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரிமை மீட்பு எழுச்சி உரை

இக்கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: "இரண்டு பிரச்சினை களை முன்னிறுத்தி இங்கே இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. ஒன்று அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது, இன்னொன்று சேது சமுத்திரத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது 43 ஆண்டு களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை. தந்தை பெரியார் தொடங்கி, அன்னை மணியம்மை யார் தலைமையில், அதற்கு பின் என்னைப் போன்றோர் தலைமை யில் தொடர்ந்து எழுப் பப்பட்டு வரும் கோரிக்கை. கட்சிக ளுக்கு அப்பாற்பட்டு, நாத்திகமா, ஆத்திகமா என்பதற்கு அப்பாற் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில் எழுப் பப்படும் கோரிக்கை. இன்னும் சூத்திரன், பஞ்சமன் என்றில்லாமல் மனிதராக இருக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் பிரச் சினை. இதை அலட்சி யப்படுத்தினால் ஆட்சிய திகாரமே ஆட்டம் காணக் கூடும் என்பதனை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்லர். மற்ற நாடுகளில் மனிதன் மனிதனாகப் பிறக்கிறான். ஆனால் இந்த நாட்டில் தான் மனிதன் பிறக்கும் போதே, சூத்திரானாக, பஞ்சமனாகப் பிறக்கின் றான். சாகும்போதும் சூத்திரனாக, பஞ்சம னாகத்தான் சாகின்றான். இன்னும் தீண்டாமை இருக்கிறது,ஜாதி வேற்றுமை இருக்கிறது. இன்றைக்கும் ஜாதி வேற்றுமையால்தான் திவ்யாக்களும், இளவர சன்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை.

தீண்டாமை, இன்னும் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. அரசியல் சட்டத்தில் 17ஆவது பிரிவில் தீண்டாமை நீக்கப்பட்டது (ருவேடிரஉடைவைல ஹடிடளைநன) என்று தான் இருக்கிறது: இன்னும் ஜாதி ஒழிக்கப் பட்டது என்று அரசியல் சட்டத்தில் இல்லை. அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகப் பயிற்சி பெற்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி சிறீ ரங்கம் கோயில், காஞ்சி காமாட்சி கோயில் போன்ற இடங்களில் அர்ச்சகர்களாக நியமிக் கப்பட வேண்டும். ஜாதி இழிவு நீங்கும் வரை விட மாட்டோம். சட்டப்படி யாக போராடுவோம்! அறப் போராட்டமாக போராடுவோம். ஒரே நாளில் முடியும் போராட்டமாக அல்ல பல கட்டங்களாக போராடுவோம் உறுதி யாக வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்பட்டும்கூட இப்பொழுதுதான் ஒரு பிற்படுத்தப்பட்டவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (சதாசிவம்) ஆகியிருக் கிறார். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீதியரசர் பி. சதா சிவம் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார் கள். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தமிழர் தலைவர் பேசி னார். மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு

திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

இந்த நாட்டினுடைய 65 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக தமிழ்நாட்டைச் சார்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதியரசர் சதாசிவம் அவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருகின்ற 19 ஆம் தேதி பதவியேற்க விருக்கிறார். ஆனால், ஒரு கொடுமை என்னவென்றால், அவர் அந்தப் பதவியில் 9 மாதங்கள்தான் இருப்பார்.

இந்த 9 மாதத்திலும் அய்ந்து மாதங்கள் வரவேற்பு; மீதி நான்கு மாதத்தில் பிரிவு உபசார விழா; இதிலேயே பதவிக்காலம் முடிந்துவிடுமே! ஆனால், அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்; ஏர் பிடித்த உழவர் அவர்; ஈரோட்டு மண்ணிலே பிறந்த ஒருவர், முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவதற்கு முன்னாலேயே, நீதிபதிகள் நியமனங்களில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தேவை என்று கூறியுள்ளார். இதுவரை மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகள் நியமனங்களில் மட்டும்தான் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. முதல் முறையாக பெரியார் பிறந்த மண்ணிலே இருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்திருக்கிறார்.

அவர் பதவி ஏற்பதற்கு முன்பு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்திலும் இடஒதுக்கீடு அமலாக வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார். இதற்காகத்தான் திராவிடர் கழகத்தினுடைய அடுத்த கிளர்ச்சி! அதில் ஒன்றும் சந்தேகமில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.

(8.7.2013 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையிலிருந்து...)

தமிழ் ஓவியா said...


தலைமைச் செயற்குழுவில் கழகத் தலைவரின் பன்மணித் திரள்கள்!

புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

1. தென்மாவட்டங்களில் ஜாதி தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை) மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. அவற்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களுக்கும், மந்திரமா? தந்திரமா? கலைஞர்களுக்கும், ஒருங்கிணைத்த வர்களுக்கும், கூட்டங்களைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் பாராட்டுகள் - நிறைவு விழா மதுரைப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் - பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர், மகிழ்ச்சி!

2. கும்மிடிப்பூண்டி மாநில மாநாடு திட்டமிட்ட முறையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கும், ஒருங்கிணைத்தவர்களுக்கும் சிறப்பான பாராட்டுகள் - எனக்குப் பெரும் அளவில் மனநிறைவை அளித்த மாநாடு இது!

3. மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலா ளரணி இவற்றின் செயல்பாடுகள் தனித்தனியாக நடை பெற்று, மேற்கொள்ளப்பட்ட பணிகள் தலைமைக்குத் தெரிவிக்கப்படவேண்டும். நகராட்சி, மாநகராட்சிகளில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இயக்கம் வலிமை பெற அவ்விரு அணிகளும் செயல் திட்டத்தோடு சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும்.

4. தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மாண வரணி, இளைஞரணி, மகளிரணி சார்பில் தனித்தனியே நாடு தழுவிய அளவில் கருத்தரங்கம் நடைபெறவேண்டும். அவற்றின் முக்கிய பொருள்: ஜாதி ஒழிப்பு, மகளிர் உரிமை, சமூகநீதி.

5. மன்றல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. இயக்கத்தின் நடவடிக்கைகளைப் பல தரப்பினரும் பாராட்டுகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் நடைபெற்றுள்ளதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் நெல்லையில் நடைபெறவுள்ளது. ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம், அதற்கான ஆக்க ரீதியான செயல்பாடுகள் இன்னொருபுறம் - அதுதான் நாம் நடத்தும் மன்றல் நிகழ்ச்சி.

6. மண்டலத் தலைவர்கள், செயலாளர்களுக்கென தனியே ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு, அவர் களின் பணிகள் வரையறுக்கப்படவேண்டும் (இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்).

7. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் பல கட்டங்களில் நடைபெறும். ஒவ்வொரு ஊரிலும் இந்தப் போராட்டம்பற்றி பொதுமக்களுக்குத் தெரியும் வண்ணம் - அவர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் சுவர் எழுத்துகள், துண்டறிக்கைகள், கழகம் வெளியிட்ட கையடக்க ஆவண நூல் பரப்புதல் (நன்கொடை ரூ.5 மட்டும்தான்) என்று புது உத்வேகத்தோடு பணிகள் நடைபெற்றாகவேண்டும்.

8. இந்தப் போராட்டத்திற்கு எந்தப் பக்கத்திலிருந்தும் எதிர்ப்புக் கிடையாது. ஆளும் கட்சி - எதிர்க்கட்சி, ஆத்தி கம் - நாத்திகம் என்பது போன்ற எந்தப் பிரச்சினையும் இந் தப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் கிடையவே கிடை யாது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து நடத்தலாம்.

9. பணி செய்பவர்களுக்கு இயக்கத்தில் உரிய இடம் அளிக்கப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்படும். பணிதான் அளவுகோலே தவிர மற்றவையல்ல.

10. இயக்கத்தைப் பனைமரத்துக்கு ஒப்பிட்டுக் கூறுவார் தந்தை பெரியார். தண்ணீர் ஊற்றாமலேயே வளரக்கூடியது! காரணம், நம் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை சுயநலமின்றி, எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி, அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செய்யக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம் - தொண்டர்கள் திராவிடர் கழகத்தினர்.

11. என்னைப் பொறுத்தவரை உடல் உபாதைகள் பல இருப்பினும், கழகத்தின் செயல்பாடுகள் எனக்கு உற்சாகம் என்கிற டானிக்கை அளிக்கின்றன! ஓய்வு குறைகிறது - நல்ல ரத்த ஓட்டம் ஏற்படுகிறது - எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்!

- பன்மணித் திரளாக மேற்கண்ட கருத்துகளை சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எடுத்துக் கூறினார் (9.7.2013).

தமிழ் ஓவியா said...


இலங்கையில் 13-ஏ சட்டம் தப்புமா?


கொழும்பு, ஜூலை 10- இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கரமேனன் தலைமையில் இலங்கை சென்ற குழு இலங்கை அதிபர் ராஜபக் சேவைச் சந்தித்து 13-ஏ திருத்தச் சட்டம் செயல் படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடத்தப் பட்ட போர் முடிவுக்கு வந்த பின்பு, முகாம்களில் தங்க வைக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு பணிகள் துவங்கின. மறுவாழ்வு திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி செய்து வருகிறது.

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு விரைவில் தேர்தல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியா இலங்கையின் 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, தமிழர்கள் வசிக்கும் மாகாண கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அந்தத் திருத்தத்தை மறு ஆய்வு செய்து அதிகாரங்களை குறைக்க இலங்கை அரசு முயற் சித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் தலை மையில் 6 பேர் குழு கொழும்பு வந்துள்ளது. கொழும் பில் அதிபர் ராஜபக்சேவை மேனன் சந்தித்து பேசி னார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் மறுசீரமைப்பு திட்டப்பணிகள் குறித்து விவாதித்தனர். இதன்பின்னர், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தமிழர்கள் உள்பட அனைத்து மக்களும் சமமாகவும், கண்ணியமாகவும் நடத்தப் பட வேண்டுமென இந்தியா விரும்புகிறது. இந்த அடிப்படையில், உலக நாடுகளுக்கு இலங்கை அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். 13 ஆவது திருத்தத்தையும் கடந்து சிறப்பான அரசியல் தீர்வை விரைவில் காண வேண்டுமென மேனன் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு கூட்டாக செயல்படுவது என முடிவு செய்து, இதற்காக முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சிவசங்கர் மேனன், இலங்கை ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு ராணுவ அமைச்சர் முகமத் நசீம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: கழக முயற்சிக்கு முதல்கட்ட வெற்றி!

94 பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்க!

சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை, ஜூலை 10- ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவை யில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் பலன் பெறுவர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2010 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி 32 ஆயிரம் பட்டதாரிகள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர்.

அனைத்து மாவட்டங்களிலும் 12.5.2010 முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. பணி நியமன ஆணைக்காகக் காத்திருந்த அவர்கள் யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே இனி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று அரசு கூறிவிட்டது.

இதனை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்ளிட்ட 70 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களின் மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர்நீதி மன்றத்தின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது.

இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி அவர்கள் 70 பேரும் உயர்நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல் என்.பரந்தாமன் உள்ளிட்ட வேறு 24 பேர் தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதனை எதிர்த்து அவர்கள் அனைவரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

ஆக 70 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், பின்னர் 24 பேர் தனியாக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு தாரர்கள் 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப் பளித்தனர்.
தீர்ப்பு விவரம் வருமாறு:

2010-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்புப் பணிக்கு மனுதாரர்களின் பெயர்களை வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய நிலவரப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் எழுதாமலேயே அவர்கள் ஆசிரியர் பணி நியமனத்துக்கான முழுத் தகுதியையும் பெற்றி ருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற அறிவிக்கையை 23.8.2010 அன்று ஆசிரியர் கல்விக் கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. எனினும் அதில் ஒரு விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிக்கை வெளியாகும் முன்னரே ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற் றிருந்தால், அந்த பணி நியமனங்களை 2001 ஆம் ஆண்டின் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிமுறைகளின்படி மேற்கொள்ளலாம் என்ற அந்த விதிவிலக்கில் கூறப்பட்டிருந்தது.

ஆகவே, இந்த வழக்கில் தொடர்புடைய 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவை யில்லை. எனினும் தற்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட காலியிடங்கள் இல்லை என்று அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார்.

ஆகவே, எதிர்காலத்தில் காலியிடங்கள் உருவாகும் போது இவர்கள் அனைவரையும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர் பணியில் நியமித்திட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கடந்த 5.7.2013 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...



போர்ச் சங்கு!


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நேற்று கூடி போர்ச் சங்கு ஊதிவிட்டது.

தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாதாம் - கூடாதாம் - கருவறைக்குள் நுழைந்து தமிழர்கள் அர்ச்சனை செய்தால் கடவுள் சக்தி வெளியே தலைதெறிக்க ஓடிவிடுமாம். எஞ்சி இருப்பது கல்லோ, செம்போ அவ்வளவுதானாம்.

இவ்வளவுக்கும் அந்தக் கோவிலைக் கட்டியதில் பார்ப்பனர்களுக்கு எந்தவிதப் பாத்தியதையும் இல்லை. ஒரு செங்கல்லைத் தூக்கிக் கொடுத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் கோவிலுக்குள் இருக்கும் அந்தக் கடவுள் சிலையைச் செய்தவன்கூட சிற்பியாகிய தமிழன்தான்.

கோவிலைக் கட்டி கோவிலில் கருவறையையும் உருவாக்கி, அதற்குள் வைக்கவேண்டிய சாமி சிலை யையும் வடித்து, கோவிலுக்கு குடமுழுக்கு என்று அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து முடித்த நிலையில், கும்பத்தில் ஏறுவதற்குச் சாரம் அமைத்துக் கொடுத்து, கும்பத்தில் ஊற்றவேண்டிய பால் உள்பட அனைத்துப் பொருள்களையும் கொண்டுவந்து கொடுப்பவன் எல்லாம் தமிழன்! தமிழன்!! தமிழன்தான்!!!

அதுவரை எள் மூக்கு முனை அளவுகூட எந்தவித உதவியும் செய்யாத பார்ப்பனர் கும்பத்திற்கு அபிஷேகம் செய்து, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் - சம்பந்தமே இல்லாத புரியாத சமஸ்கிருத மந்திரங்களை ஓதிய அக்கணமே கோவிலுக்கும், தமிழனுக்கும் எந்தவிதமான ஒட்டுறவும், சம்பந்தமும் இல்லாமல் போகிறது.

இதைவிட கொடுமையான சூழ்ச்சி உண்டா? மண்ணின் மைந்தர்களுக்கு இதைவிட அவமானம் உண்டா?
எந்த அளவுக்குக் கொடுமை என்றால், அந்தக் கடவுள் சிலைக்குக்கூட பூணூல் மாட்டி வைப்பதுதான் - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஏழுமலையானுக்கு மூன்றரை கிலோ தங்கத்தினால் ஆன பூணூலை மாட்டியது மறக்கப்படக் கூடியதுதானா?

கோவில் என்பது பார்ப்பன உயர்ஜாதி ஆணவத்தை, வருணாசிரமத்தை பாதுகாக்கும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்னவாம்!

உலகத்தில் வேறு எங்கேயாவது - சொந்த நாட்டுக் காரன் இவ்வளவுக் கேவலமாக அவமதிக்கப்படு வதுண்டா? அப்படி அவமதித்தால் மயிலே மயிலே இறகு போடு! என்று யாசகம் கேட்டுக்கொண்டுதான் இருப் பானா? மனு போட்டுக் கொண்டுதான் இருப்பானா?

மனிதனுக்கு முதலாவது உணர்வு என்பது சுய மரியாதைதானே. அதற்கே சவால் என்றால், அதனைக் கண்டு கொண்டு கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க முடியுமா?

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று திருக்குறளைவிட சுருக்கமாக மனிதனைப் படம் பிடித்துக் காட்டிவிட்டாரே தந்தை பெரியார்.

ஏதோ ஆகமமாம், அதில் சொல்லப்பட்டுள்ளதாம் - பார்ப்பனர் அல்லாதவன் கருவறைக்குள் சென்றால் கடவுள் தீட்டுப் பட்டுப் போய்விடுவாராம். யாரால் எழுதப்பட்டது அந்த ஆகமங்கள்? அவர்களாகவே எந்தக் காலத்திலோ சூழ்ச்சியாக எழுதி வைத்துக்கொண்டு அதனைப் பூச்சாண்டியாகக் காட்டி நம்மை மிரட்டு கிறார்கள் என்றால், அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள தமிழர்கள் எல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்களா?

தன்மான உணர்வினை தமிழர்களுக்கு ஊட்டிய தந்தை பெரியார் அவர்களால், தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்ட போராட்டம் இது.

இன்றைக்கு 43 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் சட்டம் கொண்டுவந்தாலும், அதனை மலம் துடைக்கும் காகிதமாகப் பார்ப்பனர்களும், நீதிமன்றங்களும் நினைப்பது என்றால், இதனை எப்படி அனுமதிக்க முடியும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி. ஆத்திகம் - நாத்திகம் என்கிற பிரச் சினைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பொதுப் பிரச்சினை இது.

எதிர்க்கக் கூடியவர்கள் பார்ப்பனர்களும், அவர் களின் ஆதிக்கத்தில் இருக்கக் கூடிய நீதிமன்றமும்தான்.
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட மூன்று கட்டப் போராட்டங்களுக்கும் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் போரணியாக நின்று போர்ச் சங்கு ஊதிப் புறப்படுவோம் - வாரீர்!

தமிழர்களின் பழம்பெருமை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; இப்பொழுது கோவில்களில் நாம் மீட்கும் இனவுரிமையில்தான், இழிவை ஒழிக்கும் உரிமையில் தான் தமிழர்களின் உண்மையான வீரதீரமும், தன்மான மும் உண்மையில் இருக்கிறது!

மறவாதீர்! மறவாதீர்!! முதல் கட்டப் போராட்டம் ஆகஸ்ட் முதல் தேதியில் - கழக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! ஆர்ப்பரித்துக் கிளம்புக அரிமா சேனையே!

தமிழ் ஓவியா said...

ஆகமங்களில் இடைச் செருகல் - 2


எதற்கு எடுத்தாலும் ஆகமங்கள் ஆகமங்கள் என்று கூறி கோயில்களைத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்துள்ளனரே பார்ப்பனர்கள்; அந்த ஆகமங்களில் இடைச் செருகல் எப்படி எல்லாம் நடந்துள்ளன என்று நீதிபதி எஸ். மகராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை (பக்கம் 20-21) என்ன கூறுகிறது? படியுங்கள்.

1. ஆகமங்களில் காமிகம், காரணம், அஜிதம், சகஸ்ரம், சுப்ரபேதம், ரவுரவம், மகுடம், மதங்கம், கிரணம் வாதுளம் என்பவற்றின் பகுதிகள் சமஸ்கிருதத் தில் அச்சில் வெளி வந்துள்ளன. 28 ஆகமங்களில் புதுச்சேரி பிரஞ்சு ஆராய்ச்சி நிலையத்தில் (குசநஉ ஐளேவவைரவந டிக ஐனேடிடடிபல) 23 ஆகம ஏட்டுச் சுவடிகள் இதுவரை கிடைத்துள்ளன. உபாகமங்களில் பவுஷ்கரம், பிருகேத் திரம், குமாரதந்திரம் என்பனவும் அச்சாகியுள்ளன.

2. கிடைக்கின்ற ஆகம ஏட்டுச் சுவடிகள் யாவும் நெடுங்காலத்துக்கு முன்னமே தொடங்கி, ஒன்றைப் பார்த்து ஒன்றை எழுதித் தொடர்பாக வந்தன வாகும். இவற்றைப் பெரும்பாலும் சிவாச்சாரியார்களே வைத்திருந் தார்கள். காலப் போக்கில் ஒரு ஏடு சிதிலமாகிப் போகின்ற நிலையில், ஒருவர் அதைப் பார்த்து மற்றொன்றை எழுதி வைத்துக் கொண்டபோது, தான் அவசியம் என்று கருதியவற்றையும் புதிதாக எழுதிச் சேர்த்துக் கொண் டனர் என்று நினைக்க இடமுண்டு. ஆகவே நமக்கு இன்று கிடைக்கின்ற ஆகமச் சுவடிகள் மூலச் சுவடிகள் அல்ல. வழிபாடு என்பது மாறிக் கொண்டே வருகின்ற ஒரு நெறி. அதைக் கூறுகின்ற ஆகமமும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓர் உதாரணம் கூறலாம்.

3. மாரியம்மன் என்ற தேவதை வழிபாடு சிறுதேவதை வழிபாட்டைச் சேர்ந்தது. எந்தச் சிவாயலத்தின் உள்ளும் மாரியம்மன் சிலை வைப்ப தில்லை. மாரி ஒரு காவல் தெய்வம். ஊரின் வெளியெல்லையில்தான் இதற்குக் கோயில் உள்ளது. ஆனால் சிவ வழிபாட்டைச் சொல்லுகின்ற விரிந்த ஒரு நூல் ஆகிய காரணாக மத்தில் இன்றைய அச்சுப் புத்தகத்தில் மாரிப் பிரதிட்டா விதி என்ற ஓர் அத்தியாயம் உள்ளது. (காரணாகமம், கொன்னூர் சண்முகசுந்தர முதலியா ரால் 1920ஆம் ஆண்டில் அச்சிடப் பட்டது) மாரிப் பிரதிட்டை சிவாகமத் தில் சொல்ல வேண்டிய பொருளல்ல. ஆயினும் பிற்காலத்தில் ஒரு சிவாச் சாரியார் தம் கைச்சுவடியில் இதை எழுதி வைத்துக் கொள்ள இதுவும் காரணாகமத்தின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. இது இடைச் செருகல் என்பது தெளிவு. இந்தப் பதிப்பாளர் காரணாகமத்தில் இறுதியில் பத்திர காளி உற்சவம், நாகப்பிரதிட்டை என்ற இரண்டு அத்தியாயங்கள் (108 சுலோ கங்கள்) இந்த ஆகம ஏட்டுச் சுவடியில், வேறு இடத்திலிருந்து எடுத்து சேர்க்கப்பட்டிருக்கிறதைக் கண்டு, அவற்றை ஓர் அநுபந்தமாய் அச்சிடுவ தாகச் சொல்லியிருக்கின்றார். ஆனால் இவைகளும் காரணாகமத்தின் ஒரு பகுதி என்றே மற்றவர்கள் கருது வார்கள். இதுபோன்ற வேறு சில பகுதிகளும் இருக்கக் கூடும். நமக்கு இன்று வேறுபாடு தெரியாமல் எல்லாம் ஒன்றாகி விட்டன. மாரி என்ற தமிழ்ப் பெயர் இன்று மகாமாரி என்றும், வடமொழியில் சீதலாதேவி என்றும் பெயர் பெற்று விட்டது.
4. காமிகாகமம் ஸ்நான விதிப் படலம் 109ஆவது சுலோகத்தில் புத்தர் (சாக்கியர்), சமணர் (நிர்கந்தர்) ஆகி யோரின் நிர்மால்யத்தைப் புசிப்பவர், பிற மதத்தவர் முதலியோரால் தீண்டப்பட்டால், ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இக்கருத்தையே சில ஆகமங்கள் சமண பௌத்த சமயங்களைக் குறை கூறுவதாக எஸ்.எஸ். சூரியநாராயண சாஸ்திரியும் தெரிவித்துள்ளார். (சிகண் டரின் சிவாத்துவைதம்) தமிழ்நாட்டில் இம்மதங்களின் தொடர்பு சுமார் கி.மு. 3-2ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது என்று ஆன்றோர் கருதுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


இவர்கள் பற்றிய குறிப்பு ஆகம நூலில் இடம் பெறுகிறது என்றால், அக்கருத் துக்கள் இன்னும் சில நூற்றாண்டுகள் பிற்பட்டே இடம் பெற்றிருக்க வேண்டும். அதாவது சமணர் மதுரையில் ஆதிக் கம் பெற்றிருந்த காலமாகிய கி.பி. 3-6ஆம் நூற்றாண்டுகளில் இத்தகைய விதிகள் வகுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. ஆனால் காமி கம், காரணம் போன்ற பிரதானமான சில ஆகமங்கள் பல காரணங்களால் கி.மு. 6-5 நூற்றாண்டுகளுக்கு முற் பட்டிருக்க வேண்டும் என்று கொள்ள இடமிருக்கிறது. ஆகவே காமிகாகமத் தில் இப்படி ஒரு விதியை நாம் இப்போது காணும்போது, இது மிகவும் பிற்பட்ட காலத்தில் ஆகமத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆதலால் ஆகமங்களில் இடைச்செருகல் நிகழ்ந்துள்ளன என்று எண்ணுவதற்கு இதுவும் மற்றமொரு சான்றாகிறது.

5. வைணவ சமயத்தில் பாஞ்ச ராத்திர ஆகமம் ஈசுவர சம்மிதையில் 11ஆவது அத்தியாயத்தில் காணும் ஒரு கருத்து இங்குக் கருதத் தக்கது.

ருக் யசுஸ் சாம வேதாம்ஸ் படத்பி: பிருஷ்டத: சிதை:

காயத் பி: அக்ரே தேவஸ்ய திரமிடீம், சுருதிம் உத்தமாம்
(சுலோகம் 231, 232)

இதன் பொருளாவது, ரிக் யஜுர் சாம வேதங்களைப் பாராயணம் செய்பவர்கள் திருமாலின் பின்புறத்தில் இருந்து கொண்டு சொல்ல வேண் டும்... உத்தமமான திராவிட வேதமாகிய திவ்வியப் பிரபந்தங்களை அனுசந்திப் பவர்கள் திருமாலுக்கு முன்புறமாக இந்து அனுசந்திக்க வேண்டும். இதிலிருந்து திவ்வியப் பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள், திருவாய்மொழி பாடிய நம்மாழ்வாரின் காலத்துக்குப் பிறகு (அதாவது 9ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்துக்குப் பிறகு) இந்த ஈசுவர சம்மிதை தொகுக்கப் பெற்றி ருக்க வேண்டும். இது ஆகமங்களில் அவ்வப்போது பக்த சமூகத்தின் தேவைக்கு ஏற்ப மாறுதல் செய்யப் பெற்று வந்தன என்பதும், அவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எல்லாம் பழமையானவை அல்ல என்பதும், அவற்றில் இடைச் செருகல்கள் நிகழ்ந் திருக்கின்றன என்றும் தெளிவா கின்றன. இதிலிருந்து வைணவ ஆகமங்கள் வேதத்தைவிட திராவிட வேதத்துக்கு அளித்திருக்கின்ற ஏற்றம் நன்கு புலப்படும்.

6. ஒரே ஆகமத்திற்குப் பல இடங் களிலிருந்து கிடைக்கின்ற வெவ்வேறு பிரதிகள் வெவ்வேறான அத்தியாயங் களையும், சுலோகங்களையும் பெற்றி ருக்கக் காண்கிறோம். இதனால் மூல ஆகமம் பலர் கைப்பட்டுப் பலவிதமாக மாறி வந்திருக்கின்றது என்றும் உறுதியாகிறது. (பிருகேந்திராகமப் பதிப்புகள்.)

7. ஆகமங்களை உலகுக்கு வெளிப்படுத்திய ரிஷிகளுடைய குலத்தை ஆராய்ந்தால், இடைச் செருகல் இருந்திருக்கும் என்பதற்குச் சான்று கிடைக்கிறது. சிவபெருமான் தமது ஐந்து முகங்களிலிருந்தும், 28 ஆகமங்களை, ரிஷிகளுக்கு உபதேசித் தார் என்று காமிகம் முதலான பல ஆகமங்களில் சொல்லப் பெற்றுள்ளது. மாணிக்கவாசகரும் மற்று அவை தம்மை மகேந்திரத்திலிருந்து உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் என்று கூறுமிடத்து, இக்கருத்தை ஏற்றே பாடுகின்றார். இவ்வைத்து முகங்களாவன: சத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவை. இவற்றுள் முதல் நான்கு முகங்கள் ஒவ்வொன்றும் ஐந்து ஆகமங்கள் வீதம் 20 ஆகமங்களையும், ஈசான முகம் 8 ஆகமங்களையும், ஆக 28 ஆகமங்களை உபதேசித்ததாக ஆகம வரலாறு. இந்த முகங்களில் உபதேசம் பெற்ற ரிஷிகள் முறையே கௌசிகர் காசியபர், பாரத்து வாஜர் கௌதமர், அகஸ்தியர் என்போர். இதன் விளக்கத்தைக் காமிகம், காரணம் முதலியவற்றின் தந்திராவ தாரப் படலத்தில் காணலாம். இவர்கள் பாரத்துவாஜர் பிராமணர். ஏனை நால்வரும் பிராமணர் அல்லர். காசியபர் (கொல்லர் மரபு), கௌதமர் (நாவிதர் மரபு), அகத்தியர் (வேடர் மரபு), இவ்வாறு பிராமணர் அல்லாத, அல்லது சிவப்பிராமணர் அல்லாத வேறு குலங்களில் பிறந்த இந்த ரிஷிகளே உபதேசம் பெற்று உலகத்தில் வெளிப்படுத்தினார்களே அன்றி, சிவப்பிராமணர்கள் அல்லர். இவ்வாறு சொல்லும் பகுதிகள் பிற்காலத்தில் சிவாச்சாரியர்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டன என்று நினைக்க இடமிருக்கிறது. ஆகமங்களில் இடைச் செருகல் நிகழ்ந்திருக்கிறது என்று கருதுவதற்கு இதுவும் ஓர் ஆதார மாகும்.

தமிழ் ஓவியா said...


தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம்


டெசோ தலைவர் கலைஞர் தலைமையில்
தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ)
கலந்துரையாடல் கூட்டம்

டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 16.7.2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் தமிழ்ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரை யாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

தமிழ் ஓவியா said...


அரசியல்வாதிகளின் அடி வயிற்றைக் கலக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு!


கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றால் பதவிகள் பறி போகும்!

புதுடில்லி, ஜூலை 11-கிரிமினல் வழக்குகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் நீடிக்க முடி யாது. மேல்முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்கும் தகுதி அவர் களுக்கு கிடையாது. உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கிரிமினல் வழக்கு களில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக் கப்பட்டவர்கள் தேர் தலில் போட்டியிடும் தகுதியை இழக்கின்றனர். தண்டனை காலம் முடிந்த பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர் தலில் அவர்கள் போட் டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8 (3)இல் கூறப்பட்டுள்ளது. அதே நேரம், பதவியில் இருக் கும் எம்.பி., எம்எல்ஏ.க் களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும் கூட, 3 மாதங்களுக்கு அவர்களை தகுதியிழப்பு செய்யக் கூடாது. அதற் குள் மேல் நீதிமன்றங் களில் அவர்கள் மேல் முறையீடு செய்தால், அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் தகுதியிழப்பு செய்யக் கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(4)இல் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், லில்லி தாமஸ் என்ற வழக் குரைஞரும், லோக் பிரஹரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் என்.சுக்லா வும், மக்கள் பிரதிநிதித் துவ சட்டப் பிரிவுகள் 8 (3), 8(4)இல் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனு மதித்தால், அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக் கம் மேலோங்க ஊக்கம் அளித்ததுபோல் ஆகி விடும். மேலும், தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனு மதிப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோத மானது. எனவே, நீதிமன் றங்களில் தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனடியாக பறிக்கும் படி உத்தரவிட வேண் டும் என்று மனுவில் அவர்கள் கோரினர்.

நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யா ஆகி யோர் அடங்கிய டிவி ஷன் அமர்வு இதை விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ.க்கள் பதவியில் நீடிக்க கூடாது. மேல் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்க முடி யாது. தண்டனை விதிக் கப்பட்ட தினத்தில் இருந்தே, அவர்கள் தகுதியிழப்பு பெற்று விடுவார்கள். இந்த தீர்ப் புக்கு முன்பாக தண் டனை பெற்று, மேல் முறையீடு செய்துள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந் தாது என்று உத்தர விட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக் கும், கிரிமினல் வழக்கு களில் சிக்கியுள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கும், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு அதிர்ச்சியை அளித் துள்ளது.

தலைவர்களின் கருத்துகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பல்வேறு கட்சி தலைவர்கள் கூறிய கருத்து:

கபில்சிபல் (மத்திய சட்ட அமைச்சர்): முத லில் தீர்ப்பை முழுமை யாக படிக்க வேண்டி யிருக்கிறது. அதன் பிறகு, இந்த தீர்ப்பால் அரசி யலில் ஏற்படும் பாதிப் புகளை பார்க்க வேண் டும். தீர்ப்பை மறுபரி சீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது உட் பட அனைத்து அம்சங் கள் பற்றியும் அரசியல் கட்சிகள் உட்பட அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகு தெரிவிக் கப்படும்.

ரவிசங்கர் பிரசாத் (பாஜ தகவல் தொடர் பாளர்): அரசியலை தூய்மையாக்கும் எந்த நடவடிக்கையையும் பாஜ ஆதரிக்கும்.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர்): இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் இதை எவ்வாறு கையாள போகின்றன என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

162 எம்.பி.க்கள் பதவிக்கு ஆபத்து

நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 543 பேரில், 162 பேர் மீது நீதிமன்றங் களில் கிரிமினல் வழக் குகள் நடந்து வரு கின்றன. இவர்களில் 76 பேர், 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கக் கூடிய குற் றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. அதேபோல், நாடு முழுவதும் 1,460 எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 30 சதவீதம், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க கூடியவை. இந்த வழக்கு களில் இவர்களுக்கு எதிராக தீர்ப்பு அமை யும் பட்சத்தில் இவர் களின் பதவி உடனடி யாக காலியாகி விடும்.

தமிழ் ஓவியா said...


எந்த தேசத்திலும்...



இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்கு தாண்டவமாடுகின்றன.
(விடுதலை, 30.4.1958)

தமிழ் ஓவியா said...


சிவன் கோயில்களில் பூசை செய்ய பார்ப்பனருக்கு அதிகாரமில்லை!

சிவாலயங்களில் பூசை செய்ய, தன்னைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்ளும் சுமார்த்தப் பிராமணர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அப்படி அவர்கள் பூசை செய்வார்களேயானால், நாட்டுக்குப் பெருங்கேடு என்று ஆகமங்கள் கூறுவதாக நீதிபதி மகராசன் தலைமையில் அமைந்த குழு கருத்து தெரிவித்துள்ளது. அதன் விவரம் இதோ:

1. சில சொற்பொருள்கள்

பிராமணர் என்ற பெயர் சாதி அடிப் படையில் அல்லாமல், பிரம்மத்தை உணர்ந் தவன் என்ற அடிப்படையில்தான் வழங்கப் பட்டது.

பட்டர் என்ற சொல், சாத்திரத்தை நன்கு உணர்ந்தவர் ஞானி தபோதனர், பூசகர் என்ற பொருளைக் கொண்டது என்று சுப்தகல் பத்ருமம் என்னும் வடமொழி நிகண்டில் (பக்கம் 478, பாகம் 3) விளக்கப் பெற்றிருக்கிறது.

அவ்வாறு அல்லாமல், தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு ஜீவிப் போரை பிராம்மணப்ருவன் (சொல் மாத்திரத்தில் பிராமணன்) என்று அதே சப்தகல் பத்ருமத்தில் (பக்கம் 460. பகுதி 3) சொல்லப்பட்டுள்ளது. வாழ்க அந்தணர் (திருஞான சம்பந்தர் தேவாரம்) அந்தணர் என்போர் அறவோர் (திருக்குறள்) என்ற தொடர்களில் அந்தணர் என்ற சொல் சாதியின்பாற்பட்டதல்ல என்பது ஆன்றோர் கருத்து. பேர் கொண்ட பார்ப்பான் (திருமூலர்) பரார்த்த பூசையில் சிவனைத் தீண்டினாலும் பூசித்தாலும் தேவலகத்துவதோஷம் (ஊதியத்துக் காகப் பூசை செய்தல் என்ற குற்றம்) பிறக்கும். பாங்கில்லை தீண்ருப் பரார்த்தம், அவர் தீண்டில் தங்கு உலகுக்காம் என்று தேறு என்ற மறைஞான சம்பந்தர் சைவ சமய நெறி என்ற நூலில் (பாடல் 437) கூறியுள்ள கருத்து அறிதற்பாலது.

2. சிவாச்சாரியாரும் சுமார்த்தப் பிராமணரும்

சிவாச்சாரியார் அல்லது சிவத்து விஜர் அல்லது ஆதிசைவர் என்போர் சுமார்த்தப் பிராமணர் அல்லர். அவர்கள் சிவப்பிராமணர் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதி சைவராகிய சிவப் பிராமணர்கள் அனாதி சைவர் என்று சொல்லப்பட்ட சிவபெருமா னுடைய அய்ந்து முகங்களிலிருந்து தோன்றி, சிவப்பிரானையே வழிபடு கிறவர் என்றும், சுமார்த்தப் பிராமணர் பிரம்மாவினுடைய நான்கு முகங்களி லிருந்து தோன்றி, பிரமத்தையே வழிபடுகிறவர்கள் என்றும் சிவ சிருஷ்டியின் பாற்பட்ட சிவப்பிராமணர் அல்லாமல், பிரம சிருஷ்டியில் தோன் றிய சுமார்த்தப் பிராமணர் சிவாலயங் களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே சிவால யங்களில் பரார்த்த பூசை ஆதி சைவர்களாகிய சிவாச்சாரியர் தவிர, இதர பிராமணர் செய்யக் கூடாது என ஆகமங்களில் கீழ்க்காணுமாறு விதிக் கப்பட்டுள்ளது.

சித்தாந்த சாத்திரம் உணர்ந்த ஆதி சைவர்கள், அரசர் ஊர் எஜமானர் இவர்களுடைய சேமத்தின் பொருட்டு, சிவலிங்கப் பிரதிட்டை செய்து பூசிக்க வேண்டியது. ஆதி சைவர் ஆன்மார்த்த, பரார்த்தங்களுக்கு அதிகாரமுடையவர். இல்லறத்திலுள்ள ஆதி சைவ பிராம்ம ணோத்தமர் சர்வ காரியங்களிலும் அதிகாரிகளாகச் செய்யலாம். ஆன் மார்த்த பரார்த்தங்களிலும் சிவயாகத் திலும் சிவத்துவிஜர்களாகிய ஆதி சைவர்களே அதிகாரமுடையவர். ஏனை யோர் ஆன்மார்த்தமே செய்யத்தக்கவர். அரசனுடைய உலோபத் தன்மையால் ஏனையோர் பரார்த்தமும் செய்வாரா யின், அரசனுக்கும் அவனால் காக்கப்படும் நாட்டிற்கும் உடனே கேடு சூழும் என்பதில் சந்தேகமில்லை (காமிகாகமம் தென்னிந்திய அர்ச்சகர் சங்க வெளியீடு, பக்கம் 31-32)
- மகராசன் குழு அறிக்கை பக்கம் 7,8

தமிழ் ஓவியா said...


விதவையரை மணக்க முன்வரும் புரட்சியாளர்கள்




சிர்சா, ஜூலை 12- உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச் சரிவுகளில் கணவனை இழந்த விதவை பெண் களை திருமணம் செய்து கொள்ள தேராசஷா சவுதா அமைப்பைச் சேர்ந்த 1500 பேர் தயாராக உள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் தெரிவித்துள் ளார். தேராசஷாசவுதா அமைப்பின் சார்பில் 33 லாரிகளில் கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் இவ்வாறு தெரிவித் துள்ளார். மேலும் டியோலி-பிரம்கிராம் கிராமங்களில் பெரும் பாலான ஆண்கள் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அது விதவைப் பெண்களின் கிராமமாக உள்ளது எனவும், கேதார்நாத் கோயில் பணிகளுக்காக சென்ற அவர்கள் அடித் துச் செல்லப்பட்டுள்ள னர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கையை இழந்த பெண்களுக்கு மறு வாழ்வு அளிக்க 1500 பேர் தயாராக உள்ளதாக வும், மறு திருமணம் செய்து கொள்ள விரும் பாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஜாதிகளின் பெயரால் அரசியல் கட்சிகளின் பேரணி, பொதுக் கூட்டங்களுக்குத் தடை!


உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லக்னோ, ஜூலை.12- உத்தரபிரதேச மாநிலத் தில், ஜாதி பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நாட்டிலேயே பெரிய மாநிலமாக திகழ்கிற உத்தரபிரதேசத்தில் ஜாதி அரசியல் முக்கிய இடம் வகிக்கிறது. அரசி யல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஜாதி அடிப்படையி லான பேரணிகளை நடத்தி வருகின்றன.

சமீபத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, தேர்தலில் பார்ப்பனர் களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பார்ப் பன சமூகத்தினரின் பேரணியை 40 மாவட் டங்களில் நடத்தியது. அதில் ஒரு பேரணியில் மாயாவதி கலந்து கொண்டு பேசினார். இதேபோன்று முலாயம் சிங் தலைமையிலான ஆளும் சமாஜ்வாடி கட்சியும் சமீபத்தில் இப்படி ஒரு பேரணியை நடத்தியது. முஸ்லிம்கள் பேரணி ஒன்றும் நடத் தப்பட்டது.

இத்தகைய பேரணி களுக்கு எதிராக மோதி லால் யாதவ் என்ற வழக் குரைஞர் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பிரிவில் பொது நல வழக்கு தாக்கல் செய் தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநி லத்தில் ஜாதி அடிப் படையிலான பேரணி கள் நடந்து வருகின்றன. பார்ப்பனர், சத்திரியர், வைசியர் என்று பல் வேறு ஜாதிகளின் பெய ரால் அரசியல் கட்சிகள் இத்தகைய பேரணி களுக்கு ஏற்பாடு செய் கின்றன.

இத்தகைய ஜாதி பேரணிகளால் சமூகத் தில் ஒற்றுமையும், நல் லிணக்கமும் பாதிக் கிறது. இது அரசியல் சட்டத்துக்கு எதிராக சமூகத்தை கறைப்படுத் துகிறது.

எனவே இத் தகைய பேரணிகளை, பொதுக்கூட்டங்களை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதி பதிகள் உமாநாத் சிங், மகேந்திர தயாள் ஆகி யோர் அடங்கிய அமர் வின் முன் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள் உத் தரபிரதேசத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணி, பொதுக்கூட் டங்களுக்கு உடனடி தடை விதித்து உத்தர விட்டனர்.

மேலும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பதில் மனு தாக்கல் செய்ய தாக்கீது அனுப்பு மாறும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு, உடனடி யாக அமலுக்கு வந்துள் ளது.

தமிழ் ஓவியா said...


இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?


மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இருந்து வருவதால் தமிழக அரசு 2010 மே மாதம் 32 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனத்திற்கு வேண்டி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. தேசிய கல்வி கழகத்தின் அறிவுறுத்தல்படி தமிழக அரசு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வை அறிவித்தது.

(15.11.2011) திருமங்கலத்தை சேர்ந்த மாயா உட்பட மூவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் போட்டதன் பேரில் பழைய பதிவு மூப்பு அடிப் படையிலேயே இடைநிலை ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்று 2011 நவம்பர் 24இல் மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப் பாணை எண் 5281/ஆ4/2010 (பார்வை: 1.அரசாணை (நிலை) எண்.220 பள்ளிக்கல்வித் (எஸ்-2)துறை,நாள் 10.11.2008, 2.அரசாணை (நிலை) எண்.153 பள்ளிக்கல்வித்(வ.செ-2)துறை,நாள் 03.06.2010, எனக் குறிப்பிட்டு 2010-11ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்க்கும் அழைப்புக் கடிதத்தை அதே 2011 நவம்பர் 24 தேதியில் அனுப்பியது. மேற்கண்ட அழைப்பின்பேரில் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 3.12.2011இல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து வேலைவாய்ப்பு உத்தர விற்காகக் காத்திருந்தனர்.

இந்த நிலையில் 9.7.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம் 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையே அறிவுறுத்தலாகக் கொண்டு 2011 இல் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் தமிழக அரசு பணியில் அமர்த்துவதுதான் சரியானதாக இருக்க முடியும். தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காய் என்ற முறையில் ஓர் அரசு நடந்து கொள்ள முடியாது.

இந்தப்பிரச்சினை குறித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியிட்டார் (விடுதலை 2.4.2013).

தொடர்ந்து விடுதலை இந்தத் திசையில் பல தலையங்கங்களைத் தீட்டியதுண்டு. இதுகுறித்து கடந்த 6ஆம் தேதியன்று முதல் அமைச்சருக்குத் திறந்த மடலையும் எழுதியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றுகூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 5ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கருத் தரங்கமும், பொது மாநாடும் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர் உட்பட பல தலைவர் களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர். முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கடந்த10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவிலும் இந்த வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட் டுள்ளது. வரும் 18ஆம் தேதி சென்னையில் இது தொடர்பான ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்திட உள்ளது. இதற்கிடையே இதனை வலுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஆதாரப்படுத்தி தகுதித் தேர்வைப் புறந்தள்ளி, பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்வதே சரியானதாக இருக்க முடியும். இல்லை யெனில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றால் அரசுக்கு எதிராகவே தீர்ப்புக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா? எங்கே பார்ப்போம்.

தமிழ் ஓவியா said...


இந்த ஆபத்தான அகப் பகைவனை அடையாளம் காண்போம்!



புறப் பகைவர்களையே தேடிக் கொண்டிருக்கும் வழமை - வாடிக்கை நம்மில் பலருக்கும் உண்டு. அகப்பகைவர்கள் பற்றி பல நேரங்களில் கவலைப்படாத வாழ்வே வாழ்கிறோம்!

அகப்பகைவர்கள் என்னும்போது, ஒரு அமைப்பு, நிறுவனம், கட்சி, இயக்கம் ஆகியவற்றில் உள்ள வீபீஷணர்கள், சுக்ரீவன்கள், அனுமார்கள், பிரகலாதன்கள், யூதாஸ்கள், எட்டப்பன்கள், குவிஸ்லிங்குகள் (இரண்டாம் உலகப் போரின்போது அய்ரோப்பிய நாட்டில் நேச நாடுகளுக்கான உள் ரகசியங்களைக் காட்டிக் கொடுத்து பிரபலமானவர்) போன்றவர்களை மட்டும் நினைத்துக் கொண்டி ராதீர்கள்!

அவர்கள் ஆபத்தானவர்கள்தான் - பயிர்களில் முளைத்த களைகளைப் போன்று!

நம்முள் உள்ள மற்றொரு முக்கிய அகப்பகைவன் யார் தெரியுமா?

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி சிலரது உடலும், உள்ளமும் இந்த அகப்பகைவனிடம் சிக்கிக் கொண்டால், அவர்களைப் பாடாய்ப்படுத்தி விடும்!

எவ்வகையிலெல்லாம் கேடு வரும் என்பதை அறிவியல், உளவியல், வாழ்வியல் பூர்வமாக படம் பிடித்துக் காட்டி அறிவுறுத்தியுள்ளார் ஒப்பற்ற அறிவுரை - அறவுரையாளரான திருவள்ளுவர் அவர்கள்!

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் (குறள் 303)

பொருள்: ஒருவன், யாரொருவரிடத்திலும் சினம் கொள்ளாமல் அந்த சினத்தை அறவே மறந்து விட வேண்டும்; இல்லையென்றால் அந்த சினத்தால் தீமையான விளைவுகள்தாம் அவனுக்கு ஏற்படும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற (குறள் (304)

பொருள்: ஒருவனது முகத்தில் வெளிப்படும் சிரிப்பையும், அகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அடியோடு அழிக்கின்ற சினத்தை விட, அவனுக்குப் பகையாக விளங்கும் பொருள், வேறு ஏதொன்றும் இருக்க முடியாது.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (குறள் 305)

பொருள்: ஒருவன், தன்னைத்தானே காத்துக் கொள்ள விரும்புவானேயானால், தனக்குச் சினம் ஏற்படாமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அப்படி அவன் தன்னைக் காத்துக் கொள்ளாவிட்டால், அந்தச் சினமே அவனைக் கொன்றுவிடும்.

நமது கோபம் - பல நேரங்களில் ஆத்திரம் கொப்பளிக்க வெடிக்கிறது.

நம்மால் கட்டுப்படுத்தப்படாத பழக்கம் காரணமாக, நாம் அதனை பல்வேறு கட்டங்களில் ஏன் உச்சக் கட்டம் செல்லும் நிலையிலும், பார்ப்போர் அருகில் உள்ளோர் அருவருப்புக் கொண்டு முகஞ் சுளிக்கும் அளவுக்குக் கூட, எல்லை தாண்டிய வேகத்தோடு நாம் நடந்து கொள்வது - யாரைப் பார்த்து நாம் இப்படிக் கோபத்தைக் கொப்பளிக்கிறோமோ, அவர்களுக்கு ஏற்படும் கெடுதி, இழப்பைவிட, கோபத்தை அடக்காத நமக்கே அது உலை வைப்பதாக ஆகிவிடுகிறது.

பிரபல அமெரிக்க இதய நோய் அமைப்பினை நடத்தும்(The American Journal of Cardiology)
என்ற மருத்துவ ஏட்டில் - உள்ள ஒரு அரிய தகவல் இதோ:

1. கோபமாக நாம் வெளியிடும் அந்த ஆத்திரத்தின் வெடிப்பு, அடுத்த 2 மணி நேரம் வரை, மாரடைப்பு (Heart Attack)
ஏற்படும் அபாயத்தைத் தோற்றுவிக்கக்கூடிய ஒன்றாகும்.

2. இந்த ஆத்திரம் ஓர் அளவுக்குள் அமைவதா யிருப்பின் அந்த அபாயம் 1.7 மடங்கு கூடுதலாக உள்ளதாக இருக்கும்.

3. சிலர் பற்களை நரநரவெனக் கடித்துக் கொண்டு, கை முஷ்டிகளை ஓங்கிக் கொண்டு உடல் மிகவும் (தசைகள்) இறுக்கமாக்கிக் கொண்ட நிலை யில் கோபத்தின் அதி ஆவேசத்தில் இறங்கும்போது, இந்த மாரடைப்பு - இதயநோய் தாக்கும் அபாயம் 2.3 மடங்கு ஆக இருக்கும்.

4. சிலர் கோபத்தின் உச்சத்திற்கே சென்று தனது நிதானத்தையே இழந்து, கையில் கிடைக்கும் பொருள்களை எடுத்து வாரி வீசி, மற்றவர்களை காயப் படுத்தியோ அல்லது தன்னை காயப்படுத்திக் கொண்டே உள்ளவர்களுக்கு இந்த அபாயம் 4.5 மடங்கு ஆக ஆகிவிடும்.

வள்ளுவத்தின் அறிவியல், உளவியல் எவ்வளவு வியக்கத்தக்கது பார்த்தீர்களா?

கோபம் வந்தால் அடக்கி ஆளுவோம்; வாழுவோம்; எழுதும் எனக்கும் சேர்த்தே தான் இவ்வெச்சரிக்கை! படிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல வாசகர்களே!

சினத்தை அடக்குவோம்!

சினம் நம்மை ஆளவிடாமல் நாம் அதனைஅடக்கி ஆளுவோம்!!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பெரிய நன்மை


நீதி முறையையும், நீதி இலாகா வையும் திருத்தினால் புற்று நோய்க்கும், சயரோக நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தது போன்ற அவ்வளவு பெரிய நன்மை மனிதச் சமுதாய ஒழுக்கத்திற்கு ஏற்பட்டு விடும். - (விடுதலை, 17.10.1969)

தமிழ் ஓவியா said...


காலம் தோறும் பார்ப்பனீயம்!


3.7.2013 விடுதலை தலையங்கம், பல சிந்தனைகளை உண்டாக்கி யுள்ளது. சார்தாம் (கங்கோத்திரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத்), புனித யாத்திரையில் முதலில் கூறி யுள்ள 3 இடங்களைப் பார்த்து விட்டு தான் கேதார்நாத் செல்ல வேண்டு மாம். தினமணியும், புதிய தலைமுறை இதழும் கேதார்நாத் அழிவைப்பற்றித் தான் கூக்குரல் இடுகிறார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன ஆதிசங்கரரின் சமாதியை மீண்டும் புதுப்பித்து நினைவுச் சின்னம் அமைப்பதுதான் இவாளின் இலை மறை நோக்கமாகும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில், கேதார்நாத் அருகில் மணிகார் (ஆயழுயசா) என்ற இடம் உள்ளது. இங்குதான் மிகவும் பழைமையான தான சீக்கியர்களின் வழிப்பாட்டுத் தலமான குருத்வாரா உள்ளது. இங்கு அவர்களுடைய பழைமை வாய்ந்த புனித நூலான கிரந்தம் வைத்து வழிபடுகின்றனர். இந்த இடமும் இயற்கைச் சீற்றத்தினால் பாழ்பட் டுள்ளது. இதை தினமணியும், புதிய தலைமுறை இதழும் வசதியாக மறைத்துவிட்டு கேதார் நாத் இடத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கின்றனர். இந்த இடத்தில் (குருத்வாராவில்) பார்ப் பனீயம் எடுபடாது. அதனால் கழி விரக்கமற்றவர்களான பார்ப்பனர் களும், பார்ப்பன ஏடுகளும் மறைத்து விடுகின்றன. இதுதான் இந்தியாவின் இவர்கள் கூறும் கலாச்சாரம். காலம் தோறும் பார்ப்பனீயம் இதுதான்!

- அ.நா. பாலகிருஷ்ணன்
சிந்திரிப்பேட்டை, சென்னை-2

தமிழ் ஓவியா said...


நீர் பொங்குமாம்!


12 வருடத்திற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினா லல்லது பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லது தண்ணீர் எப்படிப் பொங்கமுடியும்? மாமாங்கத் தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.

மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மை கண்டுபிடிக்க முடியும். அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களைக் குளிக்கவிட்டு, அதன் பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்?

குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காண முடியும்?

ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண் ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம்.
அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம். இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

கடவுளும் மின்சாரமும்!

கேள்வி: an you live without god? (கடவுள் இல்லாமல் உங்களால் வாழ முடியுமா?)

பதில்: Yes. I can live without god, but I cannot live without electricity. (கடவுள் இல்லாமல் நான் வாழ முடியும். ஆனால் மின்சாரம் இல்லாமல் நான் வாழ முடியாது) சிரிப்பு. அமெரிக்காவில் ஒருநாள் திடீரென மின்தடையை ஏற்படுத்தினார்கள். அமெரிக்கா முழுவதும் மக்கள் சில நிமிடங்கள் அவதிப்பட்டு பின்னர், மீண்டும் மின் ஓட்டத்தை இயக்கி விட்டு, வானொலியில் அறிவித்தார்கள், சில நிமிடங்கள் மின் சாரம் இல்லாவிடில் எவ்வளவு அவஸ்தை? இப்போது புரிகிறதா மின் சாரத்தைக் கண்டுபிடித்த ஆல்வா எடிசனின் பெருமை? இன்று அந்த ஆல்வா எடிசனின் நூற் றாண்டு நினைவு நாள்! என்று.

(மதுரை பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி பகுத்தறிவுச் சிந்தனை கலந்துரையாடலில் கழக தலைவர் கூறியது) தகவல்: மதுரை தமிழரசன்

தமிழ் ஓவியா said...


மகாமகத்தின் வரலாறு


ஆதிகாலத்தில் உலகப் பிரளயம் நேரிடுவதற்கு முன்பு, பிரம்மதேவர் அப்பிரளயத்தினால் சகல சிருஷ்டிகளும் அழிந்து போகக் கூடிய நிலைமையைக் குறித்து கவலையுற்று, அதைத் தவிர்க்க கருதி, கைலாசநாதனான சிவபெருமானைக் குறித்து துதித்தார். அவரும் பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்கி அவ்வித அழிவை நிவர்த்திக்கும் பொருட்டு, சிருஷ்டி பீஜத்தை அமிர்தத்துடன் கலந்து அமிர்தம் நிறைந்த ஒரு குடத்திற்குள் வைத்து குடத்தைத் தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் இவைகளால் அலங்கரித்து மூடி, மகா பிரளயத்தில் விட்டு விடும்படி பிரம்மதேவரிடம் சொன்னார். அவ்வாறே பிரம்மதேவரும் பிரளயகாலத்தில் அந்த அமிர்த குடத்தை மிதக்க விட்டதாகவும், அக்கும்பம் இந்த சேத்திரத்தில் மிதந்து வந்து தங்கலுற்றதாகவும், பிரளய முடிவில் பிரம்மதேவர் முதலியோர் அக்குடத்தைக் கண்டு மறுமுறை சிவபிரானைத் துதிக்கவும், அவர் அச்சமயம் வேடரூபத்துடன் பிரசன்னமாகி, ஓர் பாணத்தை எய்து, அவ்வமிர்த கும்பத்தை உடைக்கவே, அதனுள்ளிருந்த அமிர்தம் இப்பிரதேசத்தில் பரவியது பற்றி இச்சேத் திரத்திற்கு கும்பகோணம் எனப் பெயர் வழங்கலாயிற் றென்பது புராண வரலாறு. அக்குடத்தினின்றும் வெளிப்பட்ட அமிர்தமானது இருகூபங்களாக (கிண றுகள்) தங்கலுற்றது. அவைகளில் ஒன்று மகாமகக் குளம் என்றும், மற்றொன்று ஹேமபுஷ்கரணி (பொற்றாமரை) என்று வழங்கப் பெற்று வருகின்றன.

முன்பு விவரித்தபடி சிவபெருமானால் உடைக்கப்பட்ட குடத்தின் பாகங்கள் அதிலிருந்த அமிர்தத்தைக் கொண் டே பிசையப் பெற்று, ஓர் லிங்கபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும், அவரே கும்பேஸ்வரர் என்று வழங்கப் பெற்றதாகவும் புராணம் சொல்லுகிறது.

அமிர்த குடத்தின் மேல் மூடப்பட்ட அலங்கார சாமான்களான தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் முதலியவை முறையே இப்பிரதேசத்தைச் சுற்றிப் பரவி எழுந்து அவை யாவும் அங்கங்கே சிவசேத்திரங் களாக ஏற்பட்டு, பூஜார்ஹமாக விளங்கி வருகின்றன.

இந்நகரம் முக்கிய சிவசேத்திரமாக இருப்பதுமன்றி, முக்கிய விஷ்ணுசேத்திரமாகவும், புண்ணிய தீர்த்தங் களையுடையதாகவும், தொன்று தொட்டு விளங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பு: இது சுதேசமித்தரன் 19.2.1945ஆம் தேதி இதழில் காணப்படுகிறது. இதைக் கண்ணுறும் எவரும் இது எவ்வளவு ஆபாசக்களஞ்சியம் என்பதையும், இதையும் இந்த 20ஆம் நூற்றாண்டில் நம் மக்கள் நம்பி வருகிறார்களே என்றும் எவர்தான் வருந்தாமல் இருக்கமுடியும்? இவ்வளவு கூட பகுத்தறிவு இல்லாத மக்கள் அடிமையாக இருப்பதில் ஆச்சரியமென்ன?

(24.2.1945 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்

தீண்டாமை என்பது சமயம் சம்பந்தப்பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத்தினால் தீர்க்கமுடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைவன் என்ற முறையிலும், உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாக கருதமுடியும்.

- டாக்டர் கலேல்கார்

ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன், பக்கம் 123

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர் பிரச்சினை:


மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கலைஞர் வேண்டுகோள்!

சென்னை, ஜூலை 12- இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப் படுவதும் நின்றபாடில்லையே என தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (12.7.2013) முரசொலியில் எழுதியுள்ள கேள்வி - பதில்கள் பகுதியில் கூறியிருப்ப தாவது:

கேள்வி: மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் எத்தனையோ வேண்டுகோள் விடுத்த பிறகும், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் நின்றபாடில்லையே?

கலைஞர்: தமிழக மீனவர்கள் இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் கடந்த பல ஆண்டு காலமாகத் தொடர்கதையாக நீடித்துக் கொண்டே வருகிறது. தொடர்கதைகளுக்குக்கூட முடிவு உண்டு. ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் நின்றபாடில்லை. இராமேஸ் வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 29.11.2011 முதல் இலங்கை நீதித் துறைக் காவலிலே கைதிகளாக இருந்து வருகிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டுமென்று வைக்கப் பட்ட கோரிக்கைகள் நிறைவேறவில்லை. கடந்த 5.6.2013 அன்று கைது செய்யப்பட்ட 49 மீனவர்கள், ஒரு மாதம் இலங்கையிலே சிறையிலே வைக்கப்பட்ட பிறகு 2.7.2013 அன்று 24 மீனவர்களும், 3.7.2013 அன்று 25 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 15.6.2013 அன்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் இலங்கைச் சிறையிலே இன்னமும் இருந்து வருகிறார்கள். தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் இதுபற்றி மத்திய அரசின் கவனத்திற்கு தொடர்ந்து கடிதம் மூலமாக எழுதிக் கொண்டே இருக்கிறார். ஆனால் உறுதியாக இதுவரை எதுவும் சொல்லப் படவும் இல்லை. ஒவ்வொரு முறையும் மீனவர்கள் இவ் வாறு கைது செய்யப்படும் போதெல்லாம், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் அறிக்கைகளை வெளியிடுவதும், தமிழக அரசின் சார்பில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் எந்த விளைவையும் இலங்கை அரசிடம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. எனவே மத்திய அரசு உறுதியானதொரு நடவடிக் கையை, தமிழகத்தின் மீனவர்கள் பிரச்சினை ஒட்டுமொத்தமாகத் தீருகின்ற வகையில் உடனடியாக எடுக்க வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...


ஜாதிக் கலவரம் யாருக்கு லாபம்?


ஜாதி கலவரம் இருந்தால் தான் ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினருடன் மோதுவார்கள். அதனால் பலர் செத்து மடிவார்கள். செத்தவர் களின் வீட்டில் காரியம், தெவசம், திதி போன்ற வையும் காலமெல்லாம் நடத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே ஜாதி ஆரியர்களால் ஏற்படுத்தப் பட்டது.

மேலும் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் அது கடவுள் உன்னை காப்பாற்றுவார். அதற்கு ஆறுகால பூஜை நடத்தினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்று கோயிலும் வீடும் கட்டவைத்து குடியேறி நீ கருவறைக்குள் நுழைந்தால் கடவுள் தீட்டாகிவிடும் என்று பயத்தையும், பக்தியையும் ஊட்டிவிட்டார்கள்.

பிறந்த குழந்தை முதல் தொட்டிலில் போடுவது பெயர் சூட்டுவது, பூணூல் போடுவது, பள்ளிக்கு செல்வது, கல்யாணம், சாவுவரை மந்திரம் தந்திரத்தால் மக்களை மறைமுகமாக தெரியாத பாஷையில் திட்டி, பணம், பொருள் ஈட்டவே ஜாதி பிரிவினைகளையும், கல்யாணம், கருமாதிகளை உண்டாக்கி கடவுள் கற்பனைகளை ஏற்படுத்தி பிழைக்கிறார்கள்.
கல்யாண மந்திரம்

கல்யாணம் ஆகும் மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாக கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள் மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்தாள், நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள்.

சிரார்த்த மந்திரம்

சீரார்த்த மந்திரம் என்று சொல்வது யன்மே மாதா பிரலுவோபா சரதிஅன்று விரதா என்கிற மந்திரத்தின் விளக்கத்தைத் சுவாமி சிவானந்த சரசுவதி ஞான சூரியனில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்.

தகப்பன் செத்த பிறகு அவருக்காக அவன் செய்யும் கருமாதி திதி காலங்களில் கொல்லப்படும் மந்திரமானது. எனது தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மை யாக நடக்காதவள், மற்றவரிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்று நம் தாயை விபச்சாரி என்று கூறி பொருள், பணம் பெற்று வருகிறது ஒரு கூட்டம். இந்த மந்திரங்களை கேட்டு மகிழும் தமிழினமே பெரியார் எழுதிய சுயமரியாதைத் திருமணம் ஏன்? என்கிற புத்தகத்தை படித்து பகுத்தறிவு கொள்ளுங்கள்.

- வணங்காமுடி

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் நிலை


பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும் அவன் நீதி செலுத்தலாம்.
சூத்திரன் ஒருபோதும் நீதி செலுத்தலாகாது.

சூத்திரர்கள் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடையதா யிருக்கும்.

சூத்திரனாகவும், மிலேச்சனாக வும் பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி
ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத் திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை

நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லச் சொல்ல வேண்டும்.

(குடிஅரசு தொகுதி பக்கம் 122)

_- க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


சொல்லில் புதைந்துள்ள கதை


இலத்தீன் மொழியில் சப்ரோசா (SUBROSA) என்ற சொல் ஒன்று உள்ளது. எழுத்தில் வழக்கமாக பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. இதன் நேரிடைப் பொருள் ரோஜாவின் கீழ் என்பதாகும். ஆனால் நடைமுறைப் பயன்பாட்டில், மறைவாக, தனியாக (PRIVATELY)
பொருள்படும் முறையில் கையாளப்படுகிறது. இந்த சொல்லின் பின்னணியில் உள்ள கதை. கிரேக்க நாட்டு பழங்கதையின்படி காதலின் பெண் கடவுள் (கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்று கூறி வைத்துள்ளது போல்) அபரோடைட். அவள் தன் மகன் எரோசுக்கு ஒரு அழகான ரோஜா மலரைக் கொடுத்தாள். அந்த மகன் எரோஸ் காதலின் கடவுள் என்று அறியப்பட்டவன். அவன் தனக்கு கொடுக்கப்பட்ட ரோஜா மலரை, மவுனக்கடவுளுக்கு (ஹர்போகிரேடு) கொடுத்தான். ஏன்கொடுத்தான் என்றால், தன்னுடைய தாயின் மற்ற கடவுள்களுடனான விவேகமற்ற நடத்தையைப் பற்றி பேசாமல் மறைத்து வைப்பதற்காக,

காலப்போக்கில் ரோஜாமலர், மவுனம், ரகசியம் குறிக்கும் அடையாளமாக (Emblem) அமைந்துவிட்டது. இடைக்கால நூற்றாண்டில் முக்கிய அலுவல் கூட்ட அரங்கில் ஒரு ரோஜா மலரைத் தொங்க வைக்கும் பழக்கம் வந்தது. அந்த கூட்டத்தில் உள்ள அனைவரும், ரகசியம் காக்கும் உறுதிமொழியைக் கடைப்பிடிக்க வேண்டியவர்கள் என்பதைச் சுட்டிகாட்டுவதற்காக (சப்ரோசா). அவர்கள் அனைவரும் மவுனக் கடவுள் போல, கூட்டத்தில் பார்த்ததையும், கேட்டதையும், மவுனம் காக்க வேண்டும் என்பதாகும்.

நன்றி: தி இந்து - 7.5.2013 (Know your english)

- மு.வி.சோமசுந்தரம்

தமிழ் ஓவியா said...


இது தான் இந்தியா


உலகில் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அரசின் கொள்கைகள் முறையாக நடைமுறைப் படுத்தப்படாததால் குறைவான எடை கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் நாற்பது விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர். வளரும் பொருளாதார வல்லரசு என்று அழைக்கப்படும் இந்தியா சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய அம்சங்களில் பிரேசில், நேபாளம், வங்கதேசம், சீனா ஆகியவற்றை விட பின்தங்கியுள்ளது என்று கனடாவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான மைக்ரோநியூட்ரியண்ட் இனிஷியேடிவ் அமைப்பின் தலைவரான எம்.ஜி. வெங்கடேஷ் மன்னார் கூறியுள்ளார்.

இந்தியாவில் இவற்றுக்குரிய அனைத்து திட்டங்களும் உள்ளன. அதற்குரிய கொள்கைகளும் வகுக்கப்பட் டுள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதில் மத்திய சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் ஊடாடி வருகின்றன. ஆயினும் இவற்றை முன்னின்று நடத்தும் பொறுப்பாளர்கள் இல்லை. செயல்களுக்கும், நடவடிக் கைகளுக்கும் விளக்கம் கூறும் ஆட்களும் இல்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும் இல்லை. 2005ஆம் ஆண்டு முதல் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்படவில்லை என்பது திகைப்பளிக்கும் விஷயமாகும். பழைய புள்ளிவிவரங்கள் மட்டும் கையில் உள்ளதால் இவ்விஷயங்களில் நாம் முன்னேறியிருக்கிறோமா என்று அறியமுடியவில்லை என்று அமைப்பின் ஆய்வு கூறுகிறது. இந்திய நாடு தனது முன்னோடிகளை தேடி, அலைய வேண் டியதில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய கொள்கைகளும், திட்டங்களும், ஆதாரங்களும் அதனிடம் உள்ளன. எனவே அரசு நடவடிக்கை களை தொடங்க வேண்டியது மட்டுமே பாக்கி என்று மன்னார் சொல்கிறார். யுனிசெப் தயாரித்த 2013-ஆம் ஆண்டில் உலக குழந்தைகள் அறிக்கையில் அய்ந்து வயதுக்குட்பட்டவர்கள் இறப்பு விகிதத்தில் இந்திய 49-ஆவது இடத்தில் இருப்பதாக கூறுகிறது. அதே வேளையில் நேபாளம், வங்கதேசம் ஆகியவை முறையே 57, 60-ஆம் இடங்களில் உள்ளன. இந்தியாவில் உயிருடன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு நடுவில் 32 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன என்று அந்த அறிக்கை சொல்கிறது. அதே வேளையில் பிரேசிலில் அந்த விகிதாசாரம் 10 ஆகவும் வங்கதேசத்தில் 26 ஆகவும் உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இந்திவில் பிறந்த சிசுக்கள் இறப்பு விகிதம் 1990-இல் 81 விழுக்காடாக இருந்தது. 2011-இல் இது 47 ஆக குறைந்துள்ளது இதே காலகட் டத்தில் இந்த விகிதம் பிரேசிலில் 49-இல் இருந்து 14 ஆக குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு எட்டு விழுக்காடாக உள்ளது. இந்த வளர்ச்சி மத்திய தர வர்க்கத்தின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. பிரிட் டனை விட அதிகமாக கோடீஸ்வரர் கள் உருவாகியுள்ளனர். அதே வேளை யில் குழந்தைகளுக்கு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் இரண்டு லட்சம் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மடிகின்றனர். அசுத்தமான தண்ணீர், முறையான துப்புரவு வசதிகள் இல் லாமை ஆகிய காரணங்களால் உரு வாகும் வயிற்றுப்போக்கு வியாதியால் இவை மடிகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது, நீரால் உருவாகும் வியாதிகள் உற்பத்தியையும் பாதிக் கின்றன, ஆண்டு தோறும் 7.3 கோடி வேலைநாட்கள் இதனால் இழப்புக்கு ஆளாகின்றன.

சுகாதாரமற்ற சூழலில் வாழும் குழந்தைகள் கிருமிகளையும் உள் வாங்கிக் கொள்கிறார்கள். இவை குழந்தைகளின் குடல், இரைப்பை போன்ற பகுதிகளில் குடியேறுகின்றன. குடல் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு வளையங்களால் இவை உருவாக்கும் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. இக்கிருமிகள் ஊட்டச்சத்துகள் குடல் சுவர்கள் மூலமாக ரத்தத்துக்குள் உறிஞ்சப்படுவதை தடுத்து விடுகின்றன. எனவே ஊட்டச்சத்து எவ்வளவு கொடுத்தாலும் அது குழந்தைகள் மத்தியில் பிரதிபலிப்பதில்லை என்று பில் அண்ட மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நடத்திய ஆய்வு கூறு கிறது. இந்த நிலைமையை தூய்மையான குடிநீர் வழங்குவதாலும், ஆரோக்கிய மான இலவச உணவை வழங்குவது மூலம் அகற்ற முடியும். இந்தியாவில் நாள்தோறும் 600 கோடி காலந் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அதில் 26 விழுக்காடு மட்டுமே சுத்திகரிக் கப்படுகிறது. இந்தியாவில் போதுமான கழிப்பறை வசதிகள், துப்புரவு வசதிகள் இல்லை என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த அறுபது ஆண்டுகளில் குடிநீர், துப்புரவு வசதிகள் திட்டங் களுக்காக இந்தியா சுமார் 2800 கோடி டாலர்களை செலவிட்டுள்ளது. ஆயினும் அதிகரிக்கும் மக்கள் தொகையின் தேவைகளை ஈடுகட்டுவது பெரும் போராட்டமாகவே உள்ளது. அரசின் மெத்தனமும், அதிகாரிகள் - அரசியல்வாதிகள் - மோசடி பேர்வழி களின் கூட்டு இவற்றில் பெரும் தொகையை ஏப்பம் விட்டுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.

நன்றி: தீக்கதிர் 2.7.2013

தமிழ் ஓவியா said...


எல்லார் நெஞ்சிலும் பெரியார்!


- சிவகாசி மணியம்

டாக்டர் வரதராஜூலு நாயுடு பெரியார் ஈ.வெ.ராவின் நண்பர் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தவறு என்று தினமணி வைத்தியநாதய்யர் ஒரு நிகழ்ச்சியில் திருவாய் மலர்ந்து தொலைக்க, விடுதலை (26.5.2013) ஞாயிறு மலரில் நம் மின்சாரத்திடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார். அடுக்கடுக்கான ஆதார அறிவாயு தங் களால் அவாளின் பிதற்றலை அக்கு வேறு ஆணிவேராக கழற்றி எறிந்து விட்டார். மிகச்சரியான நெற்றியடி! டாக்டர் நாயுடு தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரிய நண்பரே என்பது அவாளுக்கு புரிந்தால் சரி.

வரலாற்றுப் பதிவுகளைத் திரிபு வாதம் செய்து புரட்டிப் போடத் துடிக்கும் புளுகர்களிடத்திலும் பெரியார் புகுந்து குத்தலும் குடைச்சலும் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்ப தற்கு இது ஒரு சான்று. எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவர் எதைப்பற்றி எழுதினாலும் பேசினா லும் பெரியாரை அலட்சியப்படுத்தி விட்டு எளிதில் கடந்து போய் விட முடியாது. தினமலர் - வாரமலர் (26.5.2013) அதைத்தான் சொல்கிறது.

மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் பற்றிய தொடரில் ஒரு பழைய சம்ப வத்தை கட்டுரையாளர் கூறக் கேட்போம்.

ஆரவல்லி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம்... டி.ஆர்.சுந் தரத்திற்கு உதவியாக இருந்தவர் கோ.தா.சண்முகசுந்தரம் எனும் மேதாவி. ஒரு காட்சியில் ஆரவல்லியை வெல்வ தற்காக பீமன் தன் நண்பனுடன் அந்த நகருக்கு வந்து ஒரு கோயிலில் படுத் திருக்கிறான். அப்போது அங்கே வந்த பொதுமக்களில் சிலர் ஆரவல்லியின் சூரத்தனத்தைப் பற்றி புகழ்ந்து இவளை வெற்றி கொள்ள யாருமே வரமாட் டார்களா? என்று பேசிக் கொண்டனர். இதைக்கேட்டுக் கொண்டே எழுந்த பீமனுக்கு அடங்காத கோபம் வருகிறது. அவளை நான் வெற்றி கொண்டே தீருவேன் என்று சபதம் போட்டு அறைகூவல் விடுத்தபின் கையிலிருந்த கதையை பலமாக வீசுவான். அப்போது அருகிலிருந்த ஒரு விநாயகர்சிலை கதை பட்டு உடைந்து விடுகிறது. காட்சி நன்றாக அமைந்து விட்டது என்று எல்லோருக்கும் திருப்தி.

படம் முடிவடைந்துவிட்டால் அதைச் சிலருக்கு போட்டுக் காட்டுவது ஸ்டுடியோவின் வாடிக்கை. ஸ்டுடியோ தொழிலாளர்கள் உள்பட சில வெளி யுலக பிரபலங்களும் அங்கே அழைக்கப் படுவதுண்டு. இவர்களில் சில முக்கிய நபர்கள் தங்களது விமர்சனத்தை எழுதிக்கொடுப்பர்.

ஆரவல்லி படம் பார்த்த குழுவின ருள் ஒரு முக்கிய நபர் எழுதிய விமர் சனம் டி.ஆர்.சுந்தரத்தின் கவனத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அவர் அதைப் படித்து பார்த்தார். பெரியார் ஈ.வெ.ரா.விநாயகர் சிலைகளை உடைத்துக் கொண்டுவரும் இந்தக்கால கட்டத்தில், பீமனின் கதைபட்டு ஒரு பிள்ளையார் சிலை உடைவது பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதனால் இப்படிப்பட்ட ஒரு காட்சி தேவை இல்லை என்பது என் கருத்து. ஏனெனில் மக்களின் விமர்சனத்திற்கு நிச்சயம் இது தப்பாது. பீமன் தன் கதையை வீசுவதோடு நிறுத்திக் கொண்டால் போதும்.. என்று எழுதியிருந்தார் அவர். சுந்தரத்திற்கும் இது சரி என்றே பட்டது. அந்தக் காட்சியை படத்திலிருந்து வெட்டி விடச் சொன்னார். ஆனால் அவரின் உதவியாளராக இருந்த நபருக்கு அதை நீக்க விருப்பமில்லை, பிடிவாதமாக விவாதித்தார், பயன் இல்லை. அந்த நபரோ தன் உத்தியோகத்தை ராஜி னாமா செய்யப்போவதாக அறிவித்தார். அன்றே வெளியேறிவிட்டார்.
அப்படி போனவர் மேதாவி என்று அழைக்கப்பட்ட பிரபல நாவலாசிரியர் கோ.தா.சண்முக சுந்தரம். சுந்தரத்திடம் வில்லங்க விமர்சனத்தை எழுதி நீட்டியவர் அவாளேதான்! எழுத்தாளர் மகரிஷி! (இதுதான் பார்ப்பனியம்!)

கட்டுரையாளர் ரா.வேங்கட சாமிக்கு நன்றி. படித்தாலே புரிந்து போகும். பதவுரை, பொழிப்புரை தேவை இல்லை.

இல்லாத இடமே இல்லை என் கிறார்கள் இல்லாத கடவுளை! ஆனால் பகுத்தறிவாளர்கள், சுயமரி யாதைக்காரர்களிடம் மட்டுமல்ல. குறைமதியாளர்கள், குருட்டு நம்பிக் கையாளர்கள் நெஞ்சங்களையும் பெரியார் ஆக்கிரமித்திருக்கிறார் என்பதே உண்மை.

தமிழ் ஓவியா said...


சின்னஞ் சிறுகதை


இப்படியும் நடக்கலாம்!

காவல் நிலையத்திற்கு வழக்கு ஒன்று வந்தது. பக்கத்து டீக் கடைக்காரர்மீது புகார் கொடுத் தவர் ஒரு மருந்துக் கடைக்காரர்.

குறிப்பிட்ட பாடல் ஒன்றை தனது டீக் கடையில் அடிக்கடி ஒலிபரப்பி தனது வாடிக்கை யாளர்களின் மனதை திசை திருப்புவதாகவும் இதனால் தமது மருந்துக் கடை, பேரிழப்பைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் குற்றச்சாட்டு. மனுதாரருக்கு ஆதரவாக சில மருத்துவர்களும் தொலைபேசியில் குரல் கொடுத்தனர்.

காவல் நிலையத்துக்கு டீக் கடைக்காரர் வரவழைக்கப்பட்டார்.

அவரோட வியாபாரத்தை பாதிக்கிற பாட்டுனு சொல்றாரே.. அது என்ன பாட்டு? என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். டீக்கடைக்காரர் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. தலைக்கு மேலே சுழலும் விசிறியை அண்ணாந்து பார்த்தபடி உரத்த குரலெடுத்து கந்தன் திருநீறு அணிந்தால் கண்ட பிணி ஓடி விடும் என்று பாட காவல் நிலை யமே வெடிச் சிரிப்பில் குலுங்கிற்று.

- சிவகாசிமணியம்

தமிழ் ஓவியா said...

தெரியுமா உங்களுக்கு?

ஏழை களின் ஆப்பிள் கொய்யா! இது வெறும் உணவு மட்டுமல்ல மருந்துமாகும்.

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் அல்ல. அவருக்கு 75 ஆண்டுகளுக்கு முன் அதனைக் கண்டுபிடித்தவர். அட்மிரல்ஜங் என்ற சீன நாட்டின் கடற்படைத் தளபதி (ஆண்டு 1421).

தமிழ் ஓவியா said...


ஏசி.யா?


ஏசி.யில் அதிக நேரம் இருப்பது மக்களைக் கைதிகள் ஆக்கிவிடுகிறது. ஏசியின் கைதி ஆனவர்கள் வெளியே செல்ல விரும்புவதேயில்லை என்கிறார் எஸ்.கே.சாப்ரா. இவர் டில்லியில் உள்ள வல்லபாய் படேல் மார்பக நோய் நிறுவனத்தில் இதய-சுவாச நோய்த் துறையின் தலைவராகப் பணியாற்று கிறார். பிள்ளைகளைச் சேர்க்க வருப வர்கள் வகுப்பறையில் ஏசி இருக்கிறதா என்று கேட்கிறார்கள். போட்டிதான் இன்றைய உலகம். அதனால் முழுமையும் குளிர்பதனம் செய்யப்பட்ட பள்ளிகளுக்குத் தனி மவுசு இருக்கிறது. என்கிறார் ரிச்சா. இவர் இந்தியாவின் மிகப்பெரும் மழலையர் பள்ளி சங்கிலித் தொடரான யூரோ கிட்சின் ஆலோசகராக உள்ளார். இந்தியாவில் கடுங்கோடையின்போது மட்டும் ஏசியைப் பயன்படுத்தினால் போதும் என்று சில கட்டுமான நிபுணர்கள் சொல்கிறார்கள். நல்ல காற்றோட்டமுள்ள அறையில், நல்ல வேகத் தில் ஓடும் ஒரு மின் விசிறி இருந்தால் ஆண் டின் பிற மாதங்களில் போதுமான வசதி கிடைக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். மெல்லிய துணிகள் அணிவது, மிதமாகச் சாப்பிடு வது, மாலையில் சற்று நேரம் தூங்குவது போன்ற பாரம்பரிய முறைகள் தற்போது நடப்பில் இல்லை. நவீன மோகம் மரபான அறிவை காலிசெய்து விட்டது.

வெப்ப நிலை மாறுபாட்டுக்கு ஆளாவது உடலின் தாங் கும் திறனை அதிகப்படுத் துகிறது என்று நவீன மருத்துவம் சொல்கிறது. ஆனால் செயற்கையான குளிர்விப்பின் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் இருப் பதையே இன்று மனிதர் கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறார் கட்டு மான நிபுணர் கவுரவ் சோரி, இன்று கோட்டு, சூட், பேண்ட் அணிகி றார்கள் அல்லது இறுக்க மான ஜீன்ஸ் அணிகிறார்கள். உடல் வெப்பமாக இருக்கிறது என்று புலம்பிக் கொண்டு ஏசியை 19 டிகிரியில் ஓட விடுகிறார்கள். வெள்ளை நிற மெல்லிய குர்தா அணிந்தால் இந்தத் தேவையே இல்லை என்ற அவர் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழ் ஓவியா said...


காமராசரின் கணக்கு


3ஆம் வகுப்பில் ஆசிரியர் கணக்கு சொல்லித் தருகையில் கூட்டல் முறை தெரிய ஒரு கணக்கு சொன்னார். தாய் கடைக்குப் போய் முட்டை வாங்குவதாகவும், அப்பாவுக்கு 1, அம்மாவுக்கு 1. மகனுக்கு 1. மகளுக்கு 1 ஆக மொத்தம் எத்தனை முட்டைகள் வாங்க வேண்டும் என கேட்க, அனைவரும் அவரவர் சிலேட்டில் 4 என விடை எழுதினர். ஒருவன் மட்டும் அருகிலுள்ள சிலேட்டுகளை பார்த்தும் 3 என எழுதினான்.

ஏன் தம்பி, பக்கத்திலே பார்த்தும் தப்பா எழுதியிருக்கே? என ஆசிரியர் கேட்க, அவன் எனக்குத்தான் அப்பா உயிரோடு இல்லையே அய்யா எனச் சொன்னான். அந்த மாணவன்தான் பின்னாளில் கர்மவீரர் காமராஜர் எனப் போற்றப்படுபவரானார்.

நன்றி: திருக்குறிப்புத் தொண்டர்

தமிழ் ஓவியா said...


தடையோ தடை!



1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட அனால்ஜிர் மாத்திரையை இந்தியா இப்பொழுதுதான் தடை செய்துள்ளது.

பியாக்லிடாசோஸ் எனும் மாத்திரை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான மாத்திரை 30 லட்சம் நோயாளிகள் இந்தியாவில் பயன்படுத்தும் இந்த மாத்திரையை பிரான்ஸ் 2011ஆம் ஆண்டிலேயே தடை செய்து விட்டது. இந்தியாவோ இப்பொழுதுதான் தடை செய்துள்ளது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடி விற்பனையானது என்ற தகவல் எவ்வளவுக் கொடுமையானது. இதில் என்ன கொடுமை தெரியுமா?

2011இல் பிரான்சு தடை செய்தது. அதே ஆண்டில்தான் இந்தியா அம்மாத்திரைக்குக் கதவு திறந்து விட்டது

தமிழ் ஓவியா said...


ஜாதி ஒழிப்பு இணையர்க்குப் பாதுகாப்பு தேவை! சேலத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்


அர்ச்சகர் பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்
ஜாதி ஒழிப்பு இணையர்க்குப் பாதுகாப்பு தேவை!
சேலத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சேலம், ஜூலை 13- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதில் அரசு தீர்வு காண வேண்டும்; ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரையிலே முதற்கட்டம் போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடைபெறும் முக்கியமான பெருநகரங்களில் கழக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும். தமிழ் நாடு முழுக்க ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதற்கட்டமாக போராட்டம் நடைபெறும்.

இரண்டாவது கட்டமாக, ஒத்தக் கருத்துள்ளவர் களை அழைத்து கருத்தரங்கம், மாநாடுகளை நடத்தவுள்ளோம்.

மூன்றாவது கட்டமாக, அதுவரை நீடிக்காது என்று நினைக்கிறேன்; அதற்குள்ளே இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை; உச்சநீதிமன்றம் இரண்டு வழக்குகளில் ஏற்கெனவே சாதகமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றம் இதற்கு மாற்றுக் கருத்தைத் தருவதற்கு வாய்ப்பில்லை. எந்தெந்த எதிர்ப்புகளை எல்லாம் மனுதாரர்கள் சொல்லி யிருக்கிறார்களோ, ஏற்கெனவே போட்ட வழக்கு களில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது உச்சநீதிமன்றத் தில். இப்போது ஏன் தமிழக அரசு குறுக்கே நிற்கிறது என்றால், தமிழக அரசு சார்பாக, ஒரு அபிடவிட் போட்டதால்தான் இப்போது முட்டுக்கட்டை; அதை அவர் நீக்கிவிட்டாலே இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினையில், தமிழக அரசு வெளியில் சுமூகமாகத் தீர்த்துக் கொள்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

கிராமக் கோவில் பூசாரிகளாக இப்போது பயிற்சி பெற்றவர்களை நியமித்துவிடக்கூடாது. 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி பயிற்சி பெற்றவர்களான 206 பேர்களுக்கு பணி நியமனம் வேண்டும்.
அதோடு, ஒவ்வொரு ஆண்டும் சட்டக்கல்லூரி யிலே, மருத்துவக் கல்லூரியிலே அரசாங்கத்தால் நடத்தப்படுகிறதோ, அதேபோல், அர்ச்சகர் பயிற்சி யும் 69 சதவிகித அடிப்படையில் நடத்தப் பட வேண்டும். தற்போது நிறுத்தப்பட்டுள்ளது; அது மீண்டும் தொடங்கப்படவேண்டும்.

தருமபுரி நடவடிக்கைள் பற்றி திராவிடர் கழகத் தலைவர் கூறியதாவது:

நீதியரசர், நீதி விசாரணை என்பதை தமிழக அரசு போட்டிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது.

இதில் உண்மைகள் வெளிவரவேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாது காப்பு இருக்கவேண்டும். தனி மனிதர்களுக்கே பாதுகாப்பு தேவை; சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக இதனைப் பார்க்காமல், தமிழக அரசு இதை ஒரு சமூகப் பிரச்சினையாக, நீண்ட கால பிரச்சினையாக பார்த்து, அதற்குத் தேவையான செயல்களைச் செய்யவேண்டும்.

சட்டபூர்வமாகப் பார்த்தீர்களேயானால், அரசியல் சமத்துவம் வந்தாயிற்று; ஆனால், சமூக சமத்துவம் வந்திருக்கிறதா? இது மிகப்பெரிய வேறுபாடாகும். இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சட்டம் அமலான அன்றைக்கே சொன்னார். ஒருவருக்கு ஒரு ஓட்டு வித்தியாசம் இல்லாமல் வந்துவிடும்; ஜாதி அடிப் படை இருக்காது; ஆனால், ஜாதி அதே நிலையில் இருக்கும். அதற்கு மாற்று செய்தால் ஒழிய, சமூக சமத்துவம் வராது என்றார்.

எனவே, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பினை தரவேண்டும்.

தலைவர்களுக்கு 144 தடை உத்தரவுபற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் அளித்த பதில் வருமாறு:

பொதுவாகவே, தமிழ்நாட்டில் இதுவரை தலைவர்கள் யாருக்கும் உள்ளே நுழையக்கூடாது என்று தடை உத்தரவு போட்டது கிடையாது. அப்படி போடவேண்டிய அவசியம் இல்லை. தலைவர்களின் பேச்சால் ஏதாவது தவறு நடந்தால், அவர்கள்மீது வழக்கு போடலாமே தவிர, அவர்கள் உள்ளேயே வரக்கூடாது என்று தடை உத்தரவு போடுவது ஏற்புடையதல்ல.

தமிழில் வாதாடக்கூடாது என்று வழக்கை தள்ளுபடி செய்திருப்பதைப்பற்றி கூறியதாவது:

சட்டத்தை மாற்றவேண்டும். கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொழுதுகூட, குடியரசுத் தலைவர்வரை போய் அது நிலுவையில் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஏற்கெனவே வழக்கு போட்டு அங்கே வாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அரசியல் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மொழி என்பதால், பெரும்பாலான வட மாநிலங்களில் இந்தியில் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதி சொன்னதில் தவறில்லை; மத்திய அரசில் சட்டத் திருத்தம் வரவேண்டும். இது நீண்ட காலப் போராட் டமாக இருக்கிறது. ஆட்சி மொழியாக அந்தந்த பகுதியில் இருக்கின்ற மொழிகள் வரவேண்டும். குறிப்பாக தமிழ் செம்மொழி போன்ற மொழி களுக்கு இந்த வாய்ப்பில்லை என்பது வருந்தப்பட வேண்டியதும், வெட்கப்படக்கூடிய ஒரு செய்தி யாகும். எனவே, அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரவேண்டும். அதை உடனடியாக மத்திய அரசு இதில் கவனம் செலுத்தவேண்டும். இந்தப் பிரச்சினை குடியரசுத் தலைவர் வரை சென்று நிலுவையில் இருக்கிறது. அரசியல் சட்டம் மாற்றப் படவேண்டும்; திருத்தப்படவேண்டும்.

தமிழ் ஓவியா said...


புத்தம், மதமாக்கப்பட்டதால் ஏற்பட்ட விபரீதம்!


உலகில் உள்ள புகழ் பெற்ற பாரம்பரியச் சின்னங்களுள்(World Heritage Site) முக்கிய மானது பீகார் மாநிலத்தில் புத்தகயாவில் உள்ள மகாபோதி விகார்!

7.7.2013 அதிகாலை அது, குண்டு வீச்சுக்கு இலக்கானது என்கிற செய்தி அனைவரையும் அதிர்ச்சி வீச்சுக்கு ஆளாக்கி விட்டது.

இந்த வன்முறை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உலகில் மிக உயர்ந்த சீலங்களை வாரி வழங்கிய கவுதமப் புத்தரின் நினைவுக் குறிப்புக்கான இடத்தைத் தாக்கியவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதன் பின்னணியில் மதவாதம் இருக் கிறதா? அரசியல் இருக்கிறதா? என்ற சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

வழக்கம் போல தீவிரவாத இஸ்லாமிய அமைப்புதான் இதன் பின்னணியில் இருக் கிறது என்று ஒரு பக்கம் செய்திப் பரப்பல்;

மியான்மாவில் முஸ்லீம்களை பவுத்த மதத்தினர் தாக்கினார்கள். அதன் எதிரொ லியே இந்தத் துயர நிகழ்வு என்று விளக்கம்;

இன்னொரு பக்கம் பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் ஆட்சி நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி என்று அறிவிக்கப்பட்டதால், அதனை ஏற்றுக் கொள்ளாமல் கூட்டணியிலிருந்து வெளியேறி னார். அதற்குப் பதிலடியே பீகாரில் இந்த வன்முறை - பின்னணியில் மோடியின் கை இருக்கிறது என்று இன்னொரு தரப்பின் குற்றச்சாற்று!

இதற்கிடையே மூன்றாவது சிந்தனை ஒன்றுண்டு; மானுடத்தின் நல்வாழ்வுக்கு அறநெறிப் பண்புகளை - பஞ்ச சீலங்களை வழங்கிய பகுத்தறிவுச் சிந்தனையாளர் கவுதம புத்தர். அவர் நிறுவியது மதமல்ல - ஒரு நெறி! அதனை மதமாக்கி வெறியூட்டிய காரணத் தால்தான் இலங்கையில் சிங்கள வெறித்தனம் கொம்பு முளைத்து, ஈழத் தமிழர்களை வேட்டை யாடித் தீர்த்தது. புத்தர் சிலைகள் தமிழர்களின் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டன!

யாகம் என்ற பெயரால் உயிர்களைப் பலி கொடுக்கக் கூடாது என்று சொன்னவர் சித்தார்த்தனாகிய புத்தன்!

உயிர்களைக் கொன்று மோட்சம் போக முடியுமென்றால், உன் தகப்பனைக் கொன்று மோட்சம் போகாமல் உம்மைத் தடுத்தது எது? என்ற வினாவை எழுப்பி, சிந்தனையில் புது வெளிச்சத்தை ஏற்படுத்திய புத்தன் சிலை யையே ரத்தத்தால் குளிப்பாட்டிய கொடுமை களை என்னென்று சொல்லுவது!

மனிதனாகிய புத்தனைக் கடவுளாக்கி, மதச் சடங்குகளைத் திணித்து சீரழித்து விட்டனர்.

புத்தரை ஒரு மதத் தலைவராக்கி, பவுத் தத்தை மதமாக்கிய காரணத்தால் உலகில் உள்ள எத்தனையோ மதங்களுள் புத்த மதமும் ஒன்று என்றாகி விட்டது.

முஸ்லிம்கள் - பவுத்தர்கள் மோதல்கள் என்றெல்லாம் செய்திகள் வர ஆரம்பித்து விட்டனவே!

பார்ப்பனர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று புத்தர், மகா விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று கதை கட்டி விட்டனர்.

ஒரு கொள்கையை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு மதச்சாயம் பூசினால் போதுமே!

தந்தை பெரியார் சிலையை நிறுவும் இடங்களில் எல்லாம் அதன் பீடத்தில் மறக்காமல் கடவுள் மறுப்பு வாசகங்களைப் பொறிப்பதன் நோக்கம் புரிகிறதா?

தமிழ் ஓவியா said...


காலத்துக்கேற்ற...



காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனா வான்.
_ (குடிஅரசு,26.1.1936)

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசமைப்புச் சட்டத் திருத்தம்:


டெசோ கூட்டத்தில் விவாதிக்கப்படும்
கலைஞர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 13- இலங்கை அரசமைப்புச் சட்டத் திருத்தம் இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்து 16ஆம் தேதி நடக்கவுள்ள டெசோ கூட்டத்தில் விவாதிக்கப் படும் என்று எழுதியுள்ளார் டெசோ தலைவர் கலைஞர். இதுகுறித்து முர சொலியில் (12.7.2013) எழுதி இருப் பதாவது:

கேள்வி :- அரசியல் சட்டத் திருத் தப்படி அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்பாகக் கூறியிருப்ப தாக ஒரு செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- இலங்கைத் தமிழர் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1987ஆம் ஆண்டு ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர் களும், இலங்கை அதிபர் ஜெய வர்த்தனே அவர்களும் கையெழுத் திட்ட அந்த உடன்பாட்டின்படி, மாகாணக் கவுன்சில்களுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள, வழிவகை செய்யும் வகையில் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-ஏ பிரிவு திருத்தப்பட்டது. ஆனால் இன்றைய இலங்கை அதிபர் ராஜ பக்சே அரசு அதை நடைமுறைப் படுத்தாமல், அதனை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை மேற் கொள்வதில் தீவிரமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய கடிதத் திற்கு அளித்த பதிலில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் குறித்த யெச் சூரியின் கருத்துக்களை அறிந்த தாகவும், இதுகுறித்து இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் இதர சமூகங் களைச் சேர்ந்த மக்கள் சமமாகவும் சுயமரியாதையுடனும் நடத்தப்படு வதை உறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சில நாட்களுக்கு முன் இலங்கைக்குச் சென்றார். அங்கே அவர், இலங்கை அதிபர் ராஜபக்சே, பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் பசில் ராஜபக்சே, இராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரி டம் பேசினார். அதன் தொடர்ச்சியாக இலங் கையிலே உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துக் குடி மக்களும் சமத்து வம், சமநீதி, சுயமரியாதையுடன் வாழ வேண்டும்;

இதை இந்தியா உறுதி செய்ய விரும்புகிறது. அந்த வகையில் இலங்கையில் (இனப்பிரச்சினையில்) விரைவான அரசியல் தீர்வு காண்ப தற்கு, 13ஆவது அரசியல் சட்டத் திருத் தத்துக்கும் அப்பால், இந்திய அரசுக் கும், சர்வதேச சமுதாயத்துக்கும் அளித்த வாக்குறுதியினை இலங்கை பின்பற்றி அதிகாரப் பகிர்வு வழங் குவது அவசியம்; இதை இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் சிவசங்கர் மேனன் இந்தியாவின் சார்பில் வலியு றுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மை யாகவும், நம்பத் தகுந்த விதத்திலும் நடத்தப்படும் என நம்புகிறோம். இந்திய மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்தும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பேசப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் வன்முறையில் இறங் காமல் மனிதநேய அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை எந்த ஒப்பந்தத்தையும் உறுதி மொழியையும் காப்பாற்றாத இலங்கை அரசு, சிவசங்கர மேனன் அவர்களிடம் இலங்கை அதிபர் தெரிவித்த உறுதிமொழியை எந்த அளவிற்குக் காப்பாற்றப் போகிறது என்பதுதான் பிரச்சினை.

சிவசங்கர மேனனை தாங்கள் நம்பவில்லை என்று இலங்கைத் தமிழர்கள் கருத்துத் தெரிவித்திருப்ப தாகவும் செய்திகள் வந்துள்ளன. எனவே சிவசங்கர மேனன் கூறுவது உண்மையா? அது உண்மையாக இருந்தாலும், அவருக்கு உறுதிமொழி அளித்த தாகக் கூறப்பட்டிருப்பது உண்மையா? ஏனெனில் அவர்கள் பின்பற்றிய கடந்த கால நடை முறைகள் எதுவும் நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை.

எனினும் தற்போது அளித்துள்ள உறுதிமொழி களாவது காப்பாற்றப்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுகுறித்து சென்னையில் 16ஆம் தேதியன்று நடைபெறவுள்ள டெசோ கூட்டத்தில் விரிவாக விவா திக்கப்படும்.

தமிழ் ஓவியா said...


திரு.வி.க. என்ற தென்றலின் குளுமை இதோ!


சென்னை என்ற நமது தமிழ் நாட்டுத் தலைநகரில் (கடந்த) 57 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு பொதுமன்றம் - தமிழ்மொழி உணர்வு டனும், இன உணர்வுடனும், பண்பாடு பரப்பும் பாசறையாகவும் நடத்தப்பட்டு வருகிறது என்றால் அது தமிழ்த் தென்றல், திரு. வி.க. அவர்களது பெயரில் நடைபெற்று வரும் மணவழகர் மன்றமே ஆகும்.

நல்ல ஆளுமைக்குழு, சிறந்த புரவலர்கள், தங்களை முன்னி றுத்தாது, தங்களது தொண்ட றத்தையே முன்னிறுத்திடும் தகை மைசால் நீதியரசர், பெரியார் மண்ணி லிருந்து காந்தி மண்ணுக்கு நீதி சொல்ல அனுப்பப்பட்ட குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்களும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகி அரும் பெரும் நீதிகளை வழங்கிய நீதிபதி முதுமுனைவர் அரு.லட்சு மணன் அவர்களும், செயலாளராக செம்மையான பணி செய்யும் கன்னித் தமிழ்க் குடிமகன் கன்னியப்பன் அவர் களும், அவர் தம் ஆளுமைக் குழுவினரும், தொய்வின்றி இந்த தொண்டு அமைப்பு நடைபெறுவதற்குத் தங்கள் அரிய உழைப்பைத்தந்து, உலகுக்கு திரு.வி.க.வின் தொண்டு மறக்கப்படாத ஒன்று என்று நிலை நிறுத்தி வருகிறார்கள்; அவர்களையும் அமைப்பினர்களையும் எவ்வளவு வேண்டுமானலும் பாராட்டலாம்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் தமிழ் நடை படிக்கப் படிக்கத் தெவிட் டாத தேன் ஆகும். அவரது தன்னடக் கத்திற்கு ஒப்புவமை எளிதில் கண்டு பிடிக்க இயலாது.

அவரது தனி வாழ்க்கை என்பதை விட பொதுவாழ்க்கை தூய்மையிலும், தொண் டிலும், எளிமையிலும் அமைந்த ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை.

இன்றைய பகட்டு உலகம், வெளிச்சம் போட்டு வாழ்வதே தங்களது விளம்பர வாழ்வு - ஆடம்பர மோக முள்ளில் சிக்கிய பின் சீரழிவு வாழ்க்கை என்ற நிலையில், தந்தை பெரியார், திரு.வி.க. போன்றவர்கள் வாழ்க்கை எளிமையின் குடியிருப்புகளாகும்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரியாத உண்மை நெறி வயப்பட்ட வாழ்க்கை அவ்விரு பெரியார்களின் வாழ்க்கை! பல கருத்துக்கள், நம்பிக்கைகளில் இருவரும் இருவேறு நிலைப்பாட்டினர்; ஆனால் நட்பிலோ இணை பிரியாத காதலர்கள், ஊடல்கள் வந்தபின்னும் அன்பின் நட்புறவு கூடல்களாக இறுதி வரை மாறா இருநிலை; அவர்கள் இருவ ருடையதும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு ஆகும்.

சுயமரியாதை இயக்கம் தான் தமிழ் நாட்டை, இந்தியாவையே புரட்டிப்போட்ட புரட்சி இயக்கம்!

மனிதகுல சமத்துவத்திற்காகப் போராடிய - புது உலகம் காண உழைக் கும் சமூக இயக்கம். அது பற்றி வாழ்க் கைக் குறிப்பு நூலில் திரு.வி.க. அவர்கள்.

நாயக்கர் சுயமரியாதை இயக்கம் எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை, பத்துப் பங்கு வேற்றுமை. வேற்றுமை எங்களுக் குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமை யும் எங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒரு காரணம் (பக்கம் 254)

.... வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாகிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது நான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்ட மாகவே வழங்கலாயிற்று (பக்கம் 355)


தமிழ் ஓவியா said...

57 ஆண்டுகளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மற்ற தமிழ் அறிஞர்கள் இலக்கிய மேதைகள், நீதியரசர்கள் என்ற பலவாக சான்றோர்களும் ஆண்டு விழாக்களில் கலந்து அறிவு விருந்தளித்து மக்களை மகிழ்வித்துள்ளனர்.

கடந்த வியாழனன்று (11.7.2013) அன்று நடைபெற்ற ஆண்டு விழாவைத் துவக்கி வைத்த சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதி தமிழ்வாணன் அவர்களும் தலைமையேற்ற மாண்புமிகு புரவலர் நீதியரசர் பு.ரா.கோகுல கிருஷ்ணன் அவர்களும் ஔவை நடராசனார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. சென்னை வானொலி நிலைய மேனாள் உதவி இயக்குநர் நல்லதம்பி அவர்களும் கலந்து கொண்டு சிறந்த தோர் கருத்து விருந்து அளித்தனர்.

திரு.வி.க. அவர்களது எழுத்தில் ஒரு பகுதியை -திரு.வி.க.வின் சமுதாய நோக்குப்பற்றி விளக்குகையில் மேற் கோளாகக்காட்டி கூடியிருந்தோருக்கு கொள்கை விருந்தளித்தார் - மேனாள் தலைமை நீதீபதி பு.பு.ரா. அவர்கள்.

சரித்திர உலகை நோக்கினால் புரோகிதர் உலகக் கொடுமை நன்கு புலனாகும். புரோகிதர் உலகால் அழிந்த ராஜ்யங்கள் பல, சமூகங்கள் பல, கலைகள் பல, நாகரிகங்கள் பல. எக்காரணம் பற்றி புரோகித உலகம் ஏற்பட்டதோ, அக்காரணம் பற்றி அவ் வுலகம் இப்பொழுது இயங்கவில்லை.

அதனால் இவ்வுலகம் தொல்லை விளைவித்து வருகிறது. புரோகிதர் உலகம் இனிச்சீர்திருத்தம் பெறல் வேண்டும், இல்லையேல் அஃது அழிதல் வேண்டும். பொருள் ஆசை காரணமாகவே புரோகிதர் உலகம் தீயவழியில் புகுகிறது இப்படி தென் னாட்டுக்குரல் பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டது.

அதே பாணியில் (அதற்கு சற்று முந்தைய) காலகட்டத்திலும் கூட, விவேகானந்தர் கடுமையான மொழி யில் புரோகிதர்களைச் சாடினார்.

வடக்கே, கிழக்கே கேட்ட குரல்கள் பற்றி நாம் சிந்திக்கிறபோது, அத் தீமையிலிருந்து உலகம் விடுபட நமது பல்சால்பு என்னவென்று சிந்தித்து, செயலாற்ற வேண்டாமா?

கொடுமைகளைக் கண்டு கொதித் தெழுவது முதற்கட்டம்; அதனை மாற்றி புதுயுகம் படைக்க வேண்டாமா?- இது தான் அப்பெரியார்களுக்கு நாம் காட்டும் உண்மையான மதிப்பும் மரியாதையும்!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


டாக்டர் வரதராஜூலு நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்டல்


ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடு சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர் கட்சி என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும், தேர்தலில் சுயராஜ்யக் கட்சி வெற்றி பெற்றால் பார்ப்பன ஆதிக்கம் ஓங்கு வதுடன் பார்ப்பனரல்லாதாருக்கு மீளாத ஆபத்து வரும் என்றும் சொன்னதிலி ருந்து, நமது பார்ப்பனரும், அவர்களிடம் கூலி பெற்று வயிறு வளர்க்கும் கூலிகளும், பத்திரிகைகளும் டாக்டர் நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்ட ஆரம்பித்து விட் டார்கள். அதாவது நாயுடு சங்கதியை வெளிப் படுத்தப் போகிறோம். அவர் ஜெயிலில் நடந்து கொண் டதை வெளிப்படுத்துகிறோம் என்று என்ன என்னமோ ஈனத்தனமாய்க் கூச்சல் போடுகின்றார்கள். அப்படி யானால் டாக்டர் நாயுடுவின் செய்கை என்ன என்பதை ஒரு கை பார்த்தே விடலாம். சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல் கள், சாராயம், பிராந்தி, சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சி பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களி லெல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம் பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகையில் பேர் போடுவதாகவும் படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண் ஜாதிக்கு பட்டு, சல்லா முதலிய அந்நிய நாட்டுத் துணிகளையும் உபயோகித்துக் கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டு வந்து பொது ஜனங்களை ஏமாற்று கிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரிய பெரிய உத்தி யோகங்களையும், பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோ கத்தை ராஜினாமா கொடுத்து ஜனங் களை ஏமாற்றினாரா? அல்லது இன்ன மும் தனக்கு ஏதாவது ஒரு உத்தி யோகமோ, பதவியோ கிடைக்கு மென்று எதிர்பார்க்கிறரா? எந்த விதத் தில் அவர் பூளவாக்கை வெளிப்படுத் தக் கூடும் என்பது நமக்கு விளங்க வில்லை. ஆதியில் பார்ப்பனரல்லாதார் கட்சி பலமாய் ஆரம்பித்த காலத்திலும், அதைக் கொல்ல இம்மாதிரியே சுக்கிரீவனைப் போலவும், விபூஷணனைப் போலவும், அனுமார்களைப் போலவும் ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுவையும், கலியாணசுந்தர முதலி யாரையும் மற்றும் பல பேர்களையும் தாங்கள் சுவாதீனப் படுத்திக்கொண்டு அவர்களுக்கு ஜாதி, குல அபிமானம் இல்லாமல் செய்தும், அவர்கள் மூலமாய் பார்ப்பனரல் லாதார் கட்சியைத் தலையெடுக்க வொட்டாமல் செய்ய பாடுபட்டதுமல்லாமல் இப்பொழுதும் அவர்களை மிரட் டிப் பூச்சாண்டி காட்டுவதானால் இவர்கள் பூச் சாண்டிக்கு யார்தான் பயப்படுவார்கள்? இவர்கள், இவர்களைப் பற்றி வெளியாக்கப் போகும் விஷயம் என்னவென்றுதான் ஒரு கை பார்க்கலாம் என்றே தயாராயிருக்கிறோம். இதன் பலனாகவாவது அரசியல் துறையிலுள்ள எல்லாருடைய யோக்கியதையும் வெளி யாக்கக் கூடுமென நினைத்தே அவற்றை மனப்பூர்வமாய் வரவேற்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.10.1926

தமிழ் ஓவியா said...


5000 ரூபாய் இனாம்


தமிழ்நாட்டு சார்பாக இந்திய சட்டசபைக்குச் சென்ற தடவை ஒருவர் தவிர எல்லோரும் அய்யங்கார் பார்ப்பனர்களாகவே நின்றார்கள். இந்தத் தடவையும் அதேமாதிரி எல்லோரும் அய்யங்கார் பார்ப்பனர் களாகவே நிற்கிறார்கள், பார்ப்பனரல்லாதார் சார்பாய் இந்தியா சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதிக்கு நிற்கும் ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாய் ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்கார் நிற்கிறார். எப்படியாவது ஸ்ரீமான் சக்கரை செட்டி யாரைத் தோற்கடித்துத் தான் வெற்றி பெற ஆசைப் பட்டு பணம் கொடுத்து ஆள்களைச் சேர்த்து பொய்ப் பிரசாரம் செய்கிறார். இதற்காகத் தன்னைப் பெரிய தியாகி என்று சொல்லச் சொல்லுகிறார்; தனக்கு ஓட்டுக் கொடுத்தால் சீக்கிரம் சுயராஜ்யம் வருமென்று சொல்லச் சொல்லுகிறார். ஆனால் ஒருவராவது இது வரை அய்யங்கார் என்ன தியாகம் செய்தார் என்று சொல்லவில்லை. ஒருவராவது இதுவரை அய்யங் காரின் சுயராஜ்யத் திட்டம் இன்னது என்று சொல்ல வில்லை. அய்யங்கார் தியாகமெல்லாம் வக்கீல் உத்தியோகத்தில் மாதம் பத்தாயிரம் இரு பதாயிரம் சம்பாதித்துப் பணம் சேர்த்து வருவதோடு, காலி ஆசாமிகளுக்குக் கொஞ்சம் கூலி கொடுத்து பார்ப்பன ரல்லாதார் கட்சியையும் பார்ப்பனரல்லாதார் தலைவர் களையும் திட்டும்படி சொல்லுவதும், கூட்டங் களில் கலகம் செய்யச் செய்வதும், பணம் கொடுத்துப் பிரசாரம் செய்து காங்கிரஸ் தலைவர் பதவி பெற்றது மானவை தவிர வேறு என்ன என்ன தியாகங்கள் செய்திருக்கிறார் என்று சொல்லுகிறவர்களுக்கு 5,00 ரூபாய் இனாம்.

ஸ்ரீமான் அய்யங்காரின் சுயராஜ்யத் திட்டம் பார்ப்பனரல்லாத கட்சியை ஒழித்து, பார்ப்பனரல்லாத மந்திரிகளைத் தள்ளிவிட்டு, அந்த தானத்தில் தாங்களும் தங்கள் இனத்தாரும் உட்கார்ந்து கொண்டு, பார்ப்பனரல்லாதார் அனுபவித்து வருவதாய்ச் சொல்லும் அதிகாரங்களையும், வேறு பதவிகளையும், உத்தி யோகங்களையும் பிடுங்கிப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதைத் தவிர உண்மையான சுயராஜ்யத் திட்டம் ஏதாவது அவருள்ளத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடித்துச் சொல்லுகிறவர்களுக்கு 1,000 ரூபாய் இனாம்.

ஸ்ரீமான் அய்யங்காருக்காகப் பிரசாரம் செய்கிற வர்களிலாவது, மேடைமேல் நின்று பேசுகிறவர்களி லாவது, பத்திரிகையில் எழுதிகிறவர் களிலாவது ஸ்ரீமான் அய்யங்காரிடம் கூலி வாங்காமல் பேசுகிற எழுதுகிற ஒரு நபரையாவது காட்டுபவர்களுக்கு 1,500 ரூபாய் இனாம்.

இப்போது அவர் கூலி கொடுத்து பொய்ப் பிரசாரம் செய்விக்கும் ஆள்களையாவது கூட்டத்தில் கலகம் செய்விக்கும் ஆள்களையாவது நவம்பர் மாதம் 8-ந் தேதி (எலெக்ஷன்) ஆனபிறகு கிட்டத்தில் சேர்ப்பார் என்று நிரூபிப்பவருக்கு 2,000 ரூபாய் இனாம்,

சென்னைவாசிகளே! சக்கரை செட்டியாரின் தோல்வி பார்ப்பனரல்லாதாரின் தோல்வியாகும். அய்யங்காரின் வெற்றி பார்ப்பன ஆதிக்கத்திற்கு வெற்றி ஆகும். ஆதலால் வீணாகக் கூலிக்கு மாரடிப்பவர்கள் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள்.
- குடிஅரசு - கட்டுரை, 10.10.1926

தமிழ் ஓவியா said...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழி லாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங் களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதர் களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ந் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களை யாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார்களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப்பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க்கும்படி வேண்டு கிறோம். - குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926