Search This Blog

16.7.13

கிறித்துவத்தில் இப்படி ஒரு கொடுமையா?



கிறித்துவ இல்லத்தரசிகளை ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்காக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது; விவிலிய நூல் விதித்தவாறு நடந்தேறிய திருமணங்கள் முறியாமல் பார்த்துக் கொள்வது இந்த அமைப்பின் பொறுப்பாம். இதற்காக இந்த அமைப்பு பரிந்துரைப்பதெல்லாம் வேறொன்றுமில்லை; சிறுவர்களுக்கு அளிக்கும் தண்டனையைப் போல மனைவிமார்களின் பிட்டத்தில் கணவர்கள் அடிக்க வேண்டுமாம்.
இந்த இயக்கத்தைப் பின்பற்றும் ஒரு கணவன் கடவுளுக்குப் பயந்த தனது மனைவியை எந்தப் பொருள் கொண்டும் அடிக்கலாம் என்று முடிவு செய்வதில் கணவன் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியமாம். எடுத்துக் காட்டாக தலைமயிரைப் படிய வைக்கப் பயன்படுத்தும் பிரஷ் மனைவியை அடிப்பதற்கு மிகவும் பொருத்தமானதுதான்; என்றாலும் அது எளிதில் உடைந்துபோகுமே. அதற்கு மாற்றாக, டேபிள் டென்னிஸ் மட்டை மிகவும் பொருத்தமானதாக வும், எளிதில் உடையாத உறுதி கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மனைவிமார்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கத் தேவையான வலியை அந்த மட்டையால் அடிப்பது ஏற்படுத்தாமல் போய்விடக்கூடும்.
இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் செயல் முறைகளை விவரிக்கும் 54 பக்க ஆவணம்  ஒன்று இந்த அமைப்பில் புதியதாக சேர்பவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள,  தேவையான ஆலோசனைகள், குறிப்புககளில் மேற்கூறிய தகவல்களும் அடங்கியுள்ளன.
இந்த ஆவணத்தைத் தயாரித்தவர்கள் இந்த அமைப்பினைப் பற்றி கீழ்க் குறிப்பிட்டவாறு விவரிக்கின்றனர்:
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவரது ஆலோசனையை மற்றவர் ஒப்புக் கொள்ளும் இல்லற வாழ்க் கையின் பங்குதாரர்களான கணவன், மனைவியிடையே பின்பற்றப்படும் செயல்முறைதான்  இல்லத்தரசிகளை ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கான இந்த இயக்கம். வீட்டின் தலைவர், அதாவது கணவர் ஆரோக்கியமான, உரமும் ஊக்கமும் வாய்ந்த உறவு முறையை வென்றடைவதற்குத் தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள் வார்.  தேவையற்ற தீயொழுக்கத்தைப்  பங்களிப்பவர்களைத் தண்டிப்பதன் மூலம்,   ஆபத்து நிறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் விளைவுகள் ஏற்படாமல் குடும்ப உறுப்பினர் களைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான குடும்ப சூழலை உருவாக்கவும்,  குடும்பத்தின் மேம்பட்ட நன்மைக் காகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குடும்பத் தலைவரின் கடமையாம்.
பிட்டத்தில் அடிப்பதா?
ஒழுங்குமுறையிலான கிறித்துவ இல்லத்தை நிலை நாட்ட பிட்டத்தில் அடிப்பது, உரிமைகளை மறுப்பது, சிறிது நேரத்துக்கு ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதிக்க மறுப்பது போன்ற தண்டனைகள் அளிக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டதே இந்த இயக்கம்  என்று அதன் இணையதளம் தெரிவிக் கிறது. விவிலிய நூலில் விவரித்துள்ளபடி அதிகாரம் செலுத்துபவர் கணவனாகவும், அடிமைபோல் கீழ்ப்படிந்து நடப்பவர் மனைவியாகவும் இருப்பர் என்று அந்த இணையதளம் தெரிவிக்கிறது. பாலியல் நுகர்வில் மனநிறைவை எட்டுவதற்கான வழியாக இந்த பிட்டத்தில் அடித்தல் மற்றும் அதனைப் போன்ற இதர தண்டனைகளை  பிடிஎஸ்எம் சமூகத்தின் பிரிவு ஒன்று பயன்படுத்துவதாகக் கூறி இந்த விளக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் வெளியாட்கள் சிலரும் உள்ளனர். பிட்டத்தில் அடிப் பது பற்றிய இணைய தளம் அல்ல இது;  அதே போல் இது ஒரு ஆண், பெண் இணைப்பு சேவையும் அல்ல. தனிப் பட்டவர்களின் விளம்பரம், எரிச்சலூட் டும் பிதற்றல்கள், பாலுணர்வு தூண்டு தல்  அளிக்கும் கதைகள் அல்லது மாறுபட்ட வாழ்க்கை முறைகளைத் தெரிவிப்பதும் அல்ல என்று இந்த அமைப்பின் இணையதளம் தெரி விக்கிறது.
வெளிச்சத்துக்கு வந்தது!
இத்தகைய சமூக அமைப்புகளும், அவற்றின் இணையதளங்களும் பல ஆண்டு காலமாக இருந்து வருகின்றன. அன்றாட மிருகம்  (Daily Beast) என்ற இதழில் இந்த அமைப்பைப் பற்றி அண்மையில் வெளிவந்த செய்தி இந்த இயக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இத்தகைய வாழ்க்கை முறையைப் பின் பற்றும் கணவன் மனைவியர் ஆயிரக்கணக்கில் இருப்ப தாகக் கூறும் இக்கட்டுரை, இந்த அமைப்பின் செயல்பாடுகள் பற்றி தெரிவிக்கும் ஆலோசனைக் கையேட் டினைத் தயாரித்து வெளியிட்ட செஸ்லா மற்றும் கிளின்ட் ஆகியோரி டம் நேர் காணலுடன் இக்கட்டுரை வெளிவந்துள்ளது.  ஒரு ஆக்க பூர்வமான வாழ்க்கை முறையாக இந்த இயக்கத்தை விருப்பத்துடன் பின்பற்றும், கணவன் மனைவியரிடையே செஸ்லா மற்றும் கிளின்ட் போன்றோர் பலர் உள்ளனர். இந்த இயக்கத்தைப் பற்றி  தான் புலன் விசாரணை செய்தபோது பெரும் பாலான பெண்கள் இந்த இயக்கத்தைப் பற்றி ஆக்கபூர்வமான கருத்தை எழுதி அனுப்பியுள்ளனர் என்று  லாரா ருபினோ என்பவர் தெரிவிக்கிறார்.
தண்டனை அளிக்கப்பட்ட பின் தாங்கள் மிகுந்த அமைதியுடன் இருப்பது போல் உணர்வதாக பலரும் தெரி வித்துள்ளனர். மனைவி மற்றும் அவர் களது திருமணம் பற்றி கணவன் எடுத்துக் கொள்ளும் அக்கறையின் வெளிப்பாடே இது என்றும், அவர்களின் நடத்தையை மாற்றிக் கொள்ள இதுவே போதுமானது,  பிட்டத்தில் அடி பட்ட பிறகு தாங்கள் தூய்மை அடைந்தவர்களாக மனைவி மார்கள் உணர்கின்றனர், இத்தகைய தண்டனை அளிக்கப்படுவதன் மூலம், தீர்க்கப்படாமல் இருக்கக் கூடிய பிரச்சினை பற்றிய ஒரு விவாதத்தை மேற்கொள்ளும்  பதற்றமும், கவலையும் கொண்டவர்களாக மனைவிமார்கள் இருக்கத் தேவையில்லை என்று ரூபினோ எழுதுகிறார்.
என்றாலும், தங்களை அச்சுறுத் துவதாக அமைந்துவிட்ட  குடும்ப வாழ்க்கையில் தாங்கள் சிக்கிக் கொண்டது போல சில பெண்கள் உணருகின்றனர் என்பதற்கான ஆதாரங்களை டெய்லி பீஸ்ட் இதழ் தேடிக் கண்டு பிடித்து வெளிக் கொண்டு வந்துள்ளது.
ஒரு கணவன் மனைவியரிடையே ஒரு நியாயமான, சரியான உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ளும் வழியாக இதனை நல்ல மன நிலையில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்; முட்டாள்கள் மட்டுமே ஒப்புக் கொள்வார்கள்,   மனைவியை ஒரு குழந்தை போல நடத்தும் இந்த உறவு முறை அறிவுக்குப் பொருந்தாத, உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடிய மக்கள் பலரை நிச்சயமாகக் கவர்ந் திழுக்கக்கூடியதே என்று கிறித்தவக் குடும்பங்களில் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதைப் பற்றிய விவகாரத் தில் நிபுணரான, தடயவியல் மனோ இயலாளர் ஜிம் ஆல்ட்ஸ்ரஃப் கூறுகிறார். குடும்பத்தினை உண வளித்துக் காக்கும் பொறுப்பு ஆண்களுக்கு இருப்பதால், அவர்களே குடும்பத் தலைவர்கள் என்று பைபிள் கூறுவதாக,  முரண்பாடு மிகுந்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பிரியான் பிஷர் கூறினாலும், மனைவி களை ஒழுக்கப்படுத்தும் இந்த இயக் கத்திற்கும் பைபிளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.
பைபிளில் எங்கே இருக்கிறது?
ஒரு மின் அஞ்சலில் அவர் கூறு கிறார்: இந்த இயக்கத்தின் செயல் பாடுகளும், பிரச்சாரமும் மிகுந்த அச்சம் தருபவையாக, வழக்கத்திற்கு மாறானவையாக, திரித்துக் கூறப் பட்டவையாக, பைபிளுக்கும், கிறித்துவ மதக் கோட்பாடுகளுக்கும் மாறான வையாக உள்ளன, தங்கள் மனைவிகளுக்காக கிறித்துவ கணவர்கள் தங்கள் உயிரையே தருவார்கள் என்று பைபிள் கூறுகிறது. நிலையான வாழ்க்கையின் பரிசாக பெண்களை மரியாதையுடன் சக வாரிசுகளாக நடத்த வேண்டும் என்றும் பைபிள் கூறுகிறது என்று அவர் கூறுகிறார். மனைவிகள் தங்கள் கணவர்களின் தலைமையின் கீழ் தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புதிய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் மனைவி கீழ்படிந்தவராக இருக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கணவனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்றோ, அவ்வாறு கீழ்ப்படிய மறுக்கும் மனைவியை கணவன் தண்டிக்கலாம் என்றோ பைபிளில் எந்த இடத்திலும் சொல்லப்பட்டிருக்கவில்லை என்று பிஷர் கூறுகிறார்.
இந்த இயக்கத்தைப் பற்றிய பிரச்சாரக் குரல் பலத்து ஒலிக்கும் போக்கு அமெரிக்காவில் உள்ள சில பிற்போக்கு மனப்பான்மை கொண்ட கிறித்துவர்களிடம் வளர்ந்து வருகிறது.
மனைவியைத் தண்டிக்கும் இத்தகைய வாழ்க்கை முறையைக் கண்டித்து  கேள்வி கேட்பவர்களுக்கு இந்த வாழ்க்கை முறையைப் பின் பற்றுபவர்கள் இதனை தங்களது ஆன் மீகத்தின் ஒரு நீட்சியாகக் காண்பதாகக் கூறுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
தாங்கள் விரும்பும் எந்த ஒரு வழியிலும் தங்களது மதத்தைப் பின்பற்றவும், பைபிளுக்குத் தங்களின் வழியில் விளக்கம் கூறுவதற்கும் தங்களுக்குத் தகுதியும், உரிமையும் உள்ளது. கணவனுடனான தங்கள் உறவில் இத்தகைய தண்டனை மூலம் ஒழுக்கப்படுத்தப்படுவதை மனைவிகள் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர் என்று மெக்கான் ஸ்டகல் எழுதுகிறார்.
இந்த வாழ்க்கை நடைமுறையைச் சுற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடைகள் தெளிவின்றி உள்ளன. இவற்றின் பாதிப்புகள் என்ன என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
-------------------------------------தமிழில்: த.க.பாலகிருட்டிணன் --விடுதலை” ஞாயிறுமலர்  6-7-2013

34 comments:

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு இந்துத் தேசியவாதி!


இந்துத் தேசியவாதி ஒருவர் இந்தியாவின் பிரதமராக வரத் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி வாய் சும்மா இருக்காது. தனது இந்துத்துவா வெறியை எந்த வகையிலும் மறைக்க முடியாத அளவுக்கு அதி வெறி பிடித்தவர்.

கடந்த 12ஆம் தேதி அவர் அளித்துள்ள பேட்டி ஊடகங்களில் முதன்மையான இடத்தைப் பிடித் துள்ளது.

நான் தேசியவாதி; நான் ஒரு தேசப் பக்தர். இதில் ஒன்றும் தவறு இல்லை. நான் இந்துவாகப் பிறந்தவன் எனவே இந்துத் தேசியவாதி என்று நீங்கள் கூறிக் கொள்ளலாம் என்று இவ்வளவுப் பச்சையாகவே கூறியுள்ளார்.

இந்தியாவில் எத்தனைத் தேசியங்கள் இருக் கின்றன என்ற கேள்வி எழுகிறது!

ஒரே ... இந்தியத் தேசியம் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இன்னும் சொல்லப் போனால் காங்கிரசைவிட பிஜேபியினர் தங்களை 22 காரட் தேசியவாதிகள் என்று மார்தட்டக் கூடியவர்கள்தான். அவர்கள் அப்படி சொல்லுவது, இந்துத் தேசியம் என்ற அடிப்படையில்தான் என்பது, இதன் மூலம் அம்பலமாகி விட்டதே!

இந்தியாவில் இந்து மதம் என்ற ஒரு மதம் மட்டுமல்ல; பல மதங்கள் உள்ளன. மத நம்பிக் கையற்ற மக்களும் வாழுகின்றனர்.

இந்த நிலையில் தான் இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி படுத்துகிறது. ஆனால் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியோ தன்னை இந்துத் தேசியவாதி என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.
அவர் அப்படிப்பட்டவர்தான் என்பதைத் தன் நடவடிக்கைகள் மூலம் அவ்வப்போது காட்டிக் கொண்டும் வருகிறார்.

இந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாத மற்ற மதக்காரர்கள் தங்கள் மதங்களையும், கடவுள் களையும் இந்துத்துவமயமாக்கிக் கொள்ள வேண்டும்; கிறிஸ்துவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும். ராமனை வணங்க வேண்டும் என்று சொல்பவர்கள் என்பதை நினைவு கூர்ந்தால் மோடி கூறியதன் சூட்சுமம் விளங்கும்.

அதன் அடிப்படையில் தான் மோடி கோத்ரா கலவரத்தின் போது செயல்பட்டும் இருக்கிறார்; பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் அம்மாநிலத்தில் சிறைபடுத்தப்பட்டனர். அதில் 286 பேர் முசுலிம்கள் ஒருவர் சீக்கியர்.

பாதிப்புக்குக் காரணமான இந்துக்கள் சிறைப்படுத்தப்படவில்லை. மாறாகப் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தான் கைது செய்யப்பட் டுள்ளனர் என்பதிலிருந்தே மோடி நடைமுறையில், யதார்த்தத்தில் இந்துத் தேசியவாதியாக - முதல்வராகச் செயல்பட்டு இருக்கிறார் என்பது விளங்கவில்லையா?

மோடியின் பேட்டியில் கண்டுள்ள இன்னொரு கருத்தும் கவனிக்கத்தக்கது.

எனது பார்வையில் மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி, யாரையும் தாஜா செய்வதாக இருக்கக் கூடாது என்று சொல்லுவதில் உள்ள விஷமத்தைக் கணிக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள், நலன்கள் பற்றி ஓர் அரசு அக்கறை கொண்டால் அது அம் மக்களைத் தாஜா செய்வது என்று கூறகிறார் மோடி.

இந்தியப் பிரதமரின் அமைச்சகத்தில் சிறுபான் மையினரின் நலனுக்காகவே ஒரு பிரிவு உண்டு. சிறுபான்மை மக்களுக்காக இந்தப் பிரிவு ரூபாய் பத்துக் கோடியை ஒதுக்கியது. ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா?

அந்தத் தொகையை சிறு பான்மை மக்களுக்காகப் பயன்படுத்தாமல், நிதியை அப்படியே திருப்பி அனுப்பி விட்டார். இது பாகுபாடு காட்டுகிறது - இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அடித்துக் கூறிவிட்டார்.

இதுபோல சிறுபான்மையினரின் கல்வியில் கை வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வரு கிறார். குஜராத்தைப் பொறுத்தவரை மெட்ரிக்குலேசன் வரை படிக்கக் கூடிய முஸ்லிம்கள் வெறும் 26 சதவீதம்தான்; முசுலிம் அல்லாதவர்களோ இது 41 சதவீதமாகும்.

மோடி தன்னை இந்துத் தேசியவாதி என்று அறிமுகப்படுத்தியதன் பொருள் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!

மதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நிலவும் இந்தியாவுக்குப் பிரதமராக ஒரு இந்துத் தேசியவாதி வர முடியுமா? வரலாமா? அது சட்ட விரோதம் அல்லவா? நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்!

தமிழ் ஓவியா said...


அறிவு பெற முடியாமல்....


தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கிறான்.
(விடுதலை, 2.6.1970)

தமிழ் ஓவியா said...

இந்திக்குள்ள உரிமை தமிழுக்குக் கிடையாதா? கலைஞர் கேள்வி


திராவிடர் கழகம் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள்

சென்னை, ஜூலை 15-சில மாநிலங்களில் நீதிமன்றங்களில் இந்தி மொழி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டதைப் போல தமிழகத்தில் நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதாட குடியரசுத்தலை வரிடமும், உச்சநீதிமன்றத்திடமும் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அரசை திமுக தலைவர் கலைஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கலைஞர் நேற்று (14.7.2013) வெளி யிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்றைய தினம் சவுதி அரேபியாவில் தவிக்கும் கணவரை மீட்டுத்தரக் கோரிய வழக்கில் தமிழில் வாதாட அனுமதி மறுத்து, உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க இய லாது என்று கூறி, மனுவைத் தள்ளு படி செய்து விட்டார் என்ற செய்தி வந்துள்ளது.

நீதிபதியின் மீது எந்தவிதமான குறையும் சொல்ல நான் முன்வர வில்லை. அவர் தனது தீர்ப்பில் கூறும் போது, அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 348, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக் காடு மொழியாக ஆங்கில மொழி தான் இருக்கும் என்று கூறுகிறது. ராஜ்நாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகி இந்தியில் வாதாடினார். அப்போது அட்டர்னி ஜெனரலாக இருந்த தப்தாரி என்பவர் எதிர்ப்பு தெரி வித்தார். வழக்கை விசாரித்த அமர் வில் இருந்த நீதிபதிகளில் சிலரும் இந்தியில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்பு, இந்தியில் பேச நீதிபதிகள் அனுமதி மறுத்து விட்டனர்.
தி.மு.க ஆட்சி நடைபெற்றபோது, 22.11.2006இல் என்னைச் சந்தித்த பத்திரிகையாளர்களிடம், அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 348, உட்பிரிவு (2)இல் மாநில மொழியில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத் தும் நடைபெற வேண்டுமென்றால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதால் அதை பயன்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று அறிவித்தேன்.

உயர் நீதிமன்றமும், வழக்கறிஞர் கள் சங்கமும் வரவேற்பு தெரிவித்தது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா இந்த முடிவை ஆதரித்த தோடு, அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் அவரே தெரிவித்திருந்தார்.

உயர் நீதிமன்றத்திலே உள்ள வழக்கறிஞர்களின் தமிழ் மன்றத்தின் சார்பில் 2001ஆம் ஆண்டு செப்டம் பரில் இதே பிரச்சினைக்காக ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் அப்போது அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ் ஆணை பிறப்பிக்கக் கூடிய அதிகாரம் ஆளுநருக்கு மட்டும்தான் உள்ளது, எனவே அவர் ஆணை பிறப்பிக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத்தில் வாதாடிப் பயனில்லை என்று காரணம் கூறினார்கள். அப் போது ஆட்சியிலே அ.தி.மு.க. இருந் தது எனினும், தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

6.12.2006இல் உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி என்ற அரசினர் தீர்மானத்தை நானே தமிழகச் சட் டப்பேரவையில் முன்மொழிந்தேன். அரசின் தீர்மான நகலை, தமிழக ஆளுநரின் பரிந்துரையுடன், குடி யரசுத் தலைவர் அப்துல் கலாமை, அவரது இல்லத்தில் சந்தித்து நானே வழங்கியதோடு; அந்தத் தீர்மானத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடை முறைக்குக் கொண்டுவர அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டேன். குடியரசுத் தலைவரும் அதனைக் கவனிப்பதாக உறுதி அளித்தார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆனால், மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் துறை 27.2.2007 தேதிய கடிதத்தில், உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து இந்தப் பிரச்சினை பரிசீலிக்கப்பட்ட தாகவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு கள், ஆணைகள் மற்றும் இதர நட வடிக்கைகளில் பிராந்திய மொழியைத் தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று இந் தியத் தலைமை நீதிபதி கருதுவதாக வும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

11.3.2007இல் நான் இதுபற்றி விளக்கமாக பிரதமர் மன்மோகன் சிங்க்கும், உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல், சட்டத் துறை அமைச்சராக இருந்த பரத் வாஜ் ஆகியோருக்கும் கடிதம் எழுதி னேன். அடுத்த நாளான 12ஆம் தேதியே மத்திய சட்டத்துறை அமைச் சராக இருந்த எச்.ஆர்.பரத்வாஜ் எழுதிய பதிலில் குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெறுமாறு என் னுடைய துறையை நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று தெரிவித் திருந்தார்.

திமுக அரசு இந்தப் பிரச்சினை யில் மேற்கொண்டு வந்த நடவடிக் கைகளின் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சென்னை உயர்நீதி மன்றத்தில், தமிழ்ப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண் டும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத் தில் ஒரு வழக்கில் முன்னாள் அமைச் சர், மதுரை பொன்.முத்துராமலிங்கம் தமிழிலேயே முழுவதும் வாதாடினார்.

இவ்வளவிற்குப் பிறகும், உச்ச நீதிமன்றம் இதற்கு ஆட்சேபணை தெரிவித்த காரணத்தினால் மத்திய அரசினால் அப்போது தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க முடிய வில்லை. இருந்தாலும் தமிழகத்திலே அப்போது தி.மு.க அரசு இருந்த காரணத்தினால் சென்னை உயர் நீதி மன்றத்திலே பெரும்பாலான வழக்கு களின் விசாரணைகள் எல்லாம் தமிழிலேயே நடைபெற்றன. தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய் இக்பால், திமுக ஆட்சியில் இருந்த 2010ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால் தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஜனவரி 3ஆம் தேதி ஒரு வழக்கறிஞரிடம் தமிழில் வாதம் செய்ய அனுமதி மறுத்ததோடு; தமி ழில் வாதம் செய்ய அரசியல் சட்டத் தில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கருத்துக் கூறியுள்ளார். மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு, வேறு சில வட மாநிலங் களில் தற்போது நடைமுறையிலே இந்தி வழக்காடு மொழியாக அனும திக்கப் பட்டுள்ளதைப் போலவே, தமிழகத்திலே உள்ள உயர் நீதிமன்றத் திலும் வழக்காடும் மொழியாக தமிழை சட்டப்படி கையாளுவதற்கு, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவரிடம் தி.மு.க ஆட்சிக் காலத்திலிருந்து ஒப்புதலுக்காக நிலுவையிலே உள்ள சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெற் றுத் தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


தொப்பை குறைய.....


தொப்பையைக் குறைப்பது அவ்வளவு கடினமான விஷயமே இல்லை. பணத்தைச் செலவு செய்து தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று யாராவது ஆலோசனை சொன்னால் உஷாராக இருங்க; அது ஏமாற்று வேலையாக இருக்கும்.

தொப்பை வளர வளர சர்க்கரை நோய், பி.பி., முதுகுவலி, மூட்டுவலி, மனஅழுத்தம் என்று நிறைய பிரச்சினைகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடும். அதனால் ஆரம்பத்திலேயே தொப்பையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது.

முக்கியமான விஷயம், தொப்பையானது ஒரே நாளில் வளர்ந்து விடுவது கிடையாது. ஆனால் தொப்பையைக் குறைப்பது மட்டும் ஒரு சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று பலர் பேராசைப்படுகிறார்கள்.

15 நாட்களில் தொப்பையைக் குறைக்கலாம் என்று வரும் விளம்பரங்களில் போய் விழுந்து, உடலைக் கெடுக்து கொள்கிறார்கள். அது தவறு, முடியாத காரியமும் கூட. அது சாத்தியம் என்றால் நம் ஊரில் யாருக்கும் தொப்பையே இருக்காது.

தொப்பையைக்குறைக்க காலை உணவைத் தவிர்க்கிறார்களே, அது சரியா?

தொப்பையைக் குறைக்க சரியான வழி காலை உணவைத் தவிர்ப்பது என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட தவறான செயல் எதுவுமில்லை. காலை உணவைத் தவிர்த்தால் உடல்நலம் கெடுவதோடு, தொப்பை முன்பைவிட அதிகமாகிவிடும்.

இரவு 8 மணிக்கு சாப்பிடும் ஒருவர் மறுநாள் காலை உணவைத் தவிர்த்து மதியம் 1 மணிக்கு சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் ஏறத்தாழ 17 மணி நேரம் வயிற்றைக் காயப்போட்டதாகிவிடும். காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை உடலுக்கு வழங்கக் கூடியது.

அதைத்தவிர்த்தால் மதியத்திற்குப் பிறகு பசியால் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். அது தானாக வயிற்றைப் பெருக்க வைக்கும். அதனால் காலையில் மறக்காமல் சாப்பிட வேண்டும், ஆனால் வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது.

உணவுப் பழக்க வழக்கங்களால் தொப்பையைக் குறைக்க முடியுமா?

முடியும், அதற்கு பெரிய அளவில் டயட் எல்லாம் இருக்கக் தேவையில்லை. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளரில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து, 2 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் போதும் தொப்பை குறையும்.

இஞ்சி, மிளகு அடிக்கடி மென்று வர வேண்டும். காலையில் எழுந்ததும் தினமும் கொஞ்சம் கறிவேப் பிலையை பச்சையாக மென்று விழுங்க வேண்டும். தொடர்ந்து 4 மாதங்கள் இப்படி செய்தால் தொப்பை குறையும்.

தமிழ் ஓவியா said...


டயட்டில் இருந்துதான் ஆவேன் என்று அடம் பிடிப்பவர்கள், அந்த சமயத்தில் பச்சைக் காய்கறிகள், தக்காளி, கேரட் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும் அது நல்ல பலனைத்தரும் எதையும் சாப்பிடாமல் சாப்பாட்டின் அளவைக்குறைப்பது, உடலைக் கெடுப்ப தற்கு சமம்.

தொப்பையைக்குறைக்க சிறந்த வழிதான் என்ன?

ஒரே வழிதான் அது உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்றால் 30 நிமிடங்கள், நடைப்பயிற்சி என்றால் காலையில் 45 நிமிடங்கள், 3 அல்லது 4 மாதங்கள் தொடர்ந்து நடந்து பாருங்கள். பிறகு உங்கள் இடுப்பின் அளவை அளந்து பாருங்கள் தானாக இடுப்பளவு இறைந்திருக்கும்.

தொப்பையைக் குறைக்க முயல்பவர்களுக்கு சில டிப்ஸ்

1) உடனே தொப்பையைக் குறைக்க நினைக் காதீர்கள். தொப்பை உங்களுக்கு உடனே வந்தது அல்ல. அது வர எவ்வளவு காலம் பிடித்ததோ, அவ்வளவு காலத்தை தொப்பை வெளியேறவும் தாருங்கள்.

2) சாப்பிடாமல் இருக்கக்கூடாது. பசிக்கும் போது மட்டும் அளவோடு சாப்பிடுங்கள். நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவசரம் அவசர மாக சாப்பிடக்கூடாது, மென்று நிதானமாக சாப்பிட வேண்டும்.

3) உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி சாப்பிடத் தோன்றினால், பழங்கள், காய்கறிகள் வைத்து சாலட் மாதிரி செய்து, பசிக்கும்போது எல்லாம் சாப்பிடலாம், வாரத்திற்கு ஒரு நாள்அய்ஸ்க்ரீம், பர்கர் போன்றவற்றை சாப்பிடுவதால் தப்பில்லை. ஆனால் வாரத்திற்கு ஒரு தடவை தான். அதையே தொடர்ந்து விடாதீர்கள்.

4) தண்ணீர் தான் உங்களின் தொப்பையைக் குறைக்க பெரிய அளவில் உதவக்கூடியது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும்.

5) உங்கள் பிள்ளைகளுடன் அல்லது நண்பர்களுடன் வாரம் ஒரு நாள் ஏதாவது விளையாடுங்கள். வாலிபால், ஃபுட்பால், பூப்பந்து, கபடி என்று ஆடுங்கள். பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி. உங்கள் தொப்பைக்கும் டாடா காட்டலாம்.

6) சிலருக்கு அலுவலகத்தில், குடும்பத்தில், உறவினர்களிடத்தில், சுற்றுச் சூழலில் என்று எந்த வகையிலாவது மன அழுத்தம் இருக்கும். அதைப்போக்க ஒரு அரை மணிநேரம் யோகா பண்ணுங்கள். முடியாவிட்டால் நல்ல நூல்களை தினமும் ஒரு மணி நேரம் ஆழ்ந்து படியுங்கள்.

7) சிகரெட், மது வேண்டவே வேண்டாம். சிலர் சாப்பிட்டதும் ஜீரணிக்கும் என்று ஒரே ஒரு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருப்பீர். அது தான் ஆபத்து, தொப்பைக்கு மட்டுமல்ல, இதயத்திற்கும்.

8) மாத்திரைகளால் உடல் எடையையோ, தொப்பையையோ குறைக்க முயற்சிக்கக் கூடாது அது பிற்காலத்தில் பெரிய வம்பில் கொண்டுபோய் விடும் யோசியுங்கள்.

9) குடும்பத்துடன் டி.வி.பார்க்கும் நேரத்தில் குடும்பத்தாருடன் வீட்டுக்குள்ளேயே ஏதாவது விளையாட்டு விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்திப் பாருங்கள்.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும்!


திராவிடர் கழகம் நடத்தும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்!

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜூலை 16- அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை கோரும் திராவிடர் கழ கம் நடத்தும் ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை விடுத்துள் ளார். அறிக்கை வருமாறு:

தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டு விட் டாலும் ஆலயங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதி யினர் மட்டுமே அர்ச்ச கராக இருக்க முடியும் எனச் சொல்லி தொடர்ந்து தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு கடைபிடிக்கப்பட்டுவரும் தீண்டாமையை ஒழித்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு வழி செய்து கடந்த தி.மு.க ஆட்சியின் போது சட் டம் இயற்றப்பட்டது. அனைத்துச் ஜாதிகளைச் சேர்ந்த இளைஞர் களுக்கு அர்ச்சகருக் கான பயிற்சியும் அர சாங்கத்தால் வழங்கப் பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் சென்று சிலர் தடை ஆணை பெற்ற தால், முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர் இப்போது வேலையின்றித் தவிக் கின்றனர். தமிழக அர சின் சட்டத்தின் மீதான தடை ஆணையை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர் களுக்காக பிரபல வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனாவும், காலின் கான்ஸலஸும் வாதாடி வருகின்றனர். ஆனால் தேதி குறிப்பிடப்படா மல் ஒத்திவைக்கப்பட்ட அந்த வழக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட் டுள்ளது. இதை அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உச்சநீதிமன் றம் கருதாதது வேதனை அளிக்கிறது. அந்த வழக்கை விரைந்து முடித்து சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசும் முனைப்புக் காட்டவில்லை. முன் னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் பெண்களும் அர்ச்சகராக இருக்கலா மென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக் கிறார். அந்தத் தீர்ப்பு இப் போதும் நடை முறையில்தான் இருக் கிறது. எனவே, அனைத் துச் ஜாதியினர் மட்டு மின்றி பெண்களும் அர்ச்சக ராகலாம் என்ற கோரிக்கையையும் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சேர்த்து முன் மொழிகிறது.

திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர்

அரசியல் கட்சிகள் ஜாதியின் பெயரால் பேரணி நடத்தக்கூடாது என முற்போக்காக தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம் இன்னும் ஆல யங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படு வதை எவ்வாறு அனு மதிக்கிறது என்பது புரியவில்லை. இது வேலை வாய்ப்பு தொடர் பான பிரச்சினை அல்ல. சமத்துவம், சமூக நீதி குறித்த பிரச்சினையா கும். இதற்காக திராவி டர் கழகம் அறிவித் துள்ள போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக மெங்கும் ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடு தலைச் சிறுத்தைகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போராட் டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார் தொல். திருமாவளவன்

தமிழ் ஓவியா said...


தொண்டு



சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)

தமிழ் ஓவியா said...


திருத்தப்படவே முடியாத மதவெறியர் மோடி!

நீ இந்து என்றால் எனக்கு வாக்களிக்கவும் என்பதுதான் நரேந்திரமோடியின் பிரச்சாரமாக இருந்தது. இந்துத்துவாவை குஜராத்தின் பெருமை என்று குஜராத்திகளிடம் மோடி விற்பனை செய்தார். குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதிதான் இந்தியா என்று குஜராத்திகளை மோடி நம்ப வைத்து விட்டார். குஜராத்துதான் இந்தியா என்ற கோஷத்தை நானும் எனது செவிகளால் கேட்டேன்.

- பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்

குலதீப் நய்யார் போன்றவர்களுக்கு அரசியல் முத்திரையை யாரும் குத்தி விட முடியாது. மோடியின் முகத்தை மிகச் சரியான வகையில் தானாகவே சாட்சியாகவே இருந்து, படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இப்படி எதற்கெடுத்தாலும் இந்து என்று கூறி, ஒரு வெறியைக் கிளப்பி அரசியல் நடத்தக் கூடியவர் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் அறிமுக நிலையிலேயே அது தள்ளுபடி செய்யப்பட வேண்டாமா?

நாம் ஒரு காரை ஓட்டிச் சென்றால் அல்லது வேறு ஒருவர் ஓட்ட நாம் பின்னால் அமர்ந்து செல்லும்போது எதிர்பாரா விதமாக காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி (Puppy) சிக்கிக் கொண்டால்கூட மனதுக்கு கஷ்டமாக இருக்குமா? இருக்காதா? நிச்சயம் அது வேதனை அளிப்பதாகத் தானிருக்கும். நான் முதல் அமைச்சராக இருக்கிறேனோ இல்லையோ, நான் ஒரு மனிதன். எங்கு எந்த கெட்ட விஷயம் நடந்தாலும் மனதுக்கு வேதனை யாகத் தானிருக்கும் என்றும் தன் பேட்டியிலே குறிப்பிட்டுள்ள நரேந்திரமோடி.

குஜராத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டது - விபத்தில் நாய்க் குட்டி சிக்கியதற்குச் சமமாக மோடி விளக்கம் அளித்தது மூலம் அவர் எவ்வளவுப் பெரிய மனநோயாளி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இதுபற்றிக் கடுமையான வகையில் எதிர்ப்புப் புயல் வெடித்து எழுந்த நிலையில், அதற்குச் சமாதானம் கூறுவதாக நினைத்துக் கொண்டு வெளியிட்ட வார்த்தைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருக்கிறது.

நமது கலாச்சாரத்தில் அனைத்துவிதமான உயிர்களும் மதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட் டுள்ளார்.

அதாவது நாய் என்றால் அற்பமாக நினைத்து விடாதீர்கள்! நாயும் ஓர் உயிர்தானே என்று முஸ்லிம்களின் உயிரோடு நாயின் உயிரை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் குஜராத்தில் ஒரே ஒரு முசுலிமுக்குக்கூட பிஜேபி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லையே! மோடி மனப் பான்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

இந்த மனிதனை எதைக் கொண்டும் திருத்த முடியாது - திருத்தவே முடியாது என்பது மிக மிக வெளிப்படை! இந்துக்கள் அல்லாத பிற மதத்தவர் மதம் அற்றவர்கள் மோடியை நிராகரிக்க வேண்டும் என்பதை விட உண்மையிலேயே இந்துக்கள் என்பவர்கள்தான் மோடியை ஒதுக்க வேண்டும்.

அவர் கூறும் இந்துத்துவாவாதத்தில் மக்களிடையே கடும் பிளவுகளை ஏற்படுத்திப் பெரும் மோதலை ஏற்படுத்தக் கூடிய அபாயம் இருக்கிறது; அமைதியான இந்தியா வேண்டுமா? அமளியான இந்தியா வேண்டுமா என்ற முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய மக்களுக்கு இருக்கிறது.

இந்தியா - குஜராத்தாக மாற வேண்டும் என்று கூறுவது எந்தப் பொருளில் என்பது புரியாத புதிராக இருக்கிறது; கோத்ராவைத் தொடர்ந்து அரச பயங்கரவாதமாக சிறுபான்மை மக்கள் நர வேட்டை ஆடப் பட்டார்களே - அந்த குஜராத்தாக இந்தியா மாற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லுகிறார்களா என்று தெரியவில்லை.

ஒருக்கால் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசையில் தலையைத் தூக்கி நிற்கிறது என்று ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே அந்த எண்ணத்தில் சொல்கிறார்களா?

அதுவும்கூட அவர்களுக்கே உரித்தான கோய பெல்சுப் பிரச்சாரம்தான்! இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக் குறைவால் குழந்தைகள் 44.6 சதவீதத்தினர் குஜராத் மாநிலத்தில் அவதிப்படு கின்றனர்.

பிஜேபிக்குப் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடிதான் கிடைத்திருக்கிறார் என்பது அக்கட்சியின் பரிதாப நிலையையும், பலகீனத்தையும் தான் வெளிப்படுத்தும்.

பிரதமருக்கான வேட்பாளர் என்று விளம்பரப் படுத்தப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில், மோடியின் பேச்சு எப்படி இருக்கிறது தெரியுமா? எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது. உலக்கையைக் கொண்டு வா! கோவணம் கட்டிக் கொள்கிறேன்! என்ற ரீதியில் தான் இருக்கிறது. மோடி அப்படித்தான் - அவர் திருந்தப் போவதில்லை. பொது மக்கள்தான் தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்ளாமல் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இஸ்லாமியர்களை நாய்கள் என இழிவுபடுத்திய நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்!


தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 16- இஸ்லாமியர்களை நாய்க்கு ஒப் பிட்டுக் கூறிய நரேந்திரமோடி மன்னிப்புக் கோர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு:

சிலநாட்களுக்கு முன் ராய்ட் டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த நரேந்திர மோடி இஸ்லா மியர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு மோடி முதல் வராக இருந்தபோது குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் குறித்து பேட்டியில் கேள்வி எழுப்பியுள் ளனர். அந்தக் கலவரத்துக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? என அந்த நிருபர் கேட்டபோது யா ராவது காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள். நாம் பின் இருக் கையில் அமர்ந்திருக்கிறோம். அப் போதுகூட கார் சக்கரத்தின் கீழே நாய்க்குட்டி ஒன்று ஓடிவந்து அடிபட்டு செத்துப் போனால் அது வருத்தம் அளிக்குமா இல் லையா? வருத்தம் தரும். என்று அவர் பதில் அளித்திருக்கிறார். குஜ ராத்தில் நடத்தப்பட்டது இஸ் லாமியர்களுக்கு எதிரான திட்ட மிட்ட இனப்படுகொலை என்ப தைப் பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் தெளிவுபடுத்தி யுள்ளன. அதற்குக் காரணமான வர் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் என்பதை உலகம் அறியும். அங்கு நடத்தப்பட்ட போலி என்கவுண்ட் டரில் இஷ்ரத் ஜஹான் என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இப் போது தான் சி.பி.அய் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அந்த வழக்கில் மோடியும் குற்றவாளியாக சேர்க்கப் படலாம் என சொல்லப் படுகிறது. அவரது கரத்தில் ரத்தக் கறை படிந்திருப் பதால்தான் அமெரிக்கா அவரைத் தனது நாட்டுக்குள் அனு மதிக்க வில்லை. தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலையீட்டால் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாள ராக மோடி முன் நிறுத்தப் படுகிறார். வளர்ச்சி, முன்னேற்றம் என மாய்மாலம் பேசி வந்த மோடி இப்போது வெளிப் படையாகத் தனது இந்துத்துவா முகத்தைக் காட்ட ஆரம்பித் திருக்கிறார். அதன் ஒரு அங்கம் தான் இஸ்லா மியர்களை இழிவு படுத்தும் இந்த நேர்காணல். இத்தகையவர் பிரதமராக வந்தால் இந்த நாட்டில் மதக் கலவரங் கள்தான் நடக்கும். குஜராத் மாடலை இந்தியா முழு மைக்கும் பரிசோதித்துப் பார்க்க சங்கப் பரிவாரங்கள் தயாராகி விட்டன என்பதைத்தான் மோடியின் நேர் காணல் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது. இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ததோடல்லா மல் அவர்களை நாயுடன் ஒப் பிட்டுப் பேசி இழிவுபடுத்தியிருக் கும் நரேந்திர மோடி தனது பேச்சுக்குப் பகிரங்கமாக மன் னிப்புக் கோரவேண்டும். அல்லது அவர் மீது மத்திய அரசு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் வலியுறுத்து கிறேன் என்று குறிப்பிட்ட எழுச்சித் தமிழர் திருமாவளவன் அறிக் கையில் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பு


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி
திராவிடர் கழகம், மாவட்டத் தலைநகரங்களில் நடத்தும் போராட்டத்தில்
தி.மு. கழகத்தினர் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள்!



அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வற்புறுத்தும் வகையிலும் ஆகஸ்ட் முதல் தேதியன்று திராவிடர் கழகம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்; இதில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு ஒன்றினை நடத்துவது; மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்துவது; மூன்றாவது கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்றெல்லாம் முடிவெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முடிவுக்கு தொடக்கம்முதல் ஆதரவாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் நிறைவேற்றியிருக்கும் இந்தத் தீர்மானத்திற்கும் ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் 13.7.2013 அன்று உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் கழகத் தீர்மானத்தின்படி, கழக மாவட்டச் செயலாளர்கள், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு அந்தப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டுமென்று தலைமைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

அண்ணா அறிவாலயம் தலைமைக் கழகம்,

சென்னை-18 நாள்: 16.7.2013 திராவிட முன்னேற்றக் கழகம்

குறிப்பு: திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு ஆகஸ்ட் முதல் தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பனி லிங்கம் போயே போச்சே!


காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பனிலிங்கம் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்து மக்கள் கூட்டத்தை வரவழைத்துப் பக்தி வியாபாரம் நடக்கும்.

பனிக் காலத்தில் குகை ஒன்றில் இடுக்கு வழியாக சொட்டுகின்ற தண்ணீர்த் துளிகள் கடுங்குளிரால் பனிக்கட்டியாகிறது - அந்த உருவத்தைத்தான் பனி லிங்கம் என்று விளம்பரம் செய்து மக்களை நம்ப வைத்துள்ளார்கள்.
பனிக்காலத்தில்தானே இது நடக்கிறது? கோடையில் ஏன் நிகழவில்லை என்பதற்குப் பதில் இல்லை. ஆகஸ்ட் மாதம் வரை இந்த உருவம் தெரியும்.

இந்தாண்டு இப்பொழுதே பனி லிங்கத்தைக் காணவில்லை - உருகி ஓடிவிட்டது - சீதோஷ்ண நிலை காரணமாக! பக்தர்கள் காஸ் அடுப்பைப் பயன்படுத்தியதும் காரணமாம்!

கடவுள் உருவம் என்றால், நிலைத்து இருக்க வேண்டாமா? பக்தியால், புத்தியைப் பறிகொடுத்த மக்கள், சிவலிங்கம் உருகி ஓடிவிட்ட நிலையிலும்கூட பய ணத்தைத் தொடர்கிறார்களாம்! குடி போதையைவிட மோசமானது பக்தி போதை ஆயிற்றே!

தமிழ் ஓவியா said...


காவிரி மேலாண்மை வாரியம்-காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை உடனடியாக ஏற்படுத்துக!


மத்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வற்புறுத்தல்

காவிரி நடுவர் மன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஆணையிட்டும், தாமதமாக கெசட்டில் தீர்ப்பை வெளியிட்ட மத்திய அரசு - அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தாமல் காலங்கடத்திவருவதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி மேலும் காலதாமதமின்றி அவற்றை ஏற்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்து பல ஆண்டுகளுக்குப் பின்பே, அதன் சட்டப் படிக்கான தொடர் நடவடிக்கையான நிரந்தரமான சுதந்தரமான நிபுணர் களைக் கொண்ட காவிரி ஆணையம் உருவாக்கப்பட வில்லை; காவிரி நீர் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய அதிகாரம் பெற்ற அந்த ஆணையத்தை அமைக்காமல் இன்னமும் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவது மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.

மத்திய கெசட்டில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிடுவதற்கே, பல ஆண்டு கால தாமதம் ஆனது; தமிழ்நாட்டுத் தலைவர்கள், விவசாயிகளின் தொடர் குரல்கள்; தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு; இவற்றைத் தொடர்ந்து மத்திய அரசினை உச்சநீதிமன்றம் தனதுதீர்ப்பு ஆணை மூலம் வற்புறுத்திய பின்னர் - இந்த சாதாரண சட்ட நடவடிக்கையெடுத்தது மத்திய அரசு.

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வருவதற்கே இந்த மெத்தனம்; பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதுபோல கெசட் செய்யா மலேயே, சட்டபூர்வ உரிமையான தமிழ்நாடு காவிரி நீர்ப் பங்கீடு பெறுவதை - தவிர்த்து தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்தது மத்திய அரசு! பிறகு எப்படியோ கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டது.

2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

காலதாமதம்!

காலதாமதமாகித்தான் - மத்திய அரசு கெசட்டில் வெளியிட்டது - அதுவும் உச்சநீதிமன்றம் சுரீரென்று தட்டிக் கேட்ட பிறகே - தமிழக முதல்வர் போட்ட வழக்கில்.

ஆனால் இன்னமும் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நிர்வாக ஒழுங்குமுறை ஆணையமும் மத்திய அரசால் நியமிக்கப்படவே இல்லை!

இதனால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இடைக் காலத்தில் - காவிரி மேற்பார்வைக் குழு என்ற ஒன்று உரு வாக்கப்பட்டு, அதில் அந்த மாநில தலைமைச் செய லாளர்கள், மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது!

தேவை நிரந்தர ஆணையம்

நிரந்தர ஆணையம் உடனடியாக அமைக்க தமிழ்நாட்டில் உள்ள ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் கெஞ்சுதல், கொஞ்சுதல் எல்லாம் இல்லாமல், நாம் நமது காவிரி நீர் உரிமையை நிலை நாட்டிட முடியும். அது அவசரம் அவசியம்!

ஏற்கெனவே காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடியைச் சரிவரச் செய்யாமல் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்!

அடுத்த குறுவை சாகுபடி என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகள் தொடர்ந்தன!

நிலத்தடி நீர் வறண்டுவிட்டது; பம்புசெட் விவசாயத் திற்கோ வாய்ப்பே குறைவு; காரணம் தொடர் மின்வெட்டு, டீசல் விலை ஏற்றம் - இப்படி அடுக்கடுக்காக விவசாயிகள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டி விட்டார்கள்.
கர்நாடக நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்தும், ஏதோ பிச்சை போடுவது போல கர்நாடக அரசு கூறுவது வேதனைக்குரியது!

குறுவை சாகுபடிக்கு வழி செய்க!

தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட நமது உரிமைப்படி நமக்குச் சேர வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை ஏற்கெனவே பாக்கி வைத்த 100 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டியது கர்நாடகத்தின் பொறுப்பு.

தற்போதைய குழுவினர் நேற்று நடைபெற்ற (டில்லி) கூட்டத்தில்கூட, தமிழகத்திற்கு ஏராளம் தந்துவிட்டோம்; மேலும் இப்போது தர இயலாது என்று அதிகப் பிரசிங்கித்தனமாகக் கூறியுள்ளதாவது நமது வாதத்திற்கு வலிமை சேர்க்கிறது.

ஆனால் கர்நாடக செயலாளர் ஏற்கெனவே வழங்க வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கிவிட்டது;

இன்னும் 10 டி.எம்.சி., இம்மாத இறுதிக்குள் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நிரந்தர விடியல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறை ஆணையங்களை (நிபுணர்கள், நிதித்துறை வல்லுநர்களைக் கொண்டவை) மத்திய அரசு மேலும் கால தாமதமின்றி நியமித்து, நீதி வழங்கி, காவிரி டெல்டா குறுவை சாகுபடியாவது சரியாக நடந்திட உதவிட வேண்டுகிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
17.7.2013

தமிழ் ஓவியா said...



இருந்து வரும்


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


டெசோவின் தீர்மானங்கள் (1)



நேற்று (16.7.2013) சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர் களின் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நான்கு நறுக்கான தீர்மானங்களும் அவற்றை நிறை வேற்றிட மத்திய அரசை வலியுறுத்தும் வண்ணம் அய்ந்தாவதாக போராட்ட வடிவ தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

2012 ஏப்ரல் 30 ஆம் தேதி இரண்டாவது முறையாக டெசோ புது வடிவம் பெற்று செயல்பட்ட இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது.

போருக்கு முன் டெசோவின் பணி என்பது ஒரு வகையானது; போருக்குப் பின் டெசோவின் பணி இன்னொரு வகையானது. போரினால் பெரும் பாதிப்புக்கு ஆளான ஈழத் தமிழர்களின் - சுயமரியாதை வாழ்வு மீள்குடியேற்றம் - வாழ்வுரிமை, அரசியல் தீர்வுகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

இந்திய அளவிலும் சரி உலகளவிலும் சரி டெசோ வின் எழுச்சிக்குப் பிறகு தேக்க நிலைகள் உடைக்கப்பட்டன.

இலங்கை அரசைப் பொறுத்தவரை ஏதோ பெரும் போரில் வெற்றி பெற்றுவிட்டது போன்ற மனப்பான்மை யுடன் வெறிபிடித்துத் திரிகிறது - எந்த வகையிலும் ஈழத் தமிழர்கள் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் திடமாக உள்ளது.

இந்திய அரசின் உறுதியற்ற தன்மை அதற்கு இலகுவாகப் போய்விட்டது. சீனா, ருசியா, கியூபா போன்ற இடதுசாரி நாடுகளும், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தன்பக்கம் இருக்கும் இறுமாப்பில் இந்தியாவின் வார்த்தைகளுக்கு உரிய மதிப்பும் கொடுப்பதில்லை.

ஈழப் பிரச்சினைக்காக இருமுறை ஆட்சியை இழந்த தி.மு.க. அதே பிரச்சினைக்காகவே இப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகிக் கொண்டு விட்டது.

கொஞ்ச நஞ்சம் இருந்த தர்மசங்கடமும் பறந்து ஓடிவிட்டது. இந்திய அரசு எதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதில், போராடுவதில் டெசோதான் முன்னணி அமைப்பாக இருந்து வருகிறது.

நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் செறிவானவை. ஈழத் தமிழர்ப் பிரச்சினையாகவிருந் தாலும், தமிழக மீனவர் பிரச்சினையாகவிருந்தாலும் சரி இந்தத் தீர்மானங்களின் உள்ளடக்கத்தைத் தவிர, விடுபட்டது ஒன்றும் இருக்க முடியாது, என்கிற அளவுக்குத் தெளிவானவையும், திட்டவட்டமானவையு மாகும்.
குறிப்பாக, முதல் தீர்மானம் அரசியல் தீர்வு என்று பேசப்படும் 13 ஆவது சட்டத் திருத்தம்பற்றியதாகும்.

1987 இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சட்டத் திருத்தம் அது. இலங்கை என்றால் ஒரே அரசு (ருவையசல ளுவயவந) என்ற நிலைக்குப் பதிலாக மாநிலங்களுக்கும் சற்றுப் பரவலான அதிகாரங்களை அளிக்கும் சட்டத் திருத்தம் அது.

26 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதனைச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இலங்கை அரசின் நேர்மையற்ற போக்கை எளிதில் தெரிந்துகொள் ளலாமே!

அந்தப் பிரிவில் அடங்கியுள்ள மாநிலங்களுக்கான உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி யில் இப்பொழுது இலங்கை அரசு இறங்கியுள்ளது.

இரண்டு நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மாற்றிக் கொள்ளக்கூடிய அதிகாரம் இலங்கைக்கு உண்டா என்பது முக்கியமான கேள்வி யாகும்.

வடக்கு - கிழக்கு மாநிலங்கள் இணைப்பு என்பது அந்த ஒப்பந்தத்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். இலங்கை ஆளும் கட்சியின் கூட்டணியான ஜெவிபி (கம்யூனிஸ்டு என்னும் போர்வை வேறு!) மூலம் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சாதகமான தீர்வினையும் பெற்றுக்கொண்ட வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!

இலங்கை அரசு பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டிக்கொள்ளும் விலாங்குத் தன்மையில் நடந்துகொண்டு வருகிறது.

நியாயமாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசுக்குக் கூடுதலான பொறுப்புண்டு. இந்திய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவமதிக்கிறது, தூக்கி எறிகிறது இலங்கை அரசு என்றால் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதுபோல, இந்தியாவின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் அல்லவா இது!

அந்த வகையில் டெசோவின் தீர்மானம் ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமைக்கு மட்டுமல்ல; இந்திய அரசின் சுயமரியாதைக்குக்கூட தேவையானதாகும்.

இன்னும் சொல்லப்போனால், அய்.நா. மற்றும் உலக நாடுகளின் மரியாதையும், மனித உரிமையின் அடையாள மும்கூட டெசோவின் தீர்மானங்களில் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ளன.

எனவே, இந்தத் தீர்மானங்களைக் கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்லை.

இந்திய அரசு இதுவரை எப்படி நடந்துகொண்டு இருந்தாலும், இனியாவது விழித்துக்கொண்டு, மூடுமந்திரமில்லாமல் செயல்படட்டும்!

தமிழ் ஓவியா said...


வாய்க்கொழுப்பு மோடி வம்பில் சிக்கினார்!

மோடி: நாய்க்குட்டி கருத்து எதிரொலி: டில்லி பா.ஜ.க. துணைத் தலைவர் அமீர் ரசா ஹுசைன் பதவி விலகல்!

புதுடில்லி, ஜூலை 17- குஜராத் மாநில முதல் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாக்குழு தலை வருமான நரேந்திர மோடி, 2002 ஆம் ஆண்டு கலவரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது நாய்க் குட்டி காரில் அடிபடுவதை கலவரத் தில் இறந்தவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் டில்லி பிரிவின் துணைத் தலைவரான அமீர் ரசா ஹுசைன் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மோடியின் இந்த கருத்து இழிவானது, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது. இதுபோல் பேசினால் இஸ்லாமியர் களின் ஆதரவை அவர் எப்போதும் பெற முடியாது. மோடி பாரதீய ஜனதா கட்சியின் தலைவர். என்னு டைய தலைவர் இல்லை என்று கூறி யிருந்தார். இது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வ புகார்களும் எழுந்தன. இந்நிலையில் ஹுசைன் நேற்று தனது பதவி விலகல் கடி தத்தை கட்சி மேலிடத்திடம் வழங் கினார். அதை டில்லி பா.ஜ.க. தலைவர் ஏற்றுக்கொண்டார்.

பதவி விலகல் குறித்து அவர் கூறியதாவது:-

என்னைப்போல் பல சிறுபான் மையினர் காங்கிரஸ் அல்லாத மாற்று கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதை வாஜ்பாய் அல்லது அத்வானி யால் வழங்க முடிந் தது. மோடியை முன்னிலைப்படுத் துவதன் மூலம் எங் களுக்கிருந்த மாற்று வழியை பா.ஜ.க. தடை செய்து விட்டது. எல்.கே. அத்வா னியோ அல்லது சுஷ்மா சுவராஜோ பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றே இஸ்லாமியர்கள் விரும்பு கின்றனர். மோடி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். எனவே கட்சியில் இருந்து விலக எனக்கு முழு உரிமை உள்ளது. - இவ்வாறு அவர் கூறினார்.

வளர்ப்பு நாய் குறித்த கருத்து: மோடி மீது வழக்கு பதிவு

பாட்னா, ஜூலை 17- குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஒரு பேட்டியில் கோத்ரா கலவர சம்பவம் குறித்து வருத்தம் உண்டா? என்ற கேள்விக்கு வளர்ப்பு நாயை ஒப்பிட் டுப் பதில் அளித்தார். இதனை சுட்டிக்காட்டி நரேந்திரமோடி மீது பாட்னா பல்கலைக்கழக புள்ளியியல் துறை ஆசிரியர் பினெய் குமார்சிங் என்பவர் பாட்னா தலைமை ஜுடீசி யல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் தேச துரோக வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். முதல் வகுப்பு ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை வருகிற 31 ஆம் தேதி அன்று நீதிபதி குமரோ கியாதிசிங் விசாரிக்கிறார்.

தமிழ் ஓவியா said...


மண்டலங்கள் தோறும் மன்றல் விழா


சென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களில் மிகச் சிறப் பாக மன்றல் விழாக்கள் நடந்து முடிந்தன.

மன்றல் விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்கள், நம் இயக்கத் தவர்கள் அல்லர். முற்றிலும் மாறுபட்ட மக்களே! விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்கள் ஆயிரத்திற்கும் குறையாமல் வருகிறார்கள். வந்த வர்கள் சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து போகிறவர்களாகவும் இல்லை. அப்படியே அமர்ந்து ஆவலுடன் நிகழ்வினை பார்க்கிறார்கள். அடுத்த மன்றல் எங்கே? எப்பொழுது என்ற வினாக்கள் வந்த வண்ணமாகவே இருக் கின்றன.

என் பிள்ளைகளுக்கு இணை தேடு வது பெரும் தலைவலியாக இருந்தது. இன்று ஏதோ ஒரு காரணத்திற்காக ஜாதி மறுப்புத் திருமணம், திருமணமே செய்யாமல் இன்றைக்கு வரை வாழ்ந்து விட்டோம் அதனால் எங்களிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ள சங்கடப்படுகிறார்கள். எங்களைப் போன்றோர்க்கு இந்த மன்றல் விழா மாமருந்தாக அமையப் பெற்றதாகக் கருதுகிறோம்.

திராவிடர் கழகத்தார் இப்படிச் செய்வதைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கின்றது. மனதார, மனம் திறந்து பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று புகழாரம் சூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலும் சிலர் அய்யா போட்டுத் தந்த பாதையில் இன்று வரை அடி பிறழாமல் நடந்து, அய்யா சொன்ன சொற்களையும், அவரின் உள்ளத்தில் என்னென்ன செயல் பாடுகள் இருந்தனவோ அத்தனையையும் இன்று செய்து வரும் தமிழர் தலைவரை வாழ்த்தாமல், பாராட்டாமல் இருக்க முடியாது என்று கூறும் பலர் உள்ளனர் என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.

இச்செயல்களை செய்யும் உங்களோடு, நாங்களும் செயல்பட வருவோம். எங்களின் ஆதரவு உதவிகள் கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் பணியினைத் தொடருங்கள் என்று கூறும் ஒரு சிலரையும் சொல் லாமல் இருக்க முடியவில்லை.

வரும் ஜூலை இருபத்தெட்டாம் நாள் நெல்லையில் இணை தேடும் பெரும் விழாவை நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் கூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- திருமகள்

தமிழ் ஓவியா said...


சக்தி வாய்ந்த (?) கடவுள் எங்கே போனான்?


கோவிலில் ரூ.1 கோடி அய்ம்பொன் சிலைகள் கொள்ளை!

அய்ம்பொன் சிலைகள் திருடப்பட்ட கோவிலை படத்தில் காணலாம்.

திருப்போரூர், ஜூலை 17- திருப்போரூர் அருகே கோவிலில் ரூ.1 கோடி அய்ம்பொன் சிலைகள் கொள் ளையடிக்கப்பட்டது.

திருப்போரூரை அடுத்துள்ளது சிறுதாவூர் கிராமம். இங்கு சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூதகிரீஸ் வரர் சிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் அய்ம்பொன் னால் ஆன பூதகிரீஸ்வரர் சிலை, அம்மன் சிலை, ஆரவல்லி சிலை மற்றும் அப்பர் சிலை ஆகிய சிலைகள் உள்ளன. பூதகிரீஸ்வரர் கோவிலை சீரமைக்க சிறுதாவூர் கிராம மக்கள் முடிவு செய்தனர். எனவே கோவிலில் இருந்த மூலவர் உள்ளிட்ட 4 சிலைகளும் பழமை வாய்ந்த மதிப்புமிக்க அய்ம்பொன் சிலைகள் என்பதால் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள பஜனைக்கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.

நேற்று காலை அர்ச்சகர் பஜனை கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு கதவு திறந்தே இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் கோவில் திறந்து கிடப்பது குறித்து பொதுமக் களிடம் கூறினார். ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்ளே பாதுகாக்கப்பட்டு வைத் திருந்த பூதகிரீஸ்வரர் உள்ளிட்ட 4 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த சம் பவ இடத்திற்கு சென்று தீவிர விசா ரணை நடத்தினர்.

விசாரணையில் கோவிலின் பூட்டை கள்ளச்சாவி கொண்டு திறந்து சிலை களை சில ஆசாமிகள் கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட 4 சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந் தவை. இந்த 4 சிலைகளும் 150 கிலோ எடை கொண்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

கோவில் பெட்டக அறை பூட்டை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை!



அம்பத்தூர், ஜூலை 17- சென்னை முகப்பேரில் கோவில் பெட்டக அறை பூட்டை உடைத்து, ரூ.15 லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன.

சென்னை முகப்பேர் கிழக்கு, 5-வது பிளாக், மறைமலை அடிகளார் சாலையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருமாரியம்ம னுக்கும் தனியாக சன்னதி உள்ளது. இந்த சன்னதிக்கு எதிரில் அமைந் துள்ள மண்டபத்தில் 2 பெட்டக அறைகள் உள்ளன. ஒரு அறையில் அய்ம்பொன்னால் ஆன 5 உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

மற்றொரு அறையில் 3 பீரோக்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த பீரோக்களில், பண்டிகை நாட்களில் 2 அம்மனுக்கும் அணிவிக்கப்படும் அலங்கார கிரீடம், மார்பு கவசம், அங்கவஸ்திரம் மற்றும் பூஜை சாமான் கள் உள்ளன. மற்றும் விலை உயர்ந்த பட்டுசேலைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

பூட்டை உடைத்து நேற்று முன்தினம் மாலை அர்ச்சகர் சுப்பிரமணி, கணக்காளர் கோபால் ஆகியோர், சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு அனைத்து சன்னதி மற்றும் அறைகளை பூட்டி விட்டு, கோவிலின் வெளிப்பக்கமும் பூட்டி விட்டு, சென்று விட்டனர். நேற்று அதிகாலையில் வழக்கம் போல அர்ச்சகர் சுப்பிரமணி கோவி லுக்கு சென்றார். கோவிலுக்குள், ராஜராஜேஸ்வரி அம்மன், கருமாரியம் மன் சன்னதி, 2 பெட்டக அறைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அம்மன் சன்னதியில் இருந்தவை எல்லாம் அப்படியே இருந்தன. உண்டியலும் உடைக்கப்படவில்லை. ஆனால், 2 அறைகளில் இருந்த 3 பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தன. உடனே அவர், கோவில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 22 கிலோ வெள்ளி நகைகள், பட்டுசேலைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் சென்று திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


அருகதையற்றவர்கள்



பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
(விடுதலை, 7.7.1965)

தமிழ் ஓவியா said...


சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு பணி: நியமனத்தில் சமூகநீதிகோரி சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்

(1) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(3) காப்போம், காப்போம்!
சமூக நீதியை
சமூக நீதியை
காப்போம் - காப்போம்!

(4) தமிழ்நாடு அரசே
தமிழ்நாடு அரசே
ஆசிரியர் தகுதித் தேர்வில்
ஆசிரியர் தகுதித் தேர்வில்
சமூக நீதி சமூக நீதி
தேவை, தேவை!
கட்டாயம் தேவை -
கட்டாயம் தேவை!

(5) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்
ஒரே அளவுகோலா?
ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(6) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
மாற்றுத் திறனாளிக்கும்
மாற்றுத் திறனாளிக்கும்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(7) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்
ஒரே அளவு கோலா?
ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(8) பீகாரிலும் ஆந்திராவிலும்
பீகாரிலும் ஆந்திராவிலும்
சமூக நீதிக் கொடி
சமூக நீதிக் கொடி
பறக்குது! பறக்குது!!
பெரியார் பிறந்த மண்ணிலே
பெரியார் பிறந்த மண்ணிலே
சமூக நீதிக்கு சமூக நீதிக்கு
சவக்குழியா? சவக்குழியா?

(9) அனுமதியோம் - அனுமதியோம்!
சமூக அநீதியை சமூக அநீதியை
அனுமதியோம் - அனுமதியோம்!

(10) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!

(11) தந்தை பெரியார் தந்தை பெரியார்
பெரும்படையும் பெரும்படையும்
அண்ணல் அம்பேத்கர் அண்ணல் அம்பேத்கர்
பெரும்படையும் பெரும்படையும்
புறப்பட்டோம் - புறப்பட்டோம்!

(12) தமிழக அரசே தமிழக அரசே
அமல்படுத்து அமல்படுத்து!
சமூக நீதியை சமூக நீதியை
அமல்படுத்து அமல்படுத்து!

(13) பணி முடிப்போம் - பணி முடிப்போம!
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!
தந்தை பெரியார் தந்தை பெரியார்
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!


மருத்துவக் கல்லூரி சேர்க்கை: நீண்ட நாள் கழகக் கோரிக்கைக்கு வெற்றி!

அகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை

உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!

புதுடில்லி, ஜூலை 18- அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு (எம்.பி.பி.எஸ்.,) ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு உச்சநீதி மன்றம் மறுப்புத் தெரிவித்து ஆணை பிறப்பித்து விட்டது. அகில இந்திய மருத் துவக் கவுன்சிலின் முடிவை, தொடர்ந்து எதிர்த்து வருவது திராவிடர் கழகமே என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத் துவ கவுன்சிலின் முடிவுக்கு உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக் கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ள லாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாண வர்கள் தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( என்.இ. இ.டி) மருத்துவ கவுன்சில் கொண்டு வர வேண்டும் என விரும்பியது. மேலும் தகுதி இல்லாத நபர்கள் பணம் பெற்று சேர்க்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேர்வு முறையே பின்பற்ற லாம் என இடைக்கால தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப் பட்டது. அல்டாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதன்படி நாட்டில் ஒரே மாதிரியான தகுதி நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர், அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இதில் 2 நீதிபதிகள் மருத்துவ கவுன்சிலின் முடிவை எதிர்த்தனர்.ஒரு நீதிபதி மட்டும் ஆதரித்தார். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பாதிப்பு, வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை பல்வேறு அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் வரவேற்றுள்ளன.

தமிழ் ஓவியா said...


சேலம் இரயில்வே கோட்டத்தை மங்களூருவுடன் இணைப்பதா? தடுத்து நிறுத்துக!



தென்னகத்தில் ரயில்வேக்கள் விரிவாக்கம் - அகல இரயில் பாதை போன்ற முயற்சிகள் தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, உறுப்பினர்கள், முந்தைய மத்திய அமைச்சர் பெருமக்கள் மற்றும் சேலம் வீரபாண்டிய ஆறுமுகம் ஆகியோர்களின் சீரிய முயற்சிகள் காரணமாக, சில டிவிஷன் களைத் தனியே உருவாக்கியதன் மூலம் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புக்கும் பெரிதும் வழி வகுத்தன.

மங்களூருவோடு இணைக்க திட்டமா?

எடுத்துக்காட்டாக கேரள மாநிலம், பாலக் காட்டோடு இணைக்கப்பட்ட டிவிஷன்களி லிருந்து ஒரு பெரும் பகுதியைப் பிரித்து சேலம் தனி ரயில்வே கோட்டம் - ரயில்வே டிவிஷன் அமைக்க அரும்பாடுபட்ட பிறகே, லாலு பிரசாத் அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், சேலம் டிவிஷன் என்று தனியே சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புது டிவிஷன் உருவாக்கப்பட்டது. அப்படி உருவான பிறகும்கூட அதை முழு அளவில் வளர்ச்சியடைய வைக்க மனமின்றி. கேரளத்துச் செல்வாக்கு, மத்தியில் அதிகமாக இருப்பதன் காரணமாக, பெயரளவில் தனி அலுவலகம் போல சில ஆண்டுகள் இயங்க விட்டு, ஓரளவு வளர்ந்து வரும் நிலையில் திடீரென்று இப்போது இந்த சேலம் டிவிஷனை மங்களூருவுடன் (கர்நாடகத் துடன்) இணைக்க ரகசியமாகப் பல முயற்சிகள் நடைபெற்று வருவது குறித்து சேலத்துப் பெரு மக்களும், ரயில்வே தொழிலாளர் தோழர்களும் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

அவர்களது நியாயமான இந்த அச்சத்தைப் போக்கி, வெகுவாகப் பாடுபட்டு, வராது வந்த சேலம் ரயில்வே கோட்டம் மீண்டும் காணாமற் போகும் அவலநிலை ஏற்பட்டு விடக் கூடாது! கூடவே கூடாது!!

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு..

இதுபற்றி ரயில்வே நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்களும், நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெரு மக்களும், காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும் இதில் தனி அக்கறை செலுத்தி, சேலம் டிவிஷன் வழமைபோல் தனித்தியங்குவதோடு அதை மேலும் பலப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.7.2013

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் எஸ்.சி., எஸ்.டி., பி.சி. மற்றும் பெண் நீதிபதிகள் உரிய எண்ணிக்கையில் வருவதை நான் வரவேற்கிறேன்!



நீதியரசர் ப.சதாசிவம் பேட்டி

புதுடில்லி, ஜூன் 19- மேல் மட்ட நீதிமன்றங் களில் தாழ்த்தப்பட் டோர், மலை வாழ் மக்கள் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் பெண்கள் உரிய எண்ணிக்கையில் நீதிபதிகளாக வர வேண் டும்; அதனை நான் வரவேற்கிறேன் என்று உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று (ஜூலை 19) பதவி யேற்ற நீதியரசர் ப. சதா சிவம் நேற்று முன்தினம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டுக்கு அளித்த பேட் டியில் கூறினார்.

பேட்டியில் கூறியதாவது:

மேல் நிலை நீதி மன்றங்களில் நீதிபதி பதவிகள் நிரப்புவதில், நிலவி வரும் முறை களிலிருந்து சற்று தளர்வு ஏற்படுத்தி, உச்சநீதி மன்றத்திலும், உயர்நீதி மன்றங்களிலும் பெண் களிடமிருந்தும், தாழ்த் தப்பட்டவர்களிடமிருந்தும், பழங்குடியினரிடமிருந்தும், மற்றுமுள்ள பிற்படுத்தப் பட்ட மக்களிடமிருந் தும் மேல் நிலை நீதி மன்றங்களுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவதை தான் வரவேற்பதாக கூறியுள் ளார். மேல் நிலை நீதி மன்றங்களில் பெண் களுக்கோ இதர பிற் படுத்தப்பட்டோர் களுக்கோ நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு இடஒதுக்கீடு இல்லை. நீண்ட நாட்களாகவே உயர்நிலை நீதிமன்றங் களில், பெண்கள், பிற்படுத்தப்பட் டோர் ஆகியோர்க்கான இடம் மிகக் குறைவு. அவர் களை உச்சநீதிமன்றத் திலும், உயர்நீதிமன்றங் களிலும், அடிப்படை தகுதி உரிமையை சமரசம் செய்து கொள் ளாமல் நியமனம் செய் தால், நாட்டின் பன்முக சமுதாய வேறுபாடுகள் பிரதிபலிக்கப்படுவதோடு, சமுதாயத்தில் பெரு மளவிற்கு ஒருவளமான அடையாளத்தை அளிக்கும். தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய நான் விரும்புகிறேன். பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு ஒரு சிறு உதவியாக, பிற் படுத்தப்பட்ட வகுப்பு களில் உள்ள நற்றகுதி பெற்றுள்ளவர்கள் தேர்வு பெறுவதற்கு மேல் நீதிமன்றத் தேர் வாளர்களை ஒத்துக் கொள்ள வைப்பதற் கான பொறுப்பு அடுத்த தலைமை நீதிபதி என்ற முறையில் எனக்கிருக் கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள், சட்டத்தைப் படித்து விட்டு நீதிபதியாக விரும் புபவர்கள் தங்கள் அடிப்படைத் தேவை களை நிறைவுபடுத்திக் கொள்ள தாங்களே முன் வர வேண்டும். அது உயர்நீதிமன்ற அதிகாரி கள் முன் தங்கள் பற்றிய தகவல்களை எடுத் துரைக்க, தங்களுக்குண் டான வேலைப் பகு தியைக் கேட்டுப் பெற உச்சநீதிமன்ற தேர்வுக் குழு நீதிபதிகளிடம் சில கொள்கைகள் சில இணக்கங்களை ஏற் படுத்தித் தர உதவும் என்று விளக்கினார்.

உச்சநீதிமன்றத்தில், 63 ஆண்டுக் காலத்தில், பெண் நீதியரசர்களுக் குப் பற்றாக் குறை நிலவு கிறது. அமர்ந்து இருக் கும் இரண்டு பெண் நீதிபதிகளையும் சேர்த்து, குயான் சுதா மிஸ்ரா, ரஞ் சனா பி. தேசாய் ஆகியோ ரையும் சேர்த்து 5 பேர் தான் இருக்கிறார்கள். இந்தியாவின் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி யாக முதல் தாழ்த்தப் பட்ட இனம் சேர்ந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் 2007இல் பதவி ஏற்றார். ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுப் பது மிக மிக அபூர்வம்.

நீதியரசர் சதாசிவம், நீதிபதிகளின் அரசியல் சார்புகளையும், கடுமை யாகப் பேசினார். அவர் கள் அரசியல் தொடர்பு களைத் தவிர்த்து, சார்பு நிலைகளையும் நீக்கிக் கொள்ள வேண்டும். அவர் அரசியலுடன் இணைக்கப்பட்டிருக்க லாகாது என்று நீதியர சர்களாக விரும்புபவர் களுக்குச் சொன்னார்.

தமிழ் ஓவியா said...


மற்றொரு திவ்யா - இளவரசன் இணை காவல்துறை என்ன செய்கிறது?


- நமது சிறப்புச் செய்தியாளர்

தருமபுரி, ஜூலை 19- தருமபுரி மாவட்டம் பொம்மிடி காவல் சரகத் திற்குட்பட்ட வேப்ப மரத்தூர் கிராமத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோபால் மகன் சுரேஷ் என்பவரும் அரூர் வட்டம் பறையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ப வரின் மகள் சுதா என்ப வரும் (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்) காதலித்து கடந்த மூன் றாண்டுகளுக்கு முன் 21.4.2010-ஆம் தேதி சின்ன திருப்பதி கோயிலில் திரு மணம் செய்து கொண்டு அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டுள்ள னர்.

கடந்த 3 ஆண்டு களாக சுரேஷ் பெற்றோ ருடன் கூட்டுக் குடும்ப மாக வாழ்ந்து வந்ததோடு ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் காதலின் சாட்சி யாக ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகும்...

இந்த நிலையில் இவர் கள் செய்து கொண்டது. காதல் திருமணம் என்று நம்பிய ஊரார். காலப் போக்கில் சுதாவின் சமூகம் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சமூ கத்தை சார்ந்தவர் என்று தெரிய வரவே ஜாதியின் கோர முகம் தெரிய வந்தது. 3 ஆண்டுகளாக வேப்பமரத்தூரில் கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில் நத்தம் இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தில் ஜாதி வெறியர்களின் பிடி இறுகியது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநா தன் (ஊர் கவுண்டர்) பெரியசாமி கோல்கரை (கவுண்டர்) தங்கராஜ் உட்பட்டோர் தலைமை யின் கீழ் ஊர் பஞ்சாயத் தினர் ஒன்றுகூடி வன் னிய இனத்தை சேர்ந்த பையன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஊரில் வசிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஜாதிக்கு ஏற்பட்ட இழுக்காகும் எனவே அந்தப் பெண்ணைத் துரத்திவிட்டு வரவும். அப்படி ஜாதி கெட்டு கீழ் ஜாதிப் பெண்ணு டன் வாழ்ந்தால் உங்கள் குடும்பத்தின் மீது ஊர் கட்டுப்பாடு கொண்டு வருவோம் என கூறி ஊர் திருவிழாவுக்கு கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து ஊர்நிதியில் இருந்து சுரேஷ் வாங்கி இருந்த பணத்தையும் கட்டவைத்ததுடன், ஊர்திருவிழாவில், ஊரில் நடக்கும் திருமணம், சாவு போன்ற நிகழ்வு களில் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள் ளக் கூடாது. ஊராரும் இவர்களை சேர்க்கக் கூடாது. பொதுகுழாயில் தண்ணீர் எடுக்கக் கூடாது கடைகளில் பொருள் வாங்கவோ கொடுக் கவோ கூடாது என ஊர் (கட்ட) பஞ்சாயத்து பேசி சுரேசு குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தெரிவித் தனர்.

அதிலும் வேறு எந்த ஜாதிப்பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக தெரி வித்துள்ளதாக கூறியது டன் இளவரசன் - திவ்யா வாழ்க்கை மாதிரி ஆக்கி விடுவோம் என்று மிரட் டியதாகவும் செய்தியா ளர்களிடம் தெரிவித்தனர்.

காவல்துறை என்ன செய்கிறது?

இந்த ஜாதி வெறி பிடித்தவர்களின் மிரட் டலுக்கு பயந்து சுரேஷ் - சுதா ஆகியோர் 22.6.2013-இல் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் (குற்ற எண் 234/2013) இருந்தும் இதன் மீது காவல் துறை யின் நடவடிக்கை ஏதும் இல்லாததால் தினம் தினம் எங்கள் குடும்பத்தி னரை மிரட்டி வருகிறார் கள். ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத தால் 17.7.2013-இல் உயி ருக்கு பயந்து மாவட்ட காவல்துறைக் கண்கா ணிப்பாளரிடம் (2ஆவது முறையாக) புகார் மனு கொடுக்க வந்துள்ளோம் என்று தம்பதிகள் தெரி வித்தனர் எங்களது வாழ்க்கை இன்னொரு நத்தம் இளவரசன் - திவ்யா வாழ்வைபோல ஆகிவிடக் கூடாது என்றனர்.

தமிழ் ஓவியா said...


திராவிடர்கள்தான்



பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர் கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம். - (விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் என்றும் தேவை சுயமரியாதைத் திருமணம்


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!

ஜூன்26 குடந்தை மாவட்ட கழக வரலாற்றில் மட்டுமல்ல, கழகத் தோழர்களின் குடும்ப வரலாற்றிலும் மறக்க முடியாத, கோலாகல ஒரு கொள்கைத் திருநாள்! ஆம்! குடந்தை கழக மாவட்டத்தில் தோழர்கள் வரவேற்பு - சந்திப்பு என்று தாங்களே மகிழ்ச்சி பொங்க எழுதியும் பாசமிகு கழகக் குடும்பத் தினரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பொன்னாள்! தாங்கள் குறிப்பிட்டி ருந்தபடி ஒவ்வொரு கழகக் குடும்பத் தினருக்கும் ஒவ்வொரு தியாக வர லாறு இருக்கிறது!!

மலரும் நினைவுகளாக அவை களை நினைவு கூர்வதற்கும் ஏஞ்சிய காலத்தில் உறுதியோடும் உற்சாகத் தோடும் பணியாற்றுவதற்கும் கழகக் குடும்பங்களுக்கிடையே ஒரு பாசப் பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் இளைஞர்களிடையே ஒரு எழுச்சி யையும், விழிப்புணர்ச்சியையும் உருவாக்குவதற்கும் தங்களின் இந்த வருகை மிகவும் பயன்பட்டிருக்கிறது!

கொள்கை உறுதி படைத்த வர்களுக்கு கொடிய பாம்பும், கொடியில் தொங்கும் புடலங்காயே என்ற திண்ணிய உள்ளம் படைத்த கொள்கை மறவர்களின் அறப்போர் பாசறையே அய்யா வளர்த்த அன்புப் பாசறை என்பதை அன்று அனைவரும் உணர்ந்தனர்!

1963-ஆம் ஆண்டில் தாலி கூட அணிவிக்காமல் ஒரு சுயமரியாதைத் திருமணத்தை செய்து கொள்வ தென்றால் எத்தகைய எதிர்ப்புகளை எண்ணங்களை எதிர்கொள்ள வேண் டியிருக்கும் என்பதையும், அதை யெல்லாம் தாண்டி, எப்படி வெற்றி கரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதையும் என் இணையரும் நானும் முடிவெடுத்து கடந்த 50 ஆண்டு காலமாக இகழ்ந்திட்ட உள்ளத்தினரும் இறுதியில் இன்று கை குலுக்கி வாழ்த்துகின்ற நிலையைப் பெற்றிருக்கிறோ மென்றால்... அதற்கு, சுயமரியாதைக் கொள்கை மீது கொண்ட உறுதியும் அய்யா, அண்ணா, கலைஞர் தாங்கள் தந்த துணிவும், தொண்டறமுமே காரணம்!

தாங்கள் எங்களுக்கு சால்வை அணிவித்தபோது... இதுவரை நாங்கள் அனுபவித்த தொல்லைகள் துயரங்கள் அத்தனையும் எங்கோ ஓடிமறைந்தன!

பணியாற்றிய காலங்களில் நாங் கள் இருவருமே நேர்மையானவர் கள்... ஒழுக்கமுள்ளவர்கள்... நாணய மானவர்கள், கொள்கை உறுதி படைத்தவர்கள் என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறோமென்றால் இது ஒரு சுயமரியாதைக் குடும்பத்திற்குக் கிடைத்ததாகவே கருதுகிறோம்!

இது தற்புகழ்ச்சிக்காக அல்ல; வருங்கால வீறுகொண்ட இளைய சமுதாயமும் சுயமரியாதைப் பாதை யிலே வெற்றி நடைபோட வேண்டும் என்ற அளவற்ற ஆசையினாலே தான்! வேண்டும் என்பதற்காகத் தான்!!

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போல் இன்று, தாங் களும் முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழினத்தின் இருகண்கள்!... ஆனால் பார்வை ஒன்றே! சுயமரியாதைப் பார்வை!!

அந்தப்பார்வை காட்டும் வழியே இறுதி வரை போராடுவோம்! எங்களை எனது 80-ஆவது அகவையில் பாராட்டி பயனாடை அணிவித்த தங்களுக்கும், அம்மாவுக்கும், கழகத்திற்கும் என்றென் றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருப் போம் என்ற உறுதியையும் தெரி வித்துக்கொள்வோம்!.

நன்றி! நன்றி!! வணக்கம்.

வாழ்க பெரியார்!.

- நெய்வேலி தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


ஆகாயத்தில்...


ஆகாயத்தில் எங்கோ அந்தர உலகத்தில் கடவுள் என்ற ஒருவன் உட்கார்ந்து கொண்டு இவ்விதமாக வெல் லாம் சிருஷ்டி செய்கின்றார் என்று சொல்லப் படுமானால் அத்தகைய பட்சாதாபமுடைய கடவுளை கஷ்டப்படுகிற உலகினர் கழுத்தை பிடித்துக் கீழே தள்ளி மிதித்து விடுவார்கள்.

அத்தகைய கடவுள் இப்படி மிதிபடுவதற்குத் தகுதியானவரே! புதிதாகச் சிருஷ்டிக்கும் ஜீவனை அவலட்சணமாக, அறிவீன னாக ஆரோக்கிய ஹீனமாக சிருஷ்டிக்கும் கடவுள் கொடுங்கோலர் அல்லவா?

(சுப்பிரமணிய சிவா எழுதிய மோட்ச சாதன ரகசியம் என்ற நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரின் கணிப்பு

தீண்டாமை என்பது சமய சம் பந்தப்பட்டிருக்கிறது. அதை சமய சம்பந்தத்தினால் தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக் களுக்கு தலைவன் என்ற முறை யிலும் உங்களிடம் பேசுகிறேன். நல்ல ஒழுக்கமுள்ள அரிஜன் எப்பொழுது சங்கராச்சாரி பீடத்தில் அமருகின்றாரோ அப்பொழுது தான் தீண்டாமை ஒழிந்த தாகக் கருதமுடியும்.

(காகா கலேல்கார், ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய புதிய மனிதன் என்ற நூல்.)

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி பாரதியார்

தமிழ்நாட்டில் சாஸ்திரங்கள் இல்லை. உண்மை யான சாஸ்திரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டு பார்ப்பனர் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். - காற்று என்ற பாட்டில் பாரதியார் கூறியுள்ளது

தமிழ் ஓவியா said...


கடவுள்


தோழர்களே! நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நபி அவர்களை ஒரு மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல், அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகமது நபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ள முடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல மதங்களைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக் கொள்வதற்கும் மேற்கொள்வதாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துக்கள் இருக்கின்றன.

அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு. பல கடவுள்கள் இல்லை என் றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப் பற்றி உன் கருத்து என்ன? என்று என்னை பொறுத்தவரையில் நான் சொல்கிறேன்;

கடவுள் என்று மக்கள், ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டி அழுகிறவர்களைவிட நபி அவர்கள் எவ்வளவோ மேலானவர் என்பேன்.

தந்தை பெரியார், 20.12.1953

தமிழ் ஓவியா said...

திதி மந்திரமும் - அதன் பொருளும்

மந்திரம்: என்மே மாதா ப்ரலுலோபசரதி

அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...

பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்ற வர்கள் சொல்வதால் நான் இன்னா ருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.

இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன?

தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.

ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது... பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.

எனவே இந்துமதப்படி பெற்றோர் களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத் தான் இந்து மதம் கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்


பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கி கொள்கின்றனர். பொது மக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார் களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.

தெய்வத்தன்மை பொருந்திய நீர் நிலை களிலும், ஆறுகளிலும், வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்துக் கொள்கின் றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலை களில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை.

மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையைப் பார்த்தால் போற்றத்தக்க நீர்நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடையதாகிறது. மந்திர நீரைவிட முடி மழிப்பவனின்கை நீர் மேன்மையானது.

தலை மொட்டையானாலும், தாழ்வான எண்ணங்களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்கப் படுவதில்லை அல்லவா? ஆந்திர சீர்திருத்த ஞானி வேமண்ணா

தமிழ் ஓவியா said...

காசியில் இறக்க முக்தி

சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங் களது அந்தக் கவிதையை சரிபார்த்துத் தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தருவார்கள்.

காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்று ஒருவர் புரட்சி கவிஞரிடம் வேண்டினார்.

கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே எனும் புராணக்கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே!