Search This Blog

5.3.11

குரங்கைக் கும்பிடும் இந்தியர்கள்!


சின்னஞ்சிறு நிலத்தில் குவிந்துகொண்டு, சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியடைவதையும், வர்ணிக்க முடியாத கொடுமைகள் நிகழ்வதையும், பெரிய நகரங்களின் மக்கள் படுகொலை செய்யப் படுவதையும் சலனம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சமூகங்களின் காட்டுமிராண்டித்தனமான தன்னகங்காரத்தை நாம் மறக்க முடியாது;

இயற்கையில் நிகழும் சம்பவங்கள் சம்பந்தமாக எவ்வளவு அக்கறை காட்டினார்கள்? தவிர எந்த ஆக்கிரமிப் பாளனுடைய கவனமானது இதன் மீது விழுந்துவிட்டால், இந்தச் சமூகங்கள் எதிர்க்க வகையில்லாமல் ஆக்கிரமிப்புக்கு இரையாயின.

இந்தத் தேக்கம் நிறைந்த அசைவற்ற வாழ்க்கை அகவுரவ வாழ்க்கை - சிருஷ்டிக்கும் திறனில்லாத செயலற்ற வாழ்க்கை நேர்மாறான விளைவுகளையும், சிருஷ்டித்தது. கட்டுக்கடங்காத நாசகார சக்திகள் - நோக்கமில்லாமல் அழிக்கும் சக்திகள் குமுறி எழுந்தன. இந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வச் சடங்காயிற்று.

இதை நாம் மறக்கக் கூடாது. இந்தச் சிறு சமூகங்கள் ஜாதி வேறுபாடுகளாலும் அடிமை முறையாலும் களங்கமடைந்திருந்தன. மனிதனைச் சூழ்நிலைக்கு எஜமானனாக்குவதற்குப் பதிலாக, அவனைச் சுற்றுச் சார்புக்கு அடிமைப்படுத்தின.

தானாக வளர்ந்து கொண்டிருந்த சமூக நிலையை, ஒரு பொழுதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தன. இவ்விதமாக இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலைமையைச் சிருஷ்டித்தது. இயற்கையின் எஜமானனாகிய மனிதன், குரங்காகிய அனுமான் முன்பும், பசுமாட்டின் முன்பும் தெண்டனிட்டு வணங்கியதில் இந்தச் சிறுமை காட்சியளித்தது. இவற்றையும் நாம் மறக்கக் கூடாது.

----------------இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் -எங்கெல்ஸ் -- நன்றி :-”விடுதலை” 4-3-2011

0 comments: