Search This Blog

24.9.10

விநாயகர் பற்றி துண்டுப் பிரசுரம் இந்து முன்னணி புகாருக்கு கி. வீரமணி பதிலடி

விநாயகனை வெட்டி, கை, கால்களை அறுத்து
கடலில் தூக்கிப் போட்டது நீங்களா? நாங்களா?
சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி

விநாயகனின் கை கால்களை அறுத்து வெட்டி தூக்கி எறிந்தது நீங்களா? நாங்களா? விநாயகனை பங்கப் படுத்தியது நீங்களா? நாங்களா? என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

உலகத்தை படைத்தது கடவுள் இல்லை

ஸ்டீபன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட மிகப்பெரிய அறிஞர். அண்மையில் அவர் ஒரு புத்தகமே ஆராய்ச்சி நூலாக வெளியிட் டிருக்கின்றார்.

பிரபஞ்சம் உலகம் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல என்று சொல்லியிருக் கின்றார். அதே போன்று கடவுள் மறுப்பு கருத்தை லிண்டர் அவான்ஸ் என்ற விஞ்ஞானியும் கூறியிருக்கின்றார்.

பல பேர் கேட்பார்கள் உலகத்தை படைத்தது கடவுள் என்று இவன் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அந்தக் கடவுளைக் காட்டிதான் நம்மை கீழ்ஜாதியாக்கினான். நமக்குப் படிக்க உரிமை இல்லை என்று சொன்னான். இன்றைக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள் அறிவியல் பூர்வமான, ஆதார பூர்வமான கருத்துகள். கடவுள் இல்லை என்று அறிவியல் அறிஞர்கள் அறிக்கை மேல் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரியார் சொன்ன கருத்துகள்தான்

தந்தை பெரியார் அவர்களும், அவருடைய இயக்கமும் அறிவியல் ரீதியாக சொன்ன கருத்துகளைத்தான் நாங்கள் வலியுறுத்தக் கூடிய பிரச்சாரத்தை செய்கின்றோம். இந்த பிரச்சாரம் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய பிரச்சாரம். எதிலே அரசியல் சட்டத்திலே. அரசாங்கங்கள் இதை ஊக்கப் படுத்த வேண்டுமே தவிர, தடுக்கக் கூடாது. காரணம், என்னவென்றால் இந்திய அரசியல் சட்டத்திலே ரொம்பத் தெளிவாகவே அடிப்படை உரிமைகள் பற்றி (குரனேயஅநவேயட சுபைவள) சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல இன்னொரு பகுதி இருக்கிறது. இதுவும் ரொம்ப பேருக்குத் தெரியாது. வழக்கறிஞர்களுக்குக் கூட பல பேருக்கு தெரியாது. அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள் என்ற பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கக் கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற கடமைகள் என்ன?

1. அறிவியல் மனப்பான்மையை மக்களிடத் திலே ஒவ்வொரு குடிமகனும் வளர்க்க வேண்டும்.

2. ஏன்? எதற்கு? என்று கேட்க வேண்டும்.

3. மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.

4. சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள கடமை

இந்திய அரசியல் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கக் கூடிய கடமை இது. இதைத்தான் பிள்ளையார் விழா ஆனாலும், ராமர் பிரச்சினை ஆனாலும், இந்த மூடநம்பிக்கைகளை எடுத்து விளக்கி நாங்கள் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றோமே. தவிர, வேறு ஒன்றும் இல்லை.

பிள்ளையாருக்கும், நம்முடைய நாட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. ஏழாம் நூற்றாண்டு வரையிலே நம்முடைய நாட்டிற்குப் பிள்ளையார் வரவில்லை. மதவெறியைப் பரப்ப பிள்ளையார்

தந்தை பெரியார் பிள்ளையார் சிலையையே உடைத்தார். அப்பொழுதெல்லாம் இந்த மாதிரி பிள்ளையார் ஊர்வலம் கிடையாது. ஆனால் இன்றைக்கு பிள்ளையார் ஊர்வலம் எதற்குப் பயன்படுகிறது? மத வெறியைப் பரப்பப் பயன்படுகிறது.

ஒரு சமுதாய மக்கள் இன்னொரு சமுதாய மக்களை வெறுப்பதற்காக பயன்படுத்தப் படு கிறது. மதவெறியை மாய்த்து மனித நேயத்தைக் காப்பாற்ற வேண்டிய எங்களுக்குடைய கடமை என்பதற்காகத்தான் இந்த பொதுக் கூட்டத் தைப் போட்டு நடத்துகின்றோம்.

யாருக்கும் சிக்கலை உண்டாக்குவதற்கு அல்ல. யாருக்கும் பிரச்சினையை உண்டாக்குவதற்கு அல்ல. இன்று மாலை வந்த பத்திரி கையை நண்பர்கள் காட்டினார்கள்.

வருடாவருடம் நாங்கள் புராணக்கதைகளில் உள்ள மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லி எவ்வளவு ஆபாசமாக, அருவருப்பாக இருக்கிறது இந்தக் கதைகள் என்பதைப் பற்றி எடுத்துச் சொல்லி மக்களுக்கு விளக்குவோம்.

இங்கே சொன்னார்கள் பிள்ளையாரை ஊர்வலமாகக் கொண்டு போய் அதை உடைத்து, கை, கால்களை தனித்தனியாக அறுத்து, கடலில் தூக்கி எறிகின்ற வேலையை நாங்கள் யாரும் செய்வதில்லை.

விநாயகரை அவமதித்து துண்டுப் பிரசுரம்

கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள்தான் நாங்கள். ஆனால், நாங்கள் யாரும் இதைச் செய்வதில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் இந்த பாடுபடுத்துகிறார்கள். அது அவர்களுடைய உரிமை. அது எப்படியோ போகட்டும்.

எனக்கு இந்த செய்தி வந்ததினாலே நான் சொல்லுகின்றேன். இதைப் பற்றி அதிகமாகப் பேசாமல் அய்யா அவர்களுடைய தொண்டைத் தான் அதிகமாக பேச வேண்டும் என்று நினைத்தேன்.

இன்று மாலை வந்த செய்தி விநாயகர் சிலையை அவமதித்து துண்டு பிரசுரம். சென்னையை அடுத்த பம்மல் பகுதியில் விநாயகர் சிலையை அவமதித்து திராவிடர் கழகம் சார்பில் துண்டு பிரசுரம் வெளியிட்டதாக கூறப்படுகிறது. நாங்கள் ஓன்றும் எதையும் ரகசியமாக செய்யக் கூடியவர்கள் அல்ல.

லட்சக்கணக்கான துண்டறிக்கைகள்

விடுதலையில் விளம்பரப்படுத்தி லட்சக்கணக்கான துண்டறிக்கைகள் மூலம் நாடு பூராவும் பிரச்சாரம் செய்கின்றோம் இருப்பதை எடுத்துச் சொல்லுகின்றோம்.

எக்ஸ்ரே மீது கோபப்பட முடியுமா?

யாராவது எக்ஸ்ரே கருவி மீது கோபப் படுவீர்களா? எக்ஸ்ரே எடுக்கும் பொழுது எலும்பு முறிந்திருக்கிறது என்று சொல்லுகின்றான்.

இரத்த பரிசோதனை கருவி இரத்தத்தில் புற்றுநோய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

உடனே இரத்தப் பரிசோதனைப் பற்றி சொன்னவர் மீது நடவடிக்கை எடு என்றால் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி? நடவடிக்கை எடுத்தால் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி?

ஆகவே நாங்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயார்.

கலைஞரின் பொற்கால ஆட்சி

நாங்கள் எப்பொழுதும் எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்து கொண்டிருக்கிறவர்கள். நாங்கள் ஏதாவது சீட்டு வாங்கப் போகிறவர்களா?

தி.மு.க ஆட்சி கலைஞர் ஆட்சி பொற்கால ஆட்சியை தமிழகத்திலே நடத்தி வருகிறது. வாராது வந்த மாமணி போன்ற ஆட்சியை ஆதரியுங்கள் என்று சொல்லியிருக்கின்றார். கலைஞர் ஆட்சியை காப்பது நமது கடமை என்று சொல்ல வேண்டியது எங்களுடைய வேலை. அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப் படுவதை விட அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படுவதுதான் திராவிடர் கழகத் தினுடைய, சமுதாய புரட்சியாளர்களுடைய சிந்தனை.

இந்து முன்னணி புகாராம்!

இந்து முன்னணியைச் சார்ந்த பொறுப்பாளர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரைத் திட்டமிட்டு அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

ஏனென்றால் இதன் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு பதற்றத்தை உண்டாக்க வேண்டும். ஒரு நெருக்கடியை உண்டாக்க வேண்டும். அவர்கள் திராவிடர் கழகத்தோடு மோத வேண்டும். அதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு சிக்கலை உண்டாக்க வேண்டும் என்பது தான். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர் களுடைய நோக்கம். அதற்காக இதை செய்கிறார்கள்.

மனதைப் புண்படுத்துகிறது

புகார் மனுவில் இந்து மக்களுடைய மனதைப் புண்படுத்தும் வகையில், விநாயகர் சிலையை அவமதித்து துண்டுப் பிரசுரம் வெளியிட்ட திராவிடர் கழகம் மீதும், அதன் தலைவர் திரு.கே.வீரமணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. பம்மல், திண்டுக்கல் போன்ற பல ஊர்களில் இந்த மாதிரி செய்திருக்கிறார்கள்.

அப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் காவல்துறை மீதோ, அரசாங்கத்தின் மீதோ எங்களுக்கு கோபம் இல்லை.

நடவடிக்கை எப்பொழுது?

நடவடிக்கை எப்பொழுது வரும் என்று ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம் (கை தட்டல்). தயது செய்து யாரும் தாமதிக்க வேண்டாம். நீங்கள் எங்கள் மீது வழக்கு போடுங்கள். நான் கோர்ட்டுக்கு போய் நீண்ட நாள் ஆகிவிட்டது.

அரசியல் சட்ட வழக்கிற்காக, பொது நல வழக்கிற்காக, தடா வழக்கிற்காக நீதி மன்றத்திற்குப் போயிருக்கின்றேன். அதே மாதிரி வாய்ப்பு வர வேண்டும். பிள்ளையார் கதையை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்

இந்த பக்தர்களை கூண்டில் நிறுத்தி ஒவ்வொரு புராணத்திலும் என்னென்ன இருக்கிறது என்பதை படித்து, விநாயகர் புராணத்தை எடுத்துக் காட்டி விளக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். பொதுக்கூட்டங்களில் இதைப் பற்றி விளக்கிச் சொல்லுகின்றோம். அதுபோல, வாய்ப்பு கிடைக்கின்ற இடத்தில் குறிப்பாக நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு விளக்க வேண்டும் என்று நினைக்கின் றோம். ஒவ்வொரு இடத்திலும் பதிவு பண்ணுவார்கள்.

இந்த பிள்ளையாருடைய யோக்கியதை என்ன என்பதை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்று விரும்புகின்றோம். இதை விட உலகத்திற்கு தெரிய வைக்கக் கூடிய வாய்ப்பு வேறு கிடைக்காது. எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லுகின்றார்.

விநாயகர் புராணம்

விநாயகர் புராணத்தில் உள்ள செய்தி பெரியார் சொன்ன செய்தியைச் சொல்லுகின் றேன். இது தேவாரத்தில் பாடலாக இருக்கிறது. பல கதைகள் உண்டு.

ஏழாம் நூற்றாண்டில் வந்தது

ஏழாம் நூற்றாண்டில் பிறந்தது எப்படியோ? என்ற தலைப்பில் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எழுதியிருக்கின்ற நூல். இவர் எழுதிய கட்டுரை பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் பாடமாக இருக்கிறது. நரசிம்மவர்மனின் படைத் தலைவனான பரஞ்சோதி வாதாபியை வென்று திரும்பி வந்த பொழுது கொண்டு வந்த பொம்மை தான் வாதாபி கொண்ட கணபதி. இதுதான் பிள்ளையார் வந்த வரலாறு என்று எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

பார்வதி மனைவி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறார். உடம்பில் இருக்கின்ற அழுக்குருண்டையைத் திரட்டி ஒரு பிடி பிடித்து உருவமாக வைத்து விட்டுப் போய் அதற்கு உயிர் கொடுத்தார். இதுதான் பிள்ளை யார்.

ஒரு வெட்டு வெட்டினான்!

பாத்ரூமுக்கு கதவு கிடையாது. நான் குளிக்கும் பொழுது யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லி விட்டார். பார்வதி சிவ பெருமான் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார் போல இருக் கிறது. ஆகவே விடாதே என்று சொல்லி விட்டு போய் விட்டார். சிவபெருமான் திடீரென்று வந்து உள்ளே போகிறார். விநாயகன் தடுக்கின்றார். என்னை தடுப்பதற்கு நீ யார் என்று வாளை எடுத்து பிள்ளையார் கழுத்தை சிவபெருமான் சீவி விடுகின்றார். உடனே உள்ளே போய் விடுகின்றார்.

இந்த அம்மா கேட்கிறார். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள். நான் ஒரு காவலாளியை வைத்திருந்தேனே என்று சொல்லுகின்றார்.

இல்லை ஒருவன் தடுத்தான். நான் அவன் கழுத்தை வெட்டிவிட்டேன் என்று சிவபெருமான் சொல்லுகின்றார்.

அப்படியா.. அந்தப் பிள்ளைக்கு உயிர் ஊட்டுகின்றேன் என்று சொல்லுகின்றார்.

பிள்ளையாரின் ஆபாசமான கதைகள்

என்ன செய்வது என்று சிவபெருமான் பார்த்தார். ஒரு யானை இருந்தது. யானை தலையை வெட்டி, வெட்டிய உடலுக்கு உயிர் ஊட்டினார். இது ஒரு கதை. பிள்ளையாருக்கு என்று எழுதி வைத்திருக்கின்றான்.

இன்னொரு கதை- பரமசிவனும், பார்வதியும் காட்டில் உலவுவதற்குப் போனார்கள். அவர்கள் சென்ற பொழுது ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கூடி கலவியில் இருந்ததைப் பார்த்த இவர்கள். அதே மாதிரி நாமும் செய்ய வேண்டுமென்று நினைத்தார்கள். இதை விட அசிங்கம் வேறு இருக்க முடியுமா? இதுதான் விநாயகன் பிறந்த கதைகள். நாங்கள் கொஞ்சம் தரத்தோடு பேசுகின்றோம்.

புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள். இன்னும் கேவலமாக இவைகள் எல்லாம் விநாயகர் புராணங்கள் பரமசிவனும், பார்வதியும், கலவியில் ஈடுபட்டால் எப்படி யானை தலையோடு மனித உருவம் பிறக்கும், இருக்கும்? இப்படி கேள்வி, ஆராய்ச்சி என்று இறங்கினால் அது ரொம்ப தூரத்திற்கு இழுத்துக் கொண்டே போய்விடும்.

----------------தொடரும் ...”விடுதலை” 249-2010

1 comments:

தமிழ் ஓவியா said...

தேசிய அவமானம்! கணபதி பக்தியின் லட்சணம் இதுதான்!

சாய்பாபா பக்தியா? பார் டான்ஸ் ஆட்டக் கூத்தா?

இன்று காலை 9 மணியளவில் ஹெட்லைன்ஸ் டுடே என்ற வடநாட்டு ஆங்கில தொலைக்காட்சியில் ஒரு செய்தி!

ஷீரடி சாய்பாபா ஆசிரமத்தில் கணபதி விழாக் கொண்டாட்டத்தில் கரைப்பதற்குமுன் பார் டான்ஸ்காரிகளைக் கொண்டுவந்து ஒயிலாக பாட்டுக் கூத்து எல்லாம் மிகச் சரளமாக நடைபெற்ற அவமானம்பற்றி காட்சிகள் (விஷுவல்) காட்டப்பட்டன!

ஷீரடி சாய்பாபாவுக்கும், விநாயகருக்கும் என்ன சம்பந்தம்?

அப்படியே இருந்தாலும், விநாயகர் இவற்றை யெல்லாம் விரும்பி பார் டான்ஸ் ஆட்டக்காரிகளைக் கொண்டு வந்து ஆடும்படி அவசர உத்தரவு போட்டாரா?

ஆயிரம் பிள்ளையார், 5000 பிள்ளையார் என்ப தெல்லாம் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., அமைப் பின் வடநாட்டுப் பணத்தை வாரி இறைத்து, ஆங் காங்கே உள்ள குப்பம் முதற்கொண்டு வைத்து, ஒரு பிள்ளையார் சிலைக்கு இவ்வளவு ரேட் என்று பேசித்தானே இந்த பக்திப் பிரவாகம். சாராய வாடையோடு பெருக்கெடுத்தோடுகிறது!

நல்ல வாய்ப்பாக டாஸ்மாக் பிள்ளையாரும், வல்லபை கணபதியும் ஏனோ ஊர்வலத்தில் வரவில்லை!

பெரியார் சொன்ன காட்டுமிராண்டிகளைக் காணுங்கள்!

------"விடுதலை” 24-9-2010