Search This Blog

11.9.10

கோயில் விழாக்களுக்கான செலவைத் தடுத்து விஞ்ஞான ஆராய்ச்சிக்கு நிதி




நம் இயக்க பிரசாரம் தான் மக்களை மாற்றமடையச் செய்து வருகிறது. மற்ற இயககஙகளுக்கு எல்லாம் வேறு வேலை இருககிறது. தேர்தலில் ஈடுபடுவது, பதவிக்குச் செலவது என்பது இருககிறது. நம் இயக்கம் ஒன்றுதான் தேர்தலுக்கு நிற்காமல் பிரசாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் செய்கிறது. இந்நாட்டிலுள்ள பெருமபாலான மக்களின் நம்பிககைக்கு, நடப்பிற்கு விரோதமான கருத்துகளை எடுத்துச் சொல்லிவருவது நம் இயக்கம் ஒன்று தானாகும். இதனால் எந்தச் சிறு பலனும் நாம் அடைவது கிடையாது.

1925-இல் சுயமரியாதை இயக்கம் ஆரமபிக்கப்பட்டது. அன்று நம் கொள்கை எதுவோ அது தான் இனறைக்கும் நம் கொள்கையாகும். இடையில் நம் மக்களின் நலனை முனனிடடுக் காமராஜரை ஆதரிக்க நேர்ந்த போது, சமுதாயக் கொள்கைகள் தீவிரமாக பிரச்சாரம் செய்யாமல் இருக்க வேணடியதாயிற்று. தற்போது நம் கொள்கை உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால் சமுதாயக் கொளகைகளைத் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றோம். இந்தியாவிலேயே சமுதாயததிற்காக இருக்கிற இயக்கம் திராவிடர் கழகம் ஒன்றுதான் ஆகும். அது அரசியலில் ஈடுபடுவது கிடையாது - பதவியை இலடசியம் செய்வது கிடையாது.

திராவிடர் கழகத்திற்குக் கடவுள், மதம், சாஸ்திரம், தேசம், மொழி இவறறில் பற்று கிடையாது. மனித சமுதாயப் பற்று ஒன்று தான் உண்டு. தேசப்பற்று, மதப்பற்று, மொழிபபற்று, கடவுள் பற்று என்பது எல்லாம் வாய்பபால் ஏறபடுவதே ஒழிய, இயற்கையானதல்ல. இதெலலாம் காலப் போக்கில் சுயநலககாரர்களின் பிரசாரத்தால் ஏறபட்டதேயாகும்.

என்னைப் பொருத்தவரை இநநாட்டை இந்நாட்டுககாரன் ஆள வேண்டும் என்கிற கடடாயம் கிடையாது. எந்த நாட்டுக்காரனாக இருநதாலும், நம்மை மனிதனாக மதித்து நடத்தக் கூடியவனாக இருந்தால் அவனை நான் வரவேற்பேன்.

நாம் மனிதர்களாக வாழவது பெரிதா? நம் மதம், நம் மொழி, நம் நாடு, நம் கடவுள் என்று சூத்திரர்களாக, இழிமக்களாக அறிவற்றவனாக இருப்பது பெரிதா? நம்மை நாய்க்கன், மராட்டியன், சேரன், சோழன், வெங்காயம் எல்லாம் ஆண்டிருக்கின்றான். அதன் பயன் என்ன? நாம் சூத்திரரகளாகத் தானே இருக்கினறோம்?

நம் இழிவை நீக்குகிறவன் எவன் ஆட்சி செய்தாலும் அவனை வரவேறபேன். நம் மக்களுக்கு அறிவை கொடுககக்கூடிய மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழியை வரவேற்பேன். பொதுவாக நம் மக்களுக்கு நமக்கு என்ன தேவையோ, அதை எது கொடுககிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்தாகும்.

இப்போது இந்தியா சுதநதிரம் அடைந்து அது ஏற்படுததிக் கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசமைபபுச் சட்டம் என்ன என்றால், மதம் பாதுகாக்கபபட வேண்டும் அவனவன் நமபிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் எனபதாகும். இந்தச் சட்டத்தைக் கொண்டு நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடியாது. இந்த சட்டத்தை மதிக்காத வேறு எவனாவது வந்தால்தான் இந்த இழிவு ஒழிக்கப்பட முடியும். அடுத்து நம் மககளின் இழிவிற்குக் காரணமாக இருப்பது, அவரகள் நம்பி வணங்குகின்ற கடவுளே ஆகும். அறிவோடு பார்ததால் எந்த மனிதனுமே கடவுளை நம்புவது கிடையாது. பட்டை அடித்துக் கொள்பவன், நாமம் போட்டுக் கொளகிறவன் எல்லாம், தம் மடததனத்தால் போட்டுக் கொளகின்றவனே தவிர பக்திக்காகப் போட்டு கொள்வது கிடையாது.

இந்த நாட்டு மக்களின் இழிவினைப் போக்க வேண்டுமானால் அது நம் இயக்கம் ஒன்றினால் தான் ஆகும். நம் மக்களின் இழிவை நிலை நிறுத்துவதறகுக் கடவுள், மதம், சாதி, சமீப காலம் வரை இருந்த ஆட்சி, அரசியல் கட்சிகள் யாவும் பாதுகாப்பாக இருககின்றன. நம் இயக்கம் ஒன்று தான் இவை யாவும் ஒழிக்கப்பட்டு நம் சமுதாய இழிவு நீக்கத்திற்காகப் பாடுபட்டு வருகிறது. நம் நாட்டில் தோன்றிய சமுதாய சீர்திருத்தவாதிகள் எனபோர்கள் அனைவரும் கடவுள், மதம், சாதி, பழைமை காப்பாற்றபபட வேண்டும், அதில் கைவைக்கக் கூடாது என்று சொல்லி அவற்றைக் காப்பாற்றுவதை சீர்திருத்தமாகக் கொண்டிருந்தவர்களே ஆவார்கள்.

இந்தக் காந்தி, மகாத்மா என்று பார்ப்பானால் பட்டம் சூட்டப்பட்டவர். அவரை அறியாத பாமரப் பொது மக்கள் இவரை பெரிய மகாத்மா என்று சொலவாரகள். எங்களைப் பொருத்தவரை அவர் சாதாரண மனிதர் தான். அவர் பெயரைச் சொல்லி ஓட்டிற்கும், பதவிக்கும் நிற்பவர்கள்தான் அவரைப் பெரிய மனிதராக்கிக் காட்டுகிறார்கள். மக்களிடையே அவருக்குச் செலவாக்கு இருப்பதால், இன்றைய ஆட்சியாளரும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு அதன் மூலம் பலன் பெறப் பார்ககினறனர். இந்தக் காந்தி வருணாசிரமம்,- சாதி காப்பாறறப்படவேண்டும் என்று சொல்லி அதற்காகத் தொணடாற்றி வந்தவரே ஆவார். தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனி கோயில், தனிப் பள்ளிக் கூடம், தனிக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்கவேணடும் என்று சொனனவர்தான். அதன்படி நடந்து கொணடவர்தான். மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லாதவர் ஆவார்.

காங்கிரசில் ஜாதி முறை காப்பாறறப்படவேண்டும். சாதி முறைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாலேயே நான் அதை விட்டு வெளியேறினேன். நமக்கிருக்கிற சூத்திரத் தன்மையைப் பற்றி, இழிஜாதி ஈனசாதித் தன்மையைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. நம் பண்டார சன்னதிகள் முதற்கொண்டு இதை ஏற்றுக்கொண்டு இருபபவர்களே ஆவார்கள். இந்த இழிநிலைக்கு 4 ஆம் சாதித் தன்மைக்கு அடிபபடையாக இருப்பது கடவுள் ஆனதால், அதை ஒழிக்கவேண்டும் என்று நாங்கள் பாடுபட்டு வருகினறோம். சுயமரியாதை இயக்கம் ஒன்று தான் இதற்காகத் தொணடாற்றி வருகிறது. தி.மு.கழகத்தின் கொள்கையும் இது தானாகும். அரசியலில் ஈடுபட்டிருப்பதால் வெளியில் சொலலாமல் மறைத்துக் கொண்டிருககின்றனர்.

இந்தக் கோயில்களை எலலாம் இடித்துத் தரைமட்டம் ஆக்க வேணடும், அதில் உள்ள குழவிக் கற்களை எல்லாம் உடைத்து ரோட்டிற்கு ஜல்லியாகப் போட வேண்டும். பார்ப்பானை எல்லாம் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும். அல்லது அவன் நம்மோடு சேர்ந்து மணவெட்ட, மூட்டை சுமக்க, ஏர் உழ வரவேண்டும். அரசாங்கம் நாம் சொல்கிறபடி நடக்கககூடியதாக இருக்கவேண்டும். கோயில்களை இடிக்க, சிலைகளை உடைக்க, கோயில் கட்டுவதைத் தடுக்க அரசாங்கம் ஆதரவு கொடுப்பதாக இருக்கவேணடும். தேர்த திருவிழா உற்சவங்களை எல்லாம் தடை செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தக் கோயிலகளுக்கு உற்சவங்களுக்கு, திருவிழாக்களுக்கு செலவழிக்கிற பணததைக் கொண்டு மககளுக்கு விஞ்ஞான, அதிசய அற்புதங்களைக் கண்டுபிடிக்கச் செலவிட வேண்டும். அபபடிச் செய்தால் நாம் மற்ற மேல் நாட்டுககாரனைவிட, சிறந்த விஞஞானச் சாதனஙகளைச் செய்ய முடியும். இபபோது நாம் மேல் நாட்டுககாரன் கண்டு பிடித்த சாதனஙகளைக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

------------------------5.9.1970 முதல் 10.9.1970 வரை மதுரை மாவட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு ----"விடுதலை", 3.9.1970

0 comments: