Search This Blog

15.3.15

ஓர் ஆராய்ச்சி - பெரியார்

ஓர்ஆராய்ச்சி 

- சித்திரபுத்திரன்


இராட்சதர்கள் தபசு செய்தார்கள், வரம் பெற்றார்கள். அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் என்பனவெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும் அவர்கள் தலைவர்களை யும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்குக் கடவுள்களும், தேவர் களும் என்ற பெயர் கொண்ட ஆரி யர்கள் வழி தேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல், அவர்களது வரம் எதுவும் பயன்பட்டதாகத் தெரிய வில்லை.


விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யார்? எப்போது உண்டானார்கள்? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந் தார்கள்? ஏன் வந்தார்கள்? என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.


அதுபோலவே தேவர்கள் யார்? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? உலகிற்கு அவர்களால் என்ன பயன்? என்பதற்கும் ஆதாரம் கிடையாது.


இவர்கள் எல்லாம் இமய மலைக்கு இப்புறம்தான், அதாவது இந்தியா கண்டம் என்னும் பிரதேசத்தில் இருந் தார்களே ஒழிய மற்ற இந்தியாவுக்கு அப்பாற்பட்ட அய்ந்து கண்டங்களிலும் இருந்ததாகவோ, அந்தக் கண்டங்களைப் பற்றி இவர்கள் ஏதாவது தெரிந்திருந்த தாகவோ சரியான தகவல்களைக் காணோம்.


கீழ் ஏழு லோகம், மேல் ஏழு லோகம் கண்டு பிடித்தவர்கள் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, அய்ரோப்பாக் களைப் பற்றி ஒன்றையும் கண்டு பிடித்ததாகவோ அல்லது அங்குள்ள வர்கள் இந்தியாவையும் சிவ, விஷ்ணு, தேவர், அசுரர், ராட்சதர், சூரன் ஆகிய வர்களை அறிந்திருந்ததாகவோ தகவல் களையும் காண முடியவில்லை.

அவதாரங்களில் கூட அக்கடவுள் களின் ஆட்சியில் அவர்களது பிள்ளை, குட்டி மனைவி முதலியவர்கள் வாழ்க் கையில் உள்ள இடம்,  மலை, ஆறு, கடல், ஊர், வீடு, வாசல் எல்லாம் இந்தியாவில் இருப்பவைகளைத்தான் சொல்லப்படு கின்றனவே ஒழிய மற்ற நாட்டு மலை, காடு, வனம், நதி, சமுத்திரம் எதுவும் சொல்லப்படவில்லை. கடவுள்கள் தேவர்கள் வாழ்க்கைகளில் காணப்படும் பூலோகமே இந்தியாவாகத்தான் கருதப் பட்டிருக்கின்றதே தவிர வேறு ஒன்றும் சேர்க்கப்படவில்லை .



இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்து, இந்தியக் கண்டத்தின் பூர்வ நிலை அதாவது ஆரியர் வருவதற்குமுன் இருந்த நிலையும் யோசித்துப் பார்த்தால் சிவன், விஷ்ணு அல்லது சேயோன், மாயோன் மற்றும் திருக்குறள், தொல் காப்பியம் ஆகியவற்றில் வரும் உலகம் முதலியவை பெரும்பாலும் இந்தியாவுக் குள் ஆரியர் வந்தபிறகு ஏற்பட்டவை கள்தான் என்பதும் அவை இந்தியாவைப் பொருத்தவைகள்தான் என்பதும் சாதாரணமாய் விளங்கும். 

அவைகளைப் பற்றித்தான் மற்ற வேறு ஆதாரங்களும் விளங்குகின்றன.
சிந்து நதி தீரத்தைப் பற்றியும் அங்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய கண்டுபிடிக்கப்பட்ட  பூர்வ சின்னங்களைப் பற்றியும் பேசுவதில் ஆரியர்களுக்கு முன் தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்றும் இந்தியாக்கண்டம் பூராவும் தமிழர்கள் இருந்தார்கள் என்றும்தான் சொல்லப் படுகிறது.


ஆனால் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் இன்றைக்கு 6000, 7000 வருஷ காலத்துக்கு முந்தியது என்று சொல்லப் படுகிறது. ஆரியர்களுக்கு  முன்பே இந்த இடங்கள் நாகரிகமாய் இருந்திருந்தால் ஆரியர் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? இந்தியக் கண்டம் முழுவதும் சமயம், சமுதாயம், கலை, பழக்க வழக்கம் முதலிய  யாவும் ஆரியமயமாய் அதில் ஆகமம், ஆரிய ஆச்சாரம், தர்மம், ஆரியக்கதை ஆகியவைகளே கொண்ட இலக்கணம்,  இலக்கியம், சரித்திரம், காவியம் ஆகியவை எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?


கோவில்கள் எல்லாம் தமிழர்களுடை யதா? ஆரியர்களுடையதா? என்று பார்த் தாலும் அவற்றிற்குப் பணம் செய்தவனும், கட்டிடம் கட்டியவனும், அதற்கு மான்யம், மடப்பள்ளி விட்டவனும் தமிழனாக இருக்கலாம், சந்தேகமேயில்லை. ஆனால் சொந்தக்காரனும் கோவில் ஆகமக்காரனும் கடவுள் தன்மைக் காரனும் ஆரியனாகத் தானே இருக்கிறான்? கோவில்களில் உள்ள உருவங்கள், அதன் தோற்றத்துக்கு ஆன கதைகள், பூஜை உற்சவ முறைகள், நைவேத்திய சாதனங்கள் ஆகியவை ஆரியர்களுடையதாகத்தானே இருந்து வருகின்றன? அந்தக் கோவில்கள் கட்டப் பட்ட காலத்திலும் அப்போதுள்ள அரசர்கள் ஆட்சியிலும் ஆரிய ஆதிக்கம் தலை சிறந்து உச்ச ஸ்தானத்தில் இருந்தது என்பதற்கு முதல் இடை கடைச்சங்கங் களும் அப்போதிருந்த புலவர்களும், அரசர்களும், அரச நீதியும் அவர்கள் கைக் கொண்டிருந்த சமயங்களும் உதாரணமாக இல்லையா?


இந்த நிலையில் அசுரர்கள் இராட் சதர்கள் என்பவர்கள் யாராக இருந்திருக்க முடியும்? அவர்கள் எங்கிருந்து வந்திருக்க முடியும்? அதுவும் இந்தியாவிற்குள் உள்ள அயோத்தி, மதுரை, டெல்லி, மிதிலை, காந்தாரம், விராடம், விதர்ப்பம், தண்ட காரண்யம், கோதாவரி, சித்திர கூடம் ஆகிய இடங்களும் அங்கும் அதற்குப் பக்கத்திலுமே தாடகை, கரன், சூர்ப்பநகை, மாரிசன் முதலியவர்களும் இருந்தார்கள் என்றால் இவர்கள் யாராக இருந்திருக்க முடியும்? இதைக் கண்டு பிடிக்க பெரிய பெரிய புராண சரித்திர இலக்கிய காவிய நூல் ஆராய்ச்சி ஏன் வேண்டும்?


இவை பொய்க்கதை, கற்பனைக் கதைகளாக இருந்தால் கவலை வேண்டாம். மெய்க்கதை சிறிதாவது நடந்த கதை என்றால் கோதாவரி நதிக்குப் பக்கத்திய தேசத்தில் தான் இராவணன் தங்கை சூர்ப்பநகை, இராவணன் தம்பி கரன் முதலியவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து  உங்களைக்  கொல்லவே நான் வந்தேன் என்று இராமன் சொல்கிறான். முனிவர்களும்  பக்கத்தில்  ஜனஸ்தானம் இருக்கிறது, அங்கு இராட்ச தர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள்.


இந்திய கண்டத்தின் பாகத்தைக் கடல் கொண்ட காலம் பதினாயிரம் வருஷத்துக்கு மேற்பட்டது என்கிறார்கள். ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தது 6000-வருஷத்துக்கு உட்பட்டது என்கிறார்கள். அதற்கு முன்பே தமிழர்கள் இந்திய கண்டம் பூராவும் பரவி இருந்ததோடு தமிழர் ஆட்சியும் அங்கெல் லாம் பரவி இருந்தது என்றும் சொல்லி அஸ்ஸாம் கண்டுபிடிப்புகளையும். சிந்து கண்டுபிடிப்புகளையும் உதாரணம் காட்டுகிறார்கள்.


மீனக்கொடியோனாகிய தெற்கத்திய சம்பாரன் என்னும்   அசுர  அரசனுடன் தசரதன் சண்டை போட்டதாகவும் வால்மீகி இராமாயணத்தில் இருக்கிறது. சம்பாரன் என்று ஒரு பாண்டிய மன்னன் இருந்த தாகவும் இலக்கியம் கூறுகிறது. கதையை வளர்த்துவதற்காக இராமன் சீதையை அங்கு போய்த் தேடினான் என்று சொல்லப் பட்டிருக்கிறதே அல்லாமல், சீதை காணா மல் போன சிறிது காலத்திற்குள்ளாகவே இராவணன்தான் தூக்கிக் கொண்டு போனான் என்பதும், அவன் தெற்கே போனான் என்பதும் தெரிந்து போய் விட்டதாகக் காணப்படுகிறது.


அன்றியும் இராவணன் சீதையின் பக்கத்திலேயே இருந்து லட்சுமணன் வெளியில் சென்றவுடன் தூக்கி வந்து இருக்கிறான். மாரிசன், தாடகையின் மகள் பக்கத்திலேயே வசித்திருக்கிறான். சூர்ப்ப நகை தனது மூக்கறுபட்ட உடனே இராவணனிடம் சென்று இரத்த ஒழுக லோடு முறையிட்டிருக்கிறாள். இராவ ணன் உடனே மாரிசனோடு அதைப் பற்றிப் பேசுகிறான். 


விஸ்வாமித்திரன் யாகம் செய்ததும் தாடகை கெடுத்ததும் இந்தியாவில் இன்னும் வடக்கில் என்றா லும் சமீபமாகத்தான் காணப்படுகின்றன. சுக்ரீவன், அனுமார் முதலியவர்களையும் பர்ண சாலைக்கு சமீபத்திலேயே சந்திக் கிறான். ஜடாயு இரத்தம் காயாமல் உயி ருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே இராம லட்சுமணர்கள் காண் கிறார்கள். இராமன் நான் புத்தியில்லாமல் இராட்சதர்களை விரோதித்துக் கொண் டேன் என்று வருந்துகிறான்.


ஆகையால், வால்மீகி கதைப்படி இராட்சதர்கள் இராட்சத அரசர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் பெரும்பா லும் திராவிட நாட்டிற்குள் அல்லது நமக்கு சமீபத்திற்குள்தான் இருந்திருக்க வேண்டுமே ஒழிய அவர்கள் வெளி நாட்டார் என்றோ, வேறு இனத்தார் என்றோ சொல்லுவதற்குத் தக்க ஆதாரம் எதுவும் அதில் காணப்பட வில்லை. வால்மீகி இராமாயணத்தை வால்மீகி கதை முகமாய் எழுதியதால் வர்ணனைக்கு ஆகவும், கவர்ச்சிக்கு ஆகவும் சில கற்பனைகள் சேர்க்க வேண்டியதாக ஆகி, அவை ஒன்றுக் கொன்று முரண்படத்தக்கதாகவும் ஆகிவிட்டதால் பண்டிதர்கள் வக்கீல் களைப் போல் உண்மையைப் பற்றிய லட்சியமில்லாமல் தங்கள் வெற்றி யையே குறி வைத்தும் சில அற்பக் குறிப்புகளை எடுத்துக்கொண்டும் மனசாட்சிக்கு விரோதமாய் கூச்சல் போட்டுத் தேவ அசுரர்களை உறுதிப் படுத்துகிறார்கள், என்பதல்லாமல் வேறு உண்மை என்ன இருக்கிறது. புரா ணங்கள், இதிகாசங்கள், வேத சாஸ் திரங்கள், ஸ்மிருதிகள் என்பவைகள் உள்பட ஆரியர்கள் தங்கள் உயர்வுக்கும் திராவிடர்களை இழிவு படுத்தவும் செய்து கொண்டவைகளே தவிர வேறில்லை. அக்காலத் தமிழர்கள் ஒரு சமயம் பாமர மக்களாக இருந்திருக்கலாம். ஆதலால் சமய சரித்திர ஆதாரங்களைக் கொண்டு நாம் நம்மைக் கவனிக்காமல் தற்கால அறிவைக் கொண்டு நிலையைக் கொண்டு பார்ப்பதுதான் பயன்தரக் கூடியதாகும்.

------------------ சித்திரபுத்திரன்  என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்ப்ட்ட கட்டுரை --”குடிஅரசு” - கட்டுரை - 20.09.1947

62 comments:

தமிழ் ஓவியா said...

மன்னிப்புக்கோரும் ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானில் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப் பூர்வ இதழான ஆர்கனைசர் வெளியிட்டு இருந்தது அல்லவா?

அது புயலாக வெடித்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். வேறு வழியின்றி மன்னிப்புக் கோரியுள்ளது. மற்றவர்கள் செய்திருந்தால் அடேயப்பா எப்படி எல்லாம் குதித்திருப்பார்கள்?

கண்ணில்லையா முதல்வருக்கு?

கண் பார்வையற்றோர் கடந்த ஆறு நாட்களாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களைக் குண்டு கட்டாகக் காவல் துறையினர் தூக்கிச் செல்வதும், பார்வையற்றவர்கள் கதறுவதும் கண்ணுள்ளோர் அனைத்து உள்ளங்களிலும் ரத்தக் கண்ணீரை வர வழைக்கின்றது - கண் பார்வையற்றவர்கள்மீது கண் பார்வைபடாதா தமிழக முதல்வருக்கு?

போனுக்குக் கவசம் - தலைக்கு அலட்சியம்

கைப்பேசிகளுக்கு கவசம் போடும் வாகன ஓட்டிகள் தலைக்குக் கவசம் அணிவதில் கவலையற்றுள்ளனர். 80 சதவீத வாகன ஓட்டிகள் இந்த நிலையில்தான் உள்ளனர் என்று ஆதகங்கப்படுகிறார் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். - நியாயமான ஆதங்கம் தானே!

சாதிக்க முடியுமா?

லண்டன் பிபிசி நிறுவனம் இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலடி என்ற பெயரில் இங்கிலாந்தின் மகள்கள் என்ற பெயரில் வீடியோ டுவிட்டரில் உலா வருகிறதாம். தயாரித்தவர் ஹர்ஷர்தர்சிங் என்பவர்; இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகளில் பாலியல் வன்முறை எவ்வளவு மோசம் என்று அதில் காட்டப் படுகிறதாம். இதன் மூலம் புண்ணிய பாரத பூமியில் பாலியல் வன்முறை கிடையவே கிடையாது என்று சாதிக்க முடியுமா?

ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் பதிலாகுமா?

Read more: http://viduthalai.in/e-paper/97909.html#ixzz3USI9rze5

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பஞ்சாங்கம்

கேள்வி: பல்லி தலையில் விழுந்தால் உயிருக்கு ஆபத்து என்கிறார்களே, உண்மையா?

பதில்: மிக உயரத்தில் இருந்து விழுந்தால் பல்லி வேண்டுமானால் மரணம் அடையலாம் - இப்படி சொல்லியிருப்பவர் காழியூர் நாராயணன் என்ற ஜோதிடர் (கல்கி 15.3.2015)

பரவாயில்லையே - ஜோதிடர்கள்கூட பகுத் தறிவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்களே கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்!

Read more: http://viduthalai.in/e-paper/97910.html#ixzz3USIPHQyz

தமிழ் ஓவியா said...

காந்தியார் சிலை

செய்தி: பிரிட்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியார் சிலை திறக்கப்பட்டது. இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்றுப் பாராட்டிப் பேசினார். சிந்தனை: பக்கத்தில் நாதுராம் கோட்சே சிலை வைப்பது பற்றி பிரிட்டன் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தாரா அருண்ஜெட்லி என்பதுபற்றி தகவல் ஏதும் இல்லை

Read more: http://viduthalai.in/e-paper/97908.html#ixzz3USIc4XgM

தமிழ் ஓவியா said...

சு.சாமியின் திமிர்ப் பேச்சு!


மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டடங்களாம்!

கவுஹாத்தி, மார்ச் 15_ மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மசூதிகள் ஒன்று மதம் சார்ந்த இடம் இல்லை. அவை வெறும் கட்டடங்கள் தான். அந்த கட்டடங்களை எந்நேரத்திலும் இடிக்க முடியும். என் கருத்தை ஏற்காத யாருடனும் விவாதிக்க நான் தயார் என்றார்.

சாமியின் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சாமியின் கருத்துக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போன்று அஸ்ஸாம் மாநில பாஜக ஒதுங்கிக் கொண்டது. சாமியின் கருத்துக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் உள்ள க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி என்ற விவசாயிகள் அமைப்பு அளித்த புகாரின்பேரில் சாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/97907.html#ixzz3USIizK8r

தமிழ் ஓவியா said...

தமிழக அரசின் அழைப்பை ஏற்று சர்வதேச முதலீட்டாளர்கள் வரத் தயங்குவது - ஏன்?
அரசியல் குறுக்கீடும், நன்கொடை வசூலும்தான் காரணமாம்!

சென்னை, மார்ச் 15_ தமிழக அரசின் அழைப்பை ஏற்று பன்னாட்டு முதலீட் டாளர்கள் வருவதற்குத் தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் அரசியல் குறுக் கீடும், நன்கொடை வசூ லும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச முதலீட்டா ளர் மாநாட்டிற்கு, பங் களிப்பு நாடாக ('பார்ட் னர் நேஷன்') இருக்க, தமிழக அரசு விடுத்த அழைப்பை, பல நாடுகள் புறக்கணித்துள்ளன. தமிழ கத்தில், அன்னிய முத லீட்டை ஈர்க்க, 'குளோபல் இன்வெஸ்டர் மீட்' என்ற பெயரில், சர்வதேச முத லீட்டாளர் மாநாட்டை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது. சென்னை _ நந்தம்பாக் கம் வர்த்தக மய்யத்தில், மே, 23, 24 தேதிகளில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்ட, அரசு திட்டமிட் டுள்ளது. இதற்காக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு, தமிழக அதி காரிகள் குழுவினர் சென்று, சென்னை மாநாட் டில் பங்கேற்கும்படி, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், சென்னை, சர்வதேச மாநாடு குறித்து, முதலீட்டாளர்களின் சந்தேகத்தை தெளிவு படுத்த, சென்னை _ எழும் பூரில் உள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மான, 'டிட்கோ' அலுவ லகத்தில், 'ஜிம் - செல்' என்ற தனிப்பிரிவு துவங் கப்பட்டுள்ளது. தொழில் துறை இணைச்செயலர் விஜய் பிங்ளே தலைமை யில் செயல்படும், தனிப் பிரிவில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமான, 'டிக், டிட்கோ, சிப்காட், டி.என்.பி.எல்.,' என, 10 அரசு நிறுவன ஊழியர்கள் உறுப்பினர் களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மாநில அரசுகள், சர்வதேச முத லீட்டாளர் மாநாடு நடத்தும் போது, பல நாடுகளுக்கு, பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்) இருக்குமாறு அழைப்பு விடுப்பது வழக் கம். பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') என்பது, முதலீட்டாளர் மாநாடு நடக்கும் போது, ஒரு நாட்டின் அரசு பிரதிநிதி, தன் தலைமை யில், 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை அழைத்து வருவார்.

குஜ ராத் அரசின், 'வைபரன்ட் குஜராத்' என்ற முதலீட் டாளர் மாநாட்டிற்கு, எட்டு நாடுகள், 'பங்களிப்பு நாடாக (பார்ட்னர் நேஷன்') இருந்தன. அதன்படி, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், தைவான், மலேசியா, சிங்கப்பூர், பின்லாந்து, ஸ்பெயின், சீனா, கனடா என, 12 நாடுகளுக்கு, தமிழக அரசு, பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') இருக்கும்படி, அழைப்பு விடுத்தது. இதில், ஜப்பான், பிரான்ஸ் என, இரண்டு நாடுகள் மட்டுமே, தமிழக அரசின், அழைப்பிற்கு இசைந்துள் ளன. மற்ற நாடுகள், தங்கள் முடிவை இது வரை தெரிவிக்கவில்லை என, கூறப்படுகிறது.

இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்வதேச மாநாடு ஏற் பாடு குறித்து, முதலீட்டா ளரிடம் ஆலோசனை பெறுவதற்காக, கடந்த மாதம், சென்னையில், முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் முன்னோட்ட மாநாடு நடத்தப்பட்டது. இதில், எதிர்பார்த்த அள விற்கு, முதலீட்டாளர்கள் பங்கேற்காதது, அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது தற்போது, பல நாடுகள், பங்களிப்பு நாடாக ('பார்ட்னர் நேஷன்') இருக்க இசைவு தெரிவிக் காமல், காலம் தாழ்த்தி வருகின்றன. தமிழகத் தின், தற்போதைய அரசி யல் சூழ்நிலை குறித்து, உலக நாடுகள், தெளிவாக தெரிந்து வைத்துள்ளதே இதற்குக் காரணம் என, தெரிகிறது. தமிழக அதி காரிகள், இம்மாத இறு தியில், அமெரிக்கா, ஜெர் மனி; ஏப்ரல் முதல் வாரம், சீனா, தைவான் நாடு களுக்கு சென்று, முதலீட் டாளர்களைச் சந்திக்க உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து, முதலீட் டாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில், மற்ற மாநி லங்களை விட தொழில் துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், அர சியல் குறுக்கீடு, செயற் கையான நில விலை உயர்வு, நன்கொடை வசூல் ஆகிய காரணங்களால், தொழில் துவங்க முடியாத நிலை உள்ளது. இதற்கு, தீர்வு காணாமல், மாநாடு நடத்தினால், மட்டும் முதலீடுகள் குவியப் போவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை சர்வதேச முத லீட்டாளர் மாநாட்டை விளம்பரப்படுத்த, ஆங்கி லம் உள்ளிட்ட, ஆறு மொழிகளில், தனி இணைய தளம் துவங்கப் பட இருக்கிறதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/97906.html#ixzz3USIs39Qg

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் காஷ்மீர் இருப்பதாக படம்

மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு


புதுடில்லி, மார்ச்.15_ ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ஆர்கனைசர் ஏட்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் எல்லைக்குள் இருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மாநிலங் களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. மத்திய அரசு விசாரணை மேற் கொள்வதாக உறுதியளித் துள்ளது. சங் பரிவாரங் களின் நிலைப்பாடு அது அல்ல என்றும் ஆளும் பாஜக கூறியுள்ளது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத் அவை கூடியதும் ஆர் கனைசர் ஏட்டில் வெளி யாகி உள்ள படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி யாகவே வெளியிட்டுள் ளது குறித்து பிரச்சி னையை எழுப்பினார்.
குலாம் நபி ஆசாத் கூறும்போது, இந்தியா வின் மகுடமாக உள்ளது ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும். இதற் காக எண் ணிலடங்கா தியாகங்களை செய்துள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, வெளி நாட்டு இதழ்களில் பாகிஸ்தா னால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை பாகிஸ் தானின் ஒரு பகுதி என வரை படத்தில் வெளியிட்டால் அதற்காக பாஜக, ஆர். எஸ்.எஸ். அமைப்புகள் போராட்டங்கள் நடத்து கின்றன. ஆனால், ஆர் கனைசரில் வெளியிட்ட தன்மூலமாக அதை அங்கீ கரித்து விட்டனவா என் பதை அறிய விரும்புவதாக குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

குலாம் நபி ஆசாத் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் சார்பில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியாகவே உள்ளன. ஆர்கனைசரில் வெளியான தகவல் குறித்து நாங்கள் விசாரணை மேற்கொள்வோம் என்று கூறினார்.

அமைச்சர் இரவிசங்கர் அளித்த பதிலில் திருப்தி கொள்ளாத காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை கோரி தொடர்ச்சியாக வலியுறுத் திய வண்ணம் இருந்தனர். ஆர்கனைசர் ஏட்டில் எழுதியவர்மீது நடவ டிக்கை எடுக்கும் திட்டம் உள்ளதா? என்று நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ் .சதுர்வேதி கேட்டார்.

துணை அவைத் தலைவர் பி.ஜே. குரியன் கூறும்போது, அமைச்சர் அய்யத்துக்கு இடமில்லா மல் பதிலில் கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகும். இதை யாரும் மாற்றிவிட முடியாது என்றார்.

இதனிடையே ஆர் கனைசர் ஏடு தன்னுடைய இணைய பதிப்பில் பதி வான வரைபடத்தை மாற்றிவிட்டது. மார்ச் 15 தேதியிட்ட அச்சுப் பிரதியில் முறைகேடான வரைபடமே இடம் பெற்றுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் வெளிப்படுத்தி உள்ளது.

ஆர்கனைசர் ஏட்டின் ஆசிரியராக உள்ள சிறீ பிரஃபல்ல கேட்கார் கூறும்போது, எதேச் சையாக நடந்தது என் றாலும் ஏற்கமுடியாத தவறுதான். எது எப்படி இருந்தாலும், ஆர்கனை சரில் இடம் பெற்றது ஏற்கமுடியாத தாகும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது, சார்க் இணையத் தில் பங்ளாபீடியா இணை யத்தின் வாயிலாக அந்த வரைபடம் எடுக்கப்பட் டுள்ளது. அடுத்த இதழில் திருத்தம் வெளியிடப் படும் என்று கூறினார்.
_இந்துஸ்தான் டைம்ஸ், 13.3.2015

Read more: http://viduthalai.in/page-2/97918.html#ixzz3USJSmtTT

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. ஆட்சிக்கு மொத்து!
மதச் சுதந்திரத்தில் வழுக்கிடும் இந்தியா அமெரிக்க செனட்டர் சாடல்

வாஷிங்டன், மார்ச்15 பொதுத் தேர்தல் நடை பெற்றுமுடிந்து கடந்த ஓராண்டாகவே மதச்சுதந் திரத்தில் இந்தியா வழுக் கிடும் நிலை ஏற்பட்டுள் ளது என்று அமெரிக்க செனட்டர் சாடியுள்ளார்.

கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு வருகைதந்த போதுகூட அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப் படையாகவே இது குறித்துக் கூறினார். இது போன்ற முக்கியப் பிரச் சினைகளையொட்டியே வெளியுறவுக்கொள்கை அமைகிறது. வாஷிங்டனை மய்ய மாகக்கொண்டு இயங்கக் கூடிய கிறித்தவ பழமை வாதக் குழுவின் குடும்ப ஆய்வுக்குழுவின் தலை வராக உள்ளவரும், அமெ ரிக்க செனட்டருமாகிய டோனி பெர்க்கின்ஸ் செனட்டின் துணைக்குழு வில் பேசும்போது, இந் தியா குறித்துக் குறிப் பிட்டு சொல்லும்போது:- அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நாடு மதச் சுதந்திரத்திலிருந்து வழுக்கி உள்ளது. ஆகவே, கிறித்தவர் என்று மட்டு மன்றி அந் நாட்டிலுள்ள மதச்சிறுபான்மையராக உள்ளவர்கள்மீதான செயல்கள்குறித்து அந் நாட்டை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும் போது, பன்னாட்டு மதச் சுதந்திரச் சட்டத்திற்கே வெளியுறவுக்கொள்கையில் முன்னுரிமை அளிக்கப் படும். வெளியுறவுத் துறை யில் பணியாற்றும அலுவ லர்களிடம் இதற்கே முன் னுரிமை அளிக்க வேண் டும் என்பதையே பயிற்சி கொடுத்துவருகிறோம் என்றார்.

செனட்டர் ஸ்டீவ் டான்ஸ் என்பவர் செனட் டர் பெர்க்கின்சிடம் கேட்கும்போது, உங்கள் பார்வையில் தற்போ துள்ள (இந்திய) அரசு நிர் வாகம் மதச்சுதந்திரத்தில் தெளிவாக உள்ளதா? என்று கேட்டார்.

பெர்கின்ஸ் கூறும் போது, நான் அலுவலர் களிடம் பேசும்போது மதச்சுதந்திரம் என்கிற கருத்தில் முன்எப்போதும் இல்லாதவகையில் வெளி யுறவுக் கொள்கையில் முன்னுரிமை கொடுக்கப் பட வேண்டி உள்ளது. உண்மையைக் கூற வேண் டுமானால், இப்போது தான் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, செனட்டர் ஸ்டீவ் கேள் விக்கு பதில் அளிப்பதில் நான் இல்லை என்றேகூற வேண்டியுள்ளது. அந்த நாட்டில்(இந்தியாவில்) அரசால் மதச் சுதந்திரத் துக்கு முன்னுரிமை வழங் கப்படவில்லை என்று பதில் அளித்தார்.

முடிவாக, மதரீதியில் துன்புறுத்தல் குறித்த பதிவுகளைப் பார்க்கலாம். இதுகுறித்து ஆய்வு செய் துள்ளவர்களின் கருத்துப் படி, மதச்சுதந்திரம் உயர் வானதாக இல்லை. தொடர்ச்சியாகவே மதரீதி யிலான துன்புறுத்தல்கள் உள்ளன. மதத்தைக் கட்டாயப்படுத்துவது எதிர்காலத்தில் நன்றாக இருக்காது என்றார்.

புதுடில்லி சிறீக் கோட் டையில் கடந்த ஜனவரி யில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சைச் சுட்டிக் காட்டி ராபி டேவிட் நாதன் சபர்ஸ் டெயின் பேசி னார். அமெரிக்க நாட் டின் பன்னாட்டளவில் மதச்சுதந்திரத்துக்கான தூதராக சபர்ஸ்டெயின் உள்ளார். அவர்கூறும் போது, வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மான பங்கு வகிப்பது மதச்சுதந்திரமாகும் என்று கூறினார்.

மேலும், அவர் கூறும் போது, மதச் சுதந்திரத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் செயல்களில் சட்டரீதியாக மாறுபட்ட விளக்கங்கள் கூறுவதாக வெளிப்படையாகவே அமைந்துள்ளதாகவே நான் எணணுகிறேன்.

காலைப் பிரார்த் தனைக் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயப் படுத்தப்படுகிறது. தொடக்கநிலையில் தான் செயல்படுவதற்கான அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது, அதன் படியே செயல்படு கிறேன் என்றார். ஆனால், உண்மைநிலை என்ன? அரசின் அனைத்து துறை களிலும் மதச்சுதந்திரம் குறித்த திட்டம் என்ன? முக்கியத்துவம் வாய்ந்த செயல் திட்டமாக அல் லவா இருக்க வேண்டும்? என்று வாதிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் பல செயல்கள் நடந்துவிடு கின்றன. உண்மையல் நான் எண்ணுவது என்ன வென்றால், சட்டத்தில் உள்ளபடி, அரசு நிர்வா கம் மற்றும் அரசுத்துறை செயலாளர் மற்றும் தலைவர் ஆழமாக கவனம் செலுத்தவேண்டிய பிரச் சினையாக மதச்சுதந்திரம் உள்ளது என்று சபர்ஸ் டெயின் கூறினார்.

மத்திய அரசின் மதச் சுதந்திரம் குறித்து அமெ ரிக்க செனட்டர்கள் விவா திக்கும் அளவில் பாஜக அரசின் மதவாதச் செயல் பாடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/97917.html#ixzz3USJjAOnf

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசில் பதவியில் ஆள் மாறியிருக்கிறார்களே தவிர, மனப்பான்மை மாறவில்லை: தமிழர் தலைவர் வேதனை


மதுரை, மார்ச் 15_ இலங்கை அரசில் பதவியில் ஆள் மாறியிருக்கிறார்களே தவிர, மனப்பான்மை மாறவில்லை என மதுரையில் 13.3.2015 அன்று செய்தி யாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரி வித்தார்.

செய்தியாளர் கேள்வி: பாலிடெக்னிக் உயர்கல்வியில் தற்போதைய நிலை குறித்து...?

தமிழர் தலைவர் பதில்: நம்நாட்டில் எல்லாத்துறை யிலும் வெவவேறு கண்ணோட்டங்கள் உள்ளே போன தால் வந்த கோளாறு. வேறு ஒன்றும் கிடையாது. அதைச் சரிப்படுத்தலாம். எஞ்சினியரிங் டிகிரியை விட தொழிற் சாலைகளுக்குத் தேவைப்படுவது பாலிடெக் னிக்குதான். இங்கிலாந்து, அமெரிக்காவில் எல்லாம் எஞ்சினியரிங் டிகிரியைவிட அதிகமாக அவர்கள் மதிப்பது பாலி டெக்னிக்தான்.

கனடாவில் செயின்ட்ஜான்ஸ் நியூபவுண்ட்லேண்ட் என்கிற மாநிலம் அந்த மாநிலத்துக்கும், எங்கள் பாலிடெக்னிக்குக்கும் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் எம்ஓயு (புரிந்துணர்வு) போட்டிருந்தோம். அதற்கு சேர்மேன் என்கிற முறையில் போயிருந்தேன்.

அங்கே டிகிரி பட்டமளிப்பு நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக நான் கலந்துகொண்டேன். அங்கே எனக்கு ரொம்ப ஆச்சரியம். ஒரு இளைஞர் டிகிரியைப் பெறுவதற்கு வந்தார். இன்னொருத்தர் 65 வயதுடையவர் தன் மனைவியுடன் வந்து வாங்கினார். அருகில் இருந்தவரான இன்னொரு சிறப்பு விருந்தினராகிய மாநிலத்தின் முதல்வரைப்பார்த்து என்ன இப்படி என்று கேட்டேன். அவர் சொன்னார். இந்த ஊரில் இலவசம் என்று எதுவும் கிடையாது. பணம்தான். பணம் கட்ட வேண்டும். படிப்பதற்கு பணம் கட்டவேண்டும். மூன்று ஆண்டுகள் படிக்கிறார்கள் என்றால், ஒரு வருடம் பணம் கட்டுவார் படிப்பார். பணம் தீர்ந்துவிடும். கடற்கரைசார்ந்த பகுதி என்பதால் மீன்பிடித்தல், ஷிப்பிங் உள்ளிட்ட வேலைக்கு செல்வார். படிப்பை இடைநிறுத்தம் செய்து விடுவார்கள். ஒரு வருடம் முழுவதுமாக சம்பாதித்து, மிச்சப்படுத்தி அடுத்த வருடம் வருவார்கள். அடுத்தவருடம் படித்துவிட்டுஅவர்கள் குடும்பத் தையும் நடத்த வேண்டும். வேலைக்குப் போய் விடுவார்கள். ஏனென்றால் எதுவும் அங்கு இலவசம் கிடையாது. அப்புறம் இரண்டு வருடங்கள் கழித்து அந்தப்பணத்தை சேர்த்துவைத்துக்கொண்டு, அவர்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு மூன்றாவது ஆண்டும் படிக்க வருவார்கள். இப்படி வருவதால் தான் அவர் பையனும் படிக்கிறார், அப்பாவும் படிக்கிறார். தாத்தாவும் டிகிரி வாங்குகிறார். அதுதான் வேடிக்கை.

தமிழ் ஓவியா said...

ஒரேநேரத்தில் மூன்று தலைமுறையினரும் படிக்கிறார்கள். அவர்கள் இதை பொருட்படுத்தவே இல்லை. போனவாரம் ஆண்டுவிழாவில் வந்தார். நான் நினைத்தது படிக்கிற பிள்ளைகளின் பெற்றோர்கள் என்று நினைத்தேன். அவர்கள் கிட்டே வந்து சமுதாயப்பாலிடெக்னிக் மாணவர்கள் என்றார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழ் ஓவியா said...

லைஃப் லாங் ஜர்னி வாழ்நாள்பூராவும் படிக்கலாம் என்று வந்துள்ளது. அதனால் திட்டங்களை நன்றாக செயல்படுத்த வேண்டும். ஒரு செயல்படுத்துகின்ற அரசாக, தொலைநோக்குடன் உள்ள அரசாக இருந்தால் இந்தக் கொள்கையைச் செய்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது. நிதி ஆதாரத்தில்கூட சிக்கலே இருக்காது. அந்தந்த பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் வாயிலாகவே ஆய்வகங்கள் அமைக்கப் படலாம். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் கம்பெனியில் வருமானவரி என்பதில் கல்வி அறக்கட்டளையில் வருகிறது. கல்விச் செலவாகிவிடும். ஆகவே, இதில் வேண்டியது திட்டமிடுதலும், அணுகு முறைச் சிந்தனையும்தான்.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர் கேள்வி: இந்து மதத்தை மட்டும் சொல் லுகிறார்கள். பிற மதங்களைச் சொல்லுவதில்லை என்கிற கருத்து பரவலாக உள்ளதே?

தமிழர் தலைவர் பதில்: அதாவது, யார் அடிக்கிறார் களோ அவர்கள்மீதுதான் புகார் கொடுப்பார்கள். ஏன் எதிர்த்த வீட்டுக்காரர்மீது ஒன்றும் சொல்லவில்லை என்று சொன்னால், பக்கத்து வீட்டுக்காரர்மீது ஒன்றும் சொல்லவில்லை என்றால் பக்கத்து வீட்டுக் காரர் அடிக்கவரும்போது, அவர்மீது புகார் சொல் லலாம். சும்மா இருக்கிறவரைப்போய் இவரு வீட்டுலே சொல்லிவிட்டோம், அதனாலே எங்கவீட்டுக்கும் சேர்த்து சொல்லுங்க என்று சொன்னால் எப்படி? எனக்கு ஊறல் எங்கு உள்ளதோ அங்குமட்டும்தான் சொறிந்துகொள்வேன். அந்த இடத்திலே சொறிந் தீர்களே மற்ற இடங்களிலும் சொறிந்துகொள்வது தானே? என்றால் எப்படி? மற்ற இடத்தில் ஊறல் வரட்டும் அப்புறம் சொறியலாம் என்பதுதான்.

செய்தியாளர் கேள்வி: இலங்கை பிரச்சினை குறித்து...?

தமிழர் தலைவர் பதில்: இக்கரைக்கு அக்கரை பச்சை. அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது ஒரு பழமொழி. மோடி வந்த உடனே, காங்கிரசு மேல் இருந்த கோபம், வெறுப்பு, அய்க்கிய முற்போக்குக்கூட்டணியின்மேல் அவர்களுடைய அணுகுமுறை எல்லாம் வித்தியாசமா இருந்தது. மோடி வந்த உடனே மீனவர்கள் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும். எல்லாம் ஏதோ மந்திரக்கோல் எடுத்து எல்லாவற்றையும் செய்துவிடுவார் என்று நினைத்தார்கள். ஒன்றே ஒன்று மட்டும் நடக்கிறது. யாராவது இங்கிருந்து போகிறார்கள் என்றால், முதல் நாள் பிடிக்கிறது, உள்ளே வைத்திடுவது, நல்லெண் ணத்தின் அடிப்படையில் வெளியில் அனுப்புகிறார்கள் என்று செய்தி ஊடகங்களில் வந்துவிடும். அவர்களின் படகுகள் வந்தனவா இல்லையா என்று தெரியாது. ஊடகத்தின்மீது பெட்ரோல் குண்டை சென்னையில் இருக்கிற அலுவலகத்தில் வீசினான் என்கிற செய்திக்கு அடுத்த செய்தி இருக்கிறதென்றால், மீன் பிடிக்க சென்றவர்கள்மீதும் பெட்ரோல் குண்டை வீசுகிறான் என்கிற செய்தியை காலையில்தான் படித்தேன். அதுவும் எப்போது? அடுத்த நாளில் மோடி அங்கு இறங்கப்போகிறார் என்றிருக்கும்போது. வித்தியாசமே இல்லை.

தமிழ் ஓவியா said...


தமிழர்களுடைய ஆதரவு, இசுலாமியர்களுடைய ஆதரவு இரண்டு ஆதரவினால்தான் சிறீபாலா சேன வந்திருக்கிறார். புதிய பிரதமர் ரணசிங்கே வந்திருக் கிறார். எல்லாம் வந்தபிறகும் இப்போது என்ன சொல் கிறார்? மீனவர்களை சுட்டுக்கொன்றால் அதுபற்றிக் கூறும்போது, மனித உரிமைகள் இருக்கிறதே? ஒரு அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான யாரும் கைதியைகூட தூக்குத்தண்டனை சட்ட நடவடிக்கை யின் மூலமாகத்தான் செய்ய முடியும். கொலை செய்ததால் நேருக்குநேராக நானே தண்டனை அளிக்கிறேன் என்று எந்த நீதிபதியும் சொல்ல முடியாது. சுட்டால் தவறில்லை என்று கூறுகிறாரே, அதைவிட கொடுமையான மனப்போக்கு, செய்கிறாரா? இல்லையா? என்பதல்ல. அவருடைய மனப்போக்கு இன்னமும் அங்கே பதவியில் ஆள் மாறியிருக்கிறார் களே தவிர, அவர்களுடைய மனப்பான்மை மாற வில்லை என்பதையே காட்டுகிறது.

மோடி, பிரதமருடைய வருகை அதில் ஏதாவது மாற்றம் செய்தால்,பலன் உள்ளதாக இருக்கும். யாழ்ப்பாணத்துக்கும் செல்லுகிறார். வடக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்களையும் சந்திக்கிறார் என்றால், அவர் பார்க்க வேண்டும். இன்னமும் சிங்கள ராணுவத்தைத்தான் சுற்றி காவல் போட்டுள்ளார்கள். அதை நீக்கவேண்டும். மீள்குடியேற்றம், தமிழர்கள் பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்றி தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும்.

அதோடு 13ஆவது சட்டத்திருத்தம், ஜெயவர்த் தனே _ ராஜிவ் ஒப்பந்தம் ரொம்ப குறைச்சல். ஒரு மாநில உரிமைகூட கிடையாது. தமிழ்நாட்டில், இந் தியாவில் இருக்கிற மாநில உரிமைஅளவில்கூட அதில் இல்லை. இருந்தாலும் இருக்குமநிலையில் அதை யாவது செய்ய வேண்டும் என்கிற வகையில் அரசியல் தீர்வு காணவில்லை. வெறும் ஒப்பந்தம், தொழில் ஒப்பந்தம் போட்டோம் என்றுமட்டும் திரும்பி வந்து விடாமல், உருப்படியாக தொப்புள்கொடி உறவுள்ள தமிழர்களுடைய பிரச்சினைக்கும் சரி, தமிழக மீனவர்களுடைய பிரச்சினைக்கும் சரி ஒரு நிரந்தரத் தீர்வு காணக்கூடியஅளவிலே தெளிவாகஏற்பட வேண்டும் என்று விரும்புகின்றோம். இல்லா விட்டால், பழைய கருப்பனே பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவில்தான் இருக்கும்.

செய்தியாளர் கேள்வி: மாநில அரசின் செயல்பாடுகள்குறித்து..? செயல்படுகிறதா? தமிழகத்தில் வளர்ச்சி ஏதும் உள்ளதா?

தமிழர் தலைவர் பதில்: நிறைய டெவலப்மென்ட் நடந்திருக்கிறது. நோக்கியா மூடியிருக்கிறார்கள். இப்போது 1000 பள்ளிக்கூடங்களை மூடுவதாக இருக்கிறார்கள். இதெல்லாம் வளர்ச்சியா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதுமட்டுமே அல்ல. ஒரே டெவலப்மென்ட் யாகம் நிறைய நடக்கிறது. பால்குடம் நிறைய இருக்கிறது. பால் குடம் எடுக்கிறவனுக்கு ரூ.200 என்று சொல்கிறார்கள். புடவையிலிருந்து மக்களுக்கு டிஸ்டிரிப்யூசன் ரொம்பத் தெளிவாக இருக்கிறது. ஆனால் எல்லா சாமிகளுக்கும் குட்டச்சாமி, நெட்டச்சாமி, சின்னச்சாமி, நொண்டிச்சாமி என்று எல்லா சாமிகளுக்கும், ஆசாமிகளுக்கும் யாகங்கள்மூலமாக நல்ல வருமானம் இருக்கிறது. கடைசியாக குமாரசாமி என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

_இவ்வாறு மதுரையில் செய்தியாளர்களிடையே பேசும்போது தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/97944.html#ixzz3USKVYgEp

தமிழ் ஓவியா said...

இருதரப்பு விவாதங்களை மக்கள் அறிய நிறுத்தப்பட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்புக!

புதிய தலைமுறை நிறுவனத்தில் சரிநிகர் குழுவினர் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 15_- புதிதாக உருவெடுத்துள்ள சரிநிகர் கூட்டு இயக்கத் தின் பிரதிநிதிகள் குழு நேற்று (மார்ச் 14) சென் னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுனத் திற்குச் சென்று, மதவெறி அமைப்பின் தாக்குதலுக்கு உள்ளான அந்த நிறுவனத் தின் பொறுப்பாளர்களை யும், ஊழியர்களையும் சந் தித்தனர். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளும் மனவலிமையற்றவர்களாக மதவாத அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டது அவர்களது பலவீனத் தையே காட்டுகிறது என்று கூறிய அக்குழுவி னர், ஊடக நெறியை உயர்த்திப் பிடிக்கும் வகையில் புதிய தலைமுறை நிறுவனம், நிறுத்திவைத் துள்ள தாலி பெண்ணைப் பெருமைப்படுத்துகிறதா. சிறுமைப்படுத்துகிறதா என்ற விவாதத்தை முழு மையாக ஒளிபரப்ப வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

குழுவினர், நிறுவனத் தின் தலைமைச் செயல் அலுவலர் சியாம் குமார், நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஜென்ராம் ஆகியோரைச் சந்தித்து. சரிநிகர் கூட்டு இயக்கத்தின் சார்பில் ஒரு மைப்பாட்டைத் தெரிவிக் கும் கடிதத்தை அளித்த னர். இந்தச் சந்திப்பில் இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் ச. தமிழ்ச் செல்வன் தலைமையில் பேராசிரியர் அருணன், வழக்குரைஞர் அ.அருள் மொழி, ஓவியா, பதிப் பாளர் ஒளிவண்ணன், தொழிலாளர் ஒருமைப் பாடு பத்திரிகையாளர்கள் ஜவஹர், குமரேஷ். தமு எகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் கமலக் கண்ணன், வட சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஹேமாவதி, வழக்குரைஞர் சினு, பத்திரிகையாளர்கள் மயிலைபாலு, அ. கும ரேசன், இரா.சிந்தன் ஆகி யோர் பங்கேற்றனர். சரி நிகர் சார்பில் அளிக்கப் பட்ட கடித விவரம் வரு மாறு: மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கும், சமுதாய நாகரிக மேம்பாட் டிற்கும் அடிப்படையே கருத்து வெளிப்பாடுதான்.

ஆனால் அண்மை நாட்களாக இந்தியாவில், தமிழகத்தில் கருத்து வெளிப்பாட்டு உரிமைக்கு எதிரான வன்முறைத் தாக் குதல்கள் தொடர்கதை யாகி வருவது, இந்த நாடு எந்தத் திசையில் செல் கிறது என்ற கவலையை ஏற் படுத்துவதாக இருக்கிறது. உலக மகளிர் நாளை யொட்டி மார்ச் 8 அன்று தங்களது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த தாலி பெண்ணை பெருமைப் படுத்துகிறதா, சிறுமைப் படுத்துகிறதா என்ற விவா தத்தை ஒளிபரப்பக்கூடாது என்று இந்து மதவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்ததால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை அறிந்து சிந்தனையாளர் களும், பொதுமக்களும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

இத்தகைய விவாதங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் முற் போக்கான எண்ணங்கள் பரவவே இட்டுச் செல்லும். ஆனால் குறிப்பிட்ட வழக்கத்திற்கு ஆதரவாக வும், எதிராகவும், அந்த விவா தத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய கருத்துகளை மக்கள் தெரிந்துகொள்ளவிடாமல் தடுக்கப்பட்டுவிட்டது. ஆம், இது ஊடகத்தின் கருத்து வெளிப்பாட்டு உரிமையின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மக் களின் கருத்தறியும் உரி மைக்கு எதிரான தாக்குத லுமாகும் என்று சரிநிகர் கூட்டு இயக்கம் கருதுகி றது. புதிய தலைமுறை ஊழியர்கள் இழிவாகப் பேசப்பட்டது, சிலர் தாக்கப்பட்டது, இறுதியாக குண்டுவீச்சு வரையில் நடந்திருப்பது ஆகியவை, குறிப்பிட்ட மதவாதமும், ஆணாதிக்கமும் கலந்த அமைப்புகள் எவ்வித மாற்றுச் சிந்தனைகளும் பரவுவதை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

தமிழ் ஓவியா said...

தங்கள் தரப்பு வாதங் களை மக்களிடையே எடுத் துச் செல்வதற்கு மாறாக, இப்படி வன்முறையின் மூல மாகவும் மத்திய ஆட்சியில் தங்களுக்கு சாதகமான வர்கள் இருக்கிற அதிகார வலிமையின் மூலமாகவும், ஆரோக்கியமான விவா தங்களை முடக்குவது என் பதே அவர்களது கருத்தி யல் பலவீனத்தைத்தான் காட்டுகிறது.அரசமைப்பு சாசனப்படி கருத்துச் சுதந்திரத்தைப் பாது காக்கக் கடமைப்பட்டுள்ள தமிழக அரசு, இத்தகைய ஒடுக்குமுறையாளர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளதாகப் பார்க்கி றோம். இது அந்த சக்திகள் ஊக்கம் பெற வழிவகுத் துள்ளது என்று சுட்டிக் காட்ட விழைகிறோம். புதிய தலைமுறை நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்து மத வாத அமைப்பி னரை சரிநிகர் வன்மை யாகக் கண்டிக்கிறது.

தமிழ் ஓவியா said...

இத்தகைய வன்முறை களைக் கண்டு அஞ்சிடா மல் தொடர்ந்து மக்களுக்கு உண்மைகளை எடுத்து ரைக்கும் ஊடகக் கடமையை புதிய தலைமுறை நிறை வேற்றும் என்று சரிநிகர் நம்புகிறது. அத்தகைய உறுதியான செயல்பாட் டுக்கு சரிநிகர் தனது முழு மையான ஆதரவைத் தெரி வித்துக்கொள்கிறது.புதிய தலைமுறை ஆசிரியர் குழு வினர், செய்தியாளர்கள், நிர்வாகப்பிரிவினர் உள் ளிட்ட அனைத்து ஊழியர் களுடனும், சரிநிகர், தனது ஒருமைப்பாட்டைப் பகிர்ந்து கொள்கிறது. ஊடகவிய லாளர்களின் குடும்பத்தின ருக்கு அச்சத்தையும், கவ லையையும், ஏற்படுத்தி முடக்க முயல்வோரின் அநாகரிகத்தையும் கருத்தி யல் பலவீனத்தையும், தமி ழக மக்கள் புரிந்துகொண்டு நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடி தத்தில் கூறப்பட்டுள்ளது, குழுவினருக்கு நிறுவனத் தின் சார்பில் நன்றி தெரி வித்த சியாம் குமார், மக் களிடையே தொடர்ந்து விவாதங்களை எடுத்துச் செல்வதில் உறுதியாக நிற்போம் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/97946.html#ixzz3USL4QtH0

தமிழ் ஓவியா said...

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழா நெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப் பது இந்த வசம்பைத் தான்.

கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப் பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்று நோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப் பான் என்று கூறப்படுகிறது.

சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத் தலாம்.

வசம்பை தூள் செய்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று தேக்கரண்டி கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.


Read more: http://viduthalai.in/page2/97855.html#ixzz3USLcjD74

தமிழ் ஓவியா said...

கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு
இந்து முன்னணியே கேட்கும் கேள்விகள்

26.1.2015 அன்று வைத்தியநாத சுவாமி ஆலய குடமுழுக்கு நடை பெற்றது. குடமுழுக்குக்கு பொருளுதவி பண உதவி செய்த ஊர் பிரமுகர்கள் மற்றும் கிராம ஆன்மீகவாதிகள் அளித்த தொகைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு முறையாக ரசீது கொடுக்கப்பட்டதா?

செயல் அலுவலரால் ஏற் படுத்தப்பட்ட திருப்பணி குழு எத் தனை? எந்த கட்சி தலைமை வகித் தனர்? அவர்கள் வசூல் செய்த தொகைக்கு கணக்கு உண்டா?

எந்தெந்த உபயதாரர்கள், ஒப்பந் ததாரர்களிடம் ஒப்பந்தம் போடப் பட்டது? யார் யார் எந்தெந்த வேலையை செய்தனர்?
எந்தெந்த வேலையை யார் யார் தனியாக செய்து முடித்தனர் என்ற விபரம்.

வைத்தியநாத சுவாமி நில குத்தகை தாரர்களிடம் ஏக்கருக்கு ரூ.15,000/- வசூல் செய்யப்பட்டது. எவ்வளவு வசூல் செய்யப்பட்டது. யாருக்கும் ரசீது கொடுக்காதது ஏன்?

எத்தனை கோடி வசூல் செய்யப்பட் டது? எத்தனை கோடி இருப்பு உள்ளது?

அர்ச்சனை சீட்டு ரூ.2 கொடுத்தால் தான் அர்ச்சனை செய்வேன் என்று கூறும்போது, லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது கொடுக் காதது ஏன்?

பல தரப்பு மக்களிடம் கட்டாய வசூல் செய்த நீங்கள் ஒருவருக்குகூட ரசீது கொடுக்காதது ஏன்? கொள்ளை யர்களின் கூடாரமாக வைத்தியநாத சுவாமி ஆலயம் போவதற்கு காரணம் இந்து அறநிலைய துறையா? அரசியல் வாதிகளா? திருப்பணிக் குழுவா?
கணக்கு காட்டுவதற்கு துணிவு உண்டா?

திருக்குளத்தைப் பற்றியும் தேரடியைப் பற்றியும் ஊர் முக்கியஸ் தர்கள், அரசியல்வாதிகள்அக்கறை கொள்ளாதது ஏன்?
யாக சாலையில் ஒரு குடும்பத்திற்கு ரூ.7,000/- கொடுத்தால்தான் அனுமதி என்று கூறினீர்கள் எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? எவ்வளவு செலவு? எவ்வளவு இருப்பு?

அரசுப் பள்ளி ஆசிரியர்களை வைத்து கோவிலில் உட்கார்ந்து பொது வசூல் என்று வசூலித்தனர். எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? எந்த வங்கியில் யார் பேருக்கு போடப்பட்டது? அந்த வங்கி இருப்பு செயல் அலுவலர் உடையதா? இந்து அறநிலைய துறை யுடையதா? அரசியல்வாதியுடையதா? திருப்பணிக் குழுவுடையதா?

கோவில் சுற்று பிரகாரத்தில் உள்ள தேக்கு மரம், தென்னை மரம், நாவல் மரம், வேப்ப மரம், அத்தி மரம், இலவ மரம், வாகை மரங்களை வெட்டியதற்கு சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெற்றீர்களா? எந்த தேதியில் ஏலம் விடப்பட்டது? யாருக்கு ஏலம் விடப்பட்டது? யார் ஏலம் கூறினர்?

பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
செலவு கணக்கை கூறவில்லை என்றால் மண்டல பூஜை அன்று இந்து முன்னணி சார்பாக அனைத்து கட்சி மற்றும் பொது மக்களை ஒன்று திரட்டி 18.03.2015 புதன்கிழமை அன்று காலை 8 மணியளவில் அடையாள உண்ணவிரதம் நடைபெறும்.

நன்கொடையாக தங்கம், வெள்ளி வழங்கியவர்கள் விவரங்களை உடனே வெளியிட வேண்டும்.
2005 தகவல் அறியும் உரிமை சட் டத்தின்கீழ் நன்கொடை வழங்கிய வர்கள் மற்றும் பொது மக்கள் தகவல் பெற உரிமை உண்டு.

சர்வே எண் 122, 123 தேரடி தனியார் நபரிடம் பட்டா கொடுத்தது, சன்மானம் பெற்றுக் கொண்ட அறநிலையத்துறைக்கும், வருவாய் துறைக்கும் கூட்டுக் கொள்ளை நடந்தது எப்படி?

தகவல்: திட்டக்குடி அறிவு

Read more: http://viduthalai.in/page3/97856.html#ixzz3USMJrOcO

தமிழ் ஓவியா said...

மோடிக்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை

பாஜகவை சேர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் காலத்தில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய்களை நன் கொடையாக வாரி இறைத்திருக்கின்றன. இந்தியாவில் தேர்தல் நேரத்தில் அரசி யல் கட்சிகள் நன்கொடை பெறுவது வழக்கம்.

அந்த வகையில் மக்களிடம் இருந்தும், கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன் கொடையை திரட்டுகின்றன. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்போ தும் ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் நேரத்தில் அந்த நிறுவனங்களிடம் பல நூறு கோடிக் கணக்கான ரூபாயை நன்கொடையாய் பெற்றிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

கடந்த தில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெளிநாடுகளில் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்தும் கோடி கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இதை பெரிய குற்றச்சாட்டாக தெரிவித்தார்.

ஆனால் அவருடைய பாரதிய ஜனதா கட்சியே தில்லி சட்டசபை தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது இப்போது தெரியவந்துள்ளது. டில்லி தேர்தலை யொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாரதீய ஜனதா கட்சி மொத் தம் ரூ.60.78 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை யில் கடந்த 2013_-2014ஆ-ம் ஆண்டில் மொத்த தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாரதிய ஜனதா கட்சி 69 சதவிகிதம் நன்கொடை பெற்றுள் ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங் களிடம் இருந்து நன்கொடை பெற்ற கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
-பாரதீய ஜனதா கட்சி கடந்த 2012-_13-ஆம் நிதி ஆண்டில் ரூ.83.19 கோடி நன்கொடை பெற்றது. இது கடந்த 2013-_2014-ஆம் ஆண்டில் ரூ.87.67 கோடியாக வும், 2014_-2015-ம் ஆண்டில் 170.86 கோடியாக உயர்ந்து விட்டது.

அதாவது பாரதிய ஜனதாவின் நன்கொடை வசூல் 2012_-2013ஆ-ம் ஆண்டை விட 2014-_2015-ஆம் ஆண்டில் இரு மடங்கு மேல் உயர்ந்திருக் கிறது. பார்தி குழுமத்தின் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை பாரதிய ஜனதா கட்சிக்கு 3 தடவையாக கடந்த 2012_-2013ஆ-ம் ஆண்டில் ரூ.41.37 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது.

இதேபோல் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் 36.50 கோடியை கொடுத்து உள்ளது. சரத் பவாரின் தேசியவாத கட்சிக்கு சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் அளித்து உள்ளது.

தேசிய அரசியல் கட்சிகள் கடந்த 2013-_2014ஆ-ம் ஆண்டில் மொத்தம் ரூ. 247 கோடியை நன் கொடையாக பெற்றுள்ளன. இது கடந்த 2012_-2013-ஆம் ஆண்டை விட 158 சதவிகிதம் அதிக மாகும்.

மாநிலம் வாரியாக பார்த்தாலும் பாரதீய ஜனதா கட்சி தான் அதிக நன் கொடை வசூலித்தது தெரியவந்துள் ளது. குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ரூ.23.25 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ரூ. 22.24 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்து உள்ளது.

இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்த நன்கொடைகள் மட்டுமே ஆகும். அதானி குழுமம் போன்ற பாஜக மற்றும் மோடி விசுவாச கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரங்கோடிகளை வரி இறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரதிபல னாகவே, தற்போது நரேந்திர மோடி அரசு மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி, கார்ப்பரேட் நலனை முன்நிறுத்தி வருகிறார்.

மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங் களின் தலைமை செயல் அலுவலர் போன்று செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களையும் மோடியின் மீது சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பூடான், நேபாளம், பிரேசில், பல்கேரியா, அமெ ரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் மறைமுகப் போக்கை கடைப்பிடிக்கின்றன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page3/97858.html#ixzz3USMXYfNp

தமிழ் ஓவியா said...

இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவது ஏன்?

மயிலை சீனி வேங்கடசாமி

இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். பஞ்சகவ்வியம் என்பதில் பசுவின் மலமாகிய சாணத் தையும், மூத்திரமாகிய கோமயத் (கோமூத்திரம்) தையும் கலந்து சாப்பிடு கிறார்கள். பசு மூத்திரத்தை கையில் பிடித்து தலைமேல் தெளித்துக் கொள் ளுகிறார்கள், பசுவைக் குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் பூசி காலில்விழுந்து கும்பிடுகிறார்கள்.

மாமிசம் சாப்பிடுகிற இந்துக்கள்கூட, பசு அல்லது மாட்டு மாமிசத்தைச் சாப்பிடக் கூடாதென்றும் அது மகாபாவம் என்றும் சொல்லு கிறார்கள் பசுவுக்கு, இந்துக்கள் இவ் வளவு மகத்துவம் கொடுக்க வேண்டிய தன் காரணம் என்ன? இந்தியாவைப் பற்றி சிலேட்டர் (Slater) என்பவர் ஒரு, புத்தகம் எழுதியிருக்கிறார், அதில் இவ்விஷயத்தை எழுதியிருக்கிறார், அது வருமாறு:

தமிழ் ஓவியா said...

மிகப் பழைய காலத்தில் இந்தியா வில் மாடு (பசு, எருது) கிடையாது. அவை, இந்தியாவுக்கு வெளியேயுள்ள அயல்நாடுகளில் இருந்து இந்தியாவுக் குக் கொண்டு வரப்பட்டன. அப்படி இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட மாடுகள் அப்பொழுது மிகச் சிறு தொகையா யிருந்தபடியால், மாடுகளின் தொகையை மிகுதிப்படுத்துவதற்காக மாட்டைக் கொல்லக் கூடாது என்று சட்டம் செய்தார்கள்.

அந்தச் சட்டத்தை தெய்வ சம்பந்தமாகவும் சமய சம்பந்த மாகவும் செய்து, விட்டால் ஒருவரும் மாட்டைக் கொல்ல மாட்டார்கள் என்று கருதி மாடு, தெய்வ சம்பந்தமானதென் றும் அதைக் கொல்லுவது மகாபாவம் என்றும் எழுதி வைத்தார்கள் என்று இவ்வித கருத்துப்படும்படி அவர்அப்புத் தகத்தில் எழுதியிருக்கிறார்.

ஆராய்ச்சிக்கு இது பொருத்த மாகத்தான் தோன்றுகிறது. எல்லா ஊர்களிலும், முற்காலத்தில் எல்லாவித மிருகம், பறவை, செடிகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆதிகாலத்தில் அதா வது அய்ரோப்பியர் போவதற்கு முன், அமெரிக்கா கண்டத்தில் குதிரைகளே கிடையாது, ஆதி காலத்தில் இந்தியா விலுங்கூட குதிரைகள் கிடையாது.

குதிரை இந்தியாவுக்குச் சொந்தமான மிருகம் அல்ல. அவ்விதமே பசுவும் ஆடும் ஆஸ்திரேலியா கண்டத்தில் ஆதி காலத்தில் கிடையாது. இந்தியா வை எடுத்துக் கொண்டால், குதிரை, ஒட்டகம், வான்கோழி, ஜின் கோழி முதலிய பிராணிகள் இந்தியாவில் பண் டைக் காலத்தில் கிடையாது.

இப்பொ ழுது விறகுக்காக உபயோகப்படும் சவுக்கு மரம், குட்டிப் பலா மரம், டிவிடிவி மரம், கொய்யா மரம், சீத்தாப்பழம் (சீதப்பழம்) மரம், அன்னாசி, பப்பாளி, ஆரஞ்சு, நிலக்கடலை, இங்கிலீஷ் காய்கறிகள், மர வள்ளிக் கிழங்கு முதலியவையெல்லாம் அந்நிய தேசத்திலிருந்து நூதனமாக நமது நாட்டிற்குக் கொண்டு வரப்பட் டவை.

இப்பொழுது நாம் தினந்தோறும் சாப்பாட்டில் உபயோகித்து வருகிற மிளகாயும் உருளைக் கிழங்கும் அன்னிய நாட்டுப் பொருள்களே தவிர இந்தியாவின் சொந்தப் பொருள் அல்ல. சில நூற்றாண்டுகளுக்குமுன் இருந்த நமது மூதாதைகளுக்கு இந்தப் பொருள் களைப்பற்றி ஒன்றும் தெரியாது. சரித்திரத்தையொட்டி ஆராய்ச்சி செய்வோருக்கு இப்பொருள்கள் எல்லாம் அயல் நாட்டுப் பொருள்கள் என்றும், பின்னர்தான் நமது நாட்டில் அவை கொண்டு வரப்பட்டன என்றும் தெள்ளிதில் விளங்கும்.

இந்தப் பொருள்களைப் போலவே மாடு (பசுவும் எருதும்) அயல்நாட் டிற்குச் சொந்தமான மிருகமாயிருந் திருக்கலாம். பிறகு இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம். பாலும், அதன் மூலமாய் தயிர், நெய், மோர் கிடைப்பதால் பசு அதிக உபயோக முள்ள மிருகம் என்று கண்ட அக் காலத்து மக்கள் பசுவைக் கொல்லக் கூடாது என்பதற்காக பசுவின் உடம் பில் தெய்வங்கள் வாழ்கின்றன என்றும், பசுவைக் கும்பிட வேண்டுமென்றும், பசுவைக் கொல்வது பாவம் என்றும், பசு மாமிசம் சாப்பிடுவது மகாபாவம் என்றும் எழுதி வைத்தனர்.

ஆனால், எருமை இந்தியாவின் சொந்த மிருகம் என்று நினைக்க இட முண்டு. எப்படி என்றால், காளிகோயில் களில் எருமைகளைப் பலி கொடுத்து வந்தார்கள்; வருகிறார்கள். ஆனால், பசுவை பலி கொடுப்பதில்லை.

இதி லிருந்து என்ன தெரிகிறதென்றால், எருமைகள் இந்தியாவின் சொந்த மிருகமாய் ஏராளமாயிருந்தபடியால் அதைக் கொல்வதைத் தடுக்க சட்டம் செய்யவில்லை என்றும், பசு இந்தி யாவில் நூதனமாகக் கொண்டு வரப் பட்ட அயல்நாட்டு மிருகம் ஆகையால், அதை விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு பசுவைக் கொல்லக் கூடா தென்று பண்டைக் காலத்தில் சட்டம் செய்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

இந்தச் சட்டம் ஏற்படுத்திய தனால்தான், மாட்டு மாமிசம் சாப்பிட ஆசைப்பட்ட பார்ப்பனர், யாகம் என்று சொல்லி சாமிகளின் பேரால் மாட்டு மாமிசம் புசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள் போலும்.

மாட்டின் அபிவிருத்தியை உத்தே சித்து செய்யப்பட்ட, சட்டம் நாளடை வில் எருதை சிவன் வாகனமாகவும் பசுவைக், காமதேனாகவும், தெய்வப் பிறப்பாகவும் ஜனங்களை நம்பும்படிச் செய்து விட்டதோடு, எருதின் சாணத்தைச் சுட்டு நெற்றியில் பூசிக் கொள்ளவும் பசுவின் சாணத்தையும் மூத்திரத்தையும் நெய் பாலுடன் கலந்து நக்கிக் குடிக்கவும் ஏற்பட்டு விட்டது.

அன்றியும், பசுவைத் தெய்வமாகக் கொண் டாடும் இந்த மூட நம்பிக்கைதான் இந்து முஸ்லீம் சச்சரவைப் பல இடங் களில் உண்டாக்குகிற்று.

இப்போது, ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஒருவர், பசுவைக் கொல்வது ஆட்டைக் கொல்வது போல் பாவிக்க வேண்டும் என்றும் பசுவைக் கொல்வது மத சம்பந்தமானதாகக் கருதக் கூடா தென்றும் சொல்லுகிறார். அவருக்கு இப்போதாவது பகுத்தறிவு உதயமா யிருப்பதற்காக மகிழ்கிறோம்.

(குடிஅரசு 24.4.1932 பக்கம் 7)

Read more: http://viduthalai.in/page4/97859.html#ixzz3USMp0WQq

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையாரும் சாவித்திரிபாய் புலேயும்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 -_ 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் கவிஞர் ஆவார். இவர் தம் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவியவர்கள் ஆவர்.

வாழ்க்கை: இவர் 1831இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர்தம் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார்.

ஜோதிராவ் புலே அவர்கள் தமது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு அந்தண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

கல்விப் பணிகள்: ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது.

பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

பிற பணிகள்: விதவைப் பெண்களின் தலையை மொட்டை யடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம்ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதை களான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

கவிதை நூல்: 1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத் தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள். கவிதை வரிகளில் சில: கல்வி கற்றுக் கொள். போ.

சுய சார்புள்ளவராக சுறுசுறுப்பானவராக இருங்கள்: வேலை செய்யுங்கள் அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள் . அறிவில்லாதிருந்தால் இழந்து நிற்போம் அனைத்தையும் . அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.

சும்மா இராதீர்கள். போய் இனியேனும் கல்வியைப் பெறுங்கள் ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர் அனைவரது துன்பங்களையும் போக்குங்கள்.

படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது ஒரு பொன்னான நேரம் எனவே படியுங்கள்!

குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்ததிலும் கல்விப் பணியில் சிறப்பாக ஈடுபட்டதிலும் சாவித்திரிபாய் புலே _- அன்னை மணியம்மையார் அவர்களை ஒத்திருப்பதைக் காண முடிகிறது. ஒருவருடைய பிறந்த நாள் (மார்ச் 10) மற்றொருவருடைய மறைந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page5/97861.html#ixzz3USNEE8D7

தமிழ் ஓவியா said...

என்று மறந்தோம்?

அறுபதைத் தொடுமுன்
அறுந்து விட்ட பம்பரம்
இளமைத் தென்றல் தேனை
எட்டி உதைத்த புத்தகம்

சுயமரியாதை ஏணியில் ஏறி
சூரியனிடம் வந்து சேர்ந்த நட்சத்திரம்
அந்தச் சூரிய வெப்பத்தில்
சுடப்பட்ட வைரக் கல்!

பெரும் பொறுப்பு மலையை
பொறுப்போடு சுமந்த தோள்!

ஏழை விட்டுப் பிள்ளைகளை
தோள் தொட்டியில் தாலாட்டிய அன்னை
எளிமை என்ற அணிகலனை

இயல்பாய்ப் பெற்ற வசீகரம்
அமைதியான தோற்றம் - அதற்குள்
அடங்கியிருக்கும் புலியின் சீற்றம்!

போராட்டப் பெருங் குணம்
போர்ப்பாட்டின் புதுமணம்!

நெருக்கடிக்கு நெருக்கடி
கொடுக்கும் கொள்கைச் சவுக்கடி
ஆழமான சிந்தனைக் கடல்
அதில் மூழ்கியிருக்கும் முழு உடல்!

தலைவரைக் காத்திடவே
தன்னலம் துறந்துள்ள தற்கொலை!

எங்கள் அன்னையே ஈடில்லா
மணியம்மையே!

என்று மறந்தோம்
உங்களை நினைப்பதற்கு?

- கவிஞர் கலி. பூங்குன்றன்
(மார்ச்சு 16 - அன்னை மணியம்மையார் நினைவு நாள் (1978).


Read more: http://viduthalai.in/page5/97862.html#ixzz3USNQd1po

தமிழ் ஓவியா said...

மார்ச்சு 8 மகளிர் நாள் சிந்தனை நினைவாக
ஹிட்லரும், சங்கராச்சாரியாரும், மடாதிபதிகளும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவது ஏன்?

ஆரிய கலாச்சாரத்தை நிலை நாட்டும் வெறி கொண் டிருந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் சமூகத்தின் தூய்மையைக் காப்பாற்றும் வகையாக பெண்களை கிந்தர், கூஹே, கிர்ஹே (குழந்தைகள், சமையல், சர்ச்) ஆகியவற் றுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முழங்கி னான். அதாவது, படி தாண்டா பத்தினிகளினாலேயே சமூகத்தின் பண்பாடு காப்பாற்றப்படும்.

படி தாண்டிவிட்டால், பெண்களின் ஒழுக்கம் கெடும் -_ மதத்தின் பெயரில், அரசியலின் பெயரில் நடக்கும் அராஜ கத்தாலும் எதேச்சாதிகாரத்தாலும் கெடாத சமூகம், பெண்கள் வெளியில் சென்றால் கெட்டுப் போகும்.

ஹிட்லர் காலம்தான் ஆச்சே என்று நினைக்காதீர்கள். இதெல்லாம் நம்ம ஊர் ஆள் ஹிட்லர் சாயலில் சொன் னது. ஒருவிசுவாசப் படையைக் கொண்ட காஞ்சி மடத்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சொல்லி யிருக்கிறார்.

பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. பணக் கஷ்டத்தால் தான் வேலைக்குச் செல்கின்றனர் என்றால் வீட்டிலிருந்தபடியே சில வேலைகள் செய்து சம்பாதிக்கலாம் (எப்படி? அப்பளம் இட்டா?) வேலைக் குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம் பேர்தான் ஒழுக்கமாக இருக் கின்றனர். நமது பாரம்பர்யத்தைக் கட்டிக் காக்கின்றனர்.

காஞ்சி மடத்தில் இப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஆய்வுகள் செய்வதில்தான் நேரம் செலவழிகிறது என்று தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்பு விதவைகளை தரிசுநிலம் என்று சுவாமிகள் சொன்னார். இப்போது வேலைக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார். எப்படி வந்தது இந்தக் கணக்கு? எப்படி அதை நிரூபிப்பார் சாமியார்?

ஆண் களில் எத்தனை சதவீதம் ஒழுக்கமான வர்களாம்? அதற்கு ஆய்வு உண்டா அல்லது ஆண்களுக்கு ஒழுக்கமே தேவையில்லை என்ற மனுதர்ம ஸ்மிரு திகளை ஆதாரமாக்கிக் கொள்கிறாரா? சங்கர மடம் நடத்தும் ஒரு பள்ளியில் ஒரு ஆண் ஆசிரியரின் ஒழுக்கத்தைப் பற்றி புகார் வந்தபோது ஆசிரியருக்கு வக்காலத்து பேசினவர்தானே?

ஸ்மிரு திகளில் பெண்களை அடிமைப்படுத்தும் படியான, கேவலப்படுத்தும்படியான பகுதிகளை அகற்றி நல்ல அறிஞர் களைக் கொண்டு முற்போக்குச் சிந் தனைகளுடன் மறுபடி எழுதப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், இந்த வேலையை நிச்சயமாக மடாதிபதிகளிடம் விடக் கூடாது என்றும் சொன்னார்.

தெரி யாமல் தான் கேட்கிறேன், இந்த சங்கர மடங்கள் எந்த யுகத்தில் புதைந்திருக் கின்றன? ஆணுக்குச் சற்றும் இளைப் பில்லை என்றே இந்த வையகத்தை ஆள வந்தோம் என்ற புதுயுகப் பாய்ச்சலோடு, தரிசனத்தோடு புதுமைப் பெண்ணை வரவேற் றானே 50 ஆண்டுகளுக்கு முன், பாரதி என்ற கவிஞன் அவனைப்பற்றி சங்கர மடத்துக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

கற்பு நிலை யென்று சொல்ல வந்தார். இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்ற வார்த்தை களின் சாராம்சமும் இவர்களுக்குப் புரியாது. முற்போக்குச் சிந்தனைகள் இவர் களுடைய எதேச்சாதிகாரத்துக்கு ஒத்து வராததாலேயே பண்பாடு, கலாச்சாரம் என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லி பலவீனமானவர்களின் சிந்தையைக் குழப்புகிறார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் கஷ்டங்களை உணராமல் சக்தி வாய்ந்த சாதனமான தொலைக் காட்சி வழியாக மடத்தின் தலைவர் ஒருவர் இப்படிச் சொல்வது எத்தனை ஆபத்தான விஷயம்? அலுவலகத்திற்குச் செல்லும் மத்திய வகுப்புப் பெண்கள் கையில் மட்டுமே நமது பண்பாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதாக சுவாமிகள் நினைப்பதும் தெரிகிறது.

பணத் தேவைக்காக மட்டுமே பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்று நினைப்பதும் மகா கேலிக் கூத்தாக இருக்கிறது.
சுவாமிகளுக்கு உடனடித் தேவை சரித்திரத்தில், சமூகவியலில் டியூஷன். அது கிடைக்கும் வரை வாயை மூடிக் கொண்டு இருக்கட்டும்.

பெண் பாவம் பொல்லாதது.
- வாஸந்தி
நன்றி: இந்தியா டுடே

Read more: http://viduthalai.in/page7/97864.html#ixzz3USNngJrj

தமிழ் ஓவியா said...

வளர்கிறார்கள் கோடீசுவரர்கள்

போர்ப்ஸ் பத்திரிகையின் தர வரிசைப்படி அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் பெரும் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 56 ஆக இருந்தது; இந்த ஆண்டு 90 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

சீனா மற்றும் ஜெர்மனி முறையே 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன.போர்ப்ஸ் பத்திரிகை ஆய்வின் படி இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில், 90 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 29,400 கோடி டாலராகும். சென்ற ஆண்டில் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 56 ஆகவும், அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 19,150 கோடி டாலராகவும் இருந்தது.உலக அளவில் மொத்தம் 1,826 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 6.4 லட்சம் கோடி டாலரிலிருந்து 7.05 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 536 கோடீஸ்வரர்கள் உள்ளனர். சீனாவில் 213 கோடீஸ்வரர்களும், ஜெர்மனியில் 103 கோடீஸ்வரர்களும் உள்ளனர்.

பிரிக் நாடுகளில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா 213 கோடீஸ்வரர்கள் மற்றும் 56,500 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 90 கோடீஸ்வரர்கள் மற்றும் 29,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பிரேசில் (54 பேர்-18,100 கோடி டாலர் மற்றும் ரஷ்யா (88 பேர்- 33,700 கோடி டாலர்) ஆகிய நாடுகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

ரஷ்யாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 111 லிருந்து 88 ஆக குறைந்துள்ளது. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5 இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டில் 2 இந்தியப் பெண்கள் இடம் பெற்றிருந் தனர்.

உலக அளவில் 100 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page7/97865.html#ixzz3USNw2KT1

தமிழ் ஓவியா said...

கடவுளுக்குப் பக்தர்கள் கடிதம்

கர்நாடகா மாநிலத் தில் உள்ள கோயிலின் உண்டியலில் காணிக்கை என்கிற பெயரில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக பணத்தைப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள் ளனர்.

ஆனால், கர்நா டகா மாநிலத்தில் உள்ள நஞ்சுண்டேசு வரா (சிவன்) கோயி லிலோ காணிக்கைகளு டன் தங்கள் வேண்டுதல், கோரிக்கை களையும் எழுதிப் போட்டு வருகின் றனராம். உண்டியலில் போடப்படும் பணத் தின்மீது, நீதி கிடைப்பதில் தளர்ச்சியுற்ற பக்தர்கள், தங்களின் கோரிக்கைகளை எழுதிப் போட்டு விடுகின்ற நிலை உள்ளது.

மைசூரு அருகில் உள்ள நஞ்சன்குட் பகுதியில் சிறீ கண்டேசுவரா கோயில் உள்ளது. இக்கோயில் அரசால் நிர்வாகம் செய்யப்பட்டுவரும் கோயிலாகவும் உள்ளது.

கோயிலில் காணிக்கைகளைப் போடுவதற்கு உண்டியல், நன்கொடை களை இடுவதற்கு நன்கொடைப் பெட்டி என்று உள்ளது. மாதந்தோறும் பெட்டியைத் திறந்து, அதில் வழக்கமாக பெருமளவில் கடிதங்கள் பக்தர்களால் போடப்பட்டிருக்கும். நஞ்சுண்டேசுவரா வுக்கு (சிவன்) பக்தர்கள் தங்கள் கோரிக் கைகளை எழுதிப் போட்டுவிடுகிறார்கள்.

கோயில் நிர்வாகக்குழுவின் தலைவ ராக உள்ள கே.எஸ். மோகன். கூறும் போது, மூன்று மாதங்களுககு முன்பாக பக்தர்களால் போடப்படும் கடிதங்களைப் தீர்வு செய்வதற்காகவே பதிவேடு பராமரிக்கப்பட்டுவருவதாகவும் கூறுகிறார். சில நாள்களுக்கு முன்பாக பாஸ்போர்ட் அளவில் உள்ள படத்தில் நீண்ட காலம் மழிக்கப்படாத தாடியுடன் உள்ள ஒருவர் படம் இருந்தது.

அவர் தன்னுடைய படத்துடன் நஞ்சுண்டேசுவ ராவுக்கு(சிவன்) அளித்துள்ள கடிதத்தில் கோரிக்கையாக தனக்கு அரசின் உதவியுடன் வீடு கிடைப்பதில் பிரச் சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள் ளார். குடிசையிலிருந்து மாற்றம் செய்து ஒருங்கிணைந்த வீட்டு வசதித் திட் டத்தில் வீடு பெறுவதற்காக அவர் பெயர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...

ஆனால், பயனாளிகள் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு தேசியக் கட்சியைச் சார்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினராக இருக்கின்ற ஒருவர் பயனாளிகள் பட்டியலில் பெயரை உறுதிசெய்வதற்காக ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை கையூட்டாக பணம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து குறிப்பிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினரிடம் கேட்கும்போது, அது எனக்கு உரிய குடியிருப்புப் பகுதி, நான் விரும்பியபடி செய்வேன் என்று கூறியுள்ளார்.

படத்தில் உள்ளபடி, பணத்தாள்களில் கிறுக்கியபடி பக்தர்கள் தங்கள் கோரிக் கையை பணத்தாள்முழுவதுமாக எழுதி வைக்கின்றனர் என கோயில் நிர்வாகத் தரப்பினர் கூறுகின்றனர்.

மேலும் ஒரு கடிதம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள நாகமங்களா என்கிற பகுதியைச் சார்ந்தவர் எச்.வெங் கடேஷ் என்பவரால் எழுதப்பட்டு உண்டியலில் போடப்பட்டுள்ளது. அவர் கோயில் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் 1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கோயில் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.

ஹசன் மாவட்டக் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ச்சியாக ஓராண்டுக்குப் பிறகும் காவல்துறையின் விசாரணை மற்றும நடவடிக்கையை எதிர்பார்த்து முறை யீடுகள் செய்தும் எவ்விதத்திலும் நட வடிக்கை எடுக்கப்பட வில்லை.

இதுகுறித்து அவர் கோயில் செய லாளர் பெயரில் கடிதத்தை எழுதி உண் டியலில் போட்டுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறும்போது, என்னுடைய வலிகள் என்னை விழுங்கிவிட்டன. பெரும் மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மயக்கம் ஏற்படுகிறது. கண், காதுகளில் மிகுதியான வலி இருந்து கொண்டே இருக்கிறது.

கடிதத்தின் இறுதியில், நான் மேற் கூறிய அனைத்தும் உண்மை. கடவுளே, உன்னைக் கைகூப்பி இறைஞ்சுகின்றேன். குறைந்தபட்சம் எனக்கு நீதியையாவது கொடுத்துவிடு என்று முடித்துள்ளார்.

இதுபோன்று எழுதும்போது உண்மை குறித்து எவரும் கண்காணிப்பது கிடையாது. மைசூரு மாவட்ட துணை ஆணையர் சி.ஷிகா கூறும்போது, இதுபோன்ற முறைகேடுகள்குறித்து எவ்விதப் புகாரும் என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வில்லை. முறையாக புகார் தெரிவித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும்.

கோயிலில் எழுதப்பட்ட கடிதத்தில் எழுதியவர் கையொப்பம் இடவில்லை. அதேபோல், வீடு கோரிய கோரிக்கையில் வீடு கிடைப்பதில் நீதிகிடைத்தால், நஞ்சுண்டேசுவரராவுக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டி ருக்கிறார்.

சட்டத்தின்படி கிடைக்க வேண்டிய வர்களுக்கு வீடுகள் கிடைத்து, அந்த மோசமான ஆளுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டால், 101 தேங்காய்களை உடைப்பேன் என்று எழுதியுள்ளார்.

அந்தக் கோயிலில் வேண்டுதல்கள் எழுதப்பட்டு உண்டியலில் போடப்படு வதும், அக்கோரிக்கைகளை கோயில் நிர்வாகம் பதிவேடு பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நேரடியாக வேண்டு தல்களை, கடவுளிடம் கேட்டால் நிறைவேறாது என்று கோரிக்கைகளை விவரமாக எழுதும் நிலையில் பக்தர்கள் உள்ளனர்.
குறிப்பு: எழுதி என்ன பயன்? பலன் சுழியம்தான்!

_நியூஸ்மினிட்.காம்

Read more: http://viduthalai.in/page8/97868.html#ixzz3USOKGz2U

Unknown said...

நம் நாட்டில் கோடீசுவரர்களின் வளிர்ச்சி தான் மிக மிக அதிகம்...ஏழை இன்னும் ஏழையாகி கொண்டே தான் போய் கொண்டிருக்கிறான்...

மலர்
https://play.google.com/store/apps/details?id=com.aotsinc.app.android.wayofcross

தமிழ் ஓவியா said...

புருஜ் புருஷஜ்ஞ


இதைப் படிக்கும் பொழுதே இது என்ன புதுச் சொல்? புரியவில் லையே என்ற குழப்பம் வரத்தான் செய்யும். இது ஒரு சமஸ்கிருத சொல். இதன் பொருள்: மனித னைக் கொன்று நடத்தப் படும் யாகம் என்பதாகும்.

மனுசனைக் கொன்று யாகமா? இது என்னடா கொடுமை என்று திகைக்க வேண்டாம். ஆரியப் பார்ப்பனக் கலாச்சாரத்தில் காட்டு விலங்காண்டித்தனம் என்பது சர்வ சாதாரணம்.

மனிதனையே கொன்று யாகம் நடத்திய கூட்டம் தான் - பசுவதை பற்றிக் கண்ணீர் வடிக் கிறது.

மனிதர்களைக் கொன்று யாகம் நடத் தியதற்கு ஏதாவது ஆதா ரம் உண்டா? என்ற கேள்வி எழலாம். ஆதார மின்றி என்றைக்காவது விடுதலை எழுதிய துண்டா?

யஜுர் வேதம் என் பதே முழுக்க முழுக்க யாகம் பற்றிய தாண்ட வம்தான். யஜூர் வேதம் என்னென்ன யாகங்கள் - எந்தெந்த உயிர்களைக் கொன்று நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டிய லேயே தந்துள்ளது. இதில் 30 வகை யாகங்கள் தரப்பட்டுள்ளன. அதில் 11ஆவது இடத்தில் இடம் பெற்றிருப்பதுதான் மனிதர்களைக் கொன்று நடத்தும் புருஷ ஜ்ஞ யாகமாகும்.

அரிச்சந்திரன் என்கிற அரசன் புத்திரப் பேறில் லாது வருந்திக் கொண் டிருக்கும்போது வருண தேவனின் கட்டளைக் கிணங்கி அஜீகர்த்த முனிவரின் புத்திரனான சுன:சேபன் என்பவனை விலைக்கு வாங்கி அவ னைக் கொன்று நர மேத யாகம் பண்ணத் தொடங்கியது ரிக் வேதத் தில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.

பசுவைக் கொல் லுவதா என்று பதை பதைக்கும் பார்ப்பனக் கூட்டம் யஜுர் வேதத் தில் கூறப்படும் கோண வம் என்னும் யாகத்தில் பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம் என்று கூறப்பட் டுள்ளதே!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரே கலாச்சாரம் பேசும் இந்துத்துவவாதிகளுக்கு ஒரு கேள்வி உண்டு. வங்காளத்துப் பார்ப்பனர் களுக்கு முக்கிய உணவு மீன்தானே இன்றைக் கும்? பார்ப்பனர்களுக் குள் கூட ஒரே கலாச் சாரம் - இல்லையே!

சிவன் கோயில் படையல்களை வைஷ் ணவன் சாப்பிடுவ துண்டா, சொல்லுங்கள் பார்க்கலாம். கால ஓட்டத் தில் எத்தனையோ கலாச் சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போயின என்பதுதானே உண்மை. எத்தனைப் பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு அலை கிறார்கள் - சொல்லட்டும் - பார்க்கலாம்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/97977.html#ixzz3UYdDf7nR

தமிழ் ஓவியா said...

புருஜ் புருஷஜ்ஞ


இதைப் படிக்கும் பொழுதே இது என்ன புதுச் சொல்? புரியவில் லையே என்ற குழப்பம் வரத்தான் செய்யும். இது ஒரு சமஸ்கிருத சொல். இதன் பொருள்: மனித னைக் கொன்று நடத்தப் படும் யாகம் என்பதாகும்.

மனுசனைக் கொன்று யாகமா? இது என்னடா கொடுமை என்று திகைக்க வேண்டாம். ஆரியப் பார்ப்பனக் கலாச்சாரத்தில் காட்டு விலங்காண்டித்தனம் என்பது சர்வ சாதாரணம்.

மனிதனையே கொன்று யாகம் நடத்திய கூட்டம் தான் - பசுவதை பற்றிக் கண்ணீர் வடிக் கிறது.

மனிதர்களைக் கொன்று யாகம் நடத் தியதற்கு ஏதாவது ஆதா ரம் உண்டா? என்ற கேள்வி எழலாம். ஆதார மின்றி என்றைக்காவது விடுதலை எழுதிய துண்டா?

யஜுர் வேதம் என் பதே முழுக்க முழுக்க யாகம் பற்றிய தாண்ட வம்தான். யஜூர் வேதம் என்னென்ன யாகங்கள் - எந்தெந்த உயிர்களைக் கொன்று நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டிய லேயே தந்துள்ளது. இதில் 30 வகை யாகங்கள் தரப்பட்டுள்ளன. அதில் 11ஆவது இடத்தில் இடம் பெற்றிருப்பதுதான் மனிதர்களைக் கொன்று நடத்தும் புருஷ ஜ்ஞ யாகமாகும்.

அரிச்சந்திரன் என்கிற அரசன் புத்திரப் பேறில் லாது வருந்திக் கொண் டிருக்கும்போது வருண தேவனின் கட்டளைக் கிணங்கி அஜீகர்த்த முனிவரின் புத்திரனான சுன:சேபன் என்பவனை விலைக்கு வாங்கி அவ னைக் கொன்று நர மேத யாகம் பண்ணத் தொடங்கியது ரிக் வேதத் தில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.

பசுவைக் கொல் லுவதா என்று பதை பதைக்கும் பார்ப்பனக் கூட்டம் யஜுர் வேதத் தில் கூறப்படும் கோண வம் என்னும் யாகத்தில் பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம் என்று கூறப்பட் டுள்ளதே!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரே கலாச்சாரம் பேசும் இந்துத்துவவாதிகளுக்கு ஒரு கேள்வி உண்டு. வங்காளத்துப் பார்ப்பனர் களுக்கு முக்கிய உணவு மீன்தானே இன்றைக் கும்? பார்ப்பனர்களுக் குள் கூட ஒரே கலாச் சாரம் - இல்லையே!

சிவன் கோயில் படையல்களை வைஷ் ணவன் சாப்பிடுவ துண்டா, சொல்லுங்கள் பார்க்கலாம். கால ஓட்டத் தில் எத்தனையோ கலாச் சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போயின என்பதுதானே உண்மை. எத்தனைப் பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு அலை கிறார்கள் - சொல்லட்டும் - பார்க்கலாம்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/97977.html#ixzz3UYdDf7nR

தமிழ் ஓவியா said...

குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

பழைமைவாய்ந்த தேவாலயம் இடிக்கப்பட்டு சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலை குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

ஹிஸ்ஸார் (அரியானா) மார்ச் 16_ அரியானா மாநி லத்தில் புதுப்பிக்கப் பட்டு வந்த தேவால யத்தை இடித்து சிலுவை இருந்த இடத்தில் அனு மான் சிலை நிறுவப்பட் டது. அந்த தேவாலயத் தின் தலைமை போதகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அடையா ளம் தெரியாத சிலரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது -_ பஜ்ரங் தள் (குரங்குப்படை).

2014-ஆண்டு அக் டோபர் மாதம் முதல் டில்லி, ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட், போன்ற மாநிலங்களிலும் மங்களூரூ, வடோதரா, போபால் போன்ற நகரங் களில் உள்ள கிறிஸ்த வர்களின் மதவழிபாட் டுத்தலங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தன. ஜனவரி மாதம் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் நடத்தும் பள்ளி ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. இந்தப்பள்ளி மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி படித்த பள்ளி யாகும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அரி யானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸார் நகருக்கு அருகில் உள்ள ஒரு தேவாலயத்தை இடித்து சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலையும், ராமர் படமும், தேவால யத்தின் கோபுரத்தில் காவிக்கொடியும் பறக்க விடப்பட்டது. இன்னோரு கரசேவையா?

இது குறித்து கோவிலின் தலைமை போதகர் சுபாஷ் சந்த் என்பவர் கூறியதாவது, சுமார் 60 ஆண்டு பழைமையான இந்தத் தேவாலயம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அதை சரிசெய்து புதுப்பிக்கும் பணியை கடந்த சில நாட்களாக நாங்கள் மேற்கொண்டு வந்தோம். நாங்கள் புதுப்பித்துக் கொண்டு இருக்கும் போதே பங்ரங் தள் அமைப்பினர், இப் பகுதியில் இந்துக் கோவிலைத் தவிர்த்து எதுவும் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் நாங்கள் அதை உடைத் தெறிவோம் என்று மிரட்டிக்கொண்டு இருந் தனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு முடிந்த பிறகு நாங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டோம். ஒரு சிலர் மாத்திரமே தேவாலயத் தில் இருந்தனர். அப் போது திடீரென 60க்கும் மேற்பட்டோர், தேவால யத்தில் நுழைந்தனர். என்ன நடக்கிறது என்ற ஊகிக்கும் முன்பே கண் ணாடிகளை உடைத்தனர். தேவாலயத்தில் உள்ள கிறிஸ்தவப் படங்கள் அனைத்தையும் உடைத் தனர். பிறகு தாங்கள் கொண்டு வந்திருந்த ராமர் படங்களை ஆங் காங்கே வைத்தனர். பிறகு சிலுவை இருந்த முக்கிய பீடம் அமைந்த பகுதியை தகர்த்துவிட்டு அங்கு அனுமார் சிலையை வைத்துவிட்டு அங்குள்ள வர்களிடம் இனிமேல் இது இந்துக்கோவில் இனிமேல் இந்த இடத் தில் கிறிஸ்தவ வழிபாட் டுத்தலம் இருந்தால் வழிபடுபவர்கள் அனை வரும் அதற்கான தக்க விலைதரவேண்டி இருக் கும் என்று மிரட்டி விட்டுச் சென்று விட் டனர்.

14 பேர்மீது வழக்கு

போதகரின் புகாரை அடுத்து அடையாளம் தெரியாத 14-பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். அரியானா வில் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து அரியானாவில் கிறிஸ்த வர்கள் வாழும் பகுதி களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரி யானா முதல்வர் எந்தவித கருத்தும் கூற மறுத்து விட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/97979.html#ixzz3UYdTodIW

தமிழ் ஓவியா said...

குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

பழைமைவாய்ந்த தேவாலயம் இடிக்கப்பட்டு சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலை குரங்குப் படையின் (பஜ்ரங்தள்) மதவெறி அட்டகாசம்!

ஹிஸ்ஸார் (அரியானா) மார்ச் 16_ அரியானா மாநி லத்தில் புதுப்பிக்கப் பட்டு வந்த தேவால யத்தை இடித்து சிலுவை இருந்த இடத்தில் அனு மான் சிலை நிறுவப்பட் டது. அந்த தேவாலயத் தின் தலைமை போதகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அடையா ளம் தெரியாத சிலரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது -_ பஜ்ரங் தள் (குரங்குப்படை).

2014-ஆண்டு அக் டோபர் மாதம் முதல் டில்லி, ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட், போன்ற மாநிலங்களிலும் மங்களூரூ, வடோதரா, போபால் போன்ற நகரங் களில் உள்ள கிறிஸ்த வர்களின் மதவழிபாட் டுத்தலங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தன. ஜனவரி மாதம் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் நடத்தும் பள்ளி ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. இந்தப்பள்ளி மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி படித்த பள்ளி யாகும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அரி யானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸார் நகருக்கு அருகில் உள்ள ஒரு தேவாலயத்தை இடித்து சிலுவை இருந்த பீடத்தில் அனுமான் சிலையும், ராமர் படமும், தேவால யத்தின் கோபுரத்தில் காவிக்கொடியும் பறக்க விடப்பட்டது. இன்னோரு கரசேவையா?

இது குறித்து கோவிலின் தலைமை போதகர் சுபாஷ் சந்த் என்பவர் கூறியதாவது, சுமார் 60 ஆண்டு பழைமையான இந்தத் தேவாலயம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அதை சரிசெய்து புதுப்பிக்கும் பணியை கடந்த சில நாட்களாக நாங்கள் மேற்கொண்டு வந்தோம். நாங்கள் புதுப்பித்துக் கொண்டு இருக்கும் போதே பங்ரங் தள் அமைப்பினர், இப் பகுதியில் இந்துக் கோவிலைத் தவிர்த்து எதுவும் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் நாங்கள் அதை உடைத் தெறிவோம் என்று மிரட்டிக்கொண்டு இருந் தனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு முடிந்த பிறகு நாங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டோம். ஒரு சிலர் மாத்திரமே தேவாலயத் தில் இருந்தனர். அப் போது திடீரென 60க்கும் மேற்பட்டோர், தேவால யத்தில் நுழைந்தனர். என்ன நடக்கிறது என்ற ஊகிக்கும் முன்பே கண் ணாடிகளை உடைத்தனர். தேவாலயத்தில் உள்ள கிறிஸ்தவப் படங்கள் அனைத்தையும் உடைத் தனர். பிறகு தாங்கள் கொண்டு வந்திருந்த ராமர் படங்களை ஆங் காங்கே வைத்தனர். பிறகு சிலுவை இருந்த முக்கிய பீடம் அமைந்த பகுதியை தகர்த்துவிட்டு அங்கு அனுமார் சிலையை வைத்துவிட்டு அங்குள்ள வர்களிடம் இனிமேல் இது இந்துக்கோவில் இனிமேல் இந்த இடத் தில் கிறிஸ்தவ வழிபாட் டுத்தலம் இருந்தால் வழிபடுபவர்கள் அனை வரும் அதற்கான தக்க விலைதரவேண்டி இருக் கும் என்று மிரட்டி விட்டுச் சென்று விட் டனர்.

14 பேர்மீது வழக்கு

போதகரின் புகாரை அடுத்து அடையாளம் தெரியாத 14-பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். அரியானா வில் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து அரியானாவில் கிறிஸ்த வர்கள் வாழும் பகுதி களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரி யானா முதல்வர் எந்தவித கருத்தும் கூற மறுத்து விட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/97979.html#ixzz3UYdTodIW

தமிழ் ஓவியா said...

உயர் தர்மம்!


இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/97982.html#ixzz3UYe7iRJP

தமிழ் ஓவியா said...

உயர் தர்மம்!


இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்மமாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/97982.html#ixzz3UYe7iRJP

தமிழ் ஓவியா said...

தேர்வு காலம் என்பதால் கோயில் கலை நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. 7.60 லட்ச ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் கொண்டு வந்து வானத்தில் பறக்க விட்டு பூ தூவும் நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அதன் பின்னர் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்துவதென தீர்மானிக் கப்பட்டது. (அவ்வாறு 48 நாட்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என்றால் ஊருக்கு ஆகாதாம்) அதன்படி நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சல தினங்களில் நிகழ்ச் சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதுகுறித்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் கூறுகையில் மண்டலாபிஷேகத்திற்கு கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நிறுத்தப்பட்டது உண்மைதான். கொத்த மங்கலத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் முழுத்தேர்ச்சி பெறுவதோடு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறப்பு பெற்று வருகின்றன.

அதற்காக கடந்த காலங்களில் பொதுத் தேர்வுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கினாலே பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியரின் வீடுகளில் கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்புகளுக்கு கிராமத்தினரே முன்னின்று உதவிகளை செய்வதுபோன்ற பல்வேறு வகைகளில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கல்வியல் முன்னேற்றம் காண்பதற்கும் அதிக தேர்ச்சி பெறுவதற்கும் மாணவ - மாணவியரும் அவர்கள்தம் ஆசிரியர்களும் முழு முயற்சி எடுக்கிறார்கள் என்பதோடு கிராமத்தில் உள்ளவர்கள் தேர்வுக்கு முன்னும் தேர்வு முடிவுகளுக்குப் பின்னும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி பரிசுகள் ஏராளமாக வழங்கி வருகிறார்கள். மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு ரூபாய் 50-ஆயிரமும் அதற்குக் குறைவாகப் பெறும் மாணவ மாணவியருக்கு கடந்த ஆண்டைப் போலவே எனது சார்பில் அவர்களுக்கு உரிய பரிசுகளும் வழங்க உள்ளேன். இன்னும் பலரும் பரிசுகள் வழங்கக் காத் திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதியி லிருந்து பிளஸ்டூ பொதுத்தேர்வு தொடங்கி யுள்ளது. இதில் இரண்டு பள்ளிகளிலும் சுமார் 400 பேர் தேர்வெழுதுகின்றனர். இந்நிலையில் இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஒலி பெருக்கிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் கவனம் சிதறும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அத்தகைய நிகழ்ச்சிகளை பொதுத்தேர்வு முடியும் வரை நடத்துவதில்லை என கிரா மத்தினரே முடிவெடுத்துள்ளனர் என்றார்.
கிராமத்தினரின் முற்போக்கான இத்தகைய முடிவினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- ம.மு.கண்ணன்

Read more: http://viduthalai.in/page-2/97987.html#ixzz3UYeIEcl7

தமிழ் ஓவியா said...

தேர்வு காலம் என்பதால் கோயில் கலை நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. 7.60 லட்ச ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் கொண்டு வந்து வானத்தில் பறக்க விட்டு பூ தூவும் நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அதன் பின்னர் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்துவதென தீர்மானிக் கப்பட்டது. (அவ்வாறு 48 நாட்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என்றால் ஊருக்கு ஆகாதாம்) அதன்படி நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சல தினங்களில் நிகழ்ச் சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதுகுறித்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் கூறுகையில் மண்டலாபிஷேகத்திற்கு கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நிறுத்தப்பட்டது உண்மைதான். கொத்த மங்கலத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் முழுத்தேர்ச்சி பெறுவதோடு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறப்பு பெற்று வருகின்றன.

அதற்காக கடந்த காலங்களில் பொதுத் தேர்வுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கினாலே பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியரின் வீடுகளில் கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்புகளுக்கு கிராமத்தினரே முன்னின்று உதவிகளை செய்வதுபோன்ற பல்வேறு வகைகளில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கல்வியல் முன்னேற்றம் காண்பதற்கும் அதிக தேர்ச்சி பெறுவதற்கும் மாணவ - மாணவியரும் அவர்கள்தம் ஆசிரியர்களும் முழு முயற்சி எடுக்கிறார்கள் என்பதோடு கிராமத்தில் உள்ளவர்கள் தேர்வுக்கு முன்னும் தேர்வு முடிவுகளுக்குப் பின்னும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி பரிசுகள் ஏராளமாக வழங்கி வருகிறார்கள். மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு ரூபாய் 50-ஆயிரமும் அதற்குக் குறைவாகப் பெறும் மாணவ மாணவியருக்கு கடந்த ஆண்டைப் போலவே எனது சார்பில் அவர்களுக்கு உரிய பரிசுகளும் வழங்க உள்ளேன். இன்னும் பலரும் பரிசுகள் வழங்கக் காத் திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதியி லிருந்து பிளஸ்டூ பொதுத்தேர்வு தொடங்கி யுள்ளது. இதில் இரண்டு பள்ளிகளிலும் சுமார் 400 பேர் தேர்வெழுதுகின்றனர். இந்நிலையில் இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஒலி பெருக்கிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் கவனம் சிதறும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அத்தகைய நிகழ்ச்சிகளை பொதுத்தேர்வு முடியும் வரை நடத்துவதில்லை என கிரா மத்தினரே முடிவெடுத்துள்ளனர் என்றார்.
கிராமத்தினரின் முற்போக்கான இத்தகைய முடிவினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- ம.மு.கண்ணன்

Read more: http://viduthalai.in/page-2/97987.html#ixzz3UYeIEcl7

தமிழ் ஓவியா said...

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எலுமிச்சை

தெற்காசியாவிலும், தென் கிழக்காசியாவிலும், எலுமிச்சை தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இது முதலில் பாரசீகத்துக்கும், அங்கிருந்து ஈராக், பின்னர் கி.பி.700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது குறித்து பதிவுகள் முதன் முதலில் கிபி 10ஆம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன.

எலுமிச்சம் பழச்சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச்சுவை தருகிறது. எலுமிச்சை பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இதை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகும். இது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரைக்கப் படும். தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை முகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும்.

எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்தி லிருந்து விடுபடலாம்.

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சையில் எண்ணற்ற மருத்துவ குணாதிசயங்கள் உள்ளதால், தினமும் பயன்படுத்துவோம்.

Read more: http://viduthalai.in/page-7/98004.html#ixzz3UYfVUXLo

தமிழ் ஓவியா said...

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எலுமிச்சை

தெற்காசியாவிலும், தென் கிழக்காசியாவிலும், எலுமிச்சை தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இது முதலில் பாரசீகத்துக்கும், அங்கிருந்து ஈராக், பின்னர் கி.பி.700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது குறித்து பதிவுகள் முதன் முதலில் கிபி 10ஆம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன.

எலுமிச்சம் பழச்சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச்சுவை தருகிறது. எலுமிச்சை பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இதை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகும். இது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரைக்கப் படும். தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை முகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும்.

எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்தி லிருந்து விடுபடலாம்.

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சையில் எண்ணற்ற மருத்துவ குணாதிசயங்கள் உள்ளதால், தினமும் பயன்படுத்துவோம்.

Read more: http://viduthalai.in/page-7/98004.html#ixzz3UYfVUXLo

தமிழ் ஓவியா said...

சிறுநீரகத்தை காக்க நாம் அறிய வேண்டியவை!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப் பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது.

வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளி யேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப் பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.

அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர்க்குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது.

சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள்,

பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப் போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சி யில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/page-7/98005.html#ixzz3UYgFNVNK

தமிழ் ஓவியா said...

சிறுநீரகத்தை காக்க நாம் அறிய வேண்டியவை!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப் பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது.

வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளி யேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப் பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.

அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர்க்குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது.

சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள்,

பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப் போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சி யில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/page-7/98005.html#ixzz3UYgFNVNK

தமிழ் ஓவியா said...

பருமனை குறைக்குமா கிரீன் டீ

பல தரப்பினரும் கொண் டாடும் கிரீன் டீ உண்மையில் உடலுக்கு நன்மை செய் கிறதா? அதை எவ்வாறு அருந்த வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை முறை பருகலாம்? என்பது குறித்து உணவியல் நிபுணர் அபிநயாராவ் கூறியிருப்பதாவது:- கமீலியா சினஸிஸ் என்ற தாவரத்தின் இலைகளில் இருந்து கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது.

முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள். அங்கிருந்து படிப்படியாக மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. கடந்த 2 ஆண்டுகளில்தான் இந்தியாவில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உடல்நலம் குறித்த அக் கறையும், கிரீன் டீக்கு பெரிய அளவில் செய்யப்படும் விளம் பரங்களும்தான் முக்கிய காரணம். கிரீன் டீ ஆன்டி ஆக்சிடென்ட் ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் நச்சுப்பொருட்கள் செல்களை பாதிக்காமல் தடுக்கிறது. ஃப்ரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் தங்கிவிடும்.

இதனால் பருமன் ஏற்படும். போதுமான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதனால், உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது. கொழுப்புகளை கரைத்து பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையும் கிரீன் டீக்கு உண்டு.

இதனால்தான் எடை அதிக முள்ளவர்களுக்கு கிரீன் டீ குடிக்கச் சொல்லி அறிவுறுத்து கிறோம். எடை குறைவானவர்களும் கிரீன் டீ அருந்தலாம். பொதுவாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கிரீன் டீ குடிக்கலாம்.உடலை எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் பழங்கள், பச்சைக்காய்கறிகள் போன்றவற்றிலும் இருக்கிறது என்பதால், சமச்சீர் உணவு அவசியம்.

வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகிய சத்துகளும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகளாக செயல்படக் கூடியவை. கிரீன் டீயை சுடுநீரில் மூழ்கச் செய்து, அதில் கிடைக்கும் இயற்கையான டீயைக் குடிப்பதே நல்லது. அதிகபட்சம் 3 விநாடிகளுக்கு மேல் டீ பைகளை நீரில் மூழ்கச்செய்யக் கூடாது.

சிலர் கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிப்பார்கள். இதனால் கிரீன் டீ உடலை டீடாக்ஸ் செய்து நச்சுகளைவெளியேற்றும் தன்மையை இழந்துவிடும். எதுவும் கலக்காமல் லேசான துவர்ப்புத் தன்மையுடன் கூடிய கிரீன் டீ குடிப்பதே நல்லது. இருப்பினும், சிறிய துண்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து குடிக்கலாம்.

இது நச்சுகளை வெளியேற்றும் தன்மையை அதிகப்படுத்தும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் மட்டுமே குடிக்க வேண்டும். ஒரு கப் என்பது 150 முதல் 200 மி.லி. வரை மட்டுமே.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே? கிரீன் டீயிலும் கஃபைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அதிகமாக கஃபைன் உடலில் சேர்ந்தால் உணர்வூக்கியாகச் செயல்பட்டு தூக்கம் வருவதைக் கெடுக்கும். மனநலம் சார்ந்த பல பிரச்சினைகளைஉருவாக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/98006.html#ixzz3UYgTWXeI

தமிழ் ஓவியா said...

பருமனை குறைக்குமா கிரீன் டீ

பல தரப்பினரும் கொண் டாடும் கிரீன் டீ உண்மையில் உடலுக்கு நன்மை செய் கிறதா? அதை எவ்வாறு அருந்த வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை முறை பருகலாம்? என்பது குறித்து உணவியல் நிபுணர் அபிநயாராவ் கூறியிருப்பதாவது:- கமீலியா சினஸிஸ் என்ற தாவரத்தின் இலைகளில் இருந்து கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது.

முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள். அங்கிருந்து படிப்படியாக மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. கடந்த 2 ஆண்டுகளில்தான் இந்தியாவில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உடல்நலம் குறித்த அக் கறையும், கிரீன் டீக்கு பெரிய அளவில் செய்யப்படும் விளம் பரங்களும்தான் முக்கிய காரணம். கிரீன் டீ ஆன்டி ஆக்சிடென்ட் ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் நச்சுப்பொருட்கள் செல்களை பாதிக்காமல் தடுக்கிறது. ஃப்ரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் தங்கிவிடும்.

இதனால் பருமன் ஏற்படும். போதுமான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதனால், உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது. கொழுப்புகளை கரைத்து பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையும் கிரீன் டீக்கு உண்டு.

இதனால்தான் எடை அதிக முள்ளவர்களுக்கு கிரீன் டீ குடிக்கச் சொல்லி அறிவுறுத்து கிறோம். எடை குறைவானவர்களும் கிரீன் டீ அருந்தலாம். பொதுவாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கிரீன் டீ குடிக்கலாம்.உடலை எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் பழங்கள், பச்சைக்காய்கறிகள் போன்றவற்றிலும் இருக்கிறது என்பதால், சமச்சீர் உணவு அவசியம்.

வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகிய சத்துகளும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகளாக செயல்படக் கூடியவை. கிரீன் டீயை சுடுநீரில் மூழ்கச் செய்து, அதில் கிடைக்கும் இயற்கையான டீயைக் குடிப்பதே நல்லது. அதிகபட்சம் 3 விநாடிகளுக்கு மேல் டீ பைகளை நீரில் மூழ்கச்செய்யக் கூடாது.

சிலர் கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிப்பார்கள். இதனால் கிரீன் டீ உடலை டீடாக்ஸ் செய்து நச்சுகளைவெளியேற்றும் தன்மையை இழந்துவிடும். எதுவும் கலக்காமல் லேசான துவர்ப்புத் தன்மையுடன் கூடிய கிரீன் டீ குடிப்பதே நல்லது. இருப்பினும், சிறிய துண்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து குடிக்கலாம்.

இது நச்சுகளை வெளியேற்றும் தன்மையை அதிகப்படுத்தும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் மட்டுமே குடிக்க வேண்டும். ஒரு கப் என்பது 150 முதல் 200 மி.லி. வரை மட்டுமே.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே? கிரீன் டீயிலும் கஃபைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அதிகமாக கஃபைன் உடலில் சேர்ந்தால் உணர்வூக்கியாகச் செயல்பட்டு தூக்கம் வருவதைக் கெடுக்கும். மனநலம் சார்ந்த பல பிரச்சினைகளைஉருவாக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/98006.html#ixzz3UYgTWXeI

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16

மிசா காலத்தில் எனது இணையரையும் (அ. இறையனார்) பிடிக்க உத்தரவு வந்துள்ள செய்தி காவல் நிலையத்தின் மூலமாக கிடைக்கப் பெற்றது. இவரோ அரசுப் பணியாளர்.

இவரின் பணிக்கு ஏதாவது தொல்லைகள் உண்டாகி விடும் என்ற எண்ணத்தில், இவரை வீட்டில் இருக்கவிடாமல் தெரிந்தவர் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, திருப்பூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு மூன்று மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையை அடைந்தேன்.



அன்னையாரைப் பார்த்தேன். முதலில் முகம் கழுவி சாப்பிட்டு வா என்று கூறி, பாலாவைக் கூப்பிட்டு சோறு போடு என்றார்கள். பதட்டத்தில் இருந்தாலும் பசி ருசியை அறிய வைத்தது. அருமையான வற்றல் குழம்பு அப்பளத்துடன் சாப்பிட்டு முடித்தவுடன் அம்மாவிடம் வந்தேன்.

அம்மா என் கழுத்தினைப் பார்த்து, இந்த கருகமணி மாலையைப் போட்டுக் கொண்டு வந்தாயே, உன்னை யாரும் பின்தொடரவில்லையா? என்று கேட்டுவிட்டு, உனக்குத் தைரியம் அதிகம் என்றார்கள். அந்த மாலையில் கருப்பு மணியுடன் அய்யாவின் படம் பொறித்த கல் இருக்கும்.

உட்கழுத்தில் அந்த மாலை இருக்கும். அன்றைய பெண்கள் சரசுவதி, இலட்சுமி போன்றவர்களின் உருவங்கள் பதித்த மாலையை அணிந்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என்னுடன் வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் பல வினாக்கள் தொடுத்தது உண்டு.

மானமிகு இறையனாரைப் பற்றிய செய்திகளை அம்மாவிடம் நான் கூற, பிடிபடாமல் இருப்பது நல்லது என்று சொன்னார்கள். தங்களைத் தேடி வருபவர்களின் முகபாவனை பார்த்து, நேரம் கெட்ட நேரத்தில் நுழைந்தால்கூட சாப்பிடச் சொல்ல வேண்டும் என்ற மனப் பக்குவத்தை அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

அவரின் உள்ளம் பாதிப்புக்கு ஆளாகும் போதெல்லாம், காண்டேகர் எழுதிய நாவல் வெறுங் கோயில் என்ற புத்தகத்தை பலமுறை படிப்பேன் என்றார்கள். அன்றைய காலப் பெண்களுக்கு (படித்த) அந்த நாவல் அருமருந்தாக பயன்பட்டிருக்கிறது.

கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, ஈரோட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் இல்லத்திற்கு வாருங்கள் என்றேன். அவர்கள், ஏன் உனக்கு அரசு வேலை பார்க்கப் பிடிக்கவில்லையா? என்றார்கள்.

அதற்குக் காரணம், மிசா காலம். அப்படிப் போனால் போகட்டும் என்று நான் கூற, உன் ஆசைக்கு அணை போட விரும்பவில்லை, வருகிறேன் என்று கூறினார்கள்.

அம்மாவைப் பார்க்க அக்கம் பக்கம் உள்ள மக்கள் கூடி திருப்பூரில் எங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர். அன்னை மணியம்மையாரோ எங்கள் வீட்டு சின்னஞ்சிறு அடுப்படியில் வந்து அடுப்புமேட்டில் உட்கார்ந்து கொண்டு எங்கள் பிள்ளைகள் பண்பொளி, இறைவி, மாட்சி, இசையின்பனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்று பகலில் என் மகன் இசையின்பன் எங்கேயோ விளையாடி கல்லால் அடிபட்டு மண்டை உடைந்து கட்டுப்போட்டிருந்தான். அவனிடம், எப்படி மண்டை உடைந்தது என்று கேட்க, அவனோ, கீழே விழுந்து அடிபட்டுவிட்டது என்று சொன்னான்.

உடனே அம்மா, பொய் சொல்லாதே! கீழே விழுந்தால் இப்படி அடிபடாது என்று சொல்லிவிட்டு, பசங்களை மட்டும் நம்பவே கூடாது. பெண் குழந்தைகள் நல்ல பிள்ளைகள் என்று சொன்னார்கள்.

பிறகு தேநீர் போட்டுத் தந்து வெளியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். தாயன்பையே உணர்ந்திராத எனக்கு உண்மையான தாயின் வாஞ்சையுடன் தன் மகளின் இல்லத்தில் வேலையைப் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டிய நிலையை,

இந்த வினாடிவரையிலும் கழகமும் நம் குடும்பம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டவர் அன்னை மணியம்மையார் என்பதை அம்மாவிடம் அன்று உணர்ந்தேன்.

அவர்கள் நினைவாக எங்கள் இல்லத்திற்கு மணியம்மையார் மனை என்று பெயர் சூட்டப்பெற்று காலத்தாலும் நீக்கமுடியாத உறவாக எங்களுடன் தொடர்ந்து வருகிறார்கள்.

- திருமகள் இறையன்

தமிழ் ஓவியா said...

அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16

மிசா காலத்தில் எனது இணையரையும் (அ. இறையனார்) பிடிக்க உத்தரவு வந்துள்ள செய்தி காவல் நிலையத்தின் மூலமாக கிடைக்கப் பெற்றது. இவரோ அரசுப் பணியாளர்.

இவரின் பணிக்கு ஏதாவது தொல்லைகள் உண்டாகி விடும் என்ற எண்ணத்தில், இவரை வீட்டில் இருக்கவிடாமல் தெரிந்தவர் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, திருப்பூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு மூன்று மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையை அடைந்தேன்.



அன்னையாரைப் பார்த்தேன். முதலில் முகம் கழுவி சாப்பிட்டு வா என்று கூறி, பாலாவைக் கூப்பிட்டு சோறு போடு என்றார்கள். பதட்டத்தில் இருந்தாலும் பசி ருசியை அறிய வைத்தது. அருமையான வற்றல் குழம்பு அப்பளத்துடன் சாப்பிட்டு முடித்தவுடன் அம்மாவிடம் வந்தேன்.

அம்மா என் கழுத்தினைப் பார்த்து, இந்த கருகமணி மாலையைப் போட்டுக் கொண்டு வந்தாயே, உன்னை யாரும் பின்தொடரவில்லையா? என்று கேட்டுவிட்டு, உனக்குத் தைரியம் அதிகம் என்றார்கள். அந்த மாலையில் கருப்பு மணியுடன் அய்யாவின் படம் பொறித்த கல் இருக்கும்.

உட்கழுத்தில் அந்த மாலை இருக்கும். அன்றைய பெண்கள் சரசுவதி, இலட்சுமி போன்றவர்களின் உருவங்கள் பதித்த மாலையை அணிந்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என்னுடன் வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் பல வினாக்கள் தொடுத்தது உண்டு.

மானமிகு இறையனாரைப் பற்றிய செய்திகளை அம்மாவிடம் நான் கூற, பிடிபடாமல் இருப்பது நல்லது என்று சொன்னார்கள். தங்களைத் தேடி வருபவர்களின் முகபாவனை பார்த்து, நேரம் கெட்ட நேரத்தில் நுழைந்தால்கூட சாப்பிடச் சொல்ல வேண்டும் என்ற மனப் பக்குவத்தை அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

அவரின் உள்ளம் பாதிப்புக்கு ஆளாகும் போதெல்லாம், காண்டேகர் எழுதிய நாவல் வெறுங் கோயில் என்ற புத்தகத்தை பலமுறை படிப்பேன் என்றார்கள். அன்றைய காலப் பெண்களுக்கு (படித்த) அந்த நாவல் அருமருந்தாக பயன்பட்டிருக்கிறது.

கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, ஈரோட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் இல்லத்திற்கு வாருங்கள் என்றேன். அவர்கள், ஏன் உனக்கு அரசு வேலை பார்க்கப் பிடிக்கவில்லையா? என்றார்கள்.

அதற்குக் காரணம், மிசா காலம். அப்படிப் போனால் போகட்டும் என்று நான் கூற, உன் ஆசைக்கு அணை போட விரும்பவில்லை, வருகிறேன் என்று கூறினார்கள்.

அம்மாவைப் பார்க்க அக்கம் பக்கம் உள்ள மக்கள் கூடி திருப்பூரில் எங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர். அன்னை மணியம்மையாரோ எங்கள் வீட்டு சின்னஞ்சிறு அடுப்படியில் வந்து அடுப்புமேட்டில் உட்கார்ந்து கொண்டு எங்கள் பிள்ளைகள் பண்பொளி, இறைவி, மாட்சி, இசையின்பனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்று பகலில் என் மகன் இசையின்பன் எங்கேயோ விளையாடி கல்லால் அடிபட்டு மண்டை உடைந்து கட்டுப்போட்டிருந்தான். அவனிடம், எப்படி மண்டை உடைந்தது என்று கேட்க, அவனோ, கீழே விழுந்து அடிபட்டுவிட்டது என்று சொன்னான்.

உடனே அம்மா, பொய் சொல்லாதே! கீழே விழுந்தால் இப்படி அடிபடாது என்று சொல்லிவிட்டு, பசங்களை மட்டும் நம்பவே கூடாது. பெண் குழந்தைகள் நல்ல பிள்ளைகள் என்று சொன்னார்கள்.

பிறகு தேநீர் போட்டுத் தந்து வெளியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். தாயன்பையே உணர்ந்திராத எனக்கு உண்மையான தாயின் வாஞ்சையுடன் தன் மகளின் இல்லத்தில் வேலையைப் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டிய நிலையை,

இந்த வினாடிவரையிலும் கழகமும் நம் குடும்பம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டவர் அன்னை மணியம்மையார் என்பதை அம்மாவிடம் அன்று உணர்ந்தேன்.

அவர்கள் நினைவாக எங்கள் இல்லத்திற்கு மணியம்மையார் மனை என்று பெயர் சூட்டப்பெற்று காலத்தாலும் நீக்கமுடியாத உறவாக எங்களுடன் தொடர்ந்து வருகிறார்கள்.

- திருமகள் இறையன்

தமிழ் ஓவியா said...

இந்துஜாவின் புரட்சி

தங்களுக்கு வரும் இணையர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு ஆண்களுக்கு மட்டும் இருக்கும் என்பதல்ல, பெண்களுக்கும் உண்டு என்பதைப் புரியவைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இந்துஜா.

marry.indhuja.com என்ற இணையதள முகவரி இந்துஜாவைப் பற்றியும் அவரது எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது.

திருமணத்திற்குப் பின் நீண்ட கூந்தல் வளர்க்காமல் ஆண்களைப் போல்தான் முடி வெட்டிக் கொள்வேன். எப்போதும் இருப்பதைப் போல எனது விருப்பப்படியே வாழ்க்கையினை வாழ்வேன். குடும்பப் பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.

திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறும் மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பல நிபந்தனை களைக் கூறியுள்ளார்.

இந்துஜாவின் நண்பர்களிடையே மட்டுமன்றி, உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் பாராட்டியுள்ளனர். இந்துஜாவின் இணைய தளத்தினை சுமார் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் புரட்சிகரமான முடிவுக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். மேலும், பல்வேறு மகளிர் அமைப்பு களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித் துள்ளன. நாடு முழுவதிலுமிருந்து பலர் பூங்கொத்துகளையும் அனுப்பி வருகின்றனர்.

இந்தச் செய்தியினைக் குறித்து இந்துஜா, நான் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. அடிப்படையிலே நான் பகுத்தறிவுவாதி என்பதால் எனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.

முதலில் இந்த இணையதளம் தொடங்கியதை எதிர்த்த எனது பெற்றோர், இப்போது என் விருப்பத்தைப் புரிந்து கொண்டனர். மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இணையதளத்திற்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இத்தனை புதுமையினைச் செய்துள்ள இந்துஜாவின் இணையப் பக்கத்தில் அவருடைய பெயருடன் ஜாதிப் பெயரும் இடம் பெற்றிருப்பது தான் பொருந்தாமல் உள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்துஜாவின் புரட்சி

தங்களுக்கு வரும் இணையர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு ஆண்களுக்கு மட்டும் இருக்கும் என்பதல்ல, பெண்களுக்கும் உண்டு என்பதைப் புரியவைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இந்துஜா.

marry.indhuja.com என்ற இணையதள முகவரி இந்துஜாவைப் பற்றியும் அவரது எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது.

திருமணத்திற்குப் பின் நீண்ட கூந்தல் வளர்க்காமல் ஆண்களைப் போல்தான் முடி வெட்டிக் கொள்வேன். எப்போதும் இருப்பதைப் போல எனது விருப்பப்படியே வாழ்க்கையினை வாழ்வேன். குடும்பப் பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.

திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறும் மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பல நிபந்தனை களைக் கூறியுள்ளார்.

இந்துஜாவின் நண்பர்களிடையே மட்டுமன்றி, உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் பாராட்டியுள்ளனர். இந்துஜாவின் இணைய தளத்தினை சுமார் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் புரட்சிகரமான முடிவுக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். மேலும், பல்வேறு மகளிர் அமைப்பு களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித் துள்ளன. நாடு முழுவதிலுமிருந்து பலர் பூங்கொத்துகளையும் அனுப்பி வருகின்றனர்.

இந்தச் செய்தியினைக் குறித்து இந்துஜா, நான் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. அடிப்படையிலே நான் பகுத்தறிவுவாதி என்பதால் எனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.

முதலில் இந்த இணையதளம் தொடங்கியதை எதிர்த்த எனது பெற்றோர், இப்போது என் விருப்பத்தைப் புரிந்து கொண்டனர். மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இணையதளத்திற்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இத்தனை புதுமையினைச் செய்துள்ள இந்துஜாவின் இணையப் பக்கத்தில் அவருடைய பெயருடன் ஜாதிப் பெயரும் இடம் பெற்றிருப்பது தான் பொருந்தாமல் உள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத நீதிபதி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டார் என்பதும், அதற்குமுன் பார்ப்பனரல்லாத நீதிபதியே உயர் நீதிமன்றத்தில் கிடையாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத நீதிபதி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டார் என்பதும், அதற்குமுன் பார்ப்பனரல்லாத நீதிபதியே உயர் நீதிமன்றத்தில் கிடையாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் நிலம் கையகப்-படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. தொழிலதிபர்-களுக்குச் சாதகமானது. மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- நிதிஷ்குமார், பிகார் முதல் அமைச்சர்

நியூயார்க், மிசேரியில் கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க காவல்துறையினரின் மனநிலை, நடைமுறைகளில் மாற்றம் அவசியம்.

- பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர்

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணப்படம் வெளியாவதால் நம் நாட்டின் பெருமைக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. ஆவணப் படத்துக்கு, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இது நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

- ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாடு கட்சி.

மத்தியில் ஆட்சிபுரியும் கட்சி இந்தியாவை காவிமயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும், பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? இதனைப் புரிந்து கொண்டால் மனித உரிமைகள் என்ன வென்பது தெளிவடையும்.

- சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமையில்லை என தெரிவித்-துள்ளது. ஆனால் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமைதான் என பல நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பை நான் வழங்கியுள்ளேன்.

மக்கள் வாக்களிப்பதில் தங்களுக்கு விருப்பமில்லையென்றால் சட்டத்தின் மூலம் அந்த உரிமையை ஆட்சியாளர்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்பது என்னைப் பொருத்தவரையில் அபத்தமானது. இந்த உரிமை அரசியல் சாசனத்தின் அடிப்படையானது.

- செலமேஸ்வர், நீதிபதி, உச்ச நீதிமன்றம்.

.............

சொல்றாங்க

பாதுகாப்புத் துறைக்காக நிலம் கையகப்படுத்தும்போது அதுகுறித்து நில உரிமையாளர் களிடம் ஒப்புதல் வாங்கக் கூடாது என்று நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சேர்க்க காங்கிரஸ் மறந்துவிட்டது.

- அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர்

சொல்றேங்க: நீங்க மறக்காம முதலாளிகளுக்கு சேவகம் பண்றீங்களே... அதைப் பெருமையா சொல்றீங்களா?

சொல்றாங்க

அய்ந்து கண்டங்களுக்கு பயங்கரவாதிகளை ஈரான் அனுப்பியுள்ளது. உலகில் பயங்கரவாதத்திற்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை வகிக்கிறது அந்நாடு.

அணு ஆயுதம் இல்லாத ஈரான் உலகை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்க வைத்துள்ளது. அணு ஆயுதம் இருந்தால் இனி என்ன செய்யும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

-பெஞ்சமின் நெதன் யாஹு, இஸ்ரேல் பிரதமர்.

சொல்றேங்க: உங்க கூட்டணி பயங்கரவாதம்தானே பாஸ், உலக பயங்கரவாதமே! எல்லாருக்கும் ஆயுத சப்ளையும் நீங்கதானே!

தமிழ் ஓவியா said...

கருத்து

மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் நிலம் கையகப்-படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. தொழிலதிபர்-களுக்குச் சாதகமானது. மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- நிதிஷ்குமார், பிகார் முதல் அமைச்சர்

நியூயார்க், மிசேரியில் கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க காவல்துறையினரின் மனநிலை, நடைமுறைகளில் மாற்றம் அவசியம்.

- பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர்

நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணப்படம் வெளியாவதால் நம் நாட்டின் பெருமைக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. ஆவணப் படத்துக்கு, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இது நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

- ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாடு கட்சி.

மத்தியில் ஆட்சிபுரியும் கட்சி இந்தியாவை காவிமயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும், பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? இதனைப் புரிந்து கொண்டால் மனித உரிமைகள் என்ன வென்பது தெளிவடையும்.

- சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமையில்லை என தெரிவித்-துள்ளது. ஆனால் வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமைதான் என பல நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பை நான் வழங்கியுள்ளேன்.

மக்கள் வாக்களிப்பதில் தங்களுக்கு விருப்பமில்லையென்றால் சட்டத்தின் மூலம் அந்த உரிமையை ஆட்சியாளர்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்பது என்னைப் பொருத்தவரையில் அபத்தமானது. இந்த உரிமை அரசியல் சாசனத்தின் அடிப்படையானது.

- செலமேஸ்வர், நீதிபதி, உச்ச நீதிமன்றம்.

.............

சொல்றாங்க

பாதுகாப்புத் துறைக்காக நிலம் கையகப்படுத்தும்போது அதுகுறித்து நில உரிமையாளர் களிடம் ஒப்புதல் வாங்கக் கூடாது என்று நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சேர்க்க காங்கிரஸ் மறந்துவிட்டது.

- அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சர்

சொல்றேங்க: நீங்க மறக்காம முதலாளிகளுக்கு சேவகம் பண்றீங்களே... அதைப் பெருமையா சொல்றீங்களா?

சொல்றாங்க

அய்ந்து கண்டங்களுக்கு பயங்கரவாதிகளை ஈரான் அனுப்பியுள்ளது. உலகில் பயங்கரவாதத்திற்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை வகிக்கிறது அந்நாடு.

அணு ஆயுதம் இல்லாத ஈரான் உலகை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்க வைத்துள்ளது. அணு ஆயுதம் இருந்தால் இனி என்ன செய்யும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

-பெஞ்சமின் நெதன் யாஹு, இஸ்ரேல் பிரதமர்.

சொல்றேங்க: உங்க கூட்டணி பயங்கரவாதம்தானே பாஸ், உலக பயங்கரவாதமே! எல்லாருக்கும் ஆயுத சப்ளையும் நீங்கதானே!

தமிழ் ஓவியா said...

பெரிய கருந்துளை

விண்வெளியின் ஒரு பகுதியே கருந்துளை ஆகும். மிகவும் அடர்த்தி வாய்ந்த இதனுள் ஒளிகூட செல்ல முடியாது. தனக்கு அருகில் உள்ள அனைத்தையும் ஈர்க்கும் ஆற்றல் கருந்துளைக்கு உண்டு.

இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவை யாக உள்ளன. இந்த ஒளிக்கதிர்கள் குவாசார் என அழைக்கப்படுகின்றன.

இத்தகு சிறப்புகள் வாய்ந்த, பூமியைவிட சுமார் 1200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் உள்ளது. சீனாவில் லிஜியாங் நகரில் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கியின் உதவியுடன் இந்தக் கருந்துளையைக் கண்டுபிடித்து எஸ்டிஎஸ்எஸ்ஜெ0100 + 2802 என பெயர் வைத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சிலி நாடும் இந்தக் கருந்துளை இருப்பதை உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை-களி-லேயே மிகவும் பெரியதாகவும் ஒளிக்கதிர்கள் அதிக வெளிச்சம் கொண்ட-தாகவும் இருப்பது என்ற பெருமையினை இந்தக் கருந்துளை பெற்றுள்ளது.

கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்-களுள் ஒருவரான பெக்கிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் வூ சுபிங், பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருந்துளையை நாங்கள் கண்டு-பிடித்துள்ளோம்.

இதன்மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த ஆய்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

பெரிய கருந்துளை

விண்வெளியின் ஒரு பகுதியே கருந்துளை ஆகும். மிகவும் அடர்த்தி வாய்ந்த இதனுள் ஒளிகூட செல்ல முடியாது. தனக்கு அருகில் உள்ள அனைத்தையும் ஈர்க்கும் ஆற்றல் கருந்துளைக்கு உண்டு.

இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவை யாக உள்ளன. இந்த ஒளிக்கதிர்கள் குவாசார் என அழைக்கப்படுகின்றன.

இத்தகு சிறப்புகள் வாய்ந்த, பூமியைவிட சுமார் 1200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் உள்ளது. சீனாவில் லிஜியாங் நகரில் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கியின் உதவியுடன் இந்தக் கருந்துளையைக் கண்டுபிடித்து எஸ்டிஎஸ்எஸ்ஜெ0100 + 2802 என பெயர் வைத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சிலி நாடும் இந்தக் கருந்துளை இருப்பதை உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை-களி-லேயே மிகவும் பெரியதாகவும் ஒளிக்கதிர்கள் அதிக வெளிச்சம் கொண்ட-தாகவும் இருப்பது என்ற பெருமையினை இந்தக் கருந்துளை பெற்றுள்ளது.

கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்-களுள் ஒருவரான பெக்கிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் வூ சுபிங், பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருந்துளையை நாங்கள் கண்டு-பிடித்துள்ளோம்.

இதன்மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த ஆய்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தயிர் ஷோரை தேஷிய உணவாக...

பகவான் மச்சாவதாரம் எடுத்தாரு அதனால் மீன் வதை தடை செய்யப்பட வேண்டும்.
வராக அவதாரம் எடுத்தாரு எனவே பன்றி வதை தடை செய்யப்பட வேண்டும்.

மேஷராசி அன்பர்கள் மனசு புண்படும் என்பதால் ஆடு வதை தடை செய்யப்பட வேண்டும்.

முப்பாட்டன் முருகன் கொடியில் சேவல் இடம்பெற்று இருப்பதால் கோழி வதை தடை செய்யப்பட வேண்டும்.

ஆக எல்லோரும் ஷைவத்துக்கு மாறி தயிர் ஷோரை தேஷிய உணவாக அறிவிக்க வேண்டும்.

- முகநூலில் யுவான் சுவாங்

தமிழ் ஓவியா said...

தயிர் ஷோரை தேஷிய உணவாக...

பகவான் மச்சாவதாரம் எடுத்தாரு அதனால் மீன் வதை தடை செய்யப்பட வேண்டும்.
வராக அவதாரம் எடுத்தாரு எனவே பன்றி வதை தடை செய்யப்பட வேண்டும்.

மேஷராசி அன்பர்கள் மனசு புண்படும் என்பதால் ஆடு வதை தடை செய்யப்பட வேண்டும்.

முப்பாட்டன் முருகன் கொடியில் சேவல் இடம்பெற்று இருப்பதால் கோழி வதை தடை செய்யப்பட வேண்டும்.

ஆக எல்லோரும் ஷைவத்துக்கு மாறி தயிர் ஷோரை தேஷிய உணவாக அறிவிக்க வேண்டும்.

- முகநூலில் யுவான் சுவாங்

தமிழ் ஓவியா said...

முகநூலில் கிளிமூக்கு அரக்கன்


கேள்வி :- மாட்டிறைச்சியைத் தடை செய்துள்ளதே மகாராட்டிர அரசு?

பதில் :- பசு/காளை மாட்டிறைச்சியைத்தான் தடை செய்துள்ளது. மாட்டினத்தில் தாழ்த்தப்பட்ட கருமை நிற எருமை மாட்டை வெட்டலாம் உண்ணலாம்.



வெளிப்படையாகப் பார்த்தால் காவித்தனமாக இருந்தாலும் இதன் பின்னர் வியாபரத் தந்திரமொன்றுள்ளது. கோமாதா எங்கள் குலமாதா பாடும் நாம்தான், உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றோம்.



மராட்டியம் போன்ற பெரிய மாநிலத்தில் பசு/காளை மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் மூலம், உள்நாட்டுப் பயன்பாட்டை நிறுத்தி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபமீட்டலாம்.

உள்ளூரில் ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு விற்பது லாபமா அல்லது அதே பொருளை வெளியூரில் ஒன்பது பவுண்டுகளுக்கு விற்பது லாபமா என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காவி"யவாதம் என்பது சாக்கு, வர்த்தகம் என்பதே நிஜமான போக்கு. எருமை மாட்டிறைச்சியை விட்டுவைக்கக் காரணம், ஏற்கெனவே மராட்டியம் இந்திய அளவில் மிகப் பெரிய எருமை இறைச்சி ஏற்றுமதியாளர். லாபமில்லாத காவித்தனம் என்பதில்லை.

- முகநூலில் கிளிமூக்கு அரக்கன்

தமிழ் ஓவியா said...

முகநூலில் கிளிமூக்கு அரக்கன்


கேள்வி :- மாட்டிறைச்சியைத் தடை செய்துள்ளதே மகாராட்டிர அரசு?

பதில் :- பசு/காளை மாட்டிறைச்சியைத்தான் தடை செய்துள்ளது. மாட்டினத்தில் தாழ்த்தப்பட்ட கருமை நிற எருமை மாட்டை வெட்டலாம் உண்ணலாம்.



வெளிப்படையாகப் பார்த்தால் காவித்தனமாக இருந்தாலும் இதன் பின்னர் வியாபரத் தந்திரமொன்றுள்ளது. கோமாதா எங்கள் குலமாதா பாடும் நாம்தான், உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றோம்.



மராட்டியம் போன்ற பெரிய மாநிலத்தில் பசு/காளை மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் மூலம், உள்நாட்டுப் பயன்பாட்டை நிறுத்தி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபமீட்டலாம்.

உள்ளூரில் ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு விற்பது லாபமா அல்லது அதே பொருளை வெளியூரில் ஒன்பது பவுண்டுகளுக்கு விற்பது லாபமா என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காவி"யவாதம் என்பது சாக்கு, வர்த்தகம் என்பதே நிஜமான போக்கு. எருமை மாட்டிறைச்சியை விட்டுவைக்கக் காரணம், ஏற்கெனவே மராட்டியம் இந்திய அளவில் மிகப் பெரிய எருமை இறைச்சி ஏற்றுமதியாளர். லாபமில்லாத காவித்தனம் என்பதில்லை.

- முகநூலில் கிளிமூக்கு அரக்கன்

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக!

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இலக்கணம்

இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம்.

இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியை குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதைச் சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதுண்டு.

(இலக்கு+அணம்) இலக்கணம் என்றால் அதன் பொருள் எனில், இலக்கை நெருங்குவது என்பதாம். அணம்_அணுகுவது. ஈறு திரிந்த ஆகு பெயர் என்பார்கள் இதை. அண என்று மட்டும் இருந்தால் என்ன பொருள் எனில், நெருங்க என்பது.

இது செய எச்சம். (இலக்கு+அண) இலக்கண என்றால் இலக்கை நெருங்க என்று பொருள். இவ்வாறு சொற்றொடர் ஆட்சியில் வந்துள்ளதா எனில் மணிமேகலையில் 30_-வது பவத்திறம் அறுகெனப்படுவ நோற்றகாதை 18_-வது அடியில், இலக்கணத் தொடரில் (இலக்கு+அண) என வந்துள்ளது காண்க.

இதைத் தொடர்ந்தும், சொற்றகப்பட்டும் இலக்கணத் தொடர்பால் என வந்துள்ளது. இவற்றால் இலக்கணம் என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பது பெற்றாம். இலக்கணம் என்பது லக்ஷணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம்.

இவ்வாறு தமிழாராய்ச்சி வல்லவர் என்று பிழையாக நம்மவரால் கருதப்படும் தெ.பொ.மீனாக்ஷி, அழகு, சேது முதலியவர்கள் கூட எழுதியும் பேசியும் வந்துள்ளார்கள்.

இவர்கள் பார்ப்பனரின் கூலிக்காக, வடமொழியினின்று வந்தது என்று பிதற்றும் ஆட்கள் என்பதையும், ஆங்கிலம் படித்து பிழைக்கத் தெரியாதென்று, தமிழ் தெரியும் என்றும் தமிழர்களை ஏமாற்றித் திரிகின்றனர் என்பதையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். (குயில், 8.-6.-1958)

நேயம்

இது நேசம் என்னும் வடசொல் சிதைவாம். சீவக சிந்தாமணியில் 3049_-ம் செய்யுள், நெய் போதி நெஞ்சு என வந்துள்ளதும், அது நேயம் என்பதையே குறிப்பதும் அறியாதார் பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகளும் கூறுவதைக் கொண்டு, நேயம் வடசொற் சிதைவு என்று கூறித் திரிகின்றார்கள்.

நெய் என்ற சொல்லினடியாகப் பண்புப் பெயர். ஆதலின் தூய தமிழ் என அறிக.

மீன்

இது கூட மீனம் என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.

அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.

எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.

கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.

குயில் 28. 6. 1958

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக!

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இலக்கணம்

இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம்.

இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியை குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதைச் சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதுண்டு.

(இலக்கு+அணம்) இலக்கணம் என்றால் அதன் பொருள் எனில், இலக்கை நெருங்குவது என்பதாம். அணம்_அணுகுவது. ஈறு திரிந்த ஆகு பெயர் என்பார்கள் இதை. அண என்று மட்டும் இருந்தால் என்ன பொருள் எனில், நெருங்க என்பது.

இது செய எச்சம். (இலக்கு+அண) இலக்கண என்றால் இலக்கை நெருங்க என்று பொருள். இவ்வாறு சொற்றொடர் ஆட்சியில் வந்துள்ளதா எனில் மணிமேகலையில் 30_-வது பவத்திறம் அறுகெனப்படுவ நோற்றகாதை 18_-வது அடியில், இலக்கணத் தொடரில் (இலக்கு+அண) என வந்துள்ளது காண்க.

இதைத் தொடர்ந்தும், சொற்றகப்பட்டும் இலக்கணத் தொடர்பால் என வந்துள்ளது. இவற்றால் இலக்கணம் என்பது தூய தமிழ்ச் சொற்றொடர் என்பது பெற்றாம். இலக்கணம் என்பது லக்ஷணம் என்ற வடசொல்லினின்று வந்ததாம்.

இவ்வாறு தமிழாராய்ச்சி வல்லவர் என்று பிழையாக நம்மவரால் கருதப்படும் தெ.பொ.மீனாக்ஷி, அழகு, சேது முதலியவர்கள் கூட எழுதியும் பேசியும் வந்துள்ளார்கள்.

இவர்கள் பார்ப்பனரின் கூலிக்காக, வடமொழியினின்று வந்தது என்று பிதற்றும் ஆட்கள் என்பதையும், ஆங்கிலம் படித்து பிழைக்கத் தெரியாதென்று, தமிழ் தெரியும் என்றும் தமிழர்களை ஏமாற்றித் திரிகின்றனர் என்பதையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். (குயில், 8.-6.-1958)

நேயம்

இது நேசம் என்னும் வடசொல் சிதைவாம். சீவக சிந்தாமணியில் 3049_-ம் செய்யுள், நெய் போதி நெஞ்சு என வந்துள்ளதும், அது நேயம் என்பதையே குறிப்பதும் அறியாதார் பார்ப்பன, பார்ப்பன அடிவருடிகளும் கூறுவதைக் கொண்டு, நேயம் வடசொற் சிதைவு என்று கூறித் திரிகின்றார்கள்.

நெய் என்ற சொல்லினடியாகப் பண்புப் பெயர். ஆதலின் தூய தமிழ் என அறிக.

மீன்

இது கூட மீனம் என்று வடசொற் சிதைவாம். மின்னல் என்பது அல் இறுதி நிலைபெற்ற தொழிற் பெயர். அது அவ்விகுதி நிலை கெட்டு மின் என நிற்பதுண்டு. அந்நிலையில் அதை முதனிலை தொழிற்பெயர் என்பார்கள்.

அம் முதனிலையாகிய மின் என்பதும் முதல் நீண்டு மீன் என்று ஆகும். அந்நிலையில் அதை முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பார்கள்.

எனவே, மீன் என்பதும் முதனிலை தொழிற்பெயர். அது தொழிலாகு பெயர் என்னும் கோளைக் குறிக்கும். எனவே, மீன் தூய தமிழ்ச் சொல் பெயர்.

கோள் மின்னும் மீன் சூழ் குளிர்மாமதித் தோற்றம் என்ற சான்றோர் செய்யுளையும் நோக்குக. மின்னுவது மீன் எனக் காரணப் பெயர் என்று உணர்க.

குயில் 28. 6. 1958

தமிழ் ஓவியா said...

நல்ல முடிவு!

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் இனம் சேர்க்கப்பட்டது செல்லாது

உச்சநீதிமன்றம்

புதுடில்லி, மார்ச் 17- மத்திய அரசு கடந்த ஆண்டு ஜாட் இனத்தையும் இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் சேர்த்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (17.3.2015) விசாரணைக்கு வந்தது. அப்போது இதர பிற்படுத்தப் பட்டோர் (ஓ.பி.சி.) பட்டியிலில் ஜாட் இனத்தை சேர்த்த மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/98043.html#ixzz3Udy7jrAx

தமிழ் ஓவியா said...

காந்திமீதான அவமதிப்பு தொடர்கிறது
காந்தியார் பிறந்த நாள், கோவா அரசின் நாட்காட்டியில் இல்லை

பானாஜி மார்ச் 17_ கோவா அரசு தயார் செய்த நாட்காட்டி மற் றும் நாட்குறிப்பேடுகளில் காந்தியார் பிறந்தநாள் விடுபட்டிருந்தது. இதன் மூலம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவா மாநில பாஜக அரசு, இந்த ஆண்டிற் கான நாட்காட்டி தயா ரித்து வெளியிட்டுள்ளது. இந்த நாட்காட்டியில் காந்தியார் பிறந்த நாள் குறிப்பிடப்படவில்லை. இதனால் கோவா மாநில அரசு அலுவலகங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி வேலை நாளாக கணக் கிடப்பட்டுள்ளது. கோவா மாநில அரசின் இந்த அவமதிப்பு நடவடிக்கைக்கு, கோவா மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர் பாளர் துர்காதாஸ் காமத் கூறும்போது, காந்தியார் பிறந்த நாளான அக்டோ பர் 2-ஆம் தேதியை கோவா மாநில அரசு விடுமுறை நாட்கள் பட் டியலிலிருந்து நீக்கி யுள்ளது.

இதன்மூலம் பாஜக அரசின் மறைமுகத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடக் கம்தான். வரும் காலத்தில் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட் சேவின் பிறந்த நாளை, விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார். இது தொடர் பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, தேசத் தந்தையான காந்தி யாரின் பிறந்த நாள் தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும். இந்த நாளை விடுமுறைப் பட்டியலிலி ருந்து நீக்கக் கூடாது. கடந்த ஆண்டும் காந்தி யார் பிறந்த நாளில் பள் ளிக்கு வருமாறு மாண வர்கள் கட்டாயப்படுத் தப்பட்டார்கள். இது போன்ற செயலைக் கை விட வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/98046.html#ixzz3UdyKWfqY

தமிழ் ஓவியா said...

நிலம் கையகப்படுத்தும் சட்டம் லாலு குதித்தார் களத்தில்

பீகார், மார்ச் 17-_ விவசாயிகளின் நலனுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவை, மத்திய ஆட் சிப் பொறுப்பிலிருந்து தூக்கியெறிய நாடு தழு விய அளவில் போராட் டங்கள் நடத்தப்படும்' என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கைய கப்படுத்துதல் மசோ தாவை கண்டித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர், லாலு பிர சாத் யாதவ் தலைமையில், பிகாரில் ஆளுநர் மாளி கையை நோக்கி ஞாயிற் றுக்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர்.

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி, "பாஜக ஆட்சி வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட் டுள்ள இந்தியர்களின் ரூ.26.5 லட்சம் கோடி கருப்புப் பணம், சில மாதங்களுக்குள் மீட்கப் படும் என்றும், ஓராண் டுக்குள் 2 கோடி இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்' என்றும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், பாஜக ஆட் சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையிலும், மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

மாறாக, முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், விவசாயிகளின் நலன் களை கருத்தில்கொண்டு, கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பெரு நிறு வனங்களுக்கும், முதலாளி களுக்கும் சாதகமாக்க முயன்று வருகிறார்.

விவசாயிகளுக்கு எதி ரான இந்தச் சட்டத்தை எதிர்த்து, ஆளுநர் மாளிகை நோக்கி நடத் தப்படும் இந்தப் பேரணி ஒரு தொடக்கம்தான். பாஜகவை மத்திய ஆட் சிப் பொறுப்பிலிருந்து தூக்கியெறிய, பிகாரிலும், நாடு தழுவிய அளவிலும் போராட்டங்கள் நடத்தப் படும் என்று லாலு பிர சாத் யாதவ் தெரிவித்தார். இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந் துள்ள நிலம் கையகப் படுத்துதல் மசோதாவை கண்டித்து, பிகார் முதல் வர் நிதீஷ் குமார், சனிக் கிழமை மேற்கொண்ட ஒரு நாள் பட்டினிப் போராட்டம், ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது.
பிறகு, நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறு கையில், "விவசாயிகளின் நலனுக்கு எதிரான, நிலம் கையப்படுத்துதல் சட்டம், பிகாரில் அமல்படுத்தப் படாது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தப் படும்' என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/98047.html#ixzz3UdyaIVGH

தமிழ் ஓவியா said...

மேற்கு வங்கத்தில் ஒரு கேவலம்?

மேற்கு வங்கம் நாடியா மாவட்டம், கங்கனாபூர் பகுதியில் உள்ள கிறித்தவர்கள் நடத்தும் பள்ளியுடன் கூடிய ஆசிரமத்துக்குள் புகுந்து நான்கைந்து காலிகள் கொண்ட ஒரு கும்பல் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியின் கழுத்தைப் பிடித்து நெரித்து, அவரைக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சியைக் கூட்டாகச் செய்து, பீரோவை உடைத்து உள்ளே இருந்த 12 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர் என்ற தகவல் நாணித் தலை குனிய வேண்டிய ஒன்றாகும்.

குறிப்பாக மதவாத சக்திகள் தலை தூக்கிய சிறிது காலமாகவே இது போன்ற மாற்று மதத்தைச் சேர்ந்த நிறுவனங்களைச் சூறையாடுவது, அம்மதத்தைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது என்பது தொடர் கதையாகவே இருந்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த பெண் சந்நியாசி சாத்வி ரிதம்பரா என்பவர் வழக்கமாக மேடைகளில் பேசுவது என்ன தெரியுமா?

இந்து ஆண்களே! முஸ்லிம் பெண்களைக் கர்ப்பிணியாக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக்கட்டும்! என்று பேசி வருகிறார். ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி பேசுகிறார்; எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் பெண்தானே! அந்த உணர்வை - அவர்களைப் பிடித்து ஆட்டும் அடிப்படை மதவாதம் மழுங்கடித்து விடுகிறது என்பதுதான் உண்மை.

1998 செப்டம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசம் ஜாடியா கிராமம் கிறித்தவர்கள் நடத்தும் ஒரு மருத்துவமனையில் என்ன நடந்தது? 17 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டதால் பலருக்கு மறந்து கூடப் போயிருக்கலாம்; ஆனால் நடைபெற்ற சம்பவமோ அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாத ஒன்றே!

நள்ளிரவில் கதவைத் தட்டி உள்ளே நுழைந்த சங்பரிவார்க் காமவெறியர்கள் 4 கன்னிகாஸ்திரிகளைக் கதறக் கதறச் சூறையாடினார்களே - நினை விருக்கிறதா!?

இதுகுறித்து பிஜேபியின் மக்களவை முன்னாள் உறுப்பினர் வைகுந்தலால் சர்மா என்பவர் (எம்.பி. சர்மா) என்ன கூறினார் தெரியுமா? இப்பொழுது நினைத்தாலும் குருதி உறைந்து விடும். தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்றுமிக்க இந்து இளைஞர்களின் கோபம்! என்று இந்தக் கேவலத்தை மிகப் பெரிய தேசப்பற்றின் வீர சாதனைபோல் பேசினாரே!

மேற்கு வங்காளத்தில் நடந்ததைப் பார்த்தால் அன்று மத்தியப் பிரதேசத்தில் நடந்தது போலவே நள்ளிரவில் அதே பாணியில்தான் நடந்திருக்கிறது.

இரண்டொரு நாட்களில் அனேகமாக இதன் பின்னணித் தகவல்கள் அப்பட்டமாக வெளி வந்து விடக் கூடும்.

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகே இந்தியா முழுமையும் மதக் கலவரங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் மிக அதிக மாகவே தலை விரித்தாடத் தொடங்கிவிட்டன.

இதில் வெட்கக் கேட்டுக்குப் பிறந்த அவலம் என்னவென்றால் பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமாக இருந்த பிஜேபி மற்றும் சங்பரிவார்களை சேர்ந்த பெருந் தலைவர்கள், கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். ஏன், இந்தியாவின் துணைப் பிரதம ராகவும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக வும் ஆனார்களே! வேறு எந்த நாட்டிலாவது இந்த ஆபாசச் சகதி வழிந்தோடுமா!?

இன்று அவர்கள் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி அதிகார பூர்வமாகவே 120 கோடி மக்கள் திறனைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விட்டதே!

இந்த அதிகாரப் பீடத்தின் தலைமை அமைச்சராக வந்துள்ளவர் யார் என்றால், ஒரு மாநிலத்தில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது முதல் அமைச்சராக இருந்தவர்

நாடு எந்தப் பாதையில் எக்கேடு கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ளது பார்த்தீர்களா? இது பாரதப் புண்ணிய பூமியாம்.

இது போதாது என்று இந்தியாவையே இந்து நாடாக ஆக்கப் போகிறார்களாம். எப்படி ஆக்குவார்கள்? இரவோடு இரவாக ஒரு சட்டத்தைப் (ளிக்ஷீபீவீஸீணீஸீநீமீ) பிறப்பித்தா?

மன மாற்றத்தால் நிகழ வேண்டிய ஒன்றை மதம் பிடித்த யானைபோன்ற மனிதர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன், எப்படியும் அது நிகழ வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்.

ஏதோ ஒரு சூழலில் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள் - அந்தத் தவறை வெகு மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.
எவ்வளவு சீக்கிரத்தில் விடிவு ஏற்படுமோ, அவ் வளவுக் கவ்வளவு நாட்டுக்கும், நாகரிக வாழ்வுக்கும் நல்லது.
மக்கள் மத்தியில் மதவாதப் போக்கினைத் தோலுரிக் கும் கருத்தும் பிரச்சாரமும் திட்டமிட்ட வகையில் நடத்தி ஆக வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் - தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும் பயனை விளைவிக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/98029.html#ixzz3UdysLeNh

தமிழ் ஓவியா said...

பத்தினி - பதிவிரதை

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச் சொற்களுமல்ல. - (விடுதலை, 4.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/98061.html#ixzz3UkH51Slc