Search This Blog

9.7.13

பயிர்ப்பு என்றால் என்ன பொருள்?

கும்மிடிப்பூண்டி மாநாடு


சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் சென்னை மண்டல மாநாடு 6.7.2013 சனியன்று முழு நாள் நிகழ்ச்சியாக வெகு நேர்த்தியாக நடைபெற்றது.

காலையில் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற பட்டிமன்றம் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கணித்தது போல கருத்தரங்கம் என்று சொல்லும் அளவில் கருத்துச் செறிவுடன் நடைபெற்றது.

பொதுவாக பட்டிமன்றம் என்று சொன்னால் பொழுதுபோக்குக்காக - தொழில் ரீதியாக நடை பெறுவது தான் வழமை. இரண்டு அணிகளில் உள்ளவர்கள் எதை எதைச் சொல்ல வேண்டும்? எந்த நகைச்சுவை துணுக்கைக் கொடுக்க வேண்டும்? அதற்கு எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் பதிலாக எந்தத் துணுக்கைச் சொல்ல வேண்டும்?

இடையில் புகுந்து நடுவர் எந்தக் கதையை சொல்லி பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பதெல்லாம் திட்டமிட்ட வகையில், ஒத்திகை நடத்தி நடைபெறுவதுதான் நாட்டில் பெரும்பாலும் நடைபெறுவ தாகும்.
பட்டி மன்றத்தை மக்களுக்குக் கருத்துகளை, சிந்தனை களைக் கொண்டு செல்லும் வாகனமாக மாற்றி, புது திருப்பத்தைக் கொடுத்தது திராவிடர் கழகமே!

மதம் என்றால் உயர்ந்தவைகளைச் சொல்லுவது, புராணம் என்றால் புத்தியைக் கொடுப்பது என்று  பக்தி என்னும் தேனில் குழைத்துப் புகட்டி மக்களை மடையர்களாகவே கட்டிப் போடுவார்கள்.

ஆனால் அவை எல்லாம் உண்மைக்கு மாறானவை; ஆபாசமும், மூடநம்பிக்கையும் குடி கொண்டவை என்பதை பாமர மக்களும் புரிந்து கொள்ள ஆபாசம் - மூடநம்பிக்கைகளில் விஞ்சி நிற்பது சைவமா? வைணவமா? என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் பட்டிமன்றத்தை நடத்தி, புத்தி தீட்டும் பணியில் கழகம் வெற்றி பெற்றதுண்டு.

கும்மிடிப்பூண்டி மாநாட்டில் நடைபெற்ற பட்டிமன்றத் தின் தலைப்பு இந்தியாவில் பெண்கள் மதிக்கப்படு கிறார்களா? மிதிக்கப்படுகிறார்களா? என்பதாகும். இரண்டு அணியிலும் பெண்களும் இருந்தார்கள்; ஆண்களும் இருந்தனர்.

நடுவராக ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் உலக நாயகி பழனி அவர்கள் பொறுப்பேற்று பட்டிமன்றத்தை கலகலக்க வைத்ததோடு ஆழமான கருத்துக்களையும் வாரி இறைத்தார்.

அதனையொட்டி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியல் கருத்துக்களை வழங்கினார்.
பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு உள்ளவராக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தில், பயிர்ப்பு என்றால் என்ன பொருள் என்பதை மதுரைத் தமிழ்ப் பேரகராதியிலிருந்து எடுத்துக்காட்டினார்.

குறிப்பாக பயிர்ப்பு என்றால் என்ன பொருள்? அசுத்தம், குற்சிதம் என்று கூறப்பட்டுள்ளது. குற்சிதம் என்றால் என்ன? அதற்கு அந்த அகராதியில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

குற்சிதம் என்றால் அசுத்தம் - அருவருப்பு என்று பொருள் கூறப்பட்டுள்ளது. ஒரு பெண்ணென்றால் அசுத்தம், அருவருப்பாகப் பார்ப்பதற்கு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? என்ற  வினாவை தமிழர் தலைவர் எடுத்துச் சொன்னபோது பெரும்பாலும் பெண்களே நிரம்பி வழிந்த அந்தக் கூட்டத்தில் அந்தக் கருத்தை ஆச்சரியத்துடன் கேட்டனர். சொல்லப் போனால் கல்லூரித் தலைமைப் பேராசிரியரும், முனைவர் பட்டம் பெற்றவருமான உலக நாயகி பழனி அவர்களேகூட, இதன் பொருளை இன்றே அறிந்ததாகக் கூறி, ஆவேசப்பட்டார்.
திராவிடர் கழகம் நடத்தும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், மக்களுக்குப் பயன் விளைவிக்கும் தன்மை உள்ளதாகவும், வரும் மக்கள் புதிய கருத்துக்களை, தகவல்களைத் தெரிந்து செல்லும் முறையில் இருப்பது தான் கழகப் பிரச்சார மேடைக்குள்ள தனித் தன்மையான கருத்தியலாகும்.

பெண்கள் இன்றைக்குப் பல்வேறு வகைகளிலும் இழிவுபடுத்தப்படுகிறார்கள், அடக்கி ஒடுக்கப்படு கிறார்கள் என்பதெல்லாம் உண்மை என்றாலும் கல்வி, வேலை வாய்ப்பு, சொத்துரிமை, போன்ற நிலையில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில் பழைய நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு தான் வருகிறது.

அதுவும் தந்தைபெரியார் தோன்றி புரட்சி கரமான கருத்துக்களை விதைத்த நிலையிலும், போராடிய நிலையிலும் பெண்கள் மிதிக்கப்படுகிறார்கள் என்பது பொருத்தமானதாக இருக்க முடியாது என்று தீர்ப்பினை வழங்கினார்கள்.
கும்மிடிப்பூண்டி பட்டிமன்றம் - இந்த வகையிலே பட்டிமன்றத்திற்கும் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

தொழில் பட்டிமன்றம் நடத்துபவர்களும்கூட வெறும் பொழுது போக்கும் அரட்டை மன்றங்களாக அமைத் திடாமல், மக்கள் சிந்தனையை - பயனுள்ள வகையில்  சாணை தீட்டக் கூடியதாக இருந்தால், சிறப்பானது என்பதையும், பேச்சாளர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வும் தேவை என்பதையும் வலியுறுத்துகிறோம்!
                  ----------------------"விடுதலை” தலையங்கம் 8-7-2013

30 comments:

தமிழ் ஓவியா said...


காரணம்



எதற்கும் பகுத்தறிவை உப யோகிக்க விடாமலும், ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்கா மலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப் பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.

- (குடிஅரசு, 4.5.1930)

தமிழ் ஓவியா said...


நிதி வழங்க விரும்புகிறேன்


நிதி வழங்க விரும்புகிறேன்

தமிழர் தலைவர் அவர்களுக்கு என்றும் உங்கள் கொள்கைத் தொண்டன் இன்று திருவாரூர் மாவட்ட கழகக் குடும்பங்களின் கலந்துரையாடலில் குடும்பத்துடன் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோராது செயலாற்றி வரும் தங்களின் தொண்டறம் தொடர பெரிதும் விழைகின்றேன்.

மூடநம்பிக்கையிலிருந்து இன்னும் விடுபடாத மக்கள், அரசியலிலும் தெளிவற்ற நிலை, இன உணர்வற்ற தமிழர்கள், இவற்றுக்கிடையே இனமான பகுத்தறிவுப் பேரொளியாக அய்யாவின் வழியில் தங்கள் எழுத்தும், பேச்சும், செயல்பாடுகளும் என்றும் தொடர என்றும் எங்கள் துணை உங்களுக்கு இருக்கும்.

தங்களை 2013-ஆம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரிதும் மகிழ்ந்து தங்கள் உடல்நல மருத்துவ பாதுகாப்பு நிதியாக ரூ.2013/- (இரண்டா யிரத்து பதின்மூன்று ரூபாய் மட்டும்) வழங்கி மகிழ்கிறேன். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் நிதி வழங்கிட விரும்புகிறேன்.

- மணியம் கிருஷ்ணமூர்த்தி, புலிவலம்.

தமிழ் ஓவியா said...

விடுதலையின் பணி

28.6.2013 விடுதலை இதழின் மழை வேண்டி யாகமாம் என்ற தலையங்கமும், மும்மாரி என்ற ஒற்றைப் பத்தியும் பல முறைப்படித்து பயனுற மட்டுமல்ல, பத்திரப்படுத்தவுமான பதிவுகள். தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்து எழுப்பப்பட்டவை அனைத்தும் வெறும் கேள்விகள் அல்ல. கொள்கைக் கூர் ஆயுதங்கள்! அறிவின் பகைவர்கள் எவரும் பதில் கூறும் திராணியற்று விழி பிதுங்கச் செய்யும் வினாக்களைத் தொடுக்கும் பேராண்மை பெரியார் பேரியக்கத்துக்கு மட்டுமே உண்டு என்பதை இனியாவது தெரிந்து கொள்ளட்டும்.

ஆயிரம் அறிவை இவர்கள் பெற்றிருக்கலாம். ஆறாம் அறிவு இல்லையே!

மடமைப் படுகுழிக்கு மக்களை இழுத்துச் செல்லும் மதபோதையர்களை நல்வழிப்படுத்த இதுபோல் வீறுகொண்டு எழட்டும் விடுதலை.

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...


தலைவர்கள் சிந்திக்கட்டும்!


கும்மிடிப்பூண்டி மாநாடு பல வகைகளிலும் சிறப்பானது. கழகத்தின் புதிய மாவட்டமாக உதயமான இம்மாவட்டத்தில் இப்படி ஓர் எழுச்சி மாநாடு நடைபெற்றது என்பது சாதாரணமானதல்ல.

மூடநம்பிக்கையை முன்னிறுத்திப் பேசப்படும் கருத்துகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதை அறிய முடிகிறது. மாநாட்டின் நிறைவுரையில் தமிழர் தலைவர் ஆற்றிய அந்த வகையான பேச்சுக்குப் பெரும் வரவேற்பைக் காண முடிந்தது. அரசியல் தொடர்பான தலைப்புக்குச் செல்லாமல் மக்களின் அறியாமை குறித்துச் சுட்டிக் காட்டி அவர் பேசிய பேச்சுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது.

குறிப்பாக கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் தவிர்த்து பார்ப்பனர் அல்லாதார் செல்லக் கூடாது; அர்ச்சனை செய்யக் கூடாது - அப்படி சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்ற ஏற்பாட்டின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் கருத்துக்களை எடுத்து வைத்தார்.

கடவுள் தீட்டுப்பட்டு விடும்; தோஷம் பட்டு விடும் என்று கூறுவதே அவர்கள் கூறும் கடவுள் தன்மைக்கு முரண்பாடு இல்லையா? என்ற கேள்வி எல்லோரையும் கவர்ந்தது.

கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகம் கோயில் அர்ச்சகர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வது ஏன் என்ற கேள்விக்கு நியாய மான அறிவு நாணயமான பதிலை வழங்கினார்.

கடவுள் இல்லை என்பது எங்கள் கொள்கை; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது மனித உரிமைப் பிரச்சினை என்று அழகான முறையில் பதில் அளித்தார்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் திராவிடர் கழகத்தினர் எவரும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்தினர்.

இந்தப் பிரச்சினையில், ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றி, நீதியரசர் மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்குவது ஆகமங்களுக்கு விரோதமானதல்ல என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதே!

அந்தக் குழுவில் திருமுருக கிருபானந்தவாரியார், காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களும் அங்கம் வகித்தனரே!

நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், பயிற்சிப் பள்ளி அமைத்துப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளதே!

இதற்குமேல் என்ன ஆதாரங்கள், நியாயங்கள் தேவை? உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் எதற்கு முட்டுக்கட்டை போடுகிறது?

தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு, அதன் முதலமைச்சர் (1999-2004) ஆட்சிக் கால கட்டத்தில், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பச்சைக் கொடி காட்டியதே! இப்பொழுது ஏன் இந்தப் பிரச்சினையில் அழுத்தமான அமைதியை மேற்கொள்கிறது?

இந்தப் பிரச்சினை குறித்து திராவிடர் கழகம் தவிர, மற்ற கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் ஏன் போதுமான அக்கறை இல்லை? இது என்ன ஓர் இயக்கப் பிரச்சினை மட்டும் தானா?

தந்தை பெரியார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத, மதிக்காத கட்சியோ, தலைவரோ தமிழ் நாட்டில் இருக்கிறார்களா? அப்படி இருக்கும்போது தந்தை பெரியார் தன் இறுதிப் போராட்டம் என்று அறிவித்த - இந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஏன் அக்கறை காட்டுவதில்லை?

அதே நேரத்தில் தன் ஜாதி ஆதிக்கத்தைச் சற்றும் விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையில் பார்ப்பனர்கள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்லுவதை அறிந்திருந்தும் பார்ப்பனர்பற்றிய புரிதல் நம் பார்ப்பனர் அல்லாத தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் புரியவில்லையா? தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைக்கப் பெற்றால், அது இந்தியா விலேயே புரட்சிகரமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துமே.

ஜாதி வெறியைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் நடத்தப்படுவதற்கும் முடிவு கட்டப்பட்டு விடுமே!

நிதானமாகச் சிந்திக்கட்டும்; இது மிக மிக முக்கியமான மனித உரிமைப் பிரச்சினை - அலட்சியம் காட்டுவது பொறுப்பற்ற தன்மையாகும்.

வேறு தடங்களில் எதைச் சாதித்து இருந்தாலும், இந்தப் பிரச்சினையில் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதன் மூலமே தலைவர்களும் அமைப்புகளும் எதிர்காலத்தில் மதிக்கப்பட முடியும்.

சிந்திப் பார்களாக!

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...

மதுரை, ஜூலை 9- நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண் டும் என மதுரையில் நேற்று (8.7.2013) நடை பெற்ற பொதுக் கூட்டத் தில் தமிழர் தலைவர் வலியுறுத்தினார்.

அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை, சேது சமுத்திரத் (தமிழன் கால்வாய்) திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி நாகர் கோவில் முதல் மதுரை வரை -ஒரு குழுவும் தென்காசி முதல் மதுரை வரை மற்றொரு குழுவும் தொடர் பிரச்சாரம் நடத்தி வந்தன. இந்த பிரச்சார நிறைவு விழா மதுரை டி.எம். கோர்ட் அருகே 8.7.2013 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரிமை மீட்பு எழுச்சி உரை

இக்கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: "இரண்டு பிரச்சினை களை முன்னிறுத்தி இங்கே இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. ஒன்று அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது, இன்னொன்று சேது சமுத்திரத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது 43 ஆண்டு களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை. தந்தை பெரியார் தொடங்கி, அன்னை மணியம்மை யார் தலைமையில், அதற்கு பின் என்னைப் போன்றோர் தலைமை யில் தொடர்ந்து எழுப் பப்பட்டு வரும் கோரிக்கை. கட்சிக ளுக்கு அப்பாற்பட்டு, நாத்திகமா, ஆத்திகமா என்பதற்கு அப்பாற் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில் எழுப் பப்படும் கோரிக்கை. இன்னும் சூத்திரன், பஞ்சமன் என்றில்லாமல் மனிதராக இருக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் பிரச் சினை. இதை அலட்சி யப்படுத்தினால் ஆட்சிய திகாரமே ஆட்டம் காணக் கூடும் என்பதனை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்லர். மற்ற நாடுகளில் மனிதன் மனிதனாகப் பிறக்கிறான். ஆனால் இந்த நாட்டில் தான் மனிதன் பிறக்கும் போதே, சூத்திரானாக, பஞ்சமனாகப் பிறக்கின் றான். சாகும்போதும் சூத்திரனாக, பஞ்சம னாகத்தான் சாகின்றான். இன்னும் தீண்டாமை இருக்கிறது,ஜாதி வேற்றுமை இருக்கிறது. இன்றைக்கும் ஜாதி வேற்றுமையால்தான் திவ்யாக்களும், இளவர சன்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை.

தீண்டாமை, இன்னும் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. அரசியல் சட்டத்தில் 17ஆவது பிரிவில் தீண்டாமை நீக்கப்பட்டது (ருவேடிரஉடைவைல ஹடிடளைநன) என்று தான் இருக்கிறது: இன்னும் ஜாதி ஒழிக்கப் பட்டது என்று அரசியல் சட்டத்தில் இல்லை. அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகப் பயிற்சி பெற்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி சிறீ ரங்கம் கோயில், காஞ்சி காமாட்சி கோயில் போன்ற இடங்களில் அர்ச்சகர்களாக நியமிக் கப்பட வேண்டும். ஜாதி இழிவு நீங்கும் வரை விட மாட்டோம். சட்டப்படி யாக போராடுவோம்! அறப் போராட்டமாக போராடுவோம். ஒரே நாளில் முடியும் போராட்டமாக அல்ல பல கட்டங்களாக போராடுவோம் உறுதி யாக வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்பட்டும்கூட இப்பொழுதுதான் ஒரு பிற்படுத்தப்பட்டவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (சதாசிவம்) ஆகியிருக் கிறார். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீதியரசர் பி. சதா சிவம் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார் கள். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தமிழர் தலைவர் பேசி னார். மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு

திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

இந்த நாட்டினுடைய 65 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக தமிழ்நாட்டைச் சார்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதியரசர் சதாசிவம் அவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருகின்ற 19 ஆம் தேதி பதவியேற்க விருக்கிறார். ஆனால், ஒரு கொடுமை என்னவென்றால், அவர் அந்தப் பதவியில் 9 மாதங்கள்தான் இருப்பார்.

இந்த 9 மாதத்திலும் அய்ந்து மாதங்கள் வரவேற்பு; மீதி நான்கு மாதத்தில் பிரிவு உபசார விழா; இதிலேயே பதவிக்காலம் முடிந்துவிடுமே! ஆனால், அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்; ஏர் பிடித்த உழவர் அவர்; ஈரோட்டு மண்ணிலே பிறந்த ஒருவர், முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவதற்கு முன்னாலேயே, நீதிபதிகள் நியமனங்களில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தேவை என்று கூறியுள்ளார். இதுவரை மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகள் நியமனங்களில் மட்டும்தான் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. முதல் முறையாக பெரியார் பிறந்த மண்ணிலே இருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்திருக்கிறார்.

அவர் பதவி ஏற்பதற்கு முன்பு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்திலும் இடஒதுக்கீடு அமலாக வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார். இதற்காகத்தான் திராவிடர் கழகத்தினுடைய அடுத்த கிளர்ச்சி! அதில் ஒன்றும் சந்தேகமில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.

(8.7.2013 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையிலிருந்து...)

தமிழ் ஓவியா said...


தலைமைச் செயற்குழுவில் கழகத் தலைவரின் பன்மணித் திரள்கள்!

புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

1. தென்மாவட்டங்களில் ஜாதி தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை) மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. அவற்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களுக்கும், மந்திரமா? தந்திரமா? கலைஞர்களுக்கும், ஒருங்கிணைத்த வர்களுக்கும், கூட்டங்களைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் பாராட்டுகள் - நிறைவு விழா மதுரைப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் - பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர், மகிழ்ச்சி!

2. கும்மிடிப்பூண்டி மாநில மாநாடு திட்டமிட்ட முறையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கும், ஒருங்கிணைத்தவர்களுக்கும் சிறப்பான பாராட்டுகள் - எனக்குப் பெரும் அளவில் மனநிறைவை அளித்த மாநாடு இது!

3. மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலா ளரணி இவற்றின் செயல்பாடுகள் தனித்தனியாக நடை பெற்று, மேற்கொள்ளப்பட்ட பணிகள் தலைமைக்குத் தெரிவிக்கப்படவேண்டும். நகராட்சி, மாநகராட்சிகளில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இயக்கம் வலிமை பெற அவ்விரு அணிகளும் செயல் திட்டத்தோடு சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும்.

4. தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மாண வரணி, இளைஞரணி, மகளிரணி சார்பில் தனித்தனியே நாடு தழுவிய அளவில் கருத்தரங்கம் நடைபெறவேண்டும். அவற்றின் முக்கிய பொருள்: ஜாதி ஒழிப்பு, மகளிர் உரிமை, சமூகநீதி.

5. மன்றல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. இயக்கத்தின் நடவடிக்கைகளைப் பல தரப்பினரும் பாராட்டுகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் நடைபெற்றுள்ளதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் நெல்லையில் நடைபெறவுள்ளது. ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம், அதற்கான ஆக்க ரீதியான செயல்பாடுகள் இன்னொருபுறம் - அதுதான் நாம் நடத்தும் மன்றல் நிகழ்ச்சி.

6. மண்டலத் தலைவர்கள், செயலாளர்களுக்கென தனியே ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு, அவர் களின் பணிகள் வரையறுக்கப்படவேண்டும் (இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்).

7. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் பல கட்டங்களில் நடைபெறும். ஒவ்வொரு ஊரிலும் இந்தப் போராட்டம்பற்றி பொதுமக்களுக்குத் தெரியும் வண்ணம் - அவர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் சுவர் எழுத்துகள், துண்டறிக்கைகள், கழகம் வெளியிட்ட கையடக்க ஆவண நூல் பரப்புதல் (நன்கொடை ரூ.5 மட்டும்தான்) என்று புது உத்வேகத்தோடு பணிகள் நடைபெற்றாகவேண்டும்.

8. இந்தப் போராட்டத்திற்கு எந்தப் பக்கத்திலிருந்தும் எதிர்ப்புக் கிடையாது. ஆளும் கட்சி - எதிர்க்கட்சி, ஆத்தி கம் - நாத்திகம் என்பது போன்ற எந்தப் பிரச்சினையும் இந் தப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் கிடையவே கிடை யாது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து நடத்தலாம்.

9. பணி செய்பவர்களுக்கு இயக்கத்தில் உரிய இடம் அளிக்கப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்படும். பணிதான் அளவுகோலே தவிர மற்றவையல்ல.

10. இயக்கத்தைப் பனைமரத்துக்கு ஒப்பிட்டுக் கூறுவார் தந்தை பெரியார். தண்ணீர் ஊற்றாமலேயே வளரக்கூடியது! காரணம், நம் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை சுயநலமின்றி, எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி, அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செய்யக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம் - தொண்டர்கள் திராவிடர் கழகத்தினர்.

11. என்னைப் பொறுத்தவரை உடல் உபாதைகள் பல இருப்பினும், கழகத்தின் செயல்பாடுகள் எனக்கு உற்சாகம் என்கிற டானிக்கை அளிக்கின்றன! ஓய்வு குறைகிறது - நல்ல ரத்த ஓட்டம் ஏற்படுகிறது - எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்!

- பன்மணித் திரளாக மேற்கண்ட கருத்துகளை சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எடுத்துக் கூறினார் (9.7.2013).

தமிழ் ஓவியா said...


இலங்கையில் 13-ஏ சட்டம் தப்புமா?


கொழும்பு, ஜூலை 10- இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கரமேனன் தலைமையில் இலங்கை சென்ற குழு இலங்கை அதிபர் ராஜபக் சேவைச் சந்தித்து 13-ஏ திருத்தச் சட்டம் செயல் படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடத்தப் பட்ட போர் முடிவுக்கு வந்த பின்பு, முகாம்களில் தங்க வைக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு பணிகள் துவங்கின. மறுவாழ்வு திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி செய்து வருகிறது.

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு விரைவில் தேர்தல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியா இலங்கையின் 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, தமிழர்கள் வசிக்கும் மாகாண கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அந்தத் திருத்தத்தை மறு ஆய்வு செய்து அதிகாரங்களை குறைக்க இலங்கை அரசு முயற் சித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் தலை மையில் 6 பேர் குழு கொழும்பு வந்துள்ளது. கொழும் பில் அதிபர் ராஜபக்சேவை மேனன் சந்தித்து பேசி னார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் மறுசீரமைப்பு திட்டப்பணிகள் குறித்து விவாதித்தனர். இதன்பின்னர், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தமிழர்கள் உள்பட அனைத்து மக்களும் சமமாகவும், கண்ணியமாகவும் நடத்தப் பட வேண்டுமென இந்தியா விரும்புகிறது. இந்த அடிப்படையில், உலக நாடுகளுக்கு இலங்கை அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். 13 ஆவது திருத்தத்தையும் கடந்து சிறப்பான அரசியல் தீர்வை விரைவில் காண வேண்டுமென மேனன் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு கூட்டாக செயல்படுவது என முடிவு செய்து, இதற்காக முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சிவசங்கர் மேனன், இலங்கை ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு ராணுவ அமைச்சர் முகமத் நசீம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: கழக முயற்சிக்கு முதல்கட்ட வெற்றி!

94 பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்க!

சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை, ஜூலை 10- ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவை யில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் பலன் பெறுவர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2010 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி 32 ஆயிரம் பட்டதாரிகள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர்.

அனைத்து மாவட்டங்களிலும் 12.5.2010 முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. பணி நியமன ஆணைக்காகக் காத்திருந்த அவர்கள் யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே இனி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று அரசு கூறிவிட்டது.

இதனை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்ளிட்ட 70 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களின் மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர்நீதி மன்றத்தின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது.

இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி அவர்கள் 70 பேரும் உயர்நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல் என்.பரந்தாமன் உள்ளிட்ட வேறு 24 பேர் தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதனை எதிர்த்து அவர்கள் அனைவரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

ஆக 70 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், பின்னர் 24 பேர் தனியாக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு தாரர்கள் 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப் பளித்தனர்.
தீர்ப்பு விவரம் வருமாறு:

2010-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்புப் பணிக்கு மனுதாரர்களின் பெயர்களை வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய நிலவரப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் எழுதாமலேயே அவர்கள் ஆசிரியர் பணி நியமனத்துக்கான முழுத் தகுதியையும் பெற்றி ருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற அறிவிக்கையை 23.8.2010 அன்று ஆசிரியர் கல்விக் கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. எனினும் அதில் ஒரு விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிக்கை வெளியாகும் முன்னரே ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற் றிருந்தால், அந்த பணி நியமனங்களை 2001 ஆம் ஆண்டின் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிமுறைகளின்படி மேற்கொள்ளலாம் என்ற அந்த விதிவிலக்கில் கூறப்பட்டிருந்தது.

ஆகவே, இந்த வழக்கில் தொடர்புடைய 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவை யில்லை. எனினும் தற்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட காலியிடங்கள் இல்லை என்று அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார்.

ஆகவே, எதிர்காலத்தில் காலியிடங்கள் உருவாகும் போது இவர்கள் அனைவரையும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர் பணியில் நியமித்திட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கடந்த 5.7.2013 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...



போர்ச் சங்கு!


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நேற்று கூடி போர்ச் சங்கு ஊதிவிட்டது.

தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாதாம் - கூடாதாம் - கருவறைக்குள் நுழைந்து தமிழர்கள் அர்ச்சனை செய்தால் கடவுள் சக்தி வெளியே தலைதெறிக்க ஓடிவிடுமாம். எஞ்சி இருப்பது கல்லோ, செம்போ அவ்வளவுதானாம்.

இவ்வளவுக்கும் அந்தக் கோவிலைக் கட்டியதில் பார்ப்பனர்களுக்கு எந்தவிதப் பாத்தியதையும் இல்லை. ஒரு செங்கல்லைத் தூக்கிக் கொடுத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் கோவிலுக்குள் இருக்கும் அந்தக் கடவுள் சிலையைச் செய்தவன்கூட சிற்பியாகிய தமிழன்தான்.

கோவிலைக் கட்டி கோவிலில் கருவறையையும் உருவாக்கி, அதற்குள் வைக்கவேண்டிய சாமி சிலை யையும் வடித்து, கோவிலுக்கு குடமுழுக்கு என்று அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து முடித்த நிலையில், கும்பத்தில் ஏறுவதற்குச் சாரம் அமைத்துக் கொடுத்து, கும்பத்தில் ஊற்றவேண்டிய பால் உள்பட அனைத்துப் பொருள்களையும் கொண்டுவந்து கொடுப்பவன் எல்லாம் தமிழன்! தமிழன்!! தமிழன்தான்!!!

அதுவரை எள் மூக்கு முனை அளவுகூட எந்தவித உதவியும் செய்யாத பார்ப்பனர் கும்பத்திற்கு அபிஷேகம் செய்து, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் - சம்பந்தமே இல்லாத புரியாத சமஸ்கிருத மந்திரங்களை ஓதிய அக்கணமே கோவிலுக்கும், தமிழனுக்கும் எந்தவிதமான ஒட்டுறவும், சம்பந்தமும் இல்லாமல் போகிறது.

இதைவிட கொடுமையான சூழ்ச்சி உண்டா? மண்ணின் மைந்தர்களுக்கு இதைவிட அவமானம் உண்டா?
எந்த அளவுக்குக் கொடுமை என்றால், அந்தக் கடவுள் சிலைக்குக்கூட பூணூல் மாட்டி வைப்பதுதான் - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஏழுமலையானுக்கு மூன்றரை கிலோ தங்கத்தினால் ஆன பூணூலை மாட்டியது மறக்கப்படக் கூடியதுதானா?

கோவில் என்பது பார்ப்பன உயர்ஜாதி ஆணவத்தை, வருணாசிரமத்தை பாதுகாக்கும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்னவாம்!

உலகத்தில் வேறு எங்கேயாவது - சொந்த நாட்டுக் காரன் இவ்வளவுக் கேவலமாக அவமதிக்கப்படு வதுண்டா? அப்படி அவமதித்தால் மயிலே மயிலே இறகு போடு! என்று யாசகம் கேட்டுக்கொண்டுதான் இருப் பானா? மனு போட்டுக் கொண்டுதான் இருப்பானா?

மனிதனுக்கு முதலாவது உணர்வு என்பது சுய மரியாதைதானே. அதற்கே சவால் என்றால், அதனைக் கண்டு கொண்டு கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க முடியுமா?

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று திருக்குறளைவிட சுருக்கமாக மனிதனைப் படம் பிடித்துக் காட்டிவிட்டாரே தந்தை பெரியார்.

ஏதோ ஆகமமாம், அதில் சொல்லப்பட்டுள்ளதாம் - பார்ப்பனர் அல்லாதவன் கருவறைக்குள் சென்றால் கடவுள் தீட்டுப் பட்டுப் போய்விடுவாராம். யாரால் எழுதப்பட்டது அந்த ஆகமங்கள்? அவர்களாகவே எந்தக் காலத்திலோ சூழ்ச்சியாக எழுதி வைத்துக்கொண்டு அதனைப் பூச்சாண்டியாகக் காட்டி நம்மை மிரட்டு கிறார்கள் என்றால், அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள தமிழர்கள் எல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்களா?

தன்மான உணர்வினை தமிழர்களுக்கு ஊட்டிய தந்தை பெரியார் அவர்களால், தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்ட போராட்டம் இது.

இன்றைக்கு 43 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் சட்டம் கொண்டுவந்தாலும், அதனை மலம் துடைக்கும் காகிதமாகப் பார்ப்பனர்களும், நீதிமன்றங்களும் நினைப்பது என்றால், இதனை எப்படி அனுமதிக்க முடியும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி. ஆத்திகம் - நாத்திகம் என்கிற பிரச் சினைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பொதுப் பிரச்சினை இது.

எதிர்க்கக் கூடியவர்கள் பார்ப்பனர்களும், அவர் களின் ஆதிக்கத்தில் இருக்கக் கூடிய நீதிமன்றமும்தான்.
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட மூன்று கட்டப் போராட்டங்களுக்கும் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் போரணியாக நின்று போர்ச் சங்கு ஊதிப் புறப்படுவோம் - வாரீர்!

தமிழர்களின் பழம்பெருமை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; இப்பொழுது கோவில்களில் நாம் மீட்கும் இனவுரிமையில்தான், இழிவை ஒழிக்கும் உரிமையில் தான் தமிழர்களின் உண்மையான வீரதீரமும், தன்மான மும் உண்மையில் இருக்கிறது!

மறவாதீர்! மறவாதீர்!! முதல் கட்டப் போராட்டம் ஆகஸ்ட் முதல் தேதியில் - கழக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! ஆர்ப்பரித்துக் கிளம்புக அரிமா சேனையே!

தமிழ் ஓவியா said...


ஆகமங்களில் இடைச் செருகல் - 2


எதற்கு எடுத்தாலும் ஆகமங்கள் ஆகமங்கள் என்று கூறி கோயில்களைத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்துள்ளனரே பார்ப்பனர்கள்; அந்த ஆகமங்களில் இடைச் செருகல் எப்படி எல்லாம் நடந்துள்ளன என்று நீதிபதி எஸ். மகராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை (பக்கம் 20-21) என்ன கூறுகிறது? படியுங்கள்.

1. ஆகமங்களில் காமிகம், காரணம், அஜிதம், சகஸ்ரம், சுப்ரபேதம், ரவுரவம், மகுடம், மதங்கம், கிரணம் வாதுளம் என்பவற்றின் பகுதிகள் சமஸ்கிருதத் தில் அச்சில் வெளி வந்துள்ளன. 28 ஆகமங்களில் புதுச்சேரி பிரஞ்சு ஆராய்ச்சி நிலையத்தில் (குசநஉ ஐளேவவைரவந டிக ஐனேடிடடிபல) 23 ஆகம ஏட்டுச் சுவடிகள் இதுவரை கிடைத்துள்ளன. உபாகமங்களில் பவுஷ்கரம், பிருகேத் திரம், குமாரதந்திரம் என்பனவும் அச்சாகியுள்ளன.

2. கிடைக்கின்ற ஆகம ஏட்டுச் சுவடிகள் யாவும் நெடுங்காலத்துக்கு முன்னமே தொடங்கி, ஒன்றைப் பார்த்து ஒன்றை எழுதித் தொடர்பாக வந்தன வாகும். இவற்றைப் பெரும்பாலும் சிவாச்சாரியார்களே வைத்திருந் தார்கள். காலப் போக்கில் ஒரு ஏடு சிதிலமாகிப் போகின்ற நிலையில், ஒருவர் அதைப் பார்த்து மற்றொன்றை எழுதி வைத்துக் கொண்டபோது, தான் அவசியம் என்று கருதியவற்றையும் புதிதாக எழுதிச் சேர்த்துக் கொண் டனர் என்று நினைக்க இடமுண்டு. ஆகவே நமக்கு இன்று கிடைக்கின்ற ஆகமச் சுவடிகள் மூலச் சுவடிகள் அல்ல. வழிபாடு என்பது மாறிக் கொண்டே வருகின்ற ஒரு நெறி. அதைக் கூறுகின்ற ஆகமமும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓர் உதாரணம் கூறலாம்.

தமிழ் ஓவியா said...


3. மாரியம்மன் என்ற தேவதை வழிபாடு சிறுதேவதை வழிபாட்டைச் சேர்ந்தது. எந்தச் சிவாயலத்தின் உள்ளும் மாரியம்மன் சிலை வைப்ப தில்லை. மாரி ஒரு காவல் தெய்வம். ஊரின் வெளியெல்லையில்தான் இதற்குக் கோயில் உள்ளது. ஆனால் சிவ வழிபாட்டைச் சொல்லுகின்ற விரிந்த ஒரு நூல் ஆகிய காரணாக மத்தில் இன்றைய அச்சுப் புத்தகத்தில் மாரிப் பிரதிட்டா விதி என்ற ஓர் அத்தியாயம் உள்ளது. (காரணாகமம், கொன்னூர் சண்முகசுந்தர முதலியா ரால் 1920ஆம் ஆண்டில் அச்சிடப் பட்டது) மாரிப் பிரதிட்டை சிவாகமத் தில் சொல்ல வேண்டிய பொருளல்ல. ஆயினும் பிற்காலத்தில் ஒரு சிவாச் சாரியார் தம் கைச்சுவடியில் இதை எழுதி வைத்துக் கொள்ள இதுவும் காரணாகமத்தின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. இது இடைச் செருகல் என்பது தெளிவு. இந்தப் பதிப்பாளர் காரணாகமத்தில் இறுதியில் பத்திர காளி உற்சவம், நாகப்பிரதிட்டை என்ற இரண்டு அத்தியாயங்கள் (108 சுலோ கங்கள்) இந்த ஆகம ஏட்டுச் சுவடியில், வேறு இடத்திலிருந்து எடுத்து சேர்க்கப்பட்டிருக்கிறதைக் கண்டு, அவற்றை ஓர் அநுபந்தமாய் அச்சிடுவ தாகச் சொல்லியிருக்கின்றார். ஆனால் இவைகளும் காரணாகமத்தின் ஒரு பகுதி என்றே மற்றவர்கள் கருது வார்கள். இதுபோன்ற வேறு சில பகுதிகளும் இருக்கக் கூடும். நமக்கு இன்று வேறுபாடு தெரியாமல் எல்லாம் ஒன்றாகி விட்டன. மாரி என்ற தமிழ்ப் பெயர் இன்று மகாமாரி என்றும், வடமொழியில் சீதலாதேவி என்றும் பெயர் பெற்று விட்டது.
4. காமிகாகமம் ஸ்நான விதிப் படலம் 109ஆவது சுலோகத்தில் புத்தர் (சாக்கியர்), சமணர் (நிர்கந்தர்) ஆகி யோரின் நிர்மால்யத்தைப் புசிப்பவர், பிற மதத்தவர் முதலியோரால் தீண்டப்பட்டால், ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இக்கருத்தையே சில ஆகமங்கள் சமண பௌத்த சமயங்களைக் குறை கூறுவதாக எஸ்.எஸ். சூரியநாராயண சாஸ்திரியும் தெரிவித்துள்ளார். (சிகண் டரின் சிவாத்துவைதம்) தமிழ்நாட்டில் இம்மதங்களின் தொடர்பு சுமார் கி.மு. 3-2ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது என்று ஆன்றோர் கருதுகின்றனர்.

இவர்கள் பற்றிய குறிப்பு ஆகம நூலில் இடம் பெறுகிறது என்றால், அக்கருத் துக்கள் இன்னும் சில நூற்றாண்டுகள் பிற்பட்டே இடம் பெற்றிருக்க வேண்டும். அதாவது சமணர் மதுரையில் ஆதிக் கம் பெற்றிருந்த காலமாகிய கி.பி. 3-6ஆம் நூற்றாண்டுகளில் இத்தகைய விதிகள் வகுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. ஆனால் காமி கம், காரணம் போன்ற பிரதானமான சில ஆகமங்கள் பல காரணங்களால் கி.மு. 6-5 நூற்றாண்டுகளுக்கு முற் பட்டிருக்க வேண்டும் என்று கொள்ள இடமிருக்கிறது. ஆகவே காமிகாகமத் தில் இப்படி ஒரு விதியை நாம் இப்போது காணும்போது, இது மிகவும் பிற்பட்ட காலத்தில் ஆகமத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆதலால் ஆகமங்களில் இடைச்செருகல் நிகழ்ந்துள்ளன என்று எண்ணுவதற்கு இதுவும் மற்றமொரு சான்றாகிறது.

5. வைணவ சமயத்தில் பாஞ்ச ராத்திர ஆகமம் ஈசுவர சம்மிதையில் 11ஆவது அத்தியாயத்தில் காணும் ஒரு கருத்து இங்குக் கருதத் தக்கது.

ருக் யசுஸ் சாம வேதாம்ஸ் படத்பி: பிருஷ்டத: சிதை:

காயத் பி: அக்ரே தேவஸ்ய திரமிடீம், சுருதிம் உத்தமாம்
(சுலோகம் 231, 232)

இதன் பொருளாவது, ரிக் யஜுர் சாம வேதங்களைப் பாராயணம் செய்பவர்கள் திருமாலின் பின்புறத்தில் இருந்து கொண்டு சொல்ல வேண் டும்... உத்தமமான திராவிட வேதமாகிய திவ்வியப் பிரபந்தங்களை அனுசந்திப் பவர்கள் திருமாலுக்கு முன்புறமாக இந்து அனுசந்திக்க வேண்டும். இதிலிருந்து திவ்வியப் பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள், திருவாய்மொழி பாடிய நம்மாழ்வாரின் காலத்துக்குப் பிறகு (அதாவது 9ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்துக்குப் பிறகு) இந்த ஈசுவர சம்மிதை தொகுக்கப் பெற்றி ருக்க வேண்டும். இது ஆகமங்களில் அவ்வப்போது பக்த சமூகத்தின் தேவைக்கு ஏற்ப மாறுதல் செய்யப் பெற்று வந்தன என்பதும், அவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எல்லாம் பழமையானவை அல்ல என்பதும், அவற்றில் இடைச் செருகல்கள் நிகழ்ந் திருக்கின்றன என்றும் தெளிவா கின்றன. இதிலிருந்து வைணவ ஆகமங்கள் வேதத்தைவிட திராவிட வேதத்துக்கு அளித்திருக்கின்ற ஏற்றம் நன்கு புலப்படும்.

தமிழ் ஓவியா said...

6. ஒரே ஆகமத்திற்குப் பல இடங் களிலிருந்து கிடைக்கின்ற வெவ்வேறு பிரதிகள் வெவ்வேறான அத்தியாயங் களையும், சுலோகங்களையும் பெற்றி ருக்கக் காண்கிறோம். இதனால் மூல ஆகமம் பலர் கைப்பட்டுப் பலவிதமாக மாறி வந்திருக்கின்றது என்றும் உறுதியாகிறது. (பிருகேந்திராகமப் பதிப்புகள்.)

7. ஆகமங்களை உலகுக்கு வெளிப்படுத்திய ரிஷிகளுடைய குலத்தை ஆராய்ந்தால், இடைச் செருகல் இருந்திருக்கும் என்பதற்குச் சான்று கிடைக்கிறது. சிவபெருமான் தமது ஐந்து முகங்களிலிருந்தும், 28 ஆகமங்களை, ரிஷிகளுக்கு உபதேசித் தார் என்று காமிகம் முதலான பல ஆகமங்களில் சொல்லப் பெற்றுள்ளது. மாணிக்கவாசகரும் மற்று அவை தம்மை மகேந்திரத்திலிருந்து உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் என்று கூறுமிடத்து, இக்கருத்தை ஏற்றே பாடுகின்றார். இவ்வைத்து முகங்களாவன: சத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவை. இவற்றுள் முதல் நான்கு முகங்கள் ஒவ்வொன்றும் ஐந்து ஆகமங்கள் வீதம் 20 ஆகமங்களையும், ஈசான முகம் 8 ஆகமங்களையும், ஆக 28 ஆகமங்களை உபதேசித்ததாக ஆகம வரலாறு. இந்த முகங்களில் உபதேசம் பெற்ற ரிஷிகள் முறையே கௌசிகர் காசியபர், பாரத்து வாஜர் கௌதமர், அகஸ்தியர் என்போர். இதன் விளக்கத்தைக் காமிகம், காரணம் முதலியவற்றின் தந்திராவ தாரப் படலத்தில் காணலாம். இவர்கள் பாரத்துவாஜர் பிராமணர். ஏனை நால்வரும் பிராமணர் அல்லர். காசியபர் (கொல்லர் மரபு), கௌதமர் (நாவிதர் மரபு), அகத்தியர் (வேடர் மரபு), இவ்வாறு பிராமணர் அல்லாத, அல்லது சிவப்பிராமணர் அல்லாத வேறு குலங்களில் பிறந்த இந்த ரிஷிகளே உபதேசம் பெற்று உலகத்தில் வெளிப்படுத்தினார்களே அன்றி, சிவப்பிராமணர்கள் அல்லர். இவ்வாறு சொல்லும் பகுதிகள் பிற்காலத்தில் சிவாச்சாரியர்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டன என்று நினைக்க இடமிருக்கிறது. ஆகமங்களில் இடைச் செருகல் நிகழ்ந்திருக்கிறது என்று கருதுவதற்கு இதுவும் ஓர் ஆதார மாகும்.

தமிழ் ஓவியா said...


தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம்


டெசோ தலைவர் கலைஞர் தலைமையில்
தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ)
கலந்துரையாடல் கூட்டம்

டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 16.7.2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் தமிழ்ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரை யாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

தமிழ் ஓவியா said...


அரசியல்வாதிகளின் அடி வயிற்றைக் கலக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு!


கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றால் பதவிகள் பறி போகும்!

புதுடில்லி, ஜூலை 11-கிரிமினல் வழக்குகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் நீடிக்க முடி யாது. மேல்முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்கும் தகுதி அவர் களுக்கு கிடையாது. உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கிரிமினல் வழக்கு களில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக் கப்பட்டவர்கள் தேர் தலில் போட்டியிடும் தகுதியை இழக்கின்றனர். தண்டனை காலம் முடிந்த பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர் தலில் அவர்கள் போட் டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8 (3)இல் கூறப்பட்டுள்ளது. அதே நேரம், பதவியில் இருக் கும் எம்.பி., எம்எல்ஏ.க் களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும் கூட, 3 மாதங்களுக்கு அவர்களை தகுதியிழப்பு செய்யக் கூடாது. அதற் குள் மேல் நீதிமன்றங் களில் அவர்கள் மேல் முறையீடு செய்தால், அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் தகுதியிழப்பு செய்யக் கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(4)இல் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், லில்லி தாமஸ் என்ற வழக் குரைஞரும், லோக் பிரஹரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் என்.சுக்லா வும், மக்கள் பிரதிநிதித் துவ சட்டப் பிரிவுகள் 8 (3), 8(4)இல் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனு மதித்தால், அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக் கம் மேலோங்க ஊக்கம் அளித்ததுபோல் ஆகி விடும். மேலும், தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனு மதிப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோத மானது. எனவே, நீதிமன் றங்களில் தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனடியாக பறிக்கும் படி உத்தரவிட வேண் டும் என்று மனுவில் அவர்கள் கோரினர்.

நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யா ஆகி யோர் அடங்கிய டிவி ஷன் அமர்வு இதை விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ.க்கள் பதவியில் நீடிக்க கூடாது. மேல் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்க முடி யாது. தண்டனை விதிக் கப்பட்ட தினத்தில் இருந்தே, அவர்கள் தகுதியிழப்பு பெற்று விடுவார்கள். இந்த தீர்ப் புக்கு முன்பாக தண் டனை பெற்று, மேல் முறையீடு செய்துள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந் தாது என்று உத்தர விட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக் கும், கிரிமினல் வழக்கு களில் சிக்கியுள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கும், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு அதிர்ச்சியை அளித் துள்ளது.

தலைவர்களின் கருத்துகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பல்வேறு கட்சி தலைவர்கள் கூறிய கருத்து:

கபில்சிபல் (மத்திய சட்ட அமைச்சர்): முத லில் தீர்ப்பை முழுமை யாக படிக்க வேண்டி யிருக்கிறது. அதன் பிறகு, இந்த தீர்ப்பால் அரசி யலில் ஏற்படும் பாதிப் புகளை பார்க்க வேண் டும். தீர்ப்பை மறுபரி சீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது உட் பட அனைத்து அம்சங் கள் பற்றியும் அரசியல் கட்சிகள் உட்பட அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகு தெரிவிக் கப்படும்.

ரவிசங்கர் பிரசாத் (பாஜ தகவல் தொடர் பாளர்): அரசியலை தூய்மையாக்கும் எந்த நடவடிக்கையையும் பாஜ ஆதரிக்கும்.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர்): இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் இதை எவ்வாறு கையாள போகின்றன என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

162 எம்.பி.க்கள் பதவிக்கு ஆபத்து

நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 543 பேரில், 162 பேர் மீது நீதிமன்றங் களில் கிரிமினல் வழக் குகள் நடந்து வரு கின்றன. இவர்களில் 76 பேர், 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கக் கூடிய குற் றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. அதேபோல், நாடு முழுவதும் 1,460 எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 30 சதவீதம், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க கூடியவை. இந்த வழக்கு களில் இவர்களுக்கு எதிராக தீர்ப்பு அமை யும் பட்சத்தில் இவர் களின் பதவி உடனடி யாக காலியாகி விடும்.

தமிழ் ஓவியா said...


எந்த தேசத்திலும்...



இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்கு தாண்டவமாடுகின்றன.
(விடுதலை, 30.4.1958)

தமிழ் ஓவியா said...


சிவன் கோயில்களில் பூசை செய்ய பார்ப்பனருக்கு அதிகாரமில்லை!

சிவாலயங்களில் பூசை செய்ய, தன்னைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்ளும் சுமார்த்தப் பிராமணர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அப்படி அவர்கள் பூசை செய்வார்களேயானால், நாட்டுக்குப் பெருங்கேடு என்று ஆகமங்கள் கூறுவதாக நீதிபதி மகராசன் தலைமையில் அமைந்த குழு கருத்து தெரிவித்துள்ளது. அதன் விவரம் இதோ:

1. சில சொற்பொருள்கள்

பிராமணர் என்ற பெயர் சாதி அடிப் படையில் அல்லாமல், பிரம்மத்தை உணர்ந் தவன் என்ற அடிப்படையில்தான் வழங்கப் பட்டது.

பட்டர் என்ற சொல், சாத்திரத்தை நன்கு உணர்ந்தவர் ஞானி தபோதனர், பூசகர் என்ற பொருளைக் கொண்டது என்று சுப்தகல் பத்ருமம் என்னும் வடமொழி நிகண்டில் (பக்கம் 478, பாகம் 3) விளக்கப் பெற்றிருக்கிறது.

அவ்வாறு அல்லாமல், தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு ஜீவிப் போரை பிராம்மணப்ருவன் (சொல் மாத்திரத்தில் பிராமணன்) என்று அதே சப்தகல் பத்ருமத்தில் (பக்கம் 460. பகுதி 3) சொல்லப்பட்டுள்ளது. வாழ்க அந்தணர் (திருஞான சம்பந்தர் தேவாரம்) அந்தணர் என்போர் அறவோர் (திருக்குறள்) என்ற தொடர்களில் அந்தணர் என்ற சொல் சாதியின்பாற்பட்டதல்ல என்பது ஆன்றோர் கருத்து. பேர் கொண்ட பார்ப்பான் (திருமூலர்) பரார்த்த பூசையில் சிவனைத் தீண்டினாலும் பூசித்தாலும் தேவலகத்துவதோஷம் (ஊதியத்துக் காகப் பூசை செய்தல் என்ற குற்றம்) பிறக்கும். பாங்கில்லை தீண்ருப் பரார்த்தம், அவர் தீண்டில் தங்கு உலகுக்காம் என்று தேறு என்ற மறைஞான சம்பந்தர் சைவ சமய நெறி என்ற நூலில் (பாடல் 437) கூறியுள்ள கருத்து அறிதற்பாலது.

2. சிவாச்சாரியாரும் சுமார்த்தப் பிராமணரும்

சிவாச்சாரியார் அல்லது சிவத்து விஜர் அல்லது ஆதிசைவர் என்போர் சுமார்த்தப் பிராமணர் அல்லர். அவர்கள் சிவப்பிராமணர் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதி சைவராகிய சிவப் பிராமணர்கள் அனாதி சைவர் என்று சொல்லப்பட்ட சிவபெருமா னுடைய அய்ந்து முகங்களிலிருந்து தோன்றி, சிவப்பிரானையே வழிபடு கிறவர் என்றும், சுமார்த்தப் பிராமணர் பிரம்மாவினுடைய நான்கு முகங்களி லிருந்து தோன்றி, பிரமத்தையே வழிபடுகிறவர்கள் என்றும் சிவ சிருஷ்டியின் பாற்பட்ட சிவப்பிராமணர் அல்லாமல், பிரம சிருஷ்டியில் தோன் றிய சுமார்த்தப் பிராமணர் சிவாலயங் களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே சிவால யங்களில் பரார்த்த பூசை ஆதி சைவர்களாகிய சிவாச்சாரியர் தவிர, இதர பிராமணர் செய்யக் கூடாது என ஆகமங்களில் கீழ்க்காணுமாறு விதிக் கப்பட்டுள்ளது.

சித்தாந்த சாத்திரம் உணர்ந்த ஆதி சைவர்கள், அரசர் ஊர் எஜமானர் இவர்களுடைய சேமத்தின் பொருட்டு, சிவலிங்கப் பிரதிட்டை செய்து பூசிக்க வேண்டியது. ஆதி சைவர் ஆன்மார்த்த, பரார்த்தங்களுக்கு அதிகாரமுடையவர். இல்லறத்திலுள்ள ஆதி சைவ பிராம்ம ணோத்தமர் சர்வ காரியங்களிலும் அதிகாரிகளாகச் செய்யலாம். ஆன் மார்த்த பரார்த்தங்களிலும் சிவயாகத் திலும் சிவத்துவிஜர்களாகிய ஆதி சைவர்களே அதிகாரமுடையவர். ஏனை யோர் ஆன்மார்த்தமே செய்யத்தக்கவர். அரசனுடைய உலோபத் தன்மையால் ஏனையோர் பரார்த்தமும் செய்வாரா யின், அரசனுக்கும் அவனால் காக்கப்படும் நாட்டிற்கும் உடனே கேடு சூழும் என்பதில் சந்தேகமில்லை (காமிகாகமம் தென்னிந்திய அர்ச்சகர் சங்க வெளியீடு, பக்கம் 31-32)
- மகராசன் குழு அறிக்கை பக்கம் 7,8

தமிழ் ஓவியா said...


விதவையரை மணக்க முன்வரும் புரட்சியாளர்கள்




சிர்சா, ஜூலை 12- உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச் சரிவுகளில் கணவனை இழந்த விதவை பெண் களை திருமணம் செய்து கொள்ள தேராசஷா சவுதா அமைப்பைச் சேர்ந்த 1500 பேர் தயாராக உள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் தெரிவித்துள் ளார். தேராசஷாசவுதா அமைப்பின் சார்பில் 33 லாரிகளில் கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் இவ்வாறு தெரிவித் துள்ளார். மேலும் டியோலி-பிரம்கிராம் கிராமங்களில் பெரும் பாலான ஆண்கள் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அது விதவைப் பெண்களின் கிராமமாக உள்ளது எனவும், கேதார்நாத் கோயில் பணிகளுக்காக சென்ற அவர்கள் அடித் துச் செல்லப்பட்டுள்ள னர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கையை இழந்த பெண்களுக்கு மறு வாழ்வு அளிக்க 1500 பேர் தயாராக உள்ளதாக வும், மறு திருமணம் செய்து கொள்ள விரும் பாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஜாதிகளின் பெயரால் அரசியல் கட்சிகளின் பேரணி, பொதுக் கூட்டங்களுக்குத் தடை!


உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லக்னோ, ஜூலை.12- உத்தரபிரதேச மாநிலத் தில், ஜாதி பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நாட்டிலேயே பெரிய மாநிலமாக திகழ்கிற உத்தரபிரதேசத்தில் ஜாதி அரசியல் முக்கிய இடம் வகிக்கிறது. அரசி யல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஜாதி அடிப்படையி லான பேரணிகளை நடத்தி வருகின்றன.

சமீபத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, தேர்தலில் பார்ப்பனர் களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பார்ப் பன சமூகத்தினரின் பேரணியை 40 மாவட் டங்களில் நடத்தியது. அதில் ஒரு பேரணியில் மாயாவதி கலந்து கொண்டு பேசினார். இதேபோன்று முலாயம் சிங் தலைமையிலான ஆளும் சமாஜ்வாடி கட்சியும் சமீபத்தில் இப்படி ஒரு பேரணியை நடத்தியது. முஸ்லிம்கள் பேரணி ஒன்றும் நடத் தப்பட்டது.

இத்தகைய பேரணி களுக்கு எதிராக மோதி லால் யாதவ் என்ற வழக் குரைஞர் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பிரிவில் பொது நல வழக்கு தாக்கல் செய் தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநி லத்தில் ஜாதி அடிப் படையிலான பேரணி கள் நடந்து வருகின்றன. பார்ப்பனர், சத்திரியர், வைசியர் என்று பல் வேறு ஜாதிகளின் பெய ரால் அரசியல் கட்சிகள் இத்தகைய பேரணி களுக்கு ஏற்பாடு செய் கின்றன.

இத்தகைய ஜாதி பேரணிகளால் சமூகத் தில் ஒற்றுமையும், நல் லிணக்கமும் பாதிக் கிறது. இது அரசியல் சட்டத்துக்கு எதிராக சமூகத்தை கறைப்படுத் துகிறது.

எனவே இத் தகைய பேரணிகளை, பொதுக்கூட்டங்களை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதி பதிகள் உமாநாத் சிங், மகேந்திர தயாள் ஆகி யோர் அடங்கிய அமர் வின் முன் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள் உத் தரபிரதேசத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணி, பொதுக்கூட் டங்களுக்கு உடனடி தடை விதித்து உத்தர விட்டனர்.

மேலும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பதில் மனு தாக்கல் செய்ய தாக்கீது அனுப்பு மாறும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு, உடனடி யாக அமலுக்கு வந்துள் ளது.

தமிழ் ஓவியா said...


இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?


மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இருந்து வருவதால் தமிழக அரசு 2010 மே மாதம் 32 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனத்திற்கு வேண்டி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. தேசிய கல்வி கழகத்தின் அறிவுறுத்தல்படி தமிழக அரசு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வை அறிவித்தது.

(15.11.2011) திருமங்கலத்தை சேர்ந்த மாயா உட்பட மூவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் போட்டதன் பேரில் பழைய பதிவு மூப்பு அடிப் படையிலேயே இடைநிலை ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்று 2011 நவம்பர் 24இல் மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப் பாணை எண் 5281/ஆ4/2010 (பார்வை: 1.அரசாணை (நிலை) எண்.220 பள்ளிக்கல்வித் (எஸ்-2)துறை,நாள் 10.11.2008, 2.அரசாணை (நிலை) எண்.153 பள்ளிக்கல்வித்(வ.செ-2)துறை,நாள் 03.06.2010, எனக் குறிப்பிட்டு 2010-11ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்க்கும் அழைப்புக் கடிதத்தை அதே 2011 நவம்பர் 24 தேதியில் அனுப்பியது. மேற்கண்ட அழைப்பின்பேரில் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 3.12.2011இல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து வேலைவாய்ப்பு உத்தர விற்காகக் காத்திருந்தனர்.

இந்த நிலையில் 9.7.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம் 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையே அறிவுறுத்தலாகக் கொண்டு 2011 இல் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் தமிழக அரசு பணியில் அமர்த்துவதுதான் சரியானதாக இருக்க முடியும். தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காய் என்ற முறையில் ஓர் அரசு நடந்து கொள்ள முடியாது.

இந்தப்பிரச்சினை குறித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியிட்டார் (விடுதலை 2.4.2013).

தொடர்ந்து விடுதலை இந்தத் திசையில் பல தலையங்கங்களைத் தீட்டியதுண்டு. இதுகுறித்து கடந்த 6ஆம் தேதியன்று முதல் அமைச்சருக்குத் திறந்த மடலையும் எழுதியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றுகூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 5ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கருத் தரங்கமும், பொது மாநாடும் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர் உட்பட பல தலைவர் களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர். முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கடந்த10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவிலும் இந்த வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட் டுள்ளது. வரும் 18ஆம் தேதி சென்னையில் இது தொடர்பான ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்திட உள்ளது. இதற்கிடையே இதனை வலுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஆதாரப்படுத்தி தகுதித் தேர்வைப் புறந்தள்ளி, பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்வதே சரியானதாக இருக்க முடியும். இல்லை யெனில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றால் அரசுக்கு எதிராகவே தீர்ப்புக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா? எங்கே பார்ப்போம்.

தமிழ் ஓவியா said...


இந்த ஆபத்தான அகப் பகைவனை அடையாளம் காண்போம்!



புறப் பகைவர்களையே தேடிக் கொண்டிருக்கும் வழமை - வாடிக்கை நம்மில் பலருக்கும் உண்டு. அகப்பகைவர்கள் பற்றி பல நேரங்களில் கவலைப்படாத வாழ்வே வாழ்கிறோம்!

அகப்பகைவர்கள் என்னும்போது, ஒரு அமைப்பு, நிறுவனம், கட்சி, இயக்கம் ஆகியவற்றில் உள்ள வீபீஷணர்கள், சுக்ரீவன்கள், அனுமார்கள், பிரகலாதன்கள், யூதாஸ்கள், எட்டப்பன்கள், குவிஸ்லிங்குகள் (இரண்டாம் உலகப் போரின்போது அய்ரோப்பிய நாட்டில் நேச நாடுகளுக்கான உள் ரகசியங்களைக் காட்டிக் கொடுத்து பிரபலமானவர்) போன்றவர்களை மட்டும் நினைத்துக் கொண்டி ராதீர்கள்!

அவர்கள் ஆபத்தானவர்கள்தான் - பயிர்களில் முளைத்த களைகளைப் போன்று!

நம்முள் உள்ள மற்றொரு முக்கிய அகப்பகைவன் யார் தெரியுமா?

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி சிலரது உடலும், உள்ளமும் இந்த அகப்பகைவனிடம் சிக்கிக் கொண்டால், அவர்களைப் பாடாய்ப்படுத்தி விடும்!

எவ்வகையிலெல்லாம் கேடு வரும் என்பதை அறிவியல், உளவியல், வாழ்வியல் பூர்வமாக படம் பிடித்துக் காட்டி அறிவுறுத்தியுள்ளார் ஒப்பற்ற அறிவுரை - அறவுரையாளரான திருவள்ளுவர் அவர்கள்!

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் (குறள் 303)

பொருள்: ஒருவன், யாரொருவரிடத்திலும் சினம் கொள்ளாமல் அந்த சினத்தை அறவே மறந்து விட வேண்டும்; இல்லையென்றால் அந்த சினத்தால் தீமையான விளைவுகள்தாம் அவனுக்கு ஏற்படும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற (குறள் (304)

பொருள்: ஒருவனது முகத்தில் வெளிப்படும் சிரிப்பையும், அகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அடியோடு அழிக்கின்ற சினத்தை விட, அவனுக்குப் பகையாக விளங்கும் பொருள், வேறு ஏதொன்றும் இருக்க முடியாது.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (குறள் 305)

பொருள்: ஒருவன், தன்னைத்தானே காத்துக் கொள்ள விரும்புவானேயானால், தனக்குச் சினம் ஏற்படாமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அப்படி அவன் தன்னைக் காத்துக் கொள்ளாவிட்டால், அந்தச் சினமே அவனைக் கொன்றுவிடும்.

நமது கோபம் - பல நேரங்களில் ஆத்திரம் கொப்பளிக்க வெடிக்கிறது.

நம்மால் கட்டுப்படுத்தப்படாத பழக்கம் காரணமாக, நாம் அதனை பல்வேறு கட்டங்களில் ஏன் உச்சக் கட்டம் செல்லும் நிலையிலும், பார்ப்போர் அருகில் உள்ளோர் அருவருப்புக் கொண்டு முகஞ் சுளிக்கும் அளவுக்குக் கூட, எல்லை தாண்டிய வேகத்தோடு நாம் நடந்து கொள்வது - யாரைப் பார்த்து நாம் இப்படிக் கோபத்தைக் கொப்பளிக்கிறோமோ, அவர்களுக்கு ஏற்படும் கெடுதி, இழப்பைவிட, கோபத்தை அடக்காத நமக்கே அது உலை வைப்பதாக ஆகிவிடுகிறது.

பிரபல அமெரிக்க இதய நோய் அமைப்பினை நடத்தும்(The American Journal of Cardiology)
என்ற மருத்துவ ஏட்டில் - உள்ள ஒரு அரிய தகவல் இதோ:

1. கோபமாக நாம் வெளியிடும் அந்த ஆத்திரத்தின் வெடிப்பு, அடுத்த 2 மணி நேரம் வரை, மாரடைப்பு (Heart Attack)
ஏற்படும் அபாயத்தைத் தோற்றுவிக்கக்கூடிய ஒன்றாகும்.

2. இந்த ஆத்திரம் ஓர் அளவுக்குள் அமைவதா யிருப்பின் அந்த அபாயம் 1.7 மடங்கு கூடுதலாக உள்ளதாக இருக்கும்.

3. சிலர் பற்களை நரநரவெனக் கடித்துக் கொண்டு, கை முஷ்டிகளை ஓங்கிக் கொண்டு உடல் மிகவும் (தசைகள்) இறுக்கமாக்கிக் கொண்ட நிலை யில் கோபத்தின் அதி ஆவேசத்தில் இறங்கும்போது, இந்த மாரடைப்பு - இதயநோய் தாக்கும் அபாயம் 2.3 மடங்கு ஆக இருக்கும்.

4. சிலர் கோபத்தின் உச்சத்திற்கே சென்று தனது நிதானத்தையே இழந்து, கையில் கிடைக்கும் பொருள்களை எடுத்து வாரி வீசி, மற்றவர்களை காயப் படுத்தியோ அல்லது தன்னை காயப்படுத்திக் கொண்டே உள்ளவர்களுக்கு இந்த அபாயம் 4.5 மடங்கு ஆக ஆகிவிடும்.

வள்ளுவத்தின் அறிவியல், உளவியல் எவ்வளவு வியக்கத்தக்கது பார்த்தீர்களா?

கோபம் வந்தால் அடக்கி ஆளுவோம்; வாழுவோம்; எழுதும் எனக்கும் சேர்த்தே தான் இவ்வெச்சரிக்கை! படிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல வாசகர்களே!

சினத்தை அடக்குவோம்!

சினம் நம்மை ஆளவிடாமல் நாம் அதனைஅடக்கி ஆளுவோம்!!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பெரிய நன்மை


நீதி முறையையும், நீதி இலாகா வையும் திருத்தினால் புற்று நோய்க்கும், சயரோக நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தது போன்ற அவ்வளவு பெரிய நன்மை மனிதச் சமுதாய ஒழுக்கத்திற்கு ஏற்பட்டு விடும். - (விடுதலை, 17.10.1969)

தமிழ் ஓவியா said...


காலம் தோறும் பார்ப்பனீயம்!


3.7.2013 விடுதலை தலையங்கம், பல சிந்தனைகளை உண்டாக்கி யுள்ளது. சார்தாம் (கங்கோத்திரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத்), புனித யாத்திரையில் முதலில் கூறி யுள்ள 3 இடங்களைப் பார்த்து விட்டு தான் கேதார்நாத் செல்ல வேண்டு மாம். தினமணியும், புதிய தலைமுறை இதழும் கேதார்நாத் அழிவைப்பற்றித் தான் கூக்குரல் இடுகிறார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன ஆதிசங்கரரின் சமாதியை மீண்டும் புதுப்பித்து நினைவுச் சின்னம் அமைப்பதுதான் இவாளின் இலை மறை நோக்கமாகும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில், கேதார்நாத் அருகில் மணிகார் (ஆயழுயசா) என்ற இடம் உள்ளது. இங்குதான் மிகவும் பழைமையான தான சீக்கியர்களின் வழிப்பாட்டுத் தலமான குருத்வாரா உள்ளது. இங்கு அவர்களுடைய பழைமை வாய்ந்த புனித நூலான கிரந்தம் வைத்து வழிபடுகின்றனர். இந்த இடமும் இயற்கைச் சீற்றத்தினால் பாழ்பட் டுள்ளது. இதை தினமணியும், புதிய தலைமுறை இதழும் வசதியாக மறைத்துவிட்டு கேதார் நாத் இடத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கின்றனர். இந்த இடத்தில் (குருத்வாராவில்) பார்ப் பனீயம் எடுபடாது. அதனால் கழி விரக்கமற்றவர்களான பார்ப்பனர் களும், பார்ப்பன ஏடுகளும் மறைத்து விடுகின்றன. இதுதான் இந்தியாவின் இவர்கள் கூறும் கலாச்சாரம். காலம் தோறும் பார்ப்பனீயம் இதுதான்!

- அ.நா. பாலகிருஷ்ணன்
சிந்திரிப்பேட்டை, சென்னை-2

தமிழ் ஓவியா said...


நீர் பொங்குமாம்!


12 வருடத்திற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினா லல்லது பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லது தண்ணீர் எப்படிப் பொங்கமுடியும்? மாமாங்கத் தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.

மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மை கண்டுபிடிக்க முடியும். அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களைக் குளிக்கவிட்டு, அதன் பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்?

குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காண முடியும்?

ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண் ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம்.
அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம். இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

கடவுளும் மின்சாரமும்!

கேள்வி: an you live without god? (கடவுள் இல்லாமல் உங்களால் வாழ முடியுமா?)

பதில்: Yes. I can live without god, but I cannot live without electricity. (கடவுள் இல்லாமல் நான் வாழ முடியும். ஆனால் மின்சாரம் இல்லாமல் நான் வாழ முடியாது) சிரிப்பு. அமெரிக்காவில் ஒருநாள் திடீரென மின்தடையை ஏற்படுத்தினார்கள். அமெரிக்கா முழுவதும் மக்கள் சில நிமிடங்கள் அவதிப்பட்டு பின்னர், மீண்டும் மின் ஓட்டத்தை இயக்கி விட்டு, வானொலியில் அறிவித்தார்கள், சில நிமிடங்கள் மின் சாரம் இல்லாவிடில் எவ்வளவு அவஸ்தை? இப்போது புரிகிறதா மின் சாரத்தைக் கண்டுபிடித்த ஆல்வா எடிசனின் பெருமை? இன்று அந்த ஆல்வா எடிசனின் நூற் றாண்டு நினைவு நாள்! என்று.

(மதுரை பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி பகுத்தறிவுச் சிந்தனை கலந்துரையாடலில் கழக தலைவர் கூறியது) தகவல்: மதுரை தமிழரசன்

தமிழ் ஓவியா said...


மகாமகத்தின் வரலாறு


ஆதிகாலத்தில் உலகப் பிரளயம் நேரிடுவதற்கு முன்பு, பிரம்மதேவர் அப்பிரளயத்தினால் சகல சிருஷ்டிகளும் அழிந்து போகக் கூடிய நிலைமையைக் குறித்து கவலையுற்று, அதைத் தவிர்க்க கருதி, கைலாசநாதனான சிவபெருமானைக் குறித்து துதித்தார். அவரும் பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்கி அவ்வித அழிவை நிவர்த்திக்கும் பொருட்டு, சிருஷ்டி பீஜத்தை அமிர்தத்துடன் கலந்து அமிர்தம் நிறைந்த ஒரு குடத்திற்குள் வைத்து குடத்தைத் தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் இவைகளால் அலங்கரித்து மூடி, மகா பிரளயத்தில் விட்டு விடும்படி பிரம்மதேவரிடம் சொன்னார். அவ்வாறே பிரம்மதேவரும் பிரளயகாலத்தில் அந்த அமிர்த குடத்தை மிதக்க விட்டதாகவும், அக்கும்பம் இந்த சேத்திரத்தில் மிதந்து வந்து தங்கலுற்றதாகவும், பிரளய முடிவில் பிரம்மதேவர் முதலியோர் அக்குடத்தைக் கண்டு மறுமுறை சிவபிரானைத் துதிக்கவும், அவர் அச்சமயம் வேடரூபத்துடன் பிரசன்னமாகி, ஓர் பாணத்தை எய்து, அவ்வமிர்த கும்பத்தை உடைக்கவே, அதனுள்ளிருந்த அமிர்தம் இப்பிரதேசத்தில் பரவியது பற்றி இச்சேத் திரத்திற்கு கும்பகோணம் எனப் பெயர் வழங்கலாயிற் றென்பது புராண வரலாறு. அக்குடத்தினின்றும் வெளிப்பட்ட அமிர்தமானது இருகூபங்களாக (கிண றுகள்) தங்கலுற்றது. அவைகளில் ஒன்று மகாமகக் குளம் என்றும், மற்றொன்று ஹேமபுஷ்கரணி (பொற்றாமரை) என்று வழங்கப் பெற்று வருகின்றன.

முன்பு விவரித்தபடி சிவபெருமானால் உடைக்கப்பட்ட குடத்தின் பாகங்கள் அதிலிருந்த அமிர்தத்தைக் கொண் டே பிசையப் பெற்று, ஓர் லிங்கபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும், அவரே கும்பேஸ்வரர் என்று வழங்கப் பெற்றதாகவும் புராணம் சொல்லுகிறது.

அமிர்த குடத்தின் மேல் மூடப்பட்ட அலங்கார சாமான்களான தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் முதலியவை முறையே இப்பிரதேசத்தைச் சுற்றிப் பரவி எழுந்து அவை யாவும் அங்கங்கே சிவசேத்திரங் களாக ஏற்பட்டு, பூஜார்ஹமாக விளங்கி வருகின்றன.

இந்நகரம் முக்கிய சிவசேத்திரமாக இருப்பதுமன்றி, முக்கிய விஷ்ணுசேத்திரமாகவும், புண்ணிய தீர்த்தங் களையுடையதாகவும், தொன்று தொட்டு விளங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பு: இது சுதேசமித்தரன் 19.2.1945ஆம் தேதி இதழில் காணப்படுகிறது. இதைக் கண்ணுறும் எவரும் இது எவ்வளவு ஆபாசக்களஞ்சியம் என்பதையும், இதையும் இந்த 20ஆம் நூற்றாண்டில் நம் மக்கள் நம்பி வருகிறார்களே என்றும் எவர்தான் வருந்தாமல் இருக்கமுடியும்? இவ்வளவு கூட பகுத்தறிவு இல்லாத மக்கள் அடிமையாக இருப்பதில் ஆச்சரியமென்ன?

(24.2.1945 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்

தீண்டாமை என்பது சமயம் சம்பந்தப்பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத்தினால் தீர்க்கமுடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைவன் என்ற முறையிலும், உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாக கருதமுடியும்.

- டாக்டர் கலேல்கார்

ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன், பக்கம் 123

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர் பிரச்சினை:


மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கலைஞர் வேண்டுகோள்!

சென்னை, ஜூலை 12- இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப் படுவதும் நின்றபாடில்லையே என தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (12.7.2013) முரசொலியில் எழுதியுள்ள கேள்வி - பதில்கள் பகுதியில் கூறியிருப்ப தாவது:

கேள்வி: மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் எத்தனையோ வேண்டுகோள் விடுத்த பிறகும், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் நின்றபாடில்லையே?

கலைஞர்: தமிழக மீனவர்கள் இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் கடந்த பல ஆண்டு காலமாகத் தொடர்கதையாக நீடித்துக் கொண்டே வருகிறது. தொடர்கதைகளுக்குக்கூட முடிவு உண்டு. ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் நின்றபாடில்லை. இராமேஸ் வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 29.11.2011 முதல் இலங்கை நீதித் துறைக் காவலிலே கைதிகளாக இருந்து வருகிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டுமென்று வைக்கப் பட்ட கோரிக்கைகள் நிறைவேறவில்லை. கடந்த 5.6.2013 அன்று கைது செய்யப்பட்ட 49 மீனவர்கள், ஒரு மாதம் இலங்கையிலே சிறையிலே வைக்கப்பட்ட பிறகு 2.7.2013 அன்று 24 மீனவர்களும், 3.7.2013 அன்று 25 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 15.6.2013 அன்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் இலங்கைச் சிறையிலே இன்னமும் இருந்து வருகிறார்கள். தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் இதுபற்றி மத்திய அரசின் கவனத்திற்கு தொடர்ந்து கடிதம் மூலமாக எழுதிக் கொண்டே இருக்கிறார். ஆனால் உறுதியாக இதுவரை எதுவும் சொல்லப் படவும் இல்லை. ஒவ்வொரு முறையும் மீனவர்கள் இவ் வாறு கைது செய்யப்படும் போதெல்லாம், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் அறிக்கைகளை வெளியிடுவதும், தமிழக அரசின் சார்பில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் எந்த விளைவையும் இலங்கை அரசிடம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. எனவே மத்திய அரசு உறுதியானதொரு நடவடிக் கையை, தமிழகத்தின் மீனவர்கள் பிரச்சினை ஒட்டுமொத்தமாகத் தீருகின்ற வகையில் உடனடியாக எடுக்க வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.