Search This Blog

31.1.15

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா?முசுலிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதா?

மக்கள் தொகைப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை! 



இந்துத்துவாவாதிகள் இப்பொழுது புதிய முழக்கம் ஒன்றைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.


இந்துக்களே! நமது மக்கள் தொகை குறைய ஆரம்பித்து விட்டது. முசுலிம் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஆபத்து! ஆபத்து!! இந்த நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளைச் சரமாரியாகப் பெற்றுத் தள்ளுங்கள்! என்பது தான் இவர்கள் முழக்கம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை கூடினால் என்ன, குறைந்தால் என்ன? இது ஒரு பிரச்சினையா?


மதம் வளர்ந்தால் மத வெறியும் சேர்ந்தே வளரப் போகிறது; அதன் விளைவு மோதல்கள் - உயிர்ப் பலிகள் - இவற்றின் காரணமாக சமுதாயத்தில் எல்லா வகையான நல்ல வளர்ச்சிகளும் கெட்டுக் குட்டிச்சுவராகி போகும். அவ் வளவு தானே!


அத்தகைய மதத்தின் வளர்ச்சியால் என்ன பயன்?


இன்னொரு வகையில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டாமா? ஏற்கெனவே 120 கோடி மக்கள் தொகையால் மூச்சுத் திணறி கொண்டு இருக்கிறது இந்திய துணைக் கண்டம். இன்னும் பத்து ஆண்டுகளில் சீனாவையும் புறந்தள்ளி உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இந்தியத் துணைக்கண்டம் இருக்கப் போகிறதாம்!


உலகநாடுகளின் வளர்ச்சி விகிதத்தில் இந்தியா 72ஆவது இடத்தில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.20 வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 77 சதம் இருக்கிறார்கள் என்கிறது அரசின் புள்ளி விவரம். மக்களின் அடிப்படைத் தேவைகள், இன்னும் பூர்த்தியாக வில்லை; பள்ளிகளில் கழிவறை வசதிகள் செய்வதில் கூட தன்னிறைவு இல்லை. மனிதன் மலத்தை இன்னொரு மனிதன் சுமக்கும் கேவலம் மற்றோர் புறத்தில்.


வேலையில்லாத் திண்டாட்டம் விலா எலும்பை முறிக்கிறது. உணவு உற்பத்தியிலும் பிரச்சினை, விவசாயி கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை!


இந்தநிலையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் கொள்கையும், திட்டமாகவும் இருந்து வருகிறது. ஆனால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர்களே- அந்த கட்சியின் துணை அமைப்புகளே - ஆட்சியின் கொள்கைக்கு  விரோதமாக இந்துக்களே! குழந்தைகளை பெற்றுத்தள்ளுங்கள் என்று கூசாமல் குரல் கொடுப்பது வெட்கக்கேடு அல்லவா. பொறுப்பற்ற தன்மை அல்லவா! திருவாரூரில் செய்தியாளர்களிடம்  திராவிடர் கழகத் தலைவர்  மானமிகு கி.வீரமணி அவர்கள் இதனை சுட்டிக் காட்டி கண்டிக்கவும் செய்தாரே!


இந்தக் கண்ணோட்டத்தில் மற்ற மற்ற அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டிக்க வேண்டியது அவர் களின் பொறுப்பான கடமையாகும்.


இதில் என்ன கொடுமை என்றால் ஆளும் பிரதமரோ, கேபினட் அமைச்சர்களோ யாரும் இதனைக் கண்டு கொள்வதில்லை. காரணம் அவர்களும் இந்துத்துவாவாதி களாகவும், இந்து மக்களின் எண்ணிக்கை உயர வேண்டும்  எனும் எண்ணம் உடையவர்களாகவும் இருப்பதுதான்.


ஓசூரில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் கூட மகாபாரதத்தில் பாண்டவர்கள் போல அய்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றி உள்ளனரே!
ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருப்பதால் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்துமக்கள் சிறுபான்மையின மக்களாக மாறும் அவல நிலை ஏற்படும். எனவே, ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள் போல அய்ந்து குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் முதியோர் இல்லங்கள் குறையும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.


ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், காவியாளர்களும் இதனை வலியுறுத்தியே வருகிறார்கள்.
 

1. இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து மைனாரிட்டி ஆகி விடுவார்கள். அதை தடுக்க இந்துத் தம்பதிகள் கட்டாயம் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அசோக் சிங்கால் (23.2.2014 - போபால்)


2. இந்துக்கள் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்து நாடு உருவா க்க இது முக்கிய கடமையாகும் என்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் (10.10.2014, கொல்கத்தா)


3. இந்துக்களின் பலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. ஆகவே இந்துக்கள் குறைந்தது அய்ந்து குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் பிரவீன் தொகாடியா (10.11..2014 - உத்ரகாண்ட்)


4. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் லோக்சபா தொகுதி பா.ஜ., எம்.பி., சாக்ஷி சாமியார் மீரட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும் போது இந்துப் பெண்கள் அனை வரும் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (13.1.2015). 

5. இந்து பெண்கள் அனைவரும் தலா 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தர்காண்ட் சங்கராச்சாரியார் வாசுதேவனாந்த் சரஸ்வதி ஆலோசனை தெரிவித்துள்ளார் (19.1.2015 - அலகாபாத்)


நாடு எங்கே செல்கிறது என்பதை பொறுப்பு வாய்ந்த குடிமக்களும் வாக்காளர்களும் எண்ணிப்பார்க்க வேண் டாமா? இதில் இன்னொரு பிரச்சினையும் முக்கியமானது. குழந் தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், பெற்றுக் கொள் ளுங்கள் என்று கூச்சல் போடுகிறார்களே - அவர்களை நோக்கி மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது.


குழந்தைகளைப் பெறுவது பெண்கள்தானே! குழந்தை களைப் பெற்றுக் கொண்டே இருப்பதுதான் அவர்கள் வேலையா? அவர்களின் நிலையை எண்ணிப் பார்த்திருந்தால் இப்படி சொல்வார்களா?


இந்துத்துவா வாதிகளுக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன உறவு?  பெண்களை அடிமைப் பொருளாக கருது வதுதானே இந்து மதம் - அந்த கண்ணோட்டத்தில் இப்படி யெல்லாம் பேசித் திரிகிறார்கள் என்னும் போது இந்த இந்து மதம்தான்  எவ்வளவு மோசமானது  என்பதைப் பெண்கள் எண்ண வேண்டும். இந்த வகையில் பார்த்தால் கூட  பெண்ணுரிமைக்கு எதிராக இந்த இந்துமதம் ஏன் வளர வேண்டும் என்றுதான் பெண்கள் நினைப்பார்கள் - நினைக்க வேண்டும்.
இதில் என்ன வேடிக்கை என்றால் குழந்தைப் பிறப்பு பற்றி சாமியார்கள் பேசுவதுதான். என்ன செய்வது. இந்து மத சாமியார்கள் ஆசிரமத்தை சோதனை செய்தால் அங்கே கர்ப்பத்தடைக் கருவிகள் தான் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.


கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று துல்லிய மாக கண்டுபிடிக்கக்கூடிய எந்திரங்களும் இருக்கின்றன.


அர்த்தமுள்ள இந்துமதத்தை நினைத்தால் குடலே புரட்டிக் கொண்டே வருகிறது - மகா வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!


வளர்க பகுத்தறிவு!!



                -------------------------- ”விடுதலை” தலையங்கம் 31-01-2015

24 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சுண்டெலி

சுண்டெலி நாள்தோறும் சிறுகச் சிறுக பூமியைத் தோண்டி வளையை ஆழப் படுத்துகிறது. அதுபோலவே காலம் என்ற சுண்டெலி ஒவ்வொரு நிமிடமும் உயிர் களுடைய வாழ்க்கையைக் குடைந்தெடுத்தபடியே இருக்கிறது. எப்போது இதற்குள்ளே புகுந்து இதை உடைமையாக்கிக் கொள்ள லாம்? என்று மரணம் உடலை கவனித்துக் கொண்டே இருக்கிறது.
- ஸ்ரீராமர்

இப்படி ஓர் ஆன்மிகத் துணுக்கு ஏடு ஒன்றில் வெளியாகியுள்ளது.

- ஆமாம் காலம் என்ற சுண்டெலியை உருவாக்கி யதுயார்? கடவுள் என்று தானே சொல்கிறார்கள். அவன் தானே பிண்டம் படைப்பவன்! அப்படி இருக் கும் போது ஸ்ரீராமன் புலம் புவது ஏன்? அதில் அர்த்தம் இருக்கிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/95394.html#ixzz3Qb8S7RX7

தமிழ் ஓவியா said...

கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

உலகளாவிய அளவில் தமிழும் - தமிழரும் எனும் தலைப்பில்

தமிழர் தலைவர் ஆசிரியர் நிகழ்த்திய ஆய்வுரை

வடமொழியால் விளைந்த பண்பாட்டுப் படையெடுப்புக் குறித்தும் இடித்துரை


கோலாலம்பூர், பிப்.2_ கோலாலம்பூரில் நடைபெற்ற 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வட மொழி யால் தமிழுக்கு நேர்ந்த கேடுகளை ஆதாரத் துடன் எடுத்துக்காட்டி ஆய்வுரை வழங்கினார்.

9 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசி யாவின் தலைநகர் கோலாலம்பூரில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.

தமிழ்மொழியை தமிழர்க்கு அறிமுகம் செய்தவர் அறிஞர் கால்டுவெல் ஆவார். தமிழை உலகுக்கு அறிமுகப் படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர் தனி நாயக அடிகளார் ஆவார். அவருடைய பெரு முயற்சியால் முதல் உலகத்தமிழ் மாநாடு மிகவும் சிறப்பாக 1965இல் கோலாலம்பூரில் நடந்தது. இரண் டாவது மாநாடு சென்னையிலே மிகவும் கோலாகல மாக அறிஞர் அண்ணா அவர்களால் உலகச் சிறப் புடன் நடந்தது.

இப்போது 9ஆவது மாநாடு மீண்டும் கோலாலம்பூ ரில் சனவரி 30, 31 பிப்ரவரி 1ஆம் நாள்களில் நடை பெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் பெருமைமிகு பேராசிரியர் டத்தோ மாரிமுத்து அவர்களின் பெருமுயற்சியாலும், பெருமைமிகு டத்தோ சாமிவேலு அவர்களது ஒத்துழைப்புடனும், மலேசிய அரசின் ஒரு மில்லியன் டாலர் உதவியுடனும் நடைபெற்றது.

முதல் நாள் தொடக்க விழாவில் பேசிய மலேசியப் பிரதமர் மாண்புமிகு நஜீப் ரசாக் அவர்கள் திருக் குறளின் பெருமையைப் பேசி தமிழின் பெருமை, தமிழர்களின் முன்னேற்றம், குறித்தும் கருத்துரை வழங் கினார். மலேசியாவில் 542 அரசு தமிழ்ப் பள்ளிகள் இயங்குவது பற்றியும் பேசினார்.

பல்வேறு அமர்வுகளில் 120 ஆராய்ச்சிக் கட்டு ரைகள் வாசிக்கப்பட்டன.

இரண்டாம் நாள் சிறப்புப் பேச்சாளராக மானமிகு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். கோவையில் சிறப்புக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நேரே சென்னை வந்து உள்நாட்டு விமான நிலையத்தி லிருந்து பன்னாட்டு விமானத்தில் ஏறி மலேசியா வந்தடைந்தார்.
டத்தோ சாமிவேலு அவர்கள் அறிமுகப்படுத்திய போது மிகவும் பெருமையுடன் தானே திராவிடர் கழகத்தாலும், அய்யா சாரங்கபாணி அவர்களாலும் உருவாக்கப்பட்டதைச் சொல்லி ஆழமான உரை யாற்றினார். ஆசிரியர் அவர்களின் உழைப்பைப் பாராட்டி, அவரது வருகையால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகின்றோம் என்று வரவேற்றார்.

ஆசிரியர் அவர்கள் ஒரு மணி நேரம் உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் எனற தலைப்பில் தமிழும், தமிழரும் எப்படிப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடிக்க வேண்டியிருக்கின்றது என்பதை ஆதாரபூர்வ நூல்களை எடுத்துக்காட்டி விளக்கினார். தமிழனுக்குத் தனது மொழியே வட மொழியிலிருந்து கடன் பட்டது என்ற கதையை இல்லை,இல்லை, வடமொழிதான் தமிழுக்குக் கடன் பட்டுள்ளது, அதைத் திருடி தனது சொத்தாக சமஸ்கிருதம் என்ற மொழி உருவான கதையைச் சொன்னார். பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியில் மட்டுமன்றி, கலை, பண்பாடு, மொழியை அழிக்கச் செய்த சூழ்ச் சிகள், ஆக்கிக் கொண்டதையும், அதை நம்மையே நம்ப வைத்துவிட்ட சூழ்ச்சியையும் சொன்னார்.

செம்மொழிக்கு இருக்க வேண்டிய 11 தகுதிகளும் தமிழுக்கு மட்டுமே உள்ளதையும், சமஸ்கிருதத்திற்கு 7 தகுதிகள் மட்டுமே உள்ளதையும் விளக்கமாகச் சொன்னார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குயில் இதழ்களில் எழுதிய வந்தவர் மொழியா செந் தமிழ்ச்செல்வமா, என்றார். பல சொற்கள் வடமொழி போல் தோன்ற வைத்ததையும் அவை தூய தமிழ்ச்சொற்களேயாம் என்பதையும் நூலாக வெளியிட்டுள்ளதைக் காண்பித்தார். தமிழ் இசை கர்நாடக சங்கீதமாகவும், திருக்குறளிலேயே உள்ள "கூத்தாட்டும் அவை" பரத நாட்டியமாகவும் பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியை மட்டுமன்றி உள்ளதைத் தமிழறிஞர்கள் ஆக்கபூர்வமாக எடுத்துச் சொல்வதுதான் உண்மையான தமிழ்ப்பணி, அதை நாம் அனைவரும் நமது பிளவுகளை ஓரங்கட்டி, இணைப்புப் பாலங்களை இறுகச் செய்ய வேண்டும் என்று முழங்கினார். பேச்சு, புத்தகமாக அனைவர்க்கும் தரப்பட்டது.

கடைசி நாள் மலேசியாவின் கல்வி அமைச்சர் முடிவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். பல்கலைக் கழக் துணைவேந்தர்களும், பல தமிழறிஞர்களும், 20 நாடுகளில் இருந்து வந்து பங்கேற்றனர். முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுக பரமசிவம் உணர்ச்சியுடன் தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிப் பேசியும் மழலைத் தமிழ் பேசியும் அனைவரையும் மயக்கினார்.

2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மலேசியப் பல்கலைக் கழகத்தில், அவர்களது ஆதர வுடன் நடைபெற்ற வெற்றித் திருவிழாவாக நடை பெற்றது.

Read more: http://viduthalai.in/e-paper/95391.html#ixzz3Qb8cu36q

தமிழ் ஓவியா said...

நேர்த்திக் கடனுக்கு குழந்தையை காணிக்கையாக கொடுத்த காட்டு விலங்காண்டிகள்


சின்னாளபட்டி, பிப்.2 திண்டுக்கல் அருகே அ.வெள்ளோட்டில் உள்ளது புனித அந்தோணி யார் கோவில். இந்த கோவில் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதி வாரத்தின் சனி, ஞாயிற் றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக் கான திருவிழா 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து பொது மக்களால் வேண் டுதல் நிறைவேறியதற்காக கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக காணிக்கையாக கொடுக்கப்பட்ட காய் கறிகள், ஆடு, மாடுகள், கோழிகள், தேங்காய்கள் ஆகியவற்றை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கோவிலில் குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தி குழந்தை வரம் கிடைத்த வர்கள் தங்களது குழந்தை களையும் காணிக்கையாக கொடுத்தனர். அந்தக் குழந்தைகளை கோவில் முன்பு மொட்டை அடித்து கோவில் நிர்வாகிகள் ஒவ்வொரு குழந்தையாக கையில் தூக்கிப் பிடித்து பொருட்களை ஏலம் விடு வது போல் பொதுமக்கள் முன்னிலையில் ஒருதரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று கூவி ஏலம் விட்டனர்.

ஏலம் கேட்ட பொது மக்களும் கூடுதல் விலைக்கு ஏலத்தைக் கேட்டு விலையை ஏற்றி விட்டனர். ஆனால் இறுதியில் பெற் றோர்களே அவரவர் குழந்தைகளை அதிக தொகைக்கு ஏலம் எடுத்துக் கொண்டனர். ஏலம் எடுத் ததற்கான தொகையை கோவில் நிர்வாகிகளிடம் கொடுத்து பெற்றோர்கள் குழந்தையை பெற்றுச் சென்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/95397.html#ixzz3Qb8ta4Zl

தமிழ் ஓவியா said...

மூடனே!

கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்து கொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே! - (விடுதலை, 1.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/95400.html#ixzz3Qb954aqT

தமிழ் ஓவியா said...

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

நம் முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற ரீதியில் தங்கள் உணவு பழக்கத்தை வைத்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது.

அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது.

வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக் கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்.

தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டாது.

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமி லங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பசம் இருந்தாலும் குறையும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாக குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சினையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறைவதுடன், அடர்த்தியாக முடி வளரவும் செய்கிறது.

பொடுகு பிரச்சினை, அரிப்பு குறைவதோடு முடியை பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும். ஆகவே, வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.

Read more: http://viduthalai.in/page-7/95419.html#ixzz3Qb9Pq67R

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணங்கள் நிறைந்த பரங்கிக்காய்

மலையாளிகள் சமூகத்தில் மஞ்சள் பூசணிக்காய் எரிசேரி என்பது மிகவும் பிரபலமான ஓர் உணவு. வெளிர் ஆரஞ்சு நிறமுள்ள இந்த பதார்த்தம் பண்டிகை நாட்களின் ஸ்பெஷல் தயாரிப்பு. இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது.

இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்ட மின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். தோற்றம் பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர்.

சமையலுக்கு மட்டுமல்ல... விதையாகவும் எண்ணெயாகவும் கூட இது பயன்படுகிறது. குணங்கள் பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்ற தாகவும் இருக்கும்.

ஆழமான இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும். பயன்கள் மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும், கொலஸ்ட்ராலும் இல்லை.

இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகிய வற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். வைட்டமின் ஏவை அபரி மிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல் படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதி களையும் பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய். பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை - நிரம்பாத கொழுப்பு அமிலமும் உள்ளன.

இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது. பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசி யமும் உள்ளது.

பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது. பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-7/95417.html#ixzz3Qb9gOqLF

தமிழ் ஓவியா said...

குடும்பக் கட்டுப்பாடு மாத்திரையை உருவாக்கிய விஞ்ஞானி மறைவு

சான்பிரான்சிஸ்கோ, பிப்.2_ குடும்பக் கட் டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரையை உரு வாக்கிய விஞ்ஞானியான கார்ல் ஜெராஸி (91) காலமானார்.

ஆஸ்திரியாவில் பிறந்த இவர், அமெரிக் காவில் உயர் கல்வி பயின்றார். 1951 -இல் இவரது தலைமையிலான ஆய்வுக்குழு நாரத் ரின்ட்ரோன் எனும் மூலக்கூறைக் கண்டு பிடித்தது. அவருக்கு அப்போது 28 வயது. அந்த மூலக்கூறு அடிப்படையிலேயே குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்தி ரைகள் உருவாக்கப்பட்டன.

இதையடுத்து, குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையின் தந்தை என கார்ல் ஜெராஸி அறியப்பட்டார்.
குடும்பக் கட்டுபாடு மாத்திரை ஒரு நாட் டின் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க உதவியது மட்டுமல்லாமல், பாலியல் உறவு களிலும், பெண்களின் வாழ்விலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. உலகெங்கும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில், அறி வியலைவிட, அரசியல் முக்கியப் பங்கு வகிக் கும் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டார்.

வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், பல்வேறு தனியார் வேதி யியல் மற்றும் மருந்து தயாரிப்பு நிறு வனங்களில் பணியாற்றியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறையின் கவுரவப் பேராசிரியராக இருந்தார். கரிம வேதியியல் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ள அவர், சுமார் 1,200 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இரு கவிதைத் தொகுப்புகள், விஞ்ஞான நாவல்கள், நாடகங்களும் எழுதி யுள்ளார். இவரது சுயசரிதை 4 தொகுதி களாக வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை (ஜன.30) அவர் இறந்ததாக ஸ்டான் ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/95438.html#ixzz3Qb9t49SJ

தமிழ் ஓவியா said...

புதிய ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை: அசோசேம் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடில்லி, பிப்.2- புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை என்று அசோசேம் கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பான்மையான தொழி லதிபர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தவிர நடப்பு நிதி ஆண்டில் எந்த முதலீட்டுத் திட்டங்கள் வரும் என்பதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் தொழில் துறை அமைப்பான அசோசேம் பிஸினஸ் நம்பிக்கை குறியீடு என்ற பெயரில் நடத்திய சர்வேயில் இவை தெரிய வந்திருக்கின்றன.

அதேசமயம் நடப்பாண்டின் முதல் அரையாண்டுக்குள் சூழ் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.
சர்வேயில் கலந்துகொண்ட 54.2 சதவீத தொழிலதிபர்கள் கடந்த ஆறு மாத காலத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

மேலும் 45.8 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு நிதி ஆண்டுக்குள் முதலீட்டு சூழ்நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்தார்கள்.
மேலும் ஏற்றுமதி சந்தையும் மந்தமாகவே இருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் 41.7 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு காலாண்டில் நிலைமை மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/95442.html#ixzz3QbA0kql6

தமிழ் ஓவியா said...

இங்கிலாந்தில் போர்க் கொடி!


மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணையை புறக்கணித்த இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அந்த நாட்டுக்கு அய்ரோப்பிய யூனியன் வர்த்தக சலுகை வழங்கக் கூடாது என அவர்கள் கூறி உள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்தபோது லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உலகில் வேறெங்கும் நடந்திராத அளவில், மனித உரிமைகள் மீறப்பட்டன. இது தொடர்பாக அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விசாரணையை இலங்கை அதிபர் இராஜபக்சே நிராகரித்து விட்டார். எந்த ஒத்துழைப்பும் வழங்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறி விட்டார். இதன் காரணமாக இலங்கைக்கு வர்த்தக ரீதியில் எந்த சலுகையும் வழங்கக் கூடாது என அய்ரோப்பிய யூனியனிடம் இங்கிலாந்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற வெளியுறவு கமிட்டியின் தலைவரும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.யுமான ரிச்சர்ட் ஒட்டவே மற்றும் எம்.பி.க்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துகிற சர்வதேச விசாரணை குழுவுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அந்த நாடு மறுத்து வருகிறது. இது தொடர்ந்தால் அந்த நாட்டுக்கு வழங்கி வருகிற வர்த்தக சலுகைகளை நீக்குவது குறித்து அய்ரோப்பிய யூனியனிடன் நமது அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் பொருளாதார தடை விதிப்பது, சர்வதேச விசாரணை குழுவை இலங்கையில் அனுமதிக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளையும் பரிசீலிக்க நமது அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page2/95263.html#ixzz3QbB3pxkp

தமிழ் ஓவியா said...

மதவெறி ஆட்சியை வேருடன் சாய்க்க வாரீர்!

பேராய மென்பது பார்ப்பன பனியாவைப்
பாதுகாக்கும் பிற்போக்குக் கட்சி
பார்ப்பன சனதாவோ ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டை
அட்டியின்றிச் செயல்படுத்தும் நஞ்சு
இருபெரும் கட்சியின் ஆட்சியால் இல்லாமை
ஏழ்மை நிலவிடும் அவலம்
பெரும்முத லாளிய பன்னாட்டுப் பகாசுர
நிறுவனத்தை வளர்க்கும் கட்சிகளே!

பேராயம் மதச்சார்பின்மை பேசிடினும்
மதவெறியைக் கட்டுப் படுத்தவில்லை
அரசு சார்ந்து ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ
வாளா விருந்ததே காரணம்
நேரு காலத்திலே நேர்ந்த அவலத்தால்
பாபர் மசூதியை இடித்தனர்
பெரும்பான்மை மக்களைப் பின்னுக்குத் தள்ளி
சிறுபான்மைப் பார்ப்பனர் ஆட்சியே!

பார்ப்பன சனதாவின் கூட்டணி ஆட்சியில்
நிறைவேறா மறைமுகத் திட்டங்கள்
ஆர்.எஸ்.எஸ். வழிகாட்ட அறுதிப் பெரும்பான்மை
பெற்றுவிட்ட மோடியின் அரசு
வெளிப்படையாகவே செயல் படுத்த
ஆளுக்கொரு விதமாய்க் கூச்சலிட
நாளுக்கோர் அறிவிப்பை கூச்சநாச்ச மின்றி
மதவெறியால் கொக்கரிக் கின்றார்

இந்தித் திணிப்பு சமஸ்கிருத மாக்கல்
கல்வியில் காவிச் சாயமேற்ற
இந்நாட்டின் வரலாற்றைத் திரிக்க கொலைநூல்
கீதையை தேசிய நூலாக்க
இந்துவெறி தலைக்கேற இந்தியா இந்து
நாடாம் ஒரே பண்பாடாம்
மந்தை யாடுகள் மக்களென எண்ணி
மதவெறியால் மனப்பால் குடிக்கின்றார்!

காந்தியும் பட்டேலும் கூர்ச்சரத்தில் பிறந்தவர்
பட்டேலைத் தூக்கும் கமுக்கம்
காந்தியைத் தாழ்த்தி கோட்சேவை தேசப்
பக்தரென சரடுவிடு கின்றார்
தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே பாதியாம்
அதுபோல் கொடுவெறி யனுக்கு
வாய்த்து விட்ட ஆட்சியால் நாடொறும்
சிலைகோ யில் கட்டத் துடிக்கின்றார்!

மதவெறி பிடித்தால் மானுடம் கேடுறும்
மண்ணில் நிலவும் அவலம்
மதவெறியை மாய்த்தால் மானுடம் தழைக்கும்
மதவெறியை விலக்குவீர் நாட்டோரே
அய்யா பெரியார் அண்ணல் அம்பேத்கர்
கொள்கைக் கோட்பாட்டை ஏற்று
மய்யத்தை யாளும் மதவெறி ஆட்சியை
வேருடன் சாய்க்க வாரீரே!

- கவிஞர் இனியன், திருச்சி

Read more: http://viduthalai.in/page4/95265.html#ixzz3QbBoP6D3

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்ள வேண்டியவை

நீரை அதிக அளவு தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப் பெரியது பரம்பிக்குளம் ஆழியாறு நீர்த் தேக்கமாகும். உலகிலுள்ள முதல் பத்து மிகப் பெரிய நீர்த் தேக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

தேன்கூட்டில் சேகரித்து வைக்கப்படும் தண்ணீர் அற்ற தேன், ஆயிரம் ஆண்டுகளானாலும் கெடாது.

ஒரு மனிதன் தூங்கும்போது 14 முறை புரண்டு படுக்கிறான்.

வாழ்நாள் முழுவதும் நாம் சாப்பிடும் சாப்பாட்டின் எடை நூறு யானைகளின் எடைக்குச் சமம்.

தீயில் எரிந்து போன எழுத்துக்களை அறிய அகச் சிவப்பு கதிர்களை பயன்படுத்துகின்றனர்.

எதிர்காலத்தில் மின்சாரம் வழங்கப் போவது நிலக்கரியோ அல்லது சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடிய பிற உலைகளோ இல்லை.

சூரிய ஒளிமூலம் எல்லா இடங்களிலும் பரவலாக மின்சாரம் எடுக்கப்படும்.

ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு அலுவலகமும் தங்களுக்குத் தேவையான சூரியஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் நிலை இருக்கும்.

இதனால் மின்தடை என்பது இருக்காது.

டயரை கண்டுபிடித்தவர் டன்லப் - 1833ஆம் ஆண்டு.

நீர்ச்சத்து நிறைந்தது தர்ப்பூசணிப் பழங்கள், கோடை காலத்துக்கு ஏற்றவை.

நாம் தர்ப்பூசணியின் சதைப் பற்றான பகுதியை மட்டும் சாப்பிட்டு விட்டு வெள்ளை நிறப் பகுதியை வீசி எறிந்து விடுகிறோம். இப்படி தூக்கி ஏறியப்படும் பகுதியில் இருந்துதான் சர்க்கரையும், எத்தனாலும் தயாரிக்கப்படுகிறது.

மரங்களுக்கு மனிதர்களைப் போல் வாழ்நாள் இவ்வளவு என்று கணக்கு கிடையாது.

கலிபோர்னியாவில் சில மரங்களுக்கு வயது 4 ஆயிரம் ஆண்டுகளாகும்.

(நூல் அறிவியல் செய்திகள் களஞ்சியம்)

தகவல்: க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page5/95268.html#ixzz3QbCCv1hG

தமிழ் ஓவியா said...

இவர்தான் ஏழை இந்தியாவின் பிரதமர்

ஒரு மணி நேர சந்திப்பிற்கு 10 லட்ச ரூபாய் ஆடை அணிந்த மோடி ஞாயிறு அன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாஉடனான சந்திப்பின் போது மோடி அணிந்திருந்த ஆடையின் விலை ரூ.10 லட்சம், அந்த ஆடையில் மோடியின் முழுப்பெயரான நரேந்திர தாமோதரதாஸ் மோடி எழுத்து தங்க ஜரிகையில் பின்னப்பட்டிருந்தது.

ஆடை அணிவது ஒருவரது தனிப் பட்ட விருப்பம், அவர் எளிமையாக அணியலாம் அல்லது மிகவும் ஆடம் பரமாக அணியலாம், ஆனால் இந்தியா போன்ற வளரும் நாட்டின் மக்கள் பிரதிநிதி ஒருவர் எப்படி இருக்க வேண் டும் என்று பொதுவான கோட்பாடு உள்ளது. பள்ளிகளில் கூட சீருடை ஏன் அணியச்சொல்கிறார்கள் என்றால் அனைவரும் சமமாக பாவிக்கவேண்டும் என்றுதான், ஆனால் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றி னைத்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வேன், என்று முழக்கமிட்ட மோடி அம்பானி, அதானி, மற்றும் மதுபான தொழிலதிபர் விஜய்மல்லையா போல் ஆடம்பர ஆடையில் பவனி வருகிறார்.

இதில் என்ன வெட்கக்கேடு என்றால் பத்திரிகைகள் இதை புகழோ புகழ் என்று புகழ்கின்றனர்.

கடந்த ஆண்டு அமெரிக்க சென்ற மோடி 5 நாட்கள் தங்கி இருந்தார் இந்த அய்ந்து நாட் களிலும் பல்வேறு வித ஆடைகளை அனிந்திருந்தார். இவை அனைத்தும் அவருக்கென்று தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட் டவை தான்!

இந்த ஆடை வடிவமைப் பாளர்கள் எல்லாம் இந்தியர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறப்பு வரு மானத்திற்கு வழி வகுக்கிறார் என்று எண்ணி மகிழ்ச்சியடையலாம். ஆனால், மோடியின் ஆடைகளை நெய்வது முதல் வடிவமைத்து தைத்துக் கொடுப்பது எல்லாம் Holland & Sherry என்ற இங்கிலாந்து நிறுவனம். இந்த நிறுவனம் உலகில் முக்கிய சர்வாதி காரிகளுக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்த பல்வேறு செய்திகள் அய்ரோப்பியப் பத்திரிகையில் வலம் வந்துள்ளன. இந்தியாவில் வாடியா, அனில் அம்பானி, போன்ற இந்திய பெரும் பணக்காரர்களுக்கான சிறப்பு ஆடை களை வடிவமைத்து தைத்து கொடுத்து வந்தது இதே நிறுவனம் தான்.

இந்த நிறுவனம் நேரடியாக மோடிக்கு ஆடைகளை அனுப்புகிறதா? அல்லது வேறு யாரேனும் மோடிக்கான இந்த நிறுவனத்தில் இருந்து ஆடைகளை பெற்று அனுப்புகிறாரா? என்று பிற்காலத்தில் தெரியவரும். மோடியின் ஆடையில் தங்க ஜரிகை களால் “NARENDRA DAMODHARDAS MODI" என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டது. இந்த ஆடை நெய்வதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 5 லட்சம் வரை செலவாகியிருக்கலாம் என்றும், வடிவ மைபபாளர்களுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை கொடுத்திருக்கலாம் என்றும் தங்க ஜரிகைகளின் விலை குறைந்த பட்சம் 4 லட்சம் வரை இருக்கலாம், குறைந்தபட்சம் 10 முதல் 11 லட்சம் வரை செலவிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மோடிக்கு என்று பிரத்யோக ஆடை வடிவமைப்பளர் ராகேஷ் அகவர்வால் என்ற நபர் இருந்தாலும் மோடி அயல்நாட்டு வடிவமைப்பாளர்களின் ஆலோசனையையே பெரிதும் விரும்பி கேட்கிறார்.

பலரது ஆலோசனைகளை கேட்ட பிறகே தனது ஆடை வடிவ மைப்பாளரை அழைத்து இறுதி செய் கிறார். இந்தியாவில் இன்றளவும் வறுமைக் கோட்டிற்கு கீழே 43 விழுக்காடு மக்கள் வாழும் நிலையில் இந்த நாட்டின் பிரதிநிதியாக திகழும் ஒரு தனிநபர் மக்கள் பணத்தை இப்படி தன்னுடைய தனிப்பட்ட ஆசாபாசங்களுக்காக செலவிடலாமா? உலக நாடுகள் அனைத்தும் தங்களது பிரதிநிதிகளின் ஆடைக்கென ஒரு விதிமுறையை வைத்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை எடுத்துக்கொண்டால் அவர் பிற நாட்டிற்கு அரசு முறைப்பயணமாக செல்லும் போது அவர்களுக்கு என்று வகுக்கப்பட்ட விதிமுறைகளின் படிதான் ஆடைகளை அணிய வேண்டும் இதை டிரஸ் கோட் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இன்றளவும் இந்தியாவில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங் கள் கூட தனது பணியாளர்களுக்கு இந்த விதிகளைப் பயன்படுத்த வற்புறுத்து கிறது.

Read more: http://viduthalai.in/page8/95271.html#ixzz3QbCg5z95

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பண்படுத்திய இந்த பூமியில் இந்து அமைப்புகளின் எதிர்மறைக் கருத்துகளை பிரதமர் மறுக்காதது ஏன்?

கலைஞர்
கண்டனம்


சென்னை, பிப்.1_ தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பண் படுத்தி வளர்த்து பாதுகாத்து வரும் இந்த பூமியில், இந்து அமைப்புகளின் எதிர் மறை கருத்துகளைப் பிரதமர் அவ்வப் போது மறுத்து, தெளிவுபடுத்தாதது ஏன்? எனவும், இவை ஆச்சரியத்தையும், அதிர்ச் சியையும் அளிப்பதாகவும் தி.மு.க. தலை வர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் வெளி யிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி:- இலங்கையில் தமிழர் ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?

கலைஞர்:- இலங்கையில் பொறுப் பேற்றிருக்கும் சிறீசேனாவின் புதிய அரசு, சிறுபான்மைத் தமிழினத்தைச் சேர்ந்த 62 வயதான திரு.கே.சிறீபவன் என்பவரை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது வரவேற்றுப் பாராட் டப்பட வேண்டிய நடவடிக்கையாகும். 1991 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக திரு. தம்பையா என்னும் தமிழர் இருந்திருக்கிறார். தற் போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண் டும் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழினத்திற்கு இதுவரை இழைக்கப்பட்டிருக்கும் ஏராள மான அநீதிகளை ஒவ்வொன்றாகத் துடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகவே உலகத் தமிழினத்தால் கருதப்படும். எனினும், இலங் கையில் புதிய அரசின் பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில் ஏற்படும் தாம தம் தவிர்க்கப்படவேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கேள்வி:- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். சட் டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்கவேண்டும் என்ற குரல் மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டதே?

கலைஞர்:- தந்தை பெரியார் அவர் களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், அந்த இரு பெரும் இமயங்களின் அடி யொற்றி இலட்சோப இலட்சம் செயல் வீரர்களும் பண்படுத்தி, வளர்த்து, பாது காத்து வரும் இந்த பூமியிலேதான், அதுவும் பெரியார் வாழ்ந்த திருச்சியிலே தான், இப்படி ஒரு குரல் கேட்டிருக்கிறது. திருச்சியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விசுவ இந்து பரிஷத்தின் மாநாட்டில், அதன் செயல் தலைவர் பிரவீன் தொக்காடியா பேசும்போது, நாடாளுமன்றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்றவேண்டும். ஒரே நாட்டில் இரு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிசெய்யவேண்டும். சட்டப்படி இந் தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட குரல் எழுப்பப்பட்டிருப் பது இது முதல் முறை அல்ல.

தமிழ் ஓவியா said...


மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், சிவ சேனா போன்ற இந்துத்துவா அமைப்பு களைச் சேர்ந்த பலரும், ஏன், மத்திய அமைச்சர்களில் ஒரு சிலரும் இப்படிப் பேசி வருவதை இந்தியா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே; காந்தியாரைப் போன்ற தேச பக்தர் கோட்சே; கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்கவேண்டும்; கேந்திரிய வித்யா லயா பள்ளிகளில் சமஸ்கிருதம் போன்ற அடிப்படை வாதக் கருத்துகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. பிரதமர் நரேந் திரமோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பகவத் கீதையைத் தான் பரிசளித்தார் என்றும், அப்போதே அதற்குத் தேசிய புனித நூல் தகுதி வழங் கப்பட்டுவிட்டது என்றும், அதனைத் தேசியப் புனித நூல் என்ற அறிவிப்புதான் இந்த ஆட்சியில் இன்னும் அரசு ரீதியாக வெளியிடப்படவில்லை என்றும்; அந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிடும் என் றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கிறார். அதைப்போலவே, முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்கள் இல்லை. அவசரநிலை காலத் திலேதான் இந்த இரு சொற்களும் சேர்க் கப்பட்டன. இந்தச் சொற்கள் அரசமைப் புச் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட் டிருக்கிறார்.

அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டுவதை நினைவூட்ட நாடு முழுவதும் மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை ராம் மகோத் சவம் நடத்தப் படும் என்றும்; கிராமங் கள்தோறும் இரண்டரை அடி உயர முள்ள ராமர் சிலையை நிறுவி, பத்து நாட்கள் வழிபாடு நடத்தி அந்தந்த இடங் களிலேயே ராமர் சிலை நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. இந்தியத் திரு நாட்டை பிற்போக்குத் திசைக்கு இழுத்துச் செல்லும் எதிர்மறைக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அதை அவ்வப்போது மறுத்து தெளிவுபடுத்த வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதி காத்து வருவது, ஜனநாயகம் - மதச் சார் பின்மை - சமாதானம் - சமதர்மம் - யாரை யும் விலக்கி வைக்காத அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சிப் பாதை ஆகிய முற்போக்கு லட்சியங்களில் உறுதியான நம் பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஆச் சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது!
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி_பதில் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95372.html#ixzz3QbDRmMnv

தமிழ் ஓவியா said...

உண்டாக்க வேண்டும்



மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும். (விடுதலை, 1.10.1967).

Read more: http://viduthalai.in/page1/95292.html#ixzz3QbES8KsT

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்தி ருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.

இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங் களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள்.

அவர்கள் எழுதும் கடிதங் களும் குறைவு. அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுது வார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசன மில்லை.

உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது? ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்;

வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/page1/95301.html#ixzz3QbFhSS37

தமிழ் ஓவியா said...

இன்று அண்ணா அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

பெரியார் தம் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க சூளுரைப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், அண்ணா தலைவராக ஏற்றுக் கொண்ட தந்தை பெரியார் விரும்பிய சுயமரியாதைச் சமூகத்தைப் படைக்கச் சூளுரைப்போம் என்று ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் தலை மாணாக்கராகத் திகழ்ந்து, உலக வரலாற்றில் எங்கு தேடினும் கிடைக்காத ஒரு சரித்திரச் சாதனையை நிகழ்த்தி, தனி ஒரு வரலாற்றையே உருவாக்கிய பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 46ஆம் நினைவு நாள் இன்று!

என்ன அந்த சரித்திரச் சாதனை தெரியுமா, நண்பர்களே? தன்னை உருவாக்கிச் செதுக்கிய தலைவனுக்கு, தான் முதன் முதலாக உருவாக்கிய (தி.மு.கழக) ஆட்சியை, சட்டமன்றத்திலேயே பதிவு செய்யும் வகையில் இந்த அரசே தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு என்று பிரகடனப்படுத்திய வரலாறு அது! அத்தகைய தலைவரின் வாழ்நாளில், அத்தலைவரே பூரித்து, இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி, (சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இச்செய்தியை நேரில் சென்று தெரிவித்தபோது) எனக்கு வலி குறைந்தது; மகிழ்ச்சி என்று சொன்ன வரலாறு எங்காவது உண்டா?

திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனை இது!

அத்தகைய அண்ணாவின் ஓராண்டு கால ஆட்சி - அசோகன் ஆட்சி, பவுத்த நெறியைப் பரப்புகின்ற பணி செய்ததைப் போல, அண்ணாவின் ஆட்சி - பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் - திராவிடர் இயக்கத்தின் - கொள்கை லட்சியங்களை நிறைவேற்றிடும் வண்ணம் செய்த முப்பெரும் சாதனைகள் சரியான அடிக்கட்டு மானத்தை இட்ட, லட்சியங்களை கோட்டையில் கொலுவிருக்கச் செய்தவை ஆகும்!

1. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் (முன்பு நடந்தவை உட்பட) வழங்கியது.

2. சென்னை ராஜ்யம் பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றச் சட்டம்.

3. பள்ளிகளில் தமிழ் - ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மூலம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை முறித்து தடுத்த திருத்தொண்டு

மற்றும் ஜாதி ஒழிப்புக்கு ஜாதி மறுப்புத் திருமணங் களுக்கு தங்கப் பதக்கப் பரிசு, சமூக நீதிக்கு பாதுகாப்பான ஒரு பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு ஆணையம் அமைக்கத் துவக்கப் பணிகள் - தகுதி திறமை பேசி, மருத்துவக் கல்லூரிக்கு மனுபோட உயர்த்தப்பட்ட மதிப் பெண்களை பழைய படியே குறைத்து, வாய்ப்பற்றவர் களுக்கு அரிய வாய்ப்புக்களை பாதுகாக்க சமூகநீதி காப்பு,

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைநகர் சென்னையில் வரலாறு காணாத பெருமை - சிறப்புடன் நடத்திய சாதனை, இப்படி எண்ணற்ற சாதனைகள் - குறுகிய காலத்தில்.

இத்தகைய அண்ணா, அடிப்படை கட்டுமானமான பகுத்தறிவுக் கொள்கைகளை, மதச் சார்பின்மையைக் காக்க, அரசு அலுவலகங்களில் கடவுள் படம் வைக்கக் கூடாது என்ற சுற்றறிக்கை. (ஆச்சாரியார் போன்றவர்களின் எதிர்ப்பையும் கூட பொருட்படுத்தாது செய்தல்) போன்ற பல சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர்.

அய்யாவிடம் அண்ணா கேட்டது

ஆட்சிக்கு வந்த பிறகு அய்யாவைப் பார்த்து பொது மேடையிலேயே, அதிக அதிகாரமில்லாத இவ்வாட்சியி லிருந்து நடத்தவா? அல்லது இதை விட்டு விட்டு முன்புபோல தங்கள் பின்னால் வந்து ஒரு தொண்டனாகப் பிரச்சாரப் பணி செய்யவா என்று கேட்க, அதற்கு அவரது தலைவரான தந்தை பெரியார்.

இப்பணியை நானும் தோழர்களும் தொடருவோம்; நீங்கள் ஆட்சியில் தொடருங்கள் ஒரு நாள், ஒரு மணி, ஒரு நிமிடம் கூட குறைவில்லாமல் ஆட்சியிலிருந்து முடிந்த நல்லவைகளை நாட்டு மக்களுக்குச் செய்யுங்கள் என்று கூறிய காட்சி - நமது மனதில் ஒளிபட நிற்கிறது இன்றும்!

ஆரிய மாயை இன்று...

அத்தகைய அண்ணா பெயர் வெறும் திரையாகப் பயன்படுகிறது!

ஆரிய மாயையைக் கண்டு, வெகுண்டு உரைத்த தலைவர் பெயரிலேயே அண்ணா, ஆரியம் சார்ந்த கலாச்சாரத்தினையும், மூடநம்பிக்கைகளையும் முனைப் புடன் நடத்துவதாக ஆக்கி, காரணப் பெயரான ஒரு தலைவரை வெறும் இடு குறிப்பெயராக்கிய வேதனையில், வெட்கப்பட்டுத் துடிக்கின்றன நமது நெஞ்சங்கள்!

ஏனோ இந்த கொள்கைப் பஞ்சங்கள் என்றாலும் தி.மு.க. என்னும் இரும்புக் கவசம் இன்னும் இருக்கிறது, கலைஞர் தலைமையில்.

சூளுரைப்போம்!

அண்ணா நினைவு நாளில் அவர் விரும்பிய பெரியா ரின் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க அனைவரும் சூளுரைத்து, சுயமரியாதைச் சூடு பெறுவோமாக!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

முகாம்: சிங்கப்பூர்
3-2-2015

Read more: http://viduthalai.in/e-paper/95466.html#ixzz3QgwvMxg3

தமிழ் ஓவியா said...

அண்ணா


நூல் விமர்சனம் என்ற பகுதியில் இவ்வார கல்கி இதழில் (8.2.2015 பக்கம் 48) கருத்து ஒன்று கூறப்பட் டுள்ளது.

நா. முத்துநிலவன் கட் டுரை ஒன்றில்:

கம்பனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் வடமொழி பக்தி நூல்களை விடவும் தமிழ்நாட்டுப் பக்தி இயக்கங் களும், இலக்கியங்களும் ஜாதி உடைப்புக்கு ஆற்றிய பங்கை ஆய்வு செய்வது அவசியம்... என்று கூறுவதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். தீ பரவட்டும் என்று நெருப்பு வைத்து விட்டால் மட்டுமே அழிந்து நீறாகி விடக் கூடியவன் அல்லன் கம்பன் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய செய்தி என்று புத்திசாலித் தனமாக ஏதோ சொல்லி விட்டதாக கல்கியில் குறிப் பிடப்பட்டுள்ளது.
சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதி

யாருடனும், முறையே சென் னையிலும், சேலத்திலும் அண்ணா அவர்கள் கம்ப இராமாயணம், பெரிய புரா ணத்தை எதிர்த்து நடத்திய அந்த விவாதப் போரில் கம்ப இராமாயணமும், பெரிய புராணமும் கொளுத்தப்பட வேண்டியவையே என்று அண்ணா அவர்கள் ஆற்றிய உரை தீ பரவட்டும் என்ற நூலாக வெளி வந்துள்ளது. அதைத்தான் முத்துநிலவன் மறைமுகமாக அறிஞர் அண் ணாவைச் சாடியிருக்கிறார். வரலாறு தெரியாதவர்கள் என்றும் ஜாடை பேசுகிறார். கல்கிக்கு இது ஒரு மகிழ்ச்சி யான அம்சம்தானே!

அண்ணா அவர்களிடம் விவாதம் நடத்தியவர்களே தங்கள் தோல்வியை ஒரு வகையில் ஒப்புக் கொண்ட நிலையில், காலங் கடந்து கல்கியோ அவர் எடுத்துக் காட்டும் நூலாசிரியரோ கதறிப் பயனில்லை.

அண்ணாவுக்கு வரலாறு தெரியுமா தெரியாதா என் பதை அவரின் ஆரிய மாயை நூலைப் படித்து விட்டுப் பேச வேண்டும்.

இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட் டம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறியதுதான்! பி.டி. சீனிவாசய்யங்காரோ, விவேகானந்தரோ, திரா விடர் இயக்கத்தைச் சேர்ந் தவர்கள் அல்லர் - வரலாறு தெரியாதவர்களும் அல்லர். இவர்களே ஆரியர் - திரா விடர் போராட்டம் என்று தான் சொல்லுகிறார்கள்.

கம்பனாகிய திராவிடன் - தமிழன், நமது இனத்தை இழிவுபடுத்தும் ஒரு நூலைத் தமிழில் எழுதினானே என்ற சினம், சுயமரியாதை உள்ள வர்களுக்கு ஏற்படத்தான் செய்யும்; சுயமரியாதை உணர்வே தேவையில்லை என்று நினைத்தால் அவர் களிடம் விவாதம் செய்வதில் அர்த்தம் இல்லை.

வையகம் என்னை இகழுமோ, மாசு வந்து எய்துமோ? என்று கம்பன் தொடக்கத்திலேயே ஏன் எழுதினான்? அதில் ஒரு குற்ற உணர்வு மேலோங்கி நிற்பதற்குக் காரணம் என்ன? இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் வரலாறு தெரி யாதவர்கள் என்று பொத்தாம் பொதுவில் எழுதுவது எந்த வகையில் புத்திசாலித்தனம்?

ஒன்றை எதிர்ப்பதற்குக் காட்டக் கூடிய அடையா ளம்தான் தீ மூட்டுவதாகும்.

அந்நிய துணிகள் பகிஷ் காரம் என்று அந்தத் துணி களை எரிக்கவில்லையா? இராமாயணத்தை தந்தை பெரியார் எரித்தது - எரிக்கச் சொன்னது - அதன்மீது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோட்பாட் டின் அடிப்படையில்தானே!

ஆரிய - திராவிடப் போராட்டத்தில் கல்கி எந்தப் பக்கம் நின்று பேசும் என்று யாருக்குத்தான் தெரியாது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/95464.html#ixzz3QgxBOuLJ

தமிழ் ஓவியா said...

காந்தியின் கொள்ளுப் பேரன் எச்சரிக்கை


இந்தூர், பிப்.3-_ மகாத் மாவை சுட்டுக்கொன்ற கோட்சே பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன்படுத்துவது வேதனைக் குரிய விஷயம் என்று காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தெரி வித்துள்ளார். காந்தியைச் சுட்டுக்கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்றும், அவருக்குக் கோவில் கட்டப்படும் என்றும் சில தலைவர்கள் கூறி வருகின்றனர். இது காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்திக்கு (வயது 55) மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: காந்தியார் அவர் களைச் சுட்டுக் கொன்றவர் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன் படுத்துவது வேதனைக்குரிய விஷயம். மகாத்மா அகிம்சை கருத்துகளை கொண்டிருந்தார். ஆனால் மற்றவர்கள் வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங் களை வளர்த்தனர். கோட்சேயை போற்றுவது, நாட்டின் வன்முறைக்கு வித்திடும் செயலாகும். இவ் வாறு துஷார் காந்தி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/95470.html#ixzz3QgxKXDTu

தமிழ் ஓவியா said...

மாநில மொழிகளைக் காக்க ஒற்றுமையுடன் போராட வேண்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா


மாநில மொழிகளைக் காக்க அனைவரும் ஒற்று மையாகப் போராட வேண்டும் என்று, கர் நாடக முதல்வர் சித்தர மையா கேட்டுக் கொண் டார்.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஷாரவணபெலகோலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 81-ஆவது கன்னட சாகித்ய மாநாட் டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

மத்திய அரசின் மொழிக் கொள்கையால், மாநில மொழிகளைக் காக்க வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது. தமது மாநில மொழிகளைக் காக்க பக்கத்து மாநிலங் களைச் சேர்ந்த அனை வரும் ஒற்றுமையாகப் போராட வேண்டும்.

கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு ஆபத்து ஏற்படும்போது அனைவரும் ஒன்றி ணைந்து போராடி வரு கிறோம். கன்னட மொழி யைக் காக்க, வரும் காலங் களிலும் இது தொடர வேண்டும்.

ஆங்கில மொழி மோகத் தால் தனியார் பள்ளிகள் கன்னட மொழியைப் புறக்கணித்து வருகின்றன. இதனால், நமது மண் ணிலேயே நமது தாய் மொழி அழியும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நமது மொழியைக் காக்க வேண் டியது நமது அனைவரின் கடமை. இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களை ஒன்றி ணைத்து பிரதமரைச் சந்திக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதொடர் பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத முடிவு செய்துள் ளேன்.

கன்னட மொழியைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை கட்டாயம் கன்னடம் கற்பிக்க வேண் டும் என சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் தாய்மொழியைக் கற்பிக்க தமிழகத்தின் மாதிரியில் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுச் செயல் பட்டு வருகிறோம். கர் நாடகத்தில் அனைத்து மொழிகளைச் சேர்ந்த வர்களும் வாழ்ந்து வரு கின்றனர்.

ஆனால், ஆங்கில மொழி வேறு நாட்டிலி ருந்து இங்குவந்து குடி யேறி உள்ளது. அதனை தாய்மொழியாகக் கொண் டவர்கள் 0.5 சதம்கூட இருக்க மாட்டார்கள். என்றாலும், அனைவரும் ஆங்கில மோகம் கொண் டுள்ளது வேதனை அளிக் கிறது.

அனைத்து மாநிலங் களிலும் தங்கள் தாய் மொழியைக் கட்டாய மாக்க வேண்டும் என காங்கிரஸ் அரசு உறுதி யாக உள்ளது. கன்னட சாகித்ய மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மா னங்களைச் செயல்படுத்த அரசு உதவியாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன் னட சாகித்ய மாநாட்டின் தலைவர் சித்தலிங்கையா உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/95473.html#ixzz3QgxWnT6Q

தமிழ் ஓவியா said...

மதசார்பின்மை, சோசலிசம் குறித்த விவாதம் வேண்டும் என்று எப்போதுமே அழைக்கவில்லையாம்!

பல்டி அடிக்கும் சட்ட அமைச்சர்

டில்லி, பிப்3- அமைச் சர் ரவிசங்கர் பிரசாத் மதசார்பின்மை, சோசலி சம் குறித்த விவாதம் வேண்டும் என்று ஏற்கெ னவே கூறியதை மாற்றி தற்போது மதசார்பின்மை, சோசலிசம் குறித்த விவா தத்துக்கு எப்போதுமே தாம் அழைப்பு விடுக்க வில்லை என்று கூறி யுள்ளார்.

மத்திய தகவல் ஒலி பரப்புத்துறை அமைச்சர் ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கடிதம் வாயி லாக அவர் குறிப்பிட் டுள்ளதாவது:

தி இந்து ஆங்கில நாளிதழின் 2.2.2015 தேதி யில் தலையங்கத்தில் (“A needless controversy”) தேவையற்ற முரண்பாடு என்கிற தலைப்பில் அர சமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சோசலிஸ்ட் மற்றும் செக்குலர் ஆகிய சொற்களை தொடர்வ தற்கு தேசிய அளவிலான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நான் அழைப்பு விடுத்ததாக என்னை விமரிசனம் செய் துள்ளது.

அதுபோன்ற கோரிக் கையை நான் எப்போ துமே எழுப்பவில்லை என்பதை நான் இக்க டிதத்தின் வாயிலாக நேரடியாகவே பதிவு செய் கிறேன். உண்மையில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் ஊடகங்களிடம் அமைச் சரவை முடிவுகுறித்து கூறியபோது, தகவல் தொடர்புத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரச மைப்புச் சட்டத்தின் திருத்தப்படாத முகவு ரையை வெளியிட்டது தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நான் பதில் அளிக்கும்போது, ஜவ கர்லால் நேரு மதசார் பற்றவரா இல்லையா என்பதுகுறித்து காங்கிரசு கட்சி விவாதம் செய்ய வேண்டும் என்றுதான் கூறினேன். ஏனென்றால், ஜவகர்லால் நேருவுடன் இருந்த மற்ற தலைவர் களான மவுலானா ஆசாத், சர்தார் படேல், பீமாராவ் அம்பேத்கர் மற்றும் டாக்டர் ராஜேந் திர பிரசாத் ஆகியோர் சிறந்த தலைவர்களாகவும், சுதந்திரப் போராட்டத் தில் ஈடுபட்டவர்களாக வும் இருந்தபோதிலும், இந்த இரு சொற்களையும் இணைப்பதற்கு எப்போ துமே தேர்ந்தெடுக்கவில்லை.

மற்ற செய்தித்தாள்கள் நான் கூறியதை அப்ப டியே வெளியிட்ட போதி லும், அந்த இரண்டு சொற்கள்குறித்து நான் விவாதத்துக்கு அழைத் துள்ளதாக ஓர் ஆங்கில இதழ் (தி இந்து) மட்டும் வெளியிட்டுள்ளது.

அடுத்த நாளே டில் லியில் உள்ள ஆங்கில நாளிதழ் அலுவலகத்துக்கு என்னுடைய விளக்கத்தை அளித்துவிட்டேன். அதுவும் வெளியிடப்பட் டது. இணையத்திலும் வெளியானது.

இது இப்படிஇருக்க செய்தித்தாளின் முக்கியத் தலையங்கத்திலேயே நான் பேசாததை குறிப்பிட்டுள் ளதால் நான் சிறிய அள வில் பாதிப்புக்கு ஆளா னேன். அரசோ, நானோ செக்குலர் மற்றும் சோசலிஸ்ட் சொற்களை அரசமைப்பிச்சட்டத்தின் முகவுரையிலிருந்து அகற் றப்பட வேண்டும் என்றோ, அதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றோ கூறவே இல்லை.

மதசார்பின்மை மற்றும் சோசலிச சமூக சமத்துவம் முற்றும் முழு வதுமாக இருக்கவேண்டும் என்பதற்காக எங்களை நாங்கள் அர்ப்பணித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு வருடைய நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் நாகரிகம், பாரம்பர்யம் மற்றும் பண்பாடும் ஆகும் என்னும் அரசமைப்பின் அடிக்கட்டுமானத்தின்படியே உச்சநீதிமன்றம் வழி நடத்தி வருகிறது.

(குறிப்பு: சட்ட அமைச் சர் தெரிவித்த கருத்து தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பப்பட்ட நிலை யில் இப்பொழுது பிரச் சினை வெடித்துப் பெரி தான நிலையில் அந்தர் பல்டி, ஆகாயப் பல்டி அடிக் கிறார் - இதுதான் பிஜேபி யின் அறிவு நாணயம்!)

Read more: http://viduthalai.in/e-paper/95472.html#ixzz3QgxfuK4Z

தமிழ் ஓவியா said...

மனிதன்


மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.
(விடுதலை, 10.02.1960)

தமிழ் ஓவியா said...

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் ஆர்.எஸ்.எஸ். பங்கு குறித்து மவுனம் ஏன்? திக் விஜய்சிங் வினா


கடந்த 1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கியர் களுக்கு எதிரான கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு உள்ள தொடர்பு குறித்து ஊடகங்கள் உள்பட யாரும் பேசாதது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தி யாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறிய தாவது: கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்ப வங்கள் வருத்தத்துக்கும் கண்டனத் துக்கும் உரியவை.

இதுதொடர்பாக பல்வேறு விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்து ஊடகங்கள் உள்பட யாரும் பேசவில்லை. இந்த விஷயத்தில் அனை வரும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று திக் விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/page-2/95480.html#ixzz3Qgz2docf

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை: அய்பாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளைத்திறன் வெகுவாக பாதிக்குமாம்

நியூயார்க், பிப். 3- அமெரிக்காவில் அய்பாட், ஆண்ட்ராய்ட் போன், டேப்லெட் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகளை வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பாஸ்டன் பல்கலைக்கழக குழந்தைகள் நல மருத்துவர் குழு நடத்திய இந்த ஆய்வில், குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களில், வழக்கமான நட்புணர்வு மற்றும் எதேச்சையான விளையாட்டுகளை தவிர்த்து இதுபோன்ற சாதனங்களின் அதீத பயன்பாடானது, பரிதாப உணர்ச்சி, சமூக சிந்தனை மற்றும் சிக்கலை தீர்க்கும் மூளையின் திறன் ஆகியவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

மேலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் மொழி மற்றும் சமூகத்திறன்கள் பாதிக்கப்படும் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/95497.html#ixzz3Qh0nNgOI