Search This Blog

18.3.08

பாசிசத்தின் இரட்டைப் பிள்ளைகள்!

நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றத்தால் விமர்சிக்கப் பட்ட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமாம்!


அவரைப் போல நேர்மையானவர் வேறு யாரும் கிடையாதாம்!


நஞ்சை தேன் என்று விற்கும் ஆபத்தான ஆசாமியான `சோ ராமசாமி, தமிழ்நாட்டில் `மோடி `மஸ்தான் சரக்கை அவிழ்த்துக் கொட்டி ஆழம் பார்க்கிறார்.


ரஜினி அரசியலுக்கு வந்தால் குஜராத்தைவிட தமிழ்நாடு ஒரு படி மேலே போகும் என்று ரஜினியின் மூக்கைச் சொரிகிறார்.


மோடிக்கு 40 வகையோடு விருந்து படைக்கிறார் செல்வி ஜெயலலிதா


`சோவின் வீடு தேடி ஓடுகிறார் ஜெயலலிதா. நாட்டில் ஏதோ நடக்கிறது; தமிழர்களே, எச்சரிக்கை!


கேள்வி: நரேந்திரமோடி பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராகவோ, பிரதமராகவோ வாய்ப்புண்டா?
பதில்: எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கான தகுதி படைத்தவராகத் தான், நான் அவரைக் கருதுகிறேன்.
(`துக்ளக் 2.1.2008 பக்கம் 12)

`எதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க., ஆட்சி சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண்ஜேட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கு மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத் தன்மை, அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் - இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்...
``வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்தும் - அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற அரசியல் வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் மிகக் கடுமையாக முனைந்தும் - ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர்மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில், ஒரு மாநில முதல்வர், இப்படிப்பட்ட நேர்மையாளராகத் திகழ முடியும் - என்று நரேந்திரமோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப் பெரிய வெற்றி (`துக்ளக் 2.1.2008 தலையங்கம் பகுதியில் உள்ளவை)
``துக்ளக் வயது 38 என்ற விழாவில், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து (14.1.2008) சென்னை காமராசர் நினைவு அரங்கத்தில் திருவாளர் `சோ ராமசாமி பேசுகையில் குறிப்பிட்டதாவது:

``சாதாரணமாக சிலர் நல்லவர்களாக இருப்பார்கள். நான்கூட நல்லவன்தான். யாருக்கும் என்னால் கெடுதல் உண்டா!
இதுகூட நல்ல போடியம் தான். இதனால் யாருக்கும் கெடுதல் கிடையாது. அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஆனால் அசாத்திய திறமையும், முழு நேர்மையும் சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக மோடியைப் பார்க்கிறோம். (பலத்த கைதட்டல்) அதனால்தான் அவர் வென்றார். இவரைப் போய் மரண வியாபாரி என்று சொன்னார்கள். (சிரிப்பு) ஆமாம். நான் இப்போது உங்களிடையே மரண வியாபாரியை அழைக்கிறேன்.
தீவிரவாதத்திற்கு மரண வியாபாரி (பலத்த கைதட்டல்) ஊழலுக்கு மரண வியாபாரி (பலத்த கைதட்டல்) ஆதாயத்திற்குச் சலுகை காட்டும் அணுகுமுறைக்கு மரண வியாபாரி (பலத்த கைதட்டல்) நிர்வாகத் திறமையின்மைக்கு மரண வியாபாரி; (பலத்த கைதட்டல்) அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கிற்கு மரண வியாபாரி (பலத்த கைதட்டல்) - இப்போது உங்களிடையே பேசுவார் (பலத்த கைதட்டல்).
- `துக்ளக் 5.3.2008 பக்கம் 17

பாசிசத்தின் இரட்டைப் பிள்ளைகள் ஒன்றுக்கொன்று கை கொடுத்திருக்கின்றன.
அண்மையில் `தி நேம் ஈஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டுப் பேசிய `சோ கீழ்க்கண்ட `முத்திரைகளைப் பொறித்தார்.

``மகாபாரதத்தில் எந்தவொரு முடிவையும் தனித்து எடுக்காதே என்று கூறப்பட்டுள்ளது. சிறந்த நிர்வாகத்திற்கான இலக்கணம் இது. இதைத்தான் நரேந்திரமோடி செய்தார். அதனால்தான் அவரால் ஜெயிக்க முடிந்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத்தைவிட ஒருபடிமேலே போய் விடும்
- (`தீக்கதிர் 8.3.2008)

இவ்வாறெல்லாம் சோ திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்.
இதைவிட ஆபத்தான வேலையை வேறுயாரும் செய்ய முடியாது `சோ என்ற அபாயகரமான பார்ப்பனரால் மட்டுமே இதுபோன்ற பித்தலாட்டங்களை அரங்கேற்ற முடியும்.
விஷத்தைத் தேன் என்றும், விரியன் பாம்பை விழுது என்றும் சாக்கடையைச் சந்தனமென்றும், நரியை நாயென்றும் ஆள் மாற்றிக் காட்டி அடித்துக் கொண்டு போகும் வேலையை இந்த நவீன வெங்கண்ணாவால்தான் செய்து காட்ட முடியும். `ஹிந்துத்துவம் என்பது மத ரீதியானது அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது என்று (`துக்ளக் 2.1.2008 பக்கம் 4) (சம்பந்தப்பட்ட நீதிபதி வெங்கடாசரிய்யா தான் கூறியதைத் தப்பாக லியாக்கியானம் செய்து கொண்டார்கள் என்று பின்னால் கருத்துக் கூறியுள்ளார் என்பது வேறு விஷயம்) எடுத்துக்காட்டி தன் பூணூலை ஒரு முறை உருவிக் கொண்டு எழுதும் இதே `சோ ராமசாமி இவர் தூக்கிப் பிடிக்கும் திருவாளர் நரேந்திரமோடியை `நீரோ மன்னன் என்று அதே சுப்ரீம் கோர்ட்டு அடையாளப்படுத்திக் காட்டியதே அதை ஏன் வசதியாக மறைக்கிறார்? பேச நா இரண்டுடையாய் என்று ஆரிய மாயைபற்றி (ஆபுடுபே கருத்து) அறிஞர் அண்ணா சொன்னது பொய்யாகிப் போய் விடக் கூடாது அல்லவா?

நல்லாட்சி நடத்தி விட்டாராம் - நேர்மையான மனிதராம் - அதனால்தான் மக்கள் வாக்களித் தார்களாம் - குஜராத்தில் வெற்றி பெற்று விட்டாராம் - அடேயப்பா, எப்படியெல்லாம் துள்ளிக் குதிக்கிறார்!

கொடுங்கோலர்கள் வெற்றி பெற்று நீண்ட காலம் ஆட்சி செய்தது இல்லையா? ஹிட்லர் கூட ஜெர்மனியில் வெற்றி பெற்ற வன்தான். இடிஅமீனும் கால் நூற்றாண்டுக் காலம் ஆட்சி செய்தது உண்டு. எட்டு லட்சம் கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்த சுகார்தோகூட 30 ஆண்டு காலம் ஆட்சி சிம்மாசனத்தில் வீற்றிருந்து உறுமினான்.
சோவுக்குப் பிடித்தமான பாரத கதைப்படி துரியோதனன் - தாயாதிகளைக் காட்டுக்கு அனுப்பி 14 ஆண்டு காலம் ஆட்சி செய்யவில்லையா!

இவற்றையெல்லாம் நியாயப் படுத்தி விட்டல்லவா மோடியைத் தூக்கி மொட்டைத் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும்.
பார்ப்பான் ஒருவரைப் புகழ் கிறான் என்றால், அவனை மிக வும் விழிப்பாகப் பார்க்க வேண் டும். அதுவும் பார்ப்பனரல்லா தார் ஒருவரைப் பார்ப்பான் புகழ்ந்தால் மேலும் விழிப்பாக எச்சரிக்கையாக நோக்க வேண் டும். நரேந்திரமோடி ஒரு பார்ப் பானாகயிருந்தால் - அவர்களுக்கு வசதியாக இருந்திருக்காது. பார்ப் பனரல்லாதாராக இருப்பதால் நம்மோடு மோதவிட அவர்களுக் குப் பெரும் வசதியாகப் போய் விட்டது. அண்ணனைக் காட்டிக் கொடுத்த விபீஷணனுக்குத் தானே `ஆழ்வார் பட்டம்! 2000 முசுலிம்கள் மோடியின் ஆட்சியில் கொல்லப்பட்டனர் (அரசாங்கக் கணக்கு இவ்வளவு தான் - உண்மையில் படுகொலைக்கு ஆளானவர்கள் பல்லாயிரமாக இருக்கக் கூடும்;) நாசமாக்கப் பட்ட சொத்தின் மதிப்பு 681 கோடி ரூபாய்.

ஆகா, இதைவிட நல்லாட்சி ஆரியத்தின் பார்வையில் வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?
படுகொலை செய்யப்பட்ட வர்களில் பத்து பேர் பார்ப்பனர் களாகயிருந்தால் இந்தத் துக்ளக் பார்ப்பன ரத்தம் எந்த டிகிரிக்குச் கொதிப்பேறியிருக்கும்!

ஈழத்தில் படுகொலை செய்யப் படுபவர்கள் தமிழர்கள் என்கிற போது இவர்களின் அங்கமெல் லாம் ஆனந்தக் கடலில் மிதக் கிறது. குஜராத்தில் முசுலீம்களின் தலைகள் பனங்காய்களாகச் சீவி எறியப்படும்போது இந்த இட் லரின் ரத்த உறவு கொண்டவர் களுக்கு இன்பச் சுற்றலா செல்வது போலிருக்கிறது!

ஹிட்லர்கூட சைவம்தான். அவன் சொல்வானாம் `நான் யூதர்களைத் தவிர வேறு யாரை யும் கொல்லுவதில்லையென்று. நரேந்திர மோடி சிறுபான்மை யிரைத்தவிர வேறு யாரையும் கொல்லுவதில்லை.

குஜராத்தில் இதே நரேந்திர மோடி ஆட்சியில் `பொடா சட்டத்தில் கீழ் கைது செய்யப் பட்டவர்கள் 287 பேர்கள் என் றால் அதில் 286 பேர்கள் முசுலிம் கள், ஒருவர் சீக்கியர்; எந்த இனம் பாதிப்புக்கு - படுகொலைக்கு ஆளாக்கபட்டுள்ளதோ, அந்த இனத்தைச் சேர்ந்தவர்களே `பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றால் - இதைவிட `நேர்மையான ஆட் சியை எங்கே போய்தான் தேட முடியும்?

புதுடில்லியில் பொடா சட் டம் பற்றிய மக்கள் தீர்ப்பாயத் தில், குஜராத்தில் `பொடா அத்து மீறல்கள்பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல வெளி வந்தன.
குஜராத்தில் மனித உரிமை களுக்காகக் குரல் கொடுத்து வரும் வழக்கறிஞர் மேமோன் அங்கு கூறினார். குஜராத்தில் பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல; பயங்கரவாதி களைத் தயார் செய்யும் சட்டம் என்றார் (Production of Terrorist Act) இன்னொரு திடுக்கிடும் தகவலையும் அவ்வழக்கறிஞர் வெளியிட்டார். `பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்பட கூடாது என்று தனி சட்டம் இருக்கிறதா என்று கேட்டேன். இதற்கு குஜராத்தில் உள்துறை அமைச்சரிடமிருந்து பதில் ஏதும் இல்லை என்றாரே!

நடுநிலை தராசுக்கோல் நரேந்திரமோடி ஆட்சி என்ப தற்கு இதுவும் எடுத்துக்காட்டு தான் - `சோ சொல்கிறாரே - பிர்மாவின் நெற்றியில் பிறந்த கூட்டம் சொல்லும்போது ஏற் றுத் தொலைக்கத் தானே வேண் டும். `சோ விவரிக்கும் மோடியின் நல்லாட்சிக்கு சாட்சியங்களை வேறு எங்கும் தேட வேண்டிய தில்லை. குஜராத் காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரல் ஸ்ரீகுமார், நானாவதி கமிஷன் முன் சொன்ன சாட்சியமே போது மானது. - அதுதான் பொருத்த மானதும்கூட! மோடியின் முகத்திரையைக் கிழிக்க அவர் அதிகாரத்து உட்பட்டுப் பணி யாற்றிய காவல்துறை அதிகாரி யின் கைகளே சரியானவை கூர்மையானவையும்கூட! பாதிக்கப்பட்ட முசுலிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் துறை யின் வழக்கறிஞர்கள் (பப்ளிக் பிராசிக்கூட்டர்) இதற்குத் துணை போனார்கள். குஜராத்தில் ஊடகங்களும் கலவரங்களைத் தூண்டி விடுவதில் அக்கறை செலுத்தினர். நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை

- இவ்வளவும் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரலால் அதிகாரப்பூர்வமாக கே.ஜி. ஷா மற்றும் ஜி.பி. நானா வதி கமிஷன்முன் கொடுக்கப் பட்ட வாக்குமூலங்கள்.

இதுதான் - சோவின் பார்வை யில்: ``ஆதாயத்துக்குச் சலுகை காட்டும் அணுகுமுறைக்கு மோடி ஒரு மரண வியாபாரி என்ற விமர்சனம். கைதட்டினார்களாம் காமராசர் அரங்கில். ஏன் தட்ட மாட்டார்கள்? பார்வையாளர் களாக பொது மக்கள் அனுமதிக் கப்பட்டு இருந்தால் கைதட்டு வேறு மாதிரியாகத்தான் இருந் திருக்கும்.

அழைப்புக் கொடுத்து, பொறுக்கி எடுத்துக் கூட்டப் பட்ட கூட்டமாயிற்றே! அக்ர காரத்து அம்மாமிகளும் கிச்சு களும், வைத்திகளும் கணிசமாகக் கூடியிருந்தால் கைதட்டலை எடுத்துக் கொடுக்க மாட்டார் களா? போதும் போதாதற்கு பதவியும், பணமும் கையில் கிடைத்து விட்டால் எதிரிகளின் கால்கள் எங்கே என்று தேடிக் கொண்டு ஓடும் வீடணர்களுக் குத்தான் இந்த நாட்டில் பஞ்சமா?

நரேந்திரமோடியின் `திருக் கல்யாண குணத்திற்கு ஒரே ஒரு நறுக்கு! அதையும் காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரல் ஸ்ரீகுமார் தான் கமிஷன் முன் கூறியிருக்கிறார்.
முதல் அமைச்சர் நரேந்திர மோடி கவுரவ யாத்திரை என்ற ஒன்றைத் தொடங்கினார். அதில் அவர் பேசிய கண்ணியம் வழியும் சொற்கள் இதோ:
``நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி முஸ்லிம்களுக்கு பிள்ளை பெறும் வாய்ப்பு களை ஏற்படுத்திக் கொடுக்க விரும்ப வில்லை. இவ்வாறு இனப் பெருக்கம் செய்யும் மக்களுக்கு பாடம் படித்துக் கொடுக்க வேண்டும்

ஒரு நாலாந்தர பேர் வழிகூட இத்தகு நரகல் சொற்களை உச்சரித்து இருக்க மாட்டான். ஆனால் முதல் அமைச்சர் மோடி உச்சரித்து இருக்கிறார். அதற்கு இந்த `சோ சபாஷ் போடுகிறார்.
பாம்புக்கும் பச்சைக் கொடிக் கும் வித்தியாசம் தெரியாத மக் களை ஏமாற்றி விடலாம் என்கிற தினவில் இப்படியெல்லாம் இவர்களால் பேச முடிகிறது - எழுதவும் முடிகிறது.
நரேந்திரமோடி நடத்தியது அடால்ஃப் ஹிட்லரின் அசல் பாசிச ஆட்சி என்பதற்கு அவர் நடத்திய ஆட்சியில் கோத்ரா வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையே போதுமானது!
நரோடா பாட்டியா என்னும் இடத்தில் 58 பெண்களும் குழந் தைகளும் கொடூரமான முறை யில் கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் காவல்துறையின் குற்றப் பத்திரிகை என்ன கூறுகிறது?
`வகுப்பு மோதல்களின் மோச மான விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், இந்துக்களின் கொந்தளிப்பு என்ன விளைவு களை உருவாக்கும் என்பது பற்றிக் கவலைப்படாமல் முஸ் லிம்கள் கோத்ரா ரயில் பெட் டிக்குத் தீ வைத்தார்கள் என்று ஒரு அரசின் காவல்துறை குற்றப் பத்திரிகையில் கூறுகிறது. என் றால், அந்த அரசு இந்துக்களுக் காக உள்ள அரசு என்பதும், இந்துக்களின் கொந்தளிப்பை நியாயப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்பதும் தெரியவில் லையா! அத்தோடு நின்றுவிட வில்லை. ``கோத்ரா வன்முறைக்கு பதில் தரும் நோக்கத்தோடு தான் இந்த வன்முறைகள் நடந்தன என்றும் குற்றப் பத்திரிகை கூறு கிறது. ஒரு அரசே இந்துக்களின் வன்முறை நடவடிக்கைகளுக்கு இவ்வளவு வெளிப்படையாக வக்காலத்து வாங்கும் நிலையில், அம்மாநிலத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு எந்தக் கதியில் இருக்கும்? ஒவ்வொரு நிமிடமும் மரண பயங்கரமும், அச்சுறுத்தல் பாம்பும் முசுலிம் மக்களின் கழுத்தை வளைத்துப் பிடித்து இறுக்கிக் கொண்டு தானே இருந்திருக்கும்.
இந்த யோக்கிய சிகாமணி மோடிதான் சென்னை காமராசர் அரங்கிலே கூறியிருக்கிறார்.
``என்னைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், வளர்ச் சித் திட்டங்களை நிறைவேற் றுவதுதான் மதச் சார்பின்மை என்று புனித புத்தர் போல புன் சிரிப்போடு வார்த்தைமலர்களைக் கசங்காமல் உச்சரித்து இருக்கிறார்.

நெஞ்சிலே நஞ்சும் உதட் டிலே தேனும் ஒழுகும் வஞ்சகப் பாம்புகள் இதுவும் பேசும் - இதற்கு மேலும் பேசும்!

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை காமராசர் அரங்கில் பேசுமாறு அழைப்பதற்கு முன் திரு. சோ ராமசாமி பயன் படுத்திய சொற்கள் என்ன?

``ஆதாயத்திற்குச் சலுகை காட்டும் அணுகுமுறைக்கு மரண வியாபாரி! என்று பராக்குச் சொன்னார் அல்லவா - அதற்காக பார்வையாளர்கள் பலத்த கை தட்டியதாக `துக்ளக் எழுதுகிறது அல்லவா! இதற்கும் எடுத்துக்காட்டு உண்டு. 14 பேர்களை கைகளை யும், கால்களையும் கட்டி, பெஸ்ட் பேக்கிரியில் துடிதுடிக்க எரித்தனரே இட்லரின் வாரிசுகள் - அது தொடர்பான வழக்கினை விசாரித்தவர் எஸ்.யூ. மஹிதா என்ற விரைவு நீதிமன்ற நீதிபதி. உச்சநீதிமன்ற மேல் முறையீ ட்டில் நீதிபதிகள் துரைசாமி ராஜு, மற்றும் அர்ஜித் பசாயத் ஆகியோர் விரைவு நீதிமன்றம் குற்றவாளிகள் 21 பேர்களையும் விடுதலை செய்ததை மிகவும் கடுமையாகக் குறை கூறியுள் ளனர். குஜராத் மாநில உயர்நீதி மன்றமும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்குத் தப்பவில்லை.

``சட்டத்தின் பார்வையில் குற்றவாளி கள் விடுவிக்கப்பட்டது விடுதலையே அல்ல. தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதி மன்றத்தின் முடிவுகள் மதிக்கத்தக்கவை யல்ல; நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல

- இதைவிட வேறு எதனால் உச்சநீதி மன்றம் சாற்ற முடியும்?
இப்படி உச்சநீதிமன்றத்தால் ஆழமான குட்டு வைக்கப்பட்ட அந்த விரைவு நீதிமன்ற நீதிபதி எச்.யூ. மஹிதா இருக்கிறாரே - அவருக்குப் `பூர்ண கும்பம் கொடுத்து, பெரும் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்தான் - ஆதாயத்துக்காக சலுகை காட் டாத சான்றோர் என்று `சோ ராம சாமியால் குளிப் பாட்டப்பட்ட நரேந்திர மோடி.

குஜராத் மின்வாரியத்தில் ஆலோசகர் என்ற பதவியில் அமர்த்தி மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம், கார், தொலைப் பேசி வசதி மற்றும் உதவியாளர் என்ற சகல சந்தோஷமான ஏற் பாடுகளை முதல் அமைச்சர் செய்து கொடுத்திருக்கிறார் என் றால் இதைவிட ஆதாயத்துக் காகச் சலுகை காட்டாத ஒரு வரை `ஏழு லோகம் சென்றாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா, என்ன! அதோடு நிறுத்தவில்லை திருவாளர் `சோ, ரஜினிபற்றி நூல் வெளியிட்டு, ரஜினி அரசி யலுக்கு வர வேண்டும் என்றும், அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத்தை விட ஒருபடி மேலே போய் விடும் என்றும் கூறியிருக்கிறார்.
ரஜினியை மோடியாக்கி தமிழ் நாட்டிலும் ரண களங்களை உண்டாக்க வேண்டும் என்பது சோவின் வெறி! ரஜினி `சோ விஷயத்தில் எதற்கும் எச்சரிக் கையாக இருப்பது நல்லது. நல் லது சொல்வது போல நட்டாற் றில் இறக்கி விடும் இந்தப் பார்ப் பனரிடம் கொஞ்சம் விலகியிருப் பதுகூட நல்லது.

கடித்தவுடனே ஆளை சாகடிக்கும் பாம்புக்குப் பெயர் இந்த நாட்டில் நல்ல பாம்பு!
எந்த வழியிலோ தமிழ் நாட்டை குஜராத் ஆக்க வேண் டும் - அதன் மூலம் தந்தை பெரி யாரின் சிந்தனைகள் வேரோடி நிற்கும் இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என்ற எண்கணத்தின் ஊறல் எடுத்து எதை எதையோ அவர் சக்திக்கு உட்பட்டுச் செய்து பார்க்கிறார் `சோ (என்ன செய்வது, பார்ப்பனர்களுக்கு இப் போது கிடைத்திருக்கும் பெரிய தலைவர் இவர் தான்!)

செல்வி ஜெயலலிதாவும் `சோவை வீடு வரை சென்று பார்க்கிறார். (வேறு எந்த வீட் டுக்குத்தான் செல்வார். அப்ப டியே சென்றாலும் அக்கிரகாரப் பேர்வழிகளின் வீடாகத் தானே இருக்கும்!) ஏற்கெனவே இந்துத் துவா மனப்பான்மை உள்ள அம் மையார் அதற்குப் பயன்படக் கூடும் என்பது சோவின் எண்ண மாகவும் இருக்கலாம். 40 வகை பதார்த்தங்களோடு மோடிக்கு விருந்து வைத்து, தன் காவிப் பாசத்தையும் செல்வி ஜெய லலிதா வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

ராமன் கோயிலை அயோத் தியில் கட்டாமல் வேறு எந்த நாட்டுக்குப் போய் கட்ட முடியும் என்று கேள்வி கேட்டவர் - கரசேலைக்கு பச்சைக் கொடி காட்டியவர் ஜெயலலிதா என்ப தால், திராவிட இயக்கப் போர் வையில் தமிழ் மண்ணில் பார்ப் பனீய பாசிச விதைகளைத் தூவும் ஒரு வேலையில் ஒரு கூட்டம் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.


தமிழர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

------------15-3-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் "மின்சாரம்" அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: