Search This Blog

28.1.15

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் ....

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 

 

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அகற்றப்பட்டு, அவ்விடத்தில் இந்தி மட்டுமே வந்திருக்கும். அவ்வாறு மாறியிருந்தால் தமிழகத்தில் இந்தி எந்த அளவில் புகுந்து நாட்டாண்மை செய்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


1. இந்திய ஆட்சிப் பணி, காவல்துறைப் பணிகளுக்கான (IAS, IPS) தேர்வுகளில் இந்தியில் மட்டுமே கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழகத்திலி ருந்து ஒருவர்கூட அப்பணிகளுக்கு வந்திருக்க முடியாது.


2. நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழ் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும்.


3. பாஸ்போர்ட், தொடர்வண்டி பயணச் சீட்டு, விமான பயணச் சீட்டு என அனைத்து மத்திய அரசு தொடர்பான ஆவணங்களிலும், இடங்களிலும் இந்தி மட்டுமே குடி புகுந்து இருந்திருக்கும்.


4. அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு கேள்விகள் ஆங்கிலம் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக் கும் தமிழகத்திலிருந்து ஒருவர்கூட படித்திருக்க மாட்டார்கள்.


5. அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்துப் பாடங்களும் இந்தி வழிக் கல்வியின் (இந்தி மீடியம்) மூலமாக படித்திருப்போம்.


6. தமிழகத்தில் உள்ள மத்திய மாநில வேலை வாய்ப்புகள் அனைத்திலும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான் நிரம்பி வழிந்திருப்பார்கள்.


7. அரசியல் கட்சிகள் வைக்கும் பதாகைகள் அனைத்தும் இந்தியாகவே இருந்திருக்கும்.


8. வட நாட்டில் இருப்பது போல பேருந்துகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் பெயர்ப் பலகை இந்திமயமாகவே இருந்திருக்கும்.


9. தமிழகம் அய்.டி. துறையில் இவ்வளவு முன்னேறி யிருக்காது. ஆங்கிலம் தெரியாத காரணத்தால் வெளி நாடுகளுக்கு,  நாசா போன்ற அறிவியல் துறைகளில் அமையும் நல்ல வேலை வாய்ப்புகளுக்கு  தமிழர்களில் அதிகமானவர்கள் சென்றிருக்க முடியாது. இந்தி பேசும் மாநிலங்கள் போல தமிழகம் மிகவும் பின்தங்கி இருந்திருக்கும்.


10. தமிழில் இவ்வளவு திரைப்படங்கள் மற்றும் இவ்வளவு தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள், இணையதளங்கள் வந்திருக்காது.


11. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என அனைத்திலும் இந்தி மட்டுமே இருந்திருக்கும், தமிழ் கட்டாயம் இருந்திருக்காது.


12. பிறப்பு  - இறப்பு சான்றிதழ் கூட இந்தியில் தான் இருந்திருக்கும்.


13. தமிழக சட்டமன்றத்தில் பல இந்திக்காரர்கள் உள்ளே புகுந்திருப்பார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் இந்திதான் சட்டமன்ற மொழியாக இருந்திருக்கும்.


14. இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மொழிகளும் இந்நேரம் வழக்கத்தில் இருந்து  மறைந்திருக்கும்.


15. வீட்டில் உள்ள குழந்தைகளும் பெற்றோர்களிடம் இந்தியில்தான் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். தாய் மொழிகளின்  நிலை கேள்விக்குறி  ஆகியிருக்கும்.


16. தமிழகத்தில் தமிழில் வணிகம் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கும்; இந்தி தெரிந்தவர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.


இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.


தமிழர்கள் செய்த மொழிப் போராட்டத்தின் விளைவாக அனைத்து மாநில மொழிகளும் காப்பாற்றப்பட்டன என்பதில் நமக்கு பெருமையே!
இருப்பினும் இந்திய அரசின் இந்தித் திணிப்பு இன்னும் ஓயவில்லை. தமிழர்களின் மொழிப் போராட்டமும் முடியவில்லை.


இப்பொழுது சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். திராவிட இயக்கத்தால் இந்தி எதிர்க்கப்பட்டதால் தமிழ்நாட்டு மக்கள் இந்தி படிக்க இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. அப்படி இல்லையென்றால், இந்தி படித்து முன்னேறி இருப்பார்கள் என்று பொறுப்பு இல்லாமல் பேசி திரிகிறார்கள் - சிலர் எழுதவும் செய்கிறார்கள். வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கும் என்பது அவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.


உண்மை நிலை என்ன? இந்தியைத் தாய் மொழி யாகக் கொண்ட வட மாநிலத்தவர்கள்தான் இன்றைய தினம் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வேலை செய்து கொண்டுள்ளனர்.


எந்த மொழியைத் தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்லும் நிலையில் அந்நாட்டு மொழியை நாளடைவில் கற்றுக் கொண்டு தொழிலையும், வாழ்வையும் நடத்திக் கொண்டுள்ளனர்.


குறிப்பாக தமிழ்நாட்டில் வட்டிக் கடைகளையும் மற்றும் பல தொழில்களைச் செய்து வரும் மார்வாடிகளும் குஜராத்துக்காரர்களும் வரும் பொழுது தமிழைக் கற்றுக்கொண்டா வந்தார்கள்?


இங்கு வந்தார்கள் - மக்களிடம் புழங்கினார்கள் - பேச்சுத் தமிழ் தானாக வந்து சேரவில்லையா?


சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியை - இந்தி பேசாத மாநிலங்களில் திணிப்பது  - ஒரு பண்பாட்டுத் திணிப்பு என்பதை மறக்க வேண்டாம்!


இதனை இன்றல்ல - நேற்றல்ல - 1926ஆம் ஆண்டி லேயே தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும் என்ற தலைப்பில் கட்டுரையை எழுதி னார் தொலைநோக்காளரான தந்தை பெரியார் (ஆதாரம்: குடிஅரசு 7.3.1926).


89 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை நினைத்துப் பார்க்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியாரை வாசிப்போம் - சுவாசிப்போம்! அதன் மூலம் நம்மை எதிர் நோக்கி ஆணவமாகச் சிரிக்கும் சக்திகளைத் தூள் தூளாக்குவோம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

                      ------------------------------”விடுதலை” தலையங்கம் 28-01-2015

24 comments:

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மையை நீக்கியது சரியானதுதானாம்!
மத்திய அமைச்சரே வக்காலத்து

புதுடில்லி, ஜன.29- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 42ஆவது திருத்தம் செய்யப்பட்டு 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் சோசலிஸ்ட், செக்குலர் என்ற சொற்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையைக் கொண்டுள்ள படம் குடியரசு நாள் விழாவையொட்டி அரசின் சார்பில் வெளியிடப் பட்ட விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிஸ்ட் மற்றும் செக்யூலர் என்கிற பதங்களை நீக்கி விட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, நம் நாடு மதசார்பற்ற நாடாக இருப்பதால், இந்த சொற்பதங்கள் தேவை இல்லை. அச்சொற்பதங்கள் இல்லாமலேயே நாம் மதசார்பற்ற நாட்டினராக இருக்கிறோம் என்றார்.

அவர் மேலும் கூறும்போது, நெருக்கடிக் காலத்தில் 1976 ஆம் ஆண்டில் இந்த இரு சொற்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த இரு சொற்கள் குறித்த விவாதம் நடத்தப்படுவதில் என்ன தவறாகிவிடப்போகிறது? நாடு என்ன விரும்புகிறது என்பதைப் பார்ப்போமே என்றார். திருத்தத்துக்கு முந்தைய அரசமைப்பு சட்டத்தின் முகவுரை யைத் தொடர்ந்து அரசு அலுவலகரீதியாக பயன்படுத்திவருமா? என்று கேட்டதற்கு, ஆம். அதுதான் திட்டம் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் திருத்தத்துக்கு முந்தைய முகவுரை இரண்டு அச்சு விளம்பரங்களில் இடம் பெற்றதற்கு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பொறுப்பானவர் ஆவார்.

Read more: http://viduthalai.in/e-paper/95144.html#ixzz3QD9mUo3T

தமிழ் ஓவியா said...

அரசமைப்பு சட்டத்தில் இருந்து மதசார்பற்ற என்ற வார்த்தையை நிரந்தரமாக நீக்க வேண்டுமாம்: சொல்லுகிறது சிவசேனா

மும்பை, ஜன.29-_இந்திய அரசமைப்பு சட்டத்தில் இருந்து மதசார்பற்ற என்ற வார்த்தையை நிரந் தரமாக நீக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கூறியதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவை யொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச் சகம் சார்பில் வெளியி டப்பட்ட ஒரு விளம்பரத் தில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் 42- ஆவது திருத்தசட்டம் அமல்படுத் தப்படுவதற்கு முன்பு, இருந்த முகவுரை இடம் பெற்றிருந்தது. அதில், மதசார்பற்ற, சமதர்மம் என்ற வார்த்தைகள் இடம் பெறாமல் இருந்தன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரி வித்தது.

இந்நிலையில், மத சார்பற்ற, சமத்துவம் என்ற வார்த்தைகள் இடம்பெறாமல் முகவுரை வெளியிடப்பட்டதற்கு சிவசேனா ஆதரவு தெரி வித்துள்ளது. இது தொடர்பாக நேற்று சிவ சேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத் எம்.பி. மும் பையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

குடியரசு தின விழா விளம்பரத்தில் அந்த வார்த்தைகள் (மதசார் பற்ற, சமதர்மம்) நீக்கப் பட்டதை நாங்கள் வர வேற்கிறோம். இது கவ னக்குறைவாக நடந்திருக்க லாம், ஆனாலும் இந்திய மக்களின் உணர்வுகளை கவுரவிப்பதாக இது அமைந்துவிட்டது.

தவறுதலாக இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு இருந்தாலும் கூட அவை இந்திய அரசமைப்பு சட் டத்தில் இருந்து நிரந்தர மாக நீக்கப்பட வேண்டும். அந்த வார்த்தைகளை அரசமைப்பு சட்டத்தில் இணைத்ததில் இருந்து, நாடு மதசார்பற்ற தன் மையில் நீடிக்காது என்று கூறப்பட்டு வருகிறது.

இந்தியா மதம் என்ற போர்வையில் பிளவுபட்டு கிடப்பதாக பால்தாக்க ரேவும், அவருக்கு முன் பாக வீர சவார்க்கரும் கூறி னார்கள். சிறுபான்மை சமூகத்தினர் அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரு கிறார்கள். அதேவேளை யில், இந்துக்கள் தொடர்ச்சி யாக அவமதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசு சார் பில் நடந்த இந்த தவறு, தொடர்ந்து நிகழ வேண் டும் என்று விதி விரும் புகிறது. மோடி இந்திய பிரதமர். இந்துத்வா மீதான அவரது சிந்தனை மிகவும் வலுவானது. இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/e-paper/95146.html#ixzz3QDAFHyxa

தமிழ் ஓவியா said...

மதம் பயன்படாது


மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. - (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/95137.html#ixzz3QDASJACb

தமிழ் ஓவியா said...

மருந்து வேண்டாம் - எப்போது?


இன்று இளைய சமுதாயத்தினரான நமது இளை ஞர்கள் பலரும் நன்கு படிக்கின்றனர்.

உலகைத் தங்களின் விரல் நுனியில் வைத் துள்ளதில் பெருமிதம் கொள்ளுகிறார்கள்!

சூரியனின் கீழ் உள்ள அத்துணை செய்திகளையும் தமது இணையத்தின் மூலம், கைத்தொலைபேசி என்ற தகவல் களஞ்சியத்தின் குதிர்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அள்ளி நொடிப்பொழுதில் தரு கின்ற ஆற்றல் உடைய திருவினராக உள்ளனர்!

வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம் இருந் தாலும், மறுபுறம் வேலைக்குச் சென்றவர்கள் கைநிறைய சம்பாதித்து, ஆடம்பர வாழ்வும் வாழுகின்றனர்!

இவ்வளவு சிறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இளைஞர்கள் தங்களது உடல் நலத்தில் மிகுந்த கவலையும், அக்கறையும் செலுத்தாமல் வயிறு முட்ட - கண்ட தீனிகளையும், விரைவு உணவுகள் என்ற பெயரால் வெளிநாட்டு உணவுக் கடைகளில் உள்ள வைகளையும், உள்நாட்டுப் பரோட்டா போன்றவை களையும், குளிர்பானங்களாகிய பல கேட்டினை அழைத்து உடலுக்குள் தங்க வைக்கும் சுவை நீர் களையும் அருந்தி, நோயுற்ற (நோயற்ற வாழ்வுக்கு விடை கொடுத்து) வாழ்வினை வர வழைத்து, கொழுப்பினால் அவதியுறு கிறார்கள்!

பலர் வாய்க் கொழுப்பினால் கெட்டுப் போவ தைப்போலவே, உடற்கொழுப்புப் பெருக்கத்தால் இளம் வயதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பலவித நோய்களால் தாக்குண்டு தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொள் ளும் கொடுமை நாளும் அதிகரித்தே வருகிறது!

வேதனைப்பட வேண்டிய செய்தி இது!

மருத்துவம் பார்க்கச் சென்றாலே கொள்ளைச் செலவு.

பக்க விளைவுகளையும் சேர்த்து ஏற்படுத்தும் பல மருந்துகளை வாங்கி உட்கொள்ளவேண்டிய கட்டா யத்திற்கு ஆளாக்கப்படும் கொடுமை மறுபுறம்!

சிற்சில நேரங்களில் மருந்துகளே கூட நோய்க் கொல்லியாக இராமல், ஆட்கொல்லியாக மாறிடும் வேதனையும் நிகழவே செய்கிறது!

இதற்கு மாற்று வழி என்னவென்பது இப்போது சமூக ஆர்வலர்கள், தொண்டறப் பணிபுரிவோர் ஆராய்ந்து பல கருத்துகளைக் கூறுகின்றனர்!

அத்தகையோர் ஆய்வதற்கு வள்ளுவர் தரும் மருந்து என்னவென்பதைப் படித்தால், திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள அரிய, எளிய, எவரும் பின்பற்ற இலகுவான கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம் தமிழ் அறிஞர் பெருந்தகை இவ்வளவு தெளிவான சிந்தனையை உலகுக்கு அறவுரையாக - அறிவுரை யாக அளித்துள்ளார் என்பது எத்தகைய சிறப்பும், பெருமையும் தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ளது!

முதல் விதி:

1. மருந்தே உங்களுக்குத் தேவையில்லை - எப்போது?

நீங்கள் உண்ட உணவு, சரியானபடி செரிமானம் ஆயிற்றா என்று அறிந்து, பின் மறுபடி உணவை உட்கொள்ளும் பழக்கம் நமக்கு ஏற்பட்டால், நோய் வராது - மருந்து தேவைப்படாதே!

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுணின் (குறள் 942)

தான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துப் போய்விட்ட தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, ஒருவன் தக்க அளவு உணவு உட்கொள்வானேயானால், அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.

அதுபோலவே, அடுத்து ஒரு குறள்:
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு (குறள் 943)
இதன் கருத்து

ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை ஒருவன் அறிந்து கொண்டு உண்ணவேண்டும். நல்ல உடம்பினைப் பெற்றுள்ள ஒருவன், நீண்ட காலம் அவ்வுடம்பினைக் காப்பாற்றி வாழக்கூடிய வழியும் அதுவேயாகும்.

எனவே, பசித்து உண்ணுங்கள் - ருசிக்காக உண்ணாதீர்கள். எனவே, நாகாக்க என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தடையல்ல நண்பர்களே, உணவுக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் சேர்த்தே என்றும் புரிந்து கொள்ளுங்கள்.



- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/95139.html#ixzz3QDAmNJ73

தமிழ் ஓவியா said...

காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?

நாம் 2014 ஆம் ஆண்டைக் கடந்து 2015 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். பூமியானது தனது பாதையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடித்தால் அதை ஓர் ஆண்டு என்று கணக்கு வைத்திருக்கிறோம். இது சாதாரண ஆண்டுகளில் 365 நாட்கள்.

லீப் ஆண்டு என்றால் 366 நாட்கள். என்றும் வைத்துக் கொண்டுள்ளோம். உண்மையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365. 242199 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

சூரியன் ஏதோ நிலையாக ஒரே இடத்தில் இருப்பதாகவும் பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாகவும் சிலர் நினைக்கலாம். அது அப்படி அல்ல. சூரியன் எல்லா கிரகங் களையும் அந்த கிரகங்களை சுற்றுகின்ற துணைக் கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் () மையத்தைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் எதுவுமே நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது.

ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தில் தான் சூரியன் அடங்கியுள்ளது. இந்த அண்டத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள் ளனர். (சூரியனும் ஒரு நட்சத்திரமே). நமது அண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்களுக்கு இடையில் வாயு, அண்டவெளித் தூசு ஆகியவையும் அடங்கியுள்ளன.

மாட்டு வண்டிச் சக்கரம் ஒன்றைத் தரையில் படுக்க வைத்து மேலிருந்த படி பார்த்தால் எப்படி இருக்கும்? நமது அண்டம் கிட்டத்தட்ட அந்த மாதிரியில் இருக்கிறது. நமது சூரியன் கிட்டத்தட்ட நமது அண்டத்தின் விளிம்பில் உள்ளது. அண்டத்துக்கு மய்யப் பகுதி உள்ளது. இந்த மய்யப் பகுதியை சூரியன் தனது பரிவாரங் களுடன் அதி வேகத்தில் சுற்றி வருகிறது.

சூரியனின் வேகம் குறித்து வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. எனினும் சூரியன் மணிக்கு சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்ப தாகக் கூறலாம். சூரியன் நமது அண்டத்தை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 24 கோடி ஆண்டுகள் ஆவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. சூரியன் இவ்விதம் ஒரு முறை சுற்றி முடிப்பதைத் தான் காஸ்மிக் ஆண்டு என்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/95189.html#ixzz3QDBGmhV4

தமிழ் ஓவியா said...

ஆறா வடுவை ஏற்படுத்தினர்!


என் நண்பனுக்குத் திரு மணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை சோகத்துடன் இருந்த நண் பனும், அவனுடைய மனைவி யும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விம ரிசையாக கொண்டாடினார்கள். அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த சில நாள்களிலேயே நண்பனின் மனைவிக்கு பக்க வாத நோய் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நண்பர் எவ்வளவோ பணம் செலவு செய்தும் நோய் குணமாக வில்லை.

அவருடைய மனைவியை பார்த்து நலம் விசாரிக்க வந்த உறவினர்கள் நோயை குழந் தையுடன் சம்பந்தப்படுத்தி பேசினார்கள். பிறந்த குழந் தைதான் தாயை நோயில் படுக்க வைத்துவிட்டது என்று ஒவ்வொருவரும் ஒவ் வொரு விதமாகப் பேசினார்கள். அதைக் கேட்ட நண்பர் வருத் தப்பட்டார். இப்படி எல்லோ ரும் நினைத்துவிட்டால், குழந்தை ஆசையே வராது என்று விரக்தியுடன் கூறினார். நோயாளியைப் பார்க்கச் செல் பவர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறாவிட்டாலும், அவர்கள் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பது நல்லது.

- க.ஆறுமுகம், கழுகுமலை
தினத்தந்தி குடும்பமலர், 25.1.2015

21 ஆம் நூற்றாண்டில் நாடு நடைபோடும் காலகட்டத்தில் சந்திராயன் வெற்றி முழக்கம் கேட்கும் ஒரு தருணத்தில், செவ்வாய்க் கிரக ஆய்வில் அடுத்த கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதில் இப்படியும் செய்திகள் உலா வரு வதை நினைத்தால் வெட்கித் தலை குனியத்தான் வேண்டும். மதம் மக்களின் மூளையில் புகுந்து நச்சுக் கிருமிகளை உரு வாக்கி விட்டதே - என் செய்ய!

குழந்தை பிறந்ததற்கும், தாய்க்கு வந்த நோய்க்கும் முடிச்சு போடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? மொட் டைத் தலைக்கும், முழங்கா லுக்கும் முடிச்சுப் போடுவதாகக் கேலியாகச் சொல்வார்களே - அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.

இந்த அர்த்தமுள்ள(?) இந்து மதத்தில்தான் இந்தக் குட்டிச் சுவர் க(ழு)தைகள் எல்லாம்!

ஏற்கெனவே நோய்வாய்ப் பட்டுள்ள ஒருவரிடம் இப்படி சொல்லுகிறோமே, அவர்கள் மனநலமும் பாதிக்காதா என்ற எண்ணம் இல்லாததோடு, இப்படிச் சொல்லுபவர்களின் எண்ணத்தில் மனிதநேயத்தின் மயிரிழைக் கசிவுகூட இல்லை என்பதை நினைக்கவேண்டும்.

அந்தக் குழந்தை வளர்ந்த நேரத்தில், நீ பிறந்துதான் உன் தாயைக் காவு கொடுத்தாய்! என்கிற அளவுக்கு இன்று போடப்படுகின்ற மூட விதை, வளர்ந்து மரமும் ஆகும் என்பதில் அய்யமில்லை.

இது ஒன்றா? இந்தத் திசையில் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. பெண் ணுக்குச் செவ்வாய்த் தோஷம் எனச் சொல்லி, தக்க வயது வந்தும், திருமணம் ஆகாம லேயே தடைபடும் தகவல்கள் நிறைய உண்டு. செவ்வாய்த் தோஷமுள்ள மாப்பிள்ளை யைத் தேடுவார்கள். இது மாமனுக்கு ஆகாது என்றும் கதை கட்டுவார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்க் காதீர்கள்; குருதிப் பொருத்தம் பாருங்கள் - மணமக்களுக்கு உடற்சோதனை செய்யுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறிவரும் தேவை யான, அவசியமான கருத்தை இப்பொழுதாவது சீர்தூக்கிப் பாருங்கள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/95064.html#ixzz3QDCYTLi1

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆசை கொள்ளாதே!

ஆசை அறுமின்காள் ஆசை அறுமின்காள்
ஈசனோடுஆயினும்
ஆசை அறுமின்காள்!

- திருமூலர்

ஈசனாக இருந்தாலும் அவனிடமும் ஆசை கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளாரே!
பக்தர்களே இதற்கு என்ன பதில்?

Read more: http://viduthalai.in/page1/95066.html#ixzz3QDCkhWE3

தமிழ் ஓவியா said...

சோறு போட்டு உதை வாங்கிய கதை!


நீதிக் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார் தந்தை பெரியார். 1944 இல் சேலத்தில் நடை பெற்ற (ஆகஸ்டு 27) 16 ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில்தான் இந்தத் தீர்மானம் அண்ணாதுரை தீர்மானம் என்ற பெயரில் முன்மொழி யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில் பதவி பட்டங்களைத் துறக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. தேர்தலில் ஈடுபடு வதில்லை என்றும் தீர்மானம் கறாராகக் கூறியது.

பட்டம், பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த பெரிய மனிதர்களுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.

இந்த நிலையில், பி.டி.ராஜன் தலைமையில் அத்தகைய வர்கள் தாங்கள்தான் உண்மையான நீதிக்கட்சி என்று சொல்லிக்கொண்டார்கள்.

அப்பொழுது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சென்னை வந்ததைப் பயன்படுத்தி, அந்த நீதிக்கட்சித் தலைவர்கள் சென்னை கன்னிமாரா ஓட்டலில் வரவேற்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள் (24.9.1944).

அந்த வரவேற்பில் கலந்துகொண்ட அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூட்டம் கூட்டியவர்களின் நோக்கத் தைப் புரிந்துகொண்டு, பெரியார் தலைமையை ஏற்று நடந்துகொள்ளுமாறு அறிவுரை கூறினார். மறுநாளே தந்தை பெரியார் அவர்களை அண்ணல் அம்பேத்கர் சந்தித்து உரையாடினார்.

அண்ணல் அம்பேத்கரை அழைத்து மூக்கு உடைக்கப் பட்ட நீதிக்கட்சியினர் குறித்து சோறு போட்டு உதை வாங்கிய கதை என்று குடிஅரசு இதழ் கேலி செய்ததுண்டு.

70 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியை இப்பொழுது குறிப்பிடுவதற்குப் பொருத்தமான காரணம் உண்டு.

இந்தியாவின் 66 ஆவது குடியரசு நாளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பராக்! பராக்! என்று கட்டியம் கூறியது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பிடிக்க இந்தியப் பிரதமர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

வண்ண வண்ண ஆடைகளில் நாடகத்தில் வேடம் கட்டி ஆடுபவர்கள் போல ஜொலிக்கிறார்! மூன்று நாள்கள் அமெரிக்க அதிபருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பன்னாட்டுத் தலைவர்களைக் கவர்ந்து இழுத்தார்.

கடைசியில் என்னாயிற்று தெரியுமா? நேற்று இறுதி நாளில் (27.1.2015) பகல் 12 மணிக்கு டில்லி சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலே உரை யாற்றினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

அப்பொழுது மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துக் கொண்டிருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்து - இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான அருமருந்தென தேவைப்படும் அரிய கருத்துச் செறிவாகும் என்றாலும், இந்தியா இந்துக்களின் நாடென்றும், இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக் குவோம் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டி ருக்கும் மத்தியில் ஆளும் கட்சியான பி.ஜே.பி.யும், அதன் சங் பரிவார்களும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அமெரிக்க அதிபர் சிந்தனை வளத்துடன் வெளிப்படுத்திய கருத்து. இந்த இந்துத்துவவாதிகளுக்கு மரண அடியாகி விட்டது. அப்படி ஒரு கருத்தை அமெரிக்க அதிபரிடமிருந்து யாரும் எதிர்ப்பார்த்திருக்கவும் மாட்டார்கள்.

அப்படி என்ன சொல்லி விட்டார் என்று ஆர்வம் பீறிடுகிறதா? இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையானது என்று போட்டாரே ஒரு போடு!

மதவாதம் என்பது மக்களைப் பிரிவினைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது. மதவாதப் பாதையிலிருந்து விலகி, சமூக நலனிற்குப் பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகின்றன. இந்தியா போன்ற நாடுகள் மதத்தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டுவிட்டு, வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால், இந்தியா வளர்ச்சி அடையும்! என்று மாணவர்கள் மத்தியிலே ஆணித்தரமாக அழுத்தமாக கம்பீரமாக முழங்கினார் அமெரிக்க அதிபர்.

இந்துத்துவா பேசும் - இந்தியா என்பது இந்து நாடு என்று வெறி பிடித்து கூச்சல் போடும் பிரதமர் மோடி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் உள்பட அனைத்து இந்துத்துவவாதிகளுக்கும் இதைவிட மரண இடி வேறு ஒன்று இருக்க முடியுமா?

உலகின் மிகவும் பெரிய நாட்டின் அதிபர் உள்பட இந்தியாவின் இன்றைய அரசியல் - ஆட்சிப் போக்கை எந்த அளவுக்குத் துல்லியமாக உணர்ந்து வைத்துள்ளனர் என்பதற்கு அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்து ஒன்றே ஒன்று போதுமே!

மூன்று நாட்கள் விருந்து கொடுத்து, உபசரித்து அமெரிக்க அதிபரை தங்கத் தட்டில் வைத்து சீராட்டிப் பாராட்டிய நிலையில் கடைசி கடைசியாக இந்து மதவாதக் கூட்டத்தினரின் மூக்கை வெட்டும் கருத்தினை பராக் ஒபாமா எடுத்துச் சொன்னதை நினைக்கும்பொழுது - அன்று அம்பேத்கருக்கு விருந்தளித்து உபசரித்த நீதிக் கட்சித் தலைவர்கள் மூக்கறுபட்டபோது குடிஅரசு இதழ் எழுதியதே சோறு போட்டு உதை வாங்கிய கதை என்று - அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக் கிறது! என்ன செய்வது!!

Read more: http://viduthalai.in/page1/95073.html#ixzz3QDD8GRWq

தமிழ் ஓவியா said...

முற்போக்கு வெற்றி பெற...


முற்போக்குக்கான மார்க்கத்துக்கு அது வெற்றி பெறத் தகுந்த வழிக்கு நமது அறிவையும், செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது.
- (குடிஅரசு, 30.6.1929)

Read more: http://viduthalai.in/page1/95072.html#ixzz3QDDHcpdC

தமிழ் ஓவியா said...

இந்துத்துவவாதிகளுக்கு மரண அடி

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை மதவாதமே!

அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடி!


புதுடில்லி, ஜன.27_ இந்தியாவின் வளர்ச்சிக்கு மதவாதம் தடையாகவே இருக்கும் என்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

மாணவர்களிடையே அவர் தெரிவித்த கருத்து இந்துத்துவாவாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. டில்லியில் இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான இன்று (27.1.2015) பகல் 12 மணியளவில் சிரிபோர்ட் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடையே பேசும் போது அவர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பதில் அளிக்கையில் மத வாதப் பாதையில் செல்லும் எந்த நாடும் முன் னேற்றம் காணாது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மக்களைப் பிளக்கும் கருவியாக மதவாதம் இருக்கும் என்று பதிலளித்தார்.

மதவாதம் என்பது மக்களைப் பிரிவி னைக்கு ஆளாக்கும் ஒரு கருவியாக தற்போது மாறிக்கொண்டு வருகிறது, மதவாதப் பாதை யில் இருந்து விலகி, சமூகநலனிற்கு பாடுபடும் நாடுகளே தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் மதத் தின் பெயரால் பிரிவினை செய்வதை விட்டு விட்டு வளர்ச்சியில் ஆர்வம் காட்டினால் இந்தியா வளர்ச்சியடையும்.

அமெரிக்காவில் 30 லட்சத்திற்கு மேல் இந்தியர்கள் வசிக்கின்றார்கள். அங்கு இந்தி யர்கள் மதத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களுடைய வளர்ச்சியுடன் அமெரிக்காவின் வளர்ச்சி குறித்தும் அக்கறைகொண்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்க மக்களிடையே பல இந்தியர்கள் நற்பெயர்களைப் பெற்றுள் ளனர்.

நமக்குள் ஏற்படும் விவாதங்களை அது எந்த தலைப்பில் இருந்தாலும் அமைதியான பேச்சுவார்த்தையின் துணையோடு தான் தீர்வு காண முடியும். ஆனால், உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் எந்த முடிவும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

இந்தியா எப்பொழுது வெற்றிப் பாதையில் செல்லும்?

இந்தியாவின் வளர்ச்சி எப்போது வெற்றிகரமான பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு, மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத் தாமல் இருக்கும் பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும்; அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.

மதமாற்ற விவகாரம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்த ஒபாமா ஒருவர் ஒரு மதத்தைப் பின்பற்றுவதும், அதை விட்டு விலகுவதும் அவரவர் விருப்பமாகும், அது தனிப்பட்ட மனிதருக்கான அதிகாரமாகும், ஆனால் மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிரிவினைக்கு ஆட்படுத்தும் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது எப்பொழுது? நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களது பெற்றோருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது, காரணம் நிறபேதம் அமெரிக் காவை ஆட்டிப்படைத்தது, தற்போது அப்பிரி வினைவாதம் நீங்கியதால் தான் அமெரிக்கா வின் வளர்ச்சி சாத்தியமானது. இந்தியாவின் உறுதியை மதப் பிணக்குகள் குலைத்து விடும். இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 25 இந்துத்துவா வலதுசாரி அமைப்புகளின் கர் வாப்சி என்கிற மதமாற்றங்களுக்கு எதி ராக ஒபாமா பேச்சு அமைந்திருந்தது.

ஒபாமா இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 25இன்படி மத சுதந்திரம் குறித்து கூறப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, உங்கள் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடு கிறது. அனைவருக்கும் தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாகப் பேசுவதற்கும், பின்பற்றுவதற் கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நம்முடைய இரண்டு நாடுகளிலும் அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்தைக்காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக் கும் உள்ளது.

உலகம் முழுவதும் மத சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளதைக் காண்கிறோம். வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றால் ஒரே நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளது. மதரீதியான பிரிவினைக்கு எதிராக காப்பாளராக நாம் இருக்க வேண்டும். என்று கருத்துரை வழங்கினார் அமெரிக்க அதிபர்.

Read more: http://viduthalai.in/page1/95039.html#ixzz3QDE7Olt6

தமிழ் ஓவியா said...

ஜாதிப் பெயரா?

சமீபத்தில் என் அலு வலக நண்பரின் வீட்டிற்கு போயிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆறாவது படிக்கும் நண்பனின் மகன் அழுத படி வந்தான். ஏன் அழு கிறாய்? என்று கேட்டதற்கு, அவன் கூறிய பதிலைக் கேட்டு கோபம் வந்தது.

அவன் ஆசிரியர், அவனை கறுப்பா என்று அழைப்பாராம். அதைக் கேட்டு சக மாணவர்கள் கேலி செய்து சிரிப்பார் களாம். இதைக் கூறி மேலும் அழுதான் பையன்.

அவனுடைய சக வகுப்பு நண்பனிடம் கேட்டதற்கு, எங்கள் ஆசிரியர் அப்படித்தான்...

மாணவர்களின் இனத்தை வைத்து கவுண்டா, அய் யரே, பாய் என்றும், முடி காணிக்கை செலுத்தியவர் களை மொட்டையா என்றும் கூப்பிடுவதாகக் கூறினான்.

ஒழுங்கையும், மரியா தையையும் சொல்லித் தரும் ஆசிரியர்களே இப்படி கிண்டலடித்தால், மாணவர் சமுதாயம் எப்படி முன் னேறும்?
- ஜானகிராமன், வாலாஜா
(தினமலர் வார மலர் 25.1.2015 பக்.10)

இது ஒன்றும் புதிதல்ல - சில ஆண்டுகள் முன் வரை பள்ளிகளில் பெரும் பாலும் ஆசிரியர்கள் பார்ப் பனர்களாகவே இருப் பார்கள். தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் படிக்க வந்த நிலையில் அந்த உயர் ஜாதி ஆணவம் அவர் களை ஆத்திரத்தின் உச் சிக்கே துரத்தியது.

முதல் தலைமுறை யாகப் படிக்க வந்த மாண வர்களைப், பல தலை முறைகளாகப் படித்த பரம்பரையைச் சேர்ந்த பார்ப்பனர்களோடு ஒப்பிட் டுப் பேசுவதே தவறு. அப் படியெல்லாம் அவர்களால் சிந்திக்க முடியாதே!

நீ எல்லாம் ஏன் படிக்க வந்தே? மாடு மேய்க்கப் போக வேண்டியதுதானே? உன் வாயில் இதெல்லாம் எப்படி நுழையும் - உன் நாக்கில் வசம்பை வைத் துத்தான் தேய்க்கனும் என்று வாய்க்கு வந்த வசுவுகளையெல்லாம் கொட்டித் தீர்ப்பார்கள்.

தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் பல நிகழ்ச்சி களில் பேசும் போது இவற்றையெல்லாம் குறிப் பிடுவதுண்டு.

நான் மயிலாடுதுறை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண் டிருந்தபோது பெரும்பா லும் பார்ப்பன ஆசிரியர் களே இருந்தனர்.

நம் மாணவர்களைப் பார்த்து இப்படியெல்லாம் சொல்லு வார்கள் என்று பேரா சிரியர் அவர்கள் குறிப் பிட்டதுதான் நினைவிற்கு வருகிறது.

தந்தை பெரியார் அவர்களின் பேருழைப்பால், கல்வி வள்ளல் காமராசரால், திராவிட இயக்கத்தின் தொடர் ஆட்சியால் பார்ப் பனர் அல்லாத இரு பால் மாணவர்கள் பார்ப்பனர் களைப் புறந் தள்ளும் பெரு நிலைக்கு வந்து விட்டனர்.

இந்த நிலையிலும் பழைய காலத்து விட்ட குறை, தொட்ட குறையாக ஜாதிப் பெயரை சொல்லி மாணவர்களை அழைக் கிறார்கள் கறுப்பா என்று கிண்டல் செய்கிறார்கள் ஆசிரியர்கள் என்றால் அந்தஆணவம் இன்னும் குற்றுயிராகத் துடித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/95034.html#ixzz3QDEGJUwi

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நீதிமன்றம் ஏன்?

திருவாஞ்சியம் - மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய தலம் இதுவாம்.

அப்படியானால் குடும்ப நல நீதிமன்றத் தைக் குறைந்தபட்சம் அந்த மாவட்டத்திலாவது மூடி விடலாமா? மனநல மருத்துவர்களின் (Coun siling)
அலுவலகத்தை யும் வேண்டாம் என்று சொல்லி விடலாமா?

Read more: http://viduthalai.in/page1/95042.html#ixzz3QDERSLhA

தமிழ் ஓவியா said...

விலங்குகளை பலியிட நீதிமன்றத் தடை உள்ளதால் மாண்டி சிவராத்திரி விழாவுக்கு சாமியே வராதாம்


சிம்லா, ஜன.27-_ பன்னாட்டளவில் சிவ ராத்திரி விழாவில் விலங் குகளை உயிர்ப்பலியிடு வதை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கவில்லை என்றால், சிவராத்திரி விழாவுக்கு காம்ரு நாக் கோயில் சாமியே வராமல் புறக் கணித்துவிடும் என அச் சுறுத்தல் உள்ளதாக கோயில் வட்டாரத்திலி ருந்து கூறப்பட்டுள்ளது..

இமாச்சலப்பிரதேசத்தில், காம்ரு நாக் கோயிலில் 400 ஆண்டு கால பழை மையான பழக்கமாகிய சிவராத்திரி விழா அன்று விலங்குகளை உயிர்ப்பலி யிடுவது இந்த ஆண்டில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவால் நடைபெறாது.

காம்ரு நாக் கோயிலின் தெய்வங்கள், மாண்டி சிவராத்திரி விழாவுக்கு வரவேண்டுமானால், விலங்குகள் உயிர்ப்பலி செய்தாக வேண்டுமாம். காம்ரு நாக் கோயிலின் சாமியின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் விலங்கு களை உயிர்ப்பலி செய் யாமல் இருப்பதன்மூலம் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனராம். இதனால், காம்ரு நாக் சாமி, சிவராத்திரிக்கு வருமா என்பதே அய்யத் துக்கிடமாக உள்ளதாம்.

குல்லு தசராவின் இறுதிநாளில் முன்னதாக குல்ல அரச பரம்பரையின ரால் தொடங்கப்பட்ட உயிர்ப்பலியிடும் பழக்கம் உயர்நீதிமன்றத்தால் கெடுபடியான நிலை எடுக்கப்பட்டுள்ளதால், அதற்று கடவுளர்களே கட்டுப்படவேண்டிய நிலை இப்போது ஏற்பட் டுள்ளது.

மாண்டி மாவட்டத் தில் கடந்த வாரத்தில் சர்வ் தேவ்தா கர்தார் சமிதியின் சார்பில் 150பேர் கூடிய கூட்டத்தில் பல கடவுளர்களின் சார்பில் அவைகளின் பிரதிநிதி களாக உள்ளவர்கள் கூறும்போது விலங்கு களை உயிர்ப்பலி கொடுக்கவில்லையானால், கடவுளர்கள் விழாவைப் புறக்கணித்துவிடுவார்கள் என்று கூறுகின்றனர்.

சர்வ் தேவ்தா கர்தார் சமிதி அமைப்பின் தலை வர் சிவ்பால் சர்மா கூறும் போது, நூறு ஆண்டு களாக கடைப்பிடிக்கப் பட்டுவரும் பழக்கமான உயிர்ப்பலியிடுதலுக்கு தடை விதித்திருப்பதால், கடவுளர்களின் பிரதிநிதி கள் அதிருப்தியுடனும், கோபத்துடனும் உள்ள னர் என்று கூறினார்.

சமிதி சார்பில் விழா வில் முக்கியமான கட வுளர்கள் பங்கெடுப்பதை உறுதி செய்யக் கோரி யுள்ளது. காம்ரு நாக் மற்றும் விஷ்ணு மத் லோரா ஆகிய கடவுளர் களை பாமைகருதி விழா வில் பங்கேற்கச் செய்ய வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் வீர்பத்ரசிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மறு ஆய்வு மனு செய்ய வேண்டும் என்று சமிதி சார்பில் கோரப்பட்டுள்ளது.

400 ஆண்டு பழை மையான மாண்டியில் கங்கரா அரசன் சன்சார் சந்த் 1792ஆம் ஆண்டில் மாண்டிக்கு வந்தார். மாண்டிப்பகுதியை ஆண்ட ஈஷ்வரி சென் என்பவரைப் பிடித்து 12ஆண்டுகள் சிறையில் அடைத்தார். கூர்காக்கள் மாண்டிக்குள் வந்து காங்கராக்கள்மீது தாக்கு தலை நடத்தியபிறகு சென் விடுவிக்கப்பட்டார்.

கூர்காக்கள், மாண்டிப் பகுதியை மீண்டும் ஈஷ்வரி சென்னிடம் ஒப்படைத் தார்கள். அரசன் மீண்டும் மாண்டிக்கு அரசப் பொறுப்பை ஏற்றதை யொட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மலையில் உள்ள கட வுளர் சிலைகளைக் கொண்டு வந்து பெரும் விழாவை சிவராத்திரி விழாவாக ஏற்பாடு செய் தாராம். அதனைத் தொடர்ந்தே, மாண்டியில் சிவராத்திரி விழாவின்போது விலங்கு களை உயிர்ப்பலியிடும் பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.

தற்போது உயர்நீதிமன் றம் விலங்குகளை உயிர்ப் பலியிடுவதற்கு விதித் துள்ள தடை உத்தரவால் சிவராத்திரி விழாவுக்கு கடவுளர்கள் வருகை இல்லாமல் புறக்கணிக்கப் போகிறார்களாம்.

Read more: http://viduthalai.in/page1/95043.html#ixzz3QDEjwzs6

தமிழ் ஓவியா said...

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு சீல் வைப்பு

உ.பி. அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை

லக்னோ, ஜன.26 உத்தரப்பிரதேசம் மாநி லம், மீரட் நகரில் இந்து மதவெறியன் கோட் சேவுக்கு கோயில் கட்டுவ தாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப் பட்டவர் காந்தியார். அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30.1.1948 அன்று இந்து மதவெறி யன் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். காந்தியாரை கொன்ற வனையே 18 ஆண்டு களுக்குபின் விடுதலை செய்தனர்.

அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோ கம் செய்தார். இஸ்லாமி யர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் காந்தியாரை சுட்டுக் கொன்றேன் என்றான். அப்படிப்பட்ட இந்து மதவெறி பிடித்த நாதுராம் கோட்சேவுக்கு மீரட் மாவட்டம் பிரம்ம புரி பகுதியில் வரும் ஜன வரி மாதம் சிலை வைக்கப் படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப் படும் என மதவெறியை தூண்டும் வகையில் அகில இந்திய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச் சார்யா மதன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித் திருந்தார்.

இந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக, விசா ரித்து நடவடிக்கை எடுக் கும்படி மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் மற்றவரை அவமதிப்பு செய்வது, வதந்திகளை பரப்புவது போன்ற குற்றவியல் சட்டங்களின்கீழ் ஆச் சார்யா மதன் மீது கிரி மினல் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.

இந்நிலையில், இவ் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையின் விளை வாக கோட்சேவுக்கு சிலை அமைக்க விரும்பிய சர்ச்சைக்குரிய இடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைய முயற் சிப்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என மீரட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/94969.html#ixzz3QDGhyJ7E

தமிழ் ஓவியா said...

விருதுகள் பார்ப்பனரின் ஏகபோகமா?


ஜனவரி 26 - இந்தியக் குடிஅரசு நாளை யொட்டி, இந்திய மத்திய அரசு அறிவித்துள்ள விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ முதலிய விருதுகளுக் குரியவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள்

1) என்.கோபால்சாமி (அய்யங்கார்) ஓய்வு
2) சுதா இரகுநாதன்
3) எம்.ஆர். சீனுவாசன்
4) பி.வி. இராஜராமன் (அய்.ஏ.எஸ்.) ஓய்வு

அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் பூணூல் திருமேனிகளே தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்;
தடவித் தடவிப் பார்த்தால் ஒன்று வெறும் முதுகு கிடைக்குமோ என்ன?

யாருக்கு வந்த சுதந்திரம் இது?

புரிகிறதா?

Read more: http://viduthalai.in/page1/94984.html#ixzz3QDGoZ3oG

தமிழ் ஓவியா said...

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்


உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

Read more: http://viduthalai.in/page1/94967.html#ixzz3QDH5Gjco

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வளையல்

கர்ப்பிணிக்கு அணிவிக் கும் வளையலால் கருச் சிதைவு ஏற்படாமல் குழந்தையைப் பாதுகாக்க இதைச் செய்ய வேண்டு மாம்.

அப்படி என்று யார் சொன்னார்கள்? இதற்கு என்ன ஆதாரம் இருக் கிறது? வளைகாப்புப் போட்டுக் கொண்ட பெண்களுக்குக் கருச் சிதைவே ஆகவில்லையா?

எந்தக் காலத்திலோ எவரோ உளறியது எல் லாம் உண்மையா?

Read more: http://viduthalai.in/e-paper/95200.html#ixzz3QJZjWWuU

தமிழ் ஓவியா said...

மருந்து வேண்டாம் - எப்போது (2)


வாழ்வின் அனைத்துத் துறைகளிலும், எப்படிப் பட்ட துன்பமும் தொல்லையும் நோயும் மனிதர்களை வருத்தும் என்பதை அறிந்து, ஆராய்ந்து, அவற்றை நீக்கத் தேவையான அறிவுரைகளை அறவுரைகளாக வழங்கும் வள்ளுவரின் மருந்து, மருத்துவம் பற்றிய நுண்மாணுழைபுலம் மிகவும் வியக்கத்தக்கது அல்லவா?

மருத்துவ முறையையே நான்கு வகைப்படுத்தி வள்ளுவர் தனது குறளில் கூறும் கருத்துக்கள் அவர் எத்தகைய தலைசிறந்த பகுத்தறிவுக் கண்ணோட்ட முடையவர் என்பதை நன்கு விளக்கக் கூடியதாக இருக்கிறது என்பதற்கு இக்குறள் ஒரு அருமையான சான்று அல்லவா?

உற்றவன் தீர்ப்பான், மருந்துழைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து (குறள் (950)

இதன் பொருள்: 1. நோயாளி, 2. நோய் தீர்க்கும் மருத்துவன், 3. மருந்து, 4. நோயாளிக்கு அருகில் இருந்து உதவி புரிபவன் என்று நான்கு வகைப் பாடுகளை உடையதே மருத்துவ முறையாகும்.

என்னே அருமையான ஆய்வு! மருத்துவத்தையே அறுத்து நான்கு கூறுகள் முக்கியம் என்கிறாரே!

இன்று நமது மருத்துவர்கள் கண்டறிந்துள்ள நோய்க்கு மூலமான ஒன்று ஒவ்வாமை (Allergy) என்பதாகும்.

வெளிப்புறத் தூசியினால், மருந்தினால், உணவி னால் இத்தகைய ஒவ்வாமை பலருக்கு ஏற்படுகிறது!
ஆனால், அதன் காரணம் இதுதான் என்று புரிந்து கொள்ளாமல், வேறு எந்தெந்த மருந்துகள் - மருத் துவப் பரிசோதனைகள் - மருத்துவ சிகிச்சைகளை நாம் மேற்கொண்டு அவதியுறுகிறோம் பற்பல நேரங்களில் (எனக்குக்கூட பல ஆண்டுகளுக்குமுன்பு இத்தகைய கசப்பான, வேதனையான அனுபவம் ஏற்பட்டு, இறுதியில்தான் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங் களில் இடம் பெற்ற தலை சிறந்த தொண்டற டாக்டர் தம்பையா அவர்கள் கண்டுபிடித்து, எளிய மருத்துவத் தைக் கூறி என்னை உபாதையிலிருந்து விடுவித்தார்!)
திருவள்ளுவர் இந்த ஒவ்வாமை நோயை அறிந்து, புரிந்து, மிகவும் துல்லியமாக இரண்டு குறள்களில் கூறுவது நம்மை வியப்புக் கடலில் தள்ளுகிறது!

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து (குறள் 944)

இக்குறளின் பொருள் இதோ: ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்து உள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.

உணவு உடம்பில் மாறுபாட்டினை உண்டாக்குவது தான். ஒவ்வாமை - அதனை அவாமையே நம்மைக் காப்பாற்றும் இல்லையா?

சில உணவுகள் சிலருக்கு ஒவ்வாதனவாக இருக்கக் கூடும். இதை அறியாமல் அதை உண்டு, உயிர்க்கு இறுதியாகி விடும் பேராபத்தும்கூட அதனால் ஏற்படுவது உண்டு.

காய்கறிகளை விரும்பிச் சாப்பிடும் ஒருவர், முருங்கைக் காயை உணவில் எடுத்துக் கொண்ட பிறகு மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகே மீண்ட நிகழ்வுகள் அறிவேன்.

அதுபோலவே, மீன், இறைச்சி, இறால் உணவு களை உண்ணுவோரில் சிலருக்கு இறால் வகை, அல்லது குறிப்பிட்ட இறைச்சி வகை உண்ட சில மணித்துளிகளுக்குப் பிறகு - உடம்பெல்லாம் தடித்து, முகம் வீங்கி - மூச்சு விடுவதற்கேகூட ஆபத்து என்று ஆகும் நிலையும் ஏற்படுவது உண்டு.

இதைத்தான் வள்ளுவர் - உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு - உண்ணுக - அதுவும் நன்கு பசி வந்த பிறகே உண்ணுக என்று அறிவுறுத்துகின்றார்!

இன்னும் தெளிவாக, அடுத்த குறளில் ஒவ்வாமை பற்றி விளக்குகிறார்!

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (குறள் 945)

கருத்து:

உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்தி, செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கை நோய்களினால் துன்பம் ஏற்படுவது இல்லை.

எனவே, செரித்தபின் உண்ணுங்கள்.

நமது உடல் அமைப்பில் முக்கிய பணிகள் - செரிமானக் கருவிகளால் தத்தம் கடமையைத் தவறாது செய்து நம்மை வாழ வைக்க உதவுகையில், நாம் அவற்றின் பணிக்கு உதவிட வேண்டாமா?
அதுதான் அளவறிந்து உண்ணுதல்,

செரித்தபின் உண்ணுதல்

ஒவ்வாதனவற்றை நீக்கி உண்ணுதல்

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற ஆசை உங்களைத் தூண்டும்போது, அந்த ஆசைக்குப் பலியாகாமல் உடனே இலையை விட்டு எழுந்து விடுங்கள். அந்த கொஞ்ச நேரம் - வாழ்க்கையில் நீங்கள் பிறருடன் நீண்ட காலம் கொஞ்சி வாழ வகை செய்யுமே! புரிந்து செயல்படுக!



- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/95203.html#ixzz3QJbA36te

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியில் சர்வமும் இந்துத்துவாமயம்!


வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை போன்ற முக்கியமான பதவியில் உள்ளவர்கள் தங்கள் பணி பற்றிய குறிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிதாக பதவியேற்கும் ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். அதற்காக குறைந்தது இரண்டு முதல் 5 வேலை வாரங்கள் எடுத்துக்கொள்வார்கள்.

இது முக்கிய பணிமாற்றம் குறித்த விதிகள் ஆகும். ஆனால் பாஜக பதவியேற்றதில் இருந்தே தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளை ஒரே இரவில் பதவியில் இருந்து வெளியேற்றி வைப்பது தொடர்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு சிபிஅய் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவுத் தலைவர், தேசிய பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் (DRDO) என பல முக்கிய அதிகாரிகள் இதே போன்று ஒரே இரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக சிறப்புப் பாதுகாப்பு படைத்தலைவர் நேபாளத்தில் மோடியுடன் இருக்கும்போதே டில்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு பதவி பறிப்பு தகவல் குறித்த கடிதம் தொலைநகலில் அனுப்பப்பட்டுள்ளது.

தனது பதவி பறிக்கப்பட்டது தெரியாமல் நேபாள நாட்டில் மோடியின் பாதுகாப்புப் பணிகளை நேரடியாக கண்காணித்துக் கொண்டிருந்தார். அதேபோல் பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் அவினாஷ் சந்திரா முதல்நாள் இரவு வீட்டிற்குத் திரும்பி மறுநாள் காலை அலுவலகம் செல்ல இருந்தபோது அவரது அலுவலகத்தில் இருந்து நீங்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டீர்கள் என்று தகவல் தொலைப்பேசியில் வருகிறது.

இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம் பத்திரிகைகள் மோடியை படம் எடுக்கும்போது பாதுகாப்பு வீரர்கள் குறுக்கே நிற்கிறார்களாம்; இதன் காரணமான அதன் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுபோன்ற முக்கிய அதிகாரிகளின் பதவி நீக்கத்திற்குப் பின்புலமாக காவிகளின் கரங்கள் இருக்கின்றன என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு ஆய்வு மய்யத் தலைவர் நவீன கண்டு பிடிப்புகளுக்கு புராணப் பெயர்களை வைப்பதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தவர்.

தமிழ் ஓவியா said...

பன்னாட்டளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அந்த நாட்டுப் பெயருடன் சில குறிப்பு எழுத்துக்களை பயன்படுத்துவது எதிர்காலத்தில் அந்த கண்டு பிடிப்புகளைபற்றிய தகவல்கள் பெற மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறிவந்தார். மேலும் ராணுவத்தில் காவிகளின் ஆதிக்கம் குறித்தும் பல்வேறு கட்டங்களில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் வரிசையில் தற்போது சுஜாதா சிங் இவர் பதவி நீக்கம் செய்ய பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இது குறித்து ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபரின் இந்தியப்பயணத்தின் போது காந்தியார் நினைவிடத்திற்கு ஒபாமாவுடன் சென்றது, ஒபாமாவின் வருகையின் போது ஊடகங்களில் மோடிக்குச் சமமாக வெளியுறவுத்துறைச் செயலாளரான சுஜாதாசிங்கின் படம் வந்தது, வெளியுறவுத்துறை குறித்த பல்வேறு பதவிகளுக்கு மோடிக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த பட்டியலைப் புறக்கணித்து தகுதியான நபர்களை பணியில் அமர்த்தியது, அதை விட முக்கியமாக இவரது தந்தை தமிழரான டி.வி.ராஜேஷ் வர் காங்கிரஸ்காரர் என்ற ஒரு காரணமும் இதில் இணைந்திருக்கிறது. இந்தியாவில் மதவாதம் பற்றி ஒபாமா தெரிவித்த கருத்துக்கு வெளியுறவுச் செயலாளர் காரணமாக இருக்கலாம் என்ற அய்யப்பாடு மோடி அரசுக்கு இருந்ததும் ஒரு காரணமாம்!

இதுபோன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட் டுள்ளன. ஆனால் இதுவரை உள்துறை அமைச்சகமோ அல்லது பிரதமர் அலுவலகமோ சுஜாதா சிங் பதவி நீக்கத்திற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. சுதந்திர இந்தியாவின் சி.பி.முத்தம்மா, நிருபமா ராவ் போன்ற பெண் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குப் பிறகு சுஜாதா சிங் நியமிக்கப்பட்டிருந்தார்.

முக்கியமாக பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவது - அதிகரித்து வருகிறது. பெண் வெளியுறவுத் துறை அதிகாரிகளை காரணம் எதுவும் கூறாமல், நீக்கிய மோடி சில நாள்களுக்கு முன்பு அரியானாவில் பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்; பெண் குழந் தையை காப்பாற்றுவோம் என்று முழங்கி இருக்கிறார். என்னே முரண்பாடு!

நிருபெந்திர மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ்.காரர்; மோடி ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக தொலைத் தொடர்பு ஆணையத்தின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற இவரை பணி நியமனத்திற்கான விதியில் மாற்றம் செய்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக நியமித்தார்.

அஜித் தொவல் பாதுகாப்பு ஆலோசகர் மே மாதம் 30 (2014) ஆம் தேதி மோடியால் நேரடியாக தேர்ந் தெடுக்கப்பட்டவர். இவர் தனது சொந்த வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை தேச வளர்ச்சி கொள்கை என்ற கருத்தை மய்யப்படுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதியவர் ஆவார்.

இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவராக தீவிர இந்து வெறியரான எல்லப் பிரகலத சுதர்ஷன் ராவ் (ஒய்.பி.சுதர்ஷன் ராவ்) என்பவர் நியமிக்கப்பட்டார்.

சோசலிஸம் என்ற வார்த்தையே பிடிக்காது, சர்வமும் இந்துத்துவா மயம் என்ற பாதையில்தான் மோடி தலை மையிலான ஆட்சி நடை போடுகிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

Read more: http://viduthalai.in/e-paper/95202.html#ixzz3QJbOKTig

தமிழ் ஓவியா said...

ஹங்கேரி - இராமாயணம்


வார்சா ஒப்பந்தநாடுகளில் இராமாயண நாடகத்தை நடத்துவது இந்தியாவிற்கு நீண்டகாலமாக நற்பெயரை தரக்கூடிய வழிமுறையாக இருந்ததாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹங்கேரியர்கள் இராமாயண நாடகத்தை நடத்தினால் நல்ல வரவேற்பு இருக்குமென்று கருதி, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளையே கவரும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய இராமாயண நாடகத்தை தயாரித்தார்களாம்.

இந்த நாடகத்தில் இராவணன் வில்லனல்ல. மாறாக இலட்சுமணன் தான் வில்லன். இவன் நம்பிக்கைத் துரோகம் செய்து தன் அண்ணன் மனைவி சீதையை கூட்டிக் கொண்டு ஓடுவதாகக் கதை. இந்த நாடகம் ஹங்கேரியிலுள்ள புடா பெஸ்ட் நகரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.

மேலும் புதிய டியூட் டானிக்கின் புராண மொழி பெயர்ப்பின்படியும் சமீபத்தில் ஜெர்மானிய ஜனநாயக குடியரசு சார்பில் பெர்லினில் நடந்த நாடகத்திலும், இராவணன் சீதை மீது விருப்பமில்லாதவனாகவும், சீதை வலிய சென்று இராவணனை மயக்கக் கூடியவளாகவும் சித்தரித்திருக்கிறார்களாம்.

ஆதாரம்: இந்துஸ்தான் டைம்ஸ் - 4.10.1981

Read more: http://viduthalai.in/e-paper/95216.html#ixzz3QJdZi5p0

தமிழ் ஓவியா said...

ஜீவா பாடுகிறார்!

நல்லாரை உழைப்போரைப் பறையரென்றார்,
நயவஞ்சகமுடையோர் மேல்ஜாதி யென்றார்,
பொல்லாத கொடியவரை மன்னரென்றார்,
பொய்யுரைத்த குருக்கள், தமை குருக்கள் என்றார்
சொல்லாரும் தாயினத்தை அடிமையென்றார்
சூது மிகும் ஆசாரம் சமயம் என்றார்
இல்லாத பொய்வழியில் சொன்னதாலே
இந்நாட்டார் அடிமை வாழ்வு எய்தினாரே.

ப.ஜீவானந்தம்
தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், குஜராத்

Read more: http://viduthalai.in/e-paper/95216.html#ixzz3QJdlwDSW

தமிழ் ஓவியா said...

சர்க்கார் (அரசு) விடுமுறை நாள்கள்


இரு நூறு ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். நம்முடைய அடிமைத்தளையை எந்த மதமும் அறுக்க வில்லை. பார்த்துக் கொண்டுதான் இருந்தன, எப்படி? உன்னுடைய தலை விதி, நீ அடிமையாக இருக்கும்படி நேரிட்டது என்று கூறுவதுபோல் இருந்தது. மதம் ஏற்படுத்திய அந்தத் தலை விதியை, நாட்டின் நலிவை தலைவர்கள், தங்கள் உழைப்பால் மண்டையில் அடித்து நொறுக்கினார்கள். தலை நொறுங்கவே - தளை அறு பட்டது.

அடிமைநிலை மாறிற்று. சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஓயா, உழைப்பின் பயனாகவும், பல உத்தமர்களின் தியாகத்தினாலும் பெற்ற சுதந்திரத்தை ஏற்று நடத்திய மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்ச்சியை, மதக் கோட்பாட்டின்படி நாள் கோள் பார்த்தே நடத்தினர் என்றால் - அதிலும் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டின்படி நல்ல நாள் பார்த்து சுதந்திர அரசாங்கத்தைத் தொடங்கினர் என்றால், மதக் கலப்பற்ற அரசியலையே இவர்கள் நடத்துகிறார்கள் என்று எப்படிக் கூற முடியும்? மதமா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது? மக்களின் உழைப்பன்றோ இன்று நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு அடிகோலித் தந்தது.

இதனை மறந்து மதங்களின் பெயரால் ஏற்படுத் தப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தி யையும், விநாயக சதுர்த்தியையும், மஹாளய அமாவாசையையும், ஆயுதபூசையையும், பக்ரீத்தையும், மொகரத்தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதசியையும், சிவராத்திரி யையும் அரசின் விடுமுறை நாள்களாகக் கொண்டாடலாமா?

மத சம்பந்தமான நாள்களை அரசு விடுமுறை நாள்களாக்கிக் கொண்டாடுவது, இருநூறு ஆண்டுகளாக நாங்கள் அடிமைப்பகுதியில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மதமே! எமது அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே! சமுதாய ஒற்றுமையைக் குலைத்து எங்களுக் கிடையே ஒட்ட முடியாத பிளவை உண்டாக்கிய மதமே இருக்கின்ற சிறிதளவு ஒற்றுமையையும், அரசியலில் நுழைந்து குலைத்து விடாதே!

அரசியலை விட்டுச் சற்று விலகியிருப்பதே நீ எங்களுக்குச் செய்யும் பேருதவியாகும் என்று கூறி அதனை அரசியலோடு பிணைக்காமலும் அரசி யலின் பெயரால் அதற்கு விடுமுறை நாள்களை ஏற்படுத்தி மீண்டும் அரசியல் நெருக்கடிகளை உண்டாக்கி, அரிதில் பெற்ற விடுதலையை இழக்காமல் இருப்பதையுமே மத அடிப் படையின்மீது எழுப்பப்படாத இன்றைய அரசாங்கம் தன்னுடைய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம்.

அறிஞர் அண்ணா
திராவிட நாடு இதழ் - (23.5.1948)

Read more: http://viduthalai.in/e-paper/95218.html#ixzz3QJduEwfC

தமிழ் ஓவியா said...

புரட்சிக்கவிஞரின் வினா!

தமிழர் வீட்டுப் பையன் பிள்ளையார் எதிரில் நின்று பாடுகின்றான்.

பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு
நான் தருவேன்
கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத்
தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ்
மூன்றும் தா!
காலணாவுக்குப் பாலும், காலணாவுக்குத் தேனும், காலணாவுக்கு வெல்லப்பாகும், காலணாவுக்கு முந்திரிப் பருப்பும் ஆகிய நாலையும் கலந்து பிள்ளையாரப்பா உனக்கு நான் தருவேன்.
அப்படி நான் தருவதற்கு முன், நீ எனக்கு சங்கத்தின் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களையும் இப்படிப் போடு என்று கேட்கின்றான்! யாரை? அழுக்குருட்டி பிள்ளையாரை!
இவன் உருப்படுவானா? இப்படிப்பட்ட கல்வியைக் கட்டாயம் ஆக்கித்தான் என்ன பயன்?

- புரட்சிக் கவிஞர் (குயில், 20.9.1960)

Read more: http://viduthalai.in/e-paper/95221.html#ixzz3QJeLDhi3