Search This Blog

13.1.15

பாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்! ஏன்?

பெரியார், பாரதியார், பாலசந்தர்

கேள்வி: பொதுவாக, பெண் விடுதலை பேசும் உங்கள் படங்களில் பாரதியாரையும், அவரது பாடல்களையும் அதிகம் பயன்படுத்தி இருக்கிறீர்கள். பாரதியாரைவிட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார். ஆனால், உங்கள் படங்களில் ஏன் பெரியாரைப்பற்றிய சித்திரிப்புகள் இல்லை?


நேரிடையான, சிறப்பான, இந்தக் கேள்வியை திருவில்லிபுத்தூர் தோழர் எம். அமல்ராஜ் கேட்டிருக்கிறார். பாராட்டுக்குரியவர். 14.9.2011 தேதி ஆனந்தவிகடன் இதழில் இந்தக் கேள்வி இடம் பெற்றுள்ளது.


வாசகர் கேள்வி - பதில் பகுதியில், இயக்குநர் கே.பாலசந்தரிடம் கேட்கப்பட்ட வேள்வி இது.


திரையுலகில் நன்றாகவே காலூன்றிவிட்ட முக்கிய பார்ப்பன புள்ளி திரு.கே. பாலசந்தர் மத்திய அரசு ஏ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றி, நாடகத்தில் ஈடுபாடு கொண்டு, மெதுவாக மெதுவாக நகர்ந்து திரையுலகில் குடில் அமைத்துக் கொண்டவர்.

 தமிழர் தலைவர் அவர்கள், பெரிதும் வெளியில் அறியப்படாத இருந்த பெரியாரின் கருத்துக்களை, தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற வித்தியாசமான தலைப்பில் தொடர் சொற்பொழிவு. ஆற்றிய, அரிய பல செய்திகளை நமக்கு வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்ட ஒரு செய்திக்கு எடுத்துக்காட்டாக பாலசந்தரின் பதில் அமைந்துள்ளது. 

பார்ப்பனரை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அழிப்பதுதான் பார்ப்பன தர்மம் என்ற கருத்தை சொற்பொழிவு வாயிலாக விளக்கியுள்ளார்.


இனி, வாசகர் கேட்ட கேள்விக்கு, நேரிடையாக தந்தை பெரியார்போல், நான் பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புப் போராளியாகிய பெரியாரைப்பற்றி என் படங்களில் சித்திரிப்பு செய்வது, என்னுடைய குலதர்மத்துக்கு விரோதமானது என்று கூறியிருக்கலாம். மாறாக, மேதாவிதனத்தில் பாரம்பரிய பாதுகாவலராக, பேதமை வெளிகாட்டி, பாரதியைத் தூக்கிப் பிடிக்கும் பதிலை கூறியுள்ளார். 

பெரியாருக்குமுன் பாரதியார் பிறந்து விட்டாராம். அதனால் பெரியார் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவராய் விட்டாராம். சிவாஜி கணேசனுக்குப் பின் பிறந்த நடிகர்களை இவர் தொடர்புடைய படங்களில் ஒதுக்கி வைக்கவில்லையே! அவர் கூறியுள்ள பதில்:


ஒரு வேளை பெரியார் பாடல்கள் எழுதியிருந்தால் பயன்படுத்தி யிருப்பேனோ? (இவரின் கருணையில் வர வேண்டும்) பெரியாருக்குமுன் பாரதி பிறந்து விட்டதாலும், அவருடைய பெண்ணியக் கருத்துக்களில், பாரம்பரியத்தின் நல்ல அம்சங்களும் (பார்ப்பனத் தன்மைக்கு பக்கபலமாக இருப்பதுதான் பாரம்பரியத்தின் நல்ல அம்சம்) புதுமையின் அவசியமும் சேர்ந்து இருந்ததாலும் (பகுத்தறிவுப் பகலவன் பெரியார் எடுத்துக் கூறாத புதுமைகளை, பாரதியார் கூறினார் போலும்) அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது வழவா என்ற பதிலைவிட வெறுப்பைக் கொட்டும் பதில்.


பாரதியாரைவிட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார் என்று கேள்வியில் வாசகர் அழுத்தம் கொடுத்து கூறியுள்ளாரே. பாராமுகம் ஏனோ, பாலசந்தர் அய்யர்வாளே? பாரதிக்குப் பின்னால் பிறந்ததால், தீவிரமாகப் பெண்ணியம் பேசிய பெரியார், தீண்டப்படாதவராகி விட்டாரோ? பின்னால் பிறந்த பெரியாருக்குத்தானே, பெண்குலம் பெரியார் என்று பட்டம் அளித்தது? தாதாசாகேப் பால்கே விருது, பொன்னாடை, 10 லட்ச ரொக்கம் பெற்ற பாலசந்தருக்கு, இந்த பெரியார்விருது பற்றிய பின்னணி தெரியாது. பெரியார் இவருக்கு முன்பே பிறந்து விட்டாரே. இவருக்கு எப்படி தெரியும்?


பாரதியார் நமக! எல்லா நல்ல அம்சங்களும் கொண்ட பாரதியின் துதிபாடும் பாலசந்தருக்கு, எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர், நாடகாசிரியராக விளங்கியவர். இவருக்குமுன் பிறந்தவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, இவர் பிரஸ்தாபிக்கும் பாரதியாரைப்பற்றி, பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே என்ன கருத்துத் தெரிவித்துள்ளார் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.


இதற்குமுன்னதாக, தந்தை பெரியாரை மிஞ்சும் வகையில் பெருமை பெற்றவர் பாரதி என்று பேசும் பாலசந்தர், கல்கிக்கும், பெரியாருக்கும் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியையும் தெரிந்து கொள்வது நல்லது. அதன்மூலம் பெரியாரின் மேன்மையை உணர்ந்து, அவரைப்பற்றி இனி அவரின் திரைப்படத்தில் சித்திரிக்க வேண்டிய எண்ணம் வரலாம்.


1948இல் கல்கி தன் மகள் திருமணத்திற்கு பெரியாரை அழைத்திருந்தார். அவர் வசதிப்படி பகல் 12 மணிக்கு பெரியார், திருமண வீட்டிற்குச் சென்றார். மணமக்கள் காலில் விழுந்து வாழ்த்துப் பெற வந்தழைத்த பெரியார் தடுத்தார். விபூதியை நீட்டினார். இதை செய்தித்தாளில் வர இருப்பதை கல்கி தடுத்து நிறுத்தினார் (கல்கி நூற்றாண்டு நினைவுகள் கங்கை பகீரதன், ஆதாரம்)


சுப்பிரமணிய பாரதி, செப்டம்பர் 11ஆம் தேதி 1921இல் இறந்த பிறகு, அவருடைய கவிதா திறமை, புகழ்பற்றி 1935இல் ஒரு விவாதம் நடைபெற்றுள்ளது. இந்த விவாதத்தில், அன்றைய காங்கிரஸ் இயக்கத்தைத் சேர்ந்தவர்களும், எழுத்தாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய செய்தியை தி இந்து 4.9.2011 தேதியிட்ட இதழில் கே.ஆர்.ஏ. நரசய்யா என்பவர் விரிவாக தந்துள்ளார்.


பாரதியின் கவிதையில் உள்ள நல்ல அம்சங்களில் மனநிறைவு கண்ட பாலசந்தர் அவர்கள், விவாதத்தில் வெளிப்பட்ட கருத்துகளின் மூலம், பாரதியாரைப் பற்றி அவர் மேலும் அறிவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.
வ.ரா. என்று பலருக்கும் அறிமுகமான வ. ராமசாமி அய்யங்கார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிட்டி சுந்தர்ராஜன், கு.பா. ராஜகோபாலன் விவாதத்தில் கருத்து பரிமாறிக் கொண்டவர்கள்.


வ.ரா. அவர்களைப் பற்றி, தமிழர் தலைவர் அவர்கள், அவருடைய தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் சொற்பொழிவில், சிறப்பாக குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். அக்கிரகாரத்து அதிசய மனிதர், வ.ரா. என்று குறிப்பிட்டுள்ளார். பாரதியாரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதியவர் வ.ரா. டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டு வந்த மணிக்கொடி என்ற தமிழ் இதழில், வ.ரா. நீண்ட நாள்கள் பணியாற்றினார். மணிக்கொடியின், ஆகஸ்ட் 1934இதழில் என். ராமரத்தினம் என்ற கட்டுரையாளர், ஒரு பிரச்சார கூட்ட பேச்சில்., வ.ரா. பேசியதாகக் கூறப்பட்ட பேச்சை குறிப்பிட்டிருந்தார். நான் ஷேக்பியர், ஷெல்லி போன்ற சிறந்த ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளைப் படித்துள்ளேன். நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் தாகூர் கவிதைகளையும் படித்துள்ளேன். ஆனால் அவர்களுடைய அனைத்து கவிதைகளையும் ஒன்று சேர்த்து பார்த்தாலும், பாரதியார் எழுதிய பாட்டின் ஒரு வரிக்கு இணையாகாது என்று கூறுவேன் வ.ரா. பேசிய இந்த பேச்சை மேற்கோள்காட்டி, நெல்லை நேசன் என்ற பெயரில், சிறீ ஆச்சார்யா என்பவர், தினமணி 1935, பாரதி மலரில், வ.ரா. பேசிய கருத்தை மறுத்து, பாரதி ஒரு நல்ல கவி, ஆனால் சிறந்த கவிஞர் அல்ல (Bharati is a good Poet but not a great poet) என்று எழுதினார்.


கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன் இதழின் ஆசிரியராக இருந்த காலம். அவரது இலக்கிய மாணவன் என்று, தன் பெயரைக் குறிப்பிடாமல், ஆசிரியருக்கு கடிதம் என்று ஒரு கடிதத்தை இதழில் (3.11.1935) வெளியிட்டிருந்தார். அதில், காரைக்குடி கூட்டத்தில் ஒருவர் கூறிய கருத்து (வ.ரா.வின் பெயர் குறிப்பிடப்படவில்லை) சரியான கருத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கருத்து சரி, அல்ல என்பது இந்த கடிதம் எழுதுவோர் கருத்து என்று கூறப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் கருத்துக்கு இதழாசிரியரின் கருத்து என்ற முறையில் ஆசிரியர் (கல்கி) கருத்தை வெளியிட்டார்.


அங்கு (காரைக்குடியில்) பேசியவரின் பெயர் குறிப்பிட்டிருந்தது. அதை நான் வேண்டுமென்றே குறிப்பிடவில்லை. காரணம் அவர் அப்படிக்ஷீயீ சொல்லி இருக்க மாட்டார் என்ற எண்ணத்தால், அப்படி யாரேனும் சொல்லியிருந்தால், அவருக்கு இலக்கியத்தைப்பற்றியோ அல்லது கவிதைநீளீயீபற்றியோ ஏதும் அறியாதவர் என்பதை உணர வேண்டும். அவர் கல்வியறிவு இல்லாதவர் என்று முடிவு செய்ய வேண்டியதாக உள்ளது. அவர் ஷெல்லி, தாகூர், ஷேக்ஸ்பியர் கவிதைகளைப் படித்திருப்பாரா என்பது சந்தேகமே. அப்படி அவர் படித்திருந்தால், அவை அவருக்கு விளங்கியிருக்காது. பாரதி யாரின் கவிதைகளைக்கூட அவர் விளங்கிக் கொண்டிருப்பாரோ என்பது சந்தேகமே
ஆனந்த விகடனில் வந்த இந்த கல்கியின் கருத்தைத் தொடர்ந்து, வ.ரா. 30.11.1935 தேதி சுதேசமித்திரன் இதழில், பாரதியும், இலக்கிய விமர்சனமும் என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதினார். அதே இதழில் கல்கி, வ.ரா.வின் கருத்துக்கு 7.12.1935 இதழில் மறுப்பை எழுதினார். அதில், டால் ஸ்டாய் பாரதியின், வள்ளி பாட்டை படித்தால், பாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்


இந்த நிலையில், வ.ரா. கொழும் பிலிருந்து (வ.உ.சி.யின் வேண்டுகோளுக் கிணங்க, வ.ரா. அக்டோபர் 1934இல், கொழும்பிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழில் பணியாற்ற சென்றிருந்தார்) கு.பா. ராஜகோபாலனுக்கு வருத்தப் பட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில், பாரதி ஒரு நல்ல கவிஞர், ஆனால் சிறந்த கவிஞர் அல்ல என்ற கல்கியின் கருத்தை மறுத்து எவரும் எழுத வில்லையே என்று, எழுதினார். அதைத் தொடர்ந்து, சிட்டி, கு.பா.ரா. கல்கியின் கருத்தை எதிர்த்து நீண்ட கட்டுரைகள் எழுதினார்கள். அவை, கண்ணன் என் கவி என்ற தலைப்பில் 1937இல் சங்கு கணேசன் அவர்களால் வெளியிடப் பட்டது.

பிற்காலத்தில், கல்கி, சிறப்பு மிக்க கவிஞராக இல்லாவிட்டாலும், நல்ல கவிஞராக இருந்த பாரதியின் பற்றாள ராக இருந்து, அவருக்கு எட்டாய புரத்தில் மணிமண்டபம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

பார்ப்பன அக்ரகார சொந்த பந்தமான ராமாயண காலட்சேபம், கீதா உபதேசம், லலித சகஸ்ரநாமம், பாகவதம், தேவி மகாத்மியம், பட்டியலில் உள்ளவர்தான் சுப்பிரமணிய பாரதி. இவற்றின் திருகூட்ட துதிபாடியாக பாலசந்தர் இருப்பதில் வியப்பேது மில்லை. 

                          ---------------------------மு.வி. சோமசுந்தரம் "விடுதலை” 10-3-2012

7 comments:

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்கது - இங்கல்ல, கருநாடகத்தில்
அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு

சுடுகாடு


மைசூரு, ஜன.13- கருநாடக மாநிலத்தில் கிரா மங்களில் உள்ள அனைத்து சுடுகாடுகளும் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவானது என்றும், எஞ்சி இருக்கும் சுடுகாடுகளும் அரசின் சுடுகாடு களாக மாற்றப்படும் என்றும் கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் வி.சிறீனிவாஸ் பிரசாத் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் மைசூருவில் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனிவாச பிரசாத் கூறும்போது, இதுகுறித்து அரசு தேவை யான உத்தரவுகளை துணை ஆணையர்களுக்கு பிறப்பித்துள்ளது. சுடுகாடுகளைப் பொதுவாக்கு வதற்குரிய மாற்றங்கள் குறித்து குடியிருப்பவர் களிடமிருந்து எவ்வித எதிர்ப்புகளும் இன்றி அவர்களின் வசதிக்காகவே நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.

அரசு ஆழ்துளைக் கிணறு, மேற்கூரை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைத்து உள்ளூர் பணியாளர்களைக்கொண்டு பராமரிக்கப்படும். இந்த முயற்சியில் ஆட்சேபணை ஏதுமிருந்தால், துணை ஆணையர்கள் இரண்டு ஏக்கர் அளவில் நிலத்தை கிராமத்தில் பெற்று அரசு சார்பில் பொது சுடுகாடு, அத்தியவசியத் தேவைகளுக்கான வசதிகளுடன் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மைசூரு வட்டத்தில் கிராம செயலாளர்கள் சங்கத்தினரின் நாட்குறிப்பு, நாட்காட்டி ஆகிய வற்றை வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனி வாச பிரசாத் வெளியிட்டார். இடுகாடு மற்றும் சுடுகாடுகளுக்கு கிராமங் களில் ஜாதி அடிப்படையில் இருக்கும் பிரச் சினையைத் தீர்க்கும் வகையில் நாங்கள் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவாக ஒவ்வொரு கிராமத் திலும் ஒரேயொரு பொது சுடுகாடு, எரிமேடை அரசு சார்பில் அமைத்திட உள்ளோம். சுடு காடுகள், எரிமேடை ஆகியவை முழுமையாக அரசு சுடுகாடுகளாக அறிவிக்கப்படும்.

மைசூர் மாவட்டத்தில் திரைப்பட நகர் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஒரே இடத்தில் படப்பதிவு நடத்த வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/94375.html#ixzz3Oi8MB7XC

தமிழ் ஓவியா said...

சாமியாரிணிகள் விஷயமா?

சீடன்: விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சாத்வி பிராச்சி என்ற சாமியாரிணி இந்துக் கள் நான்கு குழந்தை களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியிருக் கிறாரே, குருஜி?

குரு: இது சாமியாரி ணிகள் தலையிட வேண்டிய விஷயமா, சீடா!?

Read more: http://viduthalai.in/e-paper/94379.html#ixzz3Oi8TV3c8

தமிழ் ஓவியா said...

சிறீரங்கம் பிரச்சினை: நீதிமன்றத்தில் சந்திப்போம்!


சிறீரங்கம் ரெங்கநாதன் கோவிலில் ஒரு அக்கிரமம் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறப்புக்குப் பிறகு வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரை யான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரைக் கோவிலிலிருந்து அவர்களின் வீட்டுக்குப் பல்லக்கில் சுமந்து செல்லவேண்டுமாம் - இதற்குப் பிரம்ம ரத மரியாதை என்று பெயராம். இதற்குப் பிரம்ம ரதம் அல்லது சீமான் தாங்கி என்ற பெயரும் உண்டு.

இதே சிறீரங்கத்தில் 2011 (அக்டோபர் 8) இல் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஓர் எச்சரிக்கை செய்தார். இப்படி மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமைக்கு எதிரான நிகழ்வை அனுமதிக்க முடியாது. மீறி சுமந்தால் திராவிடர் கழகம் மறியல் செய்து முறியடிக்கும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.

அப்பொழுது கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடந்துகொண்டும் இருந்தது. இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு பிரம்ம ரதத்தைத் தடை செய்தனர்.

இந்து அறநிலையத் துறை ஆணையர் செயராமன்தான் அத்தகைய ஆணையைப் பிறப்பித்தார். அதனை எதிர்த்து ரங்கநாதன் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கொன்றைத் தொடர்ந் தனர். நீதிமன்றம் அர்ச்சகப் பார்ப்பனர்களை எச்சரித்த தோடு, வழக்கையும் தள்ளுபடி செய்தது. அதன்படி மூன்று ஆண்டுகளாக பிரம்ம ரதம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், திடீரென்று இவ்வாண்டு மீண்டும் பார்ப்பனரைச் சுமக்கும் பிரம்ம ரதத்தைச் செயல்படுத்த முனைந்தனர். தகவல் அறிந்த திருச்சி மாவட்ட திராவிடர் கழகம், அப்படி தூக்கிச் சென்றால் மறியல் செய்வோம் என்று அறிவித்ததது.

கடந்த 10 ஆம் தேதி காலையில் மறியல் செய்த திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்து, நூற்றுக் கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்போடு பிரம்ம ரதத்தினை அரங்கேற்றியுள்ளனர் (ரெங்கநாதன் சக்திமீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை போலும்! கடவுளை மற, மனிதனை நினை! என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை!).

இது ஓர் அப்பட்டமான நீதிமன்ற உரிமை அவமதிப்பே! (Contempt of Court).

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய ஆணையில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 24.11.2012 அன்று கைசிக ஏகாதசி தினத்தன்று திருவேத வியாச ரெங்கராஜ பட்டர் அவர்கள் கைசிக ஏகாதசி புராணம் வாசித்து, பல்லக்கில் தூக்கிச் செல்வதைத் தவிர இதர மரியாதை களைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை திட்டவட்டமாக ஆணை பிறப்பித்ததற்கு எதிராக அப்பட்டமாக மீறுகிறார்கள் என்றால் எந்தத் தைரியத்தில்?

தமிழ் ஓவியா said...


இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்து அறநிலையத் துறை ஆணையரோ, அதிகாரிகளோ நீதிமன்ற ஆணையை மீறுவதற்கு எப்படி துணிந்தனர்?

ஒருக்கால் அமைச்சர்கள் தலையிட்டதால் இந்த அத்துமீறலைச் செய்துள்ளனரா? நீதிமன்ற அவமதிப்பு என்றால், அமைச்சர்கள் யாரும் நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கப் போவதில்லை. தலைமைச் செயலாளரோ அல்லது இந்து அறநிலையத் துறை ஆணையரோதான் கூண்டில் ஏறிப் பதில் சொல்லியாகவேண்டும்.

மாநிலத்தில் உள்ள ஆட்சி - திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இப்படியொரு ஆன்மிகத்தனத்தில் செயல்பட்டு வருகிறது என்று கருதலாமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக கோவில் குளங்கள் என்று சுற்றித் திரிவது, யாகம் நடத்துவது, திராவிடர் இயக்கக் கொள்கைகளுக்கும், அந்தக் கட்சியின் பெயரிலும், கொடியிலும் இடம்பெற்றுள்ள அறிஞர் அண்ணா ஏற்றுக்கொண்ட, வலியுறுத்திய கொள்கை களுக்கு விரோதமானது என்றாலும், அவை சட்டச் சிக்கலுக்குள் வராது.
ஆனால், இப்பொழுது சிறீரங்கத்தில் நடைபெற்று இருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானதாகும். எனவேதான், தமிழர் தலைவர் அறிவித்தார் - நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று.

ஆட்சி அதிகாரம் இருந்தால் எப்படியும் நடந்து கொள்ளலாம்; நீதிமன்ற தீர்ப்புகளையும் தூக்கி எறியலாம் என்ற மனப்பான்மை ஆபத்தானது. இலங்கைத் தீவில் ஆட்டம் போட்ட அதிபரின் கதியை உலகமே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது சிறீரங்கநாதனா வந்து சாட்சி கூறப்போகிறான்? நான் சொல்லித்தான் நடந்தது என்று கூறவா போகிறான்?

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதன் மனிதனை சுமப்பது கேவலம் என்று நினைக்கவேண்டாமா? அப்படி நினைக்கவில்லை என்றால், அதற்குள்ளிருப்பது ஜாதி இறுமாப்பும், ஆணவமும்தான் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

திருக்குறளில் ஒரு குறள் உண்டு:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனுக்கும், பல்லக்கில் அமர்ந்து செல்கின்றவனுக்கும் இடையே உள்ள நிலை மையைச் சுட்டிக்காட்டி, அறத்தின் பயன் இதுதான் என்று கூறவேண்டாம் என்று எவ்வளவு அழகாக மனிதப் பண்பை, உரிமையைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருவள்ளுவர்.

மதத்தை மய்யப்படுத்தி நடக்கும் எல்லாவித அக்கிரமங் களுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் முடிந்த பரிகாரம் அனைத்து ஜாதியினருக்கும், அர்ச்சகர் உரிமை என்ப தாகும். அதனையும் நிறைவேற்றி முடித்து, ஆதிக்கக் கூட்டத்தின் ஆணிவேரை வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!

Read more: http://viduthalai.in/page-2/94394.html#ixzz3Oi8kead7

தமிழ் ஓவியா said...

உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும்.
_ (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/94393.html#ixzz3Oi8t97qi

தமிழ் ஓவியா said...

என்னே பித்தலாட்டம்
இன்று மகரஜோதியாம்!

இன்று சபரி மலையில் மகர ஜோதியாம் சபரிமலை யில் பக்தர்கள் கூட்டமாம்! ஏடுகள் இப்படி செய்திகளை வெளியிடுகின்றன.

மகரஜோதி மோசடி என்பது ஏற்கெனவே அம்பலமாகி விட்டது.

கேரள முதல் அமைச்சர் - கேரள தேவசம் அமைச்சர் என்று எல்லோருமே மகர ஜோதி உண்மையல்ல - செயற்கைதான் - மின்வாரிய ஊழியர்கள் காட்டும் ஏற் பாடுதான் என்று ஒப்புக் கொண்ட பிறகு, மகர ஜோதியை அனுமதிக்க லாமா?

மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் இந்தப் பித்தலாட்டத்தை அனுமதிக்க லாமா?

Read more: http://viduthalai.in/e-paper/94433.html#ixzz3OnUrZMVF

தமிழ் ஓவியா said...

அறிவு பெற முடியாமல்....


தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகிறான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/94422.html#ixzz3OnVFYdmn