Search This Blog

2.1.15

திருமண ஆடம்பரம் தேவையா?-கி.வீரமணி

திருமண ஆடம்பரம் தேவையா?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன - என்பது விவிலியத்தின் (பைபிளில்) பழமொழி, ஆனால், நடைமுறை உண்மை என்ன வெனில் திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!


அது மட்டுமா?


நகர்ப்புறங்களில் நடைபெறும் திருமணங்களின் அருவருக்கத்தக்க ஆடம்பரங்கள்; கருப்புப் பணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க சுவிஸ் வங்கி களைத் தேடி நமது மத்திய அரசு ஓடிக் கொண்டிருக்கிறதே - இந்த ஆடம்பரத் திருமணங்களை நடத்துவோர் பட்டியலைத் தேடினால் கறுப்புப் பணம் எங்கே புதைந்துள்ளது என்பது புரியுமே! (திருப்பதி உண்டியல் முதல் பல இடங்களிலும் ரொக்கத்திற்குப் பதிலாக காசோலையாக (செக்)  மட்டுமே போட வேண்டும் என்ற ஒரு சிறு திருத்த அறிவிப்பை வெளியிட்டுப் பார்க்கலாமே - உடனே ஏழுமலை யானின் உண்டியல் வசூல் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைந்து விடுமே!)


திருமண அழைப்பிதழ்களே பற்பல திருமணங்களில் 100, 200 ரூபாய் (ஒரு அழைப்பிதழ்) ஆகும் அளவுக்கு புதுப்புது முறையில்...! சற்று நிதானமாக எண்ணிப் பாருங்கள். அந்த திருமண அழைப்பை - அந்த வீட்டாரைத் தவிர - வேறு யாராவது பாதுகாத்து வைக்கப் போகிறார்களா? இல்லையே! - குப்பைக் கூடைக்குத்தானே போகிறது? - இதன் பயன் என்ன? காதொடிந்த ஊசியளவுகூடக் கிடையாதே!


சில மண்டபங்களின் வாடகை மட்டும் 8 லட்ச ரூபாய் ஒரு நாள்  - இரு நாளுக்கு.


ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ் வொரு வகையான நிபந்தனைகள் வேறு!


அந்த மண்டபத்தை வாடகைக்கு எடுக்கும் திருமணம் நடத்துவோர் - உணவு தயாரித்தல், புரோகிதரை அமர்த்தல், மண்டப அலங்காரக்காரர், நாதசுர (நாயனம்) வாசிப்போர் அனைத்துமே மண்டபக்காரர் மூலமே ஏற்பாடு செய்யப் பட வேண்டுமாம்!

என்னே நெருங்கிய பாச உறவு பார்த்தீர்களா? அதன் ரகசியம் விளக்க வேண்டியதே இல்லை.


விருந்துகளின் ஆடம்பரங்களில் காலைச் சிற்றுண்டி - எத்தனை இனிப்பு வகைகள்! எவ்வளவு உணவு வகையறாக்கள்!  சிற்றுண்டிக்கென அவ்வளவும் அணி வகுத்து இலையில் வந்து குந்திக் கொள்ளுகின்றன!


பாதி பாதியாக இலைகளில் மிச்சம்! அப்படியே எடுத்து குப்பையில் கொட்டும் அழகுதான் என்னே!


உடனே ஒரு சில மணித்துளிகளில் மதிய தடபுடல் விருந்து - சுமார் 29 காய்கறி வகையறா!


இதற்கிடையில் சில்லறைக் கடைகள் போல் தனித்தனி வகைகள் பீடா வரையில்.

மாலையில் வரவேற்பு என்ற பெய ரால் மற்றொரு ஆடம்பர வெளிச்சம்! பிரபல பாடகர் பாடிடுவார்;  ஒரு சிலர் உட்கார்ந்து கேட்பவர்கள் தவிர, மற்றவர் வருவார் - போவார்! பாட்டு பாடுபவர் இயந்திரம்போல் பாடி, கடைசியில் பேசிய தொகையை வாங்குவதற்குப் பதிலாக முன்கூட்டியே மொத்த தொகையை வாங்கிய பின்னரே குழுவினரோடு வருவார்!

பழைய பஜனை மடங்களில் பாடுவோர் தேங்காய் மூடிக் கச்சேரிக் காரர்கள் என்று கேலி செய்வோர் உண்டு, இப்போது பணம் அதிகம்  - வருவாய் பெருகிடும். ஆனால், சுவைத்தோர் வெகு குறைவு - இதிலும் சலிக்காமல் பாடும் அவரது சகிப்புத் தன்மைக்காகத்தான் அவ்வளவு பணம் - பொறுமையின் சின்னமாயிற்றே! மாலை 6 மணி முதல் வரவேற்பு மண்டபத்தில் என்று அழைப்பிதழில் போட்டதை வைத்து உடனடியாக மணமக்கள் வரவேற்பில் கலந்து வாழ்த்தி விட்டு விடை பெறலாம் என்று திட்ட மிட்டு வந்த வருகையாளர்களுக்கு,  மிஞ்சுவது ஏமாற்றமே!


காரணம் பெண் பியூட்டி பார்லரி லிருந்து (Beauty Parlour) அழகு நிலையம் என்று நம்ம மொழியில் சொன்னால் அவ்வளவு அழகாக இருக்காது என்பதால் அப்படி  அழைக் கின்றனர் போலும்! மணமக்கள் சிங்காரித்து அலங்கார பொம்மையாக வருவதற்கு ஒரு மணி நேர கால தாமதம் ஆகும்! (இயற்கை அழகைக் கெடுத்து ஒப்பனை அலங்காரம்  என்ற அலங்கோலம்)


அழைப்பாளர்களில் அவசர கதியில் விடை பெறுவோர்- பெற்றோர் களையே வாழ்த்தி விட்டு திரும்பும் சந்தர்ப்பங்களும் பற்பல நேரங்களில் தவிர்க்க முடியாதவையே!


பசியேப்பக்காரர்களைக் காணாது; புளியேப்பக்காரர்கள் கூட்டத்தையே பார்க்கும் வண்ணம் அந்நாள் முழு வதும் அமையும்!

இது தேவையா?

வரதட்சணை என்ற பெயரால் மணமகனை விலைக்கு வாங்கும் விலை உயர்ந்த நிலை வேறு! - அந்த கணக்கு இதில் வராது.


ஒரு நாள் சில மணி நேரத்திற்கு இப்படியா? இந்த ஆடம்பரத் திருமணங்களைத் தடை செய்தால் அது ஒரு வகையான சமூக நீதிதான்!

இதற்காகவே மற்றொரு முறை இந்திரா காந்தியின் நெருக்கடி கால நிலை திரும்பவேண்டும் போலிருக்கிறது! எங்கள் நாட்டுக்கெந்தநாடு ஈடு?  - பாடுவோம்.

---------------- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி -”விடுதலை” 02-01-2015

40 comments:

தமிழ் ஓவியா said...

PK ( (பி.கே) - அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய தரைப்படம

சமீபத்தில் ‘PK’ (Film) என்ற இந்தி திரைபபடம் ஒனறு வெளியாகியுள்ளது. வேற்றுக் கரகத்திலிருந்து பூமிக்கு ஒருவர் வருகிறார். வந்த சிறிது நேரத்திலேயே அவரது ரிமோட் பறி போகிறது. அந்த ரிமோட் இல்லாமல் அவர் வந்து இறங்கிய செயற்கைகோளை திருமப வரவழைக்க முடியாது. அதனால் இப்பூமியில் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தான் கதையின் முழு சாராமசம்.

அபபோது கடவுள், மதம் பற்றிய சந்தேகங்களை பி.கே' என அழைக்கப்படும் அமீர்கான் எழுப்புவது, இன்றைய மதவாதிகளை திணறடிப்பது தான் படம் முழுக்க வரும் காட்சிகள்.

முஸ்லீம், இந்து, கிறித்துவர், சீக்கியர் என அவர்களது கலாச்சார ஆடைகளை அணியவைத்து, அவர்கள் ஒவ்வொருவரும் எந்தமதம் என கேள்வி கேட்கிறார். அந்தந்த ஆடைகளுக்குரிய மதத்தை மற்றவர் சொல்ல ஒவ்வொருவருடைய பெயரைக் சொல்ல வைக்கும் போது முஸ்லீம் உடை அணிந்தவர் இந்துப் பெயரையும் மற்றவர்களும் வெவ்வேறு மதம் சார்ந்த பெயர்களைச் சொன்னதும், ''இப்பொழுது சொல்லுங்கள் இவர்கள் எந்த மதம்?'' என்று கேள்வி கேட்டுவிட்டு, மீசை தாடியுடன் உள்ள ஒருவரை முதலில் சீக்கியர் என்றும், அவரது மீசையை மட்டும் எடுதது விட்டு, முஸ்லீம் என்றும், தாடியை எடுத்ததும் அவரை இந்து என்றும் சொல்லி விளக்கும் போது அரங்கமே கையொலயால் அதிர்கறது.

தன்னுடைய ரிமோட்டை கண்டு பிடிக்க ஒவ்வொருவரிடமும் விசாரிக்கும் போது ''கடவுள் தான் கண்டுபிடிக்க வேண்டும்'' என்ற பதில்களே அனை வரிடமிருந்து வந்ததால் கடவுள் எங்கே என்று படம் முழுக்க தேடுகிறார்.

அப்போது வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பலையை வரவழைப்பதோடு சிநதிக்கவும் வைக்கிறது.

''கடவுள் யாரென்று கேட்க'' சிவன் படத்தை ஒருவர் காட்ட அப்போது 'சிவன' வேடமணிந்த ஒரு கலைஞர் வரும்போது அவரைத் துரத்தி துரத்தி ஓடும்போது அரங்கமே சிரிப்பால் நிரம்புகிறது.

நிர்வாணமாக பீ.கே. ஆடை களை கைப்பறறுகிற காட்சிகள் நகைச் சுவை மட்டுமல்ல நாட்டில் நடக்கும் ஆபாசங்களை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

காதல் விசயத்தைக் கையாளும் போதும் கூட கதாநாயகி ஜகத்ஜனனி என்ற இந்து பெண்ணுக்கும், பாகிஸ் தானைச் சேர்ந்த சர்ஃபரோஸ் என்ற இளைஞனுக்குமான காதலைச் சித்தரிப் பதன் மூலம் மத நல்லிணக்கத்தையும் நாடுகளுக்கிடையேயான நல்லிணக்கத் தையும் வலியுறுத்த முயற்சி செய்துள்ள இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி நமது பாராட்டுக்குரியவர்.

கடவுளைக் காட்டுவதாக சவால் விடுத்த பிரபல சாமியாரான தபஸ்வி ஜிக்கும், பி.கே.க்கும் நடக்கும் உரை யாடலை நேரலையாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பும் இறுதிக்காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது., ஆனால் இறுதியில் ''கடவுள் இருக் கிறார். ஆனால் நீங்கள் சொல்லுகின்ற கடவுள் அல்ல அவர்'' என்று சொல்வது இயக்குநர் சமரசத்திற்கு வந்து விடுகிறார் என்ற ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது.

என்ன செய்ய? படம் சிக்கலில்லாமல் வெளியிடப்பட்டு ஓட வேண்டுமே என அவர் நினைத்திருப்பார்.

இப்படத்தில் அமீர்கானின் நடையும் ஓட்டமும் நடிகர் விக்ரமை நினைவுப்படுத்தினாலும் விக்ரம் அளவுக்கு முழுநிறைவு (ஜீமீக்ஷீயீமீநீவீஷீஸீ) இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் மதவாதிகளின் குறிப்பாக சாமியார்களின் பித்தலாட்டங்களையும், மக்களின் அறியாமையையும் தோலுரித்துக் காட்டுவதில் இப்படம் போல் இதுவரை எதுவும் வரவில்லையென்பது மட்டும் உண்மை. பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல மத நம்பிக்கையாளர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

- பொ. நடராசன் நீதிபதி (பணிநிறைவு), மதுரை.

Read more: http://viduthalai.in/page-2/93804.html#ixzz3NfDNNJzr

தமிழ் ஓவியா said...

பெரிய நன்மை

நீதி முறையையும், நீதி இலாகா வையும் திருத்தினால் புற்று நோய்க்கும், சயரோக நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தது போன்ற அவ்வளவு பெரிய நன்மை மனிதச் சமுதாய ஒழுக்கத்திற்கு ஏற்பட்டு விடும்.
(விடுதலை, 17.10.1969)

Read more: http://viduthalai.in/page-2/93795.html#ixzz3NfDf7nWw

தமிழ் ஓவியா said...

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தில் மூடநம்பிக்கை பற்றிய அறிவியல் பூர்வமான அலசல்


மதுரை, ஜன.2_ 14.12.2014 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடு தலை வாசகர் வட்டத் தின் 24 ஆவது சொற் பொழிவு 144, வடக்கு மாடவீதி (முருகானந்தம் பழக்கடையில் நடை பெற்றது). கூட்டத்திற்கு பொ.நடராசன் தலைமை தாங்கி விடுதலை இம்மாத சிந்தனைபற்றி உரை யாற்றுகையில் பீகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி கூறிய ஆரியர்கள் அன்னியர்களே என்ற கருத்தினை விளக்கிப் பேசினார். செல்லத்துரை வரவேற்புரை கூறினார். பெரியார் பேழை என்ற தலைப்பில் சடகோபன் பேசுகையில், மணியம் மையாரின் தியாகத் தொண்டினை பாரதி தாசன் கவிதை வரிகளில் விளக்கிப் பேசினார். சிறப்பு பேச்சாளரை அறி முகம் செய்து மா.பவுன் ராசா பேசினார். சிறப்புப் பேச்சாளர் பொ.தனராஜ் (தலைமை ஆசிரியர் பணி நிறைவு) பேசுகையில், தலையில் தேங்காய் உடைத்தல் எவ்வாறு மருத்துவ ரீதியாக பாதிப் பினை ஏற்படுத்துகிறது என்பதனை விளக்கினார்.

பாம்புக்கடி, நாய்க்கடி போன்ற விசயங்களில் மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகளை விளக்கிக் கூறி மருத்துவத்தால் எவ் வாறு குணப்படுத்துவது என்பதையும் தெளிவுப் படுத்தினார். காதலர் தினத்தை எதிர்க்கும் இந்துத்துவா வாதிகள் பற்றியும், முரு கன், சிவன், கிருஷ்ணன் இந்திரன் போன்ற கட வுளர்களின் காமலீலை களை நகைச்சுவையோடு எடுத்துக்காட்டி இவை பற்றி இந்துத்துவாவாதிகள் மவுனம் சாதிப்பது ஏன்? என்ற வினாவை எழுப் பினார். கும்பமேளாவில் நிர்வாண சாமியார்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், மும்பை சிவப்பு விளக்கு பகுதியி லிருந்தும், கல்கத்தாவிலி ருந்தும் விலைமாதர் பத் தாயிரம் பேர் காவி உடை யில் வரவழைக்கப்பட்டு சாமியார்களையும், பக்தர் களையும் சந்தோசப்படுத்தி வருவதை எந்த இந்துத்து வாவாதிகள் எதிர்த்தனர் என்ற கேள்வியையும் எழுப்பினார். அவரது பேச்சு சிரிப்பதற்கு மட்டு மின்றி சிந்திப்பதற்கும் ஒரு விருந்தாக அமைந்தது இறுதியில் விடுதலை வாச கர் வட்டச் செயலாளர் அ. முருகானந்தம் நன்றி கூறினார்

Read more: http://viduthalai.in/page-4/93773.html#ixzz3NfEzyo90

தமிழ் ஓவியா said...

சூறையாடப்படும் இயற்கை வளம்


முன்னாள் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மோடி அரசு சமூகத்தை மாத்திர மல்ல சுற்றுப்புறச்சூழலையும் கடுமையாக சீர்குலைக் கும் வகையில் முன்யோசனை ஏதுமில்லாமல் ஆபத் தான திட்டங்களை செய்து வருகிறது என்று கூறி யுள்ளார்.

முன்னாள் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் செய்திதொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், மோடி அரசு தனியார் முதலாளிகளுக்காக சுற்றுப்புறச்சூழல் சட்டத்தில் தேவையற்ற திருத்தங் களைக் கொண்டுவர முயல்கிறது.

வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்த சட்டங்களை திருத்த அமைத்துள்ள டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு பரிந்துரைத்த சட்டதிருத்தம் நடைமுறைப்படுத்தப் பட்டால், கடுமையான பின்விளைவுகளை எதிர்கால இந்தியா சந்திக்க நேரிடும், அக்குழுவால் பரிந்துரைக் கப்பட்ட சட்டத் திருத்தத்தில் பழங்குடியினரின் வாழ்வா தாரம் பற்றி குறிப்பிடப்படவில்லை, வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் பற்றி எந்த ஒரு புதிய சட்டமும் இயற்றப்படவில்லை, வனப்பாதுகாப்பு குறித்து எந்த ஒரு வரிகூட அந்தச் சட்ட திருத்தத்தில் கூறவில்லை. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழுவில் உள்ளவர்கள் முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள். வனப்பாதுகாப்பு குறித்தும் புவியியல் சூழல் குறித்தும் அவர்கள் முற்றிலும் அறியாதவர்களாக உள்ளனர்.

எல்லா சட்டத் திருத்தங்களும் நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு பல்வேறு அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அமைக்கப்படும். எடுத்துக் காட்டாக, போபால் நச்சுக்காற்று விபத்திற்குப் பிறகு நாடு முழுவதுமுள்ள பல்வேறு அறிஞர்களின் ஆலோசனை களைக் கேட்டு எதிர்காலத்தில் இது போன்ற கோரவிபத்துகள் நடக்காவண்ணம் புதிய சட்டங்கள் திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அதுபோல் வனப்பாதுகாப்பிற்கு நாடு முழுவதும் உள்ள வனப்பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைகளைக் கேட்டு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், மோடி அரசு சுற்றுப்புறச்சூழல் சட்டதிருத்தம் குறித்து வனப் பாதுகாப்பு மற்றும் புவியியல் அறிஞர் களிடம் எந்த ஒரு ஆலோசனையையும் பெறவில்லை. விரைவில் இந்தச்சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று உமாபாரதி அவர்கள் கூறியுள்ளார். எந்த விதியின் கீழ் இந்தச் சட்டங்கள் திருத்தப்படும் என்று அரசு தான் பதில் கூறவேண்டும். அப்படி இந்தச் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால், வனப்பாது காப்பு கேள்விக்குறியாகிவிடும். முதலாளிகளின் கண்மூடித்தனமான போக்கால் வனவளம் முழுவதும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் மூலம் எதிர் கால இந்தியா மிகவும் மோசமான சுற்றுப்புறச்சூழல் அபாயத்தைச் சந்திக்கும் என்று ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே உள்நாட்டு முதலாளிகள் கிராம மற்றும் வனப்பகுதி களில் புதிய தொழில் தொடங்க சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டம் பெருந்தடையாக உள்ளதாகவும், அந்தச்சட்டத்தை திருத்துவதன் மூலம் கிராமப்புறங்கள் பொருளாதாரத்தில் சிறந்துவிளங்கும் என்றும் கூறி னார்கள். இதனடிப்படையில் உடனடியாக முன்னாள் தேசியப் பாதுகாப்புச் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் வனப்பாதுகாப்பு குறித்து சம்பந்தமில் லாதவர்களும் முன்னாள் தொழில் துறை அதிகாரி களும் நியமிக்கப்பட்டனர்.

அப்போதே இந்தக் குழு குறித்து பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்தது. இவர்கள் பரிந்துரைத்த சட்ட திருத்தம் அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் முன் வைக் கப்படும் என்று மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது மோடி அரசின் ஒவ்வொரு நகர்வும் கார்ப்பரேட் டுகளின் ஏக போகத்திற்கான நடைப் பாவாடை விரிப்பாக இருக்கிறது.

இதன் விளைவு நாட்டை விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகள் சூறையாடலில்தான் முடியும். இதனைத் தடுத்து நிறுத்தும் சக்தி வெகு மக்களின் கிளர்ச்சியில் தான் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் தேவை விழிப்புணர்வே!

Read more: http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/93796-2015-01-02-10-58-34.html#ixzz3NfGoKy4C

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லை!


கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணி போன்றது.
- தந்தை பெரியார்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.
- பெர்னாட்சா

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை
- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை.
- குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்கு கேவலம் ஒரு புழுவை படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.
- ஒரு மேநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே
- வால்விச்மன்

Read more: http://viduthalai.in/e-paper/93827.html#ixzz3Nfk7t3NI

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார் பற்றி அண்ணா!


முதலில்லா வியாபாரம்! சோகமில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்கு குறை கிடையாது!

அரசு உரிமையை, அந்தப்புரத்தை அழகு மனைவியை, கொஞ்சும் குழவியை துறந்தார் புத்தர். அவர் துறவி இவர் (சங்கராச்சாரி) மடம். மட ஊழியர், மதியிழந்தோர் தரும்தனம் அத்தனத்தால் பெறு இன்பம் இவற்றிலே நீந்துகிறார். இவர் உபதேசிக்கவும் முன் வருகிறார். ஊராரும் கேட்கின்றனர்.

அதில் எந்த இடத்தில் தமிழகத்தில் அரசு போகத்தைத் துறந்த இளங்கோவடிகள் என்ன காதலையும் கரு தனத்தையும் துறந்த மேகலையென்ன மற்றும் வதிந்த இங்கு துறவிக்கோலமும் துரைமார் வாழ்வுக்கு மேற்பட்டதான வாழ்வும் பெற்றுள்ள ஆரியத் தலைவர் உபதேசம் சொல்கிறார்.

சங்கராச்சாரியார், சாற்றியபடி தாம் நடக்க முன்வர வேண்டும். உழைத்து வாழ ஊராரின் உபதேசகராக இராமல் பாடுபட முன்வர வேண்டும். மடத்தை விட வேண்டும். மாநிதி துறக்க வேண்டும். இதந்தேடல் கூடாது. இனத்தாரை வாழ வைக்கும் இயல்பினை நீக்க வேண்டும். மனிதராக வேண்டும். மனது மறுபிறவி எடுக்க வேண்டும்.

இவை அத்தனையும் அறிஞர் அண்ணா அவர்களால் திரு.மணியன் அய்யர் குறிப்பிடும் முதலமைச்சர் புகழும் காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றி படம் பிடிக்கப்பட்ட கருத்து சித்திரம்.

(ஆதாரம்: திராவிட நாடு - 19.4.42

Read more: http://viduthalai.in/e-paper/93828.html#ixzz3Nfku3ffn

தமிழ் ஓவியா said...

ருசியக் கதை!

முஷ்பிகி என்பவர் ஒரு மன்னரிடம் விகடகவியாக இருந்தார். அவரது விகடத்தைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னர். அவரை எப்படியாவது ஒழித்துக் கட்ட விரும்பினார்.

குளிர்காலம் வந்தது. அப்பொழுது ஆடைகள், காலணிகள் ஏதும் இன்றி முஷ்பிகியை பொக்காரோவில் உள்ள ஒரு கோபுரத்தில் இரவு முழுவதும் பூட்டி வைக்கும் படி மன்னர் உத்தரவிட்டார். இரவு முழுவதும் அங்கு கிடந்து பனியால் முஷ்பிகி இறந்து போவார் என்று மன்னர் நினைத்தார்.

ஆனால் கவிஞர் இறந்து விடவில்லை. அவர் இரவு முழுவதும் ஒரு கனமான கல்லைத் தூக்கிக் கொண்டு அந்தக் கோபுரத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். இதனால் அவர் உடலில் உஷ்ணம் இருந்து கொண்டே இருந்தது. காலையில் கவிஞர் உயிருடன் இருப்பதைக் கேட்டு மிகவும் வியப்படைந்த மன்னர், கவிஞரிடம் கேட்டார்:

முஸ்பிகி, இரவு முழுவதும் உமக்கு எப்படி குளிராமல் இருந்தது?

இரண்டு அல்லது மூன்று பர்லாங்குகளுக்கு அப்பால் இருந்த ஒரு சிறிய தீச்சுடர் தான் எனக்கு உஷ்ணம் தந்தது. நான் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தேன் என்றார் கவிஞர்.

ஓகோ அப்படியா! எனவே அந்த உஷ்ணத்தினால் உமக்கு வெது வெதுப்பாக இருந்தது போலும்! என்றார் மன்னர். பகுத்து அறிந்தால் எந்தவித சூழ்ச்சியையும் வெல்லலாம் என்பதற்கு அந்தக் கவிஞரின் புத்திக் கூர்மை ஓர் எடுத்துக்காட்டு.

- ரஷ்ய சிறுகதை

Read more: http://viduthalai.in/e-paper/93828.html#ixzz3Nfl5qfVg

தமிழ் ஓவியா said...

சாத்தாணியின் புரோகிதம்


நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலே தான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.

(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/93829.html#ixzz3NflSoGI2

தமிழ் ஓவியா said...

கடவுள் அப்பீல் தள்ளுபடி

கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன்.

எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/93829.html#ixzz3NflihIoE

தமிழ் ஓவியா said...

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் ஒத்திகை


சூரத், ஜன.2_ குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்த, தீவிரவாத தடுப்பு ஒத்திகையின்போது மாநில காவல் துறையினர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து காணொளி ஒன்றை தயாரித்திருந்தனர்.இதற்கு நாடு முழுவதும் தற்போது எதிர்ப்பு வலுத்துவருகிறது.

கடந்த மாதம் நர்மதா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாத ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டது. இதில் நடித்தவர்கள் தொழுகை நடத்துவது போன்றும், இஸ்லாமிய புனித நூலின் வாசகங்களை உச்சரிப்பவர்கள் போன்றும் நடித்தனர். அவர்கள் அனைவரது தலையில் தொழுகையின் போது அணியும் குல்லாய் இருந்தது. இது காவல்துறையின் ஒத்திகை தொடர்பானது; இதில் தவறு ஏதுமில்லை, அப்படி யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குஜராத் முதல்வர் கூறியிருந்தார். இந்த நிலையில் சூரத்தில் நடந்த ஒரு ஒத்திகையிலும் இதே போன்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அனைவரும் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் போன்றும் அவர்கள் அனைவரும் தொழுகை நடத்துவது போன்றும், அதில் சில சிறுவர்கள் இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. குஜராத் காவல் துறையின் இந்த மதவெறி தொடர்பாக நாடுமுழுவதும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93783.html#ixzz3Nfn7cfI2

தமிழ் ஓவியா said...

காஷ்மீர் பண்டிட்டுகள்மீது (பார்ப்பனர்கள்மீது) மோடி அரசின் அக்கறை



சிறீநகர், ஜன.2- காஷ்மீர் மாநிலத்தில் தலைநகர் சிறீநகர் அருகில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1000 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை அமைத்து, காஷ்மீர் பண்டிட்டு களுக்கு மத்திய அரசு வழங்க உள்ளது.

காஷ்மீரிலிருந்து வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைத்து பண்டிட்டுகளை அழைத் துக்கொடுத்து, மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புமாறு மத்திய அரசு வலியுறுத்திவருகிறது. மேற்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அகதிகளாக உள்ள 5,764 குடும்பத் தினர் வாக்குரிமை இன்றி உள்ளனர். கடந்த சட்ட மன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் களிலும் அவர்கள் வாக்களிக்கவில்லை. உள்துறையைச் சார்ந்த மூத்த அலுவலர் ஒருவர் கூறும்போது, உள்துறை யின் சார்பில் குடியுரிமை இல்லாமல் உள்ள அகதிகளுக்கு நிரந்தரக் குடி உரிமை வழங்குமாறு மாநில உள்துறைக்கு கடி தம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்மூலம் அடுத்தமுறை மாநிலத் தேர்தலில் அவர்கள் வாக்களிக்கவும், மாநிலத்தில் சொத்து களை வாங்கவும், மாநில அரசுப்பணிகளில் பணி வாய்ப்புகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும்.

ஜம்முவுக்கு அருகில் இரண்டு அறைகளுடன் கூடிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளதானது முதலில் காஷ்மீர் பண் டிட்டுகள் மாநிலத்துக்கு திரும்புவதற்கான ஏற்பா டாகவே இருக்கிறது. கட்டப்பட்டுவரும் அடுக் குமாடிக் குடியிருப்புகள் நல்ல தரத்துடன் ரூபாய் 40 இலட்சம் மதிப்பில் கட்டப்படுகின்றன.

தேசிய கட்டடக் கட்டுமானக் கழகத்தின் (என்பிசிசி) அங்கீகாரத் துடன் வடிவமைக்கப் பட்டு, என்பிசிசிமூலமே கட்டப்படுகின்றன என உள்துறையின் சார்பில் பேசிய அலுவலர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, மாத ஊதியம் ரூபாய் முப்பதாயிரத்திலி ருந்து பத்து இலட்சம் வரையிலும் உள்ள பணி களில் உள்ளவர்கள் விரும் பினால் தாங்களாகவே வீடுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் காஷ் மீர் பண்டிட்டுகள் மறு வாழ்வுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படியே சிறீ நகர் அருகில் உள்ள பகுதியில் ஒரேயடியாக ஆயிரம் குடியிருப்புகள் அமைக் கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சக அலுவலர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93788.html#ixzz3NfnGG0Sa

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தாத்தா பிறந்த நாள்:டிசம்பர் 2

அய்யாவுடன் முதல் சந்திப்பு

பெரியார் தாத்தாவுடன் சிறுவனாக ஆசிரியர் கி.வீரமணி

என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி. என் ஆசிரியர் அவர்கள் அவரிடம் டியுஷன் படித்த எல்லா மாணவர்களுக்கும் தமிழர் இனவுணர்வு, மொழி உணர்வைத் தூண்டி, குடிஅரசு, திராவிட நாடு வார இதழ்களை அவர் வரவழைத்துப் படித்ததோடு எங்களிடமும் தருவார்.

தமிழ்ப் பெயர் பெற்றேன்

மாணவத் தோழர்கள் பலரும் பெயர் மாற்றங்கள் செய்து கொண்டு அப்படியே அழைத்துக் கொண்டோம். அவர் சுப்பிரமணியம், திராவிடமணியானார். நான் சாரங்கபாணி, வீரமணி என்று அழைக்கப் பெற்றேன். அண்ணாவின் திராவிட நாடு ஏட்டில் வந்த கலிங்கராணியில் வீரமணி ஒரு பாத்திரம்! பாலவேலாயுதம் இளவழகன் ஆனார். ஜெய்சந்திரன் வெற்றித்திங்கள் ஆனார்! இப்படிப் பலப்பல! இப்படிக் கொள்கை உணர்வுடன் வளர்ந்த மாணவர்களை எங்கள் ஆசான் திராவிடமணி ஊக்கப்படுத்தினார்.

அரங்கேற்றம்

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏடு தொடங்கி நடத்திய அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள், திராவிட நாடு ஏட்டுக்குக் கழகத் தோழர்கள் நன்கொடை அளிக்க வேண்டுமென ஒரு வேண்டுகோள் கடிதத்தினை எழுதி, அவரே ரூபாய் நூறும், அச்சுயந்திரப் பொருட்களும் நன்கொடை அளித்திருப்பதையும் குறிப்பிட்ட கடிதம் அய்யா அவர்கள் கையெழுத்திலேயே முதற்பக்கத்தில் வெளிவந்தது.

அந்நிலையில் திராவிட நாடு ஏடு சிறப்பாகத் தொடர்ந்து வெளிவர இயக்கத் தோழர்கள் பல ஊர்களில் நிதி திரட்டி, பொதுக்கூட்டம் போட்டு அண்ணாவை அழைத்து நிதியளித்தனர். கடலூரில் இந்த ஏற்பாட்டினை திராவிடமணி முன்னின்று செய்தார். 112 ரூபாய் (நூற்றுப் பன்னிரெண்டு) பணமுடிப்பு (அப்போது அது பெருந்தொகைதான்) திரட்டிப் பொதுக்கூட்டத்தில் தந்தார். கடலூர் (O.T.) செட்டிக் கோவில் மைதானத்தில் 1943-இல் அப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அண்ணாவுக்கு முன் பூவாளூர் பொன்னம்பலனார் பேசினார். அன்று என்னை அந்த மேடையில் உள்ள மேஜையின் மீது ஏற்றி, என் ஆசிரியர் அரங்கேற்றம் செய்தார். பொதுமேடையில் நான் பேசியது. மனப்பாடம் செய்ததுதான் என்றாலும் தட்டுத் தடுமாற்றம் இன்றிப் பேசிக் கைத்தட்டல்கள் பலமுறை வாங்கினேன்.

* * *

அய்யாவைச் சந்தித்தேன்

1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி..

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்டத் திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இளவயதிலேயே என்னைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த என்னுடைய ஆசிரியர் திரு.ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது.

அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம். எப்போது விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது.

பொழுது விடிந்ததும் நண்பர் திரு.ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க என்னை அழைத்துப் போனார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம்.

அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்று அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்துப் பேசிய அண்ணா அவர்கள் என் பேச்சை வைத்தே தொடங்கினார்.

இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார். அய்யா அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி!

மதிய உணவு இடைவேளையில் என்னைப் பார்த்த அய்யா, அன்புடன், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அய்ந்தாம் வகுப்பு என்றேன். நன்றாகப் படி என்று தட்டிக் கொடுத்தார்கள்.

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி எழுதிய
அய்யாவின் அடிச்சுவட்டில் நூலிலிருந்து..

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தாத்தா பிறந்த நாள்:டிசம்பர் 2

அய்யாவுடன் முதல் சந்திப்பு

பெரியார் தாத்தாவுடன் சிறுவனாக ஆசிரியர் கி.வீரமணி

என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி. என் ஆசிரியர் அவர்கள் அவரிடம் டியுஷன் படித்த எல்லா மாணவர்களுக்கும் தமிழர் இனவுணர்வு, மொழி உணர்வைத் தூண்டி, குடிஅரசு, திராவிட நாடு வார இதழ்களை அவர் வரவழைத்துப் படித்ததோடு எங்களிடமும் தருவார்.

தமிழ்ப் பெயர் பெற்றேன்

மாணவத் தோழர்கள் பலரும் பெயர் மாற்றங்கள் செய்து கொண்டு அப்படியே அழைத்துக் கொண்டோம். அவர் சுப்பிரமணியம், திராவிடமணியானார். நான் சாரங்கபாணி, வீரமணி என்று அழைக்கப் பெற்றேன். அண்ணாவின் திராவிட நாடு ஏட்டில் வந்த கலிங்கராணியில் வீரமணி ஒரு பாத்திரம்! பாலவேலாயுதம் இளவழகன் ஆனார். ஜெய்சந்திரன் வெற்றித்திங்கள் ஆனார்! இப்படிப் பலப்பல! இப்படிக் கொள்கை உணர்வுடன் வளர்ந்த மாணவர்களை எங்கள் ஆசான் திராவிடமணி ஊக்கப்படுத்தினார்.

அரங்கேற்றம்

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏடு தொடங்கி நடத்திய அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள், திராவிட நாடு ஏட்டுக்குக் கழகத் தோழர்கள் நன்கொடை அளிக்க வேண்டுமென ஒரு வேண்டுகோள் கடிதத்தினை எழுதி, அவரே ரூபாய் நூறும், அச்சுயந்திரப் பொருட்களும் நன்கொடை அளித்திருப்பதையும் குறிப்பிட்ட கடிதம் அய்யா அவர்கள் கையெழுத்திலேயே முதற்பக்கத்தில் வெளிவந்தது.

அந்நிலையில் திராவிட நாடு ஏடு சிறப்பாகத் தொடர்ந்து வெளிவர இயக்கத் தோழர்கள் பல ஊர்களில் நிதி திரட்டி, பொதுக்கூட்டம் போட்டு அண்ணாவை அழைத்து நிதியளித்தனர். கடலூரில் இந்த ஏற்பாட்டினை திராவிடமணி முன்னின்று செய்தார். 112 ரூபாய் (நூற்றுப் பன்னிரெண்டு) பணமுடிப்பு (அப்போது அது பெருந்தொகைதான்) திரட்டிப் பொதுக்கூட்டத்தில் தந்தார். கடலூர் (O.T.) செட்டிக் கோவில் மைதானத்தில் 1943-இல் அப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அண்ணாவுக்கு முன் பூவாளூர் பொன்னம்பலனார் பேசினார். அன்று என்னை அந்த மேடையில் உள்ள மேஜையின் மீது ஏற்றி, என் ஆசிரியர் அரங்கேற்றம் செய்தார். பொதுமேடையில் நான் பேசியது. மனப்பாடம் செய்ததுதான் என்றாலும் தட்டுத் தடுமாற்றம் இன்றிப் பேசிக் கைத்தட்டல்கள் பலமுறை வாங்கினேன்.

* * *

அய்யாவைச் சந்தித்தேன்

1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி..

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்டத் திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இளவயதிலேயே என்னைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த என்னுடைய ஆசிரியர் திரு.ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது.

அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம். எப்போது விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது.

பொழுது விடிந்ததும் நண்பர் திரு.ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க என்னை அழைத்துப் போனார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம்.

அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்று அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்துப் பேசிய அண்ணா அவர்கள் என் பேச்சை வைத்தே தொடங்கினார்.

இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார். அய்யா அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி!

மதிய உணவு இடைவேளையில் என்னைப் பார்த்த அய்யா, அன்புடன், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அய்ந்தாம் வகுப்பு என்றேன். நன்றாகப் படி என்று தட்டிக் கொடுத்தார்கள்.

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி எழுதிய
அய்யாவின் அடிச்சுவட்டில் நூலிலிருந்து..

தமிழ் ஓவியா said...

பெற்றோர் அறிவுதான் பிள்ளையின் அறிவா?


அறிவு என்பது பிறப்பால் வருவது என்ற பித்தலாட்டத்தின் மூலம், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அறிவுச் சுரண்டல் செய்தது ஆரியப் பார்ப்பனர் கூட்டம்.

இன்று அறிவியலாளர், அதிமேதாவி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடியவர்கள்கூட பெற்றோர் அறிவு பிள்ளையின் அறிவைத் தீர்மானிக்கிறது என்று பிதற்றுகின்றனர்.

மரபணுக்கள் மதிநுட்பத்தைத் தீர்மானிக்கும் என்று அதற்கு அறிவியல் விளக்கம் அளிக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர்.

அப்பன் தொழில் பிள்ளைக்குச் சிறப்பாக வரும் என்று சங்கராச்சாரிகள்கூட ஓங்கி முழங்கி, குலக்கல்வியைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

இவையெல்லாம் உண்மையா? பெரியவர்கள் மட்டுமன்றி பிஞ்சுகளும் சிந்தித்து ஒரு தெளிவான முடிவுபெற வேண்டும். இல்லையென்றால் ஆதிக்கவாதிகளின் வஞ்சக வலையில் சிக்கிச் சீரழிய நேரும் என்பதால் இதுகுறித்து பிஞ்சுகள் விழிப்புப் பெற வேண்டியது கட்டாயம்.

பிறப்பு என்பது ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினை அணுவும் சேர்ந்து கருவாகி, உருவாகி, குழந்தையாகி, 10 மாத முதிர்ச்சியில் வெளிவரும் நிகழ்வு.

ஆக, ஒரு பிள்ளையின் பிறப்பில் தாய், தந்தை இரண்டு பேரின் பங்களிப்பும் உண்டு. மரபு என்று வரும்போது

தாயின் மரபில் தலைமுறைகள் உண்டு, தந்தை மரபாலும் தலைமுறைகள் உண்டு. ஒரு பிள்ளையின் உடல், நிறம், நலம், குணம் இவற்றைத் தீர்மானிப்பதில் அய்ந்தாறு தலைமுறைகளின் தாக்கம்கூட பிள்ளைக்கு வரும். இப்படியிருக்க பிள்ளையின் அறிவு பெற்றோருக்கு என்பது உண்மையன்று; சரியுமன்று!

உடல்நலம், உள்ள இயல்பு, உடல் அமைப்பு பரம்பரைத் தாக்கத்தால் அமையும். ஆனால், அறிவு என்பது அப்படி வருவதல்ல; அமைவதல்ல; தீர்மானிக்கப்படுவதல்ல.

அறிவு என்பது அனுபவத்தால், அறிவதால் வருவது. அதனால்தான் அறிவைப் பட்டறிவு என்றும் படிப்பறிவு என்றும் பகுத்தனர். பிறப்பறிவு என்று பிறப்பால் அறிவு அமையும் என்று எவரும் கண்டுணர்ந்து கூறியதில்லை; கூறுவது-மில்லை.

தமிழ் ஓவியா said...

ஒருவரது அறிவு என்பது அவரின் முயற்சியை _ பயிற்சியைப் பொறுத்தது. சுற்றுச்சூழலை, வாய்ப்பை, கற்பிப்போரை, பயிற்றுவிப்போரைப் பொறுத்தது.

நல்ல படித்த பெற்றோரின் பிள்ளைகள் கல்வியில் மிகவும் பின்தங்கி மண்டாக இருப்பதுண்டு; அறவே படிக்காத கைநாட்டுப் பேர்வழியின் பிள்ளைகள் சிறந்த கல்வியாளராக, ஆய்வாளராக மிளிர்வதும் உண்டு!

ஒருகாலத்தில் படிக்கவே கூடாது என்று கல்வி மறுக்கப்பட்ட ஜாதிகளில் பிறந்த பிள்ளைகள், இன்று கல்வியில் உயர்நிலையில் முதல் தரத்தில் சிறப்புற்றுத் திகழ்வதையும்; கல்விக்கே உரிய ஜாதி என்று சொல்லிக் கொண்ட பார்ப்பன ஜாதிப் பிள்ளைகள் பின்தங்கி நிற்பதையும் நடப்பில் நாளும் காணலாம்.

பள்ளி இறுதித் தேர்வு முடிவாயினும், மேல்நிலைத் தேர்வாயினும், பல்கலைக்கழகத் தேர்வுகளாயினும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிள்ளைகள் - படிக்காத பெற்றோரின் பிள்ளைகள் முதல் தரத்தில் முதல் நிலையில் முந்தி நிற்பதை, சிறந்து விளங்குவதைக் காணலாம்.

ஒட்டுமொத்தமாக, சமையலுக்காகவே பிறந்தவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்ணினம், இன்றைக்கு கல்வியில், அறிவில், அறிவியலில் உயர்ந்து, சிறந்து நிற்பதைக் காணலாம்.

ஒவ்வோராண்டும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே கல்வியிலும், தரத்திலும் உயர்ந்து நிற்கின்றனர். அதிக மதிப்பெண்ணை வாங்கிக் காட்டுகின்றனர்.

ஆக, பரம்பரையாகப் படிக்கப் பிறந்தவர்கள் என்று பட்டயம் கட்டிநின்ற பார்ப்பனப் பிள்ளைகளைப் பின்னுக்குத் தள்ளி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிள்ளைகள் கல்வியிலும், அறிவியலிலும், ஆற்றலிலும் முதலில் நிற்பதும்; அடுப்பூதவே தகுதியானவர்கள் என்று அடையாளப்-படுத்தப்பட்ட பெண்கள் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி கல்வி, அறிவு, அறிவியலில் முன்னிலையில் சாதிப்பதும் எதைக் காட்டுகின்றன?

அறிவை, பிறப்பு தீர்மானிப்பதில்லை என்பதைத்தானே?

அதேபோல் அறிவை ஆண்டவன் தீர்மானிக்கிறான் என்பதும்; அவன் பிறந்த கிரகம் தீர்மானிக்கிறது என்பதும் அடிமுட்டாள்தனமான கருத்துகள்.

இவற்றைப் பிஞ்சுகளுக்கு ஏன் சொல்ல வேண்டியுள்ளது என்றால், பிஞ்சுகளின் உள்ளத்தில் உண்மைக்கு மாறான மூடக் கருத்துகள் புகுத்தப்பட்டு, அவர்களின் ஆர்வம், துடிப்பு, முயற்சி இவை ஒடுக்கப்படக் கூடாது என்பதற்காகவும், பிஞ்சுகள் மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு விழிப்போடு நின்று,

நமக்கும் அறிவு உண்டு, ஆற்றல் உண்டு, தகுதியுண்டு, திறமையுண்டு என்பதை உறுதியாய் நம்பி, ஊக்கத்தோடு முயன்று ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.

அறிவு என்பது மண்ணில் கிடைக்கும் வைரம் போன்றது. அதை எந்த அளவிற்குத் தீட்டுகிறோமோ அந்த அளவிற்குக் கூர்மை பெறும்.

மூளை என்பது பிறப்பால் ஒன்றுதான். பட்டறிவாலும், கல்வியறிவாலும், பகுத்தறிவாலும் அறிவை வளர்த்து, விரிவாக்கி, கூர்மையாக்கி அறிவாற்றல் பெறுவது நம் கையில் என்பதை ஒவ்வொரு பிஞ்சும் நெஞ்சில் கொள்ள வேண்டும்.

பிறப்பால் அறிவு அமையாது. உழைப்பால் அறிவு அமையும்! அறிவை வளர்ப்போம்; ஆற்றல் பெறுவோம்! பிறப்பு பேதத்தை அறிவால் அகற்றுவோம்!

தமிழ் ஓவியா said...

காகத்திற்குத் தனியாகக் காதுகள் கிடையாது. கண்களுக்குப் பின்புறம் உள்ள சிறு துவாரமே கேட்கப் பயன்படுகிறது.

உயரமாகவும் வேகமாகவும் பறந்து செல்வன ஆர்ட்டிக் டர்ன் பறவைகள். ஒரே நேரத்தில் 1 முதல் 3 முட்டைகள் வரை இடும். ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா பகுதிக்குப் பறந்து செல்லும். (19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம்) ஒரே ஆண்டில் 2 கோடை காலத்தைப் பார்க்கின்ற பறவை இது. தன் வாழ்நாளில் பறக்கின்ற தூரத்தை நிலவுக்குச் சென்றுவரும் தூரத்துடன் ஒப்பிடலாம்.

புளோவர் என்ற பறவைக்கு முதலையின் பல் இடுக்குகளில் உள்ள பொருள்கள்தான் மிகவும் பிடிக்குமாம். முதலையின் வாய்க்குள் உட்கார்ந்து கொண்டு அங்குள்ள உணவுத் துணுக்குகளையும் சிறு புழுக்களையும் சாப்பிட்டு முதலையின் பற்களைச் சுத்தப்படுத்துமாம். இந்தப் பறவை சாப்பிடும்போது, முதலையானது சுகமாக வாயைத் திறந்து காட்டிக் கொண்டிருக்குமாம்.

வாழும் பறவை இனங்களில் மிகப் பெரியது நெருப்புக்கோழி. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடியது. இதன் முட்டையானது 1 கிலோ 350 கிராம் இருக்கும். நீர் அருந்தாமல் பல நாள்கள் வாழும். எதிரிகள் தாக்க வந்தால் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளும்.

நியூசிலாந்து நாட்டில் உள்ள கக்காபோ கிளிகளுக்குப் பறக்கத் தெரியாது.

மனிதர்களைப் போல் சிரிக்கக் கூடிய பறவை கூக்குபரா.

தையல் சிட்டு என்ற பறவை பெரிய இலை அல்லது இரண்டு மூன்று சிறிய இலைகளை எடுத்துக் கொள்ளும். இலையைச் சுருட்டி இரண்டு பக்கங்களிலும் துளையிட்டு நாரால் கூட்டினைக் கட்டிவிடும். பின்னர் அதில் நார், பஞ்சு போன்றவற்றை நிரப்பி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்.

எகிப்திய கழுகுக்கு மிகவும் பிடித்தமான உணவு நெருப்புக் கோழியின் முட்டைகள் ஆகும். கடினமான ஓட்டையுடைய முட்டையை அலகால் கொத்தி உடைக்க முடியாது என்பதால் பெரிய பெரிய கற்களை முட்டைமீது தூக்கிப் போட்டு உடைத்துச் சாப்பிடும்.

புளோவரைத் தவிர பிற பறவைகளை இரையாகச் சாப்பிட நினைக்கும் முதலை, தன்மீது குச்சிகளைப் பரப்பியபடி, அமைதியாக நீரில் காத்திருக்கும். கூடுகட்ட குச்சிகளைக் தேடிவரும் பறவைகள் குச்சிகளை எடுக்க அருகில் வந்ததும் பிடித்துச் சாப்பிட்டு-விடும்.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலேயர்கள் வியந்த ஆங்கிலப் புலமை


சட்ட மேதை என அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் ஆங்கில மொழியில் அதீதப் புலமை பெற்றிருந்தார். கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், உடன் பயின்ற உயர் ஜாதி மாணவர்கள் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட - புறந்தள்ளப்பட்ட அம்பேத்கரின் ஆங்கில அறிவு வளர அவரது தந்தை இராம்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்த இராம்சி அம்பேத்கருக்கும் சொல்லிக் கொடுத்து அறிவை வளர்த்தார். தந்தையிடம் பெற்ற பயிற்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் எழுதுவதிலும், மொழிபெயர்ப்பதிலும் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் பேசுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

படிப்பின்மீது மகனுக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்த தந்தை, புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அறிவாற்றலுக்குத் துணை நின்றார். தன் பெண்களிடம் கடன் வாங்கியோ அல்லது அவர்களது நகைகளை அடமானம் வைத்தோ புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். தான் படிப்பதற்குத் தந்தை செய்த தியாகங்களைப் பார்த்த அம்பேத்கர் தந்தையின் நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நூலறிவினை வளர்த்தார்.

* * *

பின்னாளில் மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியவர்களுள் பரோடா அரசின் மன்னரும் ஒருவர் ஆவார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். எனவே, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர் யாராவது கல்லூரியில் படிக்க முன்வந்தால் பொருளுதவி செய்வதாக கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

இதனைக் கேட்ட அம்பேத்கரின் நண்பர் கிருட்டினாசி பரோடா மன்னருக்கு அவர் பேசியதை நினைவுப்படுத்தி ஒரு கடிதம் எழுதினார். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த அம்பேத்கர், பரோடா மன்னரின் உதவியைப் பெற முழுவதும் தகுதி வாய்ந்தவர் என்பதையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைப் படித்த மன்னர் அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்தார். மன்னர் கேட்ட கேள்விகளுக்குச் சிறந்த முறையில் பதில் அளித்தார் அம்பேத்கர். மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்து ரூபாய் உதவித்தொகை வழங்கும்படி ஆணையிட்டார். அம்பேத்கர் படித்துத் தேர்ச்சி பெற்றார்.

1930ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு அம்பேத்கருக்குக் கிடைத்தது. அம்பேத்கரின் ஆங்கிலப் புலமை அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த பிரிட்டானியப் பேரரசின் தலைமையமைச்சர் இராம்சே மாக்டொனால்டு அம்பேத்கரைப் பாராட்டியுள்ளார். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளிலேயே அம்பேத்கருடைய பேச்சு மிகவும் அருமையானது என்று இண்டியன் டெய்லி மெயில் என்ற நாளிதழ் பாராட்டியுள்ளது.

புரவலர் வியந்த புலமை!

முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் அம்பேத்கரின் படிப்புக்கு உதவி செய்த பரோடா மன்னர் சாயாசிராவும் ஒருவர். அம்பேத்கரின் பேச்சைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார். தம்முடைய உதவியால் படித்தவர் தலைசிறந்த பேச்சாளராக இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைந்தார். தகுதி வாய்ந்த ஒருவருக்குத் தாம் உதவி செய்ததை நினைத்துப் பெருமை அடைந்ததுடன், அம்பேத்கருக்கு விருந்து வைத்துப் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...

ஆரோக்கிய உணவு


மாதுளம் பழம்

இமயமலை மற்றும் எகிப்து இடையேயான பிராந்தியப் பகுதியே மாதுளம் பழத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்தியா, பெர்சியா, மெசபடோமியா, துருக்கி மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் பண்டைக் காலத்திலிருந்து பயிரிடப்பட்டுள்ளது.

பண்டைய பாபிலோனிய நூல்கள் மற்றும் யாத்திராகமப் புத்தகத்தில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கலிபோர்னியாவின் ஸ்பானிஷ் குடியேற்ற மக்களால் 1769ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் புனிகா க்ரேனடம் (Punica Granatum) என்பதாகும். Plantae வகையினுள் Lythraceae குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.

மாதுளை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளில் கிடைக்கிறது. இனிப்புச் சுவையினையுடைய மாதுளை இதயத்திற்கும் மூளைக்கும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இருமலைக் குணப்படுத்தும். புளிப்புச் சுவையினையுடையது வயிற்றுக் கடுப்பினை நீக்கும்.

100 கிராம் மாதுளையில், 83 கலோரி ஆற்றலும், 18.7 கிராம் கார்போஹைட்ரேட்டும், 13.67 கிராம் சர்க்கரையும், 4 கிராம் நார்ச்சத்தும், 1.17 கிராம் கொழுப்பும், 1.67 கிராம் புரோட்டினும் உள்ளன. மேலும் வைட்டமின் B1, B2, B3, B5, B6, B9, கொலைன், வைட்டமின் சி, ஈ, கே, கால்சியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றன சிறிதளவும் அடங்கி உள்ளன.

உடலுக்குத் தீமை தரும் வைரஸ் கிருமிகளை அழித்துவிடும் ஆற்றல் மாதுளைக்கு உள்ளது. நோயின் பாதிப்பில் உடல் நலிந்து சோர்வடைந்தவர் தினமும் சாப்பிட வலிமை பெறலாம். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கும் அதிக வலிமை தரவல்லது.

மாதுளம் பழச் சாற்றினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் கட்டுப்படும், இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது என இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆன்டிஆக்சிடன் அதிகம் உள்ளது. இது அடர்த்தி குறைந்த லிப்போப்ரொட்டீன் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பினை தமனிகளின் சுவர்களில் படிவதைத் தடுக்கிறது.

அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிடு-பவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக் குறைவு என அமெரிக்கப் புற்று நோய் ஆராய்ச்சி சங்கத்தின் கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பேய்கள் செய்த படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தின பிசாசுகள்

யாருக்காக நான் அழ.....?
பாமியான் புத்தர் சிலையை
பீரங்கியால் பிளந்தவர்கள்
பள்ளிக் குழந்தைகளை
துப்பாக்கியால் துளைத்தார்கள்
இரண்டுமே இஸ்லாத்தின்
புனிதப் போரென்று
பெருமையும் தான் பட்டார்கள்.
பக்கத்து நாட்டினிலோ
பாபர் மசூதி இடித்து
பகை நஞ்சை விதைத்தவர்கள்
கொழுக்கட்டைப் பிள்ளையாரை
கொலைக் கருவி ஆக்கியவர்கள்
பெஷாவர் பிள்ளைகளுக்கு
அவசர அவசரமாய்
அஞ்சலி என்று சொன்னார்கள்
இந்தியாவை இடித்து
இந்துராஷ்டிரம் அமைப்பவர்கள்

அண்டை நாட்டின்
அல்லாவின் கொலைகளுக்கு
அனுதாபம் சொரிந்தார்கள்
பேய்கள் செய்த படுகொலைகளுக்கு
அஞ்சலி செலுத்தின பிசாசுகள்
சந்தடி சாக்கில்
வந்ததொரு அறிவிப்பு
இனி பகவத் கீதையே
இந்தியாவின் புனித நூலென்னும்
புத்தம் புது கண்டுபிடிப்பு
தயங்காமல் கொல்
தமையனையும் கொல்
எனும் உபதேசம் புனிதமென்றால்
எதற்கிந்த அஞ்சலிகள்?
ஏனிந்த நீலிக் கண்ணீர்?
எங்கிருந்து வந்தது உம் அனுதாபம்?
கீதை உபதேசித்ததை
குரான் செய்து முடித்திருக்கிறது?
பாராட்ட வேண்டாமா
எதற்காக கண்ணீர்?
கிறிஸ்துமஸ் விடுமுறையில்
குதூகலிக்கும்
குழந்தைகளை
கொண்டாட்டத்தை நிறுத்து
எம்அரசின் புகழ்பாடி
கட்டுரைகள் எழுதுஎன
கட்டளை இட்டவர்கள்
கொடுங்கோன்மை செய்பவர்கள்
குழந்தைகள் கொலைக்காக
சிந்துவது கண்ணீரா?
அனுஷ்டிப்பது அஞ்சலியா?
காட்டுவது அனுதாபமா?
அரசியல்! அரசியல்!!
எல்லாம் அரசியல்!!!
குழந்தைகள் கொலைகூட
கேவலமானது அரசியலால்.
பேய்கள் அரசாண்டால்
பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்றதுவும் இதைத் தானோ?
குரானின் ஜிகாத்தும்,
கண்ணனின் கீதையும்
ஏசுவின் பைபிளும்,
சீக்கியம்
இன்னுமுள்ள
ஏராள மதங்களும்
அவற்றால் ஆன பெரிய
புனித நூல்களும்
கொல், கொல், கொல்லென்றும்
கொல்வது மதக் கடமையென்றும்
எதிரியை மட்டுமல்ல
அவர் வீட்டுக் குழவியையும்
விட்டுவிடாமல் கொல்லென்றும்
உபதேசித்தும்
உருவேற்றியும்
சொல்லியும் செய்தும்
காட்டிய பின்னும்
இவையெல்லாம்
புனிதமென்றும்
போற்றத்தக்க
நூல்களென்றும்
மனிதனை மேம்படுத்தும்
தேவ வாக்கென்றும்
எதைக் கொண்டு
என் பிள்ளைக்கு
நான் சொல்ல?
துள்ளித் திரியும்
பிள்ளைகளைவிட
புனிதம் என்று
ஒன்றுண்டா
இந்த பூமியிலே?
அந்த புனிதங்களை
சுட்டுப் பொசுக்கிய,
பிணங்களாக்கிய
புல்லர்களை
பிள்ளைக் கறி சமைத்த மாபாதகரை
கண்டிக்க வார்த்தையுண்டா?
தண்டிக்கத்தான் வழியுண்டா?
கொலையை தடுக்காதமதமும்
குழந்தையை காக்காத கடவுளும்
மழலைக்கு மயங்காத மனிதனும்
இருந்தென்ன? இறந்தென்ன?
இதில்யாருக்காக நான் அழ?
குழவியைக் கொன்ற
மதத்தின் மரணத்துக்கா?
காக்க மறுத்த
கடவுளின் சாவுக்கா?
மழலையைக் கொன்ற
மனிதமிருகத்தின் மறைவுக்கா?
இல்லை இந்த மூன்றின்
கூட்டுக் கொலை வெறியால்
துள்ளத் துடிக்க
கொடூரமாய் மரணித்த
மழலைகளின் மறைவுக்கா?
காணாமல் போன அவர்தம்
கள்ளமில்லாச் சிரிப்புக்கா?

(முக நூலில் இருந்து: எல்.ஆர்.ஜெகதீசன்)

Read more: http://viduthalai.in/page3/93841.html#ixzz3NlOrCI8d

தமிழ் ஓவியா said...

இவர்களிடம் சேர்ந்தால்...

ஒரு மிஸ்ஸுடு கால் கொடுத்தால், நாங்க வருவோம். வந்து எங்க கட்சியில் சேர்ப்போம் சொல்லுது பாஜக. இவங்கள்கிட்ட சேர்ந்தால் என்ன ஆகும்னு பாருங்க.

மாட்டு மூத்திரத்தில் கோலா, சோப்பு விற்கிறது விசுவ ஹிந்து பரிசத்.

நந்தினி பியூட்டி சோப் இதில் மாட்டு அதுவும் பசு மாட்டு மூத்திரத்தையும் சேர்த்து செய்தது.

லால் தந்த் மஞ்சன்: பசு மாட்டு சாணியை சேர்த்து செய்தது.

ஹார்டி சுர்னா லக்சாடிவ்: மாட்டு மூத்திரம் சேர்த்து செய்தது.

நந்தினி தோல் கிரீம் மாட்டு மூத்திரம் சேர்த்து செய்தது.

நந்தினி தூப் ஸ்டிக்ஸ்: மாட்டு சாணியை சேர்த்து செய்தது.

அனேகமாக, பசு மாட்டு மூத்திரம் நம் தேசிய டானிக்காக விரைவில் ஒரு அமைச்சரால் அறிவிக்கப்படலாம்.

- Indiatimes.com

Read more: http://viduthalai.in/page5/93845.html#ixzz3NlRKyc9n

தமிழ் ஓவியா said...

மோடியின் வராணாசி எதில் முன்னேற்றம்?

மோடி வெற்றிபெற்ற தொகுதியான வாரணாசியில் கருப்பையில் வளரும் குழந்தையை ஆணா? பெண்ணா? என அடையாளம் கண்டு பெண் என்றால் உடனே கருவைக் கலைத்து விடுவதும், இயலாத பட்சத்தில் பிறந்த உடனே கொலை செய்யும் பாதகச்செயல் கடந்த 4 மாதங்களில் ஒரு பணம் பார்க்கும் தொழிலாகவே மாறியுள்ளது. பிரதமர் மோடி நவீன டெக்னாலஜி வளர்ச்சிதான் நாட்டை முன்னுக்குக் கொண்டு செல்லும் என்று கூறியதுமல் லாமல், முஸ்லீம் தலித்துகள் இல்லாத ஜெயபூர் என்ற ஊரை தத்து எடுத்து சாலை எல்லாம் போட்டு வருகிறார். மோடியின் தொகுதி என்பதால் அதிக அளவு வங்கிக் கடன் மற்றும் இறக்குமதி உபகரணங்கள் அளவுக்குமீறி கொடுக்கப் பட்டு வருகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாரணாசி பகுதியில் சிறிய பெரிய மருத் துவமனைகளில் அதிக அளவு கருவி லேயே பாலினம் அடையாளம் கண்டு பிடிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இவை எல்லாம் கருவில் வளரும் சிசுவிற்கு என்ன நோய் இருக் கிறது என்று கண்டறிய வாங்கியவை அல்ல, கருவில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? எனக் கண்டறிந்து பெண் என்றால் கருவைக் கலைக்கவும், இயலாத பட்சத்தில் பிறந்த மறுநிமிடமே கொலை செய்யவும் தான் பயன்படுத் தப்படுகின்றன. இந்தப் பாதகமான செயல் எப்படி வெளி உலகத்திற்கு தெரியவந்தது என்றால் கடந்த இரண்டு மாதங்களாக வாரணாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் பெண் குழந்தை களின் பிறப்பு விகிதம் முற்றிலும் இல்லாமல் போனது, இதை ரகசியமாக கண்காணித்த சில தொண்டு அமைப்புகள் நேரடியாக களத்தில் இறங்கினர். சிறிய பெரிய மருத்துவமனைகளில் வெளியே உடல் சிதைந்த பெண் சிசுக்கள் பல வேதி திரவங்கள் பூசப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது.

முக்கியமாக லகோதா சந்திரபூர் போன்ற ஊர்களில் உள்ள மருத்துமனை களின் வெளியே பல்வேறு கொலை செய் யப்பட்ட சிசுக்களின் உடல்கள் தொண்டு அமைப்பினரால தோண்டி எடுக்கப் பட்டது. தொண்டு அமைப்பின் புகாரை அடுத்து மாவட்ட மாஜிஸ்ட்ரேட் சதர் அன்கித் அகர்வால் தலைமையில் மருத் துவர்கள் மற்றும் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பல்வேறு மருத்து வமனைகளில் சோதனை நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான கருவில் வளரும் குழந்தை பாலின அடையாளம் காணும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் சரிவர இயங்காத பழுதடைந்த இயந்திரங்களாகும், மேலும் இவற்றை இயக்குபவர்கள் அனைவரும் சரிவர பயிற்சி பெறாதவர்கள் எனக் கண்டறியப்பட்டது.

முக்கியமாக சந்திரபூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட அரை டஜன் இயந்திரங்கள் முற்றிலும் பழுதடைந்த வைகளாக இருப்பது கண்டறியப்பட்டது. சிந்துகிரி பாக் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்திய போது அந்தகடையில் பல்வேறு அல்ட்ரா சவுண்ட் போர்டபில் மெஷின் (சிறிய வகைபாலினபரிசோதனை கருவி) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்தக் கடை நவீன உபகரணங்களை விற்க எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. நகரம் முழுவதும் தற்போது மாஜிஸ்ட்ரேட் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. இப்பாதகச் செயல் தொடர்பாக இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் குறித்து சிசுக் கொலைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர்ந்த தொண்டு அமைப்புகளை பத்திரிகையா ளர்கள் தொடர்பு கொண்டபோது அவர்கள் எதுவும் பேச மறுத்துவிட்டனர்.

(நவபாரத் - இந்தி இதழ் 13.12.2004)

Read more: http://viduthalai.in/page7/93847.html#ixzz3NlRwwPJl

தமிழ் ஓவியா said...

தகவல் களஞ்சியம்

தையல் எந்திரத்தைக் கண்டறிந் தவர் மெட்ரிக்சிங்கர் இவர் இதைக் கண்டறிந்த விதம் மிக சுவாரசியமானது. தையல் எந்திரத்தின் எல்லாப் பாகங் களையும் கண்டறிந்த சிங்கர், ஊசியை மட்டும் அதில் எவ்வாறு பொருத்துவது என்று ரொம்பவே யோசித்தாராம். பின்னர் படுக்கைக்கு சென்றதும் ஒரு கனவு கண்டார். காட்டுவாசிகள் கூட்டம் கையில் கூர்மையான ஈட்டிகளுடன் அவரைச்சுற்றி நின்று நடனம் ஆடு கிறது. அந்த ஈட்டிகளின் முனைகளில் துளைகள் இருந்ததை பார்த்துவிட்டார். உடனே சிங்கருக்கு பொறி தட்டியது. அதன் மூலம் தையல் எந்திரத்தில் ஊசியை பொருத்தி தீர்வு கண்டார்

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் டி.வி. அல்லது கணினித் திரையைப் பார்த்துக் கொண் டிருப்பவர்களுக்கு இதயநோய் ரிஸ்க் இரண்டு மடங்கு அதிகம்.

யானைகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தூங்குகின்றன. யானை ஒரே இடத்தில் தொடர்ந்து 8 மணி நேரம்கூட நிற்கும்.

(நூல்: அறிவியல் செய்திகள் களஞ்சியம்)

Read more: http://viduthalai.in/page7/93848.html#ixzz3NlS5Vutd

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வைகுண்ட ஏகாதசி

விரதங்களில் சிறந்தது வைகுண்ட ஏகாதசியாம்; இந்த விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய் யும் பலனைத் தருமாம். அஸ்வமேத யாகம் என் றால் என்ன? குதிரைகளை நெருப்பில் போட்டுப் பொசுக்குவது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/93859.html#ixzz3NlUcj3t0

தமிழ் ஓவியா said...

காலத்துக்கேற்ற...


காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனா வான். - (குடிஅரசு,26.1.1936)

Read more: http://viduthalai.in/page-2/93860.html#ixzz3NlUxNMG7

தமிழ் ஓவியா said...

மலேயா தமிழர்கள்


மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17 - 01 - 1932ல் அகில மலேயா தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண் டாற்றிவரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். அய்யாறு, தாமோதரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலான வர்கள் அம்மகாநாட்டில் அதிகமானப் பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள்.

அந்த மகா நாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக் கின்றன.

அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங்களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் அகில மலேயா தமிழர் மகாநாடு என்பதை அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு என்று மாற்ற வேண்டும் என்பதும் முக்கியமான தீர்மானங்களாகும்.

இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங்களைச் சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறையில் செய்ய வேண்டு மென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இத்தீர்மானங்களை யெல்லாம் நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர்களும் சீர்திருத்த ஆர்வமுடைய தோழர்களும் இவைகளை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார்களென்று நம்புகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 07.02.1932

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNQerAz

தமிழ் ஓவியா said...

உள்ளத் தூய்மை கொண்டோர் முகத்திலே கொடுமை சாயல் கொண்டி ராது. நல்ல பழக்க வழக்க முறைகள் கொண்ட நாட்டில் நல்ல நிலைமை யும், கெட்ட பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் கேடுகளும் நிலவும், அவரவர்களின் செய் கைகளுக் கேற்ப முகமும் உடலும் தோற்றமும் ஏற் படுகின்றன; அதற்கேற்றபடி பலனும் அடைகின்றனர்.
மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவன் அல்ல. மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவன் ஆவான். இம்சை செய் யாமல் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழத்தகும் அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால், அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி மனிதத் தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறிவிட்டது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNayHIb

தமிழ் ஓவியா said...

பூனைக்கும்? பாலுக்கும்?


இந்திய சட்டசபையில் மேன்மை தங்கிய வைசிராய் என்ன பிரசங்கம் செய்யப்போகிறார் என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் அனேகர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பிரசங்கமும் சென்ற 25 - 01 - 1932 தேதியில் வெளிவந்து விட்டது. அதில் குறிப்பிடத்தகுந்தபடி விஷயம் தற்கால சட்டமறுப்பைப் பற்றி ராஜப்பிரதிநிதி அவர்கள் சொல்லியிருக்கும் விஷயமேயாகும்.

மேன்மைதங்கிய ராஜபிரதிநிதியவர்கள் சண்டைக்கு இழுக்கப் பட்டால் எந்த அரசாங்கம் பின்வாங்கி நிற்கும்? என்று கேட்கும் கேள்வியும், சட்டமறுப்புக்கு விரோதமாக இப்பொழுது அமலில் உள்ள முறைகள் அவசியமாக இருக்கக் கூடிய வரையில் அவைகள் தளர்த்தப்படவே மாட்டா என்று கூறி இருப்பதும் மிகவும் கவனிக்கக் கூடிய விஷயமாகும்.

அதிலும் காங்கிரஸ் காரர்கள்பால் அனுதாபம் காட்டுவதன் மூலம் தேசாபிமானிகள் என்று காங்கிரஸ்காரர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றும், சட்டமறுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலைமையில் இருப்பதன் மூலம் அரசாங்கத்தார்க்கும் நல்லபிள்ளைகளாக இருக்க வேண்டுமென்றும் தடுமாறிக் கொண்டிருக்கின்ற கோழைத் தலைவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

அவசரப்பட்டு சட்டமறுப்பைத் தொடங்கியவர்கள் காங்கிரசின் குட்டித் தலைவர்களென்பது நாடறிந்த விஷயமாகும். ஆனால் திரு.காந்திக்கு இராஜப்பிரதிநிதி பேட்டி கொடுத்துப் பேசியிருந்தால் சட்டமறுப்பியக்கம் இவ்வளவு கஷ்டமான நிலைமைக்குப் போயிருக்காதெனவும், ஆகவே ராஜப்பிரதிநிதியவர்கள் திரு. காந்திய வர்களுக்குப் பேட்டியளிக்க மறுத்தது தவறு எனவும் இந்த நடுநிலைமைக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் இவ்வாறு சொல்லுவதிலும் ஒரு சிறிதும் அர்த்தமில்லை என்றுதான் நாம் சொல்லுகிறோம். உண்மையில் திரு. காந்தியவர்கள் சமாதானப் பிரியமுடையவராயிருந்தால் காங்கிரசின் சர்வாதிகாரி யாகிய தன்னுடைய அனுமதியும் இல்லாமல் குட்டித் தலைவர் களால் தொடங்கப்பட்ட சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு ராஜப்பிரதிநிதி அவர்களுடன் சமாதானம் பேச முன்வருவாரானால் அது நியாயமாக இருக்கும்.

அப்பொழுது ராஜப்பிரதிநிதியவர்கள் சமாதானம் பேச மறுத்திருந்தால் காங்கிரஸ் தன்னுடைய கொள்கைப்படி சட்டமறுப்பு ஆரம்பித்திருக்கலாம். அப்பொழுது இந்த நடுநிலைமைவாதிகள் கூறும் ராஜப்பிரதிநிதி காந்திக்குப் பேட்டியளிக்க மறுத்துவிட்டது தவறு என்று சொல்லுதவற்கு அர்த்தமிருக்க முடியும்.

இது நிற்க, சட்டமறுப்பியக்கத்தால் ஒரு காரியமும் நடக்கப் போவதில்லை என்பது நமது நேயர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமே ஒழிய வேறில்லை இதுவரையிலும் நடந்த சட்டமறுப்பினால் நமக்கு கிடைத்த பலன் என்ன என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இது விளங்காமல் போகாது, சட்ட மறுப்பு இல்லாமலிருந்தால், வட்டமேஜை மகாநாட்டுக் கமிட்டிகளின் வேலை இன்னும் திறமையாகவும், தாராளமாகவும், விரைவாகவும், நடந்து முடியக்கூடும்.

இப்பொழுது கொஞ்சம் சீர்பட்டிருக்கின்ற தொழில்களும், வியாபாரங்களும், விளைவுப் பொருள்களின் அக விலைகளும் இன்னும் கொஞ்சம் சீர்படக்கூடும். சட்டமறுப்பு நடை பெறுவதால் இவைகள் பாதகமடையக் கூடுமேயொழிய நமது நாட்டிற்கு வேறு கடுகளவு நன்மை கூட உண்டாகப் போவ தில்லையென்று ஆரம்பமுதல் கூறிவந்ததையே இப்பொழுதும் கூறுகிறோம்.

ஆகையால், சட்டமறுப்பு இயக்கத்தில் சிறிதும் நம்பிக்கையில்லா விட்டாலும் அது நாட்டுக்குத் தீமை விளைவிக்கும் பயனற்ற வழி என்று எண்ணிக் கொண்டிருந்தாலும், பாமர மக்களின் தூற்றுதலுக்கு பயந்து பேசாமலிருக்கும் ராஜீயவாதிகள் தமது கோழைத்தனத்தை விட்டுவிட்டு தைரியமாக சட்டமறுப்பை அடக்குவதற்கு உதவி செய்வதே சிறந்த காரியமாகும்.

சட்டமறுப்பு நின்றால் அவசர சட்டங்களும் நீக்கப்படும் என்னும் கருத்தைத் தெளிவாக இராஜப்பிரதிநிதியவர்கள் தமது பிரசங்கத்தில் கூறி யிருப்பதைக் கவனித்து ஆவன செய்வதே கடமையாகும். பூனைக்குத் தோழன் பாலுக்குக் காவல் என்று சொல்லிக் கொண்டு வாழுகின்ற சமயம் இதுவல்ல என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 31.01.1932

Read more: http://viduthalai.in/e-paper/93894.html#ixzz3NoOBoAlt

தமிழ் ஓவியா said...

ராமன்பற்றி...

அம்பேத்கர் எழுதிய புத்தகத்திலிருந்தும் ராமா யணம் பற்றிய கருத்துக் களிலிருந்தும் சிலவரிகள்...

English quotes are Quoted from: Appendix No.1 of Part 3 of the bookRiddles of Hinduism 1995 By Dr Baba saheb B.R.Ambedkar

1. ராமர் மற்றும் அவ ரது சகோதரர்கள் பிறப்பே சிறிது யோசிக்க வேண்டிய விசயம். முனிவர் கொடுத்த பிண்டங்களை சாப்பிட்ட தால் பிறந்தார் என்பது; சரி, அப்படியே முனிவர் கொடுத்த பிண்டத்திலி ருந்து வந்தவருக்கு தகப் பன் எப்படி தசரதனாக இருக்க முடியும்? மகா பாரத கர்ணன் சூர்ய குமாரன் என்றால் ராமர் முனிபுத்ரன் தானே?!

2. ராமாவதாரத்தில் அவருக்கு உதவ வான ரப்படைகளை தேவர்கள் விபசாரம் செய்தும், அடுத் தவர்கள் மனைவியைப் புணர்ந்தும் உருவாக்கி னார்கள்! ஒரு ஏகபத்தினி விரதனை உருவாக்க ஏகப்பட்ட பத்தினிகள் புணரப்பட்டனர்!

3. ராமனின் காமம் மற்றும் அவரது ஏகப்பட்ட பத்தினிகள்...

Mr. C.R. Sreenivasa lyengar's translation of Valmiki Ramayana says: " Though Rama had married Sita to be the queen, he married many other wives for sexual pleasure in accordance with the royal customs. (Ayodhya Kandam 8th Chapter, page 28). (The term "Rama's wives" has been used in many places in Ramayan).

4. தந்தையை கேவல மாகப் பேசிய தசரத ராமன்... Rama called his father "A FOOL, AN IDIOT" (Ayo dhya Kandam, 53rd Chapter).

5. வர்ணாசிரம வெறி யன் ராமன்... சூத்திரன் தவம் செய்தல் ஆகாது என்று ஒரு பாவமும் செய் யாத சம்புகனை கொன்ற பாதகன் ராமன்..

Sambuka was slain (by Rama) because he was making penance which was forbidden to him by Vedas as he was a "Shudra" (Uttara kan dam, Chapter 76).

இதுபோன்ற வினாக் களுக்கு விடைகளை எந்தக் கொம்பர்களும் கூறியதில்லை.

தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட இராமாயணப் பாத்தி ரங்கள் எனும் நூல் முதல் பதிப்பாக 1944இல் வெளி வந்துள்ளது. 15ஆம் பதிப்பு 2012இல் வெளியானது. பல லட்சக்கணக்கான நூல்கள் மக்களை சென்று அடைந் துள்ளன.

இந்நூல் ஆங்கிலத்தில் “Ramayana - A True Reading” என்ற பெயரிலும் இந்தியில் சச்சு இராமா யணா என்ற பெயரிலும் வெளி வந்துள்ளன.

இவற்றிற்கெல்லாம் ஒரு வரி மறுப்பை ஜீயர் முதல் சங்கராச்சாரியார் வரை பிரதிவாதி பயங்கரம் ஆசாமிகள் வரை யாரா லும் சொல்லப்பட முடிய வில்லை.

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதுதான் எத்தகைய உண்மை! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93902.html#ixzz3Nr1Ofo30

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

போட்டிக் கடைகளா?

வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி, சைவர்களுக்குச் சிவன் ராத்திரி இவை என்ன போட்டிக் கடைகளா?

Read more: http://viduthalai.in/e-paper/93908.html#ixzz3Nr25Z7ZP

தமிழ் ஓவியா said...

காந்தியார் படத்துடன் பீர் விளம்பரம்: ஆந்திராவில் வழக்கு பதிவு

புதுடில்லி, ஜன. 4_ அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் உல கம் முழுவதும் மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம் காந்தி பெயரில் ஒரு வகை பீர் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பீருக்கு பல நாடுகளில் வர வேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அமெ ரிக்க நிறுவனம் காந்தி பீர் டின்களை புதுமையான முறையில் வெளியிட்டுள் ளது. அந்த பீர் டின்னில் காந்தியார் படம் இடம் பெற்றுள்ளது.

மதுபான விற்பனைக்கு காந்திபடம் பயன்படுத்தப் பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தியார் படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் ஆந் திர மாநிலம் நம்பள்ளி நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொட ரப்பட்டுள்ளது. வழக்கு ரைஞர் ஜனார்த்தன கவுடா என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

அவர் தன் மனுவில், இந்தியாவில் விற்ப னையை அதிகரிக்க வேண் டும் என்பதற்காக அமெ ரிக்க மது நிறுவனம் இத் தகைய செயல்களில் ஈடு பட்டுள்ளது. அவர்களது செயல் கண்டனத்துக்குரி யது. பீர் டின்னில் காந்தி யார் படத்தை அச்சிட் டதற்காக தேச கவுரவச் சட்டம் 1971 பிரிவு 124 (ஏ)யின்படி அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.

காந்தியாரை இழிவு படுத்தி இருப்பதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாது.

இவ்வாறு அவர் தன் மனுவில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93907.html#ixzz3Nr37PVAq

தமிழ் ஓவியா said...

பிளாஸ்டிக் சர்ஜரி முதன் முதலில் செய்யப்பட்டது எப்பொழுது?


வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாகப் பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறையை இந்தியர்கள் பின்பற்றியதாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதற்காகவே வரலாற்று ஆய்வுக் கவுன்சில் குட்டு வைத்துள்ளது.வரலாற்று அறிஞர்கள், ஆர்வலர்கள் 10 ஆயிரத்தும் மேற் பட்டோர் அங்கம் வகிக்கும் வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் 80-ஆம் ஆண்டையொட்டி டில்லி, ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. படத்திலுள்ள வால்டர் என்பவருக்கு தான் முதன்முதலில் பிளாஸ்டிக் சர்ஜரி 1917ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இதற்கு முன்பு எவருக்கும் செய்யப்படவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/93953.html#ixzz3O0Ea81ms

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்டுவதில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? உ.பி. நவ்நிர்மான் சேனா கேள்வி


லக்னோ, ஜன.5- கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகாபஞ்சாயத்து நடை பெற்றது.

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு உ.பி.மாநிலம், மீரட் மாவட்டம் பிரம்மபுரி பகுதியில் சிலை அமைக் கப்படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப்படும் என அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச்சார்யா மதன் என்ப வர் அறிவித்திருந்தார். இங்குள்ள சாரதா சாலை யில் இந்த கோயி லுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்ட தாக செய்திகள் வெளி யாகின.

இதற்கிடையே, கோட் சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்த உத்தரப் பிரதேச மாநில நவ் நிர்மான் சேனா, இவ்விவ காரம் தொடர்பாக அனைத்து தரப்பு மக் களின் கருத்தினை கேட்கும் வகையில் 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகா பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தது. உத்தரப்பிர தேசம் மாநில நவ் நிர் மான் சேனா தலைவர் அமித் ஜானி தலைமை யில் நடைபெற்ற இந்த மகாபஞ்சாயத்தில் கோட் சேவுக்கு கோயில் கட்டு வதை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து, கோட்சேவுக்கு கோயில் கட்டுவது தொடர்பாக பிரதமரின் நிலைப்பாடு என்ன? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என அமித் ஜானி குறிப்பிட்டார். கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து வரும் 11ஆ-ம் தேதி மீரட் நகர் சாரதா சாலையில் உள்ள அகில பாரத இந்து மகாசபை அலுவல கத்தின் முன்னர் தொண் டர்களுடன் திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபடவும், பட்டினிப் போராட்டம் மேற்கொள் ளவும் முடிவு செய்துள்ள தாகவும் அவர் தெரி வித்தார்.

பின்னர், டில்லியில் உள்ள பிரதமரின் அலு வலகத்துக்கு சென்று இது தொடர்பாக மனு அளிப் போம். கோட்சேவுக்கு கோயில் கட்டும் விவ காரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக ஒரு பொது விளக்கம் அளிக் கும்படி பிரதமரை கேட் டுக் கொள்ளப் போவ தாகவும் அமித் ஜானி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93950.html#ixzz3O0ExWtjn

தமிழ் ஓவியா said...

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை

வாடத் தொடங்கிய தாமரை சத்தீஸ்கர் தேர்தலில் பிஜேபி படுதோல்வி!

பிஜேபியை தோற்கடித்து மேயரானார் திருநங்கை


ரெய்ப்பூர், ஜன.5- சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர் தலில் பாஜக தோல் வியைச் சந்தித்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முன்பு வென்ற பெருவாரி யான இடங்களில் பா.ஜ.க. வினர் வைப்புத்தொகை கூட பெற முடியவில்லை. மோடி அலையை நம்பி களமிறங்கியவர்களை மக்கள் அலை தோற் கடித்துவிட்டது.

முக்கியமாக சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய் யாவிட்டாலும் விதிகளை மீறி மத்திய அரசு மின் சாரம் மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்கான திட்டங் களை அறிவித்தது இதன் மூலம் தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணியது. 2009 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர் தலில் 154 இடங்களில் 139 இடங்களை பாஜக கைப்பற்றியது, காங்கிரஸ் வெறும் 10 இடங்களில் மாத்திரமே வெற்றி பெற முடிந்தது. இதர இடங் களில் சுயேட்சைகள் வென்றனர்.

இந்த்த் தேர்தலில் பாஜகவின் தோல்விமுகம் ஆரம்பமாகிவிட்டதைக் காட்டுகிறது தேர்தல் முடிவுகளில் மொத்த முள்ள 154 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க. 53 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க.விற்கு மிகவும் சொற்ப வாக்கு களே கிடைத்துள்ளன.

மாநகரத்தின் மேயரான திருநங்கை

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாநகர மேயராக சுயேட்சையாக போட்டி யிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றார். மது என்ற திருநங்கை தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான மஹாவீரை விட 4,537 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

தலித் வகுப்பைச் சேர்ந்த மது தேர்தல் வெற்றி பற்றிக் கூறுகை யில் மேயர் தேர்தலில் கோடிகளைக் கொட்டி பல்வேறு வகையில் பா.ஜ.க. வினர் பிரச்சாரம் செய் தனர். என்னிடம் தினசரி வரும் வருமானம் மாத் திரமே தேர்தலுக்கான செலவுகளை எனது நண்பர்களும் பொதுமக்களும் மேற்கொண்டனர்.

எந்த ஒரு தொழிலதிபரும் எனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை.

8 ஆம் வகுப்பு வரை மாத்திரம் படித்த மது தன்னைப் போன்ற பல்வேறு கைவிடப்பட்ட திருநங்கைகளுக்காக சுயதொழில் கூடம் ஒன்றை நடத்தி வரு கிறார்.

மேலும் அவர் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளையும் தத்து எடுத்து அவர்களையும் காப்பாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/93945.html#ixzz3O0F6B8Sx

தமிழ் ஓவியா said...

பச்சைப் பார்ப்பனத்தனம்
பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அரியானா மாநில அரசு முடிவாம்

சண்டிகார், ஜன.5_ ஹரியானா மாநில பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாம். பிரதமர் மோடி இந்தியா வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பகவத் கீதையைப் பரிசாக அளித்து வருகிறார். சமீ பத்தில் மத்திய வெளியுற வுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தி ருந்தார். இது நாடு முழு வதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குறிப் பிட்ட மதம் ஒன்றைச் சேர்ந்த நூல் ஒன்றை எப்படி தேசிய நூலாக அறிவிக்க முடியும் என சர்ச்சை வெடித்தது. அதற் குப் பதில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டது.

இந்நிலையில், அரியா னாவிலுள்ள பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு முதல் 12ஆ-ம் வகுப்பு வரை அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா கூறுகையில், 'அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையைப் பள்ளிகளில் பாடமாக சேர்க்க முடிவு செய்துள்ளோம். பகவத் கீதை வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை சொல் லிக் கொடுக்கிறது. மனஅ ழுத்தத்தை போக்கும் வழி களை கற்றுக் கொடுக் கிறது. கீதையை வயதான வர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஒதுக்கி விட முடியாது என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/93948.html#ixzz3O0FFHFbY

தமிழ் ஓவியா said...

தெரிந்த பிசாசுதான்!

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேலானது என்பதை கருத்தில் கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்று கூறி ராஜபக்சே யாழ்ப்பாணத் தமிழர்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

வரும் ஜனவரி 8-ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ராஜபக்சே மீண்டும் போட்டி யிடுகிறார். அவரை எதிர்த்து, அவரது அமைச் சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த இலங்கை சுதந்திரா கட்சி தலைவர் மைத்ரிபால சிறீசேனா பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டணி இலங்கை முஸ்லீம் அமைப்புகள் அனைத்தும் மைத்ரி சிறீசேனா விற்கு ஆதரவு தந்துள்ளன. முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கேயும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

சிங்கள பவுத்த மதத்துறவிகள் சங்கமும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்த நிலையில், பொது வேட்பாளர் மைத்ரிபால வெற்றி உறுதியாகிக்கொண்டு இருக்கிறது. ராஜபக்சே தோல்வி பயத்தால் வெளிறிப் போய் உள்ளதாகத் தெரிகிறது - அவர் பேச்சு இதனைத் தெளிவுபடுத்துகிறது.

தோல்வியின் அச்சத்தில் இருக்கும் ராஜபக்சே யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்தத் தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிடுகிற சிறீசேனா வடக்கு பகுதி மக்களுக்கு புதியவர். ஆனால் நான் நாட்டின் அதிபர் என்ற வகையில் உங்களுக்கு நிறைய செய்திருக்கிறேன். நான் உங்களுக்கு மின்சார வசதி செய்து தந்திருக்கிறேன்.

உங்களுக்கான பிற வசதிகளையும் மேம்படுத்தி இருக்கிறேன். தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேலானது என்றுபழமொழி கூறுவார்கள். அதை நினைவில் கொண்டு எனக்கு வாக்களியுங்கள்; இங்கே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி நடக்கிறது; அவர்கள் தங்களின் குடும்பங்களை மட்டுமே வளப்படுத்து கின்றனர்.உங்களுக்கு என்று அவர்கள் ஒன்றும் செய்யவில்லை, என்று கூறியுள்ளார்.

பொதுவாக பழமொழிகளைத் தவறாக பயன்படுத் துவது என்பது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு உத்தியாகவே தெரிகிறது, மோடியும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத் தில் பல தவறான தகவல்களைச் சொல்லி பத்திரிகை களில் பரபரப்பான செய்திகளாக இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மோடி செய்த அதே உத்தியை இலங்கையில் ராஜபக்சே செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில் ஊடகத்துறைப் பிரச்சாரத்துக்குத் தமக்குப் பெரும் துணையாக விருந்த அர்விந்த் குப்தா தலைமை யில் ஒரு குழுவை இலங்கை அதிபர் - தெரிந்த பிசாசான ராஜபக்சேவுக்கு உதவியாக அனுப்பி வைத்துள்ளார் என்பதிலிருந்தே இந்த இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்; ஒரே படகில் சவாரி செய்யும் சகஜோடிகள் என்பது சொல்லாமலே விளங்கும்.

தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை அறியாமலேயே தன்னை பிசாசுக்கு ஒப்பிட்டுக் கொண்டுள்ளார்.

பேய் என்றோ, பிசாசு என்றோ ஒன்றும் கிடையாது என்றாலும் நடைமுறையில் புழக்கத்தில் உள்ள இந்தச் சொல்லுக்குள்ள பொருளில் பார்த்தால் ராஜபக்சே ரத்தம் குடிக்கும் பிசாசுதான்.

செஞ்சோலையில் சிறு வயது செல்வங்களைக் குண்டு போட்டு அழிக்கவில்லையா?

பாதுகாப்பான இடம் என்று அரசு கூறிய இடத்தில் குவிந்த தமிழ் மக்களைக் கொடூரமாகக் கொத்துக் குண்டுகளை வீசி கொலை வெறியாட்டம் போடவில்லையா? வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களை யுத்த நெறி முறைகளுக்கு முரணாக துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கவில்லையா?

இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்லி ராஜபக்சே என்ற கொடிய பிசாசை அடையாளம் காட்டலாம்.

இந்தத் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்படவில்லை யானால், அந்தப் பிசாசுக்கு ஆயிரம் கொம்புகளும், கைகளும், கால்களும் முளைத்துத் தமிழின மக்களை மதங் கொண்ட யானையாகத் துவம்சம் செய்யும்.
இங்குள்ள மோடிகளும் சிறுபான்மையினருக்கு எதிராக மேலும் கொம்பு சீவிக் கொண்டு பாய்வார்கள் என்பதில் அய்யமில்லை.

அண்டை நாடுகள் இரண்டும் அபாயகரமான கும்மிருட்டில் சிக்கிக் கொண்டு தத்தளிக்கின்றன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/93955.html#ixzz3O0FPq0MK

தமிழ் ஓவியா said...

அறிவு பெற முடியாமல்....

தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கிறான். - (விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/93954.html#ixzz3O0FYtf3y

தமிழ் ஓவியா said...


ஒகேனக்கல் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட போர்வாள்!

நாம் இன்று பெற்றுள்ள உணவு, உடை, பேச்சு ஏன் மூச்சு சுதந்திரம் எவ்வளவு பெரியது என்பது நம் முன்னோர்கள் எதிர்கொண்ட அநீதிகளில் இருந்து புரிய வருகிறது. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டி ருந்தன. ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் பிரிக்கப்பட்டு, சிலர் மேல்மக்கள் என்றும் சிலர் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர் களுக்கு தான் மேற்கூறிய அடிப்படைத் தேவைகள் மறுப்பு. ஜாதி, மதம் என்பது தந்திரமாக கடவுளின் பெயரால் அடி களிட்டு பார்ப்பனர் வீட்டிற்கு போடப்பட்ட கதவுகள். இவை அவர்கள் அதிகார செல்வம் களவு போகாமல் காப்பதற்கு அழகாக உதவுகிறது. பெரியார், அம் பேத்கர் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டும் ஜாதியும், மதமும் முழுமையாக ஒழிந்து போகாததன் காரணம், அவை கடவுளின் பெயரால் சித்தரிக்கப்பட்டு மக்களின் மனதில் ஏற்படுத்திய பயமே ஆகும் அவை சட்டங்களோ, நீதியோ அல்ல. இந்த சாதியையும், மதத்தையும் நீதியாக்கு வதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பல.

அவற்றுள் முதலில் கூறபடுவது பிறப்பு! அதாவது பிரம்மன் தலையில் இருந்து பிராமணனும்,தோளில் இருந்து சத்ரியனும், தொடையில் இருந்து வைசியனும் காலில் இருந்து சூத்திரனும் பிறந்தான் என்பது. கடவுளே புனிதமுடையவர் என்று கூறும் போது அவர் கால் மட்டும் எப்படி தலையி லிருந்து தாழ்வான தாகிவிடும்? அப்படியே யென்றால் பிராமணன் மந்திரம் ஓதி போடும் பூக்கள் அனைத்தும் தலையிலே தானே விழ வேண்டும், ஏன் காலில் விழுகிறது. கடவுளே இருந்தாலும், என் பெயரால் இத்தனை வேறுபாடுகளா? என்று ரத்தக்கண்ணீர் சிந்தியிருப்பார். ஆனால்,அப்படி ஏதும் நடந்ததாக சரித்திரம் இல்லை. மனு என் பவன் பிராமணரின் நீதிபதி மற்றும் வக்கீல். இருபதவியையும் அவனே வகிக்கிறான். அவர்களுக்கு சாதகமான சட்டங்களை வகுத்து அவரே வாதாடுகிறார்.

அவர் வகுத்திருக்கும் நீதிகள் அனைத்தும் பிரா மணர் முன்னேற்றத்திற்கும் அதிகாரத்திற்கும் எளிதில் வழி வகுக்கிறது. இதில் உயர்நீதி (?) என்னவென்றால் பிராமணர்கள் கொலையே செய்தாலும் அவர்களின் தண்டனை மற்றவர்களை விட மிகமிக குறைவு தான். (தலையை மொட்டை அடித்தால் போதும்) பிராமணர்கள் இவ்வாறே தன் சொகுசு வீட்டிற்கு புகுவிழா, இல்லை இல்லை 'பிரவேசம்' செய்துள்ளனர். அந்த வீட்டின் கதவை உள் பூட்டிட்டு சாவியையும் விழுங்கிவிட்டனர். இப்போது கதவை உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை. வாருங்கள் இளைஞர்களே! கதவை உடைத் தால் மட்டும் போதுமா? இந்த வருணாசிரம கட்டடத்தையே தூள் தூளாக்க வேண்டும். இளைஞர்களாலேயே அது முடியும்.

ஆசிரியர் கடந்த 27, 28, 29.-12.-2014 ஆகிய மூன்று நாட்களில் ஒகேனக்கல்லில் நடந்த பயிற்சிப்பட்டறையில் பெற்ற பயிற்சி யின் விளைவாக எனக்குள் எழுந்த சிந் தனையை தங்களின் மேலான பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

(நான், க. அருள்மொழி - அனிதாதாரணி இணையரின் மகள். கல்லூரியில் முதலாண்டு படிக்கும் மாணவி)

- அ.ஓவியா, குடியாத்தம் -632602

Read more: http://viduthalai.in/page-2/93958.html#ixzz3O0GBwCyt

தமிழ் ஓவியா said...

வயிற்றுப்புண்ணும்... உண்மையும்...


நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் (வயிற்றுப் புண்) வரும் என்று சொல்வார்கள்; வயிற்றுப்புண் பெரும்பாலும் சரியான நேரத் திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர் களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாள்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப் போய் நாற்றம் எடுக்கும்.

சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரத்தை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாள்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் நஞ்சாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப் பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்). இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியும்.

நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் தவறு. பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும் போதுதான் அல்சரே வருகிறது. பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக் கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. சரியான நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்தவிதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது.

உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டு கின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல் படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்றால் அல்சர் புண் வந்துவிடும் என்பதும் தவறு. நீங்கள் பசிக்காமல் மூன்று வேளையும் சாப்பிடும்போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது.

நாள்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப்போன உணவு நஞ்சாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி நஞ்சாக மாறுகிறதோ.... அப்படி நஞ்சாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது. செரிமானம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, செரிமானத்திற்கு அங்கு ஒன்றுமே இல்லாதபோது அல்சர் வராது.

சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம். அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடலில் ஆண்டுக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் தொடு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!

Read more: http://viduthalai.in/page-7/93986.html#ixzz3O0I3DndL

தமிழ் ஓவியா said...

குளிர்காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்க!


வெயில் காலத்தைவிட பனி காலங்களில் நமக்கு அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு காது, மூக்கு, தொண்டை பகுதிகளைத்தான் பனி தாக்குவ தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சுத் திணறல், சளி என பிரச்சினைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறவும் வாய்ப்புள்ளது. பின்னர் அது மூக்கடைப்பு, காதுவலி போன்ற நோய்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும். குளிரால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காய்ச்சல் மற்றும் குளிர்கால பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில இயற்கை மருத்துவ வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

1. பனிகாலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்கவைத்து அருந்தினால் தொண்டைவலி, மூக்கடைப்பு, காதுவலி, சளி போன்ற நோய்கள் நம்மை அண்டாது.

2. குளிருக்கு இதமாக கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்து அருந்தலாம். அல்லது 2 வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பச்சையாக சாப்பிட்டாலும் உடலில் குளிரின் தாக்கம் ஏற்படாது.

3. குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். சிலருக்கு தோலில் வெள்ளை படர் அல்லது தோல் சுருக்கம் ஏற்படும். எனவே, அதைத் தடுக்க குளிக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம். தோல் பாதுகாக்கப்படும். தோல் வறட்சியும் நீங்கும்.

4. பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்புகளை பயன் படுத்துவதைவிட கடலை மாவு, பயத்தம் பருப்பு மாவு ஆகியற்றை தேய்த்து குளிக்கலாம்.

தமிழ் ஓவியா said...


5. தொண்டைவலி, வறட்டு இருமலுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் ஒரு சிறுதுண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப்பொடி போட்டு சற்று ஆறியதும் அதை உருட்டி வாயில் போட்டுக்கொண்டால் இதமாக இருக்கும். வறட்டு இருமலும் அடங்கும்.

6. மூக்கு, தொண்டை, காதுகளில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, காலில் பாத வெடிப்புகள் வேறு ஏற்படும். பாதவெடிப்புக்கு பயப்படவே தேவையில்லை. சிறிதளவு விளக்கெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயை சம விகிதத்தில் கலந்து, அதில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு குழைத்து, பேஸ்ட் போல் செய்து, அதை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகிவிடும்.

7. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது உகந்தது.

குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு வகைகள்

1. பனி காலங்களில் எண்ணெய்கள் மூலம் செய்யப்பட்ட பலகார வகைகளை அறவே ஒதுக்கிவிடவேண்டும். காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி, பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.

2. பழங்களில் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களைச் சாப்பிடவேண்டும். புளிப்புச்சுவை நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழவகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது. வெயில் காலங்களில் நம் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும் இப்பழங்கள் குளிர்காலங்களில் ஒத்துக்கொள்ளாது. விரிவாக கூறினால், வெயில் காலங்களில் நமக்கு அதிகம் வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக நாம் புளிப்புச் சுவைமிக்க பழங்கள், மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வோம். ஆனால், குளிர்காலத்தில் இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலில் அதிக அளவு அமிலச்சத்து சேர்ந்து சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். பழங்களில் பச்சை திராட்சையும், பச்சை வாழைப்பழத்தையும் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

3. முக்கியமாக இந்தப் பனிக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். சுண்டல் வகைகள், முளைக்கட்டிய தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சமையலில் மிளகு கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

4. ஒரு நாளில் 2 வேளை உணவில் இரும்புச்சத்து நிறைந்த காய், கீரை, பழ வகைகள் எடுத்துக்கொள்ளலாம். முருங்கை, பேரீட்சை, திராட்சை உள்ளிட்டவற்றையும் சாப்பிடலாம். பழரசங்கள், இளநீர், தர்ப்பூசணி, அய்ஸ் கிரீம்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை அறவே தவிர்த்தல் நல்லது.

5. ஊட்டச்சத்துகள் முகுந்த பசலைக்கீரை, வேர்க்கடலை, கேரட், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். குறிப்பாக கோழி சூப் குளிருக்கு ஏற்ற இதமான ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.

6. நீர்ச்சத்து நிறைந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
மேலும் நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/93984.html#ixzz3O0IBhbHU