Search This Blog

11.1.15

கீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை அது பார்ப்பனர்களுக்கான நூல்

கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா?


கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா?
சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி



சென்னை, ஜன. 5- கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களே, எழுச்சித் தமிழர் நண்பர் தொல்.திருமாவளவன் அவர்களே, பேராசிரியர், நண்பர் அருணன் அவர்களே, கவிஞர் கலிபூங்குன்றன் அவர் களே, அரங்கில் அமர்ந்திருக்கின்ற பல்துறை சான்றோர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணனின் விளையாட்டுகளையும், தேசிய விளையாட்டுகளாக அறிவித்தால்...

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் சொன்னதற்குப் பிறகு, அதே வேகத்தில் கிருஷ்ணனின் விளையாட்டுகளை யும், தேசிய விளையாட்டுகளாக அவர்கள் அறிவித்துவிடுவ தற்கு முன்பு, ஒரு வேளை அப்படி அறிவித்தால், அவர்கள் கட்சியில் உள்ள பெண்களே ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை; அந்தச் சாமியார் பெண்கள் உள்பட.

எனவே, அதற்கு முன்பாக, உடனடியாக செயலில் இறங்கிவிடவேண்டும் என்கிற அடிப்படையில் இந்தக் கூட்டத்தை, இது சரியான கூட்டம் என்பதைவிட, சரியான நேரத்தில் கூட்டப்பட்டிருக்கின்ற, எப்பொழுதும்போல பெரியார் திடலிலிருந்து தொடங்குகிற இந்த முதல் பயணத்தில் கலந்துகொள்கின்ற நல்ல வாய்ப்பினை நானும் பெற்றமைக்காக மகிழ்கிறேன்.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய் தியை, ஒவ்வொரு விதமான விவாதத்தை அவர்கள் கிளப் பிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு இன்னொருவித மான உள்நோக்கம் இருக்கக் கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றைக்கு நான் இந்த அரங்கிற்கு வருவதற்கு முன்புகூட, நாடாளுமன்றத்தில் சாக்ஷி மகராஜ் என்கிற பாரதிய ஜனதா கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர், காந்தியார் எப்படி தேசப் பற்று உடையவரோ, அதுபோல, கோட்சேயும் தேசப்பற்று உடையவர் என்று சொல்லி, பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் என்பது செய்தி.

காந்தியாரின் தேசப்பற்று அப்படிப்பட்டதா? என்கிற அய்யம் வருகிறது

ஒவ்வொரு செய்தியையும் சொல்லுவது, பிறகு திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதை, ஏறத்தாழ இந்த இரண்டு, மூன்று வாரங்களாக அவர்கள் ஒரு வழக்கமாக வைத்திருக் கிறார்கள். நமக்கே இப்பொழுதுதான் தெரிகிறது, காந்தியா ரின் தேசப்பற்று அப்படிப்பட்டதா? என்கிற ஒரு பெரிய அய்யம் வருகிறது.

காந்தியாரின் தேசப்பற்றும், கோட்சேயின் தேசப்பற்றும் ஏறத்தாழ ஒரே மாதிரியானதுதான் என்று, நாடாளுமன்றத் தில் சொல்கின்ற அளவிற்கு அவர்கள் இன்றைக்கு வந்திருக்கிறார்கள்.

அதேபோல, ஒவ்வொரு வாரமும், ஒன்று சமஸ்கிருத வாரம், அதற்குப் பிறகு நிரஞ்சன் ஜோதி வாரம், பிறகு அமித்ஷா வாரம், பகவத் கீதை வாரம் என்று தொலைக் காட்சியில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நடிகரின் படத்தைப் போடுவார்களோ அதுபோல, இவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படத்தை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது கீதையின் வாரம்.

5151 ஆம் ஆண்டு விழாவாம்!

இன்றைக்கு அவர்கள் கொண்டு வந்துகொடுத்திருக் கின்ற அந்த செய்தி, அதுவும் எந்த இடத்தில் அது சொல்லப்பட்டிருக்கின்றது என்பது ஒரு முக்கியமான செய்தி. டில்லியில் கொண்டாடப்பட்ட, நீங்கள் கவனமாக கவனிக்கவேண்டும், கீதை எழுதப்பட்ட 5151 ஆம் ஆண்டு விழாவில்.
வரலாற்றுக்கு எந்தவிதமான சான்றுகளும் தேவையில் லையா? வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லுவதெல்லாம் வரலாறா? வரலாற்றுப் பேராசிரியர் அய்யா ராமசாமி அவர்கள் எல்லாம் எதிரில் அமர்ந்திருக்கிறார்கள். இப்படி யொரு நகைச்சுவையை அவர்கள் படித்திருக்க முடியாது.

கீதையின் வயது 5151 என்று சொல்லுகிற, எந்தச் சான்றும் தேவையில்லாமல், அதற்கு ஒரு விழாவை டில்லியில் எடுக் கின்ற, அவ்விழாவில், இந்திய அமைச்சர்கள் கலந்துகொள் கின்ற நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதில், இந்தியாவினு டைய அமைச்சர் கலந்துகொள்கின்றபொழுது, கீதையின் வயது 5151, அதற்கு மேற்பட்டது என்பதாக, ஒரு பொய், ஒரு புனைவு வரலாற்று ரீதியாக உண்மையாக ஆக்கப்படுகின்ற முயற்சி வெளிப்படையாகத் தெரிகிறது.

கீதை என்பது ஒரு இடைச்செருகல் நூல் என்றார் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் அவர்கள், பல்வேறுவிதமான ஆதாரங்களோடு மிகச் சரியாக, இந்த ஆண்டிலேதான் கீதை இடைச்செருகலாக மகாபாரதத்தில் கொண்டுவந்து திணிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதைக் காட்டுவார். அம்பேத்கர் அவர்கள் காட்டுகின்ற காலம், பால ஆதித்த குப்தனுடைய காலம். அது ஏறத்தாழ கி.பி.500 அல்லது கி.பி.400 இல் வரவேண்டும். பால ஆதித்த குப்தன் காலத்தில் தான், கீதை என்கிற ஒரு நூல் ஒரு இடைச்செருகலாக, பவுத் தத்தினுடைய எழுச்சிக்குப் பிறகு, இங்கே ஜாதிகளினுடைய அந்த இறுக்கம் தளர்ந்து, ஜாதிகளுக்கு எதிரான ஓர் உணர்வு ஏற்பட்ட நேரத்தில், மறுபடியும் ஜாதிகளின் இறுக்கத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நூல்தான் பகவத் கீதை. இதனை அம்பேத்கர் அவர்கள் மிகச் சரியாக ஆய்வு செய்து சொல்லியிருக்கின்ற காலம், இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய பாடப் புத்தகங்களில் எல்லாம், குப்தர்கள் காலம் பொற்காலம்; நிறுவுக! என்றுதான் கேள்வி கேட்பார்கள்.
பொற்காலம் யாருக்கு? அவாளுக்கு - இந்தியாவிற்கு அல்ல!

அதாவது விடையை அவர்கள் சொல்லிவிட்டு, அதனை நிறுவுவதற்கு நாம் வரவேண்டும். குப்தர்கள் காலம் எப்படிப்பட்டது? என்பது கேள்வி அல்ல. குப்தர் களின் காலம் பொற்காலம், உண்மைதான் குப்தர்களின் காலம் பொற்காலம், ஒரு கேள்வி விடுபட்டு போய்விட்டது. யாருக்கு? என்கிற கேள்வி. குப்தர்களின் காலம் பொற்காலம்; அவாளுக்குப் பொற்காலம்; இந்தியாவிற்கு அல்ல.
எனவே, அவாளின் பொற்காலத்திலேயே திணிக்கப் பட்ட, இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட ஒரு நூல்தான் பகவத் கீதை. 1400, 1500 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம்.

டாக்டர் கோசாம்பி அவர்கள், தன்னுடைய வரலாற்று நூலில் எழுதுகின்ற பொழுது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சொல்கிறார். அப்படிப் பார்த்தால், 1700.

வேண்டாம், டி.ஜி.திலகரும், டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன் - கீதையைப்பற்றி மிக அதிகமான நூல்களை எழுதி இருக்கின்றவர்கள் நான் நினைக்கிறேன், ஒன்று டாக்டர் இராதாகிருஷ்ணன், இன்னொன்று நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள். இவர்கள் இரண்டு பேரும்தான்.
அண்மையில், ஒரு நாளேட்டில் ஒன்றினை எழுதியிருந் தார்கள்; கீதையைக் காப்பாற்றுங்கள் என்று. அவர்கள் எழுதியிருந்ததன் நோக்கம், இன்றைக்கு இந்த மேடையில் நமக்குப் புரிகிறது. அவர்கள் கீதையை தேசிய நூலாக ஆக்கக் கூடாது என்கிற நோக்கில், அந்தத் தலையங்கம் இல்லை.
ஏன் சும்மா இருக்கின்ற கீதையை, இப்படிச் சொல்லி, ஆளுக்கு ஆள் திட்டுவதற்கு ஒரு ஏற்பாடு செய்கிறீர்களே, என்பதுதான் அந்தத் தலையங்கத்தினுடைய அடிப்படை.

பாரதீய ஜனதாவிற்கு நாம் நன்றி சொல்லவேண்டும்!

நீங்கள் பார்த்தால், ஒரு 10 நாள்களுக்கு முன்புகூட, கீதையின் மறுபக்கம் நூல் இந்த அளவிற்கு விற்பனை யாகுமா என்பது தெரியாது. கீதையின் மறுபக்கம் நூலை இந்த அளவிற்கு விற்பனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கள். அதுமட்டுமல்ல, நான் மேடையில் பார்க்கிறேன், தோழர் தா.பாண்டியன் அவர்களோடு எல்லாம் நீண்ட நெடுநாள்களுக்குப் பிறகு அவரோடு சேர்ந்து மேடையில் பேசுகின்ற வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக நாம் பாரதீய ஜனதாவிற்கு நன்றி சொல்லவேண்டும் அல்லவா!

ஏண்டா, பிரிந்து கிடக்கிறீர்கள்; கறுப்புச் சட்டையும், சிவப்புச் சட்டையும், நீலச் சட்டையும் இனிமேலும் இந்த நாட்டில் பிரிந்திருக்கக் கூடாது என்பதை, பாரதீய ஜனதா கட்சி மறைமுகமாக நமக்கு உணர்த்தியிருக்கிறது என்பதை இந்த மேடையிலேயே நான் பார்க்கிறேன்.

எனவேதான், கீதையைக் காப்பாற்றுங்கள்! என்று அந்தத் தலைப்பு; தேசிய நூல் என்றெல்லாம் சொல்லி, இதுவரைக் கும், பொதுவாக அறிவுக்களஞ்சியம், பொதுக்களஞ்சியம் என்றெல்லாம் புரூடா விட்டுக் கொண்டிருந்ததற்கு மாறாக, அது அறிவுக்களஞ்சியம் அல்ல; அது எப்படிப்பட்ட நூல் என்பதை, ஆளாளுக்குப் பேசுவதற்கு ஒரு ஏற்பாடு செய்து விட்டீர்களே, என்கிற கவலையில், கீதையைக் காப்பாற்றுங் கள் என்று ஒரு தலையங்கத்தை நான் பார்த்தேன்.

சுப.வீ.யும், அருணனும் வந்து பேச வேண்டும் என்கிற ஆசையினால் அல்ல....
இந்து ஏட்டின் தலையங்கம்கூட, அதுபற்றிய விமர் சனத்தை எழுதியிருந்தது. இப்பொழுது பல்வேறு தொலைக் காட்சிகளில், பகவத் கீதைபற்றிய விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஒரு விதத்தில் அது நல்லது. அப்படி விவாதம் நடைபெறுகின்றபொழுதுதான், கீதையைப்பற்றிய ஒரு பொத்தாம் பொதுவான ஒரு எண்ணம் உடைந்து, உள்ளே என்ன இருக்கிறது என்பதை, நம் போன்றோர் எல்லாம் தொலைக்காட்சிகளில் எடுத்துரைப்பதற்கு என்ன காரணம், தொலைக்காட்சிகள் நம்மையும் எதற்காக அழைக் கிறார்கள் என்றால், சுப.வீ.யும், அருணனும் வந்து பேச வேண்டும் என்கிற ஆசையினால் அல்ல; விவாதத்திற்கு வேறு தரப்பு ஆட்களும் தேவை என்பதினாலே, அருணை அழைக்கின்ற பொழுதும், என்னை அழைக்கின்ற பொழுதும், நம்முடைய கருத்துடையவர்களை கவிஞரை அழைக்கின்ற பொழுதும், அருள்மொழியை அழைக்கின்ற பொழுதும், கீதையைப்பற்றி இன்னொரு பக்கம் இன் றைக்கு மக்களிடத்தில் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு வாசகர் தொலைப்பேசியில் என்னிடத்தில் கேள்வி கேட்டார்!

கீதை என்பது ஒரு பொதுவானா நூலா? இந்துக்களின் புனித நூல் என்று சொல்லுவதுகூட மிகவும் பிழையாம். இந்துக்கள் என்று தங்களை பல பேர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள்தானே 80 சதவிகிதம் உள்ளனர். நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங் கேற்கும்பொழுது, ஒரு வாசகர் தொலைப்பேசியில் என் னிடத்தில் கேள்வி கேட்கிறார், இந்துக்கள்தானே 80 சத விகிதம்; ஏன் அவர்களின் நூலை, இந்தியாவினுடைய தேசிய நூல் என்று ஏற்கக்கூடாது? என்று.

நான் அவரிடம் கேட்டேன், இந்துக்கள் 80 சதவிகிதம் என்கிறீர்களே, இந்துக்களில் சூத்திரர்கள் எத்தனை சதவிகிதம்? தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தனை சதவிகிதம்? பஞ்சமர்கள் எத்தனை சதவிகிதம்? எல்லோரும் சமமாக இந்துக்களில் மதிக்கப்படுகிறார்களா? எல்லோருக்கும் கோவில் கருவறைக்குள் போவதற்கு அனுமதி உண்டா? நீங்கள் இந்துக்கள் என்று சொல்லுகின்றவர்கள் 80 சதவிகிதம் என்று சொல்லுகிறீர்களே, 80 சதவிகித மக்களும் சமமாகக் கருதப்படுகின்ற இடம் ஏதேனும் ஒன்று உண் டென்று சொன்னால், அது வாக்குச் சாவடி மட்டும்தானே, நண்பர்களே!

வாக்குச் சாவடிக்கு மட்டும்தான், எல்லோரையும் வருந்தி வருந்தி அழைக்கின்றார்கள்

யாரும் கோவில் கருவறைக்குள்ளே வரக்கூடாது என்று சொல்பவனும்கூட,  யாரும் வாக்குச் சாவடிக்குள் வராதே என்று சொல்வதில்லை. வாக்குச் சாவடிக்கு மட்டும்தான், எல்லோரையும் வருந்தி வருந்தி அழைக்கின்றார்களே தவிர, மற்ற இடங்களில் எல்லாம், கோவிலில், தெருவில் நிறுத்தப்படுகின்ற பொழுது, அதனை எப்படி நீங்கள் ஒட்டு மொத்தமாக ஒரு கணக்காக எடுத்துக்கொள்ள முடியும்.

கீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை; அது பார்ப்பனர்களுக்கான நூல்

எனவே, அடிப்படையில் வைக்கின்ற ஒரு கருத்தைத் தாண்டி, இன்னொன்றை நான் சொல்லுகின்றேன்; அடிப் படையாக சொல்லப்படுகின்ற செய்தி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடென்றால், அப்படி மதச்சார்பற்ற நாட்டில், ஒரு மதத்தினுடைய நூலை, பொது நூலாக அறிவிக்கக் கூடாது என்பது. ஆனால், அதனைத் தாண்டி நாம் குறிப் பிட விரும்புகின்ற செய்தி, இது ஒரு மதத்திற்கும் பொது வான நூல் இல்லை. இது இந்து மதத்திற்கான நூல் என்று திரும்பத் திரும்பச் சொன்னால், அதனுடைய பொய் மையை நாமும் புகழ்ந்துவிடுகிறோம் என்று பொருள். இது இந்து மதத்திற்கான நூல் இல்லை. இது பார்ப்பனர்களுக் கான நூல்.
எனவே, மூன்று சதவிகிதமாக இருக்கின்ற பார்ப்பனர் களுடைய நூலை, 100 சதவிகித மக்களுக்கும் பொதுவான நூலாக ஆக்காதே என்பதுதான் நமது அடிப்படையான வாதம்.

கீதையைப்பற்றி விளக்கம் சொல்வதானால், இரண்டு வரிகளில் சொல்லலாம்.
அது, வருண அமைப்பை வலியுறுத்துகின்ற நூல்;
வன்முறையைத் தூண்டுகின்ற நூல்

இந்த இரண்டைத் தாண்டி, தத்துவக் குழப்பங்களைக் கொண்டிருக்கின்ற நூல்.
கீதாச்சாரத்தில் இருப்பது சீட்டுக் கம்பெனிகளுக்கு பொருத்தமானது
நான் வேடிக்கையாகச் சொல்லவில்லை. நான் செயலாற்றுகிறவனும் இல்லை; செயல் ஆற்றாமல் இருக்கின்றவனும் இல்லை என்று கண்ணன் சொல்கிறான்.

இதற்கு என்னடா, பொருள் என்றால், இதெல்லாம் தத்துவம், உங்களுக்குப் புரியாது என்கிறான்.

புரியாதவாறே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, கேட்டால், உங்களுக்குப் புரியாது என்று சொல்கிறானே தவிர, இது தத்துவக் குழப்பங்கள், யோகம்பற்றி, சாங்கியம் பற்றி, பல்வேறு தரிசனங்கள் என்று சொல்லப்படுகின்ற தத்து வங்கள் பற்றியெல்லாம் உள்ளே ஏராளமான கருத்துகள் இருக்கின்றன.
எனவே, அதில் அடிப்படையாக இருக்கின்ற செய்தி இரண்டுதான். அவர்களைக் கேட்டாலே, அவர்கள் சொல்கின்ற செய்தி, மிகச் சுருக்கமாக, கீதையினுடைய அழுத்தமான சாரம் என்னவென்று கேட்டால்,

பயன் கருதா கருமம் என்பது கீதையின் சாரம்.
கீதாசாரம் என்று கடைகளில் எழுதிப் போட்டிருப் பதற்கும், கீதை புத்தகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கீதாச்சாரம் என்று எழுதியிருப்பதெல்லாம், எது நடந் ததோ, அது நன்றாகவே நடந்தது என்பது போன்றவை யெல்லாம் கீதையில் எங்கேயும் இல்லை.
அந்தக் கீதாச்சாரத்தில் இருப்பது, இந்தச் சீட்டுக் கம்பெனிகளுக்குத்தான் பொருத்தமானது; நேற்று வரைக் கும் உன்னுடையது யாருடையதாக இருந்ததோ, அந்தப் பொருள் நாளையில் இருந்து இன்னொருவனுடையது என்று சொல்கிறபொழுது, நீ போகும்பொழுதே, அந்தக் கடையிலுள்ள அந்த வரியைப் பார்த்திருக்க வேண்டுமல்லவா!
அடடா, எத்தனை உத்தமமான கருத்து என்று சொல்கிறார்கள்!
அவன் தெளிவாகச் சொல்லிவிட்டானே, இன்றைக்கு வரைக்கும் உன்னுடையதான பொருள், நாளைக்கு இன் னொருவனுடைய பொருளாக ஆகிவிடும். நீ எதைக் கொண்டு வந்தாய்; கொண்டு போவதற்கு.
அய்யோ, நான் பணம் அல்லவா கொண்டு வந்தேன் என்று உனக்குத் தோன்றவேண்டும் அல்லவா!

எனவே, கீதாச்சாரம் என்பது அது அன்று; கீதாச்சாரம் பயன் கருதாத கருமம் என்பதுதான்.

அதை அவர்கள் இரண்டாவது இயலிலேயே அதனைச் சொல்லி விடுகிறார்கள்.
இதில் என்ன சிக்கல் என்றால், தொடக்கத்தில் சொல்கிற பொழுது, அந்தப் பயன் கருதா கருமம் என்பது; கருமம் என்றால் என்ன என்பதற்கான விளக்கம் நான்காவது இயலில் வெளிப்பட்டு, 18 ஆவது இயலில் முற்று பெறுகிறது.
ஆனால், சொல்கிறபொழுது, இரண்டாவது இயலில், பயன் கருதா கருமம்; அதுதான் கீதையினுடைய சாரம். இரண்டாவது இயலிலேயே இருக்கிறது.
கடமையைச் செய்வதுதான் உன்னுடைய நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர, அந்தக் கடமைக்கான பயன் களை நீ எதிர்பார்க்கக்கூடாது. இதைத்தான் திரும்பத் திரும்ப, அடடா, எத்தனை உத்தமமான கருத்து என்று சொல்கிறார்கள்.

நான் முதலில் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைக் குறிப்பிடுகின்ற பொழுது நான் ஒன்றை  சொல்லவேண்டும்; அவர்தான் கீதையைப்பற்றி நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.


5151 என்று புதிதாக ஒரு புருடாவை விடுகிறார்கள்!

The Bhagavad Gita  என்பதில் இருந்து தொடங்கி, The Indian Philosophy என்பதிலிருந்து,The Source of Indian Philosophy என்கிற புத்தகமும், Eastern Religions Western Thought என்கிற புத்தகமும், எல்லாவற்றிலும், டாக்டர் இராதாகிருஷ்ணன் எழுதியிருக்கின்ற அந்த வரலாற்றுக் குறிப்புகளை நாம் எடுத்துக்கொண்டாலும்கூட, காரணம், அம்பேத்கர் சொல்கின்ற செய்தியை நாம் ஏற்கவேண்டாம்; அய்யா பெரியார் சொல்கின்ற கருத்தை நாம் ஏற்கவேண்டாம்; அவர்களுடைய வரலாற்று ஆசிரியர் டி.ஜி.திலகர் சொல்லுவதைக்கூட ஏற்கவேண்டாம். நீங்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் சொல்லுகின்ற அந்தக் கூற்றை எடுத்துக்கொண்டாலும், ஏசு நாதருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கீதை எழுதப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் The Bhagavad Gita என்கிற புத்தகத்தில் சொல்கிறார்; அதனை உண்மை என்று வைத்துக்கொண்டாலும், 2500 ஆண்டுகள்தான். ஆனால், இவர்கள் 5151 என்று புதிதாக ஒரு புருடாவை விடுகிறார்கள். வாய்க்கு வந்ததை வரலாறு என்று சொல்கிறார்கள்.
எனவே, அப்படி டாக்டர் இராதாகிருஷ்ணன் சொல்லு கின்ற அந்தப் புத்தகத்திலே அவர் குறிப்பிடுவது, அதனு டைய சாரம் என்பதே, எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டும் என்று ஒரு பொதுநலத் தொண்டுபோல அதனைக் காட்டுகிறார்.

சிறப்புக் கழிவு விலைகளில்தான் கொடுக்கின்றோம் கீதையின் மறுப்பு நூலினை!

ஒவ்வொன்றிற்கும் இவர்கள் எழுதியிருக்கின்ற விளக்க உரை இருக்கின்றதே, இன்றைக்கு அய்கான் என்கிற அந்த நிறுவனத்திலிருந்துதான், மிகக் கூடுதலான மொழிகளில், அவர்களுடைய பிரபு மகனார் எழுதிய உரைகளோடு, பல்வேறு மொழிகளில் கீதை மொழி பெயர்க்கப்பட்டு, நாம் இங்கே சிறப்புக் கழிவு விலைகளில்தான் கொடுக்கின்றோம் கீதையின் மறுப்பு நூலினை. ஆனால், அவர்கள் சும்மாவே கொடுக்கின்றார்கள். நான் இணைய தளத்தில் பார்த்த பொழுது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை மொழிகளில் அவர்கள் மொழி பெயர்த்து கீதையைக் கொண்டு போயிருக்கிறார்கள். உலகில் உள்ள பல்வேறு மொழிகளில், அதனை மொழி பெயர்த்து, எல்லா மொழி பெயர்ப்புகளிலும் அவர்கள் முன்னுரையில் சொல்லியிருக் கின்ற செய்தி, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நூல் இதுதான் என்று.

வைணவத்தினுடைய நூல்தான் கீதை. அதனை சைவர்கள் கூட ஏற்கமாட்டார்கள்
இதனை பகுத்தறிவாளர்கள் ஏற்கிறோமா, இல்லையா? கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தினைச் சார்ந்தவர்கள் ஏற்கி றோமா, இல்லையா? என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்து மதம் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கின்ற சைவர்கள் ஏற்கிறார்களா? என்று கேட்டுச் சொல்லுங்கள். வைணவத்தினுடய நூல்தான் கீதை. அதனை சைவர்கள் கூட ஏற்கமாட்டார்கள். எனவே, அப்படிப்பட்ட அந்த நூலில், பயன் கருதா கருமம்; எதையும் எதிர்பார்க்காமல் இந்த உலகத்தினுடைய நன்மைக்காக உழைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது என்று இரண்டாவது இயல் சொன்னால், நான்காவது இயலில் அதற்கு இன்னொரு விளக்கம் இருக்கிறது. இந்தக் கருமம் என்பது, அவரவர் வருணத்திற்கு உரியது. வருணம் என்பது நான்கு. அந்த நான்கு வருணங்களை நான்தான் படைத்தேன்.
சதுர் வருணம் மயாசிருஷ்டம்
அந்த நான்கு வருணங்களையும் நான்தான் படைத்தேன். அதற்கு நம்முடைய உண்மை இதழில் எழுதியிருப்பது போல, அதற்கொரு வெண்டைக்காய் வியாக்கியானம் வைத்திருக்கிறார்கள்.
இந்த நான்கு வருணம் என்றால், அது குண தருமங் களைப் பொறுத்தது. அடுத்த வரியில் இருக்கிறது.
நான் ஒலிநாடாவில் கேட்டேன், சுகிசிவம்கூட அந்த விளக்கத்தைச் சொல்கிறார்.
நான்கு வருணம் என்பது பிறப்பினால் இல்லை; அது குண தரும, சுபாவம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டிருக் கிறது. அது குணத்தையும், அவரவருடைய செயலையும் ஒட்டி பிரிக்கப்பட்டிருக்கிறது.
மறுபடியும் தொடர்ந்து படித்துக்கொண்டே போனால், 9 ஆவது அத்தியாயத்திலே ஒரு செய்தி இருக்கிறது. நான் குறிப்பிடுவதற்குக் காரணம், இப்பொழுதெல்லாம் புத்தகங் களைத் தேடுவதில் மிகப்பெரிய சிரமமில்லை. இணைய தளத்திற்குள் சென்றால், பகவத் கீதையை உடனே படித்து விடலாம்.
                                 -----------------------------”விடுதலை” 5-1-2015

Read more: http://viduthalai.in/page-2/93977.html#ixzz3O0GsggbM
************************************************************************************


பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்! இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்!

பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்!
இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை


சென்னை, ஜன. 6- பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாது என்று மகாபாரதம் காட்டும் தருமம் பற்றி கேள்வி எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள்
9 ஆவது இயலினுடைய 32 ஆவது பாடல் சொல்லு கிறது; கிருஷ்ணன் சொல்கிறார்:

யாருக்கெல்லாம் நான் என்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு போவேன் என்றால், பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் (சூத்திரர்கள்) ஆகி யோரும்கூட என்னிடத்திலே வந்தால், அவர்கள் உயர்ந்த இடத்தினை அடைவதற்கு நான் உதவி செய்வேன்.

சரி, இந்த இடத்திலே அவர்கள் விடை சொல்ல வேண்டும். அது குண தருமத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், பாவயோனியில் பிறந்த என்று சொன்னால், அது பிறப்பின் அடிப்படை என்பதை அவர்கள் மறைமுகமாக சொல்கிறார்களா, இல்லையா?

இதையும் தாண்டி, 18 ஆவது இயல்; அதுதான் கடைசி இயல். அங்கே போகிறபொழுதுதான், கொலையை அங்கீ கரிக்கின்ற ஒரு இடத்தை நாம் பார்க்கிறோம்.

அந்த 18 ஆவது இயலில்தான் கிருஷ்ணன் சொல்கிறார்,

ஆணவம் இல்லாத, தூய அறிவுடையவர்கள் செய்யும் எந்த ஒரு கொலையும் அவர்கள் உலகம் முழுவதையும் எதிர்த்தாலும், கொலை செய்தாலும் அது கொலையாகாது! அந்தக் கொலைக்கு அவர்கள் இணக்கமானவர்களாகவும் ஆக மாட்டார்கள் என்று சொல்லுகிற, வன்முறையைத் தூண்டுகிற கருத்தாக அது இருக்கிறது.

பார்ப்பானுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் என்ன?

அதற்கும் அடுத்ததாக வருகிற அந்தப் 18 ஆவது இயலில், 41 ஆவது பாடலில் இருந்து 47 ஆவது பாடல் வரை எல்லாம் தெளிவாக, வெட்ட வெளிச்சமாகி விடு கிறது. பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. இந்த நான்கு வருணம் எல்லாம் தாண்டி, குணம் தாண்டி, சுபாவம் தாண்டி, கருமம் தாண்டி பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று அந்தப் பெயர்களோடு அவை சொல்லப்படுகின்றன.

அதுமட்டுமல்ல, யார் யாருக்கு என்ன என்ன கடமை? எது அவரவர்க்கு உரிய கருமம்? என்று 44 ஆவது இயலில் இருந்து 47 ஆவது இயல் வரை சொல்லப்படும்பொழுது, மிகத்தெளிவாக, இவனுடைய - பார்ப்பானுடைய கருமம்; அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் என்ன?
அவனுக்குத் தவம் செய்வது, படிப்பது!

அடுத்தது சத்திரியனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் - வீரம் உடையவனாக இருப்பது; எக்காரணம் கொண்டும், போரில் புறங்காட்டாமல் இருப்பது.

வைசியனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் - வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகியன.

சூத்திரனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் எது வென்று கேட்டால், மேலே சொல்லப்பட்டிருக்கின்ற மூவருக்குமான ஏவல் செய்வதுதான்.

அப்படியிருந்தால், அதையெல்லாம் நீக்கிவிடலாமாம்!

இதனைச் சொல்லி முடித்ததற்குப் பிறகு, இதை நான் அந்தத் தொலைக்காட்சியில் கேட்டேன். நான் அதிகாரத் தைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கேட்டேன், இதற்கு என்ன விடை? என்று.

அதற்கு மிக புத்திசாலியான ஊடகவியலாளர் சுதாங் கன் அவர்கள் சொன்னார், அப்படியிருந்தால், அதை யெல்லாம் நீக்கிவிடலாம் என்று.

அதாவது, அது இல்லை என்று அவர் சொல்லவில்லை. அப்பொழுது எனக்கு தருமியின் நினைவுதான் சட்டென்று நினைவிற்கு வந்தது. என்னுடைய பாட்டில் எவ்வளவு தவறு இருக்கிறதோ, அதனைக் குறைத்துக்கொண்டு மீதியைக் கொடுங்கள் என்பதுபோல, வேண்டியதை வைத்துக்கொண்டு, வேண்டாததை வெட்டிவிடுங்கள் என்று.

ஏதோ, கீதையில் சேர்ப்பதற்கும், வெட்டுவதற்கும் இவர் தான் அதற்கான முழு அதிகாரம் உடையவர் என்பதுபோல, தொலைக்காட்சி நிகழ்வின்போது,  தப்பாக இருந்தால், அதனை வெட்டி விடலாம் என்று சொல்கிறார்.
மிகத் தெளிவான இரண்டாவது இயல் தொடங்குகிற பொழுது, மிக நல்ல பிள்ளைபோல் தொடங்கி, 18 ஆவது இயலுக்கு வருகிறபொழுது, வெட்ட வெளிச்சமாக, இந்த நான்கு வருணங்களில், இவன்தான் வேலை இருக்கிறவன்; இவனுக்கு இதுதான் வேலை. இங்கே இருக்கின்ற சூத்திர னுக்கு இதுதான் கடமை என்று சொல்லிவிட்டு, இப்பொழுது இரண்டையும் நீங்கள் இணைத்துப் பாருங்கள்;

அவனவனுக்கு உள்ள கருமம் என்று எது என்று சொன்னதற்குப் பிறகு, மறுபடியும் இரண்டாவது இயலுக்குப் போனால், நீங்கள் பயன் கருதா கருமம் செய்யவேண்டும்.

இந்தக் கருமத்தையும்கூட, எந்த எதிர்பார்ப்பும் இல்லா மல் செய்யவேண்டும். இந்தக் கருமம் என்ற சொல்லை, நடைமுறையில் சரியாகத்தான் சொல்கிறான்.

கீதையில் சொல்கின்ற பொருள் வேறாக இருந்தாலும், இவன் சொல்கின்ற இந்தக் கருமத்தையும் நாம் என்ன செய்யவேண்டும் என்றால், எதையும் எதிர்பார்க்காமல் செய்யவேண்டும் என்று, நீ கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே!

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச் சென்றேன்; அங்கு ரஜினிகாந்த் அதனை உணர்ந்து எழுதியிருக் கிறாரா? அல்லது வேறு ஏதாவது மறுப்பாக எழுதி யிருக்கிறாரா? என்பது எனக்குத் தெரியாது.

கடமையைச் செய்! பலனை எதிர்பார்! என்று எழுதி யிருக்கிறார். இன்றைக்கும் அதனை நீங்கள் அங்கே பார்க்கலாம்!

எது உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் செய்யவேண்டும்!
கடமையைச் செய்! பயனை எதிர்பார்க்காதே! நீ வேலை செய்வதற்காக மட்டுமே பிறந்தவன். ஏவல் வேலைகளை எடுத்துச் செய்யவேண்டுமே தவிர, நீ எந்தப் பயனையும் எதிர்பார்க்கக்கூடாது என்றுதான், இரண்டாவது அத்தியாயத்தில் இருக்கின்ற அந்த வரிக்கு என்ன பொருள் என்றால், இதுதான் உன் கருமம்! இன்னமும் கீதை விளக்க மாகச் சொல்கிறது.

நீ உன் வருணத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற பணியைவிட, இன்னொரு வருணத்தாருக்கு உரிய பணியை சிறப்பாகச் செய்வாய் என்றாலும்கூட, அதை நீ செய்யக் கூடாது. உனக்கு அரைகுறையாகத்தான் தெரியும் என்றா லும், எது உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் செய்யவேண்டும்.
யார் விதித்தார்? மயாசிருஷ்டம், அதை நான் தான் விதித்தேன் என்று கிருஷ்ணன் சொல்கிறார்.

இதில் என்ன செய்தியை நாம் பார்க்கவேண்டும் என்றால், இடைச்செருகல்தான் இந்த பகவத் கீதை என்ப தற்கு ஒரு மிகச் சரியான எடுத்துக்காட்டை அம்பேத்கர் தன்னுடைய புத்தகத்தில் காட்டுகிறார்.
The Revolution and Counter Revolution in ancient India  என்கிற பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர் புரட்சியும் என்கிற புத்தகத்தில் அவர் ஒன்றைச் சொல்கிறார்:
பகவத் கீதையிலேதான் கிருஷ்ணன் எல்லோரையும் விட மேலானவராக அவர்தான் எல்லாம். ஆக்கமும் நானே, அழிவும் நானே! நீ செய்கின்ற புண்ணியம், பாவம் எல்லாம் என்னிடத்திலேதான் வந்து சேரும் என்று The Supreme God என்று சொல்கிற, எல்லாவற்றிற்கும் மேலான ஒரு இடத்தில் கிருஷ்ணர் உயர்த்தி வைக்கப் பட்டிருக்கிறாரே, இது இயல்பான மகாபாரதத்தினுடைய கதைப் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது என்கிறார் அம்பேத்கர்.

மற்ற இயல்களில் நீங்கள் பார்த்தால், அங்கே கிருஷ் ணனின் நிலைமை மகாபாரதத்தில் என்னவாக இருக்கிறது.

அதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டையும் காட்டுகிறார். மகாபாரதம் 18 பருவங்களை உடையது. அதில் முதல் பருவம் ஆதிபருவம். இங்கே இருக்கின்ற நண்பர்கள், இளைஞர்கள் யாரும் மகாபாரதம் படிக்கவில்லை என்றால், உங்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். படிக்கலாம் என்று நினைத்தால்கூட ஆதிபருவத்தை விட்டுவிட்டுப் படியுங்கள்; ஆதிபருவத்தைப் படிக்கின்ற எந்தப் பையனும் உருப்படமாட்டான். ஆதிபருவத்தைப் படிக்க ஆரம்பித்து, முடிக்கும் தருவாயில் எவனாக இருந்தாலும் காம உணர்ச்சியை அவனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையாகிவிடும்.
இவர்கள் சொல்லி வைத்திருக்கின்ற பல புராணக் கதைகளில் எல்லாமே இப்படித்தான். எந்தக் கதையுமே நாம் சொல்லவில்லை.

தலை என்ன நெல்லிக்காயா? கிள்ளி எறிவதற்கு!
நான் பல கூட்டங்களில் கேட்டிருக்கிறேன், ஆக்குகிற கடவுள், காக்கிற கடவுள், அழிக்கின்ற கடவுள் எல்லாவற் றையும் சொல்லுகிறாய்; காக்கும் கடவுளுக்குக் கோவில் வைத்திருக்கிறீர்கள்; அழிக்கின்ற கடவுள் சிவனுக்குக் கோவில் வைத்திருக்கிறீர்கள்; ஏன் ஆக்குகிற கடவுளான பிரம்மனுக்குக் கோவில் இல்லை. கும்பகோணத்தில் மட்டும்தான் உள்ளது. வேறு எங்கேயும் இல்லை என்றால், சிவபெருமான் வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஏன் வைக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்.

பிரம்மனுக்கு அடிப்படையில் அய்ந்து தலைகள்; ஆனால், இப்பொழுது இருப்பது நான்கு தலைகள்தான். சிவபெருமான் ஒரு தலையைக் கிள்ளி விட்டார். அது என்ன நெல்லிக்காயா?  கிள்ளி எறிவதற்கு.

ஏன் கிள்ளி எறிந்துவிட்டார் என்றால், வேறு ஒரு காரணமும் இல்லை. பார்வதி பிரம்மனுக்கு அத்தை முறை. பார்வதி குளித்துக் கொண்டிருக்கும்பொழுது, பிரம்மன் எட்டிப் பார்த்ததை, சிவபெருமான் பார்த்துவிட்டாராம்.
ஏனய்யா, ஒரு கடவுள் செய்கின்ற காரியமா இவை யெல்லாம். இந்தக் கதையை நாங்களா எழுதினோம்; இந்தக் கதை முழுவதையும் நீங்கள்தான் எழுதி வைத்திருக் கிறீர்கள். ஒரு கடவுளைப்பற்றிய கதையைப் படிக்கின்ற பொழுது, மனதில் ஒரு நெகிழ்ச்சி வரவேண்டாமா?

அம்பேத்கர் எடுத்துச் சொல்கின்ற சபா பருவம்!

படிக்கின்ற பொழுதே, என்னடா, இது இவ்வளவு மோசமாக இருக்கிறதே - அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாக மகாபாரதத்திலும் உண்டு. அந்த மகாபாரதத்தில் இருக்கின்ற ஆதிபருவம். அதனைத் தாண்டி வந்தால், இரண்டாவது பருவம் சபா பருவம். பிறகு ஆரண்ய பருவம்; விராட பருவம். சபா பருவத்தில் அம்பேத்கர் எடுத்துச் சொல்கின்ற காட்சி எது என்று கேட்டால்,  சபா பருவத்தில் ஒரு விருந்துக்கு தருமன், முதல் மரியாதையாக கிருஷ்ணனை அழைக்கின்றபொழுது, சிசுபாலன் என்கின்ற ஒரு சாதாரண பாத்திரம், மிகக் கடுமையாக கிருஷ்ணனை விமர்சனம் செய்கிறார். இது மகாபாரதத்தில் இருக்கிறது.

நீ கிருஷ்ணனுடைய உயரத்தை கீதையில் காட்டுவதற் கும், சிசுபாலன் அவ்வளவு கோபப்பட்டு, அவ்வளவு குறைவாக சபா பருவத்தில் கிருஷ்ணனை தருமன் முன்னிலையில் பேசுவதற்கும் இருக்கின்ற வேறுபாட்டை அம்பேத்கர் கேட்பார், அவ்வளவு பெரிய பாத்திரத்தை இப்படி ஒருவன், சாதாரணமான ஒரு மன்னன், அப்படி பேச முடியுமா?

சிசுபாலனுக்கு கிருஷ்ணனின்மேல் இருந்த கோபம் நியாயமானது. எதற்காக கிருஷ்ணன்மீது சிசுபாலன் கோபப்பட்டான் என்றால், சிசுபாலனுக்குப் பார்த்து வைத்திருந்த, அந்த ருக்மணி என்ற பெண், மண மேடையில் இருக்கின்றபொழுதுதான், கிருஷ்ணனும், அவனுடைய அண்ணனும் சேர்ந்து ருக்மணியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். இதனால், சிசுபாலனுக்குக் கிருஷ்ணனின்மேல் கோபம் இருக்குமா, இருக்காதா?

கண்ணன் யாரைக் காதலித்தான் என்றால், ராதாவைத்தான்!

எனவே, தன் மனைவியை, தனக்கு மனைவியாக மண மேடையில் உட்கார்ந்திருந்த பெண்ணை, தூக்கிக் கொண்டு போய், ருக்மணியை மணந்துகொண்டு, அதற்குப் பிறகு ஏழு பெண்களை மணந்துகொண்டு, இதில் என்ன சிறப்பு என்றால், அந்த ஏழு பெண்களும் ஏற்கெனவே திருமணமானவர்கள். அதற்குப் பிறகு 10 ஆயிரம் கோபியர்கள்; இத்தனை பேரையும் விட்டுவிட்டு, கண்ணன் யாரைக் காதலித்தான் என்றால், ராதாவைத்தான் காதலித்தார்.

ஏன்டா, இத்தனை பேர்களுக்கு அப்புறம், ராதாவைக் காதலிக்கலாமா? நம்மாள் இன்றைக்கும் ருக்மணி கிருஷ் ணன் என்று யாராவது பெயர் வைக்கிறானா? ராதா கிருஷ்ணன் என்றுதான் பெயர் வைக்கிறார்கள். நண்பர் களே, ஒருவேளை கல்யாணம் செய்தால், நம்மாள்களுக்குப் பிடிக்காதோ, என்னவோ, தெரியவில்லை!

எனவே, ராதாகிருஷ்ணன்கள் செய்த அந்த செயல்களையெல்லாம் மிகக் கடுமையாக சிசுபாலன் பேசு கின்ற அந்தக் காட்சி மகாபாரதத்திலேயே இடம்பெற்றிருக் கிறது.

தருமம் என்று சொல்வதற்குப் பொதுவாக நாம் வைத்திருக்கின்ற பொருளைப் புரட்டிப் பார்க்கக்கூடாது. வள்ளுவன் சொல்லுகின்ற அறம் வேறு; அறம் என்பதற்கு இவர்களுடைய தருமம் என்கிற சொல் ஒருநாளும் பொருந்தாது. அந்த அறத்திற்கும், இந்த தருமத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
காரணம், நீங்கள் தருமன் என்கிற பாத்திரம் இருக் கிறதே, அந்தப் பாத்திரம்தான், மகாபாரதத்தினுடைய அத்தனை விதமான இடர்களுக்கும் அடிப்படைக் காரணம். நான் இங்கே சொல்கின்ற இந்தச் செய்தியை, ஒருமுறை கலைஞர் தொலைக்காட்சியில் கூறியபொழுது, அன் றைக்கு உண்மையிலேயே வழக்கமாக வருவதைவிட, ஏராளமான தொலைப்பேசி அழைப்புகள். அப்படியா? என்று கேட்டார்கள். அப்படி கேட்டவர்கள் எல்லோரும் பக்தர்கள்.

நான் மகாபாரதத்தில் இருக்கின்ற கதையைத்தான் சொன்னேன். தருமன் சூதாடி எல்லாவற்றையும் இழந்தான் என்பதுதான் பொதுவாக அறியப்பட்டிருக்கின்ற செய்தி.


ஆனால், அவன் முதல்முறை சூதாடி, எல்லாவற்றை யும் இழக்கவில்லை என்பது அழுத்தமாக நான் சொன்ன செய்தி.

தருமன் சூதாடினான்; எல்லா தம்பிகளையும் இழந்தான்; சொத்து சுகங்களை இழந்தான்; படைகளை இழந்தான்; கடைசியாக துரோபதையை இழந்தான். துரோபதையை இழந்ததற்குப் பிறகு, துரோபதி அரங்கத்திற்கு வந்து, பீஷ்மர் உள்பட அத்தனை பேரும் இருக்கின்ற சபையில், ஒரு கேள்வியை, பாஞ்சாலி கேட்டாள்.

பாஞ்சாலி கேட்ட கேள்வி!

தருமன் என்னை பணயம் வைத்து இழந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் தன்னை இழந்த பின் என்னை இழந்தானா? அல்லது என்னை இழந்த பின் தன்னை இழந் தானா? என்று கேட்டாள்.

அந்தக் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்களும், அழுத் தங்களும் இருக்கின்றது.
தன்னை இழந்த பின்தான் உன்னை இழந்தான் என்றவுடன், மறுபடியும் பாஞ்சாலி கேட்டாள்,


அவன் தன்னையே இழந்த பிறகு, என்னை இழப்பதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

அடிப்படையில் அவனே அடிமையான பிறகு, இன் னொருவரை எப்படி அவன் பணயம் வைத்து விளையாட முடியும்?

அதற்கு அந்த அரங்கில் யாரும் விடை சொல்ல வில்லை. பிதாமகர் என்று சொல்லப்படுகிற பீஷ்மர் சொன்னார், மகாபாரதத்தில் இருக்கிறது நண்பர்களே, குறிப்பாக நம் வீட்டில் போய் சொல்லுங்கள்.

பீஷ்மர் சொன்னார், ஆண் அடிமையாக ஆனாலும், மடையனாக இருந்தாலும், அவன் எந்த நிலையில் இருந்தாலும் அவன் மனைவி அவனுக்கு அடிமைதான்.


மகாபாரதம் சொல்லித் தருகின்ற சமூக வாழ்வில் செய்தி இதுதான்

உன்னைப் பணயம் வைப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டு
ஒருவன் ஆண் மன்னனாக இருந்தாலும், சாதாரண  குடிமகனாக இருந்தாலும், அடிமையாக இருந்தாலும், எந்த நிலையில் ஆண் இருந்தாலும், அவன் மனைவி அவனுக்கு அடிமைதான். எனவே, உன்னைப் பணயம் வைப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டு என்று பீஷ்மர் சொன்னார்.

எல்லாம் இழந்த பிறகு, என்ன நடந்தது என்றால், திருதராஷ்டிரன், துரியோதனிடம் சொன்னான், இது நியாயமில்லை. ஒருவனை சூதாட்டத்திற்கு அழைத்து, எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுப் போ என்று சொல்ல முடியாது. துரோபதியை, அந்தப்புரத்தில் அடிமைப் பெண்ணாக அனுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், தடுத்து நிறுத்தி, வேண்டாம், பாஞ்சாலி; நீ என்னிடத்தில் இரண்டு வரம் கேள் என்று திருதராஷ்டிரன் சொன்னான்.
இது மகாபாரதத்தில் உள்ள காட்சி.
பெண்கள் இரண்டு வரத்திற்குமேல் கேட்கக்கூடாது!
பாஞ்சாலி வரம் கேட்டாள்; முதல் வரம், தருமனை விடுவிங்கள் என்றாள்.
திருதராஷ்டிரன், விடுவித்தோம் என்றான்.
இரண்டாவது வரம் கேள் என்று கேட்டான்;
தம்பியர்களையும் விடுவியுங்கள் என்றாள்.
விடுவித்தேன் என்று சொன்னான். மூன்றாவது வரமும் கேள் என்று திருதராஷ்டிரன் சொன்னபொழுது,
பாஞ்சாலி சொன்னாள், இல்லை இல்லை பெண்கள் இரண்டு வரத்திற்குமேல் கேட்கக்கூடாது என்று.
திருதராஷ்டிரன் நல்ல மனிதனா? சூதாடிய தருமன் நல்ல மனிதனா?
அப்படியும் திருதராஷ்டிரன், இல்லை இல்லை, நானாகவே வரம் தருகிறேன். கைப்பற்றிய எல்லாவற் றையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம். படை, நாடு, செல்வம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நீங்கள் ஊர் திரும்பலாம் என்று சொன்ன திருதராஷ்டிரன் நல்ல மனிதனா? சூதாடிய தருமன் நல்ல மனிதனா? நண்பர்களே, நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

என்ன நடந்தது என்றால், அதற்குப் பிறகு இவர்கள் போய்க் கொண்டிருக்கின்றபொழுது, சகுனி துரியோதனை அழைத்து, இப்படி நீ அவர்களை அனுப்பி விட்டாயே! அவர்கள் சபதம் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள்; என்றைக்கு இருந்தாலும் உனக்கு ஆபத்து என்கிறார்.
என்ன செய்யலாம் மாமா என்கிறான் துரியோதனன்.
மறுபடியும் சூதாட்டத்திற்கு அழைக்கலாம் என்கிறான் சகுனி.
எப்படி வருவான்? மனநிலை சரியாக இருக்கின்ற எவனாவது வருவானா?
ஆனால், சகுனி சொன்னான், எவன் வருவானோ இல்லையோ, தருமன் வருவான்.

சகுனி சொன்ன அந்த செய்தி இருக்கிறது. சூதாட்டம் என்றால், தருமனுக்கு அவ்வளவு பிரியம். பாருங்கள் தருமன் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்!
சூதாட்டத்தில் தருமனுக்கு அத்தனை ஆசை உண்டு. மறுபடியும் அழைத்தால் வருவான்.

திருதராஷ்டிரன் மறுபடியும் பாண்டவர்களை அழைக்கக்கூடாது என்கிறபொழுது,

இல்லை, இல்லை, மறுபடியும் நாங்கள் எதையும் பணயமாக வைக்கச் சொல்லவில்லை. ஒரே ஒரு நிபந்தனையை வைக்கிறோம். தோற்றுப் போகிறவர்கள், 12 ஆண்டுகள் காட்டுக்குப் போகவேண்டும். ஒரு ஆண்டு அஞ்ஞான வாசம்; மறைமுகமாக, தலைமறைவாக இருக்கவேண்டும். இதுதான் பந்தயம்; வேறு எதையும் இழக்கச் சொல்லவில்லை என்று சொல்லி,
மறுபடியும், போகிற பாதையில், அவர்கள் ஊர் போய்ச் சேரவில்லை. போகிற பாதையில், உங்களை மறுபடியும் சூதாட அழைக்கிறார்கள் என்றவுடன், திரும்பி வந்தவ னுக்குப் பெயர்தான் தருமன் என்பது. இதுதான் தருமமா? என்று மக்களிடம் கேளுங்கள்.

நல்லதுதான் செய்திருக்கிறான் பாரதீய ஜனதா. நாம் சும்மா இவையெல்லாவற்றையும் பேச முடியுமா? இதை வைத்துக்கொண்டு, இவை எல்லாவற்றையும் பேசுவதற்கு, மிக அருமையான வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். மறு படியும் தருமர் வந்து, ஆடித் தோற்றுத்தான், 12 ஆண்டுகள் வனவாசம்; அதுதான் மூன்றாவது பருவம் ஆரண்ய பருவம்.
ஆரண்ய பருவத்தில் என்ன நடந்தது என்று நான் உள்ளே சென்றால், அடுத்து அய்ந்து பேர் இங்கே பேசவேண்டும்; நேரம் இருக்காது.
எனவே, இந்தக் குருசேத்திரம் என்று சொல்லுகின்ற கீதையில் நடந்த யுத்தமே நியாயமற்ற யுத்தம். அதனை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
அந்த யுத்தமே நியாயமற்றது. நீங்கள் எண்ணிப் பாருங்கள், பாண்டவருக்காகத் தூது வந்த கிருஷ்ணன் என்ன கேட்டான்?

எவனாவது உரிமை உள்ளவன் இப்படி கேட்பானா?

எங்களுக்கு உரிமையான பகுதியை, பாதி நாட்டை கொடு என்றுதானே கேட்கவேண்டும்.

உரிமை உள்ளவன் அப்படித்தான் கேட்பான். ஆனால், கிருஷ்ணன் என்ன கேட்டான்?

அய்ந்து நாடு கொடு; இல்லையென்றால், அய்ந்து ஊர்களைக் கொடு.
எவனாவது உரிமை உள்ளவன் இப்படி கேட்பானா? கிடைத்தவரை லாபம் என்பது இதுதான்.


அய்யா பெரியார் அவர்கள் சொல்வார், பார்ப்பனியம் என்பதே பலித்தவரை என்று. பலித்தவரை என்பதுதான் பார்ப்பனியம்.

அய்ந்து நாடு கொடு; இல்லை அய்ந்து வீடாவது கொடு; இல்லை அய்ந்து டம்ளராவது கொடு என்பது என்ன நியாயம்?

ஏன் அப்படி கேட்டார்கள் என்றால், அந்த நாடு எந்த விதத்திலும் பாண்டவர்களுக்கு உரியது அல்ல.

திருதராஷ்டனின் தம்பி பாண்டுவாக இருக்கலாம்; ஆனால், நான் சொல்வதைக் கேட்டுக் கோபித்துக் கொள்ளக்கூடாது. கர்ணன் உள்பட, எந்தப் பயலும் பாண்டுவுக்குப் பிறக்கவில்லை என்றுதான் மகாபாரதம் சொல்கிறது.
இந்திரனுக்குப் பிறந்தான், சந்திரனுக்குப் பிறந்தான் என்று சொன்னால், அப்புறம் எப்படி அவர்கள் பாண்டவர்கள். பாண்டுவுக்கே பிறக்காதவர்கள், பிறகு எப்படி பாண்டவர்கள். மனைவியைத் தொட்டால், பாண்டுவின் தலை வெடித்துவிடும் என்ற ஒரு சாபத்தை வைத்துத் திரிகின்றான்.

யார் யாருக்கோ பிறந்தவர்களுக்கு இந்த நாடு எப்படி சொந்தமாகும்?

ஆகவே, குருசேத்திரப் போரும் நியாயமில்லை; அதில் இவர்கள் பேசுகின்ற எந்தச் செய்தியும் நியாயமில்லை. முழுக்க முழுக்க வருண அமைப்பை நிலை நிறுத்துகிற வன்முறையைத் தூண்டுகிற ஒரு நூல் தேசிய நூலாக இல்லை, பாட நூலாக இருக்கக் கூடிய தகுதியும் அற்றது என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி சொல்லி, என் உரையை முடிக்கின்றேன்.

- இவ்வாறு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
                                   ----------------------”விடுதலை”6-01-2015

Read more: http://viduthalai.in/page-4/94022.html#ixzz3O3NhO2ni

12 comments:

தமிழ் ஓவியா said...

காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலையா? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்

மதுரை, ஜன.11_ காந்தி யாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்பதும், கொலைகாரனை புனிதப் படுத்த நினைப்பதும் அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் கண்டனம் தெரி வித்துள்ளார்.

மதுரை கலைஞர் கருணாநிதி நகர் சோக்கோ அறக்கட்டளையில் நேற்று (10.1.2015) பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வழக் குரைஞர் அணி சார்பில் கண்டன கருத்தரங்கு நடந் தது. இதில் வழக்குரைஞர் ரத்தினம் அறிமுக உரை யாற்றினார். சிறப்பு விருந் தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி து.அரிபரந்தாமன் கலந்து கொண்டு காந்தியடிகளைக் கொன்ற கோட்சேவை புனிதமாக்குவதா? என்ற தலைப்பில் பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-

அரசமைப்புச் சட்டத்தை நம்புகிறவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தயக்கம் இருக்காது. எனவே உண்மையின் அடிப்படை யில் நான் கலந்து கொண்டேன். மதங்களின் மீதோ, கடவுள்களின் மீதோ எனக்கு பற்று கிடையாது. இந்து பெற்றோருக்கு பிறந் தவன். எனது குடும்பத்தின ரும், நண்பர்களில் பலரும் மதநம்பிக்கை கொண்ட வர்கள். அவர்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். வள்ளலார் ஆன்மிகவாதி. அவரை பெரியார் போற் றினார். கோட்சே மதப்பேய் பிடித்தவன்

விவேகானந்தர், திரு.வி.க., நீதிபதி வி.ஆர்.கிருஷ் ணய்யர் போன்றவர்களும் மதநம்பிக்கை கொண்ட வர்கள் தான். மதநம்பிக்கை இருக்கலாம். வள்ளலார் தனது பாடலில், மதமெ னும் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார். மதப்பேய் என்ற மதவாதம் கூடாது. கோட்சே, மதப் பேய் பிடித்தவன். அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக் கொள்ளப்பட்டவர் காந்தி. அவரை பிர்லா பிரார்த் தனை மய்யத்தில் 30_1_1948 அன்று நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றான். காந்தி கொலை வழக்கில் அவனுக் காக வாதாட எவரும் முன் வரவில்லை. அந்த கொலை வழக்கில் கோட்சேக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். மகாத்மாவை கொன்றவனையே 18 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்தனர். அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் இந்து மதத்துக்கு துரோகம் செய் தார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதனால் கொன்றேன் என் றான். மதப்பேய் பிடித்ததால் தான் அவன் காந்தியை கொலை செய்திருக்கிறான்.

கொலைகாரனை புனிதமாக்குவதா?

கொலைகாரனை புனிதமாக்குவதை எவரும் விரும்பமாட்டார்கள். அவன் பாவியல்லவா? அப்படிப்பட்டவனுக்கு இந்தியா முழுவதும் சிலை வைப்போம் என்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிரானவர்களை புனிதப்படுத்தாதீர்கள். பகவத் கீதையையோ, பைபிளையோ, குர் ஆனையோ பாடப் புத்தக் கத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறுவது மதவாதம். ஆனால் அவற்றில் உள்ள அறநெறிக்கதைகளை பாடமாக்குங்கள் என்றால் அதை அனுமதிக்கலாம். இஸ்லாமியவாதம், கிறிஸ்தவ மதவாதம் என் றெல்லாம் கூறுகிறார்கள். இந்துத்துவாவை மட்டும் இந்து மதவாதம் என கூறாமல், இந்திய தேசிய வாதம் என்கிறார்கள். இதனையெல்லாம் அரசி யலமைப்பு சட்டத்தை நேசிப்பவர்கள் எதிர்க்க வேண்டும். விவேகானந்தர் கடைசிவரை இந்துத்துவா என்ற வார்த்தையை உப யோகிக்கவே இல்லை. ஒரு பொதுக்கூட்டத்தில், பகவத் கீதை தேசிய நூலாக அறி விக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பேசி யுள்ளார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு அர சியல்வாதி பேசலாம். நீதியரசர் பேசலாமா? அவ ருடைய இந்த கருத்தை தனது தீர்ப்பில் கூறியி ருந்தால் கூட நான் இங்கே சொல்லியிருக்க மாட்டேன்.

பொதுக்கூட்டத்தில் பேசியதால் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/94304.html#ixzz3ObbF9jyE

தமிழ் ஓவியா said...

திருச்சி சிறீரங்கம் பிரம்ம ரதத்தை மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தி கைதானவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்


திருச்சி சிறீரங்கம் பிரம்ம ரதத்தை மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தி கைதானவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்


திருச்சி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரை கோவிலிலிருந்து அவர்களது வீடுவரை பல்லக்கில் சுமந்து செல்வதும், இதனை பிரம்ம ரத மரியாதை என்றும், நீண்டகாலமாக பார்ப்பனர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை சீமான் தாங்கி (பிரம்ம ரதம்) என்று அழைக்கின்றனர்.

பிரம்ம ரதமுறையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சிறீரங்கம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்து உரையாற்றினார். மேலும் பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். மனிதனை மனிதன் (பார்ப்பனர் களை) சுமக்கும் அவலத்தைக் கண்டித்து கடந்த 2011 தி.மு.க. ஆட்சியில் அப்போதிருந்த கோவில் இணை ஆணையர் ஜெயராமன் இந்த முறைக்கு தடைவிதித்தார்.

தடை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையை பார்ப்பனர்கள் அணுகினர். ஆனால், நீதிமன்றம் அவர்களைக் கடுமையாக எச்சரித்து அனுப்பியது.

இந்நிலையில் நீதிமன்ற தடையை மீறி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்கெனவே திட்டமிட் டப்படி பிரம்ம ரத முறையை நேற்று (ஜன.10) நடத்திட ஏற்பாடுகளை செய்து வந்தனர். நேற்று மதியம் 12.30 மணியளவில் ரங்கநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேதவியாசகர், பராசுர பட்டர் ஆகியோர் பிரம்ம ரத முறையை ஏற்றுக்கொண்டு பல்லக்கில் செல்லத் தயாராக இருந்தனர். அப்போது கோவில் வெளியே திராவிடர் கழகத்தினர் மாவட்ட தலைவர் மு.சேகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு விடுதலை செய்யப்பட்டனர். அத்தோழர்கள் நேற்று (10.1.2015) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர்.

மறியலில் ஈடுபட்டு கைதான தோழர்களைப் பாராட்டும் விதமாக, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் சேகர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, தோழர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/94286.html#ixzz3ObcTiLIc

தமிழ் ஓவியா said...

நம் ராமசாமி முன்..


ராமராஜ்ஜியம்
வருகுதாம்
இராவணப் பரம்பரையே
தோள் தட்டு!

இந்து ராஜ்ஜியம்
வருகுதாம்
இந்திர ஜித்தே
வரிந்து கட்டு!

கோட்சே கூட்டம்
வருகுதாம்
கோடை யிடியே
கூர்தீட்டு!

குல தருமம்
வருகுதாம்
கொள்கைக் களிறே
பளிறிடு!

பெரியார் சேனையே
பெயர் கொடு
தற்கொலைப்
பட்டாளத்திற்கே!
சேலத்துச் சங்கை
மீண்டும் எடு!
ஞாலத்தை உலுக்கும்
போர்க்குரல் கொடு!

நம் இராமசாமிமுன்
அந்த ராமன் சாமி
எம்மாத்திரம்!
மீசை முறுக்கு!

பொங்கட்டும் - நம்
விடுதலை மூச்சு
ஓங்கட்டும் - நம்
உரிமையின் வீச்சு!

தை முதல் நாள்
தமிழர் திருநாள்
விதைத்திடுக
வெற்றி முரசை!

பொங்கலோ
பொங்கல்!

கவிஞர் கலி. பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-1/94221.html#ixzz3ObcyTtGr

தமிழ் ஓவியா said...

குயில் இதழில் புரட்சிக் கவிஞர்

போர்! தமிழ்ப் போர்!!

நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது.
தமிழ்மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி.

ஆயினும், தமிழை ஒழிப்பதன் மூல மாகத் தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது.
தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்வி லக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடு நிலை உலகமே சொல்லும்.

தமிழிலக்கியங்கள் தம் வேலையை மன நிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால் குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதிநாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

தமிழ் மொழியில் - தமிழ் இலக்கியங் களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும்.

நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்கும் தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது.

தமிழை ஒழிக்கும் நோக்கமுடைய வர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி, அவர்கள் தமிழரின் அண்டை யிலேயே குடித்தனம் பண்ணுகின் றார்கள். தமிழ்த் தாயை ஒழிக்கச் சொல் லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு.

தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொல்ல நாடோ றும் ஆவன செய்து வரும் ஒரு கூட் டத்தை நம் தமிழரிற் சிலரே நடத்து கிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள்.

எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்த வேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடுஇது. கன்னல் தோறும் கண்டு வரும் இன்னல் இது. என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக!

அந்தத் தீயர்களை வாழ்த்த வேண் டும் அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந் நாள் வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி உணர்ச்சி ஏற்பட்டது.
நல்ல வேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள் அவர்கள் தீமை வளர்க தமிழர்கள் எழுக. உணர்ச்சி பெறுக.

தமிழ் ஓவியா said...

தமிழ்

தமிழிலக்கியங்களில் - _ இன்று உள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித் தமிழில் இல்லையாம். தமிழ்க் கோட்டையிற் புகுந்து கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கைவைத்த கன்னக்கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

வளர்ந்துவரும் தனித்தமிழையும் கலந்து வரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன?
தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவா இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன். தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும்.

தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். விட்டு விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பற்றுக் காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக் கூடாது எவரும்!
சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும்.

ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று.
இந்த அமைச்சரவை, இந்தக் கட்சி. இந்த ஆள், நல்ல அவை. நல்ல கட்சி. நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடு வது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே.

அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டி யவனா என்பது ஒன்றுதான்.

தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல் லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழ ரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்று தான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதி யினனா? நீ வேறு இனத்தவனா? இரு!

அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு. ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு., தமிழின் நலன் கருதிப் போராடுகின் றவனாயிரு! அந்தப் போரில் தலை போவதாயினும் அஞ்சாதிரு!

நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே!
போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக போர்!
தமிழ்த் தாய் வெல்க!
தமிழர்கள் விடுதலை எய்துக!

குயில் 23.2.1960

Read more: http://viduthalai.in/page3/94223.html#ixzz3ObgU5gIA

தமிழ் ஓவியா said...

சுதந்திரத் திராவிடத்தில் ஆரியர் கதி என்ன?

- அறிஞர் அண்ணா

திராவிடநாடு பிரிவினை ஏற்பட்ட பின்பு, ஆரியர்கள் எங்கு செல்வது என்பது பற்றி, ஆரியர்களேதான் முடிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலோ - இந்தியர்கள் முதலிய மைனாரிட்டிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆரியர்களுக்கும் அளிக்கப்படும்.

ஆனால் மூடப்பழக்க வழக்கங்களும், பிறவியில் உயர்ந்தவன் என்பதும், வைதீகமும், வர்ணாச்சிரமமும் இருக்க இடங்கொடுக்க மாட்டோம்.

ஆரியர்களை எங்கும் ஓடிப்போகும்படி சொல்லவில்லை ஆனால், ஆரியர்களுக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லையானால் மேலே பல ஆரியவர்த்தத்திற்கு போகலாம்.

ஆரியர்கள் இந்நாட்டை விட்டு வெகு சுலபத்தில் போய் விட மாட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் விரட்டப்பட்ட போதுதான் வெளியேறினார்கள்.
ஆனால், நாங்கள் ஹிட்லராக இருக்க விரும்பவில்லை.

Read more: http://viduthalai.in/page3/%20_94226.html#ixzz3ObiUvZlE

தமிழ் ஓவியா said...

வால்மீகியின் வாய்மையும்-கம்பனின் புளுகும்!!

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார். ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான்.

உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார். ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?

Read more: http://viduthalai.in/page3/94230.html#ixzz3Obip05UT

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினரைச் சீண்டும் பா.ஜ.க. அமைச்சர்


போபால், ஜன.13_ முஸ் லீம்களின் தொழுகையும் சூர்ய நமஸ்காரம் தான் என மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாராஸ் ஜெயின் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு கடந்த 2007 ஆம் ஆண் டில் இருந்து சூர்ய நமஸ் கார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில்,முஸ்லீம்களின் தொழு கையும் ஒருவித சூர்ய நமஸ்காரம்தான். சிறு பான்மையினரும் சூர்ய நமஸ்காரம் செய்யவேண் டும். ஆனால் விருப்பம் இல்லாத மாணவர்கள் சூர்ய நமஸ்கார நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளத் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜெயி னின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாநில அரசு சூர்ய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் துள்ளது. அந்த நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் ஜெயின் இவ்வாறு தெரி வித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் ஏதாவது கருத்து தெரி வித்து சர்ச்சையில் சிக் குவது வழக்கமாகிவிட் டது என்பது குறிப்பிடத் தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/94368.html#ixzz3Oi8DDH6w

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்கது - இங்கல்ல, கருநாடகத்தில்
அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு

சுடுகாடு


மைசூரு, ஜன.13- கருநாடக மாநிலத்தில் கிரா மங்களில் உள்ள அனைத்து சுடுகாடுகளும் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவானது என்றும், எஞ்சி இருக்கும் சுடுகாடுகளும் அரசின் சுடுகாடு களாக மாற்றப்படும் என்றும் கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் வி.சிறீனிவாஸ் பிரசாத் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் மைசூருவில் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனிவாச பிரசாத் கூறும்போது, இதுகுறித்து அரசு தேவை யான உத்தரவுகளை துணை ஆணையர்களுக்கு பிறப்பித்துள்ளது. சுடுகாடுகளைப் பொதுவாக்கு வதற்குரிய மாற்றங்கள் குறித்து குடியிருப்பவர் களிடமிருந்து எவ்வித எதிர்ப்புகளும் இன்றி அவர்களின் வசதிக்காகவே நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.

அரசு ஆழ்துளைக் கிணறு, மேற்கூரை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைத்து உள்ளூர் பணியாளர்களைக்கொண்டு பராமரிக்கப்படும். இந்த முயற்சியில் ஆட்சேபணை ஏதுமிருந்தால், துணை ஆணையர்கள் இரண்டு ஏக்கர் அளவில் நிலத்தை கிராமத்தில் பெற்று அரசு சார்பில் பொது சுடுகாடு, அத்தியவசியத் தேவைகளுக்கான வசதிகளுடன் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மைசூரு வட்டத்தில் கிராம செயலாளர்கள் சங்கத்தினரின் நாட்குறிப்பு, நாட்காட்டி ஆகிய வற்றை வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனி வாச பிரசாத் வெளியிட்டார். இடுகாடு மற்றும் சுடுகாடுகளுக்கு கிராமங் களில் ஜாதி அடிப்படையில் இருக்கும் பிரச் சினையைத் தீர்க்கும் வகையில் நாங்கள் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவாக ஒவ்வொரு கிராமத் திலும் ஒரேயொரு பொது சுடுகாடு, எரிமேடை அரசு சார்பில் அமைத்திட உள்ளோம். சுடு காடுகள், எரிமேடை ஆகியவை முழுமையாக அரசு சுடுகாடுகளாக அறிவிக்கப்படும்.

மைசூர் மாவட்டத்தில் திரைப்பட நகர் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஒரே இடத்தில் படப்பதிவு நடத்த வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/94375.html#ixzz3Oi8MB7XC

தமிழ் ஓவியா said...

சிறீரங்கம் பிரச்சினை: நீதிமன்றத்தில் சந்திப்போம்!


சிறீரங்கம் ரெங்கநாதன் கோவிலில் ஒரு அக்கிரமம் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறப்புக்குப் பிறகு வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரை யான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரைக் கோவிலிலிருந்து அவர்களின் வீட்டுக்குப் பல்லக்கில் சுமந்து செல்லவேண்டுமாம் - இதற்குப் பிரம்ம ரத மரியாதை என்று பெயராம். இதற்குப் பிரம்ம ரதம் அல்லது சீமான் தாங்கி என்ற பெயரும் உண்டு.

இதே சிறீரங்கத்தில் 2011 (அக்டோபர் 8) இல் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஓர் எச்சரிக்கை செய்தார். இப்படி மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமைக்கு எதிரான நிகழ்வை அனுமதிக்க முடியாது. மீறி சுமந்தால் திராவிடர் கழகம் மறியல் செய்து முறியடிக்கும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.

அப்பொழுது கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடந்துகொண்டும் இருந்தது. இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு பிரம்ம ரதத்தைத் தடை செய்தனர்.

இந்து அறநிலையத் துறை ஆணையர் செயராமன்தான் அத்தகைய ஆணையைப் பிறப்பித்தார். அதனை எதிர்த்து ரங்கநாதன் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கொன்றைத் தொடர்ந் தனர். நீதிமன்றம் அர்ச்சகப் பார்ப்பனர்களை எச்சரித்த தோடு, வழக்கையும் தள்ளுபடி செய்தது. அதன்படி மூன்று ஆண்டுகளாக பிரம்ம ரதம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், திடீரென்று இவ்வாண்டு மீண்டும் பார்ப்பனரைச் சுமக்கும் பிரம்ம ரதத்தைச் செயல்படுத்த முனைந்தனர். தகவல் அறிந்த திருச்சி மாவட்ட திராவிடர் கழகம், அப்படி தூக்கிச் சென்றால் மறியல் செய்வோம் என்று அறிவித்ததது.

கடந்த 10 ஆம் தேதி காலையில் மறியல் செய்த திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்து, நூற்றுக் கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்போடு பிரம்ம ரதத்தினை அரங்கேற்றியுள்ளனர் (ரெங்கநாதன் சக்திமீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை போலும்! கடவுளை மற, மனிதனை நினை! என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை!).

இது ஓர் அப்பட்டமான நீதிமன்ற உரிமை அவமதிப்பே! (Contempt of Court).

தமிழ் ஓவியா said...


மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய ஆணையில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 24.11.2012 அன்று கைசிக ஏகாதசி தினத்தன்று திருவேத வியாச ரெங்கராஜ பட்டர் அவர்கள் கைசிக ஏகாதசி புராணம் வாசித்து, பல்லக்கில் தூக்கிச் செல்வதைத் தவிர இதர மரியாதை களைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை திட்டவட்டமாக ஆணை பிறப்பித்ததற்கு எதிராக அப்பட்டமாக மீறுகிறார்கள் என்றால் எந்தத் தைரியத்தில்?

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்து அறநிலையத் துறை ஆணையரோ, அதிகாரிகளோ நீதிமன்ற ஆணையை மீறுவதற்கு எப்படி துணிந்தனர்?

ஒருக்கால் அமைச்சர்கள் தலையிட்டதால் இந்த அத்துமீறலைச் செய்துள்ளனரா? நீதிமன்ற அவமதிப்பு என்றால், அமைச்சர்கள் யாரும் நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கப் போவதில்லை. தலைமைச் செயலாளரோ அல்லது இந்து அறநிலையத் துறை ஆணையரோதான் கூண்டில் ஏறிப் பதில் சொல்லியாகவேண்டும்.

மாநிலத்தில் உள்ள ஆட்சி - திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இப்படியொரு ஆன்மிகத்தனத்தில் செயல்பட்டு வருகிறது என்று கருதலாமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக கோவில் குளங்கள் என்று சுற்றித் திரிவது, யாகம் நடத்துவது, திராவிடர் இயக்கக் கொள்கைகளுக்கும், அந்தக் கட்சியின் பெயரிலும், கொடியிலும் இடம்பெற்றுள்ள அறிஞர் அண்ணா ஏற்றுக்கொண்ட, வலியுறுத்திய கொள்கை களுக்கு விரோதமானது என்றாலும், அவை சட்டச் சிக்கலுக்குள் வராது.
ஆனால், இப்பொழுது சிறீரங்கத்தில் நடைபெற்று இருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானதாகும். எனவேதான், தமிழர் தலைவர் அறிவித்தார் - நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று.

ஆட்சி அதிகாரம் இருந்தால் எப்படியும் நடந்து கொள்ளலாம்; நீதிமன்ற தீர்ப்புகளையும் தூக்கி எறியலாம் என்ற மனப்பான்மை ஆபத்தானது. இலங்கைத் தீவில் ஆட்டம் போட்ட அதிபரின் கதியை உலகமே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது சிறீரங்கநாதனா வந்து சாட்சி கூறப்போகிறான்? நான் சொல்லித்தான் நடந்தது என்று கூறவா போகிறான்?

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதன் மனிதனை சுமப்பது கேவலம் என்று நினைக்கவேண்டாமா? அப்படி நினைக்கவில்லை என்றால், அதற்குள்ளிருப்பது ஜாதி இறுமாப்பும், ஆணவமும்தான் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

திருக்குறளில் ஒரு குறள் உண்டு:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனுக்கும், பல்லக்கில் அமர்ந்து செல்கின்றவனுக்கும் இடையே உள்ள நிலை மையைச் சுட்டிக்காட்டி, அறத்தின் பயன் இதுதான் என்று கூறவேண்டாம் என்று எவ்வளவு அழகாக மனிதப் பண்பை, உரிமையைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருவள்ளுவர்.

மதத்தை மய்யப்படுத்தி நடக்கும் எல்லாவித அக்கிரமங் களுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் முடிந்த பரிகாரம் அனைத்து ஜாதியினருக்கும், அர்ச்சகர் உரிமை என்ப தாகும். அதனையும் நிறைவேற்றி முடித்து, ஆதிக்கக் கூட்டத்தின் ஆணிவேரை வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!

Read more: http://viduthalai.in/page-2/94394.html#ixzz3Oi8kead7

தமிழ் ஓவியா said...

உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும்.
_ (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/94393.html#ixzz3Oi8t97qi