Search This Blog

20.9.12

சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!



தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:-

நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புகோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோ ருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப் படவே இல்லை.

இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று குவிந்து இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம் போய் குவிந்துள்ள பணத் தையும் உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம் எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.

எல்லா வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லையென்றால், எல்லா வளமும் இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது. மனிதன் மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியோகமான அறிவான பகுத்தறிவினைப் பெற்றுள்ளான்.

அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம் செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப் பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம் ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட் டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.

அவன் என்ன பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்? நமது ரத்தம் என்ன கீழா? அவன் மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று சிந்திப்பதே இல்லை. இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காததுதான்.

1925-லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான் என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925-இல் காங்கிரசை விட்டு விலகிய பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும். சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.

சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில் குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

             ---------------10.7.1965 அன்று முதுகுளத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை" 7.8.1965

4 comments:

தமிழ் ஓவியா said...

இயேசுநாதர் திருமணமானவரா?... புதிய தகவலால் பரபரப்பு!


நியூயார்க்: இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆதாரமும் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

proof jesus was married found on ancient papyrus
Ads by Google
Jesus Son of God
Come to me and I will give you restMy Yoke is easy. My burden is light
cbn.com/StepsToPeace
SHARE THIS STORY
Tweet
13
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.

ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் மேரி மெகதலீன் எனது சிஷ்யையாக இருப்பார் என்று இயேசுநாதர் கூறுகிறார். அடுத்த 2 வரிகளில், நான் அவருடன் வசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் இயேசுநாதர்.

இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம். அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் என்றார்.

ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது தி டாவின்சி கோட் நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மேரி மெகதலீன்?

மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன. மேரி மெகதலீன் இயேசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.

மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் இயேசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மேரி மெகதலீன் குறித்து இயேசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர்.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய் விட்டனர். ஜான் மட்டுமே உடன் இருந்தார். அவருடன் உடன் இருந்தவர் மேரி மெகதலீன். அதேபோல இயேசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர்.

இந்த நிலையில்தான் இயேசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் இயேசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

-----------http://tamil.oneindia.in/news/2012/09/19/world-proof-jesus-was-married-found-on-ancient-papyrus-161752.html

தமிழ் ஓவியா said...

இட ஒதுக்கீட்டில் நமது அடுத்த பணி

தந்தை பெரியார் 134ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதைத் திராவிடர் கழகம் வலியுறுத்தும்; அதற்கான நடவடிக்கைகளில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் சமூக நீதித்திசையில் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினை இது. 60 ஆண்டுகளுக்கு மேலாக இட ஒதுக்கீடு இருக்கிறது. இதற்கு மேலும் இடஒதுக்கீடு தேவைதானா என்கிற வினாவை எழுப்புவோர் உண்டு. மேலெழுந்தவாரியாக இதனைப் பார்த்தால் நியாயம் இருப்பது போன்ற தோற்றம் தென்படலாம்; அது ஓர் இடமாறு தோற்றப் பிழைதான்.

ஏற்கெனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலை வாழ் மக்களுக்கும், இட ஒதுக்கீடு இருந்து வந்துள்ளது என்பது உண்மைதான் என்றாலும் நடைமுறையில் சட்ட ரீதியாக அவர்களுக்கு அளிக் கப்பட வேண்டிய விகிதாச்சார எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

எடுத்துக்காட்டாக மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 149 பேர்களில் ஒருவர்கூட தாழ்த்தப் பட்டவர் இல்லை என்பது கசப்பான உண்மையாகும்.

கூடுதல் செயலாளர்கள் 108 பேர்களில் தாழ்த்தப்பட்டோர் வெறும் இரண்டே இரண்டு பேர் தான். இயக்குநர்கள் மொத்தம் 477 பேர்கள் இருக்கின்றனர் என்றால் இதில் தாழ்த்தப்பட்டோர் வெறும் 17 தான். விகிதாசாரத்தில் சொல்ல வேண்டு மானால் இது வெறும் 2.9 சதவிகிதம்தான். 15 சத விகித இடஒதுக்கீடு எங்கே? 2.9 சதவிகிதம் எங்கே?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் இருவருக்கும் மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது 22.5 சதவிகிதமாகும். (முறையே 15ரூ + 7.5ரூ) ஆனால் நடைமுறையில் இது எவ்வளவுப் பெரிய வீழ்ச்சி என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அய்.ஏ.எஸ். அதிகாரிகளை எடுத்துக் கொண்டாலும் கூட மொத்தம் 3251 எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 13.9 விழுக்காடு இடங்கள் தான் (சட்டப்படி 15 சதவிகிதம் அளிக்கப்படவில்லை) மலைவாழ் மக்களுக்கு 7.3 சதவிகிதம் தான் (சட்டப்படி 7.5 சதவிகிதம் இருக்க வேண்டும்.) பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 12.9 சதவிகிதம்தான் (ஆனால் சட்டப்படி 27 விழுக்காடு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்) தாராள மயம், தனியார் மயம், உலக மயம் (LPG) என்ற கொள்கைகள் காரணமாக பொதுத்துறை களின் எண்ணிக்கை குறைந்து தனியார்த் துறை களும், பன்னாட்டு நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன.

எனவே, சமூக நீதி - இடஒதுக்கீடு என்பது அடுத்த கட்டம் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு நோக்கி கவனம் திரும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இப்பொழுதே அரசுத் துறைகளில் பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு தனியார்த் துறைகளில் முக்கியமான கேந்திரப் பதவிகளில் போய் அமர்ந்து விட்டனர்.

அத்தகையவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே; எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி ஏட்டில் (11.8.2012) வெளிவந்துள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை தரக் கூடியதாக இருக்கிறது.

முன்னேறிய ஜாதியினர் 92.6 சதவிகிதம் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 44.6 சதவிகிதம் அளவுக்குப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்து கின்றனர். இவர்கள்தான் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யும் இடத்தில் இருக்கின்றனர். உயர் ஜாதிக்காரர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் அந்த இடத்தில் அமர்ந்திருக்கும் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கோ, பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ பார்ப்பனர் அல்லாதாருக்கோ வாய்ப்புக் கிடைக்கும் என்பது குதிரைக் கொம்பே! பார்ப்பனர்களின் குணாதி சயத்தை அறிந்தவர்கள் இந்த முடிவுக்குத் தான் வர முடியும்.

மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது குறித்துப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சமூகநீதிப் பிரச்சினையில், இட ஒதுக்கீடு திசையில் திராவிடர் கழகம் எப்பொழுதுமே தொலைநோக்கோடு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கக் கூடிய - அரசியல் சாராத சமூக நீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி இயக்கமாகும்.

எனவே தந்தை பெரியார் பிறந்தநாள் செய்தியாக தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு என்பதில் திராவிடர் கழகம் தன் பணியை முடுக்கிவிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் கூறி இருக்கிறார்.

இதில் கட்சிகளைக் கடந்த அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.
20-9-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

நாமம்!

செய்தி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிழக் குக் கடற்கரை சாலைப் பகுதிகளில் பக்தர்களுக்கு கொழுக்கட்டை - சுண்டல் - அதிமுகவினர் ஏற்பாடு.

சிந்தனை: அண்ணா திமுக என்பதை ஆன்மிக திமுக என்று மாற்றிக் கொள்ளலாம் அல்லவா! வாழ்க அண்ணா நாமம்! 20-9-2012

தமிழ் ஓவியா said...

மதக் குறி

மதக் குறி என்பது மாட்டு மந்தைக்-காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே, மதத் தலைவன் தன் மதத்தைப் பின்பற்று கிறவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்திய குறியேயாகும்.

பெரியார்(விடுதலை, _ 25.5.1950)