Search This Blog

2.1.15

குறளைப் படியுங்கள்!இராமாயணத்தைக் கொளுத்துங்கள்!!புராணப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்கள்!!!

கம்பராமாயணம் இல்லாவிட்டால் கலையும் ஒழுக்கமும் கெட்டிருக்காது!

வாசகசாலை நம் நாட்டில் அதிகமாயில்லை, காரணம் நூற்றுக்குப் பத்து பேர்தான் படித்துள்ளோம். அந்தப் படித்த கூட்டமோ எனின் பார்ப்பானுக்கு அடிமைப்பட்டுள்ளது. 

எனவேதான், பார்ப்பானைவிட நம் இனத்திலுள்ள சில படித்த மேதாவிகள் என்பவர்களின் தொல்லை நமக்கு அதிகமாயிருந்து வருகிறது. இதற்குக் காரணம் பார்ப்பானுக்கு `ஆமாம் சாமி' போட்டால்தான் அவர்கள் வாழ முடிகிறது. அவ்வித வேலை நிலைக்கு நம் சமுதாயம் அடிமைப்-படுத்தப்பட்டிருக்கிறது.
வெள்ளையன் ஆட்சியில் நமக்குப் படிப்பில்லாமல் செய்யப்-பட்டதென்றால் அது அவர்கள் தப்பிதமல்ல. பார்ப்பனர்கள் நடராஜர் கோவிலில் மாடு படுத்து மறைத்திருப்பதைப் போல, நமக்கும் வெள்ளையருக்குமிடையே புகுந்து கல்வி நம் மக்களுக்குத் தாராளமாக வழங்க விடாமல் தடுத்துவிட்டனர். அதனாலேயேதான் வெள்ளையன் வெளியேறியபோது கணக்குப் பார்த்தால் பார்ப்பனர்களே 100-க்கு 100 படித்திருக்கின்றனர்.

இவ்வித நிலையில் இப்பேர்ப்-பட்ட வாசகசாலைகளிலாவது நம் மக்கள் உலக ஞானத்தை ஓரளவாவது பெற முடியும். பள்ளிக்கூடங்களைவிட இவ்வித வாசகசாலைகளினாலேயே மக்கள் பொது அறிவு பெறமுடியும்.
எனவே வாசகசாலைகள் தெருக்கள்தோறும் நம் நாட்டில் பெருக வேண்டுமென்பதே எனது பேராசை.

வாசகசாலைகளில் எவ்வித புத்தகங்களிருக்க வேண்டுமென்று அருமைத் தளபதி அண்ணாதுரை அவர்கள் எடுத்துக் கூறினார்.

நான் புராணப் புத்தகத்தைப் படிக்கவேண்டாமென்று கூறவில்லை. ஆனால், அத்துடன் அதற்கு நேர்மாறாயிருக்கும் நூல்களையும் படிக்க வேண்டும். இராமாயணம் என்று எடுத்துக் கொண்டால் வால்மீகி இராமா-யணமும், கம்பராமாயணமும் படிக்கட்டும். அத்துடன் எங்களது ரூ.1-12-0 விலையிலுள்ள ஏழு புத்தகங்களைக் கொண்ட இராமாயணத்தையும் படித்து இவைகளை எல்லாம் நன்றாகச் சிந்தித்து உண்மையும், உணர்வும் கொள்ளவேண்டும். அதுவே எங்களது கொள்கையுமாகும்.

ஒன்றைத்தான் படிக்க வேண்டும், ஒருவர் சொன்னதுதான் சரி. அதை எதிர்த்துக் கேட்டால் மாபாதகமாகும். நரகம் கிட்டும் என்று கூறி அந்தப் பழக்கத்திலிருந்து வருவதாலேதான் வீரமும், அறிவும் அறமும் பெற்றிருந்த,  நம் நாடும் மக்களும் இன்றைய ஈன நிலைக்கு _ -அடிமை வாழ்வுக்கு ஆளாக நேர்ந்தது.

அண்ணாதுரை அவர்கள் கூறியதுபோல் பஞ்சாங்கத்தை நம்பாதவர்கள் நூற்றுக்கு மூன்று பேர்களாவது இருப்பார்களா என்பது சந்தேகமேயாகும்.
நாங்கள் நேற்று ஒரு பொதுக் காரியத்துக்காக கோச்சுவண்டி வாங்கினோம். விலை பேசி வாங்கிய பிறகு அந்த வண்டி ஓட்டும் தோழரை ஆபீசில் கொண்டுபோய் வண்டியை விட்டுவிட்டுப் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினால், இன்றைக்குப் பணம் வேண்டாம், ஒன்பது மணி முதல் பத்தரை மணிவரை ராகு காலம் என்று, அதுவும் பட்டணத்திலுள்ள கோச்மான் கூறுகிறான் என்றால், இவன் பிள்ளை குட்டியும், கோச்மான் வேலை செய்யாமல் வேறு எப்படியிருக்க முடியும்.


அருமை நண்பர்களே! வண்டியோட்டுபவர் மட்டுமென்ன? ராஜாக்கள் முதல் வீராதிவீரர்கள் கூட இந்தப் பாழாய்ப்போன ராகுகாலம், தலைவிதி, முற்பிறப்பு, கருமம், கடாட்சம் என்ற ஏமாற்றுதலில் சிக்குண்டதனால் அல்லவோ நாட்டை ஆண்ட நம் சமுதாயம் பஞ்சை-களாகவும், பனாதிகளாகவும், பறையர்களாகவும், சூத்திரர்களாகவும் இருக்கிறோம்.

சுதந்திரம் வந்த பின்னும் அதுவும் மதப் பற்றற்ற ஆட்சி என்று கூறிக் கொண்டிருக்கும் 1948- இல் கூடவா ராகுகாலமும், சகுனத் தடைகளுமிருக்க வேண்டும். இதைப்பற்றி எங்களைத் தவிர வேறு யார் சிந்தித்தார்கள், அல்லது தைரியமாகக் கூப்பாடு போட்டார்கள் என்று கேட்கிறேன். இப்படி உயிருக்கு ஊசலாடி அரசியலார் அடக்குமுறைக்கு ஆளாகி நாட்டைப் பிடித்தாட்டும் மூடப்பழக்க வழக்க பார்ப்பனியப் பீடையை ஒழிக்க முன்வரும் எங்கள் தலைமீதா கல் எறிவது? பார்ப்பன அடிமைகளை, குண்டர்களை ஏவிவிட்டுக் கலகம் செய்ய முயற்சிப்பது? இந்த மானங்கெட்ட செய்கைகளுக்கு இனியுமா நாட்டில் இடமிருக்க வேண்டும்?

எனவேதான்,  மனிதன் தான் காணும் விஷயங்களில் உண்மையை அறிய வேண்டு-மானால் வாசகசாலைகள் பெருக வேண்டும். அவ்வித அரிய சேவையை இக்கழகத்தார் வெற்றிகரமாகச் செய்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டு வ.உ.சி. அவர்கள் பேரால் உள்ள இவ் வாசக சாலையைத் திறந்து வைக்க மனமுவந்து ஒப்புக்கொண்டேன்.
* * *
கம்பராமாயணத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கம்பராமாயணம் தோன்றி இல்லாவிட்டால் நம் நாட்டின் கலை, ஒழுக்கம் கெட்டிருக்காது.

வால்மீகி இராமாயணத்தில் ஆரியர்களின் இழிவு நன்றாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கம்பன் அவைகளை மறைத்து அவர்களைக் கடவுளாக்கிவிட்டான். கம்பராமாயணத்தைப் போற்றுகிறவர்கள் ஆரிய அடிமைகளாய்த்தானிருக்க முடியும் என்பதே எனது உறுதியான எண்ணமாகும்.

இராமன் ஒரு சகோதரத் துரோகி, அயோக்கியன் என்றும் கூறுவேன். தம்பியைத் துரோகம் செய்தவன் நாடு பரதனுக்கே உரித்தானதாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதை முன்னமே அறிந்திருந்தும், தசரதன் பட்டாபிஷேகம் செய்கிறேன் என்று கூறியபோது, இராமன் ஒப்புக்கொள்ளலாமா? அப்போதாவது தம்பி எங்கே என்று ஒரு வார்த்தையாவது கேட்டானா? சாதாரணக் குடும்பங்களில்கூட திருமணம் என்றால் அண்ணன் தம்பி எங்கே? பாட்டன் பூட்டன் எங்கே? தங்கை தமக்கை, உற்றார், உறவினரைக் கேட்கிறோமே. பரதனின் பாட்டனுக்குக்கூட கடிதம் எழுதவில்லை. இவைகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகின்றன.
பரதன் வருவதற்கு முன்னதாகவே பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று தசரதன் அவசர அவசரமாக நாள் பார்த்தபோதுகூட, இராமன் ஏன் என்று தடுத்திருப்பானா? இந்தச் சூழ்ச்சியை வேலைக்காரி அறிந்து கொண்ட பிறகல்லவோ பரதனுடைய தாய்க்கு உண்மை தெரியவந்தது. இது எவ்வளவு படுமோசம்.

மகளைத் துரோகம் செய்வதும், தம்பியைத் துரோகம் செய்வதும் மட்டுமல்ல இராமாயணத்திலிருப்பது. ஒருவனுக்கு 60 ஆயிரம் பெண்டாட்டிகள். சென்னை நகர கார்ப்பொரேஷன் கூட போதாது இக்குடும்பத்துக்கு? இந்த அக்கிரமத்தை மகாயோக்கியன் என்று கூறப்படும் இராமனாவது கேட்டானா? அவன் எப்படிக் கேட்க முடியும்?

ஒரு பெண்ணின் மார்பையும், மூக்கையும் மானமின்றி அறுக்கத் துணிந்தவனுக்குப் பெண்ணின் பெருமையைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்?

இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகளைக் கடவுள் என்று கூறும் கம்பன் பித்தலாட்டக்-காரன் இல்லாமல், வேறு எவனாக இருக்க முடியும். அதேபோன்று அவன் எழுதி வைத்த இராமாயணத்தைப் போற்றித் திரிந்தவர்கள் கம்பனின் பித்தலாட்டத்துக்குத் துணை புரிபவர்கள் என்பதல்லாமல், எந்த வகையில் அவர்களை மக்கள் யோக்கியர்களாய்க் கருத முடியும் என்று கேட்கிறேன்.

எனவே, ந்த இராமாயணங்களையும், புராணங்களையும் நம்பினால் நம் நாட்டின் உயர்வும் மக்களின் ஒழுக்கமும் கெட்டுவிடும்.


நம் நாட்டுக்கும் மக்களுக்கும் இரு கண்கள் போன்றிருப்பது குறள். அரசியலார் முதல் மக்கள் வரை அதன்படி நடந்தால்,  நாடு விரைவில் முன்னேறும். அக்கிரமங்களும் அநீதிகளும் இன்றிருக்கும் சீர்கேடான ஆட்சி அலங்கோலங்களும் ஒழியும். அதிலும் சில குறைகள் இருக்கலாம்; அவைகளை நீக்கி நாம் நமது திருக்குறளைப் படித்து அதன்படி நடைமுறையிலும் இருப்போமானால் மீண்டும் நாம் உலகத்துக்கேகூட வழிகாட்டிகளாகவும், நாகரிகத்தை _ ஒழுக்கத்தைக் கற்பிக்கும் கர்த்தர்களாகவும் கூட விளங்கலாம்.

நான் புராணத்தை நம்புகிறவனல்ல என்றாலும், யாரையாகிலும் குறிப்பிடும்போது `எமன்' போல இருக்கிறான் `பிசாசு' போல இருக்கிறது `ஜம்'மென்று இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறோம். எமனைப் பார்த்தேனா அல்லது பிசாசோடு பழகினேனா இந்திர லோகத்தில் `ஜம்'மென்று வாழ்ந்தேனா, பழக்கத்தில் வரப்பட்ட சொற்களை நாம் வழங்குகிறோம். அதேபோன்று அக்காலத்துக்கு வள்ளுவர் சிலவற்றை உவமையாகக் காட்டியிருக்கக்கூடும். அவைகளை விட்டுவிட்டு இனிக் குறள்களையே படிப்போம், போற்றுவோம், அதன்படி நடப்போம் என்ற உறுதி உங்களுக்கு வேண்டும். ஆடு மாடு மேய்ப்பவனுக்குக்கூட இராமாயணம் பாரதம் தெரியும். இராசா சர்களுக்குக்கூட `குறள்' தெரியாது.

நமது பண்டைய பெருமையான ஏடுகள் அழிக்கப்பட்டன. ஆற்றில் எறியப்பட்டன. மிஞ்சியிருப்பவைகளுக்கு பார்ப்பானே அர்த்தமும், விளக்கமும் எழுதி வந்து-விடுகின்றான். அவன் நீதி சொன்னால், பகவான் சொன்னார், அசரீரி சொல்லிற்று. பார்வதிக்கு பரமசிவன் சொல்ல அதை நந்தி கேட்டிருந்து நாரதரிடம் கூற,  நாரதர் ரிஷியிடம் சொல்ல அதை தேசியப் பாஷையில் பிராமணோத்தமர்-களுக்குக் காதில் கூற அதற்கு நான் அர்த்தம் கூறுகிறேன். இதை நம்பு இல்லாவிடில் நரகம் என்று எழுதிவிடுகிறான்.

ஏன், வள்ளுவரையே பார்ப்பானுக்குப் பிறந்தவர் என்று எழுதியிருக்கிறதே! இன்னும் என்ன அக்கிரமத்திற்கு இவர்கள் துணியமாட்டார்கள்.

எனவே, இனியாவது நம்நாட்டின் அரசியல் முதல் மக்களின் ஒழுக்கம் வரை சீர்பட வேண்டுமானால் குறளைப் படியுங்கள். இராமாயணத்தைக் கொளுத்துங்கள். புராணப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்கள்.


எனக்கு யார்மீதும் எந்தக் குறிப்பிட்ட வகுப்பார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ விருப்போ கிடையாது. இனிமேல், நான் ஒன்றும் பட்டத்துக்கோ ஆசைப்பட்டு வாழ வேண்டிய அவசியமுமில்லை, எண்ணமுமில்லை. எங்கள் இயக்கத்துக்கும் அத்தகைய கொள்கை கிடையாது.

எனவே, நம் திராவிட மந்திரிகள் மீதா எனக்குக் கெட்ட எண்ணம் உண்டாகப் போகிறது. அப்படி வேணுமென்றே யாராகிலும் துவேஷப் பிரச்சாரம் செய்தாலும்,  அதை நீங்கள் தான் நம்பலாமா? நமது மக்களும், நாடும் மந்திரிகளும் உள்ளபடியே தன்மானம் பெற்று எவருக்கும் அடிமைப்பட்டிருத்தல் கூடாதென்-பதற்காகவே இவைகளை எடுத்துக் கூறி வருகிறோம்.

ஒன்று மட்டும் உறுதி. நாங்கள் ஒழிந்தாலும் அடக்குமுறைக்கு இரையானாலும், தங்கள் கொள்கை மட்டும் வெற்றி பெற்றே தீரும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதைக் காணப்போகிறீர்கள்.

-------------------------- 7.11.1948 அன்று சென்னை சேத்துப்பட்டு வ.உ.சி. இளைஞர் கழகம் சார்பில் நடைபெற்ற நூல் நிலைய வாசக சாலையினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் ஆற்றிய உரை.- (விடுதலை 10.11.1948)

28 comments:

தமிழ் ஓவியா said...

PK ( (பி.கே) - அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய தரைப்படம

சமீபத்தில் ‘PK’ (Film) என்ற இந்தி திரைபபடம் ஒனறு வெளியாகியுள்ளது. வேற்றுக் கரகத்திலிருந்து பூமிக்கு ஒருவர் வருகிறார். வந்த சிறிது நேரத்திலேயே அவரது ரிமோட் பறி போகிறது. அந்த ரிமோட் இல்லாமல் அவர் வந்து இறங்கிய செயற்கைகோளை திருமப வரவழைக்க முடியாது. அதனால் இப்பூமியில் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தான் கதையின் முழு சாராமசம்.

அபபோது கடவுள், மதம் பற்றிய சந்தேகங்களை பி.கே' என அழைக்கப்படும் அமீர்கான் எழுப்புவது, இன்றைய மதவாதிகளை திணறடிப்பது தான் படம் முழுக்க வரும் காட்சிகள்.

முஸ்லீம், இந்து, கிறித்துவர், சீக்கியர் என அவர்களது கலாச்சார ஆடைகளை அணியவைத்து, அவர்கள் ஒவ்வொருவரும் எந்தமதம் என கேள்வி கேட்கிறார். அந்தந்த ஆடைகளுக்குரிய மதத்தை மற்றவர் சொல்ல ஒவ்வொருவருடைய பெயரைக் சொல்ல வைக்கும் போது முஸ்லீம் உடை அணிந்தவர் இந்துப் பெயரையும் மற்றவர்களும் வெவ்வேறு மதம் சார்ந்த பெயர்களைச் சொன்னதும், ''இப்பொழுது சொல்லுங்கள் இவர்கள் எந்த மதம்?'' என்று கேள்வி கேட்டுவிட்டு, மீசை தாடியுடன் உள்ள ஒருவரை முதலில் சீக்கியர் என்றும், அவரது மீசையை மட்டும் எடுதது விட்டு, முஸ்லீம் என்றும், தாடியை எடுத்ததும் அவரை இந்து என்றும் சொல்லி விளக்கும் போது அரங்கமே கையொலயால் அதிர்கறது.

தன்னுடைய ரிமோட்டை கண்டு பிடிக்க ஒவ்வொருவரிடமும் விசாரிக்கும் போது ''கடவுள் தான் கண்டுபிடிக்க வேண்டும்'' என்ற பதில்களே அனை வரிடமிருந்து வந்ததால் கடவுள் எங்கே என்று படம் முழுக்க தேடுகிறார்.

அப்போது வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பலையை வரவழைப்பதோடு சிநதிக்கவும் வைக்கிறது.

''கடவுள் யாரென்று கேட்க'' சிவன் படத்தை ஒருவர் காட்ட அப்போது 'சிவன' வேடமணிந்த ஒரு கலைஞர் வரும்போது அவரைத் துரத்தி துரத்தி ஓடும்போது அரங்கமே சிரிப்பால் நிரம்புகிறது.

நிர்வாணமாக பீ.கே. ஆடை களை கைப்பறறுகிற காட்சிகள் நகைச் சுவை மட்டுமல்ல நாட்டில் நடக்கும் ஆபாசங்களை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

காதல் விசயத்தைக் கையாளும் போதும் கூட கதாநாயகி ஜகத்ஜனனி என்ற இந்து பெண்ணுக்கும், பாகிஸ் தானைச் சேர்ந்த சர்ஃபரோஸ் என்ற இளைஞனுக்குமான காதலைச் சித்தரிப் பதன் மூலம் மத நல்லிணக்கத்தையும் நாடுகளுக்கிடையேயான நல்லிணக்கத் தையும் வலியுறுத்த முயற்சி செய்துள்ள இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி நமது பாராட்டுக்குரியவர்.

கடவுளைக் காட்டுவதாக சவால் விடுத்த பிரபல சாமியாரான தபஸ்வி ஜிக்கும், பி.கே.க்கும் நடக்கும் உரை யாடலை நேரலையாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பும் இறுதிக்காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது., ஆனால் இறுதியில் ''கடவுள் இருக் கிறார். ஆனால் நீங்கள் சொல்லுகின்ற கடவுள் அல்ல அவர்'' என்று சொல்வது இயக்குநர் சமரசத்திற்கு வந்து விடுகிறார் என்ற ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது.

என்ன செய்ய? படம் சிக்கலில்லாமல் வெளியிடப்பட்டு ஓட வேண்டுமே என அவர் நினைத்திருப்பார்.

இப்படத்தில் அமீர்கானின் நடையும் ஓட்டமும் நடிகர் விக்ரமை நினைவுப்படுத்தினாலும் விக்ரம் அளவுக்கு முழுநிறைவு (ஜீமீக்ஷீயீமீநீவீஷீஸீ) இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் மதவாதிகளின் குறிப்பாக சாமியார்களின் பித்தலாட்டங்களையும், மக்களின் அறியாமையையும் தோலுரித்துக் காட்டுவதில் இப்படம் போல் இதுவரை எதுவும் வரவில்லையென்பது மட்டும் உண்மை. பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல மத நம்பிக்கையாளர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

- பொ. நடராசன் நீதிபதி (பணிநிறைவு), மதுரை.

Read more: http://viduthalai.in/page-2/93804.html#ixzz3NfDNNJzr

தமிழ் ஓவியா said...

பி.கே. திரைப்படத்திற்கு பிகாரிலும் வரி விலக்கு

கடவுளையும், மதத்தையும் கேள்விக்குள்ளாக் கிருக்கின்ற பி.கே. படத்திற்கு உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பிகாரிலும் வரிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது. நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகமாவதைத் தொடர்ந்து படத்திற்கான டிக்கெட் கட்டணம் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பதைக் கட்டுப்படுத்த வரி விலக்கு முடிவை பிகார் அரசு எடுத்துள்ளது. இந்தப் படத்திற்கான வசூல் இதுவரையில் இந்திய திரை உலக வரலாற்றில் இல்லாத அளவில் படம் வெளிவந்த 12 நாட்களுக்குள் 330 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது.

சென்சார் செய்யாமல் 4 படங்கள் தயாரிக்க எனக்கு அனுமதி கொடுங்கள் திராவிட நாட்டை நான் அடைந்து காட்டுகிறேன் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதுபோல் இந்தப் படம் மக்கள் மனதில் கடவுளையும், மதத்தையும் கேள்விக்குள்ளாக்கி சிந்திக்க வைக்கும் என்பதற்கு இந்தப் படத்தின் வசூலே சாட்சியாக உள்ளது என்று திரைப்பட விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/93797.html#ixzz3NfDvU04x

தமிழ் ஓவியா said...

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தில் மூடநம்பிக்கை பற்றிய அறிவியல் பூர்வமான அலசல்


மதுரை, ஜன.2_ 14.12.2014 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடு தலை வாசகர் வட்டத் தின் 24 ஆவது சொற் பொழிவு 144, வடக்கு மாடவீதி (முருகானந்தம் பழக்கடையில் நடை பெற்றது). கூட்டத்திற்கு பொ.நடராசன் தலைமை தாங்கி விடுதலை இம்மாத சிந்தனைபற்றி உரை யாற்றுகையில் பீகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி கூறிய ஆரியர்கள் அன்னியர்களே என்ற கருத்தினை விளக்கிப் பேசினார். செல்லத்துரை வரவேற்புரை கூறினார். பெரியார் பேழை என்ற தலைப்பில் சடகோபன் பேசுகையில், மணியம் மையாரின் தியாகத் தொண்டினை பாரதி தாசன் கவிதை வரிகளில் விளக்கிப் பேசினார். சிறப்பு பேச்சாளரை அறி முகம் செய்து மா.பவுன் ராசா பேசினார். சிறப்புப் பேச்சாளர் பொ.தனராஜ் (தலைமை ஆசிரியர் பணி நிறைவு) பேசுகையில், தலையில் தேங்காய் உடைத்தல் எவ்வாறு மருத்துவ ரீதியாக பாதிப் பினை ஏற்படுத்துகிறது என்பதனை விளக்கினார்.

பாம்புக்கடி, நாய்க்கடி போன்ற விசயங்களில் மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகளை விளக்கிக் கூறி மருத்துவத்தால் எவ் வாறு குணப்படுத்துவது என்பதையும் தெளிவுப் படுத்தினார். காதலர் தினத்தை எதிர்க்கும் இந்துத்துவா வாதிகள் பற்றியும், முரு கன், சிவன், கிருஷ்ணன் இந்திரன் போன்ற கட வுளர்களின் காமலீலை களை நகைச்சுவையோடு எடுத்துக்காட்டி இவை பற்றி இந்துத்துவாவாதிகள் மவுனம் சாதிப்பது ஏன்? என்ற வினாவை எழுப் பினார். கும்பமேளாவில் நிர்வாண சாமியார்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், மும்பை சிவப்பு விளக்கு பகுதியி லிருந்தும், கல்கத்தாவிலி ருந்தும் விலைமாதர் பத் தாயிரம் பேர் காவி உடை யில் வரவழைக்கப்பட்டு சாமியார்களையும், பக்தர் களையும் சந்தோசப்படுத்தி வருவதை எந்த இந்துத்து வாவாதிகள் எதிர்த்தனர் என்ற கேள்வியையும் எழுப்பினார். அவரது பேச்சு சிரிப்பதற்கு மட்டு மின்றி சிந்திப்பதற்கும் ஒரு விருந்தாக அமைந்தது இறுதியில் விடுதலை வாச கர் வட்டச் செயலாளர் அ. முருகானந்தம் நன்றி கூறினார்

Read more: http://viduthalai.in/page-4/93773.html#ixzz3NfEzyo90

தமிழ் ஓவியா said...

சூறையாடப்படும் இயற்கை வளம்


முன்னாள் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மோடி அரசு சமூகத்தை மாத்திர மல்ல சுற்றுப்புறச்சூழலையும் கடுமையாக சீர்குலைக் கும் வகையில் முன்யோசனை ஏதுமில்லாமல் ஆபத் தான திட்டங்களை செய்து வருகிறது என்று கூறி யுள்ளார்.

முன்னாள் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் செய்திதொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், மோடி அரசு தனியார் முதலாளிகளுக்காக சுற்றுப்புறச்சூழல் சட்டத்தில் தேவையற்ற திருத்தங் களைக் கொண்டுவர முயல்கிறது.

வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்த சட்டங்களை திருத்த அமைத்துள்ள டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு பரிந்துரைத்த சட்டதிருத்தம் நடைமுறைப்படுத்தப் பட்டால், கடுமையான பின்விளைவுகளை எதிர்கால இந்தியா சந்திக்க நேரிடும், அக்குழுவால் பரிந்துரைக் கப்பட்ட சட்டத் திருத்தத்தில் பழங்குடியினரின் வாழ்வா தாரம் பற்றி குறிப்பிடப்படவில்லை, வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் பற்றி எந்த ஒரு புதிய சட்டமும் இயற்றப்படவில்லை, வனப்பாதுகாப்பு குறித்து எந்த ஒரு வரிகூட அந்தச் சட்ட திருத்தத்தில் கூறவில்லை. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழுவில் உள்ளவர்கள் முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள். வனப்பாதுகாப்பு குறித்தும் புவியியல் சூழல் குறித்தும் அவர்கள் முற்றிலும் அறியாதவர்களாக உள்ளனர்.

எல்லா சட்டத் திருத்தங்களும் நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு பல்வேறு அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அமைக்கப்படும். எடுத்துக் காட்டாக, போபால் நச்சுக்காற்று விபத்திற்குப் பிறகு நாடு முழுவதுமுள்ள பல்வேறு அறிஞர்களின் ஆலோசனை களைக் கேட்டு எதிர்காலத்தில் இது போன்ற கோரவிபத்துகள் நடக்காவண்ணம் புதிய சட்டங்கள் திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அதுபோல் வனப்பாதுகாப்பிற்கு நாடு முழுவதும் உள்ள வனப்பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைகளைக் கேட்டு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், மோடி அரசு சுற்றுப்புறச்சூழல் சட்டதிருத்தம் குறித்து வனப் பாதுகாப்பு மற்றும் புவியியல் அறிஞர் களிடம் எந்த ஒரு ஆலோசனையையும் பெறவில்லை. விரைவில் இந்தச்சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று உமாபாரதி அவர்கள் கூறியுள்ளார். எந்த விதியின் கீழ் இந்தச் சட்டங்கள் திருத்தப்படும் என்று அரசு தான் பதில் கூறவேண்டும். அப்படி இந்தச் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால், வனப்பாது காப்பு கேள்விக்குறியாகிவிடும். முதலாளிகளின் கண்மூடித்தனமான போக்கால் வனவளம் முழுவதும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் மூலம் எதிர் கால இந்தியா மிகவும் மோசமான சுற்றுப்புறச்சூழல் அபாயத்தைச் சந்திக்கும் என்று ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே உள்நாட்டு முதலாளிகள் கிராம மற்றும் வனப்பகுதி களில் புதிய தொழில் தொடங்க சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டம் பெருந்தடையாக உள்ளதாகவும், அந்தச்சட்டத்தை திருத்துவதன் மூலம் கிராமப்புறங்கள் பொருளாதாரத்தில் சிறந்துவிளங்கும் என்றும் கூறி னார்கள். இதனடிப்படையில் உடனடியாக முன்னாள் தேசியப் பாதுகாப்புச் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் வனப்பாதுகாப்பு குறித்து சம்பந்தமில் லாதவர்களும் முன்னாள் தொழில் துறை அதிகாரி களும் நியமிக்கப்பட்டனர்.

அப்போதே இந்தக் குழு குறித்து பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்தது. இவர்கள் பரிந்துரைத்த சட்ட திருத்தம் அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் முன் வைக் கப்படும் என்று மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது மோடி அரசின் ஒவ்வொரு நகர்வும் கார்ப்பரேட் டுகளின் ஏக போகத்திற்கான நடைப் பாவாடை விரிப்பாக இருக்கிறது.

இதன் விளைவு நாட்டை விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகள் சூறையாடலில்தான் முடியும். இதனைத் தடுத்து நிறுத்தும் சக்தி வெகு மக்களின் கிளர்ச்சியில் தான் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் தேவை விழிப்புணர்வே!

Read more: http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/93796-2015-01-02-10-58-34.html#ixzz3NfGoKy4C

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி...

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம். தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.

அந்தப் பாடல்:

ஆரியம் நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93827.html#ixzz3NfkhuTwQ

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார் பற்றி அண்ணா!


முதலில்லா வியாபாரம்! சோகமில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்கு குறை கிடையாது!

அரசு உரிமையை, அந்தப்புரத்தை அழகு மனைவியை, கொஞ்சும் குழவியை துறந்தார் புத்தர். அவர் துறவி இவர் (சங்கராச்சாரி) மடம். மட ஊழியர், மதியிழந்தோர் தரும்தனம் அத்தனத்தால் பெறு இன்பம் இவற்றிலே நீந்துகிறார். இவர் உபதேசிக்கவும் முன் வருகிறார். ஊராரும் கேட்கின்றனர்.

அதில் எந்த இடத்தில் தமிழகத்தில் அரசு போகத்தைத் துறந்த இளங்கோவடிகள் என்ன காதலையும் கரு தனத்தையும் துறந்த மேகலையென்ன மற்றும் வதிந்த இங்கு துறவிக்கோலமும் துரைமார் வாழ்வுக்கு மேற்பட்டதான வாழ்வும் பெற்றுள்ள ஆரியத் தலைவர் உபதேசம் சொல்கிறார்.

சங்கராச்சாரியார், சாற்றியபடி தாம் நடக்க முன்வர வேண்டும். உழைத்து வாழ ஊராரின் உபதேசகராக இராமல் பாடுபட முன்வர வேண்டும். மடத்தை விட வேண்டும். மாநிதி துறக்க வேண்டும். இதந்தேடல் கூடாது. இனத்தாரை வாழ வைக்கும் இயல்பினை நீக்க வேண்டும். மனிதராக வேண்டும். மனது மறுபிறவி எடுக்க வேண்டும்.

இவை அத்தனையும் அறிஞர் அண்ணா அவர்களால் திரு.மணியன் அய்யர் குறிப்பிடும் முதலமைச்சர் புகழும் காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றி படம் பிடிக்கப்பட்ட கருத்து சித்திரம்.

(ஆதாரம்: திராவிட நாடு - 19.4.42

Read more: http://viduthalai.in/e-paper/93828.html#ixzz3Nfku3ffn

தமிழ் ஓவியா said...

காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?

இந்திய யூனியன் மதசார்பற்றது. ஆதலால் கோவில் நடப்பு, செப்ப னிடுதல் ஆகிய காரியங்களுக்கு அரசாங்கப் பணத்தைச் செலவழிக்கக் கூடாது என்று 7.12.1947 ஹரிஜன் இதழில் காந்தியார் எழுதினார்.

இது எழுதிய 53ஆவது நாளில் காந்தியார் பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93828.html#ixzz3NflE8giq

தமிழ் ஓவியா said...

சாத்தாணியின் புரோகிதம்


நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலே தான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.

(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/93829.html#ixzz3NflSoGI2

தமிழ் ஓவியா said...

கடவுள் அப்பீல் தள்ளுபடி

கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன்.

எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/93829.html#ixzz3NflihIoE

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

துர்க்கை அம்மன்

துர்க்கை அம்மனுக்கு உகந்த நாள் செவ் வாய்க்கிழமையாம் அப் படியானால் செவ்வாய்க் கிழமையன்று இந்துக்கள் கல்யாணம் செய்து கொள்ள மறுப்பது ஏன்? தயங்குவது ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/93792.html#ixzz3NfmsgNKU

தமிழ் ஓவியா said...

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் ஒத்திகை


சூரத், ஜன.2_ குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்த, தீவிரவாத தடுப்பு ஒத்திகையின்போது மாநில காவல் துறையினர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து காணொளி ஒன்றை தயாரித்திருந்தனர்.இதற்கு நாடு முழுவதும் தற்போது எதிர்ப்பு வலுத்துவருகிறது.

கடந்த மாதம் நர்மதா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாத ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டது. இதில் நடித்தவர்கள் தொழுகை நடத்துவது போன்றும், இஸ்லாமிய புனித நூலின் வாசகங்களை உச்சரிப்பவர்கள் போன்றும் நடித்தனர். அவர்கள் அனைவரது தலையில் தொழுகையின் போது அணியும் குல்லாய் இருந்தது. இது காவல்துறையின் ஒத்திகை தொடர்பானது; இதில் தவறு ஏதுமில்லை, அப்படி யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குஜராத் முதல்வர் கூறியிருந்தார். இந்த நிலையில் சூரத்தில் நடந்த ஒரு ஒத்திகையிலும் இதே போன்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அனைவரும் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் போன்றும் அவர்கள் அனைவரும் தொழுகை நடத்துவது போன்றும், அதில் சில சிறுவர்கள் இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. குஜராத் காவல் துறையின் இந்த மதவெறி தொடர்பாக நாடுமுழுவதும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93783.html#ixzz3Nfn7cfI2

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தாத்தா பிறந்த நாள்:டிசம்பர் 2

அய்யாவுடன் முதல் சந்திப்பு

பெரியார் தாத்தாவுடன் சிறுவனாக ஆசிரியர் கி.வீரமணி

என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி. என் ஆசிரியர் அவர்கள் அவரிடம் டியுஷன் படித்த எல்லா மாணவர்களுக்கும் தமிழர் இனவுணர்வு, மொழி உணர்வைத் தூண்டி, குடிஅரசு, திராவிட நாடு வார இதழ்களை அவர் வரவழைத்துப் படித்ததோடு எங்களிடமும் தருவார்.

தமிழ்ப் பெயர் பெற்றேன்

மாணவத் தோழர்கள் பலரும் பெயர் மாற்றங்கள் செய்து கொண்டு அப்படியே அழைத்துக் கொண்டோம். அவர் சுப்பிரமணியம், திராவிடமணியானார். நான் சாரங்கபாணி, வீரமணி என்று அழைக்கப் பெற்றேன். அண்ணாவின் திராவிட நாடு ஏட்டில் வந்த கலிங்கராணியில் வீரமணி ஒரு பாத்திரம்! பாலவேலாயுதம் இளவழகன் ஆனார். ஜெய்சந்திரன் வெற்றித்திங்கள் ஆனார்! இப்படிப் பலப்பல! இப்படிக் கொள்கை உணர்வுடன் வளர்ந்த மாணவர்களை எங்கள் ஆசான் திராவிடமணி ஊக்கப்படுத்தினார்.

அரங்கேற்றம்

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏடு தொடங்கி நடத்திய அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள், திராவிட நாடு ஏட்டுக்குக் கழகத் தோழர்கள் நன்கொடை அளிக்க வேண்டுமென ஒரு வேண்டுகோள் கடிதத்தினை எழுதி, அவரே ரூபாய் நூறும், அச்சுயந்திரப் பொருட்களும் நன்கொடை அளித்திருப்பதையும் குறிப்பிட்ட கடிதம் அய்யா அவர்கள் கையெழுத்திலேயே முதற்பக்கத்தில் வெளிவந்தது.

அந்நிலையில் திராவிட நாடு ஏடு சிறப்பாகத் தொடர்ந்து வெளிவர இயக்கத் தோழர்கள் பல ஊர்களில் நிதி திரட்டி, பொதுக்கூட்டம் போட்டு அண்ணாவை அழைத்து நிதியளித்தனர். கடலூரில் இந்த ஏற்பாட்டினை திராவிடமணி முன்னின்று செய்தார். 112 ரூபாய் (நூற்றுப் பன்னிரெண்டு) பணமுடிப்பு (அப்போது அது பெருந்தொகைதான்) திரட்டிப் பொதுக்கூட்டத்தில் தந்தார். கடலூர் (O.T.) செட்டிக் கோவில் மைதானத்தில் 1943-இல் அப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அண்ணாவுக்கு முன் பூவாளூர் பொன்னம்பலனார் பேசினார். அன்று என்னை அந்த மேடையில் உள்ள மேஜையின் மீது ஏற்றி, என் ஆசிரியர் அரங்கேற்றம் செய்தார். பொதுமேடையில் நான் பேசியது. மனப்பாடம் செய்ததுதான் என்றாலும் தட்டுத் தடுமாற்றம் இன்றிப் பேசிக் கைத்தட்டல்கள் பலமுறை வாங்கினேன்.

* * *

அய்யாவைச் சந்தித்தேன்

1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி..

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்டத் திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இளவயதிலேயே என்னைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த என்னுடைய ஆசிரியர் திரு.ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது.

அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம். எப்போது விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது.

பொழுது விடிந்ததும் நண்பர் திரு.ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க என்னை அழைத்துப் போனார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம்.

அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்று அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்துப் பேசிய அண்ணா அவர்கள் என் பேச்சை வைத்தே தொடங்கினார்.

இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார். அய்யா அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி!

மதிய உணவு இடைவேளையில் என்னைப் பார்த்த அய்யா, அன்புடன், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அய்ந்தாம் வகுப்பு என்றேன். நன்றாகப் படி என்று தட்டிக் கொடுத்தார்கள்.

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி எழுதிய
அய்யாவின் அடிச்சுவட்டில் நூலிலிருந்து..

தமிழ் ஓவியா said...

காகத்திற்குத் தனியாகக் காதுகள் கிடையாது. கண்களுக்குப் பின்புறம் உள்ள சிறு துவாரமே கேட்கப் பயன்படுகிறது.

உயரமாகவும் வேகமாகவும் பறந்து செல்வன ஆர்ட்டிக் டர்ன் பறவைகள். ஒரே நேரத்தில் 1 முதல் 3 முட்டைகள் வரை இடும். ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா பகுதிக்குப் பறந்து செல்லும். (19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம்) ஒரே ஆண்டில் 2 கோடை காலத்தைப் பார்க்கின்ற பறவை இது. தன் வாழ்நாளில் பறக்கின்ற தூரத்தை நிலவுக்குச் சென்றுவரும் தூரத்துடன் ஒப்பிடலாம்.

புளோவர் என்ற பறவைக்கு முதலையின் பல் இடுக்குகளில் உள்ள பொருள்கள்தான் மிகவும் பிடிக்குமாம். முதலையின் வாய்க்குள் உட்கார்ந்து கொண்டு அங்குள்ள உணவுத் துணுக்குகளையும் சிறு புழுக்களையும் சாப்பிட்டு முதலையின் பற்களைச் சுத்தப்படுத்துமாம். இந்தப் பறவை சாப்பிடும்போது, முதலையானது சுகமாக வாயைத் திறந்து காட்டிக் கொண்டிருக்குமாம்.

வாழும் பறவை இனங்களில் மிகப் பெரியது நெருப்புக்கோழி. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடியது. இதன் முட்டையானது 1 கிலோ 350 கிராம் இருக்கும். நீர் அருந்தாமல் பல நாள்கள் வாழும். எதிரிகள் தாக்க வந்தால் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளும்.

நியூசிலாந்து நாட்டில் உள்ள கக்காபோ கிளிகளுக்குப் பறக்கத் தெரியாது.

மனிதர்களைப் போல் சிரிக்கக் கூடிய பறவை கூக்குபரா.

தையல் சிட்டு என்ற பறவை பெரிய இலை அல்லது இரண்டு மூன்று சிறிய இலைகளை எடுத்துக் கொள்ளும். இலையைச் சுருட்டி இரண்டு பக்கங்களிலும் துளையிட்டு நாரால் கூட்டினைக் கட்டிவிடும். பின்னர் அதில் நார், பஞ்சு போன்றவற்றை நிரப்பி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்.

எகிப்திய கழுகுக்கு மிகவும் பிடித்தமான உணவு நெருப்புக் கோழியின் முட்டைகள் ஆகும். கடினமான ஓட்டையுடைய முட்டையை அலகால் கொத்தி உடைக்க முடியாது என்பதால் பெரிய பெரிய கற்களை முட்டைமீது தூக்கிப் போட்டு உடைத்துச் சாப்பிடும்.

புளோவரைத் தவிர பிற பறவைகளை இரையாகச் சாப்பிட நினைக்கும் முதலை, தன்மீது குச்சிகளைப் பரப்பியபடி, அமைதியாக நீரில் காத்திருக்கும். கூடுகட்ட குச்சிகளைக் தேடிவரும் பறவைகள் குச்சிகளை எடுக்க அருகில் வந்ததும் பிடித்துச் சாப்பிட்டு-விடும்.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலேயர்கள் வியந்த ஆங்கிலப் புலமை


சட்ட மேதை என அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் ஆங்கில மொழியில் அதீதப் புலமை பெற்றிருந்தார். கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், உடன் பயின்ற உயர் ஜாதி மாணவர்கள் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட - புறந்தள்ளப்பட்ட அம்பேத்கரின் ஆங்கில அறிவு வளர அவரது தந்தை இராம்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்த இராம்சி அம்பேத்கருக்கும் சொல்லிக் கொடுத்து அறிவை வளர்த்தார். தந்தையிடம் பெற்ற பயிற்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் எழுதுவதிலும், மொழிபெயர்ப்பதிலும் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் பேசுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

படிப்பின்மீது மகனுக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்த தந்தை, புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அறிவாற்றலுக்குத் துணை நின்றார். தன் பெண்களிடம் கடன் வாங்கியோ அல்லது அவர்களது நகைகளை அடமானம் வைத்தோ புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். தான் படிப்பதற்குத் தந்தை செய்த தியாகங்களைப் பார்த்த அம்பேத்கர் தந்தையின் நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நூலறிவினை வளர்த்தார்.

* * *

பின்னாளில் மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியவர்களுள் பரோடா அரசின் மன்னரும் ஒருவர் ஆவார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். எனவே, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர் யாராவது கல்லூரியில் படிக்க முன்வந்தால் பொருளுதவி செய்வதாக கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

இதனைக் கேட்ட அம்பேத்கரின் நண்பர் கிருட்டினாசி பரோடா மன்னருக்கு அவர் பேசியதை நினைவுப்படுத்தி ஒரு கடிதம் எழுதினார். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த அம்பேத்கர், பரோடா மன்னரின் உதவியைப் பெற முழுவதும் தகுதி வாய்ந்தவர் என்பதையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைப் படித்த மன்னர் அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்தார். மன்னர் கேட்ட கேள்விகளுக்குச் சிறந்த முறையில் பதில் அளித்தார் அம்பேத்கர். மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்து ரூபாய் உதவித்தொகை வழங்கும்படி ஆணையிட்டார். அம்பேத்கர் படித்துத் தேர்ச்சி பெற்றார்.

1930ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு அம்பேத்கருக்குக் கிடைத்தது. அம்பேத்கரின் ஆங்கிலப் புலமை அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த பிரிட்டானியப் பேரரசின் தலைமையமைச்சர் இராம்சே மாக்டொனால்டு அம்பேத்கரைப் பாராட்டியுள்ளார். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளிலேயே அம்பேத்கருடைய பேச்சு மிகவும் அருமையானது என்று இண்டியன் டெய்லி மெயில் என்ற நாளிதழ் பாராட்டியுள்ளது.

புரவலர் வியந்த புலமை!

முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் அம்பேத்கரின் படிப்புக்கு உதவி செய்த பரோடா மன்னர் சாயாசிராவும் ஒருவர். அம்பேத்கரின் பேச்சைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார். தம்முடைய உதவியால் படித்தவர் தலைசிறந்த பேச்சாளராக இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைந்தார். தகுதி வாய்ந்த ஒருவருக்குத் தாம் உதவி செய்ததை நினைத்துப் பெருமை அடைந்ததுடன், அம்பேத்கருக்கு விருந்து வைத்துப் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...

ஆரோக்கிய உணவு


மாதுளம் பழம்

இமயமலை மற்றும் எகிப்து இடையேயான பிராந்தியப் பகுதியே மாதுளம் பழத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்தியா, பெர்சியா, மெசபடோமியா, துருக்கி மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் பண்டைக் காலத்திலிருந்து பயிரிடப்பட்டுள்ளது.

பண்டைய பாபிலோனிய நூல்கள் மற்றும் யாத்திராகமப் புத்தகத்தில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கலிபோர்னியாவின் ஸ்பானிஷ் குடியேற்ற மக்களால் 1769ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் புனிகா க்ரேனடம் (Punica Granatum) என்பதாகும். Plantae வகையினுள் Lythraceae குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.

மாதுளை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளில் கிடைக்கிறது. இனிப்புச் சுவையினையுடைய மாதுளை இதயத்திற்கும் மூளைக்கும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இருமலைக் குணப்படுத்தும். புளிப்புச் சுவையினையுடையது வயிற்றுக் கடுப்பினை நீக்கும்.

100 கிராம் மாதுளையில், 83 கலோரி ஆற்றலும், 18.7 கிராம் கார்போஹைட்ரேட்டும், 13.67 கிராம் சர்க்கரையும், 4 கிராம் நார்ச்சத்தும், 1.17 கிராம் கொழுப்பும், 1.67 கிராம் புரோட்டினும் உள்ளன. மேலும் வைட்டமின் B1, B2, B3, B5, B6, B9, கொலைன், வைட்டமின் சி, ஈ, கே, கால்சியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றன சிறிதளவும் அடங்கி உள்ளன.

உடலுக்குத் தீமை தரும் வைரஸ் கிருமிகளை அழித்துவிடும் ஆற்றல் மாதுளைக்கு உள்ளது. நோயின் பாதிப்பில் உடல் நலிந்து சோர்வடைந்தவர் தினமும் சாப்பிட வலிமை பெறலாம். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கும் அதிக வலிமை தரவல்லது.

மாதுளம் பழச் சாற்றினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் கட்டுப்படும், இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது என இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆன்டிஆக்சிடன் அதிகம் உள்ளது. இது அடர்த்தி குறைந்த லிப்போப்ரொட்டீன் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பினை தமனிகளின் சுவர்களில் படிவதைத் தடுக்கிறது.

அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிடு-பவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக் குறைவு என அமெரிக்கப் புற்று நோய் ஆராய்ச்சி சங்கத்தின் கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பேய்கள் செய்த படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தின பிசாசுகள்

யாருக்காக நான் அழ.....?
பாமியான் புத்தர் சிலையை
பீரங்கியால் பிளந்தவர்கள்
பள்ளிக் குழந்தைகளை
துப்பாக்கியால் துளைத்தார்கள்
இரண்டுமே இஸ்லாத்தின்
புனிதப் போரென்று
பெருமையும் தான் பட்டார்கள்.
பக்கத்து நாட்டினிலோ
பாபர் மசூதி இடித்து
பகை நஞ்சை விதைத்தவர்கள்
கொழுக்கட்டைப் பிள்ளையாரை
கொலைக் கருவி ஆக்கியவர்கள்
பெஷாவர் பிள்ளைகளுக்கு
அவசர அவசரமாய்
அஞ்சலி என்று சொன்னார்கள்
இந்தியாவை இடித்து
இந்துராஷ்டிரம் அமைப்பவர்கள்

அண்டை நாட்டின்
அல்லாவின் கொலைகளுக்கு
அனுதாபம் சொரிந்தார்கள்
பேய்கள் செய்த படுகொலைகளுக்கு
அஞ்சலி செலுத்தின பிசாசுகள்
சந்தடி சாக்கில்
வந்ததொரு அறிவிப்பு
இனி பகவத் கீதையே
இந்தியாவின் புனித நூலென்னும்
புத்தம் புது கண்டுபிடிப்பு
தயங்காமல் கொல்
தமையனையும் கொல்
எனும் உபதேசம் புனிதமென்றால்
எதற்கிந்த அஞ்சலிகள்?
ஏனிந்த நீலிக் கண்ணீர்?
எங்கிருந்து வந்தது உம் அனுதாபம்?
கீதை உபதேசித்ததை
குரான் செய்து முடித்திருக்கிறது?
பாராட்ட வேண்டாமா
எதற்காக கண்ணீர்?
கிறிஸ்துமஸ் விடுமுறையில்
குதூகலிக்கும்
குழந்தைகளை
கொண்டாட்டத்தை நிறுத்து
எம்அரசின் புகழ்பாடி
கட்டுரைகள் எழுதுஎன
கட்டளை இட்டவர்கள்
கொடுங்கோன்மை செய்பவர்கள்
குழந்தைகள் கொலைக்காக
சிந்துவது கண்ணீரா?
அனுஷ்டிப்பது அஞ்சலியா?
காட்டுவது அனுதாபமா?
அரசியல்! அரசியல்!!
எல்லாம் அரசியல்!!!
குழந்தைகள் கொலைகூட
கேவலமானது அரசியலால்.
பேய்கள் அரசாண்டால்
பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்றதுவும் இதைத் தானோ?
குரானின் ஜிகாத்தும்,
கண்ணனின் கீதையும்
ஏசுவின் பைபிளும்,
சீக்கியம்
இன்னுமுள்ள
ஏராள மதங்களும்
அவற்றால் ஆன பெரிய
புனித நூல்களும்
கொல், கொல், கொல்லென்றும்
கொல்வது மதக் கடமையென்றும்
எதிரியை மட்டுமல்ல
அவர் வீட்டுக் குழவியையும்
விட்டுவிடாமல் கொல்லென்றும்
உபதேசித்தும்
உருவேற்றியும்
சொல்லியும் செய்தும்
காட்டிய பின்னும்
இவையெல்லாம்
புனிதமென்றும்
போற்றத்தக்க
நூல்களென்றும்
மனிதனை மேம்படுத்தும்
தேவ வாக்கென்றும்
எதைக் கொண்டு
என் பிள்ளைக்கு
நான் சொல்ல?
துள்ளித் திரியும்
பிள்ளைகளைவிட
புனிதம் என்று
ஒன்றுண்டா
இந்த பூமியிலே?
அந்த புனிதங்களை
சுட்டுப் பொசுக்கிய,
பிணங்களாக்கிய
புல்லர்களை
பிள்ளைக் கறி சமைத்த மாபாதகரை
கண்டிக்க வார்த்தையுண்டா?
தண்டிக்கத்தான் வழியுண்டா?
கொலையை தடுக்காதமதமும்
குழந்தையை காக்காத கடவுளும்
மழலைக்கு மயங்காத மனிதனும்
இருந்தென்ன? இறந்தென்ன?
இதில்யாருக்காக நான் அழ?
குழவியைக் கொன்ற
மதத்தின் மரணத்துக்கா?
காக்க மறுத்த
கடவுளின் சாவுக்கா?
மழலையைக் கொன்ற
மனிதமிருகத்தின் மறைவுக்கா?
இல்லை இந்த மூன்றின்
கூட்டுக் கொலை வெறியால்
துள்ளத் துடிக்க
கொடூரமாய் மரணித்த
மழலைகளின் மறைவுக்கா?
காணாமல் போன அவர்தம்
கள்ளமில்லாச் சிரிப்புக்கா?

(முக நூலில் இருந்து: எல்.ஆர்.ஜெகதீசன்)

Read more: http://viduthalai.in/page3/93841.html#ixzz3NlOrCI8d

தமிழ் ஓவியா said...

மோடியின் வராணாசி எதில் முன்னேற்றம்?

மோடி வெற்றிபெற்ற தொகுதியான வாரணாசியில் கருப்பையில் வளரும் குழந்தையை ஆணா? பெண்ணா? என அடையாளம் கண்டு பெண் என்றால் உடனே கருவைக் கலைத்து விடுவதும், இயலாத பட்சத்தில் பிறந்த உடனே கொலை செய்யும் பாதகச்செயல் கடந்த 4 மாதங்களில் ஒரு பணம் பார்க்கும் தொழிலாகவே மாறியுள்ளது. பிரதமர் மோடி நவீன டெக்னாலஜி வளர்ச்சிதான் நாட்டை முன்னுக்குக் கொண்டு செல்லும் என்று கூறியதுமல் லாமல், முஸ்லீம் தலித்துகள் இல்லாத ஜெயபூர் என்ற ஊரை தத்து எடுத்து சாலை எல்லாம் போட்டு வருகிறார். மோடியின் தொகுதி என்பதால் அதிக அளவு வங்கிக் கடன் மற்றும் இறக்குமதி உபகரணங்கள் அளவுக்குமீறி கொடுக்கப் பட்டு வருகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாரணாசி பகுதியில் சிறிய பெரிய மருத் துவமனைகளில் அதிக அளவு கருவி லேயே பாலினம் அடையாளம் கண்டு பிடிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இவை எல்லாம் கருவில் வளரும் சிசுவிற்கு என்ன நோய் இருக் கிறது என்று கண்டறிய வாங்கியவை அல்ல, கருவில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? எனக் கண்டறிந்து பெண் என்றால் கருவைக் கலைக்கவும், இயலாத பட்சத்தில் பிறந்த மறுநிமிடமே கொலை செய்யவும் தான் பயன்படுத் தப்படுகின்றன. இந்தப் பாதகமான செயல் எப்படி வெளி உலகத்திற்கு தெரியவந்தது என்றால் கடந்த இரண்டு மாதங்களாக வாரணாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் பெண் குழந்தை களின் பிறப்பு விகிதம் முற்றிலும் இல்லாமல் போனது, இதை ரகசியமாக கண்காணித்த சில தொண்டு அமைப்புகள் நேரடியாக களத்தில் இறங்கினர். சிறிய பெரிய மருத்துவமனைகளில் வெளியே உடல் சிதைந்த பெண் சிசுக்கள் பல வேதி திரவங்கள் பூசப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது.

முக்கியமாக லகோதா சந்திரபூர் போன்ற ஊர்களில் உள்ள மருத்துமனை களின் வெளியே பல்வேறு கொலை செய் யப்பட்ட சிசுக்களின் உடல்கள் தொண்டு அமைப்பினரால தோண்டி எடுக்கப் பட்டது. தொண்டு அமைப்பின் புகாரை அடுத்து மாவட்ட மாஜிஸ்ட்ரேட் சதர் அன்கித் அகர்வால் தலைமையில் மருத் துவர்கள் மற்றும் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பல்வேறு மருத்து வமனைகளில் சோதனை நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான கருவில் வளரும் குழந்தை பாலின அடையாளம் காணும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் சரிவர இயங்காத பழுதடைந்த இயந்திரங்களாகும், மேலும் இவற்றை இயக்குபவர்கள் அனைவரும் சரிவர பயிற்சி பெறாதவர்கள் எனக் கண்டறியப்பட்டது.

முக்கியமாக சந்திரபூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட அரை டஜன் இயந்திரங்கள் முற்றிலும் பழுதடைந்த வைகளாக இருப்பது கண்டறியப்பட்டது. சிந்துகிரி பாக் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்திய போது அந்தகடையில் பல்வேறு அல்ட்ரா சவுண்ட் போர்டபில் மெஷின் (சிறிய வகைபாலினபரிசோதனை கருவி) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்தக் கடை நவீன உபகரணங்களை விற்க எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. நகரம் முழுவதும் தற்போது மாஜிஸ்ட்ரேட் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. இப்பாதகச் செயல் தொடர்பாக இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் குறித்து சிசுக் கொலைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர்ந்த தொண்டு அமைப்புகளை பத்திரிகையா ளர்கள் தொடர்பு கொண்டபோது அவர்கள் எதுவும் பேச மறுத்துவிட்டனர்.

(நவபாரத் - இந்தி இதழ் 13.12.2004)

Read more: http://viduthalai.in/page7/93847.html#ixzz3NlRwwPJl

தமிழ் ஓவியா said...

தகவல் களஞ்சியம்

தையல் எந்திரத்தைக் கண்டறிந் தவர் மெட்ரிக்சிங்கர் இவர் இதைக் கண்டறிந்த விதம் மிக சுவாரசியமானது. தையல் எந்திரத்தின் எல்லாப் பாகங் களையும் கண்டறிந்த சிங்கர், ஊசியை மட்டும் அதில் எவ்வாறு பொருத்துவது என்று ரொம்பவே யோசித்தாராம். பின்னர் படுக்கைக்கு சென்றதும் ஒரு கனவு கண்டார். காட்டுவாசிகள் கூட்டம் கையில் கூர்மையான ஈட்டிகளுடன் அவரைச்சுற்றி நின்று நடனம் ஆடு கிறது. அந்த ஈட்டிகளின் முனைகளில் துளைகள் இருந்ததை பார்த்துவிட்டார். உடனே சிங்கருக்கு பொறி தட்டியது. அதன் மூலம் தையல் எந்திரத்தில் ஊசியை பொருத்தி தீர்வு கண்டார்

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் டி.வி. அல்லது கணினித் திரையைப் பார்த்துக் கொண் டிருப்பவர்களுக்கு இதயநோய் ரிஸ்க் இரண்டு மடங்கு அதிகம்.

யானைகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தூங்குகின்றன. யானை ஒரே இடத்தில் தொடர்ந்து 8 மணி நேரம்கூட நிற்கும்.

(நூல்: அறிவியல் செய்திகள் களஞ்சியம்)

Read more: http://viduthalai.in/page7/93848.html#ixzz3NlS5Vutd

தமிழ் ஓவியா said...

ஆத்மா மற்றொரு மோசடி

தந்தை பெரியார் அவர்கள் கடவுளை கண்டு பிடித்தவனை மன்னிக்கலாம். ஆத்மாவைக் கண்டு பிடித்தவனை மன்னிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஆத்மா என்பதற்கு என்ன விளக்கம் சொன்னார்கள்? அது கண்ணுக்குத் தெரியாது. கூடுவிட்டு கூடு பாயும், என்று இதை நம்முடைய தமிழ்ப் புலவர்கள் என்ன செய்தார்கள்? ஆத்மாவை ஆன்மாவாக ஆக்கி ஆன்மாவை ஆன்மீகமாக்கி அதற்கப்புறம் ஆன்மீகத்தை ஆன்மீக சொற்பொழிவுகளாக ஆக்கி வைத்துவிட்டார்கள்.

இங்கே அறிஞர்கள் இருக்கின்றீர்கள். இனிமேல் சாதி என்றுகூட எழுதக் கூடாது. நம்முடைய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டது என்பதைக் காட்டுவதற்கு ஜாதி என்றே எழுத வேண்டும். இதை என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சொல்கின்றேன் (கைதட்டல்)

நமது சரக்கு வேறு. அவர்களுடைய சரக்கு வேறு என்று தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பாலையும் நீரையும் பிரிக்க முடியாது. பாலோடு மண்ணெண்ணெயை ஊற்றினால் பளிச்சென்று தெரியும். இது வேறு, அது வேறு என்று. அது மாதிரி ஆரியம் வேறு, தமிழ் வேறு. ஒரு காலத்தில் தூக்கி எறியப்பட்ட கருத்துக்கள் ஆட்டம் போடுகின்றன. உலகத்தில் உள்ள கழிவுப் பொருள்களை எல்லாம் நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். ஆத்மா கூடு விட்டு கூடு பாய்கிறது என்று சொல் கின்றார்கள். ஆத்மா ரொட்டேசன் ஆகிறது.

தந்தை பெரியார் ஒரு முறை பளிச் சென்று கேட்டார். பெரிய ஆராய்ச்சிக் கெல்லாம் போகவில்லை. குப்பனுக்கும், சுப்பனுக்கும் விளங்க வேண்டும் என்ப தற்காகச் சொன்னார்.

இங்கிருந்து ஆத்மா கிளம்பி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்தால் உலகம் தோன்றிய பொழுது எவ்வளவு மக்கட் தொகை இருந்ததோ அவ்வளவு தானே இன்றைக்கும் இருக்க வேண்டும். இன்றைக்கு எப்படி இவ்வளவு ஜனத் தொகை வளர்ந்தது. ஆத்மா என்ன கட்டிப்போட்டால் குட்டி போடுகின்ற சங்கதியா? என்று கேட்டார். அய்யா, ஆத்மா மறுப்பு வாசகத்தை எவ்வளவு விஞ்ஞான பூர்வமாக சொல்லியிருக் கின்றார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

தந்தை பெரியார் ஒரு விஞ்ஞான ரீதியான சிந்தனையாளர். ஒருவர் இறந்து போகிறார். அவரை கொளுத்துகிறோம் அல்லது எரிக்கிறோம். கீதை கருத்துப்படி ஆத்மா புறப்பட்டு இன்னொரு கூட்டுக் குள் செல்கிறது. அது உடனே குழந் தையாகப் பிறந்து விடுகின்றது.

அடுத்த கேள்வி அய்யா கேட்டார் - அப்படியானால் நரகத்தில் ஆட்கள் எப்படி இருக்கிறார்கள்?

(நூல்: பகவத்கீதை இதுதான் - கி.வீரமணி)

- தகவல்: க.பழநிசாமி (தெ.புதுப்பட்டி)

Read more: http://viduthalai.in/page7/93851.html#ixzz3NlSYLtK6

தமிழ் ஓவியா said...

மோசமான 2014


2014 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 87 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். என சிபிஜே (பத்திரியாளர்களுக்கான் பாதுகாப்பு ஆணையகம்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் பத்திரிகைத் துறையைச்சார்ந்தவர்கள் தினசரி ஏதாவது ஒரு நெருக்கடிக்கு ஆளாகிக் கொண்டுள்ளனர். முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் உள்ள பத்திரிகை யாளர்கள், மற்றும் மத்திய ஆசிய நாடு களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் கடுமையான நெருக்கடியின் கீழ் பணியாற்றிவருகின்றனர். தென் அமெரிக்காவில் அர்ஜண் டைனா, பெரு போன்ற நாடுகளில் இந்த ஆண்டு 17 பத்திரிகையாளர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும், ஊழல் அரசியல்வாதிகளால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதி களால் தலைவெட்டிக் கொலை செய்யப்பட்ட 8 பத்திரிகையாளர்களும் அடங்குவர். ஆப்கானில் அஞ்ச நிட் ரிங்கஸ் என்ற பத்திரிகையாளர் சித்திர வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உலகை உலுக்கிய சம்பவமாகும்.2011-ஆம் ஆண்டு 79 பத்திரிகையாளர்கள் கொல் லப்பட்டனர். இதனை அடுத்து இந்த ஆண்டு அதிக அளவில் கொல்லப்பட் டுள்ளனர். இந்தியா, சிறீலங்கா, பாகிஸ்தான், மற்றும் நேபாள் போன்ற் நாடுகளில் பத்திரிகையாளர்கள் கடும் நெருக்கடிகளுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். இங்கு பத்திரிகையாளர் களுக்கு எதிராக நடக்கும் படுகொலைகள் திசை திருப்பப்பட்டுவிடுகின்றன. உக்ரைன் மற்றும் வடக்கு ஆப்ரிகக நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதலின் போது அசோஸியேசன் பிரஸ் நிறு வனத்தில் பத்திரிகையாளர்கள் சிமோன் கமிலி மற்றும் மொழிபெயர்ப்பாளர் அபு அஃபாஸ் இருவரையும் குறிவைத்து இஸ்ரேல் துருப்புகள் தாக்குதல் நடத்தியது.

எபோலா நோயின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எபோலா நோய் பற்றிய செய்தியை மக்களிடையே எடுத்துச்சென்ற மகத்தான பணியைச்செய்துள்ளனர். முக் கியமாக் உலகில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்கள் பற்றிய முழுமையான தகவல் வெளி வரவில்லை, அல்லது அந்த அரசுகளால் அச்செய்தி மறைக்கப்படுகிறது. பத்திரி கையாளர்களின் மரணம் என்பது மக்கள் உரிமைகளின் மரணம் என்று நியூயார்க் நகரில் உள்ள தலைமையகத்தில் இருந்து சி.பி.ஜெ அமைப்பு வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page7/93852.html#ixzz3NlSh9NSH

தமிழ் ஓவியா said...

ஆண்டாள் என்று ஒருவர் இருந்தாரா? இதோ ஆச்சாரியார் பதில்


மார்கழி மாதம் - போட்டிப் போட்டுக் கொண்டு சில நாளேடுகள் நாள்தோறும் ஆண்டாள் பாடியதாக திருப்பாவையிலிருந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றன. உண்மையிலே ஆண்டாள் என்ற பக்தை இருந்தாளா? இல்லை என்று மறுப்பவர் யார் தெரியுமா? வைணவப் பக்தரான சாட்சாத் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தான் அப்படி சொல்லுகிறார் இதோ அவர்.

ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி என்னும் ஆங்கில மாதப் பத்திரிகையில் (1946 செப்டம்பர் இதழில்) எழுதினாரே! இதற்கு என்ன பதில்?

Read more: http://viduthalai.in/e-paper/93857.html#ixzz3NlUSl5Wr

தமிழ் ஓவியா said...

காலத்துக்கேற்ற...


காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனா வான். - (குடிஅரசு,26.1.1936)

Read more: http://viduthalai.in/page-2/93860.html#ixzz3NlUxNMG7

தமிழ் ஓவியா said...

மலேயா தமிழர்கள்


மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17 - 01 - 1932ல் அகில மலேயா தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண் டாற்றிவரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். அய்யாறு, தாமோதரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலான வர்கள் அம்மகாநாட்டில் அதிகமானப் பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள்.

அந்த மகா நாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக் கின்றன.

அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங்களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் அகில மலேயா தமிழர் மகாநாடு என்பதை அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு என்று மாற்ற வேண்டும் என்பதும் முக்கியமான தீர்மானங்களாகும்.

இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங்களைச் சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறையில் செய்ய வேண்டு மென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இத்தீர்மானங்களை யெல்லாம் நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர்களும் சீர்திருத்த ஆர்வமுடைய தோழர்களும் இவைகளை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார்களென்று நம்புகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 07.02.1932

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNQerAz

தமிழ் ஓவியா said...

உள்ளத் தூய்மை கொண்டோர் முகத்திலே கொடுமை சாயல் கொண்டி ராது. நல்ல பழக்க வழக்க முறைகள் கொண்ட நாட்டில் நல்ல நிலைமை யும், கெட்ட பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் கேடுகளும் நிலவும், அவரவர்களின் செய் கைகளுக் கேற்ப முகமும் உடலும் தோற்றமும் ஏற் படுகின்றன; அதற்கேற்றபடி பலனும் அடைகின்றனர்.
மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவன் அல்ல. மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவன் ஆவான். இம்சை செய் யாமல் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழத்தகும் அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால், அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி மனிதத் தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறிவிட்டது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/e-paper/93892.html#ixzz3NoNayHIb

தமிழ் ஓவியா said...

பூனைக்கும்? பாலுக்கும்?


இந்திய சட்டசபையில் மேன்மை தங்கிய வைசிராய் என்ன பிரசங்கம் செய்யப்போகிறார் என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் அனேகர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பிரசங்கமும் சென்ற 25 - 01 - 1932 தேதியில் வெளிவந்து விட்டது. அதில் குறிப்பிடத்தகுந்தபடி விஷயம் தற்கால சட்டமறுப்பைப் பற்றி ராஜப்பிரதிநிதி அவர்கள் சொல்லியிருக்கும் விஷயமேயாகும்.

மேன்மைதங்கிய ராஜபிரதிநிதியவர்கள் சண்டைக்கு இழுக்கப் பட்டால் எந்த அரசாங்கம் பின்வாங்கி நிற்கும்? என்று கேட்கும் கேள்வியும், சட்டமறுப்புக்கு விரோதமாக இப்பொழுது அமலில் உள்ள முறைகள் அவசியமாக இருக்கக் கூடிய வரையில் அவைகள் தளர்த்தப்படவே மாட்டா என்று கூறி இருப்பதும் மிகவும் கவனிக்கக் கூடிய விஷயமாகும்.

அதிலும் காங்கிரஸ் காரர்கள்பால் அனுதாபம் காட்டுவதன் மூலம் தேசாபிமானிகள் என்று காங்கிரஸ்காரர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றும், சட்டமறுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலைமையில் இருப்பதன் மூலம் அரசாங்கத்தார்க்கும் நல்லபிள்ளைகளாக இருக்க வேண்டுமென்றும் தடுமாறிக் கொண்டிருக்கின்ற கோழைத் தலைவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

அவசரப்பட்டு சட்டமறுப்பைத் தொடங்கியவர்கள் காங்கிரசின் குட்டித் தலைவர்களென்பது நாடறிந்த விஷயமாகும். ஆனால் திரு.காந்திக்கு இராஜப்பிரதிநிதி பேட்டி கொடுத்துப் பேசியிருந்தால் சட்டமறுப்பியக்கம் இவ்வளவு கஷ்டமான நிலைமைக்குப் போயிருக்காதெனவும், ஆகவே ராஜப்பிரதிநிதியவர்கள் திரு. காந்திய வர்களுக்குப் பேட்டியளிக்க மறுத்தது தவறு எனவும் இந்த நடுநிலைமைக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் இவ்வாறு சொல்லுவதிலும் ஒரு சிறிதும் அர்த்தமில்லை என்றுதான் நாம் சொல்லுகிறோம். உண்மையில் திரு. காந்தியவர்கள் சமாதானப் பிரியமுடையவராயிருந்தால் காங்கிரசின் சர்வாதிகாரி யாகிய தன்னுடைய அனுமதியும் இல்லாமல் குட்டித் தலைவர் களால் தொடங்கப்பட்ட சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு ராஜப்பிரதிநிதி அவர்களுடன் சமாதானம் பேச முன்வருவாரானால் அது நியாயமாக இருக்கும்.

அப்பொழுது ராஜப்பிரதிநிதியவர்கள் சமாதானம் பேச மறுத்திருந்தால் காங்கிரஸ் தன்னுடைய கொள்கைப்படி சட்டமறுப்பு ஆரம்பித்திருக்கலாம். அப்பொழுது இந்த நடுநிலைமைவாதிகள் கூறும் ராஜப்பிரதிநிதி காந்திக்குப் பேட்டியளிக்க மறுத்துவிட்டது தவறு என்று சொல்லுதவற்கு அர்த்தமிருக்க முடியும்.

இது நிற்க, சட்டமறுப்பியக்கத்தால் ஒரு காரியமும் நடக்கப் போவதில்லை என்பது நமது நேயர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமே ஒழிய வேறில்லை இதுவரையிலும் நடந்த சட்டமறுப்பினால் நமக்கு கிடைத்த பலன் என்ன என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இது விளங்காமல் போகாது, சட்ட மறுப்பு இல்லாமலிருந்தால், வட்டமேஜை மகாநாட்டுக் கமிட்டிகளின் வேலை இன்னும் திறமையாகவும், தாராளமாகவும், விரைவாகவும், நடந்து முடியக்கூடும்.

இப்பொழுது கொஞ்சம் சீர்பட்டிருக்கின்ற தொழில்களும், வியாபாரங்களும், விளைவுப் பொருள்களின் அக விலைகளும் இன்னும் கொஞ்சம் சீர்படக்கூடும். சட்டமறுப்பு நடை பெறுவதால் இவைகள் பாதகமடையக் கூடுமேயொழிய நமது நாட்டிற்கு வேறு கடுகளவு நன்மை கூட உண்டாகப் போவ தில்லையென்று ஆரம்பமுதல் கூறிவந்ததையே இப்பொழுதும் கூறுகிறோம்.

ஆகையால், சட்டமறுப்பு இயக்கத்தில் சிறிதும் நம்பிக்கையில்லா விட்டாலும் அது நாட்டுக்குத் தீமை விளைவிக்கும் பயனற்ற வழி என்று எண்ணிக் கொண்டிருந்தாலும், பாமர மக்களின் தூற்றுதலுக்கு பயந்து பேசாமலிருக்கும் ராஜீயவாதிகள் தமது கோழைத்தனத்தை விட்டுவிட்டு தைரியமாக சட்டமறுப்பை அடக்குவதற்கு உதவி செய்வதே சிறந்த காரியமாகும்.

சட்டமறுப்பு நின்றால் அவசர சட்டங்களும் நீக்கப்படும் என்னும் கருத்தைத் தெளிவாக இராஜப்பிரதிநிதியவர்கள் தமது பிரசங்கத்தில் கூறி யிருப்பதைக் கவனித்து ஆவன செய்வதே கடமையாகும். பூனைக்குத் தோழன் பாலுக்குக் காவல் என்று சொல்லிக் கொண்டு வாழுகின்ற சமயம் இதுவல்ல என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 31.01.1932

Read more: http://viduthalai.in/e-paper/93894.html#ixzz3NoOBoAlt

தமிழ் ஓவியா said...

ராமன்பற்றி...

அம்பேத்கர் எழுதிய புத்தகத்திலிருந்தும் ராமா யணம் பற்றிய கருத்துக் களிலிருந்தும் சிலவரிகள்...

English quotes are Quoted from: Appendix No.1 of Part 3 of the bookRiddles of Hinduism 1995 By Dr Baba saheb B.R.Ambedkar

1. ராமர் மற்றும் அவ ரது சகோதரர்கள் பிறப்பே சிறிது யோசிக்க வேண்டிய விசயம். முனிவர் கொடுத்த பிண்டங்களை சாப்பிட்ட தால் பிறந்தார் என்பது; சரி, அப்படியே முனிவர் கொடுத்த பிண்டத்திலி ருந்து வந்தவருக்கு தகப் பன் எப்படி தசரதனாக இருக்க முடியும்? மகா பாரத கர்ணன் சூர்ய குமாரன் என்றால் ராமர் முனிபுத்ரன் தானே?!

2. ராமாவதாரத்தில் அவருக்கு உதவ வான ரப்படைகளை தேவர்கள் விபசாரம் செய்தும், அடுத் தவர்கள் மனைவியைப் புணர்ந்தும் உருவாக்கி னார்கள்! ஒரு ஏகபத்தினி விரதனை உருவாக்க ஏகப்பட்ட பத்தினிகள் புணரப்பட்டனர்!

3. ராமனின் காமம் மற்றும் அவரது ஏகப்பட்ட பத்தினிகள்...

Mr. C.R. Sreenivasa lyengar's translation of Valmiki Ramayana says: " Though Rama had married Sita to be the queen, he married many other wives for sexual pleasure in accordance with the royal customs. (Ayodhya Kandam 8th Chapter, page 28). (The term "Rama's wives" has been used in many places in Ramayan).

4. தந்தையை கேவல மாகப் பேசிய தசரத ராமன்... Rama called his father "A FOOL, AN IDIOT" (Ayo dhya Kandam, 53rd Chapter).

5. வர்ணாசிரம வெறி யன் ராமன்... சூத்திரன் தவம் செய்தல் ஆகாது என்று ஒரு பாவமும் செய் யாத சம்புகனை கொன்ற பாதகன் ராமன்..

Sambuka was slain (by Rama) because he was making penance which was forbidden to him by Vedas as he was a "Shudra" (Uttara kan dam, Chapter 76).

இதுபோன்ற வினாக் களுக்கு விடைகளை எந்தக் கொம்பர்களும் கூறியதில்லை.

தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட இராமாயணப் பாத்தி ரங்கள் எனும் நூல் முதல் பதிப்பாக 1944இல் வெளி வந்துள்ளது. 15ஆம் பதிப்பு 2012இல் வெளியானது. பல லட்சக்கணக்கான நூல்கள் மக்களை சென்று அடைந் துள்ளன.

இந்நூல் ஆங்கிலத்தில் “Ramayana - A True Reading” என்ற பெயரிலும் இந்தியில் சச்சு இராமா யணா என்ற பெயரிலும் வெளி வந்துள்ளன.

இவற்றிற்கெல்லாம் ஒரு வரி மறுப்பை ஜீயர் முதல் சங்கராச்சாரியார் வரை பிரதிவாதி பயங்கரம் ஆசாமிகள் வரை யாரா லும் சொல்லப்பட முடிய வில்லை.

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதுதான் எத்தகைய உண்மை! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93902.html#ixzz3Nr1Ofo30

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

போட்டிக் கடைகளா?

வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி, சைவர்களுக்குச் சிவன் ராத்திரி இவை என்ன போட்டிக் கடைகளா?

Read more: http://viduthalai.in/e-paper/93908.html#ixzz3Nr25Z7ZP

தமிழ் ஓவியா said...

காந்தியார் படத்துடன் பீர் விளம்பரம்: ஆந்திராவில் வழக்கு பதிவு

புதுடில்லி, ஜன. 4_ அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் உல கம் முழுவதும் மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம் காந்தி பெயரில் ஒரு வகை பீர் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பீருக்கு பல நாடுகளில் வர வேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அமெ ரிக்க நிறுவனம் காந்தி பீர் டின்களை புதுமையான முறையில் வெளியிட்டுள் ளது. அந்த பீர் டின்னில் காந்தியார் படம் இடம் பெற்றுள்ளது.

மதுபான விற்பனைக்கு காந்திபடம் பயன்படுத்தப் பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தியார் படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் ஆந் திர மாநிலம் நம்பள்ளி நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொட ரப்பட்டுள்ளது. வழக்கு ரைஞர் ஜனார்த்தன கவுடா என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

அவர் தன் மனுவில், இந்தியாவில் விற்ப னையை அதிகரிக்க வேண் டும் என்பதற்காக அமெ ரிக்க மது நிறுவனம் இத் தகைய செயல்களில் ஈடு பட்டுள்ளது. அவர்களது செயல் கண்டனத்துக்குரி யது. பீர் டின்னில் காந்தி யார் படத்தை அச்சிட் டதற்காக தேச கவுரவச் சட்டம் 1971 பிரிவு 124 (ஏ)யின்படி அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.

காந்தியாரை இழிவு படுத்தி இருப்பதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாது.

இவ்வாறு அவர் தன் மனுவில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93907.html#ixzz3Nr37PVAq