Search This Blog

8.4.14

ஜாதிப் பித்தலாட்டம்! - பெரியார்



ஜாதி என்பது சுத்தப் புரட்டு. அயோக்கியர்களால் கற்ப்பிக்கப்பட்டு, முட்டாள்களால் ஒப்புக் கொள்ளப்பட்டு, மானற்ற மக்களால் நடைமுறையில் பின்பற்றச் செய்யப்பட்டு வருகிறது.

மத சம்பிரதாயப்படியாக நான்கு ஜாதிகள் சொல்லப்பட்டாலும், இவற்றுள்
மூன்று ஜாதிகள் தான் பிறவியினால் இருப்பதாகச் சொல்லப்படுபவைகளாம். அவை மற்றபடி இரண்டாவது சத்திரிய, மூன்றாவது வைசிய, நான்காவது சூத்திரர்கள் எனப்படுபவையாகும். முதலாவது ஜாதி என்று சொல்லப்படும் பிராமண ஜாதி என்பது பிறவியால் ஏற்பட்டதல்ல என்பதோடு, பிறவிகளால் பிராமணன் என்பவனும் இல்லை. ஒரு மனிதன் பிராமணன் என்று சொல்லப்படுபவனுக்குப் பிறந்தவன் ஆனாலும் சூத்திரனேயாவான். அந்த சூத்திரன் என்கிற பிள்ளை உபநயனம் என்ற கருமம் செய்யப்பட்டு பூணூல் என்கின்ற முப்புரி நூல் அணியப்பட்ட பின்புதான் பிராமணன் ஆகிறான். அதனால் தான் பார்ப்பனர் தங்களை துவிஜர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். 'இரு பிறவியாளர்' என்று கூறுகிறார்கள்.

அந்த அப்படிப்பட்ட இரு பிறப்பாளன் ஆன பிராமணன் என்பவனும், மற்ற ஜாதியார்களைப் போல் பிறவி காரணமாகவே எப்போதும் பிராமணனாய் இருப்பவனல்லன். அவன் பிராமணன் செய்ய வேண்டிய சில கருமங்களைச் செய்யாததால், பிராமணத் தன்மையை இழந்து விடுகிறான் என்கின்ற தத்துவப்படிப் பார்த்தால் உலகில் பிறவிப் பிராமணன் இல்லை என்பதோடு, சில கருமத்தைச் செய்யாததாலும், சில கருமத்தைச் செய்வதாலும் பிராமணன் அல்லாதவனாக, பிராமணத் தன்மையை இழந்தவன் என்பதாக, ஆகிவிடுவதால் உலகத்தில் பிராமணன் என்பவன், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்பதாக எவனும் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். அன்றியும், இந்தத் தர்மப்படி உலகில் எவனும் தன்னைப் பிராணன் என்று சொல்லிக் கொண்டாலும், அவன் கண்டிப்பாக பித்தலாட்டக்காரனேயாவான். மக்களை ஏமாற்றி வஞ்சித்துப் பிழைக்கிற அயோக்கியனே ஆவான்.

ஏன் இதை இவ்வளவு வலியுறுத்திச் சொல்லுகிறேன் என்றால், தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், "உலகில் நான்கு ஜாதிகள் இருந்தாலும், மத, சாஸ்திர தர்மப்படி இரண்டு ஜாதிகள் தான் இருக்கின்றன. அதாவது பிராமணன், சூத்திரன் என்பவர்கள் தான் இருக்கிறார்கள். மற்ற இரண்டு ஜாதியான சத்திரியர், வைசியர் என்று சொல்லப்படும் இரண்டு ஜாதிகளும் கலியுகத்தில் அழிந்து விட்டது" என்று சொல்லிவிட்டார்கள். சொன்னதோடு மாத்திரமல்லாமல் அவர்கள் "சூத்திர" மக்களோடேயே சேர்ந்து விட்டார்கள். ஜாதி பிரிவு முறையில் சத்திரிய, வைசிய ஜாதி என்பதாக எந்தப் பாகுபாடும் செய்யவில்லை. ஆகவே, நான்கு ஜாதிகளில் இரண்டு ஜாதிகள் ஒழிந்துவிட்டன. அதாவது, பார்ப்பனர்களால் ஒழிக்கப்பட்டு விட்டது. மீதி உள்ள இரண்டு ஜாதிகளில், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்கிற ஜாதி இல்லாததினால் ஜாதி தத்துவப்படி உலகில் இந்துக்கள் என்பவர்களில் ஒரு ஜாதிதான் இருக்கிறது என்றாலும், அந்தச் சத்திரிய ஜாதியும், ஜாதி தர்மப்படி நடக்காததனால் அதுவும் (சத்திரிய ஜாதியும்) இல்லாமல் போனது என்றே சொல்ல வேண்டும்.

மத, சாஸ்திர, தர்ம ஆதாரம் இல்லாமல் பஞ்சமர் (சண்டாளர்) என்று பிரிவினை செய்யப்பட்ட அய்ந்தாம் ஜாதியும் இன்று ஆட்சியின் பலனாக அழிக்கப்பட்டு விட்டபடியால், தாழ்த்தப்பட்ட வகுப்பு என்று அந்தக் குறிப்பிட்ட தன்மையும் இல்லாமல் போய் மற்ற ஜாதிகளுடன் சரிசம அந்தஸ்து கொடுக்கப்பட்டு விட்டது என்றாலும், இன்று பார்ப்பனர் என்னும் வகுப்பார் தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறார்களே இது பொருந்துமா? நியாயமா? என்பது சிந்திக்க வேண்டியிருக்கிறது.


தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் வேசத்தில் காட்டிக் கொள்வதன் மூலம்தான் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அதில் நாணயமோ, யோக்கியமோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

சங்கராச்சாரி என்பவரும் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு நம்மைத் தொட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும், பிராயச் சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். வ.வே.சு.அய்யர், சி.விஜயராகவாச்சாரியார் போன்ற பார்ப்பனர் நம்மை தொட்டு விட்டால் நம்ம வீட்டில் சாப்பிட்டு விட்டால் ஸ்நானம் செய்ய வேண்டும். பிராயச் சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி அந்தப்படி நடந்து கொண்டு வந்தார்கள். மற்றும் சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), சதாசிவம் ஆகிய பார்ப்பனர் யார் வீட்டிலும் பஞ்சமர் (சண்டாளர்), ஜாதியார் வீட்டிலும் சாப்பிடுகிறார்கள். தன் மகளைச் சூத்திரர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். தானும் சூத்திர ஜாதிப் பெண், நாடகத்தில் நடித்துக் கொண்டு, "பொதுப் பெண்டிர் குலத்தை" சார்ந்து இருந்தவரை மணம் செய்து உடல் சம்பந்தம் வைத்துக் கொண்டும் இருந்து, உச்சிக்குடுமி வைத்துக் கொண்டும், பஞ்ச கச்சம் போட்டு உடை உடுத்திக் கொண்டும், தன்னைப் பிராணன் என்றே சொல்லிக் கொண்டு மற்ற பிராமணருடன் உண்பன, தின்பன, கொடுத்தல், கொள்ளல் காரியங்களையும் செய்து கொண்டு மற்ற ஜாதியாருக்கு ஆசீர்வாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவை மாத்திரம் அல்லாமல், இப்படிப்பட்டவர்கள் செத்துப் போன பின்பும் அவர்கள் இதை தலைவர்கள் "பிராமண" பிரேதம் என்பதற்கு என்ன கர்மங்கள் மந்திரங்கள் உண்டோ அந்த சடங்குகளையும், அந்த ஜாதி சாஸ்திரிகளாலேயே செய்கிறார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒரு மனிதன் தன்னை பிராமணன் என்றும், மற்றவர்களைத் தனக்குக் கீழ்ப்பட்ட ஜாதி, கீழான ஜாதி என்றும் சொல்லுவதற்குப் பார்ப்பனக் கூட்டத்தில் இருந்து கொண்டு மற்றவர்களை இழி ஜாதியான் என்று சொல்லிக் கொண்டு பூணூல் போட்டுக் கொண்டு இருந்தால் மாத்திரமே போதுமானதாக இருந்து வருகிறது.

இதில் விசேஷமான மற்றொரு காரியம் என்ன வென்றால், மது அருந்துகிறான், மாமிசம் சாப்பிடுகிறான், கூட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொள்கிறான், பேர் போன "விபசாரி"யை மனைவியாக, போகப் பெண்ணாகக் கொள்கிறான், அனுபவிக்கிறான்; இப்படிப்பட்டவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். பிராமணார்த்தத்திற்குச் சென்று பயன் பெற்று வருகிறான்.

ஆகவே, நாட்டில் பொது மக்களை அயோக்கியர்கள், ஜாதி என்னும் பெயரால் மனதறிந்து பலர் ஏமாற்றி கீழ்மகனாக ஆக்கி சுயநலம் அனுபவித்து வருகிறார்கள்.


------------------"உண்மை"14.01.1973 இதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

22 comments:

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி


பூனைக்குட்டி வெளியில் வந்தது!

ராமன் கோயில் கட்டுவது, யூனிபார்ம் சிவில்கோட்

காஷ்மீர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கம்!

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது

ஜாதி வெறி + மதவெறி + பதவி வெறி இவற்றின் கூட்டுத் தொகையே பிஜேபி கூட்டணி கணியூரில் தமிழர் தலைவர் கருத்துரை

மதவாதத்தை வீழ்த்த, மதச் சார்பின்மையைக் காப்பாற்ற தேர்தலில் பிஜேபியையும், அதன் அணியையும் தோற்கடிப்பீர்! பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா கொள்கையைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டது. மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட பி.ஜே.பி.யையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில் டில்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலை மறை காயாக இருந்தது அதிகாரப் பூர்வமானது! இதுவரை இலை மறை காயாகச் சொல்லப்பட்டு வந்த இந்துத்துவாவின் அஜண்டா - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக இப்பொழுது அறிவிக்கப்பட்டு விட்டது.

மூன்று முக்கிய பிரச்சினைகள்

1. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது.

2. யூனிபார்ம் சிவில் கோட்.

3. காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்புச் சலுகைகள் நீக்கப்படும் என்ற மூன்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

சங்பரிவாரின் நீண்ட நாள் கோரிக்கைகள்

பசு நமது நாட்டின் தேசிய சின்னங்களில் ஒன்றாகும், பசுப்பாதுகாப்பு இந்திய நாட்டின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்; இதை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பிற்கு தனியான ஒரு துறை ஏற்படுத்தப்படும். பசு பாதுகாப்பு குறித்து தனியான சட்டம் கொண்டுவரப்படும். கால்நடை வளர்ப்புத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து பசுக்களுக்கு என சிறப்பு பாதுகாப்பு அமைப்பு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும்.

சேதுசமுத்திரம்: ராமர்சேது பாலம் இந்திய பாரம்பரிய மற்றும் கலாச்சார மய்யமாக திகழ்கிறது. இது பலகோடி இந்துக்களின் நம்பிக்கைகளை சார்ந்த ஒன்றாகும். என்றும் பிஜேபியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இந்த நீண்ட காலக் கோரிக்கைகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தேவை புதிய சிந்தனை - பார்வை

இதுவரை இந்திய வாக்காளர்கள் எந்த முடிவில் இருந்திருந்தாலும், பிஜேபியின் அதிகாரப் பூர்வமான இந்தத் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு கண்டிப்பாக திறந்த மனத்தோடு, புதிய பார்வையைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இந்திய மக்களை ஹிந்துக்கள் - ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று கூறுபோடும் ஆபத்தான அஜண்டா வெளியிடப்பட்டு விட்டது.

1992 டிசம்பர் 2002 பிப்ரவரி

1992 டிசம்பரில் அயோத்தியிலும், 2002 பிப்ரவரியில் குஜராத் மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவாத வன்முறைகளுக்கு அரசு ரீதியான அங்கீகாரம் கொடுப்போம் என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் ஆபத்தான போக்கு இதில் மய்யம் கொண்டு விட்டது.

பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை இந்திய வாக்காளர்கள் அளிப்பார்களேயானால், அது சுனாமியாக எழுந்து இந்திய மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்கு மதக் கலவரத்தை அன்றாடம் கட்டவிழ்த்து விடும் என்பதில் அய்யமில்லை.
தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது?

தேர்தல் ஆணையம் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், குடிமக்களை மத ரீதியாகப் பிரித்து அவர்களுக்கிடையே பகைமை உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய முறையில் ஆலோசனைக்கு உட்படுத்தக் கடமைப்பட்டுள்ளது.

பூனைக் குட்டி வெளியில் வந்தது!

ஆகக் கோணிப்பைக்குள் இருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. இந்த நேரத்தில் மேலும் ஒரு முக்கியமான பிரச்சினை மக்கள் முன் எழுந்து நிற்கிறது.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளன சில அரசியல் கட்சிகள் - பி.ஜே.பி.யின் இந்த அப்பட்டமான ஹிந்துத்துவா வெறி உணர்ச்சி கொண்ட தேர்தல் அறிக்கைக்குப் பிறகு - அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதுபற்றி மறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளன. அதனைச் செய்யத் தவறினால் நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில், பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

ஒரு வகையில் நல்லதே!

ஒரு வகையில் மூடி மறைக்காமல் பி.ஜே.பி. தன் நிறத்தைக் காட்டிக் கொண்டது கூட நல்லதாகத்தான் தோன்றுகிறது. நாட்டு மக்கள் அடையாளம் கண்டு பி.ஜே.பி.யை அறவே புறக்கணிக்க இது பெரிதும் உதவும் என்பதில் அய்யமில்லை. திராவிடர் கழகத்தின் தொலை நோக்கு!

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் இந்த நிலையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் வந்திருக்கிறோம்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இதுவரை பிஜேபியின் பின்புலத்திலிருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முன்னே வந்து கட்டளையிடும் இடத்திற்கு வந்துவிட்டது என்று அறுதியிட்டு நாம் சொல்லி வந்தது - எழுதி வந்தது நூற்றுக்கு நூறு சரி என்பது இந்தத் தேர்தல் அறிக்கை மூலம் மிக மிகத் தெளிவாக உறுதிப்பட்டு விட்டது!
கழகத்தின் இந்தக் கணிப்பு - தொலைநோக்கு - நூற்றுக்கு நூறு சரியே என்பதைக் காலந்தாழ்ந்தாவது பொது மக்கள் - வாக்காளர்கள் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது!

வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

நடக்கவிருக்கும் தேர்தல் (ஹிந்துத்துவாவுக்கு) மதவாதத்துக்கும் - மதச் சார்பற்ற தன்மைக்கும் இடையிலான போட்டி என்பதை உணர்ந்து பி.ஜே.பி.யையும், அதன் அணியையும் முற்றிலும் நிராகரிக்குமாறு வாக்காளப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


முகாம்: ஈரோடு

7.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78292.html#ixzz2yFi2l7de

தமிழ் ஓவியா said...


யார் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் வாழ்வில் செழிப்பு?



மற்ற மற்ற மாநிலங்களில் தலை தூக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான மதவெறி ஆயுதங்கள் தமிழ்நாட்டில் பறிமுதலாகிவிட்டன. தந்தை பெரியாரும், திராவிட இயக்கமுமே இதற்கு அடிப் படையாகும்.

சிறுபான்மையினருக்கு- கிறித்த வர்க்கு, முசுலிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது நீதிக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப்பட்டது (1921 மற்றும் 1928 ஆண்டு களில்) அரசு ஆணை எண். 744, நாள் 13.9.1928)

பார்ப்பனர் அல்லாதார் 5

பார்ப்பனர் 2 முகமதியர் 2

ஆங்கிலோ இந்தியரும் கிறிஸ்துவரும் 2

தாழ்த்தப்பட்டவர் உள்பட பிறர் 1

மொத்தம் 12

1927 இல் மொத்தம் 12 இடங்களில் அதில் ஆறில் ஒரு பங்கு முஸ்லிம் களுக்கு ஒதுக்கப்பட்டது - நீதிக்கட்சி ஆதரவு அமைச்சரவையில்.

இடையில் - அது தடைப்பட்டுப் போனது. 2006 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி சிறுபான்மையினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக் கான அவசரச் சட்டம் - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் பிறப்பிக்கப்பட்டது (15.9.2007).

இந்த ஒதுக்கீட்டின் காரணமாக தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பெற்ற பலன் குறிப்பிடத்தக்கவையாகும்.

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெறுவதற்கு முன் மருத்துவக்கல்லூரிகளில் 2006-2007 இல் பெற்ற இடங்கள் வெறும் 46,

2007-2008 இல் பெற்ற இடங்கள் 57,

2008-2009 இல் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தி.மு.க. அரசு அளித்த நிலை யில் பெற்ற மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் 80.

இட ஒதுக்கீடு காரணமாக முஸ்லிம் கள் மருத்துவக் கல்லூரியில் 74 சதவிகிதம் கூடுதல் இடங்கள் பெற்றுள்ளனர்.

அதேபோல, பொறியியல் கல்லூரி களில் இட ஒதுக்கீடு கிட்டாத 2007-2008 இல் பெற்ற இடங்கள் 2125.

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு 2008-2009 இல் கிடைத்த இடங்கள் 3288.

2009-2010 இல் முஸ்லிம்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் 3655.
இது மட்டுமல்ல,

1973ஆம் ஆண்டிலேயே உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவரும் முதல்வர் கலைஞரே!

சிறுபான்மையினர் நல ஆணையம் (13.2.1988), தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் (1.7.1999) ஆகிய வற்றை ஏற்படுத்திய பெருமகனும் கலைஞர் அவர்களே!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மய்யம், சிறுபான்மை யினர் நலனுக்காகத் தனி இயக்குநரகம் (6.4.2007) ஆகியவை உண்டாக்கப்பட்ட தெல்லாம் எந்த ஆட்சியில்? தி.மு.க. ஆட்சியில்தானே. நன்றி மறவா சிறு பான்மை மக்கள் தி.மு.க.வின் பக்கமே உறுதியாக என்றும் இருப்பார்கள் என்ப திலும் அய்யம்தான் உண்டோ!

ஜனநாயக முற்போக்கு கூட்டணி யையே ஆதரிப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/78316.html#ixzz2yFicC1fk

தமிழ் ஓவியா said...


74 சதவீத கார்ப்பரேட்காரர்களின் பின்னணியில் மோடி!

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், அது நாட்டிற்கு ஆபத்தாகும். கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு (மார்க்கெட்டிங்) கையாளும் உத்தியைப் போன்று தேர்தலில் பிஜேபி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன

- என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கோழிக்கோட்டில் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார்.

சொல்லுகிறாவர் காங்கிரஸ்காரராக இருக்கலாம்; ஆனால் அவரால் சொல்லப்பட்ட தகவல் மட்டும் உண்மை - உண்மையிலும் உண்மை.

எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கணக்கீட்டுப் (சர்வே) படி 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் மோடி பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளலாம்.

ஏழை - எளிய மக்களைப்பற்றி மோடிக்குக் கவலையில்லை. பெரும் பணக்காரர்களுக்கு நடை பாவாடை விரிக்கும் கட்சியாகும் அது.

பகுச்சராஜி பகுதியில் பணத் திமிங்கலங்களுக்கு நிலத்தைத் தூக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏழை எளிய மக்களிட மிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டதே! அதற்காக மிகப் பெரிய எதிர்ப்பு இயக்கம் வெடித்துக் கிளம்பவில்லையா?

நானோ கார் உற்பத்திக்காக என்று சொல்லி டாட்டா நிறுவனத்துக்கு மோடி தூக்கிக் கொடுத்த நிலம் எவ்வளவு தெரியுமா? 1100 ஏக்கர்; அதன் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.10 ஆயிரம்; ஆனால் சதுர மீட்டர் ரூ.900 என்ற அளவில் தாரை வார்க்கப்பட்டது அதன் காரணமாக குஜராத் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.33 ஆயிரம் கோடி.

0.1 சதவிகித வட்டிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடனைத் திருப்பிக் கட்டலாம். விற்பனை வரியில்லை. தண்ணீர் வரி குறைவு, மின்சாரக் கட்டணச் சலுகைகள்!

ஆன்லைனில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தப் பணிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் குஜராத் முதல் அமைச்சர் மோடி. டாட்டாவுக்கு ஒரு குறுஞ்செய்தி (ஷிவிஷி) அனுப்பி 2900 கோடி ரூபாயாக முதலீடுத் திட்டத்துக்கு ரூ.9570 கோடி ரூபாய் கடன்அளிக்கப்பட்டது. வெங்காய விவசாயிகளிடம் 15,000 ஏக்கர் நிலங்களைப் பிடுங்கி நிர்மா என்ற நிறுவனத்துக்குத் தாரை வார்த்துள்ளார்.

ஒரு கொடுமை என்ன தெரியுமா? அதானி கும்பலுக்கு முந்தரா துறைமுகம் கட்டுவதற்காக 5.47 கோடி சதுர மீட்டர் நிலம் கொடுக்கப்பட்டது (2005-2007கால கட்டத்தில்) 2011 டிசம்பர் வரை இந்த நிலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவு 98.60 லட்சம் சதுர மீட்டர்; மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை என்ன செய்தது?

கொள்ளை அடிப்பதுதானே பண முதலைகளின் நோக்கம்? சதுர மீட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 32 காசுக்கு மோடி அரசிடமிருந்து பெற்ற நிலத்தை மீட்டர் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.733 என்ற விலையில் விற்றுக் கொள்ளை இலாபத்தைக் குவித்தனர்.

அதானி துறைமுகம் கட்டப்படுவதற்காக அளிக்கப்பட்ட அந்த நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா? பெரும்பாலும் மீனவர்கள் குறுசிறு விவசாயிகளும்தான். தடை செய்யப்பட்டு இருந்த நிறுவனத்திடமிருந்து கால்நடைத் தீவனத்தை 5 கிலோவிற்கு ரூ.240 வீதம் வாங்கியது அரசு; ஆனால் அதன் சந்தை மதிப்பு என்னதெரியுமா? 5 கிலோ விலை ரூ.120 முதல் 140 வரை தான்; கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு கண்டுபிடிக்கும் குஜராத் மின் கழகத் திட்டம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தவித ஏலமும் இல்லாமல் தாரை வார்த்ததால் குஜராத் அரசுக்கு இழப்பு ரூ.20 ஆயிரம் கோடி!

விரிக்கின் வளர்ந்து கொண்டே போகும். இந்த நிலையில்தான் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார்.

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியாரும் இதே கருத்தினைக் கூறியுள்ளார் என்பதும் கருத்தூன்றத்தக்கதாகும்.

இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். குஜராத் மாநிலத்தில் சட்டப்படி ஒரு தொழிற்சாலை தொடங்கப்படும் பொழுது 85 சதவீத தொழிலாளர் பணியாளர்கள் உள்ளூரிலிருந்தே நியமிக்கப்பட வேண்டும். இந்த முதலாளிகளுக்கு இதிலும் விதி விலக்கு அளித்த புண்ணியவான் தான் நரேந்திர மோடி!

பெரும் முதலாளிகளை மோடி ஊக்குவித்ததன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் மூடப் பட்ட சிறு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்; வேலை இழந்த தொழிலாளர்கள் ஆறு லட்சம் பேர்.

இவற்றின் காரணமாகத்தான் ஒட்டு மொத்த வளர்ச்சியில் மோடி ஆளும் குஜராத் இந்தியாவில் 12ஆவது இடத்தில் இருக்கிறது; கூறுவது நாம் அல்ல; ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் தலைமையிலான நிபுணர் குழு! பொய்ப் பிரச்சாரத்தால் அதிகாரத்தைக் கவ்விப் பிடித்து நாசப்படுத்தி விடலாம் என்று ஒரு கூட்டம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறது.

வாக்காளர்களே, உஷார்! உஷார்!!

Read more: http://viduthalai.in/page-2/78318.html#ixzz2yFj141YK

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சாதி


பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும்.

(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/78317.html#ixzz2yFj9cQKm

தமிழ் ஓவியா said...


என்ன தயக்கம் காம்ரேட்ஸ்?

- குடந்தை கருணா

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அதிமுக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நிலையில், திமுக அணி யில் இணைந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என மத சார்பின்மைக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவரும் விரும்பினர்; எதிர்பார்த்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணியுடன் கூட்டு இல்லை எனக் கூறிய நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் அதே நிலை எடுக்க வேண் டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

தி இந்து ஆங்கில நாளிதழில் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழகத்தில், போட்டி என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் எனக் கூறி உள்ளார். உண்மை தான். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதைத் தாண்டி, தமிழ் நாட்டில் திமுகவிற்கும், அதிமுகவிற் கும் இடையே தான் போட்டி நடை பெறுகிறது. மற்ற கட்சிகளெல்லாம், களத்தில் இருப்பதாகத் தெரிய வில்லை; ஆனால், திமுக அணி, அதி முகவை விமர்சனம் செய்து தேர் தலைச் சந்திப்பது என்பது, சிலர் சொல் வது போல், சட்டமன்றத் தேர்தல் அல்ல என்பது திமுகவிற்குத் தெரியும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அந்த அணியின் சார்பில் என்ன கருத்து முன் வைக்கப்பட்டது? மதச் சார்பின்மை, சமூக நீதி என்கிற இரண்டு தத்துவத்தை முன்வைத்து, தேர்தலைச் சந்திப்பதாக திமுக அணி கூறுகிறது. அதிமுக வெல்லும் ஒவ் வொரு இடமும், மோடிக்கு ஆதர வாகச் செல்லும் என்பது தா.பாண்டி யன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். இங்கே, தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும், பாஜகவிற்கு ஒரு சீட்டு தேறாது என்பதும் தெரியும்.

அதிமுக இங்கே மண்ணைக் கவ்வினால், அது மதச் சார்பின்மைக்கு வெற்றி. அதனால் தான், திமுக அணி, அதிமுகவை குறிப்பிட்டு தாக்குதல் நடத்துகிறது. இதுதானே சரியான அணுகுமுறை. இதற்கு, இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு தருவது தானே சரியாக இருக்கும்.
அண்டை மாநிலமான ஆந்திரா வில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸோடு கூட்டு சேர்ந்து தெலுங் கானா பகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையால், விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு என இருந்தாலும், தெலுங்கானா உருவாகிட காங்கிரஸ் முயற்சி எடுத்ததால், அதனுடன் கூட்டு என் கிறார் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி.

கம்யூனிஸ்டு கட்சியோடு கூட்டு என்கிற ஒரு எண்ணத்தை உருவாக்கி, அகில இந்திய செயலாளர் ஏ.பி.பரதன் போன்றோர் வந்து சந்தித்து சென்ற அடுத்த நாள், ஒரு காரணமும் சொல் லாமல், கம்யூனிஸ்டைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, ஒவ்வொரு தொண் டனையும் அவமதித்து, அவர்களது சுயமரியாதையையும் கேவலப்படுத் திய அதிமுகவை வீழ்த்துவது கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய பணி யில்லையா காம்ரேட்ஸ்?

தமிழ் நாட்டில், காங்கிரசோடு கூட்டு இல்லை; மோடிக்கு தமிழகத் தில் இடம் இல்லை என்பதைத் தெளிவாக்கி தேர்தல் களம் காணுகிறது திமுக அணி.

தெலுங்கானா காம்ரேட்ஸ் கூறும் காரணத்தைவிட, தமிழ் நாட்டில், அதிமுகவை எதிர்ப்பதற்கும், திமுக அணியை ஆதரிப்பதற்கும் கூடுதல் காரணங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கிறதே காம்ரேட்ஸ்.

பாஜகவிற்கு தேர்தலுக்குப் பின்னால் ஆதரவு தரலாம் எனும் அதிமுவை தோற்கடிக்க, திமுக அணியை ஆதரித்து, மதவெறிக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை என நிரூபிக்கும் பணியில் நீங்களும் இணையுங்கள் காம்ரேட்ஸ்.

Read more: http://viduthalai.in/page-2/78326.html#ixzz2yFjPewGX

தமிழ் ஓவியா said...


ஈரோட்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இன முழக்கம்!


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் போதனைகள் அல்லாமல் என்னால் பேச முடியாது!

ஈரோட்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இன முழக்கம்!

ஈரோடு , ஏப். 7- தந்தை பெரியாரைப் பற்றி தேர்தல் கூட் டத்தில் ஏன் பேசுகிறேன்? தந்தை பெரியார் போதனைகள், அறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரைகள் இல்லாமல் இந்தக் கருணாநிதியால் பேச முடியாது என்றார் திமுக தலைவர் கலைஞர். ஈரோட்டில் நேற்று (6.4.2014) நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய இன முழக்கம் வருமாறு:

எனக்கு அறிவூட்டி சுயமரியாதை
உணர்வூட்டிய குருகுலம் ஈரோடு!

ஈரோடு நகரம் நான் பிறந்த ஊர் என்று சொல்லுவதை விட என்னை அறிவுலகத்துக்குப் பெற்றெடுத்த ஊர் என்று சொன்னால் அதுதான் பொருத்தமாக இருக்கும். அத்தகைய ஈரோடு நகரத்தில் எனக்கு அறிவூட்டி, சுயமரியாதை உணர்வூட்டிய குருகுலம் என்னைப் பொறுத்தவரையிலே ஈரோடு நகரமாகும். இந்தக் குருகுலத்திலே நான் வந்து கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சியும், பேறும் பெற்றவனாக ஆகிவிட்டேன் என்ற பெருமையும் கொள்ளுகின்றேன்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் பவித்திரவள்ளி அவர்களையும், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியிலே கழக வேட்பாளர் டாக்டர் செந்தில்நாதன் அவர்களையும் உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதுதான் உங்கள் முன்னால் நான் வைக்கின்ற வேண்டுகோளாகும். இதை என்னுடைய குருகுலம் என்று குறிப்பிட் டேன். தஞ்சை மாவட்டத்திலே நான் பிறந்த ஊர் திருக்குவளை என்றா லும் கூட, வளர்ந்த ஊர் திருவாரூர் என்றாலும் கூட என்னை வார்ப்படமாக்கி தமிழ் உலகத்துக்கு தந்த ஊர் ஈரோடு என்று சொன்னால் அது மிகை ஆகாது. (பலத்த கைதட்டல்).

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் அவர்களுடைய அறிவாற்றலை, அவருடைய வாழ்க்கை முறைகளை அவர் கற்றுத்தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அந்த மூன்று வார்த்தைகளின் பெருமைகளை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கருணாநிதி இன்றைக்கு உங்க ளால் தலைவர் என்று அழைக்கப்படுகிறான் என்றால், அதற்குக் காரணம் இந்த ஈரோடு. இந்த ஈரோடு நகரத்திலே நான் பெற்ற பகுத்தறிவு; நான் பெற்ற சுய மரியாதை உணர்வு, நான் பெற்ற தன்மான உணர்வு அவைகளையெல்லாம் நீங்களும் பெற வேண்டுமே யானால்; உங்களுடைய ஆசிரியராக, பேராசிரி யராக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியவர் தந்தை பெரியார்.

நம்மை வழி நடத்தியவர் பேரறிஞர் அண்ணா

பெரியாருடைய பள்ளியிலே சட்டாம்பிள்ளையாக இருந்து நம்மை வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆவார்கள். அந்த கல்லூரியிலே படித்த மூத்த மாணவர்களிலே ஒருவன் நான். நான் தான் இன்றைக்கு உங்களையெல்லாம் சந்திக்கிறேன் என்றால் எப்படி? எனக்குப் பகுத்தறிவு பாடம் போதித்த பெரியாரை மறவா மல், என்னுடைய உள்ளத்திலே சுயமரியாதை உணர்வை விளைத்த அய்யாவை மறவாமல், அந்த பெரியார் தந்த அருமையான கொள்கைகளை யெல்லாம் நாட்டிலே பரப்ப வேண்டும் என்ற அந்த உணர்வோடு உங்களை யெல்லாம் சந்திக்கின்றேன்.


தமிழ் ஓவியா said...

இன்று உங்களுக்குக் கூட ஒரு வியப்பாக இருக்கும், என்ன கருணாநிதியை அழைத்து கூட்டம் போட்டால் அவர் தேர்தலைப் பற்றி பேசுவார், உதய சூரியன் சின்னத் திற்கு வாக்களியுங்கள் என்று கேட்பார் என்று எண்ணினால், பெரியாரைப் பற்றி பேசிக் கொண்டிருக் கிறாரே! அண்ணாவைப் பற்றி பேசி கொண்டிருக் கிறாரே! என்று நீங்கள் கருதுவீர்களேயானால், நான் உங்க ளுக்குச் சொல் லுகிறேன் கருணாநிதி யாரைப் பற்றிப் பேசினாலும், யாரைப் பற்றி புகழ்ந்துரைத் தாலும், யாரைப் பற்றி கவிதைப் பாடினாலும் அதற் கெல்லாம் மூலவித்தாக இருப்பது சுய மரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், தந்தை பெரியாருடைய போதனைகள், அறிஞர் அண்ணாவினுடைய அறிவுரைகள் இவை கள் இல்லாமல் கருணாநிதியால் பேச முடியாது. (கைதட்டல்)

தி.மு.க.விற்கு உங்கள் வாக்குகளை
கேட்பதற்கு என்ன காரணம்?

அப்படிப்பட்ட கருணாநிதி இன்றைக்கு உங்கள் முன்னால் அமர்ந்து உங்களுடைய வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, தோழமைக் கட்சியினருக்கு, அதன் வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கிறார் என்றால் என்ன காரணம்? இந்நேரத்தில் வந்து உங்களையெல்லாம் சந்தித்து, உங்களுடைய வாக்குகளை யெல்லாம் தவறாமல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, உதய சூரியன் சின்னத்திற்கு அளியுங்கள் என்று கேட்ப தற்கு என்ன காரணம்? அந்தக் கருத்தை நான், உங்கள் முன் னால் வைக்காவிட்டால், இந்த நாடு இருண்டு போய் விடும். இன்றைக்கு எப்படி, இந்த ஆட்சியிலே தமிழ்நாடு இருண்டு போய்க் கிடக்கிறதோ, அதைப்போல இந்த நாடு இருண்டு போய் விடும். `இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றாரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அதைப் போல பாட நேரிடும். `இருட்டறையில் உள்ளதடா தமிழ் நாடு என்று பாட நேரிடும்.

தமிழ் ஓவியா said...

அப்படிப் பாடாமல் இருக்க வேண்டுமேயானால், ஒளி பிறந்தது பார், வெளிச்சம் தந்தது பார் என்று நாம் மகிழ வேண்டுமேயானால் அதற்கு நாம் நம்முடைய கடமையை இன்றைக்கு பிரித்துக் கொள்ள வேண்டும். நம்முடைய கடமையை உணர வேண்டும். நாம் உணர்ந்ததை உடன் இருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டும். உடன் இருப்ப வர்கள், உற்றார் உறவினர்களுக்குச் சொல்ல வேண்டும். ஏனென்றால், தமிழ்நாட்டில் நடைபெறுவது நாடாளு மன்றத் தேர்தல் - ஒரு சட்ட மன்றத் தேர்தல் என்றாலும் கூட, இது நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய ஒரு அடையாளச் சின்னம். நாம் யார்? நம்முடைய இனம் எது? நம்முடைய மொழி எது? அதையெல்லாம் கெடுத்து குட்டிச்சுவராக்கியவர்கள் யார்? இவைகளை யெல்லாம் எண்ணிப் பார்த்தால்தான், இவைகளை யெல்லாம் ஆய்ந்து ஒரு முடிவுக்கு வந்தால்தான், நாம் நாமாக இருக்க முடியும். நாம் சொல்லிக் கொள் கிறோமே, தமிழன் - தமிழ்ச் சமுதாயம் - திராவிட சமுதாயம் என்று. அந்தச் சமுதாயத்தின் கீர்த்திக் கொடியை நாம் நாட்ட முடியும். இல்லையேல் நாம் பழையபடி யாருக்கோ அடிமைப் பட்டு, உயர் சாதிக்காரர்களுக்கு அடிமைப்பட்டு, இழிந்து, இழிந்து, இழிந்து நாயினும் கேடாக, நலிந்து நலிந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும். அதை உங்கள் உள்ளத்திலே பதிய வைக்கத்தான், நான் தமிழகத்தை இன்றைக்கு வலம் வந்துக்கொண்டிருக்கின்றேன். நானும் என்னுடைய தம்பிமார்களும், குறிப்பாக துரைமுருகன் அவர்களும் மற்றவர்களும் உங்களைச் சந்திக்கிறோம் என்றால், எனக்கு முன்னால் பேசிய, நம்முடைய இஸ்லா மியக் கட்சியினுடைய தலைவர்களும் வேறு கட்சிகளு டைய தோழமைக் கட்சித் தலைவர்களும் எங்களோடு அமர்ந்து உரை நிகழ்த்தி, ஒரு அணியிலே நிற்கிறோம் என்றால், இதுவரையிலே வீசிய அலை தீர்ந்து, புதிய அலை புறப்பட வேண்டும் என்று எண்ணியிருக்கின்ற நேரத்தில் (பலத்த கை தட்டல்) புதிதாக வந்திருப்பது நரேந்திர மோடி அலை; `மோடி அலை வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். மோடி அலையை மூடி மறைத்துக்கொண்டு நம்முடைய எதிர் கால சமுதாயத்தினுடைய கீர்த்தியை, நம்முடைய எதிர்பார்ப்புக்களையெல்லாம் வீழ்த்து வதற்கு நாட்டிலே பயங்கரமான சூழ்ச்சிகள் செய்யப் பட்டு, அதற்கு அடிமையாகாமல் இருக்க, எங்களால் எச்சரிக்கப்படக் கூடிய ஒரு நிலைமை இன்றைக்கு தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலே இருக்கிறதா? இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கின்றேன்.

தமிழன் ஏமாந்து விடக் கூடாது என்பற்காகவே இந்த எச்சரிக்கை!

இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், இந்தியா குறிப்பாக நம்முடைய தமிழ்நாடு வந்தவர் களுக் கெல்லாம் பாய் விரித்த நாடு. வந்தவர்களுக் கெல்லாம் தண்டனிட்ட நாடு. அந்தச் சமுதாயத்தைத் தூக்கிப் பிடித்து, பிடரியில் அடித்து, நீ பின் தங்கியவன் அல்ல, நீ சூத்திரன் அல்ல, நீ தமிழன், திராவிடன் என்று அச்சுறுத்தி, நம்மை ஏறு நடைச் சிங்கமாக ஆக்கிய தந்தை பெரியார், மறைந்த இந்தக் காலத்திற்குள், அறிஞர் அண்ணா இல்லாத இந்த வேளையில் தமிழர் கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், நான் இந்த எச்சரிக்கையை உங்களுக்குச் சொல்ல விரும்பு கின்றேன். எப்படிப்பட்ட நிலைமையிலே நாம் இருக்கிறோம், தமிழகத்தில் ஒரு ஆட்சி நடைபெறுகிறது. அது ஆட்சியா? அல்லது அவர்கள் நடத்திக் காட்டுகிற காட்சியா? என்பதை நீங்களே புரிந்துக் கொள்வீர்கள். (பலத்த கை தட்டல்). தமிழ் நாட்டிலே திராவிட முன் னேற்றக் கழக ஆட்சி நடைபெற்று முடிந்து, நீங்கள் செய்த - அதைத் தவறு என்று நான் சொல்ல மாட் டேன். உங்களுடைய கண்ணை மறைத்து செய்யப் பட்ட கபட நாடகத்தின் காரணமாக நீங்கள் ஏமாந்து போய் தமிழகத்திலே ஒரு ஆட்சி மலர்வதற்கு காரண மாக ஆகி விட்டீர்கள். அது எப்படிப்பட்ட ஆட்சி? என்ன செய்து கொண்டிருக்கிற ஆட்சி? ஊரிலே உள்ளவர்களை யெல்லாம் குற்றஞ்சாட்டி, உன்னை சிறையிலே போடு வேன். உன்னைத் தண்டிப்பேன். உன் மீது புகார் மனு கொடுப்பேன், என்று ஊரிலே உள்ள வர்களை யெல்லாம் எச்சரித்து - ஏமாற்றி - அவர்களை பயமுறுத்தி, வாழ்ந்து கொண்டிருக்கிற, தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிற ஒரு ஆட்சிதான், இன்று நடைபெறுகின்ற அம்மையார் ஜெயலலிதாவினுடைய அ.தி.மு.க. ஆட்சி என்று சொன்னால், அது மிகை யாகாது. - இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-3/78295.html#ixzz2yFjdxtr2

தமிழ் ஓவியா said...


சளித் தொந்தரவு தீர சில எளிய வழிமுறைகள்...

குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்ப தால், அடிக்கடி சளித் தொந்தரவு ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?

அரை அங்குலம் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் குவளையாக வரும் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.

பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரைத் தேக்கரண்டி வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளித் தொந்தரவு, தலைவலி என எந்தப் பிரச்சினையும் நெருங்காது.

சிலர் கசப்பான பொருள்களை நாக்கில் படாமல் அப்படியே விழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும்.

அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவைகளையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.
மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை

கற்றாழையில் உள்ள மருத்துவக் குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங் களுடைய உப பொருள்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.

ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, செரிமான சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது.

தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான். இப்படி எண்ணற்ற குணங்களைக் கொண்டது கற்றாழை.
வைட்டமின்கள் நிறைந்த வேர்க்கடலை

பசியால் துடிப்பவர்களுக்கு வயிற்றை நிறையச் செய்கிற ஒரு உணவு வேர்க்கடலை. கைப்பிடி வேர்க்கடலையை தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால், அடுத்த சில மணி நேரத்துக்குப் பசித்த வயிறு அமைதி காக்கும். எல்லா பருப்பு வகைகளையும் போன்றதுதான் வேர்க்கடலையும். அதிக புரதச்சத்து நிறைந்தது.

அதே நேரம் மற்ற பருப்பு வகைகளைவிட, இதில் அதிகக் கொழுப்புச் சத்தும் உண்டு. உடலுக்குத் தேவையான ஆற்றலையும், புரதச் சத்தையும் கொடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையே இல்லை எனலாம். ஆனால், வேர்க்கடலையை அளவோடுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். 20 கடலைகளுக்கு மேல் எடுக்கவேண்டாம்.

வேர்க்கடலையில் தாதுச்சத்துகளும், வைட்ட மின்களும் மிக அதிகம். தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலமும் அதிகம் கொண்டது. உணவுத் தேவைக்கு அடுத்தபடியாக, வேர்க்கடலையை எண்ணெய் எடுக்கவே அதிகம் பயன்படுத்துகிறோம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கில், வேர்க்கடலையைவிட அதிக புரதச்சத்து இருக்கிறது.

அதனால்தான் அதை மாட்டுத் தீவனமாக உபயோகிக்கிறோம். அத்தனை அதிக புரதச்சத்து உள்ளதை நாம் ஏன் சாப்பிடக் கூடாது என்கிற கேள்வி வரலாம். எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கு பெரும்பாலும் தரமாகவோ, சுத்தமாகவோ பதப்படுத்தப்படுவதில்லை என்பதே காரணம்.

அரிதாக சில இடங்களில் தரமாக பதப்படுத்திய பிண்ணாக்கை குழந்தைகளுக்கான உணவிலும், விளையாட்டு வீரர் களுக்கான உணவிலும் சிறிது சேர்க்கிறார்கள். லைசின் எனப்படுகிற மிகச்சிறந்த அமினோ அமிலம் அதில் அபரிமிதமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உடல் பலத்துக்கு மிகவும் உதவும்.

வேர்க்கடலையில் மக்னீசியம் அதிகம் என்பதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தவிர்க்கும். மாங்கனீசு என்கிற தாது உப்பும் அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்காக வைக்கும்.

வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3, நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவக்கூடியது. அதிலுள்ள தாமிரச் சத்தானது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்து வதுடன் புற்றுநோய் வராமலும் பார்த்துக் கொள்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/78308.html#ixzz2yFk4dEIt

தமிழ் ஓவியா said...


உங்கள் வீட்டில் நாள்தோறும் ஒரு கீரை


நாள்தோறும் ஒரு கீரை சமைத்து, உங்கள் வீட்டில் ஆரோக்கியத்தை நிரந்தரமாகச் செய்யுங்களேன்!

சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால், கீரை மசியல் நன்கு குழைவாக இருக்கும். கீரையை வேக வைக்கும் போது மூடக்கூடாது. திறந்தபடி இருந்தால்தான் அதில் இருக்கும் அமிலச் சத்துகள் வெளியேறும். கீரையை வேக வைக்கும்போது சிறிது உப்பைச் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

வெந்தயக்கீரையில் சிறிது சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்புத் தன்மை நீங்கிவிடும். எந்தக் கீரையாக இருந்தாலும் அதோடு மூன்று துணுக்கு கறிவேப்பிலையை உருவிப் போட்டு சேர்த்து வேக வைக்கவும். பிறகு, வழக்கம்போல கடையவும். கீரை மசியல் மணமாக, சுவையாக இருக்கும். அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து, பொடி செய்து காலை, மாலை அரை டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து குடிக்கவும். வயிறு, மார்பு வலிகள் குணமாகும்.

வெந்தயக்கீரை அதிக அளவில் கிடைக்கிறதா? அதை வாங்கி, கழுவி, நிழலில் உலர வைக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கசூரிமேத்தி என்றும் சொல்வார்கள். கொத்தமல்லியை நறுக்கி, பெரிய பாத்திரத்தில் போட்டு வைத்து, பிறகு அலசி சுத்தம் செய்ய வேண்டும். புதினாவை அலசி சுத்தம் செய்த பிறகுதான் நறுக்கவேண்டும்.

முருங்கைக்கீரை

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம் பருப்பு, நெய் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்பு பெருக்கும். இதையே துவரம் பருப்பு, மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் இளைக்கும். பசலைக்கீரையில் பருப்புச் சேர்த்து வேக வைத்து, மிளகாய், சீரகம் தாளித்து சாதத்தில் பிசைந்து உண்டு வந்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். நல்ல பசி எடுக்கும்.

முருங்கைக்கீரையை விழுதாக அரைத்து, தயிரில் கரைத்து, ஒரு நாளைக்கு மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால் அல்சர் காணாமல் போய்விடும்.

முள்ளங்கிக்கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் நீர்ச்சுருக்குப் பிரச்சினை தீரும்.

வாத நோய்களைக் குணப்படுத்தும் பீச் பழம்

பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சி யாளர்கள் பல ஆராய்ச்சிக்குப் பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்ற வையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களைச் சார்ந்தவையே.

பீச் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமுள்ளதால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் தோல் சுருக்கங்கள் நீங்குவதோடு தோல் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும், முகம் பொலிவுடனும் இருக்கும். பீச் பழத்துடன் முட்டையின் வெள்ளை கருவைச் சேர்த்து முகத்திற்கு போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும் பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதைக் கட்டுபடுத்தும்.

பீச் பழங்கள் தொற்று நோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஒட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள் கிறது. கீல்வாதம், ரூமட்டிக் நோயால் அவதிப்படு கின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும். வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச்பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல்திறன் மிக்கதாக உள்ளது.

பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்கக் கூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், இரும்பு, ஃபுளோரைடு போன்ற சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்சுடியது.

பீச் பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கருவுற்ற பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது. மனஅழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன. பீச்பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது.

மேலும் சிறு நீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச் பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும் . இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உணவு கட்டுபாட்டில் இருப்பவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் இது கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டது.

Read more: http://viduthalai.in/page-7/78309.html#ixzz2yFkEEyqE

தமிழ் ஓவியா said...

.ஜே.பி.யின் மக்களைத் துண்டாடும் அறிக்கை ஹிந்துத்துவாவின் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது

புதுடில்லி, ஏப்.7- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (7.4.2014) டில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை ஹிந் துத்துவாவின் மறு பதிப்பாக வெளிவந் துள்ளது.

முதல்கட்டத் தேர்தல் இன்று (7.4.2014) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தங் களின் தேர்தல் அறிக்கை இன்று தேர்தல் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களில் தங்களது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதினாலேயே தந்திர மாக இன்று வெளியிடப்படுகிறது.

ஏனென்றால், அவர்களின் தேர்தல் அறிக் கையில் வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அதிகாரங்களில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை அவர்களுக்குக் கிடைத்து வந்த சலுகைகள்மீது கட்டுப்பாடு விதிக்கப்பட வுள்ளது.

தேர்தல் அறிக்கையில் சில...

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் வெளி யாகியுள்ள முக்கிய செய்திகள் சில...

காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்பு சலுகைகள் நீக்கப்படும்.

இந்தியா முழுவதும் வாழும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் சென்று அவர்கள் இழந்த நிலங்களை மீண்டும் பெற்று அமைதியுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது சிவில் சட்டம் கொண்டுவர நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.

வடகிழக்கு மாநிலங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள சிறப்பு சலுகைகள் அனைத்தும் மறு பரிசீலனை செய்யப்பட்டு, மற்ற மாநிலங்களைப் போல் மாற்றி அமைக்கப்படும். பாகிஸ்தான் வசம் இருக்கும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் எந்த ஒரு தயவு தாட்சண்யமின்றி களையப்படும்.

முஸ்லிம்களின் மதரசாக்களின் (மதபோத னைக் கூடங்கள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, மாற்றியமைக்கப்படும்.

நவீன பல்நோக்கு மருத்துவமனை அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும். தற்பொழு துள்ள மருத்துவமனைகளிலும் நவீன மாற்றம் கொண்டு வருவோம்.

ராமர் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களுள் ஒன்று. இது எங்கள் கட்சியின் கொள்கை முடிவு மட்டுமல்ல; கோடிக் கணக்கான இந்திய மக்களின் உள்ளார்த்தமான எதிர்பார்ப்பு; அரசியல் அமைப்பைச் சரி செய்து ராமர் கோவில் கட்டுவோம்!

கடற்கரை மற்றும் கடல் சார்ந்த தொழில் அனைத்தும் மத்திய அரசின் சிறப்புப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும்.

சேது சமுத்திரத் திட்டம்

ராம் சேது நம் தொன்மையான கலாச்சார மாகும். தோரியம் அதிக அளவில் இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் எந்த முடிவு எடுப்பதானாலும், இவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

மேலும் பல அறிவிப்புகள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Read more: http://viduthalai.in/page-8/78311.html#ixzz2yFkRS8Tf

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன? - கி.வீரமணி


பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவா அஜண்டா இடம் பிடித்துள்ளனவே - பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி

ஹிந்துத்துவாவின் அஜண்டாவான திரிசூலங்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? என்ற அறிவுப் பூர்வமான வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு;

நாட்டில் எங்கும் மோடி அலை வீசுகிறது என்ற திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை தங்களது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலமாக பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு (இப்போது பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் மூத்த தலைவர்களே யோசித்து, யாசித்து சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று கேட்ட பசி மிக்க கணவன் கதை போல) ஏதோ ஆட்சியே மோடி தலைமையில் ஏற்படப் போவது உறுதி என்ற பரப்புரையை, பசப்புரையைப் பரப்பி வருகின்றனர்.

பி.ஜே.பி.யின் தேர்தல்அறிக்கையில் இந்துத்துவா திரிசூலம்!

அப்படியானால் ஆறு மாதமாக, இணையத் தளத்தில்கூட கருத்துக் கேட்டவர்கள், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை ஏன் காலந் தாழ்ந்து, தேர்தல் கமிஷன் விதிமுறைக்கு விரோதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பே தொடங்கிய நிலையில் வெளியிட முன் வந்தார்கள்?

இதுவரை தயங்கி, மறைமுகத் திட்டமாக (Hidden Agenda) வைத்திருந்த இந்துத்துவ திரிசூலமான 1. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமன் கோயில் கட்டுவது.

2. காஷ்மீரத்திற்கு நமது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள 370ஆவது பிரிவின்கீழ் உள்ள தனிச் சலுகையை அறவே நீக்குதல்.

3. பொது சிவில் சட்டம் கொணருதல் (என்ற பெயரால் சிறுபான்மைச் சமுதாய மக்களின் வாழ்வுரிமையில் சிக்கிலைத் திட்டமிட்டு ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு)

தமிழ் ஓவியா said...

இதை 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த வாஜ்பேயி அரசு தேசீய ஜனநாயக முன்னணி ஆட்சியில் (N.D.A.) ஏன் செய்யவில்லை?

இப்போது மட்டும், தயங்கி விவாதித்து செயல்படுத்திட பகிரங்கப் பிரகடனமாக்கியுள்ளனர் என்றால், குஜராத்தில் மோடி அரசு அம்மாநிலத்தை சிறுபான்மையினர் (குறிப்பாக இஸ்லாமியச் சிறுபான்மையோருக்கு) எதிரான ஹிந்துத்வ பரிசோதனைக் கூடமாகவே நடத்தியது; அதை இந்தியா முழுவதிலும் ஆட்சியைப் பிடித்து - அதே வன்முறை கலவரங்களை நடத்தி முடித்திட ஆர்.எஸ்.எஸ். (“Now or Never”) இப்போது இல்லா விட்டால் எப்போதுமே முடியாது- என்கிற தன்மையில் இந்தத் தேர்தல் அறிக்கையைப் பா.ஜ.க. பெயரில் வெளியிட்டிருக்கிறது.

இந்த ஹிந்துத்துவப் பூனைக்குட்டி ஆர்.எஸ்.எஸ். கோணிப்பையிலிருந்து வெளியே வந்து விட்டது - பகிரங்கமாக! இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதுதான்.

1992 மீண்டும் திரும்ப வேண்டுமா?

மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம் - ஆகிய தத்துவங்களில் நம்பிக்கையும் பிடிப்பும் உள்ள வாக்காளர்கள் எவராக இருந்தாலும், இந்த ஆபத்தினை - நாட்டில் அமைதி விடை பெற்று அமளியும், மதக் கலவரங்களும் 1992 போல் நடக்கக் கூடிய ஆபத்தினை - உணர்ந்து தெளிவாக வாக்களிக்க முன் வருவார்கள் என்பதில் அய்யமில்லை.

எவரும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் செரிந்துகொள்ள விரும்ப மாட்டார்களே!

கூட்டணிக்காரர்களே, உங்கள் நிலை என்ன?

இவர்களோடு கூட்டணி என்ற பெயரில் சீட் அணி சேர்ந்துள்ள சில தமிழ்நாட்டு மோடி ஏஜெண்ட்களாக மாறி விட்ட கட்சித் தலைவர்களுக்கு நம் சார்பில் சில கேள்விகள்! 1. அ) மேற்படி திட்டத்தை - ஹிந்துத்துவ அஜெண்டாவை நீங்கள் ஏற்கிறீர்களா?

ஆ) இராமன் கோயில் கட்டுதல், காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை அரசியலமைப்பு பிரிவு (370அய்) நீக்குதல்

இ) பொது சிவில் சட்டம்.

இவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?

2. ஈழத் தமிழர் வாழ்வுரிமைபற்றியோ பிரச்சினைபற்றியோ, ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.தேர்தல் அறிக்கை மூச்சு விடவில்லையே - ஏன்?

வாக்காளர்களே அடையாளம் காண்பீர்!

3. தமிழ்நாட்டிற்கு வந்து உரையாற்றும் திருமதி சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி - தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையும், அந்த அரசும் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டு வருகின்றன - அதுபற்றி ஒரு லேசான கண்டனமோ, தடுத்து நிறுத்த ஏதாவது திட்டமோ உண்டா? (ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணித் தலையங்கம்கூட இதனைக் குறிப்பிட்டுக் காட்டி மூக்கைச் சிந்துகிறதே!)

மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்; மோடி ஒரு சர்வரோக சஞ்சீவி! என்பது போலப் பிரச்சாரம் நடத்தும் தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைமையிலான சீட்டணிக் கட்சித் தலைவர்களே உங்கள் பதில் என்ன? மவுனம் தானா?

வாக்காளர்களே! இவர்களை அடையாளம் காண ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களியுங்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


8.4.2014முகாம்: கோவை

Read more: http://viduthalai.in/e-paper/78340.html#ixzz2yL8S4pb7

தமிழ் ஓவியா said...

ஒன்றுமே இல்லை


பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை -_ தமிழனுக்குப் போகக்கூடாது; - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

- (விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/78351.html#ixzz2yL9GDlWH

தமிழ் ஓவியா said...

அன்றே சொன்னார் தமிழர் தலைவர்

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, லட்சியங்களை அரசியலில் ஈடுபட்டு நிறைவேற்றவே முந்தைய பாரதீய ஜனசங்கம் என்பது 1980 முதல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டது. இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது. நரேந்திரமோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தவர்; ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத்துவா கொள் கையை அப்பட்ட மாகக் கடைப்பிடிப்பதில் சற்றும் கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே - பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்காக தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் - இணைய தளம் உட்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது! சமூகநீதி உணர்வு நாடு முழுவதும் அலைவீசிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு யுத்தியை அரசியல் வியூகமாக வகுத்து, தற்போது காங்கிரசின் தலைமையில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நிலவும் மக்களின் அதிருப் தியைத் திட்டமிட்டு, தன் பக்கம் சாதகமாகத் திருப்பி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், உண்மை யான சமூகநீதி இவைகளுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஹிந்துத் துவா ஆட்சியாகவே உருவாக்கிட துணிந்து களத்தில் வெளிப்படை யாகவே இறங்கி விட்டது!

17.2.2014 விடுதலை அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தினார். இன்று அதன் உண்மை உணரப் படுகிறது. அன்று பி.ஜே.பி.யின் பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று முன்வரிசைக்கு, பி.ஜே.பி.க்குக் கட்டளையிடும் இடத்திற்கு வந்து விட்டது.

ஆர்.எஸ்.எஸால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டவர் தான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

மோடி பிற்படுத்தப்பட்டவர் என்றாலும் அவரை ஏன் முன்னிறுத்தியுள்ளது? ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. என்றாலே பார்ப்பன ஜனதா என்ற கருத்து மக்கள் மத்தியிலே தெரிந்த ஒன்று. (இதற்கு முன்பேகூட பா.ஜ.க.வில் உள்ள உமா பாரதியும், கல்யாண்சிங்கும், (உ.பி.) பங்காரு லட்சுமணனும் (பி.ஜே.பி. தலைவராகவே இருந்தவர்) தமிழ் மாநில பி.ஜே.பி. தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதியும் வெளிப் படையாகவே தெரிவித்துள்ளனர்.)

தமிழ் ஓவியா said...

இந்த முத்திரை பா.ஜ.க.மீது விழுகின்ற காரணத்தால் அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் ஒரு பிற்படுத்தப் பட்டவரான மோடியைத் தந்திரமாக ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தியுள்ளது.

மோடி யார் என்பதற்கும் பெரிய விளக்கம் தேவைப் படாது! அவர் குஜராத்து மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள்மீது அரசப் பயங்கரவாத மாக மிகக் கொடூரமான வன்முறை வெறியாட்டத்தை ஏவி, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்.

எனவே சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கு மோடி போன்ற பார்ப்பனர் அல்லாதார் கிடைத்தால் அதனைத் தக்க முறையில் பயன்படுத்திட பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தவறிடுமா?

நிஜப்புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாகவே குதிக்கும் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் சிந்தித்தால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மோடியை ஆர்.எஸ்.எஸ். தனக்குக் கிடைத்த போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதன் இரகசியம் என்ன என்பது எளிதில் விளங்குமே!

சூரத்தில் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்த சம்மேளனம் ஒன்றில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆற்றிய உரையை DNA - Daily News and Analysis வெளி யிட்டதுண்டு. Brahmins kept Indian Culture Alive என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது.

“Bramins are custodians of Indian Culture and shastras. The Brahmin Community has helped preserved Indian Culture. If our culture is still thriving it is because of Brahmins he said that a Social system can be created by the Methods by the gun of Shastras”

இந்தியக் கலாச்சாரம் உயிரோடு இருப்பதற்குக் காரணம் என்ற தலைப்பில் வெளிவந்த அந்தச் செய்தியில் நரேந்திரமோடி பேசினார்.

இந்திய நாட்டின் கலாச்சாரம் சாஸ்திரங்கள் இவற்றின் பாதுகாவலர்கள் யார் என்று கேட்டால் அவர்கள் பார்ப்பனர்களே ஆவார்கள்!

நமது கலாச்சாரம் உயிரோடு இன்று வரை இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பார்ப்பனர்களே!

ஒரு ஒழுங்கு முறையான சமூக அமைப்பு முறையை சாஸ்திரங்கள் என்ற துப்பாக்கியால்தான் பாதுகாக்க முடியும் என்று சொன்னவர் தான் இந்த நரேந்திரமோடி.

அப்படி இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த நரேந்திரமோடியைத்தானே கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்திட முன்வரும். பார்ப்பனர்களுக்கு நல்ல அடிமையாகக் கிடைத்தவர்தான் இந்த மோடி!

இந்த மோடி ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள் கையைப் பாதுகாப்பதில் நிகர் அற்றவர். மலம் அள்ளும் தொழில் என்பது அவர்களின் கர்மப் பலன் அந்தப் பணி ஒரு தெய்வப் பணி என்று சொன்னவர் (மோடியின் கர்மயோக நூலில்)

அதனை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (11.2.2007) நடத்தியதுண்டு.

குஜராத் மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் தண்ணீர்த் தொட்டியில் உயர் ஜாதிக் காரர்களுக்கு ஒரு நேரம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு வேறொரு நேரம் என்று எழுதி வைத்துள்ளனர். என்றால் - இதன் பொருள் என்ன? ஆயிரக்கணக்கான நகர சுத்தித் தொழிலாளர்கள் அங்கு சமீபத்தில் போராடினார்களே!

ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள்கையின் பாதாரவிந்தங்களைத் தழுவிடக் கூடியவர் மோடி என்பது விளங்கும். தமிழ்நாட்டு மக்கள் தந்தை பெரியார் கொள்கையால் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் - வரும் தேர்தலில் இதற்கொரு பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/78355.html#ixzz2yL9X726t

தமிழ் ஓவியா said...


திமுக ஆட்சியை ஒரு கணம் நினைத்துப்பாரீர்! திமுக ஆட்சியில் திருப்திகர நிதிநிலைமை தி இந்து ஏடு பாராட்டு


தி இந்து ஆங்கில நாளேடு 25.10.2010 அன்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்:

பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டு வரும் நிலையில்; அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் நிதியாண்டு நடுவில் அதிகரிப்பு ஆகியவை களுக்கு மத்தியில்; மாநிலத்தின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்று அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கு வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றிற்கான இலக்கு களை அடைவதற்கு ஏதுவாக நிதிநிலை இருக் கிறது என்று வலியுறுத்துகிறார், நிதித்துறை முதன் மைச் செயலாளர் கே.சண்முகம்.

வருவாய் பற்றாக் குறைக்கும் மொத்த வருவாய் வரவுகளுக்கும் இடையிலான விகிதம் 5.38 சதவிகிதமாகவும்; நிதி பற்றாக்குறைக்கும் ஒட்டுமொத்த மாநில உள் நாட்டு உற்பத்தி மதிப்புக்கும் இடையிலான விகி தம் 3.72 சதவிகிதமாகவும் இருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.

சமீபத்திய நெறிமுறைகளின்படி, அடுத்த நிதியாண்டில்தான் (2011-2012) வருவாய் பற்றாக் குறை குறைக்கப்பட்டு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நிதிப்பற்றாக்குறை மூன்று சதவிகித மாகக் குறைக்கப்பட வேண்டும்.

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி, நமது வருவாய் வரவு ஏறத்தாழ கூடுதலாக ரூ. 3000 கோடி அளவுக்கு உயரும். மத்திய அரசிலி ருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வரி வருவாய் பங்கீடு, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்ட ணங்கள் மூலம் வருவாய் பெருமளவு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இது ஏற்படும் என்று முதன்மைச் செயலாளர் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் அல்லாத பொருள்களின் மீது மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து வருவாய் உயர்வின் காரணமாக கூடுதல் வரி வருவாய் பங் கீடு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் விளக்கம் அளிக்கிறார்.

முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டண விதிப்பு மூலம் வருவாயானது, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான அள வைக் காட்டிலும் இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் மின்சார மானியம், முதியோர் ஓய்வூதியத்தொகை, சத்துணவுத் திட்டம் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்பட சில நல்வாழ்வுத் திட்டங்களுக்காக இந்த ஆண்டு அரசுக்கு ரூ. 12,200 கோடி செலவாகும்.

இந்தப் பட்டியலில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு திருத்தியமைக்கப்பட்ட நிதி ஒதுக் கீடான ரூ. 2,250 கோடி மற்றும் இந்திரா வீட்டு வசதித் திட்டத்துக்கு மாநிலத்தின் பங்கான ரூ. 425 கோடி ஆகியவையும் அடங்கும்.

செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட அக விலைப்படி உயர்வினால், அரசுக்குக் கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 2190 கோடி செலவாகும்.

வருவாய் வரவுகளில் திருத்தப்பட்ட உயர்வு, கூடுதல் வருவாய் செலவினங்களான ரூ. 3000 கோடியில் ஈடு கட்டப்பட்டுவிடும்என்று சண் முகம் குறிப்பிடுகிறார்.

மாநில அரசின் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான வருவாய் வரவுகளில், விற்பனை வரித்தொகை, மாநில சுங்க வரி, முத்திரைத்தாள், பதிவுக்கட்ட ணம் ஆகியவை மூலம் ஆண்டு முழுவதற் குமான ரூ. 41,438 கோடியில், சுமார் 17,345 கோடி வசூலாகியுள்ளது என்று அவர் தெரிவிக்கிறார் .

இந்த ஆண்டு இதுவரை, மத்திய வரிகளில் பங்கீடாக மத்திய அரசிடமிருந்து ரூ.3715 கோடியும், உதவி மானியமாக ரூ. 2,568 கோடியும் மாநிலத்தால் பெறப்பட்டுள்ளது.

அந்தத் திமுக ஆட்சி எங்கே! இன்றைய அஇஅதிமுக ஆட்சி எங்கே?

Read more: http://viduthalai.in/page-8/78372.html#ixzz2yLBGW2FB

தமிழ் ஓவியா said...


வாக்குச் சாவடிக்குள் ஆர்.எஸ்.எஸ்.: எச்சரிக்கை! எச்சரிக்கை!! டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்பு



புதுடில்லி.ஏப்.9- வாக்குப் பதிவன்று வாக்குச் சாவடி களில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் செலுத்தும் திட்டம் குறித்து டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்பினை வெளி யிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சின் முன்னாள் பிரச்சாரக் ஹிந்துத்து வாவின் அடையாளமாக உள்ள மோடி தேசத்தின் மிக உயரிய பதவியை அடைய துடித்துக்கொண்டு செயல் பட்டு வருகின்றார். ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் செயலில் குதித்துள்ளது.

அன்றாட அரசியலிலிருந்து விலகி இருப்பதாக கருதப்பட்டுவந்த ஆர்.எஸ்.எஸ். தற்போது மோடிக்காகப் பிரச்சாரம் செய்துவருவதோடு, முதன்முதலாக நேரிடை யாக வாக்குச்சாவடிகளில் நுழைந்து செயல்பட உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி பாஜக தலைவர் ஹர்ஷ்வர்தன், டில்லி சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளருமாவார். டில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய கொஞ்சம்கூட வெற்றியிலிருந்து நழுவ விடா மல் இருப்பதை உறுதிசெய்ய மூத்த ஆர்.எஸ்.எஸ். தலை வர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். 2009 இல் டில்லியில் ஒரு இடம்கூட பாஜக வெற்றிபெற வில்லை. அனைத்துமே காங்கிரசுக்கே சென்றது.

அதேபோல், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறிப்பாக சுயம்சேவக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினருடன் தோள்கொடுத்து எல்லா செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். வாக்குச்சாவடிகளிலும் நுழைந்து நெருக்கடியான நேரத்திலும் முக்கியப் பங் காற்றிட உள்ளனர். அண்மையில் ஆர்.எஸ்.எஸ்சில் நடை பெற்ற பிரதிநிதி சபா பயிற்சியில் சுயம்சேவக்குகளான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு முக்கியமான பயிற்சி களை அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78389.html#ixzz2yRJerz6T

தமிழ் ஓவியா said...


சமமற்ற சமுதாயத்தில் சம வாய்ப்பு என்ற முழக்கம்?


பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை; அ

தற்கு மாற்றாக, கல்வி, மருத்துவம், பிழைப்பு அனைத்திலும் சூழ் நிலைக்கு ஏற்ற சம வாய்ப்பை உருவாக்குவார் களாம்.

இது நாள் வரை, மற்றவர்கள் செய்த இட ஒதுக்கீடு முறை வெறும் சம்பிரதாயமான ஒரு முறையாகத் தான் இருந்ததாம்.

அதனால், இந்த சம வாய்ப்பு முறையை அறிவிக்கிறது பாஜக.

சென்ற 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இதே பாஜக இட ஒதுக்கீடு குறித்து தனது 2009 தேர்தல் அறிக்கையில் என்ன கூறியது?

கல்வி, வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் பழங்குடியினர்க்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தற்போதுள்ள இட ஒதுக்கீடு தொடரும்; அத்துடன் இல்லாமல், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறியிருந்தது.

2009 இல் இட ஒதுக்கீடு தொடரும் என்று சொன்ன பாஜக, 2014 தேர்தல் அறிக்கையில் அதற்கு முற்றிலும் மாறாக, சம வாய்ப்பு தருவோம் என பார்ப்பன குரலை எதிரொலிக்க என்ன காரணம்?

ஒரு பக்கம் மோடி பிற்படுத்தப்பட்டவர்; முதன் முதலாக ஒரு பிற்படுத்தப்பட்டவரை பிரதமராக பாஜக முயன்றுள்ளது என்று சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம், இட ஒதுக்கீட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஒரு பிரச்சினையை, பெரும்பான்மை மக்களை இழிவு படுத்தி, சூத்திரர் என்றும், பஞ்சமர் என்றும் கூறி, அவர்களுக்கு கல்வி மறுத்து, அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சமுதாயத்திற்கு, ஓரளவு முன்னேறிட வாய்ப்பாக அமைந்த இட ஒதுக்கீட் டில் கை வைக்க முயல்கிறது பாஜக.

அம்பேத்கரும், பெரியாரும் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளை, சம வாய்ப்பு என்கிற பெயரில் பறித்திட தூண்டில் வீசுகிறது பாஜக.

இன்றைக்கு பாஜகவிற்கு தமிழ் நாட்டில் ஆலவட்டம் போடும் சீட்டணி கட்சியினர் இதற் கும் மவுனம் காப்பார்களா?

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படை யில் சமூக நீதி காவலர் வி.பி.சிங், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்ப்பன கூட்டத்திற்கு கன்னத்தில் அறைந்தாற் போல், அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன் சொன்னாரே; சமமற்ற சமுதா யத்தில் சம வாய்ப்பு என்பது தவறு என தீர்ப்பில் கூறியுள்ளாரே;

சிறுபான்மை மக்களுக்கு எதிரான விஷயங்களை, பாஜக தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளது; சமூக நீதி விஷயத்திலும், பாஜக, அரசியல் சட்டத்திற்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.

பின் எந்த விஷயத்திற்காக மோடி பிரதமராக வேண்டும்; பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண் டும் என இங்குள்ள பாஜக சீட்டணியில் உள்ள வர்கள் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். பல ஊர் களில், தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சி யினரும், வேட்பாளர்களும், பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுவதாக ஊடகச் செய்திகள் வருகின்றன.

சமூக நீதி விஷயத்தில், பாஜகவின் நிலைப் பாட்டை ஆதரிக்கும் கட்சிகளுக்கும், தமிழ் நாட்டில் அந்த நிலைமை கட்டாயம் வரும்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78396.html#ixzz2yRKQUyzH

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. தேர்தல் அறிக்கை:

ராமர் பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது வளர்ச்சிக்கு எதிரானது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தகவல்

சென்னை, ஏப். 9- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது அறிவியலுக் கும், பகுத்தறிவுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை புதிய மொந்தை யில் பழைய கள் என்பதாகக் கூட இல்லை. பழைய மொந் தையில் பழைய கள் என்ப தாகவே அமைந்துள்ளது. மோடி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களால் சிறுபான்மை மக்கள் கூட கவரப்பட்டுள் ளதாகவும், அவர்கள் கூட பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க தயாராக இருப் பதாகவும் ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த பார தீய ஜனதா கட்சி தலைமை முயற்சித்து வந்தது.

ஆனால் அவர்களது தேர் தல் அறிக்கை வகுப்புவா தத்தை முன்வைப்பதோடு, தாராளமய பொருளாதார கொள்கையை வலியுறுத் தும் கட்சிதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக் குரிய இடத்தில் கோவில் கட்டுவோம், ஜம்மு-காஷ் மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை அளிக்கும் அரசி யல் சட்டப்பிரிவு 370அய் ரத்து செய்வோம். பொது சிவில் சட்டம் கொண்டு வரு வோம், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்ற ஆர். எஸ்.எஸ். அமைப்பின் அனைத்து செயல்திட்டங்க ளையும் உள்ளடக்கியதா கவே பாரதீய ஜனதா கட்சி யின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முற்றாக முடக்குவோம் என்று கூறு வதும், ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவதும் முற்றிலும் அறிவியலுக்கும், பகுத்தறி வுக்கும், வளர்ச்சிக்கும் எதி ரானது.

காங்கிரசுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறும் பாரதீய ஜனதா கட்சி பொரு ளாதாரத்துறையில் அதே காங்கிரசின் தாராள மயமாக் கல் கொள்கையைத்தான் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் மாறாது, மாறவும் முடியாது என் பதை அவர்களது தேர்தல் அறிக்கையே தெளிவாக உணர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/78400.html#ixzz2yRLQ07RM