Search This Blog

18.4.14

குஜராத்லட்சணம்பாரீர்! பாரீர்!குஜராத்தில்மதுவிலக்கின்லட்சணம்!-படியுங்கள்,பரப்புங்கள்!

படியுங்கள், இதைப் பரப்புங்கள்!
குஜராத் லட்சணம் பாரீர்! பாரீர்!

மோடியின் ஆட்சியில் குடிநீர் பஞ்சம்!

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் எங்கெங்கும் காணும் குடிநீர் பஞ்சம்!
காலி குடங்களுடன் கிராமத்துத் தாய்மார்களும், மக்களும், ஆளுங்கட்சியினை எதிர்த்து வேதனை யோடு, எதிர்ப்புக் குரல் கொடுத்து விரட்டி விரட்டி அனுப்புகிறார்கள்!

பா.ஜ.க. கூட்டணியில் பிரச்சாரம் செய்யும் தே.மு. தி.க. தலைவர் அவர்கள் மோடி ஏதோ சர்வரோக சஞ்சீவி என்பதுபோல தேர்தல் கூட்டங்களில் பேசுகிறார்.

மோடிக்கு வாக்களியுங்கள் குடிநீர் பஞ்சத்தை அவர் போக்கி விடுவார்
மோடிக்கு வாக்களித்தால் மின்சாரத் தட்டுப் பாட்டைப் போக்கிவிடுவார் என்றெல்லாம்

மயக்க பிஸ்கட் வாக்குறுதிகளை வாரி விடுகின்றனரே!

குஜராத்தின் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? தோழர்களே!
குஜராத்தில் குடி தண்ணீர் எங்கும் கிடைக்கிறது; தண்ணீர் பஞ்சம் இல்லை என்கிறார் மோடி.

ஆனால் உண்மை நிலை என்ன?

1. குஜராத்தின் 17 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

2. அங்குள்ள நகரங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதிலும் 2 மணி நேரம் தான்!
அகமதாபாத், வதோதரா, பாரூச், ஆனந்த, கடா போன்ற எல்லா மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் தாங்க முடியவில்லை.
குஜராத் தலைநகரமான காந்திநகரிலும் இதே கதிதான்!

3. ராஜ்காட் மாநகரத்தில் 14 லட்சம் பேருக்கு  2 நாளைக்கு ஒரு தடவை 20 நிமிடம் மட்டுமே தண்ணீர் விரியோகம்!

4. அகமதாபாத் நகருக்கு 840 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அவ்வளவு தண்ணீர் அங்கே இல்லாததால், மக்கள் தண்ணீர் லாரியை நம்பித்தான் வாழுகிறார்கள் - புரிந்துகொள்ளுங்கள்!

----------------- சர்ச்லைட்  --"விடுதலை” 18-04-2014



குஜராத்தில் மதுவிலக்கின் லட்சணம்!
குஜராத்தில் 1960 முதலே காந்தியார் பிறந்த மண்ணாக இருப்பதால் - பூரண மதுவிலக்கு இருப்பதாக தம்பட்டம் அடிக்கின்றனர்!
உண்மை என்ன தெரியுமா?

1. குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும் அங்கே போன் செய்தால் வீட்டிற்கே  மதுபானத்தை அவர்கள் கொண்டு வந்து தருகிறார்கள்.

2. சுற்றுலா பயணிகளுக்கும், மருத்துவக் காரணங்களுக்காக குடிக்கும் பழக்கமுடையோருக்கும் அரசு, அனுமதி (பர்மிட்) வழங்குகிறது; ஏராளமானவர்கள்  மருத்துவச் சான்றுடன் பலரும் மதுப் பழக்கம் உடையவர்களாகவே உள்ளனர் என்ற உண்மையை மோடி புகழ் பாடும் அவரது தோழர்கள் புரிந்து கொள்ளட்டும்!

                   - சர்ச்லைட் -- "விடுதலை” 18-04-2014

31 comments:

தமிழ் ஓவியா said...


ராஜஸ்தானில் பாஜக தேர்தல் செலவுக்கு பாபா ராம்தேவின் பணமா?


செய்தியாளர்களிடமிருந்து தப்பித்து ராம்தேவ் ஓட்டம்!.

ஜெய்ப்பூர்.ஏப்.18- செய்தியாளர் சந்திப்பில் யோகா சாமியார் பாபா ராம்தேவ் தப்பி ஓட்டம் பிடித்தார். யோகா குரு என்று சொல்லிக் கொள் ளும் சாமியார் பாபா ராம் தேவ் சிபாரிசின்பேரில் பாஜகவின் வேட்பாளராக மஹந்த் சந்த்நாத் யோகி என்பவர் ஆல்வார் தொகு தியில் நிறுத்தப்பட்டுள் ளார். ஆல்வார் தொகுதியில் மத்திய அமைச்சர் ஜிதேந் திர சிங் காங்கிரசு தரப்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று செய்தியாளர்களி டையே ராம்தேவ் பேசும் போது வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கப் பட்டுள்ளது குறித்துப் பேசினார். தம்மிடம் மைக்ரோ மைக் உள்ளதை மறந்து ஆல்வார் தொகுதி பாஜக வேட்பாளர் மஹந்த் சந்த்நாத் யோகி பல இடங் களிலிருந்தும் பணத்தைக் கொண்டுவருவதில் ஏராளமான பிரச்சினை களை சந்தித்து வருவதாக ராம்தேவிடம் கூறினார். அப்போது வேகமாக இடைமறித்த ராம்தேவ் இந்த இடத்தில் இந்த பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது. நீ என்ன முட்டாளா? என்று கேட்டு மஹந்திடமிருந்த மைக்ரோ மைக்கைப்பிடுங்கிக் கொண்டார்.

செய்தியாளர்கள் முன் னிலையில் ராம்தேவும், மஹந்தும் வெட்கித் தலை குனிந்தனர்.

இதுகுறித்து அனைத்து செய்தியாளர்களும் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். செய்தியாளர்களின் கேள்வி களுக்குப் பதில் அளிக்கா மல் போக்குக்காட்டி விட்டு, செய்தியாளர்களின் சந்திப்பை பாதியில் நிறுத் தியதோடு அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார். இதுகுறித்து பின்னர் மஹந்த் கூறும்போது, பணத்தைப்பற்றி பேசிக் கொள்ளவில்லை. செய்தி யாளர்கள்தான் தேவையில் லாமல் பதட்டத்தை உரு வாக்கி விட்டார்கள் என்று கூறினார். ராஜஸ்தானில் இப் பிரச்சினையே கறுப்புப் பணம்மீட்பது குறித்துப் பேசிவரும் பாஜகவுக்கு பதிலடியாக காங்கிரசின் பிரச்சாரத்தில் பொறிபறக்க வழிவகுத்துள்ளது.

காங்கிரசு சார்பில் தொடர்பாளராக உள்ள அர்ச்சனா ஷர்மா கூறும் போது, மோடிக்கு ராம் தேவ் உதவுவதுடன், கறுப் புப் பணம்குறித்து தேசத் தையே தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார். உண் மையான தகவல் என்ன வென்றால், ராம்தேவும், அவர் சீடர்களும் ஏராள மான கறுப்புப் பணத்தை வைத்துள்ளனர். அவர் கருப்புப் பணத்தைக் காட்டி தன்னுடைய சீடர் களுக்குப் போட்டியிடும் இடத்தைப் பெற்றதோடு, தேர்தல் பிரச்சாரத்துக்கும் பணத்தை தள்ளி விடுகிறார். தேர்தல் ஆணையத்திடமி ருந்தும், ராஜஸ்தான் மாநில தேர்தல் துறையிடமிருந் தும் நடவடிக்கை எடுப் பார்கள் என்று எதிர்பார்க்கி றோம் என்றார்.

(- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 17-4-2014)

Read more: http://viduthalai.in/e-paper/78856.html#ixzz2zHrSvlaj

தமிழ் ஓவியா said...

பணத்திற்குப் பதில் பண்டங்கள்!

தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டு வாடா செய்வதில் சிக்கல் இருந்தால் மளிகைக் கடைகள் மூலம் மளிகைச் சாமான்களை வழங்கும் ஒரு புது யுக்தி கையாளப்படுகிறதாம். எப்படி இருக்கிறது? மக்கள் தயாராக இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? முதலில் தேவை விழிப் புணர்வே! இயற்கையாக இல்லையென்றால் ஊட்டப் பட வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/78861.html#ixzz2zHrwO1xJ

தமிழ் ஓவியா said...


வாக்குப்பதிவு இயந்திரத்தை வாஸ்துப்படி திசை மாற்றி வைக்கச் சொன்ன அமைச்சர்


கோலார், ஏப்.18- கருநாடக மாநிலம் கோலார் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி யில் மத்திய அமைச்சர் முனியப்பாவின் வேண்டு கோளை ஏற்று, வாஸ்து சாஸ்திரப்படி வாக்குப் பதிவு இயந்திரத்தை திசை மாற்றி வைத்தார்'' என்ற புகாரின் பேரில் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில், கர்நாடக மாநிலம் கோலார் தொகுதியில் மத்திய அமைச்சர் முனியப்பா போட்டி யிடுகிறார்.

கோலார் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஹரோஹள்ளி வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை முனியப்பா வாக் களிக்க வந்தபோது, வாக் குப்பதிவு இயந்திரம் தெற்கு நோக்கி இருந்ததை கண்டு அவர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படு கிறது.

இதனையடுத்து வாஸ் துப்படி அந்த எந்திரத்தை வடகிழக்கு திசையை நோக்கி மாற்றி வைக்கும் படி அவர் கேட்டுக் கொண் டார். அவரின் வேண்டு கோளை ஏற்று, வாக்குப் பதிவு இயந்திரத்தை தேர் தல் அதிகாரியும், முனியப் பாவின் ஆதரவாளர்களும் திருப்பி வைத்துள் ளனர். இதுகுறித்து புகார் தெரி விக்கப்பட்டதை அடுத்து, வாக்குப்பதிவு இயந்தி ரத்தை திசை மாற்றி வைத் ததாக தேர்தல் அதிகாரியை ஹரோஹள்ளி வாக்குச் சாவடியில் இருந்து தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துவிட்டது.

இந்த தகவலை கோலார் துணை ஆணை யரும், தேர்தல் அதிகாரியு மான டி.கே. ரவி செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78857.html#ixzz2zHs2Udh7

தமிழ் ஓவியா said...


மக்களையும், அம்பேத்கரையும், மோடி பரிவாரிடமிருந்து காப்பாற்றுவோம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- குடந்தை கருணா

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ல், மோடிக்கு அம்பேத்கர் ஞாபகம் வந்து விட்டது. அம்பேத்கர் படத்திற்கு மாலை இடுகிறார். வணங்குகிறார். அடுத்து மோடி சொல்கிறார். பாஜக ஆட்சியில் இருந்தபோதுதான், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என வழக்கம் போல், புளுகு மூட் டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

பாஜக ஆட்சியில் இருந்தது 1998 முதல் மே 2004 வரை. ஆனால், 1990-இல் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, அவரது ஆட்சியில் அம்பேத் கருக்கு பாரத ரத்னா விருது வழங் கப்பட்டது. அண்மைக்கால நிகழ்வு களைக்கூட, பொய்யாகப் பேசும் திறமை, மோடிக்கு மட்டும் தான் உள்ளது.

திடீரென அம்பேத்கர் மீது மரி யாதை; தலித் மக்கள் மீது பாசம், மோடிக்கும், பாஜகவிற்கும் வந்திருக் கிறது. ஆனால், தலித் மக்களைப்பற்றி மோடியின் கருத்து என்ன?

கர்மயோக் எனும் நூல் நவம் பர் 2007-இல் மோடியால் எழுதப் பட்ட நூல். குஜராத் மாநில பெட் ரோலிய கூட்டு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டது. அந்த நூலின் சாத்னா பார்வா என்ற பகுதியில், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களான வால்மீகி சமுதாயத்தினர், மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதை இந்து மத அடிப்படையில் ஆதரித்து நரேந்திர மோடி எழுதியுள்ளார்.

வால்மீகி (ஒரு தலித் இனக் குழு) மக்கள் மலம் அள்ளும் பணியை தங்களின் வாழ்வாதாரமாக மட்டும் நினைத்து செய்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது தான் காரணம் என்றால், அந்தப் பணியை அவர்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக செய்திட வாய்ப் பில்லை. அவர்களில் யாருக்காவது ஏதோ ஒரு நேரத்தில் கடவுளுக்கும், சமுதாயத்திற்கும் மகிழ்ச்சி தருவது தங்கள் கடமை என்கிற ஞானம் தோன்றியிருக்கும்; கடவுளின் கருணையால் தங்களுக்கு அளிக்கப் பட்ட இந்த மலம் அள்ளும் பணியை செய்திட வேண்டும்; இத்தகைய சுத்தப்படுத்தும் பணியை பல நூற்றாண்டுகளாக எந்தவித உள் நோக்கமின்றி ஓர் ஆத்மிகமான பணியாக அவர்கள் செய்திருக்க வேண்டும்; இது தொடர்ந்து பல தலைமுறைகளாக நடைபெற்றிருக்க வேண்டும். அவர்களது மூதாதையர் களுக்கு வேறு எந்தப் பணியும் செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இந்த மலம் அள்ளும் பணியை செய்தார்கள் என நம்புவது இயலாது என எழுதி உள்ளார்.

அடுத்தவர் மலத்தை, தலையில் சுமக்கும் அவல நிலை, இன்னொரு மனிதனுக்கு இருக்கக்கூடாது என நாகரிக எண்ணம் கொண்டவர்கள் கருதவும், அதற்கு, நீதி மன்றங்களும் தீர்ப்பு தந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், அதனை புனித செயலாகக் கருதி, தலித் மக்கள் செயல்பட, மோடி விருப்பம் தெரிவிக்கிறார் என் றால், மோடியை நாகரிக மனிதராக எப்படிக் கருத முடியும்?

நான் இந்து தேசியவாதி; ஆர்.எஸ். எஸ்-இல் இருப்பதை பெருமை யாகக் கருதுகிறேன் என பகிரங்கமாக கூறியவர் மோடி. அத்தகைய மோடி, மனிதனை பிறப்பால் பேதம் காட்டும் இந்து மதத்தில் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன் என உறுதி பூண்டு, புத்த நெறியை ஏற்றுக் கொண்ட அம்பேத்கரை வணங்குவதும், மாலை இடுவதும், அம்பேத்கரை இழிவுபடுத்துவதா கும். அதேபோல், அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதும் எந்த மக்களின் இழிவைப் போக்க வேண்டும் என்று போராடினாரோ, அந்த தலித் மக் களை, மேலும் இழிவு படுத்தும் விதமாக மோடி நூல் எழுதுவதும், மோடியின் சிந்தனையும், செயலும் எவ்வாறு இருக்கும் என்பதற்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எத்தகைய ஆபத்து உள்ளது என்பதையும் எடுத் துக்காட்டுகிறது

Read more: http://viduthalai.in/page-2/78868.html#ixzz2zHsJ1oLU

தமிழ் ஓவியா said...

ஜனநாயகத்துக்கே கேடான சர்வே

என்டிடிவியின் சர்வே முறைகேடு வெளுத்துவாங்கும் டில்லி இணைய ஊடகம்

டில்லி. ஏப்.18- என்டிடிவி அளித்துள்ள புதிய சர்வே முடிவுகள் அப்படியே எடுத்துக் கொண்டால், நடைபெற்றுவரும் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 275 இடங்களைப் பெறும் என்று முன்கூட்டியே சொல்லி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி மற்றும் காங்கிரசு இதற்குமுன் பெற்ற எண்ணிக்கைகளை மொத்தமாக இழந்து நிற்பதாகவும், அவர் களைக்காட்டிலும், மோடி அலையால் உபியில் மொத்தமாக 51 இடங்களை வாரிச் சுழற்றிக் கொள்வதாகவும் சர்வே கூறுகிறது.

காங்கிரசு அனைத்துத் தேர்தலிலும் தனியே குறைந்தபட்சமாக 92 இடங்களை வென்றுள்ளது. சர்வேபடி அய்க்கிய முற் போக்கு கூட்டணியில் வெறும் 111 இடங் கள் மட்டுமே பெறும் என்று கூறியுள்ளது.

ஆம்ஆத்மி டில்லியில் வெடித்துக் கிளம்பியது. சர்வேபடி, மிகச் சொற்ப மாகவே அக்கட்சி பெறும் என்கிறது.

பாஜக, அதன் ஆதரவாளர்களுக்கு அல்லது சர்வே எடுத்ததாக சொல்பவ ருக்கு கிறிஸ்துமஸ் ஆண்டின் தொடக்கத் திலேயே வந்துவிடுகிறது என்பதுபோல் சர்வே முடிவு உள்ளது.

சர்வேயில் எடுக்கப்பட்ட முடிவுகள் உண்மையாகவே வாக்காளர்களின் கருத்துகளைக் கொண்டதுதானா?

எப்படிப் பார்த்தாலும், தேர்தல் நேரத்தில் என்டிடிவி எடுத்துள்ள இந்த சர்வே, போதுமான ஆதாரங்கள் இல்லா மல், பரப்பப்பட்டுள்ளது. அவர்களின் பிழைப்புக்காகவும் எடுக்கப்பட்டிருக் கிறது. சர்வே முடிவு என்பது ஊடகங்களின் கருத்துத்திணிப்புதானோ என்று எல்லோ ருடைய மனதிலும் எழுந்துள்ள கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.

பிரச்சினையே தேர்தல் ஆணை யத்தின் முடிவால் அல்ல. அது வரை யறுத்துள்ள கெடுபிடியான நேரம்தான். ஒரு மாதம்வரையிலான தேர்தலின் மத்தியில் சர்வே எடுக்கும் உரிமை மறுக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளால் நிலைமை மோசமாகி விட்டது. தேர்தல் ஆணையத்தின் அவசரகோலத்தில் எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவுகளால், தற்போது என்டிடிவி சர்வே முடிவுகளை உறுதிப்படுத்தவோ, சர்வே முடிவுகளுக்கு மாறான நிலையிலிருப்பதை எடுத்துக்காட்டவோ வழி இல்லை. சர்வே முடிவால் பாதிக்கப் பட்டவர்கள் கருத்து தெரிவிக்க இயலா மலும் உள்ளது. என்டிடிவி சர்வே ஆணை யத்தின் விதிமுறைகளை கடைப்பிடித் துள்ளதாகக் கூறினாலும், உள்ளார்ந்த உணர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை.

ஆணையத்தின் இறுதிக்கெடுவாகிய ஏப்ரல் நான்காம் தேதிக்குப்பிறகு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதை மன்னித்து, சாதகமான காரணங்களைக் கூறி வெளியிட அனுமதித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

வாக்களிப்பவர்கள் தாமாக முடி வெடுப்பதற்கு வாய்ப்பாக, போதிய கால இடைவெளி இருக்கவேண்டும் என்கிறது. இதனாலேயே, தேர்தலுக்குப்பின் கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் வாக்களித்தவர்கள் யாருக்கு வாக்களித் தார்கள் என்பதை வெளியிடும்போது, வாக்களிக்கக் காத்திருப்போரையும், அதைப்போலவே வாக்களிக்க வலியுறுத் துவதாகிவிடும். எனவே, ஆணையம் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்பை வெளி யிடுவதைத் தடை செய்துள்ளது.

என்டிடிவி சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து, ஆணையம் விதித்த கெடு வுக்குமுன்பாக எடுத்து முடிக்கப்பட்டது போல் இருப்பது முற்றிலும் தவறானது. ஏப்ரல் நான்காம் தேதிக்கு முன்னதாக எடுத்துள்ளதாகக் கூறி தற்போதைய நிலவரங்களையும் இணைத்தே சர்வே முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த முடிவு மக்களிடையே ஒருசார் பான ஆதரவுநிலையை அதிகப்படுத்தும் நோக்கமேயாகும். மேலும், உச்சகட்ட தேர்தல் காய்ச்சலில் இருக்கும்போது, வாக்காளர்களின் முடிவு என்னவென்றே ஊகிக்க முடியாத நேரத்தில் தேர்தலின் ஒரு பகுதியாக சர்வே முடிவை ஒரு சார்பாக வெளியிட்டுள்ளது.

ஊடகங்களிடையே உள்ள கடும் போட்டியில் பார்வையாளர்கள் மத்தியில் சர்வே எடுத்தது அந்த ஊடகத்தின் பெரிய வெற்றியாகும். ஆனால், அதன் விலை என்ன?

ஒரு குறிப்பிட்ட கட்சிமட்டும் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று வெளியிட்டு வாக்காளர்களைத் திசை திருப்புவதை என்டிடிவி செய்துள்ள நோக்கம் தெரி கிறது. தவிர்க்கவே முடியாதவகையில் திரும்பதிரும்ப அவர்களிடையே வெற்றிபெறுவது இன்னார்தான் என்று கருத்து வெளியிடும்போது, அவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு வெற்றிபெறுவதாக சித்தரிக்கப்பட்டதன் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் யார் வெல்வதாக கருது கிறார்களோ அவர்களை ஆதரிக்கும் மனோநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

மூத்த செய்தி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ஒரு பெண்ணுக்கு மோடியைப்பற்றி ஒன்றுமே தெரியாது, அவர் நாட்டுக்கு நல்லது செய்வார் என்பதைவிட, வெற்றிபெறுவார் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கேள்விப் பட்டாராம். அதனால் வாக்களிக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படித்தான் அனைத்து அரசியல்வாதிகளும் உண்மை வேறாக இருந்தாலும், அதற்கும் மேலாக தொடர்ந்தாற்போல் மிகப்பெரிய வெற்றி பெறுவதாகக் கூறிவருகின்றனர். இப்படித்தான் மோடி வெற்றிபெறுவதாக, அடுத்த பிரதமர் என்று தொடர்ந்து கூறி, வாக்காளர்களை திசை திருப்பி வருகின்றனர்.

என்டிடிவி சர்வே பாஜகவுக்கு உதவுகிறது. அதேநேரத்தில் காங்கிரசை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. ஆம்ஆத்மி கட்சி, தன்னைக்காத்துக் கொள்ள போராடும் தேவை உள்ளதாகும். அந்த அமைப்புகள், அதன் கொள்கைகள் ஆகியவற்றைத் தாக்குவதுபோல் சர்வே முடிவு உள்ளது. மற்ற இடங்களைக் காட்டிலும், வாக்காளர்கள் மத்தியில் டில்லியில் இதன்பாதிப்பு அதிகமாகும்

எல்லாவற்றையும் கடந்து, இந்த கசப்பான தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இதுபோன்ற வாதங்கள் பங்குதாரர்களால், சர்வே முடிவை பாராட்டுபவர்கள், வரவேற்பவர்களுக்கு கொள்கை ஏதும் கிடையாது. பிரச்சாரக் களத்தில் இந்த சர்வே முடிவைச் சொல்லி கிடைக்காத இடத்திலும் ஆதரவைத் தேட முயல் வார்கள். அநேகமாக மாபெரும் தேர் தலின் முடிவு என்பது சர்வே முடிவுக்கு தொடர்பின்றியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ஃபர்ஸ்ட் போஸ்ட், 15-4-2014, டில்லி

Read more: http://viduthalai.in/page-2/78865.html#ixzz2zHt9PKii

தமிழ் ஓவியா said...


நாத்திகக் கருத்துகள்

நாத்திகன்

நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன்.

- ஜான் புச்சன் (ஸ்காட்லாந்து வரலாற்று ஆசிரியர்)

நான் ஒரு நாத்திகன். பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
- க்ளாரென்ஸ்டாரோ, (அமெரிக்க வழக்குரைஞர்)

கடவுள்

ஆண்களைக் கவரும் அழகை இழந்த பெண் முதுமையில் கடவுள் பக்கம் திரும்புகிறாள்.
- பால்சாக் (ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்)

தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே. வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
- ஆம்ப்ரோஸ் பியர்ஸ் (அமெரிக்க எழுத்தாளர்)

கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள்களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
- ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப்பெயர் கொண்ட என்றிவீலர்ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்

கடவுள் என்பது அகராதியில் கடவு (வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது.
-சாமுவேல் பட்லர் (ஆங்கில நாவலாசிரியர்)

மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது!
- ஃப்ராங்ளின் (அமெரிக்க விஞ்ஞானி)

ஆண்கள் கடவுள்களைப் படைக்கிறார்கள். பெண்கள் அவற்றை வணங்குகிறார்கள்.
- ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேசர் (அமெரிக்க மனித இன நூல் ஆசிரியர்)

இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல; இல்லாத ஒன்றே கடவுள்.
- கூர்மான்ட் (ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHuUbI7c

தமிழ் ஓவியா said...

கண்டு முட்டு - கேட்டு முட்டு!

வைணவர்களில் இருக்கின்ற இருபிரிவாளர்களான வடகலை நாமக்காரர்களும், தென்கலை நாமக்காரர்களும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டாலே - அதாவது தென்கலை நாமம் போட்டிருப்பவரை வடகலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும், வடகலை நாமம் போட்டிருப்பவரை தென்கலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும் - அந்த பாவத்தைப் போக்க சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இவர்கள் கண்டு முட்டுகள் ஆவார்கள்!

சைவர்களும், வைணவர்களும் ஒருவரையொருவர் எதிர்ப்பாகக் கருதி வந்தனர் அந்தக் காலத்தில் - அப்படி இருக்கும்போது சைவர்கள் செல்லும் வழியில் - செல்லும் போது வைஷ்ணவக் கடவுளைப் பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் காதாலோ கேட்டுவிட்டாலும், அதே போன்று வைஷ்ணவர்கள் காதில் படும்படி சைவர்கள் தங்கள் கடவுளைப்பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் கேட்டுவிட்டாலும் அந்தைப் பாவத்தைப் போக்குவதற்கு சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இப்படி செய்வதை கேட்டு - முட்டு என்பர்.

இப்படி கண்டு முட்டு, கேட்டு முட்டுகளைப் போன்று இன்றைய அரசியல் கட்சிக்காரர்கள் எதிர்ப்பாக நடந்து கொள்கின்றனர்.
(10.10.1977 அன்று கடலூர் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி உரையிலிருந்து)

தகவல்: துரை.சந்திரசேகரன்

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHudTgpt

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங் களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரி யர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோத மானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.

- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHumGwZ4

தமிழ் ஓவியா said...


நடிகர்கள் - பதில் சொல்லியாக வேண்டும்!


ஒரு நாள் ரஜினி சந்திப்பு! - இன்னொரு நாள் நடிகர் விஜய் சந்திப்பு! ஆக மோடி தேர்தல் நடிகர் ஆகி? இருக்கிறார் என்பதுதானே இந்த நாடகத்தின் பின்னணி. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்! சம்பிரதாய சந்திப்பாம்! சொல்லுகிறார்கள்; படிப்பவர்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்கள்! நேரடியாகச் சொல்லத் தைரியம் இல்லை - இதில் யாருக்கும் வெட்கம் இல்லை!

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் அல்லர்.

இந்தத் தமிழ்நாட்டு நடிகர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவாவைக் கையில் எடுத்துக் கொண்டு, மதவாதத்தைத் திணித்து மக்கள் மத்தியில் கல வரத்தை உண்டு பண்ணத் திட்டமிட்ட மதவெறியர் களுக்கு ஒரு வகையில் துணை போயிருக்கிறார்கள் இந்த நடிகர்கள் என்பதை மறக்க வேண்டாம்!

இந்தத் தவறுக்குப் பின்னொரு காலத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும்! - சிறுபான்மை மக்கள் மத்தியிலும் மதச்சார்பற்ற எண்ணங்கொண்ட மக்கள் மத்தியிலும் இவர்களுக்குரிய இடம் என்ன? ஏன் இந்த விஷப் பரிட்சை?

Read more: http://viduthalai.in/page-8/78888.html#ixzz2zHvL8ukw

தமிழ் ஓவியா said...

கார்ப்பரேட், மதவாத சக்திகளின் பொது வேட்பாளர் நரேந்திர மோடி: பிரகாஷ் காரத் தாக்கு

பாஜக பொது வேட்பாளர் நரேந்திர மோடி கார்பரேட் நிறுவனங்கள், மதவாத சக்திகளின் பொது வேட்பாளர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரி வித்துள்ளார்.

வாரணாசியில் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை அவர் கூறியதாவது:

நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டது.

அதற்காக காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத் தினால் மார்க்சிஸ்ட் வேட்பாளரை திரும்பப் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தோம். ஆனால், கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட வில்லை.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக கார்ப் பரேட் நிறுவனங்கள் அனைத்தும் மோடியை ஆதரிக்கின்றன. இதற்கு முன்பு காங்கிரஸை ஆதரித்த கார்பரேட் நிறுவனங்கள் இப்போது மோடிக்கு ஆதரவாக மாறியுள்ளன. கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் மதவாத சக்திகளின் பொது வேட்பாளராக மோடி உள்ளார்.

வாரணாசியில் மோடி நிறுத்தப்பட்டிருப் பதன் மூலம் மதத்தின் அடிப்படையில் வாக் காளர்களை ஈர்க்க பாஜக, ஆர்.எஸ்.எஸ். திட்ட மிட்டிருப்பது தெளிவாகிறது.

இந்த நேரத்தில் விவசாயிகள், தொழிலா ளர்கள், இளைஞர்கள், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாசிச, முதலாளித்துவ, மதவாத சக்தியை எதிர்த்துப் போராட முன்வர வேண் டும். வாரணாசியில் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/78884.html#ixzz2zHvjIFHs

தமிழ் ஓவியா said...


அட்டைப் படத்தில் பா.ம.க.




திராவிடர் கட்சிகளுடன் இனி கூட்டு இல்லை என்று சொன்ன பா.ம.க. தற்போது அதனை மீறி விட்டதே என்ற கேள்விக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அற்புதமான விளக்கத்தை விண்டுரைத்துள்ளார். (தி இந்து 18.4.2014).

திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டு சேர்வதில்லை என்றுதான் கூறினோம் என்று அந்தர் பல்டி அடித்துள்ளாரே. சர்க்கஸ்காரர்கூட இந்தப் பல்டிக்கு முன் எம்மாத்திரம்?

அவர் கூற்றுப்படி பார்க்கப் போனால் மதிமுக திராவிடக் கட்சியில்லை - அப்படித்தானே? அந்தோ பரிதாபம்! இதற்கெல்லாம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் எந்தப் பதிலையும் சொல்ல மாட்டார்.

சொல்லிக் கொள்ள எந்த கொள்கையும் இல்லை என்கிற அளவுக்கு அவர்தான் மகா சாதனைப் படைத்து விட்டாரே!

அது சரி.. எந்தத் தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று பா.ம.க நிறுவனர் சொன்னாரே - அப்படிப் பார்த்தால் பா.ம.க. இப்பொழுது கூட்டுச் சேர்ந்துள்ள பா.ஜ.க. கூட தேசியக் கட்சி இல்லை என்று சத்தியம் செய்தாலும் செய்வார்.

பல்டிகள் என்று ஓரு புத்தகம் எழுதினால் அதன் அட்டைப் படத்தில் இடம் பெறுவது பா.ம.க.வாகத்தான் இருக்கும்!

Read more: http://viduthalai.in/e-paper/78948.html#ixzz2zNxQCPoo

தமிழ் ஓவியா said...


மதிமுக பொதுச் செயலாளர் கொள்கையும் பேசுகிறார்



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்குக் கொள்கை ஞானோதயம் தூத்துக்குடி தாளமுத்து நகரில் ஏற்பட்டு விட்டது.

என்ன புதிர் என்கிறீர்களா? பாரதீய ஜனதாவின் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை என்று சொன்னாரே பார்க்கலாம்.

அப்படியென்றால் ராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறாரா? அதைப்பற்றி மூச்சுவிடவில்லையே - ஏன்?

வெளி நாடுகளில் இந்துக்கள் பாதிக்கப்பட் டால் அவர்களுக்கு உதவுவோம் என்று பா.ஜ.க. தேர்தல்அறிக்கையில் கூறப்பட் டுள்ளதே - அதைப்பற்றி மதிமுகவின் நிலைப்பாடு என்ன?

இந்தியாவைச் சேர்ந்த இந்து அல்லாத மற்றவர்கள் பாதிக்கப்பட்டால் பா.ஜ.க. முகத்தைத் திருப்பிக் கொள்ளுமா?

பசுவதை பற்றி பா.ஜ.க. கூறுவதுபற்றி என்ன கருத்து?

பச்சையான இந்துத்துவா தேர்தல் அறிக்கையை முன் வைத்து பா.ஜ.க. இந்தத் தேர்தலைச் சந்திக்க வந்து விட்டது. இதற்கு நடைபாவாடை விரிப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; திராவிட இயக்க த்தைக் காட்டிக் கொடுக்கும் இந்தப் பொல்லா நிலைக்குக் காலா காலத் திற்கும் மதிமுகவும், பாமகவும் பதில் சொல்லி யாக வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/78947.html#ixzz2zNxc6A9I

தமிழ் ஓவியா said...



ராம்தேவ் மீதான புகார் எதிரொலி:
யோகா முகாம்கள் நடத்த தடை

புதுடில்லி, ஏப். 19- யோகா குரு ராம்தேவ் மீதான புகாரின் எதிரொலியாக, யோகா உள்ளிட்ட அரசியல் சார்பற்ற முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. யோகா குரு ராம்தேவ், வாழும் கலை நிறுவனர் சிறீசிறீரவி சங்கர் ஆகியோர் பயிற்சி முகாம் என்ற பெயரில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பொது மக்களிடம் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், யோகா உள்ளிட்ட அரசியல் அல்லாத அமைப்புகள் முகாம்கள் நடத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர் பாக அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், சில அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறுகள் நடக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலோ, ஏற்கெனவே அளித்த அனுமதியை தவறாக பயன்படுத்திய அமைப்புகளாக இருந்தாலோ அவர்கள் யோகா போன்ற முகாம்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம். இதுபோன்ற விதிமீறல்கள் நடந்திருந்தால் அதுபற்றியும் ஆணையத் துக்கு தெரியப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தை ஊழல் பிரதேசம் என்று கூறலாம் : சோனியா

நீமச், ஏப். 19- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் தொகுதியின் தற்போதைய எம்பியும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான மீனாட்சி நடராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறு கையில், சமீப காலமாக குஜராத் மாநிலம்தான் வளர்ச் சியின் மாதிரி என்று பெரும்பாலானோர் கூறி வருகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அம்மாநி லத்தில் அங்கு 40 விழுக்காடு மக்களுக்கு போதுமான தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் அம்மாநிலத்தில் உள்ள தலித் இனத்தை சேர்ந்த 27000பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இன்னமும் வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான காலியிடங்கள் உள்ளன என்று தெரிவித்தார். மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக தாக்கினார்.

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மத்தியப்பிரதேச மாநில ஊழல்களை பட்டியலிட்டு பேசிய சோனியா இங்கு நடைபெற்ற தேர்வுவாரியத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப் பில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக கூறிவிட்டு தகுதியில்லாதவர்களுக்கு அம்மாநில அரசு வாய்ப்பளித் திருக்கிறது. இம்மாநிலத்தை மத்தியபிரதே சம் என்று கூறுவதை விட ஊழல்பிரதேசம் என்று கூறலாம். அந்த அளவிற்கு அம்மாநிலத்தில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78953.html#ixzz2zNxoMRvi

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்


தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/78937.html#ixzz2zNy4kc00

தமிழ் ஓவியா said...


தூக்கிலிட்டால், அதையும் நாங்கள் தான் எதிர்ப்போம், மோடி

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், 2002 குஜராத் கலவரத்தில், ஒரு தவறு தன்மீது நிருபிக்கப்பட்டாலும், தன்னை நடுத்தெருவில் வைத்துத் தூக்கிலிடலாம் என்றார் திருவாளர், மனித நேயர் மோடி.

இதைக் கேட்டதும், இங்கே உள்ள சில அல்லக்கைகள், ஆகா, பார், பார், மோடி எவ்வளவு யோக்கியர். எப்படி பேசுகிறார் பாருங்கள் என்கிறார்கள். அவர்களுக்காக வரலாற்றை சற்று ஞாபகப்படுத்துவோம்.

நரோடா பாட்டியா என்கிற ஊர், குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், அகமதாபாத் திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ள ஊர்., அந்த நரோடா பாட்டி யாவில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து கலவரம் நடந்தது. அந்த கலவரத்தை முன்னின்று நடத்தியவர் அப்போது பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த டாக்டர்.மாயா கோட்னானி. இவர் ஒரு பெண்மணி. இவரும், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியும் இணைந்து ஏறத்தாழ 5000 பாஜக, பஜ்ரங்தள் கலவரக்காரர்கள் துணையோடு, அந்தப் பகுதியில் கலவரத்தை இஸ்லா மியர்களுக்கு எதிராக நடத்தினர். 28.2.2002 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து பத்து மணி நேரம் அந்த கலவரம் நடந்தது. 97 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். மசூதிகளையும், முஸ்லீம் மக்கள் வாழும் வீடுகளையும், எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து, தரை மட்டமாக்கினர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இத்தனையும், பாஜக பெண் எம்.எல்.ஏ. மருத்துவர் மாயா கோட்னானி முன்னிலையில் நடந்தது. இந்தப் பெண்மணி, கலவரக்காரர்களுக்கு, முஸ்லீம்களை கொல்ல, அரிவாளை தந்தும், துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் கலவரம் நடந்தது 28.2.2002-இல். அப்போது அவர் எம்.எல்.ஏ. ஒரே இடத்தில் 97 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது இந்தியாவிலேயே, நரோடா பாட்டியாவில் தான். அத்தகைய கொடூரமான, காட்டு மிராண்டித்தனமான, ஈனச் செயல் அதுவும் ஒரு பெண்மணி தலை மையில் நடைபெற்றது.

அவரது வழக்கை, மோடி அரசு, வேண்டுமென்றே இழுத்தடித்த நிலை யில்தான், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, சிறப்பு விசாரணை மன்றம் 2008-இல் அமைக்கப்பட்டு, மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் 60 பேருக்கு மேல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது. 29.8.2012 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. என்ன தீர்ப்பு?

நரோடா பாட்டியாவில் 97 முஸ் லீம்கள் கொல்லப்பட்டதில் மாயா கோட்னானிக்கு தொடர்பு உள்ளது; ஆகவே அவருக்கு 28 ஆண்டு கால இரட்டை ஆயுள் தண்டனையும், பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், இவர்களோடு சேர்த்து, உடனிருந்த 30 பேருக்கு 14 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகள் வரை தண்டனையும் வழங்கப்பட்டது.

மாயா கோட்னானி எம்.எல்.ஏ.ஆக இருந்து கலவரம் நடத்தியது 28.2.2002. அவர் மீது கொடூரமான குற்றச்சாட்டு இருக்கிறது என மோடிக்குத் தெரியும். அது தெரிந்தும் 2007-இல் தனது அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக மாயா கோட்னானியை நியமித்தார் மோடி.

ஆகஸ்டு, 2012-இல் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உடனே, மோடி, இப்போது, நாடகம் நடத்துவது போல், அப்போதும், மாயா கோட்னானிக்கு தூக்குத் தண்டனை தரவேண்டும் மனு தாக்கல் செய்ய மோடி அரசு முடிவு செய்தது. ஆனால், அவ்வாறு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படி, மாயா கோட்னானி மீது தூக்குத்தண்டனை கோரும் முடிவை மாற்றிக்கொண்டது.

ஆனால், இப்போது, மோடி சொல்கிறார். தான் குற்றம் செய்திருந்தால், முச்சந்தியில் வைத்து அவரை தூக்கிலிடலாம் என்கிறார்.

கொலையாளியை தெரிந்தே தனது அமைச்சரவையில் சேர்த்தவர்; இரட்டை ஆயுள் தண்டனை தந்த நேரத்திலும் தனக்கு அதில் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது என்கிற ஓர் எண்ணம் இல்லாதவர், இப்போது தேர்தல் நேரத்தில் இந்த விஷயம் பெரிதாகப் பேசப்படுவதால், தூக்கு தண்டனை ஏற்கத்தயார் என நாடகம் ஆடுகிறார்.

அவ்வாறு, மோடிக்கு இந்த நாட்டிலே தூக்குத்தண்டனை என விதிக்கப்பட்டால், அது ரத்து செய்யப் பட வேண்டும் என போராடுபவர் களும் நாங்களாகத் தான் இருப்போம்.

ஆகவே,மோடி ஜி, பயமில்லாமல் பொய் சொல்லுங்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78943.html#ixzz2zNyOM4x6

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் >>>


திமுக ஆட்சியில் அப்படி
அதிமுக ஆட்சியில் இப்படி

எங்கள் ஊரின் நிலைமை ரேசன் விபரம் திமுக ஆட்சியில் 10 கிலோ கோதுமை, மண்ணெண்ணெய் 50 ரூபாய்க்கு மளிகை பொருள் சமையல் எண்ணை பருப்பு இவைகள் தாராளமாக கிடைத்தது இப்பொழுது கோதுமை 5 கிலோ மண்ணெண்ணெய் 5 லிட்டர் மளிகை பொருள் சுத்தமாக இல்லை. பருப்பு எண்ணெய் முந்தியவர்களுக்கு மட்டும்தான் அதிலும் 2014 ஏப்ரல் மாதம் 2 கிலோ கோதுமை கொடுக்கிறார்கள்.

மக்கள் நல பணியாளர்கள் நிலை என்ன?

இலவச பொருள் மிக்சி கிரைண்டர் மின் அடுப்பு இவைகளை இலவசமாக கொடுப்பதாக சொல்லி விட்டு அதற்கான பணத்தை மின் கட்டணத்தை அதிகரிக்கச் செய்து அதன் மூலமாக மேற்படி பொருள் களுக்கு உண்டான பணத்தை மக்களுக்கு தெரியாமல் வசூலிக்கின்றது இன்றைய ஆட்சி.

டேன்டி (டீ) எஸ்டேட்டில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கிடைக்காத சலுகை களை தி.மு.க. ஆட்சிதான் செய்தது அதாவது தற்காலிக தொழிலாளர்களுக்கு வாரச் சம்பளத்தை மாற்றி மாதச் சம்பளமாக செய்து அதன் மூலமாக ஆண்டு ஊக்கத் தொகை கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.

- அ.ப. முருகவேல், கொளப்பள்ளி

Read more: http://viduthalai.in/page-2/78945.html#ixzz2zNyX5IIy

தமிழ் ஓவியா said...


மதவாதிகளின் கைகளில் நாடு சிக்கிக் கொள்ளக்கூடாது தொல்.திருமாவளவன்

சிதம்பரம், ஏப். 19- விடு தலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவரும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி யின் சிதம்பரம் நாடாளு மன்றத் தொகுதியின் வேட் பாளருமான திருமாவள வன் ஜெயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற் பதிந்த நல்லூர், நாயகனைப் பிரியாள், சிங்கராயபுரம், பாண்டிபஜார், அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார் பேட்டை, ஆதிச்சனூர், நத் தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள் மொழி, மற்றும் தா.பழூர் உள்ளிட்ட அய்ம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் ஓட்டு கேட்டார். சிலால் என்னுமிடத்தில் பிரச்சா ரத்தை தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதா வது:

இந்தத் தேர்தல் மதவா தத்திற்கும், ஜனநாயகத்திற் கும் இடையே நடக்கின்ற போர். தி.மு.க. தலைவர் கலைஞர் மதவாதத்திலி ருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறார் மதவாதிகளின் கைகளில் நாடு சிக்கிக் கொள்ளக்கூடாது, ஆட்சி சிக்கிக் கொள்ளக்கூடாது.

நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டுமா னால் சமூகநீதியை காப் பாற்ற வேண்டுமானால், இட ஒதுக்கீட்டுக் கொள் கையை காப்பாற்ற வேண் டுமானால், இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை சமூ கத்தைப் பாதுகாக்க வேண் டுமானால் மதவாதிகளிட மிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற அக் கறை தி.மு.க. தலைவர் கலைஞருக்கு மட்டுமே உண்டு.

அப்படிப்பட்ட தலை வர் கலைஞர் அவர்கள் அடுத்த பிரதமரை தீர்மா னிக்க வேண்டும். அவர் அடுத்த பிரதமரை தீர்மா னிக்க வேண்டுமானால் அவருடைய கரத்தை வலுப் படுத்த வேண்டும். அவரு டைய கரத்தை வலுப்படுத் துவதற்கு நீங்கள் மோதிரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தலைவர் கலைஞர் மட் டும்தான் இட ஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்கு கிறார்.

- இவ்வாறு தொல். திருமாவளவன் உரையாற் றினார்.

Read more: http://viduthalai.in/page-5/78940.html#ixzz2zNzvcXN2

தமிழ் ஓவியா said...

பகிஷ்காரத்தின் இரகசியமும் தலைவர்களின் யோக்கியதையும்


சென்ற வருஷம் சென்னையில் சைமன் கமிஷன் வந்திறங்கிய போது சில பார்ப்பனர்களின் பகிஷ்காரப் புரட்டு வெளியாய் விட்டதின் பலனாய் சென்னையில் சும்மாயிருந்த பார்ப்பனர்களுக்கு எல்லாம், அடிவிழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டதாலும்,

அதனால் சில பார்ப்பனர்கள் ஊரைவிட்டே ஓடவேண்டியதாய் நிலைமை ஏற்பட்டு விட்டதாலும், சென்னைப் பார்ப்பனர்களில் பலர் பார்ப்பன சமூகத்தின் பேரால் தாங்கள் சைமன் கமிஷனை வரவேற்கின்றோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதோடு, சில அரசியல் பார்ப்பனத் தலைவர்களான திருவாளர்கள் எ.சீனிவாசய்யங்கார் முதலிய வர்களிடமும் சண்டைக்குப் போய் விட்டார்கள்.

அதாவது பகிஷ்காரம் என்று வாயில் சொல்லிவிட்டு நீங்கள் டெல்லிக்குப் போய் பங்களா நிழலில் உட்கார்ந்து கொள்ளு கின்றீர்கள்! நாங்கள் அடிபட வேண்டியிருக்கின்றது. என்றும் இந்தப் பட்டணத்திலேயே இருந்து பகிஷ்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றீர்களா? அல்லது நாங்கள் ஊரைவிட்டுப் போய்விடுவதா? என்று கோபத்துடன் கேட்டார்கள்.

அதற்கு ஆகவே, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் நாங்கள் கடை அடைக்கப் போவதில்லை என்றும் கூட்டம் போடுவதில்லை என்றும் சர்க்கார் உத்திரவில்லாமல் தெருவில் தலைகாட்டுவதில்லை என்றும் மற்ற பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததுடன் சர்க்காருக்கும் போலீஸ் கமிஷனர் மூலம் தெரிவித்துவிட்டுப் பொதுமக்களை ஏமாற்ற வேண்டி சைமன் கமிஷன் நடக்காத ஏதாவது ஒரு தெருவில் சில குறிப்பிட்ட நபர்களுடன் ஊர்வலம் செல்ல மாத்திரம் அனுமதி கேட்டுக் கொண்டார்கள்.

போலீஸ் கமிஷனர் சைமன் கமிஷன் வரும் வீதியில் வேண்டுமானாலும் நீங்கள் ஊர்வலம் போகலாம்; நான் பந்தோபது கொடுக்கின்றேன் என்று சொல்லியும் கண்டிப்பாய்க் கமிஷன் போகாத வீதியிலேயே ஊர்வலம் போக உத்திரவு பெற்றதோடு அதற்கும் பந்தோபஸ்தும் பெற்றுக் கொண்டார்கள். இதை அறிந்த ஆந்திர தேசத்துப் பார்ப்பனர்கள் போலீஸ் கமிஷனரோடு சென்னை பார்ப்பனர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்து தாங்கள் நேரில் பகிஷ்காரம் நடத்துவதால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

தமிழ் ஓவியா said...

சர்க்கார் அவர்களைப் பிடித்து அரடு செய்தவுடன் அவர்களும் தங்களை வெளியில்விட்டால் உடனே ஊருக்குப் போய் விடுகின்றோம் என்கின்றதாக வாக்குக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்கள். இந்த இரண்டு விஷயங்களும், சென்னை பார்ப்பனர்களும் ஆந்திரப் பார்ப்பனர்களும் பத்திரிகைகளுக்கு ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய சேதிகளிலேயே அறியக் கிடக்கின்றது.

பகிஷ்காரத்தின் யோக்கியதை இப்படி இருக்க வேறு பல பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்தின் பேரால் தாராளமாய் சைமன் கமிஷனிடம் சென்று தங்கள் சமூக நன்மைக்குத் தேவையான காரியங்களை எடுத்துச் சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை அடுத்த வாரம் வெளிப்படுத்துவோம்.

பொதுவாகச் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து தங்கள் சங்கதியை அவர்களிடம் எடுத்துச் சொல்லாதவர்கள் யார் என்பதும், சைமன் கமிஷனர்கள் உத்தேசித்து வந்த காரியங்களில் எது தடைபட்டுப்போய் விட்டது என்பதும் முக்கியமாக யோசித்து பார்க்க வேண்டியதோடு காங்கிரஸ் மகாசபை என்பதின் யோக்கியதை எப்படிப்பட்டது, அதை மக்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பகிஷ்காரம் என்கின்ற கூச்சல் நமது நாட்டில் ஏற்பட்ட அந்த நிமிஷம் முதலே இக்கூச்சல் வடநாட்டில் மகமதியர்களுக்கு விரோதமாக அவர்களுடைய வகுப்புவாரிப் பிரதி நிதித்துவ உரிமையை பிடுங்கிக் கொள்ளவும் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் சிறப்பாக தீண்டப்படாதார் என்று கொடுமைப்படுத்தப்பட்ட மக்களைத் தலையெடுக்க வொட்டாமல், செய்வதற்காகவும், செய்யப்பட்ட சூழ்ச்சிகள் என்று நாம் எழுதியும் பேசியும் வந்ததோடு, மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கண்டிப்பாய்த் தங்கள் நிலைமையையும் தேவைகளையும் அவசியம் கமிஷன் முன் சொல்லியே ஆக வேண்டுமென்று வற்புறுத்தியும் வந்தோம்.

அந்தப்படியே விஷயங்கள் நடந்ததோடு முக்கியமாய்த் தீண்டப்படாதவர்கள் எனப்பட்டவர்கள் இமயம் முதல் குமரிவரையில் ஒரே மாதிரியாகத் தங்கள் நிலைமையையும், தேவைகளையும் எடுத்துச் சொல்லியிருப்பது குறித்தும் அவற்றைக் கமிஷனர் கனவான்கள் நன்றாய் உணர்ந்து வேண்டியது செய்வ தாய் வாக்குறுதி கொடுத்திருப்பதைக் குறித்தும் நாம் அளவில்லா மகிழ்ச்சி அடை கின்றோம். இந்தக் கமிஷன் அறிக்கையின் மீது வழங்கப்படும் சீர்திருத்தம் என்பது எத்தன்மையதுவாக இருப்பினும் நமக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை.

ஏனெனில் அச்சீர்திருத்தம் என்பதில் இப்போது தெரிவிக்கப்பட்ட குறைகள் நீங்கும் படியான மார்க்கங்கள் இல்லாதிருக்குமானால் இந்தச் சர்க்காரின் கண்களில் கோலை விட்டு ஆட்டக்கூடிய நிலைமையைச் சாதாரணமாக வெகு சுலபத்தில் உண்டுபண்ணிக் கொள்ளக் கூடிய சவுகரியங்கள் தாராளமாக கிடைத்துவிடும், என்கின்ற உறுதிதான் - ஆதலால் சைமன் கமிஷன் விஷயத்தில் நாம் நமது கடமையைச் செய்து விட்டோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-8/78956.html#ixzz2zO0QlTkg

தமிழ் ஓவியா said...


நம்பிக்கையில்லாத் தீர்மானம்


தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரசிடென்ட் திருவாளர் ராவ்பகதூர் சீத்தாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெருமித ஓட்டுகளால் நிறைவேற்றப் பட்டுவிட்டதாக தெரிய வருகின்றது.

திரு.ரெட்டியார் பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர். ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதை பிரச்சாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவை பாதுகாத்து வந்தவர்.

கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கியும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்குகூட வொட்டாமல் செய்தவர். முயற்சி செய்தவர்களையும், பொறுப்பற்றவர்கள் என்று சொன்னவர்.

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்கர் கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு வலது கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப் படுத்திக் கொண்டவர்.

அய்யோ பாவம். இவ்வளவும் இருந்தும் கோழிக்குஞ்சை ராசாளி தூக்கிக் கொண்டு போவதுபோல் கண்மூடி கண் திறப்பதற்குள்ளாக திரு.ரெட்டியாரின் நம்பிக்கை பறந்தோடிவிட்டது. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப்போனாலும் போச்சு, என்கின்ற பெரியோர் வாக்கியப்படி திடீரென்று சுழிமாறிப் போய் தனக்கு 11 ஓட்டுகளும் தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறிவிட்டது.

ஆனாலும் ஒன்றும் முழுகிப் போகவில்லை, குறைந்தபட்சம் திரு.ரெட்டியார் உலகம் என்பது கற்றுக் கொள்ளவாவது இந்த முடிவை ஒரு தக்க சந்தர்ப்பமாக கொண்டாரானால் அவசியம் அவருக்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானமே அனுகூலமான பயனைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். மேலும் திரு.சீத்தாராம ரெட்டியார் போன்ற மற்றும் சில தலதாபன தலைவர்களுக்கும் இது ஒரு படிப்பினையாகவும் ஆகலாம்.

குடிஅரசு - கட்டுரை - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-8/78955.html#ixzz2zO0resKP

தமிழ் ஓவியா said...

வடஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா

வடஆற்காடு ஜில்லா போர்டின் 27.03.1929ஆம் தேதி மீட்டிங்கில். ஜில்லா போர்டின் ஆதிக்கத்தில் உள்ள பள்ளிக்கூட உபாத்தியாயர்களில் 100க்கு 80 உபாத்தியாயர்களைப் பார்ப்பனரல்லாதார்களாகப் பார்த்து நியமிக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றிருக்கின்றது.



அந்த மீட்டிங்கில் நான்கு பார்ப்பன கனவான் மெம்பர்கள் இருந்து விவாதத்தில் கலந்து எதிர்த்துப் பேசி கடைசியாக தீர்மானத்திற்கு சாதகமாகவே தங்கள் ஓட்டுகளையும் கொடுத்தது பாராட்டத்தக்கதாகும்.

வடஆற்காடு ஜில்லா போர்டு பிரசிடெண்டவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர் என்று சிலர் சொல்லுவதுண்டு. இந்தத் தீர்மானத்தில் நாலு பார்ப்பன மெம்பர்களும் தீர்மானத்திற்கு அனுகூலமாய் ஓட்டு செய்திருப்பதாகத் தெரிவதிலிருந்து பிரசிடெண்டு திரு.நாயுடுகாரு அவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவராயிருந்ததின் உண்மையை வெளிப்படுத்திவிட்டார்போலும், இதிலிருந்து நாயுடுகாரு பார்ப்பனர்களுக்கு வேண்டியவரா? பார்ப்பனர்கள் திரு.நாயுடுகாருக்கு வேண்டியவர்களா? என்பதையும் பொது ஜனங்கள் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

நிற்க, வடஆற்காடு ஜில்லாபோர்டை மற்ற ஜில்லாபோர்டு பின்பற்றுமா என்று அறிய ஆசையுடையவர்களாய் இருக்கின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 31-03-1929

Read more: http://viduthalai.in/page-8/78955.html#ixzz2zO101QhE

தமிழ் ஓவியா said...


இனியாவது புத்தி வருமா? இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்


சுதேசமித்திரன் இந்து பத்திரிகைகளின் பத்திராதிபரும் தஞ்சாவூர், திருச்சிராப் பள்ளி ஜில்லா மக்களுக்கு இந்திய சட்டசபை பிரதிநிதி மெம்பரும், காங்கிர காரியதரிசியாயிருந்தவரும் இந்தியாவின் 33-கோடி பொதுமக்களுக்கு சுயராஜியம் வாங்கிக் கொடுக்க உயிர் விட்டுக் கொண்டு பத்திராதிபராயிருப்பதில் மாதம் 2000 ரூபாய் சம்பாதிப்பவருமான திரு. எ.ரங்கசாமி அய்யங்கார் என்னும் பார்ப்பனர் இந்திய சட்டசபையில் சென்னை மந்திரி திரு.முத்தையா முதலியார் விஷயமாக சில கேள்விகள் கேட்டாராம்!

அதாவது சென்னை சுகாதார மந்திரி ரிஜிஸ்ட்ரேஷன் இலாகாவில் உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்துவதில் வகுப்பு வாரி உரிமை ஏற்படுத்தியிருப்பது இந்திய அரசாங்கத்திற்கு தெரியுமா? அது சட்டவிரோதமல்லவா? அதனால் அரசாங்கத்தார் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரியுமா? அதைப்பற்றி இந்திய அரசாங்கத்தார் விசாரித்து அந்த உத்திரவை ரத்து செய்ய முடியுமா? என்பது பொருளாக பல கேள்விகள் கேட்டாராம்,

இதற்குப் பதில் சொல்லும் சமயத்தில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத ஒரு பிரதிநிதி (திரு.ஆர்.கே. சண்முகம்) தவிர மற்ற எல்லோரும் பார்ப்பனர்களானதால் யாரும் ஒன்றும் பேசாமல் கேள்விக்கு அனுகூலமாயிருந்தார்களாம்.

அரசாங்க மெம்பர் பதில் சொல்லுகையில் இதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும் சென்னை அரசாங்கத்தை விவரம் கேட்டுப் பதில் சொல்லுவதாயும் சொல்லிக் கொண்டிருக்கும் போது திரு. ஆர்.கே.சண்முகம் அவர்கள் எழுந்து அதைப்பற்றி சர்க்கார் மீது யாருக்கும் அதிருப்தி இல்லையென்றும் மேலும் அநேகருக்குத் திருப்தி என்றும் சொன்னாராம் உடனே திரு.எ.ரங்கசாமி அய்யங்கார் இது உண்மையல்ல என்றாராம்.

உடனே திரு.சண்முகம் எழுந்து சென்னை சட்டசபையில் இதைப்பற்றி விவாதம் கிளப்பி அங்கத்தினர்கள் எல்லோராலும் வகுப்புவாரி உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டும் அநேக பொதுக்கூட்டங்களில் அரசாங்கத்தையும், மந்திரிகளையும் ஆதரித்தும் பாராட்டியும் தீர்மானங்களும் செய்யப்பட்டும் இருக்கின்றது என்று சொன்னாராம். இந்த சமயம் அரசாங்க மெம்பரும் சட்டசபை மெம்பர்களும் அய்யங்கார் முகத்தைப் பார்த்தார்களாம்.

அய்யங்கார் முகம் பூமியை பார்த்ததாம். உடனே அரசாங்க மெம்பர் எழுந்து நல்ல சமயத்தில் தனக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி உதவி செய்ததற்காக திரு. சண்முகத்திற்கு வந்தனம் செலுத்து வதாய்ச் சொன்னாராம். இந்திய சட்டசபை அங்கத்தினர்கள் கைத்தட்டினார்களாம்.

இவற்றை அசோசியட்பிரஸ், பிரீபிரஸ் பிரதிநிதியும் பார்த்து கொண்டே இருந்தும் கூட இதை எந்தப் பத்திரிகைக்கும் தெரியப்படுத்தவேயில்லை. எனவே பார்ப்பன ஆதிக்கம் பத்திரிகைகளுக்கு விஷயங்கள் அனுப்புவதில் எவ்வளவு அயோக்கியத் தனம் செய்கின்றது என்பதை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

அன்றியும் இந்திய சட்டசபை தானங்களை பெரிதும் பார்ப்பனர்கள் கைப்பற்றி இருப்பதால் அவர்களால் நமக்கு எவ்வளவு துரோகங்கள் நடைபெறுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இனியாவது இந்திய சட்டசபை ஓட்டர்களுக்கு புத்திவருமா?

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 31-03-1929

Read more: http://viduthalai.in/page-8/78957.html#ixzz2zO17d2oR

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

திராவிடச் சமுதாயத்திற்கு மானம், அறிவு, மனிதத் தன்மை என்பவை இல்லாமல் போக - அடியோடு இல்லாமல் போக ஆரியர்கள் செய்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றால் அந்த வெற்றியை அழித்து நாம் மனிதத் தன்மை பெறுவது என்பது இலேசான காரியமல்ல என்றே சொல்லுவோம். இதில் இறங்குவது, மிக்க யோசனை செய்து செய்யவேண்டிய காரியம் என்றும் சொல்லுவோம்.

பார்ப்பனருக்கு ஆயுதம் பஞ்சாங்கமும், தர்ப்பைப் புல்லும்தான். நமக்கு ஆயுதம் நம்முள் ஒற்றுமையும் நமது மான அபிமானமுந்தான்.

நம் இருவர் நிலைமையைப் பற்றிச் சிந்தித்தோமானால் ஒரு பார்ப்பனராவது பஞ்சாங்கம், தர்ப்பைப்புல் தன்மையிலிருந்து ஒரு சிறிதும் தவறி நடந்து கொள்ள மாட்டார்கள்; விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நம்மில் பெரும்பாலோர், தன்தன் சுயநலத்திற்கு இரண்டையும் விலை கூறி விற்பார்கள்.

Read more: http://viduthalai.in/page-8/78957.html#ixzz2zO1GI1KN

தமிழ் ஓவியா said...


பிராண வாயுவை மட்டும் உணவாக உட்கொள்ளும் உயிர்!



டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்பார்ஸ் பல்கலைக் கழகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹன்சிராய் என்பவர் விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் பாக்டீரியாக்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளார். வடக்கு பசிபிக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றி இந்த ஆய்வு மேற்கொண்டார். அதில் ஒரு வகை பாக்டீரியா உணவு எதுவும் உட்கொள்ளாமலேயே உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாக்டீரியாக்கள் 8 கோடியே 60 இலட்சம் ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உணவுக்குப் பதிலாக ஆக்சிஜனை மட்டும் சுவாசித்து இவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆக்சிஜன் மூலம் அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பாக்டீரியா பற்றி மேலும் விரிவான ஆய்வு நடந்து வருவதாக ஹன்சிராய் கூறியுள்ளார். இந்த வகை பாக்டீரியாக்கள் கடல் மட்டத்திலிருந்து 100 அடி ஆழத்துக்கு கீழே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page2/78911.html#ixzz2zO2HSP5i

தமிழ் ஓவியா said...


தகவல் அறியும் உரிமை 7 ஆண்டுகளுக்குப் பின் தகவல்


மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் கை ரிக்ஷாக்கள் உள்ளன. கை ரிக்ஷாக்கள் கொல்கத்தாவில் எத்தனை அனுமதிக்கப்பட்டுள்ளன என்று சபீர் அகமது என்பவர் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அன்று கொல்கத்தா மாநகராட்சியிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுள்ளார். பொதுவாக தகவல்பெறும் சட்டம் 2005ன்கீழ் கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றுஅச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கைரிக்ஷாத் தொழிலாளிகளை அடை யாளம் கண்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதற்காக, அவர்களின் எண் ணிக்கை குறித்து மாநகராட்சியிடம் கேட்கப்பட்டதாக சபீர் அகமது தெரி வித்துள்ளார்.

ஏழு ஆண்டுகள் கழித்து சபீர் அகமது மற்றும் கொல்கத்தா மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆணையத்தின் சார்பில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கான விசாரணைக்கு அழைப்பு வந்தபோது, ஏழாண்டுகளுக்குப் பின்னர் வந்த அழைப்பால் சபீர் அகமது மிகவும் ஆச்சரியப்பட்டார். கொல்கத்தா மாநாகராட்சி அலு வலர்கள் 2005 ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று உள்ளபடி கை ரிக்ஷா இழுக்கும் தொழிலாளிகள் 870பேர் உள்ளதாகவும், அவர்கள் மறுவாழ்வுக்கு திட்டம் எதுவும் இல்லை என்றும் ஏழாண்டுகளுக்குப் பின்னர் பதில் அளித்துள்ளனர்.

மேற்கு வங்கத்திற்கான தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கான ஆணையர் சுஜித் சர்க்கார் மேற்கொண்ட விசாரணையில் மேலும் தகவல்களுடன் 15 நாட்களில் வருமாறு கொல்கத்தா மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட் டார்.

மனுதாரரான சபீர் அகமது கூறும் போது, மாநகராட்சி அலுவலர்களிடமி ருந்து குறித்த நேரத்தில் பதில் கிடைத் திருந்தால், ஏழைத் தொழிலாளிகள் நலனுக்குப் பயன்பட்டிருக்கும். தாமதிக் கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது போல், தாமதிக்கப்பட்ட தகவல் மறுக்கப் பட்ட தகவலாகவே உள்ளது என்றார். கைரிக்ஷா முறை மனிதத்தன்மை இல்லாததால் அவற்றை உடனடியாக அகற்ற அரசு முடிவு எடுத்துள்ளது என்று 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் அப்போதைய முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்திருந்தார். கொல்கத்தா ஹக்கினி-கேரியேஜ் சட்டம் 1919இல் கை ரிக்ஷா முறையை நீக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறி மசோதா சட்டசபையில் அறிமுகப்படுத் தப்பட்டது.

இந்த அறிவிப்பு ரிக்ஷா தொழி லாளிகளின் மறுவாழ்வு குறித்து கூறி உள்ளது என்றும் மனுதாரராகிய சபீர் அகமது கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page4/78914.html#ixzz2zO2xraxi

தமிழ் ஓவியா said...


மதம் பிடிக்க வேண்டாமே! .


அலைபேசியில் குறுஞ்செய்திமூலம் மதத்துக்கு எதிரான கருத்தை வெளி யிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட இணையர்மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு, விசாரணையின் முடிவில் பாகிஸ் தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானில் கோஜ்ரா நகரில் ஷப்கத் இம்மானுவேல் என்பவர், அவருடைய மனைவி ஷாகுப்தா கவுசர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று இவருடைய அலைபேசி யிலிருந்து இசுலாத்தில் புனிதராகக் கூறப்படும் முகமதுவை விமர்சித்து குறுஞ்செய்தி அனுப்பி, இசுலாமிய மதத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக அவர்மீது புகார் எழுப்பப்பட்டது. மவுல்வி முகம்மத் உசேன் அளித்த புகாரின்பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் கணவனுடன் அவர் மனைவியையும் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 40முதல் 50 வயதுடைய இருவரும் வறுமையில் உள்ளவர்கள். வழக்கை நடத்தவே வாய்ப்பற்றவர்கள். மேலும், வழக்கில் தொடர்புடைய முக்கிய பொரு ளான அலைபேசியும் முன்னதாகவே தொலைந்து போனதாகவும் தெரிவித் துள்ளனர். தோபா தேக்சிங் நகரில் உள்ள நீதி மன்றம் இவ்வழக்கை விசாரணை செய்து வந்தது. தற்போது நீதிபதி மியான் ஆமிர் ஹபீப் விசாரணை செய்து முடிவில் தீர்ப்பை வழங்கி உள்ளார். தீர்ப்பில் அவ் விருவருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் தரப்பு வழக் குரைஞர் நதீம் ஹசன் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறி உள்ளார்.

இதேபோல், 2009-இல் இதே குஜ்ரா பகுதியில் குர்ரானை இழிவுபடுத்தியதாக ஏற்பட்ட வதந்தியில் ஒரு கும்பல் வன் முறையில் ஈடுபட்டு கிறித்துவர்கள் வாழ்கின்ற அப்பகுதியில் சுமார் 77 வீடுகள் தீக்கிரையாகின. சுமார் ஏழு பேர் அக் கலவரத்தில் உயிரிழந்தனர். அதேபோல் லாகூரில் ஜோசப் காலனியில் தனிப்பட்ட வர்களிடையே, பேச்சுவாக்கில் பேசிய பேச்சுகூட புகாராக பதிவாகி சவான் மாசிக் என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாகிஸ் தானில் அங்குள்ள சிறுபான் மையினரை தனிப்பட்ட வகையிலான தகராறுகளுக்குக் கூட இந்த சட்டத்தை துணையாகக் கொண்டு மரண தண்டனை விதிக்கப் படும் கொடுமை நிகழ்கிறது.

180 மில்லியன் மக்கட்தொகையில் 97விழுக்காட்டினர் இசுலாமியராக உள் ளனர். நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் மூலம்கூட சிறுபான்மையினர் பாதிக்கப் படுகின்றனர்.

Read more: http://viduthalai.in/page4/78916.html#ixzz2zO3L0l9W

தமிழ் ஓவியா said...


பகவத்சிங் நினைவைப் போற்ற நாத்திகர்கள் அணி வகுப்பு


விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாத்திகர்கள் குவிந் தனர். 250-க்கும் மேற்பட்ட நாத்திகர்கள் மும்பையில் பகத்சிங் நினைவுநாளில் திரண்டனர். அந்நிகழ்வில், மத சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதைக் கண்டித்து ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். கடந்த ஆகஸ்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவரும், ஆதிக்க சக்திகளை எதிர்த்து வந்தவரு மாகிய டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல்துறை உண்மை தகவல்களின்பேரில் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ளது.

மும்பை பல்கலைக்கழகத்தின் புறநகர் கலினா வளாகத்தில் நடைபெற்ற நிகழ் வின் அமைப்பாளர் சஞ்சய் சவார்க்கார் கூறும்போது, எல்லோரும் ஒன்று சேர்வதன் நோக்கம் என்னவென்றால், ஒரே சிந்தனையுள்ளவர்கள் ஓர் அமைப்பாக இணைந்து, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதே. அதே போல், நாத்திகராக இருப்பதில் நீதிக்குப் புறம்பாக ஏதுமில்லை என்கிற செய்தியை சமுதாயத்துக்கு தெரிவிப்பதுமாகும். மத சகிப்புத்தன்மை இல்லாத சூழ்நிலை உரு வாகும்போது, பரந்த சிந்தனையாளர்கள் ஒன்று சேர்வது முக்கியமான தேவை யாகும். நான் ஏன் நாத்திகன் என்கிற பகத் சிங் கட்டுரை அனைவரும் அறிந்ததே. அவருடைய நினைவுக்காகவே இந்நிகழ்வு இங்கே நடைபெறுகிறது என்றார்.

எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வல்லுநருமாகிய அச்யுத் கோட்புலே, எழுத்தாளர் ஜே.ஏ.பவார், இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் (Federation of Rationalist’s Association of India)
நரேந்திர நாயக் மற்றும் பலர் பங்கேற்று உரை ஆற்றினர்.

நரேந்திர நாயக் பேசும்போது, கடவுளிடம் உங்களுக்கு பயம் உண்டா? என்று என்னிடம் கேட்பார்கள். நான் எப்போதுமே சொல்வேன்: கடவுளின் முகவர்களால்தான் அச்சம் ஏற்படும் என்பேன். அதேபோல் ஏராளமான நாத்திகர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்கள் பெருமிதத்துடன் வெளியே காட்டிக்கொள்ள வேண்டும் என்றார்.

எழுத்தாளர் பவார் பேசும்போது மிகுந்த கவலையுடன் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் காவல் துறை போதுமான அக்கறையுடன் முன் னெடுத்துச் செல்லவில்லை. விசாரணையில் வேகம் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

- (டி.என்.ஏ. ஆங்கில நாளிதழ் 24-3-2014)

Read more: http://viduthalai.in/page5/78917.html#ixzz2zO3fVEZk

தமிழ் ஓவியா said...


புதிய எழுத்தாளர்களை ஏன் தேடுகிறீர்கள்?


நூல்களை பற்றி விவாதிக்க விரும்பு கிறீர்களா? நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். நாடகங்கள், கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஒலிவடிவில் உள்ள நூல்கள் என்று பல உள்ளன. அனைத்தையும் நீங்கள் படித்தாக வேண்டும் என்பதில்லை. அமர்ந்து விவாதியுங்கள்.

புதிய எழுத்தாளர்களின் நூல்களைத் தேடியபோது, நூல் விரும்பிகள் அல்லது நண்பர்கள் குழு மூலம் நூல்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றபின்னர்தான் விருப் பமான நல்ல நூல்களை தெரிவுசெய்து வாசிக்கவும், தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளவும் முடிந்தது.

பலநேரங்களில், ஓர் எழுத்தாளரின் நூல் தொகுப்பை கால வரிசையாக படித்திட முயற்சி செய்துவந்துள்ளேன். புதிய எழுத் தாளர்களின் நூல்களைப்போலவே பழம் பெரும் எழுத்தாளர்களின் நூல்களையும் படிப்பதில் மகிழ்வதோடு, என்னை வளர்த்துக்கொள்ளவும் முடிந்தது.

நூல் விற்பனையகத்துக்கு செல்லும் போதும், நூலகத்துக்குச் செல்லும்போதும் அங்கு பணிபுரிபவர்கள் எடுத்துக்கூறும் புதிய நூல்களை அதன் அறைகளிலிருந்து எடுத்துக்கொள்வேன். புதிய வரவுகளாக என் கவனத்தை ஈர்க்கும் நூல்களைத் தேர்வு செய்து கொள்வேன். அதேபோல், நூல் விற்பனை நிலையமானாலும், நூலகமானா லும் விற்பனைக்கு என்று உள்ளவற்றை கவனத்தில் கொள்வேன்.

நூல்களின் பட்டியலைப் பெற்று கற்பனைக் காவியங்களையும், அறிவியல், கற்பனை மற்றும் மர்மக் கதைகளை தெரிவு செய்து அதிலும் புதிய எழுத்தாளர்களின் நூல்களைப் பெற முயற்சி செய்வேன்.

சிலர் கூறுவதுபோல், இணையத்தில் உள்ள நூல்களின் குறிப்புகளை, சில பக்கங்களை முதலில் படித்துப்பார்த்து விட்டு பிறகு இணைய தளம்மூலமே பெற்றுக் கொள்வேன்.

பார்னே & நோபிள் இணையதளம் நூல்களின் முன்னோட்ட வாசிப்புக்கு சில பக்கங்களை அளிக்கிறது. அதை பல நேரங்களில் மறந்துவிடுகிறேன்.

சில நேரங்களில் விமர்சனங்களைப் படிப்பதன் மூலமும், கவரும் அட்டைகள் மூலமூம், ஒரு நூலில் மற்ற நூல்குறித்து குறிப்பிடப்படுவதைப் பார்த்தும், பார்லே & நோபிள் நூல்களில் ஒரே நேரத்தில் அல்லது ஒரே தலைப்புகளில் உள்ள ஏராளமான நூல்கள் குறித்தும் நூல்கள் பெறுவதில் என்னை இணைத்துக் கொள்கிறேன். கடந்த வாரம் கூறியதுபோல், நல்ல படங்களிலிருந்தும், சில நேரங்களில் நூல்களைப்பற்றி அறிந்துகொள்வேன். பிஹைண்ட் தி லைன்ஸ் (Behind the Lines) என்கிற படத்தைப் பார்த்தபோது டாக்டர் ரிவர்ஸ், சீக்ஃப்ரெய்ட் சாசூன் குறித்து அறிந்துகொள்ள பட் பார்க்கர் எழுதிய ரீஜெனரேஷன் (Regeneration) என்கிற நூலைப்படிக்க முடிவு செய்தேன். அந் நூலைப் படித்த பின்னர் மீண்டும் அப் படத்தை பார்த்தபோதுதான் அது எப் பேர்ப்பட்ட படம் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

பலரும் நல்ல வாசிப்பாளர் பட்டியலில் உள்ளனர். விருப்பமான எழுத்தாளரின் அடுத்த நூலுக்காகக் காத்திருக்கும்போது சிறிதே சலிப்பும் ஏற்படும். அப்போது, புதிய எழுத்தாளருக்கான தேவை ஏற்படுகிறது. சில நூல்கள் மூன்று தலைப்புகளில் ஒருங்கே அமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நூல்களை இடைவெளிவிடாமல் படித்து விடுவேன். நூல் தேடுதலில் முதலில் தேடிய நூலைக்காட்டிலும், அடுத்த நூல் நன்றாக இருப்பின் அந்நூலை எடுத்துக்கொள்வேன். அதன்பிறகும், நூலைத் தேடுவதில் மகிழ்வே அடைவேன். அதுவும் பல நாட்டு நூல்களைத் தேடுவதில் பெரிதும் மகிழ்ந் துள்ளேன்.

நீங்கள் எப்படி? நூலகத்தில் ஒரு நல்ல நூலைக்கண்டால் அதை மற்றவர்களுக்கும் கொடுப்பீர்களா? நீங்கள் படித்த நூல்களைக் காட்டிலும், எல்லோர் பாராட்டையும் பெற்றநூல்களைக்காட்டிலும் உங்களாலும் எழுதமுடியும் என்று முயற்சி செய்துள்ளீர்களா? முயற்சி செய்யுங்கள்.

-டெய்லிகோஸ்.காம் இணையத்தில் சி.எஃப்.கே.

Read more: http://viduthalai.in/page5/78918.html#ixzz2zO3s7v5f

தமிழ் ஓவியா said...


பொன் மொழிகள்


நடைப்பாங்குகள் என்பவை மற்றவர்களுடைய உணர்ச்சிகளை வசியத்தோடு தெரிந்து கொள்வது, அந்த முன்னுணர்வு உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு நல்ல பாங்குகள் உள்ளதென்று பொருள். நீங்கள் என்ன கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப்பற்றிய பிரச்சினையில்லை. - எமிலி போஸ்ட்

மற்றவர்கள் தவறு காணக் கூடாது என்று ஒருவன் ஒன்றை நன்றாகச் செய்து முடிக்கும் வரை காத்திருப்பானேயானால், அவன் எதையுமே செய்ய முடியாது. - கார்டினல் நியூமென்

பிரச்சினைகள் என்பது முன்னேற்றத்தின் விலை. தொந்தரவைத் தவிர என்னிடம் எதையும் கொண்டு வராதீர்கள். நல்ல செய்திகள் என்னைப் பலவீனப்படுத்துகின்றன.
- சார்லஸ் எப் கெட்டரிங்

ஒவ்வொருவரும் மற்றவர்களைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்தால், உலகத்தில் நாலு நண்பர்கள்கூட இருக்க மாட்டார்கள்.
- பிளெய்ஸ் பாஸ்கல்

நீண்ட விளக்கங்களுக்கு நான் எதிரி, அவை உண்டாக்குபவனையோ அல்லது கேட்பவனையோ பொதுவாக இருவரையும் ஏமாற்றுகிறது.
- கோத்தி

பேரிடர் என்பது துல்லியமான கண்ணாடி, அதில் உண்மையிலேயே நாமே நம்மைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம். - டாவெநன்ட்

Read more: http://viduthalai.in/page7/78923.html#ixzz2zO4gCtBz

தமிழ் ஓவியா said...


அண்ணா சொன்னார்


டாக்டர் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது

கம்பவுண்டர் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது;

டாக்டர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கிற மந்திரக்காரன் சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது; அதையே ஒரு நோயாளி சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது - ஒரே விஷயத்திற்கு! சுரமாயிருக்கிறது - என்ன செய்யலாம்!

என்று மந்திரக்காரனைக் கேட்டால், பொன்னியம்மன் கோயிலில் மூன்று நாள்களுக்கு படுத்துக் கொள்ளுங்கள்; எல்லாம் சரியாகிப் போய்விடும் என்று சொல்லுவான். காரணம், பொன்னியம்மன் கோயிலுக்கு அவன் தான் பூசாரி.

- (அண்ணா அவர்களின் காந்தியும் காந்தியமும் பூம்புகார் பதிப்பக நூலில் - பக்கம் 253)

Read more: http://viduthalai.in/page8/78926.html#ixzz2zO51cc35