Search This Blog

5.4.14

ஈழத் தமிழர்களை பி.ஜே.பி. காப்பாற்றுமா?



இந்திய வரலாறு காணாத போராட்டத்தை நடத்து வதற்கு தமிழ் இனக் கொலை நடத்திய ராஜபக்சே மத்தியப் பிரதேசம் மாநிலம் சாஞ்சிக்கு வந்தபோது, 2012 செப்டம்பர் 21ஆம் நாள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திட ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பொதுச் செயலாளர் வைகோ 21 பேருந்துகளில் பயணம் மேற்கொண்டார். மறுமலர்ச்சி தி.மு.க.வின் அறப்போர் படை வீரர்கள் மத்தியப்பிரதேச எல்லையில் பட்சி சோலை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

-------------------------- மதிமுகவின் அதிகாரப் பூர்வ வார ஏடான சங்கொலி 4.4.2014 தலையங்கத்தின் ஒரு பகுதி இது.

இத்தோடு மதிமுக ஏடு ஏன் நிறுத்திக் கொண்டது என்று தெரியவில்லை. மத்தியப் பிரதேசத்தில் ராஜபக்சேவை அழைத்த வர்கள் யார்? மத்தியப் பிரதேசத்தை ஆண்டு கொண்டிருக்கும் பிஜேபி முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான்தானே! மத்தியப் பிரதேசம் சாஞ்சியில் புத்தப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைக்க, சிங்கள இனவெறியர் - அடால்ப் ஹிட்லரின் மறுபதிப்பான மகிந்த ராஜபக்சேவை அழைத்தது, பி.ஜே.பி.தான்.

அந்த ராஜபக்சேவை எதிர்த்துக் கறுப்புக்கொடி காட்டச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களையும், மதிமுக தொண்டர்களையும் பட்சிசோலை அருகே தடுத்து நிறுத்தியதும் பிஜேபி ஆட்சிதான்! 5000 காவலர்கள் இவர்களைச் சுற்றி நின்று, அந்த இடத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது என்று தடை செய்ததும் பிஜேபி ஆட்சியே!

ஒருக்கால், இரயில் மூலம் மதிமுக தொண்டர்கள் வந்து விட்டால் என்ன செய்வது என்ற முறையில், போபாலுக்கும், விதிஷாலிக்கும் இடைப்பட்ட ரயில் நிலையங்களில் அன்று (20.9.2012) பதினோரு இரயில்கள் நிற்கக்கூடாது என்கிற அளவுக்குத் திட்டங்களைத் தீட்டியதும் பிஜேபி ஆட்சியே!

இதைப்பற்றி எல்லாம் வைகோவும் வாய்த் திறக்கவில்லை; அவர்களின் அதிகாரப் பூர்வ இதழான சங்கொலியின் பேனாவும் திறக்கவில்லை.
சாஞ்சி செல்லும் முன் 2012 செப்டம்பர் 8 அன்று நாக் பூரில் செய்தியாளர்களிடம் வைகோ என்ன கூறினார்?

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு முழுப் பொறுப்பாளி ராஜபக்சே என்பது தெரிந்திருந்தும் அவரை மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அழைத்துள்ளார். ராஜபக்சே அழைக்கப்படுவதற்கு எங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தோம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அம்மாநில முதல் அமைச்சர் கவலைப்படவில்லை. எல்.கே. அத்வானியும், சுஷ்மா சுவராஜூம் அண்மையில் ராஜபக்சேவைச் சந்தித்துள்ளனர். இது எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னாரே! அப்படி இருக்கும்பொழுது அந்தப் பிஜேபியுடன் தானே மதிமுக இப்பொழுது கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப் போகிறது!

செய்தியாளர் சந்திப்பில், இன்னொரு தகவலையும் வைகோ கூறியுள்ளார் (19.9.2012).

பிஜேபியின் தலைவர் நிதின் கட்காரியைத் தலையிடுமாறு கேட்டுக் கொண்டேன். இலங்கையில் ராஜபக்சே அரசு இரண்டாயிரம் இந்துக் கோயில்களை இடித்துள்ளது என்றும் குறிப்பிட்டுச் சொன்னேன். ஆனால் எங்கள் கோரிக்கையை பிஜேபியின் தலைவர் நிதின் கட்காரி நிராகரித்து விட்டார் - என்று சொன்னவரே பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துள்ளார் - அவர்களோடு தோள் மேல் கை போட்டு இழைகிறார் என்றால், இது எந்த வகையில் நேர்மையானது?

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சென்னை உட் லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு தகவலை வெளிப்படுத்தினார்.

இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது பிஜேபி என்று பகிரங்கமாகச் சொன்னாரே இதுவரை பிஜேபி தரப்பில் மறுப்புக் கூறப்பட்டதுண்டா?

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில் வைகோ அவர்கள் பேசியுள்ளார்.

இலங்கைத் தமிழர் படுகொலைக்குக் காரணமான தமிழக உரிமைகள் பறிக்கப்படக் காரணமாக காங்கிரஸ் அரசு மத்தியில் அகற்றப்பட வேண்டும் என்கிறாரே! (மாலைமுரசு 20.3.2014 பக்.3) பிஜேபி வந்தால் ஈழத் தமிழர் உரிமை காக்கப்படும் என்று ஏன் உத்தரவாதம் கொடுக்கவில்லை வைகோ? 

மதிமுகவின் இரட்டை வேடத்தைக் கண்டு எள்ளி நகையாடவே செய்வார்கள்.

இன்னொரு தகவலை வைகோவிற்கு நினைவூட்டி னால் அவர் பாடு திண்டாட்டமாகத் தானிருக்கும்.

2000 ஆண்டில் புலிகளின் தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை அரசு பலகீனப்பட்டு இருந்த அந்தக் கால கட்டத்தில் சுகன்யா என்ற  கடல் மார்க்க யுத்தக் கப்பலை இலங்கைக்கு வழங்கியது வாஜ்பேயி தலைமையில் இருந்த பி.ஜே.பி. அரசுதானே!

பழ. நெடுமாறன், வைகோ ஆகியோர் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசைச் சந்தித்து நேரில் முறையிட்டும் பயன் ஏற்பட வில்லையே!

பி.ஜே.பி.யின் அந்த நிலை மாறி விட்டதா? மாறி விட்டோம் என்று மோடி ஏதாவது ஒப்பந்தம் போட்டுத் தந்துள்ளாரா?

இவை இல்லையெனும் பட்சத்தில் ஈழத் தமிழர் களைக் காப்பாற்றிட பிஜேபியோடு கூட்டுச் சேர்ந் துள்ளோம் என்று வைகோ கூறுவாரேயானால் இதை விட ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?

        ------------------------------------”விடுதலை” தலையங்கம்  4-4-2014

38 comments:

தமிழ் ஓவியா said...


நம்பத்தகுந்தவரா - சிந்திப்பீர்! ஜெயலலிதாபற்றி வாஜ்பேயி கூறியது என்ன?

கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும் போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

வாஜ்பேயி: இல்லை, நியாயமற்ற நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை. கூட்டணி அமைக்கப்படும் பொழுது இதைப்போன்ற நிபந்தனைகளை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.

கேள்வி: சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந் தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட் டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில், அ.தி.மு.க. வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார். சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங்களில் ஆதரவை வாபஸ் பெறு வோம் என்கிற மிரட்டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலையுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.

கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும் என்பதுதான் அந்த விலை. அது மட்டுமல்ல; பல ஊழல் வழக்கு களிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும் அவருடைய நிபந்தனையாக இருந் தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடி பணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதை உணர்ந்தவுடன் அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.
(குமுதம், 20.9.1999)

தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி.யும் - அ.இ.அ.தி.மு.க.வும் கூட்டணி வைப்பதாக ஒரு விவாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், ஜெயலலிதா சுயநலத்துக்காக, நிபந்தனைகளை வைக்கமாட்டாரா?

வாஜ்பேயிக்கே தண்ணிக் காட்டியவர் - மோடி எம்மாத்திரம்?

Read more: http://viduthalai.in/page-8/78127.html#ixzz2xxigsTch

தமிழ் ஓவியா said...


நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கை


திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து கல்வி பயில நான்காம் வகுப்பு முதல் பனிரெண் டாம் வகுப்பு முடிய புதிய மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 5.4.2014 தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மேற்படி இல்லத்தில் வழங்கப்படும். இவ்வில்லத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவிகளுக்கு அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும்.

சேர்க்கைக்கான விதிமுறைகள்:

1. தாய் - தந்தை இருவரும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்

2. பெற்றோர் ஊனமுற்றோர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப் படும் (மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்படவேண்டும்.

3. ஆண்டு வருமானம் ரூ.24,000/-த்திற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.

4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வில் லத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 31.5.2014

காப்பாளர்
நாகம்மையார் குழந்தைகள் இல்லம்,
பெரியார் நகர், திருச்சி-21

Read more: http://viduthalai.in/page-8/78120.html#ixzz2xxir7I3u

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்


நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார். - (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/78121.html#ixzz2xxj9RGdh

தமிழ் ஓவியா said...

சமதர்மத்துக்கும், மனுதர்மத்துக்கும் இடையிலான போட்டியே 16ஆவது மக்களவைத் தேர்தல்!


சமதர்மத்துக்கும், மனுதர்மத்துக்கும் இடையிலான போட்டியே 16ஆவது மக்களவைத் தேர்தல்!

திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் படப்பிடிப்பு!

திண்டுக்கல், ஏப்.4- நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் என்பது சமதர்மத்துக்கும் மனுதர்மத்துக்கும் இடை யிலான போட்டி என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

2.4.2014 அன்று திண் டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற் றுகையில் அவர் குறிப் பிட்டதாவது:

இரண்டு கடிகாரமும் - ஒத்துப் போகாது

எந்த தேர்தல் கூட்டத் திற்கு சென்றாலும் இரவு 10 மணிக்குள் முடிக்க வேண் டும் என்றால், 5 மணித் துளிகள் முன்பே முடித்து விடுவோம். காரணம், இரண்டு கடிகாரமும் ஒத்துப் போகாது என்று நமக்கு நன்றாகத் தெரியும்.

தேர்தலில் நிற்காதவர்களுக்கு..

16ஆவது மக்களவைத் தேர்தல் என்பது மற்ற தேர் தல்களிலிருந்து மாறுப் பட்ட தன்மையுடைய தேர் தல். இங்கே உள்ளவர்கள், தி.மு.க. ஆதரிக்கும் கூட் டணியில் உள்ளவர்கள் எல் லாம் அரசியல் கட்சிகள். எங்களைத் தவிர; மற்ற வர்கள் தேர்தலில் நிற்கக் கூடியவர்கள். திராவிடர் கழகத்துக்காரர்கள் நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள். தேர்தலில் நிற்காதவர் களுக்கு என்ன இவ்வளவு அக்கறை என்று பல நண் பர்கள் என்னிடம் கேட்ட துண்டு.

அதை நியாயமாக, சந்தோஷமாக விளக்க வேண்டிய பொறுப்பு, கடமை எங்களுக்கு உண்டு. அந்த வகையிலே தேர் தலில் நிற்காத இயக்கமாக இருந்தாலும், அறிவாசான் தந்தை பெரியாரால் எதற் காக தோற்றுவிக்கப்பட்டது? சமூகநீதிக்காக தோற்று விக்கப்பட்டது. சமுதாய மாற்றத்திற்காக தோற்று விக்கப்பட்டது.

மனுதர்மத்திற்கும் - சமதர்மத்திற்கும் போராட்டம்

பழைய மனுதர்மத் திற்கு இந்த நாட்டை அழைத்துச் செல்ல வேண் டும். குல தர்மம் கோ லோச்ச வேண்டும். சமதர்மம் தழைக்கக் கூடாது என்பதற்காக, இரண்டு அணிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

என்ன அந்த இரண்டு அணி? சமுதாயத்தில் அவர் கள் வெளிப்படையாக இருக்கவில்லை மக்களுக்கு தெரியாது. வெளிப்படை யான புறத்தோற்றம் இருக் கிறதே அதைப் புரிய வைக்க வேண்டியது. எங்களது கடமை.

தமிழ் ஓவியா said...

ஆகவேதான், அந்தப் பணியை செய்ய முன்வந்து இருக்கின்றோம். மற்றபடி இந்த தேர்தலில் எத்தனை இடம் என்று கேட்பதற்கு அவசியம் கிடையாது.

இந்த சமுதாயத்தில் கடைகோடியில் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்பதே எங் களின் ஆசை.

இப்போது நூதனப் பிரச் சாரம் செய்கிறார்கள் அது என்ன? நூதனப் பிரச்சாரம்?

மோடி வலையில் (சில) மீன்கள்!

மோடி அலை வீசுகிறது என்று எங்கு பார்த்தாலும் பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி அலை வீசவில்லை, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான் வலை வீசுகிறது.

வலை வீசியதன் விளை வாக, அதிலே, சில மீன்கள் சிக்கி இருக்கின்றன பாவம்.

கடலில் இருந்தால், அந்த மீனுக்கு உயிர் உண்டு. ஆனால் வலையில் சிக்கிய மீன்கள் வியாபாரத் திற்கு கடைக்கு வருவதைத் தவிர அது உணவுக்கு பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது.

மீன்களாவது ஆரோக் கியத்திற்குப் பயன்படும். இந்த மீன்களோ செத்துப் போன மீன்கள். அது ஆரோக்கியத்திற்குக் கூட சரியாக பயன்படாது. இதைத் தான் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மதச்சார்பற்ற ஆட்சி

மதச்சார்பற்ற கூட்டணி என்று ஜனநாயக முற்போக் குக் கூட்டணியை சொல் கிறார்களே! இதில் இஸ்லா மியர்கள் உட்கார்ந்து இருக் கிறார்கள். கிறிஸ்தவர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்கப்போகிறோம் என்று சொல்லுகிறார்களே என்று பல பேர் கேட்கிறார் கள்; அடிப்படையே அவர் களுக்குத் தெரியவில்லை.

மதச்சார்பற்ற ஆட்சி என்று சொன்னால் அதன் பொருள் என்ன? ஒரே மதம், நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இதுதான் அடிப்படை.

நாட்டை ஹிந்துத்துவா - ஆள வேண்டுமா?

பல மதங்கள் பல கலாச் சாரங்கள் பல மொழிகள் இருக்கின்ற நாட்டில் எம் மதம் மட்டும் தான் ஹந்துத் துவா தான் ஆள வேண்டும், மற்றவர்களுக்கெல்லாம் வேலை இல்லை என்று இவர்கள் சொல்கிற தத்துவம் இருக்கிறது -அது ஜன நாயகம் அல்ல.

பாசிச தத்துவம். அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் - அதுவும் கை கோத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இங்கே, நம்முடைய கூட்டணி கட்சித் தோழர் களுக்கு சால்வை அணிவித்த நேரத்தில், மாமன் என்று இஸ்லாமிய தோழரைப் பார்த்துச் சொன்னார்கள். கிறிஸ் தவத் தோழராக இருந்தாலும் மாமன், மச்சான், அண்ணன், தம்பி இப்படி உறவோடு இருப்பதால்தான் இந்நாடு அமைதிப் பூங்காவாக இருக் கிறது. வேறு எதற்கும் இங்கு இடம் கிடையாது.

சமதர்மம் நிலைக்க... தழைக்க...

இன்னாருக்கு இன்னது மட்டும்தான் என்பது மனு தர்மம். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமதர்மம். எனவே, சமதர்மத் தை நிலைக்க வைக்க வேண் டும் என்பதற்காகத்தான், நீங்கள் இந்தத் தேர் தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக இருக்கக்கூடிய அன்பு சகோ தரர் காந்திராஜன் அவர்களை, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதை நாங்கள் சொல்வ தற்குக் காரணம், அமையப் போகும் ஆட்சி கலைஞர் யாரை கை காட்டுகிறாரோ, அடையாளப்படுத்துகிறாரோ அவர்தான் பிரதமர் என்று எழுதப்படவேண்டிய எழு திக் கொள்ளக்கூடிய வரலாறு.

ஊடகத்தைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்; உண் மைகளைத் தவிர வேறு எல் லாம் அவற்றில் இருக்கும் - மறைக்கப்பட்ட உண்மை கள் திரைமறைவில் இருக் கும். இந்தக் கூட்டணியில் தி.மு.க., விடுதலை சிறுத்தை கள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் என அனைத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள் சகோதரத்து வத்துடன், சமூகநீதிக்காகப் போராடுகிறவர்கள்.

மண்டல் ஆணையம்

நாடு முழுவதும் மண் டல் ஆணையப் பரிந்துரை அன்றைய பிரதமர் வி.பி.சிங் மூலமாக செயலுக்கு வந்தது, அதற்காகப் பாடு பட்ட பெருமை திராவிடர் கழகத்துக்கு உண்டு. அதன் காரணமாகத்தான் இன்று அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., மத்திய கல்விக் கூடங்களில் இட ஒதுக்கீடு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி இருக் கிறது. அன்றைய காலகட்டத் தில், பத்தே மாதங்கள் ஆகாத நிலையில், வி.பி.சிங் ஆட்சி யைக் கலைத்தது யார்? தெரிந்து கொள்ளவேண்டும். பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வீழ்த் தியது மட்டுமல்ல; நாங்கள் ராமன் கோவில் கட்டவேண் டும் என்று ஆரம்பித்து, மண்டலுக்கும், கமண்டலுக் கும் போட்டியே நடந்தது.

டாக்டர் கலைஞர் தலை மையில் உள்ள கூட்டணியை விட, தமிழ்நாட்டில் பலமான கூட்டணி எந்தக் கூட்டணியும் கிடையாது. ஏனென்றால், இது மக்கள் கூட்டணி! அது மட்டுமல்ல, கொள்கைக் கூட்டணி!! இந்தக் கூட்ட ணியில் நாங்கள் கருப்புச் சட்டை போட்டு இருப்போம்; இன்னொருவர் சிலுவை; இன்னொருவர் குல்லா போட்டு இருந்தாலும், மதச்சார் பற்ற தன்மையில் நடந்து கொள்ளக் கூடிய வர்கள் இதுதான் இந்த அணியின் தனிச்சிறப்பு என்று பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78108.html#ixzz2xxjZ5618

தமிழ் ஓவியா said...


ஊழல் மன்னன் மோடி பராக்! பராக்!!


* 5 ஆண்டுகளில் குஜராத் முதல்வர் வணிக விமானங்கள் அல்லது அரசு விமா னங்களை பயன்படுத்தாமல் ஏறத்தாள 200 பயணங்களுக்கு மேல் தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்தியுள்ளார் எங்கிருந்து வந்தது அவ்வளவு பணம்?

* குஜராத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூபாய் 900 என்ற மதிப்பில் 11000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 10,000 இதன் மூலம் அரசுக்கு இழப்பு ரூபாய் 33000 கோடி.

* குஜராத் அரசு தடை செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கால்நடை தீவ னத்தை 5 கிலோவிற்கு ரூ 240 வீதம் வாங்கி யுள்ளது ஆனால் அதன் சந்தை மதிப்பு 5 கிலோவிற்கு ரூ 120 முதல் 140 வரை தான்!!!

*அரசு நிலத்தை அரசிடமிருந்து அதானி என்னும் பெரு நிறுவனம்

ஒரு சதுர மீட்டர் 50 பைசாவுக்கு வாங்கி அதே நிலத்தை அரசு நிறு வனத்துக்கு ஒரு சதுர மீட்டர் 500 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் கோடி ஊழல் (மோடி ஊரு ஊராக சுற்றுவது அதானியின் சார்டர்ட் விமானங் களில் தான்)

* காண்ட்லா துறைமுகத்தின் 16000 ஏக்கர் நிலத்தை, சந்தை மதிப்பில் 6% ஆக இருக்க வேண்டிய குத்தகை தொகையை ஏக்கருக்கு வெறும் ரு 144 வீதம் ஏலம் விட்டதில் 2 லட்சம் கோடி ஊழல்!!

* கிருஷ்ணா கோதாவரி ஆற்றுபடுகை யில் எரிவாயு கண்டுபிடிக்கும் குஜராத் மின்கழக திட்டம் வெளிநாட்டு நிறுவனத் திற்கு எந்த ஏலத்தொகையுமின்றி விற்றதில் இழப்பு 20000 கோடி!!!

ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் மோடியின்மீது 17 ஊழல் கள் பற்றி விசாரணை நடப்பது ஏன்? வாக்காளர் களே சிந்திப்பீர்!

- அபு ரயான்

Read more: http://viduthalai.in/e-paper/78112.html#ixzz2xxjkj0sf

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் சுயநலவெறி!


பா.ஜ.க.வேட்பாளர் இல.கணேசனின் பிரச்சார வாகனம் தென் சென்னையில் வலம் வருகிறது. மோடி, இல.கணேசன், தாமரை ஆகிய படங்கள் மட்டுமே கொண்ட பிரச்சார வாகனம் அது.நான்கு பக்கமும் இப்படித்தான் இருக்கிறது.

ஒரு இடத்தில் கூட பா.ஜ.க.வை தோளில் சுமக்கும் விஜயகாந்த்,வைகோ, ராமதாஸ், பச்சமுத்து, ஏ.சி.சண்முகம்,ஈஸ்வரன் படங்கள் இல்லை. கூட்டணிக் கட்சிகளின் சின்னங்கள் கிடையாது கொடிகளும் இல்லை.இதுதான் பார்ப்பனீயம் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்? ஒன்றரை சதவீத வாக்குகள் மட்டுமே உள்ள பா.ஜ.க.,தமக்கு சேவகம் செய்யும் கூலிப்படையாக மட்டுமே மேற்படி தன்மான(?)த் தமிழர்களை கருதுகிறதோ!

Read more: http://viduthalai.in/e-paper/78113.html#ixzz2xxjzjw7V

தமிழ் ஓவியா said...


மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஏன்? கலைஞர் விளக்கம்

கேள்வி :- தி.மு. கழகம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து விலக உண்மையான காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சினை அல்ல என்றும், அலைக்கற்றை வழக்கு தான் காரணம் என்றும் ஜெயலலிதா கோவையில் கூறியிருக் கிறாரே?

கலைஞர் :- 1998-1999ஆம் ஆண்டுகளில் சொந்தப் பிரச்சினைகளை-சுயநலக் கோரிக்கைகளை முன் வைத்து மத்தியில் ஆட்சி செய்த வாஜ்பய் அரசை படாத பாடு படுத்தி, இறுதியாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து வாஜ்பய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறக் கடிதம் கொடுத்து, மத்திய அரசையே கவிழ்த்தவரின் எண்ணம் அப்படித்தானே இருக்கும்! அலைக் கற்றை வழக்குக்காக மத்திய அரசிலிருந்து விலகுவது என்றால், அந்த வழக்கில் தி.மு. கழகத்தினரை கைது செய்தபோதே விலகி வந்திருப் போம். ஆனால் அப்போது தி.மு. கழகம் மத்திய அரசி லிருந்து விலக வில்லை. மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகிய போது நான் விடுத்த அறிக்கையில், தமிழ் இளை ஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள்கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத் தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகிவிட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சி னையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தி யாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வ நாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும். இவைகளையெல்லாம் அய்.நா. மன்றத்திலும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தி யாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவு களைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன் மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலை களே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவை யிலிருந்தும், அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப் பட்டுள்ளது என்ற வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தால், தி.மு.கழகம் எதற்காக மத்திய அரசிலிருந்து விலகியது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். வாதத்திற்கு மருந்து உண்டு, விதண்டா வாதத்திற்கு மருந்து ஏது?

- (முரசொலி, கலைஞர் பதில்கள், 4.4.2014)

Read more: http://viduthalai.in/page-3/78117.html#ixzz2xxkGrcgX

தமிழ் ஓவியா said...


மதம் போதிப்பது என்ன?


வாழ்நாள் முழுதும் உழைத்தும் போதிய வருவாய் இன்றி வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மதத்தினால் போதிக்கப்படுவது என்ன? இந்தப் பூவுலகில் அடங்கி வாழ வேண்டும்; பொறுமையுடன் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் சொர்க்கத்தின் பரிசு தங்களுக்கு கிடைக்கும் என்ற மன அமைதி கொள்ள வேண்டும் என்பதே.

பிறரது உழைப்பின் மீது தம் வாழ்வினை ஆதாரமாகக் கொண்டு வாழும் நபர்கள் மதத்தினால் என்ன போதிக்கப் படுகிறார்கள்? இவ்வுலகில் வறியோர்க்கு வழங்கும் தரும நெறியினைக் கடைப்பிடித்து வாழ்தல் என்ற சுலபமான வழியில் சுரண்டல்காரர்களின் வாழ்வினையும் மதம் நியாயப்படுத்துகிறது.

அதாவது, சொர்க்கத்தில் நல்வாழ் வினைப் பெறுவதற்குச் சுலபமான விலையில் பயணச் சீட்டுகள் அவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

- மதத்தைப் பற்றி என்னும் நூலில் லெனின்

Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxkuNKsQ

தமிழ் ஓவியா said...

சாஸ்திரத்தில் பசு வதை!

மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின்கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க. இப்படி கூறுகிறது. யாகத்தின் போது பசுவை எப்படி அறுத்தெடுப்பது என்பது பற்றி கூறும் மந்திரம் (ஆய்தரேயப்ராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பசுவின் - மலம், மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும் என்று அய்தரேய பஞ்சி 2 காண்டம் 6 கூறுகிறது. பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் நன்றாக அடித்துக் கொல், கொல், கொல், அடிப்பதை நிறுத்தாதே என்று சொல்ல வேண்டும் என்று அய்த பஞ்சிகா 2 காண்டம் 7 கூறுகிறது.

சாஸ்திரம் இப்படிக் கூற, பசுவதையை தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிடும் சாஸ்திரிகளே! அப்படியானால் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு பதிலாக சாஸ்திர எரிப்பு விழாக் கொண்டாடுங்களேன்!

Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxl3MLW5

தமிழ் ஓவியா said...

காந்தியார் மீது நேருவின் தாக்குதல்!

(புதுடில்லியில் 3.1.1947 அன்று நடைபெற்ற இந்திய விஞ்ஞான மாநாட்டில் நேரு அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. சத்திய சோதனை என்றும், கடவுள் சொன்னார் என்றும் அடிக்கடி கூறிக் கொண் டிருந்த காந்தியாரை மறைமுகமாகத் தாக்குகிறார் நேரு. படித்துப் பாருங்கள் - உங்களுக்கே புரியும்! - ஆ.ர்.)

தனிப்பட்ட நபரொருவரின் சத்திய சோதனையல்ல விஞ்ஞானம். மக்கள் நலனுக்குப் பயன்படுவதாயின், அது தனிப்பட்டவரின் சோதனையைக் காட்டிலும் பரப்பு மிகவுள்ளதே, பட்டினியால் பரிதவிக்கும் மனிதனுக்கு சத்தியம்; உண்மையென்பதெல்லாம் அர்த்தமற்ற வெறுஞ் சொற்களே. அவனுக்கு உணவு வேண்டும். பட்டினிப் பசித்துயரில் சூழ்ந்துள்ளவனுக்கு கடவுளைப்பற்றிக் கவலையில்லை. அவனுக்கு உணவு வேண்டும். இந்தியா பசிப் பட்டினியால் அவதியுற்று வரும் நாடாகும்.

பட்டினிப் பட்டாளங்கள் முன்னிலையிலா கடவுள் சத்தியம்!

கோடிக்கணக்கான பட்டினிப் பட்டாளங்களின் முன்னிலையில் கடவுள், சத்தியம் என்று வெற்றுரை பகருவதும், அழகொழுக வாழ்க்கைத் தத்துவங்களை யெடுத்தியம்புவதும், அவர்களை கேலி செய்வதற்கே யொப்பாகும் பட்டினியால் வதையுறுவோருக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தந்தாக வேண்டும். அவர்களுக்குக் கல்வி அளித்தாக வேண்டும். சுகாதார வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாக வேண்டும்.

சுருக்கமாக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது வேண்டப்படும் வசதிகள் அத்தனையும் அளித்தாக வேண்டும். இவற்றை நாம் செய்து விட்டோ மானால் அதன் பிறகு வேதாந்தம் பேசலாம்; கடவுளைப்பற்றி நினைக்கலாம். எனவே, இந்தியாவின் 40 கோடி மக்களைப் பற்றிய சிந்தனையிலீடுபட வேண்டும் விஞ்ஞானிகள். விஞ்ஞனம் பரப்புவோம். பண்டிதர் ஜவஹர் மேலும் கூறியதாவது:-

நாங்கள் பெரிதும் விரும்புவது

சர்க்கார் நடவடிக்கையெடுத்துக் கொள்வரென்று கருதி விஞ்ஞான காங்கிரஸ் இவ்விஷயங்களைக் கவனியாது வெறுமென இருந்து விடாது என நம்புகிறேன். சர்க்கார்கள் நல்லனவாயுமிருக்கலாம்; கெட்டன வாயுமிருக்கலாம்.

ஆனால், எல்லா சர்க்கார்களும் ஆமை வேகத்தில் செல்லக்கூடியனவே ஆகும். அவர்களை சுறு சுறுப்பாக்குவது ஒன்றே ஒன்றுதான். மறைமுகமாக அவர்களது எதிர்காலத் தைப் பாதிக்கக் கூடிய பொதுமக்கள் கூச்சலே அது. சர்க்காரிடமிருந்து எதுவுமெதிர்பார்க்க விஞ்ஞானி களுக்கு உரிமை உண்டு.

தற்கால இந்திய சர்க்காரின் உறுப்பினன் என்ற முறையில் நான் இதைக் கூற ஆசைப்படுகிறேன். இந்தியாவில் விஞ்ஞானம் பெருத்த அளவில் வளர்ச்சியுற வேண்டுமென நாங்கள் பெரிதும் விரும்பு கிறோம்.

விஞ்ஞான ஆராய்ச்சியை விரிவுபடுத்த எங்களாலியன்றதைச் செய்வோம். விஞ்ஞான முன்னேற்றத்திற்கும், அதன் வாயிலாக உலக மக்களின் நலத்துக்கும் நாங்கள் உலக விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க ஆயத்தமாகியுள்ளோம்.

Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxlCiFbi

தமிழ் ஓவியா said...


மத ஆதிக்கத் தொல்லை!


மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகிறதே ஒழிய, சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.

கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்காக குடிஅரசு பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக புரட்சி பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று.

இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினந்தோறும், நிமிடந்தோறும் அடைந்து வரும் தொல்லையும், நசுக்குச்சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது.

பார்ப்பனர்களை உத்தியோகஸ்தர் களாகக் கொண்ட போலீஸ் இலாகா, போஸ்டல் இலாகா, ரயில்வே இலாகா, நிதி இலாகா, நிருவாகம் மற்றும் அநேக துறைகளில் கீழே இருந்து அய்கோர்ட் நிருவாக சபை வரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம் சித்திரவதைக் கொப்பாகவே இருந்து வருகின்றது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlLlO30

தமிழ் ஓவியா said...

ஈ.எம்.எஸ். பார்வையில் மதம்

புராதன பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீஸிலும் ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கு உருவாகியது.



சிந்து சமவெளி தடயங்களை பரிசீலிக்கும் போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீஸிலும் ரோமிலும் இருந்தது போன்ற அடிமைமுறை சிந்து சமூகத்தில் இருந்திருக்கவில்லையா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தையே அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள் அடிமைகள் - எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்குப் பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உபஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.

இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கு உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது. அடிமை முறையிலுள்ளதுபோல தெளிவானதும் மறுக்க முடியாதது மான சுரண்டல் முறைக்கு பதிலாக வருணாசிரம தர்மத்தினுடையவும் ஜாதி ஆசாரங்களுடையவும், இவைகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற மத நம்பிக்கை களுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல்ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன.

- ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய இந்திய வரலாறு என்னும் புத்தகத்தின் 36ஆம் பக்கத்தி லிருந்து

குறிப்பு: இந்திய சமூகத்தில் வர்க்க பேதத்தை விட ஜாதி பேதமே மேலோங்கியுள்ளது என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஈ.எம்.எஸ். இங்கு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlcGiJv

தமிழ் ஓவியா said...

முதல்தரமான விரோதி!

எல்லா மதங்களுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் முதல்தரமான விரோதியாக இருப்பது எது தெரியுமா? பகுத்தறிவு என்று இருக்கிறதே ஒரு பொருள் - அது தான்! வேறு எது?



- வால்டேர்

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxll5DZM

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்திற்கு ஒரு உதாரணம்:

பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத் தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிரசின் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி ஒத்து ழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது.

அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்ட ரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத் தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன.

இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியை காட்டியே விட்டது. எப்படி யென்றால். சாதாரணமாக அப்புத்தகத் தின் பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத் தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும்.

ஆனால் இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது. அதாவது பாரதி பாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது.

இது யாவருக்கும் தெரிந்ததே யாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திபதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.

இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வைத்தி ருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப்படுகின்றது. நிற்க;

இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப் பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர்களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத் தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரிய மல்ல என்றாலும் நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர் களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக் கிறார்கள் என்பதற்கும் முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.02.1929

Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3wwqnkW

தமிழ் ஓவியா said...

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரசிடென்ட் திருவாளர் ராவ்பகதூர் சீத்தாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெருமித ஓட்டுகளால் நிறை வேற்றப்பட்டுவிட்டதாக தெரிய வருகின்றது. திரு.ரெட்டியார் பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர்.

ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதை பிரச்சாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவை பாதுகாத்து வந்தவர். கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கி யும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்குகூட வொட் டாமல் செய்தவர்.

முயற்சி செய்தவர்களையும், பொறுப் பற்றவர்கள் என்று சொன்னவர். பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்கர் கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு வலது கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப் படுத்திக் கொண்டவர்.

அய்யோ பாவம். இவ்வளவும் இருந்தும் கோழிக்குஞ்சை ராசாளி தூக்கிக் கொண்டு போவதுபோல் கண்மூடி கண் திறப்பதற் குள்ளாக திரு.ரெட்டியாரின் நம்பிக்கை பறந்தோடிவிட்டது. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப் போனாலும் போச்சு, என்கின்ற பெரியோர் வாக்கியப்படி திடீரென்று சுழிமாறிப் போய் தனக்கு 11 ஓட்டுகளும் தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஒன்றும் முழுகிப் போக வில்லை, குறைந்தபட்சம் திரு.ரெட்டியார் உலகம் என்பது கற்றுக் கொள்ளவாவது இந்த முடிவை ஒரு தக்க சந்தர்ப்பமாக கொண்டாரானால் அவசியம் அவருக்கு இந்த நம்பிக்கை யில்லா தீர்மானமே அனுகூலமான பயனைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். மேலும் திரு.சீத்தாராம ரெட்டியார் போன்ற மற்றும் சில தலதாபன தலைவர்களுக்கும் இது ஒரு படிப்பினையாகவும் ஆகலாம்.

குடிஅரசு - கட்டுரை - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3x6nUdu

தமிழ் ஓவியா said...

ஓர் விஞ்ஞானம்

செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுய மரியாதை மகாநாட்டின் தீர்மானப்படி, பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்படும் நாயக்கர், நாயுடு, செட்டியார், முதலி யார் போன்ற ஜாதிப் பட்டப் பெயர்களையும், நாமம், விபூதி, பூணூல் முதலிய மதச்சின்னங்களையும் நீக்கி விட்டவர்களின் ஜாபிதாவையும் இனி குடிஅரசுப் பத்திரிகையில் வெளியிட உத்தேசித்திருப்பதால் ஜாதிப் பட்டங்களை நீக்கிவிட்டவர் களும்,

மதக்குறியை விட்டவர்களும், தம் தம் விலாசத்தை அவ்வப்போது தெரியப் படுத்தினால் பிரசுரிப்பதற்கு மிகவும் உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளுகின் றோம். நிற்க இனி எமக்கு எழுதும் கடிதங்களிலும் எமது பெய ரைக் குறிப்பிடும் சமயங்களிலும் எமது பெயருக்குப் பின் னால் நாயக்கர் என்று குறிப்பிடாமல் இருக்க வேண்டு கின்றோம்.

குடிஅரசு - அறிவிப்பு - 24-02-1929

Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3xDeTMs

தமிழ் ஓவியா said...


இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் - சித்திரபுத்திரன்


மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிரம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

உதாரணமாக, மேல் நாட்டில் ஒருபெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாத்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம்.

கூட்டத்திலிருந்த வர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிஸ்தவ மதமோ ஆண்டவனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோகித்துப் பார்ப்ப தனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டு மானால் நம்பிக்கை இருக்க வேண்டும்.

பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாத்திகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார் களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கியங் களைப் பின் வாங்கிக் கொண்டு தாம் சொன்ன மகாபாதக மான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப்படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு ஒன்றரை பெண் களும் படித்திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங் களுக்கும் வேதங் களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்கு மென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாத்திகன் என்று எழுதிவைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாதிகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?

குடிஅரசு - கட்டுரை - 03-02-1929

Read more: http://viduthalai.in/page-7/78207.html#ixzz2y3xmnlch

தமிழ் ஓவியா said...

திரு.சாமி வெளியாக்கப்பட்டார்

சென்னைக் காங்கிரஸ் கட்சிக்கும் சுயராஜ்யக் கட்சிக்கும் சட்டசபைத் தலைவராக திரு.சாமி. வெங்கடாசலம் செட்டியாரை வைத்திருந்தார்கள். ஆனால், திரு.செட்டியார், பார்ப்பனரின் கைக்களிமண் உருண்டையாயிருந்த வரையில் தங்களுக்கு வேண்டிய மாதிரி எந்தவித பொம்மை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் அவரைத் தலைவர், தலைவர்! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.



ஆனால், திருவாளர் செட்டியார், முத்துரங்கம், குழந்தை, அமீத்கான், கம்பெனியார்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் தமது சுயபுத்தியைக் காட்ட ஆரம்பித்தவுடன் அவரைக் கீழே தள்ளிவிட்டார்கள். இது வெகுநாளாகவே நாம் எதிர்பார்த்ததுதான். திரு சாமியும் தயாராகவே இருந்ததாகத்தான் தெரிகின்றது.

கடைசியாக திரு. சாமியைத் தள்ளியதற்குக் காரணம், திரு.சாமி, திரு. பனகால் ராஜாவிடம் அடிக்கடி பேசியதுதானாம். பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரசமரத்தையும் பிடித்தது என்பது போல் திரு. சத்தியமூர்த்தியின் உதவித் தலைவர் பதவியும் பிடுங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இதற்கு ஏதாவது உள் ரகசியம் இருக்கலாம்.

அதாவது, திரு.ஸ்ரீனிவாசய்யங்கார், திரு.மூர்த்திக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கூட்டிக் கொடுத்திருக்கலாம் அல்லது கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பொறுத்திருக் கும்படி கேட்டுக் கொண்டிருக்கலாம் எப்படி ஆனாலும் திரு. சாமி வெளியாக்கப்பட்டுவிட்டார்.

திரு. வரதராஜுலுவும் காங்கிர கமிட்டியில் ராஜினாமா கொடுத்துவிட்டு இந்த 2, 3, நாள்களாகப் பார்ப்பனர்களைத் திட்டுவது போல் வேஷம் போடுகின்றார். இதன் ரகசியம் இன்னது என்பதும் தெரியவில்லை. ஒரு சமயம் ராஜினாமா அனாமத்தில் வைக்கப்பட்டு சைமன் கமிஷன் சென்னையை விட்டுப்போன பிறகு. திரும்பி வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டு, வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு வழக்கம் போல் மறுபடியும் திருவாளர் நாயுடு மெம்பரானாலும் ஆகலாம்.

சென்ற ஆண்டிற்கு முன்னைய ஆண்டில் காங்கிரசைக் குறை கூறி விட்டுக் காங்கிரசை விட்டு ஓடிய திரு. கல்யாணசுந்தர முதலியாரும் காங்கிரசை ஆதரிப்பதுடன், செத்துப்போன ஜில்லா, தாலுகா காங்கிர கமிட்டிகளை உயிர்ப்பித்து கிராமப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று உபதேசம் செய்கின்றார். இதன் ரகசியம் விளங்கவில்லை.

ஒரு சமயம், ஒரு அய்யங்காரிடம் வியாபாரம் பேசவோ என்பதும் புலப்படவில்லை! நம்முடைய பார்ப்பனர் களுடைய வாழ்க்கைக்குத் தக்கபடி அவர்களை விட்டு ஒருவர் போனால் மற்றொருவர் வந்து வலிய விண்ணப்பம் போட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.

குடிஅரசு - செய்திக்குறிப்பு - 10-02-1929

Read more: http://viduthalai.in/page-7/78207.html#ixzz2y3xuDMOi

தமிழ் ஓவியா said...


கரூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ம.சின்னச்சாமியை ஆதரித்து மணப்பாறையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

மணப்பாறை, ஏப். 5- கரூர் நாடாளுமன்றத் தொகுதி ஜனநாயக முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் ம.சின்னச்சாமியை ஆதரித்து மணப்பாறையில் தமிழர் தலைவர் அவர்கள் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்கள்.

கரூர் - ம.சின்னச்சாமி

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தொகுதி திமுக வேட்பாளர் ம.சின்னச்சாமி ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் 4.4.2014 அன்று மாலை 6.30 மணியளவில் மணப்பாறை தந்தை பெரி யார் சிலை அருகில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் வெகு எழுச்சியோடு நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் தலைமை வகித்தார்.

மணப்பாறை நகர திமுக செயலாளர் கீதா மைக்கேல் ராஜ், திராவிட முன்னேற்றக் கழக பேச்சாளர் துரை.காசி நாதன், துரை.அழகிரி, மணப் பாறை நகர திராவிடர் கழகத் தலைவர் பிச்சை ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக பேச்சா ளர் முனைவர் க.அன்பழகன் தேர்தல் பிரச்சார தொடக்க வுரையாற்றினார். தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி தலைமைக்கழகப் பேச்சாளர் முகமது ரபீக், திமுக பேச்சா ளர் துரை.காசிநாதன் ஆகி யோர் உரையாற்றினர்

அடுத்ததாக, திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றி னார் அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:-

இன்றைக்கு பிரதமராக பாஜக வேட்பாளராக நிறுத் தப்பட்டுள்ள மோடி பிகாரில் என்ன சொல்லியிருக்கிறார். மாடு மேய்க்க மானியம் தரு கிறேன் என்று சொல்கிறார். அவர் மக்களை பழங்காலத் திற்கு அழைத்துச் செல்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. ஏனென்றால் நம்ம கடவுள் ஏசு கிறிஸ்து, இராமன் எல் லாம் மாடு மேய்த்தவர்கள் தானே. படிக்க கல்வியை கொடுக்காமல் மாடுமேய்க்க மானியம் தருகிறேன் என்று சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனுதர் மத்தை மீண்டும் கொண்டு வர நினைக்கிறார் மோடி.

பால் கொடுக்கும் பசுவை (மாடுகளை) கொல்லக் கூடாது என்கிறர். மாடு அடி மாடாக இருக்கும்போது தானே கொல்கிறார்கள். அதன் இறைச்சியை விற்கிறார்கள். உலகத்திலே தோல் உற்பத்தியில் முதலிடம் வகிக் கிறது இந்தியா, இரண்டாவது இடம் இத்தாலி. தோலை விற்கக்கூடாது. மாட்டை கொல்லக்கூடாது என்று ஏன் சொல்கிறார். இந்தியாவிற்கு நல்ல வருமானம் வருகிறது. இதை தடுக்க நினைக்கிறார் மோடி என்று பல செய்தி களை எடுத்துக் கூறினார்.
திருச்சியிலிருந்து மணப் பாறை கூட்டம் நடக்கும் (தந்தை பெரியார் திடல்) மேடைக்கு சரியாக இரவு 8.15 மணிக்கு வருகை தந்தார்கள். அங்கு திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும் மற்றக் கட்சியினரும் வரவேற்றனர்.

தமிழர் தலைவருக்கு திருச்சி மாவட்ட திராவிட கழகத்தலைவர் மு.சேகர், கரூர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.க.இராஜ சேகரன், திமுக பேச்சாளர் துரை.காசிநாதன், நகர திமுக செயலாளர் கீதா மைக்கேல் ராஜ், மருங்காபுரி ஒன்றிய திமுக செயலாளர் செல்வ ராஜ், புதிய தமிழகம் தொகுதி பொறுப்பாளர் முருகேசன், திமுக பொதுக்குழு உறுப்பி னர் இராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பாளர்கள், ஜன நாயக முற்போக்கு கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், தோழர்கள் சால்வை அணி வித்து சிறப்பு செய்தனர்.

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் கரூர் நாடாளுமன்ற தொகுதி ஜன நாயக முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் ம.சின்னச் சாமியை ஆதரித்து வாக்க ளிக்க வேண்டி தேர்தல் பரப் புரை, சிறப்புரை நிகழ்த்தினார்.

Read more: http://viduthalai.in/page-4/78222.html#ixzz2y4Bo3oaU

தமிழ் ஓவியா said...


இது பெரியார் பிறந்த மண்

- குடந்தை கருணா

திராவிடர் கழகத்தலைவர், விடுதலை ஆசிரியர் தொடர்ந்து ஒரு செய்தியை அறிக்கையாகவும், தனது பேச்சின் மூலமாகவும் சொல்லிக் கொண்டே வந்தார்; வருகிறார்.

பிப்ரவரி 2014-இல் தனது அறிக்கையில், இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்ச மின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது; ஹிந்துத் துவாவை அதிகார பீடத்தில் அமர வைக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்டவர்களான பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பறிக்க வியூகங்களை வகுத்துள்ளனர்.

இந்தச் சூழ்ச்சியை ஒடுக்கப்பட்ட மக்களும், புரிந்து கொள்ள வேண்டும்; மதவாத எதிர்ப்புச் சக்திகள் ஒன்றி ணைந்து முறியடிக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தார்.

தொடர்ந்து மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தல் சம்பந்தமான பொதுக்கூட்டத்திலும், தனது பேச்சில், மாலேகான் உட்பட பல்வேறு சதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அமைப்புகள் மீது, இந்து பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டு இறுகியதிலிருந்து தப்பிக்கவே, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம் தீட்டியுள்ளதாக, ஆசிரியர் வீரமணி கூறினார்.

தற்போது கோப்ரா போஸ்ட் எனும் இணைய தளம் மேற்கொண்ட வேவு நடவடிக்கையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் எத்தகைய சதியில் திட்டமிட்டு நடத்தி, பாபர் மசூதியை இடித்தன என்பதை தெரிந்து கொண் டால், ஆசிரியரின் கருத்து எத்தகைய முக்கியத்துவமான கருத்து என்பது தெளிவாகும்.

இந்த நிலையில், புகழ் பெற்ற எழுத்தாளர் குல்திப் நய்யாரைத் தலை வராகவும் என்.டி.பஞ்சோலியைச் செயலராகவும் கொண்டு டில்லியிலி ருந்து இயங்கும் "ஜனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு" 29.3.2014 அன்று புதுடில்லியில் மாநாடு நடத்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் கார்பொரேட் பின்புலத்துடன் பிரதமர் வேட்பாள ராக வலம் வரும் மோடி தலைமை யில் இயங்கும் எதேச்சாதிகார சக்திகளை தோற்கடிக்குமாறு இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.

இதே போன்று கருநாடகாவில் எழுத்தாளர்கள் அனந்த நாராயண மூர்த்தி போன்றோர், சமாகலீனா விசாரா வேதிகே என்கிற அமைப்பின் சார்பில், ஆர்.எஸ்.எஸின் முகமூடி மோடி; அவர் வெற்றி பெறுவது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் என அறிக்கை விடுத்துள்ளனர்.

புதுடில்லியில் குல்தீப் நய்யார் போன்றோரும், கருநாடகாவில் எழுத்தாளர்களும் விடுதலை ஆசிரியர் கூறிய கருத்தை ஒற்றி, ஒரே நிலையில் சிந்திக்கின்றனர். பாஜக மோடி ஆர்.எஸ்.எஸ் அபாயத்தை மக்களிடம் கூறி எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்துகின்றனர்.

ஆனால், பாஜக சீட்டணியில் உள்ள வைகோ போன்றோர், மோடி பிரதம ரானால் என்ன என்று மக்களைப் பற்றியும், வரும் அபாயத்தையும் பற்றி சற்றும் கவலைப்படாமல் பேசி வரு கின்றனர். இவர்களை தமிழ் மக்கள் நிச்சயம் அலட்சியப்படுத்துவார்கள்.

ஏனென்றால் இது பெரியார் பிறந்த மண்.

Read more: http://viduthalai.in/page-2/78216.html#ixzz2y4CTdRIy

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் பொருளாதாரக் கொள்கை என்பது என்ன

தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தலைமையில் கூட்டணி என்று சொல்லப்படுவது சம்பிரதாயமானது. தமிழ்நாட்டில் பி.ஜே.பி. எங்கே இருக்கிறது? நடைமுறை உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டில் தேமுதிக தலைமையில் அமைந்த கூட்டணியில் பிஜேபியும் உள்ளது;

அதுவும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பதுதானே உண்மை!

இந்தக் கட்சிகளின் ஒரே குரல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை அகற்றி விட்டு, அந்த இடத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியைக் கொண்டு வந்து வைப்பதுதான்.

அதற்காக இக்கட்சியினரால் சொல்லப்படும் காரணங்கள்தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை.

பொருளாதாரப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இரு கட்சிகளுமே போட்டிப் போடக் கூடியவைதான். இதன் காரணமாக சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, அவற்றை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கை நாசமாவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்.

அரசுத் துறைகளைத் தனியார்க்குத் தாரை வார்ப்பதில் காங்கிரசை விஞ்சி நிற்பது பிஜேபியே! இந்தத் தலைப்பில் ஒரு பட்டிமன்றத்தைக் கூட நடத்தலாம்.

பி.ஜே.பி. ஆட்சியில் அரசுத் துறைகளைத் தனியார்க்கு அளிப்பதற்கென்றே ஒரு தனித் துறை உருவாக்கப்பட்டது (Ministry of Disinvestment) அதற்கு அருண்ஷோரி அவர்கள் மத்திய அமைச்சராகவே இருந்தார் என்பதை நினைவூட்டுகிறோம்.

பால்கோ என்ற நிறுவனம் அதன் உபரிநிதி ரூ.4600 கோடி. 2000ஆம் ஆண்டில் அதன் லாபம் ரூ.110 கோடி. சொத்து மதிப்போ ரூ.5000 கோடி. அதனை 551 கோடி ரூபாய்க்கு அடி மாட்டு விலையில் ஸ்டெர்லைட் கம்பெனிக்கு விற்றது வாஜ்பேயி அரசு. பாலக்காட்டில் இன்ஸ்ட்ரூமென்ட்டேசன் என்ற நிறுவனம் அதன் சொத்து மதிப்பு ரூ.175 கோடி; ரூ.19 கோடிக்கு ஃபிஷர் என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றதும் வாஜ்பேயி தலைமையிலான பி.ஜே.பி. அரசே!

பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில்தான் பெப்சி, நெஸ்லே, கோகோ கோலா போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற் குள் காலடி எடுத்து வைத்து உள் நாட்டில் உற்பத்தி யான குளிர் பானங்களை எல்லாம் காலி செய்தன.

வருடத்துக்கு ஒரு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்படும் என்று உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி ஆட்சியில் 347 ஆலைகள் மூடப்பட்டு 6,46,379 பேர் வேலை இழப்புக்கு ஆளானார்கள்! இதுதான் வாஜ்பேயி அரசின் நிகர லாபம்.

அமெரிக்காவின் டெர்மினேட்டர் விதைகள் (மலட்டு விதைகள்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டதும் பிஜேபி ஆட்சிக் காலத்தில்தான்!

இந்தியாவில் உள்ள விவசாயிகள் அறுவடையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை விதை நெல்லாகச் சேகரித்து வைப்பார்கள். இந்த மலட்டு விதை அறிமுகப் படுத்தப்பட ஆரம்பித்து விட்டால், பன்னாட்டு விதை விற்பனை நிறுவனங்களிடமிருந்துதான் விதைகளை வாங்கித் தீர வேண்டும் என்ற கட்டாய நிலை. இந்தக் கேடு கெட்டவற்றிற்கெல்லாம் முகூர்த்தக் கால் நட்டது பிஜேபி ஆட்சியே!

நியூயார்க் பன்னாட்டு பொது விவகாரக் கவுன்சிலின் தலைவர் பேராசிரியர் வார்டுமோர் ஹௌஸ் என்பவர் இந்தியாவிற்கு வந்தபோது சொன்னார். (ஏப்ரல் 1999).

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் மான் சாண்ட்டோவுக்கும் (மலட்டு விதைக்கு) பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி சந்தேகத்துக்கு உரியது. அதனை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கப் பேராசிரி யரே கூறியும்கூட பிஜேபி அரசு பொருட் படுத்தவில்லையே!

(இந்த நேரத்தில் இதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை நினைவு கூர்வோமாக!)

1998 ஜூலையில் 1308 பொருள்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை பிஜேபி அரசு முழுமையாக அகற்றியது. இது உள்நாட்டு உற்பத்தியின் முதுகெலும்பை முறித்த அபாயகரமான செயல் பாடாகும்.காப்பீடு, மருந்து உற்பத்தி, ஓட்டல்கள், சுற்றுலா, விமான நிலையங்கள் போன்ற துறைகளில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதித்ததும் வாஜ்பேயி தலைமையிலான பிஜேபி ஆட்சியே!

இந்த நிலையில் நரேந்திரமோடி தலைமையில் பிஜேபி புரட்சியைச் செய்யப் போகிறது என்பதெல்லாம் யாரை ஏமாற்றிட? பிஜேபி மட்டுமல்ல - இதற்குத் துணைப் போகும் கட்சிகளும் இந்த மோசடிக்குப் பொறுப்பாகும் என்று எச்சரிக்கிறோம்.

வாஜ்பேயியின் அளவுக்கு அதிகமான அமெரிக்கச் சார்பைக் கண்டித்தும், அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது யார் தெரியுமா?

மதன்லால் குரானா உள்ளிட்ட 7 பேர்களாகும். இந்த ஏழு பேர்களும் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் வேடிக்கை!

மதவாதம் என்றாலும் நாட்டுப் பொருளாதாரம் என்றாலும் எந்த வகையில் பி.ஜே.பி. சிறந்தது - நாட்டு மக்களுக்கு நலன் விளைவிக்கக் கூடியது?

சிந்திப்பீர்! வாக்காளர்களே, செயல்படுவீர்!!

Read more: http://viduthalai.in/page-2/78212.html#ixzz2y4Cj1wSx

தமிழ் ஓவியா said...


நாட்டில் மோடி அலை இல்லை சீதாராம் யெச்சூரி பேட்டி


கொச்சி, ஏப். 5- நாட் டில் மோடி அலை வீச வில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எர்ணாகுளத்தில் பத்திரிகை யாளர் கூட்டத்தில் தெரி வித்தார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எர்ணா குளத்தில் பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற கூட் டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:

நாட்டில் மோடி அலை வீசுகிறது என்றால், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி வாரணாசியில் மட்டும் போட்டியிட வேண் டியது தானே, ஏன் பாது காப்பான தொகுதியை தேடிச் சென்று 2 தொகுதி களில் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜ அல்லாத ஆட்சி அமைக்க மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து, 3ஆவது அணி அமைக்க இடதுசாரி கடு மையாக பாடுபடும். மூன் றாவது அணி உருவாகி ஆட்சி அமைக்கும் பட்சத் தில் அதில் சேர்வது குறித்து கட்சியின் மத்தியக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்றதைப் போல இப்போதும் இடது சாரிகள் வெல்வார்கள் என் றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/78197.html#ixzz2y4D8dxKl

தமிழ் ஓவியா said...


இரவில் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பதா? வீணான சந்தேகங்கள், கலவரங்களுக்கு வித்திடும்


இரவில் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பதா?
வீணான சந்தேகங்கள், கலவரங்களுக்கு வித்திடும்

திராவிடர் கழகத் தலைவர் கருத்து

மோடியின் முகத்திரையைக் கிழிக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை அறிக்கை!

1) 16ஆவது மக்களவைத் தேர்தலில் வன்முறை தலை தூக்காது ஜனநாயக உரிமைகளைக் காக்கும் வகையில், தேர்தலை நடத்தி முடிப்பது மிக மிக அவசியமாகும்.

டெல்லியிலேயே வன்முறை

தலைநகர் டெல்லியில் பரப்புரை செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த நேரத்தில் தட்சண்புரி என்ற பகுதியில், அவரது வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது, (அங்கே இம்மாதம் 10ஆம் தேதி தேர்தல்) ஒருவர் மேடையில் ஏறி கன்னத்தில் அறைந்து முகத்தில் குத்து விட்டுள்ளார். டில்லியிலே இப்படி ஒரு நிகழ்வு என்றால் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

கட்சித் தலைவர்களுக்குக்கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பில்லை; தலைவர்களுக்கு, வேட்பாளர் களுக்கு அவர்கள் எக்கட்சியினராக இருந்தாலும் - போதிய பாதுகாப்புத் தர வேண்டும் என்பது குறைந்தபட்ச தேர்தல் அடிப்படைக் கடமை அல்லவா?

இதில் தேர்தல் ஆணையம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, வன்முறைச் சம்பவங்கள் நிகழாது, உயிர், உடைமைப் பாதுகாப்புக்கும் அமைதியாக தேர்தல் நடைபெறவதற்கும் வழிவகை செய்தல் தலையாய கடமையாகும்.

பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடா?

2) தமிழக தேர்தல் ஆணையர் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்தத் தடை என்பது தானேயொழிய, தனித் தனியே வீடுகளுக்கு சென்று ஓட்டுக் கேட்க எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளதன் மூலம், இது வீட்டில் பணி செய்து, முடித்து, உறங்கி, எழுந்து, அடுத்த நாள் வேலைக்குச் செல்வோர்க்கும், தேர்வுக்காகப் படிக்கும் மாணவர்களுக்கும், இது மிகப் பெரிய இடையூறாக அமையக் கூடும்.

எனவே, உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்து இந்த முறையைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.

இரவில் வாக்குச் சேகரிக்கிறார்களா? அல்லது பணம் பட்டுவாடா செய்து வாக்குகளை விலை பேசி வாங்கு கிறார்களா என்பது தெரியாமல் ஆங்காங்கே மற்ற எதிர் அணியினர் திரண்டு நின்று அமைதியைக் குலைத்து, வீண் கலவரங்கள் நிகழத்தான் வாய்ப்பு ஏற்படக் கூடும். சந்தேகங்களுக்கும் இடம் அளிக்கும்.

எனவே, இந்த முறை உடனே கைவிடப்பட்டாக வேண்டும்; இரவில் அமைதியோடு மக்கள் ஒய்வெடுத்தலே நல்லது. பகலில் பணிகள் நடைபெறட்டும்; இன்றேல் வன்முறைகள் நாட்கள் நெருங்க நெருங்க பெருகிடும் அபாயம் ஏற்படும்.

எனவே, சட்டம், ஒழுங்கு சீர்குலையாமல், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் முடியும் வரை போதிய பாதுகாப்புத் தர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு

ஆளுங் கட்சிக்காக மட்டும்தானா காவல்துறை என்பது போன்ற கேள்வி எழா வண்ணம், வரு முன்னர் காக்கும் வகையில், தேர்தல் ஆணையம் கண்காணிக்க முன்வர வேண்டும்; அப்போதுதான் பொது ஒழுக்கம், அமைதி காப்பாற்றப்படக் கூடும்.



கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

5.4.2014

முகாம்: மதுரை

Read more: http://viduthalai.in/e-paper/78202.html#ixzz2y4DGnpZz

தமிழ் ஓவியா said...


இசையும் வசையும்!


கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டு வழங்கப்பட்டு விட்டது. அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள் ளது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அந்த அறிக் கைகளைப் படித்துப் பார்த் தாலே புரிந்து கொள்ளலாம். சுருக்கமாகக் கூற வேண்டு மானால் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் குறிப் பிட்டதைப் போல திமுக வின் தேர்தல் அறிக்கை இசை அதிமுகவின் தேர்தல் அறிக்கை வசை

- கலைஞர் அறிக்கையிலிருந்து முரசொலி 5.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78203.html#ixzz2y4DOpOD4

தமிழ் ஓவியா said...



பணபட்டு வாடா!

ஒலி பெருக்கியின்றி நள்ளிரவிலும் பிரச்சாரம் செய்யலாம், வீட்டுக்கு வீடு செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது பணப்பட்டுவாடா செய்ய வழி வகுக்கும் என்று இடதுசாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் குரல் கொடுப்பாராம்!

மதுரை அவனியாபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய விஜயகாந்த், எங்கள் கூட்டணி வேட்பாளரை ஆதரித்தால் சட்டமன்றத்தில் நமக்காகக் குரல் கொடுப்பார் என்று பேசியுள்ளார். (நடக்கவிருப்பது சட்டமன்றத் தேர்தலா - மக்களவைத் தேர்தலா என்று கூடத் தெரியாமல் வீராவேசமாகப் பேசுகிறார் விஜயகாந்த்)

வேலியே...

தயவு செய்து கொக்கிப் போட்டு மின்சாரத்தைத் திருடாதீங்க! என்று மின்வாரிய அதிகாரிகள் கெஞ்ச ஆரம்பித்து விட்டனர். முதல் அமைச்சர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கே அவ்வாறு மின்சாரம் எடுக்கப்பட்டது குறித்துத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கதாகும். (வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது!).

அப்படிப் போடுங்க!

அஇஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் மின் வெட்டா தமிழ்நாட்டிலா? எங்கே இருக்கிறது! என்று சொன் னாரே பார்க்கலாம் (தினமலர் 4.4.2014) இவர் தனி இருட்டு உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாரோ!

இந்தக் காலத்தில் இப்படி... யா?

அருணாசலப் பிரதேசத்தில் டோபோவா என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டுமானால் 46 கி.மீ. நடந்தே சென்றாக வேண்டும். வாக்குப் பதிவு எந்திரத்தையும் தூக்கிக் கொண்டு போக வேண்டுமாம் இந்த 2014லும் இப்படியா?



....தேய்ந்து கட்டெறும்பாக

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி.யின் நிலை என்ன? 1998 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 6.86 சதவிதம் (கூட்டணி உள்பட)
1999 இல் பெற்றது 7.14 சதவிகிதம். 2004இல் பெற்றது 5.07 சதவிகிதம் 2009இல் (கூட்டணி இல்லை) 2.3 சதவிகிதம்.

இந்த லட்சணத்தில் பிஜேபி தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளதாம்! ஹி... ஹி....

Read more: http://viduthalai.in/e-paper/78210.html#ixzz2y4DZ3qWa

தமிழ் ஓவியா said...


ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு கலைஞர் வேண்டுகோள்

சென்னை, ஏப்.5- ஒவ்வொருவரும் ஒரு வாக்கு, ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்ற புது முழக்கத்தை திமுக தலைவர் கலைஞர் தொடங்கி வைத்துள்ளார்.

திமுகவின் உறுப்பினர்கள் வாக்களிப்பது டன், அவர்கள் ஒருவரை வாக்களிக்கச் செய்தால் திமுக எளிதில் வெற்றிபெறும் என்றும் கலை ஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று (4.4.2014) அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

திமுகவில் ஏதாவது சிறு சம்பவம் எங்கே யாவது தோன்றினால் போதும், அதை உடனே பெரிதுபடுத்தி பத்திரிகைகள் வெளியிடுகின்றன. திராவிட இயக்கத்தின் இனம், மொழி போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த அடையாளங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. திமுகவி னரிடையே இருக்கும் உற்சாகத்தைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இப் படிப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றனர்.

நம்மை நாமே சரியாகத் தயார்படுத்திக் கொண்டு விட்டால், மற்றவர்களால் திமுகவில் எவ்வாறு பூசலை ஏற்படுத்த முடியும்?

நீர் இடித்து நீர் விலகாது. ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், அடுத்தமுறை அவருக்குப் பரிசீலிக்கப்படும் என்ற நிலைதான் திமுகவில் இருக்கிறது. இதனால் போட்டியிடும் வேட்பா ளருக்கு ஆதரவாகத்தான் அனைவரும் செயல் படுகின்றனர்.

ஏனென்றால், ஒரு தொகுதியில் போட்டியிடு வது யாரோ ஒரு வேட்பாளர் இல்லை. திமுகதான் போட்டியிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நேரத்தில் திமுகவின் சட்டதிட்ட குழு உறுப்பினரான சி.இறைவன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் திமுகவில் உறுப்பினர் களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேர். அவர்கள் எல்லாம் மக்களவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தேர்தலில் தவறா மல் வாக்களிப்பதுடன், ஒவ்வொருவரை வாக்களிக்கவும் செய்தால், 1.60 கோடி பேர் திமுகவுக்கு வாக்களிக்கக்கூடிய நிலைவரும். இதன்மூலம் மிகப் பெரிய வெற்றியை திமுக பெறும் என்று கூறியுள்ளார். இறைவன் எழுதி யுள்ள கணக்கு சரியான கணக்காகவே எனக்குத் தோன்றுகிறது.

எனவே ஒவ்வொருவரும் ஒரு வாக்கு, ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்பதை மறவாமல் திமுகவினர் பணியாற்ற வேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/78189.html#ixzz2y4DoIR2b

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி., ஆர்.எஸ்.எசுக்குள் அந்தரங்கத் திட்டம்! ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குக் கடன் உதவியாம்

புதுடில்லி, ஏப்.5- தற் போது அரசியல், பதவி, அதிகாரம் இவை குறித்த சிந்தனை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே ஏற் பட்டுவிட்டால் சித்தாந் தத்தை மய்யமாகக் கொண்ட செயல்கள் குறைந்து, பாழா கிவிடும் என்று ஆர்.எஸ்.எஸ். மதத் தலைவர்கள் கருது கின்றனர்.

இதனால், அமைப் பின் தொண்டர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்ட அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் தொண்டர் களுக்கு கடன் வசதி செய்து தரும் திட்டம் உதயமாகி உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் ஆதரவுடன் அரசு அமையும்போது, அமைப் பின் கருத்துக்களுடன் அழுத் தங்களை உருவாக்கி, மூத்த தலைவர்கள் அரசின் கடி வாளத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள்.

தேர்தல் அரசியலில் பங் கேற்காமல், தியாகத்துடன் உள்ள பொறுப்பாளர்கள் பாஜகவின் பல்வேறு நிலை களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு கட்சியைப் பலப் படுத்துவார்கள். அரசின் சுமைகளை, அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ். தடத்திலிருந்து நழுவிச்செல்லாமல் பரா மரித்து திறமையாக பாது காக்கும் பணியை மேற் கொள்வார்கள்.

பிஜேபிக்குள் நுழைந்த ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறும்போது, இது ஒரு நீண்ட காலத்திட்டம். இத் திட்டத்தை கருவாகக் கொண்டு பாஜகவில் நுழைந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்வரை செயல் படுத்தினாலும், அய்ந்து ஆண்டுகளுக்கு இதுபோன்ற பணிகளை மேற்கொள்வார் கள். கட்சி தொடங்கிய போதே இந்தத் திட்டம் இடம்பெற்று, அதன்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கட்சிக்குள் நுழைந்துள்ள னர். உத்தரப்பிரதேசத்தில் இதேபோல ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் 3 பேர் பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.

உணர்ச்சிகரமான நிலை யில் கடந்த இரண்டு வாரங் களில் மட்டுமே லக்னோ வில் ரத்னாகர் பாண்டே, வார ணாசியில் சந்திரசேகர், ராய் பரேலியில் பவானி சிங் ஆகி யோர் பணியமர்த்தப்பட் டுள்ளனர். இதேபோல், மற்ற மாநிலங்களிலும் இத் திட்டம் செயல்படுத்தப்படும். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து மின்னஞ் சலில் அவருடைய கருத் தைக் கேட்டபோது, அவரி டமிருந்து பதில் இல்லை.

ஆர்.எஸ்.எஸ். தொடர் பாளர் மன்மோகன் வைத்யா கூறும்போது, சங்கத்தின் உறுப்பினர்கள் பாஜகவுக் குள் இணைந்து செயல் படுவது என்பது இயற்கை யான செயலாகும். நாட்டில் சங்கத்தினர் அனைவருமே தேச நலனைக்கருதி, 2014 தேர்தலில் மட்டுமே கவ னம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளனர். மற்றவை எல்லாம் தேர்தலுக்குப்பின்தான் எடுத்துக்கொள்ளப்படும். பாஜகவுக்குள் சங்கத்தினர் நுழைவு என்பது தேவை யின் பொருட்டே நடை பெறுகிறது.

பிஜேபி நலிவடைந்து விடக் கூடாதாம்!

உண்மையாகக் கூறுவதா னால், பாஜகவுக்குள் ஆர்.எஸ்.எஸ். நுழைந்து பணியாற்றுவது என்பது இது முதல்முறை அன்று. ஏற்கெனவே, 1988-89இல் மதுக்கர் தத்தாச்சார்யா பாலா சாஹெப் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தபோது, நரேந்திர மோடி, கே.என். கோவிந்தாச்சார்யா, சேஷாத்ரி சாரி, இல.கணேசன் ஆகி யோரை பாஜகவுக்கு அனுப் பினார். மற்ற சங்கத்தினரும் அதைப் பின்பற்றினர்.

சாரி இதுகுறித்து சொல் லும்போது, பாஜக மிகவும் நலிந்து, உயிர்ப்புடன் இருப் பதால் அவசரத் தேவை என்கிற நிலையில் இருந்த காலக்கட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலி ருந்து பாஜகவுக்கு அனுப் பப்பட்டார்கள்.

கட்சியில் உள்ள அனைவரும் அரசில் இடம்பெறவேண்டும் என்று ஆர்.எஸ் .எஸ் நினைப் பதில்லை. எந்த நேரத்திலும் கட்சியைப் புறக்கணிக்கவும் கூடாது. பாஜக அமைப்பு நலிவுறக்கூடாது என்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இதை உறுதிசெய்து கொள் வார்கள் என்றார்.

- தி எகானமிக் டைம்ஸ் 2.4.2014 டில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/page-8/78178.html#ixzz2y4Dwa6mT

தமிழ் ஓவியா said...


சர்க்கரையே பெரிய வில்லன்!

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராம். அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு 24 கிராம். ஆனால் இதைத் தாண்டுவதால் ஏராளமான பிரச்சினைகள், குறிப்பாக சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள்தான் பெரிதும் ஆபத்து தருகின்றன. ஒரு மருத்துவ நிறுவனம் எடுத்த கணக்கின்படி, சர்க்கரை சேர்த்த குளிர்பானங்களுக்கு 20 சதவீதம் அதிக வரி விதித்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு கோடியே 12 லட்சம் பேர் அதிக எடை கூடுவதைத் தடுக்கலாம்; 4 லட்சம் புதிய சர்க்கரை நோயாளிகளைத் தவிர்க்கலாம். விலை அதிகம் என்பதால் வாங்கிக் குடுக்காமல் நோய்களை இப்படி தவிர்ப்பார்கள் என்கிறது அந்த புள்ளி விவரம்.

Read more: http://viduthalai.in/page2/78160.html#ixzz2y4EKoEdq

தமிழ் ஓவியா said...


மோடி விகாஷ் (வளர்ச்சி) புருஷ் அல்ல, அவர் வினாஷ் (நாசம்) புருசர் - உமாபாரதி மோடி விகாஷ் (வளர்ச்சி) புருஷ் அல்ல, அவர் வினாஷ் (நாசம்) புருசர் - உமாபாரதி


நான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது புரிந்து கொண்டேன் இங்கே மக்கள் மிகவும் பயமுள்ளவர் களாக வாழ்கின்றனர், இது எல்லாம் நரேந்திரமோடியால் வந்தது, இந்து மக்களின் நலனிற்காக பாடுபடுவதாக கூறும் நரேந்திரமோடி கூறுகிறார். ஆனால் இங்கு பல இந்துக்கள் வாழ்வா தாரமின்றி இருக்கிறார்கள்.

தவறு செய்தவர்களை தூக்கிலிடுங்கள், ஆனால் எந்த தவறும் செய்யாத ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறையில் வாடுகிறார்கள். இவர்கள் குறித்து மோடி இன்றுவரை பேசுவதே இல்லை, இவர்கள் வழக்குகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அவர்கள் ஏன் சிறையில் வாழ்கிறார்கள். அவர்களின் வழக்கின் நிலை என்ன மோடியின் சிறந்த நண்பரான அருண் ஜெட்லி தலைசிறந்த வழக்கறிஞரும் கூட அவரிடம் கேட்கிறேன். இவர்களின் வழக்கு குறித்து இந்த மாநிலத்தின் முதல்வர் என்றாவது உங்களிடம் கேட்டிருக்கிறாரா?

நான் இந்தியா முழுவதும் சென்று பார்த்துவிட்டேன், குஜராத்தைப்போன்று பயத்துடன் வாழும் மக்களை நான் பார்க்கவில்லை, பெண்களுக்கு பாதுகாப் பில்லை, கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது குஜராத் தற்போது யீமீணீக்ஷீ றீமீ ணீமீ என்பதற்கு பதிலாக திமீணீக்ஷீ க்ஷீவீளீவீஸீரீ ணீமீ பய மற்ற மாநிலத்திற்கு பதிலாக சாதாரண குடிமகன் பயத்துடன் வாழும் மாநிலமாக மாறிவிட்டது.

குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று ஊர் ஊருக்கு சென்று கூவிக்கொண்டு இருக் கிறாரே, இது முழுவதும் பொய், நான் சரியான வேலை யின்றி வாழவழியின்றி நிராதரவாக நிற்கும் குஜராத்திகளை ஆயிரக்கணக்கில் நான் காண்பிப்பேன். மோடி விகாஷ் புருஷ் அல்ல, அவர் வினாஷ் புருசர், நான் நரேந்திர மோடியை 1972-லிருந்து அறிவேன் அதனால் தான் நான் அவரை நான் வினாஸ் புருசன் என்று கூறுகிறேன். ஊடகங்கள் அவரது பொய்யை அதிகமாக பரப்பி பலூன் போல் ஊதிப்பெரிதாக்கி விட்டார்கள், அந்தக் காற்றை பிடுங்கி மோடியை பஞ்சராக்கவேண்டியது தான் இனி ஊடகங்கள் வேலையாக இருக்கவேண்டும் என்று அகமதாபாத்தில் (30.9.2013) பேசினார். பிஜேபியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான உமாபாரதி.

(Daily Bhaskar - Hindi Daily 1.4.2014).

Read more: http://viduthalai.in/page3/78162.html#ixzz2y4F1tLoQ

தமிழ் ஓவியா said...


இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு


கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ் வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுப் பெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக் கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம். கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும். இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன. கருவுற்ற பெண்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ் ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். தானியங்களில் அதிக சத்து மிக்கது கேழ் வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page3/78163.html#ixzz2y4FBvp9H

தமிழ் ஓவியா said...


இந்திய ஆண்கள் வேலை பார்க்கும் நேரம்

இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? பெண்களுக்கு ஆண்கள் உதவி செய்கிறார்களா என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வில் இந்தியாவில் பெண் களே குடும்ப பொறுப்புக்களை அதிக அளவில் சுமப்பதாக தெரிய வந்துள்ளது.

பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் வீட்டு வேலைகள் எதையும் சுத்த மாக செய்வதே இல்லை என்ற தகவலும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் சராசரியாக 19 நிமிடங்கள் மட்டுமே தினமும் வீட்டு வேலை செய்கிறார்களாம்.

அதுவும் வீட்டில் அவர்கள் தொடர் புடைய வேலைகளுக்குத்தான் அந்த 19 நிமிடங்களை செலவிடுகிறார்களாம். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் ஆண்களில் 90 சதவீதம் பேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.

வீட்டில் இருக்காமல் வெளியில் சுற்றும் ஆண்களும், பெண்களுக்கு உதவும் வகையில் எந்த வேலையும் செய்து கொடுப்பது இல்லை என்று தெரிய வந்துள்ளது. வெளியில் இருக்கும் ஆண்கள் தினமும் 11 மணி நேரத்தை தங்கள் வேலை மற்றும் தங்கள் பொழுது போக்குக்கே செலவிடுகிறார்களாம்.

50 சதவீத ஆண்களுக்கு தூங்குவது, சாப்பிடுவது, அரட்டையடிப்பது, மது குடிப்பது போன்ற வகைகளில் தினசரி நேரம் கழிந்து விடுகிறதாம். இந்தியாவில் ஆண்கள் இப்படி இருப்பது சமூக கலாச் சாரமாக ஆழமாக வேருன்றி இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆண்கள் இப்படி சுய நலத்துடன் இருக்கும் நிலையில் பெண்கள்தான் பொறுப்புடன் குடும்ப சுமையை சுமப்ப தாக தெரிய வந்துள்ளது. சமையல், துணி துவைப்பது, வீட்டை ஒழுங்குப்படுத்து வதை பெண்கள் மட்டுமே செய்வதாக கருத்து கணிப்பு சொல்கிறது.

இத்தனை வேலைகளை செய்து விட்டு குழந்தைகளை கவனிப்பதும் பெண்கள் வேலையாக உள்ளது. நகர்ப் பகுதிகளை விட கிராமங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக ஆய்வில் கூறப்பட் டுள்ளது.

ஜப்பானில் ஆண்கள் தினமும் 24 நிமிடமும், கொரியாவில் 21 நிமிடமும், சீனாவில் 48 நிமிடமும் வீட்டு வேலை செய்கிறார்கள்.

உலகிலேயே ஆண்கள் அதிக நேரம் வீட்டு வேலை செய்வது ஸ்லோவேனியா நாட்டில்தான். அந்நாட்டு ஆண்கள் தினமும் 114 நிமிடம் வீட்டு வேலை செய்கிறார்கள்.

டென்மார்க், எஸ்தோனியா நாட்டு ஆண்களும் பெண்களுக்கு உதவும் வகை யில் வீட்டு வேலைகள் செய்து கொடுக் கிறார்களாம். மற்ற நாடுகளில் பெரும் பாலும் வீட்டு வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டியதுள்ளது.

Read more: http://viduthalai.in/page8/78171.html#ixzz2y4Gwo39O

தமிழ் ஓவியா said...


வயது வரம்பு



2001-2013 ஆண்டு காலத்தில் குரூப் ஒன்று தேர்வு 5 தடவைதான் விளம்பரம் வந்திருக்கிறது. வயது வரம்பு கீழ்க்கண்ட வாறு இருக்கிறது. பொது பிரிவு இதர பிரிவு
அரியானா 40 45
கேரளா 35 38
ராஜஸ்தான் 35 38
குஜராத் 40 45
குஜராத் 45 50 (பெண்கள்)
பீகார் 40 45
மே.வ 32 37
உத்தரபிரதேசம் 40 45
ஜார்க்கண்ட் 40 45
உத்தரகண்ட் 40 45
ஆந்திரா 34 39
தமிழ்நாடு 30 35
இதில் தமிழ்நாடுதான் மிகவும் வயது வரம்பில் குறைவாக இருக்கிறது. 3லு லட்சம் பட்டதாரிகள் பயனடைவார்கள், வயதைக் கூட்டினால். படித்து, தேர்வு எழுதி என்ன உடனடியாக வேலையா கிடைக்கிறது. வயதைக் கூட்டித் தேர்வு எழுத விடுவதால் பட்டதாரிகளுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

- க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page8/78172.html#ixzz2y4H7SQoI

தமிழ் ஓவியா said...


இராமன் கோயில் மக்கள் மனமாற்றம்!


ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான பஞ்சன்யத்தில் ராமர்கோவில் விவகாரம் குறித்து மக்களிடையே கருத்து கணிப்பு கேட்டிருந்தது, இதில் பெரும்பான்மை யானோர் ராமன் கோவில் விவகாரத்திற்கு கருத்து தெரிவிக்கவில்லை.

இதன் மூலம் ராமன் கோவில் பிரச் சினையால் அரசியல் லாபம் காண முடியாது, ராமன் கோவில் விவகாரம் முன்பு ஆட்சியைக்கைப்பற்றும் ஒரு துருப்பு சீட்டாக இருந்தது, ஆனால் தற்போது அது செல்லாக்காசாகிவிட்டது, என தாமதமாக புரிந்துகொண்டது. ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கணிப்பை தொடர்ந்து பிரபல இந்தி ஊடகமான தைனிக் பாஸ்கரும் இராமன் கோவில் விவகாரம் குறித்து மக்களிடையே கருத் துக்கணிப்பு நடத்தியது.

இதில் ராமன் கோவில் எங்களுக்குத் தேவையில்லை என்றே 70 விழுக்காடு மக்கள் பதிலளித்து இருந்தனர். உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, பிகார் போன்ற மாநிலங்களில் நடத்திய கருத்துக்கணிப்பில் 40விழுக்காடு மக்கள் ராமன் கோவில் விவகாரம் முடிந்து போன ஒன்று என பதிலளித்தனர். மேலும் தேர்தல் சமயங்களில் பாஜக வும் அதன் தாய் அமைப்பான இந்துத்துவா குழுக்களும் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்து பெரும்பான்மை இந்துக் களின் ஓட்டுக்களை பெறுவதற்கு இது வரை பயன்படுத்தினர், இனி அவர்களின் ராமன்கோவில் நாடகம் செல்லாது என்றனர்.

30 விழுக்காடு மக்கள் மதம் ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ள வில்லை, நாடு இருக்கும் நிலையில், மதப்பிரச்சினைகள் என்பது ஓட்டுவாங்க ஒரு சாதனமாக பயன்படுத்தி அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது, கோவில் கட்டுவதால் நாட்டில் வேலைவாய்ப்பு இன்மை குறைந்துவிடுமா, அல்லது தொழில் வளர்ச்சி பெற்றுவிடுமா? இன்றைய சூழலில், உலக நாடுகளுடன் போட்டி போட ஏற்றுமதித் தொழிலை ஊக்கப்படுத்தும் அளவில் ஏதாவது முக்கியத் திட்டங்கள் கொண்டு வர வேண்டும் அதை விட்டுவிட்டு ஆட்சியில் அமர மாத்திரம் இராமன் கோவில் இந்து முஸ்லீம் பிரச்சினைகளை கிளப்பி ஆட்சியில் அமர்ந்த பிறகு அடுத்த தேர்தல் வரை நாட்டு நலனை மறந்து நாடாளு மன்றத்தில் சண்டையிடுகின்றனர் என்று பதிலளித்தனர். பாரதீய ஜனதா கட்சி தற்போது தேர்தல் அறிக்கை தயார் செய்துகொண்டு இருக்கிறது, தனது தேர்தல் அறிக்கையில் இராமன் கோவில் விவகாரம் முக்கிய பங்குவகிக்கும் என்று தேர்தல் பணிக்குழு தலைவர் மனோகர் ஜோஷி சில நாட் களுக்கு முன்பு பதிலளித்திருந்தார். தற் போது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிந்த நிலையில் பாஜக என்ன முடிவெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
லாபம் வேண்டுமென்றால் இராமன் வேண்டும், நட்டம் ஏற்படும் போது நட்டாற்றில் வீசுவதுதானே காவிகளின் வேலை?
- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page7/78167.html#ixzz2y4HJWH6D

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பட்டபாடு


சன் டி.வி., செய்தியாளர் விழுப்புரத்தில் கைது

29.6.2001இல் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் களைக் கைது செய்துவேப்பேரி காவல் நிலையத்தில் அடைப்பு.

12.8.2001 அன்று சென்னை டாக்டர் ராதா கிருட்டிணன் சாலை விளக்குகளை யெல்லாம் அணைத்துவிட்டு பத்திரிகை யாளர்களை கண்மூடித் தனமாகத் தாக்கினர். நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ், இந்து புகைப்படக்காரர் மூர்த்தி, தினமணி புகைப்படக்காரர் ராஜி, ஜீ டி.வி. புகைப்படக்காரர் மணீஷ், ஆஜ்தக் செய்தியாளர் ஜெயசிறீ போன்றோர் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக் கருவிகள், வீடியோ சாதனங்கள் பறிக்கப்பட்டன.

ஜெவுக்கு எதிராக எழுதியதற்காக இந்து பதிப்பாசிரியர் சிறப்புச் செய்தியாளர் இராதா வெங்கடேசன், கட்டுரை ஆசிரியர் வி. ஜெயந்த் ஆகியோர்களுக்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை.

இந்து பத்திரிகை செய்தியை தமிழில் வெளி யிட்டதற்காக முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டு மென்று சட்டசபையில் தீர்மானம்.

சந்தன வீரப்பன் சம்பந்தமான பழைய வழக்குகளை மீண்டும் கிளறி, நக்கீரன் கோபால் பெயரை புதிதாகச் சேர்த்து இரவு நேரத்தில் பொடா சட்டத்தில் கைது செய்து சென்னை, திருச்சி, சேலம், கோவை என பல சிறைகளுக்கு அலைக்கழித்துக் கொடுமைப்படுத் தினார்கள்.

இந்து ஏட்டின்மீது 17 வழக்குகள்; முரசொலி ஏட்டின்மீது 6 வழக்குகள்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினகரன், இந்தியா டுடே ஸ்டேட்ஸ்மென், தி வீக், டெலிகிராப், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவுட்லுக் போன்றவை மீது நடவடிக்கை.

130-க்கும் மேற்பட்ட வழக்குகள் பத் திரிகையாளர்கள்மீது தொடரப்பட்டன.

இவ்வளவு கொடுமைகளுக்கும் ஆளான பத்திரிகை களில் சில இன்று ஜெ.மீது கரிசனம் காட்டப்பட்டிருக் கிறது. காரணம், இரத்தம் தண்ணீரை விட கெட்டி யானது கடந்த மாதம் காஞ்சீபுரத்திலே, செய்தியாளர், தொலைக்காட்சியினர் தாக்கப்பட்டது (19.3.2014) ஜனநாயகத்தின் நான்காவது தூணே ஜெயலலிதா ஆட்சியில் தாக்குதலுக்கு ஆளானது.

இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டாமா? சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/78274.html#ixzz2y9akTw32

தமிழ் ஓவியா said...

எச். ராஜாமீது கிரிமினல் வழக்கு!

தமிழக பிஜேபி துணைத் தலைவரும் சிவகங்கை மக்க ளவைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளருமான எச். ராஜா என்பவர் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அவதூறா கச் பேசியதற்காகவும் கிறித்த வர், முஸ்லீம்கள்மீது வெறுப் பைத் தூண்டும் வகையில் பேசியதாலும் அவர்மீது உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மனுவை மது ரைக் கிளை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78279.html#ixzz2y9bHYte1

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


வேட்பு மனு

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு வேட்பு மனு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 1318.

தடை

மக்களவைத் தேர்தலில் முதல் வாக்கெடுப்பு நாளை தொடங்கி 9 கட்டமாக மே 12ஆம் தேதி முடிவடை கிறது. நாளை திரிபுராவில் தொடங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவுக்குப் பின்பு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மீறல்கள்

சென்னையில் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் 55064.

தண்டனை

வேட்பு மனுவில் தவறான தகவல் அளிக்கப் பட்டால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்.

ரஜினியிடம் கெஞ்சல்

சரியான நேரத்தில் சரியான கருத்தை நடிகர் ரஜினிகாந்த் தெரிவிப்பார் என்கிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

பரிதாபம்: தங்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்க முடியாதவர்கள் சினிமாக்காரர்களிடம் அருள்வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்களின் பரிதாப நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

வைகோ கிண்டல்!

அரிஸ்டாடிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதா வாகத்தான் இருக்க முடியும் என்று வைகோ கிண்டல் அடித்துள்ளார். தென் சென்னை பி.ஜே.பி. வேட்பாளரை ஆதரித்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது: அரிஸ்டாட்டிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதாதான்! ஏனென்றால் மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைய ஓட்ட ளியுங்கள் எனப் பேசி வருகிறார். ஆனால் அதிமுக அமைச்சர்களோ ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வரு கிறார்கள்.

40 தொகுதிகளை வைத்துக் கொண்டு எப்படி பிரதமராக முடியும்? ஜெயலலிதா கம்யூனிஸ்டுகளை கடைசி வரை காக்க வைத்து கழுத்தறுத்தவர் என்று வைகோ பேசியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78278.html#ixzz2y9bSBj5E

தமிழ் ஓவியா said...


மோடியின் நண்பர் பாபா ராம்தேவின் அபத்தமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள்


யோகா குரு பாபா ராம் தேவ், பிஜேபி யின் ஆதரவாளர் என்பதும், பிரதமர் வேட்பாளர் மோடியின் நண்பர் என்பதும், அனைவருக்கும் தெரியும். அவரது யோகா வகுப்புகள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலமானவை. (இவற்றை YOUTUBEல் காணலாம்.)

பாபாராம் தேவ் அரசியலில் முக்கியப் பங்கு ஆற்ற விரும்புகிறார். நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகிறார். அதனால் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஊழலை ஒழிக்க இவர் தரும் பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள்: (02.04.2014, The Financial Express - பார்க்கவும்) சுங்க வரியைத் (Customs Duty) தவிர, மற்ற வரிகளான, வருமான வரி, கலால் வரி (Excise Duty) போன்றவற்றை ரத்து செய்துவிடலாம். 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்க லாம். இதன் மூலம் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர முடியும் என்று இவர் நம்புகிறார்.

இந்த வரிகளுக்குப் பதிலாக BTT (Banking Transaction Tax), என்ற வரியை, அதாவது, வங்கிப் பணப் பரிமாற்றத்திற்கு 2% முதல் 15% வரை வரி விதிக்கலாம். மேலும் நோட்டுகளுக்குப் பதிலாக மின் பணம் ((Electronic Money) பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் கறுப்புச் சந்தை (Black Market) ஒழியும் என்று இவர் கருதுகிறார். பிரேசில் நாட்டில் இப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளதாக பாபா ராம்தேவ் கூறுகிறார்.

இவர் தனது பொருளாதாரச் சீர்திருத் தங்களை, அரசியல் வாதிகள், பொருளாதார நிபணர்கள், (Chartered Accountants) ஆகி யோர் அடங்கிய குழுவில் விவாதித்திருக் கிறார்கள். நமது நாட்டில் தற்போது 17% வணிகம் தான் வங்கி வழியே நடப்பதாகவும் மீதி 83% வணிகம் வங்கிகளுக்கு வெளியே நடப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பாபா ராம்தேவின் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டால், அரசின் கடைநிலை ஊழியர் அதிக வரி கட்ட நேரிடும். அதே சமயம் கோடிக்கணக்கில் வருமானம் பெரும் பணக்காரக் கம்பெனிகளும், முத லாளிகளும் வரி கட்டாமல் தப்பித்துக் கொள்ள வழி கிடைக்கும்.

மேலும் வருமான வரி, கலால் வரி போன்றவை தான் மத்திய அரசின் முக்கியமான வருமான ஆதாரங்களாகும். (இதில் ஒரு பகுதியை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குத் தருகிறது) இவற்றை ரத்து செய்துவிட்டால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பெரிய பொருளாதார நெருக் கடிக்கு ஆளாகும். அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருவதற்குக்கூட போதிய பணம் இருக்காது. அரசின் அன்றாடப் பணிகள் கூட முடங்கும் நிலை ஏற்படலாம்.

எப்படி இருப்பினும், தனது வரி விதிப்புச் சீர்திருத்தங்களுக்குப் பிரதமர் வேட்பாளர் மோடியும், பிஜேபியும் நிச்சயம் ஆதரவு அளிக்கும் என்று பாபா ராம்தேவ் நம்புகிறார்.

- பேராசிரியர் சி. ஜம்புநாதன், சென்னை

Read more: http://viduthalai.in/page-2/78268.html#ixzz2y9bnXXup