Search This Blog

2.4.14

சேதுசமுத்திரத்திட்டம் பயனற்ற ஒன்றா?ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

சேதுசமுத்திரத்திட்டம்பயனற்றஒன்றா? அரசியல் காழ்ப்புணர்வோடு முதல் அமைச்சர் குறை கூறலாமா?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!
சேதுசமுத்திரத்திட்டம்பயனற்றஒன்றா?
அரசியல் காழ்ப்புணர்வோடு முதல் அமைச்சர் குறை கூறலாமா?
இத்திட்டத்தால் தமிழ்நாடு அடையும் பயன்களின் பட்டியல் இதோ!
இராமநாதபுரத்தில் மட்டும் காணாமற்போன இராமன் பாலம்!

ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறார் தமிழர் தலைவர்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ஏதோ தோல்வித் திட்டம் என்பதைப் போலவும், சுற்றுச் சூழலுக்கும் மீனவர்களுக்கும், கேடு விளைவிக்கும் திட்டம் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா அம்மை யார் கூறிய குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரங்களுடன் மறுப்புக் கூறி திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாட்டின் முதல் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து அரசியல் நோக்கத்தோடு சிலவற்றைக் கூறியுள்ளார். (29.3.2014)

1) நான் முதல் அமைச்சராக முதன் முதலாக இருந்த சமயத்தில் 1994ஆம் ஆண்டு பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிகள் நிறுவனம் மூலம் சேது சமுத்திரத் திட்டத்துக்கான திட்ட அறிக் கையைத் தயாரிக்க சொன்னேன். இந்த நிறுவனம் இதன் அறிக்கையை 1996ஆம் ஆண்டு அரசுக்குச் சமர்ப்பித்தது என்று கூறியுள்ளார்.

அந்த நிறுவனம் தன் அறிக்கையில் என்ன கூறியது என்று முதல் அமைச்சர் கூறாதது ஏன்? அந்த நிறுவனத்தின் திட்ட அறிக்கை சாதகமாக இருந்த காரணத்தால் தானே 1999, 2001, 2004 ஆகிய தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஏன் இப்பொழுது முரண்பட்டு நிற்கிறார் முதல் அமைச்சர்?

சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுமா?

2) சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்று முதல்வர் சொல்லியுள்ளாரே? இதில் உண்மை உள்ளதா?

நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சார்புப் பொறியியல் ஆய்வு நிலையம் (Neeri  - The National Environmental Engineering Research Institute) என்கிற அமைப்பு  ஆய்வு செய்து, தொழில் நுட்ப ரீதியாக தந்த தகவல்கள் ஒப்புதல் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் தொடர்பாக அவ்வமைப்புக் கூறிய யோசனைகள் அடிப்படையில் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மிக மிக முக்கியமாக மனதில் வைக்க வேண்டிய ஒன்று இந்தத்திட்டம் இப்பகுதியில் தான் அமைக்க வேண்டிய ஒன்று. இது ஒரு  Site Specific Project வேறெங்கும் இதை அமைக்க முடியாது. அதே நேரத்தில் மன்னார் வளை குடாவும், பாக்கடல் பகுதிகளும் மீன் வளமும், இயற்கை வளமும் நிறைந்த பகுதிகள். நாட்டுக்குத் தேவையான, அதே வேளையில் இந்தப்பகுதியில் தான் அமைய வேண்டிய இந்தத்திட்டம் நிறைவேற்றப்படும்பொழுது சுற்றுப்புறச் சூழல் தாக்கம்  சிறிதும் இல்லாமல் அல்லது தாக்கங்களை குறிப்பிடத்தக்க அளவு கூட இல்லாமல் குறைத்து செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை, இதற்காக அரசு எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகள்

1) மன்னார் வளைகுடாவில் ஆதாம் பாலத்தின் ஒரு சிறிய பகுதி தவிர பிற பகுதிகளில் எவ்வித ஆழப்படுத்தும் செயலும் இருக்காது.
2) செலவு கூடுதல் என்றால் கூட, கடல்வழிப்பாதையை மாற்றியமைத்து, அருகில் உள்ள கடல் வாழினத் தேசியப் பூங்காவைச் சேர்ந்த சிங்களத் தீவிலிருந்து, ஆதாம் பாலத்தில் ஆழப்படுத்தப்போகும் பகுதி ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவு.
3) மன்னார் வளைகுடாவில், இயற்கை ஆழம் உள்ள கப்பல் செல்லும் வழித்திட்டம் இத்தீவுகளிலிருந்து குறைந்தது 20 கி.மீ. தொலைவில் அமைத்தல்.
4) ஆழப்படுத்தும் தொழில்நுட்பம் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப அமைத்தல்.
5) தோண்டி எடுக்கப்படும், மணல் கொட்டப்போகும் இடங்கள்


வங்கக்கடலிலும், மன்னார் வளைகுடாவிலும் தகுந்த விஞ்ஞானப் பூர்வமான ஆய்வுகள் நடத்தி, பவளப் பாறைகளுக்கு எந்த ஒரு சிறு தாக்கமும் இல்லாத வகையில் தேர்ந்தெடுக்கப்படும் இவ்விடங்கள் 25-லிருந்து 40 மீட்டர் ஆழம் உள்ள பகுதிகளாகவும், குறைந்தது கடற்கரை யிலிருந்து 25 கி.மீ. தொலைவுள்ளதாகவும் இருக்கும்.
6) தகுந்த ஆய்வுகள் நடத்தி கால்வாய் ஏற்படுவதால் நீரோட்டத்தின் விசை, திசை மாறுமா என்று கண்டறிதல்,
ஆய்வுகள் விசையிலும், திசையிலும் எவ்வித மாறுதல்களும் இருக்காது என்று நிரூபித்துள்ளன.
NEERI gave a clean report on environmental condition/
Supreme court directed the Government of India to appoint another committee. National Institutute of Ocean at Goa under took the survey and also gave a clean report/
Jayalalitha spoke about her State Government report on environmental condition which is not necessary.

மீன்வளம்: கடற்கரை மாவட்டங்களில் நடைபெற்ற பல கூட்டங்களில் கலந்து கொண்ட மீனவர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மீன்வளம் பாதிக்காது.

பவளப்பாறை: சேதுசமுத்திரக் கால்வாய் அருகில்  21 தீவுகள் உள்ளன. அதில் மிக  அருகில் உள்ளது ஷிங்கிலி (Shingley) தீவு. அந்தத் தீவுக்கருகில் பவளப்பாறைகள் பாதுகாப்பாகவும், வளமாகவும் உள்ளன. மேலும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு உள்ளேயே இப்போதும் பவளப்பாறைகள் நலமாகவும், வளமாகவும் உள்ளன.

கப்பல் போக்குவரத்து: உலகில் தற்போதுள்ள கப்பல்களில் 82 சதவீதம் கப்பல்கள் சேதுக்கால்வாயில் போகலாம் -  போகின்றன.
Coastal Community Development: சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டச்செலவில் 2 சதவீதம் கடற்கரை ஓரத்தில் வாழும் மக்கள் நலவளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. படகு இயந்திரப் பராமரிப்பு போன்ற வேலை அங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.

3) சென்னை அய்.அய்.டி. பேராசிரியர்கள் கூறியது என்ன?

சென்னை அய்.அய்.டி.யின் கடல் சார் பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் ஆர். சுந்தரவடிவேலு, பேரா சிரியர் எஸ்.பி. சுப்பிரமணியம் ஆகியோர் கூறிய அறிவியல் தகவல்கள் முக்கியமானவை.

இந்தத் தகவலை வெளியிட்டது கூட கல்கி இதழ்தான் (17.6.2007). அந்த நிபுணர்கள் கீழ்க்கண்டவாறு கருத்து களைக் கூறியுள்ளனர்.

சுற்றுச்சூழல் திட்டச் செலவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டே சேது சமுத்திரக் கால்வாய் வெட்டப்படுகிறது. இப்போது அதன் போக்கை மாற்ற வேண்டும் என்பது சரியல்ல; ஏற்கெனவே  அப்பகுதியில் உள்ள பவளப் பாறைகள் பாதிக்கப்படக் கூடாது என்று கால்வாயின் பாதை சிறிது மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் நிறுவனங்கள் திட்டத்திற்கு அனுமதி கொடுத்திருக்கின்றன. உலகளவில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று; பா.ஜ.க. அரசாங்கம் இருந்தபோதே அனுமதி கொடுக் கப்பட்ட திட்டம். இது நிறைவேற்றப்பட்டால் தென் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் சிறந்தோங்கும்
சொல்லுவது கல்கி  கூறுபவர்களோ சென்னை அய்.அய்.டி. கடல் சார் பொறியியல்  துறைத் தலைவரும், பேராசிரியரும் என்பது குறிப்பிட்டத்தக்கதாகும்.

சேது சமுத்திர திட்ட சுற்றுச் சூழல் கண்காணிப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ். கண்ணையன் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் (25.4.2007) என்ன கூறினார்?

ராமன் பாலம் என்றழைக்கப்படும் ஆதாம் பாலத்தில் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்துக்கு பாறை மாதிரிகளை ஜியோகெமிக்கல் முறையில் சோதனை செய்தோம்; அதில் கடலில் உள்ள படிமங்கள்தான் உள்ளன. அறிவியல் ரீதியாக ராமன் பாலத்தை எவரும் உருவாக்கியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பாலம் இருக்கும் இடத்திற்குப் பதிலாக வேறு இடத்தில் கால்வாய் தோண்டினால், மன்னார் வளைகுடாப் பகுதியில் இருக்கும் 21 தீவுகளும் அழிந்துவிடும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்தார்.
இவற்றையெல்லாம் புறந்தள்ளிய நிலையில் பச்சோரி குழு சொன்னதை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்க லாமா?

சேதுசமுத்திரத் திட்டம் கூடவே கூடாது. அது செயல்பட்டால் அதன் பலன் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், அத்துறை அமைச்சராகவிருந்து அத்திட்டத்தை வெகு சிறப்பாகச் செயல்படுத்தியதால் அதன் பலன் தி.மு.க.வுக்கும், துறை அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களுக்கும் போய்ச் சேர்ந்து விடுமே என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி  மேலோங்கி நிற்பதால் அதற்குத் தோதாக பச்சோரி குழுவைப் பிடித்துத் தொங்குகிறார்கள் என்பதுதான் உண்மை!

பச்சோரி நிபுணர் குழுகூட திட்டமே கூடாது என்று சொல்லவில்லை - அதிக செலவுகள் பற்றிதான் குறிப் பிட்டுள்ளது. (Economic  Liability)

4) நீதிமன்றம் கூறியது என்ன?

சேது சமுத்திரத் தொடக்க விழாவைத் (2.7.2005) தடுக்க வேண்டும் என்பதற்காக சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். அப்போதைய தலைமை நீதிபதி கீழ்க்கண்ட வாறு கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தைத் தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு வந்து வழக்குத் தொடுத்துள்ளார். சேது சமுத்திரத் திட்டம் நாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடா கடலுக்கு வர வேண்டியுள்ளது. பாக் ஜல சந்தியிலே குறுக்காக கால்வாய் அமைத்தால் பெரும் அளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். ஆகவே விழாவுக்குத் தடை கிடையாது என்று தீர்ப்புக் கூறப்பட்டதே!

(5) மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச் சாற்றையும் இராமநாதபுரம் கூட்டத்தில் முதல் அமைச்சர் வைத்துள்ளாரே? 

இது அடிப்படையற்றது!
1) மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடலுக்குச் சென்று வர தடையின்றி வழி கிடைக்கும்.

2) புதிதாக மீன்பிடித்துறைமுகங்கள் உருவாவதால் அவற்றைச் சார்ந்து குளிர் சாதன சேமிப்புக் கிடங்குகள், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமையும்; அதனால் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

3) கால்வாய்த்திட்டம் அதைச்சார்ந்த மற்ற சிறு திட்டங்கள் ஆகியவற்றில் நேரடி வேலை வாய்ப்பு மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 10 ஆயிரம் பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 50 ஆயிரம் பேர்களுக்கு நேர்முக, மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

4) எந்த ஒரு பகுதியும் தொழில் வளர்ச்சி அடையும் பொழுது, அதனால் உடனடியாக பயன்பெறப்போவது அப்பகுதி மக்கள் தான். அந்த வகையில் சேதுக்கால்வாய்த் திட்டத்தால் கடலோர மாவட்ட மக்கள் பெரிதும் பயன் பெறுவர். இதில் மீனவர்களும் அடங்குவர்.
5) சேது சமுத்திரக்கால்வாய் இந்திய - இலங்கை கடல் எல்லையைச் சார்ந்து அமையப் போவதால், எல்லை தெரியாமல் மீனவர்கள் இலங்கைக் கடல்பகுதியில் சென்று அங்குள்ள கடற்படையினரிடம் அவதிக்குள்ளாகும் நிலை மாறும்.

6) தூத்துக்குடி துறைமுகத்தை எடுத்துக்கொண்டால், அதனால் மிகுந்த பயன் பெற்றவர் மீனவர் இனத்தவர்தான். அங்குள்ள முகவர்களில் பெரும்பாலோர் மீனவ இனத்தைச் சார்ந்தவர்கள் தான். 30 ஆண்டுகளுக்கு முன் முகவர்களாக இருந்தவர்கள் இன்று முதலாளிகளாக இருக்கின்றார்கள். அதைப்போல சேதுக்கால்வாய்த் திட்டத்தால் இன்று சாதாரணமாய் மீன்பிடித் தொழிலில் இருக்கும் கடலோர மாவட்டங்களைச் சார்ந்த பல மீனவர்கள் தொழில் அதிபர்களாய் மாறும் வாய்ப்பு ஏற்படும்.

மேற்கண்ட காரணங்களால் சேதுசமுத்திரத் திட்டத்தால்  மீனவர்கள் வாழ்வு நிச்சயம் மேம்பாடு அடையும்.

(6) இந்தத் திட்டத்தினால் ஏதும் பயன்கள் கிடையாது என்கிறாரே முதல் அமைச்சர்?

2008 இல் 3000 கப்பல்களும், 2025இல் 8000 கப்பல்களும் பயணம் ஆகும். இத்திட்டத்திற்காக செலவு செய்யப்படும் 2427.40 கோடி ரூபாயும் 2017இல் வட்டியும் முதலுமாக வந்து சேரும். கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள துறை முகங்கள் வளர்ச்சி பெறும். தொண்டியில் ரூ.16 கோடி செல வில் சிறு கப்பல்கள் தங்கும் தளம் - முத்துப் பேட்டையில் இரு சிறு மீன் பிடி துறைமுகங்கள், தனுஷ்கோடியில் ரூ.16 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் மீனவர் வளர்ச்சிக்காகச் செலவிடப்படுகிறது.
அ) இந்தியக்கடல் எல்லைக்குள் ஒரு கடல் வழி நெடுஞ்சாலை அமையும்.
ஆ) இந்தியக் கிழக்குக்கடற்கரைத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி

இறக்குமதிச் சரக்குகளின் போக்குவரத்துச் செலவு குறையும். எனவே உலகச் சந்தையில் நம் ஏற்றுமதிப் பொருட்கள் போட்டி போடமுடியும்; இறக்குமதியாகும் கச்சாப் பொருட்களின் விலை குறையும் என்பதால் உற்பத்தியாகும் பொருட்களின் விலை குறையும்.
இ) இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு அடையும், இதனால் எல்லாத் துறைமுகங்களிலும் வேலை வாய்ப்பும், அதைச்சார்ந்த பகுதிகளில் தொழில் உற்பத்தியும் பெருகும்.
ஈ) தமிழகக் கடலோர வணிகமும், பன்னாட்டு வணிகமும் சிறக்கும்; இதனால் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இப்போது இருக்கும் சிறு துறைமுகங்கள் பெருமளவில் வளர்ச்சி அடையும். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும்.
உ) மீனவர்களுக்கு நேரடியாக பயன்படும் வகையில் தூத்துக்குடிக்கும் - நாகப்பட்டினத்திற்கும் இடையில் மீன்பிடி துறைமுகங்கள் தேவைக்கேற்ப உண்டாகும்.
ஊ) தமிழகக் கடலோரப் பகுதிகளில் தொழில் வளர்ச்சி பெருகும். இதனால் பொருளாதார வளர்ச்சி அடையும். புது மீன்பிடி துறைமுகங்களால் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.
எ) மன்னார் வளைகுடாவிலிருந்து பாக்கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதியளிக்கும்.
ஏ) தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பெருகும்.
அய்) இந்தியச் சரக்குகள் அந்நியத் துறைமுகங்களில் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும்.
ஒ) பல்வேறு வகைகளிலும் அந்நியச் செலாவணி மீதமாகும்; அந்நியச் செலாவணி வருவாயும் அதிகரிக்கும்.
(7) இந்தத் திட்டத்தால் 20 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்கள்தான் செல்ல முடியும். 30 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்களை எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள கப்பல்களில் ஒரு சில கப்பல்கள் தான் செல்ல முடியும் என்று கூறியுள்ளரே முதல் அமைச்சர்?
ஆனால் உண்மை நிலை என்ன?
இந்தக்கால்வாய் அமைக்கப்பெற்று கப்பல்கள் செல்லத் துவங்கும் பொழுது 10.7 மீட்டர் மிதவை ஆழத்திற்கு ஏறத்தாழ 50,000 டன்கள் வரை சரக்குகள் கொண்ட கப்பல்கள் ஆண்டிற்கு 2000-த்திலிருந்து 3000 வரை செல்லக்கூடும். இது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6 இல் இருந்து 9 மட்டுமே. இந்த எண்ணிக்கை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கலாம். கால்வாய் 300 மீட்டர் அகலம் இருப்பதால் ஒரே சமயத்தில் கப்பல் செல்வதற்கும், வருவதற்கும் எந்தச் சிரமமும் இருக்காது. மேலும் கால்வாயில் கப்பல்கள் தவிர மீனவர்களின் படகுகளும் செல்ல அனுமதிக்கப்படும்.
(8) பி.ஜே.பி. இத்திட்டத்தை எதிர்ப்பது சரியா?
உண்மையில் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப் பட்டதே வாஜ்பேயி பிரதமராக இருந்த பிஜேபி ஆட்சி யின்போதுதான்! முரளி மனோகர் ஜோஷி, சு. திருநாவுக்கரசர், வேத் பிரகாஷ் கோயல் ஆகியோர் இத்திட்டத்திற்கு ஆதரவாக இருந்து ஒப்புதலும் அளித்தனர்.

1998 செப்டம்பர் 15 அன்று சென்னை கடற்கரையில் ம.தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் - அண்ணா  பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் வாஜ்பேயி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அறிவித்தார்.
1999 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் (பிஜேபி) யஷ்வந்த் சின்கா சேது சமுத்திரத் திட்ட தொடக்க ஆய்வுக்காக ரூ.5 கோடி ஒதுக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9) இராமன் பாலம் பற்றி  முதல் அமைச்சர் பேசாதது ஏன்?

ராமர் பாலம் குறித்து மத்திய அரசு முரண்பாடான தகவல்களைத் தருகிறது. ராமன் பாலத்தைத் தகர்த்து மதக் கலவரங்கள்  ஏற்படுத்த மத்திய அரசு எடுக்கும் முயற்சியைக் கழகம் தடுக்கும் (அதிமுக அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர்.  - 23.10.2008) என்று கூறி அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, ராமநாதபுரத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துப் பேசிய போது, ராமன் பாலம் குறித்துப் பேசாமல் திட்டமிட்டு இருட்டடித்தது ஏன்? காரணம் அத்தொகுதியில் அ.இ.அ.தி.மு.க.வின்  வேட்பாளரே அன்வர் ராஜாவாயிற்றே! முஸ்லீம்கள் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாயிற்றே. அங்கே அதனால் இராமன் பாலம் வாதம் காணாமற் போயிற்றுப் போலும்! என்ன தந்திரம்! இதெல்லாம் மக்களிடத்தில் எடுபடப் போவதில்லை.
தமிழ்நாட்டு மக்கள் 150 ஆண்டு காலமாக எதிர்பார்க்கும் ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்வோடும், ராமன் பெயரைச் சொல்லியும் தடுத்திடும் அ.இ.அ.தி.மு.க.வையும் இந்துத்துவா கண் கொண்டு பார்த்து ராமர் பாலத்தைத் தகர்க்கக் கூடாது என்று கூறி, திட்டத்தை முடக்கும் பி.ஜே.பி. அதற்குத் துணைபோகும் கூட்டணிக் கட்சிகளையும் தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள் அடையாளம் கண்டு நடக்கவிருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் தக்கப் பாடம் கற்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-----------------------------------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்-31-03-2014

சேது சமுத்திரத்திட்டம் : சில முக்கிய குறிப்புகள்

சுற்றுப்புறச்சூழலுக்கு பாதுகாப்பானதாக அமையும் விதத்தில் சேது சமுத்திரத்திட்டம் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசின் தரைவழிப் போக்குவரத்துத்துறை  அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த பல ஆய்வாளர்களின் ஆலோசனையைக் கேட்டு அறிந்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்த தேவையான ஆய்வை மேற்கொள்ள அனுமதியளித்தார். 2001-ஆம் ஆண்டு அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் சேதுசமுத்திரத் திட்டமும் இடம்பெற்றிருந்தது. இத்திட்டத் தின்படி கோதண்டராமசாமி கோவில் பகுதியில் துவங்கி ஆதம் பாலம் எனப்படும் மணல்மேடுகளை அகற்றலாம் என்ற சுற்றுப்புறச்சூழல் அனுமதியும் கிடைத்தது. 2002 மே மாதம் கலைஞர்  அவர்கள் அப்போதைய பாஜக பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களுக்கு கடிதம் எழுதி சேது சமுத்திரத்திட்டத்தை தாமதமின்றி விரைவில் நிறைவேற்றிட வேண்டுகோள் விடுத்தார். ஜூலை 2002ஆம் ஆண்டு கப்பல்துறை அமைச்சர் வி.பி. கோயல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகைதந்து சேதுசமுத்திரத்திட்டம் பற்றியும், அதனால் விளையும் நன்மைகள் குறித்த அறிக்கைகள்பற்றி அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.


2002  அக்டோபர் 15 ஆம் தேதி கலைஞர் மீண்டும் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி சேதுசமுத்திரத்திட்டத்தை விரைந்து முடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 2002 ஆம் ஆண்டு அக்டோபர்  29 அன்று கப்பல்துறை அமைச்சர் வி.பி.கோயலுக்கு மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் சேதுசமுத்திரத்திட்டம் குறித்து விரிவான விளக்கம் ஒன்றை அளித்தார்.  2005ஆம் ஆண்டு மார்ச் 31 தேசிய சுற்றுப்புறப்பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கிடைத்தது. அதன் பிறகு மன்மோகன் சிங் தலைமையிலான யுபிஏ அரசில் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக டி.ஆர்.பாலு பதவியேற்றார். அதன் பிறகு கலைஞரின் விடா முயற்சியால் சேது சமுத்திரத்திட்டத்திற்கு 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2427.4 கோடி ரூ. மதிப்பில் திட்டம் துவங்க நிதி ஒதுக்கப்பட்டது. இதனிடையே தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரை தமிழ் நாட்டின் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சேது சமுத்திரத்திட்டத்தைப் பற்றி அவர்களின் ஆலோசனை களைக் கேட்டு அறிந்துகொண்டது.

2004 டிசம்பர் 6 ஆம் தேதி சேது சமுத்திர கால்வாய்த் திட்ட நிறுவனம் அமைக்கப்பட்டது.  இதன் துவக்கவிழா மதுரையில் 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி நடைபெற்றது. துவக்கவிழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கலைஞர்,  டி.ஆர்.பாலு, பி.சிதம்பரம் போன்றோர் கலந்து கொண்டனர்.  ஆதம் பாலம் எனப்படும் மணல் திட்டுக்களைத் தோண்டும் பணி 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 12இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுற்றுப்புறச்சூழல் அமைப்பின் அறிக்கை மற்றும் நாட்டு நலன் கருதி அரசு எடுத்த நடவடிக்கையை தடைசெய்ய முடியாது என்று கூறி சேதுசமுத்திரத்திட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

2005ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி இந்திய அரசு சேது சமுத்திரத்திட்டத்தை விரைந்து முடிக்கும் வகையில் கண்காணிப்புக் குழு ஒன்றை நியமித்தது. இதன் அடிப்படையில் பணிகள் சுமூகமாக நடைபெற்றுக்கொண்டு இருந்தன.
2007ஆம் ஆண்டு சென்னை பல்கலைகழகத் துணைவேந்தர் இராமச்சந்திரன் தலைமையில் 19 பேராசிரியர்கள் கொண்ட நாக்பூர் தேசிய சுற்றுச் சார்புப் பொறியியல் ஆய்வு நிலையம்  (Neeri) உயிர்வள ஆய்வு மய்யம் (Zoological Survey of  India) அகழ்வாராய்ச்சி மய்யம், (Archaelogical Survey of India) சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணசாமி போன்றோர் இந்தக் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றனர்.

பாரதீய ஜனதா கட்சி இந்தத் திட்டத்தை ஆரம்பத்தில் முழு ஆதரவு தந்து பிறகு மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிக்கு இணங்கி, சேது சமுத்திரத் திட்டம் என்பது இராமர் இலங்கைக்குச் சென்ற போது கட்டிய பாலம்;  இது இந்துக்களின் புனித சின்னங்களுள் ஒன்றாகும். இதை இடித்து சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரக்கூடாது என்று கூறி சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, தண்டி சுவாமி வித்யானந்தா பாரதி, ராமகோபாலன் போன்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.  திட்டம் ஆரம்பித்து நடந்து கொண்டு இருந்த போது உச்ச நீதிமன்றம் 2007ஆஆம் ஆண்டு ஆகஸ்ட் 31  அன்று சேதுசமுத்திரத்திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தது.

பிரபல வரலாற்று ஆய்வாளர்கள் வின்சென்ட் ஏ சுமித், ஆர்.சத்யநாதய்யர் ரோமில தாப்பர் போன்றோர் சேதுசமுத்திரத்திற்கும் இராமாயணத்திற்கும் உள்ள கதையை பொய் என தங்களின் ஆய்வுகளின் மூலம் நிரூபித்துவிட்டனர். மேலும் இராமாயணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி இல்லை; அது  ஒரு புனைவுக்கதை என்பது அனைவரும் அறிந்ததே, அதே போல் இலங்கை தலைமன்னார் நிர்வாகமும் ஆதம் மணல்மேட்டை இராமர் கட்டிய பாலம் என்பதை மறுத்து இது இயற்கையாக அமைந்த மணல் திட்டு என்று கூறிவிட்டது.   125 வருடங்களுக்கு முன்பு டச்சுப் பேராசிரியர்கள் ஆதம் மணல் மேடுகளை ஆராய்ந்து தங்கள் ஆய் வறிக்கையை ஜெர்மன் மொழியில் 1891ஆம் ஆண்டு பாக் நீரிணைப்பில் உள்ள ஆதம் மேடுகளும், பவளப் பாறைகளும்  என்ற தலைப்பில் நூலாக (Adam’s Bridge and Coral Reef of the Palk Strait) வெளியிட்டுள்ளனர்.
                   --------------------------------------”விடுதலை” 31-03-2014

Read more: http://viduthalai.in/page-3/77909.html#ixzz2xajarE00

54 comments:

தமிழ் ஓவியா said...

16ஆவது மக்களவைத் தேர்தல் மதவெறி, ஜாதி வெறி அணிக்கும் - மதச்சார்பின்மை, சமூகநீதி அணிக்குமிடையே நடக்கும் போராட்டம்!

16ஆவது மக்களவைத் தேர்தல் மதவெறி, ஜாதி வெறி அணிக்கும் - மதச்சார்பின்மை, சமூகநீதி அணிக்குமிடையே நடக்கும் போராட்டம்!

முக்கடல் சங்கமிக்கும் குமரியில் ஜனநாயக முற்போக்கு அணிக்கு வெற்றிக் கணக்கைத் தொடங்கிக் கொடுப்பீர்!

மார்த்தாண்டத்தில் தமிழர் தலைவர் தந்த மகத்தான குரல்!

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் எப்.எம். ராஜரத்தினத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (நாகர்கோவில் 31.03.2014)

மார்த்தாண்டம், ஏப்.1- மதவெறி ஜாதிவெறியைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு இருக்கும் அணி யினை வீழ்த்தி, மதச் சார்பின்மை, சமூகநீதி இவற்றை முன்னிறுத்தித் தேர்தல் களத்தில் கலைஞர் தலைமையில் இருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வெற்றியடையச் செய்வீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மார்த்தாண்டத்தில் நேற்று அவர் உரையாற்றியதாவது:

தமிழ் ஓவியா said...

இப்பொழுது நடைபெறுகின்ற 16ஆவது மக்களவைத் தேர்தல் என்பது இருக்கிறதே, இது குமரி தொடங்கி காஷ்மீர் வரையிலே நடக்கின்ற தேர்தல். இந்த தேர்தல் என்பது முன்பு நடந்த தேர்தலுக்கு மாறுபட்ட, வேறுபட்ட ஒன்றாகும். நடைபெற்ற தேர்தல்களில், பல நேரங்களில் வெளிப்படையாக அரசியல் அமைப்புகள் நேரடியாகப் போராடுவார்கள். குமரி மாவட்டத்தில்கூட அரசியல் கட்சிகளுக்கு இடையேதான் போராட்டம் நடைபெறும்.

இப்பொழுது நடைபெறக் கூடிய தேர்தல் என்பது ஜாதி வெறிக்கும், மதவெறிக்கும் எதிராக, மதச் சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றை முன்னிறுத்தி நடக்கும் போராட் டமே இத்தேர்தல்!

ஆர்.எஸ்.எஸின் கருவி - மோடி

இதற்கு முன்பு பா.ஜ.க. தேர்தலில் போட்டியிட்டால், ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இருக்கும்; அரசியல் வடிவமாகத்தான் பா.ஜ.க. முன்பெல்லாம் இருக்கும். பிஜேபியில் அத்வானி, வாஜ்பேயி இருந்தார்கள். ஆனால், இந்தத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். பின்னால் இருக்கப் போவ தில்லை. நாங்கள்தான் இந்த தேர்தலை நடத்தப் போகிறோம் என்று ஆர்.எஸ்.எஸ். தேடி கண்டுபிடித்த வேட்பாளர்தான் மோடி - ஆர்.எஸ்.எஸின் கருவிதான் மோடி!

பி.ஜே.பி.யில் இப்பொழுது மூத்த தலைவர்கள் எல்லாம் வெளியேறி விட்டார்கள்;

ஆர்.எஸ்.எஸ். மோடியைத்தான் கருவியாக நிறுத்தி செயல்படுத்தி வருகிறது. இது வெளிப்படையான பா.ஜ.க.வின் திட்டம். இன்னொன்று மறைமுக திட்டம். அது அதிமுகவின் ஜெயலலிதா அம்மையாரின் அணி (Team).

அதனால்தான் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பேசுகிற பொழுது காங்கிரஸை விமர்சித்துப் பேசுவார். ஜெயலலிதாவைப்பற்றி மட்டும் பேச மாட்டார்.

அம்மையார் ஜெயலலிதா பேசும்பொழுதுகூட, பி.ஜே.பி. பற்றியோ, நரேந்திரமோடியை பற்றியோ பேச மாட்டார். அவரும் காங்கிரஸ் ஆட்சியின் விலைவாசி ஏற்றம், ஊழல் போன்றவற்றை மட்டும் பேசிவிட்டு செல்வார்.

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாட்களில் நாற்பதும் நமதே நான்தான் பிரதமர் என்று சொல்லிய அம்மையார் இன்று பல்டி அடித்து, தோற்று விடுவோம், பிரதமராக வர முடியாது என்று எண்ணி, மத்தியில் அங்கம் வகிப்போம், என்று கூறுகிறார்.

அப்துல்கலாம் சொல்வார்கள். கனவு காணுங்கள்! கனவு காணுங்கள் என்று சொல்வார்கள்.

தமிழ் ஓவியா said...

அம்மையாரும் அதே போலத்தான் பிரதமர் கனவு கண்டார்; இப்பொழுது உடைந்து சிதைந்து விட்டது. கனவு காணட்டும் அது அவர்களின் உரிமை.

மறைமுகக் கூட்டு

எதற்காக காங்கிரஸை விமர்சிக்கிறார்? மறைமுகமாக மோடியை ஆதரிக்கத்தான். ஆகவே, மோடி தலைமையில் வெளிப்படையாக உள்ள அணி ‘A’ அணி, ஜெயலலலிதா அம்மையார் தலைமையில் உள்ள அதிமுக அணி ‘B’ அணி என்னும் மறைமுக அணி!

தேர்தலில் 6 பேர் 7 பேர் நிற்கலாம் அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. இந்த இரண்டு அணியும், இரண்டு வகையில் பார்த்தால் ஜாதி, மதவெறியை பெரியார் பிறந்த மண்ணில், அண்ணா, கலைஞர், காமராசர் ஆண்ட மண்ணில் விதைக்க நினைக்கும் அணி.

ஆனால், டாக்டர் கலைஞர் தலைமையில் உள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஜாதி வெறி, மதவெறிகளை ஒழித்து மனிதநேயம், சகோதரத்துவம் படைக்கும் அணி! சமூக நீதி காக்கும் அணி!

தமிழ் ஓவியா said...

ஜனநாயகம் என்றால் என்ன?

பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மையினர் என அனைவரும் சமநிலையில் வாழ வைக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஆளட்டும்; சிறுபான்மையினர் சுயமரியாதையோடு வாழட்டும்! என்று கூறுவதுதான் கலைஞர் தலைமையிலான அணி!

பெரியார் கண்ணாடி - நுண்ணாடி!

மூன்று முறை நாட்டிலே தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 4ஆவது முறையும் சோதனை வந்துவிடுமோ? தடை செய்து விடுவார்களோ? என்று எண்ணித்தான் தேடி தேடி மோடியைக் கண்டுபிடித்து நிறுத்தியிருக்கிறார்கள். இதை சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் தெரியாது. பெரியார் கண்ணாடி எனும் நுண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால் மட்டும் தெரியும்.

மோடி அலையா? வலையா?

தமிழ்நாட்டில் 2 சதவிகிதம்கூட பா.ஜ.க.விற்கு ஓட்டு கிடையாது. யாரைப் பிடித்தால் தமிழ்நாட்டில் வரலாம் என்ற ஆசையில், மோடி அலைந்து திரிந்தபோது, யார் யாரெல்லாம் இங்கு பதவி - பசிக்காக உள்ளார்களோ அவர்களை தேடிப் பார்த்து கூட்டணி அமைத்துள்ளார். இதன் மூலம் என்ன தெரிகிறது? மோடி அலை வீசவில்லை.

செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட பொழுதுகூட மோடி அலை வீசுகிறது என்று சொல்கிறார்களே, என்ன என்று கேட்டார்கள். நான் சொன்னேன்.

அது மோடி அலை அல்ல. மோடி அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார். ஊர் ஊராக. ஆகவே அது அலை அல்ல, விரிக்கும் வலை! அவர் வலை விரித்துக் கொண்டிருக்கிறார்!

கொள்கை அணி

டாக்டர் கலைஞர் தலைமையில் உள்ள அணி, சமூக நீதி அணி, அருந்ததியர் இடஒதுக்கீடு அணி, இஸ்லாமிய மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் உருவாக்கிய அணி! அனைவருக்கும் அனைத்தும் எனும் சமதர்மம் உடைய அணி, கொள்கைக்காக உள்ள ஒரே அணி - திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் உள்ள அணி. மதவாதத்தை எதிர்க்கின்ற அணி! இவர்களின் நோக்கம் மதவாதம், ஜாதிவாதம் வரக்கூடாது என்று பாடுபடும் அணிதான்.

முடிந்தது பி.ஜே.பி.

இங்கே தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தவுடன் பல கட்சிகளுக்கு அல்வா கிடைக்கும்.

14.03.2014 தினமலர் ஏட்டில் வந்த ஒரு செய்தி; நாங்கள் சொல்லவில்லை. அவர்களை ஆதரிக்கும் ஏடே சொல்கிறது கேளுங்கள்!

லோக் சபா தேர்தலுக்காக பா.ஜ.க. அணி சார்பில் டெல்லியில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் இன்னும் மற்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், அத்வானியும் கலந்து கொண்டார். அங்கு உள்ள ஒரு அதிகாரி அத்வானியிடம் நாடாளுமன்றத் தேர்தல் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டவுடன் அத்வானி எனக்கு இங்கு ஜிலேபி கொடுத்தார்கள். நல்ல டேஸ்ட்டாக இருந்தது சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்றார்.

அத்வானிக்கு -டில்லி அரசியலில் ஜிலேபி! எனவே டில்லி, அரசியல் ஜிலேபி கொடுக்கும் அரசியல். தமிழ்நாட்டு அரசியல் அல்வா கொடுக்கும் அரசியலாக இருந்து வருகிறது.

அல்வா - ஜிலேபி - பிஜேபி........

பி.ஜே.பிக்கு இங்கே (தமிழ்நாட்டில்) அல்வா

அங்கே (டில்லியில்) ஜிலேபி முடிந்தது பி.ஜே.பி!



ஜெயலலிதா அம்மையார் நீக்குவாரா?

கலைஞர் கட்டினார் சட்டசபை, கலைஞர் கட்டினார் அண்ணா நூற்றாண்டு நூலகம். எனவே, அதை மாற்றுவேன் என்று சொல்லும் அம்மையார். கலைஞர் மினி பஸ் (சிற்றுந்து) என்று பேருந்திற்கு பெயர் வைத்தார் என்பதற்காக மாற்றி ஸ்மால் பஸ் என்று வைத்துள்ளாரே. அப்படியானால் அகராதியில் இருந்து (டிக்ஸனரி) மினி என்பதை நீக்குவாரா? குமரி மாவட்ட மக்கள் அதிகம் படித்தவர்கள்; அவர்களுக்கு நாங்கள் அதிகமாகத் கூறத் தேவையில்லை. இங்கே இரண்டு புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றை வாங்கிப் படியுங்கள். சிந்தியுங்கள் வாக்களியுங்கள்.

நீங்கள் ஓட்டு போடும் போது ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டுப் போட்டால், இங்கு உள்ள கன்னியாகுமரி தொகுதியில் உள்ள தி.மு.க. வேட்பாளர் எப்.எம்.இராஜரத்தினம் வெற்றி பெறுவார்.

நீங்கள் பொத் தானை அழுத்தினால், வெளிச்சம் வரும். அந்த வெளிச்சம் 5 ஆண்டுகள் வெளிச்சமாக இருக்க வேண்டாமா? முக்கடல் சந்திக்கும் குமரியில் வெற்றியைத் துவக்கிக் கொடுங்கள்- அது காஷ்மீர்வரை எதிரொலிக்கட்டும்! திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அய்க்கிய முற்போக்கு குறித்தெல்லாம் பல செய்திகளை ஆதாரப் பூர்வமாக எடுத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

Read more: http://viduthalai.in/e-paper/77931.html#ixzz2xgdOw2dq

தமிழ் ஓவியா said...


எலி - தவளை - பருந்து கூட்டணி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் பா.ம.க.வும் இடம் பெற்றிருந்தாலும் கூட்டணிக்குள் இவர் களிடையே இன்னொரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தேர்தல் பிரச்சாரத்துக்குப் போக முடியாது என்று தைலாபுரம் தோட் டத்தில் உடல் நலமில்லை என்று கூறிப் படுத்துக் கொண்டு விட்டார் மருத்துவர் ராமதாசு.

வானூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா பேசும்போது, பா.ம.க.,வைப் பற்றியோ, மருத்துவர் ராமதாசைப் பற்றியே டாக்டர் அன்புமணி ராம தாசைப் பற்றியோ ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையாம். பா.ம.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று கூடச் சொல்ல வில்லையாம். இதனால் பா.ம.க.வினர் முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டனராம்.

தேர்தலில் ஆதரவு கோரி பா.ஜ.க. வினர் எங்களை முறைப்படி அணுக வில்லை என்று கூறி கோவை பா.ம.க. வினர் தேர்தல் பணி புறக்கணிப்பை அறி வித்தனர் என்பது இன்னொன்று இந்த செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளது.

மதிமுக கொடி மருந்துக்கும்கூட கிடையாதாம்! இப்படி இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA).

எலி, தவளை - பருந்து கூட்டணி என்று நாம கரணம் சூட்டலாம் இந்த அணிக்கு.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நெடி ஏறலாம். ஒருவர் காலை இன்னொ ருவர் வாருவார் என்று எதிர்பார்க்கலாம்.

கொள்கையில் அப்பட்டமான முரண் பாடுகள் கொண்ட கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால் இந்தப் பரிதாப நிலைதான்!

Read more: http://viduthalai.in/e-paper/77933.html#ixzz2xgdoLdWC

தமிழ் ஓவியா said...

மோடியைத் தாக்கும் உமாபாரதி

ஜான்சி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக தரப்பில் களமி றங்கும் உமா பாரதி தனது ஆதர வாளர்களுடன் தேர்தல் பணிகள் பற்றி உரையாற்றினார். அப்போது மோடியை குறிப்பிட்டு கூறியதாவது பாஜகவின் புகழ், வாஜ்பாய் காலத்துடனேயே முடிந்து விட்டது. தற்போது மக்களை கூட்டி ஊடகங்கள் மூலம் தனக்கு ஆதரவு உண்டு என நிருபிக்கத்தான் பாஜக தலைவர்கள் முயற்சிக்கிறார்களே தவிர, கட்சியின் எதிர்காலம் மற்றும் நாட்டு நலன் குறித்த அக்கறை ஏதுவும் முன்வைக்கவில்லை என்று கூறினார்.

மோடி அரசியல் மேடைக்குத் தகுதியான பேச்சாளர் அல்ல, மக்கள் அவரது உரையைக் கேட்கக் கூடுகிறார்கள் என்பதை யாராலும் ஏற்கமுடியாது, மக்கள் கட்சியினரால் பல்வேறு வாக் குறுதிகள் கொடுக்கப்பட்டு பொதுக் கூட்டத்திற்கு அழைத்து வரப்படு கிறார்கள், ஆனால் அந்த மக்க ளுக்கு தேவையானவற்றை மோடி யால் செய்ய முடியாது, வாஜ்பாய் தலைமையில் இருந்த பாஜக தற்போது இல்லை, அவரைப் போன்று சிறந்த தலைவர்களும் இன்று பாஜகவில் கிடையாது என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். கோட்டைக்குள் குத்து வெட்டு என்பார்களே அது இது தானோ!

Read more: http://viduthalai.in/e-paper/77932.html#ixzz2xge5AISn

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


எதற்குத் தெரியுமா?

சு.சாமி தலைமையில் பி.ஜே.பி. ஒரு குழுவை அமைத்துள்ளது. எதற்குத் தெரியுமா? தேர்தலின் போது இந்தக் குழு ஆலோசனை களைக் கூறுமாம். சு.சாமி எப்படிப் பட்ட யோசனைகளைச் சொல்லு வார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சேது சமுத்திரத் திட்டம் பற்றி யும், ஈழத் தமிழர் பற்றியும் இவர் உளறிக் கொட்டுவது ஒன்று போதும் - மக்கள் அள்ளிப் போடுவார்கள் மண்ணை!

குல்லாயில் துடைப்பம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்; அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் போட்டிப் போட இருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னம் துடைப்பம் (விளக்கமாறு) அந்தச் சின்னம் பொறிக்கப்பட் டுள்ள குல்லாய்களை அக்கட்சி யினர் அணிந்து வருகிறார்கள். நெற்றியில் திருநீறுபூசிக் கொண்டே துடைப்பம் படம் உள்ள குல்லாவை அணிந்து வருகிறார்களாம் - அது திருநீறை அவமதிக்கிறதாம்; இப்படி வருகின்றவர்களை வாரணாசி விசுவநாதன் கோயிலுக்குள் அனு மதிக்க முடியாது என்று கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் கண்டிப் பாகக் கூறுகிறார்களாம். வேண்டுமா னால் சட்டையில் துடைப்பச் சின்னத்தை பொறித்துக் கொள்ள லாமாம். அப்பொழுது மட்டும் துடைப்பத்தோடு கோயிலுக்குள் சென்றால் அந்தக் கடவுளை அவமதித்தது ஆகாதா? கடவுள்தான் தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் என்கிறார்களே - துடைப்பத்தில் இருக்க மாட்டார்களா? என்கிற கேள்விகள் எல்லாம் அலை அலை யாகப் புறப்படும்; அவற்றிற்கெல் லாம் பதில் உண்டா?
தேர்தல் ஜன்னியில் எதையா வது உளறிக் கொண்டு இருப்பது என்று முடிவுக்கு வந்து விட்டார்கள் போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/77932.html#ixzz2xgeDW2hR

தமிழ் ஓவியா said...

இலக்கிய மேடை, அரசியல் மேடையான அநாகரிகம்!

சென்னை சைதாப்பேட்டையில் ஆதாரம் அமைப்பு சார்பில் இந்தியாவைக் காக்க இலக்கியவாதிகள் என்ற இலக்கியக் கூட்டம் கடந்த ஞாயிறன்று நடை பெற் றுள்ளது.

இந்த நிகழ்வில் தென் சென்னைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளர் இல. கணேசன், இலக்கியவாதிகள் முத்துக் கண்ணன், ஏர்வாடி இராதாகிருஷ்ணன், முனைவர் அவ்வை நடராசன் முதலியோர் பங்கு கொண்டுள்ளனர்.

காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்ற தலைப்பிட்டு தினமணி (31.3.2014 பக்கம் 6) 5 பத்தியில் செய்தியை வெளியிட்டது.

அது அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியக் கூட்டம்; அந்தக் கூட்டத்தில் பிஜேபியைச் சேர்ந்த இல. கணேசன் வாள் என்ன பேசியிருக்கிறார்?

காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் விரக்தியில் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட நரேந்திரமோடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மோசமாக பேசியுள்ளார்.

இது மக்கள் மத்தியில் மோடிக்கு மேலும் ஆதரவை அதிகரிக்கும். முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு தரவில்லை என ப. சிதம்பரம் கூறியிருப்பது - மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான்; தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அப்படி வெற்றி பெற்றால் ராஜ்நாத் சிங் கூறியதுபோல, ஆட்சி அமைப்பதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேமுதிகவும், பா.ம.க.வும் ஒற்றுமையாகத் தான் உள்ளன. சேலம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதும் அதன் வெளிப்பாடு தான்.

உடல் நலம் சரியில்லாததால் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் மகிழ்ச்சியாகத்தான் உள்ளார் - என்று பிஜேபியைச் சேர்ந்த திரு. இல. கணேசன் பேசியுள்ளார்.

நினைவு கொள்ளுங்கள், நடைபெற்ற நிகழ்ச்சியோ இலக்கியத் தொடர்புடையது;

அரசியலுக்கு அப்பாற்பட்டது. அத்தகு கூட்டத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கியவாதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தாம் சார்ந்த கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய அந்தமேடையைப் பயன்படுத்திக் கொண்டது அரசியல் நாகரிகமா? அல்லது அருவருப்பின் அடையாளமா?

இந்தப் பிஜேபியினர் தார்மீகம், பண்பாடு பற்றி யெல்லாம் பலபட பரக்கப் பரக்கப் பேசக் கூடியவர்கள் தாம். இவை எல்லாம் ஊருக்குத்தான் உபதேசமாக இருக்குமே தவிர, தங்களுக்கென்று வருகிறபோது அவையெல்லாம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும்.

காரணம் இவர்கள் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மவாதிகள் ஆயிற்றே! அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? என்ற ஒரு பழமொழி உண்டு.

தமிழ் ஓவியா said...


இலக்கிய வட்டத்துக்குள் இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு வேலை என்ன? இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளவர்கள் வேண்டுமென்றே தான் இல. கணேசன் பெயரைத் திணித்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாதா இது தேர்தல் நேரம் - அரசியல்வாதிகளை அழைத்தால் இலக்கிய வட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் விளையாட்டில் ஈடுபடுவார்கள் என்று?

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை பொது மக்கள் பொதுவாக என்ன நினைக்கக்கூடும்? பி.ஜே.பி.யோடு சம்பந்தப்படுத்தித் தானே பார்ப்பார்கள்?

பிஜேபியைச் சேர்ந்த (அவர் ஒரு வேட்பாளரும் கூட!) இல. கணேசனுக்கு அந்த இலக்கியவாதிகளால் பதில் சொல்ல முடியுமா? அப்படி பதில் சொல்ல ஆரம் பித்தால் அந்த மேடையின் நிலை என்ன? ஏற்பாட்டா ளர்களின் நிலை என்னாகும்? பார்வையாளர்கள் பகுதியும் இரண்டுப்பட்டு படுமோதல் வெடிக்காதா?

அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட இலக்கிய வாதிகளுக்கு இது ஓர் அனுபவமாகக்கூட இருக்கலாம்; எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் யார்? அவர்களின் தன்மை என்ன? யார் யார் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதையெல்லாம் முன்ன தாகத் தெரிந்துகொள்வது நல்லது. அப்படி இல்லாமல் யார் கூப்பிட்டாலும் போய் விடுவது என்ற நிலைப் பாட்டைக் கொண்டால் அவர்களுக்குத்தான் தர்ம சங்கடமும், அவப் பெயரும் ஏற்படும்.

தினமணி ஏட்டுக்காவது ஓர் இங்கிதம் இருக்க வேண்டாமா? இலக்கிய விழாவில் ஓர் அரசியல் வாதியின் பேச்சை மட்டும் அய்ந்து பத்தி தலைப்புப் போட்டு, அவர் பேச்சை மட்டுமே வெளியிட்ட தன்மைக்கு புத்திக்குப் பொருள் என்ன?

தினமணி என்பது பிஜேபிக்கு அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படும் ஒரு மேடையாக ஆகிவிட்டது என்றே மற்ற கட்சி அரசியல்வாதிகளும், பொதுவாக பொது மக்களும் தெரிந்து கொள்வார்களாக!

பார்ப்பனர்கள் பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடிப்பதில் எந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடுவதில்லையே, இதனைப் பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிஜேபியின் வெற்றி என்பது பார்ப்பனர்களின் வெற்றி, அவர்களின் ஆதிக்கத்துக்கான முழு முயற்சி என்பதை வாக்காளர்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் உணர்வார்களா?

தமிழ் ஓவியா said...


மோடிக்கு சவால் விடும் மத்தியப் பிரதேச மோர்ச்சா

போபால், ஏப்ரல்.1- நாட்டின் இதயப் பகுதியாகிய மத்திய பிரதேசத்தில் பாஜக வுக்கு, மோடிக்கு சவாலாக மத்தியப் பிரதேச மோர்ச்சா என்கிற அமைப்பு உருவாகி உள்ளது. பாஜகவிலிருந்து அக்கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தவர்களால் ஒருங்கிணைக்கப் பட்ட ஓர் அமைப்பாக மத்தியப் பிரதேச மோர்ச்சா உருவாகிறது. சத்தீஸ்கர் அல்லது குஜராத் போலன்றி மோடியின் எதிர்ப் பாளர்கள் அணி மத்தியப்பிரதேசத்தில் வலிமையாக உள்ளது.

மும்முறை வெற்றிபெற்ற முதல்வ ரான சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமை யிலான ஆட்சியின்மூலம் கட்சிக்கு வலிமையும் இருப்பதாக சொல்லப்பட் டாலும், கட்சியில் அதிருப்தியாளர்கள் பிரிவு உருவாவதை தவிர்க்க முடிய வில்லை. ஜான்சி தொகுதியில் போட்டி யிட்ட உமாபாரதி, பாதுகாப்பான தொகு தியாகக் கருதி போபாலில் போட்டியிட விரும்பிய அத்வானி, அவரைத் தொடர்ந்து கட்சி மூத்தத் தலைவரான சுஷ்மாசுவராஜ் ஜான்சியில் போட்டியிட விரும்புகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர்கள்நிலை குறித்து கூறும்போது, சவுகானுக்கு முழு ஆதரவாக இருப்பினும், மோடி எதிர்ப்புத் தோற்றம் தெரியாதவாறு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

சுஷ்மாசுவராஜ் துணைப்பிரதமர் என்று பேசி தலைப்புச்செய்திகளில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திர பட்வா அவர்மட்டுமே கட்சித் தொண்டர்களை விழிப்புணர்வுடன் ஒருங்கிணைப்பதாகக் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, விடிஷா தொகுதியில் வரலாற்றில் வாஜ்பாய், சவுகான் மற்றும் பலரும் தொடர்ந்து வெற்றிபெற்று, உயர் பதவிகளை அடைந் ததாலும், முதல்வராகவும், இப்போதும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்ப தால் சுஷ்மாசுவராஜ் துணைப் பிரதம ராகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறினேன் என்றார்.

எப்படியானாலும், கட்சியால் சுஷ்மா சுவராஜ் துணைப் பிரதமராக ஆக்கப் பட்டாலும், ஆக்கப்படா விட்டாலும், கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாத தலைவரா வார். அவர் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளையும் நன்கு செய்துள்ளார். இவை யாவும் அவருக்கு சாதகமாக உள்ளன.

அம்மாநில பாஜகவின் தலைவர் ஒருவர் கூறுகையில் மோடி கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்படுவதற்கு முன்னதாக சவுகான் டிவிட்டரில் வெளியிட்ட தகவல் குறித்து தன் கருத்தை சுஷ்மாசுவராஜ் வெளியிட் டது மட்டுமே எதிராகி உள்ளது.

பாஜகவில் தங்களைத் தாங்களே தலைவர்களாகக் கருதிக்கொள்பவர்கள் இருக்கின்றபடியால், கட்சியைச் சேர்ந்த தொண்டர்கூட மிகவும் கவனமாகவே தேர்தலையொட்டிப் பேச வேண்டி உள்ளது. ஒன்றுபட்டு இருப்பதான தோற் றத்தையும் அளிப்பது அவசியமாகிறது.

பாஜக மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, போபாலில் அத் வானி போட்டியிட்டிருந்தால் மகிழ்ந் திருப்போம். ஆனாலும், அத்வானி ஏன் போபாலில் போட்டியிடவில்லை என்பது குறித்து முடிவு செய்ய அதிகாரம் எனக்கில்லை. பாஜகவின் தேர்தல் குழு வைத்தான் இதுகுறித்து கேட்க வேண் டும் என்றார். போபால் உள்ளுர் பாஜக தலைவர் மாநிலத்தில் கட்சியினரை ஒருங்கிணைப் பதில் முனைப்பும், முயற்சியும் இல் லாததாலேயே மத்திய பிரதேச மோர்ச்சா அமைதியான வழியில் தன் பணியைத் தொடர்கிறது. அதேபோல் மோடியின் படத்தைக் காட்டிலும், போஸ்டர்களில் பெரிய அளவில் முதலமைச்சர் சவுகான், சுஷ்மா சுவராஜ் படங்கள் இடம் பெற் றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பயன்படுத்து வதைப்போல் பிற மதங்களுக்கு எதிரான முழக்கங்கள் மத்தியப்பிரதேசத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. மோடியின் பெயரைப் பயன்படுத்துவதால் மாநிலத் தின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த தகவல்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போதைய போபால் நாடாளுமன்ற உறுப்பினரான கைலாஷ் ஜோஷி மூத்த தலைவரான அத்வானிக்கு பாதுகாப்பான தொகுதி போபால் என்று மாநில பாஜகவால் உருவகம் செய்யப்பட்டது. பாஜக தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு மோடியிடமே மனு போட்டுக் காத்திருப்பது மகிழ்ச்சிக் குரியதல்ல என்றார். மேலும், அத்வானி யிடம் போபாலில் போட்டியிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதையே தானும் விரும்புவதாகவும் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும், கட்சியின் முடிவு அத்வானி காந்திநகரில் போட்டியிடவேண்டும் என்கிறது. பாஜ வின் ஒழுங்கமைந்த தொண்டர்கள் கட்சித் தலைமையை எதிர்க்க முடியுமா? என்றார்.

- தி எகனாமிக் டைம்ஸ் டில்லி பதிப்பு 29-3-2014

Read more: http://viduthalai.in/page-2/77937.html#ixzz2xgf7iUOg

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சி யோக்கியதை?


- குடந்தை கருணா



போலியோ முற்றிலுமாக இந்தி யாவில் ஒழிக்கப்பட்டு விட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக செய்தி வந்துள்ளது. ஆனால், குஜராத் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமுதா யத்தில் 20 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போடப்பட வில்லை என்கிற அதிர்ச்சித் தகவலை நவ்சர்ஜன் டிரஸ்ட் என்கிற மனித உரிமை அமைப்பு, அமெரிக்க நிறு வனமான ஈஸ்ட் வெஸ்ட் நிர்வாக நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஆய்வில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வால்மீகி பிரிவைச் சேர்ந்த தலித் துகளுக்கு இந்த போலியோ தடுப்பு மருந்து தரப்படவில்லை; பெரும் பாலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியிலும், துப்புரவு பணியிலும் இந்த வால்மீகி பிரிவினர்தான் பெரும் பான்மையாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தடுப்பு சக்தி மிகக் குறைந்த நிலையில் இருப்பதால், போலியோ பாதிக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை விழுக்காடு குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளது எனும் தகவலை விக்கிபீடியா இணைய தளம், புள்ளி விவரத்தோடு வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு, 81 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தந்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது என தகவல் தந்துள்ளது. ஆனால், வளர்ச்சி என்றால் குஜராத் தான் என ஊர்தோறும் முழங்கி வரும் மோடி ஆளும் குஜராத்தில் என்ன நிலைமை தெரியுமா? 45 விழுக்காடு மட்டுமே குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரப்பட்டு, 19ஆம் இடத்தில் உள்ளது என விக்கி பீடியா இணைய தளம் புள்ளி விவரம் தந்துள்ளது. போலியோ இல்லாத நாடாக இந்தியா இருக்க வேண்டும் என கோடிக்கணக்கில் மத்திய அரசு செலவு செய்து வரும் நிலையில், குஜராத்தில், தலித் குழந்தைகளுக்கு, போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதற்கு முன் வராத மோடி அரசு தான், வளர்ச்சிக்கு உதாரணமா?

இந்த குஜராத் வளர்ச்சியைத் தான், நம்மூர் பாஜக கம்பெனியில் சேர்ந்திருக் கும் மோடி ஏஜெண்டுகளாக திகழும் வைகோ, விஜயகாந்த், ராம்தாஸ் வர வேற்கின்றனர். எப்படி? போலியோ ஒழிப்பில் முதல் மாநிலமாக திகழும் தமிழ் நாட்டை, 19-ஆம் இடத்தில் இருக்கும் குஜராத் மாநிலம் போல, கீழே தள்ளுவதற்கு, இந்த அணியினர் துடிக்கின்றனர். தமிழ் நாட்டு மக்கள் இவர்களை அடையாளம் கண்டு, கீழே தள்ளுவார்கள் என்பது நிச்சயம்.

Read more: http://viduthalai.in/page-2/77940.html#ixzz2xgfSSc2w

தமிழ் ஓவியா said...


மோடியை மக்கள் ஏற்பார்களா? பேராசிரியர் க.அன்பழகன்


போச்சம்பள்ளி, ஏப். 1- கிருஷ்ணகிரி நாடாளுமன் றத் தொகுதியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சின்ன பில்லப்பாவை ஆதரித்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அரசம்பட்டி யில் பிரச்சாரத்தை தொடங் கிய அவர், வேலம்பட்டி யில் நடந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பேசினார். பின்னர் காவேரிப்பட்ட ணம் பேருந்து நிலையம் அருகேயும் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அரு கிலும் நடந்த தேர்தல் பிரச் சார பொதுக்கூட்டங்களி லும் பேராசிரியர் க.அன்பழ கன் பேசினார்.

தி.மு.க. தலைவர் கலை ஞர் ஒவ்வொருமுறை ஆட் சிக்கு வரும்போதும் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைவருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திக் கொடுக்கவேண்டும் என்று கலைஞர் இலவச வேட்டி-சேலை திட்டத் தைக் கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா, வங் காளம், ஒரிசா போன்ற மாநி லங்களில் இருந்து இலவச வேட்டி-சேலைகளை வாங்குகிறார்.

இதில் கமிஷன் பெறுகி றார்கள். தி.மு.க. ஆட்சியில் நெசவாளர் மற்றும் விவ சாயிகளுக்கு சலுகையில் 500 யூனிட் வரை மின்சாரம் வழங்கப்பட்டது. இதை ஜெயலலிதா நிறுத்திவிட் டார். சென்னை கிண்டியில் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நூல கத்தை பார்த்து வெளிநாட்டி னரே பாராட்டினர். ஆனால் அதையும் முடக்கிவிட்ட னர். செம்மொழி ஆராய்ச் சிப் பணியும் முடக்கப்பட் டுள்ளது. மதச்சார்புள்ள மோடியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். - இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டங்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் செங் குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுக வனம் எம்.பி., தொகுதி தேர் தல் பொறுப்பாளர் பனமரத் துப்பட்டி ராஜேந்திரன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-8/77965.html#ixzz2xggMgSuP

தமிழ் ஓவியா said...


ஆரியர்கள்தான்


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

- (விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/77934.html#ixzz2xgiV4nWv

தமிழ் ஓவியா said...

அதி புத்திசாலி?

- திராவிடப்புரட்சி

கடவுள் இல்லை என்று சொல்லுவதைத் தடை செய்யக் கோரும் பொதுநல மனு மீதான நீதிமன்ற வாதம் (கற்பனை)
மனுதாரர்: அதி புத்திசாலி

கோர்ட் குமாஸ்தா: அதி புத்திசாலி! அதி புத்திசாலி! அதி புத்திசாலி! (அதி புத்திசாலி உள்ளே வருகை!)

நீதிபதி: எந்த அடிப்படையில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளீர்கள்?

அதி புத்திசாலி: கடவுள் இருக்கிறார் என்கிற உண்மையின் அடிப்படையில் அய்யா!
நீதிபதி: கடவுள் இருக்கிறார் என்பது உண்மை என்பதற்கு எது ஆதாரம்?

அதி புத்திசாலி: இருக்குதுங்கையா! இதோ கூடவே எடுத்து வந்திருக்கிறேன் அய்யா! இந்தப் பொஸ்தகத்தில் அதற்கான ஆதாரம் இருக்குதுங்க அய்யா!

நீதிபதி: இந்த புஸ்தகம் யார் எழுதுன புஸ்தகம்?

அதி புத்திசாலி: இது எங்க தாத்தாவோட.... தாத்தாவோட.... தாத்தாவோட..... பல தாத்தாக்களுக்கு முன்பு இருந்த ஒரு தாத்தாவால்....

நீதிபதி இடைமறித்து: அந்தக் காலத்தில் புஸ்தகமே அச்சடிக்கலியே?!

அதி புத்திசாலி: இல்லைங்கையா.... அது அவரால சொல்லப்ட்டதுங்கயா! பின்னால வந்த தாத்தாக்கள் அதை புஸ்தகமா அச்சடிச்சு வைச்சாங்கையா!

நீதிபதி: அது சரி, அது உங்க தாத்தா சொன்னதுதானே... அது எப்படி ஆதாரமாக ஆக முடியும்?

அதி புத்திசாலி: அங்கதாங்கயா விஷயமே இருக்கு! மத்தவங்ககிட்ட சொன்னதுதான் எங்க தாத்தா! ஆனால்.... அவர்கிட்ட அந்த விஷயங்களைச் சொன்னது கடவுளுங்கையா!

நீதிபதி: கடவுள் சொன்னாரா?! அவரிடம் கடவுள் சொன்னார் என்று எப்படி நம்புவது?

அதி புத்திசாலி: நீங்க தாராளமா நம்பலாம் அய்யா! அதற்கு ஆதாரம் இருக்கு!

நீதிபதி: அதற்கு ஆதாரம் இருக்கா?! எங்க இருக்கு?

அதி புத்திசாலி: இதோ! இந்த பொஸ்தகத்திலேயே இருக்குங்க அய்யா! இது கடவுளால் சொல்லப்பட்டது என்று தெளிவா இருக்குங்க அய்யா!

நீதிபதி: இதை எப்படி நம்புவது?

அதி புத்திசாலி: நம்புங்க அய்யா! நம்புங்க! நம்பித்தான் ஆகவேண்டும்! நாங்க நம்பலியா! அது போல நம்புங்க அய்யா! நம்பிக்கைதான் வாழ்க்கை!

நீதிபதி: அதெல்லாம் சரி... நீங்க அந்த புஸ்தகத்தில் இருப்பதை நம்புகிறீர்கள்....

ஆனால் அதை நான் எப்படி நம்புவது?

அதி புத்திசாலி: அப்படிக் கேளுங்கையா! நீங்க நம்புவதற்குத் தேவையான ஆதாரம் எல்லாம் இருக்குங்க அய்யா!

நீதிபதி ஆவலோடு: எங்க? எங்க இருக்கு?

அதி புத்திசாலி: இதோ இந்தப் பொஸ்தகத்திலேயே இருக்குதுங்க அய்யா!

நீதிபதி: ஸ்ஸ்ஸ்சப்பா முடியல! சரி இந்தப் புஸ்தகத்தில் இருக்கிறது எல்லாம் உண்மை, இது கடவுள் சொன்னதுதான், அதற்கான ஆதாரம் இந்தப் புஸ்தகத்திலேயே இருக்கிறது என்பதை நம்பி எப்படித் தீர்ப்பளிப்பது? அது சரியா வராதே....

அதி புத்திசாலி: அய்யா அவசரப்பட்டுடாதீங்க! அது மட்டுமல்ல... உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மனிதன் படைக்கப்பட்டது வரை அனைத்திற்கும் இதில் ஆதாரம் உள்ளது!

நீதிபதி: அது வேறையா?!

அதி புத்திசாலி: ஆமாங்க அய்யா! எல்லா உண்மைகளும் இதில் இருக்குதுங்க அய்யா! இது ரொம்ப முக்கியமான ஆதார பொஸ்தகம் அய்யா!

நீதிபதி: நீங்க சொல்லுறத ஊர் நம்பாதே!

தமிழ் ஓவியா said...

அதி புத்திசாலி: சரியாச் சொன்னீங்க அய்யா! நம்பாதவர்கள் பற்றியும் இந்தப் பொஸ்தகத்தில் இருக்குங்க அய்யா! நீங்க இந்தக் காலத்தில் சொல்லுவதை அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்காங்க என்றால் என்ன அர்த்தம்? இதில் சொல்லியிருப்பது எல்லாம் உண்மை என்றுதானே அர்த்தம்?

நீதிபதி: நான் அதைச் சொல்லலை... நான் சொல்லவந்தது....

அதி புத்திசாலி: புரியுதுங்க அய்யா! புரியுது! நீங்க சொல்ல வருவது புரியுது!

நீதிபதி: அப்பாடா புரிஞ்சுதா?!

அதி புத்திசாலி: இந்தப் புஸ்தகத்தில் உள்ளதை மற்றவர்களை எப்படி நம்பவைப்பது என்றுதானே கேட்க வரீங்க.... அதுக்கு ஒரு வழி இருக்குங்க அய்யா!
நீதிபதி: நான் அதைச் சொல்ல வரல... சரி என்ன வழி அதைச் சொல்லுங்க!

அதி புத்திசாலி: மனிதனால் சொல்லமுடியாத, சிந்திக்க முடியாத பல விஷயங்கள் இந்தப் புஸ்தகத்தில் இருக்கிறது. இதுவே இந்தப் புஸ்தகத்தில் இருப்பது அனைத்தும் கடவுளால் சொல்லப்பட்டது என்பதை நம்புவதற்கான ஆதாரம்!

நீதிபதி: மனிதனால் சிந்திக்க முடியாத, சொல்ல முடியாத விஷயங்கள் எல்லாம் இதில் இருக்குதா?!

அதி புத்திசாலி: இருக்குதுங்க அய்யா! நீங்க முழுசா இதைப் படிச்சுப் பார்த்தால்தான் உங்களுக்கே புரியும்! நீதிபதி: நான் படிச்சுப் பார்க்கிறேன். ஆனால் இதை ஒரு ஆதாரமாக வைத்து....
அதி புத்திசாலி: அவசரப்பட்டுடாதீங்க அய்யா! முதல்ல இந்தப் பொஸ்தகத்தை படித்துப் பாருங்கள்.... அப்புறம் தெரிந்துகொள்வீர்கள்... இந்த அறிவியல் கிறிவியல் எல்லாம் பொய் என்று!

நீதிபதி: என்னது?! அறிவியல் எல்லாம் பொய்யா?!

அதி புத்திசாலி: ஆமாங்க அய்யா! பூமி, வானம், சந்திரன், சூரியன் இத்தியாதி இத்தியாதி என்று எல்லாவற்றையும் கடவுள் படைத்ததோடு மட்டுமல்லாமல் இந்த மனிதன் மிருகம் என்று அனைத்தையும் படைத்தான் அய்யா! அதற்கான எல்லா ஆதாரமும் இந்தப் பொஸ்தகத்தில் இருக்குதுங்க அய்யா! ஆனால்.... அறிவியல் அது இது என்று சொல்லிக்கிட்டு.... மரபணு, பரிணாம வளர்ச்சி என்று ஏதேதோ உண்மைக்கு மாறாக சொல்லுறாங்க அய்யா! (கடுப்பான) நீதிபதி: மனிதன் சிந்திக்காத எல்லாம் இந்தப் புஸ்தகத்தில் இருக்கிறது என்றால்.... அவன் கண்டுபிடித்த ரேடியோ, டி.வி, ப்ரிட்ஜ், மின்சாரம், மின் விளக்கு, ரயில், ராக்கெட், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பு ஊசி மருந்துகள்.... இத்தியாதி இத்தியாதி என்று அவன் கண்டுபிடித்த ஆயிரக்கணக்கான அனைத்து விஷயங்களும் இந்தப் புஸ்தகத்தில் இருக்கா? அதெல்லாம் இதில் இல்லை எனும்போது இந்தப் புஸ்தகத்தில் இருப்பதை எதற்காக முக்கியமாகக் கருதவேண்டும்?

இருபது வயதிற்குக் குறைவாக இருந்த மனிதனின் சராசரி ஆயுள் இன்றைக்கு எழுபதைத் தொட்டிருப்பதற்குக் காரணம் மனிதனின் கண்டுபிடிப்புகள் தானே? இன்று மனிதன் சுகமாக வாழ்வதற்குக் காரணம் மனிதனின் கண்டுபிடிப்புகள் தானே? ஆனால்.... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் புஸ்தகத்தால் என்ன செய்ய முடிந்தது? கொடிய தொற்று நோயால் இறந்த கோடிக்கணக்கான உயிர்களை இந்தப் புஸ்தகத்தை வைத்துக் காப்பாற்ற முடிந்ததா? சொல்லிக்கிட்டே போகலாம்... (மூச்சு வாங்குகிறார்)

(சிரித்துக் கொண்டே) அதி புத்திசாலி: அய்யா இத்தனை கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் கடவுள்தானே....

நீதிபதி: என்னது?!

அதி புத்திசாலி: மனிதனைப் படைத்த கடவுள்தானே அவனுக்கு மூளையும் படைத்தான். மனிதனின் மூளைதானே இவ்வளவையும் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தது! மேலும்.... மனிதன் கண்டுபிடிக்க முடியாத இன்னமும் பல விஷயங்கள் இருகின்றன அய்யா! அறிவியல் அறியாத உண்மைகள் பல இருக்கின்றன அய்யா! அதெல்லாம் இந்தப் பொஸ்தகத்தில்.....

நீதிபதி: (இடைமறித்து) போதும்! போதும்! ஆயிரம் வருஷத்திற்கு முன்பு மனிதன் கண்டுபிடிக்காத பலவற்றை, கடவுள் விஷயமாகக் கருதிய பலவற்றை இன்றுவரை மனிதன் கண்டுபிடித்து இருக்கிறான். அன்றைக்கு அதெல்லாம் கண்டுபிடிக்க முடியாத கற்பனைக்கெட்டாதவைகள்தான். இன்றைக்குக் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்ற பலவற்றை மனிதன் வருங்காலத்தில் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவான்! இதுவே எதார்த்தம்! உண்மை! எனவே, தீர்ப்பை வாசித்துவிடுகிறேன்!

மனுதாரரின் வாதத்தை, ஆதாரத்தை வைத்துப் பார்க்கும்போது, மனிதனால் கண்டுபிடிக்காதவற்றை அடிப்படையாக வைத்துத்தான் கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறது என்பது தெரியவருகிறது. வருங்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பமும், அறிவும் வளரும், கண்டுபிடிப்புகளும் தொடரும். அது வரை கடவுள் குறித்த நம்பிக்கைகளும் தொடரும். ஆனால், அறிவியல் வளர வளர இந்த நம்பிக்கை குறையும். ஆனால் இறுதிவரை மனிதனால் கண்டுபிடிக்க முடியாத ஒன்றே ஒன்று.... கடவுள்தான்! என்பதைக் கூறி.... மனுதாரரின் கோரிக்கை அடிப்படையற்றது என்று கருதி அவரது மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்!

பின்குறிப்பு: இந்தக் கற்பனை நீதிமன்ற உரையாடல் மாறுபட்ட சிந்தனையைத் தூண்டுவதற்க்காகவே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை


இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.

வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...


சுயராஜ்யமா? சுயமரியாதையா?

சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்ஜியம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்ஜியம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதையற்றவனைப் பிணமென்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 24.1.1926)

Read more: http://viduthalai.in/page-2/78006.html#ixzz2xmdIoEk4

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் கல்வி வளர்ச்சி லட்சணம்?

தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம், மாநிலங் களின் கல்வி வளர்ச்சி பற்றிய அறிக் கையினை டிசம்பர், 2013 இல் வெளி யிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, கல்வி குறியீட் டில், குஜராத் மாநிலம் இதற்கு முன் னர் இருந்த 9 ஆவது இடத்திலிருந்து 18 ஆவது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளதாக அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி அளவில், 12 ஆவது இடத்திலிருந்து 28 ஆவது இடத்திற்கும், உயர் நிலைப்பள்ளி அளவில், 8 ஆவது இடத்திலிருந்து, 14 ஆவது இடத்திற்கும் குஜராத் பின்ன டைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டி, இரண்டையும் இணைத்து சராசரி பார்க்கையில், மாநிலங்கள் வரிசையில் 18 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளதை அறிக்கை தெளிவாக கூறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் 8 ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3 ஆவது இடத்திலும் தொடர்ந்து உள்ளதை யும் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கை கூறுகிறது.

இந்த தரவரிசை, மாநிலங்கள் கல்வித்துறையில் செய்த சாதனையின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. அடிப்படைக் கல்வி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, பள் ளிக்கு வராமல், நின்றுவிடும் குழந்தை களின் எண்ணிக்கை, இவற்றின் அடிப் படையில் இந்தத் தரவரிசை தேசிய பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

முதல் இடத்தை சிறிய தீவான லட்சதீபமும், இரண்டாவது இடத்தை, புதுச்சேரி மாநிலமும் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை தமிழகம் பெற் றுள்ளது. மிகப்பெரிய மாநிலம் என எடுத்துக்கொண்டால், தமிழகம் முத லிடத்தைப் பெற்றுள்ளது என நாம் பெருமையோடு கூறிக்கொள்ளலாம்.

நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கி, பெரியாரின் போராட்டத்தால், தமிழ கம் கல்வி வளர்ச்சி பெற்று, கல்வி வள்ளல் காமராசர் காலத்தில், கல்வி புரட்சி ஏற்பட்டு தொடர்ந்து, தமிழ கம் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

மோடியின் ஆட்சியில், குஜராத் மாநிலம், 9 ஆவது இடத்திலிருந்து, 18 ஆவது இடத்திற்கு பின்னடைந்துள் ளது. (ஆதாரம்: Gujarat drops in educational index - DNA - 5.12.2013)

குஜராத் மாடல், மோடியின் நல் லாட்சி என தமிழ் நாட்டில் பாஜகவு டன் கூவிக் குலாவும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், இந்தப் புள்ளி விவரத்திற்கு, பதில் சொல்லி விட்டு, தேர்தலை சந்திக்கட்டும். பார்ப்போமே இவர்களின் நாண யத்தை?

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78018.html#ixzz2xmdeKIuK

தமிழ் ஓவியா said...


இவாள் அவாள்!


முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். இவாள் எல்லாம் அதிகாரத்தில் இருந்தபோது அவாளுக்குச் சாதமகமாக எப்படி நடந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் தலைவராக்கப்பட்டார். இவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் தேர்வுத் தாள் அவுட்டானது. தேர்வில் தமிழுக்கு என்று இருந்த மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன.

இப்பொழுது அதிமுகவிலேயே சேர்ந்து விட்டார். அடுத்தடுத்துப் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுவார் அதிமுக ஆட்சியில்.

சென்னையில் ஏற்கெனவே அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் விலக்கிக் கொள்ளப்பட்டு, அந்த இடத்தில் இவர் நிறுத்தப்படுவார் என்கிறது தினமலர் எதுவும் நடக்கலாம்.

அவாள் ஆயிற்றே! அண்ணா தி.மு.க. அக்ரகார தி.மு.க. தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/page-8/78012.html#ixzz2xme9Rbji

தமிழ் ஓவியா said...


சொன்ன ஞாபகம் இல்லையோ...


திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் சுகந்தி (வயது 28) மகள் மேனகா (வயது 8), மகன் ஹேமசந்தர் (வயது 7) மூவரும் கிணற்றில் விழுந்து வறுமையால் தற்கொலைசெய்து கொண்டனர் என்பது செய்தி.

இன்றைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் மிக முக்கிய சாதனை இது. இந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது 8 ஆண்டுகளுக்கு முன் நம் ஞாபகம் சென்றாக வேண்டும். திருத்துறைப்பூண்டிக்கு அருகில் ஆதிச்சபுரம் என்னும் கிராமம். பட்டினியால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி (இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி) சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்ன பொழுது - முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு வெடித்துக் கிளம்பியது கோபத் தீ!

என்ன சொன்னார் முதல் அமைச்சர் தெரியுமா?

மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமி சபைக்குத் தவறான தகவலை திரும்பத் திரும்ப சொல்லி எனது அரசுக்கு களங்கம் கற்பிக்க முயல்கிறார். நான் மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமியைக் கேட்கிறேன். பிரகாஷ் பட்டினியால் செத்தது உண்மை என்று சொன்னால் மற்ற மூன்று குழந்தைகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? என கேட்டாரே பார்க்கலாம்.

என்னே மனிதாபிமானம் பார்த்தீர்களா?

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஜனசக்தி 19.3.2006 அன்று என்ன எழுதியது தெரியுமா?

குழந்தை இறந்ததற்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளை இழந்த குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி ஒரு பட்டினிச்சாவு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று முதல் அமைச்சர் குறிப்பிட்டு இருப்பாரேயானால் அவரது பெருந்தன்மையைப் பாராட்டலாம், போற்றலாம். மாறாக மற்ற மூன்று குழந்தைகள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று கேட்ட மனிதாபிமானமற்ற பேயாட்சியினை இனியும் அனுமதிக்க முடியுமா? என்று அன்று ஜனசக்தி எழுதியதே.

அத்திப்பட்டுக் கிராமத்தில் இரு குழந்தைகளோடு ஒரு தாயும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறாரே - அதே கேள்வியையே இன்றைக்கு கேட்க வேண்டாமா?

சிந்திப்பீர் வாக்காளர்களே!

Read more: http://viduthalai.in/page-8/78013.html#ixzz2xmeHt2IM

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!

புள்ளிவிவரம்

தமிழ்நாட்டில் வாக்காளர் கள்பற்றிய ஒரு தகவல்:

30-39 வயதுள்ள வாக் காளர்கள் 1.34 கோடி

40-49 வயதுள்ள வாக் காளர்கள் 1.15 கோடி

50-59 வயதுள்ள வாக் காளர்கள் 83 லட்சம்

60-69 வயதுள்ள வாக் காளர்கள் 55 லட்சம்

இது தேர்தல் ஆணையம் அளித்துள்ள புள்ளி விவரம்.

இல்லை

உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வில்லை.

சீசரின் மனைவி...

தமிழக அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் சிறிய பேருந்துகள், விற்பனை செய்யும் குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னம் உள்ளது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய் யப்பட்ட நிலையில், உயர்நீதி மன்றத்திற்கு ஆளும் தரப்பில் அது எடுத்துச் செல்லப்பட் டது. நீதிமன்றத்தின் ஆணைப் படி சிறிய பேருந்துகளில் இரட்டை இலை நீக்கப்பட் டது. இப்பொழுது குடிநீர் பாட்டிலிலும் இடம்பெற் றுள்ள இரட்டை இலையை நீக்குவது குறித்துத் தலை மைத் தேர்தல் ஆணையத் திடம் ஆலோசனை கேட் டுள்ளதாக தமிழ்நாடு தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

இதில் ஆலோசனை கேட் பதற்கு என்ன இருக்கிறது? சுவரில் எழுதும் தேர்தல் சின் னத்தையே அனுமதிக்காத தமிழகத் தேர்தல் ஆணையம், அரசு விற்கும் குடிநீர் பாட்டி லில் சட்ட விரோதமாக இரட்டை இலை இடம்பெற்றி ருப்பதை நீக்குவதற்கு எண் பேராயத்தைக் கூட்டித்தான் முடிவு செய்யவேண்டுமா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

சீசரின் மனைவி சந்கேத் திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்திற்கும் பொருந்துமே!

அ.தி.மு.க. கலக்கம்!

அவாள் ஏடான தின மலரே இன்று வெளியிட் டுள்ள கருத்தும் தகவலும் அ.தி.மு.க. அணியின் தற் போதைய நிலவரம் - கலவ ரமாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பிரச்சாரத்தைத் தொடங் கும்போது இருந்த நிலை வேறு - இப்பொழுதுள்ள நிலை வேறு.

நிலைமை தலை கீழாக மாறிவிட்டதால், அ.தி. மு.க. கலக்கத்தில் இருப்பதாக தினமலர் எழுதியுள்ளது.

(அ.தி.மு.க. விழிப்போடு இருக்கவேண்டும் என்று தினமலர் அக்கறையோடு கொடுக்கும் சமிக்ஞை இது!)

கறுப்புப் பணம்

மக்களவைத் தேர்தலை யொட்டி வெளிநாடுகளில் தூங்கும் கறுப்புப் பணம் என்ற பூனைக்குட்டி (அதிகம் இல்லை ரூ.23 லட்சம் கோடி தான்) இந்தியா திரும்புகிற தாம்! வாக்குகளை விலை கொடுத்து வாங்கத் தயாராகி விட்டார்களோ! எச்சரிக்கை!!

தாவலோ, தாவல்!

கருநாடகத் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கிடைக்கா ததால், எடியூரப்பாவின் கூட் டாளிகளான லட்சுமி நாராய ணன் மற்றும் நிருவாகிகள் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். நடிகை லட்சுமி தனக்கு வாய்ப்புக் கிடைக்காததால், மதச் சார்பற்ற ஜனதா தளத்தி லிருந்து விலகி, பி.ஜே.பி.,க்குத் தாவினார்.

சென்னப் பட்னா தொகுதி சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. யோகேஷ் வர் காங்கிரசுக்குப் போனார். முன்னாள் முதல்வர் ஜே.எச். பட்டேலின் மகன் மகிமா பட்டேல் காங்கிரசு சார்பாகப் போட்டியிட வாய்ப்பு மறுக் கப்பட்டதால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார்.

சீட்டுக் கிடைக்கவில்லை என்றால், கட்சியின் சீட்டைக் கிழித்துவிட்டு, சீட்டைத் தேடித் தாவ ஆரம்பித்து விட் டனர். இவர்கள் மேடைகளில் ஏறிக் கொள்கை முழக்கம் செய்வார்கள் பாருங்களேன்!

Read more: http://viduthalai.in/page-8/78017.html#ixzz2xmeQQ4ev

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை


இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.

வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்


ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

பா.ஜ.க. தலைமையில் தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்க அரும்பாடுபட்டு, ஒரு அய்ந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி -_ எந்தப் பொதுக்கொள்கையும் இல்லாமல், மோடி பிரதமரானால் அதுவே சர்வரோக நிவாரணி என்பது போல பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளது.

அவர்கள் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டுப் பாடுபடுவோம் என்று குரல் கொடுத்து, பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.

எந்த மேடையில், யாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிவுள்ள தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போலும் அவர்களுக்கு!

தி.மு.க. ஊழல் _- காங்கிரஸ் ஊழல் என்ற இவர்களது வாதம்பற்றிப் பின்னால் ஆராய்வோம்.

1. முதலில் இவர்கள் யாருடன் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பு முழக்கம் செய்கிறார்கள்? ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே! இப்போது புதிதாக ஞானஸ்நானம் தந்து எடியூரப்பா அண்கோ சிறீராமுலு போன்றவர்களுடன் கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (பா.ஜ.க.) அமைப்புகளுடன் நின்று கொண்டு, சில சீட்டுகளுக்காக ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளனரே -_ உண்மைகள் இவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறதே _- அதைக் கவனித்தார்களா?

2. அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கார்கில் போரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளுக்குக்கூட கமிஷன் வாங்கிய ஊழல் உலகத்தில் சிரிப்பாய் சிரித்ததே -_ அது மறந்து விட்டதா?

சவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள்தானே பி.ஜே.பி.யினர்!

3. பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் அவர்கள் லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக காமிராவால் படம் பிடிக்கப்பட்டு, வழக்குப் போட்டு, தண்டனையும் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்ததெல்லாம் (அண்மையில் மறைந்தார்!) மறந்துபோய் விட்டதா?

4. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, வாக்களிக்க லஞ்சம் வாங்கியவர்களில் பா.ஜ.க. எம்.பி.களும் ஆயிற்றே! ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் சிக்கியவர் பி.ஜே.பி. எம்.பி. அல்லவா!

தமிழ் ஓவியா said...

5. மோடி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை குஜராத்தில் தந்துள்ளார்; எனவே அவரே பிரதமராகி இந்தியாவை ஆள வேண்டும் -_ ஊழல் ஒழியும் என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட உத்தமர்களைப் பார்த்து ஒரு கேள்வி:

அண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,699 கோடி நிதி மற்றும் நில மோசடி குஜராத் மாநில ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபற்றி தி வீக் ஆங்கில இதழில் (23.2.2014) மல்லிகா சாராபாய் விரிவாக ஆதாரத்துடன் எழுதியுள்ளாரே _- இதுவரை மோடி தரப்பில் மறுப்பு வந்ததுண்டா?

6. கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து பல கோடி ரூபாயாகவும், தங்கக் கட்டிகளாகவும் வாங்கி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தந்தார் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு MCI என்ற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிலிருந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சி.பி.அய். விசாரணை மூலம் விரட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இன்னமும் இருக்கிறதே! அந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனரை _- குஜராத்திற்கு வரவழைத்து, அரவணைத்து, அவருக்கு ஒரு புதிய நுழைவு வாயிலாக ஒரு மருத்துவக் கல்லூரித் தலைவராக்கி, அதன் மூலம் மறுபடியும் MCI என்ற மருத்துவக் கவுன்சிலுக்குப் பட்டணப் பிரவேசம் செய்ய வழி வகைசெய்து கொடுத்தவர் குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அல்லவா!

ஊழல் சக்ரவர்த்திகளின்மீது சி.பி.அய். வழக்கு இருந்தபோதிலும், அவரையே மீண்டும் புதுவாழ்வு பெற வைத்து, நாளைக்கு மத்தியில் மோடி ஆட்சி வந்தால் இந்த திருப்பதி ஏழுமலையானுடன் தங்கம் சேர்ப்பதில் போட்டி போட்ட கேத்தன் தேசாய்தானே மருத்துவ ஆலோசகர் _- வழிகாட்டியாக இருப்பார்?

தமிழ் ஓவியா said...

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி போல, தங்கள் முதுகை மறந்து மற்றவர்கள் பற்றிப் பேசலாமா?

தங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்திரங்கள் இருக்கையில் பிறர் தூசிபற்றி பழிதூற்ற முன்வரலாமா?

7. நேற்று ஒரு செய்தி _- பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை விளக்கும் வகையில்!

லால்கிஷன் அத்வானிஜிக்கு மத்தியப் பிரதேசம் போபாலில் போட்டியிட அதற்கு முன் அங்கே எம்.பி.யாக இருந்தவர் விட்டுக் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று காங்கிரஸ்காரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளாரே, அது உண்மையானால் அதைவிட வெட்கித் தலைகுனியும் நிலை உண்டா?

கருப்புப் பணப் பட்டியலில் இல்லாத உத்தமர்கள் எத்தனைப் பேர்? உண்மையான தேர்தல் செலவைக் காட்டுபவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார்? யார்? மனசாட்சியைக் கொல்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம்.

2ஜி ஊழல் என்று திரும்பத் திரும்ப தி.மு.க. மீது அமைச்சராக இருந்த ஆ. இராசாமீது குற்றம் சுமத்துகிறார்களே, மத்தியில் அத்துறை அமைச்சராக உள்ள கபில்சிபல் நாடாளுமன்றத்திலேயே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுமில்லை. பூஜ்யம் என்று கூறவில்லையா?

இந்த ஏற்படாத நஷ்டம் பற்றிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் தி.மு.க.வை, இராசாவை வீழ்த்த நினைப்போரால், இதுவரை அந்த இழப்பின் கற்பனை மதிப்பைக்கூட ஒரே மாதிரியாகக் கூற முடியவில்லையே! அருண்ஷோரி முதல் சி.பி.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா? பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா? உறுதியாகக் கூறட்டும் பார்க்கலாம்.

அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களா? என்று கூறுவார்களேயாயின் அதே பதில் _- லாஜிக் தி.மு.க.வுக்கும் பொருந்தாதா?

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான அம்மையார் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார்; 2ஜி அலைகற்றை ரூ.1 கோடியே 80 லட்சம் கோடி இழப்பு என்று ஒரு பொய்யையே பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்!

மேற்காட்டிய பதில் இவருக்கும் பொருந்தும், ஆ. இராசா அவர்கள் ரூ.3000 கோடி மொரிஷிஸ் மற்றும் வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என திட்டமிட்ட ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே, எங்காவது எப்போதாவது ஒரு சல்லிக் காசையாவது கண்டு எடுத்ததா _- விசாரணை அமைப்புகள்?

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகரின் சொகுசு பங்களாவைப் படம் போட்டு, இது ஆ. இராசாவின் பங்களா என்று உச்சப் புளுகை ஊரெல்லாம் பரப்பியதே சில வெட்கங் கெட்ட ஊடகங்கள் _- உண்மை அம்பலமானதும் அவர்கள் எங்குப் போய்ப் புதைந்தனர்?

சொத்து சேர்த்த அம்மையார் மீதான வழக்கு உட்பட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் மற்றவைகளிலும் மூன்று நான்கு உட்பட உள்ளனவே! இதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல், பாமர வாக்காளரிடம் இதே தவறான பிரச்சாரம் செய்தால் அது எவ்வளவு நாள் தாங்கும்?

மேலே காட்டப்பட்டுள்ளபடி மற்றவர்களைக் குற்றம் சுமத்துபவர்கள் பரிசுத்த யோவான்களா? அவதாரங்களா? என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?

கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள் மீது கல்லெறிவது புத்திசாலித்தனமா?

தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர்; மீண்டும் காவியைக் கொணர முயற்சிக்கும் கங்காணிகளை சரியான அடையாளம் காணுவார்கள் _- சரியானபடி பதிலடி கொடுப்பார்கள் -_ வெகுமக்கள் வாக்குச்சீட்டின் மூலம் இது உறுதி! உறுதி!!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கமலைப் பிறாண்டும் பூணூல்கள்


கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட வருமான வரி செலுத்துங்கள் நாட்டிற்காவது நன்மை உண்டாகும் என்று கலைஞானி கமல்ஹாசன் பொறுப்புணர்ச்சியோடு கூறியுள்ளார். அவ்வளவுதான் கல்கி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள் கமல் மீது விழுந்து பிறாண்டுகின்றன.

நாட்டில் நிதிச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது? எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே! மறுக்க முடியுமா?

கமல்ஹாசன் ஒழுங்காக நாட்டை ஏமாற்றாமல் வருமான வரி கட்டுபவர்.அதனால் வரி செலுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட அவரை அழைத்துப் பேசவைத்தது வருமான வரித்துறை. அந்த நிகழ்ச்சியில்தான் பேசினார். இதில் இந்தப் பூணூல்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். நம் முன் கண் முன்னேயே பார்த்தோமே. சிதம்பரம் கோவில் கடந்த முறை இருந்த கலைஞர் ஆட்சியில் அரசுடமை ஆக்கப்பட்டது. அப்போது இலட்சக்கணக்கில் உண்டியல் வசூல் அரசு கஜானாவுக்குக் கிடைத்தது. ஆனால் அதே கோவில் தீட்சிதர்களின் பிடியில் இருந்தபோது வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே கணக்குக் காட்டப்பட்டதே, பேனா பிடிக்கும் கல்கி-தினமலர் பூணூல்களுக்குத் தெரியாதா?

நீதிக்கட்சி ஆட்சி, கோவில்களின் வருமானத்தை நிருவகிக்க இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றி, அரசுத்துறையை உருவாக்காமல் போயிருந்தால் மக்கள் பணம் அனைத்தும் அக்ரஹாரங்களின் தொப்பைகளுக்கே போயிருக்குமே!

இப்போதும் பெரும் பணக்காரர்கள் தமது கணக்கில் வராத கறுப்புப் பணங்களை கோவில் உண்டியல்களில் கொட்டுகிறார்களே.அதற்குப் பதில் அரசுக்கே வரியாகச் செலுத்தினால் மக்களுக்குத் திட்டங்களாகத் திரும்பி வருமே.அதைத்தானே கமல்ஹாசன் சொன்னார்.இதிலென்ன தவறு?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

கருத்து


தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80 சதவிகித பெண்களே உள்ளனர். அவர்களுக்கென வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய அய்.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை அய்.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை. அய்.நா. இப்படிச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. உலக அளவில் மனித விவகாரங்களைப் பேச அய்.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கிவிடக் கூடாது.

- நிமல்கா பெர்னாண்டோ,
இலங்கை மனித உரிமைப் போராளி

மனித உரிமை ஆணையத்தின் ஒப்புதலின் பேரில் இலங்கைமீது சர்வதேச விசாரணை நடத்த ஆணையர் அலுவலகத்தால் முடியும். மனித உரிமை மீறல் தொடர்பான புகாரின்பேரில் அந்நாட்டில் விசாரணை மேற்கொள்ள எனக்கு அதிகாரம் உள்ளது.

- நவநீதம் (பிள்ளை), அய்.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதால் பள்ளிகளிலேயே தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம். வீட்டில் உள்ளவர்களையும் வீட்டுக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் பலர் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. பெண்களுக்குச் சுயமாக முடிவெடுக்கும் திறன் வேண்டும். இந்தத் திறனே அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

- டாக்டர் சாந்தா,
சென்னை அடையாறு புற்றுநோய் மய்யத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

குஜராத் வளர்ச்சியா? வீழ்ச்சியா?


இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிக்கரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்!

குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலைப் படித்துவிட்டு இனி குஜராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!

இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் குஜராத்திற்கு 10 ஆம் இடம்.

இந்தியாவில் ஹூயூமன் டெவலப்மெண்ட் (527 புள்ளிகள்) குஜராத்திற்கு 14ஆம் இடம்.

ஜிடிபி (Gross Domestic Product) இந்தியாவில் குஜராத்திற்கு 5ஆம் இடம்.

வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3ஆம் இடத்தில் உள்ளது.

எழுத்தறிவில் குஜராத்திற்கு 18ஆம் இடம்.

ஏழைகள் குறைந்த மாநிலத்தில் குஜராத்திற்கு 10ஆம் இடம்.

சாலைகள் பராமரிப்பில் குஜராத்திற்கு 11ஆம் இடம்.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம்: ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.

மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்:

ஆண்கள் 63..12, பெண்கள் 64.10

பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67 பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

(இன்னும் ஏராளமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 16ஆம் மக்களவைத் தேர்தல்: வாக்காளர்களே சிந்திப்பீர் எனும் நூலிலிருந்து.)

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் மோடி ஆதரவாளர்கள் தோல்வி!

இணையத்தைச் சொடுக்கினால் அனைத்து வணிகத்தளங்களிலும் மோடியே காட்சி தருகிறார். நிச்சயம் பல நூறு கோடியைச் செலவழித்தால் ஒழிய இத்தகைய முரட்டுத்தனமான விளம்பரத்தைச் செய்ய முடியாது. இன்னொரு பக்கம் நாடெங்கும் நடத்தப்படும் மோடியின் கூட்டங்களுக்கு பல நூறு கோடிகள் கொட்டப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? தேர்தல் ஆணையம் முழுமையாகக் கண்காணிக்கிறதா என்பதே வாக்காளர்களின் கேள்வி. இந்த உருவாக்கப்பட்ட செய்தியையே அனைத்து ஊடகங்களும் கிளிப்பிள்ளைபோல சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்,அந்த விளம்பரங்கள் அத்தனையும் பொய் நிரப்பிய பலூன்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது இந்தச் செய்தி.

குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் மோடியின் ஆதரவு பெற்ற சங் பரிவாரின் அகில பாரத வித்யார்தி பரிஷத் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாம்.

8 இடங்களில் போட்டியிட்ட என்.எஸ்.யூ.அய். என்ற காங்கிரஸ் மாணவர் சங்கம் 6 இடங்களில் அமோக வெற்றி பெற்றுவிட்டதாம்.

மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.யூ.அய். 6 இடங்களிலும், ஏ.பி.வி.பி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்தார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் தன்ராஜ் சிங் வகேலா கூறுகையில் :

குஜராத்தின் 10 மாவட்டங்களில் உள்ள குஜராத் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே, இவ்வெற்றி பறை சாட்டுவதாக உள்ளது, என்றார். இந்த இளைஞர்களின் இதே மனநிலை நீடித்தால் 7 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக தோற்பது உறுதி என்றார், தன்ராஜ்.

தமிழ் ஓவியா said...

கலைஞரின் சுளீர்

செய்தியாளர்கள்: நரேந்திர மோடியின் அலை வீசுவதாகக் கூறப்படுகிறதே?

தி.மு.க. தலைவர் கலைஞர்: எனக்குத் தெரிந்த வரையில் இங்கே வங்காள வரிகுடா அலையைத் தான் காணமுடிகிறது.

- தி.மு.க.வின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டபோது... (10.3.2014)

தமிழ் ஓவியா said...

சில்லறை யு(பு)த்தி



கேள்வி : சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும் - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?

பதில் : அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் மத நம்பிக்கையைக் காரணம் காட்டி பணம் பகிர்ந்து கொள்ளும் உத்தியே! கோவிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லறை புரளும்!

தமிழ் ஓவியா said...

ஜாதகம் அது பாதகம்


இது நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்ட உண்மைச் செய்தி. ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.


என் நண்பருக்கு வேண்டியவர் ஒரு முதியவர். அவர் மனைவி மற்றும் அவர்களின் ஒரே மகன் (சுமார் 25 வயது) ஆகிய மூவரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வயோதிகத்தின் காரணமாக முதியவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு சிலர் சொல் கேட்டு அந்த முதியவரின் மகன் மாயவரத்தில் உள்ள ஒரு ஜாதகக்காரரைச் சந்தித்து தன் ஜாதகத்தைக் காட்டி தன் தகப்பனாரின் ஆயுளைப்பற்றி விசாரித்திருக்கிறார். அந்த ஜாதகத்தைப் பார்த்து நன்கு கணித்து அந்தப் பையனின் தகப்பனார் அதிகபட்சமாக 2 மாதம்தான் இருப்பார் என்றும், 2 மாதத்திற்குப் பின் பெரிய கண்டம் இருப்பதாகவும் எனவே அவர் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆனால் டாக்டர்களின் சிறந்த வைத்தியத்தாலும் மனைவி, மகன் பராமரிப்பாலும் பெரியவர் பூரண குணமடைந்து இன்றுவரை நலமாக உள்ளார்.

பெரியவரின் மகன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்த ஜாதகக்காரரைப் பார்த்து, தன் தகப்பனார் நலமுடன் இருப்பதாகவும், ஜாதகத்தைக் கணித்துக் கூறியது தவறு என்றும் கூறியுள்ளார். அதற்கு ஜாதகக்காரர், தான் கணித்துச் சொன்னது உண்மை என்றும், ஜாதகம் பொய்க்காது என்றும் கூறியதுடன் அந்த 2 மாத காலத்தில் அந்தத் தெருவில் யாராவது பெரியவர் இறந்துவிட்டாரா என்று அந்த இளைஞரைக் கேட்டதற்கு அந்த இளைஞர் தன் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகச் சொன்னதாகவும், அதற்கு ஜாதகக்காரர், அப்படி என்றால் அவர்தான் உன் உண்மையான தந்தை என்று கூறி அந்த இளைஞரை அனுப்பிவிட்டார். பின் அந்த இளைஞன் தன் வீட்டில் வந்து விவரத்தைச் சொல்ல மூவரும் நிம்மதி இழந்து தவிப்பதாகவும், ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், நண்பர் சொன்னார். இந்த விஞ்ஞான காலத்திலும், படித்த, படிக்காத பாமரர்களும் அறிவைப் பயன்படுத்தாமல் ஜாதகத்தையும் ஜாதகக்காரர் சொல்வதையும் நம்பியதால் இதுபோல் அனேக குடும்பங்கள் நிம்மதியற்றுத் தவிக்கின்றன. எனவே, யாரும் ஜாதகத்தையோ ஜாதகக்காரர் கூறுவதையோ உண்மை என்று நம்பி வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளலாமா?

- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

புதுப்பாக்கள்


ஆண்டவரும்
அளவுகோலும்!

நான் எப்போதும்
உன்னைக் கைவிட மாட்டேன்
என்று சொன்ன
என் ஆண்டவரே!
அனைத்தையும்
சுனாமி வந்து சுருட்டி
வாயில் போட்டுக்கொண்டுவிட
தனிமரமாய்
தன்னந்தனியே தவிக்கிறேனே!
நெஞ்சிலே நஞ்சை வைத்து
நாவிலே தேனைத் தடவி
நயவஞ்சகமாய்ப் பேசி
நம்பவைத்துக் கழுத்தறுப்பது
தனிமனித ஒழுக்கக்கேட்டின்
அடையாளம் மட்டும்தானா?
ஆண்டவராகிய உமக்கு - அந்த
அளவுகோல் கிடையாதா?

- சீர்காழி கு.நா.இராமண்ணா



மகாத்மா மண்ணில்
மதம் எனும் மலத்தை
தேர்தல் களமாய்
தின்னுகின்றன
நாகரிகப் பன்றிகள்

செய்திகளும் தின்பண்டங்களாக
தின்னுகின்றன மாயைகளை...
(மோடி... மோடி
ஜாடி... ஜாடி)

ஜனநாயகம் என்னும் குடிசையை
அயோத்திய அனுமான்கள்
தீவைக்கின்றன...
மீண்டும்
பதாகை ஆட்சி
வேண்டுமென்று...

நம் இராவணனின் விபீசனர்கள்
கூட்டாஞ்சோறு எனும்
தேர்தல் பந்தியில்
பாத்தி கட்டுகிறார்கள்

இந்திய வாக்காளனுக்கு
நோட்டா எனும்
வாக்குச் சீட்டில்
வாக்குச் சாவடி

ஜனநாயகமே
உனது மறுமலர்ச்சி
எப்போது?

- சின்னவெங்காயம், சென்னை

தமிழ் ஓவியா said...

நீங்களே சொல்லுங்க சார்....!


- டான் அசோக்

ஸ்ரீநிவாச வெங்கட்ராமனுக்கு ஒரு 30 வயது இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், எங்கிருந்து வர்றேள்? என்று மரியாதையாகத்தான் கேட்டான்.

அடுத்து ஒன்றிரண்டு முறை பன்மையில் மரியாதையாகத்தான் அழைத்தான். திடீரென ஒருநாள், முகிலா... அந்தப் பாட்டிலை எடுத்துக்கொடு என்றான். என்னடா இது பார்த்த இரண்டே நாளில் ஒருமையில் அழைக்கிறானே என்று அதிர்ச்சி.

ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன். அடுத்து சில நாட்கள் அவன் வந்தாலே நான் பேசுவதில்லை. ஒருநாள் அவனாகவே, டேய்... அந்த சேரை எடுத்துக்கோ. எனக்கு இது வேணும், என்றான். எனக்கு இப்போது இரட்டிப்பு அதிர்ச்சி என்றாலும் சென்றமுறையைப் போலவே இப்போதும் அமைதியாக சேரை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அடுத்தமுறை இதே போல் மரியாதையில்லாமல் பேசினால், இல்லடா சீனிவாசா என பதில் சொல்லவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் அதற்குப் பிறகு பலமுறை என்னிடம் ஒருமையில் பேசியும் என்னால் அவனிடம் ஒருமையில் பேச முடியவில்லை. எனக்கும் அது காலப்போக்கில் பழகிவிட்டது. ஒருநாள் பைக் நிறுத்தும் இடத்தில் பயங்கர சண்டை. ஸ்ரீநிவாசன் ஒரு இளவயது காவலாளியிடம் செமத்தியாக அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தான். ஓடிச்சென்று அங்கு நின்று மனம் நிறைய மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென அந்தக் காவலாளி என் பக்கம் திரும்பி, நீங்களே சொல்லுங்க சார். நான் மரியாதையா சாரி சார்னு சொன்னேன். ஆனா இவன் எடுத்தவுடன, அவனே இவனேனு திட்றான். ஆஃபீஸ்ல வேலை பாத்தா நாங்கள்லாம் இவனுக்கு என்ன அடிமையா? என்றான். இல்லை, எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலைப் பாரீர்! உ.பி.யில், குஜராத்தில் ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை

பி.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலைப் பாரீர்!

உ.பி.யில், குஜராத்தில் ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை

மூன்று சதவீதப் பார்ப்பனர்களுக்கோ 20 சதவிகித வாய்ப்பு!

இவர்களை ஆதரிக்கலாமா? வாக்காளர்களே சிந்திப்பீர்!

100 அம்சங்களைக் கொண்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு ஈடு இணை ஏது?

பி.ஜே.பி. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளர்கூட அறிவிக்கப்படவில்லை; ஆனால் உ.பி.யில் பார்ப்பனர்களுக்கோ 20 சதவிகித வாய்ப்பு! சமூக நீதிக்கு எதிரான இந்த அணியைத் தோற்கடிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

எப்பாடுபட்டேனும், யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது, மத்தியில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தள்ளப்பட்டிருப்பதால், அதனுடைய இந்துத்துவா கொள்கையை அப்படியே தனது குஜராத் மாநிலத்தில், ஒரு பரிசோதனைக் கூடம் போல நடத்தி சிறுபான்மையினரான இஸ்லாமியர்களைப் பழி வாங்கிய நிகழ்வுகள் ஏராளம்! ஏராளம்!! கோத்ரா மற்றும் பல போலி என் கவுண்ட்டர்கள் வரை செய்ததில் சளைக்காதவராக திகழ்ந்ததால் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்தலை முன்னணியிலிருந்து நடத்தி வருகிறது.

இடத்திற்கேற்ப வேடம் போடும் மோடி!

அதற்காக அது ஆங்காங்கே இடத்திற்குத் தக்கபடி வேடத்தை அவ்வப்போது ஏற்கும்படி மோடியை இயக்கி வருகிறது.

1992-இல் மண்டல் குழுப் பரிந்துரையின் ஒரு பகுதியை வேலை வாய்ப்பை - அமல்படுத்த ஆணை பிறப்பித்து, சமூகநீதியை நடைமுறைப்படுத்தக் காரணமான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது ஆட்சியை 9 மாதங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆணைப்படி பா.ஜ.க. கவிழ்த்தது!

மண்டல் நாயகர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் யார்?

அதற்காகவே மண்டலுக்கு எதிராக இராமன் கோவில் மண்டல் Vs மந்திர் என்ற முழக்கம் எழக் காரணமாகியது.

அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு எதிராக மாணவர்களையும், முன்னேறிய ஜாதி என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் (ABVP) தூண்டி கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியது; காங்கிரசும் மறைமுகமாக இதை ஆதரித்து சமூகநீதிக்காக ஆட்சியை இழந்த வி.பி. சிங்கை ஜாதிமூலம் நாட்டைத் துண்டாடுபவர் “He is a Castesist” என்று பழி தூற்றினர்!

உ.பி.யிலோ புதிய ராகம் ஏன்?

தமிழ் ஓவியா said...

ஆனால் அதே உ.பி.யில் 22 ஆண்டுகளுக்குப் பின், அங்கு வேகமாக வீசும் மண்டல் சமூக நீதிக் காற்றைப் பயன்படுத்தி, அதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மோடி தனது முதல் பிரச்சாரத்தினைச் செய்யத் துவங்கும்போதே, நான் மிகவும் பிற்படுத்தப்பட்டவன். இனி (OBC & Dalits) பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தான் முனைப்பான எதிர்காலம் என்கிறபடி நடப்பேன்! என்று புதிய ராகம் பாடினார்!

காரணம்; முலாயம்சிங், மாயாவதி ஆகியோர் இந்த சமூக நீதி - மண்டல் காற்று வீசியதைப் பயன்படுத்தி அல்லவா ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்று கணக்குப்போட்டு, அதே குரலில் முன்பு வி.பி. சிங்மீது எந்தக் குற்றச் சாற்றினைக் கூறினார்களோ, அதற்கு மாறாகச் சிறிதும் லஜ்ஜை இல்லாமல், இப்போது ஏதோ சமூகநீதிக்காகவே திடீர் அவதாரம், எடுத்ததுபோல வாக்காளர்களை ஏமாற்றிட முனைந்து, அதற்கே வீர வசனங்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

சமூகநீதியைக் கொள்கையாக ஏற்று பிஜேபி. அறிவிக்குமா?

இது ஒரு தேர்தல் உத்தி, வியூகம். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு நேர் விரோதமாகும்.

குஜராத் வளர்ச்சி மாடல் என்று கூறுகிறார்களே அங்கே இடஒதுக்கீடு - சமூகநீதி ஓட்டங்கள் - எவ்வளவு விழுக்காடு அமலில் உள்ளன? ஆர்.எஸ்.எஸ். இதை ஒரு கொள்கை முடிவாக ஏற்று ஒரு தேர்தல் அறிக்கையை - பா.ஜ.க. பெயரில்- வெளியிடத் தயாரா?

மிகப் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, அவர்கள் கையில் உள்ள வாக்குகளைப் பறிக்கும் திட்டம் இது என்பதல்லாமல் வேறு என்ன?

கலைஞர்ஆட்சியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு

சமூகநீதி - இடஒதுக்கீடு என்பது அனைவர்க்கும் அனைத்தும் என்பதால்தானே தமிழ்நாட்டில் - கலைஞர் ஆட்சியில் - இந்தியாவுக்கு முன்னோடியாக இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு முதல் கட்டமாக மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு தரப்பட்டது; அதுபோலவே பிற்படுத்தப்பட்ட கிறித்துவர்களுக்கும் முன்பே இடஒதுக்கீடு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

உ.பி.யில், குஜராத்தில் பிஜேபி சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர்கூடக் கிடையாது!

குஜராத்தில் என்ன நடக்கிறது? மக்கள் தொகையில் 9 சதவிகிதமாக உள்ள இஸ்லாமியர் இதுவரை சட்டமன்றத்தில் ஒருவர்கூட கிடையாது. இதைவிடக் கொடுமை வேறு உண்டா? இதைப் பெருமையான சாதனை என்றும், இனி இப்படித்தான் எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும் என்றும் இந்து நாளேட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் (18.10.2013இல்) பேட்டி கொடுத்து மகிழ்கிறாரே!

உத்தரப்பிரதேசத்தில் பெருவாரியான இடங்களை மோடியின் ஆர்.எஸ்.எஸ். (பாஜக என்பது வெளி வேஷம்) வென்றால்தானே நாடாளுமன்றத்தில் அதன் இலக்கு 272 இடங்கள் என்பதுமுடியும்?

அதற்காக 80 இடங்களில் 78 இடங்கள் மோடி கட்சி போட்டியிடுகிறது; (இரண்டு கூட்டணிக் கட்சிக்கு)

இந்த 78 இடங்களில் ஒரே ஒரு இஸ்லாமியர்கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை; இதுதான் குஜராத் மாடல் புரிந்து கொள்ளவேண்டும் பொது வாக்காளர்கள்!

அங்குள்ள மக்கள் தொகையில் 17 விழுக்காடு இஸ்லாமியர்கள்; அவர்களுக்கு ஒரு இடம்கூட கிடையாது - பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில்.

பார்ப்பனர்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு!

ஆனால், சுமார் 12 விழுக்காடு உள்ள உ.பி. பார்ப்பனர்களுக்கு - 80 இடங்களில் இவர்களது வேட்பாளர்கள் 16 பேர்! - அதாவது 20 விழுக்காடு!

இன்னொரு வேடிக்கை - விசித்திரம் - மாய வலை. பிற்படுத்தப்பட்டவருக்கு (ளிஙிசி) 24 இடம் அதாவது ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி (33 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோர்மீது திடீர் கரிசனம்!

இவர்களது தந்திரம் வியூகம் - பிற்படுத்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிறுத்தி, சிறுபான்மையோரை முதலில் ஒதுக்கிவிட்டால், பிறகு ஆட்சியைப் பிடித்த பிறகு, மற்றவர்களை அடுத்த கட்டத்தில் பிடித்துக் கீழே தள்ளிவிட அதிக காலம் பிடிக்காது என்பதுதான்.

தேவை பெரியார் நுண்ணாடி!

இதை பெரியார் கண்ணாடி என்ற நுண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் புரியும்.

இது புரியாமல், சில சீட்டுகளுக்காக மோடி வலையில் விழுந்தவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்பது போகப் போகப் புரியும்.

சமூகநீதியில்கூட போலிகளும், கள்ள நாணயங்களும் பெருகி விட்டன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


முகாம் : திண்டுக்கல்

3.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78037.html#ixzz2xs8h7AKl

தமிழ் ஓவியா said...


சிங்கள அரசு திருந்தப் போவதில்லை நவநீதம்பிள்ளையை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டார்களாம்

கொழுப்பு, ஏப்.3- அய்நாவில் அமெரிக்காவி னால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில் இலங் கைக்கெதிரான சர்வதேச விசாரணையை துவங்குவ தற்கு ஒருபோதும் இடம ளிக்கமாட்டோம் என வெளி யுறவுத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரி வித்தார்.

சர்வதேச விசாரணை களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத நிலையில் மனித உரிமை கள் தலைவர் நவநீதம் பிள்ளையினால் எங்கள் மீது பலவந்தமாக விசாரணை நடத்தமுடியாது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளால் இலங்கைக் கெதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு அரசாங்கம் எந்த நிலைப் பாட்டிலிருந்ததோ அதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கிறது.

சர்வதேச விசாரணை யில் எமக்குத் துளியளவும் நம்பிக்கை இல்லை; விசா ரணைகளை இலங்கை அரசே முன்வந்து தீவிரப் படுத்தியுள்ள இந்த நிலை யில் சர்வதேச விசாரணை என்ற மிரட்டல் மூலமாக உண்மையை நிலைநிறுத்த முடியாது.

இலங்கை அரசின் விசா ரணைகள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து சிங்கள அரசு திருந்தப் போவதில்லை

வரும் நிலையில், இலங்கை அரசாங்கத் திற்கு சர்வதேச விசாரணை அவசியப் படாது எனவும் அமைச்சர் சமரசிங்க வலியுறுத்தினார்.

சர்வதேச விசாரணையென்ற பெயரில் எமது செயற்பாடுகளுக்குள் தலையிட்டு குழப்ப நிலையினை உண்டுபண்ண வேண்டுமென்பதே மேற்குலக நாடு களின் விருப்பமாகும். இதற்காகவே, இவர்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டுமென ஒரேபிடியாக இருப் பதுடன் பலவந்தமாக ஏனைய நாடுகளையும் தமது தீர்மானத்திற்கு சார்பாக வாக்களிக்க வைத்துள்ளனர்.

சர்வதேச விசாரணை இலங்கைக்கு பொருத்தமில்லாத ஒன்றாகும். இதனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது டன் பொறுப்பேற்கப் போவது மில்லை. நவநீதம்பிள்ளை தலைமையிலான விசார ணைகளுக்கு நாம் எந்த வகையிலும் நாங்கள் அனுமதி வழங்கப் போவ தில்லையெனவும் அமைச் சர் உறுதியாக தெரிவித்தார். நவநீதம்பிள்ளை இலங்கை வருவதற்கு அரசாங்கம் ஏற்கெனவே அனுமதி வழங்கியிருந்த போதிலும், அவர் இங்கு வந்து இலங்கை குறித்த தவறான கருத்துகள் அடங்கிய அறிக் கையினையே சர்வதேசத்திற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முன் வைத்திருந்தார்.

இந்நிலையில், எதற்காக அவர் மீண்டும் இலங்கை வர அனுமதிக்க வேண்டுமெனவும் அவர் கேள்வியெ ழுப்பினார். அப்படியே எமது நாட்டிற்கு வந்தாலும் இலங்கை குறித்த தவறான அறிக்கையினையே அவர் மீண்டும் முன் வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அவர் மீண்டும் நாட்டிற்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனு மதி வழங்காது. நவநீதம் பிள்ளை மட்டுமல்ல, எந்தவொரு வெளிநாட்டுப் பிரதிநிதியும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி நாட்டிற் குள் வர முடியாது எனவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை அரசு திருந்தாத சிங்கள வெறிப் பாசிச அரசு என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவைப்படாது. இத் தகையவர்களுக்குத்தான் இந்தியா வக் காலத்து வாங்குகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/78045.html#ixzz2xsBfc9i6

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும். - (விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/78038.html#ixzz2xsBwqgHP

தமிழ் ஓவியா said...


குஜராத் தொழில் வளர்ச்சியில் முன்னோடியா?
2011-12-இல் மாநிலங்களில் தொழில்கள் நிலவரம் பற்றிய கருத் தாய்வினை மத்திய அரசின் புள்ளி யியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. அதில் வெளியிட்ட புள்ளி விவரப்படி, இந்தியாவில் 2011-12-இல் 2,17,554 தொழிற்சாலைகள் உள்ளது. அதில் 17 விழுக்காடு தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் உள்ளது என்றும் அதாவது 36,996 தொழிற்சாலைகள் அமைந்து, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும் அரசின் அறிக்கை கூறுகிறது. பணியாளர் எண்ணிக்கையிலும், 15.9 லட்சம் தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றி, நாட்டில் தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழில ளர்கள் எண்ணிக்கையிலும், தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளதாக, அறிக்கை கூறுகிறது.

ஆனால், தெருவுக்கு தெரு குடுகுடுப்பைக்காரன் போல சொன் னதையே சொல்லிக்கொண்டுவரும் மோடி கம்பெனிகள், குஜராத்தில் தொழில் வளம் நாட்டிலேயே முதன் மையாக இருப்பதைப்போல கதை யளக்கிறார்களே, அந்த குஜராத்தில் நிலைமை என்ன தெரியுமா?

தொழிற்சாலைகள் எண்ணிக்கை யிலும், பணியாளர் எண்ணிக்கையி லும் குஜராத் 4-ஆவது இடத்தில் தான் உள்ளது. குஜராத்தில் 22,220 தொழிற் சாலைகள் உள்ளன. 10.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ் டிரமும், மூன்றாவது இடத்தில் ஆந்திரபிரதேசமும் உள்ளதாக, அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

குஜராத் மட்டுமல்ல, பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் 4286 தொழிற்சாலைகள் தான் உள்ளது. அது 12-ஆவது இடத்திலும், பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான சட்டீஸ் கரில் 2472 தொழிற்சாலைகள் உள் ளது. அந்த மாநிலம் 16-ஆவது இடத்தில் உள்ளது.

இத்தகைய நிலையில் தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குஜராத் போல தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் உருவாக்குவோம் என பாஜக கூறி வருகிறது. இது தான் எங்களது முதல் பணி என்கிறார் மோடி.

நம்மூர் பாஜக சீட்டணியில் உள்ள மேதைகள், ஆஹா ஓஹோ என மோடி பஜனையில் ஈடுபட்டு, தொழிற்சாலை எண்ணிக்கையிலும், தொழிலாளர் எண்ணிக்கையிலும் முதல் இடத்தில் இருக்கும் தமிழ் நாட்டை அவமதிக்கிறார்கள் என் பதை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78044.html#ixzz2xsCFLu6w

தமிழ் ஓவியா said...

உங்கள் மூளை சுத்தமா இல்லையா...?

இரவில் நன்றாக தூங்குவதால் மூளை சுத்தமாகிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் தான் மூளையின் நச்சு கழிவுகள் வெளியேறுவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவர் தூங்கும் போது அவரது மூளையின் அணுக் களிடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதால் இந்த கழிவுகள் வெளியேறுகின்றன என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உறக்க நேரத்தில்தான் மூளை தன்னை தானே சுத்திகரிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வில் தெரிந்துக் கொண்டது. ஒரு எலியின் தலையில் மய் போன்ற திரவத்தை செலுத்திய விஞ்ஞானிகள், அந்த எலி உறங்கும்போது அந்த திரவம் வெளியேறியதை கண்டறிந்தனர்.

அதுவே அந்த எலி விழித்திருக்கும்போது திரவம் வெளியே வராத நிலை இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனோடு மூளை அணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியும், உறக்கத்தின்போது 60 சதவீதம் அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/78073.html#ixzz2xsEIIOrb

தமிழ் ஓவியா said...


நான் செய்தது குற்றமல்ல; புரட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா


உதகை, ஏப்.3- தொலைத் தொடர்புத் துறையில் நான் செய்தது குற்றமல்ல; புரட்சி என்று உதகை பிரச்சாரக் கூட் டத்தில் ஆ.இராசா பேசினார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது முறை யாக போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.இராசா புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பின், ஆட்சியர் அலுவலகம் அருகே கூடியிருந்த திமுக தொண்டர்களிடையே பேசி யதாவது:

நீலகிரி தொகுதிக்கு கலை ஞரால் மீண்டும் ஒப்படைக் கப்பட்டுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதி யில் நான் ஆற்றிய பணிகளை திரும்பத், திரும்ப பட்டியலி டுவதில் அர்த்தமில்லை. ஆனால், அந்த பணிகளின் போதுதான் எனக்குச் சோதனை ஏற்பட்டது. அமைச்சர் பத வியிலிருந்து விலகவேண் டிய நிலை உருவானது.

அதன்பின், இதுவரை யிலும் நான் அளித்த அனைத்து வாக்குமூலங்களி லும் எந்தவிதமான மாற்ற முமில்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்ட வற்றை ஜெயலலிதா தற் போது பேசி வருகிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே சிபிஅய்யும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி முடித்த பின், அது தொடர்பான விளக்கத்தை யும் அளித்திருந்தேன்.

ஆனால், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் எனக்கு எழுதிய கடிதத்தில் இருந்த அறிவுரையை கேட்காமல் நான் செயல்பட்டதாக ஜெய லலிதா கூறிவருவது உண் மைக்குப் புறம்பானது.

இது தொடர்பாக, நாடா ளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு நான் அனுப்பிய 102 பக்க விளக்க அறிக்கை மீது விவா தம் நடத்தப்பட்டபோது, அதில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், மைத்ரேய னும் பங்கேற்றிருந்தனர்.

ஆனால், அது எதுவுமே தெரியாமல் ஜெயலலிதா தற்போது பேசி வருகிறார். இதுதொடர்பாக, என்னுடன் நேரடியாக விவாதிக்க அவர் தயாரா என்பதை அறிவிக்க வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நான் எந்தக் குற்றமும் செய்ய வில்லை. நான் செய்தது புரட்சியேயாகும். புரட்சிக் காரனை எவ்வகையிலும் குற்றம் சாட்டக்கூடாது.

ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களை துண்டறிக்கையாக தயாரித் துள்ளேன். இது அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக் கும் தேடி வரும். அப்போது அனைவருக்கும் உண்மை தெரியும் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/78059.html#ixzz2xsEiqkt3

தமிழ் ஓவியா said...


துக்ளக் தர்பார்!


கேள்வி: நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்று முடிவு ஆன நிலை யிலும், பா.ஜ.க.வில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி என பிரதமர் கனவு வேட்பாளர்கள் உள்ளார்களே?

பதில்: இதைவிடக் கவலைக்கு இட மளிக்கக்கூடியது - தேர்தலுக்குப் பின் தோன்றக்கூடிய நிலை. மோடி பிரதமர் இல்லையென்றால், நம்மை ஆதரிக்கப் பல கட்சிகள் தயாராக இருக்கின்றன என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு, வேறு யாராவது சிலர் தங்களை முன்னி றுத்திக் கொள்ளலாமே! அதை நினைத் தால்தான் கவலையாக இருக்கிறது.
(துக்ளக், 9.4.2014)

இதன்மூலம் மோடிக்கு இரு பக்கமும் இடி என்பதை திருவாளர் சோ ராம சாமியே ஒப்புக்கொள்கிறார். பி.ஜே.பி. என்பது உள்கட்சிக் குழப்பம் மலிந்த நெல் லிக்காய் மூட்டை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

சோவே மனம் விட்டு விட்டார் என்பதுதான் உண்மை.

கேள்வி: காங்கிரசையும், தி.மு.க.வை யும் மட்டும்தானே ஜெயலலிதா கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறார். தனக்குக் கடும் போட்டி தரும் பா.ஜ.க. வையோ, அதன் கூட்டணி கட்சி களையோ விமர்சிப்பதில்லையே, ஏன்?

பதில்: அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்திருந்தால், அது வரு கின்ற தேர்தல் வெற்றிக்கு மட்டுமின்றி, அது சீரான, சிக்கல் இல்லாத வகையில் மத்திய ஆட்சி அமைப்புக்கும் உதவியி ருக்கும் என்ற எண்ணமுடைய என் னிடம் - இந்தக் கேள்வியைக் கேட்பதும் ஒன்றுதான்; கேட்காமல் இருப்பதும் ஒன்றுதான்.
(துக்ளக், 9.4.2014)

கேட்ட கேள்விக்குப் பதில் இருக் கிறதா?

இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி. இந்த நழுவல் பேர்வழிதான் அவாள் மொழியில் அறிவு ஜீவியாம்!

இவர்களின் அறிவு நாணயம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

ஜெயலலிதா அம்மையார் தன்னை எதிர்த்து நிற்கும் பி.ஜே.பி.யைப்பற்றி விமர் சிக்காதது - அரசியல் நேர்மையற்ற - சூது - தந்திரம்! இதை ஒப்புக்கொள்ள சோவுக் குத் தயக்கம். பூணூல் பாசம் பொல்லாதது ஆயிற்றே!

கேள்வி: பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெறுவது அவ்வளவு எளிதல்ல - என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளாரே, சரியா?

பதில்: உண்மைதான். பா.ஜ.க. மட்டுமே (கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை இல்லாமல்) பாராளுமன்றத்தில் 272 இடங் களைப் பெறுவது எளிதல்லதான்.
(துக்ளக், 9.4.2014)

மோடி அலை வீசுகிறது - மோடி அலை வீசுகிறது! என்று பீலா விட்டது எல்லாம் அசல் டூப்பு என்பதை சோ அய்யர் ஒப்புக்கொண்டுவிட்டாரே!

Read more: http://viduthalai.in/page-8/78063.html#ixzz2xsFC5Sz9

தமிழ் ஓவியா said...


நம்பத்தகுந்தவரா - சிந்திப்பீர்! ஜெயலலிதாபற்றி வாஜ்பேயி கூறியது என்ன?

கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும் போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

வாஜ்பேயி: இல்லை, நியாயமற்ற நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை. கூட்டணி அமைக்கப்படும் பொழுது இதைப்போன்ற நிபந்தனைகளை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.

கேள்வி: சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந் தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட் டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில், அ.தி.மு.க. வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார். சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங்களில் ஆதரவை வாபஸ் பெறு வோம் என்கிற மிரட்டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலையுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.

கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும் என்பதுதான் அந்த விலை. அது மட்டுமல்ல; பல ஊழல் வழக்கு களிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும் அவருடைய நிபந்தனையாக இருந் தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடி பணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதை உணர்ந்தவுடன் அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.
(குமுதம், 20.9.1999)

தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி.யும் - அ.இ.அ.தி.மு.க.வும் கூட்டணி வைப்பதாக ஒரு விவாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், ஜெயலலிதா சுயநலத்துக்காக, நிபந்தனைகளை வைக்கமாட்டாரா?

வாஜ்பேயிக்கே தண்ணிக் காட்டியவர் - மோடி எம்மாத்திரம்?

Read more: http://viduthalai.in/page-8/78127.html#ixzz2xxigsTch

தமிழ் ஓவியா said...


நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கை


திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து கல்வி பயில நான்காம் வகுப்பு முதல் பனிரெண் டாம் வகுப்பு முடிய புதிய மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 5.4.2014 தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மேற்படி இல்லத்தில் வழங்கப்படும். இவ்வில்லத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவிகளுக்கு அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும்.

சேர்க்கைக்கான விதிமுறைகள்:

1. தாய் - தந்தை இருவரும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்

2. பெற்றோர் ஊனமுற்றோர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப் படும் (மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்படவேண்டும்.

3. ஆண்டு வருமானம் ரூ.24,000/-த்திற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.

4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வில் லத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 31.5.2014

காப்பாளர்
நாகம்மையார் குழந்தைகள் இல்லம்,
பெரியார் நகர், திருச்சி-21

Read more: http://viduthalai.in/page-8/78120.html#ixzz2xxir7I3u

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்


நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார். - (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/78121.html#ixzz2xxj9RGdh

தமிழ் ஓவியா said...


தேர்தல் அறிக்கையைக்கூட வெளியிட முடியாத பாஜக?


இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்கி, ஒன்பது கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் 7-ஆம் தேதி துவங் குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அகில இந்திய கட்சிகள் என்ற நிலை யில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ் வாடி, ஜனதா தளம் மற்றும் மாநில அளவில் உள்ள கட்சிகள் திமுக, அதிமுக, மதிமுக, தேசிய காங்கிரஸ், சிவசேனா என தங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளி யிட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கை யில் கூறிய விஷயங்களை மக்கள் மன்றத்தில் விவாதிக்கவும், மக்கள் அக்கட்சியின் அடிப்படைக் கொள்கை களை தெரிந்து கொள்ளவுமே இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்படு கிறது என நாம் நம்பிக் கொண்டி ருக்கிறோம். ஆனால், கடந்த பத்தாண்டு காலமாக மத்தியில் எதிர்க்கட்சியாக இருந்த, அதற்கு முன்னர் அய்ந்தாண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக, இதுநாள் வரை, தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. வருகிற 7-ஆம் தேதி, அதாவது, முதல் கட்டத் தேர்தல் துவங்கும் நாளன்று, தேர்தல் அறிக் கையை வெளியிடுவோம் என பாஜக சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி சென்ற ஆண்டு செப் டம்பர் 2013-லேயே அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரேயே, அவர் பிரதமர் வேட்பாளர் என ஆர்.எஸ்.எஸ். தலைமை அங்கீகாரம் செய்து, அத்வானியின் எதிர்ப்பையும் மீறி, மோடியை அறிவித்துவிட்டது பாஜக. அக்டோபர் 2013-இல், தேர்தல் அறிக்கை சம்பந்தமாக மக்கள் கருத்துக்களை கேட்டறிய, பாஜக ஓர் இணையதளத்தையே உருவாக்கியது. இவ்வாறு, ஊருக்கு முன்னேயே, பிரதமர் வேட்பாளர், தேர்தல் அறிக்கை சம்பந்தமாக கருத்து என முந்திக்கொண்டதாக மார்தட்டிக் கொண்ட பாஜக, இதுவரை தேர்தல் அறிக்கையை ஏன் வெளியிடவில்லை? தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது? மோடிதான் பொதுக்கூட் டத்தில் பிரச்சினைகளைப்பற்றி பேசுகிறாரே என பாஜக சார்பில் ஊடகத்தில் ஒருவர் கருத்து கூறுகிறார். ஆமாம். வெற்றி பெற்றால், வருவது பாஜக ஆட்சியல்ல; மோடி ஆட்சி என பாஜகவே விளம்பரம் செய்யும்போது, தேர்தல் அறிக்கை யாவது; கொள்கையாவது; வெங்காய மாவது. ஏப்ரல் 7-ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்கும் அஸ்ஸாம், திரிபுரா மக்கள், பாஜகவின் தேர்தல் அறிக் கையைப் பற்றி எதுவும் தெரியாமல், வாக்களிக்க வேண்டும். இதுதான் பாஜகவின் சனநாயக மாண்பு?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78135.html#ixzz2xxjIPKdc

தமிழ் ஓவியா said...


ஊழல் மன்னன் மோடி பராக்! பராக்!!


* 5 ஆண்டுகளில் குஜராத் முதல்வர் வணிக விமானங்கள் அல்லது அரசு விமா னங்களை பயன்படுத்தாமல் ஏறத்தாள 200 பயணங்களுக்கு மேல் தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்தியுள்ளார் எங்கிருந்து வந்தது அவ்வளவு பணம்?

* குஜராத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூபாய் 900 என்ற மதிப்பில் 11000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 10,000 இதன் மூலம் அரசுக்கு இழப்பு ரூபாய் 33000 கோடி.

* குஜராத் அரசு தடை செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கால்நடை தீவ னத்தை 5 கிலோவிற்கு ரூ 240 வீதம் வாங்கி யுள்ளது ஆனால் அதன் சந்தை மதிப்பு 5 கிலோவிற்கு ரூ 120 முதல் 140 வரை தான்!!!

*அரசு நிலத்தை அரசிடமிருந்து அதானி என்னும் பெரு நிறுவனம்

ஒரு சதுர மீட்டர் 50 பைசாவுக்கு வாங்கி அதே நிலத்தை அரசு நிறு வனத்துக்கு ஒரு சதுர மீட்டர் 500 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் கோடி ஊழல் (மோடி ஊரு ஊராக சுற்றுவது அதானியின் சார்டர்ட் விமானங் களில் தான்)

* காண்ட்லா துறைமுகத்தின் 16000 ஏக்கர் நிலத்தை, சந்தை மதிப்பில் 6% ஆக இருக்க வேண்டிய குத்தகை தொகையை ஏக்கருக்கு வெறும் ரு 144 வீதம் ஏலம் விட்டதில் 2 லட்சம் கோடி ஊழல்!!

* கிருஷ்ணா கோதாவரி ஆற்றுபடுகை யில் எரிவாயு கண்டுபிடிக்கும் குஜராத் மின்கழக திட்டம் வெளிநாட்டு நிறுவனத் திற்கு எந்த ஏலத்தொகையுமின்றி விற்றதில் இழப்பு 20000 கோடி!!!

ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் மோடியின்மீது 17 ஊழல் கள் பற்றி விசாரணை நடப்பது ஏன்? வாக்காளர் களே சிந்திப்பீர்!

- அபு ரயான்

Read more: http://viduthalai.in/e-paper/78112.html#ixzz2xxjkj0sf

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வின் சுயநலவெறி!


பா.ஜ.க.வேட்பாளர் இல.கணேசனின் பிரச்சார வாகனம் தென் சென்னையில் வலம் வருகிறது. மோடி, இல.கணேசன், தாமரை ஆகிய படங்கள் மட்டுமே கொண்ட பிரச்சார வாகனம் அது.நான்கு பக்கமும் இப்படித்தான் இருக்கிறது.

ஒரு இடத்தில் கூட பா.ஜ.க.வை தோளில் சுமக்கும் விஜயகாந்த்,வைகோ, ராமதாஸ், பச்சமுத்து, ஏ.சி.சண்முகம்,ஈஸ்வரன் படங்கள் இல்லை. கூட்டணிக் கட்சிகளின் சின்னங்கள் கிடையாது கொடிகளும் இல்லை.இதுதான் பார்ப்பனீயம் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்? ஒன்றரை சதவீத வாக்குகள் மட்டுமே உள்ள பா.ஜ.க.,தமக்கு சேவகம் செய்யும் கூலிப்படையாக மட்டுமே மேற்படி தன்மான(?)த் தமிழர்களை கருதுகிறதோ!

Read more: http://viduthalai.in/e-paper/78113.html#ixzz2xxjzjw7V

தமிழ் ஓவியா said...


மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஏன்? கலைஞர் விளக்கம்

கேள்வி :- தி.மு. கழகம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து விலக உண்மையான காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சினை அல்ல என்றும், அலைக்கற்றை வழக்கு தான் காரணம் என்றும் ஜெயலலிதா கோவையில் கூறியிருக் கிறாரே?

கலைஞர் :- 1998-1999ஆம் ஆண்டுகளில் சொந்தப் பிரச்சினைகளை-சுயநலக் கோரிக்கைகளை முன் வைத்து மத்தியில் ஆட்சி செய்த வாஜ்பய் அரசை படாத பாடு படுத்தி, இறுதியாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து வாஜ்பய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறக் கடிதம் கொடுத்து, மத்திய அரசையே கவிழ்த்தவரின் எண்ணம் அப்படித்தானே இருக்கும்! அலைக் கற்றை வழக்குக்காக மத்திய அரசிலிருந்து விலகுவது என்றால், அந்த வழக்கில் தி.மு. கழகத்தினரை கைது செய்தபோதே விலகி வந்திருப் போம். ஆனால் அப்போது தி.மு. கழகம் மத்திய அரசி லிருந்து விலக வில்லை. மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகிய போது நான் விடுத்த அறிக்கையில், தமிழ் இளை ஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள்கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத் தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகிவிட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சி னையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தி யாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வ நாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும். இவைகளையெல்லாம் அய்.நா. மன்றத்திலும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தி யாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவு களைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன் மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலை களே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவை யிலிருந்தும், அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப் பட்டுள்ளது என்ற வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தால், தி.மு.கழகம் எதற்காக மத்திய அரசிலிருந்து விலகியது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். வாதத்திற்கு மருந்து உண்டு, விதண்டா வாதத்திற்கு மருந்து ஏது?

- (முரசொலி, கலைஞர் பதில்கள், 4.4.2014)

Read more: http://viduthalai.in/page-3/78117.html#ixzz2xxkGrcgX

தமிழ் ஓவியா said...


மதம் போதிப்பது என்ன?


வாழ்நாள் முழுதும் உழைத்தும் போதிய வருவாய் இன்றி வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மதத்தினால் போதிக்கப்படுவது என்ன? இந்தப் பூவுலகில் அடங்கி வாழ வேண்டும்; பொறுமையுடன் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் சொர்க்கத்தின் பரிசு தங்களுக்கு கிடைக்கும் என்ற மன அமைதி கொள்ள வேண்டும் என்பதே.

பிறரது உழைப்பின் மீது தம் வாழ்வினை ஆதாரமாகக் கொண்டு வாழும் நபர்கள் மதத்தினால் என்ன போதிக்கப் படுகிறார்கள்? இவ்வுலகில் வறியோர்க்கு வழங்கும் தரும நெறியினைக் கடைப்பிடித்து வாழ்தல் என்ற சுலபமான வழியில் சுரண்டல்காரர்களின் வாழ்வினையும் மதம் நியாயப்படுத்துகிறது.

அதாவது, சொர்க்கத்தில் நல்வாழ் வினைப் பெறுவதற்குச் சுலபமான விலையில் பயணச் சீட்டுகள் அவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

- மதத்தைப் பற்றி என்னும் நூலில் லெனின்

Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxkuNKsQ

தமிழ் ஓவியா said...

காந்தியார் மீது நேருவின் தாக்குதல்!

(புதுடில்லியில் 3.1.1947 அன்று நடைபெற்ற இந்திய விஞ்ஞான மாநாட்டில் நேரு அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. சத்திய சோதனை என்றும், கடவுள் சொன்னார் என்றும் அடிக்கடி கூறிக் கொண் டிருந்த காந்தியாரை மறைமுகமாகத் தாக்குகிறார் நேரு. படித்துப் பாருங்கள் - உங்களுக்கே புரியும்! - ஆ.ர்.)

தனிப்பட்ட நபரொருவரின் சத்திய சோதனையல்ல விஞ்ஞானம். மக்கள் நலனுக்குப் பயன்படுவதாயின், அது தனிப்பட்டவரின் சோதனையைக் காட்டிலும் பரப்பு மிகவுள்ளதே, பட்டினியால் பரிதவிக்கும் மனிதனுக்கு சத்தியம்; உண்மையென்பதெல்லாம் அர்த்தமற்ற வெறுஞ் சொற்களே. அவனுக்கு உணவு வேண்டும். பட்டினிப் பசித்துயரில் சூழ்ந்துள்ளவனுக்கு கடவுளைப்பற்றிக் கவலையில்லை. அவனுக்கு உணவு வேண்டும். இந்தியா பசிப் பட்டினியால் அவதியுற்று வரும் நாடாகும்.

பட்டினிப் பட்டாளங்கள் முன்னிலையிலா கடவுள் சத்தியம்!

கோடிக்கணக்கான பட்டினிப் பட்டாளங்களின் முன்னிலையில் கடவுள், சத்தியம் என்று வெற்றுரை பகருவதும், அழகொழுக வாழ்க்கைத் தத்துவங்களை யெடுத்தியம்புவதும், அவர்களை கேலி செய்வதற்கே யொப்பாகும் பட்டினியால் வதையுறுவோருக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தந்தாக வேண்டும். அவர்களுக்குக் கல்வி அளித்தாக வேண்டும். சுகாதார வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாக வேண்டும்.

சுருக்கமாக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது வேண்டப்படும் வசதிகள் அத்தனையும் அளித்தாக வேண்டும். இவற்றை நாம் செய்து விட்டோ மானால் அதன் பிறகு வேதாந்தம் பேசலாம்; கடவுளைப்பற்றி நினைக்கலாம். எனவே, இந்தியாவின் 40 கோடி மக்களைப் பற்றிய சிந்தனையிலீடுபட வேண்டும் விஞ்ஞானிகள். விஞ்ஞனம் பரப்புவோம். பண்டிதர் ஜவஹர் மேலும் கூறியதாவது:-

நாங்கள் பெரிதும் விரும்புவது

சர்க்கார் நடவடிக்கையெடுத்துக் கொள்வரென்று கருதி விஞ்ஞான காங்கிரஸ் இவ்விஷயங்களைக் கவனியாது வெறுமென இருந்து விடாது என நம்புகிறேன். சர்க்கார்கள் நல்லனவாயுமிருக்கலாம்; கெட்டன வாயுமிருக்கலாம்.

ஆனால், எல்லா சர்க்கார்களும் ஆமை வேகத்தில் செல்லக்கூடியனவே ஆகும். அவர்களை சுறு சுறுப்பாக்குவது ஒன்றே ஒன்றுதான். மறைமுகமாக அவர்களது எதிர்காலத் தைப் பாதிக்கக் கூடிய பொதுமக்கள் கூச்சலே அது. சர்க்காரிடமிருந்து எதுவுமெதிர்பார்க்க விஞ்ஞானி களுக்கு உரிமை உண்டு.

தற்கால இந்திய சர்க்காரின் உறுப்பினன் என்ற முறையில் நான் இதைக் கூற ஆசைப்படுகிறேன். இந்தியாவில் விஞ்ஞானம் பெருத்த அளவில் வளர்ச்சியுற வேண்டுமென நாங்கள் பெரிதும் விரும்பு கிறோம்.

விஞ்ஞான ஆராய்ச்சியை விரிவுபடுத்த எங்களாலியன்றதைச் செய்வோம். விஞ்ஞான முன்னேற்றத்திற்கும், அதன் வாயிலாக உலக மக்களின் நலத்துக்கும் நாங்கள் உலக விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க ஆயத்தமாகியுள்ளோம்.

Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxlCiFbi

தமிழ் ஓவியா said...


மத ஆதிக்கத் தொல்லை!


மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகிறதே ஒழிய, சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.

கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்காக குடிஅரசு பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக புரட்சி பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று.

இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினந்தோறும், நிமிடந்தோறும் அடைந்து வரும் தொல்லையும், நசுக்குச்சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது.

பார்ப்பனர்களை உத்தியோகஸ்தர் களாகக் கொண்ட போலீஸ் இலாகா, போஸ்டல் இலாகா, ரயில்வே இலாகா, நிதி இலாகா, நிருவாகம் மற்றும் அநேக துறைகளில் கீழே இருந்து அய்கோர்ட் நிருவாக சபை வரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம் சித்திரவதைக் கொப்பாகவே இருந்து வருகின்றது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlLlO30

தமிழ் ஓவியா said...

ஈ.எம்.எஸ். பார்வையில் மதம்

புராதன பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீஸிலும் ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கு உருவாகியது.



சிந்து சமவெளி தடயங்களை பரிசீலிக்கும் போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீஸிலும் ரோமிலும் இருந்தது போன்ற அடிமைமுறை சிந்து சமூகத்தில் இருந்திருக்கவில்லையா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தையே அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள் அடிமைகள் - எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்குப் பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உபஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.

இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கு உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது. அடிமை முறையிலுள்ளதுபோல தெளிவானதும் மறுக்க முடியாதது மான சுரண்டல் முறைக்கு பதிலாக வருணாசிரம தர்மத்தினுடையவும் ஜாதி ஆசாரங்களுடையவும், இவைகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற மத நம்பிக்கை களுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல்ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன.

- ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய இந்திய வரலாறு என்னும் புத்தகத்தின் 36ஆம் பக்கத்தி லிருந்து

குறிப்பு: இந்திய சமூகத்தில் வர்க்க பேதத்தை விட ஜாதி பேதமே மேலோங்கியுள்ளது என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஈ.எம்.எஸ். இங்கு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlcGiJv

தமிழ் ஓவியா said...

முதல்தரமான விரோதி!

எல்லா மதங்களுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் முதல்தரமான விரோதியாக இருப்பது எது தெரியுமா? பகுத்தறிவு என்று இருக்கிறதே ஒரு பொருள் - அது தான்! வேறு எது?



- வால்டேர்

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxll5DZM