Search This Blog

10.4.14

பார்ப்பான் என்னைப் பகவான் இராமசாமி ஆக்கி விடுவானே! - பெரியார்

நம் மக்களை மூட நம்பிக்கைக்காரராக்குவதையே பார்ப்பனர் குறிக்கோளாகக் கொண்டுள்ளதை உணர வேண்டாமா?

தந்தை பெரியாரவர்கள் அறிவுரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தோழர்களே! நீங்கள் முதலில் நாங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். திராவிடர் கழகத்தார், சுயமரியாதை இயக்கத்தார் ஆகிய நாங்கள் சட்டசபைக்குப் போகாதவர்கள். எங்கள் இயக்கத்தின் பெயரால் எவரும் சட்டசபைக்குப் போகமாட்டார்கள். அப்படிப் போக வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த இயக்கத்தைவிட்டு வெளியேற வேண்டியவர்களே ஆவார்கள். தி.மு.கழகம், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்ததற்குக் காரணமே தி.மு.க சட்டசபைக்கு நிற்க வேண்டும் என்பதற்காகப் பிரிந்து சென்றவர்களே ஆவார்கள். திராவிடர் கழகத்திலுள்ளவர்கள் முனிசிபல் தேர்தலில் கூட கழகத்தின் பெயரைக் கொண்டு நிற்க முடியாது. தனிப்பட்ட முறையில் நிற்க வேண்டும்.

இன்று கலைஞரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சிறந்த பகுத்தறிவுவாதி தான். இராமாயணத்தை எரிக்க வேணடும் என்று சொன்னவர்தான். அவர் வாயில் இன்று சீதை விபச்சாரி என்று சொல்ல முடியாதே. அப்படிச் சொன்னால் அவருக்கு மக்கள் ஓட்டுப் போடமாட்டார்களே! நம் நாட்டில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் - மத புராண இதிகாச நம்பிக்கைக்காரர்கள் - முட்டாள்தன மூட நம்பிக்கை நிறைந்த மக்களே அதிகம். அவர்களிடம் போய்ச் சீதை விபச்சாரி என்று சொன்னால் யார் ஓட்டுப் போடுவார்கள்? எனவே அவர்களால் உண்மையை எடுத்துச் சொல்ல முடியாது.

ஆனால், நாங்கள் உங்கள் ஓட்டை எதிர் பார்க்காதவர்களானதால் உங்களிடமிருக்கிற மூட நம்பிக்கை - முட்டாள்தனம் - காட்டுமிராண்டி த்தன்மை ஆகியவற்றை எடுத்துக்கூற முடிகிறது. நம் மக்கள் காட்டுமிராண்டி மக்களாவார்கள். நம்முடைய மொழி நம் காட்டுமிராண்டித் தன்மையை வளர்ப்பதாக இருக்கிறதே ஒழிய, நம் மொழியால் நாம் அறிவு வளர்ச்சியடைவது கிடையாது. நம் இனத்தில் மிகப் பெரிய மனிதர்களாக மதிப்புப் பெற்றிருக்கும் சர்.ஏ.ராமசாமி முதலியார், இலட்சுமணசாமி முதலியார் ஆகியவர்களே காட்டுமிராண்டிகள் என்றால் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லையே. அவர்கள் வீட்டில் போய்ப் பாருங்கள், அவர்கள் நெற்றியில் கோடு இருக்கும், வீட்டில் குழவிக்கல் (கடவுள்) பொம்மைகள் - படங்கள் இருக்கும். சிறந்த படிப்பும் - மேன்மையும் பெற்றிருப்பவர்கள் கதியே இப்படியென்றால் பாமர மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லையே!

நம் கடவுள்கள் மதம் - சாஸ்திரம் - புராணம் - இதிகாசம் - மொழி - இலக்கியங்கள் ஆகியனயாவும் காட்டுமிராண்டிக் காலத்தவையேயாகும். நாங்கள் இதை எதிலிருந்து சொல்கிறோம் என்றால், திருக்குறளே காட்டுமிராண்டிக் காலத்து நூல் என்பதிலிருந்து சொல்கின்றோம்.

நம்மை மடையர்களாக - ஈனஜாதிக்காரர்களாக - நாலாம் ஜாதிக்காரர்களாக - இழி மக்களாக - மானமற்றவர்களாக - சூத்திரர்களாக ஆக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையே நம் கடவுள் - மதம் - சாஸ்திரம் - சாதி - பண்டிகைகள் - விழாக்கள் எல்லாம் ஆகும். நம்முடைய இழிவை சூத்திரத் தன்மையை - மானமற்றத் தன்மையை நிலை நிறுத்தக்கூடிய கடவுள் - மத - சாஸ்திர - புராணங்களை நாம் பின்பற்றுகிறோம், அதன்படி நடக்கிறோம் என்றால் நாம் காட்டுமிராண்டிகளா இல்லையா?

நம்முடைய மக்களின் இன இழிவு, மானமற்ற தன்மை, சூத்திரத்தன்மை, மடமை, முட்டாள்தனம், பகுத்தறிவற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமென்பதற்கும், நம் மக்கள் மற்ற உலக மக்களைப் போல இழிவற்று சமத்துவத்தோடு வாழ வேண்டும்மென்பதற்காகவும், தொண்டாற்றக் கூடிய இயக்கம் இந்தியாவிலேயே இது ஒன்றுதான் ஆகும்.

நம் நாட்டில் எத்தனையோ தெய்வீக சக்தி பொருந்தியவர்கள் - மகாத்மாக்கள் - மகான்கள் - ஆனந்தாக்கள் - தீர்த்தாக்கள் - புலவர்கள் - வித்வான்கள் - டாக்டர்கள் - மேதாவிகள் எல்லாம் தோன்றியிருக்கின்றார்கள். ஆனால் ஒருவன் கூட ஒரு விஞ்ஞான அதிசயத்தைக் கண்டுபிடிக்கவில்லையே! இவனெல்லாம் கணடுபிடித்தது இந்தக் குழவிக்கல்லையும், குப்பைப் புராணங்களையும் தானே!

இந்த மின்சார விளக்கு, மைக் டெலிபோன், ரேடியோ, ஏரோப்பிளேன், ரயில் முதல் நெருப்புப் பெட்டிவரைக் கண்டு பிடித்தவன் அயல் நாட்டுக்காரன்தானே!


நம்நாட்டில் காலிப்பசங்கள் எல்லாம் திருமுருக கிருபானந்தவாரி, மகா முட்டாளெல்லாம் மகாத்மா காந்தியாகும் போது நான் மகானாக முடியாதா? காந்தியாவது மகாத்மா ஆனார்! நான் நாளைக்கே கடவுள் இல்லையென்று இத்தனை நாள் சொன்னது தவறு. கடவுள் இருக்கிறார் என்று சொன்னால் போதுமே! பார்ப்பான் என்னைப் பகவான் இராமசாமி ஆக்கி விடுவானே! பாப்பாத்தியெல்லாம் என் காலைக் கழுவுவார்கள், பார்ப்பான் வீட்டிலெல்லாம் என் படம் தொங்குமே! அந்தப்படி நான் நடந்தால் இந்தப் பிள்ளைகளெல்லாம் பாவாடை, கோவணம் இல்லாமல் இன்றைக்கு மாடு மேய்த்துக் கொண்டல்லவா இருக்கும்? நம் மக்களெல்லாம் பார்ப்பானால் அடிமைகளாக அல்லவா நடத்தப்பட்டுக் கொண்டு இருப்பார்கள்? 50 வருஷமாகக் கடவுள் இல்லை; பார்ப்பான் ஒழிக, சாஸ்திரம் ஒழிக, மதம் ஒழிக என்று கத்தியதால் தானே இன்றைக்குத் தீண்டப்படாதவன் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நம் மக்கள் கலெக்டராகவும் - மந்திரியாகவும் இருக்கின்றனர். நம் மக்கள் ஒரளவாவது மானத்தோடு வாழ முடிகிறது.

நம் நாடு மட்டுமல்ல, உலகம் பூராவும் காட்டுமிராண்டித்தன்மையிலிருந்து தான் நாகரிகம் பெற்றிருக்கின்றது. நம் மக்கள் உணவைச் சமைத்துச் சாப்பிட்டு நாகரிகமாக வாழ்ந்த காலத்தில், கண்டதை உண்டு, தாய், தங்கை என்கின்ற பேதமற்று வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் மற்றவர்கள் எல்லாம். ஆனால் அவர்கள் எல்லாம் இன்று நாகரிகத்தில் சிறந்து அறிவு பெற்று பல அதிசய - அற்புதங்களைச் செய்யும் போது, நாம் பழம் பெருமைகளையே நினைத்துக் கொண்டு காட்டுமிராண்டித் தனன்மையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

இந்தக் கிருபானந்த வாரியார் எத்தனைக் காலிப்பயல் எத்தனைப் பார்ப்பனத்தியைக் கெடுத்திருக்கிறான். எத்தனைப் பெண்களைக் கெடுத்திருக்கிறான் என்பது எனக்குத் தெரியுமே! பேசும்போதே பெண்களைப் பார்த்துக் கண்ணடிப்பான். இன்று அவன் தான் பெரிய மனிதனாக இருக்கிறான். காந்தி வழி நடப்போம், வெங்காய வழி நடப்போம் என்கிறானே! என்ன காந்தி வழி அவரால் ஒரு ஊசி முனை அளவு கூட நம் மக்களுக்கு நன்மை இல்லையே! ஏழு ஜென்மத்திற்கு ஒருவன் பார்ப்பானுக்குப் பிறந்தால் தான் மனிதனாக (பார்ப்பானாக) முடியும் என்று சொன்னவர் காந்தி தானே! அவர் வழியில் நடக்கிறேன் என்றால் ஏழு ஜென்மத்திற்குத் தன் மனைவியை - தாயைப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்து மனிதனாகப் போகிறானா? என்று கேட்கின்றேன்.

அரசியல் பேசுகிறவன் எவனாக இருந்தாலும் அவனால் உண்மையைப் பேச முடியாது. உண்மையைப் பேசினால் அவன் அரசியலுக்கு வர முடியாது. அரசாங்கத்தால் இன்று நமக்கு ஏற்பட வேண்டியது என்ன? நம் சூத்திரத் தன்மை இழிவு நீங்க வேண்டும். அதற்கான காரியத்தைச் செய்யக்கூடியவர்கள் அல்லவா அரசியலுக்கு வரவேண்டும்? நம் நாட்டில் அரசியலில் இருப்பவன் (ஆளும்கட்சி, எதிர்கட்சி) இரண்டு பேர்களும் தமிழன். அவன்தான் ஒருவனுக்குக்கொருவன் (தமிழனுக்குத் தமிழன்) அடித்துக் கொள்கின்றானே தவிர, ஒரு பார்ப்பான் கூட இடையில் சிக்குவது கிடையாதே! இதைக் காட்டுமிராண்டி அரசியல் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது?
நான் தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதில் புலவர்களுக்குக் கோபம் வருகிறதே தவிர, அதில் உள்ள உண்மையை உணர்வதில்லையே! தமிழனுக்குப் பிறந்திருந்தால் இப்படிச் சொல்லமாட்டார், அவர் தமிழனுக்குப் பிறந்திருந்தால் இப்படிச் சொல்லமாட்டார். அவர் தமிழனுக்குப் பிறக்கவில்லை என்று ஒருவர் எழுதி இருக்கிறார். அவர் யாருக்குப் பிறந்தார் என்பதை எப்படி அறிந்து கொண்டாரோ தெரியவில்லை! எவர் வேண்டுமானாலும் சொல்லட்டும் நான் மரியாதையோடு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன். நம் மொழியில் நம் மக்களின் வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? இன்றைய விஞ்ஞானங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது ஏதாவது நம் மொழியில் இருக்கிதா? மனிதனின் அறிவு விஞ்ஞானப் புதுமைகளை நம் மொழியில் அறிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டால் ஆக்கிக் கொண்டால் போச்சு என்றுதான் சொல்கிறானே தவிர, இன்னது இருக்கிறது என்று எடுத்துக்காட்டவில்லையே! உன் மொழியில் தான் நீ, நான், நீங்கள், வாத்தா, வக்கா என்பது போன்ற காட்டுமிராண்டி வார்த்தைகள் எல்லாமிருக்கின்றதே ஒழிய வேறு மொழிகளில் இல்லை.

ஆங்கில மொழியில் அரசனைக் குறிப்பிடுவதாக இருந்தாலும் பிச்சைக்காரனைக் குறிப்பிடுவதாக இருந்தாலும் (He) ஹி "அவன்" தான். அதுபோல மஹாராணியைக் குறிப்பிடுவதாக இருந்தாலும் மிக இழிவானப் பெண்ணைக் குறிப்பிடுவதாக இருந்தாலும் (She) ஷி "அவள்" தான். ஏன் சொல்கிறேனென்றால் மனிதன் நாகரிகம் பெற்று, பண்பாடு பெற்று, அறிவு வளர்ந்த காலத்தில் ஏற்பட்ட மொழி ஆங்கிலம்; காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்ட மனிதன் அறிவற்று பண்பாடற்று இருந்த காலத்தில் தோன்றியது தமிழ்மொழியாகும். எனவே தான் மனித வளர்ச்சிக்கு மானத்திற்கு அதில் ஒன்றுமில்லை; நீங்களே தான் சிந்தியுங்களேன்! தமிழ் காட்டுமிராண்டி மொழியா இல்லையா? என்று, தமிழில் இன்றைக்குப் பாரதிதாசன் கவிதையை எடுத்தால் அதில் நம் வளர்ச்சிக்குரிய கருத்துகள் இருக்கின்றன. கம்பராமணத்தில், பெரிய புராணத்தில் நம் இழிவு இருக்கிறதே ஒழிய, நம் வளர்ச்சிக்குரியது எதுவும் இல்லை. இவை மனிதன் அறிவு வளர்ச்சி பெறாத காலத்தில் மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.

அயல் நாட்டுக்காரன் வராமல் நம் இழிவை ஒழித்துக் கொள்ள முடியாது; இன்னும் 10 மாநிலங்களில் தி.மு.க அமைச்சரவை அமைத்தாலும் கூட அது டில்லி சொல்லுகிறபடிதானே ஆள வேண்டும்? டில்லி ஆட்சி உன் கைக்கு வந்தாலும், 1000 தி.மு.கழகம் வந்தாலும் ஜாதியை ஒழிக்க முடியாதே! வெள்ளைக்காரன் - துலுக்கன் வந்தால் தானே ஒழிக்க முடியும்? ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால் நமக்கிருக்கிற அரசமைப்புச் சட்டமே ஜாதி - மதம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது ஆகும்; அதை ஒழிக்க வெள்ளைக்காரனும், துலுக்கனும் வந்தால் தானே முடியும்? வேண்டுமானால் காமராஜரையே கேளுங்களேன்! நம் நாட்டுக்காரன் 1000 வருஷங்கள் ஆட்சி செய்தாலும் சாதியை ஒழிக்க முடியாதே! இந்தக் கலைஞரே ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஓர் உத்தரவுப் போடுகிறார் என்றால், நாளைக்கே பார்ப்பான் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைப்படி இந்த உத்தரவு செல்லாது என்று கோர்ட்டில் போட்டால் கலைஞர் போட்ட உத்தரவு செல்லாது என்று தானே தீர்ப்புச் சொல்லுவான். எனவே துலுக்கன் - வெள்ளைக்காரன் போன்ற அயல்நாட்டுக்காரன் வந்தால் தான் நம் இழிவைப் போக்க முடியும்.

உலகமெல்லாம் பகுத்தறிவு உணர்ச்சிப் பெற்று, விஞ்ஞான அறிவுப் பெற்று, பல அதிசய அற்புதங்களை விஞ்ஞானத்தின் மூலம் செய்து வரும் போது நாம் காட்டுமிராண்டித் தன்மையில் இருந்து கொண்டிருக்கின்றோம். நம்மைத் தவிர உலக மக்கள் சம்பிரதாயத்திற்காக ஒரு கடவுளையும் - மதத்தையும் வைத்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, நம்மைப் போல் வாழ்விற்கு வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்வது கிடையாது.

சமுதாயத் துறையில் மிக உயர்ந்த சாதி என்கின்ற பார்ப்பான் - மிகக் கீழான சாதி - தீண்டப்படாதவன் என்கின்ற பறையன், இதற்கு இடையே சூத்திரன் என்கின்ற நாம், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருந்து கொண்டு இருக்கின்றோம். இது போன்று உலகத்தில் வேறு எந்தச் சமுதாயத்திலும் இல்லை.

இந்த நாட்டிற்கு உரிமையான, இந்த நாட்டில் 100 க்கு 97 பேர்களாக இருக்கிற நாம் 100 க்கு 3 பேராக இருக்கிற - இந்நாட்டிற்குச் சிறிதும் உரிமையில்லாத சின்ன ஜாதிக்காரனால் சூத்திரன் என்று அழைக்கப்படுகின்றோம். இந்த நாட்டிற்குச் சொந்தக்காரரான நாம் - இந்நாட்டு மக்களுக்கு - சமுதாயத்திற்குத் தேவையான உணவு, உடை, மற்றப் பொருள்கள் யாவற்றையும் நம் உழைப்பால் உற்பத்தி செய்து கொடுக்கிற நாம் ஏன் சூத்திரனாகப் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக இருக்க வேண்டும் என்று எவனுமே சிந்திப்பது கிடையாதே! நாம் தானே இந்த இழிவு ஒழிய வேண்டுமென்று பாடுபடுகின்றோம். நம் இயக்கம் ஒன்று தானே இதற்காகத் தொண்டாற்றிக் கொணடு வருகிறது.

நம்மைத் தவிர மற்ற உலகத்திலிருக்கிறவன் எல்லாம் விஞ்ஞானத்தின் மூலம் சந்திரனில் குடியேறுவது எப்படி என்பதைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றான்.

நம் நாட்டுக்காரன் என்ன கண்டுபிடித்தான் என்றால், பிள்ளைப் பெற வேண்டுமா இந்தக் கோயியிலிலே போய் இராத்திரியிலே போய்க் குளி என்கிறான். ஜாதகம் - ஜோசியம் - சகுனம்  நேரம் எல்லாம் பார்க்கின்றான்.


"திருப்பதி கோயிலில் பாம்பு வந்தது. அது மனிதனாக மாறிற்று," "நேற்று ஒரு சிறுவன் தன் பூர்வஜன்ம நினைவு வந்து தனது ஆசிரியரைக் கட்டித் தழுவிக் கொண்டான்" என்பது போன்ற பொய்யான செய்திகளை எல்லாம் பத்திரிகைகளில் போட்டு மக்களை எப்படியும் மூட நம்பிக்கைக்காரர்கள் ஆக்க வேண்டுமென்று கட்டுப்பாடாக பார்ப்பான் பிரசாரம் செய்கின்றான். அதோடு இராமாயணம் - பாரதம் - கீதை என்று பிரசாரம் செய்து, மக்களை மூட நம்பிக்கைக்காரன் ஆக்குவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு பார்ப்பான் வேலை செய்கின்றான்.


இன்றைக்கிருக்கிற பகுதத்றிவு ஆட்சி போன்று இதுவரை அமைந்தது கிடையாது. இதுவரை நம் நாட்டிலிருந்த ஆட்சிகள் என்பவை யாவும் பழைமையைப் பாதுகாக்கும் முடநம்பிக்கை ஆட்சியேயாகும் என்பதோடு, நம்மக்கள் படிக்கக்கூடாது - அது சாஸ்திரத்திற்கு விரோதம் என்கின்ற கருத்துள்ள ஆட்சிதான் நடைப்பெற்று வந்தது. காமராசர் வந்த பின் தான் நம் மக்கள் படிக்க வசதி செய்து செய்து கொடுத்தார். காமராசர் பார்ப்பானரிடமிருந்த வெறுப்பில் நம் மக்களுக்குக்  கல்வியைக் கொடுத்தார். ஆனால் அவர் பகுத்தறிவோடு நடக்க முடியவில்லையே! அவருக்கு வேண்டியவர்கள் அவருக்குத் துணையாக இருக்க கூடியவர்கள் காங்கிரசில் ஒருத்தர் கூட இல்லை. டில்லியிலும் அவருக்கு ஆதரவாக இருக்க கூடியவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாதே! இங்கும் அண்ணா போனதால் இவர்களுக்கு தைரியமில்லை. பார்ப்பனர்களுக்கும் வேண்டியவர்களாக நடந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், நாம் கொஞ்சம் மார்ஜின் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

என்றாலும், நாம் அவர்களை ஆதரிப்பதன் மூலம் இன்னும் பல நன்மைகளை அடைய வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்முடைய கடமை இந்த ஆட்சி இன்னும் நிலைக்க வேண்டும், இன்னும் 10 வருடங்களுக்காவது இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்று பாடுபடுவதே! அப்போது தான் நம் மக்கள் 100 க்கு 65 பேர்களுக்கு மேல் படித்தவர்களாக முடியும். என்னதான் இவர்கள் தவறு செய்தாலும் கணக்குப் போட்டுப் பார்த்தால் காங்கிரஸ்காரன் செய்ததில் 10 இல் ஒரு பங்குக்கூட இவர்கள் செய்தார்கள் என்று சொல்ல முடியாது.

அண்ணா இருந்தால் ஒன்றிரண்டு மந்திரிகளைக் குறைத்திருப்பார். இவர்களால் முடியவில்லை. எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 3,4 பேர்களுக்கு மந்திரி பதவி கொடுத்திருக்கிறார்கள் என்றாலும், பதவி கிடைக்காதவர்கள் பதவியை எதிர்பார்த்திருந்தவர்கள் என்பவர்கள் குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள், நீங்கள் இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.


-------------------------------------- 31.03.1969 அன்று சென்னை - பெரம்பூர் செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையிலுள்ள பூங்காவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. --"'விடுதலை", 08.04.1969

25 comments:

தமிழ் ஓவியா said...


சீனாவில் உள்ள பேருந்து நிலையத்தை குஜராத்தில் உள்ளதாகக் காட்டுபவர்கள் யார்?


அமெரிக்காவில் விற்பனைக்காகக் கட்டப்பட்டிருந்த பங்களா ஆ.இராசாவுக்குச் சொந்தமானதாம்

இணைய தளத்தில் பித்தலாட்டமாகப் பிரச்சாரம் செய்கிறவர்கள் யார்?

சீனாவில் உள்ள பேருந்து நிலையத்தை குஜராத்தில் உள்ளதாகக் காட்டுபவர்கள் யார்?

இந்தப் பொய்யர்களுக்குப் பாடம் கற்பியுங்கள் - வாக்காளர்களே!

மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலத்தில் தமிழர் தலைவர் உரை


மேட்டுப்பாளையம், ஏப்.9- இணைய தளங்கள்மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு நல்லதோர் பாடத் தைக் கற்பிக்க இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

7.4.2014 அன்று மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்ட தாவது:

இந்தத் தேர்தல் சமதர்மத்துக்கும், குலதர்மத்திற்கும் இடையே நடக்கும் போராட்டமாக இருந்தாலும்கூட, வெற்றி பெறப் போகின்ற அணி, டாக்டர் கலைஞர் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியே! இது எங்களின் ஆசை அல்ல; ஆலமரத்து ஜோசியத்தின் ஆரூடம் அல்ல; நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கிற வர்கள். அவர்களைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறவர்கள்.

திராவிடர் கழகத்துக்காரர்கள் அரசியலுக்குப் போகாதவர்கள். தேர்தலில் நிற்காதவர்கள். அவர்களது கூட்டணியில் இல்லாதவர்கள். இவர்களுக்கு என்ன அக்கறை என்று ஒரு சிலர் நினைக்கலாம்.

எங்களுக்கு அக்கறை மட்டுமல்ல, கவலையும்கூட! என்ன கவலையென்றால், இந்த நாடு மீண்டும் மதவெறியர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்ற கவலை! மீண்டும் குலதர்மத்தை ஏற்றிவிடக் கூடாது என்பது எங்களின் கவலை.

பலர், வாக்காளப் பெருமக்கள் அலட்சியமாக வாக்குகள் அளித்தால், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து, அந்த மக்களை மட்டும் பாதிக்காது. அய்ந்தாண்டுகளை மட்டும் பாதிக்காது. வருகின்ற பல தலைமுறைகளை பாதிக்கும் என்ற கவலை திராவிடர் கழகத்துக்காரர்கள், பெரியார் தொண்டர்களுக்கு உண்டு.

எனவே, வருகிற தேர்தல் அரசியலை மட்டும் கரு தாமல், அடுத்த தலைமுறைகளைப் பாதிக்காத, காப்பாற்றுகிற முயற்சியாக அமையவேண்டும்.

ஏற்கெனவே சரியான தீர்ப்பு கொடுத்து, அதன்மூல மாக அய்ந்தாண்டு காலத்திலே, தொகுதியையும் வளர்த்து, உலகத்தின் மிகப்பெரிய பழியையும் ஏற்று, ஒரு ஒழுக் கத்திற்குரிய, சிறந்த சுத்த வீரராக வெளியே வரக் காத் திருக்கக்கூடிய நம்முடைய ஆ.இராசா அவர்களை வெற்றி வேட்பாளராக டாக்டர் கலைஞர் அவர்கள் நிறுத்தி யிருக்கிறார்கள் என்று சொன்னால், நீங்கள் கொடுக்கும் தீர்ப்பு வெறும் நீலகிரி தீர்ப்பு அல்ல; உலகத்தையே செவி சாய்க்க வைக்கக்கூடிய தீர்ப்பாக இருக்கப் போகிறது!

இரண்டு, மூன்று கூட்டணிகள் இருந்தாலும்கூட, முதல் வெற்றியை, அச்சார வெற்றியை இன்றைக்கு இராசாவுக்குக் கொடுத்திருக்கிறது. அந்த அச்சார வெற்றி என்னவென்றால், உங்களுக்குத் தெரியும்.


தமிழ் ஓவியா said...

பா.ஜ.க.வால் இந்தத் தொகுதியில் போட்டியிட முடி யாது என்ற சூழல் ஏற்பட்டு விட்டது என்று சொன்னால், இந்தத் தொகுதியில் நிற்க முடியாதவர்களை, நாட்டின் ஆட்சியை இவர்களிடம் ஒப்படைத்தால் என்னாகும்?

தேர்தலில் வேட்பாளர் மனுவையே சரியாக விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் - இந்நாட்டையே அவர்களிடம் ஒப்படைத்தால், நாடு எந்த அளவிற்குப் போகும்? மோடி அலைவீசுகிறது! மோடி அலை வீசுகிறது என்றவர்கள், இன்றைக்குத் தேர்தலில் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறதென்றால், இது தி.மு.க.வுக்கு, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குக் கிடைத்திருக்கின்ற முதல் வெற்றி.

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கை கொடுக்கின் றது. அவர்கள் வெற்றி பெற்றால், என்னென்ன செய் வோம்? என்பதை குறிப்பதேயாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம், கலைஞர் அவர்கள் தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார். 100 அம்சங்கள் அதிலே இருக்கின்றன. எதாவது செய்யாமல் இருந் தார்களா? சொன்னதை செய்வோம்! செய்வதையே சொல்வோம்! என்றவர்கள்.

இந்த அம்மையார் ஜெயலலிதாவும் தேர்தல் அறிக் கையை கொடுத்திருக்கிறார்கள். எல்லாம் வசை புராணம்தான்.

ஜெயலலிதா - மோடியுடன் தேர்தலில் ரகசியக் கூட்டு வைத்திருக்கிறார் என்று நாங்கள் சொல்லவில்லை - தோழர் தா.பாண்டியன் சொல்கிறார். இந்த அம்மையாரை (ஜெயலலிதாவை) நேற்றுவரை நம்பியவர் பேட்டியே கொடுத்துள்ளார்.

நேற்றைய இந்து பத்திரிகையில், அவர் கொடுத்த பேட்டி வந்திருக்கிறது. அதில், ஜெயலலிதாவும், நரேந்திர மோடியும் தேர்தலில் ரகசிய கூட்டு வைத்திருப்பதால் தான் எங்களை (கம்யூனிஸ்டுகளை) கழற்றி விட்டார்கள் என்று கூறியிருக்கிறாரே!

இராசாவை யாரும் பாதுகாக்கவேண்டாம். அவர் வழக்கிலே வெற்றி பெற்று முழுக்க வெளியே வருவார். ஏனென்றால், பொய் எவ்வளவு காலம் நிற்கும்? பொய் நெல்லைக் குத்தி, பொய் நெல்லைச் சமைத்து, பொங்க லிட்டு உண்ணலாம் என்று யாராவது நினைக்கக்கூடாது. அவர் (இராசா) யாருடைய உதவியையும் எதிர்பார்க்க வில்லை. எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்திலே ஆதாரப் பூர்வமாக எடுத்து வைப்பார்.

தமிழ் ஓவியா said...


ஏனென்றால், பூஜ்ஜியம், பூஜ்ஜியம் என்று போட்டுக் கொண்டு நட்டம் Loss ஏற்பட்டுவிட்டது என்கி றார்களே, ஆனால், கபில்சிபல் சொன்னார், எல்லாம் பூஜ்ஜியம்தான். என்ன பூஜ்ஜியம்? No Loss என்றாரே! இது அனுமானம். இழப்பு அல்ல. இதை திராவிடர் கழகம், இன்றைக்கு ஆ.இராசா வேட்பாளராக இருக்கும் பொழுதுமட்டும் சொல்லவில்லை.

அன்றைக்கே சொன்னவர்கள், ஆகவே, உண்மைகள் களப்பலியாக விடக் கூடாது!

இந்தப் பிரச்சாரம் செய்த நேரத்திலே, என்ன சொன்னார்கள்? அவர்கள் இஷ்டத்திற்குச் சொல்கிறார்கள். இராசா வீடு என்று ஒன்றைக் காட்டினார்கள். தமிழ் நாட்டில் ஒரு மூலையில், எந்த ஊரில் என்று சொல்ல வில்லை. இணைய தளத்தில் பாவம், நம் அப்பாவி இளைஞர்கள் புதியதாக இணைய தளத்தைப் படிக் கிறார்கள், பாருங்கள், அவர்கள் ஓட்டுக்களை வாங்கத் திட்டம் போடுகிறார்கள்.

2011 ஜூலை 7 இல் இந்தப் பிரச்சினை வந்தபோது, என்ன சொன்னார்கள் என்றால், நாங்கள் எதையும் ஆதாரத்துடன் சொல்லக் கூடியவர்கள்.

ஸ்பெக்ட்ரம் இராசாவிற்கு பெயர் வைக்கிறான். ஆ.இராசாவை ஸ்பெக்ட்ரம் இராசா என்று சொன்னால் வருமா?

ஆனால் ஒன்று இதுவரை பயன்படுத்தாமல் இருந்த கற்றை அலைக்கற்றை, இராணுவத்தின் கற்றையை ஒரு ரூபாய்க்கு இருந்த தொலைப்பேசி கட்டணத்தை 50 பைசாவுக்கு ஆக்கிய பெருமை, சரித்திரம், வரலாறு திமுக வையே சாரும்.

ஸ்பெக்ட்ரம் ராசா என்றால் ஸ்பெக்ட்ரத்தை மக்களுக்கு மலிவாக கொடுத்த இராசா என்று பெயர்.

இங்கே, ராசாவின் வீடு என்று பெரிய வீட்டை போட்டான். மிகப்பிரமாண்டமான உள்ளறைகள், பெரிய அறைகள் உள்ள ஒரு பங்களாவை இணையதளத்தில் வெளியிட்டார்கள்; எவ்வளவு பெரிய வீடு! ஆசிரியர் போய் அவருக்கு வக்காலத்து வாங்குகிறாரே! இதுபோல் திராவிடர் கழகத்துக்காரர்கள் சொல்கிறார்களே என்று நினைக்கா தீர்கள்!

நீங்கள் உண்மையான குடிமக்களாக இருந்தால் எவ்வளவு பேருக்கு உண்மையை பரப்ப முடியுமோ அவ்வளவு பேருக்கும் பரப்புங்கள்.

முந்தைய காலத்தில் திருப்பதியில் ஒரு நோட்டீஸ் போட்டான். கதை எல்லாம் எழுதிவிட்டு கடைசியாக பன்னிரெண்டு பேருக்கு அச்சு அடித்துக் கொடுக்கவில்லை யென்றால், உனக்கு நரகம் நிச்சயம். ஆகவே, நீ பன்னிரெண்டு பேருக்காவது அச்சடித்துக் கொடுக்க வேண்டும்.

அவன் என்ன செய்வான்? உடனே அச்சகத்துக்கு போய் விடுவான். நரகத்திற்கு நேராக போக மாட்டான். அச்சு அச்சகத்துக்குத்தான் - அச்சடிப்பதற்கு! அது மாதிரி நிறைய நண்பர்களே கேட்டார்கள். ராசா இவ்வளவு பெரிய வீட்டை கட்டி இருக்கிறார் என்றால் எவ்வளவு செலவு ஆகியிருக்கும்?

எந்த ஊரில் அந்த வீடு என்று போடவில்லை - முகவரி போடவில்லை.

ஆ.ராசாவின் வீடாம்! நாங்கள்தான் இதை கண்டுபிடித்து உண்மை பத்திரிகையில் வெளியிட்டு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தோம்.

கொஞ்ச நாளுக்கு முன்னால் சீனாவில் உள்ள பேருந்து நிலையத்தை எடுத்து, அழகாக போட்டு குஜராத்தில் வளர்ச்சி பாருங்கள்! மோடி இராஜ்ஜியத்தில் எவ்வளவு பெரிய வளர்ச்சி பாருங்கள் என்று பித்தலாட்டம் செய்தனர்.

கோயபல்ஸ்கள் இன்னும் சாகவில்லை இதோ இருக்கிறார் அவர் தான் மோடி!

நாங்கள் கண்டுபிடித்தோம் உண்மையில் எழுதினோம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்உள்ள சாண்டா பார்பரா கடற்கரையில் கட்டப்பட்டு இணையத்தில் விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்ட The Glass of Pavilion (தி கிளாஸ் ஆப் பெவிலியன்) என்கிற வீட்டின் புகைப்படத்தை எடுத்துப் போட்டு ராசாவின் வீடு. இங்கேதான் ஊழல் பணம் பதுங்கி இருக்கிறது என்று புரளி கிளப்பி விட்டார்கள்.

அமெரிக்காவில் வீட்டை கட்டி விற்பனைக்கு உள்ளதை ராசாவின் வீடு என்று சொல்லி முழுக்க முழுக்க ஊழல் ஊழல் என்று சொல்கிறார்கள்.

இந்த பொய்த்திரையை கிழிப்பதற்காகவே இருப்பவர்கள் தான் திராவிடர் கழகத்துக்காரர்கள். கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். ஆகவே இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முன்னாலே எடுத்துச் சொல்லிவிட்டோம் இப்போது சொல்லவில்லை என்று தனதுரையில் குறிப்பிட்டார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/78385.html#ixzz2yRJQemiq

தமிழ் ஓவியா said...


வாக்குச் சாவடிக்குள் ஆர்.எஸ்.எஸ்.: எச்சரிக்கை! எச்சரிக்கை!! டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்பு



புதுடில்லி.ஏப்.9- வாக்குப் பதிவன்று வாக்குச் சாவடி களில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் செலுத்தும் திட்டம் குறித்து டெக்கான் கிரானிக்கல் அபாய அறிவிப்பினை வெளி யிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சின் முன்னாள் பிரச்சாரக் ஹிந்துத்து வாவின் அடையாளமாக உள்ள மோடி தேசத்தின் மிக உயரிய பதவியை அடைய துடித்துக்கொண்டு செயல் பட்டு வருகின்றார். ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் செயலில் குதித்துள்ளது.

அன்றாட அரசியலிலிருந்து விலகி இருப்பதாக கருதப்பட்டுவந்த ஆர்.எஸ்.எஸ். தற்போது மோடிக்காகப் பிரச்சாரம் செய்துவருவதோடு, முதன்முதலாக நேரிடை யாக வாக்குச்சாவடிகளில் நுழைந்து செயல்பட உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி பாஜக தலைவர் ஹர்ஷ்வர்தன், டில்லி சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளருமாவார். டில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய கொஞ்சம்கூட வெற்றியிலிருந்து நழுவ விடா மல் இருப்பதை உறுதிசெய்ய மூத்த ஆர்.எஸ்.எஸ். தலை வர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். 2009 இல் டில்லியில் ஒரு இடம்கூட பாஜக வெற்றிபெற வில்லை. அனைத்துமே காங்கிரசுக்கே சென்றது.

அதேபோல், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறிப்பாக சுயம்சேவக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினருடன் தோள்கொடுத்து எல்லா செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். வாக்குச்சாவடிகளிலும் நுழைந்து நெருக்கடியான நேரத்திலும் முக்கியப் பங் காற்றிட உள்ளனர். அண்மையில் ஆர்.எஸ்.எஸ்சில் நடை பெற்ற பிரதிநிதி சபா பயிற்சியில் சுயம்சேவக்குகளான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு முக்கியமான பயிற்சி களை அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78389.html#ixzz2yRJerz6T

தமிழ் ஓவியா said...


வெள்ளக் கோவிலில் அரசு இடங்களை ஆக்கிரமிக்கும் கோயில்கள் பொதுநல வழக்குத் தொடரப் போவதாக சமூக ஆர்வலர்கள் முடிவு


வெள்ளக்கோவில், ஏப். 9- வெள்ளக் கோவில் பகுதியில் அரசுக்குச் சொந்த மான இடங்களை ஆக்கிரமித்து புற்றீச லென பெருகி வரும் கோயில்களை அப்புறப்படுத்த பொதுநல வழக்குத் தொடரப்போவதாக சமூக ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோவில் இரண்டாம் நிலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளி லுள்ள அரசு இடங்களைக் கையகப் படுத்தி மதவழிபாட்டுத் தலங்களை அமைக்கும் சட்ட விரோதச் செயல்கள் சமீபகாலமாக வேரூன்றி வருகின்றன.
வெள்ளக்கோவிலுக்கு அருகிலுள்ள தீத்தாம்பாளையம் என்னுமிடத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட கோயில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதி மன்ற உத்தரவின் மூலம் அகற்றப் பட்டது. மேலும், சாலையின் குறுக்கே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை அரசு அதிகாரிகள் இப்பகுதியில் இன்று வரை அமலாக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டு களுக்கு முன் வெள்ளக்கோவில் இரண் டாம் நிலை நகராட்சிக்குட்பட்ட வி.பி.எம்.எஸ் நகரில் சுப்பிரமணியம் என்பவரை மிரட்டி தற்போதைய ஆளும் கட்சியின் காங்கேயம் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்ட வெள்ளக் கோவில் நகராட்சி தலைவர் மற்றும் ஆளும் கட்சி வகையறாக்கள் குறைந்த விலைக்கு காலியிடத்தை விற்பனைக்குக் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் அவருடைய வீடு மற்றும் காலியிடங் களுக்கு வழிப்பிரச்சினையை உண்டாக் கும் நோக்கோடு அவர் வீட்டின் முன் உள்ள அரசுக்குச் சொந்தமான சாலை யோர நிலத்தில் கோயில் கட்டுவதற்காக ஒரு ஆக்கிரமிப்பை ஏற்படுத்தினார்கள். இது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர், வருவாய்க் கோட்டாட் சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகி யோருக்கு புகார் மனு அளிக்கப்பட் டுள்ளது (புகார் மனு தேதி: 26.7.2012). மேலும் இது சம்பந்தமாக பாதிக்கப் பட்ட நில உரிமையாளர் கொடுத்த புகாரின் மீதும் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசியல்வாதிகளை அனுசரித்ததால் சிறிய ஆக்கிரமிப்பு அரசு நிலத்தில் பெரிய கோயிலாகக் கட்டப்பட்டது. இது குறித்து சுப்பிரமணியம் காங்கே யம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் துள்ளார் (வழக்கு எண்: 218.2012). இந்த சட்ட விரோத கோயிலை அகற்ற விரை வில் நீதிமன்ற ஆணை கிடைக்கப் பெறும் சூழ்நிலை உள்ளது.


தமிழ் ஓவியா said...

இதைத்தொடர்ந்து தற்போது வெள்ளக்கோயில் இரண்டாம் நிலை நகராட்சிக்குட்பட்ட 8 ஆவது வார்டு பகுதியான இந்திராகாந்தி நகரில் வினா யகர், கருப்பணசாமி, கன்னிமார்கள் ஆகிய கடவுள் என்று சொல்லப்படு கின்ற கற்சிலைகளுக்கு கோயில் கட்ட அரசு நிலம் மீண்டும் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இக்கோயில் கட்டுவதற்கு பணம் பட்டுவாடா செய்வதன் மூலம் இப்பகுதி மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்ற நோக்கோடு வழக்கம் போல் தற்போதைய ஆளும் கட்சியினர் சந்தர்ப்பத்தை சாதகமாக்க களமிறங்கி யுள்ளனர். இந்த யுக்தியை தேர்தல் ஆணையம் எவ்வாறு கண்டுபிடிக்கும் என்று மார்தட்டியும் வருகின்றனர்.

ஆகவே தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிற்காக கடவுள் என்ற பெயரால் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆக் கிரமிப்புகளை அகற்றவும், அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப் புகளை அகற்றவும், அரசு நிலத்தில் மத சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் பெரு குவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடும், இது போன்ற அத்து மீறல்களை தடுக்க எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் மதச்சார்பின்மை யைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டு, சட்டவிரோதச் செயல்கள் புரியும் அரசியல்வாதிகளுக்கு உடந்தை யாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது சட்ட ரீதியிலான, நீதிமன்ற நடவடிக் கைகள் மேற்கொள்ள விருப்பதாக வெள்ளக்கோயில் பகுதிவாழ் மதச்சார் பின்மையாளர்களும், சமூக ஆர்வலர் களும் தெரிவிக்கின்றனர்.

- ச.மணிகண்டன்,
திருப்பூர் மாவட்டச் செய்தியாளர்

Read more: http://viduthalai.in/page-2/78392.html#ixzz2yRK32G2I

தமிழ் ஓவியா said...

2 மணி நேர மின்வெட்டுக்காக திமுகவைத் தண்டித்தீர்கள் இப்போது 12 மணி நேர மின்வெட்டு அதிமுகவைத் தண்டிக்க வேண்டாமா?


2 மணி நேர மின்வெட்டுக்காக திமுகவைத் தண்டித்தீர்கள்

இப்போது 12 மணி நேர மின்வெட்டு அதிமுகவைத் தண்டிக்க வேண்டாமா?

லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் கூட்டங்களில் தமிழர் தலைவர் உரை


லால்குடி, ஏப். 9- திமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு மணி நேர மின்வெட்டுக்காக தண்டித்த வாக்காளர்களே! இப்பொழுது அதிமுக ஆட்சியில் நாள்தோறும் 12 மணி நேர மின்வெட்டு - ஆட்சியாளர்களைத் தண்டிக்க வேண்டாமா என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்

6.4.2014 அன்று லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

இலால்குடி என்றால், நம்முடைய அன்பில், தேவசகா யம், இராவணன் போன்றோரை மறந்துவிட்டு வரமுடியாது.

நல்ல ஒரு இளைஞரை வேட்பாளராக, ச.பிரபு என்பவரை திராவிட முன்னேற்றக் கழகம் இந்த பகுதிக்கு தந்திருக்கிறது. டாக்டர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் காரணமாக இருந்துள்ளார். இந்தப் பகுதி சட்ட மன்ற உறுப்பினர் அ.சவுந்தரபாண்டியனும் இளைஞர். நாடாளுமன்ற உறுப்பினராகப் போகின்றவரும் இளை ஞர். தொட்டியம் ஒன்றியச் செயலாளராக, இருந்து உழைப் பில் உயர்ந்து வளர்ந்திருக்கிறார்கள்.

மற்ற அணிகள் எல்லாம் இருக்கின்றன. அணியாகவும் இருக்கிறது. தனியாகவும் இருக்கிறது. ஆனால் மக்களைச் சந்திக்கும் பலமான, வலுவுள்ள கூட்டணி இதுதான். சமுதாய மறுமலர்ச்சிக்கான சமுதாயக் கூட்டணி, சமூக கூட்டணி. இந்தக் கூட்டணியில் கொள்கை வேறுபாடு கிடையாது. கொள்கைச் சண்டை கிடையாது. மற்ற கூட்டணியில் அவர் சொல்கிறதை இவர் ஏற்க மாட்டார், இவர் சொல்கிறதை அவர் ஏற்கமாட்டார். இந்த கூட்டணி முரண்பாடு இல்லாத கூட்டணி.

இது திமுக தலைமையிலான கொள்கை உள்ள கூட் டணி. மற்ற கூட்டணி சந்தர்ப்பவாதம், அல்லது கூட்டணி. இன்னொன்று தனி அணி. தனி மரம் ஒருபோதும் தோப்பாகாது.

காங்கிரசின் நிலை

காங்கிரசு மத்தியில் ஆட்சி. ஈழத் தமிழர் பிரச்சினை, விலைவாசி பிரச்சினை, இன்னும் மற்ற பிரச்சினைகளால் காங்கிரஸ் மீது ஒரு அதிருப்தி, வெறுப்பு மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. காரணம், காங்கிரஸ் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
பாஜக அணியில் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 2 சத விகிதம்தான் வாக்கு! பல ஊர்களில் இடமே இல்லாதவர் கள். சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ ஒரு இடம் கிடைக்காதவர்கள்.

அவர்கள் பதவி பசியோடு, பதவி வெறியோடு இருக் கிறார்கள். அவர்கள் அணிக்குக் கூட்டணி என்பது பெய ரல்ல, சீட்டணி அவ்வளவுதான். கொள்கை என்ன, அதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது.

பாண்டி கூட்டணி உடைந்தது!

தமிழ்நாட்டிலேயும், பாண்டிச்சேரியிலேயும் வருகின்ற 24ஆம் தேதி தேர்தல் நடக்கப்போகிறது. ராஜ்நாத் சிங் வந்தார். இவர்கள் அவர்களுடன் கைகளை தூக்கினார்கள். ஆனால், பாண்டிச்சேரியிலே, இன்றைய மாலை நாளிதழில் என்ன வந்திருக்கிறது? பாண்டிச்சேரியில் (பிஜேபி) கூட்டணி உடைந்தது. அவர் அவர் தனியாக நிற்பார்கள். தமிழ்நாடு பாண்டிச்சேரி இரண்டுக்கும் சேர்ந்துதானே பேசினார்கள். அப்புறம் இன்றைக்கு தனித்தனி என்று சொன்னால் என்ன அர்த்தம். பாண்டிச்சேரியில் என்ன முடிவோ அதே முடிவுதான் வருகிற 24ஆம் தேதி. இதை சரியாக புரிந்து கொள்ளுங்கள்.

வடக்கே இருந்து வந்தவர்களிடம் இங்கு உள்ள பதவி பசி உள்ளவர்கள் வடக்கே இருந்து பணம் வருகிறது, பத்திரிகை பலம், இன பலம் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு இங்கே வந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆகவே, அங்கே கொள்கை கிடையாது. உதாரணமாக, இங்கே இருந்து போனார் பாருங்க நண்பர் வைகோ.

தனி ஈழம், உலக மக்களை பற்றி எல்லாம் பேசுபவர். இந்த இராஜாவை மிஞ்சிய இராஜ விசுவாசி 300 இடத்தில் இந்தக் கூட்டணி வரும் என்றார். அடுத்த நாள் அங்கிருந்து வெங்கையா நாயுடு வந்து என்ன சொன்னார்?

தமிழ் ஓவியா said...

இந்த ஈழம் எல்லாம் இங்கே பேசக்கூடாது என்றார். இதுமாதிரி ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கொள்கை வேறு பாடு உண்டா? எனவே, இந்தக் கூட்டணி இருக்கிறதே - இது ஒரு எழில் கோலம், எதிரே உள்ள கூட்டணி அலங் கோலம்.

மின்வெட்டு

இப்போதுகூட நான் திருச்சியில் இருந்துதான் வரு கிறேன். அறிவிக்கப்படாத மின்வெட்டு, இரண்டு மணி நேரம் கலைஞர் ஆட்சியில் மின்வெட்டு என்று அவரை சட்டமன்ற தேர்தலில் தண்டித்தீர்கள். இப்பொழுது அம்மையார் ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, அறிவித்த மின்வெட்டு, பன்னிரெண்டு மணிநேரம் மின் வெட்டு இருக்கே!

இந்த அம்மா மத்திய ஆட்சியைப் பிடிக்கப் போகிறேன் என்கிறார்கள். அவர்களுக்கு கொள்கை தெளிவு இருக்க வேண்டுமா? இல்லையா? கொள்கைத் திட்டம் இருக் கிறதா?

தேர்தல் அறிக்கை என்று கொடுப்பதன் நோக்கம் என்ன? அந்த தேர்தல் அறிக்கை வழிகாட்ட வேண்டு மல்லவா? எந்த வழியில் போகிறோம்? காரில் ஏறி உட்காரு கிறோம்! எந்த வழியில் போகிறோம் என்பதை முடிவு செய்து விட்டுத்தானே போகவேண்டும். அதைப் பற்றி கவலைப்படாமல், இனிமேல்தான் முடிவு செய்யப் போகிறோம். அந்த கூட்டணியில் அப்படிப்பட்டவர்கள் தான் உள்ளார்கள். இது திமுகவின் தேர்தல் அறிக்கை (என் கையில் இருப்பது) செய்வதையே சொல்லுவோம் என்று நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.

இது அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கை. எங்க வீட்டுக்காரன் கச்சேரிக்கு போனான் என்று பழமொழி சொல்வார்கள் அதுபோல.

ஏப். 24 முற்றுப்புள்ளி

அமைதி என்றால் நேற்றைக்கு அம்மா வந்தார்கள். மேலே இருந்து பிரச்சாரத்துக்காக கீழே இறங்குகிறார்கள்! எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2400 போலீஸ் காவல். மேலிருந்து வருகிறவர்களுக்கு 2400 போலீஸ் எல்லா போலீசும் அங்கே போனால் அவன் ரொம்ப நல்லா பயன்படுத்துகிறான் யார்? சர்வே எடுத்து, திருட வருகிறான் நகையை பிடிங்கிக் காண்டு சென்று விடுகிறான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நாள் தான் ஏப்ரல் 24.

ஜெவின் திட்(ற)ட கமிஷன்

வளர்ச்சி காட்ட முடியாது! வளம் காட்ட முடியாது. வளம் வளர்ச்சியில். என்ன நிலை? இதோ கல்கி பத்திரி கையில் போட்டிருக்கிறார்கள்.

விவசாயத்தில் 12 சதவிகிதமும், உற்பத்தித் துறையில் 1.3 சதவிகித வீழ்ச்சியையும் ஜெயலலிதா ஆட்சி கண்டிருப் பதாக திட்ட கமிசன் கூறுகிறது. சொல்வது நாங்கள் அல்ல திட்ட கமிஷன்.

அந்த அம்மா, இப்பொழுது மேடையை எப்படி பயன் படுத்துகிறார்கள் என்றால், திட்ற கமிசனா சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

திட்டுகிறதுதான் வேலை. கருத்தை கருத்தால் சந்திக்க வேண்டும். பொறுப்பில் இருக்கிறவர்கள் பேசுகிறார்கள், மரண அடி கொடுக்க வேண்டும், சவுக்கடி கொடுங்க! என்று சொல்கிறார்கள். சவுக்கு யாருக்கு சொந்தம்? யாரை யார் சவுக்கால் அடிக்கிறது என்பது போக போகத் தெரியும்.

கைதிகளுக்கு கூட சவுக்கடி எல்லாம் கொடுக்கக்கூடாது என்று நாட்டிலே இருக்கிறது! சவுக்கடிக்கே இடமே கிடையாதே!

இந்த குரூரமான சிந்தனை இருக்கிறது பாருங்கள். அது நல்ல தன்மையா? சிந்திக்க வேண்டும்.

மின்வெட்டால் நாம் மட்டுமா? பாதிக்கப்பட்டுள் ளோம்? திருப்பூரில் தொழிற்சாலைகள் இயங்க மின்சாரம் இல்லையே! கோவைதானே தென்னிந்தியாவின் மான் செஸ்டர் ஆனால் எங்கேயுமே இயந்திரங்கள் இயங்கவில் லையே!

இயந்திரம் வாங்கிய தொழிலாளர்கள் என்ன சொல் கிறார்கள் என்றால், பவர் கட் கொடுத்தாலும் குறிப்பிட்ட நேரத்திலே மின்சாரம் இருக்காது, மற்ற நேரங்களில் இருக்கும் என்று சரியாகச் சொன்னால் போதுமே! ஆனால் அறிவிக்கப்படாத மின்வெட்டு அல்லவா இருக்கிறது. கடன்தான் வாங்குகிறோம். இப்படியே போனால் தற் கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றல்லவா சொல்கிறார்கள்.

ஒரு பக்கம் விவசாயிகள், இன்னொரு பக்கம் தொழி லாளிகள் நிலை இதுதானே. ஆனால் கலைஞர் 7000 கோடி ரூபாய் கடனை அய்ந்தாவது முறையாக வந்தவுடன் கையெ ழுத்து போட்டு விவசாயக் கடனை எல்லாவற்றையும் ரத்து (தள்ளுபடி) செய்தாரே! அதுதானே நல்ல ஆட்சி.

நாட்டிலே உண்மையான வளம், வளர்ச்சி, அமைதி இவையெல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தால் நிறுத்தப்பட்டிருக்கிற வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் கிடைக்கும்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-2/78397.html#ixzz2yRKkCT9p

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு சர்வாதிகாரி கன்னட எழுத்தாளர்கள் கடும் கண்டனம்

பெங்களூரு, ஏப். 9-கர்நாட கத்தில் மக்களின் அன்பைப் பெற்ற பிரபல கன்னட எழுத் தாளர்கள், பாரதீய ஜனதா கட்சியின் மதவெறிக்கும், அதை ஊட்டி வளர்க்கத் திட்டமிட்டுள்ள அவர்களது பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடிக்கும் எதிராக களமிறங்கியுள்ளனர்.

குறிப்பாக ஞானபீட விருதுபெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்த மூர்த்தியும், பிரபல திரைப் பட மற்றும் நாடக கலைஞ ரும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் ஆகியோர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி யுள்ளனர்.பாஜக தனது பிரத மர் வேட்பாளராக முன்னி றுத்தியுள்ள நரேந்திர மோடி, இந்திய நாகரிகத்திற்கு ஏற் பட்டுள்ள மிகப்பெரும் அச் சுறுத்தல் என்றும், இந்தியா வின் பன்முக கலாச்சாரத் திற்கு விடப்பட்டுள்ள சவால் என்றும் கூறியுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை, இன்னும் கடுமையான வார்த்தைகளில் சாடியுள்ள எழுத்தாளர் அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி என்றும் குறிப் பிட்டுள்ளார்.இதே கடுமை யுடன் எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், நரேந்திர மோடி யையும் பாஜகவையும் விமர் சித்துள்ளார். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு, மோடி பிரதமராக இருக்கும் நாட்டில் நான் வாழ விரும்ப மாட்டேன் என்று எழுத் தாளர் அனந்த மூர்த்தி கூறி யிருந்தார்.

அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், மீண்டும் அதே கருத்தை வெளியிட்டுள்ள அவர், மோடிக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறு தியாக இருப்பதாக தெரிவித் துள்ளார். இந்நிலையில், மதவெறிக்கு எதிராக குரல் கொடுத் துள்ள கர்நாடகத்தின் இரண்டு பிரபல எழுத்தாளர்க ளுக்கும் இதர எழுத்தாளர் களான வசுந்தரா பூபதி, மரு ளாசிதப்பா, ஜி.கே.கோவிந்த ராவ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-8/78401.html#ixzz2yRLHMfqb

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. தேர்தல் அறிக்கை:


ராமர் பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது வளர்ச்சிக்கு எதிரானது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தகவல்

சென்னை, ஏப். 9- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவது அறிவியலுக் கும், பகுத்தறிவுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை புதிய மொந்தை யில் பழைய கள் என்பதாகக் கூட இல்லை. பழைய மொந் தையில் பழைய கள் என்ப தாகவே அமைந்துள்ளது. மோடி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களால் சிறுபான்மை மக்கள் கூட கவரப்பட்டுள் ளதாகவும், அவர்கள் கூட பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க தயாராக இருப் பதாகவும் ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த பார தீய ஜனதா கட்சி தலைமை முயற்சித்து வந்தது.

ஆனால் அவர்களது தேர் தல் அறிக்கை வகுப்புவா தத்தை முன்வைப்பதோடு, தாராளமய பொருளாதார கொள்கையை வலியுறுத் தும் கட்சிதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக் குரிய இடத்தில் கோவில் கட்டுவோம், ஜம்மு-காஷ் மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை அளிக்கும் அரசி யல் சட்டப்பிரிவு 370அய் ரத்து செய்வோம். பொது சிவில் சட்டம் கொண்டு வரு வோம், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்ற ஆர். எஸ்.எஸ். அமைப்பின் அனைத்து செயல்திட்டங்க ளையும் உள்ளடக்கியதா கவே பாரதீய ஜனதா கட்சி யின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முற்றாக முடக்குவோம் என்று கூறு வதும், ராமர் கட்டிய பாலத்தை பாதுகாப்போம் என்று கூறுவதும் முற்றிலும் அறிவியலுக்கும், பகுத்தறி வுக்கும், வளர்ச்சிக்கும் எதி ரானது.

காங்கிரசுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறும் பாரதீய ஜனதா கட்சி பொரு ளாதாரத்துறையில் அதே காங்கிரசின் தாராள மயமாக் கல் கொள்கையைத்தான் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் மாறாது, மாறவும் முடியாது என் பதை அவர்களது தேர்தல் அறிக்கையே தெளிவாக உணர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/78400.html#ixzz2yRLQ07RM

தமிழ் ஓவியா said...


ஊழல் ஊழல் என்று ஊளையிடும் நரிகளே! இதற்கு என்ன பதில்?


போரில் இறந்த வித வைகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்ரோல் பங்குகளைத் தங்களது கட்சி ஆதரவாளர் களுக்கு ஒதுக்கி பெரிய தொகையை லஞ்சமாகப் பெற்றது வாஜ்பாய் தலை மையில் ஆன பாஜக தானே. ஊழல் செய்வதில் காங் கிரஸ் கட்சி, பாஜக இரண் டும் போட்டி போட்டுக் கொண்டு தான் ஊழல் செய்தன.

இதோ போரில் இறந்த இராணுவத்தினரின் மனைவி மற்றும் குடும்பத் தார்களுக்கு வழங்கப்பட வேண்டிய பெட்ரோல் பங்க் எந்த எந்த பாஜக தலைவர்களின் கைவசம் உள்ளது என்ற பட்டியல்-

பா.ஜ.க. ஆட்சிக் காலத் தில் ஒதுக்கீடு செய்யப்பட பெட்ரோல் பங்குகளிலும் ஊழல் செய்தனர். பெரும் பாலான பெட்ரோல் பங்க் உரிமங்கள் பா.ஜ.க. ஆதர வாளர்களுக்கே கொடுக்கப் பட்டன. வாஜ்பாயியின் உறவினரான ராஜ்மிஸ்ரா வின் மனைவி அபர்னா மிஸ்ராவுக்கு உரிமம் வழங் கப்பட்டது. உத்தரபிரதேசத் தில் ஹாப்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி ரமேஸ் சந்திர தாமரின் மகன் விகாஸ்தோமர் சின்னாள் பா.ஜ.க. எம்.பி.; வர்மா பூர் ணிமா பா.ஜ.க. எம்.எல்.ஏ., சோட்டேலால் வர்மாவின் மகன் பால்சந்தரா; உ.பி. கூட்டுறவுத்துறை அமைச் சர் ராம்பிரகாஷ் திரிபாதி யின் மருமகள் பிரதிபா திரிபாதி; பாடுபங்கி பா.ஜ.க. எம்.பி.; பாஜ்நாத் ராவத் , மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் பாண்டு ரங்க புண்ட்கரின் மனைவி கனிதா புண்ட்கர்; மும்பை பா.ஜ.க.அலுவலகச் செய லர் முகுந்த் குல்கர்னி; சிவசேனை எம்.பி சந்திர காந்த் கைரேயின் சகிதரன் சூரியகாந் கையிரே; சிவ சேனை ஹிமாச்சல் பா.ஜ.க. முதல்வர் பி.கே. துமாலின் மகன் அனுராக்சிங் தாகூர் மற்றும் அண்ணன் மகன் அரவிந்த் துமால்; லூதி யானா பா.ஜ.க. எம்.பி. யின் மருமகன் அனில்தம்மன்; இன்னும் பல பா.ஜ.க. வின் முக்கிய புள்ளிகளுக்கு இந்த உரிமங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டனவே!

Read more: http://viduthalai.in/e-paper/78488.html#ixzz2yXDOdlnB

தமிழ் ஓவியா said...


குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா?


இது குற்றவியல் நீதி மன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா? என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டு களாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாள்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாள்கள் தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் சிறப்பு நீதிமன்ற குன்ஹா கருத்து தெரிவித்திருக்கிறார்.

- கலைஞர் கடிதத்திலிருந்து முரசொலி (10.4.2014)

Read more: http://viduthalai.in/e-paper/78487.html#ixzz2yXDZdG6n

தமிழ் ஓவியா said...


தாய்க்குலமே உங்கள் வாக்கு யாருக்கு?

ஜெயலலிதா பேசுகிறார்

குடும்பம் நடத்த போதுமான அள வுக்கு தனது கணவன் சம்பாதிக்கிறார். குடும்பத்திற்குத் தேவையான அனைத் தையும் கணவன் பூர்த்தி செய்கிறார். சமை யலுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தருகிறார் என்கிற எதிர்பார்ப்பும், உரிமையும் மனைவிக்கு உண்டு.

அதேபோல, மனைவியிடமிருந்து சில கடமைகளை கணவன் எதிர்பார்க்கிறார். வீட்டைச் சுத்தமாக வைப்பது, குடும்பச் செலவுகளை நிர்வகிப்பது என்பது மனைவியின் கடமையாகும். - (நாமக்கல் கூட்டத்தில் ஜெயலலிதா தினமணி, 17.7.2003)

விஜயகாந்த் பேசுகிறார்...

பெண்கள் முழு நேர அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தில்குழப்பம் ஏற் படும். அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்குக் கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று மகளிர் அணி மாவட்ட செயலாளர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவுரை வழங்கினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிர் அணி நிருவாகிகள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட் டங்களின் மகளிரணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் 175 பேர் பங்கேற்றனர். மாலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது: பெண்கள் முழு நேர அரசியல் ஈடுபட்டால் அவர் களின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அதனால் அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்கு நீங்கள் கூடுதல் நேரம் செலவிட வேண்டும். உங்கள் குழந்தை களின் கல்வியில் அதிக அக்கறை எடுத் துக் கொள்ளுங்கள். அதோடு வறுமை ஒழிப்பு உள்ளிட்ட கட்சிக் கொள்கைகள் பெண்களிடம் சென்று சேரும் வகையில் பிரச்சாரம் செய்யுங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.- தினமலர் 23.9.2007

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் பேசுகிறார்

திருமணம் என்பது கணவன் மனை விக்கு இடையேயான ஒப்பந்தம்; திரும ணத்தின்போது, நீ வீட்டை நன்றாகக் கவனித்துக் கொண்டால் உன் தேவை களை நான் கவனித்துக் கொள்வேன். உன்னையும் பாதுகாப்பேன் என கணவன் ஒப்பந்தம் செய்கிறான். அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறும்போது வேறு வழியின்றி மனைவியைக் கணவன் கைவிடுகிறான் என்று பேசினாரே பார்க்கலாம் (தினமலர் 7.1.2013 பக்.12).

தாய்க்குலமே, தாய்க்குலமே பெண் களைச் சிறுமைப்படுத்தும் அடுப்பங்கரை பதுமைகளாக்கும் இவர்களை ஆதரிக் கலாமா? பெண்களுக்குச் சொத் துரிமை உட்பட அலை அலையாகத் திட்டங் களைச் சாதித்துத் தந்த தி,மு.க. தலைமை யிலான அணிக்குத்தானே உங்கள் வாக்கு?

குறிப்பு: பிஜேபி அணியில் பெண் வேட்பாளர்களே அறிவிக்கப்படவில்லை என்பதையும் மறந்து விடாதீர்கள். (சிதம் பரம் தொகுதியில் ஏற்பட்டது ஒரு விபத்து அவ்வளவே!).

Read more: http://viduthalai.in/e-paper/78485.html#ixzz2yXDkHmOB

தமிழ் ஓவியா said...


ஆதரிப்பது...

எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/78473.html#ixzz2yXEK2BXL

தமிழ் ஓவியா said...


நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்தி சில உறுதிகளைத் தந்துள்ளார். ஒன்று. தனக்காக எதுவும் செய்யமாட்டேன்; எந்த கெட்ட எண்ணத்திலும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

குஜராத்தில் மூன்றாவது முறை யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, இந்த வாக்குறுதிகளை காப்பாற்றும் விதமாக அங்கே நடந்து கொண்டாரா?

மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷா மீது போலி கொலை வழக்கு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் தான் தற்போது உ.பி.யின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்; அவர் பொறுப் பேற்றதும்தான், உ.பி.யில் முசாபர் நகரில் கலவரம் வெடித்து, இஸ்லாமி யர்கள் இன்றும் முகாம்களில் இருக் கும் சூழ் நிலை ஏற்பட்டது. அண்மை யில், ஜாட் மக்களிடம், நீங்கள் பழிவாங்கும் நேரம் வந்து விட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர் அமீத் ஷா, இவர் மோடியின் வலது கரம்.

குஜராத்தில், மோடியின் அமைச் சரவையில் பாபு போகாரியா, புரு ஷோத்தம் சோலங்கி என்ற இரண்டு அமைச்சர்கள் மீதும், சுரங்கம் மற்றும் மீன் துறையில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. போகாரியா மீது ரூ.54 கோடி ஊழல் குற்றச்சாட்டில் மூன்றாண்டு தண்டனை விதித்தது போர்பந்தர் நீதி மன்றம். இன்றும் அவர்கள் அமைச் சர்களாகத் தான் இருக்கிறார்கள்.

மாயா கோட்னானி. இவரும் மோடியின் அமைச்சரவையில் இருந் தவர்; 2002 குஜராத் கலவரத்தில் நேரடி யாக ஈடுபட்டு 29 ஆண்டுகளுக்கு தண்டனை பெற்றதனால், அமைச்சர் பதவி இழந்தவர்;

மத்திய அரசின் தணிக்கை அலு வலக அறிக்கையின்படி, அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் டோப்ரோ போன்ற மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தவறான முறையில் சலுகைகள் தந்து அரசுக்கு ரூ.1275 கோடி இழப்பு 2011-12-ல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஏழை விவசாயிகளின் நிலங்களை, அச்சுறுத்தி, குறைந்த விலையில் அதானி போன்ற பெரும் நிறுவனங் களுக்கு, தாரை வார்த்துக் கொடுத் துள்ளது.

அதானி, அம்பானி நிறுவனங்கள், மோடிக்கு ஆதரவாக இருப்பதற்கு, அவர் இத்தகைய சலுகைகளை அள்ளி வீசுவதால் தான் என கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு இதுவரை மோடியோ, அவரது பாஜகவோ, பதில் ஏதும் சொல்லவில்லை.

மோடியை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்திற்கு, இதுவரை ரூ.10000 கோடி கருப்புப்பணம் செலவிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறிய குற்றச்சாட் டுக்கும் பதில் இல்லை.

இத்தகைய குற்றச்சாட்டுகள் கொண்ட மோடி சொல்கிறார்; எனக் காக நான் எதையும் செய்து கொள்ள மாட்டேன் என்று.

மோடி அவர்களே! நீங்கள் கூறிய வசனத்தை நாங்கள் தமிழ் நாட்டில் ஏற்கெனவே கேட்டிருக்கிறோம். எனக்கு என்று எந்த தேவையும் இல்லை; நான் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே பெறுகிறேன் என்று சொன்னவர் மீது தான், இன் றைக்கு பெங்களூர் நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர், வரிசையாக பட்டிய லிட்டு, எந்தெந்த ஊர்களில் எத்தனை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள் ளது; அவற்றின் இன்றைய மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் என கூறி யுள்ளார். தமிழ் நாட்டில் ஓர் வழக்கு மொழி உள்ளது. யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை என்று

நம்பும்படியாக நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் மோடி ஜி.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78482.html#ixzz2yXEUQEK9

தமிழ் ஓவியா said...


கார்ப்பரேட் - வகுப்புவாத சக்திகளின் பின்(பு)பலத்தில் பி.ஜே.பி.! மக்களவைத் தேர்தலில் தோற்கடிப்பீர்! பல்துறைப் பெரு மக்களும் வேண்டுகோள்!!

பாஜக தலைமையிலான கார்ப்ப ரேட்- வகுப்புவாத சக்திகளின் கூட்டணி ஆட்சியில் அமர மேற்கொள்ளும் முயற் சியை அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் முறியடிக்க வேண்டும் என கல்வியாளர்கள், திரையுலகினர் உள் ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள் ளனர். திரை இயக்குநர்கள் குமார் ஷஹானி, சயீத் மிர்ஸா, கலைஞர்கள் அர்பணா கவுர், விவன் சுந்தரம், திரை யுலக பிரபலங்கள் எம்.கே.ரைனா, அனுராதா கபூர், பத்ரிரைனா, கல்வியா ளர்கள் இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், அமியா குமார், பக்சி, ஜெயந்தி கோஷ், ஹர்பன்ஸ் முகியா, சி.பி.சந்திரசேகர், சக்திகாக், ஆஷ்லி டெலிஸ், அனில் சடகோபால், டி. என். ஜா, கே.எம்.சிறீமலி உள்ளிட்ட 60 பேர் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

இந்து தேசியத்தை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவரும் அமைப்புக்கு ஆதரவாக உள்ள அரசியல் சக்திகள் இந்த தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சியில் அமர கடும் முனைப்பு காட்டி வருகின் றன. சுதந்திர இந்தியா இதுவரை கண்டி ராத நிலைமை இது. இந்த சக்திகளுக்கு பலமிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் அரவணைப்பும் ஆதரவும் இருக்கிறது.
2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைக்களத்துக்கு தலைமை தாங்கி அதில் தனக்கு உள்ள பங்குக்காக இதுவரை மன வருத்தம் தெரிவிக்க முன்வராத நபர்தான் இந்த சக்திகளைத் தலைமை ஏற்று வழி நடத்துபவர்.

கார்ப்பரேட்-வகுப்புவாத சக்திகளின் கூட்டணி, ஆட்சியை பிடித்தால் அது நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர் காலத்துக்கே உலைவைத்துவிடும்.

பொறுப்புமிக்க தனி நபர்களும் அரசியல் அமைப்புகளும் நிலை மையை சீர்தூக்கிப் பார்த்து மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கட்டிக்காத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ள வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வாக் களித்து கார்ப்பரேட்- வகுப்புவாத சக்தி களின் கூட்டணியின் ஆட்சி அதிகாரத்தில் அமரும் முயற்சியை முறியடிக்க வேண் டும் என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
அலிகார் பல்கலை. குஜராத் கலவரத்துக்கு காரணமான வர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப முஸ்லிம்கள் சாதுர்யமாக ஓட்டளிக்க வேண்டும் என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இச்சங்கத்தின் கவுரவ செயலாளரான இணைப் பேராசிரியர் டாக்டர் அப்தாப் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதவாத, ஆதிக்க சக்திகள் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண் டும். குஜராத், முஸாபர்நகர் கலவரத் துக்கு காரணமானவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள். அவர் கள் தேல்வி அடையும் வகையில் முஸ் லிம்களும், மதச்சார்பற்ற வாக்காளர் களும் சாதுர்யமாக வாக்களிக்க வேண்டும்.

மதவாத மோடியையும், போலி மதவாத முலாயம் சிங்கையும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தோற் கடிக்க வேண்டும்.

நடந்த சம்பவத்துக்கு மோடி இது வரை வருந்தவில்லை. முஸாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 20,000 முஸ்லிம் கள் 15 முகாம்களில் அச்சத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்ய வில்லை.

முஸ்லிம்களின் முதல் முக்கியத் துவம் அவர்களது பாதுகாப்புதான். அதை உறுதி செய்து பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குபவர்களுக்கே முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. வட இந்திய முஸ்லிம்கள் இடையே அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் வேண்டுகோள் மிகவும் முக் கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-2/78526.html#ixzz2yd9onR5I

தமிழ் ஓவியா said...


மோடியின் டிவிட்டரில் பொய்யான எண்ணிக்கைகள்

டிவிட்டர் எனும் நவீன ஊடக செயல்பாடு, ஒருவர் கருத்தை பதிவு செய்தால், அதனை வரவேற்கவும், கருத்து கூறவும், மாறுபட்ட எண் ணத்தை வெளிப்படுத்தவும் உள்ள ஓர் சிறப்பான விஞ்ஞான கண்டு பிடிப்பாகும். பலர் அதில் தங்களை இணைத்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்; விவா தம் மேற்கொள்கின்றனர். மிகப் பெரிய பிரபலங்கள் இந்த டிவிட் டரை பயன்படுத்தி வருகின்றனர்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியும் டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்த அடுத்த நிமி டங்களிலேயே, ஆயிரக்கணக்கான வர்கள் அவரது கருத்தை வரவேற்ப தாக விருப்பம் தெரிவிக்கின்றனர். ஒரு மில்லியன் அதாவது பத்து லட்சம் பேர், மோடியின் டிவிட்டரை விரும்புகின்றனராம்; மோடி நன்றி தெரிவிக்கிறார்.

ஆனால், அத்தகைய எண்ணிக் கையில் யாரும் உண்மையில் விருப் பம் தெரிவிக்கவில்லை; பொய்யான முறையில், இதனை உண்டாக்கி வருகின்றனர், மோடியின் ஊடக ஏஜெண்டுகள்.

ஸ்டேட்டஸ் பீப்பிள் எனும் இணையதள நிறுவனம் லண்டனில் உள்ளது. இந்த இணைய தள நிறு வனம், அல்காரிதம் எனும் முறை யில், டிவிட்டர் பயன்பாட்டாளர் களில் பொய்யானவர்கள் யார், எந்தவித செயல்பாடும் இல்லாதவர் கள் யார் என கண்டறியும் திறமை படைத்த நிறுவனம். இந்த நிறு வனம், மோடியின் டிவிட்டரை விரும்புவதாக காட்டும் எண்ணிக் கையில், 46 விழுக்காடு பொய் யானவை என்றும், 41 விழுக்காடு, எந்தவித செயல்பாடும் இல்லாத வர்கள் என்றும் கண்டுபிடித்துள்ளது.

2009-ல் மோடி, டிவிட்டரை துவங்கும்போது, அவருக்கு ஒரு லட்சம் வாசகர்கள் உள்ளதாக சொன் னார்கள்; நவம்பர் 2011-ல், இந்த எண்ணிக்கை, நான்கு லட்சம் என்று சொன்னார்கள். தற்போது, பத்து லட்சம் என மோ(ச)டி சொல்கிறார்.

இதுபோல், பொய்யான வாசகர் களை உருவாக்குவது இப்போது அதிகமாகி உள்ளது; சில நிறுவனங் கள், இந்த வாசகர்களுக்கு, 10 பைசா முதல் 50 பைசா வரை, ஒவ்வொரு விருப்பம் தெரிவிக்கும்போதும் தருகிறார்கள் என்கிறார் இணைய தள நிறுவனத்தில் இயக்குநராக இருக் கும் அபிஜித் சோனாகரா.

மோடி என்கிற ஒரு மனிதர், எந்தெந்த வகையில் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறார் என்பதற்கு, அவரது டிவிட்டரும் அதில் விருப் பம் தெரிவிப்பவர்களின் எண்ணிக் கையை பொய்யாக உயர்த்திக் காட்டி, மக்களிடையே தனக்கு அதிக செல் வாக்கு இருப்பதாக ஓர் மாயையை உருவாக்கும் இந்த மோசடிச் செய லும், ஒரு பானை சோற்றுக்கு ஓரு பருக்கை பதம் என்பதை தெளிவாக்கி உள்ளது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78528.html#ixzz2yd9xxNO1

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்


நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப்படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்.
(விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/78520.html#ixzz2ydA7fziL

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்பாதே!


முன்காலத்தில் அடுத்த வீட்டுக்காரன் பசியால் துடிப்பதைப் பார்த்து உதவி செய்தார்கள். இப்போது இருப்பவர்கள் அப்படி இல்லை - எல்லாம் அவன் தலையெழுத்து, பட்டினி கிடக்கிறான் என்று பேசுகிறார்கள்.

தலையில் யார் வந்து எழுதியது? தலையெழுத்து எப்படி இருக்கும்? பட்டினி கிடப்பதற்கு தலை எழுத்து என்றால் என்ன அர்த்தம்? வேலை இல்லை, கூலி கிடைக்கவில்லை, அதனால் அவன் பட்டினியாக கிடக்கிறான்.

-மதுரை ஜில்லா நிலக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டது (29.12.1958)

தகவல்: ச.இராசாமி, சென்னை -18

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydBq5ism

தமிழ் ஓவியா said...

ஆலயத் திருடர்கள்!

நாம் திருடர்களைத் தண்டிக்கும்பொழுது கத்தியால் குத்தியும், தூக்கு மேடைக்கு அனுப்பியும், சிறையிலே சித்திரவதையும் செய்யும் பொழுது, ஆலயங்களின் பெயரால் தீமை புரிகின்றவர்களை ஏன் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது?

- மார்ட்டின் லூதர்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydC6Unpw

தமிழ் ஓவியா said...

மனுநீதி இப்படிச் சொல்கிறது

ஆரிய ஆணுக்கும், ஆரிய இனமல்லாத பெண்ணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியும். ஆரிய பெண்ணுக்கும், ஆரியனல்லாத ஆணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியாது.

பார்ப்பானைக் கொல்வது, பார்ப்பானின் பொன்னைக் கவர்வது, குரு பத்தினியோடு உறவு கொள்வது ஆகியவை மகா பாதகங்களாகும். பார்ப்பானைக் கொன்றவன் 12 ஆண்டுகள் வனவாசம் புரிய வேண்டும். அல்லது எரியும் நெருப்பில் மூன்று முறை சாஷ்டாங்கமாக விழ வேண்டும்.

அல்லது போர்க்களத்தில் அம்புகளை எய்கின்ற இலக்காக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். சூத்திரனைக் கொன்ற பார்ப்பான் ஆறுமாதம் தவம் புரிய வேண்டும்; அல்லது பத்து பசுக்களையும், ஒரு எருதையும் பார்ப்பானுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.

ஒரு சண்டாளனை, அல்லது பிணத்தைத் தொட்டவன் குளிப்பதன் மூலம் தூய்மை அடையலாம்.

ஒரு பார்ப்பனப் பெண்ணோடு அவள் விருப்பத்திற்கு எதிராக சம்போக உறவுகொண்ட பார்ப்பனனின் தலையை மொட்டை அடிப்பது அதற்குரிய தண்டனை ஆகும். இதே குற்றத்தை மற்ற ஜாதிக்காரர்கள் செய்தால் அவர்களைக் கொல்ல வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydCCKkvY

தமிழ் ஓவியா said...

பழைமைக்கு அடி

ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லை யென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங் களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ் வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

Read more: http://viduthalai.in/page-7/78518.html#ixzz2ydCHscuu

தமிழ் ஓவியா said...


அவதாரங்கள் அழிவு வேலைக்கே


கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா?

அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றி யவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!

திராவிடர்களை ஒழிக்க: அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது தோற்று விக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.

தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.

நம்மையும் ஒழித்திருப்பார்கள்: மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு ராட்சதன் சாஸ்திரங் களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண் டான் என்பதுதான் நரசிம்ம அவதாரத்துக்குக் காரணம்!

இரணியன் - விஷ்ணுவின் தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக் கொள்ள மறுத்தான். இராம. அவதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான் ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும் ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற்கென்றே ஏற்பட்டவையாகும்.

அதுபோலவே சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!

10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCQJkLq

தமிழ் ஓவியா said...



முதல் தரமான விரோதி!

எல்லா மதங்களுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் முதல்தரமான விரோதியாக இருப்பது எது தெரியுமா? பகுத்தறிவு என்று இருக்கிறதே ஒரு பொருள் - அதுதான்! வேறு எது?

-வால்டேர்

Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCXnMdH

தமிழ் ஓவியா said...

அறிவைத் தரக்கூடிய புத்தகங்களை சேகரிக்க வேண்டும்

உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.



ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.

பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமரூட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.

அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வழி வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது.

நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

-அறிஞர் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/78515.html#ixzz2ydCggqy6