Search This Blog

8.4.12

என்ன புரட்சி செய்கிறேன் நான்? - பெரியார்


என்னைப் பெரிய புரட்சிக்காரன் என்று சொன்னார்கள். புரட்சி என்றால் எதிலே புரட்சி? என்ன புரட்சி செய்கிறேன் நான்? என் மனதிலே நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் நான் ஒரு பகுத்தறிவுவாதி என்பதுதான்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்ற அளவில் எந்தக் காரியத்தையும் அறிவைக் கொண்டு சிந்திப்பவன் அவ்வளவுதான். எல்லோரும் பொதுவாழ்வில் ஒரு காரியத்தை எதிர்ப்பதால் நம்ம காரியம் பார்த்து விட்டுப் போவோம் என்று விட்டு விட்டார்கள். ஆகவே, மற்றவர்களால் என்னைப் போல் சொல்ல முடியவில்லை. நம்மால் ஏன் சொல்ல முடிகிற தென்றால் நான் ஒன்றும் எதிர்பார்க்காமல் சொல்வது தான். சொல்வதிலே கடவுளைப் பற்றிச் சொல்கிறேன். கடவுள், ஆண்டவனை என்பதெல்லாம் முட்டாள்தன மான மூடநம்பிக்கை; அறிவுக்கேற்ப ஏற்றுக் கொண்ட சாதனம் அல்ல. அது ஒரு பயத்தினால் ஏற்பட்டது.

பகுத்தறிவுவாதி என்ற முறையில் இப்படி சொல்கிறேன். மதத்தையும் அப்படித்தான் சொல்கிறேன். மதம் முட்டாள்தனமானது, சாஸ்திரத்தை குட்டிச் சுவரான சங்கதி; ஏமாற்றும் சதி; சூழ்ச்சி. இந்து மதம், சாஸ்திரம், புராணம், கடவுள், ஜாதி எல்லாம் முட்டாள்தனமானது. திருட்டு கூட்டத்திற்கு கன்னக்கோல் எப்படியிருக் கிறதோ அந்த மாதிரி அயோக்கியர்களுக்கு இவை உபயோகமாகிறது.

இந்த மாதிரி சில விஷயங்களை எடுத்துச் சொல்கிறேன். இதைப் புரட்சி என்கிறார்களே, எந்த ஒரு காரியத்தையும் அறிவைக் கொண்டு பயன்படுத்தப் பயப்படுகிறார்கள். நான் அதை எடுத்துச் சொல்கிறேன். என்றாலும் மக்கள் எல்லோருக்கும் அது ஒரு திடுக்கிடும்படியான சங்கதி. ராமசாமி தங்கமான மனிதர். அவர் மாத்திரம் கடவுள் இல்லை என்று சொல்லாமல் இருந்தால், நாம் அவரைக் கூடக் கடவுளாகக் கும்பிடலாம் என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி எண்ணம் ஜனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நான் பெரும்பாலும் வெறுக்கப்படுகிறேன். ஆகவே தான், என்னைப் பற்றி மக்களிடத்தில் ஒரு வெறுப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட புரட்சிக்காரனாகிய எனக்கு இந்த மாதிரியான ஒரு பாராட்டுதல், கொண்டாடுதல், பணம் கொடுத்தல் ஆகியவை நடக்கிறது என்றால் உள்ளபடியே என்னைப் போல் உள்ளவன் என்ன நினைப்பான்? இவர்கள் என்னைப் பாராட்டுகிறார்களே; போற்றுகிறார்களே; நாம் ஏதாவது நம் கொள்கையிலிருந்து கீழே போய்விட்டோமா? இல்லாவிட்டால் இவ்வளவு கொண்டாடுவதற்கு என்ன காரணம்? நாம் கொள்கையிலிருந்து மாறவில்லை என்பது உறுதியானால் ஜனங்கள் புத்திசாலிகள் ஆகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த இரண்டையும் பார்த்தால் நான் மாறவில்லை; ஜனங்கள்தான் புத்தியைக் கொண்டு வளர்ந்து விட்டார்கள். எங்கே போனாலும் மக்களிடத்தில் பகுத்தறிவில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதுதான் இந்த நாட்டில் புரட்சியாக 40 வருஷங்களாக நடந்தது. வேறு எந்தக் காரியமும் கிடையாது இந்த நாட்டிலே.

இந்த நாட்டில் எதன்பேரிலாவது கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றால் ஒன்றுக்கும் இடம் இல்லை. அந்த நிலைமையில் கிளர்ச்சி இருக்கிறது; போராட்டம் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? அது அரசியல் என்ற பெயரில் இருந்தாலும், சமுதாயம் என்ற பெயரில் இருந்தாலும் அந்தப் போராட்டத்தில் அடிப்படை இந்த மாறுதல்களே இருக்கக் கூடாது என்பதுதான்.

இந்த நாட்டிலே அரசியலுக்கு என்ன குறை? யாராவது சொன்னால் அவர்களிடம் புத்தி படித்துக் கொள்ளுகிறேன். நாட்டில் தான் என்ன குறை? மக்களுக்குத்தான் என்ன குறை? யாராவது சொல்லட்டுமே, 30, 40 வருடங்களாக அறிவைப் பயன்படுத்தி எல்லாத் துறைகளிலும் இந்த நாடு மாறுதல் அடைந்திருக்கிறது. சும்மா வயிற்றுப் பிழைப்பிற்காக இன்று சிலர் அதிலே ஓட்டை, இதிலே ஓட்டை என்று சொல்லுவார்கள். சிலர் அரசாங்கத்தில் அது தப்பு, இது தப்பு என்று சொல்லுகிறார்கள். எந்த ஒரு நபராவது காரியத்தில் இது தப்பு, அது தப்பு என்று சொன்னால், நான் அவர்களுக்கு சிஷ்யனாகி விடுகிறேன்.

ஜனங்களுக்குப் புத்தியில்லாததால்தான் அவர்கள் சொல்கிறார்கள்.

1920அய்யும், 1930அய்யும் எடுத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்தில் ஆரம்பித்து இன்று 30 வருடங்கள் ஆகிவிட்டன. நான் எதிர்க்க ஆரம்பித்து என்ன ஆகியிருக் கிறது? காலப்போக்கில் மாறி விட்டது. இப் போதுதான் காலப்போக்கு வந்ததா? 50 வருடங்களாக என்னவாயிற்று? அப்போது வெள்ளைக்காரன் இருந்தான். விஞ்ஞானம் இருந்தது. அப்போதெல்லாம் வராத காலப்போக்கு இப்போதுதான் வந்ததா? அந்த 30 வருடத்தில் என்ன நடந்தது? 30 வருடத்தில்தான் உணர்ச்சி இருக்கிறது என்று ஏற்பட்டிருக்கிறது. அது எவ்வளவு மாறியிருக்கிறது யாருக்குத் தெரியும்? 40 வருடக் கதை சொன்னால் 20 வயசுப் பசங்களுக்கு என்ன தெரியும்?

----------------------------------- தந்தைபெரியார் - “விடுதலை” 24.9.1961

7 comments:

Seeni said...

varalaaru

தமிழ் ஓவியா said...

ரத்தக்காட்டேரி : திராவிடர் கழகப் பிரச்சாரம் டெக்கான் கிரானிக்கில் படப்பிடிப்பு


தருமபுரி, ஏப்.9- கடந்த சில மாதங்களாக தருமபுரியைச் சுற்றியுள்ள குண்டலப்பட்டி, மோட்டாங்குறிச்சி மற்றும் இதர கிராமங்கள் மாலை 6 மணிக்குப் பிறகு வெறிச்சோடிக் காணப் படுகின்றன. சூரியன் மறைந்த, பிறகு வெளியே சென்றால் ரத்தக் காட்டேரி தாக்கிக் கொன்று விடும் என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

வேடிக்கையாகவும், முட்டாள் தனமாகவும் தோன்றினாலும், ரத்தத்தைக் குடிக்கும் ரத்தக் காட்டேரிகள் தங்கள் கால் நடைகளைத் தாக்குவதாக நம்பும், கிராம மக்கள் அது தங்களையும் தாக்கக்கூடும் என்று நம்புகின் றனர். விநோதமான முறையில், காரணம் என்னவென்று தெரியா மலேயே அவர்களது கால்நடைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து வந்தன. மக்கள் தங்கள் வீட்டின் முன்புறத்தில் நாமம் வரைந்து வைத்து, தங்கள் வீட்டைத் தாக்க வேண்டாம் என்ற கோரிக்கையை ரத்தக் காட்டேரிக்கு எழுதி, தங்கள் வீட்டின் கதவில் ஒட்டி வைத்துள் ளனர்.

கிராமங்களில் எவரேனும் ஒரு ரத்தக்காட்டேரியைப் பிடித்துக் காட்டினால் ஒரு லட்ச ரூபாய் பரிசளிப்பதாக திராவிடர் கழக உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இது ஆர்வத்தை அளிப்பதாக உள்ளது.

இது ஒரு பெரிய ஏமாற்று வேலை. சாராயம் காய்ச்சுதல், சாராயம் கடத்தல், சாராயம் விற்றல் போன்ற சமூக விரோதச் செயல் களில் ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகள் கால்நடைகளைக் கொன்று விட்டு, இது போன்ற வதந்தி களைப் பரப்பி வருகின்றனர் என்று பரிசு அறிவித்த ஊமை. ஜெயராமன் என்பவர் கூறுகிறார்.

நாங்கள் கூறுவதை மக்கள் நம்ப விரும்பா விட்டால் இந்தப் பரிசை அறிவித்து நாங்கள் சவால் விட்டுள்ளோம் என்று அவர் கூறி னார். (டெக்கான் கிரானிக்கல் - 9.4.2012).

குறிப்பு: கடந்த நான்கு நாட்களாக ரத்தக் காட்டேரி என்று வதந்தி பரப்பப்பட்ட தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப் பட்டு, மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. 9-4-2012

தமிழ் ஓவியா said...

சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கமா? ஆரியம் தமிழ் உணர்வை மதிக்குமா? மிதிக்குமா?


- கலைஞர் கடிதம்

சித்திரையல்ல தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் - தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டின் தொடக்கம் என்று தந்தை பெரியார் மற்றும் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட புலவர் பெரும் மக்களின் உணர்வை ஆரியம் மதிக்குமா? மிதிக்குமா என்று கலைஞர் அவர்கள் முரசொலியில் இன்று (9.4.2012) எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதம் வருமாறு:

உடன்பிறப்பே,

நான் நேற்றையதினம் எழுதிய கடிதத்தில், மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்ப் புலவர்கள் 500 பேர் கூடி முடிவெடுத்த தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்க மறுத்து ஆரியமாயைக்கு கைலாகு கொடுத்து விட்டார் ஜெயலலிதா! - விரைவில் வருகின்ற சித்திரை முதல் நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று அரசிடமிருந்து வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம் என்று எழுதியிருந்தேன். ஆனால் நேற்று மாலையிலேயே ஏடு களில் வந்த செய்தி, வாய்மொழி ஆணையாக அல்ல, அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள செய்தி, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாகும் என்றும் அந்த நாளை மிகமிகக் கோலாகலமாக விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும்; தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று இதற்காக நடத்தப்போகும் விழாவில் முதல் அமைச்சரே பங்கேற்று விருதுகளை வழங்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளன.

தி.மு.க.வின் முக்கிய திட்டங்களுக்கு முற்றுப் புள்ளியா?

நான் நேற்றையதினம் எழுதியிருந்ததைப் போல கடந்த மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுப் பொறுப்புக்கு வந்தது முதல், அதுவே நிரந்தர மான வெற்றி - இனி தோல்வி என்பதே இல்லை என்ற இறுமாப்பில்; தி.மு.கழக ஆட்சியில் நடைபெற்ற முக்கியத் திட்டங்களுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழ் நாட்டு மக்கள் நன்கறிவார்கள். 23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில், பெரும்புலவரும், தனித்தமிழ் இயக்கத் தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் அய்நூறுக்கும் மேற்பட்ட புலவர் பெரு மக்கள், 1921ஆம் ஆண்டு சென்னை, பச்சை யப்பன் கல்லுரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றி னைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள். அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971ஆம் ஆண்டு முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்த மாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண் டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ் நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத் தாடை புனைந்து தமிழ்மானம், தன்மானம் போற் றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப் பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் என பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தார். தி.மு. கழக ஆட்சியில் செந்தமிழரெல்லாம் பெருமகிழ்ச் சியும், பெருமிதமும் கொள்ளத்தக்க வகையில் செய்யப்பட்ட அறிவிப்பு இது என்ற ஒன்று போதாதா ஜெயலலிதாவுக்கு! உடனே அதற்கு எதிர் நடவடிக்கையைத் தொடங்கி விட்டார்.

தமிழ் ஓவியா said...

தமிழர்களின் முடிவு

மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப்பிள்ளை, சைவப் பெரி யார் சச்சி தானந்தப் பிள்ளை, நாவலர் ந.மு. வெங் கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள் ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :-

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டா கப் பின்பற்றுவது;

2. அதனையே தமிழாண்டு எனக் கொண்டாடுவது;

3. வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது என்பனவாகும்.

தந்தை பெரியார் பங்கேற்ற மாநாட்டில்....

அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், தந்தை பெரியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் கூறியது. திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது. பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில் தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும், விவசாய வாழ்வு சார்ந்தும் தைத் திங்கள் முதல் திருநாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச் சியும் ஊட்டுகின்ற திருநாளாகும். மறைமலை அடிகளார் போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறி ஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக் கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடை முறைப் படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித் திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடு கிறார்கள். எல்லா தேசிய இனங் களுக்கும் அழிக்க முடியாத சில அடை யாளங்கள் உண்டு. தமிழர் களுக்கு நில அடையாளம் இருக்கிறது; இன அடை யாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும் குழப்பத்தில் இருந்தது. அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக் கிறது.

அய்யன் திருவள்ளுவரை கருத்துல கத்தின் அளவுகோலாய்க் காட்டியது திராவிட இயக்கம். இன்று காலத்தின் அளவுகோலா கவும் திருவள்ளுவரைக் கருதச் செய்திருக் கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும் என்று எழுதி யிருந்தார்.

மலேசியா நாட்டில் தமிழர்கள் தற்போது தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் மு.வரதராசனார் அவர்கள், முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள். அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய் வார்கள். ஊரெல் லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங் களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண் டாடுகிறார்கள் என்று விளக்கியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

ஆதாரம் இல்லையா?

ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதார மும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவ தற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மனஉணர்வை புண் படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றார். கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த நல்ல முயற்சியில் நஞ்சைக் கலந்து நசுக்குவதைப்போல், தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே தமிழையே பகைத்துக் கொள்கிற - செம்மொழி என்றாலே வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற பெரும் பிற்போக் குத் தனமான ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக் கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக் கிறார்கள். அதைப் பற்றி நான் அப்போதே ஒரு கதையின் மூலம் விளக்கியிருக்கிறேன்.

தமிழக அரசின் அறிவிப்பு வந்த அந்த நேரத்திலேயே மிகச் சிறந்த தமிழ்க் கல்வெட்டு ஆய்வாளரும் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் அவர்கள், இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகிய வற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் - ஆராய்ந்து திருத்திக்கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடு வதில் என்ன தவறு? என்றார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார், கி.வீரமணியின் கண்டனம்

தி.மு.கழக ஆட்சியில் ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப்புத்தாண்டு சட்டமுன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன்.

1-2-2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடை பெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை.சிவபுண்ணிய மும், ம.தி.மு.க. சார்பில் அப்போது அங்கேயிருந்த மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும் அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது. இப்படி யெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப் பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட தி.மு. கழக ஆட்சியிலே சட்டமாகக்கொண்டு வரப்பட்டு 2008 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டுவந்தது. தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் அது அப்படியே உயிரோடு இருக்கலாமா என்று எப்போதும் எண்ணுகின்ற அம்மையார் ஜெய லலிதா ஆட்சியிலே அது மாற்றப்பட்டுவிட்டது. அவரது அந்த அறிவிப்பினை பா.ஜ.க. அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது. அதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வினால் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவை அவையிலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து அதுபற்றி கருத்துக் கேட்ட போது அவர்களின் தமிழ் உணர்வுக்குத் தலைவணங் குகிறேன் என்று அப்போதே பதில் கூறினேன். அதன் பின்னர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்; அ.தி.மு.க. அரசின் அந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேத னைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித் திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தார்.

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மை யாகக் கண்டித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர்களுடைய இந்தத் தமிழ் உணர்வுக்கு நான் அப்போதே நன்றி தெரிவித்திருக் கிறேன்.

நித்திரையில் இருக்கும் தமிழா!

இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்று பாடியதையும் நினைவு கூர விரும்புகிறேன். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சற்று ஒரு கணம் எண்ணிப் பார்க்காமல் செய்த தவறின் காரணமாக எப்படியெல்லாம் கேடுகள் தமிழுக்கும், தமிழகத் திற்கும் நேர்ந்து வருகின்றன

என்பதைக் காணும் போது நெஞ்சம் விம்முகிறது! மறைமலை அடிகளா வது மண்ணாங் கட்டியாவது! பாரதிதாசனாவது பலநூறு புலவர்களாவது! இவர்களையெல்லாம் மதிக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது! ஆரியம், இவர்களையும் இவர்களது கொள்கை களையும் தமிழ் உணர்வுகளையும் காலில் போட்டு மிதிக்குமே தவிர மதிக்கவே மதிக்காது என்பதற்கு தமிழக அரசு இப்போது எடுத்துள்ள இந்த நிலைதான் உதாரணம்! புத்தியுள்ள தமிழா; இதை நீ புரிந்துகொண்டால் சரி!

அன்புள்ள,
மு.க 9-4-2012

தமிழ் ஓவியா said...

காக்கி காவியாகிறதா?

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கு:
ஆவி மூலம் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கிறதாம் காவல்துறை

திருச்சி, ஏப். 9 - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வின் தம்பி ராமஜெயம் கடந்த மாதம் 29-ஆம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கூலிப் படையையும், அவர்களை ஏவிய முக்கிய பிரமுகர்களையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராமஜெயத்தின் தொழில் எதிரிகள், பணம் கொடுக்கல் வாங்கலில் மோதியவர்கள், தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் என பல கோணங்களில் விசாரணை நடந்தது. 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் சரியான துப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி திருமண விவகாரத்தில் ராமஜெயம் தலையிட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அந்த காதல் திருமண ஜோடி இருக்கும் இடம் பற்றி இதுவரை துப்பு துலங்கவில்லை.

இதனால் தனிப்படை போலீசார் சோர்ந்து போய் உள்ளனர். ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படையை பிடித்து அதன் மூலம் பின்னணியில் உள்ளவர்களை மடக்கலாம் என்ற விசாரணையிலும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. ராமஜெயத்தை கொன்ற கூலிப்படை, கல்லணை வழியாக சென்றது என்பதால் அவர்கள் தஞ்சை, நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்பட்டது. எனவே அந்த மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் யார்-யார்? வெளியில் நடமாடுகிறார்கள் என திருச்சி மத்திய சிறையில் இருந்து பட்டியல் பெற்று விசாரணை நடந்தது. சிறையில் இருந்த ரவுடிகளிடமும் விசாரணை நடந்தது. ஆனால் அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் தனிப்படை போலீசார் ஆவி மூலம் ராமஜெயம் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளனர். திருச்சியில் புத்தூர், வயலூர் ரோடு பகுதியில் ஆவியை வரவழைத்து கொலை, திருட்டில் ஈடுபடுபவர் களை அடையாளம் காட்டுபவர்களை தனிப்படை அணுகி உள்ளது. ஆங்கில எழுத்துக்கள் ஏ முதல் இசட் வரை மற்றும் 1 முதல் ஜீரோ வரை எண்களை தரையில் எழுதி ஒரு கவிழ்த்திய டம்ளரில் ஆட்காட்டி விரலை வைத்து ஆவியை வரவழைப்பார்கள். அப்போது இறந்தவரின் ஆவி ஆட்காட்டி விரல் வைத்துள்ள டம்ளரை கொலையாளியின் ஆங்கில முதல் எழுத்து எது? என்பதை காட்டும் வகையில் அங்கு நகர்ந்து செல்லும். இதன் மூலம் குற்றவாளி பெயர் என்ன? அவர் எந்த திசையில் உள்ளார் என்பது தெரியவரும். கொலையானவர்களையோ அல்லது அவரது குடும்பத்தில் இதற்கு முன் இறந்தவர்களையோ மனதில் நினைத்து 5 நிமிடம் பூஜை செய்து ஆவியை வர வழைப்பார்களாம். அப்போது ஆவி வந்து கொலையாளியின் பெயரை அடையாளம் காட்டுமாம்! அய்.பி.எஸ். பட்டம் பெற்று என்ன பயன்?காவியைக் கட்டிக் கொள்ளலாம்!