Search This Blog

3.4.14

நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே!

சிந்தனை அறிவே மனித வாழ்வை உயர்த்தும்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி - உயிர் நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள். பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாளாகவே தடைபடுத்தப்பட்டு வந்துள்ளது, நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்துள்ளார்கள்.

மக்களிடையே பகுத்தறிவைத் தடைபடுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி நம்பும்படிச் செய்து விட்டார்கள். பொதுவாக, கடவுளைப் புகுத்தியவன் கடவுளுக்கு முதல் நிபந்தனையாக அறிவு கொண்டு கடவுளைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ஏற்படுத்தினான்.

கடவுள் பஞ்சேந்திரியங்களுக்கும் எட்ட முடியாத வஸ்து; அறிவுக்கு எட்ட முடியாத வஸ்து - பஞ்சேந்திரியம் என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி, இந்த அய்ந்துக்கும் எட்ட மாட்டார், இந்த அய்ந்தும் கொண்டு தேடவும் கூடாது என்பதாகும். இந்த இந்திரியங்களை எல்லாம் மீறி சிந்திக்க மனது என்று ஒன்று உள்ளது; இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இத்தனை நிபந்தனைகளையும் போட்டு கடவுளைச் சொன்னான்.

கடவுள் என்றால் ஒத்துக்கொள்ள வேண்டும்; எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

கடவுள் போலவே மதத்தைப் பற்றியும் என்ன என்று சிந்திக்கக் கூடாது; மதம் எப்போது ஏற்பட்டது; யாரால் ஏற்பட்டது? என்ன ஆதாரம்? என்று சிந்திக்கக் கூடாது. சிந்தித்தால் மதம் போய்விடும். எனவே, அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

கடவுள், மதம் போலவே சாஸ்திரத்தைப் பற்றியும் ஆராயக் கூடாது; எவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களை ஆராய்கின்றானோ, அவன் நரகத்துக்குப் போவான் என்று எழுதி வைத்துள்ளார்கள். எனவே, பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது, மூட நம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக் கொள்வது ஆகும்.

நமது இழிநிலை, முட்டாள்தனம் மாற வேண்டுமானால், நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியது இல்லை; பகுத்தறிவினைக் கொண்டு தாராளமாக பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாக நழுவிவிடும்.
நமது கொள்கை பகுத்தறிவு. பகுத்தறிவு என்றால் நாத்திகம் ஆகும். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாத்திகம் ஆகும்.

கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது. எல்லாவிதமான சர்வசக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்துக்கு ஒன்றுதான். ஆனால், நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள் _- நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை; நமது கடவுளுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள்.

மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியது இல்லை, நமது நாட்டுக் கடவுளுக்கு மட்டும் மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும்.
மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுள்களுக்கு இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது. மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்ன என்ன குணங்கள் இருக்குமோ, அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏராளமான பேதங்களும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களும், காரியத்தில் கேடான குணங்களும் கடவுளுக்குக் கற்பித்து இருக்கின்றார்கள்.
இவைகளையெல்லாம் நம்புவதுதான் மூட நம்பிக்கை; நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து ஏற்கின்றதை ஏற்றுக் கொண்டு மற்றதைத் தள்ளுவதுதான் பகுத்தறிவு. நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இல்லவே இல்லை, உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால், நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?

நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே. சைவ சமயத்தில் கந்தன், முருகன், சுப்ரமணியன் என்று ஒரு கடவுள். அவனுக்குப் போட்டியாக வைணவத்தில் இராமன் என்று ஒரு கடவுள், இப்படியாக பல கடவுள்கள் கூறப்படுகின்றன. இந்தக் கந்தனைப் பற்றிய கதையும் அசிங்கம், ஆபாசமாக இருக்கும். இராமனைப் பற்றிய கதையும் ரொம்பவும் ஒழுக்கக்கேடாக இருக்கும். காரணம், இந்தக் கதைகள் ரொம்பக் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்டமையால் பகுத்தறிவைப் பற்றிய கவலையே இல்லை.
மக்கள் அறிவு கொண்டு சிந்தித்தல் வேண்டும்; அதுவே பகுத்தறிவை வளர்க்கும் பகுத்தறிவுக்குத் தடையாக இருப்பது கடவுள் மூட நம்பிக்கை, சிந்திக்கவொட்டாத நிலை.

சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்.

-----------------------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் 'விடுதலை' 16.8.1969)

45 comments:

தமிழ் ஓவியா said...


மோடியை பெரியாருடன் ஒப்பிடுவதா? நிதானமாகத்தான் பேசுகிறாரா விஜயகாந்த்?

தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் பெரியார் என்றால், அது தந்தை பெரியார். குஜராத்தில் வெண்தாடி வேந்தர் மோடிதான்!

- இப்படிப் பேசி இருக்கிறார் சினிமா நடிகர் விஜயகாந்த்.

அரசியலிலே நிதானமின்றி அவர் எப்படி யாவது உளறித் தொலைக்கட்டும்!

சமுதாயப் புரட்சி வீரரான ஒரு சகாப்த தலை வர்பற்றி வாய்க்கு வந்தவாறு விமர்சிக்கலாமா?

பாலும், நஞ்சும் ஒன்று என்று பேசலாமா?

கோட்சேயும், காந்தியும் ஒன்றே என்று கூறலாமா?

எலியும், பூனையும் இணையற்ற நண்பர்கள் என்று உளறலாமா?

பெரியார் யார்?

பேதங்கள் எந்த வடிவில் இருந்தாலும், அவற் றைப் பூண்டற்றுப் போகச் செய்யவேண்டும் என்று வெடித்துக் கிளம்பிய புரட்சியாளர் அல்லவா!

மனிதநேயத்தை வளர்த்த மாமனிதர் அல்லவா!

யானைக்கு மதம் பிடித்தாலும் சரி, மனிதனுக்கு மதம் பிடித்தாலும் சரி, இரண்டும் ஆபத்தே என்று அறிவுறுத்திய அறிவுலக ஆசான் அல்லவா பெரியார்!

அவரைப் போய் நரவேட்டை மனிதன் நரேந்திர மோடியுடன் ஒப்பிடலாமா?

மதவெறியர் மோடி! மனித நேயர் பெரியார்!

மனநோயாளிகளைத் தவிர இவ்விருவரையும் வேறு யாரால் இப்படி ஒப்பிட முடியும்?

இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகவிருந்த ஹிட்லர் அல்லவா இந்த மோடிமஸ்தான்!

மதவெறிக் கலவரத்தில் மருண்டு உயிருக்குப் பயந்து முகாம்களில் பதுங்கிக் கிடந்த முஸ்லிம் களைப் பார்த்து குழந்தை உற்பத்தி வேலையில் இறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஈவிரக்க மற்ற முறையில் விமர்சித்த விஷமத்தின் ஊற்றுக் கண்ணல்லவா மோடி!

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இந்துக் கள் அலிகள் அல்ல - ஆண்மை மிக்கவர்கள் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்கள் என்று காட்டுமிராண்டிக் கருத்தை உதிர்த்த மோடி எங்கே?

சமூகநீதியின் தந்தை பெரியார் எங்கே?

சமூகநீதிக்காக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தந்த பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பி.ஜே.பி.யின் பிரதிநிதி யல்லவா மோடி எங்கே?

உலக மக்களை எல்லாம் சகோதரத்துவம், சமத்துவம் என்ற பார்வையில் பார்த்து மனித நேயத்தையும், பகுத்தறிவையும் போதித்த புத்தரின் மறுவடிவமாம் தந்தை பெரியாரை விளையாட் டுக்குக்கூட இப்படி ஒப்பிட்டுப் பேசலாமா?

நிதானம் இழந்து பேசும் விஷம விளையாட்டு வேலைகளையெல்லாம் அரசியலோடு நிறுத்திக் கொள்ளட்டும்! கருஞ்சட்டைப் படையினரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.
ஏன்?

தந்தை பெரியார்பற்றி பொறுப்பற்றுப் பேசுவதை தமிழ்நாட்டு மக்களே பொறுத்துக் கொள்ளமாட்டார் கள். பெரியார் இந்த மண்ணை மணந்த மணாளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மூச்சு! அடக்கப்பட்ட மக்களுக்காக பொங்கி எழுந்த அரிமா!

சுண்ணாம்புக்கும், வெண்ணெய்க்கும் வித்தி யாசம் தெரியாத வெண்ணெய் வெட்டி வீரர் கள் விபரீதத்தை ஏற்படுத்தும் வார்த்தை களைக் கொட்டவேண்டாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/e-paper/77998.html#ixzz2xmXJFmLY

தமிழ் ஓவியா said...


100 அம்சங்களைக் கொண்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு ஈடு இணை ஏது?

100 அம்சங்களைக் கொண்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு ஈடு இணை ஏது?

சொல்லுவதைச் செய்யும், செய்வதைச் சொல்லும் தி.மு.க. தலைமையிலான அணிக்கே வாக்களிப்பீர்!

மதுரையில் தமிழர் தலைவர் முழக்கம்!

மதுரை, ஏப்.2- சொல் வதைச் செய்யும், செய்வ தைச் சொல்லும் தி.மு.க. தலைமையிலான ஜன நாயக முற்போக்குக் கூட் டணிக்கே மக்கள் வாக் களிக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மதுரையில் நேற்று (1.4.2014) நடைபெற்ற தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப் பிட்டதாவது:

தேர்தல் விதிமுறை களைக் கட்டுப்பாடாக கடைப்பிடிக்கும் இயக்கம் திராவிடர் கழகம். அந்த முறையில், நேரத்தின் நெருக்கடி கருதி, ஒரு சில கருத்துகளை மட்டும் தொட்டுக்காட்டி கூற விரும் புகிறேன்.

மதுரை வாக்காளப் பெரு மக்கள் சரியான அளவு விவரம் தெரிந்த மக்கள், அரசியல் தெளிவுள்ள மக்கள். அந்த வகையில், உங்களுக்கு ஒரு சில கருத் துகளைத் தொட்டுக் காட்டி னால் போதும். நீங்கள் ஆழமாகச் சிந்தித்து சரியான தீர்ப்பை 2004 இல் வழங் கியது போன்று 2014 இல் வழங்குவீர்கள் - வெற்றி பெறச் செய்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் கழகத்தின் சார் பில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறோம். இங்கே எங்கள் தோழர்கள் விற்பனை செய்கிறார்கள்.

முதல் புத்தகம் தி.மு.க. அணியை ஆதரிக்கவேண் டும் - ஏன்? இரண்டாவது புத்தகம் 16 ஆவது மக்க ளவைத் தேர்தல்: வாக்கா ளர்களே சிந்திப்பீர்!

இந்தப் புத்தகங்கள் எதற் காக? ஜனநாயக முற்போக் குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்? அதன் வேட் பாளர்களை ஏன் வெற்றி பெறச் செய்ய வேண்டும்? என்று நினைவூட்டுகின்ற வகையில், ஆதாரபூர்வமாக மறுக்க முடியாத பல உண் மைகளுடன் தொகுத்து வெளியிட்டுள்ளோம்.

மக்களுக்கு உண்மை புரிய, இரண்டு புத்தகமும் தலா ரூ.10 நன்கொடையில், அடக்க விலைக்கும் குறை வாகக் கொடுக்கின்றோம். வாங்கிப் படித்து, சிந்தித் துப் பயன்பெற வேண்டு கிறோம்.

வெற்றிக்கூட்டணி தி.மு.க.!

நாங்கள் நேற்றைய தினம் கன்னியாகுமரியில் (தென்கோடியில்) தொடங்கி இன்னும் தமிழ்நாட்டின் தஞ்சை உள்பட மற்ற மற் றப் பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யவுள்ளோம்.

எத்தனைப் பேர் போட்டி யிட்டாலும், இறுதியில் வெற்றி பெறப் போகும் அணி தி.மு.க. டாக்டர் கலைஞர் தலைமையில் உள்ள ஜனநாயக முற் போக்குக் கூட்டணிதான். இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி - இவர்களின் வெற்றி உறுதி செய்யப் பட்ட ஒன்று.


தமிழ் ஓவியா said...

மக்கள் தெளிவாக உள் ளார்கள். குழப்பவாதிக ளும் உள்ளனர். இந்தக் குழப்பத்தை எல்லாம் தாண்டி ஜனநாயக முற்போக்குக் கூட் டணி வேட்பாளர்களுக்கு, ஆதரவு தரத் தயாராக மக் களும் முன்வந்துவிட் டார்கள் என்பது இங்கு கோடிட்டுக் காட்டவேண் டிய உண்மை! காரணம் என்னவென்றால், இங்கே (மேடையில்) அமர்ந்திருக் கின்ற கூட்டணி, டாக்டர் கலைஞர் தலைமையில் உள்ள கூட்டணி கொள் கைக் கூட்டணி. மற்றவை கள் எல்லாம் கொள்கை யில்லாக் கூட்டணி. மற்ற கூட்டணி, காட்சிகள் காட் டுவது போன்றுதான் இருக் குமே தவிர, இயல்பான கூட்டணியல்ல. தி.மு.க. கூட்டணி இயல்பான கூட் டணி. இதில் சுருதி பேதம் கிடையாது. இது கொள் கைக் கூட்டணி; சந்தர்ப்ப வாத கூட்டணியல்ல. மக்க ளைச் சந்திக்கும் கூட்டணி.

என் கையில் இருப்பது

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை. இதைத் தயாரித்த குழுவிலுள்ள பேராசிரியர் டாக்டர் இராமசாமி இங்கே இருக்கிறார். அதனால், மதுரைக்கு மிகப் பெரும் பெருமை கிடைத்திருக் கிறது. இந்த அறிக்கையில் 100 திட்டங்களை செதுக்கி அளித்திருக்கிறார் கள். மற்ற கூட்டணி தேர் தல் அறிக்கையும் என் கையில் இருக்கிறது. எதையும், நாங்கள் ஆதாரம் இல்லாமல் பேசி பழக்கப்பட்டவர்கள் அல்ல. நீதிமன்றம் சென்று கூற வாய்ப்பில்லாமல் இருந்தாலும், மக்கள் மன்றத் திலே (வீதி மன்றத்திலே) எடுத்துரைப்பவர்கள் நாங்கள்.

இசை - வசை அறிக்கை

தேர்தல் அறிக்கைதான் ஓர் ஆட்சி எந்தத் திசையிலே செல்லப் போகிறது என்பதைக் குறிக்கும் அறிக்கை. 100 திட்டங்களை, செய்திகளை சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க. அறிக்கையில். சொல்வதையே செய்வோம்! செய்வதையே சொல்வோம்! என்பதுதான் தி.மு.க.;

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஏராளமான வசைமாரிகள் உண்டு; தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இசை இருக்குமே ஒழிய, வசை இருக்காது. அதிலே (அ.தி.மு.க.) வசை இருக்குமே ஒழிய இசை இருக்காது. இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கொள்கைக்காக ஆட்சியே தவிர, பதவிக்காக அல்ல. அதைத்தான் கடந்த 2004 தேர்த லில் உணர வைத்தீர்கள். அதை இப்போது 2014-லிலும் உணர வைக்கவேண்டும் மதுரை மக்களாகிய நீங்கள்.

தமிழ் ஓவியா said...


யார் தலைவர்?

ஜெயலலிதா அம்மையார் மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்தவுடன், நானே பிரதமர், பிரதமர் என்று சொல்லிவிட்டு, இப்போது திடீர் பல்டியாக, நான் கூட்டணி யில் அங்கம் வகிப்பேன் என்று சொல்கிறாரே! யாருடன் அங்கம் வகிக்கப் போகிறார்?

ஏராளமான செய்தியாளர்கள் இங்கே இருக்கிறீர்கள்; அம்மையாரைப் பார்த்து நாங்கள் கேட்கும் ஒரே ஒரு கேள்வி:

நியாயமான வாக்காளர்கள் கேட்கின்ற கேள்வி; நீங்கள், எந்த அணியில் அங்கம் வகிக்கப் போகிறீர்கள்? நீங்கள் அங்கம் வகிக்கும் அணிக்கு யார் தலைவர்? 22 ஆம் தேதிக்குள் சொல்ல வேண்டாமா? யார் தலைவர் என்று அவர்களாலேயே சொல்ல முடியாது. அவர்கள் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார்கள் - செய்துகொண்டிருக்கிறார் கள். இதுதான் ஜெயலலிதா அம்மையாரின் அரசியல் நாணயம், புரிந்துகொள்வீர்!

ஊழல்பற்றி யார் பேசுவது?

ஊழலைத் தடுக்கப் போகிறோம்! என்கிறார்கள். யார் பேசுவது? நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

கண்ணாடி வீட்டில் இருக்கிறவர்கள் யாராவது கற் கோட்டையை நோக்கிக் கல் எறியலாமா?

2-ஜி வழக்கில் என்ன தண்டனையா கொடுத்துவிட்டார் கள்? வழக்குதானே போடப்பட்டுள்ளது. 2-ஜி அலைவரி சையில் ஏற்பட்ட இழப்பு என்ன என்பதை ஒரே மாதிரி யாராவது சொல்லட்டும், நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.

மத்திய அமைச்சர் கபில்சிபல் அவர்களைக் கேட்டால், பூஜ்ஜியம் இழப்பு என்கிறார். மற்றவர்கள் பூஜ்ஜியம் போட்டுக் கொண்டே போகிறார்கள். கடைசியில் முடிவும் பூஜ்ஜியம்தான். அவர் (இராசா) வெற்றியுடன் வெளியில் வருவார். ஏனென்றால், அவர் மக்களுக்காகப் போராடக் கூடியவர், உழைக்கக்கூடியவர். வழக்குப் போட்டுவிட் டால், குற்றவாளி என்றால், ஜெயலலிதா அம்மையார்மீதும் வழக்கு இருக்கிறதே - இதற்கு என்ன பதில்?

கலைஞர் கேட்டாரே! சொத்துக் குவிப்பு வழக்குப்பற்றி ஊடகத்திற்கு எல்லாம் ஞாபகப்படுத்தினாரே! வழக்கு நடக்கிறது உங்களுக்கு எல்லாம் தெரியுமே! ஆகவே, ஊழ லைப்பற்றி யார் பேசுவது? அவர் மட்டுமல்ல, இப்போது புதிதாக பாவம் ஒருவர் புறப்பட்டு மோடிக்கு ஓட்டுப் போடுங்க! மோடிக்கு ஓட்டுப் போடுங்க! ஊழலை அவர் தான் ஒழிப்பார் - அவர்தான் மின்சாரத்தைக் கொடுப்பார் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் முன்பு சொல்வதை பின்பு சொல்வார்; பின்பு சொல்வதை முன்பு சொல்வார்.

செய்தியாளர்கள் கெட்டிக்காரர்கள், நீங்கள் எப்படியானாலும் மாற்றி எழுதிக் கொள்ளலாம். நான் எப்படியானாலும் பேசுவேன். உங்களுக்குப் புரிஞ்சிக்கிற சக்தியைப் பொறுத்தது என்று பேசுவார் - என்ன பேசுகி றோம் என்று பேசுகிற அவருக்கே புரியாது!

பதில் சொல்வாரா விஜயகாந்த்?

ஊழலைப்பற்றி பேசுகிறார் அவர். செய்தியாளர்கள் இங்கே இருக்கிறீர்கள். மோடி ராஜ்ஜியத்தில் ஊழல் இல்லையா? இதற்கு விஜயகாந்த் பதில் சொல்லவேண்டும்.

குஜராத்தில் ஓடுகிற கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையிலிருந்து, ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் எரிவாயு தோண்டி எடுக்கும் ஒப்பந்தத்தை (டெண்டர்) ஒன்று, இரண்டல்ல, 20 ஆயிரம் கோடி ரூபாய் - குளோபல் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகள் (டெண்டர்) எதுவுமே இல்லாமல், அப்படியே வெறும் சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு மோடி வழங்கியுள்ளார். இதை நாங்கள் சொல்லவில்லை; மத்திய கணக்குத் துறை அதிகாரி (சி.ஏ.ஜி.) சுட்டிக்காட்டுகிறார். இதேபோல், எட்டு ஊழல்களை சுட்டிக் காட்டுகிறார்.

ஒரே ஒரு ஊழலைப்பற்றி விளம்பரப் படுத்துகின்ற இந்நாட்டு ஊடகங்கள் இதைப்பற்றிய செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா?

எங்களைப் போன்றோரைத் தவிர, வேறு யார் இவற்றை எடுத்துச் சொல்வார்கள்?

ஊழலைப்பற்றிப் பேசுகிற அருகதை இல்லை மோடிக்கு. மதவாதத்திற்கும், ஜாதிய வாதத்திற்கும் இடமில்லாமல், சமூகநீதிக்கும், எல்லாருக்கும் எல்லாமும் பெறக்கூடிய அணி இருக்கின்றதென்றால், அது கலைஞர் தலைமையில் உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணி. இங்கே தோழர் வேலுச்சாமி நிற்கிறார் என்றால், கலைஞர் நிற்கிறார் என்று பொருள். அதனால், மதுரை மக்களாகிய நீங்கள் வேலுச்சாமிக்கு ஓட்டுப் போடுவதன்மூலம் கலைஞர் வெற்றி பெறுவார் என்று பல செய்திகளை எடுத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மோடியின் ஊழல் சாம்ராஜ்ஜியம்!

மோடி ஊழல் அற்றவர் என்று பிரச்சாரம் செய்கிறார்களே, அது உண்மையா?

டாட்டா கம்பெனி மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.20-க்குக் கொடுக்க முன்வந்தும், அதனை வாங்காமல், அதானி நிறுவனம் யூனிட் ஒன்றுக்கு ரூ.5.50 என்று விற்றத்தை மோடி அரசு வாங்கி வருகிறது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் ரூ.1,347 கோடி!
இந்த மோடிதான் ஊழல் ஒழிப்பு வீரரா?

- மதுரையில் தமிழர் தலைவர் வினா

மதுரையில் திராவிடர் கழகத் தலைவரின் தேர்தல் பிரச்சார உரையைக் கேட்கத் திரண்டிருந்தோர் (1.4.2014)

Read more: http://viduthalai.in/e-paper/77993.html#ixzz2xmaPudyM

தமிழ் ஓவியா said...

பெல் ஒப்பந்தத் தொழிலாளர்: வரவேற்கவேண்டிய தீர்ப்பு

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணி யாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்த்த ஒரு தீர்ப்பை மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வழங்கியுள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் பெல் நிறுவனத்தில் ஒப் பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றத் தொடங்கினர். அவர்களிலே பட்டதாரிகள் உண்டு, பட்டயப் படிப்புப் படித்தவர்கள் உண்டு. எத்தனை ஆண்டுகாலம் பணியாற்றி னாலும் அவர்கள் தினக் கூலிகள் போலத்தான் - பணி நிரந்தரப்படுத்தப்படுவதில்லை; 58 வயது முடிந்தவுடன், எந்தவிதமான பலன்களுமின்றி வெறும் கையோடு வெளியே போகவேண்டியதுதான். துப்புரவுப் பணியிலிருந்து அந்த நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யாத வேலையில்லை; தொழில் நுட்பம் தொடர்பான பணிகளாக இருந்தாலும் அவை அவர்களுக்கு அத்துப்படியே!

வேலையை வாங்கிக்கொள்வார்கள் - ஆனால், வேலைக்குரிய அங்கீகாரம் மட்டும் அளிப்பதில்லை. காரணம், அவர்களில் எவரும் உயர்ஜாதிக்காரர்கள் கிடையாதே!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்தான் நூற் றுக்கு நூறு சதவிகிதமாகும். அதனால் பெல் நிறுவனத்தின் உயர்ஜாதி ஆளுமை அவர்களை அலட்சியப்படுத்தி வந்தது.

திராவிடர் கழகம் - அதன் பெல் தொழிலாளர் கழகம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து இந்த ஒடுக்கப் பட்ட நாதியற்ற மக்களின் அடிப்படை உரிமை களுக்காகக் குரல் கொடுத்தே வந்திருக்கிறது; தேவைப்படும்பொழு தெல்லாம் போராட்டங்களையும் நடத்தியிருக் கிறது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையிலும்கூட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுண்டு.

இதில் என்ன கொடுமையென்றால், அரித்துவாரில் இயங்கிவரும் இதே பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெல் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களிலும் இயங்கி வருகிறது. ஒரே அமைப்பின்கீழ் இயங்கும் நிறுவனம், இடத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றிக் கொள்ள முடியுமா? அப்படி மாற்றிக் கொண்டு செயல்பட்டு இருக் கிறது என்றால், அது ஒரு வகையான ஒழுங்குக் குறைவான நிர்வாகச் சீர்கேடு என்றே கருதப்படவேண்டும்.

ரயில்வேயில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலா ளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டும் உள்ளனர். நீண்ட போராட் டத்திற்கும், வேலை நிறுத்தத்திற்கும் பிறகு நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றி வந்த 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...


இவையெல்லாம் நடந்தாலும் திருவெறும்பூர் பெல் நிறுவனம் மட்டும் சற்றும் அசைந்து கொடுக்காமல் இடித்த புளிபோலவே இருக்கும்.

இதற்கு முடிவுகட்டும் வகையில் சட்ட ரீதியாகச் செயல் படுவது என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் இயங்கிவரும் பெல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், அதன் பொதுச்செயலாளர் தோழர் மு.சேகர் மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந் தார். திராவிடர் கழக சட்டத் துறைத் தலைவர் வழக்குரை ஞர் த.வீரசேகரன் சங்கத்தின் சார்பில் வாதாடினார்.

நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலும், அரித்துவார் பெல் நிறுவனத் திலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள் ளதைச் சுட்டிக்காட்டி, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்தவேண்டும் என்று சிறப்பான தீர்ப்பினை அளித்தார் (28.2.2014). தீர்ப்புக் கிடைத்த எட்டு வாரங்களுக்குள் ஆணை நிறைவேற்றப்படவேண்டும் என்றும் நீதிபதி, தம் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளார்.

பெல் நிறுவனம் இந்தத் தீர்ப்பை செயல்படுத்தியே தீர வேண்டும். பொதுவாக தொழிலாளர்கள் - பணியாளர் களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும்பொழுதெல்லாம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து, காலம் கடத்துவதை வழமையாகக் கொண்டது திருவெறும்பூர் பெல் நிறுவனம். அவர்கள் செலவு செய்வது சொந்தப் பணம் அல்லவே - நிறுனத்தின் பணம்தானே! தொழிலாளர்கள், பணியாளர்கள் நீதிமன்றம் செல்லவேண்டுமானால், அவர்கள் சொந்தப் பணத்தையல்லவா செலவழித்துத் தீரவேண்டும்.

இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது பெல் நிர்வாகம். இந்தப் பிரச் சினையிலும் அவ்வாறு நடந்துகொள்ளாது என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் உள்ள நவரத்தினங்களுள் ஒன்று பெல் நிறுவனம். இலாபத்தைத் திரட்டிக் கொடுக்கிறது; அந்த இலாபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் பங்கு இருக்கிறது என்பதை மனிதாபிமானத் துடன் ஒப்புக்கொண்டு, நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை யைச் செயல்படுத்தி, சுமூகமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் திராவிடர் தொழி லாளர் கழகமும், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் வெறும் கூலி தொடர்பான சமாச்சாரங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் அமைப்புகளாக இல்லாமல், தொழிலாளர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பையும், பகுத்தறிவு உணர்வையும் வளர்த்தெடுக்க அயராது பாடுபட்டுக் கொண்டுவரும் அமைப்புகளாகும்.

மதவாத சக்திகள் வாய் பிளந்து, அதற்குத் தொழிலா ளர்கள் பலியாகி விடக் கூடாது என்பதற்காக எப்பொழு துமே விழிப்போடு பணியாற்றும் அமைப்பாகும்.

அந்த வகையில் கழகத்தின் இந்த அமைப்புகளையும், அவற்றை வழிநடத்தும் நிர்வாகிகளையும் பாராட்டுகி றோம். சங்கத்தை மேலும் வளர்த்து, செழுமைப்படுத்தி, தொழிலாளர்கள் ஒற்றுமையைக் கட்டிக் காத்து, அவர்கள் மேலும் பெறவேண்டிய உரிமைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடும் என்பதை இந்த அமைப்பில் இல்லாத தொழி லாளர்த் தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/78008.html#ixzz2xmdBUdE1

தமிழ் ஓவியா said...


சுயராஜ்யமா? சுயமரியாதையா?

சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்ஜியம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்ஜியம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதையற்றவனைப் பிணமென்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 24.1.1926)

Read more: http://viduthalai.in/page-2/78006.html#ixzz2xmdIoEk4

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் கல்வி வளர்ச்சி லட்சணம்?

தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம், மாநிலங் களின் கல்வி வளர்ச்சி பற்றிய அறிக் கையினை டிசம்பர், 2013 இல் வெளி யிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, கல்வி குறியீட் டில், குஜராத் மாநிலம் இதற்கு முன் னர் இருந்த 9 ஆவது இடத்திலிருந்து 18 ஆவது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளதாக அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி அளவில், 12 ஆவது இடத்திலிருந்து 28 ஆவது இடத்திற்கும், உயர் நிலைப்பள்ளி அளவில், 8 ஆவது இடத்திலிருந்து, 14 ஆவது இடத்திற்கும் குஜராத் பின்ன டைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டி, இரண்டையும் இணைத்து சராசரி பார்க்கையில், மாநிலங்கள் வரிசையில் 18 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளதை அறிக்கை தெளிவாக கூறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் 8 ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3 ஆவது இடத்திலும் தொடர்ந்து உள்ளதை யும் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கை கூறுகிறது.

இந்த தரவரிசை, மாநிலங்கள் கல்வித்துறையில் செய்த சாதனையின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. அடிப்படைக் கல்வி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, பள் ளிக்கு வராமல், நின்றுவிடும் குழந்தை களின் எண்ணிக்கை, இவற்றின் அடிப் படையில் இந்தத் தரவரிசை தேசிய பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

முதல் இடத்தை சிறிய தீவான லட்சதீபமும், இரண்டாவது இடத்தை, புதுச்சேரி மாநிலமும் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை தமிழகம் பெற் றுள்ளது. மிகப்பெரிய மாநிலம் என எடுத்துக்கொண்டால், தமிழகம் முத லிடத்தைப் பெற்றுள்ளது என நாம் பெருமையோடு கூறிக்கொள்ளலாம்.

நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கி, பெரியாரின் போராட்டத்தால், தமிழ கம் கல்வி வளர்ச்சி பெற்று, கல்வி வள்ளல் காமராசர் காலத்தில், கல்வி புரட்சி ஏற்பட்டு தொடர்ந்து, தமிழ கம் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

மோடியின் ஆட்சியில், குஜராத் மாநிலம், 9 ஆவது இடத்திலிருந்து, 18 ஆவது இடத்திற்கு பின்னடைந்துள் ளது. (ஆதாரம்: Gujarat drops in educational index - DNA - 5.12.2013)

குஜராத் மாடல், மோடியின் நல் லாட்சி என தமிழ் நாட்டில் பாஜகவு டன் கூவிக் குலாவும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், இந்தப் புள்ளி விவரத்திற்கு, பதில் சொல்லி விட்டு, தேர்தலை சந்திக்கட்டும். பார்ப்போமே இவர்களின் நாண யத்தை?

- - குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/78018.html#ixzz2xmdeKIuK

தமிழ் ஓவியா said...


இவாள் அவாள்!


முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். இவாள் எல்லாம் அதிகாரத்தில் இருந்தபோது அவாளுக்குச் சாதமகமாக எப்படி நடந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் தலைவராக்கப்பட்டார். இவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் தேர்வுத் தாள் அவுட்டானது. தேர்வில் தமிழுக்கு என்று இருந்த மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன.

இப்பொழுது அதிமுகவிலேயே சேர்ந்து விட்டார். அடுத்தடுத்துப் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுவார் அதிமுக ஆட்சியில்.

சென்னையில் ஏற்கெனவே அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் விலக்கிக் கொள்ளப்பட்டு, அந்த இடத்தில் இவர் நிறுத்தப்படுவார் என்கிறது தினமலர் எதுவும் நடக்கலாம்.

அவாள் ஆயிற்றே! அண்ணா தி.மு.க. அக்ரகார தி.மு.க. தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/page-8/78012.html#ixzz2xme9Rbji

தமிழ் ஓவியா said...


சொன்ன ஞாபகம் இல்லையோ...


திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் சுகந்தி (வயது 28) மகள் மேனகா (வயது 8), மகன் ஹேமசந்தர் (வயது 7) மூவரும் கிணற்றில் விழுந்து வறுமையால் தற்கொலைசெய்து கொண்டனர் என்பது செய்தி.

இன்றைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் மிக முக்கிய சாதனை இது. இந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது 8 ஆண்டுகளுக்கு முன் நம் ஞாபகம் சென்றாக வேண்டும். திருத்துறைப்பூண்டிக்கு அருகில் ஆதிச்சபுரம் என்னும் கிராமம். பட்டினியால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி (இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி) சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்ன பொழுது - முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு வெடித்துக் கிளம்பியது கோபத் தீ!

என்ன சொன்னார் முதல் அமைச்சர் தெரியுமா?

மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமி சபைக்குத் தவறான தகவலை திரும்பத் திரும்ப சொல்லி எனது அரசுக்கு களங்கம் கற்பிக்க முயல்கிறார். நான் மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமியைக் கேட்கிறேன். பிரகாஷ் பட்டினியால் செத்தது உண்மை என்று சொன்னால் மற்ற மூன்று குழந்தைகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? என கேட்டாரே பார்க்கலாம்.

என்னே மனிதாபிமானம் பார்த்தீர்களா?

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஜனசக்தி 19.3.2006 அன்று என்ன எழுதியது தெரியுமா?

குழந்தை இறந்ததற்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளை இழந்த குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி ஒரு பட்டினிச்சாவு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று முதல் அமைச்சர் குறிப்பிட்டு இருப்பாரேயானால் அவரது பெருந்தன்மையைப் பாராட்டலாம், போற்றலாம். மாறாக மற்ற மூன்று குழந்தைகள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று கேட்ட மனிதாபிமானமற்ற பேயாட்சியினை இனியும் அனுமதிக்க முடியுமா? என்று அன்று ஜனசக்தி எழுதியதே.

அத்திப்பட்டுக் கிராமத்தில் இரு குழந்தைகளோடு ஒரு தாயும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறாரே - அதே கேள்வியையே இன்றைக்கு கேட்க வேண்டாமா?

சிந்திப்பீர் வாக்காளர்களே!

Read more: http://viduthalai.in/page-8/78013.html#ixzz2xmeHt2IM

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்!

புள்ளிவிவரம்

தமிழ்நாட்டில் வாக்காளர் கள்பற்றிய ஒரு தகவல்:

30-39 வயதுள்ள வாக் காளர்கள் 1.34 கோடி

40-49 வயதுள்ள வாக் காளர்கள் 1.15 கோடி

50-59 வயதுள்ள வாக் காளர்கள் 83 லட்சம்

60-69 வயதுள்ள வாக் காளர்கள் 55 லட்சம்

இது தேர்தல் ஆணையம் அளித்துள்ள புள்ளி விவரம்.

இல்லை

உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வில்லை.

சீசரின் மனைவி...

தமிழக அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் சிறிய பேருந்துகள், விற்பனை செய்யும் குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னம் உள்ளது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய் யப்பட்ட நிலையில், உயர்நீதி மன்றத்திற்கு ஆளும் தரப்பில் அது எடுத்துச் செல்லப்பட் டது. நீதிமன்றத்தின் ஆணைப் படி சிறிய பேருந்துகளில் இரட்டை இலை நீக்கப்பட் டது. இப்பொழுது குடிநீர் பாட்டிலிலும் இடம்பெற் றுள்ள இரட்டை இலையை நீக்குவது குறித்துத் தலை மைத் தேர்தல் ஆணையத் திடம் ஆலோசனை கேட் டுள்ளதாக தமிழ்நாடு தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

இதில் ஆலோசனை கேட் பதற்கு என்ன இருக்கிறது? சுவரில் எழுதும் தேர்தல் சின் னத்தையே அனுமதிக்காத தமிழகத் தேர்தல் ஆணையம், அரசு விற்கும் குடிநீர் பாட்டி லில் சட்ட விரோதமாக இரட்டை இலை இடம்பெற்றி ருப்பதை நீக்குவதற்கு எண் பேராயத்தைக் கூட்டித்தான் முடிவு செய்யவேண்டுமா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

சீசரின் மனைவி சந்கேத் திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்திற்கும் பொருந்துமே!

அ.தி.மு.க. கலக்கம்!

அவாள் ஏடான தின மலரே இன்று வெளியிட் டுள்ள கருத்தும் தகவலும் அ.தி.மு.க. அணியின் தற் போதைய நிலவரம் - கலவ ரமாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பிரச்சாரத்தைத் தொடங் கும்போது இருந்த நிலை வேறு - இப்பொழுதுள்ள நிலை வேறு.

நிலைமை தலை கீழாக மாறிவிட்டதால், அ.தி. மு.க. கலக்கத்தில் இருப்பதாக தினமலர் எழுதியுள்ளது.

(அ.தி.மு.க. விழிப்போடு இருக்கவேண்டும் என்று தினமலர் அக்கறையோடு கொடுக்கும் சமிக்ஞை இது!)

கறுப்புப் பணம்

மக்களவைத் தேர்தலை யொட்டி வெளிநாடுகளில் தூங்கும் கறுப்புப் பணம் என்ற பூனைக்குட்டி (அதிகம் இல்லை ரூ.23 லட்சம் கோடி தான்) இந்தியா திரும்புகிற தாம்! வாக்குகளை விலை கொடுத்து வாங்கத் தயாராகி விட்டார்களோ! எச்சரிக்கை!!

தாவலோ, தாவல்!

கருநாடகத் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கிடைக்கா ததால், எடியூரப்பாவின் கூட் டாளிகளான லட்சுமி நாராய ணன் மற்றும் நிருவாகிகள் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். நடிகை லட்சுமி தனக்கு வாய்ப்புக் கிடைக்காததால், மதச் சார்பற்ற ஜனதா தளத்தி லிருந்து விலகி, பி.ஜே.பி.,க்குத் தாவினார்.

சென்னப் பட்னா தொகுதி சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. யோகேஷ் வர் காங்கிரசுக்குப் போனார். முன்னாள் முதல்வர் ஜே.எச். பட்டேலின் மகன் மகிமா பட்டேல் காங்கிரசு சார்பாகப் போட்டியிட வாய்ப்பு மறுக் கப்பட்டதால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார்.

சீட்டுக் கிடைக்கவில்லை என்றால், கட்சியின் சீட்டைக் கிழித்துவிட்டு, சீட்டைத் தேடித் தாவ ஆரம்பித்து விட் டனர். இவர்கள் மேடைகளில் ஏறிக் கொள்கை முழக்கம் செய்வார்கள் பாருங்களேன்!

Read more: http://viduthalai.in/page-8/78017.html#ixzz2xmeQQ4ev

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை


இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.

வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்


ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

பா.ஜ.க. தலைமையில் தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்க அரும்பாடுபட்டு, ஒரு அய்ந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி -_ எந்தப் பொதுக்கொள்கையும் இல்லாமல், மோடி பிரதமரானால் அதுவே சர்வரோக நிவாரணி என்பது போல பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளது.

அவர்கள் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டுப் பாடுபடுவோம் என்று குரல் கொடுத்து, பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.

எந்த மேடையில், யாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிவுள்ள தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போலும் அவர்களுக்கு!

தி.மு.க. ஊழல் _- காங்கிரஸ் ஊழல் என்ற இவர்களது வாதம்பற்றிப் பின்னால் ஆராய்வோம்.

1. முதலில் இவர்கள் யாருடன் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பு முழக்கம் செய்கிறார்கள்? ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே! இப்போது புதிதாக ஞானஸ்நானம் தந்து எடியூரப்பா அண்கோ சிறீராமுலு போன்றவர்களுடன் கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (பா.ஜ.க.) அமைப்புகளுடன் நின்று கொண்டு, சில சீட்டுகளுக்காக ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளனரே -_ உண்மைகள் இவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறதே _- அதைக் கவனித்தார்களா?

2. அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கார்கில் போரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளுக்குக்கூட கமிஷன் வாங்கிய ஊழல் உலகத்தில் சிரிப்பாய் சிரித்ததே -_ அது மறந்து விட்டதா?

சவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள்தானே பி.ஜே.பி.யினர்!

3. பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் அவர்கள் லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக காமிராவால் படம் பிடிக்கப்பட்டு, வழக்குப் போட்டு, தண்டனையும் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்ததெல்லாம் (அண்மையில் மறைந்தார்!) மறந்துபோய் விட்டதா?

4. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, வாக்களிக்க லஞ்சம் வாங்கியவர்களில் பா.ஜ.க. எம்.பி.களும் ஆயிற்றே! ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் சிக்கியவர் பி.ஜே.பி. எம்.பி. அல்லவா!

தமிழ் ஓவியா said...

5. மோடி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை குஜராத்தில் தந்துள்ளார்; எனவே அவரே பிரதமராகி இந்தியாவை ஆள வேண்டும் -_ ஊழல் ஒழியும் என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட உத்தமர்களைப் பார்த்து ஒரு கேள்வி:

அண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,699 கோடி நிதி மற்றும் நில மோசடி குஜராத் மாநில ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபற்றி தி வீக் ஆங்கில இதழில் (23.2.2014) மல்லிகா சாராபாய் விரிவாக ஆதாரத்துடன் எழுதியுள்ளாரே _- இதுவரை மோடி தரப்பில் மறுப்பு வந்ததுண்டா?

6. கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து பல கோடி ரூபாயாகவும், தங்கக் கட்டிகளாகவும் வாங்கி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தந்தார் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு MCI என்ற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிலிருந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சி.பி.அய். விசாரணை மூலம் விரட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இன்னமும் இருக்கிறதே! அந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனரை _- குஜராத்திற்கு வரவழைத்து, அரவணைத்து, அவருக்கு ஒரு புதிய நுழைவு வாயிலாக ஒரு மருத்துவக் கல்லூரித் தலைவராக்கி, அதன் மூலம் மறுபடியும் MCI என்ற மருத்துவக் கவுன்சிலுக்குப் பட்டணப் பிரவேசம் செய்ய வழி வகைசெய்து கொடுத்தவர் குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அல்லவா!

ஊழல் சக்ரவர்த்திகளின்மீது சி.பி.அய். வழக்கு இருந்தபோதிலும், அவரையே மீண்டும் புதுவாழ்வு பெற வைத்து, நாளைக்கு மத்தியில் மோடி ஆட்சி வந்தால் இந்த திருப்பதி ஏழுமலையானுடன் தங்கம் சேர்ப்பதில் போட்டி போட்ட கேத்தன் தேசாய்தானே மருத்துவ ஆலோசகர் _- வழிகாட்டியாக இருப்பார்?

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி போல, தங்கள் முதுகை மறந்து மற்றவர்கள் பற்றிப் பேசலாமா?

தமிழ் ஓவியா said...


தங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்திரங்கள் இருக்கையில் பிறர் தூசிபற்றி பழிதூற்ற முன்வரலாமா?

7. நேற்று ஒரு செய்தி _- பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை விளக்கும் வகையில்!

லால்கிஷன் அத்வானிஜிக்கு மத்தியப் பிரதேசம் போபாலில் போட்டியிட அதற்கு முன் அங்கே எம்.பி.யாக இருந்தவர் விட்டுக் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று காங்கிரஸ்காரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளாரே, அது உண்மையானால் அதைவிட வெட்கித் தலைகுனியும் நிலை உண்டா?

கருப்புப் பணப் பட்டியலில் இல்லாத உத்தமர்கள் எத்தனைப் பேர்? உண்மையான தேர்தல் செலவைக் காட்டுபவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார்? யார்? மனசாட்சியைக் கொல்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம்.

2ஜி ஊழல் என்று திரும்பத் திரும்ப தி.மு.க. மீது அமைச்சராக இருந்த ஆ. இராசாமீது குற்றம் சுமத்துகிறார்களே, மத்தியில் அத்துறை அமைச்சராக உள்ள கபில்சிபல் நாடாளுமன்றத்திலேயே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுமில்லை. பூஜ்யம் என்று கூறவில்லையா?

இந்த ஏற்படாத நஷ்டம் பற்றிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் தி.மு.க.வை, இராசாவை வீழ்த்த நினைப்போரால், இதுவரை அந்த இழப்பின் கற்பனை மதிப்பைக்கூட ஒரே மாதிரியாகக் கூற முடியவில்லையே! அருண்ஷோரி முதல் சி.பி.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா? பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா? உறுதியாகக் கூறட்டும் பார்க்கலாம்.

அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களா? என்று கூறுவார்களேயாயின் அதே பதில் _- லாஜிக் தி.மு.க.வுக்கும் பொருந்தாதா?

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான அம்மையார் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார்; 2ஜி அலைகற்றை ரூ.1 கோடியே 80 லட்சம் கோடி இழப்பு என்று ஒரு பொய்யையே பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்!

மேற்காட்டிய பதில் இவருக்கும் பொருந்தும், ஆ. இராசா அவர்கள் ரூ.3000 கோடி மொரிஷிஸ் மற்றும் வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என திட்டமிட்ட ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே, எங்காவது எப்போதாவது ஒரு சல்லிக் காசையாவது கண்டு எடுத்ததா _- விசாரணை அமைப்புகள்?

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகரின் சொகுசு பங்களாவைப் படம் போட்டு, இது ஆ. இராசாவின் பங்களா என்று உச்சப் புளுகை ஊரெல்லாம் பரப்பியதே சில வெட்கங் கெட்ட ஊடகங்கள் _- உண்மை அம்பலமானதும் அவர்கள் எங்குப் போய்ப் புதைந்தனர்?

சொத்து சேர்த்த அம்மையார் மீதான வழக்கு உட்பட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் மற்றவைகளிலும் மூன்று நான்கு உட்பட உள்ளனவே! இதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல், பாமர வாக்காளரிடம் இதே தவறான பிரச்சாரம் செய்தால் அது எவ்வளவு நாள் தாங்கும்?

மேலே காட்டப்பட்டுள்ளபடி மற்றவர்களைக் குற்றம் சுமத்துபவர்கள் பரிசுத்த யோவான்களா? அவதாரங்களா? என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?

கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள் மீது கல்லெறிவது புத்திசாலித்தனமா?

தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர்; மீண்டும் காவியைக் கொணர முயற்சிக்கும் கங்காணிகளை சரியான அடையாளம் காணுவார்கள் _- சரியானபடி பதிலடி கொடுப்பார்கள் -_ வெகுமக்கள் வாக்குச்சீட்டின் மூலம் இது உறுதி! உறுதி!!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கமலைப் பிறாண்டும் பூணூல்கள்


கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட வருமான வரி செலுத்துங்கள் நாட்டிற்காவது நன்மை உண்டாகும் என்று கலைஞானி கமல்ஹாசன் பொறுப்புணர்ச்சியோடு கூறியுள்ளார். அவ்வளவுதான் கல்கி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள் கமல் மீது விழுந்து பிறாண்டுகின்றன.

நாட்டில் நிதிச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது? எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே! மறுக்க முடியுமா?

கமல்ஹாசன் ஒழுங்காக நாட்டை ஏமாற்றாமல் வருமான வரி கட்டுபவர்.அதனால் வரி செலுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட அவரை அழைத்துப் பேசவைத்தது வருமான வரித்துறை. அந்த நிகழ்ச்சியில்தான் பேசினார். இதில் இந்தப் பூணூல்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். நம் முன் கண் முன்னேயே பார்த்தோமே. சிதம்பரம் கோவில் கடந்த முறை இருந்த கலைஞர் ஆட்சியில் அரசுடமை ஆக்கப்பட்டது. அப்போது இலட்சக்கணக்கில் உண்டியல் வசூல் அரசு கஜானாவுக்குக் கிடைத்தது. ஆனால் அதே கோவில் தீட்சிதர்களின் பிடியில் இருந்தபோது வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே கணக்குக் காட்டப்பட்டதே, பேனா பிடிக்கும் கல்கி-தினமலர் பூணூல்களுக்குத் தெரியாதா?

நீதிக்கட்சி ஆட்சி, கோவில்களின் வருமானத்தை நிருவகிக்க இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றி, அரசுத்துறையை உருவாக்காமல் போயிருந்தால் மக்கள் பணம் அனைத்தும் அக்ரஹாரங்களின் தொப்பைகளுக்கே போயிருக்குமே!

இப்போதும் பெரும் பணக்காரர்கள் தமது கணக்கில் வராத கறுப்புப் பணங்களை கோவில் உண்டியல்களில் கொட்டுகிறார்களே.அதற்குப் பதில் அரசுக்கே வரியாகச் செலுத்தினால் மக்களுக்குத் திட்டங்களாகத் திரும்பி வருமே.அதைத்தானே கமல்ஹாசன் சொன்னார்.இதிலென்ன தவறு?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

கருத்து


தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80 சதவிகித பெண்களே உள்ளனர். அவர்களுக்கென வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய அய்.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை அய்.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை. அய்.நா. இப்படிச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. உலக அளவில் மனித விவகாரங்களைப் பேச அய்.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கிவிடக் கூடாது.

- நிமல்கா பெர்னாண்டோ,
இலங்கை மனித உரிமைப் போராளி

மனித உரிமை ஆணையத்தின் ஒப்புதலின் பேரில் இலங்கைமீது சர்வதேச விசாரணை நடத்த ஆணையர் அலுவலகத்தால் முடியும். மனித உரிமை மீறல் தொடர்பான புகாரின்பேரில் அந்நாட்டில் விசாரணை மேற்கொள்ள எனக்கு அதிகாரம் உள்ளது.

- நவநீதம் (பிள்ளை), அய்.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதால் பள்ளிகளிலேயே தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம். வீட்டில் உள்ளவர்களையும் வீட்டுக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் பலர் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. பெண்களுக்குச் சுயமாக முடிவெடுக்கும் திறன் வேண்டும். இந்தத் திறனே அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

- டாக்டர் சாந்தா,
சென்னை அடையாறு புற்றுநோய் மய்யத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

குஜராத் வளர்ச்சியா? வீழ்ச்சியா?


இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிக்கரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்!

குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலைப் படித்துவிட்டு இனி குஜராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!

இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் குஜராத்திற்கு 10 ஆம் இடம்.

இந்தியாவில் ஹூயூமன் டெவலப்மெண்ட் (527 புள்ளிகள்) குஜராத்திற்கு 14ஆம் இடம்.

ஜிடிபி (Gross Domestic Product) இந்தியாவில் குஜராத்திற்கு 5ஆம் இடம்.

வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3ஆம் இடத்தில் உள்ளது.

எழுத்தறிவில் குஜராத்திற்கு 18ஆம் இடம்.

ஏழைகள் குறைந்த மாநிலத்தில் குஜராத்திற்கு 10ஆம் இடம்.

சாலைகள் பராமரிப்பில் குஜராத்திற்கு 11ஆம் இடம்.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம்: ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.

மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்:

ஆண்கள் 63..12, பெண்கள் 64.10

பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67 பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

(இன்னும் ஏராளமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 16ஆம் மக்களவைத் தேர்தல்: வாக்காளர்களே சிந்திப்பீர் எனும் நூலிலிருந்து.)

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் மோடி ஆதரவாளர்கள் தோல்வி!

இணையத்தைச் சொடுக்கினால் அனைத்து வணிகத்தளங்களிலும் மோடியே காட்சி தருகிறார். நிச்சயம் பல நூறு கோடியைச் செலவழித்தால் ஒழிய இத்தகைய முரட்டுத்தனமான விளம்பரத்தைச் செய்ய முடியாது. இன்னொரு பக்கம் நாடெங்கும் நடத்தப்படும் மோடியின் கூட்டங்களுக்கு பல நூறு கோடிகள் கொட்டப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? தேர்தல் ஆணையம் முழுமையாகக் கண்காணிக்கிறதா என்பதே வாக்காளர்களின் கேள்வி. இந்த உருவாக்கப்பட்ட செய்தியையே அனைத்து ஊடகங்களும் கிளிப்பிள்ளைபோல சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்,அந்த விளம்பரங்கள் அத்தனையும் பொய் நிரப்பிய பலூன்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது இந்தச் செய்தி.

குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் மோடியின் ஆதரவு பெற்ற சங் பரிவாரின் அகில பாரத வித்யார்தி பரிஷத் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாம்.

8 இடங்களில் போட்டியிட்ட என்.எஸ்.யூ.அய். என்ற காங்கிரஸ் மாணவர் சங்கம் 6 இடங்களில் அமோக வெற்றி பெற்றுவிட்டதாம்.

மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.யூ.அய். 6 இடங்களிலும், ஏ.பி.வி.பி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்தார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் தன்ராஜ் சிங் வகேலா கூறுகையில் :

குஜராத்தின் 10 மாவட்டங்களில் உள்ள குஜராத் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே, இவ்வெற்றி பறை சாட்டுவதாக உள்ளது, என்றார். இந்த இளைஞர்களின் இதே மனநிலை நீடித்தால் 7 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக தோற்பது உறுதி என்றார், தன்ராஜ்.

தமிழ் ஓவியா said...

கலைஞரின் சுளீர்

செய்தியாளர்கள்: நரேந்திர மோடியின் அலை வீசுவதாகக் கூறப்படுகிறதே?

தி.மு.க. தலைவர் கலைஞர்: எனக்குத் தெரிந்த வரையில் இங்கே வங்காள வரிகுடா அலையைத் தான் காணமுடிகிறது.

- தி.மு.க.வின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டபோது... (10.3.2014)

தமிழ் ஓவியா said...

சில்லறை யு(பு)த்தி



கேள்வி : சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும் - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?

பதில் : அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் மத நம்பிக்கையைக் காரணம் காட்டி பணம் பகிர்ந்து கொள்ளும் உத்தியே! கோவிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லறை புரளும்!

தமிழ் ஓவியா said...

ஜாதகம் அது பாதகம்


இது நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்ட உண்மைச் செய்தி. ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.


என் நண்பருக்கு வேண்டியவர் ஒரு முதியவர். அவர் மனைவி மற்றும் அவர்களின் ஒரே மகன் (சுமார் 25 வயது) ஆகிய மூவரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வயோதிகத்தின் காரணமாக முதியவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு சிலர் சொல் கேட்டு அந்த முதியவரின் மகன் மாயவரத்தில் உள்ள ஒரு ஜாதகக்காரரைச் சந்தித்து தன் ஜாதகத்தைக் காட்டி தன் தகப்பனாரின் ஆயுளைப்பற்றி விசாரித்திருக்கிறார். அந்த ஜாதகத்தைப் பார்த்து நன்கு கணித்து அந்தப் பையனின் தகப்பனார் அதிகபட்சமாக 2 மாதம்தான் இருப்பார் என்றும், 2 மாதத்திற்குப் பின் பெரிய கண்டம் இருப்பதாகவும் எனவே அவர் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆனால் டாக்டர்களின் சிறந்த வைத்தியத்தாலும் மனைவி, மகன் பராமரிப்பாலும் பெரியவர் பூரண குணமடைந்து இன்றுவரை நலமாக உள்ளார்.

பெரியவரின் மகன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்த ஜாதகக்காரரைப் பார்த்து, தன் தகப்பனார் நலமுடன் இருப்பதாகவும், ஜாதகத்தைக் கணித்துக் கூறியது தவறு என்றும் கூறியுள்ளார். அதற்கு ஜாதகக்காரர், தான் கணித்துச் சொன்னது உண்மை என்றும், ஜாதகம் பொய்க்காது என்றும் கூறியதுடன் அந்த 2 மாத காலத்தில் அந்தத் தெருவில் யாராவது பெரியவர் இறந்துவிட்டாரா என்று அந்த இளைஞரைக் கேட்டதற்கு அந்த இளைஞர் தன் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகச் சொன்னதாகவும், அதற்கு ஜாதகக்காரர், அப்படி என்றால் அவர்தான் உன் உண்மையான தந்தை என்று கூறி அந்த இளைஞரை அனுப்பிவிட்டார். பின் அந்த இளைஞன் தன் வீட்டில் வந்து விவரத்தைச் சொல்ல மூவரும் நிம்மதி இழந்து தவிப்பதாகவும், ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், நண்பர் சொன்னார். இந்த விஞ்ஞான காலத்திலும், படித்த, படிக்காத பாமரர்களும் அறிவைப் பயன்படுத்தாமல் ஜாதகத்தையும் ஜாதகக்காரர் சொல்வதையும் நம்பியதால் இதுபோல் அனேக குடும்பங்கள் நிம்மதியற்றுத் தவிக்கின்றன. எனவே, யாரும் ஜாதகத்தையோ ஜாதகக்காரர் கூறுவதையோ உண்மை என்று நம்பி வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளலாமா?

- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி

தமிழ் ஓவியா said...

புதுப்பாக்கள்


ஆண்டவரும்
அளவுகோலும்!

நான் எப்போதும்
உன்னைக் கைவிட மாட்டேன்
என்று சொன்ன
என் ஆண்டவரே!
அனைத்தையும்
சுனாமி வந்து சுருட்டி
வாயில் போட்டுக்கொண்டுவிட
தனிமரமாய்
தன்னந்தனியே தவிக்கிறேனே!
நெஞ்சிலே நஞ்சை வைத்து
நாவிலே தேனைத் தடவி
நயவஞ்சகமாய்ப் பேசி
நம்பவைத்துக் கழுத்தறுப்பது
தனிமனித ஒழுக்கக்கேட்டின்
அடையாளம் மட்டும்தானா?
ஆண்டவராகிய உமக்கு - அந்த
அளவுகோல் கிடையாதா?

- சீர்காழி கு.நா.இராமண்ணா



மகாத்மா மண்ணில்
மதம் எனும் மலத்தை
தேர்தல் களமாய்
தின்னுகின்றன
நாகரிகப் பன்றிகள்

செய்திகளும் தின்பண்டங்களாக
தின்னுகின்றன மாயைகளை...
(மோடி... மோடி
ஜாடி... ஜாடி)

ஜனநாயகம் என்னும் குடிசையை
அயோத்திய அனுமான்கள்
தீவைக்கின்றன...
மீண்டும்
பதாகை ஆட்சி
வேண்டுமென்று...

நம் இராவணனின் விபீசனர்கள்
கூட்டாஞ்சோறு எனும்
தேர்தல் பந்தியில்
பாத்தி கட்டுகிறார்கள்

இந்திய வாக்காளனுக்கு
நோட்டா எனும்
வாக்குச் சீட்டில்
வாக்குச் சாவடி

ஜனநாயகமே
உனது மறுமலர்ச்சி
எப்போது?

- சின்னவெங்காயம், சென்னை

தமிழ் ஓவியா said...

நீங்களே சொல்லுங்க சார்....!


- டான் அசோக்

ஸ்ரீநிவாச வெங்கட்ராமனுக்கு ஒரு 30 வயது இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், எங்கிருந்து வர்றேள்? என்று மரியாதையாகத்தான் கேட்டான்.

அடுத்து ஒன்றிரண்டு முறை பன்மையில் மரியாதையாகத்தான் அழைத்தான். திடீரென ஒருநாள், முகிலா... அந்தப் பாட்டிலை எடுத்துக்கொடு என்றான். என்னடா இது பார்த்த இரண்டே நாளில் ஒருமையில் அழைக்கிறானே என்று அதிர்ச்சி.

ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன். அடுத்து சில நாட்கள் அவன் வந்தாலே நான் பேசுவதில்லை. ஒருநாள் அவனாகவே, டேய்... அந்த சேரை எடுத்துக்கோ. எனக்கு இது வேணும், என்றான். எனக்கு இப்போது இரட்டிப்பு அதிர்ச்சி என்றாலும் சென்றமுறையைப் போலவே இப்போதும் அமைதியாக சேரை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அடுத்தமுறை இதே போல் மரியாதையில்லாமல் பேசினால், இல்லடா சீனிவாசா என பதில் சொல்லவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் அதற்குப் பிறகு பலமுறை என்னிடம் ஒருமையில் பேசியும் என்னால் அவனிடம் ஒருமையில் பேச முடியவில்லை. எனக்கும் அது காலப்போக்கில் பழகிவிட்டது. ஒருநாள் பைக் நிறுத்தும் இடத்தில் பயங்கர சண்டை. ஸ்ரீநிவாசன் ஒரு இளவயது காவலாளியிடம் செமத்தியாக அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தான். ஓடிச்சென்று அங்கு நின்று மனம் நிறைய மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென அந்தக் காவலாளி என் பக்கம் திரும்பி, நீங்களே சொல்லுங்க சார். நான் மரியாதையா சாரி சார்னு சொன்னேன். ஆனா இவன் எடுத்தவுடன, அவனே இவனேனு திட்றான். ஆஃபீஸ்ல வேலை பாத்தா நாங்கள்லாம் இவனுக்கு என்ன அடிமையா? என்றான். இல்லை, எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

தமிழ் ஓவியா said...

மோடியின் ராம பாத்திரம்


நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்றுதான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளைச் செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளைப் புனிதமாகக் கருதுகின்றார்கள். “Experience in spirituality” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.

அவர் அந்த நூலில் எழுதுகிறார்:

“I do not believe that they are doing this job just to sustain their livelihood had this been so, they would not have continued with this type of job, generation after generation... at some point of time somebody might have got the enlightenment, that it is their duty to work for the happiness of the entire society and god so. That they have to do this job, bestowed upon them by god so, and that his job of cleaning shared continue as a spiritual activity for centuries. This shared have continued generation after generation. It is impossible to believe that their ancestors did not have choice of adopting any other job or business.”

இதன் பொருள்:

நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியைத் தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த அசிங்கமான தொழிலை இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்தக் கடமையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்.

இந்தத் துப்புரவுப் பணி, ஓர் உள்ளார்ந்த ஆன்மீக நடவடிக்கையாக, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மிகப் பணிதான், தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டிருக்கின்றது. இதல்லாமல் இந்தத் துப்புரவுப் பணிகளைச் செய்பவர்களின் தலைமுறைகளுக்கு வேறு வேலைகளோ, வாணிபங்களோ கிடைக்கவில்லை என நம்ப முடியவில்லை. இதிலிருந்து பெறப்படும் உண்மை மனித மலம் அள்ளுவது, பிணம் தூக்குவது முதலான பணிகள் ஆன்மிகத் தேடலும், நாடலுமாம். அதனால் அவர்கள் அந்தப் பணியைச் செய்திட வேண்டுமாம்.

தமிழ் ஓவியா said...


இந்த நூல் வேறொரு விதத்தில் ஆராய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.

இந்த நூல், மோடி பேசிய அல்லது நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் அவர் முதலமைச்சர் என்ற தோரணையில், அய்.ஏ.எஸ். என்ற மாவட்ட ஆட்சியர் அந்தஸ்திலுள்ள அதிகாரிகளிடம் நிகழ்த்தியது. அப்படியானால் தான் மட்டும் தலித் பெருங்குடி மக்களைப் பற்றி இப்படித் தரக்குறைவான ஒரு பார்வையைக் கொண்டிருக்க வில்லை. மாறாக, அதனை அதிகாரிகள் வட்டத்திலும் பதிய வைத்திருக்கின்றார்.

மோடி, இப்படியொரு கருத்தைத் தனது உயர்மட்ட அதிகாரிகளின் மனதில் பதிய வைத்திருக்கின்றார். திமிரோடு அதை நூலாகவும் வெளியிட்டிருக்கின்றார் என்ற செய்திகள் பரவலாயின. அதனை நவம்பர் 2007இ-ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடும் வெளியிட்டது. இதனைத் தலித் மக்கள், - குறிப்பாக தமிழக தலித் மக்கள் எதிர்த்தார்கள். உடனேயே மோடிக்கு ஆதரவாக சங் பரிவாரங்கள் களத்தில் குதித்தன. ஆனால், நாடெங்குமுள்ள தலித் மக்கள் கொதித்தார்கள்.

மனித உரிமை ஆர்வலர் சுகாஷ் கட்டேடர், இந்த நூலைத் தடை செய்ய வேண்டும். மோடியைக் கைது செய்து வன்கொடுமைச் சட்டத்தின்படி சட்டத்தின்முன் நிறுத்திட வேண்டும் என்று அகில இந்திய அளவில் குரல் எழுப்பினார். இந்தப் பின்னணியில் இந்த நூல் திரும்பப் பெறப்பட்டது. நூல் ஒருவேளை திரும்பப் பெறப்பட்டிருக்கலாம். ஆனால், அன்று மாவட்ட ஆட்சியர் அளவிலுள்ள அதிகாரிகளின் மனதில் மோடி பதிய வைத்த சிந்தனைப் போக்கை யார் திரும்பப் பெறுவது? மோடியை ஒரு பெரிய ஹீரோவாகக் காட்டிடும் பொறுப்பு ஆப்கோ - என்ற சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மோடியின் உரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டும். மோடியை ஒரு சீரிய சிந்தனையாளனாகக் காட்டிட வேண்டும் என்ற பொறுப்பும் ஆப்கோ நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் பல கோடிப் பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் இந்தக் கீழ்த்தரமான நூல் வெளியீட்டுப் பணியைச் செய்தது. இந்த மொத்தக் குழப்பத்திலும் பெறப்படும் உண்மை என்னவெனில், மோடி தலித் மக்களை அவர்களின் அந்தக் கீழான தொழிலிலும், நிலையிலுமே வைத்திருப்பார். இன்று குஜராத்தில் நடந்து கொண்டிருப்பவை இதனை உறுதி செய்கின்றன.

குஜராத்தில் டீக்கடை உட்பட அனைத்துப் பொதுத்தலங்களிலும் தலித்களுக்குத் தனிப் பாத்திரமாம். அதற்குப் பெயர் இராம பாத்திரமாம். Ram palia பிக்கா பாய் என்ற இந்த தலித், ஒரு விவசாயப் பண்ணையில் வேலை செய்கின்றார். அந்தப் பண்ணையில் அவருக்கென ஒரு தேனீர்க் குவளை வைக்கப்பட்டிருக்கும். அவருக்கான தேனீர் அந்தக் குவளையில் ஊற்றப்படும். தேனீரைக் குவளையில் ஊற்றுபவர் அந்தக் குவளையைத் தொடுவதுமில்லை. அதேபோல் உணவு வாங்கிடவும் தனி பாத்திரம். அந்தப் பாத்திரத்தையும் தொட்டு அல்லது கையில் வாங்கி யாரும் உணவைத் தருவதில்லை. மாறாக, சற்று தூரத்திலிருந்து உணவை வழங்குவார்கள். இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் தனிப் பாத்திரத்திற்கு குஜராத்தில் ராம் பாத்திரம் என்று பெயர்.

அங்காடிகளில் அவர்கள் காய்கறிகளைத் தொட்டுப் பார்த்து வாங்கிட முடியாது. எட்டத்தில் நின்று சமிக்ஞைகள் செய்திட வேண்டும். தருவதை வாங்கிக் கொண்டு காசை அங்குள்ள கூடையில் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும். இதுதான் பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கின்றது. அன்றைய நாள்களில் அந்த இராம பாத்திரம், களிமண் குவளையாக இருந்தது. இன்றைய நாட்களில் அது ஸ்டீல் சொம்புகளாக மாறி இருக்கின்றன. பல தேனீர்க் கடைகளில் இப்போது டீயைக் குடித்து விட்டுத் தூக்கி வீசப்படும் அளவிலுள்ள பிளாஸ்டிக் குவளைகளிலேயே டீ வழங்கப்படுகின்றது. தலித் மக்கள் பரவிக் கிடக்கும் குஜராத்தின் 22 மாவட்டங்களிலும் இந்தத் தனிக் குவளை முறை பின்பற்றப்படுகின்றது.

நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது, நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

நன்றி: தமிழ் வெப் துனியா மார்ச் 12,2014

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலைப் பாரீர்! உ.பி.யில், குஜராத்தில் ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை

பி.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலைப் பாரீர்!

உ.பி.யில், குஜராத்தில் ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை

மூன்று சதவீதப் பார்ப்பனர்களுக்கோ 20 சதவிகித வாய்ப்பு!

இவர்களை ஆதரிக்கலாமா? வாக்காளர்களே சிந்திப்பீர்!

100 அம்சங்களைக் கொண்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு ஈடு இணை ஏது?

பி.ஜே.பி. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளர்கூட அறிவிக்கப்படவில்லை; ஆனால் உ.பி.யில் பார்ப்பனர்களுக்கோ 20 சதவிகித வாய்ப்பு! சமூக நீதிக்கு எதிரான இந்த அணியைத் தோற்கடிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

எப்பாடுபட்டேனும், யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது, மத்தியில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தள்ளப்பட்டிருப்பதால், அதனுடைய இந்துத்துவா கொள்கையை அப்படியே தனது குஜராத் மாநிலத்தில், ஒரு பரிசோதனைக் கூடம் போல நடத்தி சிறுபான்மையினரான இஸ்லாமியர்களைப் பழி வாங்கிய நிகழ்வுகள் ஏராளம்! ஏராளம்!! கோத்ரா மற்றும் பல போலி என் கவுண்ட்டர்கள் வரை செய்ததில் சளைக்காதவராக திகழ்ந்ததால் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்தலை முன்னணியிலிருந்து நடத்தி வருகிறது.

இடத்திற்கேற்ப வேடம் போடும் மோடி!

அதற்காக அது ஆங்காங்கே இடத்திற்குத் தக்கபடி வேடத்தை அவ்வப்போது ஏற்கும்படி மோடியை இயக்கி வருகிறது.

1992-இல் மண்டல் குழுப் பரிந்துரையின் ஒரு பகுதியை வேலை வாய்ப்பை - அமல்படுத்த ஆணை பிறப்பித்து, சமூகநீதியை நடைமுறைப்படுத்தக் காரணமான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது ஆட்சியை 9 மாதங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆணைப்படி பா.ஜ.க. கவிழ்த்தது!

மண்டல் நாயகர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் யார்?

அதற்காகவே மண்டலுக்கு எதிராக இராமன் கோவில் மண்டல் Vs மந்திர் என்ற முழக்கம் எழக் காரணமாகியது.

அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு எதிராக மாணவர்களையும், முன்னேறிய ஜாதி என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் (ABVP) தூண்டி கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியது; காங்கிரசும் மறைமுகமாக இதை ஆதரித்து சமூகநீதிக்காக ஆட்சியை இழந்த வி.பி. சிங்கை ஜாதிமூலம் நாட்டைத் துண்டாடுபவர் “He is a Castesist” என்று பழி தூற்றினர்!

உ.பி.யிலோ புதிய ராகம் ஏன்?

ஆனால் அதே உ.பி.யில் 22 ஆண்டுகளுக்குப் பின், அங்கு வேகமாக வீசும் மண்டல் சமூக நீதிக் காற்றைப் பயன்படுத்தி, அதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மோடி தனது முதல் பிரச்சாரத்தினைச் செய்யத் துவங்கும்போதே, நான் மிகவும் பிற்படுத்தப்பட்டவன். இனி (OBC & Dalits) பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தான் முனைப்பான எதிர்காலம் என்கிறபடி நடப்பேன்! என்று புதிய ராகம் பாடினார்!

தமிழ் ஓவியா said...


காரணம்; முலாயம்சிங், மாயாவதி ஆகியோர் இந்த சமூக நீதி - மண்டல் காற்று வீசியதைப் பயன்படுத்தி அல்லவா ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்று கணக்குப்போட்டு, அதே குரலில் முன்பு வி.பி. சிங்மீது எந்தக் குற்றச் சாற்றினைக் கூறினார்களோ, அதற்கு மாறாகச் சிறிதும் லஜ்ஜை இல்லாமல், இப்போது ஏதோ சமூகநீதிக்காகவே திடீர் அவதாரம், எடுத்ததுபோல வாக்காளர்களை ஏமாற்றிட முனைந்து, அதற்கே வீர வசனங்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

சமூகநீதியைக் கொள்கையாக ஏற்று பிஜேபி. அறிவிக்குமா?

இது ஒரு தேர்தல் உத்தி, வியூகம். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு நேர் விரோதமாகும்.

குஜராத் வளர்ச்சி மாடல் என்று கூறுகிறார்களே அங்கே இடஒதுக்கீடு - சமூகநீதி ஓட்டங்கள் - எவ்வளவு விழுக்காடு அமலில் உள்ளன? ஆர்.எஸ்.எஸ். இதை ஒரு கொள்கை முடிவாக ஏற்று ஒரு தேர்தல் அறிக்கையை - பா.ஜ.க. பெயரில்- வெளியிடத் தயாரா?

மிகப் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, அவர்கள் கையில் உள்ள வாக்குகளைப் பறிக்கும் திட்டம் இது என்பதல்லாமல் வேறு என்ன?

கலைஞர்ஆட்சியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு

சமூகநீதி - இடஒதுக்கீடு என்பது அனைவர்க்கும் அனைத்தும் என்பதால்தானே தமிழ்நாட்டில் - கலைஞர் ஆட்சியில் - இந்தியாவுக்கு முன்னோடியாக இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு முதல் கட்டமாக மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு தரப்பட்டது; அதுபோலவே பிற்படுத்தப்பட்ட கிறித்துவர்களுக்கும் முன்பே இடஒதுக்கீடு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

உ.பி.யில், குஜராத்தில் பிஜேபி சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர்கூடக் கிடையாது!

குஜராத்தில் என்ன நடக்கிறது? மக்கள் தொகையில் 9 சதவிகிதமாக உள்ள இஸ்லாமியர் இதுவரை சட்டமன்றத்தில் ஒருவர்கூட கிடையாது. இதைவிடக் கொடுமை வேறு உண்டா? இதைப் பெருமையான சாதனை என்றும், இனி இப்படித்தான் எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும் என்றும் இந்து நாளேட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் (18.10.2013இல்) பேட்டி கொடுத்து மகிழ்கிறாரே!

உத்தரப்பிரதேசத்தில் பெருவாரியான இடங்களை மோடியின் ஆர்.எஸ்.எஸ். (பாஜக என்பது வெளி வேஷம்) வென்றால்தானே நாடாளுமன்றத்தில் அதன் இலக்கு 272 இடங்கள் என்பதுமுடியும்?

அதற்காக 80 இடங்களில் 78 இடங்கள் மோடி கட்சி போட்டியிடுகிறது; (இரண்டு கூட்டணிக் கட்சிக்கு)

இந்த 78 இடங்களில் ஒரே ஒரு இஸ்லாமியர்கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை; இதுதான் குஜராத் மாடல் புரிந்து கொள்ளவேண்டும் பொது வாக்காளர்கள்!

அங்குள்ள மக்கள் தொகையில் 17 விழுக்காடு இஸ்லாமியர்கள்; அவர்களுக்கு ஒரு இடம்கூட கிடையாது - பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில்.

பார்ப்பனர்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு!

ஆனால், சுமார் 12 விழுக்காடு உள்ள உ.பி. பார்ப்பனர்களுக்கு - 80 இடங்களில் இவர்களது வேட்பாளர்கள் 16 பேர்! - அதாவது 20 விழுக்காடு!

இன்னொரு வேடிக்கை - விசித்திரம் - மாய வலை. பிற்படுத்தப்பட்டவருக்கு (ளிஙிசி) 24 இடம் அதாவது ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி (33 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோர்மீது திடீர் கரிசனம்!

இவர்களது தந்திரம் வியூகம் - பிற்படுத்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிறுத்தி, சிறுபான்மையோரை முதலில் ஒதுக்கிவிட்டால், பிறகு ஆட்சியைப் பிடித்த பிறகு, மற்றவர்களை அடுத்த கட்டத்தில் பிடித்துக் கீழே தள்ளிவிட அதிக காலம் பிடிக்காது என்பதுதான்.

தேவை பெரியார் நுண்ணாடி!

இதை பெரியார் கண்ணாடி என்ற நுண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் புரியும்.

இது புரியாமல், சில சீட்டுகளுக்காக மோடி வலையில் விழுந்தவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்பது போகப் போகப் புரியும்.

சமூகநீதியில்கூட போலிகளும், கள்ள நாணயங்களும் பெருகி விட்டன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


முகாம் : திண்டுக்கல்

3.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78037.html#ixzz2xs8h7AKl

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும். - (விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/78038.html#ixzz2xsBwqgHP

தமிழ் ஓவியா said...

உங்கள் மூளை சுத்தமா இல்லையா...?

இரவில் நன்றாக தூங்குவதால் மூளை சுத்தமாகிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் தான் மூளையின் நச்சு கழிவுகள் வெளியேறுவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவர் தூங்கும் போது அவரது மூளையின் அணுக் களிடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதால் இந்த கழிவுகள் வெளியேறுகின்றன என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உறக்க நேரத்தில்தான் மூளை தன்னை தானே சுத்திகரிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வில் தெரிந்துக் கொண்டது. ஒரு எலியின் தலையில் மய் போன்ற திரவத்தை செலுத்திய விஞ்ஞானிகள், அந்த எலி உறங்கும்போது அந்த திரவம் வெளியேறியதை கண்டறிந்தனர்.

அதுவே அந்த எலி விழித்திருக்கும்போது திரவம் வெளியே வராத நிலை இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனோடு மூளை அணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியும், உறக்கத்தின்போது 60 சதவீதம் அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/78073.html#ixzz2xsEIIOrb

தமிழ் ஓவியா said...

செவ்வாயில் எரிமலைகள்

செவ்வாய் கோளில் பழமையான சூப்பர் வால்கேனோ எனப்படும் பெரிய எரிமலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செயலில் இருந்த எரிமலைகள் அங்கு இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருந்தாலும், தற்போது அறியப்பட்டுள்ள சூப்பர் வால்கேனோ-க்கள் இதற்கு முன்னதாக செயலில் இருந்ததற்கான அடையாளங்கள் தெரியவில்லை.

செவ்வாய் கோளின் வடக்கு பகுதியில் இவை அமைந்திருக்கின்றன. அந்த கிரகத்தை ஆய்வு செய்து வரும் விண்கலங்கள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து இந்த தகவலை லண்டனின் இயற்கை, வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டறிந் துள்ளனர்.

பிற எரிமலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பிழம்பு மற்றும் சாம்பல் உள்ளிட்டவைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முன்னொரு காலத்தில் செயலில் இருந்த எரிமலைகளினால் கோளின் வெப்பநிலை மாற்றம் பெற்றது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/78073.html#ixzz2xsEOWAie

தமிழ் ஓவியா said...


நான் செய்தது குற்றமல்ல; புரட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா


உதகை, ஏப்.3- தொலைத் தொடர்புத் துறையில் நான் செய்தது குற்றமல்ல; புரட்சி என்று உதகை பிரச்சாரக் கூட் டத்தில் ஆ.இராசா பேசினார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது முறை யாக போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.இராசா புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பின், ஆட்சியர் அலுவலகம் அருகே கூடியிருந்த திமுக தொண்டர்களிடையே பேசி யதாவது:

நீலகிரி தொகுதிக்கு கலை ஞரால் மீண்டும் ஒப்படைக் கப்பட்டுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதி யில் நான் ஆற்றிய பணிகளை திரும்பத், திரும்ப பட்டியலி டுவதில் அர்த்தமில்லை. ஆனால், அந்த பணிகளின் போதுதான் எனக்குச் சோதனை ஏற்பட்டது. அமைச்சர் பத வியிலிருந்து விலகவேண் டிய நிலை உருவானது.

அதன்பின், இதுவரை யிலும் நான் அளித்த அனைத்து வாக்குமூலங்களி லும் எந்தவிதமான மாற்ற முமில்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்ட வற்றை ஜெயலலிதா தற் போது பேசி வருகிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே சிபிஅய்யும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி முடித்த பின், அது தொடர்பான விளக்கத்தை யும் அளித்திருந்தேன்.

ஆனால், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் எனக்கு எழுதிய கடிதத்தில் இருந்த அறிவுரையை கேட்காமல் நான் செயல்பட்டதாக ஜெய லலிதா கூறிவருவது உண் மைக்குப் புறம்பானது.

இது தொடர்பாக, நாடா ளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு நான் அனுப்பிய 102 பக்க விளக்க அறிக்கை மீது விவா தம் நடத்தப்பட்டபோது, அதில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், மைத்ரேய னும் பங்கேற்றிருந்தனர்.

ஆனால், அது எதுவுமே தெரியாமல் ஜெயலலிதா தற்போது பேசி வருகிறார். இதுதொடர்பாக, என்னுடன் நேரடியாக விவாதிக்க அவர் தயாரா என்பதை அறிவிக்க வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நான் எந்தக் குற்றமும் செய்ய வில்லை. நான் செய்தது புரட்சியேயாகும். புரட்சிக் காரனை எவ்வகையிலும் குற்றம் சாட்டக்கூடாது.

ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களை துண்டறிக்கையாக தயாரித் துள்ளேன். இது அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக் கும் தேடி வரும். அப்போது அனைவருக்கும் உண்மை தெரியும் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/78059.html#ixzz2xsEiqkt3

தமிழ் ஓவியா said...


உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறாத மோடியை மக்கள் எப்படி நம்புவார்கள்? சரத்பவார் கேள்வி


அலிபாக், ஏப். 3-குஜராத் கலவரத்தில் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறாத மோடியை மக்கள் எப்படி நம்புவார்கள் என்று சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், ரெய்காட் மக்களவை தொகு தியில் போட்டியிடும் தேசிய வாத காங்கிரஸ் வேட்பாளர் சுனில் தத்கரேயை ஆதரித்து மத்திய அமைச்சர் சரத் பவார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:

நாட்டின் நலனுக்கு எப்படி உறுதி தருவார்?

குஜராத் கலவரத்தில் உயிருடன் எரித்துக் கொல் லப்பட்ட காங்கிரஸ் எம்பி யின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறுவது குறித்து கவலைப்படாத மோடியை மக்கள் எப்படி நம்புவார் கள்? அப்படிப்பட்ட மனிதர் நாட்டின் நலனுக்கு எப்படி உறுதி தருவார்?

நேரு காலத்தில் இருந்து பல மக்களவை தேர்தல் களை நாங்கள் பார்த்திருக்கி றோம். ஆனால், பிரதமர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை எதிர்கொள்வது இதுவே முதன்முறையா கும். இவ்வாறு பாஜக செய் வது அரசியலமைப்பை இழிவு படுத்துவதாகும். காங்கிரஸ் இல்லாத இந்தி யாவை உருவாக்க வேண் டும் என்று மோடி கூறு கிறார்.

காங்கிரஸ்தான் ஆங்கிலேயரை விரட்டி இந் தியாவிற்கு சுதந்திரம் வாங் கிக் கொடுத்தது. பாஜக தலைவர்கள் இந்த நாட் டிற்காக என்ன தியாகம் செய்தார்கள். இவர்களை தேர்தலில் நாம் வெற்றிய டைய விடக்கூடாது என்று சரத்பவார் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/78057.html#ixzz2xsF3dcwl

தமிழ் ஓவியா said...


துக்ளக் தர்பார்!


கேள்வி: நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்று முடிவு ஆன நிலை யிலும், பா.ஜ.க.வில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி என பிரதமர் கனவு வேட்பாளர்கள் உள்ளார்களே?

பதில்: இதைவிடக் கவலைக்கு இட மளிக்கக்கூடியது - தேர்தலுக்குப் பின் தோன்றக்கூடிய நிலை. மோடி பிரதமர் இல்லையென்றால், நம்மை ஆதரிக்கப் பல கட்சிகள் தயாராக இருக்கின்றன என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு, வேறு யாராவது சிலர் தங்களை முன்னி றுத்திக் கொள்ளலாமே! அதை நினைத் தால்தான் கவலையாக இருக்கிறது.
(துக்ளக், 9.4.2014)

இதன்மூலம் மோடிக்கு இரு பக்கமும் இடி என்பதை திருவாளர் சோ ராம சாமியே ஒப்புக்கொள்கிறார். பி.ஜே.பி. என்பது உள்கட்சிக் குழப்பம் மலிந்த நெல் லிக்காய் மூட்டை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

சோவே மனம் விட்டு விட்டார் என்பதுதான் உண்மை.

கேள்வி: காங்கிரசையும், தி.மு.க.வை யும் மட்டும்தானே ஜெயலலிதா கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறார். தனக்குக் கடும் போட்டி தரும் பா.ஜ.க. வையோ, அதன் கூட்டணி கட்சி களையோ விமர்சிப்பதில்லையே, ஏன்?

பதில்: அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்திருந்தால், அது வரு கின்ற தேர்தல் வெற்றிக்கு மட்டுமின்றி, அது சீரான, சிக்கல் இல்லாத வகையில் மத்திய ஆட்சி அமைப்புக்கும் உதவியி ருக்கும் என்ற எண்ணமுடைய என் னிடம் - இந்தக் கேள்வியைக் கேட்பதும் ஒன்றுதான்; கேட்காமல் இருப்பதும் ஒன்றுதான்.
(துக்ளக், 9.4.2014)

கேட்ட கேள்விக்குப் பதில் இருக் கிறதா?

இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி. இந்த நழுவல் பேர்வழிதான் அவாள் மொழியில் அறிவு ஜீவியாம்!

இவர்களின் அறிவு நாணயம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

ஜெயலலிதா அம்மையார் தன்னை எதிர்த்து நிற்கும் பி.ஜே.பி.யைப்பற்றி விமர் சிக்காதது - அரசியல் நேர்மையற்ற - சூது - தந்திரம்! இதை ஒப்புக்கொள்ள சோவுக் குத் தயக்கம். பூணூல் பாசம் பொல்லாதது ஆயிற்றே!

கேள்வி: பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெறுவது அவ்வளவு எளிதல்ல - என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளாரே, சரியா?

பதில்: உண்மைதான். பா.ஜ.க. மட்டுமே (கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை இல்லாமல்) பாராளுமன்றத்தில் 272 இடங் களைப் பெறுவது எளிதல்லதான்.
(துக்ளக், 9.4.2014)

மோடி அலை வீசுகிறது - மோடி அலை வீசுகிறது! என்று பீலா விட்டது எல்லாம் அசல் டூப்பு என்பதை சோ அய்யர் ஒப்புக்கொண்டுவிட்டாரே!

Read more: http://viduthalai.in/page-8/78063.html#ixzz2xsFC5Sz9

தமிழ் ஓவியா said...


நம்பத்தகுந்தவரா - சிந்திப்பீர்! ஜெயலலிதாபற்றி வாஜ்பேயி கூறியது என்ன?

கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும் போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

வாஜ்பேயி: இல்லை, நியாயமற்ற நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை. கூட்டணி அமைக்கப்படும் பொழுது இதைப்போன்ற நிபந்தனைகளை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.

கேள்வி: சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந் தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட் டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில், அ.தி.மு.க. வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார். சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங்களில் ஆதரவை வாபஸ் பெறு வோம் என்கிற மிரட்டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலையுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.

கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும் என்பதுதான் அந்த விலை. அது மட்டுமல்ல; பல ஊழல் வழக்கு களிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும் அவருடைய நிபந்தனையாக இருந் தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடி பணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதை உணர்ந்தவுடன் அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.
(குமுதம், 20.9.1999)

தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி.யும் - அ.இ.அ.தி.மு.க.வும் கூட்டணி வைப்பதாக ஒரு விவாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், ஜெயலலிதா சுயநலத்துக்காக, நிபந்தனைகளை வைக்கமாட்டாரா?

வாஜ்பேயிக்கே தண்ணிக் காட்டியவர் - மோடி எம்மாத்திரம்?

Read more: http://viduthalai.in/page-8/78127.html#ixzz2xxigsTch

தமிழ் ஓவியா said...


நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கை


திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து கல்வி பயில நான்காம் வகுப்பு முதல் பனிரெண் டாம் வகுப்பு முடிய புதிய மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 5.4.2014 தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மேற்படி இல்லத்தில் வழங்கப்படும். இவ்வில்லத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவிகளுக்கு அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும்.

சேர்க்கைக்கான விதிமுறைகள்:

1. தாய் - தந்தை இருவரும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்

2. பெற்றோர் ஊனமுற்றோர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப் படும் (மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்படவேண்டும்.

3. ஆண்டு வருமானம் ரூ.24,000/-த்திற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.

4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வில் லத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 31.5.2014

காப்பாளர்
நாகம்மையார் குழந்தைகள் இல்லம்,
பெரியார் நகர், திருச்சி-21

Read more: http://viduthalai.in/page-8/78120.html#ixzz2xxir7I3u

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்


நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார். - (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/78121.html#ixzz2xxj9RGdh

தமிழ் ஓவியா said...


ஊழல் மன்னன் மோடி பராக்! பராக்!!


* 5 ஆண்டுகளில் குஜராத் முதல்வர் வணிக விமானங்கள் அல்லது அரசு விமா னங்களை பயன்படுத்தாமல் ஏறத்தாள 200 பயணங்களுக்கு மேல் தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்தியுள்ளார் எங்கிருந்து வந்தது அவ்வளவு பணம்?

* குஜராத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூபாய் 900 என்ற மதிப்பில் 11000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 10,000 இதன் மூலம் அரசுக்கு இழப்பு ரூபாய் 33000 கோடி.

* குஜராத் அரசு தடை செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கால்நடை தீவ னத்தை 5 கிலோவிற்கு ரூ 240 வீதம் வாங்கி யுள்ளது ஆனால் அதன் சந்தை மதிப்பு 5 கிலோவிற்கு ரூ 120 முதல் 140 வரை தான்!!!

*அரசு நிலத்தை அரசிடமிருந்து அதானி என்னும் பெரு நிறுவனம்

ஒரு சதுர மீட்டர் 50 பைசாவுக்கு வாங்கி அதே நிலத்தை அரசு நிறு வனத்துக்கு ஒரு சதுர மீட்டர் 500 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் கோடி ஊழல் (மோடி ஊரு ஊராக சுற்றுவது அதானியின் சார்டர்ட் விமானங் களில் தான்)

* காண்ட்லா துறைமுகத்தின் 16000 ஏக்கர் நிலத்தை, சந்தை மதிப்பில் 6% ஆக இருக்க வேண்டிய குத்தகை தொகையை ஏக்கருக்கு வெறும் ரு 144 வீதம் ஏலம் விட்டதில் 2 லட்சம் கோடி ஊழல்!!

* கிருஷ்ணா கோதாவரி ஆற்றுபடுகை யில் எரிவாயு கண்டுபிடிக்கும் குஜராத் மின்கழக திட்டம் வெளிநாட்டு நிறுவனத் திற்கு எந்த ஏலத்தொகையுமின்றி விற்றதில் இழப்பு 20000 கோடி!!!

ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் மோடியின்மீது 17 ஊழல் கள் பற்றி விசாரணை நடப்பது ஏன்? வாக்காளர் களே சிந்திப்பீர்!

- அபு ரயான்

Read more: http://viduthalai.in/e-paper/78112.html#ixzz2xxjkj0sf

தமிழ் ஓவியா said...


மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஏன்? கலைஞர் விளக்கம்

கேள்வி :- தி.மு. கழகம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து விலக உண்மையான காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சினை அல்ல என்றும், அலைக்கற்றை வழக்கு தான் காரணம் என்றும் ஜெயலலிதா கோவையில் கூறியிருக் கிறாரே?

கலைஞர் :- 1998-1999ஆம் ஆண்டுகளில் சொந்தப் பிரச்சினைகளை-சுயநலக் கோரிக்கைகளை முன் வைத்து மத்தியில் ஆட்சி செய்த வாஜ்பய் அரசை படாத பாடு படுத்தி, இறுதியாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து வாஜ்பய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறக் கடிதம் கொடுத்து, மத்திய அரசையே கவிழ்த்தவரின் எண்ணம் அப்படித்தானே இருக்கும்! அலைக் கற்றை வழக்குக்காக மத்திய அரசிலிருந்து விலகுவது என்றால், அந்த வழக்கில் தி.மு. கழகத்தினரை கைது செய்தபோதே விலகி வந்திருப் போம். ஆனால் அப்போது தி.மு. கழகம் மத்திய அரசி லிருந்து விலக வில்லை. மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகிய போது நான் விடுத்த அறிக்கையில், தமிழ் இளை ஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள்கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத் தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகிவிட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சி னையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தி யாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வ நாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும். இவைகளையெல்லாம் அய்.நா. மன்றத்திலும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தி யாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவு களைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன் மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலை களே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவை யிலிருந்தும், அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப் பட்டுள்ளது என்ற வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தால், தி.மு.கழகம் எதற்காக மத்திய அரசிலிருந்து விலகியது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். வாதத்திற்கு மருந்து உண்டு, விதண்டா வாதத்திற்கு மருந்து ஏது?

- (முரசொலி, கலைஞர் பதில்கள், 4.4.2014)

Read more: http://viduthalai.in/page-3/78117.html#ixzz2xxkGrcgX

தமிழ் ஓவியா said...


மதம் போதிப்பது என்ன?


வாழ்நாள் முழுதும் உழைத்தும் போதிய வருவாய் இன்றி வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மதத்தினால் போதிக்கப்படுவது என்ன? இந்தப் பூவுலகில் அடங்கி வாழ வேண்டும்; பொறுமையுடன் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் சொர்க்கத்தின் பரிசு தங்களுக்கு கிடைக்கும் என்ற மன அமைதி கொள்ள வேண்டும் என்பதே.

பிறரது உழைப்பின் மீது தம் வாழ்வினை ஆதாரமாகக் கொண்டு வாழும் நபர்கள் மதத்தினால் என்ன போதிக்கப் படுகிறார்கள்? இவ்வுலகில் வறியோர்க்கு வழங்கும் தரும நெறியினைக் கடைப்பிடித்து வாழ்தல் என்ற சுலபமான வழியில் சுரண்டல்காரர்களின் வாழ்வினையும் மதம் நியாயப்படுத்துகிறது.

அதாவது, சொர்க்கத்தில் நல்வாழ் வினைப் பெறுவதற்குச் சுலபமான விலையில் பயணச் சீட்டுகள் அவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

- மதத்தைப் பற்றி என்னும் நூலில் லெனின்

Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxkuNKsQ

தமிழ் ஓவியா said...

காந்தியார் மீது நேருவின் தாக்குதல்!

(புதுடில்லியில் 3.1.1947 அன்று நடைபெற்ற இந்திய விஞ்ஞான மாநாட்டில் நேரு அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. சத்திய சோதனை என்றும், கடவுள் சொன்னார் என்றும் அடிக்கடி கூறிக் கொண் டிருந்த காந்தியாரை மறைமுகமாகத் தாக்குகிறார் நேரு. படித்துப் பாருங்கள் - உங்களுக்கே புரியும்! - ஆ.ர்.)

தனிப்பட்ட நபரொருவரின் சத்திய சோதனையல்ல விஞ்ஞானம். மக்கள் நலனுக்குப் பயன்படுவதாயின், அது தனிப்பட்டவரின் சோதனையைக் காட்டிலும் பரப்பு மிகவுள்ளதே, பட்டினியால் பரிதவிக்கும் மனிதனுக்கு சத்தியம்; உண்மையென்பதெல்லாம் அர்த்தமற்ற வெறுஞ் சொற்களே. அவனுக்கு உணவு வேண்டும். பட்டினிப் பசித்துயரில் சூழ்ந்துள்ளவனுக்கு கடவுளைப்பற்றிக் கவலையில்லை. அவனுக்கு உணவு வேண்டும். இந்தியா பசிப் பட்டினியால் அவதியுற்று வரும் நாடாகும்.

பட்டினிப் பட்டாளங்கள் முன்னிலையிலா கடவுள் சத்தியம்!

கோடிக்கணக்கான பட்டினிப் பட்டாளங்களின் முன்னிலையில் கடவுள், சத்தியம் என்று வெற்றுரை பகருவதும், அழகொழுக வாழ்க்கைத் தத்துவங்களை யெடுத்தியம்புவதும், அவர்களை கேலி செய்வதற்கே யொப்பாகும் பட்டினியால் வதையுறுவோருக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தந்தாக வேண்டும். அவர்களுக்குக் கல்வி அளித்தாக வேண்டும். சுகாதார வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாக வேண்டும்.

சுருக்கமாக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது வேண்டப்படும் வசதிகள் அத்தனையும் அளித்தாக வேண்டும். இவற்றை நாம் செய்து விட்டோ மானால் அதன் பிறகு வேதாந்தம் பேசலாம்; கடவுளைப்பற்றி நினைக்கலாம். எனவே, இந்தியாவின் 40 கோடி மக்களைப் பற்றிய சிந்தனையிலீடுபட வேண்டும் விஞ்ஞானிகள். விஞ்ஞனம் பரப்புவோம். பண்டிதர் ஜவஹர் மேலும் கூறியதாவது:-

நாங்கள் பெரிதும் விரும்புவது

சர்க்கார் நடவடிக்கையெடுத்துக் கொள்வரென்று கருதி விஞ்ஞான காங்கிரஸ் இவ்விஷயங்களைக் கவனியாது வெறுமென இருந்து விடாது என நம்புகிறேன். சர்க்கார்கள் நல்லனவாயுமிருக்கலாம்; கெட்டன வாயுமிருக்கலாம்.

ஆனால், எல்லா சர்க்கார்களும் ஆமை வேகத்தில் செல்லக்கூடியனவே ஆகும். அவர்களை சுறு சுறுப்பாக்குவது ஒன்றே ஒன்றுதான். மறைமுகமாக அவர்களது எதிர்காலத் தைப் பாதிக்கக் கூடிய பொதுமக்கள் கூச்சலே அது. சர்க்காரிடமிருந்து எதுவுமெதிர்பார்க்க விஞ்ஞானி களுக்கு உரிமை உண்டு.

தற்கால இந்திய சர்க்காரின் உறுப்பினன் என்ற முறையில் நான் இதைக் கூற ஆசைப்படுகிறேன். இந்தியாவில் விஞ்ஞானம் பெருத்த அளவில் வளர்ச்சியுற வேண்டுமென நாங்கள் பெரிதும் விரும்பு கிறோம்.

விஞ்ஞான ஆராய்ச்சியை விரிவுபடுத்த எங்களாலியன்றதைச் செய்வோம். விஞ்ஞான முன்னேற்றத்திற்கும், அதன் வாயிலாக உலக மக்களின் நலத்துக்கும் நாங்கள் உலக விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க ஆயத்தமாகியுள்ளோம்.

Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxlCiFbi

தமிழ் ஓவியா said...


மத ஆதிக்கத் தொல்லை!


மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகிறதே ஒழிய, சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.

கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்காக குடிஅரசு பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக புரட்சி பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று.

இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினந்தோறும், நிமிடந்தோறும் அடைந்து வரும் தொல்லையும், நசுக்குச்சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது.

பார்ப்பனர்களை உத்தியோகஸ்தர் களாகக் கொண்ட போலீஸ் இலாகா, போஸ்டல் இலாகா, ரயில்வே இலாகா, நிதி இலாகா, நிருவாகம் மற்றும் அநேக துறைகளில் கீழே இருந்து அய்கோர்ட் நிருவாக சபை வரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம் சித்திரவதைக் கொப்பாகவே இருந்து வருகின்றது.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlLlO30

தமிழ் ஓவியா said...

விதியை நம்பி வீண்போவோர்!

மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பதால் அவர்கள் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கமுடியவில்லை. இதற்கு மதமும் துணை போகிறது. இந்த மக்களின் மத நம்பிக்கைகள் முழுக்க முழுக்க மூடநம்பிக்கை நிரம்பி யவை. ஆனால், மேலை நாடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டன.

சமூக பொருளாதார நிலைகளும், மதக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே உள்ளன. இந்த மத நம்பிக்கைகள் புதிய திட்டமிடுதலுக்கும், வளர்ச்சிக்கும் தடைக்கற்களாக இருந்து வருகின்றன. பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களும் இவைகளை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

கடவுள் விட்ட விதி இது என்று விதியை நம்பி காலத்தைக் கழிக்கின்றனர். இதனால் தான் தாழ்த்தப்பட்டவர்கள் கோயில்களுக்குள் நுழைய முடியாமலும், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்த முடியாமலும் உள்ள நிலை இருக்கின்றது.

- இந்திய நிலை குறித்து ஏசியன் டிராமா என்ற நூலில் குன்னர் மிர்டல். பக்கம் 41

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlUmAKR

தமிழ் ஓவியா said...

ஈ.எம்.எஸ். பார்வையில் மதம்

புராதன பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீஸிலும் ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கு உருவாகியது.



சிந்து சமவெளி தடயங்களை பரிசீலிக்கும் போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீஸிலும் ரோமிலும் இருந்தது போன்ற அடிமைமுறை சிந்து சமூகத்தில் இருந்திருக்கவில்லையா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தையே அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள் அடிமைகள் - எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்குப் பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உபஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.

இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கு உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது. அடிமை முறையிலுள்ளதுபோல தெளிவானதும் மறுக்க முடியாதது மான சுரண்டல் முறைக்கு பதிலாக வருணாசிரம தர்மத்தினுடையவும் ஜாதி ஆசாரங்களுடையவும், இவைகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற மத நம்பிக்கை களுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல்ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன.

- ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய இந்திய வரலாறு என்னும் புத்தகத்தின் 36ஆம் பக்கத்தி லிருந்து

குறிப்பு: இந்திய சமூகத்தில் வர்க்க பேதத்தை விட ஜாதி பேதமே மேலோங்கியுள்ளது என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஈ.எம்.எஸ். இங்கு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlcGiJv

தமிழ் ஓவியா said...

முதல்தரமான விரோதி!

எல்லா மதங்களுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் முதல்தரமான விரோதியாக இருப்பது எது தெரியுமா? பகுத்தறிவு என்று இருக்கிறதே ஒரு பொருள் - அது தான்! வேறு எது?



- வால்டேர்

Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxll5DZM