Search This Blog

7.3.13

வைகோ - ஓர் அலசல்! நிஜப்புலியும்-வேஷப் புலியும்!-அவசியம் படியுங்கள்!!



டெசோ மீண்டும் புத்துயிர் பெற்று, கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாகத்தான் இன்று இந்த முற்றுகைப் போராட்டம் - இந்தளவிற்கு வெற்றிகரமாக நடைபெற்றது. வேறு சிலரும் ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கும் எங்களுடைய ஆதரவு உண்டு.
---------------------------------- டெசோ தலைவர் தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை, 6.3.2013, முரசொலி

இங்கே மேடைகள் பலவாயினும் குரல் ஒன்றே என்று தமிழர்கள் கட்சி, ஜாதி, மதம் இவற்றைத் தாண்டி ஒரு குரலில் ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு முழு மூச்சும் குடிசெய்வார்க்கில்லை பருவம் என்ற குறள்வழி பணியாற்றி எஞ்சிய தமிழர்மீதான பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடித்திடும் வகையில் ஒத்த குரல் கொடுப்போம்!
----------------------- டெசோ உறுப்பினர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை, விடுதலை, 16.2.2013

ஈழத் தமிழர்மீது உள்ளபடியே அக்கறை உள்ளவர்கள் இந்த வகையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் - செயல் திட்டங்களை வகுத்துக் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளில் டெசோ ஆக்கப்பூர்வமாக பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.

சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன் முற்றுகைப் போராட்டத்தையும் (5.3.2013) நடத் தியது. காவல் துறையே கைது செய்ய முடியாமல் திணறும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு போர்க் குரல் கொடுத்தனர். புலிகளாக மாறிய தமிழர்களின்  சீற்றக்குரல் எங்கும் எதிரொ லித்தது.

அதன் ஈரம் காயும் முன்பாகவே - அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு ஒன்றினை இந்தியாவின் தலைநகரில் டெசோ இன்று ஒழுங்கு செய்கிறது.

நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதன் முக்கியத்துவம் எத்தகையது என்பதை - ஆத்திரத்தை முன்னிறுத்தாமல் அறிவுவயப் பட்டுச் சிந்திப்பவர்கள் மிகத் துல்லியமாக உணர் வார்கள்!
ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள காலகட்டம்வரை - இந்திய அரசுக்கு மேலும் மேலும் ஓர் அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற உள்ளத் துடிப்பில் வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தத்திற்கு டெசோ அழைப்புக் கொடுத்துள்ளது.

நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்கிற மாதிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அள வுக்குக் கடமை உணர்ச்சியற்றவராக இருந்தால்கூடப் பரவாயில்லை - அந்த வேலை நிறுத்தத்தைக் கொச்சைப்படுத்தாமல் இருக்கக் கூடாதா? ராஜபக்சேவின் காதுகளில் குளிர்தென்றலை உலவவிடும் ஒரு வேலையில் இவர் ஏன் ஈடுபடவேண்டும்?

ஈழத் தமிழர் பிரச்சினை என்பதை பொன் முட்டை யிடும் வாத்து - அது தங்களின் பிதுரார்ஜிதச் சொத்து - அது ஒரு கைமுதல் - அது தங்களை விட்டுப் பறிபோய்விடக் கூடாது என்கிற தன்னல வெறி இதில் தலைதூக்குகிறதே தவிர, பிரச்சினையின்மீது ஆழ்ந்த கவலை இருப்பதன் அடிப்படையில் அல்ல.
எதையும் அரசியல்படுத்துவது என்பது ஏற்புடைய தல்ல. தி.மு.க. ஆட்சியின்போது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கூட (14.10.2008) கலந்துகொள்ளாதவர்தானே வைகோ? அப்பொழுதே அதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி அறிக்கை விட்டாரே! (11.10.2008) ஈழத் தமிழர் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர் - போராடுபவர் ம.தி.மு.க. பொதுச்செய லாளர்.

இந்த நிலையில், ஒரு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தம் கட்சியின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எடுத்துக் கூறுவது அடிப்படைக் கடமையும், அவசியமும் அல் லவா? ஜனநாயக அமைப்பின்கீழ் வாழ்ந்து கொண் டிருக்கும் நாம் ஒரு அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குச் சென்று கருத்துகளை எடுத்துக் கூறி, இந்த வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று கூறும் கடமையைச் செய்யாவிட்டால், உயிர் போன்ற ஈழத் தமிழர் பிரச்சினையில் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது ஆகாதா? என்று தாய்க் கழகத்தின் தலைவர் என்ற முறையில் ஒரு சேய்க் கழகத்தின் பொதுச்செய லாளருக்கு அறிக்கை வெளியிட்டாரே - அதனைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாமல் - அதனை விஷம் தோய்ந்த ஒன்றாக வருணித்தவர்தான் இந்த ஆத்திரக்காரர்.

இதில் இன்னும் குறிப்பிடத்தக்கது ஒன்றுண்டு. கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் போன்றவர்கள் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அரசனை விஞ்சிய விசுவாசிகள்போல இங்குள்ளோர் குதித்தார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

நிஜப்புலியும் - வேஷப் புலியும்!

நிஜப் புலிகளைவிட வேஷம் போட்ட புலிகள் அதிகம் குதிக்கும் என்பார் தந்தை பெரியார். அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.

டெசோ மீண்டும் தொடங்கப்பட்டு அதன் தொடர்ச்சியான அலை அலையான செயல்பாடுகள் உலகத் தமி ழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன.

டெசோ மாநாடு; அய்.நா. மன்றத்திலும், மனித உரிமைக் கழகத்திலும் அதன் தீர்மானங்கள் நேரில் ஒப்படைத்து அளிக்கப்பட்ட விளக்கங்கள், வெளிநாட்டுத் தூதர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியது. கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்; டில்லியில் டெசோ சார்பில் அனைத்துக் கட்சி மாநாடு - வரும் 12 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம்.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தி யாவை ஆதரிக்கச் செய்தது - இப்பொழுது இரண்டாம் முறையாகவும் அத்திசையில் நம்பத்தகுந்த வெற்றி முனைகள் -

இவையெல்லாம் ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது எமக்கே சொந்தம் என்று தொழில் நடத்திக் கொண்டிருந்தவர்களின் தலைகளில் இடியை இறக்கி விட்டது - அதனுடைய ஒட்டுமொத்த ஒப்பாரிதான் - அவலக்குரல் தான் குறுக்குச்சால் ஓட்டுவதாகும்.

இந்திய அரசு இதில் சரியாக நடக்கவில்லை - அதிருப்தி தரக் கூடியதாக உள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், அந்த அரசிடம்தான், பிரதமரிடம்தான் கோரிக்கைகளைத் திரும்பத் திரும்ப வைக்கவேண்டி யுள்ளது - இதனை வைகோ போன்றவர்கள் செய்த தில்லையா?

ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று கூடப் பெயர் வைக்க முடியாமல் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்கள் சிந்திக்க வேண்டாமா?

மானமிகு கலைஞர் அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைத்து, ஜெயலலிதாவை பொன் பேழையில் வைத்து, இவர்தான் ஈழத் தமிழர்களின் விடியல் என்று பேச ஆரம்பித்திருக்கும் தலைவர்களே, ஜெயலலிதாவின் கடந்தகால நிலைப்பாடு என்ன? செயல்பாடுகள் என்ன?

ஈழத் தமிழர்களை ஜெயலலிதா காப்பார், அவர் களுக்காக வாதாடுவார் என்றெல்லாம் அரசியல் - தேர்தல் நோக்கோடு பரப்புரை செய்கிறார்களே - சில அரசியல் கட்சித் தலைவர்கள் - கூட்டணி உறவுக்காக உண்மையை மறைக்கிறார்களே! உண்மையிலேயே இந்த ஜெயலலிதா யார்? அவரின் உண்மை உருவம் என்ன?

 
ஜெயலலிதாவை ஜெயலலிதா மூலமே இதோ படம் பிடித்துக் காட்டுகிறோம்.
16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் இதோ:

மாண்புமிகு செல்வி ஜெயலலிதா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தற்போது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் செயல்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சர்வதேச பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தது குறித்து இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். அந்தச் செயல்கள் அனைத்துமே இந்திய நாட்டின் பாது காப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாகச் சம்பந்தம் உள்ளவை. இவை குறித்து தமிழக மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள். இந்தப் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு உறுப்பினர்களும் தங் களுடைய கவலையைத் தெரிவித்து இங்கே பேசியுள்ளார்கள்.
------------------------------ இவ்வாறு செல்வி ஜெயலலிதா சட்டப் பேரவையில் உரையாற்றினாரே!

16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப்பேர வை யில் முதலமைச்சர் ஜெயலலிதா முன் மொழிந்த தீர்மானம் வருமாறு:

நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான எல்.டி.டி.ஈ.யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கே கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அர சினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும், பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந்தேன்.

அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத் தினேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த திரு.பி.வி. நரசிம்மராவ் அவர்களின் அரசு, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, 1995 இல் Interpol-International Criminal Police Commission  அமைப்பின் வாயிலாக பிரபாகரனை கைது செய்ய Red Corner Notice வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம், Prevention of Terrorism Act, 2002-இன்கீழ் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து இந்திய மக்களை நிம்மதியடையச் செய்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பினால், அண்மைக் காலங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் மவுனம் காத்து வருவது எங்களுக்குக் கவலை அளிக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் திரு. ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனு மதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

-------------------------------- இவ்வாறு சட்டப்பேரவையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா.

தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு நான் தமிழக முதல மைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை வலி யுறுத்தினேன். என்னுடைய பெருமுயற்சியின் காரண மாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.

அந்த இயக்கத்தின்மீதான தடை இன்றுவரை தொடருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக வி. பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார் (நமது எம்.ஜி.ஆர்., 23.10.2008, பக்கம் 1). (ம.தி.மு.க. பொதுக் குழுவில் (9.4.2009) விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கவேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளார்களே - இதற்கு என்ன பதில் சொல் வார்கள்?
விடுதலைப்புலிகள் இயக்கம் என்னால்தான் தடை செய்யப்பட்டது என்று கித்தாப்புப் பேசும் அம்மையாரிடம் அல்லவா அடைக்கலம் தேடுகின்றனர்).

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டுத் தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளைப் பேச ஆரம்பித்துவிட்டனர். பொடா இல்லாவிட்டாலும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தற்போதுள்ள சட்ட விரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.
                 ------------------------- ஜெயலலிதா அறிக்கை  (நமது எம்.ஜி.ஆர். ஏடு, 23.10.2008).

இதன்மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப்பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?

கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது. பேரணி நடத்த முடிகிறது. போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல்தானா? உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறையிருந்தால் விரோதியை நண்பராகவும், நண்பரை விரோதியாகவும் கருதுவார்களா?

இந்தியா தலையிடக்கூடாதாம்!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.

               ---------------------------- ஜெயலலிதா  (நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008)
.
போரை நிறுத்தவேண்டும் என்பதன்மூலம் கருணா நிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

ஈழப் போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று ஜெயலலிதாவுடன் குழுப் பாட்டுப் பாடும் கட்சிகளும் கூறுகின்றன. ஜெயலலிதாவோ என்ன சொல்லுகிறார்? அப்படி தலையிட்டால், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் என்கிறார். இந்த ஜெயலலிதாவுடன் தான் இவர்கள் கூட்டாம் - குழம்பாம் - பொரியலாம் - ரசமாம் - துவையலாம் - குருமாவாம்!

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தானாம்!

கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படு கிறார்களே?

ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாது காப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

                           ----------------------- ஜெ.ஜெயலலிதா  (நமது எம்.ஜி.ஆர், 18.1.2009)

இலங்கை ராஜபக்சேவின் உடன்பிறந்த சகோதரி யாக அல்லவா ஜெயலலிதா பேசுகிறார்? ஈழத் தமிழர் கள் படுகொலை செய்யப்படுவதை சகஜம் என்ற சொல் லால் நியாயப்படுத்துகிறாரே - இவருக்குப் பராக்குப் பாடுவோர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்ப வர்களா - இல்லையா?

"சண்டை நடைபெறும்போது அப்பாவி மக்கள் தாக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது."

              ------------------------- கருணா அம்மன்  (ஜூனியர் விகடன், பேட்டி 1.2.2009)

போரில் பொது மக்களின் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை
இப்படி கூறியிருப்பவர் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
                  --------------------(ஈழச்சுதந்திரன் நவம்பர் 2008 பக்கம் 15)

இதையேதான் இங்குள்ள ஜெயலலிதாவும் கூறுகிறார்.
இவர்தான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறாராம் - ஈழத் தமிழர்களுக்காக டெசோ காணும் கலைஞர் நாடகமாடுகிறாராம் - (வைகோ, ஆனந்தவிகடன் பேட்டி, 6.3.2013) இன்னும் இருக்கிறது.

                                                                      -----------------------(வளரும்)
 ----------------------------------- கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் - அவர்கள் 7-3-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

52 comments:

தமிழ் ஓவியா said...


பொறுமைக்கும் எல்லை உண்டே!


நாடாளுமன்றத்தில் நேற்று இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து தி.மு.க., அ.இ.அ. தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல; இன்னும் சொல்லப் போனால் வெறும் தமிழர்கள் பிரச்சினை மட்டுமல்ல; தேசியக் கண்ணோட்டம் கண்ணோட்டம் என்று கூறுகிறார்களே - அதன்படிப் பார்த்தால்கூட இந்திய மீனவர்கள் இன்னொரு நாட்டு அரசால் தாக்கப்படும் பிரச்சினை. மற்றொரு வகையில் பார்த்தால் இது மனித உரிமைப் பிரச்சினை!

இதுவரை எத்தனைத் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாத அளவுக்குத் தொடர் கொலைகள் - கொள்ளைகள் - தாக்குதல்கள் - இழப்புகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நேற்று மட்டுமல்ல; இதே இந்திய நாடாளு மன்றத்தில் எத்தனையோ முறை கிளப்பப்பட்ட பிரச்சினை!

கடலில் கோடு போட்டு மீன்பிடிக்க வேண்டும் என்று சொல்லுவதெல்லாம் எத்தகைய பிற்போக்குத்தனம்? இவ்வளவுக்கும் இந்திய அரசோ, இலங்கை அரசோ கூறும் அந்தக் கடல் எல்லைக் கோட்டின் பின்னணி என்ன?

இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை யாருக்கும் தெரியாமல் கை உறைப் போட்டு அதிகாரிகள் மத்தியில் காதும் காதும் வைத்தாற்போல எதையோ எழுதிக் கொண்டு, கச்சத்தீவு பகுதியில் - தமிழ்நாட்டுக்குரிய கச்சத் தீவுப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று கட்டளை இடுவார்களேயானால், இதனைவிட பெரிய வஞ்சகம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

தமிழ்நாட்டைச் சேர்ந்த கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததே முதல் தவறு. குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல், குழியையும் பறித்த கதையாக அல்லவா இருக்கிறது?

நாட்டுப்பற்றைப்பற்றி எல்லாம் உச்சக் குரலில் தான் கதறுகிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டுக்குள் கச்சத்தீவை இன்னொரு நாட்டுக்கு யுத்தம் இல்லாமல், சத்தம் இல்லாமல் இருட்டில் தூக்கிக் கொடுத்தது எத்தனைக் கேரட் நாட்டுப்பற்று?

பட்டுப் புடவையை இரவல் கொடுத்த பெண்மணி, ஈச்சம்பாயைத் தூக்கிக் கொண்டு பட்டுப் புடவையை இரவல் பெற்றுக் கட்டிக் கொண்ட பெண்மணி செல்லும் இடமெல்லாம் ஓடுவதைப் போல் அல்லவா இந்தக் கதை இருக்கிறது?

உலகில் உள்ள மீனவர்களெல்லாம் கடலில் சென்று மீன் பிடிக்கிறார்களே, எல்லைகளைக் கடந்து அங்கெல்லாம் படுகொலைகளா நடக்கின்றன? பறிமுதலா நடக்கிறது?

ஜப்பானும், கொரியாவும் தமக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் இரு நாடுகளும் மீன்பிடிக்க வழி செய்து கொள்ளவில்லையா?

நார்வே, சுவீடன், ஃபின்லாந்து, ருசியா ஆகிய நாடுகளிடையேயும்கூட எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்கும் உரிமங்கள் உண்டு.

இங்கு என்னடா என்றால் நமக்கென்று இருந்து வந்த பகுதிகளில் சென்று மீன்பிடிக்கக் கூட உரிமை இல்லை என்றால் தமிழர்களை இந்திய அரசு எந்த கண் கொண்டு பார்க்கிறது என்ற கேள்வி எழாதா? உங்களுக்கு யார் தோழர்கள்? இலங்கை அரசா, இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழர்களா என்று மாநிலங்களவையில் தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா அவர்கள் எழுப்பிய வினா அர்த்தமுள்ளது.

எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதை இன்னும்கூடப் பொறுமையாகத்தான் சொல் லிக் கொண்டு இருக்கிறோம் - அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டே!
7-3-2013

தமிழ் ஓவியா said...


பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த வேண்டும்

மக்களவையில் டி.ஆர். பாலு போர் முழக்கம்

புதுடில்லி, மார்ச் 7- இலங்கை அரசை சர்வ தேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றார். தி.மு.க. நாடா ளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு.

தனித் தமிழீழத்துக் காக திமுக போராடும் என்று மக்களவை சிறப்பு விவாதத்தின் போது அக்கட்சி எம்.பியான. டி.ஆர் பாலு கூறியுள் ளார். மக்களவையில் இன்று (7.3.2013) நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய விவாதத் தில் டி.ஆர். பாலு பேசுகையில் , நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களாக யார் இருந்தாலும் இலங்கை தொடர்பான கொள்கை ஒன்றும் மாறவில்லை. டெசோ தீர்மானங்களை நாங்கள் கொடுத்த போது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தி யாவின் நிலை என்ன என்பதே அய்.நா மனித உரிமைகள் ஆணையத் தின் தலைவர் நவநீதம் பிள்ளை உள்ளிட்ட வெளிநாட்டவர் பலரது கேள்வியாக இருக் கிறது. இப்போதாவது இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும். நாங்கள் தமிழீழம் கோருகிறோம். திமுகவின் நிலைப்பாடும் சரி.. அனைத்துக் கட்சி களின் நிலையும் அதுவே. நாங்கள் ஒருமித்த குர லில் தமிழீழத்தைத் தவிர வேறு தீர்வு இல்லை என்கிறோம். அதற்கு முன்பாக புனர்வாழ்வுப் பணிகள் அங்கு மேற்கொள்ளப் பட வேண்டியது அவசி யம். புலம் பெயர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் கதி என்ன? இலங்கை அரசு தமது சொந்த மக்களையே இனப்படுகொலை செய் திருக்கிறது. இலங்கை தமிழர் பிரதேசங்களில் 49 ஆயிரம் விதவைகள் இருக்கின்றனர். தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக் கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் இன்னமும் சித்திர வதைக்குள்ளாகினார்.

தமிழ்ப் பெண் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அண்மையில் மனித உரி மைகள் கண்காணிப்ப கம் அம்பலப்படுத்தியி ருக்கிறது. பொதுமக்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறது இனப் படுகொலையை வெளிப் படுத்துகிறது. பெண் களுக்கு எதிராக திட்ட மிட்ட சித்ரவதையும் படுகொலையும் இனப் படுகொலையே. இதே போல் தமிழர்களின் கலாச்சாரத்தை இலங்கை ராணுவம் திட்டமிட்டு சீரழித்ததும் இனப்படு கொலையே. இலங்கை யில் 367 இந்து கோயில் கள் அழிக்கப்பட்டு விட் டன.

தமிழ் ஊர்கள் சிங்களத்தில் 89 தமிழ் கிராமங் களின் பெயர்கள் சிங்க ளத்தில் மாற்றப்பட்டுள் ளன. இது ஒரு கலாச்சார இனப்படுகொலை. பெர்லின் நூலகத்தில் யூதர்களின் கலாச்சா ரத்தை சொல்லக் கூடிய பல்லாயிரக்கணக்கான நூல்களை ஹிட்லர் எரித்தார். இதுதான் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து சர்வதேச போர் விதிகளையும் இலங்கை மீறி அப்பாவி பொதுமக்களை, பெண் களை படுகொலை செய்தது. அப்படிப் பட்ட போர்க் குற்றம் புரிந்த நபருக்கு தமி ழரின் ரத்தக் கறைபடிந்த கையோடு வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு எப் படி கொடுத்தது இந்திய அரசு? பிரபாகரனின் 12 வயது மகன் பாலச் சந்திரனுக்கு சாப்பிடு வதற்கு பொருட்களை கொடுத்துவிட்டு 10 நிமிடத்திலேயே கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கிறது இலங்கை ராணுவம். ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்துவிட்டான் பாலச்சந்திரன். ஆனால் அதற்கும் மேல் 4 முறை சுட்டு படுகொலை செய்திருக்கிறது இலங்கை ராணுவம், யூகோஸ்லோவியாவில் 1991-ஆம் ஆண்டு நிகழ்த் தப்பட்ட இனப்படு கொலைக்காக 1992-ஆம் ஆண்டு அய்.நா. சர்வ தேச விசாரணைக்கு உத்தர விட்டது.

போர்க் குற்ற நடவடிக்கை

சிரியா, போஸ்னியா, வடக்கு சூடான் அதிபர் களுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது லட்சக்கணக் காக தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு எதி ரான ஏன் போர்க் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? இலங்கையில் தமிழர் களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்தியா- இலங்கை ஒப்பந்தம் என்னவானது? 25 ஆண்டுகளாகிவிட்டதே.. என்ன நடந்தது.. ஒன் றுமே நடைபெற வில்லையே.. இந்தியா-இலங்கை ஓப்பந்தப் படிக்கையான 13ஆவது அரசியல் சாசன திருத் தம் என்னவானது? இலங்கை அதிபர் உட் பட அனை வருமே 13-ஆவது அரசியல் சாசன திருத்தத்தை ஏற்க மறுக்கின்றனரே.. அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கையின் போர்க் குற்றம் தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் இலங் கையை நிறுத்த வேண் டும் என்றார் அவர்.

யஷ்வந்த் சின்ஹா

இலங்கைத் தமிழர் களுக்கு நேர்ந்த சோகம், நாம் வாழும் காலக் கட்டத்தில் நேர்ந்த மிகவும் கொடுமையான சோகமாகும் என பா.ஜ.க. உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர் கள் கொல்லப்பட்டனர், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப் பட்டனர், மனித உரி மைகள் மீறப்பட்டன, 12 வயது சிறுவன் மார்பில் குண்டுகள் துளைக்கப் பட்டு இறந்தான். இலங்கை போர்க்குற்றம் தொடர்பான வீடியோக் கள் கண் கலங்க வைக் கின்றன.
இவை எல்லாம் அனைவரும் அறிந்ததே. இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட இன்னமும் மனித உரிமை மீறல்கள் நடை பெற்று வருகின்றன என வருத்தம் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - இந்தியாவின் நிலை? நாடாளுமன்றத்தில் மன்மோகன்சிங் பதில்


புதுடில்லி, மார்ச் 7- நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் மன்மோகன்சிங், அய்.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் நடை பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் பற்றி சபையில் உறுப்பினர் கள் பிரச்சினையை எழுப்பினார்கள். அவர் களுடைய இந்த உணர்வு களை அரசு தீவிரமாக கவனத்தில் கொள்கிறது. 13-ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதா வில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் செயல் படுத்தப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இலங்கை அரசை இந்திய அரசு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி வருகி றோம். இலங்கையில் அமைதியையும், நல்லி ணக்கத்தையும் ஏற் படுத்துவதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டின் அரசை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. இலங்கை தமிழர் களுக்கு சமநீதி, சம தகுதி, சம உரிமைகள் வழங் கப்படவேண்டும் என்ப தில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

தமிழர்கள் சுயகவு ரவத்துடனும், சம தகுதியு டனும் வாழ்வதை உறு திப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். வடக்கு மாகாணத்தில் விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதும் இந்தியாவின் விருப்பம் ஆகும். மேலும் தமிழர்கள் மீள் குடியமர்த்தப்படுவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

இலங்கைக்கு எதிராக அய்.நா.மனித உரிமை கவுன்சில் கூட் டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்ய இருக் கும் தீர்மானத்தை ஆதரிக்கும் பிரச்சினை குறித்து இந்தியா இன் னும் முடிவு எடுக்க வில்லை. அந்த தீர்மானத் தின் இறுதி வடிவம் குறித்தும், அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பது தொடர்பாக, இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வரு கிறது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

சல்மான் குர்ஷித்

நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் இலங் கைக்கு எதிரான அமெ ரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கை யில், இந்த பிரச்சினை யில் அரசு தனது நிலைப்பாட்டை தெரி விக்கும் என்றார். மேலும் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் விஷயத் தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படு மாறும், மனித உரிமை களை பாதுகாக்கும் விஷயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஏதாவது முன் னேற்றம் ஏற்பட்டுள் ளதா? என்பது பற்றி தெரிவிக்குமாறும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீசை தான் கேட்டுக் கொண்டு இருப்பதாக அப்போது சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இது மனித உரிமை கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றும், இதில் யாரும் அகந்தை யுடன் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


ஒரு தரம் இரண்டு தரம்


ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்டார். கடும் எதிர்ப்புக் காரணமாக வெளியேற்றப்பட்டார். இப்பொழுது இரண்டாவதாக கருநாடகாவில் மகாலிங்கேஸ்வரர் பீடத்துக்கு மடாதிபதியாக்க பேரம் பேசப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் மடாதிபதியான ராஜேந்திர சுவாமிகள் எனப்படுபவரும் இணக்கம் தெரிவித்தார். ஆதீனத்துக்குள் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்ப - அந்த முயற்சியும் தோல்வி அடைந்து விட்டது. ஒரு தரம், இரண்டாம் தரம் இன்னும் எத்தனை தரம் அவமானப்படுவாரோ இந்த ரஞ்சிதா புகழ் நித்திய ஆனந்தம்?

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை!

காச நோய்க்காக விற்கப்படும் மாத்திரைகள் காலாவதி தேதியைத் திருத்தி சந்தையில் விற்கப்படுகிறதாம். மருந்துள்ள உறையில் (அலுமினியம் ஃபாயில்) காலாவதியாகும் தேதி, உட்பொருள்கள் குறிக்கப்பட்டு இருக்கும். அந்த எழுத்துகள் அழிக்கப்பட முடியாதவை. இண்ட்ஸ்ட்ரியல் பெட்ரோலி யம் என்ற இரசாயனத்தின் மூலம் காலாவதி தேதியை அழித்து விடுகிறார்களாம். எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


இலங்கையில் தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடையா? தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, மார்ச் 7- காணாமற் போன தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பற்றி அறிந்து கொள்ள மனு கொடுக்கச் சென்ற ஈழத் தமிழர்களைத் தடுத்து அனுமதி மறுத்த சிங்களக் காவல் துறையைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2009ஆம் ஆண்டு இலங்கை யில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போரில், சிங்கள ராணு வத்தினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்; பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் காணா மல் போயினர். காணாமல் போன வர்கள் என்ன ஆனார்களோ, அவர்களின் கதி என்னவாயிற்றோ என்று இன்றளவும் காணாமல் போன தமிழர்களின் குடும்பங்கள் கலக்கத்திலும், வேதனையிலும் ஆழ்ந்திருக்கின்றன. இந்தத் துயர மான நிலையில் காணாமல் போன தமிழர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டுமென்றும், போர்க் கைதி களாக இன்னமும் அடைபட்டி ருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றும் கோரி; கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு செய்து, அதில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் தமிழ் மக்கள் அணி அணியாகப் புறப் படத் தயாராயினர்.

ஆனால் அவர் கள் கோரிக்கைப் பயணத்தை மேற்கொள்ள முடியாதபடி சாலைகளில் இலங்கைக் காவல் துறையினர் தடைகளை ஏற் படுத்தியிருந்தனர். மேலும் கொழும்பு நகரத்திற்குள் அவர்கள் செல்ல முடியாதபடி காவல் துறையினர் தொடக்கத்திலேயே தடுத்து விட்டனர். இலங்கையில் ஜனநாயக மரபு களுக்கு முரணான இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக; கொழும்பு நகரிலே ஆர்ப்பாட் டம் நடத்த முயற்சித்த தமிழ் மக்கள் வவுனியாவிலேயே ஆர்ப் பாட்டம் நடத்தி முடித்து, அங்கேயிருந்த ஒரு அதிகாரியிடம் கோரிக்கை மனுவினை அளித் திருக்கின்றனர்.

அமெரிக்கா கண்டனம்

இலங்கை அரசின் இந்த அட் டூழிய நடவடிக்கையை அமெ ரிக்கா கண்டித்திருக்கிறது. கொழும்பில் உள்ள அமெரிக்க துதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை அறிய காத்திருக்கிற மக்கள், சுதந்திரமாகச் சென்று வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்; சுதந்திரமாகச் சென்று தங்களது கோரிக்கையைத் தெரி விக்கும் உரிமை பொதுவானது; இதற்கு இலங்கை மற்றும் சர்வ தேச சட்டங்கள் அனுமதி அளிக் கின்றன என்று இலங்கை அரசுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது.

அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்து, முழுச் சர்வாதிகார நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங் களப் பேரினவாத அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரிய தாகும்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான்


பார்ப்பான் தன் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவன் எவனோ, அவனை எல்லாம் மகான், மகாத்மா, ஆழ்வார், நாயன்மார்களாக ஆக்கி விடுகின்றான். பார்ப்பனர்கள் தம் காலைக் கழுவ மறுப்பவனை ஒழித்தே கட்டி இருக்கின்றார்கள்.
(விடுதலை, 2.9.1960)

தமிழ் ஓவியா said...


போர் நின்றுவிட்டதாக பொய் சொன்னது போர்க்குற்றமே! கலைஞர் கடிதம்


உடன்பிறப்பே,

2009ஆம் ஆண்டு இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்ற போது; இன்றைக்கு ஈழத் தமி ழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வுபூர்வமான அக் கறையை, அப்போதே காட்டவில்லை என்பதைப்போல ஒருசிலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை; அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப் பட்டதை; தி.மு.கழகம் அப்போது ஆட்சியிலே இருந்த காரணத்தால் தடுத்து நிறுத்தியிருக்கலாம், ஆனாலும் தடுத்து நிறுத்த வில்லை என்பதைப்போல தெரிந்தோ, தெரியாமலோ கூறி வருகிறார்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, தி.மு.கழகம் எதுவும் செய்யவில்லையா?

கழக அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச் சினைக்காக 14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன் வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி, கழகத் தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங் களை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டார்கள்.

அப்போது ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் களாக இருந்த தம்பிகள் எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர்கூட தங்கள் பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொடுத்து விட்டார்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே பிரதமருக்கு அந்தத் தீர்மானம் தம்பி டி.ஆர். பாலு மூலமாக அனுப்பப்பட்டது.

பிரதமர் பேட்டி

அதனை ஆய்வு செய்த பிரதமர், அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுத்திடும் என்று பாலுவிடம் உறுதிகூறி, அது அப்போதே அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. அதே நாளில் பிரதமர் அளித்த பேட்டியிலும் - இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப் பிரச்சினை மிகவும் கவலை அளிப்ப தாக உள்ளது. இப்பிரச்சினைக்கு ராணுவம் மூலம் தீர்வு என்பது சரியாக அமையாது.

இலங்கையின் இறையாண்மையையும், அங்கு வசிக்கும் தமிழர் களின் மனித உரிமையையும் மதிக்கும் வகையில் பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முழு ஈடுபாட்டுடன் மத்திய அரசு முயற்சி மேற் கொள்ளும் என்று கூறியிருந்தார்.

18-10-2008 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் நேரடியாகவே தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார். 22-10-2008 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்தி யுள்ளதாக நாடாளுமன்றத்திலே குறிப்பிட்டார். 24-10-2008 அன்று சென்னையில் பிரம்மாண்டமான மனிதச் சங்கிலி ஒன்றினை நடத்தினோம்.

26-10-2008 அன்று திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நார்வே நாட்டின் முயற்சியின் பேரில் ஏற்பட்ட சண்டை நிறுத்தம் தொடருவதை உறுதி செய்ய வேண்டுமென்று கலைஞர் வலியுறுத்தினார் என்றும், போர்ப் பகுதிகளில் அவதிப்படும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அய்க்கிய நாடுகள் மன்றம் மற்றும் இந்திய அரசின் மூலமாக மனிதாபிமான உதவிகள் அளிக்க இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது என்றும் கூறினார்.

சட்டப்பேரவையில் தீர்மானம்

12-11-2008 அன்று இலங்கைத் தமிழர் களுக்காக தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட்டது. 4-12-2008 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலை வர்களையும் நான் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண் டோம்.

அதன் பின்னர் பிரணாப் அவர்கள் இலங்கைக்கு நேரிலேயே சென்று ராஜபக்சேயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 27-12-2008 அன்று நடைபெற்ற கழகப் பொதுக் குழுவிலே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றினோம்.

12-1-2009 அன்று தமிழர் தலைவர் கி. வீரமணி, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் என்னைச் சந்தித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலுவையும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியையும் பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் நிலைமைகளை விளக்கச் செய்தேன்.

தமிழ் ஓவியா said...

28-3-2009 அன்று இலங்கையிலே உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா உதவிட வேண்டுமென்று கேட்டு நான் பிரதமருக்கும், திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் எழுதிய கடிதத்திற்கு, 31-3-2009 அன்று திருமதி சோனியா காந்தி அவர்கள் எனக்கு எழுதிய நீண்ட பதில் கடிதத்தில், நம்முடைய பிரதமர் அவர்கள் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரின் சார்பாக இலங்கையில் அண்மையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை விவரித்திருப்பதைப் பற்றி நானும் உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்........ தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போர், அதன் காரணமாக அங்குள்ள தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் அனுபவித்துவரும் பெரும் துயரங்கள், நம்மை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியுள்ளது. அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களைப் பேணவும் தேவையான முயற்சிகள் அனைத்தையும் இலங்கையின் அதிகார வர்க்கம் மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உள்ளபடியே அதற்கான முதல் கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். நமது அரசு இலங்கை அரசுடன் போர் நிறுத்தத்தைப் பற்றி தொடர்பு கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர முடியும் என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் 5-4-2009 அன்று என்னைச் செய்தியாளர்கள் சந்தித்தபோது, இலங்கையில் விடுதலைப் புலிகளின் அனைத்து இடங் களையும் ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், அவர்களது ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், பிரபாகரனும், அவருடைய புதல்வரும் தமிழர்கள் வாழ்கிற பகுதியில் மறைந்திருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கிறதே என்று என்னைக் கேட்ட நேரத்தில் போர் நிறுத்தம் வேண்டுமென்று கடந்த ஆறு மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

எங்கள் குரலை மதித்து வெளிநாடுகளிலே உள்ள அரசுகள், அய்.நா. மன்றத்தினர், வெளி நாட்டுத் தூதுவர்கள் மூலமாக இலங் கைக்குச் சொல்லி வருகிறார்கள். போரை நிறுத் துங்கள் என்று இந்திய அரசினர் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். இருந்தாலும் ராஜபக்சே போரை நிறுத்தவில்லை. அதை நாங்கள் வன்மை யாகக் கண்டிக்கிறோம் என்று கூறினேன்.

தமிழின மக்களைக் காப்பாற்ற...

7-4-2009 அன்று பிரதமர் மன்மோகன்சிங், திருமதி சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில் இலங்கையில் ஒட்டு மொத்த தமிழின மக்கள் கூண்டோடு அழிக்கப் படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும், அங்கு போர் நிறுத்தத்தை உறுதி செய்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

இறுதிப் போரிலே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்று வதற்காக நான் மட்டுமல்ல, இந்திய அரசு மாத்திரமல்ல, பெரிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்றவை வெளியிட்ட அறிக்கையிலேயே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும், பாதுகாப்பான பகுதி மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசுவதை நிறுத்த வேண்டுமென்றும் தெரிவித்தன. இதற்கும் மேலாக அய்.நா. சபையின் பொதுச் செயலாளர், பான்-கி-மூன் தொலைபேசி மூலமாகவே இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொடர்பு கொண்டு இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும், மனிதாபிமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

9-4-2009 அன்று சென்னையில் என் தலைமையில் இலங்கை அரசே போரை நிறுத்து என்று முழக்கமிட்டவாறு பிரம்மாண்ட மான பேரணி ஒன்று நடைபெற்றது. இலங்கை அதிபர் ராஜபக்சே இலங்கையில் இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அறிக்கையில்...

விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சி எம்.பி.களை இந்தியாவிற்கு பேச்சு வார்த்தை நடத்த வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்தது. மத்திய உள் துறை அமைச்சராக அப்போது இருந்த நண்பர் ப.சிதம்பரம் அவர்கள் 14-4-2009 அன்று விடுத்த அறிக்கையில் இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்ந்திட வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தும் என்றார்.


தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் உலக நாடுகளின் வற்புறுத்தல்கள் காரணமாக 48 மணி நேர போர் நிறுத்தத்தை ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் கலைஞர் தரும் இடையறாத அழுத்தம்தான் இதற்கு முக்கியமான காரணம். இந்திய அரசும் இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

21-4-2009 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் திருமதி. சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில், இலங் கையில் போர் நிலைமை ஆபத்தானதாக உள்ளது. தமிழர்கள் அனுபவித்து வரும் சிரமங்கள் மிக அபாயமான நிலையை எட்டியுள்ளது.

அய்க்கிய நாடுகள் அமைப்பு உட்பட அனைத்து நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்கும்படி இலங்கை அரசு மீது நிர்ப்பந்தம் செலுத்தி யுள்ளன. இலங்கையிலுள்ள இலட்சக்கணக் கான தமிழர் களின் உயிர்களைக் காப்பாற்ற இலங்கையில் உடனடி யாகவும், நிரந்தர மாகவும் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடும்படி வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக் கொண்டேன்.

ஒருநாள் வேலை நிறுத்தம்

நாதியற்ற ஈழத் தமிழரைக் காத்திட நடுவணரசுக்கு வேண்டுகோள் என்ற தலைப்பில் உருக்கமிகு உடன்பிறப்பு கடிதம் ஒன்றை 21-4-2009 அன்று நான் எழுதியதோடு, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு போர் நிறுத்தத் திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ளக் கோரி 23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டு அறிக்கை விடுத்தேன்.

அந்த வேலை நிறுத்தத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டுமென்று கேட்டு, காங்கிரஸ், அ.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.அய்., திராவிடர் கழகம், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எம்.ஜி.ஆர். கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுதினேன். அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

நான் அனுப்பிய தந்தியின் அடிப்படையில் 22-4-2009 அன்று இரவு டெல்லியில் பிரதமர் அவர்கள் மத்திய அமைச் சர்கள், அதிகாரிகள் கொண்ட அவசரக் கூட்டம் ஒன் றினைக் கூட்டி, அப்பாவித் தமிழர்கள் மீதான போரினை இலங்கை உடனடியாக நிறுத்தவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதனை இலங்கை அரசுக்கு நேரில் வலியுறுத்துவதற்காக பிரதமரின் சிறப்புத் தூதுவர்கள் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று கொழும்பு சென்றது. அந்தக் குழுவினர் கொழும்பில் ராஜபக்சேவை நேரில் சந்தித்து, உடனடியாக போரை நிறுத்த ஆவன செய்ய வேண்டுமென்ற இந்தியாவின் வேண்டுகோளைத் தெரி வித்தனர்.

24-4-2009 அன்றிரவு அண்ணா அறிவால யத்திற்கு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம் பரம் அவர்கள் வந்து, என்னைச் சந்தித்து விவரங்களை யெல்லாம் விளக்கினார். அதே நாளில் பிரதமர் அவர்களும் தொலை பேசியில் என்னுடன் பேசி மத்திய அரசு எடுத்த முயற்சிகளையெல்லாம் கூறினார்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா அவர்கள் சார்பில் வெள்ளை மாளிகையிலிருந்து 25-4-2009 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை அரசு ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டு மென்றும், இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும் தெரிவித் திருந்தது. 26-4-2009 அன்று இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, ஓரிரவு பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினேன்.

தமிழ் ஓவியா said...

விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிட்ட அறிக்கை

அதே 26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் மற்றும் அய்.நா.சபை ஆகியவற்றின் கோரிக் கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். 26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் நான் தூங்க வில்லை.

போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை பலமுறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். வெளிநாடு களிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்கள். அதிகாலை 4 மணி வரையிலே தொலைக் காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது.

அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அண்ணா நினைவிடத் திற்குச் சென்றேன்.

உண்ணாவிரதம்

அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப் படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், நானாக முடிவெடுத்துச் சென்றேன்.

அதேநாள் காலையில் உண்ணாவிரதப் பந்தலில் என்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம், சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய முன் வராத காரணத்தால், என்னையே நான் அர்ப் பணித்துக் கொள்ள, நம்முடைய தமிழர்களுக்காக என் உயிரையும் வழங்க, இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய, எல்லாத் தமிழர்களின் சார்பாக இந்த உண்ணா நோன்பை நான் மேற்கொண்டி ருக்கிறேன் என்றுதான் தெரிவித்தேன்.

தமிழ் ஓவியா said...

நான் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அதே நாளில் பகல் 11 மணி அளவில் இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தியது. முல்லைத் தீவில் நடத்தப்பட்டு வரும் போர், அதன் தொடர்ச்சியாக நான் உண்ணா விரதம் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்றும், அதன் முடிவில் இலங்கை வடக்குப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த போரை முடிவுக்குக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு, 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இலங்கை வடக்கில் நடை பெற்று வந்த போர் முடிந்து விட்டது.

வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன் படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப் பட்டிருந்தது.

இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையில்; அன்றைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் 27-4-2009 அன்று வெளியிட்ட அறிக்கையில் போர் நடவடிக்கை கள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமள விற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சி களையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டதோடு, அதன் நகல் ஒன்றினையும் நான் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே அனுப்பி, உண்ணாவிரதத்தை என்னை முடித்துக் கொள்ளும்படி பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டனர்.

அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத் தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் நான் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டேன்.

இலங்கை அரசு அறி வித்த போர் நிறுத்தத்தை உண்மையென்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால் உண்ணாவிரதத்தை நான் திரும்பப் பெற்றேன். நாம் நம்பியது மாத்திரமல்ல, அமெரிக்க அரசே அதை நம்பி, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் இலங்கை அரசின் அறிவிப்பையும், விடுதலைப் புலிகளின் அறிவிப் பையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

சிங்கள அரசு பொய் சொன்னதே...

ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்சேவின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர். போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வள வோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம், அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய அமைச்சர் பெருமக்களும் இருந்தும்கூட, சிங்கள ராணுவம் தன்னுடைய தாக்கு தலைத் தொடர்ந்தது. இன்னமும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போர் நிறுத்தப்பட்டதாக சிங்கள அரசு பொய் சொன்னதே ஒரு போர்க்குற்றம்தானே?

இதற்கு வழி காணத்தான் தற்போது தி.மு.கழகம் ஆட்சியிலே இல்லா விட்டாலும்கூட, டெசோ இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி அதிலே நானும், பேராசிரியரும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும், தொல்.திருமாவளவன் அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும், சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவர்களும் உறுப்பினர்களாக இடம்பெற்று அதன் சார்பாக பல போராட்டங்களையும், மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம்.

தமிழ் ஓவியா said...

அந்த வரிசையில்தான் நாளை டெல்லியில் டெசோ சார்பில் பல நாட்டுப் பிரதிநிதிகளும், இந்திய நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொள்ளும் கருத்தரங்கினை நடத்து கிறோம். அதுமாத்திர மின்றி வரும் 12ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறோம். 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, நான் இந்த வயதிலும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நோக்கோடு தான் யாரிடமும் கேட்காமல் உண்ணாவிரதத் தைத் தொடங்கினேன்.

அப்போது இலங்கை அரசு திடீரென்று கூடி போர் நிறுத்தம் என்று பொய்யாக அறிவிப்பினை செய்யுமென்று நான் எதிர்பார்த்தேனா? அவர்கள் அவ்வாறு போர் நிறுத்தம் என்று அறிவித்து, அதனை இந்திய அரசும் நம்பி எனக்குத் தெரிவித்து, உண்ணா விரதத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியதால்தான் நான் அதனை நிறுத்த நேரிட்டது. யார் நம்புகிறார்களோ இல்லையோ இலங்கைத் தமிழர் பிரச்சினையில் என் மனச்சாட்சிக்கொப்ப நான் நடந்து கொண்டு தான் இருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்குமென்றால், அதற்காக நான் ஆட்சியை இழக்கவே தயாராக இருக்கிறேன் என்றே பேரவையில் சொல்லி யிருக்கிறேன். ஏன் ஆட்சியிலே இருந்தபோது, இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நான் அக்கறை காட்டியதற்காகவே இரண்டு முறை ஆட்சியை இழந்தி ருக்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையே பேரா சிரியர் அவர்களோடு சேர்ந்து ராஜினாமா செய்திருக் கிறேன். இதற்கு மேலும் விஷமத் தனமானப் பிரச்சாரங் களுக்கு விளக்க மளிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை...

இறுதியாக 12ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை எப்போதும் போல வெற்றிகரமாக ஆக்கித் தர வேண்டியது தமிழகத்திலே உள்ள அனைத்துச் சாராரையும் சேர்ந்ததாகும். தீர்மானத்தில் கேட்டுக் கொண்டவாறு கட்சி சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பினரும், சங்கடங் களைப் பொறுத்துக் கொண்டு இந்த வேலை நிறுத்தம் என்பது நம்முடைய தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்களுக்காக நடைபெறுகிறது என்பதை உணர்ந்து, அதனை வெற்றி கரமான ஒன்றாக ஆக்கித் தர வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நடவடிக்கை களைப் புரிந்துகொண்டு, மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஜெனீவா நகரத்தில் அய்.நா. மனித உரிமை ஆணை யத்திலே இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக்க முன்வர வேண்டு மென்ற வேண்டுகோளையும் விடுத்து, அதற்கான அறிவிப்பினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென்றும் வலி யுறுத்துகிறேன்.

அன்புள்ள,
மு.க.
(நன்றி: முரசொலி, 7.3.2013)

எல்லாளன் said...

ஈழத் தமிழர்களுக்கு கருணாவும் கருணாநிதியும் ஒன்று தான் அவரின் காலை நக்கி பிழைப்பு நடத்துபவர்கள் எல்லோரும் வேசப் புலிகள் தான் ஈழத் துரோகிகள் தான்

எல்லாளன் said...

தி.மு.க.வின் போலி பிரசாரத்தை கெல்லம் மெக்ரே நிராகரித்தார்

தி.மு.கவின் போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே நிராகரித்தார். இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் உப தலைவர் மு.க.ஸ்டாலினை, சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது.

karunanithi teso

நேற்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்ற போது, கட்சி சார்பில் உரையாற்றி இருந்த உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்தார். இதனை மு.க ஸ்டாலினும் ஆமோதித்தார்.

இது தொடர்பில் கெலம் மெக்ரேயின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள கெல்லம் மெக்ரே, எல்லா நன்மனம் படைத்தவர்களும், இலங்கை தமிழர்களுக்கான நீதியும், நியாயும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் தாம் தனிப்பட்ட எந்த கட்சியையும் இதற்காக பாராட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தி.மு.க இலங்கை விடயத்தை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்பது புலனாகிறது.

Anonymous said...

வைகோ அவர்களை விமர்சிப்பது ஏற்ககூடியாத இல்லையா என்பதனை பிரகு பார்ப்போம்.

முதலில் ஈழ இன அழிப்பு உச்சகட்டத்தின்போது தமிழகமே கொதித்த கொந்தளிப்பை தி.மு.க அடக்க பார்த்தது உண்மை.காங்கிரஸின் கட்டளைக்கு அடிபனிந்து ஈழ விஷயத்தில் பல முரன்பாடான முடிவுகளை மேற்கொண்டவர் கலைஞர்.ஒன்பது ஆண்டுகாலம் மத்திய அமைச்சரவையில் வழு மிகுந்த பங்காளியாய் பணியாற்றிய தி.மு.க,தற்போது ஈழவர்களுக்காய் போராடிய தலைவர்களை கொச்சை படுத்தி விட்டு,தங்களால் மட்டுமே ஈழத்திற்கு விடிவு காலம் என தமிழக மக்களை நம்ப செய்ய முயற்சிக்கிறது.ஆனால் தி..மு.கவின் இந்த செயலை உங்கள் போன்ற இழி நோக்கம் கொண்ட இயக்கங்கள் வேண்டுமானால் நம்புவது போல் ஜால்ரா அடிக்கலாம்...ஆனால் "தி.மு.கவின் நிலையை,தமிழகத்தின் பச்சை குழந்தை கூட "பச்சோந்திதனம் என்றே உணரும்"என உங்களுக்கே தெரியும்.அப்படிபட்ட நிலையில் இப்படி வைகோ வை குறை கூரி ஒரு கட்டுரை தேவைதானா?

சரி அப்படியே ஈழத்தமிழர் பிரச்சினையை வைகோ தனது அரசியல் பிழைப்பிற்கான ஆதாரம் என்று வைத்திருக்கிறார் என்ற உங்கள் கூற்றை வாதத்திற்காய் ஏற்றுகொண்டாலும்,அதை ஏன் தற்போது தி.மு.க தட்டி பறிக்க முயல வேண்டும்?..ஏன் தி.மு.க வின் அரசியல் பிழைப்பிற்கு ஆதாரம் ஏதுமின்றி போனதா?...மனசாட்சியை அடகு வைக்கலாம்,மக்கள் சாட்சியை அடகு வைக்க் முடியாது....வைகோ மட்டும்தான் முதல்வருடன் கரம் கோர்த்தாரா?...இதே தி.க தலைவர் கி.வீரமனி முதல்வர் ஜெயலலிதாவுடன் இனைந்திருந்தது இல்லையா?...

ஏன் முதல்வர் ஜெயலலிதா தமிழர்களின் எதிரியா? அவருடன் வைகோ சேர்ந்திருந்தார் என கூப்பாடு போடுகிறீர்களே?...

முதல்வர் எப்போதும் இலங்கை பிரச்சினையில் தெளிவான திடமான மனதோடுதான் இருக்கிறார். இராஜிவ் படுகொலை இந்திய இறையாண்மையின் படுகொலை என அவர் கருதுவதால் அதற்கு காரனமான விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமண்றத்தில் நிறுத்த வேண்டும் என்றார்.அவர் வகையில் அது சரியே!ஆனால் ஒரு போதும் இலங்கை அரசின் இன அழிப்பு நடவடிக்கையை அவ்ர் ஏற்றதில்லை.கடந்த பாராளுமண்ற பொது தேர்தலிலேயே அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்றால் ஈழத்தமிழர்க்கு தனி நாடு பெற்று தர வகை செய்வோம் என பகிரங்கமாக மேடைகளிலே பேசியவர் முதல்வர் ஜெயலலிதா....வை.கோ வின் இயக்கத்தின் பிரதான நோக்கமும் அதுதான். நோக்கம் ஒன்றாயிருக்கும் இருவர் இணைந்து செயல்படுவ்தில் தவறில்லை....ஏன் உங்கள் டெசோ உள்ளிட்ட,தேர்தலில் போட்டியிடாத இயக்கங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.அதே நோக்கம் தி.மு.க தலைமைக்கும் இருக்கிறது.நீங்கள் இணைந்து இருக்கவில்லையா?...ஆனால் ஜெ-வைகோ-வின் இணக்கம் பாண்டவர்களை போன்றது.அங்கே "தர்மமும் தன்நலமற்ற நோக்கமும்" நிறைந்த ஒன்று.ஆனால் உங்கள் இயக்கங்களின் இணக்கம் துரியோதன கூட்டம் போன்றது.துரோகங்களை சபையேற்றி சதிராட விடும் சகுனியின் சபையை போன்றது.இரண்டுக்குமான வித்தியாசங்களை தமிழக மக்கள் நன்ங்கு அறிவார்கள்.இது போன்ற கட்டுரைகளை எழுதுவதை விட்டு விட்டு,இந்துக்களை வேறு எப்படி நோகடிக்கலாம் என சிந்தியுங்கள்..ஏனெனில் உங்களுக்கு இந்துக்களை மட்டுமே நோகடிக்கும் தைரியம் உள்ளது.ஏனெனில் நாங்கள் எல்லாம் உங்களை சகித்து கொண்டு சகோதரணாய் பார்க்கிரோமல்லவா?...

Anonymous said...

வைகோ அவர்களை விமர்சிப்பது ஏற்ககூடியாத இல்லையா என்பதனை பிரகு பார்ப்போம்.

முதலில் ஈழ இன அழிப்பு உச்சகட்டத்தின்போது தமிழகமே கொதித்த கொந்தளிப்பை தி.மு.க அடக்க பார்த்தது உண்மை.காங்கிரஸின் கட்டளைக்கு அடிபனிந்து ஈழ விஷயத்தில் பல முரன்பாடான முடிவுகளை மேற்கொண்டவர் கலைஞர்.ஒன்பது ஆண்டுகாலம் மத்திய அமைச்சரவையில் வழு மிகுந்த பங்காளியாய் பணியாற்றிய தி.மு.க,தற்போது ஈழவர்களுக்காய் போராடிய தலைவர்களை கொச்சை படுத்தி விட்டு,தங்களால் மட்டுமே ஈழத்திற்கு விடிவு காலம் என தமிழக மக்களை நம்ப செய்ய முயற்சிக்கிறது.ஆனால் தி..மு.கவின் இந்த செயலை உங்கள் போன்ற இழி நோக்கம் கொண்ட இயக்கங்கள் வேண்டுமானால் நம்புவது போல் ஜால்ரா அடிக்கலாம்...ஆனால் "தி.மு.கவின் நிலையை,தமிழகத்தின் பச்சை குழந்தை கூட "பச்சோந்திதனம் என்றே உணரும்"என உங்களுக்கே தெரியும்.அப்படிபட்ட நிலையில் இப்படி வைகோ வை குறை கூரி ஒரு கட்டுரை தேவைதானா?

சரி அப்படியே ஈழத்தமிழர் பிரச்சினையை வைகோ தனது அரசியல் பிழைப்பிற்கான ஆதாரம் என்று வைத்திருக்கிறார் என்ற உங்கள் கூற்றை வாதத்திற்காய் ஏற்றுகொண்டாலும்,அதை ஏன் தற்போது தி.மு.க தட்டி பறிக்க முயல வேண்டும்?..ஏன் தி.மு.க வின் அரசியல் பிழைப்பிற்கு ஆதாரம் ஏதுமின்றி போனதா?...மனசாட்சியை அடகு வைக்கலாம்,மக்கள் சாட்சியை அடகு வைக்க் முடியாது....வைகோ மட்டும்தான் முதல்வருடன் கரம் கோர்த்தாரா?...இதே தி.க தலைவர் கி.வீரமனி முதல்வர் ஜெயலலிதாவுடன் இனைந்திருந்தது இல்லையா?...

ஏன் முதல்வர் ஜெயலலிதா தமிழர்களின் எதிரியா? அவருடன் வைகோ சேர்ந்திருந்தார் என கூப்பாடு போடுகிறீர்களே?...

முதல்வர் எப்போதும் இலங்கை பிரச்சினையில் தெளிவான திடமான மனதோடுதான் இருக்கிறார். இராஜிவ் படுகொலை இந்திய இறையாண்மையின் படுகொலை என அவர் கருதுவதால் அதற்கு காரனமான விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமண்றத்தில் நிறுத்த வேண்டும் என்றார்.அவர் வகையில் அது சரியே!ஆனால் ஒரு போதும் இலங்கை அரசின் இன அழிப்பு நடவடிக்கையை அவ்ர் ஏற்றதில்லை.கடந்த பாராளுமண்ற பொது தேர்தலிலேயே அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்றால் ஈழத்தமிழர்க்கு தனி நாடு பெற்று தர வகை செய்வோம் என பகிரங்கமாக மேடைகளிலே பேசியவர் முதல்வர் ஜெயலலிதா....வை.கோ வின் இயக்கத்தின் பிரதான நோக்கமும் அதுதான். நோக்கம் ஒன்றாயிருக்கும் இருவர் இணைந்து செயல்படுவ்தில் தவறில்லை....ஏன் உங்கள் டெசோ உள்ளிட்ட,தேர்தலில் போட்டியிடாத இயக்கங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.அதே நோக்கம் தி.மு.க தலைமைக்கும் இருக்கிறது.நீங்கள் இணைந்து இருக்கவில்லையா?...ஆனால் ஜெ-வைகோ-வின் இணக்கம் பாண்டவர்களை போன்றது.அங்கே "தர்மமும் தன்நலமற்ற நோக்கமும்" நிறைந்த ஒன்று.ஆனால் உங்கள் இயக்கங்களின் இணக்கம் துரியோதன கூட்டம் போன்றது.துரோகங்களை சபையேற்றி சதிராட விடும் சகுனியின் சபையை போன்றது.இரண்டுக்குமான வித்தியாசங்களை தமிழக மக்கள் நன்ங்கு அறிவார்கள்.இது போன்ற கட்டுரைகளை எழுதுவதை விட்டு விட்டு,இந்துக்களை வேறு எப்படி நோகடிக்கலாம் என சிந்தியுங்கள்..ஏனெனில் உங்களுக்கு இந்துக்களை மட்டுமே நோகடிக்கும் தைரியம் உள்ளது.ஏனெனில் நாங்கள் எல்லாம் உங்களை சகித்து கொண்டு சகோதரணாய் பார்க்கிரோமல்லவா?...

தமிழ் ஓவியா said...


/முதல்வர் எப்போதும் இலங்கை பிரச்சினையில் தெளிவான திடமான மனதோடுதான் இருக்கிறார்//

ஓ ஒ அப்படியா? காமடி பண்ணாதீங்க சார்!

த. முத்துகிருஷ்ணன் said...

1. கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதி, முத்துக்குமார் உடலுக்கு எரியூட்டப்பட்ட தினத்தில், தமிழகத்தில் பந்த் அறிவித்த போது, இதில் ஈடுபட்டால் பாதுகாப்பு சட்டம் பாயும் என, போலீஸ் துறை மூலம் மிரட்டப்பட்டது.
2. தலைமைச் செயலர் மூலம் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கடிதங்கள் அனுப்பியும் மத்திய அரசின் துரோகத்தை, மூடி மறைக்க பாடுபட்ட அன்றைய முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, இம்மாதம் 12ம்தேதி பந்த் அறிவித்துள்ளார்.
3. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட, மத்திய அரசு இலங்கையோடு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டே வருகிறது. மக்களை திசை திருப்புகின்ற முயற்சியில், காங்கிரஸ் அரசு, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க., வைப் பயன்படுத்துகிறது.

ராவணன் said...

வேஷப்புலிகளாகக் கூட கூத்துக் கட்ட அருகதை அற்ற வீரமணி, கருணாநிதி கும்பலுக்கு என்னா ஒரு தெனாவெட்டு?

தமிழ் ஓவியா said...


மகளிர் தின வாழ்த்து



கடந்த மகளிர் ஆண்டு பெண்களுக்கு - இந்தியாவைப் பொறுத்தவரை வேதனை - சோதனைகள் நிறைந்த ஆண்டாகும்.

அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, களையப்பட்டு, பெண்களின் சுயமரியாதையும், சம உரிமையும் காப்பாற்றப்படுவதற்கான எல்லா முயற்சிகளும் ஆக்க ரீதியான செயல்பாடுகளும் முகிழ்த்துக் கிளம்ப வேண்டும்.

இந்தியாவில் சட்டமன்றங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடங்களுக்கான சட்டம் எக்காரணம் கொண்டும் இனியும் அலமாரியில் தூங்கிட அனுமதிக்கப்படக் கூடாது.ஆண்கள் இதற்குத் தோள் கொடுப்பார்கள் என்று நம்பி தாய்க்குலம் இனியும் ஏமாற வேண்டாம்!

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது என்ற தந்தை பெரியார் அவர்களின் ஆழ்ந்த பட்டறிவுப் பகுத்தறிவுச் சிந்தனையை நெஞ்சில் ஏந்தி வீதிக்கு வந்து போராட வேண்டும் பெண்கள்!

திராவிடர் கழகம் இதற்கு எல்லா வகைகளிலும் தோன்றாத் துணையாக இருக்கும். இதுவே திராவிடர் கழகத்தின் உலக மகளிர் நாள் செய்தி.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



புதுடில்லி
8.3.2013

தமிழ் ஓவியா said...

டில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம் : அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுக் கருத்துரை!


இந்திய அரசின் கடமை வலியுறுத்தப்பட்டது

டில்லியில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தலைவர்கள் (7.3.2013)

புதுடில்லி, மார்ச் 8- புதுடில்லியில் டெசோ சார்பில் கருத்தரங்கம் நேற்று (7.3.2013) மாலை சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கட்சிகளும் பங்கேற்று, இந்தியாவின் கடமை வலியுறுத்தப் பட்டது.

மார்ச் 5ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத் தூதுவரகத்திற்கு எதிராக முற்றுகைப் போராட்டம் மிக வெற்றிகரமாக - பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கொடுங்கோலன் இராஜபக்சேவைப் போர்க் குற்ற வாளியாக அறிவிக்க டெசோ அமைப்பு வற்புறுத் தியது.

பொது வேலை நிறுத்தம்

அன்று மாலையே டெசோவின் தலைவர், கலைஞர் அவர்களது சீரிய தலைமையில் கூடி, இந்திய அரசு அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தின் சார்பில் ஜெனிவாவில் இலங்கை அரசைக் கண்டித்து மனித உரிமை மீறல்களுக்காக - அமெ ரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை மேலும் தர வேண்டும்; அதன் மூலம் தமிழர்களது உணர்வு களைக் காட்ட 12.3.2013 அன்று முழு அடைப்பு பொது வேலை நிறுத்தம் - ஆகியவைகளை நடத் துவது என்று தீர்மானித்தது.

உடனடியாக ஏற்கெனவே முடிவு செய்தபடி டில்லித் தலைநகரில் டெசோவின் சார்பில் ஒரு கருத்தரங்கம் - கலந்துரையாடல் நிகழ்வு - மிகவும் சிறப்புடன் புதுடில்லி கான்ஸ்டிடியூவின் கிளப்பில் டெசோவின் உறுப்பினர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் 7.3.2013 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் தொடங்கியது.

சென்னையிலிருந்து முதல் நாளே 6ஆம் தேதியே புதுடில்லி வந்தடைந்த டெசோ அமைப் பினர்கள், தளபதி மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திருமதி சுப்பு லட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் சுப. வீரபாண் டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), டெசோ ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு முதலிய பலரும் கலந்து ஆலோசித்து அடுத்த நாள் கருத்தரங்க நிகழ்வுகளை ஆய்வு செய்து இறுதி வடிவம் தந்து ஆயத்தப்படுத்தினார்கள்.

பல தரப்பினரும் பங்கேற்பு

டெசோ கருத்தரங்கம் - ஆய்வரங்கம் டெசோ உறுப்பினர்களோடு, திமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள் கவிஞர் கனிமொழி, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா ஆகியவர்களும் தி.மு.க. முதன்மைச் செயலாளர், துரை. முருகன், முன்னாள் அமைச்சர்கள் ஆ. இராசா, தயாநிதிமாறன், செஞ்சி இராமச்சந்திரன், புதுக்கோட்டை ரகுபதி, இணையமைச்சர்கள் பழனி மாணிக்கம், நாமக்கல் காந்திசெல்வன், டாக்டர் ஜெகத்ரட்சகன், நாடாளுமன்ற இரு அவையின் திமு.க. உறுப்பினர்கள் ஏ.கே.எஸ். விஜயன், செல்வ கணபதி, ஆதிசங்கர், சுகவனம், வசந்தி ஸ்டாலின், ஜின்னா, எலன் டேவிட்சன், வேலூர் ரகுமான் (முஸ்லீம் லீக்) தாமரைசெல்வன், தங்கவேல், வழக்கறிஞர்கள் இராதாகிருஷ்ணன், சட்டக்கதிர் சம்பத், த. வீரசேகரன், முன்னாள் நீதிபதி பரஞ்சோதி, தொ.மு.ச. துணைத் தலைவர், சண்முகம் மற்றும் பலரும் 7.3.2013 மாலை டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

ஏராளமான தொலைக்காட்சிகள், பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர் கள் வருகை தந்திருந்தனர். பல்வேறு தேசியக் கட்சிகளுக்கு டெசோ அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யின் சார்பில் அதன் பிரதிநிதியாக தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் ஆன அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர் கள் கலந்து கொண்டார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ஞானதேசிகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ராம்விலாஸ் பஸ்வான் அவர் களின் லோக்தளக் கட்சி செயலாளர், சரத்பவாரின் தேசியவாதி காங்கிரஸ் சார்பில் மாநிலங்கள் அவை உறுப் பினர் சுப்ரீயா சூலு, டாக்டர் ஷாபீர், தேசிய மாநாட்டுக் கட்சியினர், மனித உரிமை அமைப்புப் போராளி சுவாமி அக்னிவேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

டில்லியில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தலைவர்கள் (7.3.2013)

வரவேற்புரை கவிஞர் கனிமொழி எம்.பி.,

வரவேற்புரையை கவிஞர் கனி மொழி அவர்கள் நிகழ்த்தினார். கருத்தரங்கத்தின் அறிமுக உரையை திரு. டி.ஆர். பாலு, வழங்கிய பின்னர் கருத்தரங்கில் முக்கிய உரை தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்தி, டெசோவின் நிலைப்பாடு, மனித உரிமை ஆணையத்தின் மூலம் போர்க் குற்றங்கள் புரிந்த ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டிய அழுத்தம்பற்றி தெரி வித்தார்.

தொடர்ந்து டெசோ உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இலங்கையில் உயிர்நீத்த உயிர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசிக்க கருத்தரங்கத்தில் அனை வரும் எழுந்து நின்று வீரவணக்கம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் சூடி குசைந ஷ்டிநே என்ற ஆங்கில குறும்படம், (இலங்கையில் நடைபெற்ற வன்முறைகளை விளக்கி உருவாக்கப்பட்டதை) காண்பிக்கப் பட்டது.

நிகழ்ச்சியின் தொடர் நிகழ்வாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் நிலைப்பாட்டையும், இலங்கைப் பிரச்சினை தொடர்பான ஆழ்ந்த மனக் கவலையையும் தெரிவித்து தங்கள் ஒத்துழைப்பை நல்குவதோடு, இந்திய அரசின் கடமையை எவ்வாறு ஆற்ற வேண் டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினர். உலக பொது மன்னிப்புச் சபை இயக்குநர் திரு. அனந்த பத்ம நாபன் தங்களது அமைப்பின் சார் பாக உரையாற்றினார்.

பின்னர் டெசோ அமைப்பு சென் னையில் உருவாக்கப்பட்ட தீர்மானங் களை, அனைவருக்கும் தெரிவிக்கும் வண்ணம் இந்திய அரசுக்கு வேண்டு கோளைத் தெரிவித்த தீர்மானங்களை டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார். அதேபோல அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்திற்கான வேண்டுகோள் தீர்மானங்களை திருச்சி சிவா கருத்தரங்கத்தில் கலந்து கொண்டோருக்கு அறியும் வண்ணம் வாசித்தளித்தார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

இறுதியாக, கருத்தரங்க முடிவுரை யினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றினார்கள். அப்போது, அவர் டெசோ அமைப்பாளர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ் விற்கு வந்து கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள், அனைவருக்கும் அமைப் பின் சார்பில் நன்றியினைத் தெரி வித்து, இன்று நல்வாய்ப்பாக இந்திய நாடாளுமன்றத்திலும் இலங்கைப் பிரச்சினை வெகு சிறப்பாக நடை பெற்றதையும், அமெரிக்க அரசு கொண்டு வரவுள்ள தீர்மான முக்கிய அம்சங்களை தாம் அறிந்த சமீபத்திய தகவலின்படி சேர்த்து விளக்கி சிறப்பாக தனது உரையை ஆற்றினார்.

தமிழர் தலைவரின் உரை ஆங்கி லத்தில் சிறிய புத்தக வடிவில் அனை வருக்கும் வழங்கப்பட்டது. இறுதி யாக கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பேரா சுப. வீரபாண்டியன் தனது உரையை ஆற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது. தொடர்ந்து செய்தி மற்றும் ஊடகத்துறையினரின் வினாக்களுக்கு நிகழ்வில் தலைவர் டாக்டர் மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி, நிகழ் வாளர் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோர் பதிலளித் தனர். நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டு மிகச் சிறப்பாக இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது. - புதுடில்லியிலிருந்து நமது சிறப்புச் செய்தியாளர்

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்க்கு வாழ்வாதாரம்: இந்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு

புதுடில்லி, மார்ச் 8-இலங்கை பிரச்னையில் இந்தியா உறுதியான நிலையை எடுக்க வேண் டும் என்று மக்களவை யில் நடந்த விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆவேசமாக பேசினர். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலை ஏற்காமல் திமுக, அதி முக, பா.ஜ. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இலங்கையில் ராணு வத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த கடைசி கட்ட போரின் போது ஏராளமான அப்பாவிகள் கொல்லப் பட்டனர். மனித உரி மைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்னை குறித்து மக்க ளவையில் நேற்று கார சார விவாதம் நடந்தது. உறுப்பினர்கள் ஆவேச மாக கருத்து தெரிவித் தனர். விவாதத்தை தொடங்கி வைத்து திமுக எம்.பி. டி.ஆர். பாலு, பேசுகையில், இலங்கை பிரச்னையில் இந்திய அரசின் நிலை என்ன? பிரதமர் மன் மோகன் சிங் என்ன நினைக்கிறார்? என்று வெளிநாடுகளின் தூதர்கள் கேட்கின்றனர். இந்த விவகாரத்தில் இந் தியாவின் நிலை என்ன? என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டால் மீண் டும் தமிழ் ஈழ கோரிக்கை எழுப்பும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.

பா.ஜ. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா பேசு கையில், இலங்கையில் போர்க்குற்ற அநீதிகள் நடந்துள்ளன. 12வயது சிறுவன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் படத்தை பார்க் கும் யாரும் துயரமடை வதை தவிர்க்க முடியாது என்றார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசும்போது, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை உலகமே பார்க்கிறது. இந்த பிரச்னையில் இந்தியா உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்றார். அதிமுக உறுப்பினர் தம்பித்துரை பேசுகை யில், இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறுவது தவறு. உண் மையில் 3 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை யின் நட்புக் காக தமிழர்களின் நலனை இந்தியா விட்டுக் கொடுக்க கூடாது என்றார். இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலி யுறுத்தினார். மேலும் தமிழக எம்.பி.க்கள் கே.எஸ்.அழகிரி, பி.ஆர். நடராஜன், லிங்கம், கணேச மூர்த்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் ஆகியோரும் விவாதத் தில் கலந்து கொண்டு பேசினார்.

விவாதத்துக்கு பதில் அளித்து வெளி யுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா சாத்தியமான சிறந்த முடிவை எடுக்கும். நிலைமை களை ஆராய்ந்து நிதானமாக முடிவு செய்வோம் என்றார்.

அமைச்சரின் பதில் திருப்தியளிக்க வில்லை என்று கூறி திமுக, அதிமுக, மதிமுக, பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கட்சி களின் உறுப்பினர் கள் வெளிநடப்பு செய் தனர். உறுப்பினர்களின் ஆவேச பேச்சா லும் வெளிநடப்பாலும் அவையில் பரபரப்பு ஏற் பட்டது.

தமிழ் ஓவியா said...


துக்ளக் பேட்டி: வாசகர் பாராட்டு கொள்கை வேறு - மானுடம் வேறு


நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வீரமணியின் சமகாலத்திய மாணவன். அவருடன் நெருங்கிப் பழகிய அனுபவங்களும் உண்டு. அன்று அண்ணாமலை பல்கலைக் கழகம் பகுத்தறிவுப் பாசறை என பெயர் பெற்றது. பல திராவிடத் தலைவர்கள் உருவாகிய இடம் என்று பேசப்பட்ட காலம் அது.

திராவிட இயக்க விசுவாசிகளுக்கு நிகராக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், காங்கிரஸ் அபிமானி களான நாஞ்சில் மாணவர்கள், இருசாராரும் மோதிக் கொள்வது வழக்கம். நானும், வீரமணியும் கடலூரிலிருந்து ரயிலில் தினமும் பயணிப்பதுண்டு. எங்களுடன் பயணித்தவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். விபூதி சகிதம் எப்பொழுதும் சிவப் பழமாகக் காட்சியளிப்பார். வீரமணி அந்தப் பேராசிரியரிடம் மிக்க மரியாதையுடன், தனது கடவுள் மறுப்புக் கொள்கையை வெளிப்படுத்தாது உரையாடிய பண்பை நான் மறக்க முடியாது.

வீரமணி தன் வாழ்நாள் அனுபவங்களை விருப்பு வெறுப்பின்றி எழுதுகிறார். அது பெரிதும் போற்றுதற்குரியது. கொள்கை வேறு, மானுடம் வேறு என்ற எண்ணம் அவரிடம் அதிகம். அதைப் பிரதிபலிக்கும் வகையில் துக்ளக் பத்திரிகையில் அவரை எழுத வைத்து, வாசகர்களுக்கு அவரை அறிய வாய்ப்பளித்த சோவுக்குப் பாராட்டுக்கள்.

- சி.ஆர். நாராயணன், கடலூர்-2

நன்றி: துக்ளக் 13.3.2013

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசின் மனித உரிமை மீறல் : தேவை சர்வதேச விசாரணை! அய்.நா. மனித உரிமை ஆணையம் அறிக்கை


ஜெனீவா, மார்ச்.8- இலங்கை மீது அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தில் அமெரிக்கா கண்டன தீர் மானம் கொண்டு வர இருக்கிற நிலையில், அய்.நா. மனித உரிமைகள் ஆணையமே இலங்கை மீது கடுமை யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அய்.நா. சபையின் மனித உரிமை கள் கவுன்சில் கூட்டத்தில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை, மனித உரிமைகள் கவுன் சிலில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில், 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க, இடதுசாரி கட்சிகள், பா.ஜனதா உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மத் திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டுவர இருக்கிற நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலே இலங் கைக்கு எதிராக ஒரு அறிக்கையை தயாரித்து உள்ள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. 38 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை, அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை கடந்த (பிப்ரவரி) மாதம் 11-ந் தேதி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

இலங்கை நடத்திய போர் குற்றங் கள், தற்போது இலங்கை செயல் படுத்தி வரும் திட்டங்கள் உள்பட அதில் கூறப்பட்டு உள்ள சில முக்கியமான விவரங்கள் வருமாறு:- இலங்கையில் போர் நடந்த சமயத்தில் பெரியவர்களும், சிறுமிகளு மாக பல ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை தேடி கண்டு பிடித்து, மீண்டும் அவர்களது இடத்தில் சேர்ப் பதற்கான நடவடிக்கைகளை இலங்கை சரியாக செயல்படுத்த வில்லை.

இந்த நிலையில், அங்கு போர் முடி வுக்கு வந்த பின்னரும் ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஏன் திரும்பப் பெறப்பட வில்லை? அதிகாரிகளும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிரந்தரமாக இருப்பார் களா? அல்லது வெளியேறி விடு வார்களா? என்று அறிவிக்கப்பட வில்லை. மேலும் அவர்கள் அங்கு நிர் வாகத்திலும் பங்கெடுத்து வருகி றார்கள். சிறுபான்மை தமிழர்கள் நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.


தமிழ் ஓவியா said...

ராணுவம் வாபஸ் பெறப்படாத துடன், மேலும் மேலும் ராணுவம் குவிக்கப்படுவதாலும், அதிகாரிகள் நிர்வாகத்தில் ஈடுபடுவதாலும், அங்கு வசிக்கும் தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் பலாத்கார அச்சம் நிலவுகிறது. பொது மக்களும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்துடன் உள்ளனர். உள்நாட்டு போருக்குப்பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்துதல் போன்றவை சரியாக நிறைவேற்றப்பட வில்லை. இலங்கை அரசின் தேசிய செயல் திட்டத்திலும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை தமிழர்களின் பிரச் சினைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் உள்ளது. சிறுபான்மை தமிழர்களின் பல போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிறைய சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாகச் சொன்ன இலங்கை அரசு அது குறித்து முழு மையாக விசாரணை நடத்தவில்லை. புலம் பெயர்ந்தவர்களை குடிய மர்த்தும் பணியை முழுமையாக செயல்படுத்த வில்லை. இலங்கை அரசு நியமித்த குழு சமர்ப்பித்த (கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு) பரிந்துரை களில் ஒரு சிலவற்றை மட்டுமே இலங்கை அரசு நிறைவேற்றி உள்ளது.

ஆகவே, சில பரிந்துரைகளை செயல்படுத்தும்படி இந்த கவுன்சில் இலங்கைக்கு வலியுறுத்துகிறது. 2006-ல் அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக் கையை வெளியிட வேண்டும். சிறு பான்மையினரான தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளையும், நிவா ரணப் பணிகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சிறுபான் மையினரான தமிழர்களுக்கு அதிகா ரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். தமிழர்களின் பகுதியில் குவிக்கப் பட்டு உள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப் பட்டுள்ள விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க இலங்கை அரசு சர்வதேச உதவியை நாடலாம்.

போருக்குப் பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசா ரணை தேவை. இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப் பட வேண்டும். மேற்கண்டவை உள்பட பல முக் கிய குற்றச்சாட்டுகள், பல முக்கிய பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள் திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து

சென்னை, மார்ச் 8 - உலக மகளிர் நாளையொட்டி (மார்ச்சு 8) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: மார்ச் திங்கள் 8ஆம் நாள்! உலக மகளிர் நாள்! மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக உலகெங்கும் கொண்டாடப் படும் எழுச்சித் திருநாள்!

ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் முதன்முதலில் பெற்றுத் தந்தது நீதிக் கட்சி. அந்த நீதிக் கட்சியின் வழியில் திராவிட இயக்கத்தை வழிநடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் அறிவுறுத்திய நெறியில் மகளிர் சமுதாயம் முன் னேற்றம் காண்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் காலங்களில் உருவாக்கிச் செயல் படுத்திய பல்வேறு திட்டங்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன்.

1973இல் இந்தியாவிலேயே முதல் முறையாகக் காவல் துறையில் மகளிர் நியமனம்; 1975இல் விதவை மகளிர் மறுவாழ்வுத் திட்டம்; இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்; 8ஆம் வகுப்புவரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989இல்5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டம்; அத்திட்டத்தை மேம்படுத்தி 1996இல் 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி; 2001இல் அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்த இத்திட்டத்தை 2006இல் மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாய் என்றும்; 2008இல் 20 ஆயிரம் ரூபாய் என்றும், 2010இல் 25 ஆயிரம் ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கியமை; பெண்கள் பட்டப் படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989இல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; அதனை 2007இல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக்கான மகளிர் பயன்பெற வழி வகுத்தமை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு

இவை தவிர, 1990இல் அரசு வேலை வாய்ப்புகளில், கல்வி நிறுவ னங்களில் மகளிர்க்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு; பெண்களுக்குச் சம சொத்துரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு; 2006இல் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டிகள்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்; கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியு தவித் திட்டம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங் களைப் புதிதுபுதிதாக உருவாக்கி, நடைமுறைப்படுத்திய தால் பெண் கள் சமுதாயம் இன்று சமூக, அரசி யல், பொருளாதார நிலைகளில் எழுச்சி பெற்று, ஏற்றம் கண்டு வருவதை எண்ணி எண்ணி இறும் பூதெய்தும் இதயத்துடன், மகளிர் சமுதாயம் மேலும் மேலும் அறிவி லும், ஆற்றலிலும் ஒற்றுமையுடன் சிறந்தோங்கிச் செழித் திட எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த் துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...

உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது.

- விடுதலை, 26.2.1968

தமிழ் ஓவியா said...


உலக மகளிர் நாள்


இன்று உலக மகளிர் நாள். மக்கள் தொகையில் சரி பகுதியிலிருந்த பெண்களின் எண்ணிக்கை உலக அளவில் கூட பெரும் வீழ்ச்சியை அடைந்திருக்கிறது.

உலக மகளிர் நாளில் முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விழுமிய கருத்து இது. இந்தியாவில் பெண் சிசுக் கொலை என்பது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது; சட்டங்கள் நகமும், பல்லும் இல்லா தவைகளாகவே அவை உள்ளன.
இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டுமானால் ஆட்சி அதிகாரம். நிருவாகம், பிரதிநிதித்துவ சபைகள், நீதித்துறைகளில் பெண்களுக்கான இடங்கள் உரிய வகையில் அமைய உறுதிபடுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்கள் 10 விழுக்காடு என்ற சராசரி நிலையில்தான் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். இது முசுலிம் நாடுகளைவிட குறைவானது.

பொதுவுடைமை - இடதுசாரி நாடுகளில்கூட ஆட்சி அதிகாரம், பொலிட்பீரோ என்று சொல்லப் படுகிற கட்சியின் உயர் மட்டக் குழுவில்கூட உரிய இடங்கள் அளிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி மிக முக்கியமானது.

இவைகளையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கம் செங்குத்தாக எழுந்து நிற்கிறது. ஆண்கள் தங்கள் தசைப் பலத்தின் மூலமும் (Muscle Power) பெண்களை ஒடுக்கி வருகின்றனர்.

கல்வி வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், உடல் பலத்திலும் பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள்.

பெண்களை ஆண்கள் போலவே வளர்க்க வேண்டும் - ஆண் பெண் உடையில் மாற்றம் கூடாது. பெயர் வைப்பதில்கூட யார் ஆண்? யார் பெண்? என்பது தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற கருத்துக்களை தந்தை பெரியாரன்றி வேறு யார் தெரிவித்துள்ளார்கள்?

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள் - என்கிறார் சமுதாய விஞ்ஞானியாகிய தந்தை பெரியார்.

பெண்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டியவை எவை? அதற்கு அருமையான பதில் அறிவுலக ஆசான் அய்யா அவர்களிடமிருந்து வந்துள்ளது.

கும்மி, கோலாட்டங்களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்து, ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கு உண்டாக்கச் செய்ய வேண்டும். (குடிஅரசு 26.4.1931) என்று இன்றைக்கு 82 ஆண்டுகளுக்கு முன் சொன்னார் என்றால் அவர்தம் தொலைநோக்கை அறிஞர்கள்தான் சுவைக்க வேண்டும்.

இன்றைக்கும் பெண்கள் போகப் பொருளாகக் கருதப்படும் கேவலமான பண்பு மூக்கு முட்ட எழுந்து நிற்கிறது. பெண்களைச் சீண்டுதல் பொழுது போக்காகியுள்ளது.

இதற்கு ஒரே வழி - அடுத்தவர்களை நம்பிப் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதல்ல. அந்தக் காலத்தில் தந்தை பெரியார் குஸ்தி, குத்து பழக வேண்டும் என்று சொன்னார் என்றால், இந்தக் காலத்துக்கேற்ப கராத்தே போன்ற பயிற்சிகளைப் பெறுவது அவசியமாகும்.

தேவைப்பட்டால் கொஞ்ச காலத்திற்காவது பெண்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் அளிக்கப்பட வேண்டும். நான்கு இடங்களில் காம வெறிக் காலிகள் சீண்டும் இடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டால், பிரச்சினைக்குத் தீர்வு கை நுனியில் வந்து சேர்ந்து விடுமே.

தங்களுடைய பிரச்சினைகளை, உரிமைகளை எடுத்து வைக்கும் உரிமை பெண்களுக்குத் தேவை; சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு சட்டம் இன்னும் எத்தனை ஆண்டு காலம் நிலுவை எனும் ஊறுகாய்ப் பானையில் கிடக்கப் போகிறது? பெண்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அடுத்தவர் பார்த்துக் கொடுப்பதல்ல உரிமைகள்! உரிமைகள் வெறும் பிச்சைக் காசல்ல; எந்த நியாயமான உரிமையும் இனாமாகக் கிடைத்து விடாது - அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்.

மகளிர் உரிமை நாளில் இந்த உறுதி மொழியை மேற்கொள்ளட்டும் பெண்கள். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. உரிமைகளும் அப்படித்தான்! 9-3-2013

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை


கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணிப் போன்றது.

- தந்தை பெரியார்

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை

- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை - குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்குக் கேவலம் ஒரு புழுவைப் படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.

- ஒரு மேநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே

- வால்விச்மன்

ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.

- பெர்னாட்சா

தமிழ் ஓவியா said...


மதத்திற்கு எதிராக!


தன்னுடைய அடிமைத்தனத்தை உணருகின்ற, தன்னை விடுதலை செய்து கொள்வதற்காகப் போராட கிளர்ந்தெழுகின்ற ஓர் அடிமை, தன்னுடைய அடிமை நிலையில் பாதியை ஒழித்து விடுகின்றான். தொழிற் சாலை அமைப்பினாலும், பெருமளவு உற்பத்தி செய்யும் நவீன தொழில்மூலமும், நவீன நகர வாழ்க்கையிலும் வளர்ந்து வரும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி ஒரு நவீன மதத்துவேச எண்ணங்களை அருவருத்து ஒதுக்கித் தள்ளுகிறான்.

சொர்க்கலோக நம்பிக்கையைப் பாதிரிமார்களும் பூர்ஷ்வா பிற்போக்காளர்களும் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறான். இந்த உலகில் இன்றே இக்கணமே தனக்காக ஒரு நல்வாழ்வை அடைய முன்வருகிறான். நவீன பாட்டாளி வர்க்கம் சோஷலிஸத்தின் பக்கமே நிற்கிறது. மதம் என்ற பனித்திரையை எதிர்த்த போராட்டத்திற்கு விஞ்ஞானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

தொழிலாளர்களை மறு உலக நம்பிக்கையிலிருந்து விடுவித்து, ஒன்றுபடுத்தி இவ்வுலகில் இன்றே ஒரு நல்வாழ்வை அடையப் போராடுகிறது.

- லெனின்

தமிழ் ஓவியா said...


இந்தியாவை நாசமாக்கும் இந்து மதம்


எவ்வளவு முதலீடு போட்டாலும் எவ்வளவு தூரம் அதைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்தாலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மூன்று சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருப்பதற்குக் காரணம் வளர்ந்து வரும் இந்து மத மக்கள் தொகைதான் என்பதாக காலஞ்சென்ற பேராசிரியர் ராஜ்கிருஷ்ணா சொல்லி இருக்கிறார்.

இந்து மதத்திலுள்ள கொள்கைகள்தான்- சில வழி முறைகள்தான் இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதாக அவர் சொல்கிறார். இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று இந்தியப் பொருளாதார நிபுணர்களைக் கேட்டால் அவர்கள், முதலீடு வருவாய் பங்கீடு விவசாயம் காரணம் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இந்து மத சமுதாயத்திலுள்ள அமைப்புகளையே ஒதுக்கிவிட்டு தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பல வகுப்புகளை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இந்தியாவில் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் போட்டுக் குழப்புகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இப்பொழுதும் இந்திய பொருளாதாரம் இருக்கிறது என்றாலும் மக்கள் முன்னேறத் துடிக்கிறார்கள்.

வாய்ஸ் ஆஃப் தி வீக் (நவ.1988)

தமிழ் ஓவியா said...


புத்தரின் ஆத்மா மறுப்பு


புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள்?

கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்கமுடியுமா?

காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்கமுடியுமா?

மூக்கை எடுத்துவிட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?


ஜெபமாலை உருட்டு வதை விடு, அத்துடன் பாட்டை யும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயி களிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக் கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு


இந்து பத்திரிகையில் 10வயது பெண்ணோ அல்லது 12வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே, நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே!

இந்தக் காலத்தில் கூட 10வயது அல்லது 12வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்: 10 அல்லது 12வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத் தனமாய் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் ஓ இந்துவே! 10வயதிலும் 12வயதிலும் கல்யாணம் செய்வது போல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல, அது நிச்சயார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10, 12வயது பெண்களின் நிச்சயார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்?

அது கூட உங்கள் நிச்சயார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.3.1928 பக்கம் -7)

தமிழ் ஓவியா said...


முட்டுக்கட்டை போடும் ராமனைத் தோலுரிப்போம்!



காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை என்று தமிழ்நாடு சுற்றிச் சுற்றி இதற்குள்ளாகவே நின்று போராடும் ஒரு பரிதாப நிலையை என்னென்று சொல்லுவது!

இந்தியத் தேசியம் நமக்கு அளிக்கும் பரிசு இது தானா என்ற வேதனை விலாவைத் துளைக்கிறது.

இவ்வளவுக்கும் நியாய விரோதமாக, சட்ட விரோதமாக எதையும் தமிழ்நாடு எதிர்பார்க்க வில்லை; வலியுறுத்தவும் இல்லை. தமிழர்களுக்கு உரிய நியாயமான, சட்டத்திற்குட்பட்ட உரிமை களுக்காகத் தான் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த அடிப்படை உரிமைப் பிரச்சினைகளில் இந்நாட்டில் சுரண்டிவாழும் உயர்ஜாதி ஆதிக்கக் கூட்டமோ, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அந்தத் தமிழ் மக்களின் உழைப்பை - பொருளைச் சுரண்டித் தின்னுகிறோம் - தின்ற சோற்றுக்காவது நன்றியோடு இருப்போம் என்கிற அளவுக்கு இல்லாமல் இருந்தால் கூடப் பரவாயில்லை; நரி எப்படியோ போய்த் தொலையட்டும்; விழுந்து பிராண்டாமல் இருந்தாலே போதும் என்று நினைப்பதற்கு இடமில்லாமல், தமிழர்களின் உரிமை உணர்வுகளுக்கும், போராட் டங்களுக்கும் எதிராகக் காட்டிக் கொடுக்கும் பிணம் தின்னும் கழுகுகளாக அல்லவா நடந்து கொள்கிறது.

நம்முடைய போராட்டம் இந்திய அரசை நோக்கி இருக்கிற காரணத்தால், இவர்கள் பக்கம் நம் பார்வை திரும்பாது என்கிற தைரியத்தில், கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி, இதையும் தமிழ் மக்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இவர்களைக் கொஞ்சம் கண்காணியுங்கள் என்று கூற வேண்டிய நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வன்முறையில் அல்ல - தர்க்க வாதங்களின் அடிப்படையிலேயே தகர்க்க வேண்டும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டம் - ஒன்றரை நூற்றாண்டைக் கடந்தது. இதில் தேவையில்லாமல் பார்ப்பன சக்திகள் மதத்தைக் கொண்டு வந்து போட்டு முட்டுக்கட்டை போடுகின்றன.

மதமும், பக்தியும் அவரவர்களின் வீட்டுக் குள்ளேயே இருப்பதுபற்றிக் கவலையில்லை. பொதுப் பிரச்சினையில் மக்களின் வளர்ச்சிப் பிரச்சினையில், வாழ்வாதாரப் பிரச்சினையில் கொண்டு வந்து குறுக்கே போட்டால் அதனை உடைத்துத் தள்ளு வதைத் தவிர, வேறு மார்க்கம் இருந்தால் மேதாவிமார்கள் அருள்கூர்ந்து சொல்லட்டும்.

17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பாலம் கட்டினான் என்று ஒரு கும்பல் பாழடைந்து போன தங்கள் மூட மதக் கருத்தைச் சொல்லுவதும், இந்தியாவிலேயே மிகப் பெரிய அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம் அதற்குச் செவி சாய்த்துக் காலம் கடத்துவதும் ஏற்புடையதுதானா? நாம் 2013இல் இருக்கிறோமா என்று நமது உடம்பை நாமே கிள்ளிப் பார்த்து சோதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெட்கக் கேடு! மானக் கேடு!!

மற்ற மதங்களைப் பற்றிப் பேசுவதில்லையே என்று மாய்மாலம் பேசும் கபோதிகள், மற்ற மதங்கள் இப்படியா மக்களின் பொருளாதார வளர்ச்சியோடு, வேலை வாய்ப்பு திட்டத்தோடு மல்லுக்கட்டி நிற்கின்றன.

இதில் மிகப் பெரிய அயோக்கியத்தனம் என்ன வென்றால், சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதலில் ஒப்புதலும், கருத்துருவும், தொழில் நுட்ப ரீதியான அனுமதியும் வழங்கியவர்களே இந்தப் பிஜேபியினர். அந்தப் பிஜேபியினர்தான் இப்பொழுது இந்தப் பிரச்சினையில் ராமனைக் கொண்டு வந்து போட்டுக் குளிர் காய்கின்றனர்.

காலந்தாழ்ந்தாலும் இந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்கு எந்த விலையும் கொடுப்போம் என்பது ஒருபுறம்; அதே நேரத்தில் இந்து மதம் அதன் நம்பிக்கைகள் மக்கள் வளர்ச்சிக்குக் கேடானவை. முட்டுக்கட்டையானவை - முடை நாற்றம் எடுக்கும் கசமாலக் குப்பைகள் என்பதை நார் நாராகக் கிழித்து மக்கள் மத்தியிலே தோரணங்களாகத் தொங்க விடுவோம் - அந்த வகையிலே இந்த சனாதனப் பார்ப்பனக் கும்பல் வகையாக நம்மிடம் வந்து மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்த தொடர் பிரச்சாரத் திட்டத்தைத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு அறிவித்துவிட்டது தோழர்களே தயாராவீர்! தமிழர்களே ஒத்துழைப்புத் தாரீர்!

தமிழ் ஓவியா said...


மாணவிகள்


தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி மாநிலங்களில் இப்பொழுது +2 தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும் மாணவர் மற்றும் மாணவி களின் எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர்; இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்து 746; மாணவர் களின் எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 788.

இந்தப் புள்ளி விவரம் தந்தை பெரியார் பார்வையில், திராவிடர் கழகத்தின் பார் வையில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

பெண்களை ஏன் படிக்கக் கூடாது என்று கட் டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக் குவதற்காக (குடிஅரசு 16.11.1930) என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பாகும்.

ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் முதலில் பெண்ணைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொன்னவரும் தந்தை பெரியாரே!

அதற்கான காரணத் தையும் அவர் கூறியுள்ளார். சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெய ரையே யாருக்கு உபயோகப் படுத்தலாம் என்றால் முதலில் நமது பெண்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெ னில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர் அவர் களுடைய தாய்மார்களே! அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார் களே தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (குடிஅரசு 1.5.1927)

இந்தக் கருத்தை யெல்லாம் 86 ஆண்டு களுக்கு முன் தந்தை பெரியார் சொல்லியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர் கள், தம்மால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளின் சார்பில் தொடங்கப்பட்ட கல்விக் கூடங்கள் எல்லாம் பெரும்பாலும் பெண்களுக்கே என்பதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும்.

அடுப்பூதும் பெண் களுக்கு படிப்பு எதற்கு? என்று ஒருபழ மொழியையே இங்கு உண்டாக்கி வைத் துள்ளனர்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அவர் கண்ட இயக்கம் பாடுபட்டதன் பல னாகவும், காமராசர் போன் றவர்கள் ஆட்சிப் பொறுப் புக்கு வந்ததாலும் இங்கே கல்விப் புரட்சி ஏற்பட்டது.

பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க ஆரம்பித்ததற்கு பிறகு அவர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் +2 தேர்வுகளில் மாணவர் களைவிட சதவிகிதத்தில் அதிக தேர்ச்சி பெறுவோர் பெண்களாகவே இருந்து வருகின்றனர். கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்று ஒரு பெண் ணுக்கு இலாகா பிரித்து வைத்திருந்தாலும், பெண்கள் கல்வி பெறாத நிலையில், கடவுளைக் கிழித்தெறிந்த கிழக்குச் சூரியனாம் தந்தை பெரியார் சகாப்தத்தில் பெண் கல்வி ஓகோ என்று ஓங்கி நிற்கிறது.
மேலும் வளரட்டும்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இணையதளத்தில் ஈழத் தமிழர்களின் இதயக் குரல்கள்!

சமீபத்தில், ஈழத்தில் உள்ள 89 தமிழ் நகரங்களின் பெயர்கள் சிங்கள அரசால் மாற்றப்படவுள்ளது என்ற விடயத்தை கலைஞர் அய்யா அவர்கள் ஒரு கடிதமாக எழுதி இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்தார். பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வாழ் ஈழத் தமிழர்களுக்கு இச்செய்தி அதிர்வு இணையம் ஊடாகக் கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இச்செய்தியை வாசித்ததோடு, இவை ஆங்கில இணையங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. கலைஞர் அய்யா அவர்கள் கடிதமும் அய்ரோப்பிய ஆங்கில இணையங்களில் வெளியாகியுள்ளது.

தமிழில் வெளியான செய்திகளுக்கு கிடைக்கப் பெற்ற சில பின்னூட்டங் களை நாம் இங்கே தருகிறோம். ஈழத் தமிழர்கள் இன்று என்ன சொல் கிறார்கள் என்று பார்ப்போமா?

-சுதாகரன் (ஜெர்மனி)



உங்கள் செய்தியைப் பார்த்தேன். மிகவும் கவலையாக உள்ளது. இனி நான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட இருக்கிறதா? என் பிள்ளைகளுக்கு நான் இனி எங்கே பிறந்தேன் என்று சொல்ல முடி யாத நிலை. ஆனால் இதனைச் சுட்டிக் காட்டி கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எனது நன்றி!

- ஜெயசங்கரி (சுவிஸ்)

சில இணையத்தின் செய்திகளை பார்த்து, நானும் கலைஞர் அவர்களை குறைசொல்லி இருக்கிறேன். ஆனால் அவர் இப்போது செய்வது எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதியை தருகிறது.

- திருநாவுக்கரசு (லண்டன்)

2009-ல் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குறை கூறுவதைவிட்டு விட்டு, இனியாவது கலைஞர் அய்யா செய்வதை ஏற்று அவருக்கு எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்!

- ஷோபனா (லண்டன்)

நல்ல விசயத்தை கலைஞர் அய்யா அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வளவு வயதாகியும் அவர் செயல்படும் விதம் பிரமிக்க வைக்கிறது. இதனை வேறு தமிழக தலைவர்கள் ஏன் செய்யவில்லை?

- நிதர்ஷன் (அமெரிக்கா)

89 தமிழ் நகரங்களையும் சிங்களத்தில் மாற்றினால், இனி அம்மாவை நாம் அம்மே என்று சிங்களத்தில் தான் கூப்பிட வேணும் போல இருக்கே அண்ணா. இதில் கலைஞர் அவர்கள் செய்த வேலை பாராட்டதக்கது. அவராவது கடிதம் எழுதினார். அங்கே சீமான் எங்கே? வைகோ எங்கே? இல்லை.. பழ. நெடுமாறன்தான் எங்கே? இவர்கள் ஈழப் பிரச்சனையிலாவது இணைய மாட்டார்களா? எங்களுக்கு ஒரு விடிவு வராதா?

- நிலாசுதன் (முன்னாள் போராளி) ஈழம்

மட்டக் களப்பில் நாம் காலம் காலமாக கூப்பிட்டு வரும், குடுமி மலை என்னும் இடத்தை தொப்பிகல என்று சிங்களம் மாற்றி விட்டதே. இப்ப தமிழ் ஊடகங்கள்கூட தொப்பிக்கல என்றுதான் எழுதுகிறார்கள். எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் நல்ல வேளையாக கலைஞர் அய்யா அவர்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். அவரால் ஏதாவது நடந்தால் நாங்கள் இங்கே நிம்மதியாக வாழலாம்.

தமிழ் ஓவியா said...


கடவுள் மறுக்க மாட்டார்!


கடா வெட்டுகிறேன், மொட்டை போடுகிறேன், அலகு குத்துகிறேன் எனப் பக்தர்கள் வேண்டுவதற்குப் பதிலாக இப்படி வேண்டினால் என்ன ?

''கடவுளே எனது வேண்டுகோள் நிறைவேறினால் முதியோர் இல்லத்திற்கு 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுக்கிறேன், ஒரு ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்கிறேன், புற்றுநோய் தடுப்புக் கழகத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் கொடுக்கிறேன் என வேண்டிக் கொள்ளலாமே? ஏழை பக்தராக இருந்தால் சாலையில் உள்ள பள்ளங்களை மூடுகிறேன், சாலையோரம் 10 மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கிறேன்", என வேண்டலாம் தானே ?

உங்கள்கடவுள் என்னமறுக்கவா போகிறார்?

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...


அறிவு தழுவிய அணுகுமுறையால்... அனைத்தையும் வெல்லலாம்!


அய்யா அவர்கள்மீதும்... தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் மீதும் திராவிடர் கழகக் கொள்கைமீதும் நிரம்ப மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும், விடுதலை எழுத்தாளர் மானமிகு கி.இராமநாதன் அவர் களின் மகன் இரா. ராசா என்பவர் புதிதாக ஒரு வீடு கட்டி புதுமனை புகுவிழா கடந்த 7.2.2013 அன்று நடத்தினார்.

தந்தையார் வழியிலே.. கழகத் தலைவர்களை வைத்து திறப்பு விழா செய்ய வேண்டுமென அவர் விரும் பினாலும், அவரது இணையரின் வழி உறவினர் அதனை ஏற்க வில்லை!.. அய்யரை வைத்துத்தான நடத்த வேண்டும் எனக் கூறி.. அய்யரையும் வரவழைத்து விட்டனர்.

பக்கத்து வீடாக இருந்தாலும், அதில் இராமநாதன் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் மீண்டும் வற்புறுத்தவே அவர், கோபப் படாமல்.. இருந்தால், நான் சில நிமிடங்கள் அய்யரோடு பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.

அவர்களும் அதற்கு சம்மதிக்கவே.. மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யரிடம் சென்று.. அமைதியாக அய்யா! உங்கள்மீது எனக்கு கோபமில்லை, ஆனால், இந்த மந்திரம் சடங்குகளில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. இந்த வீட்டை மிகுந்த சிரமத்திற்கிடையே கட்டி, முடித்தது என் மகனுடைய அயரா உழைப்பும்..

கட்டிய கட்டிடத் தொழிலாளர்களின் கூட்டு முயற்சியும்தான்!.. ஆனால், எதிலுமே சம்பந்தமில்லாத நீங்கள், இப்போது வந்திருக்கிறீர்கள்.. நீங்கள் இங்குள்ளதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், எங்களுக்குப் பிடித்தமில்லாத காரியத்தில் மட்டும், ஈடுபடாதீர்கள். இது எனது அன்பான வேண்டுகோள் என்றார்!
உறவினர்கள் திகைத்து நின்றனர். ஆனால் எதுவும் பேசவில்லை. இவர் பேசியதும் சரியென்றே உணர்ந்தனர்!

அய்யர், உடனே எழுந்தார். நீங்கள் யார் என்பது எனக்கும் தெரியும். உங்களுடைய உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் வந்தேன். உங்கள் பிரியப்படியே பேஷா செய்யுங்கோ.. நேக்கும் இதிலே பூரண சம்மதந்தான் என்ன செய்யறது? வழி வழியா வந்துடுத்து...நேக்கு இதை விட்டா வேறு எதுவும் தெரியாது. அதனாலே தான் இவா கூப்பிட் டதும் வந்துட்டேன்.. தப்பா நினைக் காதேள்...! என்று சொல்லிவிட்டு...

அவர் பொருள்களை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே புறப்பட்டு விட்டார். பிறகு, என் நண்பர், வந்திருந்து, வியப்போடு இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள், உறவினர் அனை வருக்கும் இனிய விருந்து தந்து மகிழ்ந்தார்! கொரநாட்டுக் கருப்பூர் ஒரு புதுமையை அன்று சந்தித்தது!

அறிவு தழுவிய இனிய அணுகு முறையால் அனைத்தையும் வெல்லலாம் என்பதை என் நண்பர் இராமநாதன் தனது செய்கையால் மெய்ப்பித்துக் காட்டியதை அனை வரும் பாராட்டி மகிழ்ந்தனர்!

- நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


பொன் மொழிகள்


மிருகங்களைப் போல நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது. - காந்தியார்

நண்பனைப் பாராட்ட வேண்டியிருந்தால் பலர் முன்னிலையில் பாராட்டுங்கள். - ஜவஹர்லால் நேரு

மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையைப் பாதுகாக்கும். - வள்ளலார்

எவருடைய மனம் குழப்பம் அடையாமல் இருக்கிறதோ, அவருக்கு அச்சம் என்பதே சிறிதளவும் இல்லை. - புத்தர்

ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை. - அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர்பற்றி..


கி.வீரமணி அய்யாவை நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் சித்ரகுப்தன் வீரமணி Key
என்கிறாரே...?

அப்துல்கனி Ex. . கவுன்சிலர், விழுப்புரம்

உண்மைதானே... சமூகநீதி கஜானாவின் சாவி தானே அய்யா அவர்கள்!

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டு 1994ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் குடியரசு தலைவர் மேதகு சங்கர் தயாள் சர்மா அவர் களால் ஒப்புதல் வழங்கப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஒப்புதல் பெறப்படுவதற்கு முன்பு எத்தனை தடைகளையும் முட்டுக் கட்டைகளையும் சந்தித்தது என்பதையும், தமிழக முதல்வர் அந்த தடைகளை சட்ட ரீதியாக உடைத்தெறிந்திட அய்யா கி.வீரமணி அவர்கள் எத்தகைய பேருதவிகளைச் செய்து பக்கபலமாக இருந்தார் என்பதையும் வரலாற்று ஏடுகள் சாட்சியங் கூறிக் கொண்டிருக்கின்றன.

மேலும், அச்சட்டத்தை 31 (சி) இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திடுவதற்காக அய்யா எவ்வளவு கடுமையாக உழைத்தார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்டு 13 வரை சமூகநீதி பயணம் மேற்கொண்டு அதன் பலனாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 1994ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி விவாதம் எதுவுமின்றி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் அய்யாவை சமூகநீதி கஜானாவின் தங்கச் சாவி (கீ) என்றே கூறுவார்கள்.

(நன்றி: ராஜாளி பிப்ரவரி 2013)

தமிழ் ஓவியா said...


கம்யூனிச நாடுகளின் கேவலத்தைப் பாரீர்! அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறார்களாம்!

ஜெனிவா, மார்ச் 9- மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை கம்யூனிஸ்டு நாடுகள் எதிர்க்கும் என்று கூறியுள் ளனர்.

இதன்மூலம் கம்யூனிசம் பிற்போக் குத்தனத்துக்கு இனப்படுகொலைக்கும் துணை போகும் வரலாற்றுப் பிழை பதிவாகி விட்டது.

இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் தீர்மானம் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை யத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக் கிறது. 'இலங்கையில் நல்லிணக்கத் தையும் பொறுப்பு கூறும் கடமையை யும் மேம்படுத்துதல்" எனும் தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கையின் பொறுப் புக் கூறும் கடமைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையின் யோசனையை இத் தீர்மானம் வரவேற்றிருக்கிறது. இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அமெரிக்காவின் தீர்மானத் தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் ஒடுக்குமுறை களும் நீடித்து வருவதற்கும் அமெரிக்காவின் தீர்மானம் கவலை தெரிவித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நேற்று முன்தினம் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கொடுக் கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவாதத்துக்காக நேற்று ஜெனிவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் தீர்மானத்தை ரஷ்யா, பாகிஸ் தான், சீனா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்த தீர்மனத்தில் உள்ள சொற்களை மாற்ற வேண்டும் என்பது இந்நாடுகளின் கோரிக்கை. இதே கருத்தை சியராலி யோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். ஆனால் கனடா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்கா வின் தீர்மானத்தில் இன்னமும் கடுமையான நிபந்தனைகள் இடம் பெற வேண்டும்.. மேலும் வலுவான தாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


உழைப்பு



எவனெவன் தனது உழைப்பை வயிற்றுச் சோற்றுக்கு மட்டும் கொடுக்கின்றானோ அவனெல்லாம் கூலியாள்; வயிற்றுச் சோற்றுக்கு வசதி வைத்துக்கொண்டு மேலும் உழைப்பவன் முதலாளி.
(விடுதலை, 11.4.1947)

தமிழ் ஓவியா said...


அன்னையார் வாழுகிறார்! வாழ்கிறார்!! என்றும் வாழ்வார்!!!


தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அவருக்குச் செயலாளராகவும், செவிலி யராகவும், சிறப்பான தொண்டு புரிந்தவருமான தொண்டற வீராங்கனை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது 93ஆவது பிறந்த நாள் இன்று.

தியாகத்தில் புடம் போட்டு, தன் பொருள், உயிர் எல்லாவற்றையும் தந்தை பெரியார் என்ற மானுடம் காணா மகத்தான புரட்சியாளர் அவர்களுக்கும் அவர் தந்த கொள்கைக்கும், அவர் கண்ட இயக்கத்திற்கும் தன் வளமை, இளமை, வலிமை, முதுமை, உழைப்பு, தொண்டு அனைத்தையும், தந்து, வசைச்சூறாவளியும் அவதூறு சுனாமிகளும் சுழன்றடித்த வேளையிலும், சிறிய சலனம்கூட காட்டாது, மானம் பாராத தொண்டற மங்கை நான், எனக்கு எல்லாமும் என் தலைவரும் கொள்கையும், இயக்கமும், தான் என்று கூறி, உடல் நலிந்தாலும் உள்ளத்தின் வலிமையால் தந்தையின் மறைவுக்குப் பின்னரும் அவர் கண்ட இயக்கமாம் திராவிடர் கழகத்தின் தலைமையேற்று அய்ந்து ஆண்டுகள் வழி நடத்தி, அனைத்திந்தியாவும் அதிர்ச்சி அடைந்த இராவண லீலா நடத்தியும், நெருக்கடிக் காலத்தின் உரிமைப் பறிப்புகளுக்கும் ஈடு கொடுத்தும், பெரியார் தொண்டர்களைக் காத்த எம் மாறாத பாசத்திற்குரிய அன்னையாரின் தொண்டு ஈடு இணையற்றது; ஒப்பிட முடியாத உயரம் சென்ற ஒன்று!

தன் பொருள், தனக்கு தலைவர் துணைவர் என்ற முறையில் ஒதுக்கியது எல்லாமும் எல்லாருக்குமே என்று அறிவிக்கும் வகையில், ஒரு அறக்கட்டளை யாக்கி, பெரியார் மணியம்மைக் கல்வி அறப்பணிக் கழகம் ஒன்று நிறுவினார்.

அதன் சார்பில்தான், இன்று தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரி, தஞ்சை வல்லத்தில் பெரியர் - மணியம்மைப் பல்கலைக் கழகம் என்று கல்வி நிறுவனங்கள் ஆல்போல் தழைத்தோங்கி, வளர்ந்திட கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருகிறது அன்னையாரின் அறக்கட்டளை!

அன்னையாரின் அரிய, மேற்பார்வையோடு அய்யாவால் 55 ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்டு, இன்று ஏழை, எளிய ஆதரவற்ற குழந்தைகளின் அபய இல்லமான நாகம்மையார் குழந்தைகள் இல்லம் பலகட்ட வளர்ச்சி பெற்று, வரலாறு படைத்துக் கொண்டுள்ளது.

அன்னையின் தொண்டறத்தின் துளிகள் அவை; சுயமரியாதை ஒளி வீச்சுகள் அவை.

அந்தத் தொண்டற வீராங்கனை மறையவில்லை - வாழுகிறார்.

கழகத் தொண்டர்களின் கட்டுப்பாட்டின் மூலம், குழந்தைகளின் மலர்ந்த சிரிப்பின் மூலம், கழகம் குவிக்கும் வெற்றிகள் மூலம், வாழுகிறார்! வாழுகிறார்! வாழ்ந்து கொண்டே இருப்பார்.

வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!!
வளர்க பகுத்தறிவு - தொண்டறம்!!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

10.3.2013

சென்னை

தமிழ் ஓவியா said...


மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி!


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 1883ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் பிறந்தார் ராமாமிர்தம். குடும்பத்தின் வறுமை யைத் தாங்க முடியாத அவரின் அம்மா, ஒரு தேவதாசியிடம் விற்றுவிட்டார். நல்ல சிந்தனைகளும் முற் போக்கு குணங்களும் பெற்றவராக இருந்த ராமாமிர்தம், விரைவில் அங் கிருந்து வெளியே வந்தார்.

தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல் பட்டார் ராமாமிர்தம். எழுதினார். நாடகம் போட்டார். ஏராளமான தேவதாசிப் பெண்களை மீட்டெடுத்தார். குழந்தை திரு மணத்தை எதிர்த்தார். பெண் கல்வியை வலியுறுத்தினார். இந்திய தேசிய காங் கிரஸில் சேர்ந்து பணி செய்தார். ஏராள மான சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைத்தார்.

1925இல் பெரியார் காங்கிரஸிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம் பித்த போது, ராமாமிர்தம் அந்த இயக்கத் தில் சேர்ந்தார். சுயம்புபிள்ளையை சுய மரியாதை திருமணம் செய்துகொண்டார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை ஒழிப்பைச் சட்டமாகக் கொண்டு வருவதற்கு ராமாமிர்தம் துணையாக நின்றார். 1936இல் தன் வாழ்க்கையையே நாவலாக எழுதி, தாசிகளின் மோசவலை என்ற பெயரில் வெளியிட்டார்.

இதன் மூலம் தாசிகளின் அவலநிலை வெளிச் சத்துக்கு வந்தது. மூட நம்பிக்கைகளை எதிர்த்தும், தேவதாசி ஒழிப்பு முறையை ஆதரித்தும் நாடகங்கள் நடத்தி வந்தார். ஒரு நாடகத்தின் போது, மத வெறியர்கள் அவரது கூந்தலை அறுத்தனர். அதன் பிறகு கடைசி வரை அவர் கூந்தலை வளர்க்கவே இல்லை.

1937 முதல் 1940 வரை இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றார். உறையூர் முதல் சென்னை வரை 42 நாள்கள் நடந்து சென்று, 82 கூட்டங்களில் இந்தி எதிர்ப்பு குறித்துப் பேசினார். இதற்காக 6 வா ரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி பல்திறமைகள் கொண்ட ராமா மிர்தம் அம்மையார் 1962இல் மறைந்தார்.

தமிழ் ஓவியா said...

இலங்கையைச் செல்லமாகக் கண்டிக்கும் இந்திய அரசு!


இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மார்ச் 12 - முழு வேலை நிறுத்தம்!

தமிழ்நாட்டு மக்களே ஆதரவு தாரீர்! டெசோ பயணம் தொடரும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

இலங்கை அரசைச் செல்ல மாகக் கண்டிக்கும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, மார்ச்சு 12ஆம் தேதியில் தமிழ் நாட்டில் முழு வேலை நிறுத்தத் திற்கு ஆதரவு தர வேண்டும் - டெசோ தன் பயணத்தை வெற்றிப் பயணமாக முடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக தன்னால் இயன்ற அத்துணையையும் செய்து கொண்டே இருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குக் காரண மான இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குக் கண்டனம், போர் குற்றவாளியாக அவரை அறிவித்து சர்வதேச சமூகம் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும்; ஈழத் தமிழர் வாழ்வு உரிமையை மட்டுமல்ல; தமிழ்நாட்டுத் தமிழக மீனவ சகோதரர் களின் மீன்பிடி வாழ்வாதாரத்தையும், சிங்கள கடற்படை பறித்தல், தாக்குதல், மீன் வலைகளை அறுத்தல், படகுகளைப் பறிமுதல் செய்தல், இலங்கைச் சிறைகளில் அவர்களைக் கொண்டுபோய் அடைத்தல், சித்ரவதைக்கு ஆளாக்குதல் போன்ற பல அக்கிரமங்களை அன்றாடம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக செய்துவருகின்றது.

இலங்கையை செல்லமாகக் கண்டிக்கும் இந்தியா!

நமது வாக்குகளால் ஆளும் மத்திய அரசு, இந்திய அரசு கவலை தெரிவிக் கிறோம் என்று, பாம்புக்கும் நோகாமல், பாம்பு அடித்த கோலுக்கும் நோகாமல் என்ற பழமொழிக்கொப்ப இலங்கை அரசை செல்லமாய் கோபித்துக்கொள்வதுபோல் காட்டிக்கொண்டு மீனவர்களின் வயிற் றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது. இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங் கள்மீது, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கடமைக்காக சர்வதேச சமூகத்தின் - பன்னாடுகளின் மன சாட்சியை நாம் தட்டி எழுப்ப வேண்டும்; அதன்மூலம்தான் பரிகாரம் தேடவும், தமிழர் மீள்குடியேற்றம், சிங்கள மயமாக் குதலைத் தடுத்தல், முள்வேலிக்குள் முடக்கப்பட்டுள்ள எம் எஞ்சிய தமிழ்ச் சொந்தங்களின் மான வாழ்வை - உரிமை வாழ்வை மீட்டெடுப்பது சாத்தியம்.

அய்.நா.விலும் முறையீடு

இந்தப் பணிகளுக்காகத்தான் நியூ யார்க் சென்று அய்.நா. சபையின் பொறுப்பாளர்களிடம் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமை யில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறை வேற்றிய முக்கிய வேண்டுகோள்களை, தீர்மானங்களை அளித்தனர். பொது வாக்கெடுப்பு நடத்தி, ஈழத் தமிழர்களின் எதிர்காலமாவது பாதுகாக் கப்படக்கூடியதாக்கப்படும் என்று போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எம் ஈழத் தமிழ்ச் சொந்தகளுக்கான முயற் சியை டெசோ சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு அவர்களும் நேரில் சென்று விளக்கங்களை அளித்தனர். அதுபோலவே, அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களை ஜெனிவாவில் சந் தித்து டெசோ தீர்மானங்களை அளித்து, செய்யப்பட வேண்டியவற்றை வலியுறுத் தினர். அய்.நா. மனித உரிமை ஆணையத் தின் உறுப்புகளான 47 நாடுகளின் தூதுவர்களில் பெரும்பாலோனோர் களை சந்தித்து அடுத்த கூட்டம் (தற்போது நடை பெற்று வருகிறது) துவங்குவதற்குமுன் ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவுகோரி டெசோ குழுவினர் தளபதி ஸ்டாலின், தொல்.திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், ஆகியோரும், நானும், திமுக நாடா ளுமன்ற உறுப்பினர்களும் புதுடெல்லியில் இடைவிடாது இப்பணிகளைச் செய்தோம்.

இரத்த வெறியன் ராஜபக்சேவே திரும்பிப் போ!

அதற்கடுத்து, வடநாட்டிற்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சே இந்திய மண்ணில் இரத்தக்கறை படிந்த கால்களை வைக்க இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, திரும்பிப் போ, என்றும், இந்த இட்லரின் வாரிசுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? என்றும் டெசோ கிளந்தெ ழுந்து தலைநகரம் காணாத எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டத்தை கருப்பு உடை அணிந்து 90 வயது மூத்த தலைவரான டெசோவின் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையில் வாய்மைப் போருக்கு என்றும் இளையாராகி களம் கண்டனர். அதன்பிறகு, ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மீனவர் சமுதாயத்திற்கு இலங்கை அரசால் நிகழ்த்தப்படும் கொடுமைகளைத் தடுக்கும் வகையில் பிப்ரவரி 18, 19 ஆகிய நாட்களில் டெசோ அமைப்பின் சார்பில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாங்கள் வரலாறு காணாத மக்கள் வெள் ளம் கூடிய ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தினோம்.

முற்றுகைப் போராட்டம்!

தமிழ் ஓவியா said...


அதற்கடுத்து, கடந்த மார்ச் 5ஆம் தேதி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்ட இலங்கை அரசின் சென்னைத் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக்கோரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். சுமார் 30,000 முதல் 50,000 பேர் வரை திரண்டனர். அவர்களைக் கைது செய்யத் திணறி சென்னையில் சுமார் 10,000 பேர்களை மட்டுமே கைது செய்தது காவல்துறை. சுமார் 5, 6 மணி நேரம் இராஜரத்தினம் ஸ்டேடியம் மரத்தடியில் அமர்த்தி, சிறை வைக்கப்பட்டோம். அன்றுமாலை விடுதலை செய்யப்பட்ட வுடன் டெசோ தலைவர் கலைஞர் தலைமையில் கூடி, உடனே மீண்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்கு தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி பொது வேலை நிறுத்தம், முழு அடைப்பு நடத்தி, இதில் ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று திரண்டுள்ளோம் என்று காட்டவே அறவழியில் நமது உணர்வுகளைக் காட்டிடவே வேலை நிறுத்த அழைப்பினையும், அறிவிப்பினையும் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் விவாதம் - டில்லியில் மாநாடு

மார்ச் 7ஆம் தேதி டெல்லியில் டெசோ சார்பில் அய்.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் - அழுத்தமானதாகவும், பயனளிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் நடந்த டெசோ மாநாட்டின் தீர்மானங்களை இந்திய அளவில் கொண்டு சென்று, கருத்து ஆதரவு தேடவுமான கருத்தரங்கத்தினை டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடத்தினோம். முன்பு கலந்துகொண்டவர்களைவிட சில கட்சிகள் கூடுதலாகத்தான் கலந்துகொண்டன. இதற்கிடையில், தி.மு.க. கொடுத்த இலங்கை ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய விவாதம் மக்களவையில் அதே மார்ச் 7இல் (எதிர்ப்பாராத விதமாக அன்றே பொருத்தமாக) நடந்தது. அதில் தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு பேசத் துவங்கி, அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைக் கட்சி, பி.ஜே.பி. மட்டுமல்லாது அகில இந்திய தேசிய கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு, மிகப் பெரும் அளவில் அவையே குலுங்கும் வண்ணம் பேசி, இந்திய அரசை வலியுறுத்தி, மிகப்பெரிய அழுத்தமும் கொடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு!

வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டைக் கூறாமல், ஏதோ பொத்தாம் பொதுவாக, பொது அறிவுரைகளை இலங்கை அரசுக்கு இதம் அளிப்பது போன்று பிரச்சினையின் ஆழத்தை அறியாது, அவையின் கொந்தளிப்பை அடக்குவதற்குப் பதிலாக, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்வகையில் ஏதோ பேசினார். தி.மு.க. மட்டுமல்ல; அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல தேசிய கட்சிகள் உட்பட வெளிநடப்பு செய்தது - ஒரு பெரிய வரலாற்றுத் திருப்பம் - இந்திய நாடாளுமன்ற வரலாற்றில்! இதற்கு மூல காரணமாக அமைந்தது தி.மு.க. - இதற்குப் பிறகு அன்று மாலை ஏற்கெனவே திட்டமிட்டபடி டெசோ கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத் அவர்களும், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி, தேசிய மாநாட்டுக் கட்சி, தி.மு.க. விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தலைவர்கள் முக்கியக் கருத்துக்களை வழங்கினர். இவையெல்லாம் நாடகமா?

இவையெல்லாம் நாடகம் என்றும், இதனைப் பின்னடைவு என்றும் கூறுவோர் எவராயினும் அவர் களுக்கு ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு கிட்டுவதில் உண்மையான அக்கறை இல்லாமல், அரசியல் செய்ய நமது இந்த ஆயுதம் நம்மிடமிருந்து போய்விடுவதா? என்ற உள்ளெண்ணத்தில்தான் பொது எதிரி ராஜபக்சேவை மறந்துவிட்டு, இங்கேவர உள்ள தேர்தல் களத்திற்கு மூலதனம் - சீட்டுப் பிச்சைக்கான ஒத்திகைகளை நடத்திக்கொண்டு இந்த எழுச்சியை திரையிட்டு மறைத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு, தி.மு.க., தி.க., மற்றும் டெசோ மீது சேற்றை வாரி இறைக்கும் ஊடகப் படைகளின் துணையோடு முயற்சி செய்து பார்க்கின்றனர். அவர்களைப் பற்றி டெசோ கள வீரர்கள் துளியும் இலட்சியம் செய்யாமல், குடிசெய்வார்கில்லை பருவம் என்ற குறள் நெறிக்கேற்ப மான அவமானம், பாராட்டு, வசவுகள் பற்றிக் கவலைப்படாமல், டெசோவின் போராட்டங்கள் தொடருகிறது; என்றும் தொடரும்.

டெசோவின் பயணம் தொடரும்!

உண்மை உணர்வாளர்களே, வீண் விமர்சன வேலைக்கு இது நேரமல்ல; விதண்டாவாதங்களை விலக்கி வையுங்கள் என்பதே எங்களின் வேண்டுகோள்! அப்படி அவர்கள் வைக்காவிட்டாலும், இப்படை தமது பெரும் பயணத்தை என்றும் ஏற்றத்தோடு, எழுச்சியோடு நடத்திடும் - விரைந்திடுவோம். இலக்கு நோக்கி அதில் வெற்றியும் பெற்று விடுவோம் என்பதிலும் அய்யமில்லை. நமது குறி - இலக்கு - மட்டுமே!

ஆகவே தமிழினப் பெரு மக்களே! 12ஆம் தேதியை மறவாதீர். முழுவேலை நிறுத்தத்தை வெற்றியாக்கித் தாரீர்! தாரீர்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

10.3.2013

சென்னை

தமிழ் ஓவியா said...


வாழ்க நீ அம்மா, வையத்தின் நாட்களெல்லாம்!

எங்கள் அன்னையே,
இலட்சிய தீபமாய்
எங்கள் இதய மேடையில்,
என்றும் ஒளிரும்
அணையா விளக்கே!
பெரியார் புரட்சி
எரிமலைதான்
சிந்தனை வீச்சிலும்,
செயல்பாட்டிலும்!
மூப்பு எனும் நோய்
முட்டிச் சாய்க்காமல்
முழு வாழ்வையும் முட்டுக் கொடுத்து நிமிர்த்திய நித்திலமே!
தலைவரை 95இல்
கரை சேர்த்து
58இல் தன்னை
மூழ்கடித்துக் கொண்ட
தியாக தேசத்தின்
தலை நகரே!
நாத்திக இயக்கத்தைத்
தலைமை தாங்கி
நானிலமே அதிர
நடத்திக் காட்டிய
முதல் பெண்மணி எனும்
முத்திரையைப் பொறித்த
மூச்சுக் காற்றே!
உங்கள் எளிமையே
எங்கள் வலிமை!
உங்கள் தியாகமே!
எங்களின் பாதைக்கு
எச்சரிக்கை விளக்கு!
இராமன் கூட்டம்
இந்த மண்ணில்
இடம் பிடிக்க
இயன்ற மட்டும்
எகிறிப் பார்த்தும்
இயலவில்லை;
என்ன காரணம்
தெரியமா?
அன்னையே நீ
அன்று மூட்டிய
இராவண லீலா!
அந்த நெருப்பை
அணையவிடோம்!
முடிந்தால் அந்த
நெருப்பு நதியை
வடக்குப் பக்கமும்
திருப்புவோம்!
ஆமாம் இந்தியாவை
அடிமைப்படுத்த
ஆரியக் கூட்டம்
ராமன் வில்லை
கையில் எடுக்கிறது
இராவண லீலா எனும்
தத்துவத்தின்
எரிதழல்தான்
சாம்பல் ஊருக்கு - அதனை
அனுப்பி வைக்கும்
அணுகுண்டு!
சமுதாய தடத்தில் நீ
சமைத்துக் கொடுத்த
சமருக்கான அந்த ஆயுதம்
அரசியலுக்கும்
தேவைப்படுவதை
என்னென்போம்!
காவிமயமாக்க
கனவு காணும்
ஆரியத்தின் கர்ப்பத்தை
அடி தெரியாமல்
அழிக்கும்
பீரங்கியல்லவா
இராவண லீலா தத்துவம்!
அய்யாவின் தத்துவம்
அவர் வழி நின்ற
அன்னையின்
செயலாக்கம்
அயோத்தியின்
அடி வயிற்றையும்
கலக்கப் போகிறது!
கலகக் குரலையும்
கொடுக்கப் போகிறது!
காவியங்கள் புதிதாய்
காய்க்கப் போகின்றன
இராமாயணக் குழியில்
இராவணாயணம் மலரப் போகிறது!
யார் கண்டது?
அயோத்தி மேட்டில்
அய்யா, அம்மா சிலைகள்
முளைத்தாலும்
ஆச்சரியம் இல்இல!
அந்த நாளை எதிர்பார்த்து
அம்மா இன்றைக்கு உங்கள் சிலைக்கு
மாலை சூட்டுவோம்!
வாழ்க நீ அம்மா
வையத்தின்
நாட்களெல்லாம்!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

தமிழ் ஓவியா said...


எங்களுக்கு எதிரிகள் இவர்களல்ல - ராஜபக்சேதான்! தமிழர் தலைவர் பேட்டி


சென்னை, மார்ச் 10- எங்களுக்கு எதிரிகள் குறுக்குச் சால் பாய்ச்சுபவர்களல்லர் - எங்களின் எதிரி ராஜபக்சேதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அன்னை மணியம்மையார் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று மணியம்மையார் - பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து வெளியில் வந்த திராவிடர் கழகத் தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி களுக்கு அளித்த பதிலாவது.

இன்று மணியம்மையார் பிறந்த நாள், தம் வாழ்நாளையே தந்தை பெரியாரையும், அவர்தம் இலட்சியங்களையும், அய்யா உருவாக்கிய இயக்கத்தையும் கட்டிக் காத்திட தம் பொருள், உழைப்பு அத்தனையையும் அர்ப்பணித்த அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில், அவர்களின் தொண்டறத்தைத் தொடர உறுதி ஏற்கிறோம் என்று கூறிய தமிழர் தலைவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்தபோது குறிப்பிட்டதாவது:

டெசோவை குறை கூறுபவர்களைப் பற்றியோ, அது அறிவித்திருக்கும் முழு அடைப்புக்குறித்தோ குறை கூறுபவர்கள், குறுக்குச் சால் ஓட்டுபவர் களைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யவோ, விளக்கம் அளிக்கவோ எங்களுக்கு அவசியம் இல்லை. தேவையும் இல்லை, நேரமும் இல்லை.

எங்களுக்கு எதிரி எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு எதிரியாக இருக்கக் கூடிய ராஜபக்சேதான்.

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் ஈனக்குரல்களைப் பற்றி நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?

டெசோவின் பயணமும், களமும் எந்த முட்டுக்கட்டைகளாலும் தடைபடாது என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள்.