Search This Blog

13.3.13

தேவனை விசுவாசித்தால் மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்குமா!


ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் (சங். 65:2)


என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான். 14:14)


எனக்கன்பான மாணவ - மாணவி யருக்கு, ஆண்டவருடைய கிருபையினால் நான் கூறும் மற்றொரு முக்கியமான ஆலோசனை என்னவென்றால் அதுதான் பிரார்த்தனை செய்தல்.


ஆண்டவராகிய இயேசு சொல்லுகிறார், என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான். 14:14)

இது ஆண்டவர் சொன்ன வார்த்தை. தேர்வுக் காலம் நெருங்க நெருங்க உங்களுடைய தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களைக் குறித்த சந்தேகம் அவ்வப்போது உங்கள் உள்ளத்தில் எழும்பக்கூடும், அல்லது அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு ஏற்ற ஞானங்களைப் பெறுவீர்கள்.


ஒவ்வொரு நாளும் உங்கள் பாடப் புத்தகத்தை எடுத்து படிப்பதற்கு முன்பு வேதாகமத்தை திறந்து வேதம் வாசித்து, ஜெபம் ஏறெடுத்த பிறகு உங்கள் பாடங்களை படியுங்கள். அப்போது தேவனே உங் களுக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுத்து உங்களுக்கு அற்புதம் செய்வார்.


இவ்வாறாக ஒரு நாளேடு ஆன்மிகப்பகுதியில் வெளியிட்டுள்ளது.

ஆன்மீகத்தின் பெயரால் எதையும் வெளியிடலாமா? தேர்வு நேரத்தில் பாடங்களைப் படிக்க வேண்டிய மாணவர்களுக்கு இப்படித் தவறான வழியைக் காட்டலாமா?

தேவனை பிரார்த்தித்தால் தேவையும், தேவைக்கும் மேலான அளவில் மதிப்பெண் கிடைக்குமா?
இது சரியானதுதானா? உண்மையானதுதானா?
தேவனை பிரார்த்தித்தால், தேவன் கிருபையால் எல்லாம் கிடைக்கு
மென்றால் கல்விக் கூடத்துக்கே கூடப் போகத் தேவையில்லையே!
தேர்வு நேரத்தில் இதுபோன்ற தீமையான - திசை மாற்றும் பிரச்சா ரங்களைச் செய்யாதீர்! செய்யாதீர்!!
மாணவர்களே! இவற்றையெல்லாம் நம்பி உங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
ஏடுகள் நடத்துவோருக்கு பொறுப்புணர்ச்சி வேண்டாமா? அடேயப்பா, இந்த மதமும், கடவுள் நம்பிக்கையும் மக்களை எப்படி எப்படியெல்லாம் நாசப் படுத்துகின்றன - பார்த்தீர்களா?

                         ----------------------------"விடை” 13-3-2013

30 comments:

தமிழ் ஓவியா said...

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!


வரும் 18 ஆம் தேதி மாவட்டத்
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

அய்.ஏ.எஸ். தேர்வுகளை இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதவேண்டும் என்ற மத்திய தேர்வாணையத்தின் புதிய விதிமுறை இந்தி பேசாத மக்களுக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதால், அதனை எதிர்த்து வரும் 18 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தி - ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பேசுவோர் தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தத்தம் தாய்மொழி பேசுவோர்க்கு மாபெரும் அநீதி யைச் செய்யும் ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளது.

புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது?

இதுவரை அய்.ஏ.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் எழுதலாம்.

அந்த முறை இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாணவர்கள் தங்களது விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம். அதேபோல், விருப்பப்பாடமாக தேர்ந்தெடுக்கும் பாடத்தையும் தமிழில் எழுத முடியும்.

புதிய அறிவிப்பு என்ன சொல்லுகிறது? தமிழ் இலக்கியத்தைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்துத் தேர்வு எழுத முடியும். அதேபோல, தாய் மொழியாகிய தமிழ் வழியில் படித்திருந்தால் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுக்கும் பாடத்தினையும் தாய் மொழியாகிய தமிழிலும் எழுதலாம்.

தமிழ் வழியில் படித்திருந்தால், தமிழில் எழுதுவ தற்குக் குறைந்தபட்சம் 25 மாணவர்கள் தேவைப் படுவர்.

இனிமேல் தமிழில் எழுதுபவர்கள், 25 பேர்களைத் தேடிப் பிடிக்கும் வேலையிலும் ஈடுபடவேண்டும் போலும்.

திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன - அவசியம்தான் என்ன?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித் திருந்தால், ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுதவேண் டுமாம்.

பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒருமுறை இப்பொழுது திடீரென்று இப்படி மாற்றப்படவேண்டிய அவசியம் என்ன - தேவை என்ன?

ஏதோ ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தாய்மொழியில்தான் சிந்திக்க முடியுமே தவிர, வேறு மொழியில் அல்ல - இது கல்வி யாளர்கள் கணித்த ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...

பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புற மக்களே!

இந்தப் புதிய ஆணையினால் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முதல் தலைமுறையாகப் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களைத்தான் பெரிதும் பாதிக்கும்.

கடந்த பல ஆண்டுகாலமாக அய்.ஏ.எஸ். தேர்வு களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருகிறார்கள். அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் 35 பேர் இவ்வாண்டுகூட நேர்முகத் தேர்வுக்குச் செல்ல இருக்கிறார்கள்.

உயர்ஜாதிக்காரர்களின் சூழ்ச்சி!

இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை, மனதை உறுத்துகிறது. இவர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு செய்வதற்கான தந்திரம்தான் இந்தப் புதிய விதிமுறைகள்.

அய்.அய்.டி. போன்று அய்.ஏ.எஸ். என்பது அடித் தளத்து மக்களுக்கு எட்டாக் கனியாக்கும் சதி இதன் திரைமறைவில் உள்ளது.

ஏற்கெனவே இருந்த முறை ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதற்குக் காரணங்கள் கூறப்பட்டுள் ளனவா?

எந்த யோசனையின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு எந்தவிதமான, நியாயமான காரணங்களும் கூறப்படவில்லை.

இந்தி வாலாக்களுக்குக் கொண்டாட்டம்!

இந்தப் புதிய விதிமுறை, இந்தி வாலாக்களுக் குத்தான் கொண்டாட்டம். பல தலைமுறைகளாக ஆங்கில மொழி பயின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்குப் பெரிதும் பயன்படப் போகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான போக்கு இது என்பதில் அய்யமில்லை.

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்பது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் சட்ட ரீதியாகவே நிலை நிறுத்தப்பட்டது.

இந்தியை எதிர்த்துத் தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தைக்கூடத் தந்தை பெரியார் அறிவித்து, மத்திய அரசின் உறுதிமொழியின் அடிப் படையில் அந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இப்பொழுது மத்திய தேர்வாணையம் மறைமுக மாக இந்திக்கு ஆக்கம் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

இந்தக் கொல்லைப்புற நுழைவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தமிழ்நாடு அனுமதிக்காது - குறிப்பாக திராவிடர் கழகம் ஏற்காது.
18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

புதிய ஆணையை உடனடியாக விலக்கிக் கொண்டு இவ்வாண்டு முதற்கொண்டு, ஏற்கெனவே இருந்த முறையில் தேர்வு எழுதிட ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 18.3.2013 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழக மாணவரணி, இளைஞரணித் தோழர்கள் மற்ற அணிகளின் ஒத்துழைப்புடன் அதற்கான பணி களில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
13.3.2013

தமிழ் ஓவியா said...


பாக்லாந்து தீவு யாருக்கு சொந்தம்?


இங்கிலாந்துடன் இருக்க 99 சதவீதம் மக்கள் ஆதரவு

லண்டன், மார்ச் 13- பாக்லாந்தை அர்ஜெண்டினாவும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே போர் நடந்தது. இப்போது அர்ஜெண்டினா இந்தப் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளது. அர்ஜெண்டினா திடீர் என பாக்லாந்து மீது படையெடுக்கலாம் என கருதி இங்கிலாந்து ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாக்லாந்து மக்கள் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என்பதை அறிய இங்கிலாந்து வாக்கெடுப்பு நடத்தியது. அதில் 99.8 சதவீத மக்கள் இங்கிலாந்துடனேயே இருக்க விரும்புவதாக வாக்களித்து உள்ளனர். ஆனால் இதை அர்ஜெண்டினா ஏற்க மறுத்துள்ளது. இதுதொடர்பாக அர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸ் கூறியதாவது:- இந்த ஓட்டெடுப்பை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இது சட்டப்பூர்வமான வாக்கெடுப்பு இல்லை. பாக்லாந்து எங்களுக்கு சொந்தமானது. இந்தப் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். - இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


செவ்வாய் கிரகத்தில் களிமண்: கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வில் தகவல்



புளோரிடா, மார்ச் 13- அமெரிக்காவின் நாசா விண்வெளி மய்யம் செவ் வாய் கிரகத்துக்கு கியூ ரியாசிட்டி என்ற விண் கலத்தை அனுப்பி வைத் தது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஊர்ந்து சென்று ஆய்வு களை செய்து தகவல் களை பூமிக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில் இந்த விண்கலம் பாறை களைத் துளையிட்டு உள்ளிருந்த பொருள் களை ஆய்வு செய்துள் ளது. அதில் பாறைக்குள் களிமண் வடிவில் தாதுப் பொருள்கள் இருந்தது. இதுதொடர்பாக கியூரியாசிட்டி கட்டுப் பாடு தலைமை அதிகாரி ஜான்கார்ட்சிவ்ஸ் கூறியதாவது:- களிமண் இருந்தாலே அங்கு தண்ணீர் இருக் கிறது என்றுதான் அர்த் தம். எனவே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள் ளது. கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செய்த பாறைகள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாகும். அந்தப் பாறைகளுக்கு இடையே களிமண் இருக்கிறது என்றால் நிச்சயம் தண்ணீரும் இருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. தண் ணீர் இருப்பதற்கான ஆதாரம் சிக்கி இருப்ப தால் அங்கு மனிதர்கள் குடியேற வாய்ப்பு அதி கரித்துள்ளது. - இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


இந்தியா-கறையைத் துடைத்துக் கொள்ளுமா?


டெசோவின் செயல்பாடுகள் எவ்வளவு சிறப்பானவை - காலத்திற்கு மிகவும் பொருத்த மானவை என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

வரும் 21 ஆம் தேதி ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் - அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

பெரும்பாலான வாக்குகள் ஆதரவாகக் கிடைக் கும் என்று தெளிவாகி விட்டது என்றாலும், இந்திய அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

டெசோவின் நடவடிக்கைகள் அனைத்தும் மிக முக்கியமாக ஈழத் தமிழர்களின் நல் வாழ்வுக்காக, தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் மிக முக்கியமான, இன்றியமையாத பணியில் மிகுந்த அக்கறையுடன், திட்டமிட்ட வகையில் தமது செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு வருகிறது.

டெசோவில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் மீது தவறான பிரச்சாரம் ஒரு வகையில் செய்யப்பட்டு வந்தது; அவர்கள்கூட காலந்தாழ்ந்தாவது இந்தத் தலைவர்களின் உண்மையான ஈடுபாட்டை இப்பொழுது உணரும் வகையில் டெசோவின் செயல்பாடுகள் நேர்த்தி யாக அமைந்துள்ளன.

அதுவும், குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற வேலை நிறுத்தம் - முழு அடைப்பு - தமிழ் மண்ணின் உணர்வை உலகுக்கே உணர்த்திவிட்டது.

ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு இடக்கு முடக்காக விமர்சனம் செய்பவர் கள் ஒரு பக்கம்; ஆட்சி அதிகாரம் தம்மிடம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்போக்கில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எப்படியும் ஒடுக்கிவிடவேண்டும் என்று திமிர் முறித்து எழுந்த தமிழ்நாடு அரசு இன்னொரு பக்கம்;

தமிழர்கள் என்றாலே வேப்பங்காயாக நினைக் கும் பார்ப்பன ஊடகங்கள் மற்றுமொரு பக்கம்; இவ்வளவு அனல்களையும், மலைகளையும் கடந்து இந்தப் போராட்டம் தமிழர்களின் பேராதரவுடன் பெருவெற்றியை ஈட்டிவிட்டது.

தமிழ்நாடு மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் புதுச்சேரி மாநிலமும் புது அத்தியாயத்தைப் படைத்துவிட்டது.

இதற்குப் பிறகாவது புத்திக் கொள்முதல் பெறவேண்டியவர்கள் பெறவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

குதர்க்கம் பேசும் உள்ளூர்த் தமிழர்கள், தலைவர்கள், அமைப்புகள், தமிழக அரசு, இந்திய அரசு ஆகிய அனைத்தும் இனிமேலாவது தமிழ்நாட்டு மக்களின் உண்மையான உணர்வை மதித்து நடந்துகொள்ளவேண்டும்.

இந்திய அரசைப் பொறுத்தவரை அதற்கொரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது என்று கருதிடவேண் டும்.

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதன்மூலம் ஈழத் தமிழர்களுக்காக அது உதவி செய்துவிட்டது என்பதோடு மட்டுமல்லாமல் - மனித உரிமைக் கண்ணோட்டத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பொதுவாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியது இந்தியா என்ற நற்பெயருக்கு, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா அண்மைக்காலத்தில் அது நடந்துகொண்டு வந்துள்ள போக்கு பெருங்களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.

அந்த வகையில் பார்த்தாலும் இந்தியா தன் மீது படிந்துள்ள கறையைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் - அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்தே தீரவேண்டும் என்றும் வலியுறுத்து கிறோம். 13-3-2013

தமிழ் ஓவியா said...


அவசியம்


கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும், அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...

பொது வேலை நிறுத்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி! நன்றி!!
டெசோ சார்பில் டெசோ தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 13- ஈழத் தமிழர் இன்னல் தீரவும், அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களோடு இந்தியா ஆதரிக்ககவேண்டுமென்று கோரியும்,

டெசோ இயக்கத்தின் சார்பில் பிப்ரவரி திங்கள் 8 ஆம் தேதியன்று கறுப்புடை அணிந்து என் தலைமை யில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - மார்ச் திங்கள் 5 ஆம் தேதியன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் - மார்ச் திங்கள் 7 ஆம் தேதியன்று தலைநகர் டில்லியில் கருத்தரங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து - மார்ச் 12 ஆம் தேதியான நேற்று தமிழகம் முழுவதும் அரசியல் சார்பற்ற முறையில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளுடன் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

வழக்குத் தொடுத்தார்கள்

ஈழத் தமிழர்களுக்காகத்தான் இந்தப் பொது வேலை நிறுத்தம் என்பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத்திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத்திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தம் என் பதையே மறந்துவிட்டு, ஏதோ டெசோ இயக்கத் திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள தி.மு. கழகத் திற்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக் கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை என்று அறிக்கை விட்டார்கள். வேறு சிலர் மறைமுகமாக தங்கள் வழக்கறிஞர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத் தார்கள்.

அரசு தலைமை வழக்கறிஞரும் வேலை நிறுத்தத் திற்கு எதிராகக் கடுமையாக வாதாடினார். சிலர் இதனைத் திசை திருப்பும் முயற்சி என்றெல்லாம் ஊருக்கு முந்திக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டி குளிர்காய முயற்சித்தார்கள். அதையெல்லாம் மீறி கழக உடன் பிறப்புகளுக்கு உரிமையுடன் இதிலே கலந்து கொண்டு, இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை உணர்ந்து, இதனை வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டுமென்று இரண்டு நாள் உடன்பிறப்பு மடலில் கேட்டுக் கொண்டேன். தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் அறிக்கை விடுத்தார்கள். டெசோ இயக் கத்தின் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மிகப்பெரிய வெற்றி!

அரசு சார்பில் பேருந்துகள் ஓடும் என்றார்கள். வணிகர் சங்கத்தின் சார்பில் கடைகள் திறந்து வைக்கப்படும் என்றார்கள். ஆனால், அவர்களையும் மீறி, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். காலை 8 மணிமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, அண்ணே, எங்கள் ஊரில் ஒரு டீக்கடை கூடத் திறக்கவில்லை என்றும், அண்ணே எங்கள் மாவட்டத்தில் முழு வெற்றி என்றும், தலைவரே, பொது வேலை நிறுத்தம் மிகப்பெரிய வெற்றி என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்கள்.

தொழிலாளர்கள் போதிய அளவிற்குப் பணிக்கு வராத நிலையிலே, தமிழக அரசு குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு பேருந்துகளை ஓட்டு வதற்கு முயற்சி எடுத்தபோது கழகத் தோழர்கள் மறியல் செய்து எங்கள் மாவட்டத்தில் இத்தனை பேர் கைது, எங்கள் நகரத்திலே இவ்வளவு பேர் கைது என்று தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைகளைச் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.

பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்

தமிழகம் முழுவதிலும் அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து பல ஊர்களி லிருந்து வந்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்த கழகப் பொருளாளர் தளபதி ஸ்டாலின், தமிழர் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் தாங்களும் மறியல் செய்யப் புறப்பட்டுச் சென்று அவர்களும் கைதான செய்தி கிடைத்தது. இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக ஒரு சிலருக்கு சிற்சில சங்கடங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லாம் தமிழினத்திற்காக இந்தச் சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக நாம் நடத்திய இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப்பெரிய வெற்றியாக ஆக்கித் தந்த வணிகப் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஏன் தமிழ் உணர்வு படைத்த பொதுமக்கள் அனைவருக்கும் டெசோ இயக்கத்தின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும், என் தனிப்பட்ட முறையிலும் நன்றியைத் தெரிவிப்பதோடு; இந்தப் பெரிய வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகாவது மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே உரிய அக்கறை செலுத்தி, தெளிவான முடிவினை மேற்கொள்ள முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு கலைஞர் தமது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


கொள்கை மாவீரர் திருச்சி து.மா. பெரியசாமிக்கு வீர வணக்கம்!


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு து.மா. பெரியசாமி (வயது 86) அவர்கள் நேற்று (12.3.2013) திருச்சி யில் மறைவுற்றார் என்ற செய்தியை அறி விக்க வருந்துகிறோம்.

அவரும், நானும் ஈரோட்டு திராவிட மாணவர் பயிற்சி யில் பங்கு கொண்டு மாண வர் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காலம் முதலே நட்பு பூண்டவர்கள். திராவிடர் மாணவர் கழகத்திலிருந்து தம் இயக்கப் பணியைத் தொடர்ந்தவர். திருச்சியில் தந்தை பெரியார் அவர்களிடம் மிகவும் அணுக்கமாக இருந்தவர்.

தந்தை பெரியார் செல்லும் ஊர்களுக்கெல்லாம் அய்யா அவர்களின் உரையைப் பதிவு செய்வதற்காக அந்தக் காலத்தில் பெரிய பெட்டிபோல இருந்த அந்தக் கருவியைத் தூக்கிச் சுமந்து சென்று அய்யாவின் உரைகளைப் பதிவு செய்வதை தம் வாழ்நாளில் பெரும் பேறு என்று கருதி அந்தக் கடினமான பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார்.

அந்த உரைகளை அவரே கைப்பட எழுதித் தொகுத்துத் தந்தார். பெரியார் சிந்தனைத் திரட்டு எனும் தலைப்பில் மூன்று தொகுதிகள் திராவிடர் கழகத்தின் சார்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.

மானமிகு து.மா. பெரியசாமி அவர்கள் உடலால் மறைந்தாலும், காலம் உள்ளவரை இவை அவரை நினைவுகூரும் கல்வெட்டுகளாகும்.

அவர் பதிவு செய்து வைத்த அய்யாவின் உரைகளும் ஒலி நாடாக்களாக கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உடைமைகளாகவே ஆக்கி அவர் எழுதித் தந்துள்ளார்.

அவர் செய்துள்ள பணிகள் ஆக்க ரீதியானவை! அமைதியாக, அடக்கமாக இத்தகைய பணிகளைச் செய்த செம்மல் நமது து.மா. பெரியசாமி அவர்கள்.

அன்னை மணியம்மையார் நடத்திய இராவண லீலாவிலும் பங்கேற்று அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜாதி ஒழிப்புப் போராட்டமான சட்ட எரிப்பிலும் சிறை சென்றவர் அவர்.

அந்தக் கொள்கை மாவீரருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைச் செலுத்து கிறோம். அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத் தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி நிகழ்ச்சியிலும் இன்று பிற்பகல் பங்கேற்க திருச்சி விரைகின்றேன்.

13.3.2013

- கி. வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம்: மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை, மார்ச் 14- இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம் என்று மாநிலங்களவையில் கனி மொழி எம்.பி. பேசினார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. மாநிலங்களவையில் பேசியதாவது:-

நான் இந்த அவையில் எனது மொழியில் பேச வேண்டுமென்றால் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். எனது மொழியில், எனது பிரச் சினைகள் குறித்து பேசுவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியி ருக்கிறது. என்றாவது ஒரு நாள், இப்போது உள்ள இந்த நடைமுறைகள் இல்லாமல் போகும் நிலை வரும் என்று நம்புகிறேன். இங்கே பேசிய ஒரு உறுப்பினர் மொழிக்கான போராட் டங்கள் அரசியல் தந்திரம் என்றும், பிரபலமாகுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் பேசினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி நான் பேசுகையில், இது எந்த மொழிக் கும் எதிரானது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற் சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தங்கள் மொழி யையும், கலாச் சாரத்தையும் பண் பாட்டையும், தங்கள் அடை யாளத்தையும் பாதுகாக்க வேண் டும் என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கலைஞர் தனது 14ஆவது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதா ரண மாணவன். தனக்கு ஒரு பிரகாச மான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதல மைச்சர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கப்போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவ ருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர் களை நீங்கள் அவமானப்படுத்தக் கூடாது. இது போன்ற போராட்டங் களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப் பட்ட தலைவர்களின் போராட்டங் களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது. இங்கே பேசியவர்கள் இந்தி பெருபான்மையானவர்கள் பேசும் மொழி ஆனால் சிறுபான்மையினர் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்கள். எங்களுக்கு இந்நாட்டில், இவ்வுலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் எங்களுக்கு சம்மதமே ஆனால் இங்கே பேசியவர், இந்தி கற்காததால் நீங்கள் எதையோ இழந்து விட்டதாக உணரவில்லையா என்று கேட்டார்.

நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை, இது போல பலர் இந்தி கற்கவில்லை. இதனால்தான் நான் இந்த விவகாரத்தில் நிதி அமைச்சரைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்தி கற்காமல் ஒருவர் இந்நாட்டின் நிதி அமைச்சராகி சிறப்பாக செயல்பட முடியும்போது நாங்கள் எதை இழந்து விட்டோம். பெருந்தலைவர் காமராஜரையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்பு கிறேன். காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்லர். இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்தி பேசத்தெரியா விட்டால் அவர் இந்தியர் இல்லையா? உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு மொழிகள்தான் தெரியும். இதனால் நான் என்ன இழந்து விட்டேன்? ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? இங்கே இந்தி தெரியாமல் இருப்பவர்களும் இந்தியர்கள் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா? பெரும்பான்மை யினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல. இந்தியா என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதன் கலாச்சாரம், விழுமியங்கள், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவை இணைத்து வைத்துள்ளது. ஒரு மொழி மட்டுமே அல்ல. திமுக சார்பாக இந்த அவைக்கு ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்கள் மீது மொழி திணிக்கப்பட்டால் அதை எதிர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...


பலே, பக்தி வியாபாரம்!



பக்தியே ஒரு பிசினஸ் என்று சாட்சாத் சங்கராச்சாரியாரே கூறியுள்ளார் பல நேரங்களில், அது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அதுவும் பக்தியை வியாபாரப் பொருளாக ஆக்குவதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அடிக்க வேறு யாராலும் முடியவே முடியாது.

திருப்பதி கோயிலுக்குப் பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பது என்பது விசேடம். அப்படிப் பக்தர்கள் செலுத்தும் முடியை விற்பதன் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றுக்குத் திருப்பதி தேவஸ்தானத்திற்குக் கிடைக்கக் கூடிய தொகை நூறு கோடி ரூபாயாம்.

இப்பொழுது முடி காணிக்கை செய்பவர்களுக்குச் சிறப்புப் பரிசு வேறு அறிவிக்கப்பட்டுள்ளது. 31 அங்குலம் நீளம் கொண்ட முடியைப் பக்தர் ஒருவர் ஏழு மலையானுக்குக் காணிக்கையாகக் கொடுத் தால் 5 லட்டு இலவசமாகக் கொடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காகத் தனிக் கவுண்டராம்.

அது என்ன 31 அங்குல முடி நீளம், மார்க் கெட்டில் அதற்கு ஏதாவது மவுசு இருக்கக் கூடும். ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இறைப்பார்கள்?

இப்பொழுது ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதிக்குச் செல்ல வேண்டியதில்லை. நாடெங்கும் கிளைக் கடைகளைத் திறந்து வைத்துள்ளார்கள். ஆங்காங்கே கல்லா கட்டுவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

சிறீரங்கத்தில் மாநாடு நடத்தும் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் குறிப்பாக அதன் தலைவர் திருவாளர் வேதாந்தம் என்பவர் கோயிலில் தரிசனம் செய்ய தட்சணை கேட்பது பாவம் - கூடவே கூடாது என்று கரடியாகக் கத்திக் கொண்டு தான் திரிகிறார்; யார் காதில் போட்டுக் கொள்கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இரவில் கோயிலைத் திறந்து வைத்திருக்கக் கூடாது, அது ஆகம விதிகளுக்கு விரோதமானது என்றெல்லாம் சங்கராச்சாரியாரிலிருந்து திருவாளர் ராம. கோபாலன் வரை ஒவ்வொரு ஆண்டும் சொல்லித் தான் பார்க்கிறார்கள். அவற்றை யார் சீந்து கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் இரவு 12 மணிக்கு கோயிலைத் திறந்து வைத்திருந்தால் ஏராளமான அளவுக்கு வரும்படி கிடைக்கிறதே - பக்தர்கள் வெறுங் கையோடா கோயிலுக்கு வருகிறார்கள்? அப்படி வெறுங் கையோடு வந்தாலும் எந்த அர்ச்சகப் பார்ப்பான் மதிப்பான்?

ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பன்று மிகப் பெரிய அளவில் வருமானம், தட்சணை கொட்டுகிறது. ஆகமத்தைப் பார்த்தால் சம்பாதிக்க முடியுமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சொன்னால் மட்டும்தான் ஆகமங்கள் குறுக்கிடும்; மற்றபடி வருமான விடயத்தில் ஆகம மாவது மண்ணாக் கட்டியாவது! எல்லாம் அவாளுக்குத் தெரியாதா என்ன?

வரும்படி பெருந்தொகை கிடைக்குமானால் ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் பிரசாதத்தைத் தூக்கிக் கொண்டு பெரும் பண முதலைகள் - தொழில் அதிபர் தங்கி இருக்கும் விடுதிகளை (Lodges)நோக்கியல்லவா பறந்தோடு கிறார்கள்!

பணம் படைத்தவர்கள் என்றால் பகவான் அவர்களைத் தேடி ஓடுகிறான் என்பது இதன் பொருள்.

கோயிலில் மூல விக்ரகத்தைத் தரிசிப்பதில்கூட பல வகுப்புகள் உள்ளன. சீக்கிரம் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமென்றால் தட்கல் முறையில் அதற்கென்றுள்ள அந்தப் பெரும் தொகையைத் தூக்கி எறிந்தால் தரிசனம் சில நிமிடங்களில் கிட்டும்.

பஞ்சைப் பராரிகள் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமானால் பல நாள்கள் பசி பட்டினி கிடந்து காத்திருக்க வேண்டிய அவல நிலைதான். அதனால் தானோ என்னவோ கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி! என்ற பழமொழி நடைமுறையில் இருக்கிறது போலும்!

அன்பே கடவுள் என்றும் அவன் உருவமற்றவன் என்றும் ஒரு பக்கத்தில் இதோபதேசம் செய்து, கொண்டு, இன்னொரு பக்கத்தில் கோயில் கட்டி உருவங்களை மனம் போனவாக்கில் வடித்து வைத்து, உண்டியலையும் ஏற்பாடு செய்து மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கும் கயவாளித் தனத்தை என்னவென்று சொல்லுவது!

கோயில் அமைப்பு முறை என்பது சுரண்டலுக்கான ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமா தயக்கம்?
15-3-2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தூக்கம்

செய்தி: இன்று உலக தூக்க நாள் சிந்தனை: தூக்கம் மனி தனுக்கு அவசியமே!

தூக்கம் இல்லாவிட்டால் பல வகை உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் தூங்கிக் கொண்டே இருக்கவும் கூடாது!

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனருக்கு அழும் தானங்கள்


மத்ஸ்ய புராணத் தில் பிராமணர்களுக்குத் தர வேண்டிய பதினாறு மகா தானங்கள் பற்றி கீழ் வரும் விளக்கம் தரு கிறது.

துலா புருஷ தானம்: பிராமணனின் எடைக்கு அல்லது தானம் தருபவரின் எடைக்கு விலை உயர்ந்த உலோகம் கொடுப்பது.

ஹிரண்ய கர்ப்ப தானம்: தங்க ஆபரணம் தருவது.

பிராமந்த தானம்: முட்டை வடிவத்தில் தங்கம் தருவது.

கல்பதரு தானம்: பிராமணர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் முறையில் தங்க மரம் தருவது.

கோஸ ஹஸ்ர தானம்: ஆயிரம் பசுக்களை தானம் தருவது.

ஹிரண்ய காமதேனு தானம்: விரும்பியவை தரும் காமதேனு பசு கன்று தங்கத்தில் தருவது.

ஹிரண்ய அஸ்வ தானம்: தங்க குதிரைகள் தருவது.

ஹிரண்ய ஸ்வரத் தானம்: தங்க குதிரைகள் பூட்டிய ரதம் தருவது.

ஹேமஹஸ்தி தானம்: தங்க யானை தானம் தருவது.

பஞ்சலாங்கல தானம்: அய்ந்து கலப்பைகள் மரத்தாலும், காளை மாடுகள் தங்கத்தாலும் தருவது.

தார தானம்: பூமி, மலை வடிவத்தில் தங்கம் தருவது.

விஸ்வ சக்ர தானம்: தங்க சக்கரம் தானம் தருவது.

கல்பலதா தானம்: பூக்களோடு கூடிய பத்து படர்ந்த கொடிகள் தங்கத்தில் செய்து தருவது.

சப்த சாகர தானம்: ஏழு கடல்கள் போன்ற வடிவத்தில் தங்க பாத்திரங்கள் தருவது.

ரத்னதேனு தானம்: ஆபரணங்களை கொண்டு செய்யப்பட்ட பசு தருவது.

மகா பூதகாத தானம்: தங்கத்தால் செய்யப்பட்ட 100 விரல்கள் அகலமுள்ள பெரும் தங்கப் பாத்திரத்தில் பால், வெண்ணெய் நிரப்பித் தருவது. - இவ்வாறு மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

(எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திர பேய்களும் சாதிக் கதைகளும் - (ஒரு மார்க்ஸியப் பார்வை, நூல் பக்கம் 60-61)

தமிழ் ஓவியா said...


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்; பகுத் தறிவுக்குப் பொருந்தி வராத பழைய கதைகளின் குறைகளுக் கெல்லாம் விளக்கம் சொல்லிச் சரி செய்ய முயல்வது அவர்கள் இயல்பு. இதனை இல்லத் தலைவி வீட்டுப் பணிகள் அனைத் தையும் தணிக்கை செய்வதற்கு ஒப்பிடுகிறார்.

பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்

பணிக்கையிடல் போல் அனைத்தும் தணிக்கை செய்தே

- எனக்காட்டும் போது பழமையை எள்ளுவதன் வாயிலாகப் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்துவதோடு நகைச்சுவையும் தோன்ற வைக்கிறார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...


பொருளே குறிக்கோள்!


பார்ப்பனர்கள் நடத்தும் சடங்கும் மந்திரமும் அவர் தம் வயிறு வளர்ப்பதற்கே யன்றி உண்மையான பயனை நல்குவன அல்ல என்னும் கருத்தை, பெரியதொரு சடங்குண்டே! மந்திரமுண்டே அந்த எலாம் செய்யத்தான் வேண்டும்.

ஆனால் பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்த மட்டும் கொடுக்கணுமோ குடுக்க வேணும் என்றுரைத்தான் எல்லோரும் சிரிப்பில் ஆழ்ந்தார்

- எனக் கவிஞர்(- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்) மந்திரத்தை விடப் பொருளிலேயே கருத்தாய் இருக்கும் பார்ப்பனனின் செயலை எள்ளி நகையாடுவது நகைப்பை விளைக்கிறது.

தமிழ் ஓவியா said...


அன்னையாரின் நினைவு போற்றி எஞ்சிய பணி முடிப்போம்!


தனது இளமை, வளமை, முதல் அனைத்தையும் இழந்து, தொண்டறத்தின் தூய உருவமாகி உயர்ந்துள்ள உன்னத புரட்சித்தாய் நம் அன்னையார் அவர்களது 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! (16.3.2013).

நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் வாழ வைப்பதற்காக, நம் அன்னையார் அவர்கள் பட்ட தொல்லை, துன்பம், வசவுகள், இழி மொழிகள் ஏராளம்! ஏராளம்!!

எதிர் நீச்சல் களத்தில் நின்று வென்று, தனக்கென வாழாது, தன் உழைப்பைத் தந்ததோடு நில்லாமல், தனது அத்தனைப் பொருளையும் பொதுத் தொண்டுக்குத் தந்து, ஒரு மாபெரும் பல்கலைக் கழகமே உருவாகும் அளவுக்கு, ஒரு அறக்கட்டளையை நிறுவி, அய்யா தந்தை பெரியாரைப் போலவே சுயநலத்தை சுட்டுப் பொசுக்கி, மானம் பாராத தொண்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நம் அன்னையார் தொண்டறத்தின் இமயமாய் உயர்ந்தவர்! அய்யாவின் பணி முடிக்க, நமக்கு அய்யா மறைவுக்குப்பின் தலைமை ஏற்று வழிகாட்டிய அன்னையாரின் நினைவு நாளான இன்று, உறுதியைப் புதுப்பித்து, லட்சியப் பயணத்தைத் தொய்வின்றி தொடருவோமாக!

மகளிருக்கு அன்னையார் மகத்தான கலங்கரை விளக்கன்றோ! வாழ்க அன்னையார்!

கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாருக்கு தாழ்த்தப்பட்ட மலைவாழ் இனத்துப் பணியாளர் கூட்டிணைவு வாழ்த்து!

தந்தை பெரியாரைத் தொண்ணூற்று அய்ந்து ஆண்டுகள் வாழச் செய்து, தம் தொண்டு அறத்தினால் பெருமை பெற்ற, தந்தை பெரியாருக்குப்பின் திராவிடர் கழகத்தை அய்யா காட்டிய வழியில் இம்மியும் பிசகாது நடை போடச் செய்த அன்னை மணியம்மையாரின் பெருமையை இப்போது தமிழ் மக்கள் பலரும் அறிந்து பாராட்டுகின்றனர்.

செட்யூல் கேஸ்ட், செட்டியூல் டிரைப்ஸ் எம்ப்ளாயிஸ் பெடரேஷன் எனும் அனைத்துத் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் பணியாளர் கூட்டிணைவு மகளிர் தினத்தை ஒட்டிச் சென்னை நகரில் மகளிருக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

அச்சுவாரொட்டியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மகளிர் நலனுக்கு உழைத்த மராத்திய மங்கை ஜோதிபா பூலே அம்மையார், தமிழகத்து மீனாம்பாள் சிவராஜ், உ.பி.யின் மாயாவதி ஆகியோரின் படத்துடன் தொண்டறத்தில் சிறந்தோங்கிய அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் படத்தையும் வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 10, 2013 அன்னை மணியம்மையாரின் 93ஆவது பிறந்த நாள். இந்நாளில் அன்னை மணியம்மையாரைத் திராவிட இயக்கத்தவர் மட்டுமல்லாமல், பிற மக்களும் உணர்ந்து நினைவு கூர்வது பெருமையாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


காரணம்



வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் உண்டு! உண்டு!!



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - கடும் எதிர்ப்புக் காரணமாக புதிதாக அறிமுகப் படுத்திட்ட மாநில மொழிகளின் உரிமைகளை வெளியில் தள்ளிய முடிவு கைவிடப்பட்டதாக - மத்திய இணை அமைச்சர் திரு வி. நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சிகளைக் கடந்து போர்க் குரலை எழுப்பினார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றிக்கும் உரியவர்கள்! மத்திய தேர்வாணையம் மாநில மொழிகளை வெளியில் தள்ளி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் தேர்வு எழுதலாம் என்று எடுத்த முடிவு மேம்போக்கான ஒன்றல்ல; ஆழமாகச் சிந்திக்கப்பட்டு, இந்தி பேசா மாநிலங்களிலிருந்த அய்.ஏ.எஸ். உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்கிற சதி திட்டம் அதற்குள் அடங்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் திரு. லாலு பிரசாத் அவர்கள் அந்தச் சதியைச் சுட்டிக் காட்டியும் பேசியுள்ளார்.

இதில் இன்னொரு நுணுக்கமான கண்ணிவெடி ஒன்றுள்ளது. மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை கண்டிப்பாக எழுத வேண்டும் (ஆரளவ) அதனை இந்த முறை நீக்கியதற்குக் காரணம் ஆங்கிலத்தின்மீது கொண்டுள்ள வெறுப்பல்ல. மாறாக வட மாநிலங்களில் இந்தி பேசுவோருக்குப் பெரும்பாலும் ஆங்கிலம் என்பது சுட்டுப் போட்டாலும் வருவதில்லை. இந்த முட்டுக்கட்டை இந்தி வாலாக்களுக்கு இருக்கக் கூடாது - 2000 மதிப்பெண்களையும் அவர்களின் தாய்மொழியான இந்தியிலேயே எழுதி, அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பமிட்டு விடலாம் என்பதே - புதிய அறிவிப்பில் உள்ள ஆழமான சதியாகும்.

நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அறிவித்திருப்பது இப்போதைக்குத் தற்காலிகமா?
இந்தத் தொடரிலேயே உடனடியாக அதன் முழுத் தன்மையையும் அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - நேற்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலும், கருத்துகளும் மிக மிக முக்கியமானவை.

சமூகநீதிக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கக் கூடிய - தந்தை பெரியார் பிறந்த தமிழ் நாட்டிலேயே, சமூகநீதிக்கு விரோதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - தமிழை வெளியே தள்ளி, கிராமப்புற மக்களை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் குழியை வெட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதே - இது எந்த வகையில் சரியானது - நியாயமானது?

கிட்டதட்ட ஒரே நேரத்தில் மத்திய, மாநில தேர்வாணையங்கள் இப்படி நடந்து கொண்டுள் ளனவே - இந்தச் சங்கிலிப் பிணைப்பின் பின்னணி என்ன?

மத்திய அரசின் புதிய முறையைக் குறைகூறி பிரதமருக்கு மடல் எழுதும் தமிழ்நாடு முதல் அமைச்சர் தமிழ்நாட்டிலேயே இந்த அநீதி நடந்திருக் கிறதே யார் பொறுப்பு? அதற்கு என்ன பதில்? என்ன சமாதானம்?
இந்நேரம் புதிய திட்டம் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இந்த நிலையில் 18ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும் 19ஆம் தேதி சென்னையிலும் திராவிடர் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அவசியமாகி விட்டது.

மத்திய அரசு பின்வாங்கினாலும், மாநில அரசு சமூக அநீதி ஆணையைப் பிறப்பித்துள்ளதால் இதுவரை விலக்கிக் கொள்ளாததால் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு வெற்றிகரமாக நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!! 16-3-2013

தமிழ் ஓவியா said...


ஒலி முழக்கங்கள்




1. வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!

2. தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே!
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
மாநிலத் தேர்வு ஆணையம்
மாநிலத் தேர்வு ஆணையம்
தாய்மொழி தமிழை
தாய்மொழி தமிழை
புறக்கணிக்கும், புறக்கணிக்கும்
புதிய திட்டத்தை, புதிய திட்டத்தை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

3. தந்தை பெரியார் பிறந்த தந்தை பெரியார் பிறந்த
தமிழ் மண்ணிலே, தமிழ் மண்ணிலே
சமூக நீதிக்கு, சமூக நீதிக்கு
சவக்குழியா? சவக் குழியா?

4. தாழ்த்தப்பட்ட மக்களை
தாழ்த்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பழிவாங்கும் - பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

5. கிராமப்புற மக்களை
கிராமப்புற மக்களை
பழிவாங்கும், பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

6. வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
மத்திய அரசு மத்திய அரசு
வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
தமிழக அரசே, தமிழக அரசே!
தூங்குவது ஏன்? தூங்குவது ஏன்?

7. போராடுவோம் போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை வெற்றிக்கிட்டும் வரை
போராடுவோம் போராடுவோம்!

8. வென்றெடுப்போம் - வென்றெடுப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
ஆசிரியர் வீரமணி தலைமையிலே
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
சமூக நீதியை, சமூக நீதியை
வென்றெடுப்போம், வென்றெடுப்போம்!

9. வாழ்க வாழ்க வாழ்கவே
திராவிடர் கழகம் வாழ்கவே
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!

10. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!
- திராவிடர் கழகம்
(18, 19.3.2013இல் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்காக)

தமிழ் ஓவியா said...


காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்?



விஞ்ஞானிகள் தகவல் சென்னை, மார்ச் 16- காலை உணவுக்கு பழைய சோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் நல்லது என்பது அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. முன்பெல்லாம் பெரும் பாலான வீடுகளில் காலை உணவு கஞ்சி என்று அழைக்கப் படும் பழைய சோறுதான். பழைய சோறு தண்ணீரில் சிறிது உப்பு போட்டுக் குடிப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல் சூட்டை தணித்து விடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு. கால மாற்றம், நாகரீகம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.

இந்த நிலையில், பழைய சோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின் மகத்துவத்தையும், பல்வேறு விதமான பயன் பாடுகளையும் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும் பழைய சோற்றில் உடல் ஆரோக்கி யத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள் அடங்கி உள்ளனவா? என்று வியந்து போனார்கள். அவர்களின் ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு:-

பழைய சோறு, காலை உணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும். மற்ற உணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழைய சோற்றில் அரிய வைட்டமின்களான பி-6, பி-12 ஆகியவை மிகுதியாக காணப்படுகிறது. பழைய சோற்றில் உருவாகும் கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதில் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்புக்கான காரணிகள் ஏராளமாக உள்ளன.

கஞ்சி சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரி யாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன் அவற்றை நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. காலை உணவாக சாப்பிடும் பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகி விடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பான எந்த பிரச்சினையும் வராது. சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல் பறந்துவிடும். மந்தநிலை போய் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழைய சோறுக்கு உண்டு. உடலில் சோர்வே ஏற்படாது. பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக் கலாம். சோர்வு அண்டாது. அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணாமல் போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப் பொலிவுடனும் இருக்கும். மேற்கண்ட தகவல்களை அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மண்பானையில் தண்ணீர் ஊற்றி செய்யப்படும் பழைய சோறு இன்னும் அதிக சுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் கல் சட்டி என்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறு போட்டுவைப்பார்கள். பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக பயன்படுத் தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன. பழைய சோறுக்கு சம்பா அரிசிதான் மிகவும் ஏற்றது ஆகும். காரணம், அதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் தாதுபொருட்களும் அடங்கி உள்ளன. எப்போதுமே நம்மவர்கள் சொல்வதை நம்பாமல் வெளிநாட்டினர் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்வது நமது வழக்கம். இப்போது வெளிநாட்டு விஞ்ஞானிகளே பழைய சோற்றின் மகத்துவத்தை சொல்லிவிட்டார்கள். இனிமேலும் என்ன யோசனை? இன்றைய நாகரீக உணவு களுக்கு விடை கொடுத்துவிட்டு முன்பு இருந்ததைப்போல காலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுவோம். உடல் நலனை பாதுகாப்போம்.

தமிழ் ஓவியா said...


இலங்கை - எதிரியா? நண்பனா?

- முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ.பிச்.டி

அண்மையில் நாடாளுமன்ற மேலவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை நம்முடைய நட்பு நாடு எதிரி நாடு அல்ல என்று தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங் களவை உறுப்பினர்கள் கொதிப் படைந்து இலங்கை எதிரி நாடுதான் என்பதை உறுதிப்படுத்திப் பேசி யிருக்கிறார்கள். இலங்கை - நண் பனா? எதிரியா? என்பது சிலபேருக் குக் குழப்பமாக இருக்கிறது. ஆளும் கட்சியும் பார்ப்பன அதிகார மய்யமும் இலங்கையை நண்பனா கவே கருதிக் கொண்டிருக்கின்றன. இலங்கையை நண்பன் என்று சொல் வது அதன் மீதுள்ள பாசத்தினால் என்பதை விடத் தமிழர்கள் மீது கொண்டுளள வெறுப்பினால்தான் டெல்லி அரசு இந்தக்கொடூரமான நிலைப்பாட்டை மேற்கொண் டிருக்கிறது.
புரட்சிக் கவிஞர் பாடியதைப் போல நற்றமிழ் என்பது டில்லிக்கு ஆகாது. நமக்கு நினைவு தெரிந்த வரையில் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே டில்லி மேற் கொண்டு வந்துள்ளது. இடையில் இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் மட்டும் தமிழ் ஈழ மக்களுக்குச் சார்பான நிலை இருந்தது.

நெடுங்காலமாகத் தமிழ் இனம் வஞ்சிக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றது. நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நம்மால் தடுத்து நிறுத்த முடிய வில்லை. தமிழகத்தின் நீர் ஆதா ரங்கள் அண்டை மாநிலங்களால் அழிக்கப்படும் நிலையை மய்ய அரசு தடுக்கவில்லை. இத்தகைய காரணங் களினால் தான் அறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று சொன்னார். இன்றும் அதே நிலை, அதைவிட இழிந்த நிலையைத் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1950களில் கோவாவை இந்தி யாவோடு இணைப்பதற்கு பண்டித நேரு எடுத்துக் கொண்ட அமைதி யான மென்மையான நடவடிக்கைகள் பயன் தரவில்லை. இந்தியப்படை கோவாவை முற்றுகையிட்டு இராணுவ நடவடிக்கை எடுத்து கோவாவை இந்தியவோடு இணைத்தார் நேரு. அப்போது போர்ச்சுகல் ஆளுகையின் கீழ் கோவா டையூ, டாமன் ஆகிய பகுதிகள் இருந்தன. கோவாப் பகுதி களை இந்தியாவுடன் இணைப்ப தற்கு நேரு ராணுவ நடவடிக்கை எடுத்தபோது இலங்கையின் நிலைப் பாடு என்ன?

போர்ச்சுகல் அரசின் வேண்டு கோளுக்கு இணங்கி அவற்றின் போர்க்கப்பல்களும், விமானங்களும் கொழும்பில் நிறுத்தப்படுவதற்கும் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கும் அங்கிருந்து கோவாவை முற்றுகை யிட்டுள்ள இந்தியப் போர்க் கப்பல்களைத் தாக்குவதற்கும் இலங்கையின் சிங்கள அரசு அனுமதி கொடுத்ததா இல்லையா? (ஆனால் போர்ச்சுகல் கப்பல்கள் கொழும்பு வந்தடைவதற்கு முன்னதாகவே கோவா இந்தியாவோடு இணைக்கப் பட்டுவிட்டது). இந்தியாவோடு போர் தொடுக்க வருகின்ற ஒரு நாட்டின் கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பிக் கொடுக்கவும் தளம் அமைத்துக் கொள்ளவும் அனுமதியளித்த இலங்கை இந்தி யாவின் நண்பனா?

1962-இல் இந்தியாவுக்கும், சீனா வுக்கும் நடந்த போரின்போது இலங் கையின் நிலைப்பாடு என்ன? கோவா விடுதலைப்போரின் போது இலங்கை இந்தியாவின் மீது காட்டிய பகை உணர்ச்சி, சீனப்போரின் போதும் வெளிப்பட்டது. வெளிநாடுகளில் சீனாவிற்கு ஆதரவாகவும் இந்தியா விற்கு எதிராகவும் கொள்கைப் பரப்புரையை இலங்கை மேற் கொண்டது. அய்.நா.அவையிலும் இலங்கை இந்தியாவிற்கு எதிராகப் பேசியதே! அந்தப்பழைய நட்பின் அடிப்படையிலேயே இலங்கையின் வடக்கு - கிழக்குத் தமிழ் ஈழப்பகுதி களைச் சீனாவிற்கு இலங்கை இப் போது தாரை வார்த்துக் கொடுத் திருக்கிறது! இப்படிப்பட்ட இலங்கை இந்தியாவின் நண்பனா?

1972--_73-இல் நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை யார் பக்கம் நின்றது? பாகிஸ்தான் விமானங்களும், போர்க்கப்பல்களும் கிழக்குப் பாகிஸ்தான் செல்வதற்குக் கொழும்புத் துறைமுகத்தையும், விமான நிலையங்களையும் பயன் படுத்திக் கொண்டன; எரிபொருள் நிரப்பிக் கொண்டன. இறுதியில் இந்திரா காந்தி அம்மையாரின் தொலைநோக்குப் பார்வையால் மத அடிப்படையில் பிரிந்த நாட்டை மொழி அடிப்படையில் பிரித்து பங்களா தேஷ் என்று ஒரு தனிநாடு உருவாக்கப்பட்டது. இலங்கை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வந்துள்ளது. இதனை நன்கு மனத்தில் கொண்ட இந்திராகாந்தி அம்மை யார் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

தமிழ் ஓவியா said...

திரிகோணமலையில் அமெரிக்கா ஏவுகணைத்தளம் அமைக்க இலங்கை அனுமதி கொடுத்தது. அதுவரையில் அமைதியோடிருந்த பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் கடுமை யான மொழிகளால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார். விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்று இந்திராகாந்தி அம்மையார் கூறி யவுடன் திரிகோணமலையிலிருந்து அமெரிக்க ராணுவத்தளம் உடனடி யாக அகற்றப்பட்டது. இன்று என்ன நடக்கிறது? அமெரிக்காவிற்குப் பதிலாகச் சீனா திரிகோணமலையில் இருக்கிறது. திரிகோணமலை எவன் கையில் இருந்தாலும் அது இந்தி யாவின் பாதுபாப்பிற்கு ஏற்றதல்ல என்பதை இந்திரா அம்மையார் நன்கு உணர்ந்திருந்தார். இன்றைய டில்லி ஆட்சியாளர்கள் என்ன கருது கிறார்கள்? திரிகோணமலையிலிருந்து யார் தாக்குதல் தொடுத்தாலும் சாகப்போகிறவன் தமிழ் நாட்டுக் காரன் தானே! சாகட்டும் என்று நினைக்கிறார்கள். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை நிறுத்து இல்லையேல் திரும்ப அடிவிழும் என்று சொல்வதற்கு இந்திராகாந்தி அம்மையார் இன்றில்லையே!

இவற்றையெல்லாம் நன்கு மனத்தில் பதிய வைத்திருந்தார் இந் திரா அம்மையார். இந்திராகாந்தியை மடக்குவதற்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனா எவ்வளவோ முயன்று பார்த்தார். நாம் இருவரும் ஒரே இனத்தைச் (ஆரியர்) சேர்ந் தவர்கள்; என் மூக்கும் உங்கள் மூக்கும் அமைப்பில் ஒன்று போலவே இருக்கின்றன பார்த்தீர்களா! என்றெல்லாம் அன்பொழுகப் பேசிப்பார்த்தார். இந்திராகாந்தி அவரை நம்பவில்லை.

இலங்கையில் தமிழீழத் தாயகம் கேட்டுப் போராடி வந்தவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் தங்களை ஈடு படுத்திக் கொண்டபோது இந்திரா காந்தி அம்மையார் விடுதலைப் புலி களின் இயக்கத்தலைவர் தம்பி பிர பாகரனை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவி களையெல்லாம் செய்தார். ஜெய வர்த்தனாவின் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்திராவின் மரணத் திற்குப் பிறகு ராஜீவ்காந்தி பிரத மரான பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது, நட்பு நாடான இலங்கைக்குள் அமைதிப்படை அனுப்பப்பட்டது. இந்திய விமா னங்கள் தமிழீழப் பகுதியில் தாழ் வாகப் பறந்து யாரும் கேட்காமலேயே உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுவந்தன. செய்தியாளர் கள் இதுபற்றிப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம், வேறு ஒரு நாட்டுக்குள் இவ்வாறு அத்துமீறி நுழையலாமா? என்று கேட்டதற்கு ‘It is a lesson to Jeywardane’ என்று பதில் சொன் னார். இதற்குப் பெயர் நட்பு நாடு!

தமிழ் ஓவியா said...


வரலாற்றுச் சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம் புத்த மார்க்கம் பற்றிய பல அறிவுச் செல்வங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. அந்த அறிவுக் கருவூலத்தை ஆரியர் கள் நெருப்பிட்டுக் கொளுத்தி விட்டார்கள்.

உலகப்போர் நடந்தபோது செர்மானிய விமானங்கள் லண்டன் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகங்களைக் குறி வைத்துத் தாக்கின. ஓர் இனத்தை அழிப்பதற்கு அந்த இனத்தின் அறிவுக் கருவூ லத்தை அழித்துவிட்டால் போதுமே.

லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ். பொது நூலகத்தைச் சிங்களப் படையினர் நெருப்பிட்டுச் சாம்ப லாக்கி விட்டார்கள்! தான் போற்றி வளர்த்த நூலகம் எரிவதைப் பார்த்த ஒரு பாதிரியார் நெஞ்சு வெடித்து நூலகத்தின் முன்பாக இறந்து போன தும் அவரைத் தூக்கி எரியும் நூலகத் திற்குள் சிங்களப் படையினர் வீசி விட்டுக் கைகொட்டிச் சிரிக்க வில்லையா?
லட்சக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப் பட்ட கொடூர நிகழ்வுகளுக்கு ஒரு கண்டனம் கூடத்தெரிவிக்காத டில்லி ஆட்சியாளர்கள் தமிழ்மக்களின் நண்பர்களா?

இலங்கையை இன்னும் நட்பு நாடெனக்கருதுவோரைத் தமிழினத் தின் நண்பர்களாகக் கருதுவோரை வஞ்ச நெஞ்சம் படைத்த முட்டாள் கள் என்போம்!

ஆதலின் இலங்கை எந்தக் காலத்திலும் இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததில்லை. பிற்காலச் சோழர் காலத்தில் இதே நிலைதான் இருந்தது. எனவே இலங்கையை நட்பு நாடென்று உரிமை பாராட்டுவோர் - இனப்படுகொலை நடத்திய நாட்டோடு நல்லுறவு வேண்டுவோர் உலகமெங்கும் பரந்து கிடக்கும் பத்துக்கோடித்தமிழர்களின் எதிரிகளாகவே கருதப்படுவார்கள் என்பது உறுதி.

இறுதியாக - ஒரு நட்பு நாட்டின் பிரதமரான ராஜீவ்காந்தி இலங்கைக் குச் சென்றபோது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப் படுகிறது. அப்போது சிங்கள ராணுவ வீரன் ஒருவன் தன் துப்பாக்கிக் கட் டையால் ராஜீவ் காந்தியின் உயிருக் குக் குறிவைத்துத் தாக்க முற்படு கிறான். ராஜீவ் தடுமாறிச் சமாளித்துக் கொள்கிறார் இக்காட்சி உலகம் முழுவதிலுமுள்ள ஊடகங்களில் வெளியாகியது. ராஜீவைத் தாக்கிய அந்த ராணுவ வீரனுக்குப் பதவி உயர்வு தரப்பட்டது. பின்னாளில் அவன் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டான். (ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை இங்கிருந்தல்லவா தொடங்கப் பெற வேண்டும்). இதனால் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பது ஒரு கேலிக்கூத்து! அடி முட்டாள்தனம்! ஒரு நட்பு நாட்டின் பிரதமரைக் கொலை செய்ய முயன்றவனுக்குப் பதவி உயர்வும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்கிறது என்றால் அந்த நாட்டை நட்பு நாடென்று சொல் வதற்கு டெல்லி வெட்கப்பட வேண் டாமா? அவர்களுக்கு அதுவெல்லாம் தெரியாது. சுப்பிரமணியசாமியைப் போன்ற புரோக்கர்கள் இருக்கும்வரை ராஜபக்சேவைப் போன்ற கொடுங்கோலர்களுக்கு மகிழ்ச்சி தானே! ஓர் அயோக்கியன் இன்னோர் அயோக்கியனை அண்மையில் கொழும்பில் சந்தித்து உரையாடி விட்டு டெல்லி திரும்பியிருக்கிறான். உலகம் முழுக்க ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் நேரத்தில் டெல்லியும், சு.சாமியும் ராஜபக் சேவோடு கை குலுக்குவது எவ்வளவு இழிந்த செயல்!

தமிழ் ஓவியா said...


பொன் மொழிகள்



எல்லோருமே வெற்றியை விரும்பு கின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர். - சிசரோ

உறுதியான மனம் கொண்டவர்களே உன்னதமான எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். - கார்லைல்

எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேற முடியும். - மேட்டர்லிங் உழைக்காமல் வெற்றி பெற முயல்வது, வயலில் விதைக்காமல் அறுவடைக்குச் செல்வதைப் போன்றது. - எமர்சன்

வாழ்க்கையில் வெற்றி பெற ஆசைபடுபவர் முதலில் கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும் - மில்டன்

தமிழ் ஓவியா said...


இந்தி நுழைப்பு



மது விலக்குப் போலவே இந்தி நுழைப்பு என்கிற திரு. ஆச்சாரியார் திட்டமும் மக்களது கல்வி அறிவைப் பாழ்படுத்த வேண்டுமென்றே கொண்டு வரப்பட்டதாகும்.

பார்ப்பனர்களின் மொழியாகிய சமஸ்கிருதத்தைப் புகுத்தினால், அதற்குப் பெரிய எதிர்ப்பு ஏற்படும் எனக் கருதியே பார்ப்பன இன உணர்ச்சிக்கு அடிப்படையான சமஸ்கிருதத்தின் எதிரொலியான இந்தியை நுழைக்க முயற்சித்தார் திரு. ஆச்சாரியார்.

இந்தியின் ரகசியம் என்ன என்பதையும், குடிஅரசின் மூலம் விளக்கிய பிறகே உண்மையை உணரலாயினர் மக்கள்.

திரு. ஆச்சாரியார் பல முறை (லயோலா கல்லூரியில் ஒருமுறை) பேசும்போது, சமஸ்கிருதத்தின் அலங்கார அணிகளை நீக்கிப் பார்த்தால், அதுதான் இந்தி என்றும், இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் கூறினார்.

இந்தியை ஒழிக்க பெரிய கிளர்ச்சி செய்து, 3,000 பேருக்கு மேல் ஆண்கள், பெண்கள், முதிய வர்கள், குழந்தைகள் உட்பட சிறை சென்று, இரண்டு உயிர்களைப் பலி கொடுக்க வேண்டி வந்தது.

செகண்டரி ஸ்கூல் அய்ஸ் ஸ்கூல் ஒழிப்பு:

கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்குக் குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களும்,
60 பிள்ளைகளுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங் களும் எடுக்கப்பட்டு விட வேண் டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

60 பிள்ளைகள் கிராமத்தில் கிடைப்பது, அதுவும் 1938இல் என் றால், அது பெரிய சிரமமான காரிய மாகும் என்பதை நாம் யூகிக்க முடியும்.

அந்த சாக்கை வைத்துக் கொண்டு பள்ளியை இழுத்து மூடச் சொன் னார் மகானுபாவர் ஆச்சாரியார் என்றால், அவரது மனுதர்ம மனப்பான்மைக்கு வேறு சான்று கூறவா வேண்டும்?

சர்க்கார் அனுமதி பெற்றுப் பொது ஜனங்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வந்த பள்ளிகளை ஒழிக்க, சரியாக நடக்காத பள்ளிகள் அத்தனையும் இழுத்து மூடப்படும் என்றார்.

திருத்தி செவ்வனே நடைபெறும் படி செய்யப்படும் என்று கூறவில்லை திரு. ஆச்சாரியார் என்பதைக் கவனியுங்கள்.

கோயம்புத்தூரில் இருந்த (ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் துவக்கப்பட்டது) காட்டுத்துறைக் கல்லூரி (Forest College) யை இழுத்து மூடி விடும்படிச் செய்தார் திரு. ஆச்சாரியார்.

இதனால் பயனடைந்தவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள் என்பதே இதற்கு அடிப்படையான காரணமாகும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை ஒட்டி, தமிழர்களாகிய நமது பிள்ளைகளும் சரிசமமான வாய்ப்புப் பெற்றுப் படிக்க வைக்கச் செய்த காலேஜ் செலக்ஷன் கமிட்டியை (ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது) ஒரே வரியில் உத்தரவு போட்டு, ஒழித்துக் கட்டித் தமிழர்களது கல்லூரிப் படிப்பிற்குக் கல்லறை எழுப்பினார் காருண்ய சீலர் திரு. ஆச்சாரியார்.

கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு திரு. ஆச்சாரியார் ஆட்சியில் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இருந்தது.

ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் நூல் பக்கம் 13

க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி (கி.ஆ)

தமிழ் ஓவியா said...


சிரிக்கலாம்...


பள்ளி மாணவன்: எங்கப் பாட்டி நேத்து சாமி வந்து ஆடுச்சுடா. ரொம்ப நேரமாகியும் மலை ஏறவே இல்லை.

அவன்நண்பன் : டேய்... உங்கப் பாட்டி பஸ் ஏறுவதே ரொம்ப சிரமம். இதுல எங்கடா மலை ஏறுவது?

தேநீர் கடையில் ஒருவர் : நிறைய காவடிகளைத் தூக்கிக்கிட்டு, கூட்டம் கூட்டமா போறாங்களே... இவ்வளவு காவடிகளா இருக்கு?

மற்றவர் : ஆமாம் நண்பா! புஷ்பக் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடின்னு நிறைய இருக்கு. எல்லாக் காவடியையும் தூக்கிட்டுப் போயிட்டு, கடைசியா அன்னக் காவடியா இந்த டீக்கடையில தான்உட்கார்ந்திருப்பார்கள். அய்யப்பசாமி : கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை.

அறிவுச்சாமி: தம்பி அத கல்லு, முள்ளு மேல நின்னு சொல்லுங்க... சூப்பர் டீலக்ஸ் பஸ்ல இருந்து சொல்லாதீங்க... - வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

அறிவுச் சுட்டியின் அதிரடிக் கேள்வி


வெள்ளைகாரங்க நாடு குளிரா இருக்குமாம்; அதனால் அவங்க நாட்டுக் குழந்தைங்க பள்ளிக்கூடம் போகும்போது 'சூ' (shoe) போடுறாங்க. நம்ம நாடு சூரியன் சுட்டெரிக்கிற நாடு சும்மாவே வேர்த்துக் கொட்டுது; நம்ம குழந்தைங்களுக்கு எதுக்கு 'சூ' போட்டுவிடுறாங்க?

தமிழ் ஓவியா said...


நமது எம்.ஜி.ஆர். முடிந்தால் பதில் சொல்லட்டும்!



நடைவண்டி நாயகர்களும் முந்தா நாள் மழையிலே நேற்று முளைத்த காளான்களும் டெசோவை நாடகம் என்று விமர்சிக்கலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லி விட்டாராம். அடேயப்பா, அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். தாண்டித் தோண்டி யில் விழுகிறது. தாம் தூம் என்று எகிறிக் குதிக்கிறது.

நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெ அம்மை யாரை சிக்கலில் நிறுத்தும் வேலையில் இறங்கவேண் டாம் என்று விடுதலை (21.2.2013) எச்சரித்திருந்தது.

அம்மா மீது என்ன கோபமோ? மறுபடியும், மறுபடியும் வீண் சர்ச்சையில் ஈடுபட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிக்கலில் மாட்டவைத்துக் கொண்டு இருக்கிறது அவ்வேடு!

நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்குச் சில கேள்விகள்:

1. இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லுவது விடுதலைப் புலிகளைக் காப்பாற்றவே என்று சொன்னவர் யார்? இப்பொழுது போரினால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்களே என்று கிளிசரின் கண்ணீர் விடுவது யார்?

2. போர் என்று சொன்னால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவர் யார்?
இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து லிட்டர் லிட்டராகக் கண்ணீர் சிந்துவது யார்?

3. இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா ஈடு பட்டால் நாளை இந்தியா விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடாதா? அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இது கூடத் தெரியாதா? என்று கேள்வி கேட்டவர் யார்?
இதற்கு மாறாக முரண்பட்டுப் பேசுவது யார்?

சாட்சாத் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள்தானே!

முடிந்தால் இவற்றை மறுத்துவிட்டு எழுந்து முண்டா தட்டட்டும் நமது எம்.ஜி.ஆர்.

முடியவில்லை என்றால், மூலையில் ஒடுங்கிக் கிடக்கட்டும். இல்லை என்றால் வண்டி வண்டியாக எழுத நேரிடும்.

கடைசியில் அம்மையார் அவர்களின்பாடுதான் திண்டாட்டம்!