Search This Blog

5.3.13

நூறு விவேகானந்தர்களுக்கு மேலானவரா ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்!

அடையாளம் காண்பீர் இவர்தான் சங்கராச்சாரியார்! 

ஜெகத் குரு - லோகக் குரு என்றெல்லாம் விளம்பரக் காற்றை அடைத்து வானத்தில் பட்டமாகப் பறக்க விடுகின்றார்களே பார்ப்பனர்கள் - அவர் களின் யோக்கியதை, குணநலன்கள், சுபாவங்கள் எந்தத் தகுதியில் இருக்கின்றன என்பதை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

1992 டிசம்பர் 6இல் உலக நாடுகளின் மத்தியில் பாரத புண்ணிய பூமி என்கிறார்களே - இந்த இந்தியா தலை கவிழ்ந்து நின்றது.

450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முசுலிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை அயோத்தியில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள், பி.ஜே.பி. தலைவர்கள் உட்பட சங்பரிவார்க் கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு பட்டப் பகலில் அடித்து நொறுக்கினார்கள்.

அதற்காக அன்று முதல் இன்று வரை அவர்கள் வெட்கப்பட்டவர்களும் அல்லர் - மன்னிப்புக் கோரிய வர்களும் அல்லர்.

ஒரு கட்டத்தில் அந்தக் குற்றத்தில் சம்பந்தப் பட்டவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கலாமா என்ற கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் ஏற்பட்டது.

அப்பொழுது காஞ்சி சங்கராச்சாரியாரும் (சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி) என்ன சொன்னார் தெரியுமா?

அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை என்று கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை (தினமணி 27.11.2000) என்று கூறியவர்தான்.

அப்படிப்பட்டவர் இப்பொழுது இன்னொன்றையும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் அயோத்தி யில் ராமன் கோயில் கட்டலாம் என்று சொல்லி யுள்ளார். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் 21 ஆண்டுகள் ஓடிய நிலையிலும் இதுவரை தண்டிக் கப்படாத காரணத்தால் ஜெயேந்திரர் போன்றவர்களால் இப்படி எல்லாம் துணிவாக பேச முடிகிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்பொழுது, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது குறித்து சங்கராச்சாரியார் என்று சொல்லப்படுபவர் பேசுகிறார் என்றால், இது நீதிமன்ற அவமதிப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும்; எவ்வளவு இந்து மத வெறி பிடித்த ஆசாமியாக சங்கராச்சாரியார் என்று சொல்லப்படுபவர்களே இருக்கின் றனர் என்பது விளங்கவில்லையா!?

ஒரு கட்டத்திலே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்மார்த்தர் - ராமன் கோயில் என்பது வைணவர்களுக்குச் சம்பந்தப்பட்டது; இதில் இவர் தலையிடக் கூடாது என்று சங்பரிவார் வட்டாரத் திலிருந்து குரல் கிளம்பியுள்ளது. அதை எல்லாம் பொருட்படுத்தக் கூடியவர்களா ஜெயேந்திரர் போன்ற பூணூல்வாதிகள்?

இந்தக் கூத்தில் இவர்கள் உலகில் அமைதி நிலவ அடிக்கடி யாகங்களை நடத்துகிறவர்கள். இன்னொரு மதக்காரரின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பது - அதன் காரணமாக நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் படுகொலைக்கு ஆளாவது என்பதெல்லாம் இன்னொருபுறத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

உலகில் அமைதியும், சாந்தமும் தவழ்ந்திட யாகம் செய்பவர்களின் யோக்கியதை இதுதானா?

கடவுளுக்குமேலே பிராமணன் என்று சொன்னவர் தான் இந்த ஜெயேந்திரர்; இதன் மூலம் எப்படிப் பட்ட பார்ப்பன வெறியர் என்பது விளங்கவில்லையா? (9.10.2002).

நூறு விவேகானந்தர்களுக்கு மேலே நான் போய்விட்டேன்! என்று சொன்ன தலைக்கனம் படைத்தவரும் இவரே!

என்னதான் விவேகானந்தரின் 150ஆம் ஜெயந்தி என்று கூறி இந்துத்துவாவைப் பரப்பும் வேலையில் பார்ப்பனர் ஈடுபட்டாலும், விவேகானந்தர் சூத்திரர் தானே! அதனை மனதில் வைத்துக் கொண்டு தான் ஜெயேந்திர சரஸ்வதி நூறு விவேகானந்தர்களுக்கு மேல் தான் சென்று விட்டதாகக் கூறுகிறார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

சங்கரமடம் என்றாலும் சரி, பார்ப்பனர் சங்கம் என்றாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்., என்றாலும் சரி, பிஜேபி என்று கூறிக் கொண்டாலும் சரி எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அந்தக் குட்டை என்பது பார்ப்பனர்கள் என்பதையும் மறக்க வேண்டாம் - மறக்கவேண்டாம்!
              ---------------------"விடுதலை” தலையங்கம் 5-3-2013

7 comments:

தமிழ் ஓவியா said...


எங்கு நோக்கினும் தலைகள்! தலைகள்!!


சுனாமியாக எழுந்தது தமிழினம்!
தளபதி மு.க. ஸ்டாலினின் எச்சரிக்கையும் காவல்துறை நடவடிக்கையும்


முற்றுகைப் போராட் டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். வள்ளுவர் கோட்டம் வட்டாரமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.

தி.மு.க., தி.க., விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக் கத் தமிழர் பேர வையைச் சேர்ந்தவர் களும், பொது மக் களும் தமிழின உணர் வாளர்களும் சுனாமி போல பொங்கி எழுந் தனர். மாவட்ட வாரி யாக அறிவிக்கப்பட்டு தோழர்கள் கைதாக அணி வகுத்து நின்ற னர். பல்லாயிரக் கணக் கான இம்மக்களை எப்படி கைது செய் வது? எத்தனை வாகனங்களில் ஏற்றிச் செல்லுவது? எங்கு கொண்டு போய் வைப் பது என்பதறியாமல் காவல்துறையினரே திகைத்தனர்.

அந்த நேரத்தில் திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கைது செய் யும் பொறுப்பு காவல் துறையைச் சேர்ந்தது. காவல்துறைக்கு எல்லா வகையிலும் ஒத் துழைப்புக் கொடுக்க நாங்கள் தயார். வாகனங்களை ஏற்பாடு செய்யாவிட்டால் எங் களைக் கைது செய்ய முன் வராவிட்டால் இலங்கைத் தூதரகத் திற்கு நாங்கள் நடந்து செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்தார்.

அதன் பிறகு வள்ளு வர் கோட்டத்திற்கு அனைவரும் செல்லு மாறு கேட்டுக் கொண் டதற்கிணைங்க, ஆயிரக் கணக்கான போராட்ட வீரர்களும் அமைதி யாக வள்ளுவர் கோட்டத் திற்கு நடந்து சென் றனர். இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பதில் அய்யமில்லை. தமி ழீழம் தமிழர் தாகம்!

தமிழ் ஓவியா said...

இந்திராகாந்தி கடைபிடித்ததை
இந்திய அரசு கடைபிடிக்க வேண்டும்

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் கைதான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த போராட்டம் காவல்துறையினரே கைது செய்து வாகனங்களில் ஏற்ற முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போராட்டத்தின் நோக்கங்களை ஆசிரியர் வீரமணி விரிவாக குறிப்பிட்டுள்ளார். அய்.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

மேலும் சில நாடுகளில் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 1971-இல் லண்டன் நகரில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இந்திராகாந்தி, அந்த கால கட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட சிலநாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அவரது அதே கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கவேண்டும். - கைதான தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழ் ஓவியா said...


டெசோ சார்பில் இலங்கைத் தூதரகம் முன் முற்றுகை! பல்லாயிரம் தமிழர்கள் கைது!

இலங்கை தூதரகத்தைக் முற்றுகையிட, சென்ற டெசோ அமைப்பினர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். (சென்னை -5.3.2013)

சென்னை, மார்ச் 5- கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ அமைப்பு கூடி, எடுத்த முடிவுக்கேற்ப, இன்று (5.3.2013) காலை, டெசோவின் சார்பில், இலங்கைக் கொடுங்கோலன் இராஜபக்சே நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மீறல், போர் நெறிகளுக்கெதிராக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தும், பிரபாகரனின் 12 வயது பச்சிளம் பாலகனின் மார்பில் அய்ந்து குண்டுகளால் துளைத்து அந்தப் பழியைக்கூட பிறர்மீது போட முயற்சிக்கும் பொல்லாத ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பதோடு, அவரது அரசின் துணைத் தூதரகம் தமிழ்நாட்டுத் தலைநகரில் இருக்க அனுமதிப்பது மிகப் பெரிய தேசிய அவமானம்; எனவே இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு மூட வைக்கும் போராட்டம், இன்று காலை 11 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் டெசோவின் உறுப்பினர் தளபதி மு.க. ஸ்டாலின், ஆசிரியர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். காவல்துறை கைது செய்யவே திணறிய நிலை இருந்தது என்றாலும் வள்ளு வர் கோட்டத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு வந்து, கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டம் மார்ச் 7இல் டில்லியில் தேசிய தலைவர்கள், மனித உரிமை ஆணையம், உலக பொது மன்னிப்பு சபை அனைத்தும் கலந்து கொண்டு மாபெரும் மாநாடு நடத்தவிருப்பதில் மேலும் தனி சுதந்திர உரிமைகள், பொருளாதாரத் தடை இவற்றை வற்புறுத்து வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினர். பிறகு கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியம் கொண்டு சென்றனர். 49 ஆவது முறையாக தமிழர் தலைவர் கைது செய்யப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல் வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான் மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல் மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

Anonymous said...

Yarume iladha kadaiku yaruku tea aathura. Unnoda ularalgalai nanum avvapodhu thiratti.com web pogum bodhu padika neridugiradhu. Unaku brahmana dhvesham ivlo irukum bodhu hindu kaluku avanga madham meedhu veri irundha ena thapu? Loosu koomuta. 450 varusham munnadi anga masoodhi irundhadha nee parthaya? Adha mattum endha adipadaila nambara? Unaku brahmin meedhum hindu madham avlo verupu. Unna madhiri aalunga ivlo verupa kattum bodhu dhan hindu kalum thangal madham meedhu veri irundhal ena thavaru erukapokudhu. Indha ulagatthu 99% yarume perfect kadayadhu. Adhu ella madhathula irukaravangalaiyum sertthu dhan.

தமிழ் ஓவியா said...


தமிழர்களே, தி(இ)னமலரைப் புரிந்துகொள்வீர்!


நேற்று சென் னையில் ஈழத் தமி ழர்களின் மீள் வாழ்வுக்காக நடைபெற்ற இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம்பற்றி செய்தி வெளி யிட்ட பார்ப்பன இனமலர் ஏடு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பெயரை மட்டும் மிகவும் விழிப்பாக இருட்டடிப்புச் செய்து செய்தியை வெளியிட்டது.

தினமலர் என்பது இனமலர்தான், பார்ப்பன மலர்தான் என்பதைத் தமிழர்களே, புரிந்துகொள்வீர்!

தமிழ் ஓவியா said...


பார்ப்பான்


பார்ப்பான் தன் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவன் எவனோ, அவனை எல்லாம் மகான், மகாத்மா, ஆழ்வார், நாயன்மார்களாக ஆக்கி விடுகின்றான். பார்ப்பனர்கள் தம் காலைக் கழுவ மறுப்பவனை ஒழித்தே கட்டி இருக்கின்றார்கள்.
(விடுதலை, 2.9.1960)