Search This Blog

15.3.13

பார்ப்பான் பணக்காரனானால்? - பெரியார்

இந்த நாட்டில் பார்ப்பனர் மீது பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி செய்து வரும் (என்னால் தோற்றுவிக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச்சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதீக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு, பாங்கி, வியாபாரம், இயந்திர முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு ஏராள மான பணம் சம்பாதித்து அவர்களில் அநேகர் செல்வந்தர்களாகவும்,  இலட்சாதிபதியாகளாகவும், ஆகிவிட்டார்கள்.

இதுதான் துவேஷப் பிரச் சாரத்தால் ஏற்பட்ட பயன் என்று பார்ப்பனர்கள் மீது வெறுப்புக் கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகிறார்கள். இது உண்மையானால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும்.

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகதானே தவிர, பார்ப்பான் பணக்கார னாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் இராஜா சர். அண்ணாமலை செட்டியார், பொப்ளி ராஜா, சர்.ஷண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோட்டீஸ்வரனாகவும், இலட்சாதி பதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே, எனக்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும் சிறிது கூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.

 பணக்காரத் தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்லையானது, சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல்லையை கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக் கூடியதும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.

ஆனால், இந்த மேல் ஜாதித்தன்மை என்பது இந்த நாட்டுக்கு, பெரும்பாலான மனித சமுதாயத் துக்கு மிக மிகக் கேடானதும், மகா குற்றமுடை யதாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மை யையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும். பெரிய மோசடியும் கிரிமினலு மாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன் மையை ஒழித்தாக  வேண்டும் என்பது பதிலாகும்.

                ------------------- தந்தை பெரியார், - "குடிஅரசு" - 9.11.1946 (3ஆம் பக்கம்)

30 comments:

தமிழ் ஓவியா said...


பலே, பக்தி வியாபாரம்!



பக்தியே ஒரு பிசினஸ் என்று சாட்சாத் சங்கராச்சாரியாரே கூறியுள்ளார் பல நேரங்களில், அது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பது நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அதுவும் பக்தியை வியாபாரப் பொருளாக ஆக்குவதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அடிக்க வேறு யாராலும் முடியவே முடியாது.

திருப்பதி கோயிலுக்குப் பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பது என்பது விசேடம். அப்படிப் பக்தர்கள் செலுத்தும் முடியை விற்பதன் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றுக்குத் திருப்பதி தேவஸ்தானத்திற்குக் கிடைக்கக் கூடிய தொகை நூறு கோடி ரூபாயாம்.

இப்பொழுது முடி காணிக்கை செய்பவர்களுக்குச் சிறப்புப் பரிசு வேறு அறிவிக்கப்பட்டுள்ளது. 31 அங்குலம் நீளம் கொண்ட முடியைப் பக்தர் ஒருவர் ஏழு மலையானுக்குக் காணிக்கையாகக் கொடுத் தால் 5 லட்டு இலவசமாகக் கொடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காகத் தனிக் கவுண்டராம்.

அது என்ன 31 அங்குல முடி நீளம், மார்க் கெட்டில் அதற்கு ஏதாவது மவுசு இருக்கக் கூடும். ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இறைப்பார்கள்?

இப்பொழுது ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதிக்குச் செல்ல வேண்டியதில்லை. நாடெங்கும் கிளைக் கடைகளைத் திறந்து வைத்துள்ளார்கள். ஆங்காங்கே கல்லா கட்டுவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

சிறீரங்கத்தில் மாநாடு நடத்தும் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் குறிப்பாக அதன் தலைவர் திருவாளர் வேதாந்தம் என்பவர் கோயிலில் தரிசனம் செய்ய தட்சணை கேட்பது பாவம் - கூடவே கூடாது என்று கரடியாகக் கத்திக் கொண்டு தான் திரிகிறார்; யார் காதில் போட்டுக் கொள்கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இரவில் கோயிலைத் திறந்து வைத்திருக்கக் கூடாது, அது ஆகம விதிகளுக்கு விரோதமானது என்றெல்லாம் சங்கராச்சாரியாரிலிருந்து திருவாளர் ராம. கோபாலன் வரை ஒவ்வொரு ஆண்டும் சொல்லித் தான் பார்க்கிறார்கள். அவற்றை யார் சீந்து கிறார்கள்?
ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் இரவு 12 மணிக்கு கோயிலைத் திறந்து வைத்திருந்தால் ஏராளமான அளவுக்கு வரும்படி கிடைக்கிறதே - பக்தர்கள் வெறுங் கையோடா கோயிலுக்கு வருகிறார்கள்? அப்படி வெறுங் கையோடு வந்தாலும் எந்த அர்ச்சகப் பார்ப்பான் மதிப்பான்?

ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பன்று மிகப் பெரிய அளவில் வருமானம், தட்சணை கொட்டுகிறது. ஆகமத்தைப் பார்த்தால் சம்பாதிக்க முடியுமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சொன்னால் மட்டும்தான் ஆகமங்கள் குறுக்கிடும்; மற்றபடி வருமான விடயத்தில் ஆகம மாவது மண்ணாக் கட்டியாவது! எல்லாம் அவாளுக்குத் தெரியாதா என்ன?

வரும்படி பெருந்தொகை கிடைக்குமானால் ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் பிரசாதத்தைத் தூக்கிக் கொண்டு பெரும் பண முதலைகள் - தொழில் அதிபர் தங்கி இருக்கும் விடுதிகளை (Lodges)நோக்கியல்லவா பறந்தோடு கிறார்கள்!

பணம் படைத்தவர்கள் என்றால் பகவான் அவர்களைத் தேடி ஓடுகிறான் என்பது இதன் பொருள்.

கோயிலில் மூல விக்ரகத்தைத் தரிசிப்பதில்கூட பல வகுப்புகள் உள்ளன. சீக்கிரம் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமென்றால் தட்கல் முறையில் அதற்கென்றுள்ள அந்தப் பெரும் தொகையைத் தூக்கி எறிந்தால் தரிசனம் சில நிமிடங்களில் கிட்டும்.

பஞ்சைப் பராரிகள் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டுமானால் பல நாள்கள் பசி பட்டினி கிடந்து காத்திருக்க வேண்டிய அவல நிலைதான். அதனால் தானோ என்னவோ கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி! என்ற பழமொழி நடைமுறையில் இருக்கிறது போலும்!

அன்பே கடவுள் என்றும் அவன் உருவமற்றவன் என்றும் ஒரு பக்கத்தில் இதோபதேசம் செய்து, கொண்டு, இன்னொரு பக்கத்தில் கோயில் கட்டி உருவங்களை மனம் போனவாக்கில் வடித்து வைத்து, உண்டியலையும் ஏற்பாடு செய்து மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கும் கயவாளித் தனத்தை என்னவென்று சொல்லுவது!

கோயில் அமைப்பு முறை என்பது சுரண்டலுக்கான ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமா தயக்கம்?
15-3-2013

தமிழ் ஓவியா said...


மத்திய தேர்வாணையத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேர்வாணையத்தில் தமிழ் புறக்கணிப்பா?


18ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் இதனையும் இணைத்துப் போராடுவோம்!

இளைஞர்களே, மாணவர்களே திரள்வீர்! திரள்வீர்!!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நன்றி! நன்றி!! நன்றி!!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழில் தேர்வு எழுதுவதற்கு பல முட்டுக்கட்டை களைப் போட்டுள்ளது என்ற கொதிப்பு அடங்கு வதற்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் அறவே தூக்கி எறியப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இவ்விரு சமூக அநீதிகளை எதிர்த்து வரும் 18ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும், 19ஆம் தேதி சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (UPSC) இந்தி, ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தி தமிழ் உள்ளிட்ட தாய்மொழிகளைப் புறந்தள்ளியுள்ள நிலையில், அது குறித்து மாநில மொழி பேசுவோரும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட் டோரும் கிளர்ந்து எழுந்துள்ள (திராவிடர் கழகம் வரும் 18ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது) இதே கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும் தன் பங்குக்கு மாநிலத் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்விலும் தமிழைப் பிடரியை பிடித்து வெளியில் தள்ளியுள்ள கொடுமையை என்னென்பது!

தமிழ் அறவே வெளியேற்றம்

பிரிவு இரண்டில் (Group II) 100 கேள்விகள் பொது அறிவுப் பகுதி; 100 கேள்விகள் முழுவதும் பொதுத் தமிழ் தாளாக இருக்கும். தமிழ் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் உண்டு.

இப்பொழுது தமிழ்ப் பாடங்களில் கேட்கப்பட்ட நூறு கேள்விகளும் அறவே தூக்கி எறியப்பட்டு விட்டன. அதாவது தமிழ்ப் பொதுத்தாள் அறவே நீக்கப்பட்டு விட்டது. அதற்குப் பதில் 50 கேள்விகள் பன்னாட்டுத் தொடர்பான கேள்விகள் (International Affairs) மீதி 50 கேள்விகள் கணிதம், நுண்ணறிவு தொடர்பானவை சேர்க்கப்பட்டுள்ளன.

நான்காம் பிரிவில் (Group iv) 100 கேள்விகள் பொது அறிவுப் பகுதியிலும், 100 கேள்விகள் தமிழ்ப் பாடங்களில் கேள்விகளும் (பொதுத் தமிழ்த்தாள்) இடம் பெற்றிருந்தன. 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் உண்டு.

இப்பொழுது பொதுத் தமிழ்ப் பகுதியில் கேட்கப்பட்ட நூறு கேள்விகளுக்குப் பதிலாக வெறும் 50 கேள்விகள், மீதி 50 கேள்விகள் நுண்ணறிவு உளவியல் தொடர்பான வினாக்கள் இடம் பெறுமாம்.

கிராம நிருவாக அலுவலர் தேர்விலும் தமிழ் வெளியேற்றம்!

அடுத்து கிராம நிருவாக அலுவலர் (VAO) களுக்கான தேர்வில் 100 கேள்விகள் பொது அறிவில் இடம் பெற்றிருந்தன. 100 கேள்விகள் தமிழ்மொழி தொடர் பானவை பற்றிய வினாக்கள் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது தமிழ் தொடர்பான நூறு கேள்விகளும் (பொதுத் தமிழ்த்தாள்) அறவே நீக்கப்பட்டு, 50 கேள்விகள் கிராம நிருவாக அதிகாரி தொடர்பான விதிகள், நடைமுறைகள் தொடர்பான வினாக்கள்! (பணிக்குச் செல்லுவதற்கு முன்பாக அது தொடர்பான விவரங்கள் தெரிந்து கொண்டு இருக்க வேண்டுமாம்) மீதி 50 கேள்விகள் நுண்ணறிவு தொடர்பானவையாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்தின் தலைவராகப் பார்ப்பனர் நியமிக்கப்பட்டதன் விளைவு!

காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் சரி, அதற்குப்பின் தி.மு.க. ஆட்சி காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த காலத்திலும் சரி, தமிழ்நாடு தேர்வாணையத்தின் தலைவராகப் பார்ப்பனர் ஒருவரை நியமனம் செய்ததில்லை.
இந்த முறை ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஓராண்டே பதவி வகிக்க வாய்ப்புள்ள (ஓய்வு பெற்ற) காவல்துறை அதிகாரி திரு. நட்ராஜ் என்ற பார்ப்பனரை இந்த முக்கியமான இடத்தில் தலைவராக நியமனம் செய்தார்.

தமிழ் ஓவியா said...


இவர் தலைவராக இருந்த ஓராண்டுக் காலத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஒரு பக்கம்; ஓய்வு பெறப் போகும் காலத்தில் தேர்வுகளில் தமிழுக்கு இருந்த இடத்தையும், முக்கியத்துவத்தையும், வாய்ப்பையும் கழுத்தைத் திருகிப் புதைப்பது போல முற்றிலும் தமிழைத் தூக்கி எறியக் கூடிய ஒரு திட்டத்திற்குக் கடைசிக் கையொப்பமிட்டு விட்டு வயது மூப்பின் காரணமாக வெளியேறியுள்ளார்.

தமிழர்கள் அரசுப் பணிகளில் சேரக் கதவடைப்பு - சூழ்ச்சி!

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக ஆகிவிட்டது. பழைய முறையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நம் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் தொடர்பான வினாக்களுக்குச் சிறப்பாக விடை எழுதி பெரும் அளவில் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்புக் கிட்டியது. இந்த வாய்ப்பின் கதவை அடைக்கும் வகையில் பார்ப்பன சூழ்ச்சி - பார்ப்பன மூளை பின்னிய கொல்லைப் புறம் வழியாக ஒழிக்கும் திட்டம் தான் இந்தப் புதிய முறை; தமிழர்களிடமிருந்து தமிழை அந்நியப்படுத்தும் பண்பாட்டுப் படையெடுப்பும் இதற்குள் அடக்கமாகும்.

திராவிட இயக்க முகமூடியா?

சமூக நீதியுணர்வு செழித்து வளர்ந்த தமிழ்நாட்டில் எந்தத் திராவிட இயக்கத்தால் இந்தவுணர்வு வளர்ந்து அதன் பயனைத் தமிழர்கள் அனுபவித்தார்களோ அந்தத் திராவிட இயக்க முகமூடி அணிந்தே சமூகநீதிக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்வாணையம் தமிழில் தேர்வு எழுதும் வாய்ப்பைப் பறித்து விட்டதாக பிரதமருக்குக் கடிதம் எழுதும் தமிழக முதல் அமைச்சர் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாட்டிலேயே தமிழ் தூக்கி எறியப்பட்டுள்ளதே - இது சரியானது தானா? முதல் அமைச்சர் இதில் தலையிட்டு ஆணையைத் திரும்பப் பெற ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழர்களுக்கு மிகப் பெரிய ஆபத்து - மரண அடி!

புதிய உத்தரவு சாதாரணமானதல்ல; தமிழர்களுக்கு மிகப் பெரிய ஆபத்து மரண அடி!! எந்த விலை கொடுத்தும் இதனை ஒழித்தே தீர வேண்டும். தமிழர்களின் ஒட்டு மொத்தமான சிந்தனை ஈழத் தமிழர்கள் பிரச்சினையின் பக்கம் சென்றுள்ள நிலையில், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி பார்ப்பனர்கள் தமிழர்களின் அரசுப் பணி வாய்ப்பின் தலையில் கை வைக்கும் வேலை யில் இறங்கி விட்டனர் என்றே கருத வேண்டியுள்ளது.

18ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் இதனையும் சேர்ப்போம்!

வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களிலும், 19ஆம் தேதி சென்னையிலும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களுள் இதனையும் சேர்த்துக் கொண்டு போர்க் குரல் கொடுக்குமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பெரியார் பிறந்த தமிழ்நாடு - நினைவிருக்கட்டும்!

மத்தியிலும், மாநிலத்திலும் சமூகநீதியை ஒழிப்பதற்குக் கத்தியைத் தீட்டி விட்டார்கள். சமூக நீதித் திசையில் இந்தியாவுக்கு வழிகாட்டும் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடு இப்பொழுதும் போர்ச் சங்கை ஊதி விட்டது; திராவிடர் கழகம் களத்தில் நிற்க முன் வந்துள்ளது.

தமிழர்கள் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டங்களை ஒதுக்கி வைத்து, சமூக நீதிக் களத்தில் அணிவகுத்து நிற்குமாறு கடமைணர்ச்சியுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இளைஞர்களே, மாணவர்களே ஒன்று சேர்வீர்!

மத்திய - மாநில அரசுகள் தம் போக்குகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் தொடரும்; வெற்றி கிட்டும் வரை போராட்டப் பயணம் ஓயாது என்றே உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழக மாணவர்களே, இளைஞர்களே, மாணவர்களை, வேலை வாய்ப்பின்றி அல்லற்படும் தமிழின இளைஞர் களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தின் ஒலி, கோட்டைகளின் விதானங்களில் எதிரொலிக்குமாறு செய்வீர்! செய்வீர்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


சென்னை 15.3.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தூக்கம்

செய்தி: இன்று உலக தூக்க நாள் சிந்தனை: தூக்கம் மனி தனுக்கு அவசியமே!

தூக்கம் இல்லாவிட்டால் பல வகை உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் தூங்கிக் கொண்டே இருக்கவும் கூடாது!

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...


எண்பதில் தமிழர் தலைவரின் நாற்பத்தொன்பது


எண்பது வயதிலும் குன்றாத நகைச்சுவை தமிழர் தலைவரின் நாற்பத்தொன்பதாவது கைது

- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

திருமதி மோகனா அம்மையார் 7.12.1958ல் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களைக் கரம்பற்றி வாழ்க்கைத் துணைவராகக் கைது செய்து வாழ்வில் அவருடைய தடம் பற்றி நடந்து வருகிறார். அவ்வாறு அவர் கரம்பற்றிய வாழ்விணையராகக் கைது செய்ததைக் கணக்கில் சேர்க்காமல், காவல்துறையினரால் கைது செய்யப்பெற்றது 12.3.2013 அன்று 49ஆவது முறை என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

49ஆவது முறையும்அடாவடித் தனத்தினாலோ, அற்பச்செயல் களுக்கோ கைது ஆகவில்லை. முதலில் அய்யாவின் கட்டளையை ஏற்றுத் தமிழ்ச்சமூக நலன் பொருட்டே கைது ஆனவர். பின் அம்மாவின் கட் டளைக்கு ஏற்பவும் அதே தமிழ்ச் சமுதாயத் தொண்டினுக்குப் பணி யாற்றிக் கைது ஆனார்.

தமிழ் ஓவியா said...

அதன் பின்னர் திராவிடர் கழகப் பொறுப்பேற்ற பின்னும் கைது, காவல் துறைவேனில் ஏற்றுவது எனும் அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் அவ ருடைய பணி தொடர்வது தான் சிறப்பு.

நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்ட் டியா, நெய்வேலி பழுப்பு நிலக்கரிக்கு உரிமையா? நெய்வேலி மின்சாரம் கர்நாடகத்திற்குக் காவிரி நீரைத் தடுத்து டெல்டா உழவர்களின் வயிற்றிலடிக்கும், வாழ்வாதாரத்தைப் பறிக்கும் குறுக்குப்புத்தி படைத்த கோணங்கி அரசுக்கு அளிக்காதே எனும் போராட்டமா? அல்லல்படும் தமிழர் வாழ்வுயர - இலங்கைத் தமிழர் இன்னல் தீர எதற்கும் முன்னணியில் நிற்கும் வீரர் அவர்.

தமிழக அரசு பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் என்பதற்கேற்பச் சட்டமன்றப் பேரவையில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, கொடுங்கோலன் ராஜபக்சேவைக் கூண்டிலேற்றும் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு காட்ட, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தலைவர் கட்டளைக் கேற்பத் தமிழ் மக்கள்தன்மான உணர்வோடு, மனிதநேயத்தோடு, கடைகளை அடைத்துப் பணிகள் நிறுத்தி ஆதரவு தெரிவிக்கப் போகி றார்கள் என்பதை சூசகமாக உணர்ந்த செல்வியின் அரசு அதை முறியடிக்கக் காவல்துறையை முடுக்கி விட்டது.

இதைக்கண்டித்து திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொருளாளர், தளபதி ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தின் முன் சென்னையில் கூடிச் சாலை மறியல் போராட்டத்தை இரண்டு மணி நேரம் நடத்தினர்.

அம்மையாரின் இந்தக் காவல்துறை முடுக்குதலுக்கும் எதிராகத் தமிழகம் முழுவதும் 50,000க்கும் மேற்பட்டவர் கள் தாமாகவே முன்வந்து டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் எவ்வித அறிக்கையும் அளிக்காமலே கைது ஆன அற்புத நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.

உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடித்து திரும்பி ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில் தமிழர் தலைவர் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஓய்வில்லாது அலுவலக பணி இருந்தும் அதைக் குறித்து தனியாகவே எழுதலாம்.

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவிலிருந்து திரும்பியது முதல் அவருக்கு ஓய்வு ஒழிச்சல் என்பதே இல்லை. திராவிடர் கழகப்பணிகள், மாநாடுகள், திருமணங்கள் என்பதோடு முடித்து விடாமல் இலங்கையில் தமிழ ருக்கு நேரும் சோகம் அவரை ஒதுங்கி யிருக்க விடவில்லை. டெசோவின் தொடர்பணிகள் அவருடைய ஓய்வைத் தட்டிச்சென்று விடுகின்றன. எடுத்துக் காட்டாக கம்பம் மாநாடு முடிந்தபின் 5.3.2013 அன்று இலங்கைத்தூதரக முற்றுகையில் 48ஆவது முறையாகக் கைது 7.32013 அன்று டெல்லிக் கருத் தரங்கு, அன்னை மணியம்மை யாரின் 93ஆவது பிறந்த நாள் விழா வந்தவுடன், அடுத்து 12.3.2013 அன்று வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டத் திற்கு முன்பே டெசோக் கூட்டங்கள் என்று எண்பது வயதிலும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு சுழலும் அவர் பம்பரத்தைப் போல் சுழன்று பணியாற்றுவது வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் 49வது முறையாகக் கைது செய்யப்பட்டுச் சிறுநீர் கழிக்கக்கூட போதிய வசதியில்லாத புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட் சியின் சமூகக்கூடத்தில், மரத்தடியில் கைதியாக தளபதி ஸ்டாலின், தமிழர் தலைவர், விடுதலைச்சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செய லாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கடும் வெயில் சுட்டெரிக்கத் தோழர்கள் பலருடன் அடைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 11.30 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை அவர்களோடு கைதி யாக அமரும் வாய்ப்புப் பெற்ற வேளையில் கண்ட அந்தத் தலைவர்களின் சோர் வில்லாத பணி காண்பவருக்கு வியப் பளித்தது.

உட்கார்ந்திருப்பவர்களைப் பந்தல் காரரைப் போல் துரத்தும் வெயில் இடம் மாறி, மாறி உட்கார வைத்ததே தவிர அவர்களுடைய உற்சாகத்திற்குக் குறை வில்லை. காரணம் தலைவர்களால் அறிவித்த கடையடைப்புப் போராட்டத் திற்குத் தமிழர்கள் உணர்வு பூர்வமாக ஆதரவு காட்டினர் என்ற செய்திதான் தளபதி ஊடகத்தாரின் நேர்காணலில் குறிப்பிட்டவாறு நூறு விழுக்காடு வெற்றி என்றே கூறவேண்டும்.

வழக்கம்போல் அரசின் ஊதுகுழலான சில நாளேடுகள், திருட்டுப்பூனைகள் கண்ணைமூடிக்கொண்டு பூலோகம் இருண்டிருக்கிறது என்று கூறுவதுபோல் கடைகள் திறந்திருந்தன என்று யாரையோ சொரிந்து திருப்தியடையச் செய்தன.

தமிழ் ஓவியா said...

கைதான டெசோ தலைவர்கள் ஸ்டாலின் ஆனாலும் சரி, திருமாவளவன் ஆனாலும் சரி, சுப.வீ. ஆனாலும் சரி, தமிழர் தலைவர் ஆனாலும் சரி உற்சாக வரம்பின் எல்லை சற்றும் அவர்கள் நால்வரிடமும் கொஞ்சமும் குறைய வில்லை. எல்லாவற்றையும் விடக் கிண்டலும், கேலியும் தொண்டர்களிடம் உரையாடுவதிலும், தமக்குள் உரையாடு வதிலும் கொஞ்சம் கூடக்குறையவில்லை. இந்த நகைச்சுவை உணர்வில் நால்வரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். அதிலும் அந்த ஆறு மணி நேரத் தில் நகைச்சுவை விருந்தை அதிகமாகப் பரிமாறியவர் நம் தமிழர் தலைவர் தான். ஏதேனும் செய்தி கொண்டுவருபவர் வந்தால் போதும், அதை உள்வாங்கி நகைச்சுவையோடு பரிமாறுவதில் நம் ஆசிரியருக்கு இணை ஆசிரியர்தான். அத்தனை நகைச்சுவைச் செய்திகளையும் எடுத்துக்கூற இடம் போதாது.

நகைச்சுவையோடு நின்றுவிடாமல் அவ்வப்போது தம் பட்டறிவை, வழக் கறிஞர் சிந்தனையை சுப.வீ., தளபதி, திருமாவளவன் ஆகியோருடன் எடுத் துரைப்பதிலும் ஆச்சரியம் பளிச்சிட்டது.

நாற்காலியை விட்டுச் சிறுநீர் கழிக்க இரண்டு முறை சென்றது தவிர உட் கார்ந்த இடத்திலேயே தொடர்ந்து காற்றுவசதியில்லாத நிலையில், கையில் கிடைத்த செய்தித்தாளால் விசிறிக் கொண்டே, கடும் வெயில் சுற்றிச்சுட டெரிக்க இருந்தது அவருடைய தமிழின உணர்வுக்கு வெளிப்படையான சான்று.

கைதான தலைவர்களிலே மூத்த வயதுடையவர் அவர் ஒருவர் தான். எண் பது அகவையிலும் எப்படி இந்தக் கடுமையான சூழலைச் சகித்துக்கொள்ள இவரால் முடிகிறது என்று எண்ணிய போது அவரிடம் இழையோடும் அந்த நகைச்சுவை உணர்வே தலை தூக்கி யிருந்தது. அவ்வப்போது கைபேசியிலும், அய்பேடிலும், வலைத்தளத்தில் வந்த செய் திகளை ஆசிரியரிடமும், தளபதியிடமும், திருமாவிடமும், சுப.வீயிடமும், டி.ஆர்.பி. ராஜா கட்சித் தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கச் செய்தார்.

தமிழ் ஓவியா said...

வலைத்தளத்தில் காளஹஸ்தி கோபுரம் இடித்த செய்தி வெளிவந்தி ருந்தது. செய்திகாளஹஸ்தி பற்றி அதில் இடம் பெற்றிருந்த படமோ தமிழர் தலை வர் படம், திருமா இதைச்சுட்டிக்காட்டி அய்யா காளஹஸ்தி செய்தியில் உங்கள் படம், கைதானது பற்றிய செய்தி இடம் பெறவேண்டிய இடத்தில் இடம் பெறாமல் தவறாக இடம்மாறி வந்திருக்கிறது என்றார். ஆசிரியர் உடனே அடுத்த கைதுக்கு இப்போதே என்னுடைய படத்தை காளஹஸ்தி பக்கத்தில் போட்டு விட்டான் போலிருக்கிறது என்றார்.
அதைப்போவே கைதானவர்களைப் பற்றிய செய்தி வெளிவந்த பக்கத்தில் போப் தேர்வுப்படம் வெளிவந்திருந்தது. இதைச்சுட்டிக்காட்டிய சுப.வீ. பாருங்கள் ஸ்டாலின் கைது என்று செய்தி படம் போப் தேர்வு என்று சுட்டிக் காட்ட ஆசிரியர் பட்டென்று தமிழகத்தின் அடுத்த போப் ஸ்டாலின் என்று சுட்டிக் காட்டுகிறார்கள் என்று சொல்ல ஸ்டாலின் உட்பட அனைவரும் குபீர் என்று சிரித்து மகிழ்ந்தனர் அந்த நகைச்சுவையை.

அ.தி.மு.க. ஏடான நமது எம்.ஜி.ஆரில் டெசோ தலைவர்கள் நால்வர் படத்தை யும் போட்டு இருப்பதாக ஒருவர் சொல்ல உடனே ஆசிரியர் நமது எம்.ஜி.ஆரில் நமது நால்வரின் படம் இடம் பெறுகிறது என்றாலே நமது போராட்டம் வெற்றி தானே என்று குறிப்பிட்டார்.

இதிலே திருமாவிற்கு ஆசிரியரி டத்து ஒரு சந்தேகம் அய்யா, உங்கள் தோளிலே போட்டிருக்கிற துண்டு, மடிப்பு கலையாமல் அப்படியே இருக் கிறதே இதையே மீண்டும் அணிவீர் களா? எப்படி இப்படி கலையாமல் இருக் கிறது என்று கேட்க, ஆசிரியர் அவரிடம் துண்டை விரித்துச் சலவை செய்து, மடிப்புக்கலையாமல் தேய்த்து எப்படி அணிவது என்று பொறுமையாக விளக்கினார்.

மாலையில் கவிஞர் கலி.பூங்குன் றன் விடுதலை செய்தித்தாளுடன் வந்தார் விடுதலையில் காலையில் நடைபெற்ற போராட்டம், எங்கெல்லாம் யார் யார் கைது என்பதையெல்லாம் கவிதை நடையில் உட்தலைப்பிட்டு அழகுடன் வெளியிட்டு இருந்தார்.

தலைவர் கலைஞரைப் போலவே தளபதி விடுதலையை நன்கு ஊன்றிக் கவனித்து வாசித்தவர் கவிதை வடிவிலான உட்தலைப்புகளை யெல்லாம் உரக்க ஒவ்வொன்றாக வாசிக்க ஆசிரியர் தமது பங்கிற்கு சில தலைப்புகளை எடுத்துக் கொடுத்த துடன் கவிஞரை அழைத்து, உங்கள் உட்தலைப்பைத் தளபதி பாராட்டுகிறார் என்று பாராட்டைப் பரிமாறினார்.

அவ்வாறு கூறிவந்தவருக்குச் சென்னை வந்தாலும் தமது சொந்த மண் கடலூரின் பற்று வாசனை போகவில்லை. என்னங்க கடலூர் களையிழந்தது என்று போட்டிருக் கிறீர்கள்? என்று கேட்கக் கவிஞர் கடலூர் வெறிச்சோடியிருந்தது என் பதையே அது தெரிவிக்கிறது என்றதும் ஆசிரியர் நிறைவடைந்தார்.

டி.ஆர்.பி.ராஜாவிற்கு மன்னார் குடியில் 2000 பேருக்கு மேல் கைதாகி யும் விடுதலையில் செய்தி வரவில் லையே என்று கேட்க மன்னார்குடி மன்னர் கைது என்று போட்டால் போகிறது என்று தளபதி சொல்ல மீண்டும் சிரிப்பலை எழுந்தது. தஞ்சைப் பகுதிப் போராட்டம் வண்ணப்படமாக வந்துள்ளதைக் கவிஞர் சுட்டிக் காட் டினார். திடீரென்று ஏற்பட்ட அறப்போர் என்றாலும் இந்த அறப்போர் மாபெரும் வெற்றி பெற்ற அறப்போர். சென் னையில் மட்டுமே 60 இடங்களுக்கு மேல் ஆர்வத்துடன் மறியல் செய்து தோழர்கள் கைதாயினர்.

எனவே தான் செய்தியாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியோடும், முதிர்ச்சி யோடும் ஆசிரியர் கூறுகையில், இதில் வெற்றி, தோல்வி எனும் பேச்சுக்கு இடமில்லை. மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இந்த எழுச்சியில் வெற்றி என்பது டெசோவிற்கு என்பதை விட இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழகம் ஆதரவாக இருக்கிறது என் பதே முக்கியம். எனவே இது வெற்றி பெற்றது என்றால் இலங்கையில் இன் னல்களுக்கு ஆளான தமிழர்களுக்குக் கிடைத்த ஆறுதல் என்று பொருத்த மாகக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ் மொழிக்கு ஆபத்து! தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, மார்ச் 15- தமிழ்நாடு தேர் வாணையத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

அரசுப் பணிகளுக்காக தேர்வுகளை எழுதும் தமிழக மாணவர்கள் மீது தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கின்றது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிக்கை செய்திருந்த மாற்றங்கள், இந்தி மொழி பேசாத மாநிலங்களிலிருந்து குறிப்பாக தமிழகத் திலிருந்து அகில இந்தியப் பணிகளுக்காக தேர் வெழுதும் மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்று நான் ஏற்கனவே பிரதமருக்குக் கடிதம் எழுதி, மாற்றங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுமென்று கோரிக்கை விடுத்தேன். தமிழ கத்திலே உள்ள மற்றக் கட்சியினரும் இதைப்பற்றி அறிக்கை விடுத்திருக்கிறார்கள். அனைவரும் அறிக்கை வெளியிட்டதற்குப் பிறகு, திடீரென விழித்துக் கொண்டு; தமிழக முதலமைச்சர் அவர்களும் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்தச் செய்தி வெளிவந்த இரண்டு நாட்க ளுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம், பாடத் திட்டங்களில் மாறுதல்களை அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத் திட்டத்திலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருக்கிறது. குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வில், பொதுத் தமிழ்ப் 2 பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளில், தமிழ்ப் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.

தஞ்சையில் படித்தவர்களுக்கு பின்னடைவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இந்த மாறுதல்கள் குறித்து, புதிய மாற்றங்களின்படி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு களில் தமிழ் மொழியிலிருந்து இனி கேள்விகள் அதிகம் இடம் பெறாது. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற் படுத்தும். பொது அறிவு மற்றும் பிற பகுதிகளில் கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த மதிப் பெண் கள் எடுத்திருந்தாலும், அதைத் தமிழ் மொழிப் பகுதியில் கேட்கப் படும் எளிதான கேள்விகளால் அதிக மதிப்பெண் எடுத்து ஈடு செய்ய முடியும் என்று ஏற்கனவே இருந்த நிலை; தற்போது செய்யப்படும் மாற்றங்களால் பறி போய் விடும் என்று தேர்வர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

தேர்வர்கள் தெரிவித்துள்ள கருத்து

தேர்வர்கள் தெரிவித்துள்ள இந்தக் கருத்து முற்றிலும் ஏற்கத் தக்கது. தமிழ் மொழி மூலம் கல்வி கற்று தேர்வெழுதும் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மாற்றங்கள் எதிரானதாக உள்ளன என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி யிருக்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மாற்றங்கள் அவர் எழுதியிருக்கும் கடிதத்திற்கு முரணாகவே அமைந் திருக்கின்றன. எனவே உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு தமிழ் மொழிக்கும், தமிழ் மாணவர் களுக்கும் எந்தவகையிலும் பாதிப்போ, பின்னடைவோ ஏற்படா வண்ணம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்துள்ள பாடத் திட்ட மாற்றங்களைத் திரும்பப் பெற வேண்டு மென்று வலியுறுத்துகிறேன்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனருக்கு அழும் தானங்கள்


மத்ஸ்ய புராணத் தில் பிராமணர்களுக்குத் தர வேண்டிய பதினாறு மகா தானங்கள் பற்றி கீழ் வரும் விளக்கம் தரு கிறது.

துலா புருஷ தானம்: பிராமணனின் எடைக்கு அல்லது தானம் தருபவரின் எடைக்கு விலை உயர்ந்த உலோகம் கொடுப்பது.

ஹிரண்ய கர்ப்ப தானம்: தங்க ஆபரணம் தருவது.

பிராமந்த தானம்: முட்டை வடிவத்தில் தங்கம் தருவது.

கல்பதரு தானம்: பிராமணர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் முறையில் தங்க மரம் தருவது.

கோஸ ஹஸ்ர தானம்: ஆயிரம் பசுக்களை தானம் தருவது.

ஹிரண்ய காமதேனு தானம்: விரும்பியவை தரும் காமதேனு பசு கன்று தங்கத்தில் தருவது.

ஹிரண்ய அஸ்வ தானம்: தங்க குதிரைகள் தருவது.

ஹிரண்ய ஸ்வரத் தானம்: தங்க குதிரைகள் பூட்டிய ரதம் தருவது.

ஹேமஹஸ்தி தானம்: தங்க யானை தானம் தருவது.

பஞ்சலாங்கல தானம்: அய்ந்து கலப்பைகள் மரத்தாலும், காளை மாடுகள் தங்கத்தாலும் தருவது.

தார தானம்: பூமி, மலை வடிவத்தில் தங்கம் தருவது.

விஸ்வ சக்ர தானம்: தங்க சக்கரம் தானம் தருவது.

கல்பலதா தானம்: பூக்களோடு கூடிய பத்து படர்ந்த கொடிகள் தங்கத்தில் செய்து தருவது.

சப்த சாகர தானம்: ஏழு கடல்கள் போன்ற வடிவத்தில் தங்க பாத்திரங்கள் தருவது.

ரத்னதேனு தானம்: ஆபரணங்களை கொண்டு செய்யப்பட்ட பசு தருவது.

மகா பூதகாத தானம்: தங்கத்தால் செய்யப்பட்ட 100 விரல்கள் அகலமுள்ள பெரும் தங்கப் பாத்திரத்தில் பால், வெண்ணெய் நிரப்பித் தருவது. - இவ்வாறு மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

(எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திர பேய்களும் சாதிக் கதைகளும் - (ஒரு மார்க்ஸியப் பார்வை, நூல் பக்கம் 60-61)

தமிழ் ஓவியா said...


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்


பண்டிதர்கள் பழைய மனப்போக்குடையவர்கள்; பகுத் தறிவுக்குப் பொருந்தி வராத பழைய கதைகளின் குறைகளுக் கெல்லாம் விளக்கம் சொல்லிச் சரி செய்ய முயல்வது அவர்கள் இயல்பு. இதனை இல்லத் தலைவி வீட்டுப் பணிகள் அனைத் தையும் தணிக்கை செய்வதற்கு ஒப்பிடுகிறார்.

பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்

பணிக்கையிடல் போல் அனைத்தும் தணிக்கை செய்தே

- எனக்காட்டும் போது பழமையை எள்ளுவதன் வாயிலாகப் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்துவதோடு நகைச்சுவையும் தோன்ற வைக்கிறார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...


பொருளே குறிக்கோள்!


பார்ப்பனர்கள் நடத்தும் சடங்கும் மந்திரமும் அவர் தம் வயிறு வளர்ப்பதற்கே யன்றி உண்மையான பயனை நல்குவன அல்ல என்னும் கருத்தை, பெரியதொரு சடங்குண்டே! மந்திரமுண்டே அந்த எலாம் செய்யத்தான் வேண்டும்.

ஆனால் பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்த மட்டும் கொடுக்கணுமோ குடுக்க வேணும் என்றுரைத்தான் எல்லோரும் சிரிப்பில் ஆழ்ந்தார்

- எனக் கவிஞர்(- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்) மந்திரத்தை விடப் பொருளிலேயே கருத்தாய் இருக்கும் பார்ப்பனனின் செயலை எள்ளி நகையாடுவது நகைப்பை விளைக்கிறது.

தமிழ் ஓவியா said...


அன்னையாரின் நினைவு போற்றி எஞ்சிய பணி முடிப்போம்!


தனது இளமை, வளமை, முதல் அனைத்தையும் இழந்து, தொண்டறத்தின் தூய உருவமாகி உயர்ந்துள்ள உன்னத புரட்சித்தாய் நம் அன்னையார் அவர்களது 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! (16.3.2013).

நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் வாழ வைப்பதற்காக, நம் அன்னையார் அவர்கள் பட்ட தொல்லை, துன்பம், வசவுகள், இழி மொழிகள் ஏராளம்! ஏராளம்!!

எதிர் நீச்சல் களத்தில் நின்று வென்று, தனக்கென வாழாது, தன் உழைப்பைத் தந்ததோடு நில்லாமல், தனது அத்தனைப் பொருளையும் பொதுத் தொண்டுக்குத் தந்து, ஒரு மாபெரும் பல்கலைக் கழகமே உருவாகும் அளவுக்கு, ஒரு அறக்கட்டளையை நிறுவி, அய்யா தந்தை பெரியாரைப் போலவே சுயநலத்தை சுட்டுப் பொசுக்கி, மானம் பாராத தொண்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நம் அன்னையார் தொண்டறத்தின் இமயமாய் உயர்ந்தவர்! அய்யாவின் பணி முடிக்க, நமக்கு அய்யா மறைவுக்குப்பின் தலைமை ஏற்று வழிகாட்டிய அன்னையாரின் நினைவு நாளான இன்று, உறுதியைப் புதுப்பித்து, லட்சியப் பயணத்தைத் தொய்வின்றி தொடருவோமாக!

மகளிருக்கு அன்னையார் மகத்தான கலங்கரை விளக்கன்றோ! வாழ்க அன்னையார்!

கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாருக்கு தாழ்த்தப்பட்ட மலைவாழ் இனத்துப் பணியாளர் கூட்டிணைவு வாழ்த்து!

தந்தை பெரியாரைத் தொண்ணூற்று அய்ந்து ஆண்டுகள் வாழச் செய்து, தம் தொண்டு அறத்தினால் பெருமை பெற்ற, தந்தை பெரியாருக்குப்பின் திராவிடர் கழகத்தை அய்யா காட்டிய வழியில் இம்மியும் பிசகாது நடை போடச் செய்த அன்னை மணியம்மையாரின் பெருமையை இப்போது தமிழ் மக்கள் பலரும் அறிந்து பாராட்டுகின்றனர்.

செட்யூல் கேஸ்ட், செட்டியூல் டிரைப்ஸ் எம்ப்ளாயிஸ் பெடரேஷன் எனும் அனைத்துத் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் பணியாளர் கூட்டிணைவு மகளிர் தினத்தை ஒட்டிச் சென்னை நகரில் மகளிருக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

அச்சுவாரொட்டியில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மகளிர் நலனுக்கு உழைத்த மராத்திய மங்கை ஜோதிபா பூலே அம்மையார், தமிழகத்து மீனாம்பாள் சிவராஜ், உ.பி.யின் மாயாவதி ஆகியோரின் படத்துடன் தொண்டறத்தில் சிறந்தோங்கிய அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் படத்தையும் வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 10, 2013 அன்னை மணியம்மையாரின் 93ஆவது பிறந்த நாள். இந்நாளில் அன்னை மணியம்மையாரைத் திராவிட இயக்கத்தவர் மட்டுமல்லாமல், பிற மக்களும் உணர்ந்து நினைவு கூர்வது பெருமையாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


காரணம்



வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் உண்டு! உண்டு!!



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - கடும் எதிர்ப்புக் காரணமாக புதிதாக அறிமுகப் படுத்திட்ட மாநில மொழிகளின் உரிமைகளை வெளியில் தள்ளிய முடிவு கைவிடப்பட்டதாக - மத்திய இணை அமைச்சர் திரு வி. நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சமூகநீதிக்கு எதிரான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சிகளைக் கடந்து போர்க் குரலை எழுப்பினார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றிக்கும் உரியவர்கள்! மத்திய தேர்வாணையம் மாநில மொழிகளை வெளியில் தள்ளி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் தேர்வு எழுதலாம் என்று எடுத்த முடிவு மேம்போக்கான ஒன்றல்ல; ஆழமாகச் சிந்திக்கப்பட்டு, இந்தி பேசா மாநிலங்களிலிருந்த அய்.ஏ.எஸ். உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்கிற சதி திட்டம் அதற்குள் அடங்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் திரு. லாலு பிரசாத் அவர்கள் அந்தச் சதியைச் சுட்டிக் காட்டியும் பேசியுள்ளார்.

இதில் இன்னொரு நுணுக்கமான கண்ணிவெடி ஒன்றுள்ளது. மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை கண்டிப்பாக எழுத வேண்டும் (ஆரளவ) அதனை இந்த முறை நீக்கியதற்குக் காரணம் ஆங்கிலத்தின்மீது கொண்டுள்ள வெறுப்பல்ல. மாறாக வட மாநிலங்களில் இந்தி பேசுவோருக்குப் பெரும்பாலும் ஆங்கிலம் என்பது சுட்டுப் போட்டாலும் வருவதில்லை. இந்த முட்டுக்கட்டை இந்தி வாலாக்களுக்கு இருக்கக் கூடாது - 2000 மதிப்பெண்களையும் அவர்களின் தாய்மொழியான இந்தியிலேயே எழுதி, அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பமிட்டு விடலாம் என்பதே - புதிய அறிவிப்பில் உள்ள ஆழமான சதியாகும்.

நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அறிவித்திருப்பது இப்போதைக்குத் தற்காலிகமா?
இந்தத் தொடரிலேயே உடனடியாக அதன் முழுத் தன்மையையும் அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - நேற்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலும், கருத்துகளும் மிக மிக முக்கியமானவை.

சமூகநீதிக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கக் கூடிய - தந்தை பெரியார் பிறந்த தமிழ் நாட்டிலேயே, சமூகநீதிக்கு விரோதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - தமிழை வெளியே தள்ளி, கிராமப்புற மக்களை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் குழியை வெட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதே - இது எந்த வகையில் சரியானது - நியாயமானது?

கிட்டதட்ட ஒரே நேரத்தில் மத்திய, மாநில தேர்வாணையங்கள் இப்படி நடந்து கொண்டுள் ளனவே - இந்தச் சங்கிலிப் பிணைப்பின் பின்னணி என்ன?

மத்திய அரசின் புதிய முறையைக் குறைகூறி பிரதமருக்கு மடல் எழுதும் தமிழ்நாடு முதல் அமைச்சர் தமிழ்நாட்டிலேயே இந்த அநீதி நடந்திருக் கிறதே யார் பொறுப்பு? அதற்கு என்ன பதில்? என்ன சமாதானம்?
இந்நேரம் புதிய திட்டம் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இந்த நிலையில் 18ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும் 19ஆம் தேதி சென்னையிலும் திராவிடர் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அவசியமாகி விட்டது.

மத்திய அரசு பின்வாங்கினாலும், மாநில அரசு சமூக அநீதி ஆணையைப் பிறப்பித்துள்ளதால் இதுவரை விலக்கிக் கொள்ளாததால் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு வெற்றிகரமாக நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!! 16-3-2013

தமிழ் ஓவியா said...


ஒலி முழக்கங்கள்




1. வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!

2. தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே!
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
மாநிலத் தேர்வு ஆணையம்
மாநிலத் தேர்வு ஆணையம்
தாய்மொழி தமிழை
தாய்மொழி தமிழை
புறக்கணிக்கும், புறக்கணிக்கும்
புதிய திட்டத்தை, புதிய திட்டத்தை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

3. தந்தை பெரியார் பிறந்த தந்தை பெரியார் பிறந்த
தமிழ் மண்ணிலே, தமிழ் மண்ணிலே
சமூக நீதிக்கு, சமூக நீதிக்கு
சவக்குழியா? சவக் குழியா?

4. தாழ்த்தப்பட்ட மக்களை
தாழ்த்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பிற்படுத்தப்பட்ட மக்களை
பழிவாங்கும் - பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

5. கிராமப்புற மக்களை
கிராமப்புற மக்களை
பழிவாங்கும், பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

6. வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
மத்திய அரசு மத்திய அரசு
வாபஸ் பெற்றது - வாபஸ் பெற்றது
தமிழக அரசே, தமிழக அரசே!
தூங்குவது ஏன்? தூங்குவது ஏன்?

7. போராடுவோம் போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை வெற்றிக்கிட்டும் வரை
போராடுவோம் போராடுவோம்!

8. வென்றெடுப்போம் - வென்றெடுப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
ஆசிரியர் வீரமணி தலைமையிலே
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
தந்தை பெரியார் பெற்றுத்தந்த
சமூக நீதியை, சமூக நீதியை
வென்றெடுப்போம், வென்றெடுப்போம்!

9. வாழ்க வாழ்க வாழ்கவே
திராவிடர் கழகம் வாழ்கவே
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!

10. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
சமூக நீதி வெல்கவே!
- திராவிடர் கழகம்
(18, 19.3.2013இல் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்காக)

தமிழ் ஓவியா said...


காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்?



விஞ்ஞானிகள் தகவல் சென்னை, மார்ச் 16- காலை உணவுக்கு பழைய சோறு (கஞ்சி) சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் நல்லது என்பது அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. முன்பெல்லாம் பெரும் பாலான வீடுகளில் காலை உணவு கஞ்சி என்று அழைக்கப் படும் பழைய சோறுதான். பழைய சோறு தண்ணீரில் சிறிது உப்பு போட்டுக் குடிப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். உடல் சூட்டை தணித்து விடும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு உண்டு. கால மாற்றம், நாகரீகம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் பழைய சோறு இருந்த இடத்தை இப்போது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.

இந்த நிலையில், பழைய சோறு என்றும், கஞ்சி என்றும் நாமெல்லாம் உதாசீதனப்படுத்திய அந்த மகத்தான உணவின் மகத்துவத்தையும், பல்வேறு விதமான பயன் பாடுகளையும் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியர்கள் காலை உணவாக பயன்படுத்தும் பழைய சோற்றில் உடல் ஆரோக்கி யத்திற்கு தேவையான இவ்வளவு சத்துகள் அடங்கி உள்ளனவா? என்று வியந்து போனார்கள். அவர்களின் ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு:-

பழைய சோறு, காலை உணவுக்கு மிகவும் பொருத்தமான உணவு ஆகும். மற்ற உணவு பதார்த்தங்களில் இல்லாத வகையில் பழைய சோற்றில் அரிய வைட்டமின்களான பி-6, பி-12 ஆகியவை மிகுதியாக காணப்படுகிறது. பழைய சோற்றில் உருவாகும் கோடிக்கணக்கான நல்லதன்மை கொண்ட பாக்டீரியாக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அதில் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்புக்கான காரணிகள் ஏராளமாக உள்ளன.

கஞ்சி சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரி யாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதுடன் அவற்றை நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. காலை உணவாக சாப்பிடும் பழைய கஞ்சி எளிதில் ஜீரணமாகி விடும். அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்கும். ஜீரணம் தொடர்பான எந்த பிரச்சினையும் வராது. சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். பழைய சோறு நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால் மலச்சிக்கல் பறந்துவிடும். மந்தநிலை போய் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பழைய சோறுக்கு உண்டு. உடலில் சோர்வே ஏற்படாது. பழைய சோறு சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக் கலாம். சோர்வு அண்டாது. அனைத்து விதமான ஒவ்வாமைகளும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணாமல் போய்விடும். எந்தவித அல்சரும் நெருங்காது. உடல் இளமையாகவும், தோற்றப் பொலிவுடனும் இருக்கும். மேற்கண்ட தகவல்களை அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மண்பானையில் தண்ணீர் ஊற்றி செய்யப்படும் பழைய சோறு இன்னும் அதிக சுவையுடன் மணம் கொண்டதாக இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் கல் சட்டி என்று சொல்லப்படும் மண்பானையில்தான் பழைய சோறு போட்டுவைப்பார்கள். பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக பயன்படுத் தப்பட்டு வரும் கல்சட்டிகள்கூட இருக்கத்தான் செய்கின்றன. பழைய சோறுக்கு சம்பா அரிசிதான் மிகவும் ஏற்றது ஆகும். காரணம், அதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் தாதுபொருட்களும் அடங்கி உள்ளன. எப்போதுமே நம்மவர்கள் சொல்வதை நம்பாமல் வெளிநாட்டினர் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்வது நமது வழக்கம். இப்போது வெளிநாட்டு விஞ்ஞானிகளே பழைய சோற்றின் மகத்துவத்தை சொல்லிவிட்டார்கள். இனிமேலும் என்ன யோசனை? இன்றைய நாகரீக உணவு களுக்கு விடை கொடுத்துவிட்டு முன்பு இருந்ததைப்போல காலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுவோம். உடல் நலனை பாதுகாப்போம்.

தமிழ் ஓவியா said...


இலங்கை - எதிரியா? நண்பனா?

- முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ.பிச்.டி

அண்மையில் நாடாளுமன்ற மேலவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை நம்முடைய நட்பு நாடு எதிரி நாடு அல்ல என்று தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங் களவை உறுப்பினர்கள் கொதிப் படைந்து இலங்கை எதிரி நாடுதான் என்பதை உறுதிப்படுத்திப் பேசி யிருக்கிறார்கள். இலங்கை - நண் பனா? எதிரியா? என்பது சிலபேருக் குக் குழப்பமாக இருக்கிறது. ஆளும் கட்சியும் பார்ப்பன அதிகார மய்யமும் இலங்கையை நண்பனா கவே கருதிக் கொண்டிருக்கின்றன. இலங்கையை நண்பன் என்று சொல் வது அதன் மீதுள்ள பாசத்தினால் என்பதை விடத் தமிழர்கள் மீது கொண்டுளள வெறுப்பினால்தான் டெல்லி அரசு இந்தக்கொடூரமான நிலைப்பாட்டை மேற்கொண் டிருக்கிறது.
புரட்சிக் கவிஞர் பாடியதைப் போல நற்றமிழ் என்பது டில்லிக்கு ஆகாது. நமக்கு நினைவு தெரிந்த வரையில் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே டில்லி மேற் கொண்டு வந்துள்ளது. இடையில் இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் மட்டும் தமிழ் ஈழ மக்களுக்குச் சார்பான நிலை இருந்தது.

நெடுங்காலமாகத் தமிழ் இனம் வஞ்சிக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றது. நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நம்மால் தடுத்து நிறுத்த முடிய வில்லை. தமிழகத்தின் நீர் ஆதா ரங்கள் அண்டை மாநிலங்களால் அழிக்கப்படும் நிலையை மய்ய அரசு தடுக்கவில்லை. இத்தகைய காரணங் களினால் தான் அறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று சொன்னார். இன்றும் அதே நிலை, அதைவிட இழிந்த நிலையைத் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1950களில் கோவாவை இந்தி யாவோடு இணைப்பதற்கு பண்டித நேரு எடுத்துக் கொண்ட அமைதி யான மென்மையான நடவடிக்கைகள் பயன் தரவில்லை. இந்தியப்படை கோவாவை முற்றுகையிட்டு இராணுவ நடவடிக்கை எடுத்து கோவாவை இந்தியவோடு இணைத்தார் நேரு. அப்போது போர்ச்சுகல் ஆளுகையின் கீழ் கோவா டையூ, டாமன் ஆகிய பகுதிகள் இருந்தன. கோவாப் பகுதி களை இந்தியாவுடன் இணைப்ப தற்கு நேரு ராணுவ நடவடிக்கை எடுத்தபோது இலங்கையின் நிலைப் பாடு என்ன?

போர்ச்சுகல் அரசின் வேண்டு கோளுக்கு இணங்கி அவற்றின் போர்க்கப்பல்களும், விமானங்களும் கொழும்பில் நிறுத்தப்படுவதற்கும் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கும் அங்கிருந்து கோவாவை முற்றுகை யிட்டுள்ள இந்தியப் போர்க் கப்பல்களைத் தாக்குவதற்கும் இலங்கையின் சிங்கள அரசு அனுமதி கொடுத்ததா இல்லையா? (ஆனால் போர்ச்சுகல் கப்பல்கள் கொழும்பு வந்தடைவதற்கு முன்னதாகவே கோவா இந்தியாவோடு இணைக்கப் பட்டுவிட்டது). இந்தியாவோடு போர் தொடுக்க வருகின்ற ஒரு நாட்டின் கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பிக் கொடுக்கவும் தளம் அமைத்துக் கொள்ளவும் அனுமதியளித்த இலங்கை இந்தி யாவின் நண்பனா?

1962-இல் இந்தியாவுக்கும், சீனா வுக்கும் நடந்த போரின்போது இலங் கையின் நிலைப்பாடு என்ன? கோவா விடுதலைப்போரின் போது இலங்கை இந்தியாவின் மீது காட்டிய பகை உணர்ச்சி, சீனப்போரின் போதும் வெளிப்பட்டது. வெளிநாடுகளில் சீனாவிற்கு ஆதரவாகவும் இந்தியா விற்கு எதிராகவும் கொள்கைப் பரப்புரையை இலங்கை மேற் கொண்டது. அய்.நா.அவையிலும் இலங்கை இந்தியாவிற்கு எதிராகப் பேசியதே! அந்தப்பழைய நட்பின் அடிப்படையிலேயே இலங்கையின் வடக்கு - கிழக்குத் தமிழ் ஈழப்பகுதி களைச் சீனாவிற்கு இலங்கை இப் போது தாரை வார்த்துக் கொடுத் திருக்கிறது! இப்படிப்பட்ட இலங்கை இந்தியாவின் நண்பனா?

1972--_73-இல் நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை யார் பக்கம் நின்றது? பாகிஸ்தான் விமானங்களும், போர்க்கப்பல்களும் கிழக்குப் பாகிஸ்தான் செல்வதற்குக் கொழும்புத் துறைமுகத்தையும், விமான நிலையங்களையும் பயன் படுத்திக் கொண்டன; எரிபொருள் நிரப்பிக் கொண்டன. இறுதியில் இந்திரா காந்தி அம்மையாரின் தொலைநோக்குப் பார்வையால் மத அடிப்படையில் பிரிந்த நாட்டை மொழி அடிப்படையில் பிரித்து பங்களா தேஷ் என்று ஒரு தனிநாடு உருவாக்கப்பட்டது. இலங்கை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வந்துள்ளது. இதனை நன்கு மனத்தில் கொண்ட இந்திராகாந்தி அம்மை யார் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

தமிழ் ஓவியா said...

திரிகோணமலையில் அமெரிக்கா ஏவுகணைத்தளம் அமைக்க இலங்கை அனுமதி கொடுத்தது. அதுவரையில் அமைதியோடிருந்த பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் கடுமை யான மொழிகளால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார். விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்று இந்திராகாந்தி அம்மையார் கூறி யவுடன் திரிகோணமலையிலிருந்து அமெரிக்க ராணுவத்தளம் உடனடி யாக அகற்றப்பட்டது. இன்று என்ன நடக்கிறது? அமெரிக்காவிற்குப் பதிலாகச் சீனா திரிகோணமலையில் இருக்கிறது. திரிகோணமலை எவன் கையில் இருந்தாலும் அது இந்தி யாவின் பாதுபாப்பிற்கு ஏற்றதல்ல என்பதை இந்திரா அம்மையார் நன்கு உணர்ந்திருந்தார். இன்றைய டில்லி ஆட்சியாளர்கள் என்ன கருது கிறார்கள்? திரிகோணமலையிலிருந்து யார் தாக்குதல் தொடுத்தாலும் சாகப்போகிறவன் தமிழ் நாட்டுக் காரன் தானே! சாகட்டும் என்று நினைக்கிறார்கள். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை நிறுத்து இல்லையேல் திரும்ப அடிவிழும் என்று சொல்வதற்கு இந்திராகாந்தி அம்மையார் இன்றில்லையே!

இவற்றையெல்லாம் நன்கு மனத்தில் பதிய வைத்திருந்தார் இந் திரா அம்மையார். இந்திராகாந்தியை மடக்குவதற்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனா எவ்வளவோ முயன்று பார்த்தார். நாம் இருவரும் ஒரே இனத்தைச் (ஆரியர்) சேர்ந் தவர்கள்; என் மூக்கும் உங்கள் மூக்கும் அமைப்பில் ஒன்று போலவே இருக்கின்றன பார்த்தீர்களா! என்றெல்லாம் அன்பொழுகப் பேசிப்பார்த்தார். இந்திராகாந்தி அவரை நம்பவில்லை.

இலங்கையில் தமிழீழத் தாயகம் கேட்டுப் போராடி வந்தவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் தங்களை ஈடு படுத்திக் கொண்டபோது இந்திரா காந்தி அம்மையார் விடுதலைப் புலி களின் இயக்கத்தலைவர் தம்பி பிர பாகரனை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவி களையெல்லாம் செய்தார். ஜெய வர்த்தனாவின் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்திராவின் மரணத் திற்குப் பிறகு ராஜீவ்காந்தி பிரத மரான பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது, நட்பு நாடான இலங்கைக்குள் அமைதிப்படை அனுப்பப்பட்டது. இந்திய விமா னங்கள் தமிழீழப் பகுதியில் தாழ் வாகப் பறந்து யாரும் கேட்காமலேயே உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுவந்தன. செய்தியாளர் கள் இதுபற்றிப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம், வேறு ஒரு நாட்டுக்குள் இவ்வாறு அத்துமீறி நுழையலாமா? என்று கேட்டதற்கு ‘It is a lesson to Jeywardane’ என்று பதில் சொன் னார். இதற்குப் பெயர் நட்பு நாடு!

தமிழ் ஓவியா said...

வரலாற்றுச் சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம் புத்த மார்க்கம் பற்றிய பல அறிவுச் செல்வங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. அந்த அறிவுக் கருவூலத்தை ஆரியர் கள் நெருப்பிட்டுக் கொளுத்தி விட்டார்கள்.

உலகப்போர் நடந்தபோது செர்மானிய விமானங்கள் லண்டன் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகங்களைக் குறி வைத்துத் தாக்கின. ஓர் இனத்தை அழிப்பதற்கு அந்த இனத்தின் அறிவுக் கருவூ லத்தை அழித்துவிட்டால் போதுமே.

லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ். பொது நூலகத்தைச் சிங்களப் படையினர் நெருப்பிட்டுச் சாம்ப லாக்கி விட்டார்கள்! தான் போற்றி வளர்த்த நூலகம் எரிவதைப் பார்த்த ஒரு பாதிரியார் நெஞ்சு வெடித்து நூலகத்தின் முன்பாக இறந்து போன தும் அவரைத் தூக்கி எரியும் நூலகத் திற்குள் சிங்களப் படையினர் வீசி விட்டுக் கைகொட்டிச் சிரிக்க வில்லையா?
லட்சக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப் பட்ட கொடூர நிகழ்வுகளுக்கு ஒரு கண்டனம் கூடத்தெரிவிக்காத டில்லி ஆட்சியாளர்கள் தமிழ்மக்களின் நண்பர்களா?

இலங்கையை இன்னும் நட்பு நாடெனக்கருதுவோரைத் தமிழினத் தின் நண்பர்களாகக் கருதுவோரை வஞ்ச நெஞ்சம் படைத்த முட்டாள் கள் என்போம்!

ஆதலின் இலங்கை எந்தக் காலத்திலும் இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததில்லை. பிற்காலச் சோழர் காலத்தில் இதே நிலைதான் இருந்தது. எனவே இலங்கையை நட்பு நாடென்று உரிமை பாராட்டுவோர் - இனப்படுகொலை நடத்திய நாட்டோடு நல்லுறவு வேண்டுவோர் உலகமெங்கும் பரந்து கிடக்கும் பத்துக்கோடித்தமிழர்களின் எதிரிகளாகவே கருதப்படுவார்கள் என்பது உறுதி.

இறுதியாக - ஒரு நட்பு நாட்டின் பிரதமரான ராஜீவ்காந்தி இலங்கைக் குச் சென்றபோது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப் படுகிறது. அப்போது சிங்கள ராணுவ வீரன் ஒருவன் தன் துப்பாக்கிக் கட் டையால் ராஜீவ் காந்தியின் உயிருக் குக் குறிவைத்துத் தாக்க முற்படு கிறான். ராஜீவ் தடுமாறிச் சமாளித்துக் கொள்கிறார் இக்காட்சி உலகம் முழுவதிலுமுள்ள ஊடகங்களில் வெளியாகியது. ராஜீவைத் தாக்கிய அந்த ராணுவ வீரனுக்குப் பதவி உயர்வு தரப்பட்டது. பின்னாளில் அவன் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டான். (ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை இங்கிருந்தல்லவா தொடங்கப் பெற வேண்டும்). இதனால் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பது ஒரு கேலிக்கூத்து! அடி முட்டாள்தனம்! ஒரு நட்பு நாட்டின் பிரதமரைக் கொலை செய்ய முயன்றவனுக்குப் பதவி உயர்வும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்கிறது என்றால் அந்த நாட்டை நட்பு நாடென்று சொல் வதற்கு டெல்லி வெட்கப்பட வேண் டாமா? அவர்களுக்கு அதுவெல்லாம் தெரியாது. சுப்பிரமணியசாமியைப் போன்ற புரோக்கர்கள் இருக்கும்வரை ராஜபக்சேவைப் போன்ற கொடுங்கோலர்களுக்கு மகிழ்ச்சி தானே! ஓர் அயோக்கியன் இன்னோர் அயோக்கியனை அண்மையில் கொழும்பில் சந்தித்து உரையாடி விட்டு டெல்லி திரும்பியிருக்கிறான். உலகம் முழுக்க ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் நேரத்தில் டெல்லியும், சு.சாமியும் ராஜபக் சேவோடு கை குலுக்குவது எவ்வளவு இழிந்த செயல்!

தமிழ் ஓவியா said...


பொன் மொழிகள்



எல்லோருமே வெற்றியை விரும்பு கின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர். - சிசரோ

உறுதியான மனம் கொண்டவர்களே உன்னதமான எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். - கார்லைல்

எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேற முடியும். - மேட்டர்லிங் உழைக்காமல் வெற்றி பெற முயல்வது, வயலில் விதைக்காமல் அறுவடைக்குச் செல்வதைப் போன்றது. - எமர்சன்

வாழ்க்கையில் வெற்றி பெற ஆசைபடுபவர் முதலில் கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும் - மில்டன்

தமிழ் ஓவியா said...


இந்தி நுழைப்பு



மது விலக்குப் போலவே இந்தி நுழைப்பு என்கிற திரு. ஆச்சாரியார் திட்டமும் மக்களது கல்வி அறிவைப் பாழ்படுத்த வேண்டுமென்றே கொண்டு வரப்பட்டதாகும்.

பார்ப்பனர்களின் மொழியாகிய சமஸ்கிருதத்தைப் புகுத்தினால், அதற்குப் பெரிய எதிர்ப்பு ஏற்படும் எனக் கருதியே பார்ப்பன இன உணர்ச்சிக்கு அடிப்படையான சமஸ்கிருதத்தின் எதிரொலியான இந்தியை நுழைக்க முயற்சித்தார் திரு. ஆச்சாரியார்.

இந்தியின் ரகசியம் என்ன என்பதையும், குடிஅரசின் மூலம் விளக்கிய பிறகே உண்மையை உணரலாயினர் மக்கள்.

திரு. ஆச்சாரியார் பல முறை (லயோலா கல்லூரியில் ஒருமுறை) பேசும்போது, சமஸ்கிருதத்தின் அலங்கார அணிகளை நீக்கிப் பார்த்தால், அதுதான் இந்தி என்றும், இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் கூறினார்.

இந்தியை ஒழிக்க பெரிய கிளர்ச்சி செய்து, 3,000 பேருக்கு மேல் ஆண்கள், பெண்கள், முதிய வர்கள், குழந்தைகள் உட்பட சிறை சென்று, இரண்டு உயிர்களைப் பலி கொடுக்க வேண்டி வந்தது.

செகண்டரி ஸ்கூல் அய்ஸ் ஸ்கூல் ஒழிப்பு:

கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்குக் குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களும்,
60 பிள்ளைகளுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங் களும் எடுக்கப்பட்டு விட வேண் டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

60 பிள்ளைகள் கிராமத்தில் கிடைப்பது, அதுவும் 1938இல் என் றால், அது பெரிய சிரமமான காரிய மாகும் என்பதை நாம் யூகிக்க முடியும்.

அந்த சாக்கை வைத்துக் கொண்டு பள்ளியை இழுத்து மூடச் சொன் னார் மகானுபாவர் ஆச்சாரியார் என்றால், அவரது மனுதர்ம மனப்பான்மைக்கு வேறு சான்று கூறவா வேண்டும்?

சர்க்கார் அனுமதி பெற்றுப் பொது ஜனங்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வந்த பள்ளிகளை ஒழிக்க, சரியாக நடக்காத பள்ளிகள் அத்தனையும் இழுத்து மூடப்படும் என்றார்.

திருத்தி செவ்வனே நடைபெறும் படி செய்யப்படும் என்று கூறவில்லை திரு. ஆச்சாரியார் என்பதைக் கவனியுங்கள்.

கோயம்புத்தூரில் இருந்த (ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் துவக்கப்பட்டது) காட்டுத்துறைக் கல்லூரி (Forest College) யை இழுத்து மூடி விடும்படிச் செய்தார் திரு. ஆச்சாரியார்.

இதனால் பயனடைந்தவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள் என்பதே இதற்கு அடிப்படையான காரணமாகும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை ஒட்டி, தமிழர்களாகிய நமது பிள்ளைகளும் சரிசமமான வாய்ப்புப் பெற்றுப் படிக்க வைக்கச் செய்த காலேஜ் செலக்ஷன் கமிட்டியை (ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது) ஒரே வரியில் உத்தரவு போட்டு, ஒழித்துக் கட்டித் தமிழர்களது கல்லூரிப் படிப்பிற்குக் கல்லறை எழுப்பினார் காருண்ய சீலர் திரு. ஆச்சாரியார்.

கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு திரு. ஆச்சாரியார் ஆட்சியில் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இருந்தது.

ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் நூல் பக்கம் 13

க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி (கி.ஆ)

தமிழ் ஓவியா said...


சிரிக்கலாம்...


பள்ளி மாணவன்: எங்கப் பாட்டி நேத்து சாமி வந்து ஆடுச்சுடா. ரொம்ப நேரமாகியும் மலை ஏறவே இல்லை.

அவன்நண்பன் : டேய்... உங்கப் பாட்டி பஸ் ஏறுவதே ரொம்ப சிரமம். இதுல எங்கடா மலை ஏறுவது?

தேநீர் கடையில் ஒருவர் : நிறைய காவடிகளைத் தூக்கிக்கிட்டு, கூட்டம் கூட்டமா போறாங்களே... இவ்வளவு காவடிகளா இருக்கு?

மற்றவர் : ஆமாம் நண்பா! புஷ்பக் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடின்னு நிறைய இருக்கு. எல்லாக் காவடியையும் தூக்கிட்டுப் போயிட்டு, கடைசியா அன்னக் காவடியா இந்த டீக்கடையில தான்உட்கார்ந்திருப்பார்கள். அய்யப்பசாமி : கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை.

அறிவுச்சாமி: தம்பி அத கல்லு, முள்ளு மேல நின்னு சொல்லுங்க... சூப்பர் டீலக்ஸ் பஸ்ல இருந்து சொல்லாதீங்க... - வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

அறிவுச் சுட்டியின் அதிரடிக் கேள்வி


வெள்ளைகாரங்க நாடு குளிரா இருக்குமாம்; அதனால் அவங்க நாட்டுக் குழந்தைங்க பள்ளிக்கூடம் போகும்போது 'சூ' (shoe) போடுறாங்க. நம்ம நாடு சூரியன் சுட்டெரிக்கிற நாடு சும்மாவே வேர்த்துக் கொட்டுது; நம்ம குழந்தைங்களுக்கு எதுக்கு 'சூ' போட்டுவிடுறாங்க?

தமிழ் ஓவியா said...


நமது எம்.ஜி.ஆர். முடிந்தால் பதில் சொல்லட்டும்!



நடைவண்டி நாயகர்களும் முந்தா நாள் மழையிலே நேற்று முளைத்த காளான்களும் டெசோவை நாடகம் என்று விமர்சிக்கலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லி விட்டாராம். அடேயப்பா, அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். தாண்டித் தோண்டி யில் விழுகிறது. தாம் தூம் என்று எகிறிக் குதிக்கிறது.

நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெ அம்மை யாரை சிக்கலில் நிறுத்தும் வேலையில் இறங்கவேண் டாம் என்று விடுதலை (21.2.2013) எச்சரித்திருந்தது.

அம்மா மீது என்ன கோபமோ? மறுபடியும், மறுபடியும் வீண் சர்ச்சையில் ஈடுபட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிக்கலில் மாட்டவைத்துக் கொண்டு இருக்கிறது அவ்வேடு!

நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்குச் சில கேள்விகள்:

1. இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லுவது விடுதலைப் புலிகளைக் காப்பாற்றவே என்று சொன்னவர் யார்? இப்பொழுது போரினால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்களே என்று கிளிசரின் கண்ணீர் விடுவது யார்?

2. போர் என்று சொன்னால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவர் யார்?
இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து லிட்டர் லிட்டராகக் கண்ணீர் சிந்துவது யார்?

3. இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா ஈடு பட்டால் நாளை இந்தியா விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடாதா? அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இது கூடத் தெரியாதா? என்று கேள்வி கேட்டவர் யார்?
இதற்கு மாறாக முரண்பட்டுப் பேசுவது யார்?

சாட்சாத் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள்தானே!

முடிந்தால் இவற்றை மறுத்துவிட்டு எழுந்து முண்டா தட்டட்டும் நமது எம்.ஜி.ஆர்.

முடியவில்லை என்றால், மூலையில் ஒடுங்கிக் கிடக்கட்டும். இல்லை என்றால் வண்டி வண்டியாக எழுத நேரிடும்.

கடைசியில் அம்மையார் அவர்களின்பாடுதான் திண்டாட்டம்!

தமிழ் ஓவியா said...


காலச் சிலாசாசனம்!


உலக வரலாற்றில் எங்கும் கேள்விப்படாத இனப்படுகொலை இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாத அரசால் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தியும், ராஜீவ் காந்தியும் இனப் படுகொலை (Genocide) என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர்.

இனப்படுகொலையை ஒரு நாடு செய்தால் அதில் எந்த நாடும் தலையிடலாம் - அது வெளிநாடு தலையிட்டக் குற்றமாகாது.

உண்மை இவ்வாறு இருக்க, இந்திய அரசோ இனப்படுகொலை அரசைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக அந்த இனப்படு கொலை நாட்டை தமது நட்பு நாடாக அறிவிக்கிறது என்றால் - இந்தக் கொடுமையை என்ன சொல்ல!

இன்றைய பேட்டியில் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் மிகத் துல்லியமாகக் கோடிட்டுக் காட்டியது போல இந்தியாவும் போர்க் குற்றத்திற்கு இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நிலையில், எதிர்காலத்தில் விசாரணைக்கு இந்தியா உட்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற் கில்லை.

எத்தனையோ முறை இதமாக - பதமாக - போதுமானது என்பதை விடத் தாண்டி வாய்ப்புக் கொடுத்துப் பார்த்தும்கூட, இந்திய அரசின் போக்கில் எந்தவிதமான நேர்மை யான, மனித உரிமையுடன் மனிதநேயத் துடன் கூடிய போக்கோ, சிந்தனையோ அறவே யில்லை.

வேறு வழியில்லை என்று உறுதியாகத் தெற்றென அறிந்த நிலையில்தான் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த 16ஆம் தேதி மத்திய அரசில் திமுக தொடர்வதில் இனியும் அர்த்தமில்லை என்றே அர்த்தமிக்க கருத்தினை ஆணித்தரமாக வெளியிட்டார். அதற்குப் பிறகாவது மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு தன்போக்கை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

தி.மு.க. தலைவரின் அந்த அறிக்கையை வரவேற்று தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதே நாளில் (16.3.2013) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

கலைஞர் அவர்களின் அறிக்கை வெறும் பூச்சாண்டி அறிக்கையல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுடன் எந்த பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் எச்சரித்திருந்தார்.

எல்லாம் இந்திய அரசைப் பொறுத்தவரை - செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகி விட்டதால் தி.மு.க. ஓர் அறுவை சிகிச்சை முடிவினை எடுக்க நேர்ந்தது.

தி.மு.க எடுத்த இந்த முடிவினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இது காலம் கருதி எடுக்கப்பட்ட ஞாலம் வரவேற்கும் முடி வாகும் என்று மிகச் சரியாகவே குறிப்பிட் டுள்ளார்.

இனியாவது ஏற்றப்பாட்டுக்கு இறக்கப் பாடல் பாடுவதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்கள் ஒரே குரலில் ஈழத் தமிழர் உரிமையின் பக்கம் நிற்பார்களாக!

தி.மு.க. இன்று எடுத்த முடிவு காலம் உள்ளவரை, உலகம் உள்ள வரை நிமிர்ந்து நிற்கும் காலக் கல்வெட்டாகும் - சிலா சாசனமும் ஆகும்! 19-3-2013

தமிழ் ஓவியா said...


காலத்துக்கேற்ற...


காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
_ (குடிஅரசு,26.1.1936)