Search This Blog

30.3.13

2009 இல் தி.மு.க. விலகியிருந்தாலும் எந்த மாற்றமும் வந்திருக்காது!


  • காங்கிரசின் கொள்கைதான் பி.ஜே.பி.க்கும்
  • தி.மு.க. விலகியிருந்தாலும் எந்த மாற்றமும் வந்திருக்காது
  • தனியீழத்துக்கு இடதுசாரிகளின் இசைவு இல்லை
எல்லாவற்றையும் மறந்து திமுகவை குறை கூறுவதா?
இதயத்தில் ஏந்திய இலட்சியச் சுடர் தனியே எரியட்டும்! ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில், ராஜபக்சே அரசின் பயங்கரவாத ஒழிப்புப் போர் என்ற போர்வையில் - கொன்று அழிக்கப்பட்ட இனப்படுகொலைக்கும், போர்க் குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும், பதில் கூற வேண்டிய நெருக்கடி பன்னாடுகளின் மூலமே அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலமும் இரண்டாவது முறையாக (ஓராண்டில்) வந்துள்ளது. இந்திய அரசு - ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுக்காரர்களான தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்குகளால் அமைந்ததைக் கூட மறந்துவிட்டு, போரின்போது இராணுவ உதவிகளை இலங்கைக்குத் தாராளமாகச் செய்த கொடுமை போதாது என்று, அய்.நா. மனித உரிமை ஆணையத் தீர்மானத்தை - அமெரிக்கா கொண்டு வந்த நிலையில், தலையிட்டு நீர்த்துப் போகச் செய்துள்ளதைவிட, தமிழினத்திற்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும் செய்த மகத்தான துரோகம் வேறு இருக்க முடியாது.

தி.மு.க.வின்  பேருதவியாலும், இக்கட்டான கட்டங்களிலும் தந்த ஆதரவினாலும், ஆட்சியில் இன்னமும் நீடிக்கும் காங்கிரஸ், இப்பிரச்சினையால் பச்சையாகவே தமிழர் விரோதப் போக்கைத்தான் கடைப்பிடித்துள்ளது! மிகவும் வெட்கக் கேடானதாகும்!

தி.மு.க.வும் மற்ற சில கட்சிகளும் விடுத்த வேண்டுகோளையோ,  மாணவர்கள் பொங்கி எழுந்து காட்டிடும் உணர்வுகளையோ அது மதித்து நடந்து கொள்ளவில்லை! வெளியுறவுத்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி, எல்லாம் காற்றில் பறந்து விட்டன!

கெட்டிக்காரன் புளுகுக்குக்கூட எட்டு நாள்கள் தான் கெடு; காங்கிரஸ் ஆட்சி சார்பில் எந்தத் திருத்தங்களும் அமெரிக்கத் தீர்மானத்திற்குத் தரப்படவே இல்லை என்ற உண்மையை, அமெரிக்க அதிகாரி நேற்று அம்பலப்படுத்தி விட்டார்!

 இதை அறிந்த நிலையில்தான், தி.மு.க. இதுவரை எத்தனையோ சோதனைகள் வந்த நேரத்தில்கூட, தனது கட்சிக்கார அமைச்சர்கள் எம்.பி.கள் கூட அவமதிப்புக்கும் ஆண்டுக்கணக்கில் டில்லி சிறையில் வதியும் நிலை ஏற்பட்ட போதுகூட, நாட்டின் பொது நலம் - மதச் சார்பின்மைக் கொள்கைக் கொடி தாழ்ந்து விடக் கூடாதே என்ற பெரு நோக்கில், எங்கள் கட்சி நலனைவிட நாட்டு நலனே முக்கியம் என்று கருதி, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விட்டு வெளியேறாமல் உள்ளோம் என்று உறுதி காட்டினார்கள். அவப்பெயர்களைக் காங்கிரசுடன் சேர்ந்து தூக்கிச் சுமந்தனர். எதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?

ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பறிப்பதில் ஒரு நாடகத்தைத் தான் காங்கிரஸ் அரங்கேற்றியதே தவிர, இதய சுத்தியாக எந்த உதவியும் செய்யவில்லை.  அதற்குக் முக்கிய காரணம் என்னவென்பது உலகறிந்த ஒன்று!

பல வெளி நாட்டவர்கள் - போர் நடக்கும் போது எடுத்த சமாதான முயற்சிகளைக்கூட இந்தியா செய்தது இல்லை; மாறாக இராணுவ உதவி, இராஜபக்சேக்களை தலைமை விருந்தினராக அழைத்து, தமிழர்களின் வெந்த புண்ணில் வேலைச் சொருகிய கொடுமையே மிஞ்சியது! தி.மு.க.வின் தலைவர் கலைஞரும், பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியரும் மற்றும் பொறுப்பாளர்களும் சரியான நேரத்தில் சரியான முடிவாக - அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்தே விலகுகிறோம்; எக்காரணம் கொண்டும் அரசினை ஆதரிக்க மாட்டோம் என்று கூறி, குடிஅரசுத் தலைவரிடமே கடிதம் தந்து தெரிவித்து, தி.மு.க.வின் தலைமைச் செயற்குழுவும் அதனையே அப்படியே ஏற்றதன் மூலம், வெறும் பதவிக்காக இருக்கும் கட்சி அல்ல; தமிழர்களின் நலன் காக்கும் லட்சியத்தை மூச்சாகக் கொண்டது என்பதை அகிலத்திற்கும், எப்போதும் இவர்கள் நம்மிடம்தான் இருப்பர் என்ற ‘Take  it for granted’ மனப்பான்மை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கும் சிறப்பாக  உணர்த்தி விட்டனர்!

இதைப் பாராட்டி வரவேற்க மனமில்லாத வன்நெஞ்ச அரசியல் வக்கணையாளர்களும் வாய்சவடால்காரர்களும் தி.மு.க.மீது சேற்றை வரி இறைப்பதையே தமது பிறவிப் பெருங் கடமையாகக் கொண்ட இன எதிரிகளின் ஊடகங்களும் ஏன் இவர்கள் 2009இல் வெளியே வந்திருக்க வேண்டாமா? என்றுதான் இன்னமும் குறுக்குசால் ஓட்டி வருகின்றனர்!
இதற்கு எத்தனையோ முறை பதில் அளித்து விட்டாகி விட்டது; முன்பு வெளியே வந்திருந்தால் அது யாருக்கு லாபம் - மதவெறி சக்திகளுக்கு லாபமாக அமைந்து காவிமயமாக்கிடும் ஆட்சி அமையவே அப்போது அது வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும்!

இந்திய அரசியலில் ஒரே பிரச்சினை ஈழத் தமிழர் பிரச்சினை மட்டும்தானா? இங்குள்ள தமிழர்கள் - பார்ப்பனரல்லாதார் நலம் - உரிமைகள் காக்கப்படல் முக்கியமல்லவா? அனைவரும் அனைத்தும் பெற வேண்டாமா?

இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில்கூட, மனம் மாறாத, குணம் மாறாத காங்கிரஸ் ஆட்சி அப்போது மட்டும் மாறி உடனே தனது இலங்கை ஆதரவுப் போக்கை  மாற்றிக் கொண்டிருக்கும் என்று எவராவது உறுதியாகக் கூற முடியுமா?

அதன் விளைவு... பா.ஜ.க. போன்ற மதவாத ஆட்சி மீண்டும் அரியணை ஏறியிருக்கும். ஆனால் இவர்களால் வெளிஉறவுக் கொள்கைதான் மாறியிருக்குமா? சில அறிவு ஜீவிகள் சொல்லட்டும்! இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில்கூட பிஜேபியின் இலங்கை பற்றிய நிலைப்பாடு என்ன? திருமதி சுஷ்மாசுவராஜ் - எதிர்க்கட்சித் தலைவர் - நாங்கள் போர்க் குற்றம் புரிந்தது இலங்கை என்றே ஒரு போதும் கூற மாட்டோம் என்கிறாரே!

வெளிஉறவுக் கொள்கையை மாற்றிக் கொள்ளச் சொல்ல மாட்டோம் என்கிறார்களே; ஏற்கெனவே அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இதே வெளி உறவுக் கொள்கைதானே செயல்பாடாக இருந்தது!

அவர்கள் (பா.ஜ.க.) பாகிஸ்தானைப் பார்க்கும் கண்ணாடி வேறு, இலங்கையைப் பார்க்கும் கண்ணாடி வேறு என்ற ஒன்றைத் தவிர வேறு என்ன பெரிய மாற்றத்தை ஏற்பார்கள்?

இடதுசாரிக் கட்சிகள் - ஏதோ தமிழ்நாட்டில் சிலர்  பேசுகிறார்களே தவிர - ஈழத்தை ஆதரிக்கின்றனரா? அய்க்கிய ஸ்ரீலங்கா என்பதன்மீது தான் எங்கள் நிலைப்பாடு இருக்கும் என்றுதானே தலைகள்பேசுகின்றன. இங்குள்ள வால்கள் ஆடினால் போதுமா? நல்லெண்ணம் படைத்தவர்களுக்குத்தான் நமது இந்த விளக்கமே தவிர, விஷமப் பிரச்சார விதண்டாவாத விவேக சிந்தாமணிகளுக்கு அல்ல!

தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ள தீர்மானம்! சருகுகளின் சலசலப்பு, இதை வைத்து தி.மு.க.வில் ஓட்டை போடலாமா என்ற சேட்டை செய்யும் செய்தி ஏடுகள்பற்றி திமுக தலைமை சற்றும் யோசிக்க வேண்டியதே இல்லை! எந்தக் காலத்திலும் தன் உழைப்பை மட்டும் தந்து கொள்கைக்காக தனது உயிரையும் தரத் தயாராக இருக்கும் கட்டுப்பாட்டின் கவசங்களான லட்சோப லட்சம் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி பொங்க இம்முடிவினை வரவேற்று, புதிதாக களம் காண புத்துணர்ச்சி பொங்கத் தயாராகி உள்ளனர். அதுதான் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமே தவிர, மற்றவை அல்ல.  அண்மையில், வங்கத்து சிங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் றுயடம ஹடடிநே தனித்தே நடங்கள் என்ற கவிதை ஒன்றின் உயிரோட்டமான வரிகளை திமுக விற்கு தாய்க்கழகம் என்ற உரிமையோடும் பாசத்தோடும் சுட்டிக் காட்ட விழைகிறோம்.

“if they answer not your call walk alone
with the thunder flame of pain ignite thine own heart,
And let it burn alone
- Ravindranath Tagore, ‘Walk Alone’

(இதன் தமிழாக்கம்)

உங்கள் அழைப்புக்கு அவர்கள் பதில் அளிக்காவிட்டால் (நீங்கள்) தனியே நடங்கள்!

உங்கள் உள்ளத்தில் எரி இடி போன்று ஏற்பட்ட வலி இதயத்தில் ஏற்றிய அந்தச் சுடர் தனியே எரியட்டும்!..

------------------------- கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்  

தனித்தே நடங்கள் கவிதையில்

இன்னமும்கூட தி.மு.க. எனும் யானையைப் பார்த்து வர்ணித்த அய்வர்கள் இனிமேல் புரிந்து கொள்ளும் நிலையை வரலாற்றின் அடுத்தக் கட்டம் உருவாக்குவது உறுதி! டெசோவைப் பற்றிய திண்ணைப் பேச்சுக்காரர்களின் வெண்ணெய் வெட்டிப் பேச்சு என்ற மாயத்தில் கிழிந்து தொங்குகிறது! போலி எது? உண்மை எது என்பதைப் புரிந்து கொள்ளும் காலம் ஞாலத்திற்கு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது!

                              -----------------------------கி.வீரமணி  தலைவர்,  திராவிடர் கழகம்-"விடுதலை” 29-03-2013

31 comments:

தமிழ் ஓவியா said...


10-க்கு ஒன்பது


மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 10 பேர்களில் ஒன்பது பேர் வட மாநிலத் தவர்கள்; மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டிலிருந்து ஒரு வரும் இலர் - இந்தத் தகவலை தருமபுரி மக்க ளவை உறுப்பினர் இரா. தாமரைச் செல்வன் மக்க ளவையில் ஆதாரப்பூர்வ மாக எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.

இது ஒரு முக்கியமான பிரச்சினை. இந்தியாவில் முதல் நிலை அதிகாரம் படைத்த அய்.ஏ.எஸ். போன்ற பதவிகளுக்கான தேர்வாணையத்தில் பெரும் பாலும் இந்தி பேசும் மாநி லங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பது நீதிக்கு விரோதமான தாகும்.

இந்தி பேசுவோர் ஆதிக் கத்தில் இந்த ஆணையம் இருப்பதால், இந்தியைத் தாய் மொழியாகக் கொண் டவர்களுக்குச் சாதகமான முறையில் தேர்வு முறைகள் சிந்திக்கப்பட்டு செயல் வடிவமும் அளிக்கப்படு கிறது. புதிய திட்டம் என்ற பெயரால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர் கள் தத்தம் தாய் மொழி களில் தேர்வு எழுத முடியாத ஒரு நிலை திணிக்கப்பட் டுள்ளது.

கடந்த பல ஆண்டு காலமாக தாய்மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அய்.எஃப். எஸ். போன்ற பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்களா?

இந்தியிலும், இங்கிலீ லும் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தான் திற மையின் கிரீடமாக ஜொலிக்கிறார்களா?

வட மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர்களுக்கு டிஸ்டிரிக்ட் மேஜிஸ்ட்ரேட் என்று பெயர். இரண்டு வார்த்தை ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுகிறார்கள்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் தான் இதற்குள் அடங்கிய சூழ்ச்சியின் கூர்முனை என்னவென்று விளங்கும்.

இந்தி பேசாத மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் அவரவர் தாய்மொழியில் எழுத வாய்ப்பு அளிக்கப் பட்ட பொழுது, இந்தி பேசாத மாநிலங்களிலி ருந்தும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலைதான் பெரும்பாலும் இந்தி வாலாக்களாக இருக்கக் கூடிய தேர்வாணையத்தின் கண்களை கருவேல முள் ளாக உறுத்தியிருக்கிறது. அதன் தீய விளைவுதான் புதிய திட்டம். இது போன்ற பதவிகளில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
திராவிடர் கழகம் இதற் காக களத்தில் இறங்கிப் போராடியது. மக்களவையி லும் எதிர்ப்புப் புயல் வீசியது!
முக்கியமான பிரச் சினைமீது சிறப்பாகக் கருத்துக்களை எடுத்து வைத்த இரா. தாமரைச் செல்வன் எம்.பி. பாராட் டுதலுக்கு உரியவரே! - மயிலாடன் 29-3-2013

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு உதவும் இந்தியா


இலங்கையில் இருந்து வரியில் லாமல் இறக்குமதி செய்யும் ஆயத்த ஆடைகளின் அளவை இந்தியா அதிக ரித்துள்ளது. அண்மையில் இலங்கை சென்ற இந்திய தொழிற் துறை அமைச் சர் ஆனந்த் சர்மாவிடம், வரிவிலக் குடன் ஏற்றுமதி செய்யப்படும் ஆடை களின் அளவை அதிகரிக்க அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனடிப்படையில், வரியில் லாமல் இறக்குமதி செய்யக்கூடிய பருத்தி ஆயத்த ஆடைகளின் அளவை 50 லட்சத்தில் இருந்து 80 லட்சமாக இந்தியா உயர்த்தியுள்ளது.
இதுதவிர, தெற்காசிய சுதந்திர வணிக உடன்படிக்கைப்படி, இலங் கையில் இருந்து இறக்குமதியாகும் ஆடை வகைகளுக்கு விதிக்கப்படும் வரியை 11 சதவீதத்தில் இருந்து 5 சதவீ தமாக இந்தியா குறைத்திருக்கிறது.

மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலத்தை 6 மாதங்களில் இருந்து ஓராண்டாக இந்தியா அதிகரித்துள்ளது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசும் அரசி யல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலை யில், இலங்கை அரசுக்கு புதிய சலுகை களை வழங்கியிருக்கிறது இந்தியா.

தமிழ் ஓவியா said...


இலங்கையில் தமிழர் பகுதிக்குள் ஊடுருவும் சீனா...


யாழ்ப்பாணம், மார்ச். 29- இலங்கையில் மெல்ல மெல்ல கால் ஊன்றி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா தமிழர்கள் வாழும் பகுதிக்குள்ளும் காலடி எடுத்து வைத் துள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அடிப்படை வசதி களைச் செய்ய பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. இலங் கையில் சீனாவின் ஆதிக் கம் கடந்த சில ஆண்டு களாகவே தலை தூக்கி வருகிறது. சீனாவின் ஆயுதக் கிடங்கு இலங் கையில் திறக்கப்பட்டுள் ளது. இலங்கையில் உள்ள துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் குத்தகை சீனாவுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தற் போது மன்னார் வளை குடாவில் பெட்ரோல் எடுக்கும் உரிமமும் சீனா வுக்கு வழங்கப்பட்டுள் ளது. இந்நிலையில் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு 20 மில்லி யன் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை சீன அரசு அளித்துள்ளது. இந்த நிதியில் ஏசி, கணினி நகல், இயந்திரங்கள், உள் ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப் பட்டன. யாழ் பொது நூலகத்தில் யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ் வரி பற்குணராசா தலை மையில் நடைபெற்ற விழாவில் அவரிடம் சீன அரசின் முதலாவது செய லாளர் கியூ, ஸ்கியூபிங் இந்த உதவிகளை வழங் கினார். சிங்களர்கள் வாழும் பகுதியில் மட் டுமே ஆதிக்கம் செலுத் திய சீனா, மெல்ல மெல்ல யாழ் நூலகம் வரை தனது ஆதிக்கத் தினை வளர்த்துக் கொண் டுள்ளது. இந்த நாட் டைத் தான் இந்தியா வின் நண்பன் என்கிறது மத்திய அரசு.

தமிழ் ஓவியா said...


அன்று தமிழர் தலைவர் எழுதியது - இதற்கும் பொருந்தும்!


இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதருக்கு இந்தியாவுக்குள் தலையிடும் அளவுக்கும், பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசக் கூடிய துணிவு வந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் இந்தியாவின் பலகீனமே!

வேறு எந்த நாட்டிலாவது இந்த நிலை ஏற்பட்டு விட முடியுமா? அப்படி கருத்துச் சொல்லியிருந்தால் அந்தத் தூதர் அடுத்த கணமே விமானத்தில் ஏற்றப்பட்டு இருப்பாரே!

இலங்கையில் 75 சதவிகிதமாக உள்ள சிங்கள வர்களின் பூர்வீகம் என்பது இந்தியா என்பதால், அந்தச் சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாப் பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும். டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத்கரிய வாஸம் கூறி இருக்கிறார். (இந்தியாவின் செயல் பாட்டைப் பார்க்கும் போது அந்த அடிப்படையில் தான் காரியங்கள் நடந்ததோ, நடக்கிறதோ என்ற அய்யமும் ஏற்படுகிறது)

இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மூக்கோடு ஒப்பிட்டு ஆரிய இனவழி வந்தவர்கள் நாம் என்று ஒப்பிட்டுச் சொன்னவராயிற்றே ஜெயவர்த்தனே!

இலங்கைத் தூதரின் விஷமமான பிரச் சாரத்தைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் கண்டனக் கணைகள் வெடித்தும்கூட, இந்தியா இதுவரை வாய் திறக்கவில்லை.

120 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை சுண்டைக்காய் தீவான இலங்கை இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் சிறுமைப்படுத்துமோ தெரியவில்லை.

இந்தியாவின் இந்த மவுனத்தால் நேற்று ஒருபடிமேலே சென்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கேவலமான சொற்களில் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் (9.6.2011) ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையின்மீது பொரு ளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியதை இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே தரக் குறைவாக விமர்சனம் செய்த போது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டாரே! இது வெளிநாட்டவர் கூற்று என்பதால் இதற்காக உரிய ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசினுடையது அல்லவா என்ற வினாவையும் அந்த அறிக்கையில் எழுப்பி இருந்தார். கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது - மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முதல் அமைச்சரிடம் மாறுபடுபவர்கள்தான் நாம் பல்வேறு பிரச்சினைகளில், அவரது அணுகுமுறைகளில் என்றாலும் அது வேறு - இது வேறு.

இப்படி இங்குள்ள எவராவது பேசினால் அது சட்டமன்ற உரிமைப் பிரச்சினையாகி, அத்தகை யவர்களை சட்டமன்றத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்தி விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுத்திருக்க முடியும்!

இது வெளிநாட்டவர் கூற்று என்பதால், இதற்காக ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசினுடையதல்லவா? மத்திய அரசு இதில் மவுன குருவாக இருக்கலாமா? கூடாது! கூடவே கூடாது!! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார்களே! (விடுதலை 12.8.2011)
கோத்தபய ராஜபக்சேகூட ஓர் அரசியல்வாதி - இந்தியாவில் உள்ள இலங்கைக்கான தூதர் அரசியல்வாதியா? ஓர் அதிகாரியல்லவா? அதிகாரி களுக்கென்று ஒரு வரம்பு உண்டே! எல்லா வற்றையும் தூக்கி எறிந்து தெருச் சண்டை போடும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் இதைவிட கேவலம் இந்தியாவுக்கு உண்டா?
இது 120 கோடி மக்களையும் துச்சமாக மதிக்கும் போக்கிரித்தனமாகும்.
இந்தியா செயல்படும் அரசாக இருக்க வேண் டும் - இதற்குமேல் என்னதான் சொல்ல முடியும்? 29-3-2013

தமிழ் ஓவியா said...


முதல்வர் குற்றச்சாற்று: டி.ஆர்.பாலு பதிலடி

சென்னை, மார்ச் 29- டி.ஆர்.பாலு ரயில்வே போர்டு தலைவராக இருப்பது குறித்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாற்றுக்கு டி.ஆர்.பாலு எம்.பி., அளித்த பதில் வருமாறு:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா (27.03.2013) தமிழக சட்டமன்றத்தில் பேசிய போது இலங்கைப் பிரச்சினைக் காக ரயில்வே நிலைக்குழுவில் இருந்து டி.ஆர்.பாலு ராஜினாமா செய்யவில்லையே ஏன்? என்று பேசியுள் ளார். தமிழக முதல்வர் அவர்கள் ஒரு முறை பாராளு மன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். இப்போது மூன்றாம் முறை தமிழக முதல்வராக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சட்ட மன்ற நடவடிக்கைகளும் எப்படி நடைபெறுகின்றன என் பதையும் அவற்றின் நெறி முறைகளையும் அவர் அறிந்திருப்பார் என்று கருதுகிறேன். அதிமுக உறுப்பினர்கள் இடம்பெறவில்லையா?

பாராளுமன்ற உறுப்பினராக இருக் கும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் உட்பட ஒவ் வொருவருக் கும் ஏதாவது ஒரு துறைக் கான நிலைக்குழுவிலும் மற்றொரு துறைக் கான கலந்தாய்வுக் குழுவிலும் இருப்பதற்கு அவைத் தலைவர் ஆணை பிறப்பித்து அந்த மரபுப்படி பாராளு மன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுவிலும் நிதித் துறையிலும் மற்றும் சில குழுக்களிலும் நான் பணியாற்றி வருகிறேன். பாராளு மன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் மூத்த உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையில் ரயில்வே நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்ற அவைத் தலைவர் ஆணை பிறப்பித்து இருக் கிறார்.

பொதுவாக நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் அவையில் படித்த பிறகு சம்மந்த பட்ட துறைக்கான மானியக் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தின் அவைத் தலை வரால் நியமிக்கப்படும் இரு சபைகளின் உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழு ஆய்வு செய்து நாடாளுமன்றத் திற்கு அறிக்கை அனுப்பிவைக்கும். இந்த நடை முறையின் அடிப்படையில்தான் என்னை போன்ற பலர் நிலைக்குழு உறுப்பினர்களாகவும் குழுக்களின் தலைவர்களாகவும் பணியாற்றி வருகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எல்லா கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து அறிக்கைகளைத் தயாரித்து நாடாளு மன்றத்தின் ஒப்புதலுக்கு வழங்கும் ஒரு ஏற்பாடாகத்தான் நிலைக் குழு செயல்படுகிறது. இதில் அமைச்சர்களின் குறுக்கீடும் கிடையாது அரசியல் தலையீடுகளும் இருக்க முடியாது என்பது குறைந்தபட்ச அரசியல் அறிந்தவர் களுக்குக்கூட தெரியும். நான் அங்கம் வகிக்கும் ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் நியமனத் திற்கும் அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அமைச்சர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். நிலைக்குழு மற்றும் இலாக்காக்கள் சம்மந்தப்பட்ட ஆலோசனைக் குழுக்களை நாடாளு மன்றத்தின் சபைத் தலைவர்கள் நியமிக்கிறார்கள். அ.தி.மு.க.வில் தம்பிதுரை உள்ளார்.

அ.தி.மு.க. குழுவின் தலைவர் தம்பிதுரை கூட பாராளுமன்றத்தின் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரத்தில் அவை நடவடிக்கைகளை நடத்தும் மாற்று தலைவர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். பல நேரங்களில் அவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை நடத்துகிறார். இதைப் போலவே நாடாளுமன்ற மேலவை யில் எங்கள் இயக்க உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்ற மேலவையின் நட வடிக்கைகளை நடத்தும் பொறுப்பு வகிக்கிறார்.

சபாநாயகரின் வரம்புக்கு உட்பட்டவை

அரசியல் கூட்டணி அமைப்புகள் - அமைச்சர் பொறுப்புக்கள் என்பவை பிரதமரின் அதிகார வரம்பு களுக்கு உட்பட்டவை. நாடாளுமன்ற நடவடிக்கைகள் - அதன் குழுக்களின் நடவடிக்கைகள் என்பவை சபாநாயகர் அவர்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை.

ரயில்வே நிலைக்குழு வில் இருந்து டி.ஆர்.பாலு விலக வேண்டும் என்று ஜெயலலிதா சாடி இருக்கி றார். இது நாடாளுமன்ற அவைத் தலைவரின் அதிகாரத் திற்கு சவால் விடுவது மட்டுமல்ல; எனது நாடாளுமன்ற உரிமைப் பிரச்சினையில் தலையிடுவதும் ஆகும் என்பதை ஜெயலலிதா அவர்களுக்கு முதலும் முடிவுமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மத்திய அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கழகம் முடிவு செய்து, தலைவர் கலைஞர் அவர் கள் ஆணையிட்ட போது, பன்னிரண்டு மணி நேரத்திற்குள் டெல்லிக்கு சென்று பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து அமைச்சர் பதவியை துறந்தவன் நான்.

இழப்புக்கு ஆளானவர்கள் தி.மு.க.வினர்

ஈழத் தமிழர் பிரச்சினையில், பல்வேறு கட்டங்களில் இழப்புக்கு ஆளானவர் கள்தான் தி.மு. கழகத்தினர் என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


பரமசிவன் விரும்புகிறான் பார்ப்பனப் பிணவாடையை!

திருவாரூரில் ஓடம் போகியாறு கரையில் பார்ப்பனர்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு இருக்கிறது. இதிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இருப்பது உருத்ர கோட்டீசுவரர் ஆலயம்.

சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன. பிணத்தை எரிக்கும் போது வரும் புகையும் - வாடையும் சகிக்க முடியாததாக இருக்கிறது என்றும் - குடியிருப்புகள் பெருகி விட்டதால் சுடுகாட்டை வேறு ஒதுக்குப் புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் - நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இப்பகுதியில் உள்ள உருத்ர கோடீசுவர சுவாமிக்குப் பிணவாடை இருக்க வேண்டும் என்பது அய்தீகம் என்பது பார்ப்பனர்களின் எதிர்வாதம்! சட்டம் விசாரித்தது - அய்தீகம் வென்றதாம்.

எல்லாம் வல்ல இறைவனின் (?) மோப்ப சக்தி ஒரு பர்லாங்கிற்கு மேல் செல்லாதா? உயிரில்லாக் கற்சிலைக்கும் - உதவாத அய்தீகத்திற்கும் வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் என்றுதான் திருந்துவார்களோ?

- சி.நா. திருமலைசாமி, சின்னநெகமம்
செய்திக்கு ஆதாரம்: மேகலா மாத இதழ் செப்டம்பர் 1983.

தமிழ் ஓவியா said...


இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!


இந்த நாட்டில் எதற்கு கதை எழுதி வைக்கப்படவில்லை; எதற்கு காரணங்கள் கூறப்படவில்லை? தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலே வேதாரணியத்திற்கு அருகிலே கோடியக்கரை என்ற ஒரு ஊர் இருக்கிறது. ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிலே ஒரு கருங்கல்லிலே இரண்டு பாதங்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்கு சுற்றுலாப் பயணிகள் யாராவது போய் இது என்ன? கருங்கல் பாதங்கள் என்று கேட்டால் இங்கே நின்று கொண்டு தான் இராமர் இலங்கையை பார்த்தார் என்று சொல் கிறார்கள்.

திரவுபதை மஞ்சள் குளித்தாளா?

சென்னைக்கு அருகிலே உள்ள மாமல்ல புரம்; மகாபலிபுரம் என்றுதான் சொல் வழக்கு. ஆனால் உண்மையான பெயர் மாமல்லபுரம். மாமல்ல பல்லவனால் உருவாக்கப்பட்ட நகரம். அந்த மாமல்லபுரத்திற்கு சென்றால் அங்கே இருக்கின்ற பாறைகளை பார்த்தால் ஒரு பாறை பெரிதாக உருண்டு திரண்டிருக்கும். அந்த வழிகாட்டி நமக்கு விளக்கம் சொல்லுவார். உருண்டு திரண்டு இருக்கும் இந்தப் பாறை என்ன தெரியுமா? இது கிருஷ்ணனுக்காக உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்! என்பார். வெண்ணையையும் தொட்டு பார்த்து பாறை யையும் தொட்டுப்பார்த்து அதை நம்பினால் அவர்களைவிட முட்டாள் யாராவது இருக்கமுடியுமா? என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னொரு இடத்திலே ஒரு பாறையிலே வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்த தண்ணீர் அதிலே தேங்கி இருக்கும்.

இது என்ன என்று? என்று கேட்டால் இங்கே தான் திரவுபதி மஞ்சள் குளித்தாள்! என்று சொல்லுவார்கள். இப்படி எதற்கும் ஒரு காரணம் - ஒரு விளக்கம். இவை அத்த னையும் தங்கள் பிழைப்பிற்காக என்று கணக் கிட்டுக் கொண்டு காரியங்கள் நாட்டிலே நடைபெற்று ஒரு பெரிய இனம் அதன் காரணமாக ஏமாந்து கிடக்கும் காட்சியை இன்றைக்கு நாம் காண்கிறோம்.

(20.5.1983 வெள்ளியன்று பெங்களூருவில் நடைபெற்ற முருகேசன் இல்ல மணவிழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


அறிவுப்பூர்வ ஆதாரம்!


பொதுவாக நம் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளில் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து விடும் என்று கருதும் பழக்கம் படித்தவர், படியாதவரிடையே குறிப்பாக வயதான பாட்டிகளிடத்தேயும் உள்ளது அனைவரும் அறிந்ததே.

சித்திரையில் பிறந்த பெரியோர்கள்

சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியை தொகுத்தவர், சார்லி சாப்ளின் - உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், விக்டோரியா - நீண்டகாலம் இங்கிலாந்தை ஆண்டவர், தற்போதைய இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத், காண்ட் - ஜெர்மன் தத்துவஞானி, கார்ட்ரைட் - பவர்லூம் கண்டுபிடித்தவர், அலெக்சாண்டர் - உலக மாவீரன், காரல் மார்க்ஸ் - புதியசமதர்ம சமுதாயக் கருத்தை தந்த கம்யூனிசத் தந்தை, டார்வின் - பரிணாம வாத கொள்கையினால் வரலாற்றில் நிலையான இடம் பெற்ற மாபெரும் விஞ்ஞானி, சிக்மெண்ட் பிராய்ட் - மனோ தத்துவ ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் டிரேக் - பிரிட்டனின் புகழ்பெற்ற கடற்படை தளபதி. - குமுதம், தகவல்: சம்பத்ராஜ், பேட்டவாய்த்தலை

தமிழ் ஓவியா said...


உண்மை

உண்மைதான் உலகத் தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய்.

உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, ரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

ஒட்டுமொத்தமாக களவாடப்பட்ட 69% இட ஒதுக்கீடு ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமன மோசடி

(தகுதித் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? அதனால் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்பா? என்பது குறித்து நாம் இங்கே விவாதிக்கவில்லை. அது வேறு செய்தி. தகுதி தேர்வு வைத்தாகிவிட்டது, ஆனால், அந்தத் தேர்வு முடிவுகளிலும், பணி நியமனத்திலும் இட ஒதுக்கீடு என்னும் அரசமைப்புச் சட்டப்படியான சமூகநீதி எப்படி மோசடியாகப் பறிக்கப் பட்டிருக்கிறது என்பதைப்பற்றிதான்....)

சார், என்ன இருந்தாலும் சொல்லுங்க...? 60% மார்க் கூட எடுக்காதவங்களையெல்லாம் எப்படி சார் ஆசிரியரா ஏத்துக்க முடியும்? என்றொரு கேள்வியை கோபமாக, செல்லமாக, ஆதங்கமாக என்று பல பாவனைகளில் பலரும் கேட்பார்கள்.

தரத்தைப் பற்றிக்கவலைப்படும் இந்தக் கேள்வி நியாயமானதுதான்! இந்தக் கேள்வியை இப்படியும் கேட்கலாம்.

மொத்தமதிப்பெண்கள் 100% .... முழுமையான, நல்லதரமானஆட்கள் கிடைக்க வேண்டும் என்றால், 100%-த்தைதானே தகுதி அளவுகோலாக வைத்திருக்க வேண்டும்! எதற்காக 40% மதிப்பெண்களைக் குறைத்து, 60% என்று நிர்ணயித்தார்கள்.....? அப்படி யானால், தரத்தில் சமரசம் செய்து கொள் கிறார்களா..? அது எப்படி சார்..... எல்லாரும் 100% எடுக்கமுடியும்? இப்படி செஞ்சா, என்னைக்குக் காலி இடங்களை நிரப்பி முடிக்கிறது?

இப்போ புரியுதுல்ல. தரத்தயெல்லாம் முழுசா யாராலயும் பேண முடியாது!.... இருக்கக்கூடிய எதார்த்த சூழல மனசுல வச்சு. இப்போதைக்கு இவங்க இவ்வளவு எடுத்தாலே தகுதியான ஆளு தான்னு... ஒரு மதிப்பெண் நிர்ணயிக்கப்படுது.... அதுக்குப் பேருதான் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்....!

சரி அப்படிப்பார்த்தா 60%-ங்கிறது ஓரளவுக்குச் சரியான தகுதி மதிப்பெண் தானே நானும் உங்க வாதத்துக்கே வர்றேன்!

சரிதான். இப்பதான் நீங்க கொஞ்சம் மெல்ல விளங்கிக்க ஆரம்பிச்சிருக்கீங்க.... இன்னும் கொஞ்சம் மேல யோசிங்க..... அப்படி நிர்ணயிக்கப்படுற தகுதி மதிப்பெண் எந்தப் பிரிவினருக்கு என்பது தான் கேள்வி!

சரி, விடுங்க... எல்லா வாய்ப்பும் கிடைக்கிறவங்களுக்கே 60% எடுத்திருந்தால் போதும் என்பது தானே உங்க தகுதி அளவுகோல்.

இயற்கை நீதிப்படி பார்த்தால்கூட, எதையும் பார்த்துப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு மறுக் கப்பட்டு, அனைத்தையும் செவி வழியாக மட்டுமே கேட்டு உணர்ந்து கொள்ளவேண்டிய பார்வையற்ற வர்களுக்கும், முற்பட்ட வகுப்பினருக்கும் ஒரே தகுதி அளவுகோல் என்பது சரிதானா? பார்வையற்றோர் எப்படி ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களோ, அதுபோலத்தான், பிற்படுத்தப் பட்டோர் தொடங்கி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வரை முற்பட்ட வகுப்பினரோடு ஒப்பிடுகையில், ஏதோ ஒரு வகையில் வளர்வதற்கான சமவாய்ப்புச் சூழல் மறுக்கப்பட்டு, பாதிப்புக்குள் ளாகியிருக்கிறார்கள்!

இதையெல்லாம், கணக்கில் எடுத்து, மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் விவாதித்துதானே, தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களும் அவர்களது வழிவந்தோரும் பெரும் முயற்சி செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஓரளவேனும் தீர்வு வழங்குவதற்காக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்னும் அரசியல் சாசன ஷரத்தே ஏற்படுத்தப்பட்டது!

தமிழ் ஓவியா said...

அதெல்லாம் சரிங்க... 60% ங்கிறதே....

அப்படி வாங்க... நாங்க கேட்கிற இடஒதுக்கீடு கருணைய அடிப்படையா வச்சு கிடையாது. பொதுப் பிரிவினருக்கு 60% எடுத்தால் போதும்னு 40 சதவிகிதம் குறைச்சு நிர்ணயிச்சிருக்கிறது கருணைல கொடுத்ததா? இல்லைல... குறைந்தபட்ச மதிப்பெண்-னு முன்னேறிய ஜாதியினருக்கு ஒரு எல்லை வைக்கிற மாதிரி, எல்லா தரப்பினருக்கும் ஒவ்வொரு எல்லை இருக்குமில்லையா? அந்த எல்லையை (குறைந்தபட்ச தகுதி அளவுகோலை) ஏன் வைக்கலைங்கிறது தான் இப்போ கேள்வி.

மேற்சொன்ன விளக்கம் - தகுதி, திறமை மோசடிப் பேச்சாளர்களுக்கு உரியது. ஆனால், உண்மையில் TET விசயத்தில் இந்த விவாதம் எல்லாம் தேவையே இல்லாதது. ஏனென்றால் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தச் சொன்ன மத்திய அரசின் சட்டமே ஒவ்வொரு சமூகத் தினருக்கும் உரிய விகிதத்தை, தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கச் சொல்கிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இப்படித் தான் நிர்ணயிக் கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இதோ, NCTE (National Council for Teacher Education) வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள் http://www.ncte-india.org/RTE-TET-guidelines[1]%20(latest).pdf என்ற பக்கத்தில் இருக்கிறது.

அதன் விதி எண் 9(அ) சொல்வது என்ன?

Qualifying marks

9. A person who scores 60% or more in the TET exam will be considered as TET pass. School managements (Government, local bodies, government aided and unaided)

(a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC, differently abled persons, etc., in accordance with their extant reservation policy;

9. ஆசிரியர் தகுதித் தேர்வில் 60ரூ அல்லது அதற்கு மேல் எடுக்கும் நபர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுவார். பள்ளி நிர்வாகங்கள் (அரசு, உள்ளாட்சி அமைப்பு கள், அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத)

(அ) அவரவர் பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கேற்ப SC/ST, OBC மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப் பெண்களில் தளர்வு வழங்கிக் கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

இந்திய அளவில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் என்பதால், அந்தந்த மாநிலத்துக் கேற்ப, அமைப்புகளுக்கேற்ப அவரவர் பின்பற்றும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றிக் கொள்ளலாம் என்று இவ்வளவு தெளிவாக NCTE கொடுத்திருக்கும் வழிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டுத் தான், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அசாம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம், பீகார், கேரளா என இந்தியாவின் பிற மாநிலங்கள் அனைத்திலும் இடஒதுக்கீட்டுக்கான இந்த நடைமுறை பின் பற்றப்பட்டிருக்கிறது. பொதுப் போட்டிக்கான தகுதி மதிப்பெண்கள் 60% என்றும், இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 55 என்றும் அறிவித்து முடிவுகள் வெளியிடப்பட் டுள்ளன.

ஒரிசாவில் பொதுப் பிரிவினருக்கு 60%, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 50% ஆந்திராவில் பொதுப் பிரிவினருக்கு 60%, பிற்படுத்தப்பட்டோருக்கு 50%, தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40% என தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

ஆனால், தமிழ்நாட்டில் சகல வசதி-வாய்ப்பு களும் படைத்த ஆங்கில வழியில் படித்த பார்ப் பனர்கள் உள்ளிட்ட முற்பட்ட வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதே 60% தான், பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ்வழிக் கல்வி கற்றோர், பெண்கள், கைம்பெண்கள் உள்ளிட்ட தமிழ் நாட்டின் அத்தனை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானதல்லவா?

தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசு ஆணையிலும் (G.O. (Ms) No. 181, School Education (C2) Department, Dated 15.11.2011) NCTE வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளது. ஆனால் தாங்கள் பின்பற்றப்போகும் அளவுகோல் என்ன என்பதை அப்போது வெளிப்படுத்தவில்லை. அரசாணையில் வெளிப்படுத்தாத முடிவை 07.03.2012இல் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் (04/2012) General Information என்ற தலைப்பில் தெரிவித்துள்ளது தமிழ்நாடு ஆசிரியர் தேர் வாணையம் (TRB).

Candidates securing 60% and above in the tests will be issued a TET Eligibility Certificate mentioning the language opted under Language I, which will be valid for 7 years from the date of issue of the certificate.

சமூக நீதிக்கெதிரான முக்கியமான இந்த முடிவை எடுத்தது யார்? இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வகுப்புவாரியாக நிர்ணயிக்கவேண்டிய அளவு கோலை நிர்ணயிக்காமல் விட்டது எப்படி? இதில் நாம் கேட்கும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் நிர்ணயம் - சட்டப்படியும், சமூக நீதிப்படியும் நமக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமை. இது சலுகையோ, போனால் போகிறது என்று போடுகிற பிச்சையோ அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள், ஆசிரியர் சங்கங்கள் கூட இந்த மோசடியைக் கண்டு பிடிக்கவில்லை என்பது தான் கொடுமை!

இந்திய அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த சமூகநீதி உரிமையை வழங்காமல் செய்தது மாபெரும் குற்றம் அல்லவா?

தகுதி அளவுகோல் 60% என்பது (தமிழ்நாட்டில் 150 மதிப்பெண்களில் 60% என்றால் 90 மதிப்பெண்கள்) பொதுப் பிரிவினருக்கானது. அப்படியானால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு? 60% மதிப்பெண்ணுக்கு மேல் என்று அளவு வைத்து நிரப்பப்பட்ட இடங்கள் எல்லாம் பொதுப்போட்டி இடங்கள் என்றால் மிச்சம் இருக்கும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான 69% இடங்கள் களவாடப்பட்டுள்ளது தெரியவில்லையா?

இதுவரை நாம் பார்த்தது தகுதி மதிப்பெண்களில் சமூகநீதியும், மத்திய அரசின் ஆணையும் எப்படி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே! இனி, அடுத்த மோசடியைப் பார்ப்போம்.29-3-2013

தமிழ் ஓவியா said...


பக்தி படுத்தும் பாடு


ஹோலியின் கைங்கர்யம்: 21 பேர் பலி

சித்தூர்: ஹோலி பண்டிகையையொட்டி ஏரி, குளம், ஆற்றில் குளித்த 21 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆந்திராவில் நடந்த கொண்டாட்டத்தில் சோக சம்பவங்கள் நடந்தன. நிஜாமாபாத் மாவட்டம் சிரிகொண்டாவில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடி, தண்ணீரை ஊற்றினர். பின்னர், பசந்த்செருவு ஏரியில் குளித்தனர். அப்போது, 5 மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த னர். அதே மாவட்டத்தை சேர்ந்த ராமராஜூ (30), ஏரியில் மூழ்கி இறந்தார்.

கரீம் நகர் மாவட்டம், சிரிசில்லா மண்டலம் ராஜிவ் நகரை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குளித்தபோது மூழ்கி இறந்தனர். மேலும், நலகொண்டா, திம்மாபூர், அடிலாபாத் மாவட்டங்களில் தலா ஒருவர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். மேடக் மாவட்டத்தில் 3 வாலிபர்களும், நலகொண்டா, கம்மம் மாவட்டங்களில் தலா ஒருவரும், அய்தராபாத் சந்தோஷ் நகரில் 3 வாலிபர்களும் நீரில் மூழ்கி இறந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 21 அய் எட்டியது. விசாகப்பட்டினம் மாவட்டத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்களும், 2 வாலிபர்களும் காணவில்லை.

தமிழ் ஓவியா said...

தீக்குண்டத்தில் விழுந்து பக்தர் படுகாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர் தவறி விழுந்து காயமடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை திரவுபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது.

இதை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வந்தனர். இரவு 10 மணி யளவில் குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 8.40 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்கி னர். 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

குண்டத்தை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பார்வையிட்டனர். விழாவை முன்னிட்டு பொள்ளாச் சியில் இருந்து ஆனைமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக் கப்பட்டது. குண்டம் இறங்கிய பக்தர் ஒருவர் நிலை தடுமாறி குண்டத்தில் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட் டனர். குண்டத்தில் காயம் அடைந்த பக்தரை மருத்துவ மனையில் சேர்த்தனர்.

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழா: 9 பேர் காயம்

காளையார்கோவில்: சிவகங்கை அருகே கோவில் திரு விழாவில், திடீரென வெடி வெடித்ததால், பக்தர்கள் உட்பட, 9 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில், பங்குனி திருவிழா, கடந்த 20 ஆம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று முன்தினம் இரவு, முத்தரையர் சமுதாயத்தின் சார்பில், மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சியினர் வாண வேடிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காரைக்குடி வெடி தயாரிப்பாளர் கண்ணன் வெடி போட்டு வந்தார். திடீரென வெடி வைத்திருந்த பாக்ஸ் வெடித்தது.

வெடிகள் மேல் நோக்கி செல்லாமல், பக்தர்கள் கூட்டத்திற்குள் சென்றதால், சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் காயமடைந்தனர். இதில் கண்ணன் (36) என்பவர் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையிலும், இவரது உதவியாளர்கள், இரண்டு பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.

தரிசனம் செய்ய வந்த கீழத்தூவல் கட்டக்குமார்(50), இவரது மனைவி தேன்மொழி(38).இவர்களது மகன் திரு முருகன்(18). சவரீஸ்வரன், இவரது மனைவி செல்வி, கவியர சன்,6 காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழ் ஓவியா said...


இலங்கை அமைச்சர் கருணாவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை


கொழும்பு, மார்ச் 29- இலங்கை யின் துணை அமைச்சரும், விடு தலைப் புலிகள் அமைப்பின் முன் னாள் தளபதியுமான கருணாவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று நியூயார்க்கி லிருந்து செயல்படும் மனித உரி மைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் அமைப்பிலிருந்து வெளியேறி...

இலங்கையின் மறுகுடியேற்றத் துறை துணை அமைச்சராக இருப் பவர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா. அவர் விடுதலைப் புலிகளின் கிழக்குப் பகுதி தளபதி யாக, அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வராக இருந்தார். 2004-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பி லிருந்து வெளியேறிய கருணா, தனது படையினருடன் இலங்கை ராணுவத்துடன் இணைந்து செயல் படத் தொடங்கினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட அவர், பின்னர் அரசியலில் நுழைந்து எம்.பி.யாகவும், அதைத் தொடர்ந்து அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசில் அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

போர்க் குற்ற விசாரணை

இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டணியில் உள்ள சில உறுப்பி னர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, அவர்களிடம் போர்க்குற்ற விசாரணையை அரசு நடத்த வேண் டும் என்று கருணா சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியப் பிரிவு இயக் குநர் பிராட் ஆடம்ஸ் வியாழக் கிழமை வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது:

பிறர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க நினைக்கிறார் கருணா. இலங்கை யின் துணை அமைச்சராக உள்ள அவர் கோரியபடி போர்க்குற்ற விசாரணையை அரசு தொடங்க வேண்டும். அதுவும், அவரிடம்தான் முதல் விசாரணையை நடத்த வேண்டும்.

1990-ஆம் ஆண்டு 400 முதல் 600 பேர் வரையிலான காவல்துறையி னரைக் கைது செய்த கருணாவின் தலைமையிலான விடுதலைப் புலிகளின் படைப்பிரிவு, அவர்களை கடுமையாக சித்திரவதை செய்தது. பின்னர், அந்த அதிகாரிகளில் சிங் கள, முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர் கள் கொல்லப்பட்டனர்.

ஒப்புக்கொண்ட கருணா...

இந்த சம்பவத்தை பிபிசி-க்கு அளித்த பேட்டியில் கருணா ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், சம்பவம் நடைபெற்ற போது, தான் அங்கு இல்லை என்பதால், அதற்கு பொறுப் பேற்க முடியாது என்று தெரி வித்தார். சட்ட விதிமுறைகளின்படி, அமைப்பின் கீழ்நிலையில் உள்ள வர்கள் செய்யும் குற்றங்களுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ள வர்களும் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் கருணாவை விசாரிக்க வேண்டும்.

அதே காலகட்டத்தில் மட்டக் களப்பு பகுதியில் 200-க்கும் மேற் பட்ட பொதுமக்களை அவரது படையினர் சுட்டுக் கொன்றுள் ளனர். மேலும், வீடுவீடாகச் சென்று பெற்றோர்களை வற்புறுத்தி தனது இயக்கத்துக்கு குழந்தைகளை சேர்த் தது. நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து சிறார்களை கடத்திச் சென் றது. பள்ளி செல்லும் சிறுவர், சிறு மிகளை கடத்திச் சென்று ஆயுதப் பயிற்சி அளித்தது ஆகியவை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக தனக்குள்ள பொறுப்பை மறைப்ப தற்காக எதிர்க்கட்சிகள் மீது கருணா புகார் கூறிவருகிறார் என்று தெரி வித்துள்ளார் பிராட் ஆடம்ஸ்.

தமிழ் ஓவியா said...


செய்தியும்-சிந்தனையும்


ஜாக்கிரதை!

செய்தி: குஜராத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டால் திருமணங்கள் ரத்து ஆகின்றன.

சிந்தனை: ஹி... ஹி.... இந்த மோடிதான் பிரதமராகப் போகிறாராம். குடிக்கத் தண்ணீர் கிடைக்காது - ஜாக்கிரதை!

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டுச் சர்ச்சை


2013 நவம்பரில் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்து உரத்த முறையில் எழுந்துள்ளது.

இனப் படுகொலையைச் செய்த நாடு இலங்கை என்ற கருத்து உலகளவில் வலிமை பெற்றுள்ள நிலையில், எந்த நிலையிலும் இலங்கை அரசுக்கு மதிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்குத் துணை போகக் கூடாது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

பிரிட்டனின் முன்னாள் குடியேற்ற நாடுகள் 54 காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கின்றன.

வர்த்தகத் தொடர்புகள் இந்த நாட்டுக்குள் அமைத்துக் கொள்வது போன்ற ஒப்பந்தங்கள் இருந்தாலும் 1997ஆம் ஆண்டில் இந்த அமைப்புக்கென்று சில குறிக்கோள்கள், கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன.

சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, ஜனநாயக உரிமைகள், ஊழலற்ற நிலை, இவற்றுடன் இனம், நிறம் பாராட்டாது அனை வருக்கும் சம உரிமை என்னும் கோட்பாடுகள் காமன்வெல்த் அமைப்புக்கென்று உருவாக்கப் பட்டுள்ளன.

இந்த நிலையில், இனப்படுகொலை செய்த, பேரினவாத அரசு நடக்கும், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரிட்டனை முதன்மைப் படுத்தி இயங்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரிட்டன், கனடா போன்ற நாடுகளே கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டன.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல் உண்டு. எந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுகிறதோ, அந்த நாட்டின் ஆட்சித் தலைவர் தான் அடுத்த ஈராண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைவராக இருப்பார் என்பது விதிமுறை. அதன்படி இனப்படுகொலையாளன், இட்லரின் மறுபதிப்பான ராஜபக்சே காமன் வெல்த்துக்குத் தலைமை தாங்குவதைவிட தலைக் குனிவு வேறு ஒன்று இருக்க முடியுமா? காமன்வெல்த்தில் அங்கம் பெறாத நாடுகள் கேலி செய்யாதா?

நிறவெறி ஆட்சி நடத்திய தெ. ஆப்பிரிக் காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலக்கி வைத்த நிலைப்பாடெல்லாம் உண்டே!

இலங்கைப் பிரச்சினையில் மேலும் மேலும் இந்தியா தவறு செய்து கொண்டே போகும் நிலையில், அவற்றிற்குக் கழுவாய் தேடும் வகையில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்லக் கூடாது என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

இந்த மனிதநேய மனித உரிமைக் கருத் தையும் இந்தியா புறக்கணிக்குமேயானால், இதற்குமேலும் இந்தியாவைக் காப்பாற்ற எந்த சக்தியாலும் முடியவே முடியாது.

போர்க்குற்றவாளியாக உலக நீதிமன்றத்தின் முன் இலங்கை அதிபர் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்ற, மனித உரிமைக் குரல் உலகளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கால கட்டத்தில், காமன்வெல்த் அமைப்புக்கு இனப்படுகொலையாளன் - சிங்களவெறியன் காமன்வெல்த் அமைப்பின் கோட்பாடுகளுக்கு விரோதமான நோக்கும் போக்கும் கொண்ட போர்க் குற்றவாளி எப்படி காமன்வெல்த் அமைப்புக்குத் தலைமை தாங்க முடியும்? அது தடுக்கப்பட வேண்டுமானால் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுவது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

காமன்வெல்த் நாடுகள் கருத்தூன்றிச் செயல்பட்டாக வேண்டும்.

இந்தியா இதற்காகக் குரல் கொடுக்குமா? குறைந்தபட்சம் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமா? எங்கே பார்ப்போம்!30-3-2013

தமிழ் ஓவியா said...


அரசு கவனத்தில் கொள்ளுமா?

இப்படி ஒரு கார்ட்டூனைப் போட்டுள்ளது கருமாதி ஏடு.

யார் நல்லது செய்தாலும் தம் கொள்கைக்கு உடன்பாடு என்றால் அதனை முன்வந்து ஆதரிப்பதும் கொள்கைக்குக் குந்தகம் என்றால் அதனை எதிர்ப்பதும் திராவிடர் கழகத்தின் கொள்கை வழிப்பட்ட அணுகு முறையாகும்.

தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை விற்று வயிற்றுப் பிழைப்பு நடத்தும் இனமலருக்கு முக்கால் நூற்றாண்டுக்கு மேல் செயல்பட்டு வரும் ஓர் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த பொது அறிவுகூட இல்லாமல் அதே நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஒன்று சொன்னால் அதனைக் கொச்சைப்படுத்தியே தீர வேண்டும் என்ற பார்ப்பனர் கொழுப்பெடுத்துக் கிறுக்குவதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? கண்மூடித்தனமான எதிர்ப்பு கண்மூடித்தனமான ஆதரவு தான் சரி என்பது இனமலர்களின் புத்தியா?

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து கொண்டிருக்கும் ஜகத் குருக்களைப் பற்றி இந்த இனமலர் ஏடுகளின் கண்ணோட்டம் என்ன?

பக்கம் பக்கமாக இந்த ஏடுகளுக்கு விளம்பரம் கொடுக்கும் அதிமுக அரசு - ஆட்சி செய்யும் நல்லதுகளை பாராட்டி சொல்லுவதைக்கூட கொச்சைப்படுத்தி எழுது கிறதே - இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டாமா? 30-3-2013

தமிழ் ஓவியா said...


அவதாரங்கள் அவ்வளவுதானா? - சிவகாசி மணியம்

திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய புளுகு மூட்டைகள் நமக்குத் தெரியும். அந்தப் பத்தில் சிறந்தது எது என்று ஒரு பக்தனிடம் கேட்டால் என்ன சொல்வான்? இராமாவதாரம் என்பான். அல்லது கிருஷ்ணாவதாரம் என்பான். அதெல்லாம் இல்லை பன்றி அவதாரம் தான் சிறந்தது என்று நாம் சொன்னால் நிச்சயம் நம் மீது பாயத்தான் செய்வான். வம்புவந்து சேரும். ஆனால் இதையே பக்திப் போர்வையில் பாகவதம் என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதும் வேளுக்குடி சொன்னால் அது சரியாக இருக்கும். பன்றி அவதாரம் தான் பெருமை வாய்ந்தது என்று அடித்துச் சொல்கிறார் அவர். அதைச் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.

மற்ற அவதாரங்களைக் குறைத்துக் கூறுவதற்காக சொல்லப்படவில்லை. பன்றி அவதாரத்தின் பெருமையை நிலை நாட்டவே கூறப்படுகிறது. இதனை இலக்கியக் கண்கொண்டு மட்டும் ரசித்திட வேண்டும் என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறார். (இலக்கியக் கண் இதற்கு மட்டும் தான். மற்ற அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுக்களுகெல்லாம் குருட்டு நம்பிக்கை ஒன்றே போதும் என்கிறார் போலும்),
சிறப்பைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் பன்றியின் பிறப்பு பற்றித் தெரிந்து வைப்போம். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மாவின் நான்கு பிள்ளைகளும் அத்தொழிலில் உதவிக்கு வர மறுத் தார்களாம். உடனே சுவாயம்புவ மனு என்ற இன்னொரு மகனை நான்முகன் உருவாக்கினான். உலகைப் படைக்கத் தொடங்கிய இந்த மகனும் அதைத்தொடர முடியாமல் நிறுத் தினான். ஏனென்றால் இரண்யாட் சன் என்ற அசுரன் பூமாதேவியை எடுத்து பிரளய ஜலத்துக்குள்ளே (கடல்) ஒளித்து வைத்துவிட்டான். மக்களைப் படைத்தால் அவர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது என்ப தால் சுவாயம்புவ மனு தன் தந்தை யான பிரம்மாவிடம் வந்து பூமியை விடுதலை செய்யுங்கள். அதன் பின்னர்தான் படைப்புத் தொழிலைச் செய்ய முடியும் என்றான்.

இதை எப்படிச் செய்யலாம் என்று பிரம்மன் யோசித்துக் கொண்டி ருக்கும் போதே அவருடைய ஒரு மூக்கிலிருந்து பன்றி ரூபம் ஒன்று தோன்றியது. (மூக்கிலிருந்து சளி தானே வரும், பன்றி எப்படி வரும்? பிரம்மாவோ நான்கு தலை கொண்ட நான்முகன். நான்கு மூக்கில் எந்த மூக்கிலிருந்து பன்றி வந்தது? என் றெல்லாம் ஏடா கூடமாகக் கேட்கக் கூடாது. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் என்பதை மறந்து விடக்.கூடாது)

மூக்கின் வழியே வந்த பன்றி ஆயிரக்கணக்கான யானைகள் அளவுக்கு உயர்ந்து பருத்தது. அவரே வராகப் பெருமாள்! திருமாலின் முக்கியமான அவதாரம்! பன்றியின் தனிச்சிறப்பு; அதனால் நிலத்தில் நடக்க முடியும். நீரில் நீந்தவும் முடியும்! சகதியிலும் சுலபமாக நடக்க முடியும். பூமாதேவி கடலுக்குள் இருந்தபடியால் இந்தத் திறமைகள் எல்லாம் இருந்தால் தான் அவளைக் காக்க முடியும். அதனால் தான் பன்றி அவதாரம்!

முதல் அவதாரமான மச்ச அவதாரம் மீன். தண்ணீரை விட்டுக் கரை ஏற முடியாது. மீனாக இருக் கும்போது சம்சாரக் கடலிலிருந்து நம்மை அது கரை ஏற்ற முடியுமா? இயலாது.

அடுத்து கூர்மம். ஆமை அவ தாரம்! அதன முதுகையே மந்தர மலை அழுத்துகிறவோது சம்சார பாரத்தை சுமந்து அதனால் அழுத்தப்படும் நம்மை அது மீட்க முடியுமா? இயலாது.

கழுத்துக்கு மேலே சிங்க உருவ மும், கழுத்துக்கு கீழே மனித உருவ மும் கொண்ட உருவம்தான் நரசிம்ம அவதாரம். இரண்டு உருவங்கள் கொண்டவனை நம்பமுடியுமா? விட்டு விடுவோம்!

தமிழ் ஓவியா said...

அடுத்து உலகத்தையே தாவி அளந்த வாமன அவதாரம், ஆனால் சிறிய காலைக் காட்டி மூன்றடி மண் வேண்டி, பின்னால் பெரிதாக வளர்ந்து அளந்து கொண்டவன். அதனால் அவனிடத்தில் யாருக்கும் நம்பிக்கை பிறக்காது.

அடுத்து ஆவேச அவதாரமான பரசுராமனைப் பற்றலாம் என்றால் அவரே பெரும் கோபக்காரர். நாமோ கோபத்திலிருந்து விடுதலை அடையத் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவரை எப்படி பற்ற முடியும்? இயலாது.

அடுத்து இராமனைப் பற்றலாம் என்றால் அவனே சக்கரவர்த்தி திருமகன் மிக உயர்ந்தவன். எளிதில் நாம் அவரை அண்டிவிட முடியாது.

கண்ணன் எளியவன் ஆயிற்றே! அவனைப் பற்றலாமா? ஏலாப் பொய்களை உரைப்பான். சொல் லொன்று செயலொன்றாக இருப் பான். அவனை நம்ப முடியாது.

அவன் அண்ணன் பலராமனோ எப்போதும் சண்டைக்காரன். பாரதப்போரின் போது தம்பியையே கைவிட்டு விட்டு தீர்த்த யாத்திரை சென்று விட்டவர். நம்மையும் கைவிட்டு விடுவாரோ என்னவோ!

கடைசியான கல்கி அவதாரமோ இன்னும் ஏற்படவே இல்லை. எங்கே பற்ற? ஆகவே இவை அனைத்தையும் விடுத்து கடலில் மூழ்கிக் கிடந்த பூமாதேவியைக் கிளர்ந்து எடுத்த பன்றியையே நாம் பற்றவேண்டும் என்று சமாளிக்கிறார் கட்டுரை ளாளர் (துக்ளத் 20.3.2013) இன்னும் இந்நாள் வரை ஏற்படாத கல்கி அவதாரம் தாசாவதாரப் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட மர்மம் யாருக்கும் தெரியாது.

ஒரு மனிதனுள் இருப்பது நவதுவாரங்கள். அதாவது ஒன்பது ஓட்டைகள், மூக்கின் வழியே பன்றி வந்தாயிற்று! மிச்சமிருக்கும் எட்டு ஓட்டைகளை கழுதை, கரடி, காண்டா மிருகம், கரப்பான் பூச்சி என்று அவதாரங்கள் பல சேர்த்து சதாவதாரம் என்ற பெயரிட்டு மனிதர்களை மத போதையில், மடமையில் மூழ்கடித்து இன்னும் நிறைய காசு பண்ணலாமே. கயிறு திரிக்க பூணூல்களுக்கா பஞ்சம்?

வெறுமனே விட்டு வைக்கலாமா? அவதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாமே

தமிழ் ஓவியா said...


சோதிடம் ஓர் அஞ்ஞானமா? விஞ்ஞானமா?

சோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி, இதன் பால் இழுக்கச் சிலர் போடும் நாடகமே. சோதிடத்தைக் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு கணிக்கிறார்கள் என்று கூறுவார்கள். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் தான் மற்ற கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அக்கிரகங்களின் நிலை மாற்றங்கள், மனிதனைப் பாதிக்காதா? என்பது பலரது சந்தேகமாகும். இக்கேள்வி சற்று விரிவாக விஞ்ஞானத்துடன் அணுக வேண்டியது. முதலாவதாகக் கிரகங்களைப் பற்றிச் சோதிடம் சொல்வதைக் காண்போம்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் உள்ளன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே, சோதிடம் கணிக்கப்படுகிறது என்று சோதிடர்கள் கூறுகின்றனர். சோதிடத்தின் அஸ்திவா ரமே கேலிக்கூத்தாய் இருக்கிறது.

சூரியன் ஒரு கிரகமே அல்ல. அது ஒரு நட்சத்திரம், நட்சத்திரம் என்றால், ஹைட்ரஜன் வாயுவால் உருவானது. சூரியன் சுயமாக ஒளியையும், வெப்பத் தையும் உருவாக்க முடியும். கிரகங் களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. ஆக, சூரியனை ஒரு கிரகமாகப் பொய் கூறிச் சோதிடம் கணிக்கிறார்கள். சூரியனை மையமாகக் கொண்டுதான், பல கிரகங்கள் சுற்றி வருகின்றன.

மற்றொரு வேடிக்கை பார்த்தீர்களா? அவர்கள் கூறும் ஒன்பது கிரகங்களில், பூமியே இல்லை என்பதைக் கவனித் தீர்களா? நாம் வாழும் இந்த பூமியின் நிலை மாற்றங்களை தவிரவா மற்ற கிரகங்களின் நிலை மாற்றங்கள் நம்மைப் பாதிக்கப் போகின்றன. பூமியும் ஒரு கிரகம்தானே? பிறகு ஏன் அதனைச் சேர்க்கவில்லை. ஏன் என ஆராய்ந்தால், விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில் பூமிதான் மையம். அதனைச் சுற்றித் தான், சூரியன் வலம் வருகிறது என நம்பப்பட்டது.

மற்றொரு வேடிக்கை என்னவென் றால், சோதிடக் கிரகங்களில் சந்திரனும் ஒன்று. சந்திரன் கிரகமே இல்லை. அது ஒரு துணைக்கிரகம் ஆகும். சந்திரன் சூரியனைச் சுற்றி வருவதில்லை. பூமியைத்தான் சுற்றி வருகிறது. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை அறிந்தோம். சந்திரன் துணைக்கிரகம் என்பதை அறிந்தோம். ஆக ஏழு கிரகங்கள். பூமியைச் சேர்ந்தால் எட்டு கிரகங்கள். இந்த எட்டு கிரகங்களில், ராகு, கேது ஆகியவை கிரகங்களே இல்லை என விஞ்ஞானம் கூறுகிறது.

தற்போது விஞ்ஞானம் கூறுகிற கிரகங்களைப் பார்ப்போம்.

பூமி, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, வின்மம், சேண்மம், புளூட்டோ, சாரோன், மேக்மேக், ஹவு மியா, இரிஸ். ஆக, 13 கிரகங்கள் அக்டோ பர் 2011 வரை கண்டறியப்பட் டுள்ளன. இவை அனைத்துமே சூரிய னைத்தான் சுற்றி வருகின்றன. இந்த கிரகங் களை ஏன் சோதிடம் கைவிட்டு விட்டது. அவர்கள் கூறிய கிரகங்களுக்குத்தான் சோதிடத்தில் இடமுண்டா?

சூரியனிலிருந்து இந்தக் கிரகங்கள் பல கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. இவ்வளவு தூரத்தில் இருக்கக் கூடிய இந்தக் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி பூமியில் இருக்கக்கூடிய ஒரு தனி மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்க முடியும்? உண்மையில், இதர கிரகங்களின் நிலை யினால், பூமிப் பந்தில்கூடத் திடீரென்று பெரிய அளவுக்கு மாறுதல்கள் ஏற்படுவ தில்லை. பிறகு, எப்படி தனி மனிதனின் வாழ்வில் அவை புகுந்து, தீர்மானிக்க முடியும்?

ஆயுள் ரேகை, நேர்த்தியாக அமைந் திருந்தால் ஒருவர் ஆயுளுடன் நோய் தொல்லை இல்லாமல், சுக வாழ்க்கை வாழ்வார். பலரிடமும் இந்த நம்பிக்கை ஆழமாய் பதிந்திருக்கிறது. ஒரு மனிதனின் ஆயுளைப் பலகாரணி கள் தீர்மானிக்கின்றன. உடல்வாகு, உணவுப் பழக்கம், வேலை முறை, தீய பழக்கம், எதிர்பாராத விபத்து போன் றவை. அத்தோடு சேர்ந்து வாழும் நாட்டின் சுகாதார வசதிகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.

மனித வாழ்வின் அனைத்து அம்சங் களும், ஏற்கெனவே கைரேகைகளில் தீர்மானம் ஆகிவிட்டன., என்றால், மனித முயற்சிக்கும், தனி மனித ஆற்ற லுக்கும் அர்த்தமே இல்லாமல் போய் விடும். மனிதனை முடக்கிப் போட முயலுகிற கோரமான நம்பிக்கைகளில், கைரேகை சோதிடமும் ஒன்று, சோதிடர்கள் சூழ்நிலைக்காரர்கள். அதைக் கேட்பவர்கள் சூழ்நிலைவாதிகள்.

நம் வீட்டில் நடந்த சில நிகழ்வுகளை அப்படியே நேரில் பார்த்தது போலச் சொல்லி விடுகிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று சிலர் கேட்கக் கூடும். நியாயமான கேள்வி தான்! பெரும் பாலும் சோதிடம் கேட்கப் போகிறவர் களே, தங்கள் வீட்டில் நடந்ததை, தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை உளறி விடுவார்கள். சோதிடரும் இவர்களின் வாயைக் கிளறி வரவழைத்து விடுவார்கள். பிறகு என்ன? ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்.

- நன்றி: கலைக்கதிர் பிப்ரவரி 2013

தமிழ் ஓவியா said...


பெரியார் பெருந்தொண்டர்கள் பாரீர்!


திராவிடர் கழகத்தில் இருக்கக் கூடிய பெரியார் பெருந்தொண்டர்களின் பெருமையை, கொள்கை உறுதி பேணும் பண்பாட்டை என்னவென்று சொல்ல.

எடமேலையூர் ஆர். சண்முகம் எண்பது வயது கடந்த இவர் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளராக இருந்தார். சிறு நீரகப் பாதிப்பின் காரணமாக வெளியில் வர முடியவில்லை என்றாலும், அந்த சுயமரியாதை உணர்வு கொஞ்சமும் குறையவில்லை ஒரு குறைபாடே தவிர மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன். 60 ஆண்டுகளுக்கு மேலாக சுயமரியாதைக்காரன் அந்த ஊட்டம் என்னை விட்டு அகலாது என்று உணர்ச்சி பொங்க கூறினார் அவரின் இளைய மகள் விடுதலைக்கு ஓர் ஆண்டு சந்தா தொகையும் அளித்தார். அவரின் இணையரும் அன்புடன் வரவேற்றார்.

எடமேலையூர் காசிநாதன் 82 வயதைக் கடந்த இளைஞர் இவர். அன்றாடம் விடுதலையை படிக்கத் தவறுவது கிடை யாது. அவரது தம்பி மேக நாதன் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் இப் பொழுது ஆற்றும் பணி போதாது இன்னும் தீவிரமாக ஆற்ற வேண்டும் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஆரோக்கியமாக இருக்கிறார். இணையர் அவர் களும் அன்புடன் வரவேற்றார்.

கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் நிகழ்ச்சிகளுக்காக சென்ற போது இந்தப் பெரியார் பெருந் தொண்டர்களை நேரில் சந்தித்து நலம் விசா ரித்தார். பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக் குமார் ஒன்றிய தலைவர் கணேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.

திண்டிவனம் அருகே தழுதாளி ஊர். 85 வயது. தழு தாளி சண்முகம் எப்பொழுதும் கருப்புச்சட்டைதான். வீட்டு வாசலில் ஒரு பெட்டி இருக்கும். அதில் விடுதலை இருக்கும். யாரும் வந்து படித்துப் போகலாம். கருப்புச்சட்டை அணிவதே ஒரு பிரச்சாரம் தான் என்று தந்தை பெரியார் சொன்னது முதல் எப்பொழுதும் அந்த உடையுடன்தான் காணப்படுவார். மகன் அன்புச்செல்வன் கழகப் பொறுப்பாளர் ஆக உள்ளார். இணையர் நலமுடன் உள்ளார்.

தமிழ் ஓவியா said...


தினமலர் விமர்சனம்


பெண் சிசுக் கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது; கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை!

ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது. பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும் என்ற நூல், அதிலிருந்து சில பகுதிகள்:

இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட் டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றவும், பின், அவர்கள் ஆத்மா சாந்தியடையவும், ஆண் மக்களே தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும், சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும். அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க, ஆண் மக்களே தேவைப்பட்டனர்.

ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை, பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், அவர்கள் பொறுப்பாயிற்று இது.

இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின், பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று, வாழ்ந்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப் பதும், பெற்றோருக்கு ஒரு சுமையான பொறுப்பாகி விட்டது.

கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ, அவர்களை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பும் பெற்றோரைச் சேர்கிறது.

அதிக பெண்களைப் பெற்ற தந் தையை, சமூகம் தாழ்வாகக் கருதுகிறது.

ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்து கொண்டாலும், அவன் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது; பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டால், குடும்பம் அவளைப் புறக்கணித்து, ஏற்பதில்லை.

- இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசுக் கொலைக்கு காரணமாகிறது என்கிறது இந்நூல். இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?

(தினமலர்கள் வாரமலர் 17.9.2013)

தமிழ் ஓவியா said...


இவர்தான் பூரி சங்கராச்சாரி!

கேரளத்தில் 1965ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று காலடி என்ற ஊரில் நடைபெற்ற அகில இந்திய பிரா மணர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பூரி சங்கராச்சாரி குறிப்பிட்டதாவது:

ஆண்டவன் ஒரு மனிதனுக்குச் செய்யும் உயர்ந்த சிறப்பு அவனைப் பிராமணனாகப் பிறக்க வைப்பது; அப்பெருமைக்குத் தகுந்த வகையில் நடந்து கொள்வது பிராமணர்களது கடமையாகும்.
(ஆதாரம்: இந்து 8.12.1965 பக்கம் -12)

அது மட்டுமா? பச்சையான ஒரு வர்ணாசிரமவாதி என்று பகிரங்கமாக முழங்கியதும் இதே பூரிதான்.

எப்போது வர்ணாசிரமம் தழைக் கிறதோ அப்போதுதான் பாரதம் க்ஷேமம் அடைய முடியும். உலகமும் க்ஷேமம் அடையும்.

எல்லோரும் சமம் என்று வாழும் பிரச்சாரம் இக்காலத்தில் பரவிக் கிடக் கிறது. ஜாதி வகுப்புக்களற்ற சமுதாயம் என்றெல்லாம் சிருஷ்டியில் சமம் என்று வாதிப்பது சரியானதா? பிறக்கும்போதே ஆண் பெண் என்ற வித்தியாசத்துடன் தானே பிறக்கின்றோம்? ஒரே சமயத்தில் பிறந்தவர்களுக்கு உள்ளேயே தோற்றம் குணம் போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே. பஞ்சேந்திரியங்கள் பயன்படுத்தப்படுவதைக் கவனமாகப் பார்த்தால் எத்தனையோ பேதங்கள் இருப்பது புலப்படும். இரட்டைக் குழந்தைகள் இடையேகூட பல பேதங்கள் இருக்கின்றன.

நமது தேகத்தில் ஓடும் இரத்தத்தில் கூட அல்லவா வேறுபாடுகள் காணப்படு கிறது. மேனாட்டு ரத்தப் பரிசோதனை நிபுணர்கள் மனுஷ்ய சரீரங்களில் ஓடும் ரத்தத்தை நான்கு வகையாகப் பிரித் திருக்கிறார்கள்.

ஓ, ஓஏ, ஏபி, பி என்பவையே அவை

இவற்றில் ஓ என்பது உயர்ந்த வகையான ரத்தம். இன்று ரத்த ஓட்டத்தை நான்கு வகையாகப் பிரிப்பதற்கு ஏற்பத்தான் நமது முன்னோர்கள் மனித சமுதாயத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்திருக்கின்றனர் இதை ஆதார மாகக் கொண்ட வர்ணாசிரமம் தழைக் குமானால் பாரதம் க்ஷேமம் அடையும்; உலகமும் க்ஷேமமுறும்.

பூரி சங்கராச்சாரியார் (கோவர்த்தன பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியாள் நிரஞ்சனா என்ற தீர்த்த சுவாமிகள்).

18.3.1965 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள சிருங்கேரி சங்கரர் மடத்தில் பேசினார்.
(ஆதாரம்: சுதேசமித்திரன் பக்கம் 2 22.3.1965)

தமிழ் ஓவியா said...


எண்ணத்தில் எதை வைப்பது!

ஆத்திகன்: எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்.

நாத்திகன்: எண்ணத்தில் எண்ணிய செயலை வைத்தால் எடுத்த (எண்ணிய) காரியம் (செயல்) வெற்றியாகும்.

- சு. ஆறுமுகம், நன்னிலம்

தமிழ் ஓவியா said...


தினமணிக்கு...


முட்டாள்களின் கீழ் உலகம் எனும் சிறப்புக் கட்டுரை இன்றைய தின மணியில் (1.4.2013 பக்கம் 6) வெளி வந்துள்ளது.

அதில் ஒன்று: அட முட்டாள் புருனோ! நீ சொல்வதைப் போல உலகம் உருண்டையா னது என்றால் சொர்க்கம் எங்கேயடா இருக்கும்? இது மத குருமார்கள் முன்னிலையில் ஒரு நீதிபதி கேட்ட கேள்வி. அதற்கு புருனோ சொன்ன பதில், அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?

இப்படி புருனோ கேள்வி கேட்டு கிறித்துவ மதக் குருமார்களை மடக்கியதை எல்லாம் சாங்கோ பாங்கமாக விவ ரித்து எழுதும் தினமணி அய்யர்வாள்களைக் கேட்க விரும்புவதெல் லாம் இதுதான்.

இரண்யாட்சதன் என் பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான்; பன்றி(வராக) அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு கடலில் குதித்துப் பூமியை மீட்டார் என்று தீபா வளிக்குக்கதை சொல் கிறீர்களே. அந்தத் தீபா வளிக்குச் சிறப்பு மல ரையும் வெளியிடுகிறீர் களே! தந்தை பெரியாரும், அவர் வழி வந்த கருஞ்சட் டைத் தொண்டர்களும் உங்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதுதானே!

அட முட்டாள்களே! உருண்டையான பூமியைப் பாயாக சுருட்டிக் கொண்டு போய் கடலில் எப்படி விழ முடியும்? என்று தானே அன்று முதல் இன்றுவரை கேட்டு வருகிறோம்.

இதுவரை யோக்கியமான முறையில் தினமணி தினமலர் துக்ளக், கல்கி, ஆனந்த விக டன் வகையறாக்களிட மிருந்து பதில் இல்லையே!

அதே நேரத்தில் கிறித் துவப் பாதிரியார்களை முட்டாள்கள் என்று சொல்லுவதற்கு பயன் படுமேயானால் பகுத்தறிவுவாதி போல வினா தொடுக்கத் தோள் தட்டி வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வைத்தியரே முதலில் உமது நோயைக் குணப் படுத்திக் கொள்க!

கருஞ்சட்டைக்காரர்களைப் பொறுத்தவரை உங்களை நோக்கியும் வினா எரிமலை வெடிக்கும்!

கிறித்தவர் உட்பட எந்த மத மூடத்தனத்தை நோக்கியும் எங்கள் வினாக்கள் முட்டி மோதிக் கிளம்பத்தான் செய்யும்.

- மயிலாடன்-1-4-2013

தமிழ் ஓவியா said...


டார்பிடோ ஏ.பி.ஜே எனும் சுயமரியாதைச் சுடரொளி

- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அமைப்புச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

திராவிடர் மாணவர் கழகத்தை வளர்த்தவர்களில் டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனமும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. அக்கால விடுதலை ஏடுகளைப் எடுத்துப் பார்த்தால், திராவிடர் மாணவர் கழகப் பணிகளில் அவர் பொறுப் பேற்று நடத்தியது வியப்பளிக்கிறது. பிற்காலத்தில், நம் இயக்கத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த பொழுதும், அதன் பிறகு அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பொழுதும் அவர் தன் பகுத் தறிவுக் கொள்கையை - சுயமரியாதைக் கொள்கையை கை விடவே இல்லை. எந்த நிலையிலும் தானொரு பெரியார் தொண்டன் என்று வெளிப்படுத்திக் கொள்ளத் தவறவே யில்லை. ஒரு முறை நாடாளுமன்றத் தில் பேசும் பொழுது, நாங்கள் பெரியார் ஈ.வெ.ராவின் திராவிடர் இயக்கத்திலிருந்து வந்தவர்கள்- எனக் கூறினார்.

1970 - ஆம் ஆண்டு, அவர் தி.மு.க. வில் இருந்தாலும், அவரை அழைத்து அண்ணாமலை நகரில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் நடத்தினோம். அப்பொழுது அவர் பேசுகையில், மதியழகன், தமிழர் தலைவர் ஆசிரியர், புலவர் இமயவரம்பன், வி.வி. சுவாமிநாதன் போன்றோர் காலங்களில் திராவிடர் மாணவர் கழகம் செயல்பட்ட விதம் குறித்து விளக்கமாக உரையாற் றினார். அறிஞர் அண்ணா தன்னை தமிழக மேலவை உறுப்பினராக நியமனம் செய்ததைச் சொல்லிச் சொல்லி குழந்தை போல், மகிழ்வார். அது போலவே, 1977ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளு மன்ற மாநிலங்களவைக்கு தமிழக சட்ட மன்றத்தின் மூலம் சில உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கும் தேர்தலில், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமது பெயரைத் தான் முதலா வதாக எழுதினார். பிறகுதான் மற்றவர் களின் பெயரை எழுதினார் என்று குழந்தை போலச் சொல்லி மகிழ்வார்.

எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடாமல் பேசவே மாட்டார். தமது பெயரை முதல் பெயராக எழுதினார் எம்.ஜி.ஆர். என்ற, அதே டார்பிடோ அவரோடு கருத்து மாறுபாடு கொண்டு, முதல்வர் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும் ஆளானதுண்டு. முதல்வர் எம்.ஜி.ஆர் சிலரின் தவறான வழி காட்டுதலால், பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கு பொருளாதார அளவுகோல் (9000 ரூபாய் வருமானம் வந்தால், அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகையைப் பெற முடியாது) என்ற தீர்மானம் கொண்டு வந்தபொழுது, டார்பிடோ ஏ.பி.ஜெ அவர்கள், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து, இந்தப் பொருளாதார அளவுகோல், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களின் கருத்துக்கு மாறானது என்று கூறி னார். அதற்கு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் நீங்க எல்லாம் தி.க.காரர்கள் இப்படித் தான் சொல்லுவீர்கள் என்று கடிந்து கொண்டார். தனக்கு நாடாளுமன்ற உறுப் பினர் பதவி கொடுத்தவரை, இன் றைக்கு யாராவது இதுபோல் எதிர்த்து பேச முடியுமா? டார்பிடோ பேசினார் என்றால், அவரைப் பேச வைத்தது தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையாகும்.

தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டராக வாழ்ந்ததால் தான், ஒரு முறை தமிழக மேலவை உறுப்பினர்; ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினர் என்று பதவி வகித்திருந்தாலும், ஒரு சொந்த வீடுகூட இல்லாமல், தன் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார். அரசியல் பதவி பெயரால் குடும்பத் தேவைகளைக்கூட நிறை வேற்றிக் கொள்ளவில்லை. வாழ்க ஏ.பி.ஜே. புகழ்!

- (இன்று ஏ.பி.ஜே. நினைவு நாள் - 1987).

தமிழ் ஓவியா said...


உரிமையுண்டு


எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்து என்ற பெயரால் எதையும் எடுத்துச்சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது அயோக்கியத்தனம். - (விடுதலை, 2.4.1950)