Search This Blog

19.3.13

தி.மு.க. எடுத்த முடிவு வரலாற்றுச் சிறப்பான முடிவு!


தமிழர் தலைவரின் பாராட்டும், மகிழ்ச்சியும் கலந்த அறிக்கை (Reaction)
ஈழத் தமிழர் படுகொலைப் பிரச்சினையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. - டெசோ தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தங்களை செவி சாய்க்காமல், இலங்கை அரசுக்குச் சாதகமாக நடந்து கொண்டு வரும் மத்திய அரசின் போக்கை ஏற்காமல், அமைச்சரவையிலிருந்தும் கூட்டணியிலிருந்தும் தி.மு.க. விலகியதை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை(Reaction)வருமாறு:

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சீர்தூக்கி ஆய்ந்து எடுத்து அறிவித்த இன்றைய முடிவான  - மத்திய அரசிலிருந்து தி.மு.க., ஈழப் பிரச்சினைக்காக வெளியேறுகிறது என்ற செய்தி கேட்டு, உடனடியாக கலைஞர் அவர்களுக்குக் கழகத் தலைவர் தொலைப்பேசி வாயிலாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவு என்று பாராட்டி வாழ்த்துக் கூறினார். அதே போல தி.மு.க., பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடமும் இதை வரவேற்று பாராட்டுத் தெரிவித்து வாழ்த்தினார். இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள குறுகிய அறிக்கை (Reaction)இது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமையைக் காப்பாற்றத் தவறியதோடு, மனித நேயத்தையும் மறந்த இலங்கை ராஜபக்சே அரசின் தமிழர் இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் - ஆகியவற்றிலிருந்து இன்னமும் இலங்கை அரசைக் காப்பாற்ற சர்வதேச அரங்கிலும் முயற்சிக்கும் இந்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறுவது என்ற (கூட்டணியிலிருந்தும்கூட) அதன் முடிவு - மிகவும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த முடிவு ஆகும். காலத்தே எடுக்கப்பட்ட சரியான முடிவு - தேவையான முடிவும் கூட!
ஞாலம் வரவேற்கும் முடிவு!

ஞாலம் வரவேற்கும் என்பது உறுதி. ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக முன்பு இரண்டு முறை, தமிழ்நாட்டு ஆட்சியை - அரசைத் தியாகம் செய்த தி.மு.க. -
இப்போது  9 ஆண்டுகளாக பங்கேற்ற மத்திய ஆட்சியிலிருந்து, அக்கூட்டணி அரசிலிருந்து வெளியேறி அதன் தியாக வரலாற்றில் மேலும் ஒரு வைரக் கல்லைப் பதித்து உயர்ந்துள்ளது.

மதச் சார்பின்மைக்கு மாற்று இல்லையே என்பதற்காக எவ்வளவு காலம்தான் - சுமக்கக் கூடாத பாரத்தை - தூக்கி அது சுமப்பது? அந்தப் பாரம் இப்பொழுது நீங்கியுள்ளது.

இதன் மூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமை முதல் இங்குள்ள தமிழர் உரிமைகள் வரை மேலும் சுதந்தரத்துடனும், வீரியத்துடனும் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தாய்க் கழகத்தின் பாராட்டு  - மகிழ்ச்சி!

தமிழினத்துக்கு, திராவிடர் சமுதாயத்துக்கு இனி புதியதோர் பொலிவுடன் புதிய ஏற்பாடு உருவாகட்டும் -  முடிவு எடுத்த அனைவருக்கும் தாய்க் கழகத்தின் பாராட்டுகள் மகிழ்ச்சியுடன்!

39 comments:

தமிழ் ஓவியா said...


அய்.மு.கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகல்: திருமாவளவன் அறிவிப்பு


அய்க்கிய முற் போக்கு கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வில குவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் அறிவித் துள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில், எங்களு டைய கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை. எனவே, மத்திய ஆட்சியில் இருந் தும், கூட்டணியில் இருந்தும் விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் கலை ஞர் அறிவித்தார்.

திமுக விலகியதை யடுத்து விடுதலைச் சிறுத் தைகள் கட்சியும் ஆத ரவை விலக்கிக் கொள் கிறது என தொல்.திருமா வளவன் அறிவித்துள் ளார்.

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் படுகொலை:


தி.மு.க. முன்மொழிந்த எந்தத் திருத்தத்தையும் இந்திய அரசு பரிசீலிக்காத காரணத்தால்

மத்திய அமைச்சரவையிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் தி.மு.க. விலகுகிறது

தி.மு.க. தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கை

சென்னை, மார்ச் 19- ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாக தி.மு.க. முன்மொழிந்த எந்தத் திருத்தத்தையும் மத்திய அரசு ஏற்காத காரணத்தால் மத்திய அமைச்சரவையிலிருந்தும், கூட் டணியிலிருந்தும் தி.மு.க. விலகுகிறது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கையினை தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று வெளி யிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அய்ம்பதாண்டு களுக்கு மேலாக தந்தை செல்வா அவர்களின் காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும் - தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும் - தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் - குரலெழுப்பி வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

1956ஆம் ஆண்டிலிருந்து...

அறிஞர் அண்ணா அவர்களின் காலத்திலேயே 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவிலும், தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

தந்தை செல்வா அவர்கள் காலத்தில் ஈழத் தமிழர் களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சி யையும் ஆயுத பலம் கொண்டு; அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல் பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட் டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்து நடந்த போரில் பலியா னார்கள் என்றாலுங்கூட; அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும்.

ஜனநாயக நாடான இந்தியாவின் நிலைப்பாடு?

தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீரமரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல் லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில், அவர்தம் காலடி மண்ணெ டுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப் பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இட மில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடு களின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணராமல், விளைவு களைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.

தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியாது

இவைகளையெல்லாம் அய்.நா. மன்றத்திலும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர் பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள்கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியா வும், இந்த ஜனநாயக விரோதச் செயல் களுக்கு கதவுகளைத் திறந்து விட்டி ருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது.

தி.மு.க. விலகுகிறது

எனவே குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்ட தோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையி லிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந் தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


கலைஞர் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம்


பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 25.3.2013 திங்கிட்கிழமை காலை 10 மணியளவில் தி.மு.க .தலைமைச் செயற்குழு அவரசக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- க. அன்பழகன்
பொதுச் செயலாளர், தி.மு.க.

தமிழ் ஓவியா said...


காலச் சிலாசாசனம்!


உலக வரலாற்றில் எங்கும் கேள்விப்படாத இனப்படுகொலை இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாத அரசால் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தியும், ராஜீவ் காந்தியும் இனப் படுகொலை (Genocide) என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர்.

இனப்படுகொலையை ஒரு நாடு செய்தால் அதில் எந்த நாடும் தலையிடலாம் - அது வெளிநாடு தலையிட்டக் குற்றமாகாது.

உண்மை இவ்வாறு இருக்க, இந்திய அரசோ இனப்படுகொலை அரசைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக அந்த இனப்படு கொலை நாட்டை தமது நட்பு நாடாக அறிவிக்கிறது என்றால் - இந்தக் கொடுமையை என்ன சொல்ல!

இன்றைய பேட்டியில் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் மிகத் துல்லியமாகக் கோடிட்டுக் காட்டியது போல இந்தியாவும் போர்க் குற்றத்திற்கு இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நிலையில், எதிர்காலத்தில் விசாரணைக்கு இந்தியா உட்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற் கில்லை.

எத்தனையோ முறை இதமாக - பதமாக - போதுமானது என்பதை விடத் தாண்டி வாய்ப்புக் கொடுத்துப் பார்த்தும்கூட, இந்திய அரசின் போக்கில் எந்தவிதமான நேர்மை யான, மனித உரிமையுடன் மனிதநேயத் துடன் கூடிய போக்கோ, சிந்தனையோ அறவே யில்லை.

வேறு வழியில்லை என்று உறுதியாகத் தெற்றென அறிந்த நிலையில்தான் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த 16ஆம் தேதி மத்திய அரசில் திமுக தொடர்வதில் இனியும் அர்த்தமில்லை என்றே அர்த்தமிக்க கருத்தினை ஆணித்தரமாக வெளியிட்டார். அதற்குப் பிறகாவது மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு தன்போக்கை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

தி.மு.க. தலைவரின் அந்த அறிக்கையை வரவேற்று தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதே நாளில் (16.3.2013) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

கலைஞர் அவர்களின் அறிக்கை வெறும் பூச்சாண்டி அறிக்கையல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுடன் எந்த பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் எச்சரித்திருந்தார்.

எல்லாம் இந்திய அரசைப் பொறுத்தவரை - செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகி விட்டதால் தி.மு.க. ஓர் அறுவை சிகிச்சை முடிவினை எடுக்க நேர்ந்தது.

தி.மு.க எடுத்த இந்த முடிவினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இது காலம் கருதி எடுக்கப்பட்ட ஞாலம் வரவேற்கும் முடி வாகும் என்று மிகச் சரியாகவே குறிப்பிட் டுள்ளார்.

இனியாவது ஏற்றப்பாட்டுக்கு இறக்கப் பாடல் பாடுவதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்கள் ஒரே குரலில் ஈழத் தமிழர் உரிமையின் பக்கம் நிற்பார்களாக!

தி.மு.க. இன்று எடுத்த முடிவு காலம் உள்ளவரை, உலகம் உள்ள வரை நிமிர்ந்து நிற்கும் காலக் கல்வெட்டாகும் - சிலா சாசனமும் ஆகும்!19-3-2013

தமிழ் ஓவியா said...


பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில்


மதுரையில் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா மன்றல்-2013

திருநெல்வேலியைச் சேர்ந்த நவநீத பாபு- உமாசுகந்தி ஆகியோரின் (மணமுறிவு பெற்றவர் மறுமணம்) திருமணம் சுயமரியாதைத் திருமண முறையில் மேனாள் நீதிபதி பொ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. உடன் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் (மதுரை, 17.3.2013)


மதுரையில் 17.3.2013 அன்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில், மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா (மன்றல்-2013) வெகுசிறப்பாக நடைபெற்றது. மதுரை தெப்பக்குளம் பகுதியில், கே.எஸ்.புன்னவனம் அரங்கத்தில் காலை 9 மணி முதலே தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானவர்கள் குவியத் தொடங்கினர். ஜாதி மறுப்பு, ஜாதி-மத மறுப்பு, மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோர் என்னும் அய்ந்து பிரிவுகளில் தனித் தனி அரங்குகளில் பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தன. குருதிப் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைப் பிரிவு, சட்ட ஆலோசனைப் பிரிவு ஆகியனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பதிவு செய்வோருக்கு வழிகாட்ட உங்கள் உதவிக்கு என்னும் தனி அரங்கும் செயல்பட்டமை பலரின் பாராட்டையும் பெற்றது.

தமிழ் ஓவியா said...

ஜாதிமறுப்புத் திருமணங்களுக்கு இடையூறா?

மன்றல் நிகழ்வில் பங்கேற்பதற்கான பதிவுகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க, முற்பகல் 11 மணி யளவில் தொடக்க விழா நடைபெற்றது. தென் மண்டல பிரச்சாரக் குழுத் தலைவரும், திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தே.எடிசன் ராஜா தலைமை வகித்தார். பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மாநில அமைப்பாளர் திருமகள் வரவேற்புரையாற்றினார். மன்றல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகவுரையாற்றி மன்றல் நிகழ்ச்சியின் அவசியத்தை எடுத்துரைத்தார். விழாவுக்கு முன்னிலையேற்ற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றுகையில், தருமபுரி மட்டுமல்லாமல், பல இடங்களிலும் ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்பதையும், அண்மையில் லால்குடி பகுதியில் இதே போன்ற ஜாதி மறுப்பு காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் எடுத்துக் கூறி, மன்றலின் தேவையை விளக்கி உரை யாற்றினார். ஜாதி மறுப்பு என்னும் சிந்தனையில் இருப் போருக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், களம் அமைத்துக் கொடுத்திருப்பதையும் எடுத்துரைத்தார்.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். ராமலிங்கம்

இணைதேடல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம், இது போன்ற புரட்சிகரமான திரு மணங்கள் செய்துகொள்வது சாதாரணமாக எங்கும் நடக்க வேண்டும். அதற்கு மன்றல் நிகழ்ச்சி பயன்படவேண்டும். திராவிடர் கழகத்தின் இப்பணி அரிய பணி. இது தொடர வேண்டும் என்று பாராட்டி னார். அவருக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

தொடக்க விழாவில், மாநில ப.க. தலைவர் வா. நேரு, மாநில தி.க. சட்டத் துறை துணைத் தலைவர் நீதிபதி பொ.நடராசன், தலைமைச் செயற்குழு உறுப் பினர் சாமி.திராவிடமணி, மாநில இளைஞரணிச் செய லாளர் இல. திருப்பதி, மதுரை மண்டல தலைவர் வே.செல்வம், மண்டல செயலாளர் மீ.அழகர்சாமி, நெல்லை மண்டல தி.க. தலைவர் பொறியாளர் மனோகரன், மண்டல செயலாளர் பால்ராசேந்திரம், மாநகர் மாவட்ட தலைவர் க.அழகர், செயலாளர் இரா.திருப்பதி, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மா.பவுன்ராஜா, காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முருகேசன், மயி லாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், விருதுநகர் மாவட்ட தலைவர் வானவில் மணி, செயலாளர் விடுதலை ஆதவன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கனகராஜ், நெல்லை மாவட்ட தலைவர் காசி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் யாழ்.புலேந்திரன், தென்காசி மாவட்ட தலைவர் டேவிட் செல்லத்துரை உள்ளிட்ட ஏராளமான தென்மாவட்டப் பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


அதைத் தொடர்ந்து மணமக்கள் அறிமுகம் தொடங்கியது. பெரியார் களம் தலைவர் இறைவி, தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். மன்றல் நிகழ்ச்சியின் ஒருங் கிணைப்பில் பசும்பொன், இசையின்பன், வி.சி.வில்வம், பண்பொளி, உடுமலை, மீனாட்சி, தமிழ்ச்செல்வன், மதுரை சுப.முருகானந்தம், ராதா, ஜெ.பாலா, ராஜ்குமார், பொ.பவுன் ராஜ், பேக்கரி கே.கண்ணன், தம்பி அழ.பிரபு, வைரமுத்து, கி.கணேஷ், மாலதி மற்றும் தோழர்கள் பணியாற்றினர். கி.தளபதிராஜ், டான் அசோக் ஆகியோர் மேடை ஒருங் கிணைப்பில் பணியாற்றினர்.

மன்றல் நிகழ்வில் பங்கேற்க வந்தவர்கள்பற்றிய விவரங்களைப் பதிவு செய்யும் தோழர்கள்

குருதி சோதனை

குருதிக் கொடைக்கழக அமைப்பாளர் ஜோஸ் அவர்களின் ஏற்பாட்டில் மீனாட்சி மருத்துவமனை சார்பில் குருதிப் பரிசோதனை செய்யப்பட்டது. சட்ட ஆலோசனைப் பிரிவில் மாநில தி.க. சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் பி.கே.ராஜேந்திரன், வழக்கறிஞர் கணேசன் ஆகியோர் உரிய ஆலோசனைகளை வழங்கினர். சென்னை, திருச்சி மன்றல்களைப் போலவே தொடக்கம் முதல் இறுதி வரையி லான அத்தனை அரங்குகளிலும் நாகம்மை ஆசிரியை பயிற்சி நிறுவன மாணவிகள், ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புப்பணி மெச்சத் தக்கதாய் அமைந்தது. மிகுந்த பொறுமையுடனும், கடமையுணர்வுடனும் பணியாற்றிய மாணவிகளை அனைவரும் பாராட்டினர். மதிய உணவுக்குப் பின் இரண்டாம் அமர்வு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை பதிவுகள் வந்தவண்ணமிருந்தன.

மணமுறிவு பெற்றோர் திருமணம்

மணமக்கள் அறிமுக நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு நிறைவு விழா நடைபெற்றது. திருநெல்வேலியைச் சேர்ந்த நவநீத பாபு- உமாசுகந்தி ஆகியோரின் (மணமுறிவு பெற்றவர் மறுமணம்) திருமணம் சுயமரியாதைத் திருமண முறையில் மேனாள் நீதிபதி பொ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமணங்களின் சிறப்பு - அவசியம் குறித்து தி.என்னா ரெசு பிராட்லா, பால் ராசேந்திரம், முனைவர் வா.நேரு ஆகியோர் உரையாற்றினர். ஜாதி மறுப்புச்

சான்றோருக்குப் பாராட்டு

மதுரை மண்டல அளவில் ஜாதி மறுப்பு - மத மறுப்பு செய்து கொண்ட தோழர்களுக்குப் பாராட்டுக் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என்.நன்மாறன், ஜாதி மறுப்புச் சான்றோர்களான வா.நேரு - மு.சொர்ணம், சு.சா.அன்புமதி- கு.மு.ஜான்சி, கோ.சுப்பையா - மா.சித்ரா, கவிஞர் இரா.ஜீவா - ந.அஞ்சுகம், கவிஞர் இரா.சென்றாயன் - கி.சாந்தி, தி.ஆதவன் -ஆ சாந்தி, ஜோ.ராஜ்குமார் - ரா.உஷாந்தினி (ஈழப்பெண்), க.கணேஷ் - ச.சைக்ளோ பேகம், ஜெ.பாலா - பா.ஜோதி, சீ.சந்திரன் - ச.மஞ்சுளா ஆகியோருக்கு பாராட்டுக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தார். கல்லானாலும் கணவனா?

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன் என்ற நிலைமைகள் எல்லாம் மாறி ஆணும் பெண்ணும் சமம் என்கிற அளவுக்கு வந்திருப்பதற்கு சுயமரியாதைத் திருமணங்கள் பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த மணமக்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். காரணம் இவர்களைப் பார்த்து இன்னும் பலர் இது போன்ற திருமணங்களைச் செய்து கொள்ள முன்வரவேண்டும். என்று குறிப்பிட்ட தோழர் நன்மாறன், தந்தை பெரியார் உருவாக்கிய இயக்கம், பட்டுப் போகாமல் நடந்துகொண்டிருக்கிறது. அதை அழிக்க நினைப்ப வர்கள்தான் அழியப் போகிறார்கள் என்றும் பாராட்டுத் தெரிவித்தார். நிகழ்வின் முடிவில் மதுரை மண்டல திராவிடர் கழக செயலாளர் மீ.அழகர்சாமி நன்றி கூறினார். மதுரையில் பரவலாக செய்யப்பட்டிருந்த விளம்பரத்தின் காரணமாக மக்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஜாதி ஒழிப்புக்கென தனியாக நடத்தப்பட்ட இணைதேடல் பெருவிழாவுக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை பல பத்திரிகைகளும் பதிவு செய்தன. அடுத்த நிகழ்வு எப்போது? எங்கே? என்னும் கேள்வியே பலரிடமும் இருந்து எழுந்தது.

விரைவில் அடுத்த மன்றல் அறிவுப்பு வெளிவரும்.

தமிழ் ஓவியா said...


இப்படிச் செய்வதால் ஏற்படும் விளைவுகள் எவை?


1. காலைச் சிற்றுண்டியைத் தவிர்த்தல்

நமது வாழ்க்கை முறையில் சிறு நிகழ்வுகள், அன்றாடப் பழக்க வழக்கங்கள், ஏனோதானோ என்று செய்யும் செயல்கள் இவை அனைத்துமே நமது உடல் நலத்தையும், உள்ள வளத்தையும் பெரிதும் பாதிக்கின்றன.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எளிய மொழியா னாலும், அது பெரியதொரு வாழ்க் கைப் பாடமாகும். பெரிய படிப்பு, பெரிய பதவி, பெரும் பணக்கார வாழ்வு எது ஒருவருக்குரியதாக அமையினும், நோய் இருந்தால் அவரால் அவருக்கும் நிம்மதி இல்லை; அவரைச் சார்ந்துள்ளவர் களுக்கும் வேதனையும் துன்பமும் தான்.

நமது வாழ்க்கை முறையில் சின்னச் சின்ன மாற்றங்களை நாம் ஒழுங்காகக் கடைப்பிடித்தால் அது நமக்கு நல வாழ்வைத் தரும்.

நலவாழ்வு நமது மனதிற்கும் அமைதியைத் தந்து ஆயுளை வளர்க்கும்.

எடுத்துக்காட்டாக, பலர் காலைச் சிற்றுண்டியை (Break Fast) தவிர்த்து விடுகிறார் கள். வெறும் காப்பியையோ தேநீ ரையோ ஒரு குவளை அருந்திவிட்டு, அலுவலகத்திற்கு அவசர அவசர மாக ஓடுகிறார்கள்!

வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் பலரும் தூங்கி எழுவது காலையில் தாமதமாக; பள்ளிக்குச் செல்ல நேர மாகிவிட்டது என்று கூறி அரக்க பறக்க காலை உணவைத் தவிர்த்து விட்டு ஓட்டமும், நடையுமாய் கலந்து பள்ளிப் பேருந்தையோ அல்லது வேறு முறை களிலோ பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.

இதன் தீய விளைவால் - உடல் நலம், மனநலப் பாதிப்புகளைப் பலரும் உணருவதே இல்லை; பெற்றோர்களாலும் உணர்த்த முடிவதே இல்லை. இப்போ துள்ள பிள்ளைகள் எங்கே நம்ம சொல் றதைக் கேட்கிறார்கள்? என்ற சலிப்பும், சங்கடமும் அம்மாக்களை பேசாதவர் களாக ஆக்கி விடுகின்றன!

காலைச் சிற்றுண்டி எவ்வளவு முக்கி யம் என்பதை நாம் பிள்ளைகளுக்கும் சரி, தவிர்க்கும் பெரியவர்களுக்கும் சரி கட்டாயம் உணர்த்திட வேண்டும்.

இரவு தூங்கி காலை எழுந்த நிலையில் நமது உடல் சுமார் 12 மணி நேரம் உணவின்றி இருந்துள்ளது! இந்த வண்டி ஓட, எரிபொருள் நிரப்ப வேண் டாமா? நாம் ஏறிச் சவாரி செய்யும், காரோ, பேருந்தோகூட பெட்ரோல், டீசல் இல்லா விட்டாலும் சரி, ரேடியேட்டரில் போதிய தண்ணீர் இல்லாவிட்டாலும் சரி, நின்று விடுவதில்லையா? மனித உடம்பும் அதுபோலத்தானே!

நமது இரத்தத்தில் உள்ள (குளுகோஸ்) சர்க்கரை அளவு போது மானதாக இருந்தால், எப்போதும், சுறுசுறுப்புடன் பணியாற்ற முடியும். ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே அது சென்று விடக் கூடாதே!

நீங்கள் காலை உணவைச் சாப்பிடா மல் தவிர்த்தால், அதன் விளைவு என்ன வாகும் தெரியுமா? குறைந்த இரத்த சர்க்கரை காரணமாக உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்காத நிலை ஏற்படும்; ஏனெனில் அதற்கு சீரான இரத்த சர்க்கரையும் செயலுக்குத் தேவை.

அது டல்லாக இருப்பதோடு, ஏதோ ஒருவகை களைப்பு, சோர்வு அல்லது அசதியுடன், ஏனோதானோ என்று நம்பணிகளைச் செய்யும் நிலைதான் ஏற்படும்.

நிலைத்த ஈடுபாடு (Concentration) பணிகளிலோ இருக்காது; மாணவர்கள் வகுப்பறைகளில் பாடங்களை சரியாக உள்வாங்கி பதிய வைத்துக் கொள்ள முடியாது. அரைத் தூக்கம் + அசதி சேர்ந்த நிலையே இருக்கும்! புத்திக் கூர்மையே மழுங்கும். நினைவு வன்மை யையும் இது வெகுவாகப் பாதிக்கும்!

மற்றொரு முக்கிய காரணத்தையும் கூறுகிறார் பிரபல மருத்துவர்(Endocrinologist) டாக்டர் சுமா துரோ னோவாலி. நமது பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க காலைச் சிற்றுண்டி பெரிதும் உதவுகிறது; இன்றேல் பகலில் தேவைக்கு அதிகமாக மதிய உணவை எடுப்பது, இடையில் கண்ட கண்ட நொறுக்குத் தீனிகளைத் தின்பது போன்ற தேவையற்றவைகளை கூடுத லாக, உடலில் வேண்டாத விளைவுகளை உருவாக்க அதுவே காரணமாக அமைந்து விடுகிறது!

வெனிசுவேலா நாட்டில் இதுபற்றி ஆராய்ச்சி செய்த மருத்துவக் குழுவினர் - குண்டாக உள்ள சிலர், சரியாக காலை உணவை எடுத்துக் கொள்வதால் தங்கள் எடையைக் குறைப்பதில் பெரிதும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; காரணம் அவர்கள் இடையில் நொறுக்குத் தீனிகளையோ, பின்பு சாப்பிடும் போது கூடுதலாக பன் மடங்கு சாப்பிட்டு எடையையும், சதை யையும் அதிகப்படுத்திக் கொள்ளு பவர்கள் போல அல்லாதவர்களாகி இருப்ப தோடு, இந்தக் காலைச் சிற்றுண்டி அவர்களுக்குத் தக்கப் பாதுகாப்புக் கவசமாக ஆகிறது என்று கண்ட றிந்து உள்ளார்கள்!

இதன்மூலம் அடிப்படையாகக் கோடிட்டுக் காட்டக்கூடிய முக்கிய செய்தி ஒன்று உண்டு.

காலை சிற்றுண்டியை முறையாக எடுத்துக் கொள்ளும் பலருக்கு - இன்சுலின் தடுப்பு ஏற்பட்டு டைப் 2 சர்க்கரை வியாதியும் வரும் வாய்ப்பும் குறைவாகும்!

என்ன நண்பர்களே, காலை சிற் றுண்டியை இனி தவிர்க்க மாட்டீர்கள் அல்லவா? ஆங்கில மொழிச் சொல்லே அதற்குத் தகுந்த விளக்கச் சொல் லாக அல்லவா அமைந்துள்ளது? Break - Fast - பட்டினி உடைத்தல் பட்டினியை தொடர்ந்தால் - உடல் நலக்கேடுதான்!

ஆனால் அதே நேரத்தில் ஓர் எச்சரிக்கை! அது சிற்றுண்டியாகவே இருக்கட்டும்; பேருண்டியாகி அலுவ லகத்தில் பாய், தலையணை தேடும் நிலைக்குச் சென்று விடக் கூடாது. கவனம்! கவனம்!!

தமிழ் ஓவியா said...


காலத்துக்கேற்ற...


காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
_ (குடிஅரசு,26.1.1936)

தமிழ் ஓவியா said...


நடைபாதைக் கோவில்களை அகற்ற வேண்டும்


கன்னியாகுமரி மாவட்டம் பரப்பளவில் மிகச்சிறிய மாவட்டம். ஆனால் மக்கள் தொகை நெருக்கடியில் பெரிய மாவட்டம். போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங் களில் தங்க நாற்கரச்சாலைகளும். புறவழிச்சாலைகளும், நகரங்களில் மேம்பாலங்களும் உள்ளன. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் புறவழிச் சாலைகளோ. நாற்கரச்சாலைகளோ, நகரங்களில் மேம்பால வசதிகளோ கிடையாது.

நாகர் கோவிலில் இருந்து திருநெல் வேலிக்கும் - திருவனந்தபுரத்திற்கும் ஒரே அளவு தூரம் தான். நாகர் கோவி லிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் திருவனந்தபுரம் செல்வதற்கு 3 மணி நேரம் ஆகும். காரணம் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் இருக்கும் போக்குவரத்து நெருக்கடி. அது மட்டு மல்லாமல் சாலைகளில் இருப்பக்கங் களிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள். கோவில்கள், கிறிஸ்தவ சிற்றாலயங்கள் (குருசடி) இவைகளால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுதான் இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.

நாட்கள் செல்லச்செல்ல பொதுமக்கள் தொகைப்பெருக்கம், இதனால் அவர் களின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. ஆனால் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகும் போது சாலையின் பரப்பளவும் அதிகரிக்கிறதா என்றால் இல்லை.

குமரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் இரு பக்கமும் மத வழி பாட்டுத் தலங்களாகத்தான் காட்சியளிக் கிறது. மேலும் பொதுமக்களின் மற்ற ஆக்கிரமிப்புகள்; இதனால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் துன்புறுகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பொது இடங்களில் கட்டப்படும் ஆக்கிரமிப்பு கோயில் களைத்தடுத்து வருகிறோம். நீர்நிலை, புறம்போக்குகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் எந்த ஒரு வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டாலும் உடனடியாக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து தடுத்து வருகிறோம்.

ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பாக ஆக்கிரமித்துக் கடட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே இருக்கிறது. இந்த வழிபாட்டுத் தலங்களுக்கோ பூசைகள், திருவிழாக் களுக்கோ, பஞ்சமில்லை. சாலைகளை ஆக்கிரமித்துக் கோவில் கட்டி அங்கு பூசைகள், விழாக்களை நடத்தும்போது அந்த சாலைகளில் போக்குவரத்தினை துண்டித்து விடுவார்கள். இது பொது மக்களுக்கு மேலும் துன்பத்தை கொடுக்கும்.

அய்யா, நமது உச்சநீதிமன்றம் பொது இடங்களில் இருக்கும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் அகற்ற மாநில அரசுகளுக்கு ஆணையிட்டும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதன் பிறகு உச்சநீதிமன்றமும் அதை கண்டு கொள்ளவில்லை.

அய்யா, உச்சநீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் தமிழக அரசு செயல்படுவது எந்தவகையில் நியாயம். கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெருக் கடியில் தினமும் 18.5 லட்சம் பொது மக்களும் துன்பப்பட்டு வரும் இவ் வேளையில் புறவழிச்சாலைகள், நகரில் மேம்பாலங்கள், தங்க நாற்கரச்சாலை திட்டங்களை செயல்படுத்தி அந்த போக்குவரத்து நெரிசலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும், குறைந்த பட்சம் குமரி மாவட்டத்தில் சாலைகளை மறைத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கோவில்களையும், அனைத்து மத வழிபாட்டுத்தலங் களையும் அரசு அகற்றினாலே போக்கு வரத்து நெருக்கடிக்கு ஒரு தீர்வு ஏற்படும். இந்த ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துவது பொதுமக்களில் ஒரு சிலர். அதனால் துன்பப்படுபவர்கள் பெரும்பாலான பொது மக்கள்.

உச்சநீதிமன்ற ஆணையை செயல் படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இந்த வழிபாட்டுத் தலங்களை அகற்ற முன்வர வேண்டும்.

- கோ.வெற்றிவேந்தன் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.

தமிழ் ஓவியா said...


முதல் போராளி! தில்லையாடி வள்ளியம்மை

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக் காவில் பிறந்தவர் (1898). அவருடைய அப்பா முனுசாமி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்தவர். அம்மா மங்களத்தம்மாள். தில்லையாடியில் இருந்து கூலி வேலை செய்வதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார் முனுசாமி. அப்போது தென் னாப்பிரிக்காவை பிரிட்டன் அடிமைப்படுத்தி யிருந்தது. அவர்களது காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாட்டு மக்களை வேலைக்காக அழைத்துச் சென்றது.

அங்கே அவர்கள் அடி மையாகவும் படுமோசமாகவும் நடத்தப்பட்டனர்.

3 பவுன் வரி செலுத்தினால்தான் அங்கே வாழ முடியும். வாக்குரிமை கிடையாது. வெள் ளையர் செல்லும் வாகனங்களில் பயணிக்க முடியாது. அவர்கள் படிக்கும் பள்ளியில் இந்தியர் படிக்க அனுமதி இல்லை. கிறிஸ்தவ மதப்படி நடந்த திருமணங்கள்தான் செல்லும்... இப்படி ஏகப்பட்ட கொடுமைகள் நடந்து கொண்டி ருந்தன. இவற்றை எதிர்த்தும் இந்தியர்களை ஒன்றிணைத்தும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் காந்தி.

காந்தியின் போராட்டங்கள், பொதுக்கூட்டங் களில் அம்மாவுடன் சென்று கலந்து கொண்டார் வள்ளியம்மை. அவருக்குள் கனன்றுகொண்டி ருந்த போராட்டக் குணம், மற்ற மத திருமணம் செல்லாது என்ற சட்டத்தால் எரிமலையாக வெடித்தது. வள்ளியம்மைக்குப் பக்கபலமாக இருந்தார் அவர் அம்மா. காந்தியாரின் போராட் டத்தில் அதுவரை பெண்கள் பங்கேற்கவில்லை. முதல்முறையாகப் பெண்கள் படை உருவானது.

கஸ்தூரிபா, வள்ளியம்மை, மங்களத்தம்மாள் மூவரும் முன்னின்று அந்தப் படையை வழி நடத்தினர். ஆங்கில ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி கிளம்பிய வள்ளி யம்மையைப் பார்த்து இந்தியர் எழுச்சி கொண் டனர். வெள்ளையர் ஆடிப் போனார்கள். ஊர் ஊராகச் சென்றார்கள் போராட்டக்காரர்கள். வழியில் தென்பட்ட இந்தியர்களுக்கும் போராட்டத்தில் பங்கேற்றவர் களுக்கும் ஓடி ஓடி உதவி செய்தார் வள்ளியம்மை.

தடை விதிக்கப்பட்ட டிரான்ஸ்வால் நகருக்குள் நுழைந்தது பெண்கள் படை. உடனே போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 3 மாதக் கடுங்காவல் தண்டனை. சிறையில் மிகுந்த துன்பத்துக்கு உள்ளானார் வள்ளியம்மை. அவரை மிகவும் கேவலமாக நடத்தினர்.

கடுமையாக வேலை வாங்கினர். 16 வயதே ஆன வள்ளியம்மையின் மெலிந்த உடல் விரைவில் நோய்க்கு உள்ளானது. அவரது உடல் நிலையைக் கண்ட ஆங்கில அதிகாரிகள், அபராதம் செலுத்திவிட்டு வெளியே போகச் சொன்னார்கள். அபராதம் செலுத்துவது போராட்டக்காரர்களின் குணமல்ல. போராட்டம் வெற்றி பெறாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் வள்ளி யம்மை. நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

ஒருவழியாக தண்டனை காலம் முடியும் முன்பே விடுவிக்கப்பட்டார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த வள்ளியம்மையை, ஒரு போர் வையில் சுற்றி வீட்டுக்கு எடுத்து வந்தார்கள். விடுதலை வேள் வியை ஏற்றி வைத்த அந்தத் தீபம், பத்தே நாள்களில் அணைந்து போனது. ஆனால், போராட்டம் வலுப்பெற்றது. தன்னலம் கரு தாமல் போராடிய இளம் வள்ளி யம்மையின் மறைவு காந்தியை வெகுவாகப் பாதித்தது.

ஜோஹன்னஸ்பர்க்கில் நினைவிடம் அமைத் தார். வாழ்நாள் முழுவதும் வள்ளியம்மையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். தன் புத்தகங் களில் அவரைப் பல இடங்களில் குறிப் பிட்டிருக்கிறார். தில்லையாடிக்கும் வந்து சென்றார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி, உயிர் விட்ட முதல் போராட்டக்காரர் தில்லை யாடி வள்ளியம்மை!

தமிழ் ஓவியா said...


ஓட்டு போட வைத்த எம்மிலின் பாங்குர்ஸ்ட்


இங்கிலாந்தில் பெண்களுக்கான ஓட்டு உரிமை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் எம்மிலின் பாங்குர்ஸ்ட் (1858 - 1928). மிகுந்த அறிவாளி. படிப்பாளி. 14 வயதிலேயே பெண்கள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டார். பெண்கள் உரிமைகளுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர் பாங்குர்ஸ்டை மணம் செய்துகொண்டார்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தொடர்ந்து மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார். பலமுறை சிறை சென்றார். பட்டினிப் போராட்டம் இருந்தார். தொடர்ச்சியான கடும் போராட்டங்களின் பலனாக 1918இல் இங்கிலாந்தில் ஓட்டு உரிமை கிடைத்தது.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய மனிதர்களில் ஒருவராக எம்மிலின் பாங்குர்ஸ்ட் போற்றப்படுகிறார். எம்மிலினின் பெண்களும் போராட்டங்களில் தீவிரம் காட்டினார்கள்.

தமிழ் ஓவியா said...


சாதனைப் பெண்மணிகள்


கல்விக்காக வாழ்ந்த மேரி மெக்லியோட் பெத்யூன் (1875 - 1955)

உனக்குப் படிக்கத் தெரியாது என்று சொன் னதும் துடிதுடித்துப் போனார் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரான மேரி. தாங்கள் ஏன் அடிமையாக இருக்கிறோம் என்று யோசித்தவர், கல்வியின் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்று நம்பினார்.

படிக்க ஆரம்பித்தார். பல இன்னல்களைக் கடந்தார். தன்னைப் போன்ற அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு கல்வியளித்தார். பள்ளி, கல்லூரி ஆரம்பித்தார். அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் இவரிடம் ஆலோசனை கேட்கும் அளவுக்கு உயர்ந்தார்.

கொடி கட்டிய எமிலி டேவிசன்(1872 - 1913)

இங்கிலாந்தின் பெண்கள் இயக்கப் போராட்டக்காரர் எமிலி டேவிசன். 1913 இல் பெண்கள் இயக்கத்தின் கொடியைக் கட்டி, போராட்ட போஸ்டரை ஒட்டுவதற்காக அய்ந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரைக்கு அருகில் சென்றார். எதிர்பாராவிதமாக குதிரை தாக்கியதில் 4 நாள்களுக்குப் பிறகு இறந்து போனார். ஜூன் 4ஆம் தேதியை எமிலி டேவிசன் நாளாகக் கடைபிடிக்கிறார்கள்.

பன்முகத் தன்மை கொண்ட ரோசா லுக்சம்பர்க் (1871 - 1919)

ரஷ்யாவில் பிறந்த ரோசா லுக்சம்பர்க், மார்க்ஸியவாதி... தத்துவஞானி... பொருளாதார வல்லுநர்... பெண்ணுரிமைப் போராளி... சமூக விடுதலைக்காகப் போராடிய புரட்சியாளர்.

விடாது போராடிய கிளாரா ஜெட்கின் (1857 - 1933)

ஜெர்மனியில் பிறந்தவர் கிளாரா. பெண் உரிமைகளுக்காகப் போராடியவர்களில் மிக முக்கியமானவர். பெண்கள் போராட்ட வரலாற்றின் நெடும்பயணத்தில் இவரின் பங்களிப்பு சுமார் 60 ஆண்டுகள். முற்போக்கான தொலைதூர சிந்தனையும் துணிச்சலும் இவருடைய சிறப்புக் குணங்கள்.

பெண்களுக்காக முழங்கிய சூசன் பி.அந்தோணி (1820 - 1906)

அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராளி. என்ற இயக்கத்தையும் பெண்களுக்கான பத்திரிகையையும் ஆரம்பித்தவர்களில் ஒருவர். அமெரிக்க அய்க்கிய நாடுகளிலும் அய்ரோப்பாவிலும் சுற்றுப்பயணம் செய்து, பெண்ணுரிமையை வலியுறுத்தி பேசியவர். ஆண்டுக்கு சுமார் 100 மேடைகளில் முழங்கியிருக்கிறார். அமெரிக்கக் குடியுரிமைப் போராட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியவர்

தமிழ் ஓவியா said...


முடிவில் மறுபரிசீலனை உண்டா? செய்தியாளர்களிடம் கலைஞர் பதில்

சென்னை, மார்ச் 19- ஈழத் தமிழர் படுகொலைப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசு நடந்து கொள்ளும் போக்கை எதிர்த்து மத்திய அரசிலி ருந்தும், கூட்டணியிலிருந்தும் தி.மு.க. விலகும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்த நிலையில், இதுகுறித்து மறுபரிசீலனை உண்டா என்ற செய்தியாளர் கேள்விக்கு கலைஞர் அவர்கள் இன்று (19.3.2013) கருத்துத் தெரிவித்துள்ளார்.

பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: இனிமேல் பிரச்சினை அடிப் படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படுமா?

கலைஞர்: பொதுவாக பிரச்சினை அடிப் படையில் ஆதரிப்பது என்பது எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கின்ற முறைதானே!

செய்தியாளர்: அமைச்சரவையில் பங்கேற்கா மல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா?

கலைஞர்: எதுவும் கிடையாது.

மதவாத சக்திகள்

செய்தியாளர்: ஆட்சிக்கு மதவாத சக்திகள் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?

கலைஞர்: அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல.

செய்தியாளர்: நேற்றையதினம் உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பிறகு, மத்திய அரசிலிருந்து உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?

கலைஞர்: பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல்.

செய்தியாளர்: இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால் 2009ஆம் ஆண்டிலேயே நீங்கள் ஒன்றும் செய்ய வில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டதே?

கலைஞர்: 2009 ஆம் ஆண்டில் நாங்கள் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லை.

செய்தியாளர்: பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?

டெசோவின் அடுத்தகட்ட செயல்பாடுகள்

கலைஞர்: பொது என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.

செய்தியாளர்: டெசோவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

கலைஞர்: டெசோ சார்பில் ஏற்கனவே நடந்த செயல்பாடுகள் மேலும் தொடரும்.

செய்தியாளர்: நீங்கள் குறிப்பிட்ட திருத்தங் களைக் கொண்டு வராத பட்சத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?

கலைஞர்: தற்போது அய்.நா. மன்றமே அப்படி துரோகம் இழைத்து விட்டதோ என்று கருது கிறேன். இந்திய அரசும் கூட.

இந்தியாவும் எதிர்காலத்தில் விசாரிக்கப்படும்?

செய்தியாளர்: 2009ஆம் ஆண்டில், இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

கலைஞர்: அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப் பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக அமையலாம்.

செய்தியாளர்: அப்படிப்பட்ட நிலையில் இந்திய அரசும் சேர்ந்து போர்க் குற்றம் செய்ததாக கருதலாமா?

கலைஞர்: அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.

மறுபரிசீலனை உண்டா?

செய்தியாளர்: நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?

கலைஞர்: அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ஆம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.

செய்தியாளர்: உங்களுடைய மத்திய அமைச் சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?

கலைஞர்: இன்று அல்லது நாளை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் தமிழை முற்றிலும் புறக்கணித்த தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் தமிழை முற்றிலும் புறக்கணித்த கொடுமையை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, மயிலை கிருஷ்ணன், வழக்கறிஞர் வீரசேகரன், தமிழ் சாக்ரட்டீஸ், பா. மணியம்மை மற்றும் தோழர்களின் உணர்ச்சி முழக்கம். (சென்னை - 19.3.2013)

சென்னை, மார்ச் 19- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் தமிழை முற்றிலும் புறக்கணித்த கொடுமையை எதிர்த்து சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன்பு இன்று (19.3.2013) திராவிடர் கழக மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், மாநிலத் தேர்வாணையம் தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மக்களை பழிவாங்கும் எண்ணத்துடன் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் தமிழை முற்றிலும் புறக்கணித்த கொடுமையை எதிர்த்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் 18.3.2013 அன்று தமிழக மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடந்த 5 ஆம் தேதி அறிவித்தார்.

அதன்படி நேற்று (18.3.2013) தமிழகம் முழுவதும் (சென்னை, தேனி நீங்கலாக) திராவிடர் கழகத் தோழர்களும் திரளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இன்று (19.3.2013) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் தமிழை முற்றிலும் புறக்கணித்த தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் கண்டன உரையாற்றுகையில்,

தமிழ்நாடு மாநிலத் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் தமிழைப் பிடரியைப் பிடித்து வெளியில் தள்ளியுள்ள கொடுமையை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உள்பட தோழர்கள் முழக்கமிடுகின்றனர் (19.3.2013)

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் சரி, அதற்குப் பின் தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி, தமிழ்நாடு தேர்வாணையத்தின் தலைவராகப் பார்ப்பனர் ஒருவரை நியமனம் செய்ததில்லை.

இந்த முறை ஆட்சிக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஓராண்டே பதவி வகிக்க வாய்ப்புள்ள (ஓய்வுபெற்ற) காவல்துறை அதிகாரி நட்ராஜ் என்ற பார்ப்பனரை தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் முக்கியமான இடத்தில் தலைவராக நியமனம் செய்தார்.

இவர் தலைவராக இருந்த ஓராண்டு காலத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஒருபக்கம்; ஓய்வு பெறப்போகும் காலத்தில் தேர்வுகளில் தமிழுக்கு இருந்த இடத்தையும், முக்கியத்துவத்தையும், வாய்ப்பையும் கழுத்தைத் திருகிப் புதைப்பது போல முற்றிலும் தமிழைத் தூக்கி எறியக் கூடிய ஒரு திட்டத்திற்குக் கடைசிக் கையொப்பமிட்டு விட்டு வயது மூப்பின் காரணமாக வெளியேறியுள்ளார்.

சமூக நீதியுணர்வு செழித்து வளர்ந்த தமிழ் நாட்டில் எந்தத் திராவிட இயக்கத்தால் இந்த உணர்வு வளர்ந்து அதன் பயனைத் தமிழர்கள் அனுபவித்தார்களோ அந்தத் திராவிட இயக்க முகமூடி அணிந்தே சமூக நீதிக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

எனவே இதைக் கண்டித்தும், எப்படி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழில் தேர்வு எழுதுவதற்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டு, பின்னர் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டபின் அதை திரும்பப் பெற்றுக்கொண்டதோ, அதேபோன்று, கிராமப்புற மக்களை பழிவாங்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய ஆணையை திரும்பப் பெறவேண்டும் என்றும் இல்லை என்றால் மீண்டும் பல கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

ஒலி முழக்கங்கள்

1. வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே சமூக நீதி வெல்கவே!

2. தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே! வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
மாநிலத் தேர்வு ஆணையம் தாய்மொழி தமிழை
புறக்கணிக்கும் புதிய திட்டத்தை
வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

3. தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணிலே, தமிழ் மண்ணிலே
சமூக நீதிக்கு, சமூக நீதிக்கு சவக்குழியா? சவக் குழியா?

4. தாழ்த்தப்பட்ட மக்களை பிற்படுத்தப்பட்ட மக்களை
பழிவாங்கும் புதிய ஆணையை வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

5. கிராமப்புற மக்களை பழிவாங்கும், பழிவாங்கும்
புதிய ஆணையை, புதிய ஆணையை வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு!

6. வாபஸ் பெற்றது மத்திய அரசு வாபஸ் பெற்றது
தமிழக அரசே, தூங்குவது ஏன்?

7. போராடுவோம் போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை வெற்றிக்கிட்டும் வரை
போராடுவோம் போராடுவோம்!

8. வென்றெடுப்போம் தமிழர் தலைவர் தலைமையிலே
தந்தை பெரியார் பெற்றுத்தந்த சமூக நீதியை வென்றெடுப்போம்

9. வாழ்க வாழ்க வாழ்கவே திராவிடர் கழகம் வாழ்கவே
வெல்க வெல்க வெல்கவே திராவிடர் கழகம் வெல்கவே!

10. வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே சமூக நீதி வெல்கவே!

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்கறிஞர் த.வீரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் பிரச்சினை: திரித்துக் கூறும் திருவாளர்களுக்கு கலைஞர் கண்டனம்!


சென்னை, மார்ச் 20- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று தாம் கூறியதைத் திரித்துக் கூறும் கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும்;

நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரை யறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்;

திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு திருத்தங்களை வலியுறுத்தியது. அந்தத் திருத்தங்களை, இந்திய நாடாளு மன்றத்தில் உடனடியாகத் தீர்மானமாக நிறை வேற்றி; அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தத் திருத்தங்களையும் இணைத்து ஆதரித்திட வேண்டும் என்று 19.3.2013 அன்று நான் சொன்னேன். உள்நோக்கத்துடன் திரிப்பதா?

நான் தெளிவாகச் சொன்னதை, முதல மைச்சர் ஜெயலலிதாவும், ஒரு சில ஊடகங் களும் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது உள்நோக்கத்துடனோ; அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்று நான் சொன்னதைப் போல விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத் தப்பட்டது இனப் படுகொலையே என்பதை யும், நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதையும், அந்த ஆணையம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசார ணையை நடத்தி முடிக்க வேண்டும் என்ப தையும் முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதனையொட்டி நாடாளுமன்றத் தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண் டும். அந்தத் தீர்மானத்தை அமெரிக்கத் தீர்மானத்தோடு இணைத்து, அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வர வேண்டுமென்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்பு!

ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்கத் தீர்மானத்தில் இப் போது இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, இலங்கை அரசே விசாரணை நடத்த வேண் டுமென்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்னணியில் இந்தியாவும் உள்ளதாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நீர்த்துப்போன தீர்மானம்!

இப்படி அமெரிக்கத் தீர்மானம் பெருமள வுக்கு நீர்த்துப் போய்விட்டது. அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற ஆய் வின்போது, இலங்கை அரசு சார்பில் வைக் கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரி விக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக் கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.கழகம் முன்வைத்த திருத்தங் களும் மத்திய அரசால் முறையாக பரிசீலிக் கப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளிலேதான் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை அறிவித்து, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை மேற் கொண்டது. இதனைத் தெளிவாக தி.மு.கழகம் தெரிவித்திருந்த போதிலும் - வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு - திசைதிருப்பி விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது!

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


வந்துட்டாரய்யா நட்ராஜ் அய்யர்வாள்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தேர்வு முறையில் தமிழ் மொழி தூக்கி எறியப்பட்டுவிட்டது - இதனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியது (மார்ச் 18, 19).

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேறு சில தலைவர்களும் எதிர்ப்பு களை அறிக்கையின்மூலம் தெரிவித்தனர்.

நெருக்கடி முற்றியது என்றவுடன், தமிழைப் புறந்தள்ளும் திட்டத்திற்குக் கடைசி கையொப்பமிட்டு ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் இப்பொழுது முழுக்கைச் சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு ஒன்றும் தெரியாத பாப்பாத்தி போட்டுக்கிட்டாளாம் தாழ்ப்பாள்! என்கிற தோரணையில், தாம் செய்த தமிழ் ஒதுக்கலுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்துள்ளார். அவாளின் இனமலரோ எட்டுப் பத்தி தலைப்புக் கொடுத்து செய்தியையும் வெளியிட் டுள்ளது.

வெண்டைக்காய் விளக்கெண்ணெய் - கத்தாழை களைக் குழைத்து சமாதானம் சொல்ல முயற்சிக்கும் திருவாளர் நட்ராஜ் அய்யர்வாளுக்குச் சில கேள்விகள்:

1. பிரிவு -2 (குரூப்-2) தேர்வில் இருந்து வந்த பொதுத் தமிழ் முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா - இல்லையா?

2. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் இடம் பெற்றிருந்த பொதுத் தமிழ் முழுவதும் அகற்றப்பட் டுள்ளதா - இல்லையா?

3. பிரிவு நான்கில் (குரூப்-4) இதுவரை தமிழில் கேட்கப்பட்டு வந்த 100 வினாக்களுக்குப் பதில் 50 வினாக்களாகக் குறைக்கப்பட்டுள்ளதா - இல்லையா?

அறிவு நாணயமாக சுற்றி வளைத்து மூக்கைத் தொட முயற்சிக்காமல், நேரிடையாக திருவாளர் நட்ராஜ் அய்யர்வாள் பதில் சொல்லுவாரா?

அய்யர்வாளுக்கு வக்காலத்து வாங்கும் இ(தி)னமணி, இ(தி)னமலர் அய்யர்வாள்களும்தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் ஒரு பக்கம் - உள்ளூர் தமிழர்களுக்காகப் போராட வேண்டிய நெருக்கடி இன்னொரு பக்கம்.

இரண்டுக்குள்ளுமே ஆரியக் கொடுக்கு இருக் கிறதே - இதனைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?

குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள 72 பக்கங்களையும் படித்துவிட்டுதான் இந்தக் குற்றச்சாற்றை முன்வைத்துள்ளோம்.

கூடுதல் செய்தி (Tail Piece)

திடீர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் இணைய தளத்திலிருந்து இந்தப் பகுதி இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது - மாற்றம் வந்தால் சரி!

தமிழ் ஓவியா said...


தலையெழுத்தாம்


ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் படிக்கவில்லை என்றால், அவன் தலையெழுத்து அவ்வளவு தான்; நமக்கெல்லாம் ஏதுங்க படிப்பு; அதெல்லாம் பார்ப்பானுக்குத்தான் என்பான்.

(குடிஅரசு, 6.7.1968)

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, மார்ச் 21- ஸ்டாலினை மய்யப்படுத்தி இந்து ஏடு செய்தி வெளி யிட்டதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் - அறிக்கை வருமாறு:

தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக் காகவோ எடுப்பதில்லை. குறைந்த பட்சம் கழகத்தின் தலைமையிலே உள்ள முன்னோடிகள் கூடிக் கலந்து பேசி பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் தான் முடிவெடுப் பது வழக்கம். செய்தியாளர்கள் பல முறை சில அதிமுக்கியமான பிரச் சினைகள் குறித்து கேள்வி கேட்கும் போது கூட, கழகத்தின் செயற் குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித்த பிறகு தான் முடிவெடுத்து அறிவிக்குமென்று நான் பல முறை கூறியிருக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் தொடர்ச்சி யாக; நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச் செய லாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு மற்றும் கழகத்தின் மூத்த செய லாளர்கள் ஆகியோரும் நீண்ட நேரம் விவாதித்த பிறகு ஒருமனதாக எடுத்த முடிவினைத் தான் 19-3-2013 அன்று காலை செய்தியாளர்களுக்கு அறி வித்தேன். உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகா விட்டால், ஸ்டாலின் விலகி விடுவ தாகப் பயமுறுத்தியது தான் கார ணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை யெல்லாம், அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகா தர்மத்தைப் பாழடிக்கின்றன. ஆனால் இந்து நாளிதழும் இப்படி உண் மைக்குப் புறம்பான செய்தியினை வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் புதிய அறிவிப்பு



புதுடில்லி, மார்ச் 21- இந்திய அரசுப் பணியாளர் ஆணையம் (ருஞளுஊ) புதிதாக அறிவித்த மாநில மொழி பேசு வோர்க்குப் பாதகம் விளைவித்த தேர்வுத் திட் டத்தை கைவிட்டது. பழைய முறையே தொட ரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசும், நடு வண் பணியாளர் தேர்வு ஆணையமும் (ருஞளுஊ) மொழிகள் தொடர் பான சர்ச்சைக்குண் டான எல்லா மாற்றங் களையும் திரும்பப் பெற் றுக் கொள்ள முடிவு செய்துள்ளன. ஆனால் பொதுப் படிப்பிற்கான பாடங்கள் இரண்டுக் குப் பதிலாக நான்காக உயர்த்த முடிவு செய் துள்ளன.

சென்ற புதன்கிழமை யன்று, பணியாளர்களுக் கான இணை அமைச்சர் வி. நாராயணசாமியுடன் நடுவண் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக அரசு தரப்பிலி ருந்து கூறப்படுகிறது.
வட்டார மொழிகளில் எழுதலாம்
இந்த திட்டத்தின் படி, தேர்வுகளை வட் டார மொழியில் எழுது வதற்கான தடைகள் திரும்பப் பெறப்படுகின் றன. தவிர, தகுதித் தரம் கணிப்பதற்கான 100 மதிப்பெண்கள் கொண்ட ஆங்கிலத் தாள் நீக்கப்படுகிறது.

சென்ற வாரம், சீறிச் சினம் கொண்டு நின்ற நாடாளுமன்ற உறுப் பினர்களுடன், அவர்கள் அறிவித்திருந்த அறி விக்கையை செயல்படா மல் நிறுத்தி வைப்ப தாகவும், முன்பிருந்த நிலைமையே தொடரும் என்றும் சொல்லியிருந் தார். ஆனால், நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வுகளுக் குச் சற்று முன்பான நேரத்தில், காலத்தின் அழுத்தத்தைக் கருத்தில் கொள்ளாது, புதிய மாற்றங்களை வேக மாகத் திணித்தது. அத் துடன், அதன் மாற்றங் கள் முழுவதுமாக நிரா கரிக்க வேண்டாம் என் றும் கேட்டுக் கொண் டது. கடைசி சில நாட் களில் ஒரு பலமான கண்ணோட்டம் வெளிப்பட்டுள்ளதாகவும், எல்லா மாற்றங்களை யும் திரும்பப் பெற வேண்டாம் என்ற கருத்து பரவலாக வெளிப்பட் டது.
ஆனாலும் மொழி கள் பற்றிய விவரங் களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருப் திக்கேற்ப, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களது குறைகள் களையப்பட்டுள்ளன என்று ஒரு அரசு உயர் அலுவலர் குறிப்பிட்டுள் ளார். ஆனால், கடைசியாக ஒப்புக் கொள்ளப்பட் டுள்ள ஆணை விளக்கங் களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
அரசு, நாடாளுமன்ற மக்கள் சபையில், உறுப் பினர்கள் அறிந்து கொள்ளும்படியாக ஒரு முடிவை அறிவிக்கலாம் என்று அந்த அலுவலர் குறிப்பிட்டார்.
ஆனாலும், அது அர சியல் நிலைமையையும், தலைமை வகிக்கும் அலு வலரையும் பொறுத்தது என்றார்.
நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம் முத லில் மொழிகள் பற்றிய மாற்றங்களைக் கொண்டு வந்தபோது, பணியாளர் துறையும், அமைச்சர் நாராயண சாமியும் மொழிகள் பற்றி மாற்றங்களின் உள்ளடக்கங்களை எதிர்த்துள்ளனர்.
சிவில்துறை அதி காரிகளும் நாடாளுமன் றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்திய அதே கருத்துகளைத் தான் கூறியுள்ளனர். அதன்படி அந்த மாற்றங்கள் இந்தி பேசும் மக்களுக்கு ஆதர வாகவும் நகர மக்கள் ஓரடி முன்னே போக சாதகமாக இருக்கவும் அமைந்துள்ளது என்று கூறினர்.

தமிழ் ஓவியா said...


தேவை அனைத்துலக விசாரணை நவநீதம்பிள்ளை உறுதி



சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அய்.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் வலியுறுத் தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் இந்த அறிக்கையை, அய்.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் குயங் வா கங் பேரவையில் நேற்று சமர்ப்பித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் செயற்படவில்லை.

சில தெரிவு செய்யப் பட்ட பரிந்துரைகளை மட்டுமே சிறிலங்கா அர சாங்கம் நடைமுறைப் படுத்தி வருகிறது.

குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயங் களில் இன்னமும் பல் வேறு படிநிலைகளை சிறிலங்கா தாண்ட வேண் டிய நிலை உள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதன் மூலம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.

உண்மையைக் கண் டறியும் நெறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

சாட்சிகளையும் மற் றும் பாதிக்கப்பட்டோ ரையும் பாதுகாப்பதற்கு பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

கடத்தல்கள், காணா மல் போதல்கள் தொடர் பாக அனைத்துலக சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

தேசிய நிறுவனங் களின் சுயாதீனத் தன்மையை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு விசா ரணைகள் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப இடம்பெறுவதை உறுதிப்படுத்த, சுதந்திர ஆணைக்குழுவொன்று அதைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட வேண்டும். என்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்



ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.
(விடுதலை,18.1.1951)

தமிழ் ஓவியா said...


நெத்தியடி யாருக்கு? அ.இ.அ.தி.மு.க.வுக்கு!


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் நெத்தியடி என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரின் கேலிப் படத்தை வெளியிட்டு, அவர்களுக்கே உரித்தான அநாகரிகமான சொற்களைப் பயன்படுத்தி சாடியுள்ளனர் (21.3.2013).

சிரங்கு - சொறி என்றெல்லாம் தங்கள் வசம் உள்ள சரக்கை அவிழ்த்துக் கொட்டியுள்ளனர்.

தி.மு.க. மத்திய அரசிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் விலகியதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலைஞரைப் பாராட்டி விட்டாராம் - பொறுக்குமா நொய்யரிசிகளுக்கு?

பந்தை அடிக்க முடியவில்லையானால், காலை அடிக்கும் வேலை அவர்களுக்கு மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும்!

தி.மு.க. விலகியது ஒரு கொள்கையின் அடிப்படையில். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிபந்தனையின் அடிப்படையில்.

ஆனால், அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி. அமைச்சரவையி லிருந்து விலகியதே - நினைவிருக்கிறதா? - அது எதன் அடிப்படையில்?

இதனை விடுதலை சொல்லுவதைவிட அன்றைய பிரதமர் வாஜ்பேயி (பி.ஜே.பி.) வாயால் சொல்ல வைப்பதுதான் சிலாக்கியமானது - மிகமிகப் பொருத்தமானதும்கூட!

இதோ வாஜ்பேயி பேசுகிறார், படியுங்கள் - கேளுங்கள்!!

கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும்போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

வாஜ்பேயி: இல்லை. நியாயமற்ற நிபந்தனை களை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி அமைக் கப்படும்பொழுது, இதைப் போன்ற நிபந்தனை களை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.

கேள்வி: சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந்தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில் அ.தி. மு.க.வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார்.

சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங் களில் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்கிற மிரட் டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலை யுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.

கருணாநிதியின் அரசைக் கலைக்கவேண்டும் என்பதுதான் அந்த விலை. அதுமட்டுமல்ல; பல ஊழல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும், அவருடைய நிபந்தனையாக இருந்தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடிபணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவ தில்லை என்பதை உணர்ந்தவுடன், அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.

குமுதம், 20.9.1999

நமது எம்.ஜி.ஆர் ஏடே! இதற்குப் பதில் என்ன?

ஒரு கொள்கைக்காக தி.மு.க. மத்திய அமைச்சர வையிலிருந்து வெளியேறுகிறது - அதற்காக திராவிடர் கழகத் தலைவர் வரவேற்கிறார் - பாராட்டுகிறார்.

தன்னலத்துக்காக - பக்கா சுயநலத்திற்காக செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிறார்.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படலாமா? நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெயலலிதாவை சங்கடப்படுத்த வேண்டுமென்றே அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், பலே! பலே!!

தொடரட்டும் அந்தக் கைங்கரியம்

தமிழ் ஓவியா said...

இவள் கண்ணகி


- வி.சி.வில்வம்

கண்ணகி புத்தியற்ற மடப்பெண் (22.07.1951) என்றார் பெரியார். எப்படிச் சொல்லலாம் எனக் குதித்தார்கள் ? கண்ணகியின் கதை அறிவுக்கு உட்படாமல், இழிவையும், கழிவையும் கொண்டது என்றார் பெரியார். அதெல்லாம் தெரியாது, கண்ணகி ஓர் தமிழச்சி, கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்றனர். அந்தப் பழக்கமே எனக்கில்லை என்றார் பெரியார். விவாதங்களின் இறுதியில் வென்றவர் பெரியார். இப்போது கண்ணகியைக் கடைக்கண்ணால் கூட யாரும் பார்ப்பதில்லை.



நமக்கொரு சந்தேகம். கண்ணகியைப் பிடிப்பவர்களுக்குக் கண்ணகி மாதிரி ஒரு மகள் வாழ்க்கையும், பிள்ளையாரைப் பிடிப்பவர்களுக்குப் பிள்ளையார் மாதிரி ஒரு மகன் வாழ்க்கையும் கிடைத்தால் ஏற்பார்களா என்பதே நம்முடைய சிறிய கேள்வி ?

தமிழர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது பார்ப்பனத்தனம். அதை அப்படியே ஏற்பது பண்பாட்டுத்தனம் போல.

ஆனால் இவைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். இதன் அண்மைக்கால அடையாளமாக பிரளயனின் நாடகத்தை நாம் பார்க்கலாம். அதன் பெயர் வஞ்சியர் காண்டம். தமிழ்நாட்டின் 10 நகரங்கள் இந்த நாடகத்தைக் கண்டிருக்கின்றன.
நாடகம் என்றவுடன் உங்களுக்குத் தொலைக்காட்சிகள் நினைவுக்கு வரக்கூடும். அது பிழை. நம் குழந்தைகளுக்கும் சேர்த்து செய்கின்ற பெரும் பிழை. நிஜ நாடகம் பாருங்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தாலும் தேடி, ஓடிப் பாருங்கள். அது சொல்லும் கலை; அது சொல்லும் கருத்து. கருத்தைக் கலையாய்ச் சொல்லும் பிரளயன் நாடகங்கள், முப்பதுக்கும் மேல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

இந்நாடகத்தைப் பேராசிரியர் ராஜு நெறியாள்கை செய்துள்ளார். இசை, பாடல்கள், காட்சியமைப்பு என அனைத்துமே அத்தனை அழகு. சுமைதூக்கும் தொழிலாளி, வர்ணம் பூசுபவர், அப்பள வியாபாரி, அரசு ஊழியர், ஆய்வு மாணவர்கள் என 45 பேர்களின் கூட்டுழைப்பு!

வாராந்திரத்தின் ஓர் இறுதி நாளில் இவர்கள் திருச்சியில் கூடினார்கள். இவர்களே வியக்கும் வண்ணம் மக்களும் கூடினார்கள்.

நாடகம் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான வஞ்சிக்காண்டத்தின் ஒரு பகுதியே நாடகக் கரு என்று அறிவித்தார்கள்.

கண்ணகியைப் புதுமையாய்ப் பார்க்கலாம் என்று விளம்பரமும் செய்திருந்தார்கள்.

கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா எடுக்கிறான் சேரன் செங்குட்டுவன். அவ்விழாவில் கண்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு, தோழி தேவந்தி மற்றும் ஐயை ஆகியோர் பங்கேற்கின்றனர். தெய்வக்கோலம் பூண்ட கண்ணகிக்கும், இவ்வஞ்சியரது வாழ்வனுபவத்தில் தோற்றமளித்த கண்ணகிக்கும் நிறைய முரண் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

கண்ணகியை எல்லோரும் தொழுகிறார்கள். நீங்கள் ஏன் தொழவில்லை? எனச் செவிலித்தாய் காவற்பெண்டுவைக் கேட்க, அவரோ கொதித்துப் பேசுகிறார். கண்ணகியைத் தெய்வம் என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியாது. யாரைத் தெய்வம் என்கிறீர்கள்? கண்ணகியா தெய்வம்? யாருக்கு வேண்டும் உங்கள் கண்ணகி எனப் பொரிந்து தள்ளுகிறார். கண்ணகியின் கோலம் கோவலனுக்குப் பெருமை சேர்க்கலாம். ஆனால் உண்மைக் கண்ணகியை உங்களுக்குத் தெரியுமா? கண்ணகியை என் மகள் போல் வளர்த்தேன், அவளை எப்படி நான் தெய்வமாய்ப் பார்ப்பேன்? என அழுகிறார். தொடர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.

கண்ணகியின் 12 ஆவது வயதில் கோவலனோடு திருமணம் முடிகிறது. அப்போதுதான் தேர்ந்த பொற்கொல்லர்களால் காற்சிலம்பு செய்யப்படுகிறது. திருமணம் முடிந்த ஓர் ஆண்டில் கோவலன் பிரிந்து போகிறான். ஒருசமயம் கண்ணகியின் கால் ஒன்றில் காற்சிலம்பைக் காணவில்லை. பதறிப் போகிறார் செவிலித்தாய். உன் தந்தை ஆசை ஆசையாய் வழங்கிய பரிசு அது. எங்கே சிலம்பு? எனக் கேட்க, கால் அருகியதால் கழற்றிவிட்டேன் எனக் கண்ணகி பதில் சொல்கிறார்.

நாளடைவில் கோவலன் வரமாட்டான் என்கிற முடிவுக்குக் கண்ணகி வருகிறார். ஆனால் செவிலித்தாயோ உன் கணவர் நிச்சயம் வருவார், கவலைப்படாதே என்கிறார். பகல் _ இரவு, நிலவு _ -கதிர், நீர் _ நெருப்பு, குளிர் _ வெப்பம், இன்பம் _ துன்பம் என்பதைப் போல காதல் _ -பிரிவு என்பதும் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் கண்ணகி. நீ செவிலித்தாயாக இருந்து எங்கள் குடும்பத்திற்குச் சேவகம் செய்கிறாய். நீங்கள் உரிமைகள் இழந்த அடிமை மக்களாக இருக்கிறீர்கள். நானோ அடிமை என்பதையே உணராத அடிமையாக இருக்கிறேன். காற்சிலம்புகள் எனக்கு, கால் விலங்குகள் போல உள்ளன. எனவே அதைக் கழற்றிவிடுங்கள் என்கிறார். இறுதியில் இன்னொரு சிலம்பும் அகற்றப்படுகிறது.

அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பதம் என்ன? எனக் கண்ணகி கேட்க, செவிலித்தாய் தெரியவில்லை என்கிறாள். என்னைப் போல எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது என்று கண்ணகி சொல்வதாகச் செவிலித்தாயின் நினைவலைகளில் ஓடி முடிகிறது.

இந்நிலையில் கண்ணகியின் தோழி தேவந்தி சிலவற்றைப் பகிர்கிறார். கோவலன் சென்ற பிறகு எல்லா அணிகலன்களையும் துறந்த நிலையில் கண்ணகி இருக்கிறாள். அந்நேரத்தில், நாளை கோவலன் பெற்றோர் வருகிறார்கள். மலர்கள் சூடி, காற்சிலம்பை அணிந்து கொள் என்கிறார் தோழி. கோபமுற்ற கண்ணகி, காற்சிலம்பை வாங்கி எறிகிறாள். என் மாமனார், மாமியாருக்காக நான் எந்த அணிகலனும் அணியமாட்டேன். என் விருப்பத்திற்கு மாறான எதையும் செய்யச் சொல்லாதீர்கள் எனக் குமுறுகிறாள்.

இப்படியெல்லாம் பேசாதே கண்ணகி. தெய்வங்களை நன்றாகத் தொழு. நிச்சயம் உன் கோவலன் வருவான் என்கிறாள் தேவந்தி. தெய்வங்களைத் தொழுவது என் இயல்பு அல்ல என்கிறாள் கண்ணகி. அப்படியானால் உங்களுக்காக நான் தொழுகிறேன் என்கிறாள் தோழி. வேண்டாம், எனக்காக நீ தொழ வேண்டாம். உன் கணவனுக்காக நீ நாள்தோறும் தொழுகிறாயே, உன் கணவன் வந்துவிட்டானா எனத் திருப்பிக் கேட்கிறாள் கண்ணகி.

இப்படியாக அடிமைத்தனத்தை வெறுப்பவராக, அடிமை மக்களின் உரிமைகளுக்குப் பரிவு காட்டுபவராக, மூடத்தனங்களை அகற்றுபவராக, முற்போக்குக் குணம் கொண்டவராக கண்ணகி சித்தரிக்கப்படுகிறார்.

தெய்வமாக்குவதும் , வழிபடுவதும் தவறு என்பதாக நாடகம் முடிவு பெறுகிறது.

தமிழ் ஓவியா said...

திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?


- கி.தளபதிராஜ்

பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கிறார். எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும் என்று புதிய தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்!



தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு பாப்பாத்தி என்றும் ஆண் குழந்தைகளுக்கு அய்யர் என்றும் பெயர் சூட்டியுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அவர்களை எல்லாம் இந்த வியாதிகள் பார்ப்பனர் என்றே கூறுவார்களோ?

திராவிட் என்பதும் திராவிடர் என்பதும் ஒன்றா? சைதாப்பேட்டையை ஆங்கிலத்தில் சைதாபேட் என்று கூறுவது போல் திராவிட் என்பது இடத்தைக் குறிக்கும்.

திராவிட என்ற சொல் இடம் பெற்றிருக்கும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய அனைத்து அரசியல் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆகலாம். திராவிட என்பது இடத்தைக் குறிக்கும் சொல். திராவிடர் கழகத்தில் ஒருநாளும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. காரணம் திராவிடர் என்பது இனத்தைக் குறிக்கும். தென்னிந்தியாவில் பிறந்ததால் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கலாம். எந்தப் பார்ப்பானாவது திராவிடர் என்று தன்னை சொல்லிக் கொண்டதுண்டா?

தமிழ் ஓவியா said...

மனோன்மணியம் சுந்தரனாரைப் பார்த்து விவேகானந்தர் நீங்கள் என்ன கோத்திரம்? என்று கேட்டாராம். அதற்கு மனோன்மணியம் சுந்தரனார் அளித்த பதில் தன்மானம் மிக்க தென்னாட்டுத் திராவிடன் என்பதே! (மனோன்மணியம் சுந்தரனார் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து) இந்துக்கள், திராவிடர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். திராவிடர் நாகரீகம் கலந்த பின்னர்தான், இந்து நாகரீகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. (நோபல் பரிசு ஏற்புரையில் தாகூர் கூறியது). மறைமலை அடிகள்தான் தனித்தமிழ் இயக்கத்தைக் கட்டினார் என்று கூறும் இவர்கள், தமிழர் அடையாளத்தை அழிக்கவே திராவிடர் இயக்கங்கள் பயன்பட்டதாக நா கூசாது கூறத்துவங்கிவிட்டனர். தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று கூறப்படும் மறைமலை அடிகள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். ஜாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை. பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டைத் தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர் என்றார்.

இப்படி தாகூரும், மனோன்மணியம் சுந்தரனாரும், மறைமலை அடிகளும் சுட்டிக்கட்டிய திராவிடர் என்ற இனத்தையே முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் திராவிடர் என்ற சொல்லே பார்ப்பனர்களைக் குறிப்பது என்று கூறி, வரலாற்றையே திரிக்கப் பார்க்கிறார்கள்!
பார்ப்பனர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதில்லை. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து நமக்கு விடுதலை தேவைப்பட்டது. அவர்களிடமிருந்து நம் இனத்தைக் காப்பாற்றவே திராவிடர் என்ற அடையாளச் சொல் தேவைப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்.
தமிழர்கள் மட்டும் திராவிடர்களா? அல்லது கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்களா என்று கேட்பதின் நோக்கம் புரியவில்லை! எந்தக் கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. தமிழினத்தில் பார்ப்பனர் ஊடுருவலைத் தடுக்கவே திராவிடர் என்ற அடையாளச் சொல்!.

தமிழர் என்ற ழகர ஒலிச் சொல்லை, சரியாக ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள என்றும் பின்னர் திராவிடன் என்றும் ஆரியன் எழுதியதையும், பேசியதையும் ஆதாரமாகக் கொண்டு, தம்மையே திராவிடன் என அழைத்துக் கொள்வது தான் அறிவு நாணயமான செயலா? எனக்கேட்கும் தோழர்களே தேயம் என்பதுதான் தேசம் ஆனது என்று எந்தப் பாவாணர் கூறியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அதே பாவாணர் தான் மேற்படி தமிழர்---_திரமிளர்_-திராவிடர் செய்தியும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் என்று கிளம்பியிருக்கும் தோழர்களே உங்கள் பிரச்சனை என்ன? உங்கள் இடைவிடாத கடுமையான தொடர் போராட்டத்தின் (?) விளைவால் அமையப் போகும் தமிழ்த் தேசியத்தை எந்தத் திராவிடர் இயக்கமாவது அல்லது தோழர்களாவது தடுக்கும் வேளையில் ஈடுபடுகிறார்களா? தமிழ்த் தேசியம் கூடாது திராவிடநாடுதான் வேண்டும் என்று எந்தத் தோழராவது மல்லுக்கு நிற்கின்றனரா?

அல்லது திராவிட இயக்கங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் உங்களை இப்படிப் பேசவைக்கிறதா?

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு வினாக்கள்

உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகை யீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்த போது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமான் சமீபம் இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம்முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். தாடகைக்கு அருள்செய்தமையால் இத்தலத்திற்கு தாடகையீச்சரம் என்று பெயர் வந்தது.

இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமத்தில் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

- மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29-31
உண்மை - 15.5.1983

தமிழ் ஓவியா said...


நமது நாடகம், சினிமா! -பாரதிதாசன்-


சீரிய நற்கொள்கையினை எடுத்துக் காட்ட சினிமாக்கள், நாடகங்கள் நடத்த வேண்டும். கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் கொடுமை இதை விட வேறே என்னவேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்பதற்கும், பழைமையினை நீக்கி நலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள் அமைக்கின்றார், முன்னேற்றம் அடைகின்றார்கள்.

ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியை சேர்ப்பதற்கும் பெரு நாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்பிடித்த பிடியில் முடித்து தீர்ப்பதற்கும், பெரு நோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும் பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களை பின்னே தள்ளும்.

தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர் தமிழ்பாஷையின் பகைவர்; கொள்கையற்றோர்; இமயமலை யவ்வளவு சுயநலத்தார்; இதம் அகிதம் சிறிதேனும் அறியாமக்கள்; தமைக் காக்க! பிறர்நலமும் காக்க என்னும் சகஜ குணமேனுமுண்டா? இல்லை இந்த அமானிகள் பால் சினிமாக்கள், நாடகங்கள் அடிமையுற்றுக் கிடக்கு மட்டும் நன்மையில்லை.

உண்மை - 15.6.1983

தமிழ் ஓவியா said...


வர்க்கப் பார்வையை சிதைக்கும் சாதி


பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் தத்துவம் வேத சாஸ்திரக் கருத்துக்களோடு இணைந்து இந்தியாவில் சமூக ஆதிபத்தியக் கருத்தாக நிலைநாட்டி வருவது பிராமணியம் என்பதாகும்.

இந்தியாவைத் தவிர உலகில் மற்றெல்லா நாடுகளிலும், குறிப்பாக மேலை நாடுகளில் ஆளும் வர்க்கத்தின் அடிப்படையில் ஆதிபத்தியம் நிலவியது. பொருள் உற்பத்தி உறவு முறையில் - அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகார ஆதிக்கம் வகிக்கும் வர்க்கம் மேலான வர்க்கமாகக் கருதப்பட்டது.

உதாரணமாக மன்னர்கள் நிலப்பிரபுக்கள் முதலாளிகள் உயர்வான சமூக அந்தஸ்து படைத்தவர்களாக கருதப்பட்டனர்.

ஆனால் இந்தியாவில் மேற்கூறியவாறு வர்க்க அடிப்படையில் உயர்வு தாழ்வு எனும் சமூக அந்தஸ்து நிலவி வந்த போதிலும் இவை அனைத்திற்கும் மேலாக - முதன்மையாக பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் சாதிய முறை ஏற்படுத்தப்பட்டது வேத சாத்திர கருத்துக் களேயாகும்.

இந்தியாவில் அடிமை முறையும், நிலப்பிரபுத் துவ உற்பத்தி உறவுமுறையும், பின்னிப் பிணைந் திருந்த சமுதாயத்தில் பொருள் உற்பத்தி உறவு முறையில் அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகாரம் என்ற அமைப்பில் ஏற்படும் வர்க்கப் பாகுபாடு அல்லது வர்க்க பிரிவுகளை மக்கள் பார்க்க விடாது தடுத்தும், தடைப்படுத்தியும் வந்தது பிராமணியம் எனும் தத்துவமாகும்.

-எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திரப் பேய்களும், சாதிக்கதைகளும் (ஒரு மார்க்ஸியப் பார்வை) நூலின் பக்கம் 54-55

(சாதியா, பொருளாதார பார்வையா என்று நாம் இதுகாறும் எழுப்பி வந்த கேள்விக்கு பொருளாதாரமே என்று கிளிப்பிள்ளைப் பாடம் சொல்லி வந்த மார்க்ஸிஸ்டுகள் இன்றைய தினம் நம் கருத்தின் பக்கம் நெருங்கி வந்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.)

உண்மை - 15.5.1983

தமிழ் ஓவியா said...


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை கிரக பலன்களையும் ராசி பலன் களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் வடிகட்டப் பட்ட மூட நம்பிக்கையாகும். நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப் படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது அறிவுள்ளவர்கள் செய்யும் காரியம் அல்ல. அதை படிப்பதும், அதன்படி நடப்பதும் நம் தலையில் நாமே மண்ணைப் போடுவது போன்றது. ஒவ்வொரு பத்திரிகையி லும் ஒரே ராசி உள்ளவர்களுக்கு வெவ்வேறு விதமான பலன்களைச் சொல்லி எழுதி, இந்தப் போலிகள் கணிசமான காசு பார்க்கிறார்கள். இந்த சாதாரண விவரங்கள் கூட தெரியாத முட்டாள்கள், இன்றும் இவற்றை நம்பிக் கொண்டு இருக் கின்றார்கள். ராசி பலன் எழுதி வந்த குஷ்வந்தசிங், தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்றும் அது ஒரு வடி கட்டப்பட்ட பொய் என்றும் அடித்துக் கூறி உள்ளார். பொருந் தாத எதிர்பார்ப்புகள்
சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் பேன்றவற்றை அணிந்து கெள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப் பில் அவைகளை கட்டிக் கொள் கிறார்கள். சிலர் சில கற்களை ராசிக் கல் என்று கூறி அதை மோதிரங் களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்துச் செயல்களும் அறிவுக்குப் பொருந்தா என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு ரூபாய் கூடப் பெறாத தாமிரத் தகடுகளில் ஏதேதோ கிறுக்கி எழுதி, ஆயிரக்கணக்கில் இப்பொ ழுது பலரும் சம்பாதித்து வரு கிறார்கள். இதற்கு என்று டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து, இந்த ஏமாற்றுத் தொழிலில் லட்சக் கணக்கில் பணம் பார்க்கிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண் டாட்டம்தான்.
பிள்ளையாரின் விலை?

இந்துக்களால் மதித்து வணங்கப் படும் பிள்ளையாரை ஒரு சாமி சிலைகள் செய்து விற்கும் நிறுவனத் தில் விலைப் பட்டியல்

இதோ!

1. வைரப் பிள்ளையார் ரூ.1.25 லட்சம்

2. தங்கப் பிள்ளையார் ரூ. 80,000
3. வெள்ளிப் பிள்ளையார் ரூ. 20,000
4. செம்புப் பிள்ளையார் ரூ. 1,200
5. மற்ற உலோகங்களில் ரூ. 300
6. பிள்ளையார் படங்கள் ரூ 125
7. லித்தோ படங்கள் ரூ. 45
8. நல்ல பேப்பரில் ஜெராக்ஸ் செய்யப்பட்டது ரூ.3 * கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
ஆக மொத்தத்தில் பிள்ளையா ருக்கு அல்ல, அவர் செய்யப் பட்ட உலோகத்திற்குத்தான் மதிப்பு உள்ளது என்பதே உண்மை.
எப்படியோ நகை வியாபாரிகளுக் குக் கொண்டாட்டமே!

தமிழ் ஓவியா said...


எடை மேடை தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான்



தி.மு.க தலைமைக் கழகப் பேச் சாளர் - எண்ணிய எண்ணத்தைத் துணிவாய்ச் சொல்லும் வல்லமையர் _- பெரியார் தொண்டர் மதுரைக் கவிஞர் இரா. ஜீவா.

பொறுக்குமணிகளாய்த் தேர்ந் தெடுத்த சொற்களில் நறுக்குக் கவிதைகளை கலகக்காரர் பெரியார் என்ற பெயரில் புத்தகமாய் வடித் துள்ளார்.

ஒவ்வொரு கவிதையும் கருத்துக் கருவை சூல்தாங்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது என்று மானமிகு தமிழர் தலைவர் அவர்களின் பாராட்டுப் பட்டயம் பெற்ற புத்தகம்.

கவிஞர் ஜீவாவின் உள்ளத்து உணர்ச்சிகளின் ஒருசில துளிகள் இதோ உங்களுக்காக.

மூடத்தனம்
அழிந்தால்தான்
மூலதனம் வெல்லும் என
முடிவாய்ச் சொன்னவன்
தீப்பந்தம் இன்றி
தீண்டாமை
கொளுத்தியவன்
தமிழைச்
சீர்திருத்தியவர்
தமிழனைச்
சீர்படுத்தியவர்

உன்மீது
செருப்பை வீசினார்கள்
நாங்கள்
அக்ரஹாரத்திலும்
செருப்பணிந்து
நடந்தோம்.

தந்தையே உன்மீது
நரகலை வீசினார்கள்
நாங்கள் நாடாளவே
வந்துவிட்டோம்.
உன்மீது
அடிவிழ விழ
உயர்ந்தது தமிழ்இனம்
உருக்குலைந்தது
ஆரிய இனம்.
இவை போன்ற எண்ணற்ற கவிதைகளின் வழியாக தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான் என்பதை உணர்த்தும் வகையில் புத்தகம் அமைந்துள்ளது. கவிஞர் ஜீவாவை அழைத்து வாழ்த்த அழுத்த வேண்டிய எண்கள் 09443925216 கலகக்காரர் பெரியார் புத்தகம் கிடைக்குமிடம்: அஞ்சுகம் பதிப்பகம், 65, மேலப்பச்சேரி திருப்பரங்குன்றம், மதுரை -625 005.
விமர்சகர்
பா. சடகோபன்,
பகுத்தறிவாளர் கழகம்
மதுரை - 94433 62300

தமிழ் ஓவியா said...


யக்ஞவல்கியா கூறுகிறார்!


ஒரு பிராமணன் சண்டாளனுடைய கிணற்றிலிருந்து தண்ணீரைக் குடித்தால், அல்லது சண்டாளன் பாத்திரத்தில் தண்ணீர்க் குடித்தால் சாந்த பானா செய்ய வேண்டும். இவ்வாறு யக்ஞவல்கியா இயற்றிய அங்கிரா என்ற நூல் கூறுகிறது.

சாந்தபானா செய்வதென்றால், செய்த பாவம் அல்லது தீட்டுத் தீர ஒரு இரவும், ஒரு பகலும் பட்டினி கிடக்க வேண்டும். அதன்பின் முதலில் பஞ்சகவ்யம் அருந்த வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பகத்சிங்


இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகிய உண்மை யான மாவீரர்கள் தூக்க லிடப்பட்ட நாள் (1931)

1924 - பகத்சிங் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த கால கட்டம். வழக்கம் போல் பெற்றோர் திருமண ஏற்பாட் டைத் தொடங்கினார்கள்.
பகத்சிங் என்ன சொன் னான் தெரியுமா? இது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்ல; என் உடல் உள்ளம், பொருள், ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.

சினிமாவே உலகம் என்றும் சீட்டி அடித்துக் கொண்டு திரியும் இளைஞர் கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்களாக!

நவஜவான் சபை ஒன்றையும் தொடங்கினான். அந்த அமைப்பில் உள்ளவர் கள் பூணூல், நாமம், விபூதிப்பட்டை, குடுமி, தாடி, தலைப்பாகை முதலிய மதத் தொடர்புடைய அனைத்துச் சின்னங்களையும் தூக்கி எறிந்தனர்.

வெறிபிடித்த இந்துத்து வாவாதிகள் முட்டாள்தன மாகப் புரட்சியாளர்கள் என்று கருதப்பட்ட காலம் அது.

மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எனும் பார்ப்பனர் சனாதன வெறிக் கண்ணோட்டத்தோடுதான் அதனைச் செய்தான்.

1908இல் வங்காளத்தில் ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக் கொன்ற குதிர்ராம் போஸ் தூக்கிலிடப்பட்ட போது, பகவத் கீதையைத் தன் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு இருந்தான்.

ஆனால் பகவத்சிங் எப்படி? சிறைக் கொட்டடியில் தூக்குக் கயிறை முத்தமிட இருந்த அந்த நேரத்தில், சீக்கியரான சிறை அதிகாரி ஒருவர் சீக்கியர்களின் புனித நூலைக் கொடுத்து, கடைசி நேரத்திலாவது பிரார்த்தனை செய் என்று கேட்டுக் கொண்டபோது, பகவத் சிங் மறுத்து விட்டான்! (இளை ஞர்களே எண்ணிப் பாருங்கள்!)

ஜாலியன் வாலாபாக் படுகொலை - அவனைப் புரட்சிவாதியாக்கிற்று.

தாங்கள் பயங்கரவாதி கள் அல்லர் - புரட்சியா ளர்கள் என்ற முறையில் இந்திய நாடாளுமன்றத்தில் யாருக்கும் உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் வெடி குண்டுகளை வீசி, காவல் துறையிடம் தங்களை ஒப் படைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் புரட்சிக் கருத்துக்களை எடுத்துக் கூறும் வாய்ப்பாகத்தான் இதனை செய்தனர் என்பது சாதாரணமா?

இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மை யான சமத்துவமும், சாந்தமும் அளிக்கத்தக்கப் பாதையை பகத்சிங் காட்டியுள்ளார் என்று குறிப்பிட்ட தந்தை பெரியார் - எவரும் அடைய முடியாத பேரை பகத்சிங் அடைந்தார் என்று குறிப் பிட்டு விட்டு பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம் என்று எழுதினார்.

மாகாணத்துக்கு இது போன்ற 4 பேர்களைத் தூக்கிலிட வேண்டுமென்று நமது அரசாங்கத்தை மனமார வேண்டுகிறேன் என்ற (குடிஅரசு 29.3.1931) தந்தை பெரியாரின் சிந்தனை சாதாரணமானதுதானா? இளை ஞர்களே எண்ணிப் பாரீர்!

- மயிலாடன் 23-3-2013

தமிழ் ஓவியா said...


இன்னும் எத்தனைக் கொடுமைகளோ - இன்னல்களோ?


கடைசி நேரத்தில் இந்தியா எப்படியும் எங்களை ஆதரிக்கும் - எதிராக வாக்களிக்காது என்று இலங்கை எதிர்பார்க்கும் அளவுக்குத்தான் இந்தியாவின் போக்குகள் இருந்தன.

இலங்கை எதிர் பார்த்ததற்கு மாறாக இந்தியா ஜெனிவா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நடந்து கொண்டாலும் அடிப்படையில் இலங்கைக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மூவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் தெரிவித்த கருத்துகள் சற்று நம்பிக்கை அளிப்பது போல் இருந்தன.

இந்தப் பிரச்சினை பெரும் நெருக்கடியில் சிக்கியதற்கானக் காரணங்களுள் ஒன்று போதிய அவகாசம் இருந்தும், குறித்த நேரத்தில் பிரச்சினை மீது கவனம் செலுத்தி செயல்படாததேயாகும். கடைசி நேரத்தில் தான் மத்திய அரசுக்கு ஞானோதயம் ஏற்பட்டது போலும்.

போக்குகளை மிகவும் துல்லியமாகக் கணித்த கலைஞர் அவர்கள் அவருக்கே உரித்தான அனுபவம், முதிர்ச்சி காரணமாக, மத்திய அரசிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து, இந்திய துணைக் கண்டத்தை மட்டுமல்ல உலக நாடுகளிடையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.

கலைஞர் அவசரப்பட்டு விட்டார்; மேலும் காத்திருந்திருக்க வேண்டும், இந்தியா அமெரிக்கா வின் தீர்மானத்தில் திருத்தத்தைக் கொண்டு வரும் என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நடந்ததைப் பார்க்கும் போது கலைஞர் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானதே - மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவின் கை இருந் திருக்கிறது என்று பேசப்படும் நிலை ஆகிவிட்டது.

இந்தியாவின் சார்பில் மனித உரிமை ஆணையத் தில் பேசிய திலிப் சின்கா சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறவில்லை; வெறும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல் லுவது - திருடன் கையில் சாவியை ஒப்படைத்த கதைதான்.

மறு சீரமைப்பு நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை

இலங்கை அரசே மேற்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று செல்லமாகத் தாலாட்டுப் பாடியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை, இத்தாலிய கடற்படைக்காரர்கள் கடற் கொள்ளைக் காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்றதற்கு உலகத்தையே குலுக்கியதும் இதே இந்தியாதான்!

அதே நேரத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழினத்தைச் சேர்ந்த - தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களாக இருந்தாலும் சரி, படுகொலை செய்யப்படும் பொழுது ஏனிந்த பதற்றம் இல்லை? என்ற கேள்வி நியாயமானதல்லவா? இதனைக் குறுகிய பார்வை என்ற குண்டாந்தடியால் அடிக்க நினைக்கக்கூடாது; தமிழர்கள் ஒன்றும் ஏமாந்தவர்களோ, புரியாதவர்களோ இல்லை.

ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் இந்திய மத்திய அரசு கணக்கிடவே முடியாத அளவுக்குக் கடும் கோபத் தீக்கு இரையாகி விட்டது. அது சார்ந்த அரசியல் கட்சியான காங்கிரசும் பெரும் சேதாரத்துக்கு ஆளாகி விட்டது.

உலக நாடுகளும் இந்தியாவைக் கேலியாகப் பார்க்கும் பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது.

இதற்கிடையில் ஒன்றைத் தவறாமல் குறிப்பிட்டாக வேண்டும்; இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் மட்டுமல்ல; அகில இந்தியக் கட்சிகளின் முகத்திரையும் கிழிந்து விட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பது கோடி பொன் பெறும் கணிப்பாகும்.

உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லா விட்டால் இன்னும் என்னென்ன இன்னல்களோ - கொடுமைகளோ தெரியவில்லை.23-3-2013

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை



சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)