Search This Blog

31.7.12

பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பிக்கும் நாள்- ஆவணி அவிட்டம்!


ஆவணி அவிட்டமாமே!

நாளை ஆவணி அவிட்டமாம்! பார்ப்பனர்கள் நாளை பூணூலைப் புதுப்பிக்கும் நாள்.

இடஒதுக்கீட்டால் ஜாதிக்குப் புத்துயிர் ஊட்டப்படுகிறது என்றெல் லாம் நீட்டி முழங்கும் பார்ப்பனர்கள் அனைவரும் (சோ உள்பட) நாளைய தினம் தவறாமல், மறக்காமல் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள்.

இந்தப் பூணூலை அணிந்த பிறகுதான் எந்த ஒரு பார்ப்பனச் சிறுவனும் துவிஜாதி (இரு பிறவியாளன்) பிராமணன் ஆகிறான். பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்பதற்கான டமார அறிவிப்புதான் இந்த பூணூல் அணிவிப்பு.

பார்ப்பனர்களைத் தவிர மற்ற செட்டியாரும், ஆசாரியாரும், பத்தரும் பூணூல் அணிந்து கொள்கிறார்களே என்று சிலர் கேட்கக் கூடும்.

அதற்குச் சாத்திரத்தில் அங்கீகாரம் கிடையாது. இதுகுறித்து மனுதர்ம சாஸ்திரம் பச்சையாகவே நெற்றியில் மொத்துவது போலவே எழுதி வைத்திருக்கிறது.

பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது. (மனு தர்மம் அத்தியாயம் 2 - சுலோகம் 44)
இதில் சூத்திரனுக்குப் பூணூல் தரிப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இராமானுஜர்கூட ஆதிதிராவிடர் களுக்குப் பூணூல் அணிவித்துப் பார்த்தாரே! பாரதியாரும் அதுமாதிரி முயன்றார். ஆனாலும் மூக்கறுபட்டது தான் மிச்சம்.

இந்து மதம், பார்ப்பனீயம் அதனை அனுமதிக்காது. பிறப்பால் பேதம் கற்பிக்கப்பட்ட சமுதாயத்தில் மாற்றங்கள் என்பது குதிரைக் கொம்பே! சீர்திருத்தவாதி என்று பார்ப்பனர்கள் கூறும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 1938இல் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது ஆசாரியார், ஆச்சாரியார் என்று போட்டுக் கொள்ளக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் ஆயிற்றே!

பார்ப்பனர்கள் சூத்திரர் வீடுகளுக்கு விவாஹசுப முகூர்த்தங்களை நடத்தி வைக்கும் பொழுது மட்டும் ஒரு முகூர்த்த நாழிகைக்குப் பூணூலைத் தரிக்கச் செய்வார்கள். ஏன் அந்தப் பதவி உயர்வு என்றால் சூத்திரனுக்குக் கல்யாண உரிமை சாஸ்திரப்படி கிடையாதே! அதே நேரத்தில் சூத்திரர்களின் பொருளைச் சுரண்டவும் வேண்டாமா?

மேலும் வேத மந்திரங்களைச் சூத்திரங்களின் காதுகளில் ஓதுவும் கூடாது என்பதால் தற்காலிகமாக மாப்பிள்ளையின் தோளில் பூணூலை மாட்டி, கல்யாணம் முடிந்து தட்ச ணையையெல்லாம் தட்டாமல், பாக்கியில்லாமல், கறாராகப் பெற்றுக் கொண்ட நிலையில், மறக்காமல் ஆம்! மறக்கவே மறக்காமல் மாப் பிள்ளை தோளில் பூட்டப்பட்ட அந்தப் பூணூலைக் கழற்றச் சொல்லி, குப்பையோடு குப்பையாகக் கூட்டி ஒதுக்கச் செய்த பிறகுதான் மேற்படி யான் நடையைக்கட்டுவான்.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும்கூட பூணூலைப் புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் தனியே ஒதுக்கி வைத்து ஜாதி ஆணவக் குறியான பூணூலை மற்றவர்களைச் சூத்திரர்கள் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கும் அறிவிக்கும் வகையில் புதுப்பிக்கிறார்களே! அதனை அனுமதித்துக் கொண்டும் இருக்கிறோம் என்றால் அதன் பொருள் - நம் மக்களுக்குப் போதுமான அளவுக்கு மான உணர்வு பொங்கி எழவில்லை - வீறுகொண்டு கொந்தளிக்கவில்லை என்றுதானே பொருள்!

------------------------"விடுதலை” 31-7-2012

13 comments:

தமிழ் ஓவியா said...

ராஜாஜி


கேள்வி: எனது அருமைத் தலைவர் ராஜாஜிக்கு பிராமணர் அல்லாதவரிடம் புகழ் இல்லையே ஏன்?
ஆர்.சேஷாத்திரி அய்யங்கார், பருத்திப்பட்டு

பதில்: பிராமணர் அல்லாத தலைவர்களால் கொண்டாடப் பட்டவர்தான் ராஜாஜி. ஆரம்ப காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா.வும், வரதராஜூலு நாயுடுவும் அவருக்கு இரு கரங்களாக இருந்தார்கள். சத்தியமூர்த்தி - காமராஜர் புயலை ராஜாஜி எதிர்கொள்ள அரணாக இருந்தவர் ம.பொ. சிவஞானம். தனது எழுத்தால் ராஜாஜிக்கு வலிமை சேர்த்தவர் காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ். மாரிச்சாமி. தனது பேச்சால் உதவினார் சின்ன அண்ணா மலை.

அனைத்துக்கும் மேலாக பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் நீட்சியாக தன்னை அறி வித்துக் கொண்ட அண்ணா 67 தேர்தலில் ராஜாஜியை தனது அணியின் நடுநாயகமாக வைத்துக் கொண்டார். எந்த ராஜாஜியை எதிர்த்துக் கால மெல்லாம் அரசியல் நடத்தினாரோ அந்த காமராஜர்... ராஜாஜியின் கடைசிக் காலத்தில் அவரோடு ஒரே மேடைக்கு வந்தார். எனவே, ராஜாஜி, அனைவராலும் விமர்சிக்கப் பட்டாரே தவிர, யாராலும் ஒதுக்கப்படவில்லை.

(ஜூனியர் விகடன் 1.8.2012 பக்.10)

கேள்வி கேட்டவர் அய்யங்கார். பதில் சொல்லும் ஜூ.வி.யோ அய்யர்வாள். கேள்வி கேட்கப்படும் ராஜாஜியோ அய்யங்கார். விட்டுக் கொடுத்துவிடு வார்களா? ஆனால் ஒன்று. கேள்வி கேட்கும் அய்யங்காருக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது என்று பதில் சொல்லும் ஜூ.வி. அய்யர்வாள் கொஞ்சங்கூட நிதானித்துப் பார்க்க வில்லையே-ஏன்?

பார்ப்பனர் அல்லாதாரிடத் தில் ஆச்சாரியர் மீது வெறுப்பு இருக்கிறது என்ற உண்மை அய்யங்காருக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் அந்தக் கேள்வியையே கேட்கிறார். ஜூ.வி. அய்யர்வா ளுக்கும் இந்த உண்மை தெரி யும். என்றாலும் ஆச்சாரியாரை விட்டுக் கொடுக்க முடியாதே - அதனால்தான் இந்த விளக் கெண்ணெய் கத்தாழைக் கூட்டு வழவழ குழகுழ பதில்.

1937 இல் ஆட்சிக்கு வந்தபோதும் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். அதே நேரத்தில் பார்ப்பனர் படிப்பதற்கு சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தார். 1952 இல் வந்த போதும் ஆறாயிரம் கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணையையும் பிறப்பித்தார் ஆச்சாரியார்.

இந்தக் குலக்கல்வித் திட்டத்தின் பின்னணியைத் தந்தை பெரியார் தமிழர்களிடம் விளக்கிக் கூறினார். ஆச்சாரி யார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் வருணாசிரம நோக்கம் கொண்டது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மத் திட்டத்தை ஆச்சாரியார் திணித்தார். பார்ப்பனரல்லாதார் வெறுப்பைத் தேடிக் கொண்டார். இதற்கு என்ன ஆராய்ச்சியா தேவை?

- மயிலாடன் 31-72012

தமிழ் ஓவியா said...

ஜாதி அடையாளம்

ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதே நேரத்தில் அரசியலில் தாங்கள் ஜாதியைத் தானே முன்னிறுத்துகிறீர்கள் - அடையாளம் காட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாசு அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் என்ன பதில் சொல்கிறார்?

யாருக்குத்தான் ஜாதி உணர்வு இல்லை? ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஜாதி உணர்வு இருக்கிறது. பிகாரில் லாலு பிரசாத், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கருநாடகாவில் தேவகவுடா, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியா முழுமையும் ஜாதி அடிப்படை அரசியல்தான் நடக்கிறது. நாங்கள் சொன்னால் மட்டும் எங்களுக்கு ஜாதி முத்திரையைக் குத்துகிறார்கள் என்பதுதான் மருத்துவரின் பதில்.

மற்ற மற்ற மாநிலங்களில் உள்ள ஜாதி அரசியலைத் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுக் கூற முடியாது. தமிழ்நாட்டில் உள்ளது போல் சமூகப் புரட்சி இயக்கம் அங்கெல்லாம் கிடையாது. தந்தை பெரியார் போன்ற ஜாதி ஒழிப்புப் புரட்சியாளரின் முக்கால் நூற்றாண்டுக் கால ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம். அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் போட்டுக் கொள்வது பிற மாநிலங்களில் உண்டு. தமிழ் நாட்டில் அவ்வாறு போட்டுக் கொள்வதில்லை. அப்படிப் போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும் நிலைதான் இங்கு. இந்த அடிப்படை உண்மையை மருத்துவர் உணரவேண்டும்.

இதற்கு முன்பும்கூட ஜாதியை முன்னிறுத்தி கட்சி நடத்தியவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் வெற்றி பெறவில்லையே. தேர்தல் நேரங்களில ஜாதிக் கட்சிகளோடு கூட்டு சேர்ந்து போட்டியிட்ட நிலைமைகள் எல்லாம் கூட உண்டு. அது வெற்றியைக் கொடுத்திருக்கிறதா?

மருத்துவர் சொல்லும் கூற்றுப்படியே ஒரு கேள்வியை அவரிடம் கேட்க முடியும். தமிழ்நாட்டில் ஜாதி உணர்வு இருக்கிறது என்பது உண்மையானால், ஜாதி அடையாளத்தைக் காட்டி அரசியல் நடத்தும் பா.ம.க. தேர்தலில் குறைந்த பட்சம், வட மாவட்டங்களிலாவது பெரு வாரியான வகையில் வெற்றி பெற்று இருக்க வேண்டுமே. ஏன் வெற்றி பெற முடியவில்லை? தமிழ்நாட்டு மண்ணுக்குரிய தனித்தன்மைதான் இது.

மற்றொரு கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதே - பாட்டாளி என்றால் தமிழ்நாட்டில் வன்னியர் மட்டும்தானா? இப்படி ஒரு கட்சியை தாம் துவக்கியதற்கு தொடக்கத்தில் என்ன கருத்தினை முன்வைத்தார்? நரிக்குறவர், நாவிதர், வண்ணார், போன்ற பல சமுதாயத்தினரும், வன்னியர்கள் போல கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர். இந்தச் சமுதாய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத்தான் பா.ம.க.வை ஆரம்பித்ததாகக் கூறினாரே! (நம்பு தம்பி நம்மால் முடியும் ஜூலை 2008) அதன்படி நடந்து கொண்டதுண்டா?

இதுவரை எந்த ஒரு சட்ட மன்றத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ வன்னியரைத் தவிர்த்த வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்தியதுண்டா?

அத்தனை சட்டப் பேரவை உறுப்பினர்களும், அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் வன்னியர்களே - பெயர் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சி. புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் எம் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் கதையாக அல்லவா இருக்கிறது!

தொடக்கத்தில் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டாலும், பிற்காலத்தில் அந்த நிலையும் மாற்றப்பட்டு அனைத்தும் வன்னியர் களுக்கே என்பதுதானே பா.ம.க.வின் நிலைப்பாடு.

வன்னியர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் அடைய வேண்டியது மிகவும் அவசியமே. இதில் இரண்டு கருத்துக்களுக்கு இடம் இல்லை. அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற போர்வையில் வன்னியர்களுக்கு மட்டுமான அரசியல் நடத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?

இன்னொரு பக்கத்தில் ஜாதி ஒழிப்பே தங்கள் கொள்கை என்கிறார். அப்படியானால் ஜாதி ஒழிப்புக்காக அவர் வைத்துள்ள திட்டங்கள் என்ன? குறைந்தபட்சம் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்த முன்வருவாரா? தம் கட்சியினர் ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவாரா? வன்னிய ஜாதியில் வேறொரு ஜாதியினர் கலப்பு மணம் செய்தால் வெட்டுவோம் என்பதுதான் ஜாதி ஒழிப்பா? ஜாதிப் பெருமை பேசுபவர்களால் எப்படி இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும்?
31-7-2012

தமிழ் ஓவியா said...

மறப்போம் - மன்னிப்போம் மனநிலை, இதயம் பலப்படும் ஆய்வில் தகவல்
நியூயார்க், ஜூலை 31-மறப் போம், மன்னிப்போம் என்று தாராள மனது காட்டும் மனிதர்களின் இதயம் பலமாகும், நோய் நொடி கிட்டே வராது என்று புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர், மனதுக்கும் இதயம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனுக் கும் உள்ள தொடர்பு பற்றி விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட் டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

ஆய்வில் 200 பேர் இடம்பெற் றனர். அவர்களில் பாதி பேரிடம், நண்பர் ஒருவர் அவருக்கு கெடுதல் செய்வதாக நினைத்து கொள்ள கேட்கப்பட்டது. அந்த நண்பர் மீது எப்படி ஆத்திரம் கொள்வீர்கள் என்று கற்பனை செய்து கொள்ள கூறப்பட்டது. இதற்கு மாறாக, மீதி 100 பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்ற மனநிலை கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.

அய்ந்து நிமிட அவகாசத்துக்கு பிறகு அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர் களது ரத்த அழுத்தம் பரிசோதிக் கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட 100 பேரின் ரத்தம் கொதித்ததும், மறப்போம், மன்னிப் போம் பாலிசியை கொண்ட 100 பேரின் ரத்த அழுத்தம் நார்மலாக இருந்ததும் தெரிய வந்தது.

இதன்மூலம், 2ஆவது பிரிவினரின் இதய துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந் தது. இது நீண்ட கால அடிப் படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும் என ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.

குழுவின் தலைமை பேராசிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன் கூறுகை யில், மன்னிக்கும் மனம் இல்லாதவர் களின் ரத்த அழுத்தம் ஆத்திரப் படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதுவே, எதிரணியினருக்கு நீண்ட கால மனஅமைதியை உறுதி செய்து இதயத்தை பலப்படுத்துகிறது என் றார். 31-7-2012

தமிழ் ஓவியா said...

உயிரோடு விளையாட வேண்டாம்

டில்லியிலிருந்து சென்னைக்கு வந்து கொண் டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 32 மனித உயிர்கள் பலியாயின என்ற செய்தி மனித ஈரம் உள்ள ஒவ்வொருவரையும் துடிதுடிக்கச் செய்யக் கூடியதாகும்.

கண்மூடி கண் திறப்பதற்குள் இது நடந்து விட்டதே! எவ்வளவு ஆசைக் கனவுகளோடும், திட்டங்களோடும் பயணித்திருப்பார்கள்! சற்றும் எதிர்பாராவிதமாக இந்தச் சோகவிபத்து நடந்து விட்டதே!

விபத்துக்கு ஆளாகி உயிருக்குப் போராடியவர்கள் குறிப்பிட்ட அந்தக் கால அளவில் மட்டும்தான் துடிதுடித்து இருப்பார்கள். அவர்களின் குடும்பத் தினர்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் - வாழ்நாள் முழுமையும் அல்லவா நினைத்து நினைத்துக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பர்.

மின்கசிவா - சதியா என்ற ஆய்வுகள் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்கும். அதற்கு முன்பாக இது போல விபத்துகள் எதிர்பாரா விதமாக நடக்கும் சந்தர்ப்பத்தில் பயணிகள் எப்படி தப்பிப் பிழைப்பது என்பதுதான் முக்கியம். அதற்கான செயல் விளக்கங்களை, பயிற்சிகளை நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் அடிப்படைக் கடமையாகும்.

அவசர காலத்தில் வெளியேறும் ஜன்னல் இடம் பெற்றிருக்கிறதே - எத்தனைப் பேருக்கு அதனைப் பயன்படுத்தத் தெரியும்?

விபத்து நடந்த நிலையில் உடனடியாக அவசர உதவிக்கு யாரும் வரவில்லை - மருத்துவக் குழுவும் வரவில்லை என்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ள தகவல் நம் நெஞ்சை பிளக்கக் கூடியதாகும்.

அண்மைக் காலமாக ரயில் விபத்துகள் ஏராளமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. சாலை வழியில் பயணிப்பதை விட ரயில் மார்க்கம் பாது காப்பானது என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இப்பொழுது ரயில் பயணமும் ஆபத்தானதுதான் என்ற எண்ணம் பரவலாகிவிட்டதே! இதற்கான பொறுப்பை ரயில்வே அமைச்சகமும், ரயில்வே நிருவாகமும் ஏற்கத்தான் வேண்டும்.

விபத்துகள் நடக்கும்பொழுது அந்த நேரத்தில் மட்டும் மண்ணைக் கயிறாக்கி, விண்ணைப் பம்பரமாக்கிப் பேசும் நிருவாக அமைப்புகள், நாட்கள் நகர நகர அந்தப் பேச்சுகள் சென்ற இடம் தெரியாமல் காலவெள்ளத்தில் கரைந்து போய்விடும்.

முன்பெல்லாம் இது போன்ற விபத்துகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விபத்துக்குப் பொறுப் பேற்று அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள் வதாக அறிவிப்பார்கள். அத்தகைய பொறுப் புணர்ச்சி, கடமை உணர்ச்சி எல்லாம் இப்பொழுது பொய்யாய், பழங்கதையாய் அல்லவா போய்விட்டது.

வாணியம்பாடியில் ஒரு ரயில் விபத்து நடந்த போது அதற்குக் காரணம் ரயில்வே வேலையில் இட ஒதுக்கீடு அளிப்பதுதான் (அப்பொழுது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாபு ஜெகஜீவன்ராம் ரயில்வே அமைச்சர்) என்று வரிந்து கட்டி எழுதிய ஏடுகள் இப்பொழுது கண்டு கொள்வதில்லை. ஆசியாவிலேயே மிகப் பெரிய ரயில்வே துறை இந்தியாவைச் சார்ந்தது. இத்துறை மூலம் இந்திய அரசுக்கு கோடிக்கணக்கில் இலாபமும் வந்து சேர்கிறது. ஆனாலும் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் ரயில்வே பாதுகாப்புக்கு என்று நான்கரை விழுக்காடு நிதிதான் ஒதுக்கப்படுகிறது.

ரயில்வே பயணிகளுக்குப் போதுமான வசதிகள் அளிக்கப்படுவதில்லை. ரயில் பெட்டிகள் சரிவரப் பராமரிப்பு இல்லாத நிலைதான். மூட்டைப் பூச்சிகளும், வண்டுகளும் சர்வ சாதாரணம். நான்கு பெட்டிகளுக்கு ஒரு காவல் துறை அலுவலர் என்பதும் கூடப் போதுமானதல்ல. பயணிகளுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக வந்து கவனிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை.

ரயில்வே, தொலைபேசி, மருத்துவம், கல்வி போன்ற துறைகள் பண வரவுக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாதவை. மக்கள் நலனுக்கான (Service) இன்றியமையாத துறைகள் என்ற கண்ணோட்டம் தேவை! ஒன்றிலிருந்து பாடம் பெறுவதுதான் புத்திசாலித்தனம். உயிரோடு விளையாட வேண்டாம்! 1-8-2012

தமிழ் ஓவியா said...

மோடியின் முகத்திரை கிழிந்து வருகிறது

குஜராத் மோடி ஆட்சியில் 2002 இல் நடைபெற்ற மதக்கலவரம் - வரலாறு உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.

கோத்ரா ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டி எரிந்ததால் ஏற்பட்ட உயிரிழப்புக்குக் காரணம் முஸ்லிம்கள்தான் என்று முத்திரை குத்தி பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட இந்து மக்கள் மத்தியில் வெறியை ஊட்டி மதக் கலவரத்தை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியே தலைமை தாங்கி நடத்தியது என்பது மாபெரும் வெட்கக்கேடு!

கோத்ராவில் எரியுண்டு மாண்டவர்களின் சடலங்களை அவரவர்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்லுவது என்று தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் அமைச்சர் நரேந்திர மோடி சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பார்த்த பிறகுதான் பிரச்சினை திசை திரும்பியது. சடலங்களை ஒட்டு மொத்தமாக ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல் அமைச்சர் மோடி ஆணையிட்டதால், திட்டம் தீட்டிக் கொடுத்ததால், மக்கள் மத்தியில் குரூரமான வெறியுணர்வு தூண்டப்படுவதற்கு வசதி செய்து கொடுக்கப் பட்டது.

எரியுண்ட சடலங்களை ஒரே நேரத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றால் எத்தகைய விபரீத விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பது எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியதாகும்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். காவல்துறையும் சேர்ந்து கொண்டு கொலை வெறியாட்டம் போட்டது. வழக்குகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.

உச்சநீதிமன்றம் தலையிட்டதன் காரணமாக வழக்குகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. இப்பொழுதுதான் நீதிமன்றம் கொலையாளிகளுக்குத் தண்டனை கொடுக்கத் தொடங்கியுள்ளது. மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் தீப்தா தர்வாஜா பகுதியில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர்கள் வன்முறைக் கும்பலால் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், நகராட்சித் தலைவர்கள் உட்பட 85 பேர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. இதில் 21 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் கடமை தவறிய காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.

மோடி அரசு ஒழுங்காக வழக்கை நடத்த விரும்பாத நிலையிலேயே தண்டனைகள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன என்றால், எந்த அளவுக்குக் குற்றங்கள் - வன்முறைகள் அங்கு கொம்பு முளைத்துக் கூத்தாடி யிருக்கும் என்பதை எளிதில் உணரலாமே. பெஸ்ட் பேக்கரி வழக்கும் அப்படியே!

உச்சநீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பும் மிக முக்கியமானது. தகர்க்கப்பட்ட சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு குஜராத்தின் பி.ஜே.பி. அரசு நட்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து குஜராத் மாநில அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமோ குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இப்படி தொடர்ந்து நீதிமன்றங்கள் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் பி.ஜே.பி. அரசுக்கு எதிராகத் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வலியைப் பொறுக்க முடியாமலும், தாம் அம்பலப்படுத்தப் பட்டு வருகிறோம் என்ற நிலையில் ஆத்திரப்பட்டும், உணர்ச்சி வயப்பட்டுமேதான் நரேந்திர மோடி நான் குற்றம் செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று கத்துகிறார் - கதறுகிறார்.

இவ்வளவு மோசமான ஒருவரை இந்தியாவில் உள்ள உயர்ஜாதி ஊடகங்கள் அடுத்த பிரதமருக்கான வேட்பாளராகத் தூக்கிப் பிடிக்கின்றன. காற்றடித்து வண்ண வண்ண பலூன்களாக உயரப் பறக்க விடுகின்றன என்றால் இந்த நாட்டில் உயர்ஜாதி மனப்பான்மை என்ற ஒரு தீய சக்தி படமெடுத்து ஆடும் ஆபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குஜராத் கலவரம் நடந்த ஒரு கால கட்டத்தில், அப்பொழுது பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பேயி என்ன சொன்னார் என்பதையும் இந்த இடத்தில் மறக்காமல் நினைவு கூர்வது மிகவும் பொருத்த மானதாகும்.

எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லமுடியும்? என்ற அவரது வினாவையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா உயர்ஜாதி ஊடகங்கள்?

இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வரும் தீர்ப்புகள் குஜராத் மோடி அரசின் முகத் திரையை முற்றிலும், கிழிக்கும் என்பதில் அய்யமில்லை. 2-8-2012

தமிழ் ஓவியா said...

சட்டி சுட்டதடா - கைவிட்டதடா! அன்னா அசாரே குழுவின் பரிதாபம்

டில்லி, ஆக.3-ஊழ லுக்கு எதிராகவும், வலு வான லோக்பால் மசோதா வேண்டியும் நேற்றோடு 9 நாட்களாக தொடர் பட்டினி போராட்டம் இருந்து வரும் அன்னா குழுவினர் இன்று மாலை 5 மணி யுடன் தங்களது பட் டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராக வும், வலுவான லோக் பால் மசோதா வேண்டும் என்று கூறி அன்னா அசாரே, குழுவினர் கடந்த 25ஆம் தேதி முதல் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ஆம் தேதி முதல் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அவர்களை பட்டி னிப் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மருத் துவமனையில் சேரு மாறு டில்லி காவல் துறை வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்க வில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை பட்டினிப் போராட்டத்தை கை விடும் பேச்சுக்கே இட மில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை.

இதையடுத்து மத்திய அரசுடன் போராடு வதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழு வினர் திட்டமிட்டுள்ள னர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர் கள் தங்களின் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தை இன்று மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

பட்டினி போராட் டம் இருந்து நம் முடைய மூச்சும், ஆவி யும்தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்கக் கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வரலாமா? மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு

இந் நிலையில் அன்னா அசாரே குழு வினர் சமூக வலைத்தளமான டிவிட் டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின் றனர்.

"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அசாரே களம் இறங்க வேண்டிய தருணம் இது தானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதளப் பக்கத் தில்,

- தற்போதைய அரசி யல் கட்சிகள் மீது உங் களுக்கு நம்பிக்கை இருக் கிறதா?

- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னா அசாரே முன்னெடுக்க வேண்டுமா?

என்று இரு கேள்வி கள் கேட்கப்பட்டிருக் கின்றன. 3-8-2012

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....



‘‘Not only a secretary But also a very sincere Person’’ என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்ட என்.வி. நடராசன் அவர்களின் நினைவு நாள் இந்நாள்! (3.8.1975)

தமிழ் ஓவியா said...

புனே குண்டுவெடிப்பு வன்முறையின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாதிகளா? விசாரிக்கிறது மகாராட்டிரா அரசு

புனே, ஜூலை 3- புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணி யில் இந்துத்துவா பயங்கர வாத அமைப்புகளுக்குத் தொடர் பிருக்கிறதா என்பது குறித் தும் மகாராட்டிரா அரசு விசாரணை நடத்தும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் நேற்றுமுன் தினம் இரவு குண்டு வெடித் தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரி ழப்பு ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டு வெடிப்பு சம்ப வத்தில் இருவர் படுகாயம டைந்திருந்தனர்.

புனே குண்டு வெடிப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அரசு, தீவிரவாத செயல் இல்லை என்று கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று குண்டுவெடித்த இடங் களை நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கர வாதிகளின் சதியா என்பது குறித்து பயங்கர வாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் இந் துத்துவா பயங்கரவாதிக ளின் சதியாக இருக்குமா? என்று கேட்டதற்கு எல்லா வகையான கோணங்களி லும் இருந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.

தயானந்த பாட்டீல் யார்?

இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர் களில் ஒருவ ரான தயானந்த பாட்டீல் என்பவர் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன் கிரா மத்தைச் சேர்ந்தவர். குண்டு வெடிப்பு சம்பவம் நடை பெற்ற இடங்களில் ஒன்றான பல்கான்தார்வா திரை யரங்கு முன்பாக அன்னா ஹசாரே குழுவினர் அண்மையில் போராட்டம் நடத்திய போது அப்பகுதியில் அவர் நடமாடியதாக கூறப்படு கிறது. நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்ற தயானந்த பாட்டீல் அங்கு தமது கைப்பையை இறக்கி வைத்து விட்டு சென்ற பிறகே குண்டு வெடித்தது என்று கூறப் படுகிறது. இந்த தயானந்த பாட்டீலின் பின்புலம் பற்றி இப்போது மகாராஷ்டிரா அரசு குடைந்தெடுத்து வருகிறது.

மலேகான் குண்டுவெடிப்பு

ஏற்கெனவே இதே மகா ராட்டிரா மாநிலம் மலே கானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந் துத்துவ அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா உள் ளிட்டோர் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டமிடப்பட்ட சதி

இந்நிலையில் டில்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை செய லாளர் ஆர்.கே.சிங் கூறுகை யில், 500 மீட்டர் தொலை வுக்குள் 45 நிமிட நேரத்தில் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட் டது.

இத்தாக்குதல் திட்ட மிட்டு நிறைவேற்றப்பட்டுள் ளது என்றார்.

மேலும் வெடிக்காத இரண்டு குண்டுகள் கைப் பற்றப்பட்டு ஆய்வு செய் யப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு படை யினர் மற்றும் மத்திய தடயவியல் துறை யினர் புனே சென்று அது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் சிங் கூறினார்.3-8-2012

தமிழ் ஓவியா said...

தோழர் வீரமணியின் சேவை!



வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர்.

இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக்க் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துவந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரசாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.

விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம். இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தா வாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள்தான் இருந்துவருவார். - ஈ.வெ.ராமசாமி

(விடுதலை-07.06.1964

தமிழ் ஓவியா said...

அய்யா - ஆசிரியர் உறவு




கேள்வி: அய்யா வாழ்ந்த காலத்தில், 1962 முதல் 1973 வரை விடுதலை பொறுப்பு, இயக்கப் பொறுப்புகளில் இருந்துள்ளீர்கள். (தந்தை பெரியார் அவர்களின் நேரடிப் பொறுப்பில்); இந்தக் காலகட்டத்திலோ, வேறு காலகட்டத்திலோ தந்தை பெரியார் தங்களிடம் வருத்தப்படவோ, குறை காணவோ ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?

பதில்: 1962இல் முந்தைய ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் விலகிய நிலையில், விடுதலையை நாளேடாகத் தொடர இப்படி ஒருவர் தேவை என்று விரைந்து என்னை சென்னை மருத்துவமனையில் அய்யா அவர்கள் இருந்தபோது அழைத்துப் பேசியதும், எனது வாழ்விணையர் மோகனாவுடன் கலந்து ஆலோசித்து இருவரும் இணைந்து முடிவு எடுத்து சென்னைக்கு வந்தோம். எங்கள் குடும்பச் செலவுப் பொறுப்பை என் மாமனார் மாமியார் ஏற்றுவிட்டதால், எனது முழுநேர உழைப்பு கவலையின்றித் தொடர, என் வாழ்விணையர் எனக்கு முழு ஒத்துழைப்பைத் தந்து இல்லத்துக் கவலையை, பொறுப்பை ஏற்றவராகியே வாழ்ந்துவிட்டார். நான் இயக்கத்தின் முழு நேரத் தொண்டனாகத் தொடர்கிறேன்.

ஒளிவு மறைவின்றி நினைத்துப் பார்க்கிறேன்...! விடுதலை பொறுப்பாசிரியராக இருந்த காலத்திலும் இயக்கப் பொறுப்புகளில் இருந்தபோதும் சரி, அய்யா அவர்கள் என்னிடம் வருத்தப்படவோ, குறைகாணும்படியோ நான் எப்போதும் நடந்து கொண்டதே இல்லை என்பதுதான் நான் அய்யாவிடம் பெற்ற பெரும் சிறப்பூதியம்.

நான் பொறுப்பு ஏற்பதற்கு முன் மிகவும் அச்சப்பட்டேன். சில நேரங்களில் விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக வரும் தலையங்கத்தில் எழுதப்பட்ட கருத்து என் கருத்தல்ல. அது எனக்கு உடன்பாடனவை அல்ல என்று அய்யா கையொப்பத்துடன் மறுப்பு விளக்கம் வந்த காரணத்தால், அதை எண்ணி நாம் மிகவும் எச்சரிக்கையுடன் எழுதவும், செயல்படவும் வேண்டும் என்று உணர்ந்து எனது கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றி வந்தேன்.

கூட்டங்களில் அய்யாவை வைத்துக் கொண்டு பேசும் நிகழ்ச்சிகளில்கூட, அவர் நிறுத்துங்கள் என்று தடியைத் தட்டவோ, ஜாடை காட்டிடும் நிலைமையோ எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. மாறாக, சில கூட்டங்களில் மேலும் பேசுங்கள் என்று கட்டளையிட்டு மகிழ்ந்துள்ளார்.

சில, பல செய்திகள் பற்றி தலையங்கங்கள் எழுதுங்கள் என்று சுற்றுப் பயணத்தில் இருக்கும் தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள்; கடிதம் எழுதுவார்கள்; அதுதான் அய்யா தலையங்கமாக அச்சாகி இருக்கிறது. அதையே நான் எழுதியுள்ளேன் என்று பதில் அளித்ததைக் கேட்டு அய்யா மகிழ்ந்துள்ளார்; அதுதான் என் ஆசிரியப் பணிக்குக் கிடைத்த முறையான அங்கீகாரம்!

கவிஞர் கலி.பூங்குன்றன் கேள்விகளுக்கு ஆசிரியர் கி.வீரமணி அளித்த பதிலில்...

(ஆசிரியர் கி.வீரமணி பவள விழா மலர்)

தமிழ் ஓவியா said...

டெசோ சிந்தனை: ஹாங்காங்கும் -ஈழமும்!

ஹாங்காங் என்றால் டைமண்ட் வியாபாரம்தான் எல்லோருக்கும் தெரியும். பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரம் குத்தகைக் காலம் முடிந்து 1997இல் சீனாவசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனாலும் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும். இப்பொழுது அங்கும் ஒரு பிரச்சினை! திபேத்தைப் போல ஹாங்காங்கையும் தன் கைக்குள் கொண்டுவர வல்லரசாகிய சீனா திட்டமிட்டு விட்டது போலும்! ஹாங்காங்கின் உள் விவகாரத்தில் சீனா தன் தலையை நீட்டும் வேலையில் இறங்கியது. ஹாங்காங் கல்விக் கூடங்களில் வரும் செம்டம்பர் முதல் சீனாபற்றிய தேசப் பக்தி வகுப்புகள் தொடங்கப்படத் திட்டமிடப் பட்டுள்ளதாம். இது ஹாங்காங் மாணவர்கள் மூளையிலே சீனக் கலாச்சாரத்தைத் திணித்து மூளைச் சலவை செய்யும் செயல் என்று ஹாங்காங் மாணவர்கள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எந்த ஒரு சிறு இனமாக இருந்தாலும், அதன்மீது மாற்று இனம் தன் மொழி, கலாச்சாரப் பண்பாடுகளைத் திணிக்க முனைந்தால் (அது பெரும்பான்மை உடையதாக எண்ணிக்கையில் இருந்தாலும்) அதனை ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் ஹாங்காங் மக்கள் வீதிக்கு வந்து போராடும் செயலாகும். சீனா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய வல்லரசு நாடாக இருக்கலாம்., அதற்காக அதன் ஆட்டத்தை சின்னஞ்சிறு நகரமான ஹாங்காங் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

இது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். குறிப்பாக இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய தாகும். 1956இல் அங்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சிங்களம் மட்டும்தான் ஆட்சி மொழி என்ற சட்டம் அது. பின்னர் நீதித்துறைகளிலும் சிங்களம் மட்டுமே என்ற நிலை பிறந்தது.

சிங்கள மொழியின் ஆதிக்கம், தமிழ் மொழிக்குரிய உரிமைப் பறிப்பு - இவற்றை எதிர்த்துத்தான் தொடக்கத் தில் ஈழத் தந்தை செல்வநாயகம் போராட்டத்தைத் தொடங்கினார் (1956 ஜூன் 5) அதுவும் காந்தியார் காட்டிய அந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத்தான் தொடங்கினார். அதைக்கூட சிங்கள வெறியர்கள் பொறுத்துக் கொள்ள வில்லை. அடித்துத் துவைத்தனர். சிலரைப் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் தூக்கியும் எறிந்தனர்.

அந்த ரத்தக் களறியோடு நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது பிரதமர் பண்டார நாயகா ஏளனமாகச் சிரித்தார் எதற்காக இப்படி அடி வாங்கிச் சாகிறீர்கள்? சிஙகளவர்கள் கொஞ்சம் முரடர்கள். பேசாமல் கலைந்து செல்லுங்கள். தமிழ் என்றெல்லாம் பேசாதீர்கள், இனிமேல் சிங்களம் மட்டும்தான் ஆட்சிமொழி என்று சொன்னாரே!

அதன்பின் 1987இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்று சரத்தும் சேர்க்கப் பட்டதே - இதுவரை அது நடைமுறைப்படுத்தப்பட்டதா? இந்திய அரசுதான் தட்டிக் கேட்டதுண்டா?

இலங்கையின் இறையாண்மைக்குச் சேதாரம் இல்லாமல் இரு இனங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்று இதோபதேசம் செய்யும் கட்சிகள் - குறிப்பாக மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியினர் இதற்கு என்ன பதிலை வைத்துள்ளனர்?

வரலாறு காட்டும் படிப்பினை பற்றியும் லெனினின் தேசிய இன உரிமைப் பற்றியும் பாடம் நடத்துபவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை என்று வந்தால் மட்டும் ஒதுங்கிக் கொள்வது ஏன்?

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் ஏன் பிரிந்தது? கம்யூனிஸ்டு நாடான செக்கோஸ்லோவேகியா இரு கூறுகளாகப் பிரிய வேண்டிய அவசியம் ஏன்? 15 மாநிலங்களைக் கொண்டு செயல்பட்ட சோவியத்து ஒன்றியம் தனித்தனியாகப் பிரிந்து சென்றது - ஏன்?

இந்த நிலை மற்ற எந்த இன மக்களைவிட இலங்கைத் தீவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்துமே! அவர்களின் தாய்மொழிக்கு ஆட்சிமொழி தகுதி கிடையாது.

சிங்களவர் ஒருவர்தான் அந்நாட்டின் குடியரசுத் தலைவராக வர முடியும் - அதுவும் அவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த ஒரு சார்பு நிலை போதாதா - சிங்களத்திட மிருந்து தமிழ் தனியாகப் பிரிந்து தனி நாடாக மலர்வதற்கு?

செர்பியாவிலிருந்து விடுதலை பெற்றதாக கொசாவா 2008 டிசம்பரில் பிரகடனப்படுத்தியதை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச ஹேக் நீதிமன்றமும் அங்கீகரித்ததே! அதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட உலக நாடுகள் அதனை அங்கீகரித்தனவே!

அதே நிலை கிட்டத்தட்ட இப்பொழுது ஈழத்திற்கு நெருங்கி வந்திருக்கிறது. இந்த வகையில் டெசோ சார்பில் ஆகஸ்டு 12இல் சென்னையில் நடைபெற விருக்கும் மாநாடு - அதற்கான நெருக்கத்தைக் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

தீர்மானம் என்ற ஒன்றுக்கு இடம் இல்லாமலேயே அந்தத் திசை நோக்கி நகர்த்திட சென்னை மாநாடு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. 3-8-2012

தமிழ் ஓவியா said...

மரியாதை இல்லை!

பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

பெரியார்(விடுதலை, 22.6.191973)

தமிழ் ஓவியா said...

தகவல் களஞ்சியம்

உலகில் மிகச்சிறிய கடல் ஆர்ட்டிக் கடல். இதன் பரப்பளவு 54,40,197 சதுர மைல்.
கடல் ஆமை ஒரே நேரத்தில் சுமார் 200 முட்டைகள் இடும்.
சீனாவின் நெடுஞ்சுவர் கி.மு. 214-ல் கட்டி முடிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய விரிகுடா வங்காள விரிகுடா. இதன் நீளம், 2250 மைல். றீ நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும்கருவி அகோ மீட்டர். றீ மனிதனைப்போல் நடக்கும் ஒரே பறவை பென்குயின். றீ நெதர்லாந்து நாட்டின் தேசிய விலங்கு நாய். 4-8-2012