Search This Blog

4.9.14

தொல்காப்பியம் ஓர் ஆரியரால் எழுதப்பட்டதா?அண்ணாவின் கேள்விகளுக்கு தமிழ்ப்புலவரின் பதில்



    அறைகின்றார் அண்ணா
    தமிழ்ப்பண்டிதர்களுக்கு  என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இல்லை. வினாக்கள் கடந்த செப்டம்பர் 1_15, 2012. உண்மை இதழில், தமிழ் இலக்கியங்கள் _ அறைகின்றார் அண்ணா என்னும் தலைப்பில் மறுவெளியீடாக வந்துள்ளது.
    விடையளிக்க விரும்பினேன்
    இவற்றிற்கு அன்றைய தமிழ்ப் பண்டிதர்கள் _ என அழைக்கப்பட்ட தமிழ் புலவர்கள் விடை தந்துள்ளனரா? என, எனக்குத் தெரியாது. ஆனால், இந்த வினாக்களைப் படித்த ஓர் எளிய இன்றைய  தமிழ்ப்புலவன் ஆகிய நான் விடையளிக்க விரும்பி அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

    புரிந்துகொள்ள மாட்டார்களா, புலவர்கள்?
    இந்த வினாக்கள் வாயிலாக அண்ணாவின் தமிழிலக்கிய நுண்மான் நுழைபுலமும்,இ அஃகி, அகன்ற தமிழறிவும் நம் தமிழர்களுக்கு - குறிப்பாக தமிழ்ப் புலவர்களுக்கு விளங்காமற் போகாது.
    மேலும் வளர்த்தாமல், நேரடியாக அண்ணாவின் வினாக்களுக்கு ஒரு தமிழ்ப்புலவன் ஆகிய நான் என் விடைகளைத் தந்துள்ளேன்.

    முதன்மை வினா எண்: 1

    நாம் தமிழர்கள் என ஒப்புக் கொள்கிறோம்.
    விடை
    எதுவும் கிடையாது. தனித்தமிழ்கலைகள் என்பதாக உள்ளவை _ அதாவது இலக்கியங் களையே கலைகள் என அண்ணா சுட்டுகின்றார் _ ஆரியம் கலந்தவை இலக்கியங்களே ஆகும். தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களை வேண்டுமானால் தமிழர்ககுரிய இலக்கியங் (கலை)களாகக் கூறலாம்.
    முதன்மை வினா _ எண்: 2
    தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும்தான் தமிழர் கலைகளா?
    விடை:
    இவை முழுக்க முழுக்க தமிழர்களுக்குரிய தமிழர் கலை (இலக்கியங்)களாகக் கூறமுடியாது.
    முதன் வினா எண்-3
    தமிழ்க்கலைகளின் லட்சணங்கள் என்ன? அவை, தமிழர்ககுப் போதிக்கும் நெறி யாவை?
    விடை:
    தமிழ்க் கலைகள் அதாவது இலக்கியங்கள் இவற்றிற்கென தனி இலக்கணம் (இலக்கணம்) எதுவும் கிடையாது!''
    ஆரியம் கலவாத தமிழிலக்கியங்கள் தனிநிலையில் இருந்தால்தானே அவற்றிற்கென இலக்கம் கூறப்பட்டிருக்கும்?
    இலக்கணமே இல்லை என்கிறபோது,இ கலை தமிழர்க்கு என்ன நெறியைப் போதித்து இருக்கும்? போதித்திருக்க முடியும்? ஒன்றும் இல்லை!
    முதன்மை வினா எண்: 4
    தமிழர்க்கு அறிவைப் போதித்து, தன்மானத்தை ஊட்டி, முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நூல்கள் என்னென்ன உண்டு?
    விடை:
    இவ்வகையில் நூல்கள் அவ்வளவாக இல்லை. அய்யா தந்தை பெரியார் அவர்களின் கருத்தினைப் பார்ப்போமே!
    நமக்குப் பயன்படத்தக்க, நம் வளர்ச்சிக்கு ஏற்ற இலக்கியம் எதுவும் கிடையாது. இருப்பவை எல்லாம் மிகமிக மோசமானவைகளேயாகம்.
    அதாவது, நமக்குப் பயன்படத் கூடியதாகவோ, நம் மக்களை வளர்ச்சியடைச் செய்யக் கூடியதாகவோ, நடப்பிற்கு ஒத்ததாகவோ, வழிகாட்டக்கூடியதாகவோ எதுவும் கிடையாது.
    நம் இழிவைப் போக்கக் கூடியதாகவோ, அறிவை வளர்க்கக் கூடியதாகவோ, நடப்புக் ஒத்ததாகவோ எதுவாகிலும் ஒரு இலக்கியம் இருக்கிறதா? _ என்று உங்களில் யாராவது எடுத்துக்காட்டுங்கள்.
    தமிழில் பெரும் அறிஞர் என்று எல்லோராலும் போற்றப்பட்ட மறைமலையடிகளே தமிழில் நம் வளர்ச்சிக்கான புத்தகங்கள் இல்லை இலக்கியங்கள் இல்லை என்று கூறியுள்ளார்

    _ (பெரியார்: விடுதலை: 21.4.1965)
    ... இருக்கின்ற இலக்கியங்களுள், நீதி வருகின்ற நூல்களுள் சிறந்த நூல் என்று கொள்ளத்தக்கது திருக்குறள் தான்!

     _ (பெரியார்: நூல் _ திருக்குறளும் பெரியாரும்)

    முதன்மை வினா எண்: 5
    தமிழர்தம் கலைகளுள் ஆரியத்தை உயர்வென ஒப்பாத நுல்களோ அவர்தம் கொள்கைகளைப் புகுத்தாத நூல்களோ ஏதேனும் உண்டா?
    விடை:
    அப்படிப் பார்த்தால், எவையும் இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று, ஆரிய வர்ண_ஜாதி வல்லாண்மையை உடைத்து நொறுக்கித் தள்ளும் பிரகடனம் (றிக்ஷீஷீநீறீணீனீணீவீஷீஸீ) ஆக, திருக்குறள் மட்டுமே திகழ்கிறது. ஆகவே, ஆரியம் புகுத்தப்படாத, ஆரியத்தை உயர்வென ஒப்புக் கொள்ளாத நூல்கள் திருக்குறள் ஒன்றைத் தவிர, வேறு எவையும் இல்லை!

    முதன்மை வினா: 6
    தொல்காப்பியம் ஓர் ஆரியரால் எழுதப்பட்டது என்று சொல்வதை நீங்கள் ஒப்புகிறீர்களா? அதில் ஆரியத்திற்கு ஆதரவும், உயர்வும் அளிக்கப்பட்டிருக்கிறதென்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
    விடை:
    ஆம்! நான் ஒப்புக் கொள்கிறேன்.
    தொல்காப்பியர் ஓர் ஆரியர் (பார்ப்பனர்) என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் மொழிஞாயிறு _ ஞா.தேவ நேயப்பாவாணர் அவர்கள்.

    தொல்காப்பியர் பல இடங்களில் தவறினதற்குக் காரணம் அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. _(பாவாணர்:நூல்: ஒப்பியன் மொழிநூல்_பக்கம்: 82)
    தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினி என்பதாலும், தந்தை ஜமதக்னி முனிவர் என்பதா லும், தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக் களாலும் தொல்காப்பியர் ஆரியரே! என்று துணியப் படும். _ (பாவாணர்: நூல்: ஒப்பியன் மொழி நுல். _ பக்கம்: 73)
    தொல்காப்பியத்தில் ஆரியத்திற்கு ஆதரவும், உயர்வும் அளிக்கப்பட்டிருக் கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
    தொல்காப்பியத்துள், திருமால் (மாயோன்), முருகன் (சேயோன்), இந்திரன் (வேந்தன்), வருணன் போன்ற பல கடவுள், பல தேவர் வணக்கங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
    மேற்பிறப்பு (ஜாதி), கீழ்ப்பிறப்பு (ஜாதி) ஜாதிப்பாதுகாப்பு இவை அந்நூலில் பொதிந்துகிடக்கின்றன.
    ஆரிய வர்ண ஜாதித் தத்துவம் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
    பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ண முறை கூறப்பட்டுள்ளது. இவை, அந்தணர், அரசர், வணிக, வேளாளர் என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
    பார்ப்பனராகிய அந்தணர் (பிராமணர்)க்குரிய கோலங்கள் மிகத் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன.
    நூலே,கரகம், முக்கோல் மணையே ஆயுள் சாலை அந்தணர்க்குரிய _ (தொல்காப்பியர்: சூத்திரம்: 1572)
    அந்தணராகிய பார்ப்பனருக்கு, நூல் (பூணூல் அல்லது உபநயனம்), களுகம் (கமண்டலம்), முக்கோல் (திரிதண்டம்) மணை _ (ஆசனப்பலகை), இவை உரியவையாகக் கூறப்பட்டுள்ளன.
    வணிகர் என்பார் வடமொழி வேத _ மனு நீதி முறைப்படி வைசிகன் (வைஸ்யன்) என்கிறார்.
    வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை _ (தொல்கா: சூத்திரம்: 1578)
    என்று வெளிப்படையாக சூத்திரம் செய்திருக்கிறார்.
    இனி, தொல்காப்பியச் செய்திபற்றி, தந்தை பெரியாரின் கருத்தை மேற்கோளாக் காட்டுகிறேன். தொல்காப்பியத்தில்தான் என்ன இருக்கிறது? அதிலும் நாலுஜாதி; அந்த நாலுஜாதியில் நம்மைத்தான் கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணங்கள் கீழோர்க்கு.... என்ற பாடலைப் பார்த்தாலே போதுமே!

    _ (பெரியார்: விடுதலை: 4.10.1967, பக்கம்:2)
    இத்துணை சான்றுகள் மிக வலிவானவையாக இருக்க இவை இல்லை என்று நாம் எப்படி மறுக்க முடியும்? மறுத்தால், குன்றுமுட்டிய குருவியின் இரங்கத்தக்க நிலைதானே எமக்கு ஏற்படும்?
    முதன்மை வினா எண்: 7
    சங்க இலக்கியங்கள் பலவற்றில் ஆரியக் கொள்கைகள் புகுத்தப்பட்டிருக்க வில்லையா?
    விடை:
    ஆம்! புகுத்தப்பட்டிருக்கின்றன. இதனை எவரும் மறுக்க முடியாது. சங்க இலக்கியங்கள் பற்றி மொழி ஞாயிறு பாவாணர் கருத்துகளைப் பார்ப்போம். கடைக் கழக (சங்க) நூல்கள் முப்பத்தாறனுள் ஒன்றாவது, கலைபற்றியதன்று; பாவியமும் அன்று.

    அவற்றுள், ஆசாரக் கோவையோ வடநூல் மொழிபெயர்ப்பாயும் பிறப்பில் உயர்வு _ தாழ்வு வகுப்பதாயும் எளிய பொருள்களைக் கூறுவதாயும் உள்ளது. _ (பாவாணர்: நூல்: ஒப்பியன் மொழிநூல் _ பக்கம் 194-_195.)
    சங்க இலக்கியங்கள் மனுநீதியைப் போற்றுதல், யாகங்கள் செய்தல், பாரத இராமாயணக் கதைகளைப் பரப்புதல் இவற்றைப் பணிகளாகக் கொண்டிருந்தன.
    எடுத்துக்காட்டுகள்:
    பல்யாக சாலை முதுகுடுமிப்பெருவழுதி; இராசசூய வேட்ட பெறுநற்கிள்ளி இவர்கள் வேத வேள்விகள் புரிந்த செய்திகள் கூறப்பட்டுள்ளன. அன்றியும், சங்க இலக்கியங்களாகக் கருதப்படும் புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலானவற்றுள்.

    முருகன் பிறப்பு, திருமால் பெருமை, இராமன், சீதை, பரமன், சிவன், இந்திரன், அகலிகை கதை முதலான இதிகாசப் பெயர்களும் கதைகளும் தங்குதடையின்றி, தாராளமாக வழங்கப்பட்டுள்ளன.
    சார்பு வினா: (1)
    தமிழ்க்கலைகளில் ஆரியத்திற்கு இடமிருக்கலாமா?
    விடை:
    கூடாது, கூடாது, கூடவே கூடாது.
    சார்பு வினா: (2)
    அவற்றைப் போக்க நீங்கள் ஏதேனும் முயற்சி செய்ததுண்டா? முயல்வீர்களா?
    விடை:
    எந்த முயற்சியும் பெரும்பாலான தமிழ்ப்புலவர்கள் செய்ததில்லை; செய்கிறதுமில்லை; செய்வதுமில்லை.

    இதுபற்றி, அய்யா பெரியார் கூறவதைப் பார்ப்போமா?
    தமிழ்ப் புலவர்கள் தமிழை ஒரு, நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். இன்றும், வடமொழிக் கதைகள், கற்பனைகள், ஆபாசங்கள் புகுத்தப்பட்ட இலக்கியங்கள் பேராலேயே தமிழ்ப்புலவர்கள் ஆகின்றனர்; வித்துவான்கள் ஆகின்றனர்; டாக்டர் _ ஆகின்றனர்.
    .... உலகில், வேறு எங்குமே இல்லாத அதிசயப் பிறவிகள் நம், புலவர்கள்!

     _ (பெரியார்: விடுதலை: 12.4.1965)
    முதன்மை வினா: 8
    தமிழ் எழுத்துடைய நூல்கள் தமிழரால் எழுதப்பட்ட நூல்கள் யாவும் தமிழ்க்கலை களாகுமா?
    விடை:
    ஆகாது.
    சார்ப் வினா ( 1 )
    ஷேக்ஸ்பியர் நாடகத்தை, ஒரு தமிழர் தமிழில் மொழிபெயர்த்தால் அது தமிழ்க்கலையாகுமா?
    விடை:
    ஆகாது.
    சார்பு வினா (2)
    அதேபோல், கிறிஸ்து, இஸ்லாம் ஆகிய பிறமதக் கொள்கைகளைத் தமிழில் மொழி பெயர்த்தால் அவை தமிழர் மதமாகுமா? இலக்கியமாகுமா?
    விடை:
    ஒருக்காலும் அவை, தமிழர் மதமும் ஆகாது! இலக்கியகுமாகாது!
    சார்பு வினா(3)
    இல்லையெனில், ஆரிய மதம் கொள்கைகளையும் உணர்த்தக் கூடியதும், அதனோடு தமிழரை இழித்தும் பழித்தும், கூறக்கூடியதுமான புராண இதிகாசங்களைத் தமிழ்க் கலைகள் என்னலாமா?

    விடை
    அவற்றைத் தமிழ்க்கலைகள் என்று கூறவே கூடாது.
    சார்பு வினா:(4)
    அவை, இந்த முறையில் எழுதப்பட்டதன்று என்பதையாவது நிரூபிக்க முடியுமா?
    விடை
    நிரூபிக்கவே முடியாது! ஒரே ஓர் எடுத்துக்காட்டு:
    தன் ஆட்சியில் (இராமன் ஆட்சி) உள்ள குடிமகன் ஒருவன் (சம்பூகன்) பார்ப்பனனைக் கடவுளாக வணங்காமல் கடவுளை நேரில் வணங்கிப் பயன்பெற முயற்சித்தான் என்று அவனைத் துண்டு துண்டாக வெட்டிச் சித்திரவதை செய்தானே;

    _ (பெரியார் _ விடுதலை 10.3.1968)

    நிலைமை இவ்வாறிருக்க, புலவர்கள் ஆரியத்தை உயர்த்தியும் தமிழரை இழித்தும் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியை இல்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்? முடியாது.

    முதன்மை வினா: 9
    தமிழர்க்குக் கொள்கை என்ன? சைவமும் வைணவமும் சாதியாச்சாரமும்தானா?

     விடை

    தமிழர்க்கு என்கிறபோது, தொல்காப்பியர் காலம்; சங்க காலம், காவிய காலம், களப்பிரர் காலம், பக்திநெறிக் காலம் முதலான பல நிலைகள் உள.
    இவற்றுள், எந்தக் காலத் தமிழர்க்கு என்ன கொள்கை எனத் தெரியாது!
    வரையறைக்கப் படவுமில்லை. சைவமும் வைணவமும் சாதியாச்சாரமும்தான் இடைக் காலத்தில் தமிழர் கொள்கையாக இருந்துள்ளது.

    சைவத்தில் நந்தனார் தாழ்த்தப்பட்டோர், திருநீலகண்டர் குயவர். வைணவத்தில் திருப்பாணழ்வார் தாழ்த்தப்பட்டவர், திருவரங்கம் பெரிய கோயிலுள் நுய முடியாமலும் ஜாதியாசாரத்தால் பேணப்பபட்டவர்கள்.
    சார்பு வினா ( 1 )
    அவற்றிற்கு ஆதாரம் என்ன? பெரிய புராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள்; நாலாயிரத் திவ்யப் பிரப்ந்தம் முதலான சைவ, வைணவ பக்திப் பனுவல்கள். அவற்றிற்கான ஆதரங்கள் ஆம்!
    சார்பு வினா ( 2 )
    அவற்றைப் பற்றிய கொள்கைகளை வலியுறுத்தும் நூல்கள் தமிழர்க்குக் கலைகள் ஆகுமா?
    விடை:
    ஆகமாட்டா!

    முதன்மை வினா எண்: (10)
    தமிழரை இழிவுபடுத்தக்கூடியதும் தமிழரின் தன்மதிப்பைப் போக்கக் கூடியதும், தமிழர்தம் அறிவை மாய்க்கக் கூடியதும், தமிழரை மூடநம்பிக்கையில் அ:ழ:ததக் கூடியதும் தமிழர்க்கு அடிமை நிலையையே சதம் எனப் போதிக்கக் கூடியதும், தமிழரை,இ தமிழரல்லாத ஒரு வகுப்பினருக்கு வேசி மகனாக இருக்க வைப்பதும் ஆகிய நூல்கள் தமிழ்க்கலைகளா? இல்லை எனில், அவற்றை ஒழிப்பதில் நீங்கள் ஏன் குறுக்கிடுகிறிர்கள்?
    விடை:
    மேல்குறிப்பிட்ட அடிப்படையில் எபந்த நூல்கள் உறுதியாகத் தமிழ்க் கலைகள் அல்லவே அல்ல! அவை, ஆரியக் கலைகள். இவற்றை ஒழிப்பதில், ஏன் தமிழ்ப் புலவர்கள் ஏன் குறுக்கிடுகிறார்கள்? என்றால், எல்லாம் ஆரிய மாயைதான்! பார்ப்பனிய _ பக்தி _ மோட்ச, புண்ணிய மோகம்தான்! அவற்றால், அவற்றைப் பரப்புவதால் வரும் ஆதாயம்தான்! செல்வாக்குதான்! சற்சூத்திரப் பட்டப் போதைதான்! சைவ _ வைணவ சமய வெறிதான்! வேசிமகன் _ என்கிற இன இழிவு,இ சூத்திரன் என்கிற இரிவு பற்றியெல்லாம் இவர்கட்கு கவலை இல்லை! சிவபதம், வைகுந்தபதம் அடைவதே இத்தகையோரின் இன்றியமையா நோக்கம்.


    ------------------------------பேரா.புலவர் ந.வெற்றியழகன் ”உண்மை”  நவம்பர் 16-30  2012  இதழில் எழுதிய கட்டுரை

    35 comments:

    தமிழ் ஓவியா said...


    கேரள ஆளுநர் பி. சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்தும் - பாராட்டும்!


    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணி செய்து, ஓய்வு பெற்ற நிலையில், ஜஸ்டீஸ் திரு. பி. சதாசிவம் அவர்கள், கேரள ஆளுநராக மத்திய அரசால் நியமிக் கப்பட்டிருக்கிறார்.

    இவரது இந்த நிய மனம் பெரிதும் வரவேற் கப்பட வேண்டிய ஒன்று ஆகும். ஒரு தமிழர் - அதுவும் பெரியார் மண் ணிலிருந்து இந்தப் பொறுப்பை- வைக்கம் போராட்டம் நிகழ்த்திய மண்ணுக்கு ஆளுநர் ஆகப் பொறுப் பேற்கிறார் என்பது, அரசியல், மற்ற விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு மகிழத்தக்கதே ஆகும்!

    இதற்கு முன் தமிழ்நாட்டு ஆளுநராக கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற செல்வி பாத்திமா பீவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளாரே!
    அதுபோலவே காஷ்மீர் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார்!
    எனவே முன் மாதிரிகளும்கூட இருந்துள்ளன. அரசியல் சட்டரீதியாக இந்த நியமனத்திற்கு எதிரான பிரிவுகள் ஏதும் இல்லை.

    மற்றொன்றும்கூட சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஆளுநர்கள் ஒரு மாநிலத்தில் இல்லாதபோதோ, அல்லது தற்காலிகமாக அப்பதவி காலியாக உள்ள போதோ, ஆக்டிங் கவர்னராக - பொறுப்பு ஆளுன ராக, அந்தந்த மாநில தலைமை நீதிபதிகள் (சிலீவீமீயீ யிவீநீமீ) தானே பொறுப்பேற்கின்ற நடைமுறை சட்ட ரீதியாக உள்ளது.

    எனவே, இதைப்பற்றி சர்ச்சைகள்பற்றிக் கவலைப் படாமல், ஜஸ்டீஸ் திரு சதாசிவம் அவர்கள் அப் பதவியில் அமர்ந்து தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவார் என்று நாம் நம்பி, பாராட்டுதல் களையும், நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

    சென்னை தலைவர்
    5.9.2014

    Read more: http://viduthalai.in/e-paper/87124.html#ixzz3CRpuJ8Iw

    தமிழ் ஓவியா said...


    ஆஸ்திரேலியாவிலிருந்து பரோல் முடிந்து திரும்பும் நம் கடவுள்கள்!


    ஆஸ்திரேலியாவிலிருந்து அரியலூர் ஸ்ரீபுரந்தான் கோவிலில் இருந்த 1050 ஆண்டு பழமை வாய்ந்த நடராஜர் சிலை 2006-இல் திருட்டுப் போனது.

    இதன் மதிப்பு 31 கோடி ரூபாயாம்! அதே போல விருத்தாசலத்தில் உள்ள விருத்த கிரீஸ்வரர் கோவில் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றொரு சிலை- இதன் மதிப்பு 3 கோடி ரூபாயாம்!

    தமிழக கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட இந்த சிலைகளை சுபாஷ் சந்திரகபூர் என்ற வடநாட்டுப் பேர் வழி, ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றுக்கு பல கோடிக்கு விற்பனை செய்ததாக தெரிய வந்ததாம்!

    நமது சிலை திருட்டு தடுப்புக் காவல்துறை பிரிவினர் அங்கே சென்று கண்டுபிடித்து, ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குப் புகார் கூறியபின், அவ்வரசின் மூலம் ஆஸ்திரேலியா வந்துள்ளது. இப்போது ஆஸ்திரேலிய பிரதமர், புதுடில்லியில் நமது பிரதமரிடம் பத்திரமாக ஒப்படைக்கவிருக்கிறாராம்!

    பிரதமர் அமைச்சர்கள் மட்டும் வெளி நாடுகளுக்குச் சென்றால் போதுமா? காலங் காலமாக காராக்கிரகத்தில் வவ்வால் புழுக்கை நாற்றத்தில் அடைந்து கிடக்கும் நம் கடவுள், கடவுளச்சிகளும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வர வேண்டாமா?

    அதனால்தான் அரியலூர் நடராஜப் பெருமானும், விருத்தாசலம் கடவுளும் ஆஸ்திரேலியா பயணமாகி விட்டனர் போலும்!
    ஆஸ்திரேலியப் பிரதமரான வெள்ளைக் காரர் நம் ஹிந்து கடவுளர்களை மிக பத்திர மாகக் கூட்டி வந்து, நீங்கள் ஜப்பானிலிருந்துத் திரும்பி சென்று வந்துள்ளீர்கள்;

    நீங்கள் வணங்கும் கடவுள்களோ, எங்கள் நாட்டு அருங்காட்சியகத்தில் 8 ஆண்டுகள் வாசஞ் செய்து விட்டு, சுகம் அனுபவிக்கிறார்கள் அபிஷேகம் - அப்படி இப்படி என்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக இருந்து விட்டு - இப்போது சொந்த நாடு திரும்பி யுள்ளனர் - எனது துணையோடு என்று சொல்லாமற் ஆஸ்திரேலியப் பிரதமர் சொல்லக் கூடும்!

    நம்ம கடவுள்களின் சக்தியே சக்திதான்! எப்படியும் சிலை தடுப்புக்கும், திருடிய பொருளை மீட்பதற்கும் மனித உதவி, காவல் துறையினர் உதவி தானே தேவைப்படுகிறது?

    கடவுளை மற, மனிதனை நினை என்றாரே பெரியார் - அதன் பொருள் இப்போதாவது விளங்குகிறதா?

    இவ்வளவு பத்திரமாக பெரிய மதில் சுவர்கள் நெடுங் கதவுகள், பூட்டுப் போட்ட நிலை எல்லாம் இருந்தும் சிறையில் இருந்த சர்வ சக்தி(?)க் கடவுளர்கள் திருடப்பட்டு ஆஸ்தி ரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டு - பரோல் முடிந்து திரும்புவதுபோல திரும்புகின்றனரே, பலே, பலே நாம் இதற்கொரு சம்ப்ரோட்சண உத்சவம் நடத்திக் கொண்டாட வேண்டாமோ? முன்பு சிவபுரத்து நடராஜர் திரும்பினார்.

    இப்போது அரியலூர் நடராஜர் பரோல் முடிந்து பத்திரமாக ஊர் திரும்பியுள்ளார்.

    ஆனால், ஒரே ஒரு வருத்தம் தான்! போயும் போயும் இந்த மிலேச்சர் வெள்ளைக்காரனான ஆஸ்திரேலியாக்காரனோடா நம்ம ஆபத் பாந்தவன், அனாதைரட்சகன், சர்வ சக்தி நடராஜன் திரும்புவது; நமக்கு தோஷ மில்லையா எப்படி தோஷம் கழிப்பது?

    இராம. கோபாலய்யரை அல்லது வழக்கு புகழ் காஞ்சி மட ஆதிபதிகளையோ கேட்டு முடிவு செய்தால் நன்னா இருக்கும்! இல்லையா?

    Read more: http://viduthalai.in/e-paper/87122.html#ixzz3CRqGWWLH

    தமிழ் ஓவியா said...


    யார் இந்த வ.உ.சி.?


    சுதந்திரத்துக்காக யார் யார் எல்லாமோ பாடுபட் டார்கள்; பாடுபட்ட பலரும் பிற்காலத்தில் பெரும் பதவிப் பல்லக்கில் பவனி வந்தனர். தன் தியாகத்துக்காக கிண்டி ஆளுநர் தோட்டத்தையே தியாகி மானியமாகக் கேட்ட ராஜாஜி போன்றவர்கள் அனுபவிக்காத பதவிகளா? (குங்குமம் 7.4.2000)

    வெள்ளையனே வெளி யேறு இயக்கத்தின்போது அதற்கு எதிராக நின்றதால் ஆகஸ்டுத் துரோகிப் பட்டம்! அவரைத் தேடிச் சென்றது - ஆனாலும் வெள்ளையன் வெளியேறிய சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் அவரே! என்ன செய்வது! அவர் தோளில் பூணூல் தொங்கியதே! ஆனால் இரட்டை ஆயுள் தண்டனை (40 ஆண்டுகள்) பெற்ற தமிழன் வ.உ. சிதம்பரனாரை எத் தனைப் பேர் நினைத்து பார்க்கிறார்கள்? அவரின் பிறந்த நாள் இந்நாள் (1872).

    சிதம்பரனாருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி ஏ.எஃப் பின்ஹே கூறிய வாசகங்கள் கொடுமையா னவை என்றாலும் - அவை ஒரு வகையில் வ.உ.சி.யின் வீரத்திற்கும், தீரத்திற்கும், தியாகத்திற்கும் காலத்தைக் கடந்து கட்டியம் கூறிக் கொண்டு தானிருக்கும்.

    வ.உ. சிதம்பரம் பிள்ளை வெறுக்கத்தக்க மிகப் பெரிய ராஜதுரோகி! மேன்மை தங்கிய மன்னர் பிரானின் பிரஜைகளில் இந் தியர் - ஆங்கிலேயர்களுக் கிடையே பகைமையையும், வெறுப்பையும் விதைப்பவர். அவருடைய எலும்புகள்கூட சாவிற்குப் பிறகு ராஜ துவே ஷத்தைப் பரப்பும்! என்று தீர்ப்பில் சொன்னார் என்றால் வ.உ.சி.யின் தீரம் எத்தன் மையது என்பது எளிதில் விளங்கும்.

    பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்ட (7.7.1908) அந்தஅரிமா அதற்குப்பின் கோவை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அந்தச் சிறை யில் செக்கிழுக்க வைத்தனர்.

    அந்த மாவீரன் சிறையி லிருந்து வெளியேவந்த போது அவரை வரவேற்க வந்தவர்கள் வெறும் 5 பேர்கள் தான்!

    என்ன கொடுமையடா இது! கடைசிக் காலத்தில் வறுமைத் தேள் கொட்டக் கொட்ட தன் அன்றாட வாழ்வுக்கே அல்லற்பட்டார்! மண்ணெண்ணெய்க் கடை வைத்திருந்தார்; சென்னை யில் லோன் ஸ்கொயரில் அரிசிக் கடையும் வைத்தார்; அதுவும் நட்டத்தில் முடிந்தது.

    பிற்காலத்தில் சுய மரியாதை இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு தந்தை பெரியார் அவர்களின் உற்ற நண்ப ராகவும் விளங்கினார் சுய மரியாதை மாநாடுகளில் எல்லாம் கர்ச்சித்தார்.

    வ.உ.சி.யைப்பற்றி தந்தை பெரியார் சொல்கிறார்: என்னை வ.உ.சி. அவர்கள் தலைவர் என்று சொன்ன தற்காக நான் மிகுதியும் வெட்கப்படுகிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது, தலைவராக இருந்து நடத்திய பெருங் கிளர்ச்சி யின்போது நான் உல்லாசத் துடன் விடலைப் புருஷ னாய் விளையாடிக் கொண் டிருந்தேன்.

    அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன் (குடிஅரசு 26.6.1927) என்று கோயில்பட்டி திராவிடர் கழக ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசினார்.

    - மயிலாடன்

    குறிப்பு: 1944இல் திரா விடர் கழகம் தோன்றியது என்றாலும் கோயில்பட்டியில் திராவிடர் கழகத்தின் 18ஆம் ஆண்டில் பங்கேற்ற வரலாறு நோக்கத்தக்கது.

    Read more: http://viduthalai.in/e-paper/87119.html#ixzz3CRqj2gZe

    தமிழ் ஓவியா said...


    தமிழ்நாட்டில் தமிழில் வழிபாடு


    தமிழில் கல்வி, தமிழிசை, தமிழில் நீதி என்றெல்லாம் இன்னும் முழு மூச்சாக முயற்சிக்காமல், வழிபாட்டில் தமிழ் என சிலர் ஊடுருவ முனைந்துள்ளனர் என திரு லா.சு. ரங்கராஜன் என்பார் அவர்கள் வழக்கமான பாணியில் தினமணியில் (20.10.2012) கட்டுரை வரைந்துள்ளார்.

    ஒரு சிலருக்கு வரும் வரும்படி பாதிக்குமேயெனக் கருதி தமிழில் வழிபாடு என்பது அவருக்கு ஊடுருவல் போலத் தோற்றமளிக்கின்றது. தமிழ்நாட்டில் தமிழ் கூடாதோ! இனி திருக்கோயில்கள் தோறும் தமிழில் மட்டுமே வழிபட வேண்டும் என இறைவன் திருமறைக்காட்டில் திருவிளை யாடலைத் தொடங்கினான்.இச்செய்தியை தினமணி அப்போதே வெளியிட்டது.

    எல்லாவற்றிற்கும் அய்ரோப்பாவை உதாரணம் கூறுவோரே, அங்கே லத்தீன் மொழி வழிபாட்டை தூக்கி எறிந்து அவரவர் தாய்மொழி வழிபாட்டை நடைமுறைப் படுத்திய வரலாறு மறந்து போனது ஏன்? உலகில் எல்லா நாடுகளிலும் அவரவர் தாய்மொழி மூலம் தானே வழிபாடு, கல்வி, ஆட்சி நடைபெறுகின்றது.

    மேலும், கி.மு. 1500 வாக்கில் இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினர், பன்னிகு திருமுறை, சிவஞானபோதம் போன்றவற்றை தம் மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டு பின் நாளில் மொழி பெயர்ப்புதான் மூலம் என கதைத்த வரலாற்றை தமிழ்ப் பேரறிஞர் திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம் தனது தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் (14 தொகுதிகள்) விரிவாக விளக்கி விட்டாரே!
    தமிழனுக்கு தமிழில் வழிபாடு செய் கின்ற எண்ணம் கூடாதா? அது என்ன தவறா? இறைவனே விரும்பி தமிழ் வழிபாடு வேண்டும் எனக் கூறியதாக பெரிய புராணத்திலேயே உள்ளதே!

    - பெ. சிவசுப்பிரமணியன்
    ஆட்சி அலுவலர் (ஓய்வு)./ தலைவர்
    தாயுமானசுவாமி தமிழ்வளர்ச்சி மன்றம்,
    சென்னை - 600 081

    Read more: http://viduthalai.in/page-2/87143.html#ixzz3CRrWo8xV

    தமிழ் ஓவியா said...

    போலிக் கடவுள்கள்

    இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உள்ள விக்கிரகங்களில் பெரும்பாலானவை உண்மையானவை அல்ல; போலிகளேயாகும். பணத்திற்கு ஆசைப்பட்டு, பல்வேறு புராதன விக்கிரகங்கள் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்டு வருவதால், தற்போது கோயில் களில், நாம் வணங்கும் பல்வேறு கடவுள்களின் சிலைகள் போலிகளே!

    விக்கிரகங்களைக் கடத்துபவர்கள் அசல்போலவே காட்சி அளிக்கும் போலி விக்கிரகங்களை நிர்மாணித்து விட்டுச் சென்று விடுவதால் அந்த விக்கிரகங்கள் மீது எவருக்கும் சந்தேகம் வருவதில்லை.

    விக்கிரக திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலத்தைக் கொண்டே, இன்னின்ன கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் போலியானவை என்று பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது.

    சமீபத்தில் சர்ச்சைக்குட்பட்ட சிவபுரத்து நடராசன் விக்ரகம் தமிழகத் திலிருந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு, 15 ஆயிரம், 5 லட்சம், 35 லட்சம் என்று 3 பேர் கை மாறி, கடைசியில் ஒருவரால் 75 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டது.

    அவ்வளவு மதிப்பு வாய்ந்த நடராசன் விக்கிரகம் களவு போன விஷயமே 7 ஆண்டுகளுக்குப் பின்னரே நமக்குத் தெரியவந்தது. சென்னை நகர சி.அய்.டி. போலீஸ் சூப்ரின் டெண்டன்ட் கே.வி.ஞானசம்பந்தம் ஒரு கருத்தரங்கில் வெளியிட்ட விவரமே இவை.

    (ஆதாரம்: 8.12.1975, தினமணி, 2ஆம் பக்கம்)

    Read more: http://viduthalai.in/page-7/87114.html#ixzz3CRscrN8x

    தமிழ் ஓவியா said...

    தந்தை பெரியார் பொன்மொழி

    மனிதனுடைய எண்ணம் விரிவடைந்து முன்னேறிக் கொண்டு போவதே இயற்கையாய் இருப்பதால், முற்போக்குக்கு அவசியமான மார்க்கங் களைக் கைப்பற்றவும் கண்டுபிடிக்கவும் முயலவேண்டும்.

    Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRt7ugpm

    தமிழ் ஓவியா said...

    சமூகப் புரட்சி

    ஒரு பெரிய சமூகப் புரட்சி உண் டாகாமல் அபேதவாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும். ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர்வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்க ளுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

    வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள். ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேத வாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

    - டாக்டர் அம்பேத்கர்

    Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRtJPMVz

    தமிழ் ஓவியா said...

    முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்

    Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRtQSDdr

    தமிழ் ஓவியா said...

    கோயில் பெருச்சாளிகள்

    தினசரி சிறீரெங்கநாத சாமி கோயிலில் 6 கால பூஜை நடக்கிறது. பொங்கல், புளியோதரை, ததிஅன்னம், வடை, அதிரசம், தேன்குழல், தோசை, பாயாசம், சுக்கு நீர், இவைகள் படைக்கப்படுகின்றன. பூஜை முடிந்தவுடன் மேற்படி ஸ்தலத்தார் (பட்டர்கள் 4, அண்ணங்கார் 2, ஜீயர்கள் 2, ஆக 8 பேர்) திரைபோட்டுக் கொண்டு பங்கு பிரித்துகொள்ள ஒரு மணி நேரம் ஆகிறது.

    முன்னாள் மடாலய அமைச்சர் வெங்கடசாமி நாயுடுவிடம், ஆர்.ராஜகோபாலய்யங்கார் என்ற பார்ப்பனர் கொடுத்த புகார் மனு இது.

    ஆதாரம்: 6.11.1954, விடுதலை

    Read more: http://viduthalai.in/page-7/87116.html#ixzz3CRtgYpEk

    தமிழ் ஓவியா said...


    நிரந்தர விரோதி

    நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
    (குடிஅரசு, 13.4.1930)

    Read more: http://viduthalai.in/page1/86927.html#ixzz3CRuSUl9q

    தமிழ் ஓவியா said...


    தேனினும் இனிய விடுதலை


    22.8.2014 நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை. அவை பாதுகாக்கப்பட வேண் டிய பாதுகாப்புப் பெட்டகமாகவும், கருத் துக் கருவூலமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக

    1) ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமையினை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வலி யுறுத்தி தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை மற்றும் கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!

    2) நம்ம தியாகராயர் நகர்! - கோவி. லெனின் அவர்கள் எழுதிய கட்டுரை.

    3) 375-ஆம் ஆண்டில் சென்னை நகரம்! - தலையங்கம், கைவல்யம் நாள் (22.8.1877).

    4) சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் அல்ல - மதப்போராட்டமே என்று சொன்னவர் தந்தை பெரியார்! என் கின்ற அரிய என் போன்ற இளைஞர் களுக்கும் - மாணவர்களுக்கும் புதிய தகவலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாரி வழங்கிய பல வரலாற்றுத் தகவல்கள்.

    5) மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடைமுறைகள்!

    6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; புத்தர் அறிவுரைகள், தந்தை பெரியார் பொன்மொழி மற்றும் தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை, மருத்துவம் வென்றது, விடை என்ன? என்ற தலைப்பில் ஆத்திகவாதிகளுக்கு அடுக்கடுக்கான அர்த்தமுள்ள கேள்விகள் ஆகியவை மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.

    7) மேலும், சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம் - நடைப்பயணம்! நடைப்பயணம் மேற் கொண்ட கழக முன்னோடிகள் - தோழர்கள் ஆகியோர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பும், தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவிலும் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படங்கள் கண்களைக் கவர்ந்தன.

    8) இறுதியாக, நாளைய தலைமுறைக் கான நாற்றங்கால் - பெரியார் 1000! போன்ற எண்ணற்ற பயனுள்ள செய்திகள் இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் விருந்தாக வும் அரு மருந்தாகவும் அமைந்தது.

    இவ்வாறு தேனினும் இனிய செய்தி களைத் தாங்கி பல வண்ணங்களுடனும், பகுத்தறிவு எண்ணங்களுடனும் நாள் தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட் டினை இளைஞர்களும் - மாணவர்களும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ் கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.

    வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

    - சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

    Read more: http://viduthalai.in/page1/86924.html#ixzz3CRufCWbD

    தமிழ் ஓவியா said...


    பற்களில் கறை போக்க...


    என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

    பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

    இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

    கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

    பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்

    பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.

    மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.

    மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.

    ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.

    நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.

    Read more: http://viduthalai.in/page1/86882.html#ixzz3CRvKqo3y

    தமிழ் ஓவியா said...


    நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


    நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.

    பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.

    ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.

    இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.

    பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.

    நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

    எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.

    பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
    நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.

    நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.

    சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.

    Read more: http://viduthalai.in/page1/86883.html#ixzz3CRvVQz1K

    தமிழ் ஓவியா said...

    நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்

    எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

    செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ் டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
    மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

    பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

    சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தைத் தொடர்ந்து 7 நாள்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும்.

    எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

    Read more: http://viduthalai.in/page1/86883.html#ixzz3CRvedmQN

    தமிழ் ஓவியா said...

    இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று சுப்பிரமணியசாமி சொல்லுவதா?


    சுப்பிரமணியசாமிகளை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

    தமிழக மீனவர்களை விடுவிக்கலாம்; ஆனால் அவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று கூறும் சுப்பிரமணிய சாமிகளைத் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

    தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமே மீன்பிடித் தொழிலாகும். அவர்கள் கடலில் சென்று தம் தொழிலை மிகப் பெரிய சூறாவளி, கடல் சீற்றம் - இவைகளை யெல்லாம் பொருட்படுத்தாது, தம் வாழ்வைப் பணயம் வைத்து மேற்கொண்டு வரும் இத்தொழிலையே செய்ய இயலாத வகையில், சிங்களக் கப்பற்படையினராலும், ஆதரவு காட்ட வேண்டிய நமது கடலோரக் கப்பற் படையினராலும் பல்வேறு இடையூறுகளையும் இடை யறாது சந்தித்து வருகின்ற அவலம் அன்றாடத் தொடர் கதையாகியுள்ளது.

    முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியால் சாதிக்க முடியாததை தாம் சாதித்துக் காட்டப் போவதாக மார்தட்டிய பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், எந்தப் பெரிய மாறுதலும் இன்றி அவர்களது வேதனையான வாழ்வுக்கான கெடுபிடிகளும், சிறை வாசங்களும், படகுப் பறிப்புகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

    ஒரு சிலரை விடுதலை செய்து வித்தை காட்டியது இராஜபக்சே அரசு.

    யார் இந்த சுப்பிரமணியசாமி?

    இந்த நிலையில் தமிழ் இன விரோதி சுப்பிரமணிய சுவாமி என்ற பார்ப்பனர், பா.ஜ.க.வுக்குள் புகுந்து கொண்டு தான் தான் ஏதோ இலங்கை அதிபர் இராஜபக்சேவையே வழி நடத்துபவர்போல பீற்றிக் கொள்வதோடு, பகிரங்கமாக மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசியும், பேட்டி கொடுத்தும் வருகிறார். இவருக்கு மத்திய ஆட்சியில் அளிக்கப் பட்டுள்ள அதிகாரம் - தகுதி என்ன என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கையின் மீன் வளத்தைச் சுரண்டுவதாகவும், அவர்களின் படகுகளை (61 படகுகள்) இலங்கை அரசு அவர்களிடம் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்றும் தான்தான் ராஜபக்சே அரசுக்குக் கூறியதாகவும், இவர்கள் கொழுத்த பணக்காரர்கள் என்றும் ஏதோ வாயில் வந்தபடி உளறிக் கொட்டியுள்ளார்.

    இதை பிரதமர் மோடியும், வெளி உறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜும், அமைச்சரவையில் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.

    தமிழ்நாட்டு பிஜேபி தலைவர் மறுக்கிறார்

    பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டுப் பிஜேபி தலைவர் சொல்லுவது எனக்கு ஒரு பொருட்டல்ல; மத்திய அமைச்சர் யாராவது அப்படி சொல்லியிருக்கிறார்களா என்று ஆணவத்தோடு பதில் சொல்லியுள்ளார் இந்த சாமி (தமிழ்நாடு பிஜேபியின் புதிய தலைவர் இதில் இழையோடும் உணர்வைப் புரிந்து கொண்டால் சரி!) அந்தப்படி இருக்கையில், மத்திய அரசு சு.சுவாமிகளின் இந்த அடாவடித்தன அகம்பாவப் பேச்சுகளைக் கேட்டு சும்மா இருக்கலாமா?

    மாநில அரசு இந்தப் பேர்வழியை தமிழ்நாட்டுக்குள்ளே வர அனுமதிக்கவே கூடாது. மீனவர்களின் கொதிப்பும், கொந்தளிப்பும் பாய்ந்தால் அது சட்டம், ஒழுங்கு கெட வழி வகுத்து விடாதா?

    மத்திய அரசு வேடிக்கை பார்க்கலாமா?

    அதுபோலவே மத்திய அரசும் விரைவில் இவரால் ஏற்படும் தலைவலி, திருகு வலிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கலாமா?

    மக்கள் எதிர்ப்பு கண்டு பயந்துதானே தனக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்புக் கேட்டுப் பெற்றுள்ளார் இந்த சூராதி சூரர்?

    தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது!

    தமிழ்நாட்டில் எங்கும் நுழைய இத்தகைய தமிழ் இன விரோதிகளை அனுமதிக்கவே கூடாது. இராஜபக்சேவின் ஏஜண்ட்டுகள் போல் செயல்படும் இத்தகையவர்களை ஒருபோதும் தமிழ் மண்ணும், மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது உறுதி.

    சென்னை
    2.9.2014

    - கி.வீரமணி
    தலைவர்,திராவிடர் கழகம்

    Read more: http://viduthalai.in/page1/86941.html#ixzz3CRwSIf8C

    தமிழ் ஓவியா said...


    ஆரியப் பண்டிகைகள்


    ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர் கள் அடக்கினது; கொன்றது; இழிவு படுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_ சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப் பட்ட பண்டிகைகள்.

    (விடுதலை,18.1.1951)

    Read more: http://viduthalai.in/page1/86930.html#ixzz3CRwvvxmq

    தமிழ் ஓவியா said...


    சுயமரியாதை


    மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு, தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டும்.

    - (குடிஅரசு, 3.4.1927)

    Read more: http://viduthalai.in/page1/87017.html#ixzz3CRxybgvj

    தமிழ் ஓவியா said...


    டெசோவின் இன்றியமையாமை!

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தனர். அங்கு என்ன பேசப்பட்டது? பிரதமர் எந்த உறுதியைக் கொடுத்தார்? என்பது போன்ற தகவல்கள் உருப்படியாக ஏதும் கசியவில்லை.

    ஆனால், இலங்கையின் பிரபல இதழான வீரகேசரி சில முக்கியப் பிழிவுகளை வெளிச்சத் திரையில் ஓட விட்டு இருக்கிறது.

    இலங்கையில் நிகழும் அரசியல் மாற்றங்களைக் கண்காணிக்க தனியார் ஆணையம் ஒன்றை இந்தியா நியமிக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது.

    ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஒரே வரியில் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிட முடியாது; அரசியல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தலைமையில் உள்ள இலங்கை அரசு கவனித்துக் கொள்ளும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இனப் பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.

    மேலும் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு இனப் பிரச்சினைபற்றி எடுத்துரைத்து, அவற்றிற்கான தீர்வுகளை அங்குள்ள அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி இதோபதேசம் செய்துள்ளார்; இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்தியப் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று சொல்லுகிறார்.

    இலங்கை அரசு நாங்கள் கூறுவதை செவிமடுத்துச் செயல்பட்டிருந்தால், நாங்கள் ஏன் இந்திய அரசை நாடப் போகிறோம்? என்ற நியாயமான வினா மூலம் தங்கள் ஆதங்கத்தை அதிருப்தியை நாகரிகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

    இந்திய ஏடுகள் வெளிப்படுத்தாத தகவல்களை இலங்கையின் வீரகேசரி வெளிப்படுத்தி விட்டது.

    இலங்கை அதிபர் ராஜபக்சேபற்றி தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறை சொன்னால், அதற்குள் புகுந்து உள்நோக்கம் கற்பித்து, பிரச்சினையை நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் இறங்கும் இந்திய நாட்டு ஊடகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மக்களின் பிரதிநிதி என்னும் முறையிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் ஏடு என்ற தன்மையிலும் வெளிப்படுத்தப் பட்டுள்ள இந்த நுட்பமான தகவல்களுக்கும், கருத் துக்கும் தங்கள் வசம் எந்த நியாயங்களை வைத் துள்ளனர்?

    அய்.நா. மன்றத்தால் அதிகாரப் பூர்வமாக அறி விக்கப்பட்ட விசாரணைக் குழுவையே அனுமதிக்க மறுக்கும் ராஜபக்சேயிடம் எல்லா வகைகளிலும் வீழ்த்தப்பட்டு, நொந்து நூலாகிக் கிடக்கும் ஈழத் தமிழர் தம் பிரநிதிதிகளின் குரல் எடுபடுமா? இந்தப் பொது தகவல் - புரிதல்கூட இல்லாமலா நம் நாட்டு தலைமைப் பீட அமைச்சர்கள் இருக்கிறார்கள்?

    தேடி வந்தவர்கள் எடுத்து வைக்கும் குறை பாடுகளைக் கேட்டுக் கொண்டதற்காக, எதையாவது சொல்ல வேண்டும் என்ற சம்பிரதாய வார்த்தைகளை இந்தியப் பிரதமர் சொல்லியிருக்கிறார் என்பது தான் இதன் மூலம் தெரிய வருகிறது.

    ராஜபக்சே அளவுக்குப் போவானேன்? அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு இந்தியாவில் வந்து விசாரணை நடத்துவதற்கே விசா மறுக்கும் இந்திய அரசை - அதன் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி என்ன நினைப்பது?

    ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா ஏதாவது உருப்படியான முயற்சிகளை மேற்கொண்டால்தான் ஏதாவது முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு என்று ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலகத் தமிழர்களும் சரி, உலகெங்கும் உள்ள மனித உரிமை அலுவலர்களும் சரி எதிர்பார்க்கும் நிலையில் ராஜபக்சேவுக்கு அப்பனாக இங்குள்ள ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறோர்களே! இது நியாயமா? சரியா?

    இத்தகையதோர் கால கட்டத்தில் கலைஞர் அவர்களின் தலைமையில் அமைந்த டெசோ உருப்படியான திசையில் காலத்தின் தேவையான - அவசியமான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட டெசோவின் இந்தச் செயற்பாடுகள் காலத்தால் என்றென்றும் பேசப்படும் என்பதில் அய்யமில்லை.

    ஈழத் தமிழர்கள் பிரச்சினையைத் தங்கள் அரசிய லுக்குக் கிடைத்த மூலதனமாகக் கொண்டு முழக்க மிட்டவர்கள், இந்த முக்கியமான கால கட்டத்தில் வெளியில் தலை காட்ட முடியாத ஒரு இறுக்கமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று நினைக்க நிறைய நியாயம் உண்டு

    தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவாரே - நம்மைப் பிளவுப்படுத்துவதை தூர வைத்து நம்மை இணைப்பவற்றைப் பற்றிக் கொண்டு ஓரணியாய்த் திரள்வோம் என்று உன்னதமான நல்வழிகாட்டுதலை தமிழகத் தலைவர்கள் சற்று யோசிக்கக் கூடாதா?

    இதில் கொஞ்சம் மானப் பிரச்சினை தட்டுப் படுமேயானால் பொதுத் தொண்டில் மானம் பாராதே என்ற தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உரையை ஒருமுறை அசை போட்டுப் பார்க்கலாமே!

    Read more: http://viduthalai.in/page1/87075.html#ixzz3CRzN1ik3

    தமிழ் ஓவியா said...


    பக்குவமடையாதவன்


    அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.

    - (விடுதலை, 3.4.1950)

    Read more: http://viduthalai.in/page1/87074.html#ixzz3CRzX91Xm

    தமிழ் ஓவியா said...

    இன்றைய ஆன்மிகம்?


    ஆயுள்
    நம் ஆயுளை நிர்ண யிப்பது நாம் அல்ல - பிறக்கும் பொழுதே நமக்கு மேலே இருக்கக் கூடியவன் எழுதி வைத்த ஒன்று அது - அதனை மாற்ற யாராலும் முடியாது - முடியவே முடியாதாம்.

    அப்படியென்றால் 50 ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயதை விட இப்பொழுது மிகவும் உயர்ந்துள்ளதே! இது ஆண்டவன் எழுதி வைத்ததாலா அறிவியல் - மருத்துவ சாதனையாலா?

    Read more: http://viduthalai.in/e-paper/87171.html#ixzz3CXx6HxiZ

    தமிழ் ஓவியா said...

    தண்டனைக் காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்


    உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு மனிதநேயம் மிக்க வரலாறு படைக்கும் தீர்ப்பாகும்

    தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையில் தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும், 2 மாதங்களுக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனிதநேயம் மிக்க வரலாறு படைக்கும் தீர்ப்பை வரவேற்றும், உச்சநீதிமன்றத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

    நேற்று (5.9.2014) உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பு மனிதநேயம் மிக்க, வரலாறு படைக்கும் ஒரு தீர்ப்பாகும். இதற்காக உச்சநீதிமன்றத்தைப் பாராட்டுகிறோம்.

    நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள முழு விசாரணை - அல்லது விசாரணையே நடைபெறாது ரிமாண்டை - தற்காலிகக் காவலை - நீட்டித்துக் கொண்டே பல ஆண்டுகள் சிறையில் கழிக்கும் இள வயதுடைய வர்கள் (பெரிதும்) எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாகும் என்பது நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கோ, நீதிபரிபாலனம் நடத்தும் அமைப்புகளுக்கோ பெருமை தரும் ஒன்றாக ஆகாது.

    அக்கைதிகள் - விசாரணைக் கைதிகள் என்று அழைக்கப்படும்(Undertrial Prisoners) பலரும், குற்றங்கள் ஏதும் செய்யாமல் சிக்கிக் கொண்டவர்கள் அல்லது சிக்க வைக்கப்பட்ட பகடைக் காய்களே ஆவர்.

    சிறைச்சாலைகளுக்குச் சென்று நிலவரத்தை அறிந்த வர்களும் அதனை ஆய்வு செய்தவர்களும்தான் இது ஒரு முக்கிய சமூகப் பிரச்சினை என்பதைப் புரிந்து கொண்டு, இதற்கு ஒரு நல்ல தீர்வு காணுவது அவசியம் என்று கருத முடியும்.

    விசாரணையின்றி இருக்கக் கூடியவர்கள் பலரையும் சந்தேகக்கேஸ் என்ற பெயரிலும், வீட்டை விட்டு ஓடி வருபவர்கள், புதிதாகத் திருட்டு போன்ற குற்றங்களிலும் அனுபவபட்டவர்களின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப் பட்ட அப்பாவிகள், இவர்கள் திருந்தி வாழ உதவிட முடியாத அளவுக்கு சிறைக்குள்ளே நடக்கும் பல்வேறு நடத்தைகளும், ஒழுங்கீனங்களும் அவர்களை ஆக்கி விடுகின்றன.

    ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்கள்தான் சிறைக்குள் மூத்த முன்னோடிகளும், செல்வாக்கு உள்ளவர்களும் ஆவார்கள். அவர்கள் இந்த சிறு இளைஞர்களை உள்ளே வந்தவுடன் மிரட்டி, தங்கள் எடுபிடிகளாக்கிக் கொள்வதோடு அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒழுக்கத் தவறுகளும்(Sodamise) சர்வ சாதாரணமாக்கும் வெட்ககரமான நிலைதான்! சிறைக்குள்ளே பணப் புழக்கம், போதை (கஞ்சா) போன்றவை உள்ளதால், இந்த இளவயது விசாரணைக் கைதிகளை அத்தீய வழக்கத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.

    விடுதலை ஆகிச் செல்லவிருக்கும் இளைஞர்கள் பலர், நான் திரும்பி வந்து விடுவேனுங்க, இங்கே கிடைக்கிற வாழ்வும், வாய்ப்பும் எங்களுக்கு வெளியே கிட்டுமா என்பது சந்தேகம் என்றுகூட, வெளிப்படையாக (மிசா காலத்தில் எங்களுக்கு பணி செய்த இந்த விசாரணைக் கைதிகள், அல்லது குறைந்த தண்டனை பெற்றவர்கள்), கூறியதை நேரில் கேட்டு அதிர்ந்து போனோம்.

    இவர்களை விடுதலை செய்தால் சிறையில் கூட்டமும், குறையும்; சிறை நிர்வாகமும் செம்மையான அளவில் நடக்க வாய்ப்பு ஏற்படும்.
    இவர்களை வெளியே அனுப்பினால் மட்டும் போதாது. இது ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையானபடியால், அத்தகையவர்களுக்குரிய தொழில் கற்றுத் தருதல், அல்லது வேலை வாய்ப்புத் தந்து, வெளியே வந்த அவர்கள் கண்ணியமான முறையில் வாழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் திட்டங்களைப் பற்றியும் ஆராய்ந்து செயல்படுத்த முன் வர வேண்டும்.

    தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. பிரதமர் மோடி அவர்கள் ‘Corporate Social Responsibility’ பெரிய கம்பெனிகள் சமூகப் பொறுப்பாளர்களாக மாறிடும் திட்டம் என்று கூறுகிறாரே, அதில்கூட இதனையும் இணைத்து அத்தகைய இளைஞர்களை மனிதம் பூத்துக் குலுங்கும் நல்ல மனிதர்களாகவும் மாற்றிட யோசிக்க வேண்டும்.



    சென்னை
    6.9.2014

    கி.வீரமணி
    தலைவர், திராவிடர் கழகம்

    Read more: http://viduthalai.in/e-paper/87186.html#ixzz3CXxHzuVg

    தமிழ் ஓவியா said...

    ஒரு கொலை நூல்தான் பரிசுக்குத் தகுதியானதா?

    ஜப்பான் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுப் பிரதமருக்குக் கீதையை அளித்து, அதன் மூலம் ஒரு சர்ச்சைக்கு அடியெடுத்துக் கொடுத்துள்ளார்.

    கீதை - பகவான் கிருஷ்ணனால் அருளப்பட்டது என்று கதைக்கிறார்கள். இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட ஒரு கேள்வியை எழுப்பியதுண்டு ஒரு யுத்தக்களத்திலே கீதா உபதேசம் நிகழ்த்த முடியுமா?

    அது இயலக் கூடியதுதானா? கிருஷ்ணன் சொல்லச் சொல்ல அவற்றையெல்லாம் சுருக்கெழுத்து மூலம் எழுதியவர் யார் என்ற கேள்வியோடு மட்டும் அவர் முடிக்கவில்லை; கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவது நல்லது என்கிற அளவுக்குச்சென்று இருக்கிறார்.

    உலகத்தில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? கடவுள் என்று சொல்லக்கூடிய ஒருவர் யுத்தம் செய் - மனிதர்களைக் கொலை செய்! கொன்று குவி! என்று உத்தரவிட்டதாகக் கேள்விப்பட்டதுண்டா?

    தன் எதிரே இருக்கும் உற்றார் உறவினர்களோடு போர்தொடுக்க அர்ச்சுனன் தயங்கியபோது, கிருஷ்ணன் என்ன சொல்கிறான்?
    இந்த உடலில் வாலிபப் பருவமும், யவனப் பருவமும் எவ்வாறு வந்து சேருகின்றனவோ அம் மாதிரியே, ஆத்மாவுக்கு பேச உடலும் வருகிறது. அறிவாளி இதைப் பார்த்து மயங்க மாட்டான்.

    எந்த ஆத்மாவானது எங்கும் பரவியுள்ளதோ அது அழிவற்றது என்று அறிவாயாக! இவ்வாறு அழிவற்ற இந்த ஆத்மாவுக்கு எவரும் அழிவை ஏற்படுத்த முடியாது; ஓ, பரதவம்சத்தவனே! என்றென்றும் இருப்பதும், அழிவற்றதும், அளவிற்கு அடங்காததுமான ஆத்மாவால் தாங்கப்படுகின்ற இந்த உடல்கள் அழிவுள்ளவை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ஆகவே இதனை நன்கறிந்து போர் செய்வாயாக? என்று அர்ச்சுனனுக்கு ஆணையிடுகிறார் அவர்கள் கூறும் பகவான் கிருஷ்ணா!

    உலகத்திலேயே இவ்வளவுப் பச்சையாகக் கொலையைத் தூண்டுகிற, நியாயப்படுத்துகின்ற ஒருவன்தான் இந்துத்துவாவாதிகள் போற்றுகின்ற பகவான் கிருஷ்ணன், அதைச் சொல்லுவதுதான் கீதை. புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் கீதை என்பது ஒரு கொலைகார நூலே!

    காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேகூட தனது படுகொலையை நியாயப்படுத்து கிற வகையில் இந்தக் கீதையைத்தான் எடுத்துக் காட்டினான்.

    தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு அதர்மத்தையும் செய்யலாம்; அப்படி செய்வதும் தருமமே! என்று கீதை சொல்லுவதை எடுத்துக்காட்டி கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கொடுமையை என்னென்று சொல்லுவது?

    இந்தச் கீதையை இந்தக் கொலைகார நூலைத்தான் ஜப்பான் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மகிழ்ச்சியோடு பரிசாக அளித்துள்ளார்.
    ஒரு வகையில் நரேந்திரமோடி கீதையைப் போற்றுவதற்கு வழிகாட்டியாகக் கொள்ளுவதற்கு நியாயம் இருக்கிறது.

    மோடி முதல் அமைச்சராக இருந்தபோதுதானே சிறுபான்மை மக்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். எனவே மோடி கீதையைப் போற்றுவதில் ஓர் அர்த்தம்கூட இருக்கிறது.

    ஆனால் ஜப்பான் பிரதமருக்குக் கீதையைப்பற்றி தெரிந்திருக்குமா என்பது கேள்விக் குறியே! அது கொலை நூல் என்று தெரிந்திருந்தால், அந்தக் கணமே இந்தியப் பிரதமரிடம் திருப்பியே கொடுத்திருப்பார்.

    இது ஒருபுறம் இருக்க, கிருஷ்ணன் என்ற கடவுளே இந்து மதத்தில் கற்பிக்கப்பட்டதே கவுதமப் புத்தர் தோன்றி நாட்டு மக்கள் மத்தியில் வைதிக ஆரியப் பார்ப்பன வருணாசிரமத்தை எதிர்த்து மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்திய பிறகுதான்.

    இதுகுறித்துப் பிரபல வரலாற்று ஆசிரியர் ராம்சரண் சர்மா 11ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (கிஸீநீவீமீஸீ மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ்) எனும் நூலை எழுதியவர் அந்த நூலில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

    கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கியப் பங்கு ஆற்றியதாகக் கூறப்பட்டிருந்தாலும், மதுரா நகரில் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள் கிருஷ்ணன் பற்றிய தகவலைத் தரவில்லை.

    இதன் காரணமாக இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதைக் கைவிட வேண்டும் என எழுதப் பட்டுள்ளது.

    ஒரு பொய்யான கதைப் பாத்திரத்தை உண்டாக்கி, அதையும் கொலையைத் தூண்டும் ஒன்றாகச் சித்தரித்து இருப்பது எல்லாம் அசல் கழிசடைத்தனம் அல்லவா?

    125 கோடி மக்களின் பிரதமர் இந்த வேலையைச் செய்யலாமா? இந்தியா என்றால் பாம்புகளின் நாடு என்பது போய், பொய்யர்களின் கூடாரம் என்ற புது நாமகரணம் இந்தியப் பிரதமரால் கிடைக்கும் போல் தோன்றுகிறது - இன்னும் 4 ஆண்டு 9 மாதம் எப்படித்தான் கழியுமோ என்று தெரியவில்லை.

    Read more: http://viduthalai.in/page-2/87192.html#ixzz3CXxhYBeG

    தமிழ் ஓவியா said...

    திருக்குறள்


    நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும்.
    (விடுதலை,3.10.1958)

    Read more: http://viduthalai.in/page-2/87191.html#ixzz3CXxtSyfA

    தமிழ் ஓவியா said...

    விநாயகர் பொம்மைகளுக்குத் திருட்டு மின்சாரம்!


    பெரியார் பிஞ்சு அன்புச்செல்வனின் பிறந்த நாள் விழாவில் கழகத் துணைத் தலைவர் அதிர்ச்சித் தகவல்!


    காஞ்சிபுரம், செப். 6_ ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது என்று சொல்லப்படுகிற கடவுளர்கள் எப்படிப்பட்ட ஒழுக்கம் கெட்ட காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது என்பதைச்சுட்டி காட்டி, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் விநாயகர் பொம்மைகளுக்கு திருட்டுத் தனமாக மின்சாரம் எடுக்கப்படுகிறது என்பதை கவலையோடு கழகத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
    கடந்த மாதம் இறுதியில் அதாவது 28.8.2014 அன்று பூவிருந்தமல்லியை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் போரூர் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த திராவிடர் கழகத்தோழர் தனது மகன் அன்புச்செல்வனின் முதலாமாண்டு பிறந்த நாளை வெகு சிறப்பான ஏற்பாடுகளைச் செயது கொண்டாடினார்.
    நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு நடராஜன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த துணைத் தலைவரை தென்சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் தலைமையில் சிறப்பாக வரவேற்றனர். திராவிடர் கழகத்தின் தோழர்களும் நடராஜனின் உறவினர்களும் கூடியிருந்த கூட்டத்தில் தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
    அதைத்தொடர்ந்து தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தோழர் செங்குட்டுவன், அன்புச்செல்வனை வாழ்த்திப் பேசினார்.
    கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில்:_ எடுத்த எடுப்பிலேயே ஒரு பிறந்த நாளுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று கேட்டு பார்வையாளர்களை திகைக்க வைத்தார். பிறகு கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியாரின் சிக்கனத்தைப்பற்றி கோடிட்டுக்காட்டி விட்டு, பெரியார் தொண்டரான நடராஜன் செலவு செய்து இந்த விழாவை விழாவை ஏற்பாடு செய்திருப்பது பெரியாரின் கொள்கையை பின் பற்றியவர்கள் ஒருநாளும் வீழ்ந்ததில்லை வாழ்ந்துதான் இருக்கிறார்கள் என்பதை உறவினர்களான உங்களுக்கு உணர்த்தத்தான் என்று கூறினார்.
    மேலும் அவர் பெரியாரியம் என்பது ஒரு வாழ்க்கை நெறி. அதில் ஒழுக்கத்திற்கு சிறப்பான இடம் உண்டு என்று கூறிவிட்டு அதனால்தான் பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து என்று பெரியார் குறிப்பிட்டார் என்பதையும் சேர்த்துச் சொல்லி, ஆனால் கடவுள்களால் ஒழுக்கம் வளர்கிறதா என்று கேள்வி கேட்டு தற்போது நடைபெற்றுக் கொண் டிருக்கும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான நிகழ்வுகளை எடுத்துக்காட்டிப் பேசினார்.
    அதாவது ஊரெங்கும் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் பொம்மைகளுக்கு மின்சாரம் திருட்டுத் தனமாக எடுக்கப்படுவதை எடுத்துக் கூறினார். இப்படி இருந்தால் பக்தர்களிடையே ஒழுக்கம் எப்படி வளரும் என்று கேள்வியை எழுப்பினார். கூடியிருந்தோரும் அதை ஆமோதிப்பதுபோல் தலையாட்டினர்.
    தொடர்ந்து நடராஜனின் உழைப்பையும் அதனால் அவர் பெற்ற உயர்வையும் பாராட்டி பெரியார் பிஞ்சு அன்புச்செல்வனையும் வாழ்த்திவிட்டு மழையைத் தொடர்ந்து பொழியும் தூரலைப்போல தற்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொருளே தெரியாத பெயர்களை வைத்து, மொழி மானத்தை மிதிக்கிற தன்மையையும் கவலையோடு சுட்டிக்காட்டி னார்.
    அதைத்தொடர்ந்து கேக் வெட்டப்பட்டு குழந்தை அன்புச்செல்வனுக்கு ஊட்டி அனைவரும் மகிழ்ந்தனர். வருகை தந்திருந்த அனைவருக்கும் இரவு இறைச்சி விருந்து வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி பகுதியைச் சேர்ந்த பெரியார் மாணாக்கன், செல்வி ஆகியோர், உடுமலை வடிவேல், வேலவன் தொண்டறம் மற்றும் தாம்பரம் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Read more: http://viduthalai.in/page-3/87213.html#ixzz3CXymyFD8

    தமிழ் ஓவியா said...

    திரு.பன்னீர்செல்வம்

    உயர்திரு ராவ் பகதூர், பன்னீர் செல்வம் தமிழ்நாட்டில் தல ஸ்தாபனங்களில் இருக்கும் வெகு சில கண்ணியமான தலைவர்களில் முக்கியமானவர் களுக்குள் ஒருவராவார். அவர் மீது நாணையத் தவறுதலான வார்த்தைகள் இது வரையிலும் யாருமே பிரதாபித்தது கிடையாது.

    அவரைப் போல் பார்ப்பன ரல்லாத மக்கள் விஷயத்தில் தனது ஆதிக்கத்தில் உள்ள எல்லா இலாக்காக் களிலும் விகிதாச்சார உரிமை கொடுத்தவர்கள் மிக மிக அருமையாகும். அப்படிப்பட்டவரைச் சென்னை அய்கோர்ட்டார் ஏதோ ஒரு விண்ணப்பம் போட்டதின் காரணமாய் நாணை யமற்றவர் என்றும், யோக்கியர் அல்லாதவர் என்றும் அய்க்கோர்டு ஜட்ஜீகள் பேசியதாக பத்திரிகைகளில் காணப்படு கின்றன.

    கோர்ட் விவகாரங்களில் விண்ணப்பம் போடும் விஷயங்களைக் கொண்டு ஒருவனை யோக்கியன், அயோக்கியன் என்று தீர்மானிப்பதாயிருந்தால் இந்த இந்தியாவில் கோர்ட்டு சம்பந்தமுள்ள மக்களில் 100க்கு வீசம் பேர் கூட இருக்கமாட்டார்கள் என்று நாம் உறுதியாய்ச் சொல்லுவோம்.

    கோர்ட்டு சட்டங்களே உண்மைக்கு நியாயமளிக்க முடியாதபடி தான் இருக்கின்றன. அவைகளைக் கையாளும் வக்கீல்கள் அவ்விண்ணப்பம் போடும் விஷயத்தில் செலுத்தும் புத்தியும் மனப்பான்மையும் நடுநிலை யிலிருந்து பார்த்தால் அவர்களை விட நாணையக் குறைவான வர்களும் யோக்கியர்கள் அல்லாதவர்களும் வேறு யாரும் இல்லையென்று சொல்ல வேண்டிய அளவுக்கே இருப்பார்கள்.

    அச்சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி அவ்விண்ணப்பங்களை விசாரிக்கும் ஜட்ஜீகள் என்பவர் களும் ஏறக்குறைய பெரும்பான்மையான பேர்கள் இக்கூட்டத் திலிருந்தே தான் பொறுக்கி எடுக்கப்படு கிறார்கள். ஆகவே கோர்ட்டு விவகாரங்களில் பெரும் பாலும் இப்படிப்பட்ட வக்கீல்களுடைய யோசனைகளை அனு சரித்தே நடந்து கொள்ளுகின்ற கட்சிக்காரர்களைப் பற்றி ஜட்ஜீகள் திடீரென்று இம்மாதிரியான அபிப்பிராயத்திற்கு வருவதானது மிக்க அதர்மமானதென்றே கருதுகின் றோம்.

    திரு. பன்னீர்செல்வத்தை நன்றாய் அறிந்தவர்கள். இந்த ஜட்ஜீகளின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுடன் பொது ஜனங்களும் இந்த ஜட்ஜீகள் அபிப்பிராயத்தால் ஏமாந்து போகமாட்டார்கள் என்றும் நாம் உறுதியாய் நம்புகிறோம்.

    - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

    Read more: http://viduthalai.in/page-7/87188.html#ixzz3CXzXLjwP

    தமிழ் ஓவியா said...

    கார்த்திகை தீபம்


    கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசல மென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும் அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.

    இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்யை டின் டின்னாய் கல் பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எரிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளைப் போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டுவார்கள்.

    இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய்எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்பை எண்ணை முதலியவைகளை ஊற்றியும், எள்ளுபொட்டணம், பருத்திவிதை பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள் போட்டும் விளக்குகள் எரிப்பார்கள்.

    இந்த சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும். ஆகவே இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகியவைகளால் எத்தனை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்த பெருந் தொகைச்செலவில் நாட்டுக்கோ, மக்க ளுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பெறுமான பிரயோஜனமாவதுமுண்டா என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் விளங்காமற்போகாது.

    அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம் கொள்ளை போகின்றதே, கொள்ளை போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவுளிக்கடையில் போய் மறியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேசபக்தியாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை.

    அதைப் பற்றி நினைப்பது மில்லை. அதைப் பற்றிப் பேசுவதே மதத் துரோகமாகவும், நாத்திகமாகவும் சொல்லப்படு கின்றது. இம்மாதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லட்சக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.

    ஆகவே ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண் டர்கள் இதை கவனித்து இம்மாதிரியான மூடத்தனங்களும், நாசகார வேலைகளும் சிறிதாவது குறையும்படியாக வேலை செய்வார்களானால் அது மற்ற எல்லா முயற்சி களையும் விட எத்தனையோ மடங்கு பயன் தரக்கூடியதும் பல வழிகளிலும் அவசியமானதுமான முயற்சிகளாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

    - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.11.19

    Read more: http://viduthalai.in/page-7/87189.html#ixzz3CXztzQma

    தமிழ் ஓவியா said...

    வறுமையில் வாடிய ஸ்டாலின்!


    சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ் விலி என்பதாகும். இவர் 1879ஆம் ஆண்டில் ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் பிறந்தார்.

    இவருடைய தாய்மொழியாகிய ஜார்ஜியன் மொழி ரஷிய மொழியி லிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனினும், ரஷிய மொழியை இவர் பின்னர் கற்றுக் கொண்டார். ரஷிய மொழியை இவர் ஜார்ஜிய மொழிச் சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார்.

    ஸ்டாலின் கொடிய வறுமையில் வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவர் எப்பொழுதும் அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு, மகனை முரட்டுத்தனமாக அடிப்பார். இயோசிப் 11 வயதாக இருக்கும்போது அவருடைய தந்தை இறந்தார். இளமையில் கோரி நகரில் ஒரு மடாலயப் பள்ளியில் இவர் கல்வி கற்றார்,

    வாலிப பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறையியல் கல்விக் கூடத்தில் கல்வி பயின்றார். எனினும் 1899-ஆம் ஆண்டில், புரட்சிக் கருத்துகளைப் பரப்பியதற்காக கல்விக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    அதன்பின் இவர் தலைமறைவு மார்ச்சி இயக்கத்தில் சேர்ந்தார். சாதாரணப் பின்னணியில் வாழ்க் கையைத் தொடங்கிய ஸ்டாலின், உல கின் பெரிய நாடு ஒன்றின் அதிகார மிக்க தலைவராக உயர்ந்தார். அதற்குப் பொருத்தமாக, இரும்பு மனிதன் என்று பொருள்படும் வகையில் தனக்கு ஸ்டாலின் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்.

    Read more: http://viduthalai.in/page2/87234.html#ixzz3CY0E0lK2

    தமிழ் ஓவியா said...

    பெண்களை கருத்தரிக்க விடாமல் ஆண்களின் உயிரணுக்களே செயல்படலாம்!


    தம்பதியரின் நெருக்கத்தைப் பற்றிப் பேசும் போது ஈருடல், ஓருயிர் என்கி றோம். நீ பாதி, நான் பாதி என்கிறோம். அதையெல்லாம் மெய்யாக்கும் வகையில்தான், ஆணில் பாதியும் பெண்ணில் பாதியுமாகச் சேர்ந்து புதிய உயிர் உலகத்துக்கு வருகிறது. இதுதான் உலக நியதி. பெண்ணின் உடலில் உயிராகி வளர வேண்டிய கருவுக்கு, காரணமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டிய ஆண் அணுக்களே அதற்கு எதிரியானால்? அப்படிக்கூட நடக் குமா என்பதே எல்லோரின் கேள்வி யாகவும் இருக்கும்.

    நடக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன். பெண் உடலில் கரு வளர விடாமல் செய்ய, அவளது கணவரின் ரத்தமும், மரபணுக்களுமே எதிராகச் செயல் படுகிற அந்தப் பின்னணி பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். சில பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால், கருவானது, கருப்பையில் ஒட்டி வளர்வதில்தான் பிரச்சினை இருக்கும். நல்ல கரு வந்து, தங்காதவர்களுக்கும், குழந்தை இல்லாததற்காக அய்.வி.எஃப் சிகிச்சை மேற்கொண்டு, அதிலும் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறவர்களுக்கும் மேலே சொன்ன விஷயம்தான் பிரச்சினையாக இருக்கும்.

    காரணமே தெரியாமல், மறுபடி, மறுபடி சிகிச்சையைத் தொடர்வதும், சிகிச்சை வெற்றி பெறவில்லையே என்கிற விரக்தியில் வாழ்க்கையை வெறுப்பதுமாக துயரத்தின் உச்சத்தில் இருப்பார்கள். கரு என்பது, கணவன் -மனைவி இரண்டு பேரின் ரத்தம் மற்றும் மரபணுக்கள் சேர்ந்தது. சில பெண்களின் உடல், கணவனின் ரத்தத்தையும், மரபணுக்களையும் அந் நியப் பொருள்களாக நினைத்துக் கொண்டு, கருவை ஒட்ட விடாமல் செய்து விடும். அதைப் பரிசோதனை யில் கண்டுபிடித்து, கணவனின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக் களை எடுத்து, சில மருந்துகள் கலந்து, மனைவியின் உடலில் ஊசி மூலம் செலுத்தப்படும்.

    அதாவது, அந்த வெள்ளை அணுக்கள், மனைவியின் உடலில் ஊறி, எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சில வகை நோய்கள் வரும் முன், எச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம் இல்லையா? அதே டெக்னிக்தான் இதிலும். இதற்கு ஹஸ்பென்ட் லூகோசைட் டிரான்ஸ்ஃபர், அதாவது, ஹெச்.எல்.டி. என்று பெயர். இந்த ஊசியை பெண்களின் சருமத்தின் வழியே செலுத்த வேண்டும்.

    வாரம் ஒரு ஊசி வீதம், 8 முதல் 12 ஊசிகள் போட வேண்டியிருக்கும். ஒரு ஊசிக்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும். இந்த சிகிச்சை முடிந்த பிறகு குழந்தை இல்லாத பெண்களுக்கு அய்.வி.எஃப். செய்தால், கரு தங்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். சென்னைக்கு மிகவும் புதுசான இந்த சிகிச்சை, குழந்தை இல்லாத தம்பதியருக்கு ஆறுதலையும், தீர்வையும் கொடுக்கிறது... என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன்.

    - ஆர்.வைதேகி
    நன்றி: வசந்தம் 23.6.2013

    Read more: http://viduthalai.in/page2/87233.html#ixzz3CY0MQg4h

    தமிழ் ஓவியா said...

    கலிலியோவின் முக்கியக் கண்டுபிடிப்பு!

    கலிலியோ தலைசிறந்த இத்தாலிய விஞ்ஞானி தனது காலத்தில் வேறெந்த விஞ்ஞானியையும் விட மிகச் சிறந்த அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்ததற்காக இவர் உலகப் புகழ் பெற்றார். இவர் பைசா நகரில் 1564-இல் பிறந்தார். இளமையில் பைசா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்.

    ஆனால், வறுமையால் பாதியிலேயே படிப்பை விடடார். எனினும் அதே பல்கலைக் கழகத்தில் 1589இல் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படுவர் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து 1610 வரையில் அங்கு பணிபுரிந்தார். இந்தக் காலத்தின்போது தான் இவர் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்தார்.

    இவருடைய முக்கியக் கண்டுபிடிப்புகளில் முதலாவது, எந்திரவியல் தொடர்புடையதாகும். லேசான பொருள்களைவிடக் கனமான பொருள்கள் வேகமாக கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். அந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் இக்கூற்றை தலைமுறை தலைமுறையாக அறிஞர்கள் நம்பிவந்தார்கள். ஆனால், கலிலியோ இந்தக் கூற்றைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.

    பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார். காற்றின் உராய்வினால் வேகம் சற்று குறையலாம் என்பதைத் தவிர, கனமான பொருள்கள், லேசான பொருள்கள் இரண்டுமே ஒரே வேக வீதத்தில்தான் கீழே விழுகின்றன என்று அவர் கூறினார்.

    இதைக் கண்டுபிடித்த பின்னர் கலிலியோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். ஒரு குறிப்பிட்ட கால அளவின்போது பொருள்கள் எவ்வளவு தூரம் விழுகின்றன என்பதை மிகக் கவனமாக அளவீடு செய்த இவர். கீழே விழும் ஒரு பொருள் செல்லும் தொலைவானது, அது கீழே விழுகின்ற வினாடிகளின் எண்ணிக்கையில் இருபடி வர்க்கத்துக்குச் சரிசம வீத அளவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இது வேக வளர்ச்சி வீதம் ஒரே சீராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

    கலிலியோவின் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் காண, கணிதச் சூத்திரங்களையும், கணித முறைகளையும் விரிவாகப் பயன்படுத்தியது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாகும்.

    Read more: http://viduthalai.in/page6/87226.html#ixzz3CY1ZJpyd

    தமிழ் ஓவியா said...

    சொல்லுவது தினமலர் மன அமைதிக்காக சென்று நிம்மதி இழக்கும் பக்தர்கள் திரிசுதந்திரர்கள் பிடியில் சிக்கித்தவிக்கும் திருச்செந்தூர்


    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆவது படை வீடு திருச்செந்தூர். இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருவதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். திருச்செந்தூர் ஸ்தலம் குரு பரிகார ஸ்தலமாக இருப்பதால் அங்குவரும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள மிகப்பெரிய 5 கோவில்களில் இதுவும் ஒன்று.

    திருச்செந்தூர் மூலவரான பால சுப்பிரமணிய சுவாமியை தொட்டு பூஜை செய்பவர்கள் போத்திகள் இவர்கள் மூலவரைத் தவிர்த்து வேறு எந்த கடவுளுக்கும் பூஜை செய்ய மாட்டார்கள். கோவிலுக்குள் இருக்கும் சண்முகர் மற்றும் பரிவார தேவதை களுக்கு பூஜை செய்பவர்கள் சிவாச் சாரியார்கள்.

    இவர்களைத் தவிர்த்து கோவிலில் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செப்வர்கள் திரிசுதந்திரர்கள். இவர்கள் தான் கோவிலுக்குள் நடத்தப்படும் யாகசாலை பூஜையை செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பரிகார பூஜையையும் இவர்கள் தான் செய் கிறார்கள்.

    கைங்கரியம் செய்பவர்கள் என்று அழைக்கப்படும் திரிசுதந்திரர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் முறைகேடாக, அளவுக்கதிகமாக கட்டாய வசூலில் ஈடுபடுவது பக்தர்களை அதிருப்தி அடையச்செய்கிறது.

    திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசனம் தவிர 2 விதமான கட்டண தரிசனம் உள்ளது. அதில் ஒன்று அமர்வு தரிசனம். இதற்கு ரூ. 250 கட்டணம். மற்றொன்று சிறப்பு தரிசனம். இதற்கு ரூ. 100 கட்டணம். இந்த கட்டண தரிசனத்தில் அரசியல் வாதிகளையே மிஞ்சும் அளவுக்கு திரிசுதந்திரர்கள் மோசடி செய்வதால் கோவிலின் வருமானத்தில் தினமும் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.

    கோவிலுக்குள் நடக்கும் தங்கத்தேர் மற்றும் பிற தேர்த்திருவிழாவின் போது உற்சவர் ஜெயந்திநாதரை தூக்கி வருபவர்கள் சீர் பாதம், என அழைக்கப்படுகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பாக தங்கத்தேர் இழுக்க கட்டணமாக 1,500 ரூ.பாய் இருந்தது. இந்த தொகையை சில மாதங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகம் ரூ.2,500ஆக அதிகரித்துள்ளது.

    அவ்வளவு... சீர்பாதத்தினர் அதி கரிக்கப்பட்ட கட்டணத் தொகையில் தங்களுக்கும் பங்குதர வேண்டும் என கொடி பிடித்தனர். அதற்கு நிர்வாகமே எதிர்ப்பு தெரிவித்ததால் தங்கத்தேருக்கு ஜெயந்தி நாதரை எழுந்தருளச் செய்ய மறுப்புத் தெரிவித்தனர். விளைவு தங்கத்தேர் ஓடவில்லை. கோவில் நிர்வாகத்துகும், சீர்பாதத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சமரசம் ஏற்பட அதன்பின் உற்சவரை, தேருக்கு எழுந்தருளச் செய்தனர் என்பது தனிக்கதை.

    கோவில் தக்காராக திரிசுதந்திரர்கள் தரப்பினரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருப்பதால் மன ஆறுதலுக்காக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இருக்கும் நிம்மதி யையும் பறிகொடுத்துவிட்டு செல்லும் நிலையே தொடர்கிறது.

    தகவல்: கு.பஞ்சாட்சரம் பொதுக்குழு உறுப்பினர்,திருவண்ணாமலை, தினமலர் 30.6.2014

    Read more: http://viduthalai.in/page7/87223.html#ixzz3CY1l3W92

    தமிழ் ஓவியா said...

    பவுத்த திருப்பதிகள் இந்துக் கோவில்களான சூழ்ச்சி!


    காஞ்சீபுரத்தில் கச்சீஸ்வரர் கோவிலென்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவில் எனத் தெரிகிறது. இக்கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியா மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக் கின்றன.

    கோவில் உள்மண்டபத் திலும்` சில கல்தூண்களில் புத்த விக்கிரகங்கள் இப்போதுமிருக்கின்றன. இது புத்தர் கோவில் என்பதற்கு மற் றொரு ஆதாரமிருக்கிறது. அஃதாவது: இக்கோவில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு புத்தேரி என்றும், வீதிக்கு புத்தேரித்தெரு என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கி வருகின்றன.

    கச்சீஸ்வரர் கோவிலுக்கு நான் சென்று பார்த்த போது, தூண்களில் மட்டும் புத்தர் உருவங்களைக் கண் டேன், கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த விக்கிரகங்கள் காணப்படவில்லை. புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரயபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன. புத்தேரித் தெருவின் மேற்குக் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோவில் என்னும் இராஜ சிம்மேச்சுரம் ஆதியில் புத்தர் கோவி லாக இருக்க வேண்டும் என்பதற்கு அக் கோவிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது.

    காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த விக்கிரகங்கள் பலகைச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கிரகங்கள் இச்சுவரில் காணப் படுகின்றன.

    காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்கிரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலை யில் உள்ளதுபோன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவ ரின் கீழே வைத்துக் கட்டப்பட்டி ருக்கிறது.

    காஞ்சீபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோவில் என்னும் புத்தர் கோவில் இருந்தது. அதற்கு மானியமாக செங் கற்பட்டு ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. இந்தக் கோவில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்கினில் அமர்ந்தாள் கோவில் என்னும் கோவிலில் இரண்டு புத்தர் சிலைகள் உள்ளன; அவை, முன்பு காஞ்சி மேட்டுத் தெருவில் இருந்தனவாம்.

    காமாட்சியம்மன் கோவில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்தவிக்கிரகங்கள் இருந்தன. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தர் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோவிலில் இருந்த வேறு புத்தவிக்கிரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டு களுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால் அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை.

    காமாட்சி யம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்தவிக் கிரகம் ஒன்று இப்போதும் நன்னி லையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் காட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கிரகங் களைப் புதைத்து இருக்கிறார்களாம்.

    (நூல்: பவுத்தமும் தமிழும் மயிலை சீனிவேங்கடசாமி பக்கம் 53,54,55

    Read more: http://viduthalai.in/page8/87224.html#ixzz3CY2q17du

    தமிழ் ஓவியா said...

    மத்திய அமைச்சரவையில் மாமிசம் கூடாது!



    மிகவும் அமைதியாக ஒரு மாற்றம் டில்லியில் நடந்ததிருக்கிறது, அமைச்சரவை நிகழ்ச்சிகளில் இனிமேல் அசைவம் கிடையாது என்பதுதான் அது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது. அமைச்சரவைக் கூட்டம் என்பது பார்ப்பனர்களின் யாகமேடை கிடையாது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள். அவர்களின் உணவு முறை அசைவத்துடன் சேர்ந்ததாக இருக்கலாம். மேற்கு வங்கப் பார்ப்பனர்கள்கூட மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படி இருக்க அமைச்சரவை நிகழ்ச்சிகளில் அசைவ உணவை நிறுத்தியது ஏன்? இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வருவோம். இங்கு என்ன நடக்கிறது? ஒரு பத்திரிகை அலுவலகம் அசைவ உணவு கொண்டு வருவதால் சைவம் சாப்பிடும் மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறதாம். ஆகையால் இனிமேல் அலுவலகத்திற்கு யாரும் அசைவ சாப்பாடு கொண்டுவர வேண்டாம் என்று கூறி அனைத்துப் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை விட்டு, அலுவலக தகவல்பலகையிலும் ஒட்டிவிட்டனர். பொதுவாக ஊடக அலுவலகங்களில் அசைவம் கொண்டுவருவதை பல பத்திரிகை நிறுவனங்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகத் தடுக்கின்றன. புதிதாகச் சேர்ந்தவர்கள் அசைவம் கொண்டுவந்தால் உடனே நாசுக்காக சரஸ்வதி வசிக்கும் இடம் என்று மறைமுகமாகக் கூறிவிடுவார்கள். அப்படி இருந்தும் கொண்டுவந்தால் உடனே தூக்கிவிடுவார்கள். திடீரென இந்த அசைவ எதிர்ப்பு ஏன் கிளம்பியது என்று தெரிகிறதா? இதற்கு உணவு முறையை நன்கு கவனித்தால் தெரியும். பார்ப்பனர்களின் அன்றாட உணவில் அதிக அளவு புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் இருக்கும். மிகக்குறைந்த அளவே மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் இருக்கும். அவர்கள் சேர்க்கும் கொழுப்பு உணவு மிகவும் எளிதில் உடலில் ஆற்றலாக மாற்றமடையும் தாவரக்கொழுப்பு உணவுதான். பார்ப்பனர்களுக்கு அதிகம் உடலுழைப்பு கிடையாது. ஆனால், பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களுக்குத் தேவையான உணவு. அதுவும் இந்த மண்ணின் பாரம்பரிய உணவு என்பது, அசைவ உணவு வகையைச் சார்ந்ததே. இது விவசாய நாடு. பெரும்பான்மை மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்ய மாமிசம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மனித குல வரலாற்றைப் பார்த்தாலே உணவுச் சங்கிலிமுறை நமக்குத் தெரியவரும். மாட்டை மனிதன் உணவிற்காகத் தேர்ந்தெடுத்தது என்பது அதிகமான மக்கள் பங்கிட்டு உண்ணக்கூடியதும் அதே நேரத்தில் அவனது உடலுழைப்பிற்குத் தேவையான அனைத்து ஆற்றலும் மாட்டு மாமிசத்திலிருந்து கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆடு, கோழி மற்றும் மாட்டு மாமிசம் பொதுவாக இருந்தது. விழா நாட்களில் மாட்டை உணவிற்காக அறுப்பது, விருந்தினர் வரும்போது கோழி, ஆடுகளை அறுப்பது என்பது காலம் காலமாகத் தொடர்வதாகும்.

    கோமத யாகம், அசுவமேத யாகம், நரமேத யாகம் என்ற பெயர்களில் உயிரினங்களைத் தீயில் இட்டுப் பொசுக்கிய பார்ப்பனர்கள் இன்று மாமிசம் கொண்டுவராதே என்று கூறுகின்றனர். சரி உங்கள் ஆட்சி உங்கள் அலுவலகம் என்று விட்டால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கருவாடு விற்க தடை விதித்துவிட்டார்கள். கேட்டால் கருவாட்டு நாற்றம் அங்குவரும் வியாபாரத் தரகர்களுக்குப் பிடிக்கவில்லையாம். கருவாட்டு விற்பனையாளர்களை எல்லாம் கடையைக் காலிசெய்துவிடச் சொல்லிவிட்டார்களாம். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மட்டுமல்ல... மோடி பதவியேற்பு விழாவிலேயே இந்த முயற்சி செய்யப்பட்டு பின்னர் பன்னாட்டுத் தலைவர்களுக்காக மாற்றடப்பட்டதும் அது கிண்டலுக்கு உள்ளானதையும் நாம் அறிவோம். இப்போது நடந்தேவிட்டது அவ்வளவுதான்.

    ஏதேது இனிமேல் மாமிசம் சாப்பிடுபவர்கள் எல்லாம் இந்தியர்களே அல்ல என்று சட்டமியற்றிவிடுவார்கள் போலும்! விழிப்பாய் இரு தமிழா! இனி உனது உணவைக்கூட பார்ப்பானைக் கேட்டுத்தான் சாப்பிடும் நிலை வரப்போகிறது!

    - சரவணா ராஜேந்திரன்

    தமிழ் ஓவியா said...

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்களின் பங்கு


    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது கடந்த ஆண்டு 13.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

    பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான குற்றங்கள் 70.5 விழுக்காடும் பாலியல் குற்றங்கள் 60.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் 66.3 விழுக்காட்டினர் 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2013ஆம் ஆண்டு சிறுவர்கள்மீது மொத்தம் 31,725 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2012ஆம் ஆண்டு 27,936ஆக இருந்துள்ளது. திருட்டு வழக்குகளில் 7,969 சிறுவர்களும், தாக்குதல் சம்பவங்களில் 6,043 சிறுவர்களும் கொள்ளை வழக்குகளில் 3,784 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 விழுக்காட்டுச் சிறுவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தமிழ் ஓவியா said...

    புனைப்பெயரில் திரியும் ஜனநாயகம்


    அழுதுகொண்டிருந்தான் அவன்.
    யாரும் கவனிக்கவில்லை!
    பரட்டைத் தலை
    அழுக்கான முகம்
    வருவார் போவோரெல்லாம்
    அடித்த வாசனைத் திரவியம்
    ஆறியும் ஆறாமலும்
    உடல் முழுவதும் தீப்புண்கள்
    சிகரெட்டால் சுட்ட வடுக்கள்
    அங்கங்கே வெட்டுக் காயங்கள்

    சில சமயம்
    புதுச் சட்டையோடு அரண்மனையிலிருப்பான்
    பல சமயம்
    கிழிந்த சட்டையோடு தெருவிலிருந்தான்

    பிச்சைக்காரனுக்குப் பிச்சையிட்டான்
    அதே தெருவில் அவனே பிச்சையெடுத்தான்
    அவன் ஊமையென்று சந்தேகித்தார்கள்
    அவன் வாய் தைக்கப்பட்டிருந்தது
    கையை யாரோ முறித்திருந்தார்கள்

    பரிதாபப்பட்டவர்கள் கூட்டிச் செல்வார்கள் வீட்டிற்கு
    அடுத்த நாள்
    தெருவில் தென்படுவான்.
    அவனோடு புகைப்படம்
    எடுத்துக்கொண்டார்கள்

    பெயரைக் கேட்டேன்
    சிரித்துக்கொண்டே நின்றான்
    சர்வாதிகாரம் தன்னை
    ஜனநாயகமென்பதால்
    அடக்கு முறை பாசிசம்
    ஜனநாயகமென்று சொல்லிக்கொண்டு திரிவதால்
    மத வன்முறை அடிப்படைவாதம்
    ஜனநாயகமென்று சொல்லிக்கொள்வதால்
    தன் நிஜப்பெயரை தலைமறைவு வாழ்வுக்குக் கொடுத்துவிட்டு
    புனைப்பெயரில் திரிகின்றான் ஜனநாயகம்.



    - கோசின்ரா

    தமிழ் ஓவியா said...

    இன்றைக்கு 'ஓணம்' கதையை பார்ப்போமா?

    சோழ நாட்டில் திருமரைக்காடு (வேதாரண்யம்); அங்கு ஒரு சிவன் கோயில். அங்குள்ள சிவனின் மனைவிக்குப் பெயர் ஞானம் பழுத்த நாயகி என்பதாகும்.

    ஒரு நாள் தன் மனைவியோடு சிவன் புணர்ந்து கொண்டு இருந்தானாம்.(அர்த்தமுள்ள இந்து மதம்.....ம்)

    அந்த நேரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒளி குன்றி எரிந்து கொண்டிருந்ததாம். அந்த சமயத்தில் அங்கு வந்த எலி விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டு, எலியின் வால் திரியின் மேல் பட்டதால், தூண்டப்பட்டு ஒளி பிரகாசமாகிவிட்டதாம்.

    உடனே எலியைப் பார்த்து சிவன், நீ மூவுலகையும் அரசாட்சி செய்வாய்! என்று வரம் கொடுத்தானாம்.

    அந்த எலி,
    மாவலி என்னும் பெயரோடு பிறந்த அசுர குல அரசன் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் மூன்றையும் கட்டி ஆண்டானாம்.

    விண்ணுலகையும் மாவலி ஆண்டதால், இந்திர லோகத்தின் அதிபதியாகிய இந்திரன் கூட மாவலிக்குக் கட்டுப்பட்டவனாகிவிட்டான். பொறுக்குமா அவர்களுக்கு?

    அதே நேரத்தில் யாருக்கும் எந்த கேட்டையும் செய்யாமல் நல்லாட்சி புரிந்து, நல்ல பெயர் எடுத்தான் மாவலி!
    அசுர குலத்தவன் நல்லாட்சி செய்வதாவது! நல்ல பெயர் எடுப்பதாவது! விட்டுவிடுவார்களா? இந்திரனின் தகப்பனாகிய காசிப முனிவன், விஷ்ணுவிடம் மனு போட்டானாம். கடும் தவமிருந்து விஷ்ணுவிடம் வரம் வேண் டினானாம். விஷ்ணு தமக்கு மகனாகப் பிறந்து மாவலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மன்றாடினானாம். அதன்படியே வரமும் கிடைத்தது.

    (மூன்று உலகத்தையும் மாவலி கட்டி ஆள வேண் டும் என்று சிவன் கொடுத்த வரம் என்னவாயிற்று? சிவனை விட வைணவக் கடவுளுக்குச் சக்தி அதிகம் என்று காட்டுவதற்கு இதுபோன்ற கதைகள் போலும்!)

    ஒருமுறை யாகம் செய்த மாவலி தான தருமங்களைச் செய்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி காசிப முனிவருக்குப் பிறந்த வாமனன் (குள்ளப் பார்ப்பான் - சூழ்ச்சி என்று வந்தால் புராணங்கள் கூட பார்ப்பானைத்தான் தேடிப் பிடிக்கின்றன.) பிச்சைக்காரனாக (யாசகம் புருஷ லட்சணம் என்பதே பார்ப்பன தருமம் ஆயிற்றே!) சென்று மூன்று அடி மண்ணைக் கேட்டானாம். கேட்பாருக்கு இல்லை என்று சொல்லிப் பழக்க மில்லாத அந்தத் தர்மப்பிரபுவாகிய மாவலி எனும் அசுர அரசன் சம்மதித்தான்.

    சூழ்ச்சிக்காரக் குள்ளப் பார்ப்பனனாகிய வாமனன் பேருரு எடுத்து (விசுவரூபம்) ஓரடியை மண்ணுலகத்திலும் மற்றொரு அடியை விண்ணு லகத்திலும் வைத்து, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டானாம். என் தலையில் வை! என்றானாம் அந்த அப்பாவி; அவ்வளவுதான். தலையில் காலை வைத்து மிதித்து சிறையிலும் அடைத்தானாம்.
    இந்த நாளில் மாவலி வீட்டுக்கு வீடு வருகி றானாம். கேரளத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. வீட்டு வாசலில் கோலம் போட்டு வைக்கிறார்கள்- மாவலியின் வருகைக்காக. ஓணம் பண்டிகை என்பது இதுதான்.

    இந்தக் கதை மூடத்தனத்தின் மொத்தக் குத்தகை என்பது ஒருபுறம். இந்து மதத்தில் விஷ்ணு அவதாரம் எடுப்பதெல்லாம் அசுரர்களை அழிக்கத் தான் என்பதை மறந்துவிடவேண்டாம்.

    தீபாவளிக் கதையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே!

    நல்லவனாக இருந்தாலும் அவன் அசுர குலத்தவன் என்றால் - சூத்திரன் என்றால் அவனை ஆளவிடாதே- அழித்துவிடு! என்கிற ஆரிய தத்துவம்தான் இந்த வாமன அவதாரக் கதை!

    இங்கு மதம், கடவுள், பக்தி என்பதெல்லாம் நம்மை ஒழிப்பதற்கே! இந்தச் சூழ்ச்சி புரியாமல் கடவுள், காடாத்து என்று அலைவது பரிதாபமே!

    (நன்றி: விடுதலை 29.08.2012)