Search This Blog

10.9.14

பார்ப்பனராவது - தமிழராவது, ஆரியராவது- திராவிடராவது?

எழுதுகோல் இரண்டுடையாய் போற்றி! போற்றி!! 


பேசநா இரண்டுடையாய் போற்றி போற்றி! என்று அறிஞர் அண்ணா அவர்கள் புகழ்பெற்ற ஆரிய மாயை எனும் நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆபேதுபே எழுதிய நூல் ஒன்றில் (Hindu Manners and Customs)  பார்ப்பனர்கள்பற்றி வருணித்திருந் ததைத்தான் அண்ணா தமிழில் அழகாகச் சித்திரம் வரைந்து காட்டியிருந்தார்கள்!

நாக்கு மட்டும் பார்ப்பனர்களுக்கு இரட்டை என்பதல்ல; எழுதுகோலிலும் இரட்டை அளவுகோல் உண்டு. இன்றைக்குப் பார்ப்பனர்களுக்குச் சரியான தலைமை இல்லை, வழிகாட்டுதல் இல்லை என்பது தெரிந்த ஒன்றுதான்.
அதே நேரத்தில் அதிகாரப் பூர்வமற்ற தன்மையில் திருவாளர் சோ ராமசாமி போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர் நடத்தும் துக்ளக்கில் ஒவ்வொரு பக்கமும் ஆலகால ஆரிய நஞ்சுதான் வழிந்தோடும், திராவிடர் இயக்கம் என்றாலும், சரி, அந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களாக இருந்தாலும், சரி, திராவிட இயக்கத்தின் சாதனைகள் - செயல்பாடுகளாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது. குயுக்தியாக விமர்சிப்பது என்பதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கருதி அந்த ஏட்டை நடத்திக் கொண்டு வருகிறார்.

ஒரே இதழில்கூட முரண்பாடுகள் உண்டு என்றாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், வெறிபிடித்த இனப்பற்றின் காரணமாக ஆத்திரம் அறிவை மறைக்கும் என்பது பற்றிக்கூடக் கவலைப்படாமல் தான் தோன்றித்தனமாக எழுதி வருவது கண் கூடு!


22.8.2014 துக்ளக் தலையங்கத்தில் நீதிபதிகள் தேர்வு எனும் தலைப்பில் ஒரு தலையங்கம்,  அதில் ஓய்வு பெற்ற மார்க்கண்டேய கட்ஜூ நீதிபதிகள் நிய மனம் தொடர்பாக தெரிவித்த கருத்தினை தகவலை வரவேற்று எழுதினார். அது திமுக ஆட்சிக்கு எதிராக, இருந்தமையால் சபாஷ் போட்டு நர்த்தனம் புரிந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டீஸ் ராமச்சந்திர அய்யர்வாள் தன்பதி வேட்டில் (Personal Register)
தனது வயதையே திருத்தி, பதவி நீட்டித்துக் கொண்டதுபற்றியெல்லாம் அக்கிரகார வட்டாரத்தின் கண்களுக்கு, கருத்து களுக்குப் புலப்படவே புலப்படாது. அரைகுறையான தகவல்களாக இருந்தாலும் திமுகவை  நோக்கி அம்பு எய்தலாம் என்றால், அடுத்த கணமே அ(வ)ம்புகள் தயாராகி விடும்.

அதே துக்ளக் இதழில் கேள்வி - பதில் பகுதியைப் (பக்.21) புரட்டிப் பார்க்கலாம்.

கேள்வி: ஆரியர்களும் - திராவிடர்களும் இந்தி யாவில் குடியேறியவர்கள்தான்; இந்தநாட்டின் பூர்வீகக் குடி மக்கள் என்பவர்கள் பழங்குடியினர் மட்டுமே என்கிறாரே மார்க்கண்டேய கட்ஜூ?

சோ பதில்: ஒரு விஷயத்தையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறார் இவர். அறுசுவை நடராஜனின் சமையலில் இருந்து அணு விஞ்ஞானிகளின் திறமை வேறு, எதுவாக இருந்தாலும் இவரிடம் கருத்துகள் ரெடி, விமர்சனம் செய்வதற்குத் தயாராக இருக்கிறார். இந்த மாதிரி ஒரு கருத்துக் களஞ்சியத்தை யாம் கண்ட தில்லை என்று பதில் கூறியிருக்கிறார்.
ஆரியர்களோடு, திராவிடர்களையும் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கட்ஜு கூறியிருப் பதில் நமக்கு மாறுபாடு உண்டு என்றாலும், சோவின் இரட்டை வேடத்தை இதில் புரிந்து கொள்ள வேண்டும்.


இதோடு முடிந்துவிடவில்லை அதே இதழில் 22ஆம் பக்கத்தில் அடுத்துவரும்
 கேள்வி பதில்:

கேள்வி: தமிழர்கள் அனைவரும் ஹிந்தி மொழியைக் கற்க வேண்டும் என்கிறாரே மார்க்கண்டேய கட்ஜு?
சோ பதில்: கருத்துக் களஞ்சியம் கூறியுள்ள இந்தக் கருத்தை நாம் ஏற்கிறோம் பல வருடங்களாக நாமும் வற்புறுத்தி வருகிற விஷயம் இது. ஹிந்தி படிப்பதால் தமிழர்களுக்கு நன்மைதான் அதிகமே தவிர பாதிப்பில்லை என்று பதில் எழுதியுள்ளார்.

எப்படி இருக்கிறது? திமுகவுக்கு எதிராக கருத்துக் கூறினால் கட்ஜுக்குப் பாராட்டு இந்திக்கு ஆதரவாகப் பச்சைக் கொடி காட்டினாலும் பலத்த வரவேற்பு - கருத்துக் களஞ்சியம் என்ற கிரீடம் வேறு.
ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கூறினால் கேலி, கிண்டல்! பார்ப்பனர்களில் இந்தச் சாமர்த்தியத்தை நம் பார்ப்பனர் அல்லாத மக்கள் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
நாட்டில் நடப்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் ஆய்ந்து சொன்னால், அதனை வேறுவிதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் சோ போன்ற பார்ப்பன வகையறாக்கள் என்ன எழுது கிறார்கள்? எதைச் சொல்லுகிறார்கள்? என்பதைக் கூர்ந்து பார்த்தால், தந்தை பெரியார் கூறும் பொருளில் ஆழம் எத்தகையது என்பது விளங்காமற் போகாது.

பார்ப்பனராவது - தமிழராவது, ஆரியராவது, திராவிடராவது என்று மே(ல்)தாவியாகப்  பேசும் சில தமிழர்கள், கொஞ்சம் நிதானமாக பார்ப்பனர்களின் ஊடகங்களைப் பார்த்தாவது ஒரு முடிவுக்கு வர வேண்டாமா? 

தேர்தல் - நேரங்களில் அவர்கள் எடுக்கும் - முடிவுகளைப்  பார்த்த பிறகாவது சிந்தனைக் குக் கொஞ்சம் வேலை கொடுத்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா?
தப்பித் தவறிப் பார்ப்பனர்களில் தமிழ்ச் செல்வி என்றோ, கனிமொழி என்றோ, அன்புமணி என்றோ, கயல்விழி என்றோ, அன்பழகன் என்றோ, மதியழகன் என்றோ, அறிவுடை நம்பி என்றோ ஒரே  தமிழ்ப் பெயரைச் சூட்டிக் கொண்ட ஒரே ஒரு பார்ப்பனக் குடும்பத்தைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவாளைப் பொறுத்தவரை அவாள் அவளா கவேதான் இருக்கிறார்கள். நம்பளவாள் இருக் கிறார்களே இவாளைப் பொறுத்தவரை பார்ப்பனீ யத்தின் தொங்கு சதைகளாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை! வேதனை யிலும் வேதனை! வெட்கக்கேடும் கூட!!

                                  --------------------------------”விடுதலை” தலையங்கம் 9-9-2014

4 comments:

தமிழ் ஓவியா said...


அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியாவில் கொண்டாட்டம்!


உலகின் பல நாடுகளிலும் உலகத் தலைவர் பெரியார் பிறந்த நாள் விழா!

வாஷிங்டன்,செப்.10- உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது.

பெரியார் பன்னாட்டமைப்பு வாஷிங்டனில்...

நாள்: 13.9.2014 பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை

இடம்: எல்கிரிட்ஜ் கிளை நூலகக் கூட்ட அரங்கு, 6540 வாஷிங்டன் பிஎல்விடி, எம்டி 21075

வரவேற்பு: திருமதி கல்பனா மெய்யப்பன், தலைவர், கிரேட்டர் வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்.

உரையாற்றுபவர்கள்: இளம் நாத்திகர்களின் போராட்டம் தலைப்பில் திரு.ஹேமந்த் மேத்தா (சிகாகோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் கணிதவியல் பாடங் களில் 2004 ஆம் ஆண்டில் இரட்டை பட்டம் பெற்றவர்.

உயிரியல் மற்றும் கணிதத்தில் 2007ஆம் ஆண்டுமுதல் பயிற்றுவித்து வருபவர். 2010ஆம் ஆண்டில் டீபால் பல் கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலை பயின்றுள்ளவர். இவர் பயின்ற பல்கலைக்கழகங்களில் மதசார்பற்ற மாணவர் குழுவை ஏற்படுத்தி தலைவராக பொறுப்பில் இருந்தவர்.

நம்பிக்கையைக் கடந்து இலாப நோக்கற்ற அறக்கட்டளை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருபவர். சுதந்திர சிந்தனைக் காகத் தொடர்ந்து பேசி அமெரிக்க அய்க்கிய நாடுகள் முழுவதும் வருபவர். தி எதியிஸ்ட் நாத்திகம் என்கிற தலைப்பில் உள்ள பிளாக்மூலம் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் நம்பிக்கை இல்லாதவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டுவருபவர்.)

பெண்களுக்கான அதிகாரம் என்கிற தலைப்பில் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய பாரீஸ் நெல்சன் கிளெண்டெனிங் பேசுகிறார்.
பாரீஸ் நெல்சன் கிளெண்டெனிங் அமெரிக்காவின் அரசியல்வாதி ஆவார்.

ஜனநாயக கட்சியின் உறுப்பின ராவார். 18.1.1995 முதல் 15.1.2003 வரை மேரிலாண்ட் 59 ஆவது ஆளுநராக பணிபுரிந்தவர். 1982 ஆம் ஆண்டு முதல் 1994 வரை மேரிலாண்டில் பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியின் செயல் அதிகாரியாக இருந்துள்ளார். வளர்ந்துவரும் அமெரிக்காவின் தலைமைத்துவ பயிற்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

அதன்படியே ஆளுநரானார். பொரு ளாதாரம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவதன்மூலம் நாட்டில் மறுகட்டமைப்பை ஏற்படுத்தவும் நாடுமுழுவதும் பல்வேறு தரப்பட்ட தலைவர்களுடன் பணியாற்றி வந்துள்ளார்.

டாக்டர் அரசு மற்றும் டாக்டர் அசாமா ஆகியோரின் விவாதங்களைத் தொடர்ந்து , பெரியார் குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியை திரு. நாஞ்சில் பீட்டர் மற்றும் கொளந்தவேல் ராமசாமி நடத்துகிறார்கள்.

திரு. எம்.பி. சிவா நன்றி கூறுகிறார்.

தொடர்புக்கு:
டாக்டர் அரசு செல்லய்யா- (410) 404-7222
டாக்டர் சோமஇளங்கோவன்- (708) 361-1998
டாக்டர் சொர்ணம் சங்கர் 443 854-0181

சிங்கப்பூரில்...

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றமும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவும் இணைந்து குருதிக் கொடை வழங்கும் விழாவை சிங்கப்பூரில் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊட்ரம் பார்க்கில் உள்ள எச்.எஸ்.ஏ. ரத்த வங்கிக் கட்டடத்தில் நடைபெற வுள்ளது.

நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அரசின் சுற்றுப்புற, நீர்வளத் துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளார்.

குருதிக் கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 81185747 என்ற கைப்பேசியில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

16 வயதுக்குமேல் 60 வயதுக்குள் உள்ளோர், சுமார் 45 கிலோ எடைக்கு மேலும், ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவு 12.5-க்கு மேலும் இருந்தால், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி இருந்தால் அழைத்து, மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
16, 17 வயதில் உள்ளோர் பெற்றோர் அனுமதியுடன் குருதிக் கொடை வழங்கலாம்.

மலேசியாவில்...

மலேசியாவிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது என்று மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம் கோலாலம்பூரிலிருந்து, கழகத் தலைவர் ஆசிரியருக்குத் தொலைப்பேசிமூலம் தெரிவித்துள்ளார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/87443.html#ixzz3Cy8rpek7

தமிழ் ஓவியா said...


இந்தியைப் பரப்புவது - திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்து பி.ஜே.பி. ஆய்வு



புதுடில்லி, செப்.10_- இந் தியைப் பரப்புவது குறித் தும், திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்தும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழு ஆய்து செய்து வருகிறதாம்.

டில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற மத் திய உள்துறை அமைச்ச கத்தின்கீழ் செயல்படும் இந்திய அலுவல் மொழிக் கான நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட் டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திரு வள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசுத் துறை களில் நாட்டின் தேசிய மொழியான இந்தியைப் பயன்படுத்துவது குறித் தும், அலுவல் மொழியாக இந்தியை நாடு முழுவதும் பயன்படுத்த வகுக்கப்படும் கொள்கை முடிவுகள் குறித் தும் அலுவல் மொழிக் கான நாடாளுமன்றக் குழு, மத்திய அரசுக்கு யோசனை களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், மத் தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல் படும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழுவின் முதலா வது கூட்டம் டில்லியில் திங்கள்கிழமை கூடியது. மொத்தம் 30 பேர் கொண்ட இக்குழுவில் மக்களவையில் இருந்து 20 பேரும் மாநிலங்களவை யில் இருந்து 10 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் தலைவராக உள்ளார். முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழுவின் தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, குழுவின் செயல் திட்டம், எதிர்கால பணிகள் குறித்து இறுதி செய்வதுபற்றி உறுப்பி னர்கள் விவாதித்தனர். இக்குழுவில் இடம் பெற் றுள்ள உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில், அலு வல் மொழியாக நாம் இந்தியைப் பயன்படுத்தி வருகிறோம்.

அதே சமயம், நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் விளங் குகிறது. அதுபோல பல மாநிலங்களின் மொழி களும் தனிச்சிறப்புடன் விளங்குகின்றன. அவற் றுக்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும்.

உலகின் மிகவும் பழைமை யான மொழியாக தமி ழின் அடையாளமாக திருக்குறள் போற்றப்படு கிறது. உலகப் பொது மறையாக திகழும் அதை எழுதியவர் திருவள்ளுவர்.

அவரது பிறந்த நாள் ஜனவரி மாதத்தில் தமி ழர்களால் கொண்டாடப் படுகிறது. தமிழுக்கும், திரு வள்ளுவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மத் திய உள்துறையின் உயர் அமைப்பாகக் கருதப்படும் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு திரு வள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்.

இதன்மூலம் பல மொழி கள் பேசப்படும் இந்தியா வில் அனைவருக்கும் மத் திய அரசு அங்கீகாரம் அளிக் கும் செய்தியை நாட்டுக்கு நம்மால் உணர்த்த முடியும் என்றார்.

இதையடுத்து, ராஜ்நாத் சிங் பேசுகையில், தருண் விஜயின் கருத்து வரவேற்புக்குரி யது. அவரது யோச னையை நாம் நிச்சயம் பரிசீலிக்கவேண்டும். அடுத்த கூட்டம் நடை பெறும்போது இந்த விவ காரத்தில் உரிய முடி வெடுக்கப்படும் என்றார்.

பின்னர் திருவள்ளு வரின் சிறப்புகளை விளக் கிய தருண் விஜய், வட மாநிலங்களில் உள்ள சுமார் 500 பள்ளிகளில் திருக்குறளின் பெருமை களை விளக்கியும், திருவள்ளுவரின் பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண்டாடவும் திட்ட மிட்டுள்ளதாகக் கூறினார். அவரது முயற்சிக்கு ராஜ் நாத் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாநிலங்களவையில் தருண் விஜய் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திரு வள்ளுவர் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாட வேண் டும் என்று அவர் மாநிலங் களவையில் பேசினார்.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழி யாக அறிவிக்கவேண்டும் என்று குடியரசுத் தலை வரிடமும் அவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://www.viduthalai.in/e-paper/87450.html#ixzz3Cy95g8dL

தமிழ் ஓவியா said...

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும், நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல.
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://www.viduthalai.in/e-paper/87452.html#ixzz3Cy9rIw66

தமிழ் ஓவியா said...


பேராசிரியர் அருணனின் காலந்தோறும் பிராமணீயம் நூலுக்கு விருதும் - ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும்


சென்னை, செப்.10_ காலந்தோறும் பிராம ணீயம் என்ற பேராசிரியர் அருணன் அவர்கள் ஆய்வு நூலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளன.

கு.சின்னப்பபாரதி இலக் கிய விருது அறக்கட்டளை யின் சார்பில், அதன் நிர் வாகிகளைக் கொண்ட 6-வது ஆண்டு பரிசளிப்பு விழாவிற்கான கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அறக் கட்டளையின் தலைவர் கு.சின்னப்பபாரதி தலைமை தாங்கினார். வருகின்ற அக்டோபர் 2- ந் வியாழக் கிழமை காந்தி ஜெயந்தி தினத்தன்று நாமக்கல் கவின் கிஷோர் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு வழங்கப்படும் இனங்களான வாழ்நாள் சாதனையாளர் விருது, நாவல், சிறுகதை, கட்டுரை. மொழிபெயர்ப்பு மற்றும் சமூக சேவை ஆகியவற் றிற்கு பரிசு பெறுவோர் விபரங்களை கூட்ட முடி வின்படி அறக்கட்டளை யின் தலைவர் கு.சின்னப்ப பாரதி வெளியிட்டார்.

அறக்கட்டளையின் விருதுக்கு உலக அளவில் வரப்பெற்ற ஒவ்வொரு இனத்திற்கும், கு.சின்னப் பபாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இறுதியில் சிறந்த படைப்புக்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு இலட்சத்து தொண்ணூ றாயிரத் துக்கான பண முடிப்பு வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில், வாழ்நாள் சாதனையாளர் என்ற தலைப்பிற்கு, முதன்மைப் பரிசாக,காலம் தோறும் பிராமணியம் மற்றும் கலை இலக்கிய ஆய்வுக்காக தமிழ்நாட் டைச் சார்ந்த பேராசிரியர் அருணன் அவர் களுக்கு விருதும், ரூபாய் ஒரு இலட் சத்திற்கான பணமுடிப்பும் வழங்கப்படுகிறது.

நாவல் வரிசையில், குடைநிழல் என்ற நாவ லுக்கு, இலங்கையைச் சார்ந்த தெளிவத்தை ஜோசப் என்ற எழுத்தா ளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது


நான்கு சிறுகதைத் தொ குப்பின் ஆசிரியர்களான, தவிக்கும் இடை வெளிகள் _ எழுத்தாளர் உஷா தீபன், தமிழ்நாடு இப்படி யுமா? _ எழுத்தாளர் வி.ரி இளங்கோவன், பாரீஸ் ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - _ எழுத் தாளர் ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் வெந்து தணிந்தது காலம் - எழுத்தாளர் மு.சிவ லிங்கம், இலங்கை ஆகிய நான்கு சிறு கதைத் தொகுப்புக்களின் ஆசிரியர்களுக்கும் விருதும், தலா ரூபாய் பத்தாயிரமும் வழங்கப்படுகிறது.

நூல் தேட்டம் என்ற கட்டுரைத் தொகுப்பிற்கு லண்டனைச் சார்ந்த என். செல்வராஜா நூலகவியலா ளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப் படுகிறது.

மொழி பெயர்ப்புக்காக சல்மான் ருஷ்டியின் நள்ளிரவின் குழந்தைகள் என்ற நூலின் மொழி பெயர்ப்பாளர் கா.பூரண சந்திரன் மற்றும் கு.சின் னப்ப பாரதியின் பாலைநில ரோஜா என்ற நூலின், சிங்கள மொழிபெயர்ப் பாளர் உபாலி நீலாரத்தி னாவிற்கு விருதும் தலா ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது,

சமூக சேவைக்காக இலங்கை மலையக மக்களின் கலை இலக்கிய சமூகப் பணிக் கான வாழ்நாள் சாதனை யாளர் விருதாக ஆண்டனி ஜீவாவிற்கு விருதும் ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங் கப்படுகிறது.

மற்றும் பெங்களுரு தமிழ் சங்கம் ஆற்றிவரும் தமிழ்பணிக்காக விருதும் ரூபாய் அய்யாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது என அறக் கட்டளையின் தலைவர் கு.சின்னப்ப பாரதி அறி வித்தார்.

இக்கூட்டத்திற்கு,செயலாளர் கே.பழனிசாமி, உறுப் பினர்கள் சி.ரங்கசாமி மற்றும் கு.பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/87465.html#ixzz3CyAKpXpu