Search This Blog

25.4.14

பெரியார் பார்வையில் நல்லதங்காள் கதை-குசேலர் சரித்திரம்

"இரணியன் அல்லது இணையற்ற வீரன்"

இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ஜுனன் வெகுவீரமுடன் நடந்து கொண்டதைக் காண எனக்கும் இரணியனாக வேஷம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகிறது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன். நாடகங்கள் எல்லாம் குறைந்தது 2மணி நேரத்தில் முடிவு பெறவேண்டும். மத்தியில் பாட்டுக்களைக் கொண்டு வந்து நுழைப்பதால் கதையின் ஸ்வாரஸ்யம் குறைந்துபோகிறது; உணர்ச்சி மத்தியில் தடைப்படுகிறது. நாடகங்களில் இரண்டுவிதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பிப்பது. வசன ரூபமாய் காண்பிப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். 

பல உபந்யாசங்கள் செய்வதைவிட இத்தகைய நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தி ஓர் கவர்ச்சியை உண்டாக்குகிறது. நம் எதிரில் நடந்த மாதிரிதான் ஆதியில் இரணிய நாடகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை பார்ப்பனர்கள் தமக்குச் சாதகமாக திருத்தி உபயோகப் படுத்திக்கொண்டார்கள். பழைய நாடகங்களை நாம் சீர்திருத்திப் புதிய முறையில் நடத்திக் காண்பிக்க வேண்டும். நாடகங்களில் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த பழைய நாடகங்கள் மக்களை மூடர்களாயும், அர்த்தமற்ற கொள்கையுடை யவர்களாயும் செய்து இருக்கின்றன. நாடகத்தின் மூலம் அறிவு வளர இடமிருக்கிறது.

 நல்லதங்காள் கதை உலகம் அறிந்தது. நல்லதங்காள் மிகவும் கற்புடையவள் என்று கூறப்படுகிறது. வாழைப்பட்டையை விறகாய் வைத்து எரித்ததாகவும், மணலை அரிசியாகச் சமைத்ததாகவும், உயரத்தில் இருந்த மாங்கனியை கைக்கு கீழே தருவித்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வளவு பதிவிரதைத் தன்மை வாய்ந்த ஒருவர் வாழ்ந்த நாட்டிலே 12 வருடகாலம் தொடர்ச்சியாய் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டதென்றால் அவருடைய பதிவிரதத் தன்மை எவ்வளவு ஒழுக்கத்தில் இருந்து இருக்க வேண்டும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். (கூட்டத்தில் ஒரே சிரிப்பு; ஆரவாரம்)

அதே போன்று குசேலர் சரித்திரம் பிரமாதமாய் நடத்திக் காண்பிக்கப்படுகிறது. பார்ப்பனர்கள் தாங்கள் பிச்சை ஏற்பதற்குச் சாதகமாய் அதை தெய்வீக கதையாய் சிருஷ்டித்துவிட்டு பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்துங்கூட அவன் தரித்திரனாய் இருந்தான் என்றால், பகுத்தறிவு உள்ளவன் எவனாவது நம்பமுடியுமா? வருடத்திற்கு ஒரு குழந்தை பெற்றால்கூட முதல் குழந்தைக்கு 27 வருடமாகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 67 இருக்கலாம். (கூட்டத்தில் ஒருவர் ஒரு முறைக்கு 4 குழந்தை பெற்று இருக்கலாம்) அப்படி இருந்தாலும் வயது வந்த பிள்ளைகள் கூலி ஜீவனம் செய்தாவது மேற்படி குடும்பத்தை ரக்ஷித்து இருக்காதா? இதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் ஏதாவது பொருள் இருக்கிறதா? இப்படியாக ஒவ்வொரு கதையும் பாமர மக்களின் அறிவை மழுங்கச் செய்வதாய் இருக்கின்றது.

ஆகையால், நாடகங்களை புதிய முறையிலே திருத்தி மக்களுக்குப் பயன்படும்படி செய்ய நாடகாசிரியர்கள் முன்வரவேண்டும். வெறும் சங்கீதமும், பாட்டும் வேண்டியதில்லை. கருத்து இருந்தால் போதும். இந்த நாடகம் சென்னையில் இரண்டுமுறை காண்பிக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் இதுவே மூன்றாம் முறை. இனி இம்மாதிரி நாடகங்களை நாடெங்கும் நடத்தினால் மக்கள் உணர்ச்சி பெற்று மூட நம்பிக்கைகளையும், அர்த்தமற்ற கொள்கைகளையும் உடைத்தெரிவார்கள். தோழர் அர்ஜுனன் தலைமையில் நடந்த இந்த நாடகத்தை நான் பாராட்டுகிறேன்.

--------------------------------- வாணியம்பாடியை அடுத்த அம்பலூரில் 04.07.1936 இரவு பாரதி சபையாரால் நடத்தப்பெற்ற "இரணியன் அல்லது இணையற்ற வீரன்" நாடகத்துக்கு தலைமையேற்று ஆற்றிய உரை. "குடி அரசு" சொற்பொழிவு 19.07.1936

27 comments:

தமிழ் ஓவியா said...


மோடி பிற்படுத்தப்பட்டவரா? இல்லை என்கிறார் அய்க்கிய ஜனதா தள தலைவர்


மேகசனா(குஜராத்), ஏப்.25- மோடி பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவைச் சேர்ந்தவர் அல்ல என்று அய்க்கிய ஜனதா தளம் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனால் மோடி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

குஜராத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அய்க்கிய ஜனதா தளம் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. கடந்த 10 நாட்களாக மோடியின் திருமணம் குறித்த சர்ச்சை நிலவுகிறது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது அவரது ஜாதி பற்றிய சர்ச்சை எழுந்து இருக்கிறது. பாஜக உயர் மட்ட ஜாதிகளுக்கு மட்டும் உரிய கட்சி அல்ல என்று உறுதிபடுத்தும்வகையில் மோடி தனது ஜாதி பற்றி குறிப்பிடுகிறார். ஆனால், மோடி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் 120கோடி மக்களை ஏமாற்றி வரு கிறார் என அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் கோவிந்த பாய் யாதவ் தெரிவித் துள்ளார்.கடந்த 1975ம்ஆண்டு பக்ஷி கமிஷன், மோடி சார்ந்துள்ள ஜாதிப்பிரிவை இதர பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்க்கவில்லை. அந்த கமிஷனை பாபு பாய் ஜாய்பாய் படேல் அமைத் திருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79227.html#ixzz2zwf6i8BW

தமிழ் ஓவியா said...


நாடெங்கும்எதிர்ப்புஅலைகள்!


வாரணாசியிலே மோடியை எதிர்க்கின்றனர் பல்கலைக் கழக மாணவர்கள்!

வாரணாசி ஏப்.25- மோடிக்கு வாரணாசியி லேயே மாணவர்கள் மத் தியில் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது.

வாரணாசியிலேயே மாணவர்கள் மோடிக்கு எதிர்ப்பு!

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக இம் மாதம் 28, 29 ஆகிய தேதி களில் பிரச்சாரம் செய்ய டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து அச் சங்கத்தின் தலைவர் அக்பர் செத்ரி கூறுகையில், தேர்தல் வர லாற்றில் முதல் முறையாக நாளேடு, இணையதளம் ஆகிய ஊடகங்களில் முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடி யின் பிரச்சாரம் இடம் பிடித் துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மாயத் தோற் றம் ஏற்பட்டுள்ளது. எனவே, உண்மை நிலையை எடுத் துக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக, சங்கம் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் மாற்று ஜனநாயகக் கொள் கைகளின் அடிப்படையில், அவருக்கு எதிராக மாண வர்கள் குழு வாராணாசியில் பிரச்சாரம் செய்யவுள்ளது என்றார்.

நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை: மன்மோகன் சிங் பேட்டி

பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள வைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவரது வீடு கவுகாத்தி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சருமட் டோரியா பகுதியில் அமைந் துள்ளது. இந்த தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடை பெற்றது.

தேர்தலில் ஓட்டு போடு வதற்காக பிரதமர் மன் மோகன் சிங் தனது மனைவி குர்சரண் கவுருடன் நேற்று டில்லியில் இருந்து விமானப் படை சிறப்பு விமானத்தில் கவுகாத்தி சென்றார். பின் னர் அங்கிருந்து விமானப் படை ஹெலிகாப்டரில் கனப்பாரா பகுதிக்கு அவர் கள் சென்றனர். அவர்களை மாநில முதல் அமைச்சர் தருண் கோகாய் மற்றும் காங்கிரஸ் தலைவர் புவ னேஷ்வர் கலிட்டா ஆகி யோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து திஸ்பூருக்கு சென்ற அவர்கள், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர்.

ஓட்டளித்துவிட்டு வெளியே வந்த பிரதமர் செய்தியாளர்களிடம் கூறு கையில், 'நாட்டில் எந்த மோடி அலையும் வீசுவ தாக நான் நினைக்க வில்லை. இது வெறும் ஊடகங் களால் உருவாக் கப்பட்டது. நாட்டில் எங் கேயும், எந்த மோடி அலை யின் தாக்க மும் இல்லை என்றார்.

அவர் மேலும் கூறும் போது, 'காங்கிரசுக்கு இறங்குமுகமாக இருப்ப தாக நான் நினைக்க வில்லை. தேர்தல் முடிவு களுக்காக மே 16-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள். நாங்கள் பெரும்பாலான இடங் களில் வெற்றி பெறு வோம்' என்று தெரிவித்தார். மேலும், நாட்டின் ஜன நாயக நடை முறையில் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறிய அவர், தேர்தலில் அனைத்து வாக்காளர் களும் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் தனது மனைவி யுடன் தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். மோடிமீது வழக்கு பதிவு செய்க: காங்கிரஸ் குஜராத் முதல் அமைச் சர் நரேந்திரமோடி, வார ணாசி தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய் தார். அதையும், அதற்கு முந் தைய அவரது வாகன ஊர் வலத்தையும் தொலைக் காட்சியில் ஒளி பரப்பியது, அப்பட்ட மான தேர்தல் விதிமீறல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா கூறினார்.

அதாவது, நேற்று தேர்தல் நடைபெற்ற 117 தொகுதிகளிலும் தொலைக்காட்சிகளில் இந் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட் டது, விதிமீறல் ஆகும் என்று அவர் கூறினார். எனவே, மோடி மற்றும் இதில் தொடர்புடைய பா.ஜனதா தலைவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத் துக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

நன்கு திட்டமிட்டு, ஓட்டுப்பதிவு நாளில் மனு தாக்கலுக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79223.html#ixzz2zwfIZC2B

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்




தமிழ்நாட்டில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப் பதிவான மய்யங்களில் தேர்தல் பார்வை யாளர்கள் சோதனை செய்வார்கள். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்குப் பதிவு மய்யங்களில் மறு வாக்குப் பதிவு நடைபெறும்.

- பீரவீன்குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழ்நாட்டில் மோடி அலையோ, லேடி அலையோ இல்லை!
- தொல். திருமாவளவன்

தே.மு.தி.க. தலைவர் மின்னணு இயந்திரத்தில் வாக்கைப் பதிவு செய்தபோது, அவரின் மனைவி பிரேமலதா உதவி செய்துள்ளார். இது அப்பட்டமான விதி மீறல் என்று கருதப்படுகிறது.

ஏப்ரல் 9ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தியிருந்த போது, நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.51 கோடி என்று குறிக்கப்பட்டு இருந்தது. அதே மோடி நேற்று உ.பி. வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1.65 என்று காணப்படுகிறது. 15 நாள்களில் திடீரென்று மோடிக்கு ரூ.14.34 லட்சம் எகிறியது எப்படி? என்ற வினா இப்பொழுது எழுந்துள்ளது. மோடி என்றாலே சிக்கல் நாயகர் தானோ!

பணபட்டுவாடா நடந்துள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. -ஜி.கே. வாசன், மத்திய அமைச்சர்

தருமபுரியில் பணபட்டுவாடா செய்தவர்களை விரட்டிக் கொண்டு ஒடிய இளைஞர் காவல் படைவீரர் வினோத் கிணற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

வாக்காளர்களுக்கு அஇஅதிமுக முன் பணம் கொடுத்துள்ளதே - அதைப் பற்றிக் கேட்க மாட் டீர்களா? - செய்தியாளர்களிடம் விஜயகாந்த்

தமிழ்நாடு முழுவதும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் 750 கைதிகள் அஞ்சல் மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.


Read more: http://viduthalai.in/e-paper/79228.html#ixzz2zwfSoEK9

தமிழ் ஓவியா said...


சபரிமலை அலங்கோலம் பக்தர்கள் போர்க் கோலம்!

கொச்சி ஏப்.25- சபரி மலை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் மனித உரிமை மீறல்களுக்கு ஆளா கின்றனர்' என்று கேரள மாநில மனித உரிமை ஆணை யத்திடம் சபரிமலை அய்யப்ப சேவா சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இந்த புகார் மனு, தேசிய குறை தீர்ப்பு அமைப்பான ஆம்புட்ஸ்மனின் விசா ரணைக்காகப் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

இது குறித்து கொச்சியில் அந்த சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் எஸ். சுதர்சன் ரெட்டி, கருநாடக மாநில பொதுச்செயலாளர் பி.ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆண்டுதோறும் அய் யப்பனைத் தரிசிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த சுமார் 4 கோடி பக்தர்கள் சபரி மலைக்கு வருகின்றனர். அய்யப்பன் கோயிலை நிர் வகித்து வரும் திருவி தாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு சார்பில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வில்லை.

தேவஸ்தான தங்கும் விடுதியில் அரசியல் வாதிகள் போன்ற வி.அய். பி.களுக்கு 600 அறைகளை ஒதுக்கிவிட்டு பக்தர்களுக் காக 400 அறைகளை மட்டுமே அளிக்கின்றனர். முக்கிய பூஜைக் காலங் களில் தங்கும் விடுதிக் கட்டணமாக ரூ.25,000 வரை தேவஸ்தானம் வசூ லித்தது.

இதனால் வேறு வழி யின்றி மலைப்பகுதியில் ஆங்காங்கே சுகாதாரமற்ற இடத்தில் தரையில் படுத்து தூங்கவேண்டிய அவல நிலைக்கு பக்தர்கள் ஆளா கின்றனர். வயதான பெண் கள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கென தனிக் கழிப்பிட வசதியும் இல்லை. போதிய குடிநீர் வசதி கிடையாது.

சில ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் உணவக உரிமையாளர்களின் நெருக்கடிக்கு இணங்கி, சபரிமலையில் அமைக் கப்பட்டுவந்த அன்னதான மண்டபப் பணிகளை தேவஸ்தானம் நிறுத்தி விட்டது.

மகர விளக்கு, மண்டல காலப் பூஜை, படிப்பூஜை போன்ற விசேஷ காலங் களில் நாள்தோறும் ஒரு சாப்பாடு ரூ.22 என்ற கணக்கில், சுமார் 18,000 பக்தர்களுக்கு எங்கள் சங் கத்தின் சார்பில் வழங்கப் படுகிறது. தனியார் உணவு விடுதிகளில் சாப்பாடு விலை ரூ.80 ஆகும்.

ஆனால் உணவுக் கழிவு களை அகற்றுவதற்கும், பாதுகாப்புத் தருவதற் காகவும் தினசரி ரூ.10 ஆயிரத்தை சபரிமலை அன்னதான அறக்கட்ட ளைக்கு செலுத்தவேண் டும் என்று தேவஸ்தானம் நிர்பந்திக்கிறது.

சபரிமலையில் அடிப் படை வசதிகளை மேம் படுத்துவதற்கான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளும் செயல் படுத்தப்படாமல் உள்ளன. இது குறித்து கேரள மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு அளித்தோம். அது, தேசிய குறைதீர்ப்பு அமைப்பான "ஆம்புட்ஸ் மனுக்கு' அனுப்பி வைக் கப்பட்டுள்ளது' என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/79224.html#ixzz2zwfaYDGh

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை


ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

Read more: http://viduthalai.in/page-2/79230.html#ixzz2zwfw7wV2

தமிழ் ஓவியா said...


தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் வாக்குமூலம்!


16ஆவது மக்களவைத் தேர்தல் மிக விசித்திர மாகவே நடந்துள்ளது; இந்தவிசித்திரத்துக்கான வித்து தேர்தல் ஆணையமாகும்.

திருவாளர் டி.என். சேஷன் அய்யர் தேர்தல் ஆணையராக வந்த கால முதல் தேர்தல் ஆணையத் திற்குப் புதுவாலும், இறக்கைகளும் முளைக்க ஆரம்பித்து விட்டன.

சுவர்களில் தேர்தல் சின்னங்களை எழுதக் கூடாது, சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது; கட்சிக் கொடி தோரணங்களைக் கட்டக் கூடாது.

தம் சொந்த வீட்டில், தாம் சார்ந்த கட்சியின் கொடியைக்கூடப் பறக்க விடக் கூடாது; தலைவர்களின் சிலைகள்கூட கண்களுக்குத் தெரியக் கூடாது என்று கூறி மக்களால் மதிக்கப்படும் தலைவர்களின் சிலை களுக்கெல்லாம் முக்காடு போட்டார்கள்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போட்டுத் தீர்ப்பு வாங்கிய பிறகுதான் தலைவர்களின் சிலைகளை மூடுவது நிறுத்தப்பட்டது.

தேர்தல் ஆணையம் என்பது தனியதிகாரம் கொண்டதாயிருக்கலாம்; அதே நேரத்தில் ஒரு ஜனநாயக நாட்டில் வானளாவிய அதிகாரம் என்பது யாருக்கும் கிடையாது. அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

சின்னச்சின்ன விஷயங்களில் எல்லாம் மலையளவு கவனம் செலுத்தி ஊதிப் பெருகச் செய்த தமிழ்நாட்டு தேர்தல் ஆணையம், மிக முக்கியமான பிரச்சினையில் கோட்டை விட்டது எப்படி?

பணப் பட்டுவாடா செய்ததைக் கட்டுப்படுத்த முடியவில்லை; அது பெரும் சவாலாகவே இருந்தது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். இதன் மூலம் தேர்தலில் வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பதைப் பொறுப்பில் உள்ள அதிகாரியே ஒப்புக் கொண்டு விட்டாரே!

இருப்பதிலேயே மிகவும் மோசமான குற்றம் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது; இதனையே தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் வேறு எதற்காக இருக்கிறது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகத் தான் இருக்கும்.

தமிழக அமைச்சர் ஒருவர் 50 கட்சித் தொண்டர் களுடன் வாக்குச் சாவடிக்குள் நுழைந்துள்ளார்.

தஞ்சைத் தொகுதியில் சீல் வைக்கப்பட்ட வாக்கு எந்திரம் உடைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து தஞ்சை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு நேரிடையாகச் சென்று விசாரணை நடத்தியபோது காவல்துறை அதிகாரி முரண்பட்ட முறையில் பேசி இருக்கிறார்.

இப்பொழுதுகாவல்துறைகூட தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தேர்தல் ஆணையமும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும், தலைமைத் தேர்தல் ஆணையர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டாமா?

தேர்தல் ஆணையராக ஜெ.எம். லிங்டோ இருந்தார். (14.6.2001 முதல் 7.2.2004 வரை) குஜராத் மதக் கலவரம் - அரசு அதிகாரங்களைப் பயன்படுத்தி நரேந்திரமோடி யால் நடத்தி முடிக்கப்பட்ட கால கட்டம் அது.

பல்லாயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் இருந்தனர். நிவாரண உதவிக்கூட சரிவர அளிக்கப் படாத நிலையில், குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முறைப்படி நடத்த வேண்டிய தருணம் அது.

குஜராத்தில் அசாதாரண நிலையைக் கணக்கிட்டு குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை ஒத்தி வைத்தார் - லிங்டோ.

அப்பொழுது மத்தியில் வாஜ்பேயி தலைமையில் பி.ஜே.பி. ஆட்சிதான் நடந்து வந்தது. ஆணையர் முடிவை எதிர்த்து - குடியரசு தலைவர் தலையிட வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொள்ளப்பட்டது. (இந்து முஸ்லிம் கலவரத்தைத் தொடர்ந்து இந்து வாக்கு வங்கி - இஸ்லாமியர் வாக்கு வங்கி என்று பிரிந்திருந்த தால் பெரும்பாலான இந்துக்களின் வாக்குகளை எளிதாகத் தட்டிப் பறித்து விடலாம் என்பது பி.ஜே.பி.யின் கணக்கு!

லிங்டோவின் முடிவு தங்களுக்குச் சாதகமாக இல்லை என்று உணர்ந்த நிலையில், குஜராத் மாநில முதல் அமைச்சராகவிருந்த நரேந்திர மோடி என்ன கூறினார் தெரியுமா?

ஜே.எம். லிங்டோ ஒரு கிறிஸ்தவர் - சோனியாவும் ஒரு கிறிஸ்தவர் அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று சொன்னதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எதிலும் அவருக்கு இந்துத்துவா மதப் பார்வைதானே! நன்றாகப் பதிலடி கொடுத்தார் லிங்டோ வீட்டு வேலைக்காரர்கள் முணு முணுப்பதுபோல பேசி வரும் நரேந்திரமோடி நாததிகம் என்ற ஒன்று உள்ளதுபற்றி அறியாதவராக இருக்கிறாரே - என்று பதிலடி கொடுத்தாரே!

அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் - குறிப்பாக தமிழ்நாட்டில் இயங்குவதாகக் கூறப்படும் தேர்தல் ஆணையம் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறது என்பது ஊரறிந்த இரகசியமாகவே ஆகிவிட்டது. இதற்கு எந்த முத்திரையைக் குத்துவதோ!

Read more: http://viduthalai.in/page-2/79232.html#ixzz2zwg68t9U

தமிழ் ஓவியா said...


பணப் பட்டுவாடாவை தடுப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது ஒப்புக் கொள்கிறார் தேர்தல் அதிகாரி


சென்னை, ஏப்.25- இந்த மக்களவைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுப்பது மிகப் பெரிய சவாலாக இருந்ததாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

மக்களவைத் தேர்தலில் இந்த முறை 1.3 கோடி வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்த்துள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் நல்ல பயன் கிடைத்ததாக மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை அதிகாரிகளும் தெரிவித் தனர். இந்த உத்தரவால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

பணப் பட்டுவாடா

இந்த மக்களவைத் தேர்தலில், வாக்குக்கு பணம் அளிப்பதை தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பணம் வழங்குவதை தடுப்பதற்காக 7 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கண்காணிப்புப் படைகள், மண்டல குழுக்கள் அமைக் கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. தமிழகத்தில் வாகனச் சோத னைகள் நடத்தப்பட்டதன் மூலம், ரூ.25.56 கோடி ரொக்கமும், ரூ.27.74 கோடி மதிப்புள்ள ஜவுளிகளும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுமா: மக்களவைத் தேர் தலை ஒட்டி, தமிழகத்தில் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில், வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 20 நாட்கள் இடைவெளி உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் முழுவதுமாக தளர்த்தப்படாது. அரசின் சில நடைமுறைகளுக்கு அனு மதி வழங்கப்படும். அதுகுறித்த விரி வான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளி யிடப்படும் என்றார் பிரவீன்குமார்.

Read more: http://viduthalai.in/page-2/79236.html#ixzz2zwgGgRRg

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துணுக்குகள் - சித்திரபுத்திரன்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக, ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும்.

ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

Read more: http://viduthalai.in/page-7/79231.html#ixzz2zwh9Plig

தமிழ் ஓவியா said...


பூசாரிகளின் யோக்கியதை


(இந்துமத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் வருடம் நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் வருடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.

நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடி யாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது. அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர்.

அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்ப வர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்கு கள் உள்ளன. இந்த விதி விலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.

பொருளறியாத புலம்பலே மந்திரம்!

அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந் திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது. தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலையில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை..

சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழிபாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப் படுகிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

தெய்வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார்.

தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhPbwYb

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது. - பக்ஸ்டன்

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhX0aKa

தமிழ் ஓவியா said...

திருநீற்று மோசடி

(எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. - ஆ.ர்)

விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
நீறு புனைவார் வினையை நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர் செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

சிவபுராண புளுகு: கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது.

அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பாவத்திற்குப் பரிகாரம்: தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேச வாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத் துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே.

இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhdtosA

தமிழ் ஓவியா said...


புதிய கடவுள் புல்லட் மோட்டார் பைக்கிற்குக் கோவில்!


முப்பத்து முக்கோடி தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், முதற்கொண்டு, எலி, மூஞ்சுறு, நாய் (பைரவன்), பன்றி (வராக அவ தாரம் மகாவிஷ்ணு), கழுதை மூதேவி வாகனம் எல்லாம் தொழுவதற்குரிய அல்லது சகுன சாங்கியங்களுக்குரிய கடவுள்கள் நம் நாட்டில்!

இதெல்லாம் இல்லாமல் ஆங்காங்கே, சனீஸ் வர பகவானுக்கு, திருமணம் செய்து வைக்க அருள்பாலிக்கும் திருமணேஸ்வரர், சொறி, சிரங்கு, படை போக்க தனிக்கடவுள், வைத்தீஸ் வரன் என்ற ஹெல்த் டிபார்ட்மெண்ட் கடவுள் மாதிரி, டஜன், குரோஸ், மில்லியன் கணக்கில் உள்ள கடவுள்கள் போதாது என்று, ராஜஸ்தானில் புல்லட் மோட்டார் சைக்கிளும் புதிய அவதாரம் எடுத்து, புல்லட் மோட்டார் சாமியாகி, ஏகப்பட்ட வசூலைக் குவிக்கிறதாம் வடநாட்டில்!

இதோ அந்த செய்தி:

19.4.2014 தினமலர் நாளேட்டில் வந்துள்ளபடி (பக்கம் 6, புதுச்சேரி பதிப்பு):

ராஜஸ்தானில், ஜோத்பூர் நகரில், பழைய, புல்லட் மோட்டார் பைக்கை, கடவுளாக வழி படும் விசித்திர நடைமுறை பின்பற்றப்படு கிறது. இந்த பைக்கிற்காக, அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

பயபக்தியுடன் வழிபட்டு...

பா.ஜ.க.வைச் சேர்ந்த, முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலத் தின், ஜோத்பூர் நகரில், ஓம் பன்னாஸ் புல்லட் மந்திர் என்ற கோவில் மிகவும் பிரபலம். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்தக் கோவில் வழியாகச் சென்றால், உதறல் எடுத்துவிடும். இருசக்கர வாகனத்தில் செல்லும், ஒவ்வொரு வரும், கண்டிப்பாக, இந்தக் கோவிலுக்கு முன் வண்டியை நிறுத்தி, அங்கிருக்கும் புல்லட் கடவுளை, பயபக்தியுடன் வழிபட்டு, பிரசாதம் பெற்றுச் செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர்.

அப்படி, பைக்கை நிறுத்தாவிட்டால், போகும் வழியில், விபத்தைச் சந்திக்க நேரிடும் என்ற நம்பிக்கை, இந்தப் பகுதி மக்களிடையே நிலவுகிறது. பூனம் என்ற பெண்தான், இந்தக் கோவிலின் பூசாரி யாக உள்ளார். விசித்திர நம்பிக்கை குறித்து அவர் கூறியதாவது:

இது, ரொம்ப சுவாரசியமான சம்பவம்! 25 ஆண்டுகளுக்குமுன்பு, இந்த வழியாக, ஓம் சிங் ரத்தோர் என்பவர், புல்லட் பைக்கில் சென்ற போது, விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அவர் ஓட்டிச் சென்ற பைக்கை, போலீஸ் ஸ்டேச னுக்கு எடுத்துச் சென்றனர். அடுத்த நாள், அந்த பைக், விபத்து நடந்த இடத்தில் கிடந்தது.

இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த போலீசார், மீண்டும் அந்த பைக்கை போலீஸ் ஸ்டேசனுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அடுத்த நாளும் அந்த பைக், விபத்து நடந்த இடத்திலேயே கிடந்தது. இது, அந்தப் பகுதி மக்களிடையே பீதியையும், ஆச்சரியத் தையும் ஏற்படுத்தியது.

இதனால், விபத்து நடந்த இடத்திலேயே, அந்த புல்லட் பைக்கை வைத்து, வழிபடத் துவங்கினர்.

நாளடைவில், அந்த பைக்கிற்காக கோவி லும் கட்டப்பட்டது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் இருந்து தப்பிப்ப தற்காக, இங்கு வண்டியை நிறுத்தி வழிபாடு நடத்துகின்றனர். புல்லட் கடவுளுக்கு, மது பானங்களைப் படைத்து வழிபடும் சடங்கும் பின்பற்றப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

தந்தை பெரியார் பொதுக்கூட்டங்களில் பேசு வார்; நல்லவேளை வெள்ளைக்காரன் வந்து, இந்த மைல்கல், பர்லாங் கல் (அப்போது கிலோ மீட்டர் அமுலுக்கு வராத காலம் என்பதால்) இவைகளை நட்டதோடு, வெள்ளையடித்து, எண்களையும் போட்டான்; இல்லையேல், ஒவ்வொரு கல்லுக்குப் பக்கத்திலும் ஒரு பார்ப்பான் நின்று, இது மைலீஸ் வரர் கும்பிடுங்கோ!, இது பர்லாங்கீஸ்வரர், கும்பிடுங்கோ! என்று உங்கள் காசைப் பிடுங்கி இருப்பார்களே! என்று பலத்த சிரிப்பு - கைத்தட்டலுக்கிடையே கூறுவார்கள்!

அது வெகுவாக மாறி, மக்களுக்கு அறிவு வருவதற்குப் பதிலாக, இப்படி புதிது புதிதாக புல்லட் சாமிகள் புறப்பட்டு விட்டனவே!

இனி, வீடியோ சாமி, செல்சாமி, கம்யூட்டர் - அய்பேடு சாமி - அய்யப்பனுக்குத் தம்பி சாமி போல் வந்தாலும் ஆச்சரியமில்லை!

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு?

பாரு இவ்வளவு மடத்தனத்தில்

எங்கள் பூமி ஞான(சூன்ய)பூமி!

என்றே பாடு! பாடு!!


- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/e-paper/79310.html#ixzz302SRlAmp

தமிழ் ஓவியா said...


பெருமாள் போய் பெத்த பெருமாளா?


பெருமாள் என்ற பெயர் நன்றாக இல்லை என்று சொல்லி, பெத்த பெருமாள் என்று பெயர் வைத்துக் கொண்டதைப்போல - நரேந்திர மோடியின் சொத்துக் கணக்கு வதேரா தொகுதிக்கும், வாரணாசிக்கும் இடையில் ரூ.14.31 லட்சம் வேறுபட்டது ஏன் என்ற கேள்விக்கு, பி.ஜே.பி. புதிய கதையை ஜோடித்துள்ளது.

மோடியின் வங்கிக் கணக்கிற்குக் கட்சியிலிருந்து மாற்றப்பட்ட தொகையால் இது நடந்தது என்று கூறப்படுகிறது.

கட்சியிலிருந்து எப்படி இன்னொருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்? அப்படி மாற்றப்பட்டதற் கான ஆதாரம் என்ன என்பது போன்ற வினாக்கள் எழுந்துள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/79306.html#ixzz302Sktloq

தமிழ் ஓவியா said...


ஜாதி மறுப்புத் திருமணம் செய்த பெண் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட கொடுமை!

மாண்டியா, ஏப்.26- கருநாடகா மாண்டியா மாவட்டத்தில் மானவள்ளி வட்டத்தை அடுத்த கண்ணஹள்ளிப் பகுதியில் இளம்பெண் ஜாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் அவர் உறவினரால் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டார். மைசூரை அடுத்த மெட்டஹள்ளி பைரவேசுவரா நகரைச் சேர்ந்த முருகேஷ்-மங்கலம்மா ஆகியோரின் மகள் ஷில்பா(19). கடந்த ஜனவரியில் இவர் சொந்த ஊரான நேலம கண்ணஹள்ளியைச் சேர்ந்த அபிஜித் என்பவரைத் திரு மணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த புதனன்று அபிஜித்தின் உற வினர்களான பட்டுசாமி-பிரமிளா இணையர் இருவரும் ஷில்பாவை ஒரு விழாவுக்கு அழைத்துள்ளனர். வியாழ னன்று முதுகுத்தூரில் ஒரு விழாவுக்கு அழைத்துச் சென்ற இடத்தில் ஷில் பாவை தனியாக அழைத்துச்சென்று கயிற்றால் இறுக்கிக் கொலை செய்ய முயற்சித்தனர். ஷில்பா தப்பிக்க முயன்ற போது, பெட்ரோலை அவர்மீது ஊற்றித் தீவைத்துள்ளனர். ஷில்பாவின் கதறல் கேட்டு கிராமத்தினர் திரண்டு வந்த போது, அவ்விணையர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

கடுமையான தீக்காயங் களுடன் ஷில்பாவை மீட்டு மாளவள்ளி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்கு மாண்டியாவில் உள்ள விம்ஸ் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். வியா ழக்கிழமை பிற்பகலில் சிகிச்சை பல னின்றி மருத்துவமனையிலேயே ஷில்பா இறந்துவிட்டார். காவல்துறை கண்காணிப்பாளர் பூஷன் போரோஸ் இதுகுறித்து கூறும் போது, தப்பி ஓடிய இருவரில் பிரமிளா வைக் கைது செய்துள்ளதாகவும், தலை மறைவாகி உள்ள பட்டுசாமியைத் தேடி வருவதாகவும் கூறினார். மேலும், ஷில் பாவின் கணவனான அபிஜித் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண் டுள்ளதாகவும் கூறினார்.

ஷில்பாவின் தாய் மங்கலம்மா மாளவள்ளி காவல்நிலையத்தில் அளித் துள்ள புகாரில்,
அவர் மகள் ஷில்பாவை அவளின் கணவனின் உறவினர்கள் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, என் கணவர் தமிழ்நாட்டில் பிழைப்புக்கு சென்றுள்ளார். என் மகளின் இறுதி மரி யாதையை நடத்தக்கூட பணம் இல் லாமல் அரசிடம் கேட்டுள்ளோம்.

சமூக நல நிறுவனங்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளன. மாண்டியாவின் பொறுப்பு வட்டாட்சியரும், மத்தூர் வட்டாட்சியருமாகிய மஞ்சே கவுடா அப்பெண்ணின் தாயார் மனு கொடுத்த பிறகுதான் அதுபற்றி முடிவு எடுக்க முடியும் என்று கூறினார்.

மாநில அரசு மாநில மகளிர் ஆணை யத்துக்கு தாமாகவே இதுகுறித்து புகாரைப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மாநில அமைச்சர் உமாசிறீ பெங் களூருவில் கூறும்போது, கலாச்சாரத் துறை சார்பில் செய்யக் கூடிய அனைத்து உதவிகளையும் உறுதி யாக செய்து குற்றவாளிகளை சட்டத் தின்முன் நிறுத்துவோம் என்றார்

Read more: http://viduthalai.in/page-2/79328.html#ixzz302T7sLH3

தமிழ் ஓவியா said...


பரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா


செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களுக்குப் பிறகு உலகமே முழுகிப் போய்விட்டதாக தமிழ்நாட்டில் சில அழுக்கு மூட்டைகள் போடும் கூச்சல்களையும் இதைப் பார்ப்பனர்கள் தங்கள் தேர்தலுக்கு ஒரு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூலிகளையும் காலிகளையும் விட்டு கூப்பாடு போடச் சொல்வதையும், பொதுஜனங்கள் கவனித்திருக்கலாம்.

அத்தீர்மானங்களில் மிகவும் ஆபத்து என்று சிலரால் கருதப்பட்ட கல்யாண ஒப்பந்த ரத்து தீர்மானத்தைப் பற்றி வெளிப்படையாய் பேசுவதற்கு தைரியமில்லாத சில பயங்கொள்ளிகள் இரகசியமாக விஷமப் பிரசாரம் செய்வதும் பலர் அறிந்திருக்கலாம்.

ஆனால், செங்கல்பட்டு தீர்மானத்தை அமலுக்கு கொண்டுவர பரோடா அர சாங்கத்தார் முந்திவிட்டார்கள் என்பதாக 29.03.1929ஆம் தேதி இந்து சுதேசமித்திரன் சுயராஜ்யா ஜஸ்டிஸ் முதலிய பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது பரோடா சமஸ்தானத்தில் நடந்த, இனி நடக்கப் போகும் கல்யாணங்கள் எவையாயினும் அவற்றை தம்பதிகள் இஷ்டப்பட்டபோது ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அதைக் கொண்டுவந்தவர்கள் அம் மசோதாவின் ஒவ்வொரு பிரிவுக்கும் சாஸ்திர ஆதாரங்களை காட்டியிருக் கின்றார்களாம். இனி இதைக் கேள்விப்படும் தமிழ்நாட்டுக் கிணற்றுத் தவளைகள் பெண்களை காப்பாற்ற பரோடா சமதானத்திற்கு ஓடுவார்களா? அல்லது இங்கேயே மூலையில் உட்கார்ந்து கொண்டு பெண்களின் பெருமையை பேசிக் கொண்டு வயிறு வளர்ப்பார்களா? என்பது பொறுமையுடன் எதிர்பார்க்க வேண்டிய விஷயமாகும்.

பெண்களின் சுதந்திரத்திற்கு முதலாவது அவர்களுக்குக் கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை அளிப்பதே முக்கியமானதாகும்! இது விஷயமாய் நமது செங்கற்பட்டுத் தீர்மானத்திற்குப் பிறகு அமெரிக்காவில் இம்முறை சில பாகங்களில் நடைபெறுவதையும் ஜெர்மனி பார்லிமெண்டில் ஒரு மசோதா கொண்டுவந்திருப்பதையும், ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி,

ஸ்காண்டிநேவியா, செக்கோஸ்ல வாக்கியா, ஹாலண்டு, நியூசிலாந்து, ரஷ்யா, டென்மார்க், கானடா முதலிய தேசங்களிலும் கல்யாண ரத்துக்கனுகூலமாக உள்ள சட்டங்களையும் ஆதாரமாக எடுத்துக் காட்டி பரோடா சட்டசபையில் ஒரு மசோதா கொண்டு வந்திருப்பதையும் பார்த்துவிட்டோம். இனியும் நமது தமிழ் நாட்டிலும் பழந்தமிழ் மக்களில் ஏறக்குறைய அநேக வகுப்புகளில் இவ்வழக்கம் இன்றும் இருந்து வருவதையும் நடைபெற்று வருவதையும் பார்க்கின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 31.03.1929

Read more: http://viduthalai.in/page-7/79299.html#ixzz302WCaF9s

தமிழ் ஓவியா said...

மாளவியாவின் பித்தலாட்டம்

திரு.பண்டிதர் மதன் மோகன் மாளவியா சென்னை மாகாணத்திற்குள் கால் வைத்தது முதல் சமயத்திற்குத் தகுந்தபடி பேசி ஜனங்களை ஏமாற்றி வந்ததும் அந்தப் புரட்டுகளைப் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களும் வெளிப்படுத்தியதும் மித்திரனிலும் திராவிடனிலும் பார்த்திருக்கலாம்.

அவர் சென்ற இடங்களிலெல்லாம் கோவிலுக்குள் தீண்டத்தகாதவர் என்கிறவர்கள் போவதற்கு இந்து சாஸ்திரங்கள் இடங்கொடுக்கிறதென்று சொல்லிக் கொண்டே வந்துவிட்டு தாம் அதிக சாஸ்திரம் பார்த்திருப்பதாயும் சொல்லிவிட்டு கடைசியாக சென்னையில் 22ஆம் தேதி கூடிய சாஸ்திரிகள் கூட்ட மொன்றில் சிக்கி தீண்டத்தகாதவர்கள் என்பவர்கள் கோயிலுக்குள் பிரவேசிப்பதற்குச் சாஸ்திரத்தில் இடமில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டாராம். எனவே திரு.மாளவி யாவின் பித்தலாட்டம் பார்ப்பனர்களின் அசல் அயோக்கியத் தனத்திற்கு ஒரு உதாரணமாகும்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 26-05-1929

Read more: http://viduthalai.in/page-7/79299.html#ixzz302WM8Btd

தமிழ் ஓவியா said...


பூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசய்யங்காரும்


திரு.எ. சீனிவாசய்யங்கார் இந்த வருஷத்திய தேர்தலுக்கு ஒரு புதிய தந்திரம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தின் மீது எல்லா அரசியல் கொள்கைகளையும்விட தீவிரமாய் இருக்கவேண்டும் என்கின்ற ஆத்திரத்தின் மீது பூரண சுயேச்சையே தமது அரசியல் கொள்கை என்று வெளிப்படுத்திக் கொண்டார்.

கல்கத்தா புரட்சி இயக்க உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.சுபா சந்திரபோசும் சமீபத்தில் ருஷியாவில் சுற்றுப் பிரயாணம் செய்ததின் பயனாய் சமத்துவ உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.ஜவஹர்லால் நேருவும் திரு.சீனிவாசய்யங்காரையும் அவரது பூரண சுயேச்சைக் கொள்கையையும் நம்பி இவருடன் சேர்ந்தார்கள்.

ஆனால் திரு.சீனிவாசய்யங்கார் பூரண சுயேச்சைக் கூப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் யோக்கியதை இல்லை என்பதையும் அரசாங்க அடக்கு முறையின் வேகத்தையும் தெரிந்துதான் பூரண சுயேச்சை இயக்கத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதோடு கூடவே இனியும் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்.

இவர் தொட்டது துலங்காது, என்றிருந்தாலும் என்றைக்கிருந்தாலும் ஓட்டர்களை ஏமாற்ற ஏதாவது ஒரு புரட்டு வேண்டியிருப்பதால் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்தரம் ஆகியவர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு கொள்கையை வெளிப்படுத்துவார்.

ஏனென்றால் சீனிவாசய்யங்கார் கூப்பிட்டபோது ஓடவும் வேண்டுமென்று கூப்பிட்டவுடன் ஓடிவரவும் அய்யங்கார் வார்த்தையை வேதவாக்காகக் கொண்டு பிரச்சாரம் செய்யவும் தமிழ் நாட்டில் இந்த இரண்டு கனவான்கள் தான் உண்டு, மற்றபடி, இப்போது அய்யங்கார் கூட இருக்கும் எந்தப் பார்ப்பனரல்லாதாரும் அய்யங்காரை விட்டு பிரிந்து மறுபடியும் அவருடன் சேருவதானால், மானம் ஈனம் சுயமரியாதை என்பவைகளைப் பற்றி சற்றாவது யோசித்துப் பார்ப்பார்கள் ஆனால், மேல்கண்ட இரண்டு கனவான்களுக்கும் இந்த விஷயங்களில் சிறிது கூட கவலை கிடையாது. ஏனென்றால் முற்றுந்துறந்த ஞானியிடம் மானம் ஈனம் இருக்க இடமேது?

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 26-05-1929

Read more: http://viduthalai.in/page-7/79300.html#ixzz302dgWQyn

தமிழ் ஓவியா said...

வரதராஜூலுவின் விஷமப் பிரச்சாரம்

தமிழ்நாடு பத்திரிகையில் திரு.வரதராஜுலு அவர்கள் ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியார் செய்திருந்த ஆலயப் பிரவேசத் தீர்மானத்தைத் திருப்பூரில் கூடிய தேவஸ்தானக் கமிட்டி மீட்டிங்கில் கேன்சல் செய்து விட்டதாகவும், அதற்கு ஈ.வே.ராமசாமியும் சம்மதித்ததாகவும் இதனால் ராமசாமி குட்டிக்கரணம் போட்டு விட்டதாகவும் பொருள்பட அயோக்கியத் தனமாகவும், விஷமத்தனமாகவும் ஒரு செய்தியும் போட்டு, அதற்காக உபதலையங்கமும் எழுதியிருக்கிறார்.

திருப்பூர் மீட்டிங்கில் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாய் எழுதியிருப்பது பொய் என்றும், முதலாவது அம்மாதிரி ஒரு தீர்மானமே அன்றைய மீட்டிங்குக்கு வரவில்லை என்றும், நாம் உறுதி கூறுவதுடன், மேலும் அந்த மீட்டிங்கிற்கு திரு.ஈ.வெ.ராமசாமி போகவில்லை என்றும், அவர் அன்று பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர் மகாநாட்டு விஷயமான வேலையில் ஈடுபட்டு இருந்தார் என்றும், தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

எனவே இதனால் தமிழ்நாடு பத்திரிகையின் யோக்கியதையையும் அது இதுவரை நடந்துவந்த மாதிரியையும் கோவில் பிரவேச விஷயத்தில் அதற்குள்ள பொறாமையையும், இழிகுணத்தையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதன் மூலம் நமக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதைத் தவிர, வேறு எவ்வித நஷ்டமும் உண்டாகிவிடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தவிர அம்மாதிரி ஏதாவது, ஒரு சமயம் தேவஸ் தானக் கமிட்டியார் அத்தீர்மானத்தை ரத்து செய்வார்களானால் கண்டிப்பாய் திரு. ஈ.வெ.ராமசாமியார், கமிட்டி வைஸ் பிரசிடெண்ட் தானத்தையும், மெம்பர் தானத்தையும் ராஜினாமாக் கொடுத்துவிட்டு அத்தீர்மானத்தின் தத்துவத்தைச் சட்டத்தின் மூலமோ, சுயமரியாதை சத்தியாக்கிரகத்தின் மூலமோ, அமலில் கொண்டுவரும் வேலையில் இறங்குபவரே ஒழிய உடம்புக்குச் சவுகரியமில்லை என்று சாக்குச் சொல்லிக் கொண்டு புறமுதுகு காட்டி ஓடிவிடமாட்டார் என்பதைத் திரு.வரதராஜுலுவுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79300.html#ixzz302dqEl2E

தமிழ் ஓவியா said...


நாஸ்திகத்திற்கு முதல் வெற்றி


நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும் பல கூலிகளை விட்டு விஷமப் பிரச்சாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்தில் தேர்தல் பிரச்சாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்கும் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும்.

இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன் பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரிட்சை நடத்திப் பார்த்தாகிவிட்டது.

அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் தானம், அதாவது சுதேசமித்திரன் இந்து ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் தானம் காலாவதி ஆனதும் அந்த தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டு விட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா, சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள்.

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர் களாயிருந்தும் ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும், அவரது சகபாடிகளும், திரு.புர்ரா. அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம்,

சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப்பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரச்சாரம் செய்தும் கடைசியாய் திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்ப ரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே, திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள்.

இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை. எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது, கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர் களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண் டிருக்கவும்,

அதாவது ஐஸ்டிஸ் கட்சியின் ஜீவநாடி என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, செனட் தொகுதி யில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல் லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் நாஸ்திகத்திற்கு, (அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத் திற்கு) முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப்பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 07-04-1929

Read more: http://viduthalai.in/page-7/79298.html#ixzz302e2e2rr

தமிழ் ஓவியா said...

வாழ்க! வாழ்க!! டாக்டர் சுப்பராயன் வாழ்க!

முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் நாம் எதிர் பார்த்தது போலவே தமது ஆதிக்கத்தில் உள்ள இலாக்காக்கள் மூலம் நமது பெண்மணிகளுக்கு மூன்றாவது பாரம் வரையில் இலவசமாய்க் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அடைந்து போற்றுவதுடன் மனமார வாழ்த்துகின்றோம்.

மற்றும் தீண்டாதவர்கள் என்பவர்களுக்கும் விதவைகள் என்பவர்களுக்கும் கல்வி விஷயத்தில் ஏதாவது உதவி செய்வதுடன் பெண்கள் உபாத்தியாயர்களாவதற்குத் தகுந்தபடி ஏராளமான போதனை முறைப் பாடசாலை களையும் ஏற்பாடு செய்யவேண்டுமாய் விழைகின்றோம்.

குடிஅரசு -துணைத் தலையங்கம்- 12-05-1929

Read more: http://viduthalai.in/page-7/79298.html#ixzz302eGOswP

தமிழ் ஓவியா said...


பாட்டுச்சூரியன்!


- கவிஞர் கண்ணிமை

தமிழகத்தின் கடல் சார்ந்த நெய்தலில்
பொங்கிப் பெருக்கெடுக்க வந்த
தமிழ் நுரை!

அணுத்துகள்களில்
எழுத்துக்கள் பிசைந்து
அச்சுப் பலகையில் ஊற்றிஅடித்த
காரமும் இனிப்பும்
கலந்த கவிதை!

இறையருள் அர்ச்சனை ஒன்று
செய்யுங்கள் கோர்த்தவொரு காலத்தில்
மொழியையும் மனிதனையும்
முகப்பில் வரைந்து வெளியிட்ட
ஈரோட்டுப் புத்தகத்தின்
புதிய வார்ப்பு!

பெரியாரின் வெப்ப மண்டலத்தில்
கொப்பரையில் காய்ச்சி வடித்த
ஆவி பறக்கும் அனல்.
பனிப்படலங்களும்
மாயப்புகைத் தோற்றங்களும்
பயணத்தை மறித்து நிறைபோது
தெளிந்த காட்சிப் புலங்களை
அறிவுறுத்திய
மின்னல் கொடி தவழ்ந்த மேகம்!
பாசி படர்ந்து அழுக்கு அப்பிய
நெஞ்சில்
அமிலம் ஊற்றிக் கழுவிப்
பளிச்சிட வைத்த பகுத்தறிவுப் பாத்தி

உப்புக் கரிக்கும் எழுத்துகளில்
நஞ்சு தடவிய சொற்களில்
கொடுங்கோலாய் நடந்த
ஆட்சிபீடத்தை
கந்தகம் வெடிக்கும் பாக்களால்
தகர்த்துத் தூளாக்கிச்
சரிய வைத்த
புதுவையின் வலிய போர்ப்பரணி

கோயில் குளத்தில் படித்துறைகளில்
வரையறுக்கப்பட்ட
கருவறை நின்ற புகை மண்டபங்களில்
மதில் சுற்றிய
வீதிக் குடியிருப்புகளில்
அழுக்கு மண்டிய
பட்டுப் பீதாம்பரங்களில்
இழித்தும் பழித்தும்
பேசும் உரைகளில்
சாதிக்கவசம் அணிந்த சாத்திரங்களின்
மூடி கழற்றிய முடைநாற்றம் போக்கி
தூசு தட்டித் துடைத்து
மெல்லப் புதுக்கி மெருகிட்டு
ஆதித் தலைமுறையின்
அறிவார்ந்த ஏடுகளின்
வீரமும் காதலும் விளைந்து நின்ற
தமிழன்நீ! என்று
தகதகத்துப் பாடினான்!
குகை திறந்து புறப்பட்ட
கொடுவரிப்புலி!
கனன்று கொழுந்துவிட்டு எரிந்த
காட்டு நெருப்பு
விலங்கை அறுத்து விடுவித்த
புரட்சிபரவும் புதுக்கவிதை
பாவேந்தன் என்னும்
பாட்டுச்சூரியன்!

Read more: http://viduthalai.in/page3/79269.html#ixzz302fYozAU

தமிழ் ஓவியா said...


மூடப்பக்திக்கு அளவேயில்லையா?


மத்தியப் பிரதேசம் மொரனா மாவட் டத்தில் உள்ள ஒரு கோயிலில் பக்தை ஒருவர் தன் நாக்கையறுத்துக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தியுள்ளார். கடவுளுக்கு நாக்கைக் காணிக்கையாக்கினால் எல்லா நோய்களும் தீரும் என்று யாரோ சொன்னார்களாம். அதை நம்பிய பக்தை இந்த விபரீதத்தைச் செய் துள்ளார்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்பதற்கு இதைவிட
வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை!

Read more: http://viduthalai.in/page3/79271.html#ixzz302fhEZnt

தமிழ் ஓவியா said...


திருந்தாத திரை உலகத்தினர்


தமிழ் மீது பற்றுக்கொண்ட அறிஞர் களும், தமிழார்வலர்களும், செய்யாத, செய்யத்தவறிய செயலை தமிழுக்காக தந்தை பெரியார் அவர்கள் செய்தார்கள். அதுதான் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்.

தமிழைக்கற்பவர்களும், எழுதுபவர் களும் விரும்பக்கூடிய வகையில் எளிமை யாக தமிழை கொண்டு போய்ச்சேர்க்கும் முயற்சியில் இறங்கி தமிழில் உள்ள எழுத்துகளின் உருவைச் சீரமைத்தார். எடுத்துக்காட்டாக என்பதை லை ஆக வும் ச் என்பதை னை ஆகவும் க் என் பதை ணா வாகவும் மாற்றியமைத்தார். இது போன்ற தமிழில் உள்ள பல எழுத் துகளைச் சீரமைத்து எளிமையாக்கினார். அதோடு நின்றுவிடாமல் தான் நடத்திய அனைத்துப்பத்திரிகைகளிலும் அதனை நடைமுறைக்கு கொண்டுவந்து இன்று வரை ஏறத்தாழ 80 ஆண்டுகளாக அந்த எழுத்துரு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தந்தை பெரியார் மறைவிற்கு பிறகு 1978 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை அன்றைய தமிழக அரசு கொண்டாடிய நேரத்தில் அய்யா வுடைய இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமான நடைமுறைக்கு கொண்டு வந்தார். அதன் விளைவு பிற்காலத்தில் மாணவர்கள் தமிழைக் கடினமில்லாமல் எழுத முடிந்தது. பின்பு கணினியிலும் தமிழை எளிதாக கொண்டு வர முடிந்தது. இப்போது சமூக வலை தளங்கள் மூலமாக உலகெங்கும் தமிழ் தங்கு தடையின்றிச் செல்கிறது.

இவ்வளவும் தமிழை வெறுத்தவர், தமிழர் அல்லாதவர், திராவிடம் என்ற பெயரால் தமிழ் உணர்வை மழுங்கச் செய்தவர் என்று போலி தமிழ் தேசிய வாதிகளால் கோபத்தோடு அர்ச்சிக்கபடும் அறிவுலக ஆசான் அய்யா பெரியாரால் ஏற்பட்ட மாற்றம் அல்லவா!

இது பற்றி எல்லாம் எதுவும் தெரி யாமல், அறியாமல் தங்கள் பிழைப்பு நடந்தால் போதும், தான் சுகமாக இருந் தால் போதும் என்று எண்ணும் திருந்தாத கேடுகெட்ட ஜென்மங்களாகத் திரியும், தாங்கள் ஏதோ மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு வேறுபட்டு செய்கிறோம் என்று தங்களைத் தாங்களே தட்டிக் கொடுத்துக்கொண்டு புகழ்தேடி அலை யும், தமிழ்திரைப்படத்துறையைச் சேர்ந்த வர்கள் (இதில் சில பேர் விதிவிலக்கு) தமிழ் மொழியிலேயே பயன்படுத்தாத பழைய எழுத்துருக்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

இப்போது வெளிவந்துள்ள, வெளி வரப்போகின்ற திரைப்படங்களான தெனாலிராமன் என்று எழுதவேண்டிய திரைப்படங்களின் பெயர்களை தெச்லி ராமன், கனவுத் தொழிற்சார்ஹ் என்று தாங்கள் இயக்கும் படங்களுக்கு பழைய எழுத்துருக்களை பயன்படுத்தி தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டுகின்றனர். அவர்களுக்குத் தெரியாதா இந்த எழுத்துரு வழக்கத்தில் இல்லை என்று? தெரிந்தும் செய்கிறார்கள் என்றால் இது அசல் திமிர் தானே 35 ஆண்டுகளுக்கு முன்னால் பயன் பாட்டில் இருந்த ரூபாய்த் தாள்களையோ நாணயங்களையோ இப்போது பயன் படுத்த முடியுமா? இவர்கள் இயக்கும் படங்களுக்கு ஊதியமாக அந்த ரூபாய் தாள்களை கொடுத்தால் ஏற்பார்களா? அவை இப்போது செல்லாது. பயன் பாட்டிலும் கிடையாது என்று சொல் வார்கள் அல்லவா! அதுபோல் தானே எழுத்துரு மாற்றங்களும் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?

நம்மைப்பிடித்திருக்கும் 5 நோய்களில் திரைப்படமும் ஒன்று என்று பகுத்தறிவு தந்தை அன்று கூறியது இப்போதும் பொருந்தித்தான் வருகிறது.

இனிமேலாவது இது போன்ற நட வடிக்கைகளில் ஈடுபடாமல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். வீணாக மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று உரிமையுடன் எச்சரிக்கின்றோம்.

- இசையின்பன்

Read more: http://viduthalai.in/page5/79274.html#ixzz302gS5Gnk

தமிழ் ஓவியா said...


பூமியை போன்று வாழ தகுதியுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் நாசா மய்யம் சக்தி வாய்ந்த தொலைநோக்கியுடன் கூடிய கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் ஆய்வு செய்து புது கோள்கள் மற்றும் நட்சத் திரங்களை நிழற்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி போன்ற புதிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பூமியில் இருப்பது போன்று நட்சத்திரங்கள் உள்ளன. மேலும் திரவ நிலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. மேலும் அங்கு பூமியை போன்ற தட்பவெப்பம் நிலவுகிறது.

இதனால் இந்தக் கோள் பூமியை போன்று வாழ தகுதி உடையதாக கருதப்படுகிறது. இந்த கோளும் பூமி அளவு உள்ளது. எனவே, இக்கோள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page5/79276.html#ixzz302gbJRnc

தமிழ் ஓவியா said...



மதம் படுத்தும் பாடு

12 பேரின் காலைக் கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்

புனித வியாழன் வழிபாடு என்கிற பெயரால் வாடிகனில் வழக்கத்துக்கு மாறாக நான்கு பெண்கள் மற்றும் முஸ்லீம் பெரியவர் உட்பட 12 பேரின் காலைக் கழுவி போப் முத்த மிட்டுள்ளார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி என்று அனுசரித்து வருகின்றனர். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து, தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர், அவர்களின் கால்களைக் கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். தலைவராக இருந்தாலும் தொண்டர்களுக்கு பணி யாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளையிட்டதன் அடிப்படை யில் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான வியாழனை புனித வியாழன் என்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறதாம்.

வாடிகனில் நடைபெற்ற புனித வியாழன் வழிபாடு நிகழ்ச்சியில் போப் தலைமை தாங்கி வழிபாடு நடத்தினார். அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ரும் மற்றும் பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.

அப்போது போப் ஆண்ட வர் பேசுகையில், பாதிரியார்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், கிறிஸ்தவ தேவாலயங்கள் கதவுகள் திறந்து கிடக்கும் வீடாக, பாவப்பட்டவர்களின் முகாம் ஆக தெருக்களில் வாழ்பவர்களின் இல்லமாக, நோயாளிகளின் அன்பு நிலையமாக இளைஞர்களின் முகாம் ஆக, வகுப்பு அறைகளாக திகழ வேண்டும் என்று கூறினார். மாலையில் ரோம் புறநகரில் கிறிஸ்தவ தேவாயலம் நடத்தும் மறுவாழ்வு மய்யத்துக்கு சென்றார், அங்கு தங்கியிருக்கும் 12 பேரின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். 16 முதல் 86 வயதுவரை உள்ளவர்கள் ஆவர். அவர்களில் நான்கு பெண்கள், ஹமீது (75) என்ற முஸ்லீம் பெரியவரும் அடக்கம். இதற்கு முன்பெல்லாம், இந்நிகழ்ச்சி வாடிகன் அல்லது ரோமில் உள்ள கிறிஸ் தவ தேவாலயத்தில் தான் நடைபெறும்.

வழக்கமாக 12 பாதிரியார்களின் கால்களை போப் ஆண்டவர் கழுவி சுத்தம் செய்வார். ஆனால், புதிய போப்பாக பதவியேற் றுள்ள பிரான்சிஸ் அதன் மரபை மாற்றி மறுவாழ்வு மய்யத்துக்குச் சென்றுள்ளார்.

Read more: http://viduthalai.in/page5/79275.html#ixzz302gmKikq

தமிழ் ஓவியா said...


என்னே பொருத்தம்...?


என்னே பொருத்தம்...?

அய்யர் வீட்டில்
அய்யங் காரும்...
அய்யங்கார் வீட்டில்
அய்யரும்..
குடியிருக்க
மாட்டாங்களாம்...!
குடிக்குள் குடியாக!
இஃதே போகப் போக
கொள்வனை, கொடுப்பனவும்
இருவருமே
இனத்தில் ஆரியம்!
இந்த மதம்
இந்து மதம்??


குறும்பா!

மொய் யெழுதும்போது
மெய் யெழுது!
பொய்யெழுதாதே
இரு நூற்றை
ஒரு நூறு என்று...!
தபால் வோட்டுகளாம்
கவர் பாளங்களை...
களவாடாதே!

***

இது....
சுதந்தரக் காற்றை
சுவாசிக்க முடியாது
சுதந்தர நாடு!
குடியிருப்புக்கு
இலாயக்கில்லா
குடியரசு நாடு!!

- கோ. கலியபெருமாள்,
மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page5/79277.html#ixzz302gvNMfF

தமிழ் ஓவியா said...


வாசகர் கடிதம்


வாசகர் கடிதம்

விடுதலை 5.4.2014 சென்னை சனிக்கிழமை ஞாயிறு மலர் படித்தேன்.

ஆகா என்ன அருமை! தி.மு.க. கூட்டணியைச் சமூக ரீதியான கொள்கை இருப்பதால் ஆதரி.

சிறுபான்மை மக்களுக்காக ஆதரவு கொடு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் மறுபடியும் வேண்டுமா? வாக்களி. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகணுமா? வெற்றி அடையச் செய். பக்தி மடத்தில் பாழடைந்த பழக்க வழக்கம் எப்படி இருக்கிறது பாரீர்!

பிரம்மகத்தி கடவுள் நம்பிக்கை இல்லாதவரைப் பிடிக்கப் பயமோ? வரகுணபாண்டியனைப் பிடித்த பிரம்மகத்தி நீங்கிட, அவன் பார்ப்பானுக்கு உணவளிக்க வேண்டும். அரச மரத்தை வலம் வா. இப்படிப் பல.

விமோசனம் இல்லை. பிரம்மகத்தி இஸ்ட்ராங்கோ? அதனால் இன்னும் இதைச் செய். மதுரை சோமசுந்தரப் பெருமானை ஒவ்வொரு நாளும் 1008 முறை வலம் வா. பின் சரியாயிற்று.
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்றும் சுயமரியாதையுடன்,

- க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/79279.html#ixzz302hG1TtU