Search This Blog

23.4.14

குற்றவாளி இல்லையா மோடி?வாஜ்பேயி வருந்தியது ஏன்?


மோடி குற்றமற்றவர் - குஜராத் கலவரத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்களே - இதைவிட பொறுப்பற்ற பேச்சு ஒன்று இருக்க முடியுமா?
அரியலூரில் ரயில் கவிழ்ந்தது என்றால் ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஏன் பதவி விலகினார்?
ஓ.வி.அளகேசன் ஏன் பதவி விலகினார்? அதைவிட மிகப்பெரிய இனப் படுகொலை (GENOCIDE) குஜராத்தில் நடந்திருக்கும்பொழுது அதற்குப் பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலக வேண்டாமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே.

கலவரத்துக்குப் பிறகும் மோடி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறாரே என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
ஹிட்லர் கூடத்தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை நடத்தினார். அதற்காக ஹிட்லரை வரலாறு ஏற்குமா? வெகுதூரம் போக வேண்டாம். நரோடா பாட்டியா இனக் கலவரத்தை முன்னின்று நடத்திய மோடி அமைச்சரவை சகா மாயா கோட்னானி (28 ஆண்டுகள் சிறை) படுகொலைக்குப் பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் 1,85,000 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயித்துள்ளாரே. அதற்காக அவரை வெற்றி வீராங்கனை என்று வாழ்த்த முடியுமா?
பெரிய பெரிய ஆதாரங்களைத் தேடிக் கொண்டு ஓட வேண்டாம். கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மூன்றாம் நாள் அகில இந்திய வானொலியில் முதல் அமைச்சர் பேச்சைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?
அச்சுறுத்தப்பட்டு அடங்கிக் கிடப்போர் நியாயம் கேட்க மாட்டோம் என்ற உறுதியை அளித்தால்தான் அமைதி திரும்பும் என்று பேசினாரே! (ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் 8.10.2003) இதற்கு என்ன பதில்? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பில் உள்ள முதல் அமைச்சர் இப்படிப் பேசினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் எங்கிருந்து குதிக்கும்?
நான் ஏதாவது செய்திருந்தால்தானே  குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். நாம் பிடிபட்டு விட்டோம். நாம் திருடிவிட்டதால் சிக்கிக் கொண்டுவிட்டோம் என்பதுபோல நினைக்கும் போதுதான் எரிச்சலும் விரக்தியும் ஏற்படும். ஆனால் எனது விஷயம் அப்படிப்பட்டதல்ல; நடந்த நடவடிக்கைகளுக்காக (குஜராத் கலவரம்) வருத்தப்படுகிறீர்களா என்று கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு எனக்கு விரிவான நற்சான்றிதழை அளித்துள்ளது.
எனினும் ஒரு காரை நாமே ஓட்டிச் சென்றாலும் சரி, மற்றொருவர் ஓட்டும்போது பின் சீட்டில் அமர்ந்திருந்தாலும் சரி -_ ஒரு நாய்க்குட்டி காரின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு வேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அது போன்றதுதான் _ நரேந்திர மோடி பேச்சு.  - (தினமணி 13.7.2013 பக்கம் 1)
மோடி சொல்கிறார், நான் குற்றமற்றவன்; நான் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவே எனக்கு நற்சான்று அளிக்கிறது என்று தன் முதுகைத் தானே தட்டிக்கொள்ளும் அதேவேளையில் அவர் மனம் என்பது எத்தகைய குரூரமானது என்பதையும் தன்னை அறியாமலேயே  இதன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டுவிட்டார்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் _ குழந்தைகள் _ கர்ப்பிணிப் பெண்கள் உட்பட காட்டு விலங்காண்டித்தனமாக அரசுப் பயங்கரவாதமாக நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 1,70,000 வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; 203 தர்க்காக்கள், 205 மசூதிகள், 3 கிறித்தவ வழிபாட்டுத்தலங்கள், 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. காவல் துறையினரேகூட பெட்ரோல் கொடுத்து கொளுத்துவதற்கு உதவியுள்ளனர். இத்தகு கேவலமான _ அநாகரிகமான நடவடிக்கை மீது அவர் கொண்டிருந்த மனப்பான்மை எத்தகையது என்பது விளங்கிவிட்டது. காரில் செல்லும்போது ஒரு நாய் அடிபடுவதற்கு ஒப்பானதாக சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கருதுகிறார்.
குல்பர்க் சொசைட்டி என்னும் இடத்தில்  காங்கிரஸ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இஹ்ஷான் ஜாஃப்ரி (73) உட்பட 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் (FIR) என்ன கூறப்பட்டது தெரியுமா? கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட எதிர்விளைவு என்று படுகொலைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கையிலேயே கூறப்பட்டுவிட்டால், வழக்கு எத்திசையில் செல்லும் என்பது வெளிப்படை.
ஒவ்வொரு கிரியாவிற்கும் பிரிதி கிரியா உண்டு என்று நியூட்டன் தியேரியைப் பயன்படுத்தியவர் யார் என்றால் ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர்; அவர்தான் மோடி!
முன்னாள் சி.பி.அய். இயக்குநர் ஆர்.கே. இராகவன் என்பார் தலைமையில் புலனாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. (29.4.2009) அந்த அதிகாரி குஜராத் மாநிலக் காவல் துறையில் பணியாற்றியவர்தான். அந்தக் குழுவின் அறிக்கை மோடிக்கும் குஜராத் கலவரத்துக்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டது. இதை வைத்துக்கொண்டுதான் மோடி நான் குற்றம் ஏதும் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் அமைத்த புலனாய்வுக்  குழுவே தெரிவித்துவிட்டது என்று மார்தட்டுகிறார்.
குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைக் கட்டவிழ்த்து விடப்பட்டபோது அம்மாநிலத்தில் காவல்துறைக் கூடுதல் புலனாய்வுத் துறை அதிகாரியாக (ADGP)  இருந்தவர் ஆர்.பி.சிறீகுமார்.
இராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு(SIT)விடம் 35 பக்கங்களைக் கொண்ட அறிக்கையினை அளித்தார். காவல்துறை மாநிலத் தலைவராக இருந்தவர். ஓர் அறிக்கை கொடுக்கிறார் என்றால், அது எவ்வளவு முக்கியமானது! ஆனால் சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, அதனைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டதுதான் மிச்சம்! சி.பி.அய். இயக்குநர் ராகவன் தலைமையிலான இந்தப் புலனாய்வுக்குழு குஜராத் மாநிலக் காவல்துறையின் இரண்டாவது அணியாகத்தான் செயல்பட்டது என்று காவல்துறை அதிகாரி சிறீகுமார் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். இந்த ராகவன் குழு அளித்த அறிக்கையைக் காட்டித்தான், தான் குற்றமற்றவன் என்று மோடி தம்பட்டம் அடிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதில் ஒரு வேடிக்கை. ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அளித்த அறிக்கை மோசடியானது, உண்மைக்கு விரோதமானது என்பதுபற்றி விளக்கி ஒரு நூலே வெளிவந்தது என்றால் ஆச்சரியமாகவே இருக்கும். மனோஜ் மிட்டா என்பவர் அப்படி ஒரு நூலையும் விரிவாகவே எழுதியுள்ளார். The fiction fact - finding Modi & Godhra’  - by Manoj Mitra, Happer Collins (259 பக்கங்கள், விலை ரூ.599)
மோடியைச் சிறப்பு விசாரணைக் குழு சார்பில் விசாரணை நடத்தியவர் முன்னாள் சி.பி.அய். அதிகாரி மல்ஹோத்திரா. குழு அமர்வுகளில் மொத்தம் 9 மணி நேரம் முதல் அமைச்சர் மோடி விசாரிக்கப்பட்டார். கோத்ரா சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்று மோடி சொன்னாரே (எவ்வளவு பெரிய விபரீதம்!) அது குறித்து ஏன் வினா எழுப்பவில்லை என்பது முக்கிய வினாவாக எழுந்துள்ளது; எல்லாம் மோடியைக் காப்பாற்றும் நோக்கில்தான் நடந்துள்ளன.
மோடி யாரையும் விலைக்கு வாங்கக் கூடியவர்தான். ஆர்.கே.ராகவன் குழு அறிக்கையின்மீது சுதந்திரமான விசாரணை நடத்தி முடிவுகளை எடுக்குமாறு மூத்த வழக்குரைஞர் ராஜீ ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமனம் செய்திருந்தது. (AMICUS CURIAE, நடுநிலை அறிவுரையாளர்.)
அவர் விசாரணை செய்து தனியே அறிக்கை ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் அளித்தார்.
சிறப்புப் புலனாய்வுக் குழு நரேந்திர மோடிக்கு எதிராகக் குற்றச்சாட்டு ஏதும் இல்லை என்று கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கலவரத்தின்போது 2002 பிப்ரவரி 27ஆம் தேதி மாலை குஜராத் முதல்வர் வீட்டில் நடைபெற்ற உயர் போலீஸ் அதிகாரி சஞ்சீவி பட் கலந்து கொண்டாரா இல்லையா என்பதை மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் குறுக்கு விசாரணை செய்துதான் முடிவு செய்ய முடியும்.
சம்பவத்தன்று அகமதாபாத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச்சர்கள் அமர்ந்துகொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள் என்ற போலீஸ் அதிகாரி சஞ்சய்பட்டின் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே உள்ளது. சஞ்சய் பட்டை விசாரணை நீதிமன்றம் குறுக்கு விசாரணை செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு நரேந்திர மோடிக்கு எதிரான விசாரணையை மூடிவிடுவது என சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்திருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இவ்வாறு அமிக்கஸ் கூரி அறிக்கை கொடுத்துள்ளாரே...
இதனை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் இந்தியக் குற்றவியல் சட்டம் 153ஏ (சமூகங்களுக்கிடையே விரோதத்தை வளர்க்கும் வகையில் பேசுவது) 153பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக வசைகளையும், சமிக்ஞைகளையும் வெளியிடுவது) 505 (பொதுமக்களிடையே துவேஷத்தை உண்டாக்கும் வகையில் பேசுவது) மற்றும் பிரிவு 166 (சட்டத்திற்கு முரணாக பிறருக்குக் காயம் ஏற்படுத்த அரசு ஊழியர்கள் நடந்து கொள்வது) முதலிய பிரிவுகளில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பிருக்கிறதே!
இதையெல்லாம் துப்புரவாக மறைத்துவிட்டு என்னை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. நான் பரிசுத்த யோவான் என்று எல்லாம் மோடி பேசுவது யாரை ஏமாற்றிட? சோ ராமசாமிகள் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாதது _ ஏன்?
குஜராத் கலவரங்களை முதல் அமைச்சர் மோடியே வெறிகொண்டு நடத்தினார் என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.
கோத்ராவில் ரயில்பெட்டியில் தீக்கு இரையானவர்களின் உடலை சம்பந்தப் பட்டவர்களின் ஊர்களுக்கு அனுப்பத்தான் முதலில் முடிவு செய்யப்பட்டது. முதல் அமைச்சர் மோடி கோத்ரா வந்து சடலங்களைப் பார்த்த பிறகு திட்டம் மாற்றப்பட்டது.
சடலங்கள் தலைநகரமான அகமதாபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசுவ ஹிந்து பரிஷத் செயலாளர் ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அடுக்கப்பட்டன.
ஜெய்தீப் பட்டேல் (வி.எச்.பி.) வழிநடத்துகிறார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அந்தக் கொந்தளிப்பான சூழலில் கலவரங்கள் வெடித்தெழும் என்பது எல்லோருக்கும் எளிதாகத் தெரிந்த ஒன்றே! நோக்கம் வேறாக இருக்கும்போது அதைப்பற்றியெல்லாம் மோடி கவலைப்படுவாரா?
எதிர்பார்த்தபடி முஸ்லிம்களுக்கு எதிராக  வன்முறை வெடித்துக் கிளம்பின. அதிகாரிகளுக்குத்தான் முதல் அமைச்சர் ஏற்கனவே பச்சைக்கொடி காட்டிவிட்டாரே!  கேபினட் அமைச்சர் ஹரேன் பாண்டியாவும், காவல்துறை மாநிலப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய சஞ்சீவி பட்டும் உச்ச நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடமே கூறியுள்ளனர். (இதனைத் தொடர்ந்து மோடியின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்த அந்த ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் கொல்லப்பட்டதும் _ அந்தக் கொலைக்குக் காரணம் முதல் அமைச்சர் மோடிதான் என்றும் கொல்லப்பட்டவரின் தந்தையார் கூறியதும் கவனத்தில் கொள்ளத் தக்கவையாகும்.)
எடுத்த எடுப்பிலேயே மோடி சொன்னது என்ன?
கோத்ரா சம்பவத்துக்குப் பிறகுதான் இந்த எதிர்வினைகள். பிறகு தகுந்த சூழல் சங்பரிவாரால் உருவாக்கப்பட்டது. அதாவது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பஜ்ரங்தள், துர்காவாசினி ஆகிய அமைப்புகளின் தலைவர்களால்; அதற்கு முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் முழு ஆதரவு கிடைத்தது. இந்துக்கள் இவ்வாறாகக் கொளுத்தப்படுவதை விரும்புவதாக யாராவது தைரியம் இருந்தால் வெளிப்படையாகச் சொல்லட்டும். அப்படி இந்துக்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் இருந்ததால்தான் முழு ரயிலையும் எரிக்க முயன்றார்கள்.
இதற்குப் பிறகு நாம் எதையும் செய்யவில்லையென்றால் மேலும் ஒரு ரயில் எரிக்கப்படும். இந்த யோசனைதான் முதல் அமைச்சர் மோடியிடமிருந்து வந்தது. நான் அந்த ஆட்டத்தில் கலந்துகொண்டேன் என்று பல்கலைக்கழகத் தலைமைத் தணிக்கையாளர் திமனிபட் கூறியதாக தெகல்கா புலனாய்வு நிறுவனம் பேட்டி கண்டு டேப்புகளை வெளியிட்டுள்ளதே.
முஸ்லிம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த குற்றவாளியை மோடி பாராட்டியதுடன், உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.
பஜ்ரங்தள் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரேஷ் பட் என்பவர் தெகல்கா புலனாய்வு நிறுவனத்திடம் என்ன சொன்னார்?
மூன்று நாள்களில் அனைத்தையும் முடித்துவிடுங்கள். அதற்கு மேல் கால அவகாசத்தைக் கேட்காதீர்கள் என்று முதல் அமைச்சர் மோடி உத்தரவிட்டார் என்று கூறியுள்ளாரே! மோடி குற்றவாளி என்பதற்கு இந்தச் சங்பரிவார் சாட்சியம் ஒன்று போதாதா?
2002-இல் கலவரத்தின்போது நரேந்திரமோடி நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டுமல்லாது தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) போன்ற நிறுவனங்களும், உச்சநீதிமன்றமும் கடுமையாகக் கண்டித்துள்ளன.
கலவரம் நடந்தவுடன் உடனடியாக அய்ந்துக்கும் மேற்பட்ட உண்மை அறியும் குழுக்கள் நேரடியாகச் சென்று விசாரித்ததுடன் கலவரத்தில் அரசாங்கத்தின் பங்கேற்பை உறுதி செய்துள்ளன. குறிப்பாக நீதியரசர் கிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவின் அறிக்கையில் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது.
2004இ-ல் உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் அர்ஜூன் பசாயத் மற்றும் துரைசாமிராஜு ஆகியோர் அளித்த தீர்ப்பில் ரோம் எரிந்து கொண்டிருக்கும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனோடு மோடியை ஒப்பிட்டார்கள்.
கலவரம் நடந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் போலும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். அப்படி சொன்னது மட்டுமல்லாமல் அவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது எனக் கூறி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அந்த வழக்கை மாற்றவும் செய்தார்கள்.
மேலும் உண்டு. குற்றவாளிகளை விசாரிக்கும் அரசு வழக்கறிஞர்களை அந்த மாநில அரசுகளே நியமித்துக் கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக குஜராத் படுகொலையில் அரசாங்கமே ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் மோடி அரசாங்கம் நியமிக்கும் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற சங்பரிவார் சிந்தனை உடையவராக இருக்க நேர்வதுடன் அவர்கள் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்பவைக்க முயற்சித்தார்கள் என்பதுடன், சாட்சிகளை மிரட்டுவதற்கும் காரணமாக இருந்ததால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றியதுடன், அரசு வழக்கறிஞரை பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதலுடன்தான் நியமிக்க வேண்டும் என்ற புரட்சிகரமான தீர்ப்பையும் வழங்கியது. இந்நிகழ்ச்சி வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு முன்பு நடந்திராத ஒன்றாகும்.
இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல அமைப்புகளின் கண்டனத்துக்கு நரேந்திரமோடி ஆளாகியிருப்பதுடன், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையின்போது பல அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார்.
தெகல்கா பத்திரிகை வெளிப்படுத்திய உண்மைகள்!
தெகல்கா பத்திரிகை, குஜராத் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிப்பட்டன.
கலவரம் நடந்த பகுதிகள் சிலவற்றிற்கு நேரடியாகச் சென்று குற்றவாளிகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். அந்தக் குற்றவாளிகளை தப்ப வைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மூலமாக மேற்கொண்டார். குற்றவாளிகளைக் கண்டித்த நீதிபதிகளை இடம் மாற்றம் செய்தார். சுமார் 20-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டு, எரித்து கொலை செய்த ஒரு குற்றவாளியை நீதிபதிகள், நீ செய்த இந்தச் செயலுக்கு, உன்னை பலமுறை தூக்கில் போட்டாலும் தகும் என தெரிவித்தனர். ஆனால், அந்த நீதிபதிகளெல்லாம் மோடியினால் மாற்றப்பட்டார்கள். அந்தக் குற்றவாளி விடுதலையடைந்து சுதந்திரமாக உள்ளான்.

2005 சனவரி 17ஆம் தேதியன்று கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான உமேஷ் சந்திரா பானர்ஜி ஆணையத்தின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. அடுத்த இரு நாட்களில் தினேஷ் மோகன் ஏ.கே. ராய், சுனில்காலே, எஸ்.என் சக்ரவர்த்தி முதலிய பேராசிரியர்கள் மற்றும் பொறியாளர்களின் கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. கோத்ரா ரயில் எரிப்பு என்பது முஸ்லிம்களின் திட்டமிட்ட சதி என்கிற மோடி கும்பலின் பொய்களுக்கு இவ்விரு அறிக்கைகளும் மறுப்புத் தெரிவித்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பின் இயற்கையான எதிர்வினையே குஜராத் பயங்கரங்கள் என்னும் அவர்களின் நியாயங்கள் அடிபட்டுப் போயின.
குஜராத் மதக் கலவரத்தின்போது 4252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் மோடி அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ருமாபால், சின்கா மற்றும் கபாடியா அடங்கிய அமர்வு அத்தனை வழக்குகள் மீதும் விசாரணை நடத்துமாறு ஆணை பிறப்பித்தது. (17.8.2004)
குஜராத் கலவர வழக்கில் மோடியின் காவல்துறை எப்படியெல்லாம் செயல்பட்டது? இதோ ஓர் எடுத்துக்காட்டு!
கோத்ராவையடுத்த பம்ப்ரோலி என்னும் கிராமத்தில் ஸ்மஷான் சாலையில் வசித்த மாலாஜி சடாஜி என்பவர் (மார்வாடி) சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இவரிடம் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரியான காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) கே.சி.பாலா பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.
அவரை விசாரிக்க வேண்டும் என்று அழைப்பாணை (வாரண்ட்) விடப்பட்டது நீதி மன்றத்தால்; அவர் கிடைக்கப் பெறவில்லை. உண்மை என்ன தெரியுமா? கோத்ரா விபத்துக்கு முன்னதாகவே ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது! அடேயப்பா, எவ்வளவுப் பெரிய (அ) யோக்கிய சிகாமணிகள் இவர்கள். இவர்கள் எதைத்தான் செய்ய மாட்டார்கள்!
குஜராத்தில் பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல _- பயங்கரவாதிகளைத் தயார் செய்யும் சட்டம் (Production of Terrorist Act) என்று சொன்னார் குஜராத் மாநிலத்தில் மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் டாக்டர் முகில் சின்ஹா.
குஜராத்தில் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 287. அதில் முஸ்லிம்கள் 286, சீக்கியர் ஒருவர்; மகாராட்டிராவில் மனித உரிமை ஆர்வலர் மேமோன் குஜராத் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது இதைச் சுட்டிக்காட்டி நேருக்கு நேரே கேட்டார். பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற தனிப் பிரிவு ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக மோடி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.பி. வகில் என்பவர் நீதிபதி நானாவதி விசாரணை ஆணையத்தின் முன் பகிரங்கமாக அறிவித்தார்.
கோத்ரா சம்பவம் நடந்த அன்று இரவு காவல்துறையின் உயர் அதிகாரிகளோடு முதல் அமைச்சர் நரேந்திர மோடி நடத்திய கூட்டத்தில் இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது அதில் தலையிடாதீர்கள்! என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட காவல்துறை உளவுத்துறை உதவி ஆணையர் சஞ்சீவ்பட் அய்.பி.எஸ். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்திலேயே அந்த அதிகாரி கலந்து கொள்ளவில்லை என்றது மோடி அரசு. அப்படியானால் தகவல் அறியும் சட்டத்தின்படி அந்தக் கூட்டத்தின் நடவடிக்கை ஆவணங்களை அளிக்குமாறு கோரினார்; இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் அளிக்க இயலாது என்று அப்பொழுது சொன்னவர்களே, பிற்காலத்தில் அந்த ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள்.
போலி என் கவுண்டர் 
2004 ஜூன் 15ஆம் தேதியன்று இஸ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஹோஹாய் ஆகிய நான்கு பேரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்த விவகாரத்தில் முறையான விசாரணையை குஜராத் காவல்துறை செய்யும் என்பதை நம்ப முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம்  கூறியது. இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்யுமாறு மத்தியப் புலனாய்வுக் குழுவை (சி.பி.அய்.) உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷ்குமாரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்தது. படுகொலை செய்யப்பட்ட இந்த நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -_ இ-தொய்பா அமைப்புக்காக வேலை செய்தவர்கள் என்றும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினர் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு இருந்தனர். குஜராத் உயர்நீதிமன்றம் ஆணைப்படி புலனாய்வு செய்த சி.பி.அய். நால்வரும் கொல்லப்பட்டது போலி என் கவுண்டர்தான் என்று உறுதி செய்தது.  இந்தப் போலி என்கவுண்டரில்  கொலை செய்த காவல்துறை அதிகாரி வன்சாரா, அந்தப் போலி என்கவுண்டர் முதல் அமைச்சர் மோடி உத்தரவுப்படியேதான் நடந்தது என்று சிறையிலிருந்தபடியே தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி (சத்பாவனா) மோடி உண்ணாவிரதம் இருந்தது ஆச்சரியமே! மூன்று நாள் உண்ணாவிரதம் ஒன்றை குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்.
மத நல்லிணக்கம் அல்லவா! -சில முஸ்லீம்களும் வந்திருந்தனர். மதக் குரு (இமாம்) ஒருவர் மோடியைக் கட்டித் தழுவி, தான் அணிந்திருந்த குல்லாயை அணியுமாறு கொடுத்ததை அணிய மறுத்தார் மோடி (இதுதான் அவரின் மத நல்லிணக்கம்) அதனை சிவசேனா சுட்டிப் பாராட்டியது.
(தினமலர் 22.9.2011 பக்கம் 3)
குஜராத் படுகொலை நடைபெறுவதற்குப் பத்தாண்டுகளுக்குமுன் ஒரு நிகழ்வு: பிரபல சமூகவியல் சிந்தனையாளர் -_ எழுத்தாளர் ஆஷிஸ்நந்தி அன்றைய ஆர்.எஸ்.எஸின் பிரசாரகராக விருந்த நரேந்திரமோடியைப் பேட்டி கண்டவர்; அதுபற்றி ஆஷிஸ் நந்தி என்ன கூறினார்?
அனைத்துக் குணங்களும் கொண்ட ஒரு ஃபாசிஸ்டைத்தான் நான் சந்தித்தேன். ஃபாசிஸ்ட்டு என்று அழைப்பது ஆட்சேபகரமான வார்த்தையல்ல; எல்லா குணங்களும் நிறைந்த ஒரு ஃபாசிஸ்டாக அவர் விளங்கினார். சர்வாதிகாரத்தின் பரிபூரணமான மனநிலை கொண்டவராக அவர் விளங்கினார்; ஒரு கொலையாளியை சில வேளைகளில் ஒருகூட்டுக் கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையைச் செலுத்த முடியவில்லை என்று ஆஷிஷ் நந்தி குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கிட ராமகிருஷ்ணன். அவரைச் சந்திக்க பல வகைகளிலும் முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடி முயற்சி செய்து பார்த்தார்.
2002 மதக் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி சம்பந்தப்பட்டு இருப்பதால் சந்திக்க இயலாது என்று அந்த விஞ்ஞானி மறத்துவிட்டார்!
நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென், பிரஸ் கவுன்சில் தலைவர், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, சாகித்ய அகாடமி விருதுபெற்ற கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி ஆகியோர் கண்ணோட்டத்தில் மோடி யார் என்பது சிந்தனைக்குரியதாகும்.
பி.ஜே.பி.யைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் ரமிலாபென் தேசாய் ஆன் லுக் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்துள்ளார். ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களை ஒருபோதும் கொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தவர் என்ற கூறியுள்ளனர். குஜராத் இனப்படுகொலைக்கு மோடியே காரணம் என்பதை ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே கூறிவிட்டாரே!
வாஜ்பேயி வருந்தியது ஏன்?
அய்.நா.மன்றத்தின் உதவிக்குழுவில் இந்தியாஉறுப்பினராக இருப்பதையும், மனித உரிமைக்கான குழுவில் இருப்பதையும் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உலக நாடுகள் அவையில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி பிரதமர் வாஜ்பேயி வேதனை அடைந்தார்.
இவ்வாறு கூறுபவர் சாதாரணமானவர் அல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணி (பி.ஜே.பி. அணி) ஆட்சியில் அட்டர்னி ஜெனரலாக இருந்த சோலி சொராப்ஜிதான். இன்னும் என்ன ஆதாரம் தேவை _ மோடிதான் குஜராத் கலவரத்திற்குப் பொறுப்பு என்பதற்கு?
குல்தீப் நய்யார் குமுறல்
நீ இந்து என்றால் எனக்கு வாக்களிக்கவும் என்பதுதான் நரேந்திர மோடியின் பிரச்சாரமாக இருந்தது. இந்துத்துவாவை குஜராத்தின் பெருமை என்று குஜராத்திகளிடம் மோடி விற்பனை செய்தார். குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதிதான் இந்தியா என்று குஜராத்திகளை மோடி நம்பவைத்து விட்டார். குஜராத்துதான் இந்தியா! என்ற கோஷத்தை நானும் எனது செவிகளில் கேட்டேன்.
- குல்தீப் நய்யார், பிரபல ஊடகவியலாளர்
அய்ரோப்பிய ஒன்றியம் கண்டனம்
15 நாடுகளை உள்ளடக்கிய அய்ரோப்பிய ஒன்றியம் ஓர் ஆவணத்தை வெளியிட்டது. குஜராத் வன்கொடுமை ஒரு வகையான இன ஒடுக்கம்; 1930களில் ஜெர்மனியில் நடந்தவற்றிற்கு இணையானது; கோத்ரா கொலைகள் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டவை! இந்துக்கள் வாழும் பகுதிகளிலிருந்து முஸ்லீம்களை விரட்டுவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்வுகள் அவை. கலவரத்தில் தலையிடக் கூடாதென முதல் அமைச்சர் நரேந்திர மோடி காவல்துறையின் மேல்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மத்திய மாநில அரசுகள் மனிதநேய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்குத் தவறிவிட்டன. விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பிற தீவிரவாத இந்துக் கூட்டத்தினர் வன்முறைக்குக் காரணம்; நட்ட ஈடு கொடுப்பதில் மாநில அரசு பாரபட்சமாக நடந்துகொண்டது. முழுமையாக வெளிப்படையான ஆய்வை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று அய்ரோப்பிய ஒன்றியம் அறிக்கை கொடுத்ததே. இதற்குப் பிறகும் குஜராத் கலவரத்துக்கும் மோடிக்கும் தொடர்பு இல்லை என்று நம்பச் சொல்கிறார்களா?
என் நாடும் என் வாழ்க்கையும் எனும் நூலில் எல்.கே.அத்வானி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறினார். நடக்கவிருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் (கோவாவில்) முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று நரேந்திர மோடி கூறியதாக எல்.கே.அத்வானி எழுதியுள்ளாரே _ தான் தவறு செய்யவில்லை என்றால் மோடி எதற்காக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வரவேண்டும்? பிரதமர் வாஜ்பேயியும் பதவி விலக ஏன் சொல்ல வேண்டும்?
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரச் சம்பவங்களுக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் அந்தச் சம்பவங்களுக்கு நான் பொறுப்பாளி அல்ல.
- நரேந்திர மோடி, (தினமணி 26.3.2014 - பக்கம் 11)
இது எப்படி இருக்கிறது? இத்தகைய பேரழிவு நடந்தபோது அங்கு அரசே இல்லையா? முதல் அமைச்சர் என்ற ஒருவர் இல்லவே இல்லையா? கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். நாம் நம்ப வேண்டுமாம்!



தண்டனைகள்
நரோடா பாட்டியா என்னும் இடத்தில் (28.2.2002) 97 முசுலிம்கள் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் 61 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது; அதில் 32 பேர்கள் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 7 பேர்களுக்கு 21 ஆண்டுகள் தண்டனை; இந்த வன்முறையை முன்னின்று நடத்தியவர் மோடி அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் - அதுவும் மகப்பேறு மருத்துவர் என்றால் அதிர்ச்சியாகக்கூட  இருக்கலாம். சங் பரிவார் பயிற்சிகள் வெறித்தனத்தில் பெண்களைக் கூட கொலைகாரிகளாக்கி விட்டதே!
மாயா கோட்னானி (55) என்னும் அந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட தண்டனை 28 ஆண்டுகள். எஞ்சியவர்களுக்கு 14 ஆண்டுத் தண்டனை! இந்த வன்முறை வெறியாட்டத்தின் மற்றொரு கதாநாயகன் பஞ்ரங்தள் (குரங்குப் படை என்று பொருள்!) அமைப்பைச் சேர்ந்த பாபு பஞ்ரங்கிக்கு அளிக்கப்பட்ட தண்டனையோ இரட்டை ஆயுள் தண்டனை!
குஜராத்தில் சர்தார்புரா என்னும் இடத்தில் 33 அப்பாவி முஸ்லிம்கள் சங்பரிவார்க் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். அப்பகுதியில் வாழும் பட்டேல்களுக்குத் திரிசூலங்களை வழங்கியவன் விசுவ ஹிந்து பரிஷத்துத் தலைவர் ஹரேஷ் பட்! இந்தப் படுகொலையின் மீது நடைபெற்ற வழக்கில் 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.(11.11.2011)
இந்தத் தண்டனைகள் எல்லாம் எதைக் காட்டுகின்றன? மோடி அமைச்சரவையில் உள்ளவர்களும், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் தண்டனை பெற்றுள்ளனர் என்றால் - மோடிக்கு மட்டும் சம்பந்தம் இல்லையா?



சோவின் திருகுதாளங்கள்
துக்ளக் 44ஆம் ஆண்டு விழாவில் பேசிய திருவாளர் சோ கூறிய கருத்து:
குஜராத்தில் நடந்த கலவரங்களுக்கும், நரேந்திர மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டியின் விசாரணை முடிவை ஏற்றுக் கொள்கிறோம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து  பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இது பாரதப் பிரதமருக்குத் தெரியாதா?
(துக்ளக் _ 19.2.2014 பக்கம் 20)
இதே துக்ளக் 32ஆம் ஆண்டு விழாவில் (14.1.2002) இதே சோ ராமசாமி என்ன பேசினார்?
இப்போது டான்சி உட்பட அய்ந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்துவிட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்லமாட்டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்து வழக்குகளை பொய் வழக்கு என்றும் கூறமாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றம் சாட்டியதில் எந்த தவறும் இல்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான் என்று பேசினாரே - அது மோடியின் விஷயத்திலும் பொருந்தாதா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் “உண்மை”ஏப்ரல் 16-30 - 2014 இதழில் எழுதிய கட்டுரை

47 comments:

தமிழ் ஓவியா said...


யானைக்கு மதம் பிடித்தால் காட்டுக்கு ஆபத்து! மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட்டுக்கு ஆபத்து!


யானைக்கு மதம் பிடித்தால் காட்டுக்கு ஆபத்து! மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட்டுக்கு ஆபத்து!

வாக்குச் சீட்டுமூலம் ஆபத்துகளை விரட்டுவீர்!

தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

பட்டுக்கோட்டை, ஏப்.22- யானைக்கு மதம் பிடித்தால் காட்டுக்கு ஆபத்து; மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட் டுக்கு ஆபத்து; எனவே, மதவாத பி.ஜே.பி.யையும், அதற்கு நேராகவோ, மறைவாகவோ ஆதரிக்கும் சக்தி களை வரும் தேர்தலில் விரட்டியடிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பேராவூரணி, பட்டுக்கோட்டையில் உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது (21.4.2014).

இன்டர்நெட் இளைஞர்களே!

பதினெட்டு வயது நிரம்பி இருக்கின்ற, புதிய இன்டர் நெட் இளைஞர்களை புதிதாக வாக்களிக்கப் போகிறீர்கள் மகிழ்ச்சி. நீங்கள் வெறும் இன்டர்நெட்டை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் கணினியைப் பார்க்கக் கூடிய அளவிற்கு செய்த பெருமை. திராவிடர் இயக்கத்தை சார்ந்தது. உருவாக்கிய பெருமை தந்தை பெரியாரைச் சார்ந்தது.

தந்தை பெரியார் அவர்கள் குலக்கல்வியை அழித்திருக்காவிட்டால் இன்றைக்கு குப்பன் மகன் சுப்பன் சுவிட்சர்லாந்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருந்து கணினியை தட்டிக் கொண்டு இருக்க முடியாது.

நீங்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.களின் வரலாற்றை, அவர்களின் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். மீண்டும் மோடிகள் ராஜ்ஜியம் வந்தால் மறுபடியும் நாடு பழைய கருப்பனாக மாறும்.

நாடு மனுதர்மத்திற்கு செல்லும். குலதர்மத்திற்கு செல்லும். அதனால், இளைஞர்களே! மோடியின் வளர்ச்சி யிலே மயங்கி, மோடியின் வலையிலே சிக்கி சீரழிந்து விடாதீர்கள். மோடி அணியை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை ஜனநாயகத்தின் மிகப்பெரிய ஆயுதம். அறிவாயுதம் அதை சரியாகப் பயன்படுத்துங்கள்.

மோடி அலை அடிக்கிறது என்றால், மோடி நடிகரிடம் டீ சாப்பிடுவதற்கு, அப்பாயின்மெண்ட் வாங்க மூன்று மாதம் முயற்சி ஏன் எடுக்க வேண்டும்? நடிகர் அல்லவா மோடியைத் தேட வேண்டும்.

நெசவாளர்களுக்கு, விவசாயிகளுக்கு இலவச மின் சாரம் திமுக அல்லவா கொடுத்தது. குஜராத் மாடல், குஜராத் வளர்ச்சி என்று பேசுகிறார்களே சில புரியாத வர்கள்; அவர்களிடம் ஒரு கேள்வி கேளுங்கள் குஜராத் தில் இலவச மின்சாரம் உண்டா? எது மாடலாக இருக்க வேண்டும்? திமுகவா, அல்லது குஜராத்தா? ஏழை எளிய விவசாயிகளுக்கு அங்கு வேலையில்லை அப்புறம் என்ன மாடல்?

அண்ணா அவர்கள் சொன்ன வாசகம்

டாட்டா பிர்லா கூட்டாளி
பாட்டாளிக்கு பகையாளி

இந்த வார்த்தை அண்ணா அவர்கள் முன்னாலே, சொன்னது என்றாலும், இன்றும் நினைவூட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே, மோடி ராஜ்ஜியம், மோடி அரசு பாட்டாளிக்கு பகையாளி என்றைக்கும். இதை சரியாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

டி.ஆர்.பாலு-விவசாயிகளின் பாதுகாவல் அரண்

டி.ஆர்.பாலு அவர்கள் இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செய்திருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு. தென்னை விவசாயத்தை காப்பாற்றிருக்கின்ற முயற்சி இருக்கிறதே! அது காலம் காலமாய் மறக்கக் கூடிய ஒன்றா? டி.ஆர். பாலு அவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். நமக்கு சூத்திரர்களுக்கு என்ன தொழில்? விவசாயம்தானே! அதனால்தான் விவசாயிகளின் பாது காப்பு அரணாக இந்தப்பகுதியில் டி.ஆர்.பாலு விளங்குகிறார்.


தமிழ் ஓவியா said...

மோடியை விமர்சிப்பவர்களுக்கு...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோசர் என்ற பகுதியில் பா.ஜ.க.வின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பீகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் கிரிராஜ் சிங் என்பவர் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் 19 ஆம் தேதி பேசும் போது நரேந்திர மோடியை பிரதமராக விடாமல் தடுப்பவர்கள், பாகிஸ்தானுக்கு செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இட மில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும் என்று பேசியுள்ளார். இதே மேடையில், பாஜகவின் முந்தைய தலைவர் நிதின் கட்காரியும் இருந்துள்ளார். இதுபற்றி அவர் ஆதரித்தோ, எதிர்த்தோ (மறுப்பு தெரிவித்தோ) எந்தவித கருத்தும் சொல்ல வில்லை. யானைக்கு மதம் பிடித்தால், காட்டிற்கு ஆபத்து, மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட்டிற்கு, அரசிற்கு ஆபத்து!

பி.ஜே.பி.,க்கும், அதற்கு நேர்முகமாகவோ, மறைமுக மாகவோ ஆதரவு தரும் சக்திகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

முதலில் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டியவர்கள் யார்? யாரை சொல்லுகிறார் கிரிராஜ்சிங்? எண்ணிப் பார்க்க வேண்டும். மோடியை விமர்சிப்பவர்கள் யார். அவர் கட்சிக்குள்ளேயே இருக்கிறார்களே! முதலில் பாகிஸ்தானுக்கு செல்லப் போகிறவர் அத்வானி, அவர்தான் மோடியை கடுமையாக எதிர்க் கிறார். அடுத்தது முரளி மனோகர் ஜோசி, சுஷ்மா சுவராஜ், அதே மாதிரி ஜஸ்வந்த் சிங். ஆகவே, முதலில் பா.ஜ.க. காரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டுதான், அடுத்து நம்மை மாதிரி ஆட்களை எல்லாம் அனுப்புவார்கள். மோடி ராஜ்ஜியம் நடக்கும் போது நாம் எந்த நாட்டிற்கும் செல்ல தயாராக இருக்க வேண்டும். பயங்கரவாதிகளின் பாசறையா?

தஞ்சை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் பயங்கரவாதிகளின் பாசறையா? அதை ஏன்? இந்த அம்மையார் இடிக்கி றேன் என்றார்.

இப்பொழுது இந்த அம்மையாருக்கு என்ன ஈழத் தமிழர் மீது அக்கறை? கேர் ஆப் முள்ளிவாய்க்கால் ஆட்களை கேட்டாலே தெரியுமே! அம்மையாரின் ஈழ வேடம்.

கலைஞர் அவர்கள் இந்த 90 வயதில் கடுமையாக உழைக்கிறார். இன்றைக்குக்கூட அவரின் உரையைப் படித்தேன். மிகவும் வருந்தினேன். அவருக்குக் காய்ச்சல், உடல்நிலை சரியில்லை. இருந்தாலும் கூட்டத்திற்கு வந்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சொன்னார்.

நான் நலிவுற்றது முக்கியமல்ல! நாடு நலிவுறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியம் என்றிருக்கிறார். இவர் அல்லவா தலைவர் - ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு.

இந்த அம்மையார் (ஜெயலலிதா) சென்னையில் பேசிய பேச்சில் சேது சமுத்திர திட்டத்தில் பின் வாங்கு கிறார். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மீன்வளப் பாதுகாப்பு என்று. இதையெல்லாம் யார் செய்தது? வாஜ்பேயி காலத்தில் ஆட்சியில். வழிதடத்தை தயாரித்தவர்கள் இவர்கள் அல்ல. அரசியல்வாதிகளால் தயாரிக்கப்பட வில்லை. நீரி (ழிணிணிஸிமி) என்ற அமைப்பின் திட்டம். அம்மையாரின் இன்னொரு ராஜதந்திரம், சேது சமுத்திர திட்டத்தை இராமன் பாலம் என்று கூறித் தடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கியதே இந்த அம் மையார்தானே. இப்பொழுது ராமர் பாலம் என்று சொல் லுகிறார். இதற்கு முந்தைய அவர்களின் தேர்தல் அறிக்கை யில் இராமன் பாலம் என்று சொல்லவில்லையே!

பல லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பைத் தடுத்தது ஜெயலலிதா அம்மைர். இதை விட வளர்ச்சிக்கு மாபெரும் துரோகம் உண்டா?

எனவே தான், அம்மையாரின் அமைதி, வளம், வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் போலி வார்த்தைகள். உண்மையான அமைதி, உண்மையான வளம், உண்மை யான வளர்ச்சி தேவையா? அதற்கு ஒரே வழி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக இருக்கின்ற டி.ஆர்.பாலு அவர்களுக்கு வாக்கு அளித்தால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் இருட்டு நீங்கும், புரட்டு ஒழியும் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலரும். இதுதான் மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய கடமை என்று தமிழர் தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79074.html#ixzz2zfUlu9tF

தமிழ் ஓவியா said...


ஹைடெக்கில் பாஜக-அதிமுகவின் மறைமுக பண பட்டுவாடா!


ஹைடெக்கில் பாஜக-அதிமுகவின் மறைமுக பண பட்டுவாடா!

சென்னை, ஏப்.22- தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை முறைகள் அமலில் உள்ளன என்று சாலைகளில் செல் வோர் அனைத்துத் தரப்பினரிடமும் சோதனை என்கிற பெயரில் கெடுபிடிகள். ரயில் பயணிகளிடம், வியாபாரிகளி டம் கெடுபிடிகள் ஏராளம். நள்ளிரவு நேரங்களிலிருந்து விடியவிடிய தொடர்ந்து தேர்தல் பணியில் உள்ள அதிகாரி கள் ஓய்வின்றி இக்கெடுபிடிகளின்மூலம் பறி முதல் செய்துள்ள தொகையே பல கோடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் பாஜகவை ஆதரிக்கக் கோரும் ஒரு குறுஞ்செய்தி அலைபேசியில் வருகிறது.

Vote for BJP(modi) send this ur frnds and get Rs.551.49 blnc. Free electn offr. Not a joke see NDTV(24hrs)

[Vote for BJP(modi) send this your friends and get Rs.551.49 balance.Free election offer. Not a joke, see NDTV(24hours)]

பாஜகவுக்கு(மோடிக்கு) வாக்களியுங்கள், இச்செய் தியை உங்கள் நண்பர்கள் 15பேருக்கு அனுப்புங்கள். ரூபாய் 551.49 தொகை கிடைக்கும். இலவச தேர்தல் சலுகையாகும். கேலிக்காக அல்ல. 24 மணி நேர என்டிடிவி யைப் பாருங்கள் என்று அச்செய்தியில் உள்ளது. அச்செய்தியை 15 நண்பர்களுக்கு அனுப்பினால், ரூபாய் 551.49 குறுஞ்செய்தியை அனுப்பியவரின் எண் ணுக்கு பணம் ஏற்றப்படுகிறதாம்.

மேலும், இதேபோல் அதிமுகவை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு, ஆம் என்றால் அந்த உறுதியின் பேரில் அவருடைய எண்ணுக்கு ரூபாய் இருநூறு உடனடி யாக போய்ச்சேருகிறதாம். இச்செயல்கள் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு தேர்த லில் வாக்குக்குப் பணம் அளிப்பதாகவே உள்ளது என்று பொதுமக்கள்தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்ற ஹைடெக் மோசடிகளைக் கண் காணித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

மோடியின் குஜராத்தில் பணம் பறிமுதல்

அகமதாபாத், ஏப். 22- குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள அகமதாபாத் நகர் இசான்பூர் பாலத்தில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ. ஒரு கோடி ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காரில் இருந்த மாநகர பா.ஜனதா நிர்வாகிகள் 3 பேரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில் ரூ.50 லட்சத்துக்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத் தனர். மீதம் ரூ. 50 லட்சத்துக்கான விளக்கத்தை அவர்கள் அளிக்காததால், அந்தப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு அளிப்பதற்காகக் கொண்டு போகப்பட்டதாகக் கருதப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/79076.html#ixzz2zfUyKZjW

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

விவசாயத்தில் 12 சதவிகிதம் சரிவைக் கண்டது அ.இ.அ.தி.மு.க ஆட்சி; இப்படியிருக்க, இந்தியாவிலேயே வளர்ச்சி தமிழ்நாட்டில் தான் என்று உண்மைக்கு மாறாகப் பேசும் முதலமைச்சர் - ஜெயலலிதாவைப் போல் வேறு எங்கும் கேள்விப்பட்டதுண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/79077.html#ixzz2zfV7Tkqp

தமிழ் ஓவியா said...


ஒழுக்கமும் சட்டமும்!


இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம்போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர, எல்லோருக்கும் பொருந்தியவை அல்ல. - (குடிஅரசு, 24.11.1940)

Read more: http://viduthalai.in/page-2/79078.html#ixzz2zfVdweIO

தமிழ் ஓவியா said...

ஜாதீய மரபணுவைக் கண்டுபிடித்த கட்காரி


பி.ஜே.பி.யின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் நிதின்கட்காரி பிகார் தலைநகரமான பாட்னாவில் கடந்த 19 ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்து ஒரு சர்ச்சைப் புயலைக் கிளப்பியுள்ளது.

சிலர் வாயைத் திறந்தாலே - அதற்குள் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் துகள்களும் இருப்பதுண்டு. இப்படி அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவர் களுள் இவரும் ஒருவரே!

பிகாரின் மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது. அத னால்தான் பிகாரில் ஜாதீயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே சமயம் பா.ஜ.க.வில் ஜாதீயத் துக்கு முக்கியத்துவம் கிடையாது. ஜாதீயத்துக்கு எதிரான கட்சி பி.ஜே.பி. என்று கூறியுள்ளார்.

கட்காரியின் இந்தப் பேச்சைக் கண்டித்து பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் சந்த் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். அவரது பேச்சுமூலம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை பிகார் மக்களுக்கு எதிரா னவை என்பது தெளிவாகியுள்ளது. அவரது பேச்சுக்காக பிகார் மக்களிடம் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பிகார் அய்க்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர் பாளர் ராஜீவ் ரஞ்சனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து பிகார் மக்களை நிதின்கட்காரி அவமதித்துவிட்டார். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கட்சி புகார் செய்யும் என்று கூறியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்தே நிதின்கட்காரி வழக்கமாக பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார்க்காரர்கள் பின்பற்றும் அதே முறையைப் பின்பற்றியுள்ளார்.

பிகார் மாநில அரசியலில் ஜாதீயம் கலந்துள்ளது என்பதற்குப் பதிலாக மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது என்று தவறுதலாகக் கூறிவிட்டதாக பல்டி அடித்து விட்டார்.

தமிழ் ஓவியா said...

இது ஏதோ வார்த்தைத் தவறி வரக் கூடியதல்ல - ஜாதீ யம் கலந்துள்ளது என்று சொல்லும்பொழுது மரபணு என்ற சொல் எப்படி வரும்? கொஞ்சம் அறிவைப் பயன் படுத்துபவர்களுக்கு இது எளிதில் விளங்காமல் போகாது.

பிகாரில் ஆட்சி அதிகாரம் என்பது பிற்படுத்தப்பட்ட வர்களின் கைகளில் இருந்து வருகிறது. இது இவர்களின் கண்களை உறுத்துகிறது என்பதுதான் உண்மை.

அதேநேரத்தில் பா.ஜ.க.வை எடுத்துக்கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளடக்கிய சங் பரிவார்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலான நேரங்களில், பெரும் பாலும் பார்ப்பனர்களாகவேதான் இருந்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான ஒன்றாகும்.
ஆர்.எஸ்.எஸின் தலைவர்கள் பெரும்பாலும் சித்பவன் பார்ப்பனர்களாகத்தானே வந்திருக்கிறார்கள் - இரண்டொருவர்களைத் தவிர.

பா.ஜ.க. என்றாலே பார்ப்பனர்களின் கட்சி என்ற வெகுமக்களின் எண்ணத்தை மாற்றவேண்டும் என்பதற் காகவே தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர் களும் ஒரு காலகட்டத்தில் திணிக்கப்பட்டனர்.

கோவிந்தாச்சாரியாரின் சமுதாய விஞ்ஞானம் (Social Engineering) இது.

அப்படி வந்தவர்தான் அகில இந்திய பா.ஜ.க. தலை வர் பங்காரு லட்சுமணன்; ஆனால், அடுத்த தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்புக்கூட அளிக்கப்பட வில்லை.

தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதியும் அவ்வாறு அமர்த்தப்பட்டவர்தான்.

எப்படியெல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை, அவர் வெளிப்படையாகக் கூறிப் புலம்பி னாரே! பி.ஜே.பி.யின் தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன், தன் கையைப் பிடித்துக்கூட முறுக்கினார் என்று கூறினார் என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாமே! பிறகு தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒரு பிற்படுத்தப்பட் டவர் தேவை என்றபோது கல்யாண்சிங்கை முன் னிறுத்தினார்கள். அவரைப் பலிகிடாவாக்கி பாபர் மசூதியையும் இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸின் வேலை முடிந்தவுடன் கல்யாண் சிங் தூக்கி எறியப்படவில்லையா? அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் உமாபாரதி - அவருடைய உழைப்பால் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது; சிறிது காலம் அதன் முதலமைச்சராகவே இருந்தார். வழக்கு ஒன்றின் காரணமாகப் பதவி விலக நேர்ந்தது; வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்த நிலையில், மீண்டும் அவர் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக அமர்த்தப்பட்டாரா? அதுதான் இல்லை.

பி.ஜே.பி.யை விட்டு வெளியேறும் நிலைக்கு அவர் தள்ளப்படவில்லையா? அந்த நேரத்தில் ஆர்.எஸ். எஸின் தலைவராக இருந்த சுதர்சன், உமாபாரதி வளர்ந்த விதம், குடும்பம் - சமூகநிலைபற்றித் தரக்குறைவாகப் பேச வில்லையா? ஒரு கட்டத்தில் உமாபாரதியும், கல்யாண் சிங்கும், பங்காரு லட்சுமணனும் பி.ஜே.பி. என்றாலே உயர்ஜாதி பார்ப்பனர் கட்சிதான் என்று விமர்சிக்கவில்லையா?

ஜகந்நாத் மிஸ்ரா போன்ற பார்ப்பனர்களின் ஆதிக் கத்தில் இருந்த பிகார் மாநிலம் - பிற்காலத்தில் பிற்படுத் தப்பட்டோர் கைகளுக்கு வந்த நிலையில், அதனைப் பொறுக்கமாட்டாது வெளியில் வந்து விழுந்த வார்த்தை கள்தான் - நிதின்கட்காரியின் அந்த ஜாதி மரபணு விஷயம்.

பார்ப்பன விரியன் குட்டிகளாயிற்றே - சும்மாவா ஆடும் பூணூல்?

Read more: http://viduthalai.in/page-2/79079.html#ixzz2zfVmLVZm

தமிழ் ஓவியா said...


ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரூ.1,76,000 கோடி எங்கே? மத்திய தணிக்கை அதிகாரி, ஊடகங்கள், எதிர்க்கட்சியினர் பதில் கூறுவார்களா?


வே.சுப்புராமன்,
இணைப் பொதுச்செயலாளர்,
தொ.மு.ச. பேரவை,
அகில இந்திய தலைவர்,
தொலைத் தொடர்பு ஊழியர் முன்னேற்றச் சங்கம்


கடந்த 3 ஆண்டு காலமாக இந்தியா வின் அரசியல் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் வெகுவாக பாதிக்கும் வண்ணம் 2-ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் உத்தேச வருவாய் இழப்பு என்று சித் தரித்த இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரி (CAG) யின் அறிக்கை. அதனை ஊதிப் பெரிதாக்கி வருவாய் இழப்பை, இமாலய ஊழல் என்று சித்தரித்து இந்திய மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய ஊட கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள், வாதியாக (பிராசிக்யூட்டர்) மாறிய நீதித்துறை ஆகி யோரின் கருத்து ஒரு மாயத் தோற்றமே என்பதை நடந்து முடிந்த அலைக்கற்றை ஏலங்களின் தோல்வி நாட்டுக்கு உணர்த் தியுள்ளது.

ஆம்! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் டிராய் அமைப்பின் பரிந்துரையைக் கணக்கில் கொண்டு ரூ.40,000 கோடி ஏலம் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் 12.11.2012 அன்று நடைபெற்ற 2 ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.9,000 கோடிக்கு மட்டுமே ஏலம் கோரப்பட்டு படுதோல்வியில் முடிந்தது.


தமிழ் ஓவியா said...

இந்த முதல் ஏல முறைக்கு ஏற்பட்ட தோல்விக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்சக் கட்டணம் அதிகம் எனவும், ஏலத் தில் கலந்து கொண்ட நிறுவனங்கள் தங் களிடையே கூட்டணி வைத்து (Cartel) செயல்பட்டது போன்ற பல்வேறு வியாக் கியானங்கள் முன் வைக்கப்பட்டன.

ஆனால் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோரிய அனைத்து மாற்றங்களையும் உள்ளடக்கி 03.02.2014 முதல் 13.02.2014 வரை நடை பெற்ற ஏலத்திலும் ரூ.61162 கோடிக்கு மட்டுமே அலைக்கற்றை ஏலம் கோரப் பட்டுள்ளது என்பது மீண்டும் அபரிமித மான எதிர்பார்ப்பை பொய்யாக்கி உள்ளது. இந்த ஏலத் தொகையிலும் 1800 விஞீபி அலைக்கற்றை ஏலம் கோரியவர்கள் ஏலத் தொகையில் 33 சதவிகிதமும், 900 விஞீபி அலைக்கற்றை ஏலம் கோரியவர்கள் 25 சதவிகிதமும் முன்பணமாக செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தொகையும் செலுத்தத் தேவை யில்லை. அதற்குப் பின் ஏலம் எடுத்தோர் செலுத்த வேண்டிய மீதித் தொகையை ஆண்டுத் தவணையாக 10 ஆண்டுகளில் செலுத்தலாம். இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய முன்பணம் 18,296 கோடி ரூபாய் மட்டுமே.

தமிழ் ஓவியா said...

1995 இல் கடைப்பிடிக்கப்பட்ட ஏலத் தில் பங்கேற்று, பெரும் வருவாயை எதிர் பார்த்து, போதிய வருவாய் இல்லாததால் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அந்த நிறுவனங்கள் நீதிமன்றங்களின் உத வியை நாடியதும், இறுதியில் மாண்புமிகு வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான பா.ஜ.க. அரசு ரூ.50,000 கோடியை 1999 ஆம் ஆண்டு ரத்து செய்ததும் இங்கே நினைவு கூரத்தக்கது. மீண்டும் அதே கதிதான் இன்றைய ஏல முறையில் நிறு வனங்கள் கட்ட வேண்டிய எஞ்சியுள்ள தொகைக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் விளைவாக தொலைத் தொடர்பு மூலம் அரசிற்கு வருவாய் கிடைப்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் இன்னும் எதிர்க்கட்சி யினரும், சில ஊடகங்களும் ஏதோ இமாலய ஊழல் நடைபெற்றுள்ளதாக பரப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மை நிலை என்ன? (அ) உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று அவர் களின் ஒப்புதலின் பேரில் சி.பி.அய்.யால் சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஆ.இராசா அவர் கள் ஒரு ரூபாய் கூட கையூட்டு பெற்ற தாக குற்றப் பத்திரிக்கையிலேயே கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

(ஆ) இந்த வழக்கைக் கையாளும் சி.பி.அய்., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் ஒன்றி ணைந்து திரு. ஆ.இராசா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினோம்; எல்லாக் கோணங்களிலும் தீர விசாரித்தோம்; ஆ.இராசாவிடம் வருவாய்க்கு மீறிய சொத்து எதுவும் இல்லை; சொத்துக் குவிப்பு வழக்கு எதுவும் நாங்கள் பதிவு செய்திடவுமில்லை என்பதாக நீதிமன்றத் தில் 13.11.2013 அன்று திரு. விவேக் பிரிய தரிசினி என்ற சி.பி.அய். விசாரணை அதிகாரி கூறியுள்ளது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும்.

(இ) முறையாக உரிமம் வழங்கப்பட வில்லை என்று 122 நிறுவனங்களின் உரி மத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றமும், இதற்கென அமைக்கப்பட்ட நாடாளுமன் றக் கூட்டுக்குழுவும் (JPC)
அந்த உரிமம் வழங்கிய திரு. ஆ.இராசா அவர்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காதது ஏன்? இந்தச் செயல் இயற்கையின் நியதிக்கு (National Justice) புறம்பானது அல்லவா? அவர்களின் முடிவு ஒரு தலைப்பட்சமானதுதானே!

தமிழ் ஓவியா said...

(ஈ) 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்கிற திட்டம் 2003 முதல் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2009-2010 ஆம் ஆண்டு வரை ரூ.79906.64 கோடி வருவாயில் பங்காக (Revenue Share) அரசுக்குக் கிடைத்துள் ளது. இன்று அது ஒரு லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. ஆனால் ஏல முறை யால், வருவாயில் பங்காக ஆண்டுக்கு ரூ.15,000 கோடிவரை நிரந்தரமாக வரும் வருவாய் இனி அரசுக்குக் கிடைக்காது. இது ஒரு பேரிழப்பு ஆகும்.

2003 இல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத் தில் அருண்சோரி, ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் (GOM) பரிந்து ரையை ஏற்று, அமைச்சரவையின் முடி வின்படி, 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணமாக ரூ.1658 கோடியைச் செலுத்தி ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளித்து (First Come First Serve) வருவாயில் பங்கு (Revenue Share) போன்ற முடிவுகளும் கடைப்பிடிக்கப்பட் டன. ஆனால் அதே அடிப்படையில். அரசின் கொள்கை முடிவின்படி மேலும் புதிய நிறுவனங்களுக்கு திரு.ஆ.இராசா காலத்தில் உரிமம் வழங்கியது தவறில்லை என்பதை தோல்வி அடைந்த இந்த ஏல முடிவுகள் காட்டுகின்றன.

திரு. ஆ.இராசா செய்ததென்ன:

2007 இல் நூற்றுக்கு 18 பேர் தொலை பேசியை பயன்படுத்துவோர் என்றிருந்த நிலையை 2001 இல் 90 கோடியாக உயர வழி வகுத்தது. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்ற கட்டணம் என்றிருந்த நிலையை மாற்றி விநாடிகள் (Seconds) அடிப்படையில் கட்டணம் என்ற முறையை ஏற்படச் செய்ததுடன் உலகிலேயே குறைந்த கட்டணம் இந்தியாவில்தான் என்ற நிலையையும் ஏற்படுத்தியது. ஒவ்வொரு உபயோகிப்பாளருக்கும் மாதாந்திர தொலைபேசி செலவு (ARPU)) ரூ.298/- என்றிருந்ததை ரூ.100/- ஆகக் குறையச் செய்தது. இந்நடவடிக்கைகளால் இந்தியாவின் மொத்த வருவாயில் (GDP) 25 சதவிகிதம் தொலைத்தொடர்பின் மூலம் கிடைக்க வழிவகுத்தது. பொதுத்துறை நிறுவனங்களான BSNL / MTNL தனியார் மயமாகாமல் பாதுகாத்த தோடு, இந்நிறுவனங்களுக்கு 3ஜி உரி மங்களை, ஓராண்டு முன்பாகவே வழங்கி, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கச் செய்து, தனியார் நிறுவனங்களின் கொட்டத்தை அடக்கியது.

மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை!

உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ ஒரு ரூபாய் லஞ்சப் பணம் இருப்ப தாகவோ வருவாய்க்கு மேல் ஒரு ரூபாய் சொத்து சேர்த்ததாகவோ நிரூபிக்கப் பட்டால், நான் வழக்கை நடத்தாமலேயே ஆயுள் தண்டனையை ஏற்றுக் கொள் கிறேன். நிரூபிக்கத் தயாரா? என்று 11.2.2011 அன்று நீதிமன்றத்தில் முழக்கமிட்ட திரு. ஆ.இராசா அவர்கள் எங்கே? ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கிலும் வருமான வரி வழக்கிலும் 18 ஆண்டு களாக வாய்தா மேல் வாய்தா வாங்கும் கூட்டம் எங்கே? சிந்திப்பீர்! அரசின் கொள்கை முடிவில் தலை யிட்டு அசாதாரண சூழ்நிலையை ஏற் படுத்திய மத்திய தணிக்கை அதிகாரி (CAG),

CAG -யின் அறிக்கையில் கூறப்பட்டி ருந்த உத்தேச வருவாய் இழப்பு என்பதை ஊழலாக சித்தரித்து ஒவ்வொரு நாளும் நாள் முழுவதும் (24ஜ்7) விவாதம் நடத்தி தங்களைத் தாங்களே நீதிபதிகளாக பாவித்து (Trial and Judgement by Media) ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள்,

CAG, ஊடகங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக் கொள்வோர் ஆகியோரின் கூக்குரலால் சி.பி.அய்.யின் விசாரணையையே, தன் மேற்பார்வையில் கொண்டு வந்தது மற்றும் குற்றச்சாட்டுப் பதிவையே, தன் நேரடி மேற்பார்வைக்குக் கொண்டு வந்தது போன்ற அசாதாரண சூழ்நிலை களைக் கடைப்பிடித்து 122 உரிமங்களை ரத்து செய்த நீதிமன்றங்கள்,

அரசின் கொள்கை முடிவுகளில் CAG, CVC மற்றும் நீதிமன்றங்கள் தலையிட உரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை நீதிமன்றங்களில் வாதிடாதது மட்டுமின்றி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உரிய முறையில் மேல்முறையீடு செய்யாத மத்திய அரசு ஆகியவைகளின் போக்குகளை மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டுகி றோம்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டை மய்யப் படுத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஏற்படுத் தப்பட்ட அசாதாரண சூழ்நிலையால் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் மீது இருந்த நம்பிக்கையும், நன்மதிப்பும் சீரழிக்கப்பட்டு பொருளாதார தேக்க நிலை உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இப்போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மன்றம் ஒரு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டுகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/79080.html#ixzz2zfWEHBkT

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


சேது சமுத்திரத் திட்டம் முதல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முடக்கி விட்டு, நான் எந்தத் திட் டத்தையும் முடக்கவில்லை யென்று மிகத் தைரியமாக மக்களிடம் பொய் மூட் டையை அவிழ்த்துக் கொட்டும் ஒரு முதல்வரை, ஜெயலலிதாவைத் தவிர வேறு எங்கும் கேள்விப் பட்டதுண்டா?

Read more: http://viduthalai.in/page-2/79087.html#ixzz2zfWTq8UG

தமிழ் ஓவியா said...


மனுஷ்யபுத்திரனின் பதில்


மனுஷ்ய புத்திரன் தேர்தல் களத்தில் இளைஞர்களின் பங்கு பற்றி சன் தொலைக்காட்சியில் விவாதத்தில் பங்கு கொண்டு பேசிக்கொண்டு இருந்தபோது கிரிஷ்ணகிரியில் மோடி பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். மோடி குஜராத்தில் மின்சாரமும், தண்ணீரும் வெள்ளமாய் கிடைப்பது பற்றியும், வேலைவாய்ப்பில் குஜராத் கொடி கட்டிப் பறப்பது பற்றியும் பொய் சொல்லிக்கொண்டு இருந்தார்

நேரடி ஒளிபரப்பு முடிந்ததும் செய்தி யாளர் மனுஷ்யபுத்திரனிடம் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சியுடன் இருக் கிறார்களா என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த மனுஷ்ய புத்திரன் சற்றுமுன் பேசிய மோடி எவ் வளவு பொய்கள் கூறி இளைஞர்களை ஏமாற்றுகிறார் என்று பாருங்கள்.

குஜராத் அரசின் ஜூனியர் லெவல் வேலைக்கு 1500 இடங்களுக்கு 13 இலட்சம் பேர் விண்ணபிக்கிறார்கள். இதுதான் வேலையில்லாத் திண்டாட்டத்தை மோடி ஒழித்ததன் இலட்சியமா? நான்கு இலட்சம் விவசாயிகள் குஜராத்தில் மின் இணைப் புக்கு விண்ணப்பித்துவிட்டு பல மாதங் களாகக் காத்திருக்கிறார்கள். குஜராத் கிராமப்புறங்களில் மக்கள் குடி தண்ணீருக்காக பல மைல் தூரம் நடக் கிறார்கள். விவசாய நிலங்களை அதானி களுக்கும், டாட்டாவுக்கும் மோடி அள்ளி வழங்கியதில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் என்று சொல்லி அடுக்கடுக்காக அவர் சொன்ன அத்தனை யையும் கூறி குஜராத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர்ந்தார். மேலும் மோடி, இந்தத் தேர்தல் வாக் காளர்களுக்கான தேர்தல் அல்ல; கட்சி களுக்கான தேர்தல் அல்ல; இந்தியாவின் அத்தனைக் கோடி மக்களும் தேர்தலில் நிற்கிறார்கள் என்றார். அதற்கு பதிலளித்த மனுஷ்யபுத்திரன், மோடி வேட்பாளர்களை, கட்சியை , சித்தாந்தங்களைத் தாண்டி தனது தனிநபர் எதேச்சதிகாரத்தை நிறுவ விழைகிறார். அதுதான் அவர் பேசிவருவதன் அர்த்தம் என்றார்

இன்று மோடி பேசி முடித்த அடுத்த நிமிடம் அதே நேரலையில் விரிவாக மறுத்ததது சிறப்பானதாக இருந்தது.

-சரவணா இராஜேந்திரன்,
திருநெல்வேலி

Read more: http://viduthalai.in/page-2/79086.html#ixzz2zfWcgXmY

தமிழ் ஓவியா said...


நூதன லஞ்சம்!


புதுச்சேரி, ஏப்.22- புதுச்சேரியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் செருப்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொதுமக்களிடையே செருப்பு அணியாமல் வெற்றுக்காலில் ஒருவர் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இருந்துள்ளார். பிரச்சாரத்தைக் கவனித்துக் கொண்டி ருந்த அவரை அழைத்து, சுயேச்சை வேட் பாளர் பொதுமக்கள் முன்னிலையில் ஆயிரம் ரூபாய் பணத்தை அளித்துள்ளார். இது முறைகேடாக ஓட்டுக்காக அளிக்கப் பட்டது என்று புதுவை காவல்துறையினர் அவரை கைது செய்து பின்னர் விடுவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/79082.html#ixzz2zfWvnZ9L

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


முஸ்லீம்கள் மட்டும்தான் சிறுபான்மையினரா? கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தது நான்தான் என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறாக அப்பட்டமாகச் சொல்லக் கூடிய ஒரு முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெகுதூரம் போக வேண்டாம் - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் அவர்.

Read more: http://viduthalai.in/page-4/79070.html#ixzz2zfXKDnE9

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


முஸ்லீம்கள் மட்டும்தான் சிறுபான்மையினரா? கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தது நான்தான் என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறாக அப்பட்டமாகச் சொல்லக் கூடிய ஒரு முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெகுதூரம் போக வேண்டாம் - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் அவர்.

Read more: http://viduthalai.in/page-4/79070.html#ixzz2zfXKDnE9

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

மக்களைச் சந்திக்காமல் தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் ஹெலிகாப்டரில் பறந்துவந்து எழுதி வைத்ததைப் படித்துவிட்டுச் செல்லும் முதலமைச்சர் ஒருவரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

கேள்விப்படுவதென்ன - இப்பொழுது நேரிலேயே பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம் - அவர்தான் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா.

கேள்விப்பட்டதுண்டா?

யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தில் இலங்கை அரசின் போரை நியாயப்படுத்திப் பேசிவிட்டு, இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப் பட்டதற்காகக் கண்ணீர்விடும் முதலமைச் சரைக் கண்டதுண்டா?

ஏனில்லை? இங்கே தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் - அவர்தான் புரட்சியைப் பெயருக்கு முன்னாள் ஒட்டி வைத்துக்
கொண்டுள்ள செல்வி ஜெயலலிதா.

Read more: http://viduthalai.in/page-6/79110.html#ixzz2zfYCsMb9

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர் பிறந்த மண் இது! மதவாத பிஜேபி இங்கு எடுபடாது!: தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சென்னை, ஏப். 22 - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் ஆகி யோர் அரும்பாடுபட்டு பண் படுத்திய தமிழ் மண்ணில் மதவாத பிஜேபி வேரூன்ற முடியாது என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்கள் டெக்கான்கிரா னிக்கல் ஆங்கில நாளேட் டிற்கு அளித்த பேட்டி 21.4.2014 அன்று வெளியிடப்பட்டுள் ளது. அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு :-

கேள்வி :- தொண்ணூறு அகவையைக் கடந்து, தேர் தல் களத்தில் பிரச்சாரம் செய் யக்கூடிய தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களது தேர் தல் பிரச்சாரத்துக்கு எப்படிப் பட்ட வரவேற்பு இருக்கிறது?

கலைஞர் :- வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? 16-4-2014 தேதிய ஆனந்த விகடன் வார இதழ், கருணா நிதியை, காலம் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. ஒரு குழந்தையைக் காணும் குதூ கலத் துடன்தான் தொண் டர்கள், கருணாநிதியின் பிரச் சாரத்துக்குக் கூடுகிறார்கள் என்று எழுதியிருந்ததே;

அப்படித்தான் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகள் கூடுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைப் பார்ப்ப தற்கும், என் பேச்சைக் கேட்ப தற்கும் மிகுந்த உற்சாகத் தோடு தமிழ் மக்கள் கூடு கிறார்கள். அவர்கள் பொழி யும் அன்பும் பாசமும் உயிர்ப் பாலாக இருந்து என்னை ஊக்கப்படுத்தி என் உடல் வலியையும் போக்குகிறது.

மாநிலங்களின் பிரச்சினைகள்தான்.. இந்தியாவின் ஒட்டுமொத்த பிரச்சினைகள்!

கேள்வி :- ஒரு மக்கள வைக்கு நடைபெறும் தேர்த லில், மாநிலத்தின் பிரச்சினை களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து பேசுகிறீர்கள். தி.மு.க. வின் பிற பேச்சாளர்களும்கூட முதல்வர் ஜெயலலிதா மீது கடுமையாக விமர்சனம் செய் கிறார்கள். ஏன்?

கலைஞர் :- மக்களவைத் தேர்தல் என்ற போதிலும், தமிழகத்தைப் பொறுத்த வரையில், இங்கே பிரதானக் கட்சி களாக இருப்பவை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான்! மேலும் தமிழகத்தில் ஆளுங் கட்சியாக அ.தி.மு.க. இருப்ப தாலும், முதல்வரின் பேச்சு கடந்த கால தி.மு.கழக ஆட்சியைப் பற்றியும், அய்க் கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கெடுத்தது பற்றி யும் இருப்பதாலும், எங்களு டைய பேச்சு அதற்குப் பதில் சொல்லும் வகையிலே அமை கிறது. மேலும் மாநிலங்களின் பிரச்சினைகளெல்லாம் இணைந்தவைதான் இந்திய நாட்டின் மொத்தப் பிரச்சி னைகள் என்பதை மறந்து விடக் கூடாது.

கேள்வி :- பி.ஜே.பி.க்கும், அ.தி.மு.க.வுக்கும் மறைமுக மான உறவு இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அவர் பா.ஜ.க. பக்கம் சாயக்கூடும் என்று தி.மு.க. விமர்சனம் செய்தது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, குஜராத் மாநில வளர்ச்சி ஒரு மாயை என்றும், காவேரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் நிலைப்பாட் டை விமர்சித்தும் பேசி இருக் கிறாரே?


தமிழ் ஓவியா said...

கலைஞர் :- முதலமைச் சர் ஜெயலலிதா குஜராத்தைப் பற்றியும், பா.ஜ.க. பற்றியும் எப்போது முதல் பேசுகிறார் என்பதைக் கொண்டே உங் களால் யூகிக்க முடியவில்லை யா? அவருடைய தேர்தல் சுற்றுப்பயணம் முடிகிற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஒரு சில கட்சிகள், திரும்பத் திரும்ப முதலமைச்சர் ஜெய லலிதா ஏன் மோடியைப் பற்றி விமர்சிக்க மறுக்கிறார் என்று கேட்ட நிலையிலே, வேறு வழியில்லாமல்தான், அவர் பா.ஜ.க.வை விமர் சனம் செய்தார் என்றே எண் ணத் தோன்றுகிறது. ஏனென் றால் கடந்த காலத்தில், குஜ ராத்தில் மோடி முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது ஜெயலலிதா இங்கேயிருந்து அந்த நிகழ்ச் சிக்காகச் சென்றதும், ஜெய லலிதாவின் பதவிப் பிரமாண நிகழ்ச்சிக்கு மோடி வந்திருந் ததும், கரசேவையை ஆத ரித்து ஜெயலலிதா பேசிய தும், இங்கிருந்து கரசேவைக்கு ஆட்களை அனுப்பியதும் ஜெயலலிதா யார் என்பதை நம்மைப் புரிந்து கொள்ள வைத்துள்ளது. ஏன், சில நாட்களுக்கு முன்பு பத்திரி கையாளர், நண்பர் சோ அவர் கள் ஒரு பேட்டியில் கூறும் போது, பா.ஜ.க. வுக்கு வாக்க ளியுங்கள், பா.ஜ.க. போட்டி யிடாத இடங்களில் அ.தி.மு .க.வுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்திருந்தாரே; அதிலிருந்தே நீங்கள் வருங் காலத்தைத் தெரிந்து கொண்டி ருக்கலாமே? அதுமட்டு மல்ல; பா.ஜ.க.வின் நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கையில் உள்ள ராமர் கோயில், பொது சிவில் சட்டம், காஷ்மீரத்துக் குத் தனி அந்தஸ்து ஆகிய குறிப்புகள் பற்றி ஜெயலலிதா ஒரு வார்த்தைகூடத் தெரிவிக் காம லிருப்பது எதை உணர்த் துகிறது?

காங்கிரசுடனான அணுகு முறையில் எந்தவித மாற்றமும் இல்லை!

கேள்வி :- மதச்சார்பற்ற ஆட்சி அமைய கை கொடுப் போம் என்றும், காங்கிரசை மன்னிக்கத் தயார் என்றும் கூட பிரச்சாரத்தில் பேசி னீர்கள். காங்கிரஸ் பற்றிய தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறதே? காங்கிர சுடன் கூட்டுச் சேராதது உங் களுக்கு வருத்தத்தை ஏற் படுத்தி இருக்கிறதா?

கலைஞர் :- காங்கிர சுடன் கூட்டுச் சேராதது எங்களுக்கு எந்தவிதமான வருத்தத்தையும் ஏற்படுத்த வில்லை. அந்தக் கட்சியிலே உள்ள சில குறிப்பிட்ட தலை வர்களோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். என் னிடம் அன்பு கொண்ட பலர் அந்தக் கட்சியிலே இருக் கிறார்கள். ஆனால் காங்கிரஸ் அரசு தமிழர் களின் நலனிலே என்ன காரணத்தாலோ போது மான அக்கறை செலுத்த வில்லை. ஆனாலும் தோழ மையை மதித்து கூட்டணி தர்மத்தைக் காத்து தி.மு. கழகம் நடந்து கொண்ட தையும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நிலைமை ஏற்பட்ட போது தான் தி.மு. கழகம் கூட்ட ணியிலிருந்து விலகியது என்பதையும் நீங்களே அறி வீர்கள். ஆனால் மத்தியிலே ஆட்சி அமைப்பது யார் என்ற பிரச்சினை வரும்போது, அங்கே மதச் சார்பற்ற ஓர் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை, குறிக்கோள் எல்லாமே! அப்படிப் பட்ட ஓர் ஆட்சி மத்தியிலே அமை வதற்குத்தான் கை கொடுப் போம் என்றும், காங்கிரசை மன்னிக்கத் தயார் என்றும் பேசினேன். காங்கிரஸ் பற்றிய தி.மு.க.வின் அணுகு முறையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் மத்தியில் ஒரு மதச் சார்பற்ற ஆட்சிதான் அமைய வேண்டுமென்ற நிலைப் பாட்டில் நாங்கள் மேலும் உறுதியாகவே இருக்கிறோம்.

மின்வெட்டு சதி என ஒரு முதலமைச்சரே கூறுவது நகைப்பிற்குரியதுதான்!

கேள்வி :- தேர்தல் நேரத் தில் வேண்டுமென்றே மின் உற்பத்தியில் தடங்கல் செய் யப்படுகிறது. இதில் சதிச் செயல் இருக்கிறது என்கிறா ரே முதல்வர் ஜெயலலிதா?

தமிழ் ஓவியா said...

கலைஞர் :- தமிழகத்தில் ஆட்சிப் பொறுப் பேற்பதற்கு முன்பும், ஆட்சிப் பொறுப் பேற்ற பின்பும் மின்வெட்டு குறித்து ஒவ்வொரு கூட்டத் திலும் ஒவ்வொரு காரணத் தைச் சொல்லி ஜெயலலிதா காலம் கடத்தி வருகிறார். தவணை வாங்கிப் பார்த்தார்; எதுவும் நடக்கவில்லை. மத் திய அரசும், தி.மு.க.வும் சதி செய்கிறது என்று சொல் லிப் பார்த்தார்; அதையும் மக்கள் ஏற்கவில்லை. இப் போது சதிச் செயல் என்கிறார்; காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவைக் கையில் வைத்துக் கொண்டு, ஒரு முதலமைச்சர் முக்கியமான இந்த மின் வெட்டுப் பிரச்சினையில் சதிச் செயல் என்று சொல் வதை, அரசு நிர்வாகம் பற்றிச் சிறிதே அறிந்த வர்கள் கூட நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட் டார்கள். சதிச் செயல் குற்றச் சாட்டு நகைப்புக்குரியது. கேள்வி :- கோவை தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில், இதுதான் உங்களது கடைசி தேர்தல் பிரச்சாரம் என்று பேசியது கண்டு, கூட்டத்தில் உணர்ச்சி வயப்பட்டனர். அப்படியானால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடுவீர்களா?

கலைஞர் :- கூட்டத்தில் மாத்திரமல்ல; தொலைக் காட்சி வாயிலாக என் உரையைக் கேட்டவர்கள் இரவு முழுவதும், மறுநாள் அன்றும், ஏன் இப்போது சந்திக்கும் போதும் கூட ஏன் அப்படிப் பேசினீர்கள் என்று கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இயற்கை யின் முடிவினை யார் முன் கூட்டியே அறுதியிட்டுக் கூற முடியும்? சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண் டாண்டுகள் உள்ள நிலையில், அதில் போட்டி யிடுவது என் பது, அப்போதுள்ள என்னு டைய உடல் நலம் மற்றும் கழகம் எடுக்கின்ற முடி வினைப் பொறுத்து அமை யும். அதற்குள் உங்களுக்கு ஏன் அவசரம்?

வஞ்சம் தீர்க்கும் கட்சிகளாக பா.ஜ.க. - காங்கிரஸ்தான் இருக்கின்றன!

கேள்வி :- தி.மு.க., அ.தி. மு.க., ஆகிய இரண்டு கட்சி களும் மக்கள் நலனைப் பற்றிக் கவலைப் படாமல், ஒருவரை யொருவர் வஞ்சம் தீர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர் என்று நரேந்திர மோடி விமர்சனம் செய்திருக் கிறாரே?

கலைஞர் :- தி.மு.க., அ.தி.மு.க., என்று கேள்வியின் தொடக்கத்தில் உள்ள வார்த் தைகளுக்குப் பதிலாக, காங் கிரஸ்., பா.ஜ.க., என்ற வார்த்தை களைப் பொருத்திக் கொள் ளவும்!தமிழகத்தில் வேரூன்ற பா.ஜ.க.படாதபாடுபடுகிறது!

கேள்வி :- தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி போன்ற கட்சிகளோடு சேர்ந்து பா.ஜ.க. அமைத் துள்ள கூட்டணி, தமிழ்நாட்டில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று அந்த அணி யினர் கூறி வருகின்றனர். அவர் களது நம்பிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழகத்தில் பா.ஜ.க. வேரூன்றுகிறதா?

தமிழ் ஓவியா said...

கலைஞர் :- தமிழகத்தில் பா.ஜ.க. வேரூன்று வதற் காகத் தான் படாதபாடுபட்டு வரு கிறது. தி.மு.க. வோடும், அ.தி.மு.க.வோடும் கூட் டணி அமைக்க முயன்று முடியாத நிலையிலேதான் அந்தக் கட்சி நீங்கள் கேட் டுள்ள மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து தமிழ கத்திலே பா.ஜ.க. வேரூன்றப் பார்க் கிறது. ஆனால் தமிழ் நாடு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராஜ ரும், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தும் அரும் பாடுபட்டு, பண்படுத்தி கட்டிக் காத்து வளர்த்த பூமி!

கேள்வி :- முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 2 ஜி விவகாரம் குறித்து கடுமை யாக தி.மு.க.வை விமர்சித்து வருகிறாரே? ஆ. ராசாவுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புத் தரப்பட்டதுகூட ஊடகங்களால் விமர்சனம் செய்யப்படுகிறதே?

கலைஞர் :- 2 ஜி விவ காரம் நீதிமன்றத்திலே இருக் கிறது. அதில் எத்தனையோ லட்சம், கோடி என்றெல்லாம் ஊடகங்களில் ஊழல், ஊழல் என்று செய்தி பரப்பப்பட் டது. அதுவே பின்னர் அர சாங்கத் திற்கு வரவேண்டிய வருவாய் இழப்பு என்றார் கள்.

லட்சம், கோடி என்பது மாறி, முதலில் கூறப்பட்ட தொகை அனுமானத்தின் (National) அடிப் படையிலே கணக்கிடப்பட்டது என்றெல் லாம் மாற்றப்பட்டது. ஊட கங்கள் செய்கின்ற பகீர் விமர்சனங்கள் - துரும்பை தூண் ஆக்கும் - தூணைத் துரும்பு ஆக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக நாம் கண்டிருக்கிறோமே!

கேள்வி :- தமிழகம் நீண்ட காலத்துக்குப் பிறகு பல முனைப் போட்டியைச் சந்திக்கிறதே; முடிவுகள் எப்படி இருக்கும்?

கலைஞர் :- கருத்துக் கணிப்பு வெளியிட நான் விரும்பவில்லை.

கேள்வி :- எதிர்காலத் தில் காங்கிரசுடனும், பா.ஜ.க. வுடனும் கூட்டுச் சேர மாட் டோம் என்ற நிலையில் தி.மு.க. உறுதியாக இருக்குமா?

கலைஞர் :- இருக்கும்.
கம்யூனிஸ்டுகள் குறித்து எனது கருத்தும் ஜெயலலிதா கருத்தையும் அவர்கள் அறிவார்கள்!

கேள்வி :- கம்யூனிஸ்ட் கட்சிகளை உங்கள் கூட்ட ணிக்கு அழைத்தீர்கள். மறுத்து விட்டு தேர்தல் களத்தில் தி.மு. க.வும் இடம் பெற்றிருந்த அய்க்கிய முற்போக்குக் கூட் டணி பற்றி கடுமையாக விமர்சிக்கிறார்களே?

கலைஞர் :- கம்யூனிஸ்ட் கட்சிகளை எங்கள் கூட்ட ணிக்கு நான் அழைத்தது உண் மைதான். ஆனால் அந்தக் கட்சிகளின் ஒருசில தலைவர் களை நான் அழைக் காமல் இருந்து விட்டேன். அதுதான் தவறாகி விட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி களை எங்கள் கூட்டணிக்கு நான் அழைத்த போது, அதிலே மகிழ்ச்சியடைந்து, அந்தக் கூட்டணி அமைய வேண்டு மென்பதற்காக, தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்களை என் னால் மறக்க முடியாது.

ஆனால் தி.மு.க.வும் இடம் பெற்றிருந்த அய்க்கிய முற் போக்குக் கூட்டணி பற்றி கம்யூனிஸ்ட்கள் கடுமையாக விமர்சனம் செய்வதும், அ.தி. மு.க.வை மென்மையாக விமர்சனம் செய்வதும், அது எதற்காக என்பதும் நான் அறியாதது அல்ல; தகரடப் பாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட தே கம்யூனிஸ்ட்கள் உண்டி யல் ஏந்துவதற்காகத்தான் என்று பேரவையில் ஜெய லலிதா கேலி பேசியதையும் நான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் என்று நான் பெருமையாகச் சொன்னதை யும் கம்யூனிஸ்ட்கள் நன் றாகவே அறிவார்கள்!

கேள்வி :- இந்தத் தேர்தல் பிரச்சாரக் களத்தில், தி.மு. கழக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்களின் கவ னத்தை ஈர்த்திருக்கிறார்; உங்கள் கருத்து?

கலைஞர் :- கடந்த காலத் தில், கழகத்தின் பொருளாள ராக நான் இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்த் திடும் வகையில் செயலாற்றி யிருக்கிறேன். அதுதான் என் நினைவுக்கு வருகிறது. தி.மு. கழகத்தின் தலைவர் என்ற முறையில், பொருளாளரின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/79096.html#ixzz2zfYOmV1E

தமிழ் ஓவியா said...


வாசிப்பது மருந்தாகவா? விருந்தாகவா? சென்னை புத்தகச் சங்கமத்தில் களை கட்டிய பட்டிமன்றம்


கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுடன் பட்டிமன்ற நடுவர் கவிஞர் நந்தலாலா, தனிக்கொடி, சுந்தரவல்லி, தமிழ்நெஞ்சன், அருள் பிரகாசம், சிறப்பு குலுக்கல் பரிசாக திறன்பேசியை வென்ற பாஸ்கர், மற்றும் அவரது புதல்வன் பி.வின்செண்ட், முனியப்பன், சென்னை புத்தகச் சங்கம ஒருங்கிணைப்பாளர்கள் ஒளிவண்ணன், வேணுகோபால் மற்றும் புகழேந்தி உள்ளனர்.

சென்னை புத்தகச் சங்கமத்தில் நந்தலாலா தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்.

சென்னை புத்தகச் சங்கமத்தில் தொழிலதிபர் அபிராமி ராமநாதன்.

சென்னை, ஏப். 22- சென்னை புத்தகச் சங்கமத்தின் நான் காம் நாள் நிகழ்ச்சி நேற்று (21.4.2014) நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனத்தின் சிறப்பு பயில ரங்கத்துடன் தொடங்கி நடைபெற்றது.

பதிப்பாளர்களின் பெரும் வரவேற்பை பெற்ற சிறப்பு பயிற்சிப்பட்டறை யில் அதிகப்படியான பதிப் பகத்தாரும் பதிப்பகவணி கம் தொடர்பானவர்களும் கலந்துகொண்டனர். மாலை 6.30 மணியளவில் கவிஞர் நந்தலாலாவின் புத் தகங்களை வாசிப்பது மருந் திற்காகவா? விருந்திற்கா கவா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடை பெற்றது.

கலகலப்பான பட்டிமன்றத்தின் நடுவரான கவிஞர் நந்தலாலா பள்ளிக் கூட பாடங்களை படிக்காத ஆனால் பொது நூல்களை படித்து பெரும் மேதையா னவர் தந்தைபெரியார் என்று நெகிழ்ச்சியாக கூறியவர். புத்தகங்களை வாங்குவது முக்கியமான ஒன்றாக இருந் தாலும் அதை பார்வையிடு வது கூட சிறப்புதான் என் றார்.

அகந்தை கொண்ட ஒரு வர் இங்கு வந்து புத்தகங் களை பார்வையிடும் போது அறிவுவாய்ந்த புத்தகங்களை எழுதும் பலர் இருப்பதை நினைவில் கொள்ளும் போதே அவரது அகந்தை அழிந்துவிடும். கற்க கசடற கற்பவை கற்றபின் அதற்கு தகுந்தவாறு நின்று வாழ வேண்டும் என்ற வள்ளு வனின் இரண்டடி குறள் இது போன்ற பெரிய புத்தகச்சங் கமங்களில் 2000 ஆண்டு களுக்கு பின்னரும் சான்றாக நிற்பதே நூல்களுக்கான பெருமையாகும்.


தமிழ் ஓவியா said...

ஒரு மனிதன் ஒரு முறை தான் வாழமுடியும் ஆனால், புத்தகங்களை படிப்பதன் மூலம் பல முறை வாழ் கிறான் என்று கூறி பட்டி மன்ற விவாதத்தை துவக்கி வைத்தார். விவாத மேடை யில் பங்கேற்ற தமிழறிஞர் கள் தமிழ் நெஞ்சன், தனிக் கொடி,சுந்தரவல்லி, அருள் பிரகாசம் போன்றோர் மிக வும் சிறப்பு வாய்ந்த வகை யில் கேட்போர் சிந்திக்கும் வண்ணம் தங்களது விவா தங்களை எடுத்துவைத்தனர். தந்தைபெரியார் மற்றும் காமராசர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளை தங்களது வாதங்களில் எடுத்துக்கூறி பல புதிய தகவல்களைத் தந் தனர்.

பட்டிமன்ற இறுதியில் பேசிய கவிஞர் நந்தலாலா:- புத்தகங்கள் கசப்பான மருந் தைக்கூட சுவையான விருந் தாக மாற்றிக்காட்டும் என்று கூறி பட்டிமன்றத் தீர்ப் பளித்து சென்னை புத்தகச் சங்கமத்தின் 4-ஆம் நாள் சிறப்பு நிகழ்ச்சியை முடித்து வைத்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் பட்டிமன் றத்தில் பங்கேற்ற அனை வருக்கும் பயனாடை அணி வித்து பெரியார் சுயமரி யாதைப்பிரச்சார நூல்களை நினைவுப்பரிசாக வழங்கி னார்கள்.

தமிழ் ஓவியா said...

குழந்தைகளின் படிப்புத்திறனை வளர்க்க சிறப்புப் பயிற்சி குரோளியர்

சென்னைப் புத்தகச் சங் கமத்தில் பல்வேறு சிறப்பு கள் உண்டு அவற்றில் ஒன்று குழந்தைகளுக்கான கல்வித் திறன் மற்றும் வாசிப்பை விளையாட்டோடு ஊக்கு விக்கும் குரோளியர் நிறு வனப் பணி.

சென்னைப் புத்தகச் சங்கமத்தில் இடம் பெற் றுள்ள இந்த நிறுவனத்தின் சென்னை முகவர் ராஜன் கூறும்போது:- மேலை நாடு களில் குழந்தைகளுக்கான விளையாட்டுடன் கூடிய கல்வி முறையை கவனத்தில் கொண்டு இந்த சிறப்பு பயிற் சித் திட்டத்தை உருவாக்கி யுள்ளோம். வார்த்தைகளில் உள்ள உச்சரிப்பு மாறுபாடு, படங்களில் உள்ள வேறு பாடு போன்றவைகளை சிறப்பு கையடக்க கருவி மூலம் கேட்கும் வசதியை உருவாக்கித்தந்துள்ளோம்.

குழந்தைகள் இந்த கருவிகள் மூலம் ஆசிரியர் இல்லாத போது தங்களது அய்யங் களை கேட்டு விளங்கிக் கொள்ளமுடியும், மேலும் மனவளர்ச்சி குன்றிய குழந் தைகள் எளிய முறையில் பாடங்களை புரிந்துகொள் ளும் விதமாக பல்வேறு நவீன வாசிப்பு மற்றும் கல்வி தொடர்பான விளை யாட்டுப் பொருள் மற்றும் அவற்றின் மூலம் கற்கும் விதம் பற்றி விளக்கிய அவர் சென்னை புத்தகச் சங்கமத் திற்கு வரும் பார்வையாளர் களிடமிருந்து தங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார்.

விருப்பப்பட்ட நூல்களை வாங்க சென்னை மக்களுக்கு மீண்டும் ஒரு நல்வாய்ப்பு

சென்னைப் புத்தகச் சங்க மத்திற்கு வருகை புரிந்த வண் டலூரைச் சேர்ந்த யோகேஸ் வரன் கூறியபோது: நான் கணினித்துறையில் பொறியி யல் வல்லுனராக பணியாற்றி வருகிறேன். இந்த புத்தகச்சங்கமம் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அனைவருக் கும் பயனுள்ளதாக இருக் கிறது.

நான் கணினித்துறை யில் இருந்தாலும் தமிழ் நூல்களை வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று பல்வேறு நூல்களைத்தேடி பல கடைகளுக்கு செல்வதை விட புத்தகச்சங்கமத்தில் பல்வேறு பதிப்பகங்களில் இருந்து எனக்குத் தேவை யான நூல்களை நான் வாங்க மிகவும் வசதியாக உள்ளது. நான் தேடிவந்த முக்கிய மான நூல்களில் சிலவற்றை இங்கு வாங்கிக்கொண்டேன். பல்வேறு பதிப்பகங்களில் பல புதிய தலைப்புகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளது.

அத்தனை நூல் களும் ஒரே இடத்தில் கிடைப்பது எங்களைப் போன்றவர்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பு, நூல் வாசிக்கும் ஆர்வமுள்ள அனை வரும் புத்தகச்சங்கமத்திற்கு வந்து இந்த நூல்களை வாங்கிச்செல்லவேண்டும், மேலும் நல்ல அரங்கம் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் உணவு மய்யங்கள், சென்னையில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் செல்வதற்கு உள்ள வாகன வசதி, நாம் விட்டுச்செல்லும் ஊர்தி களை சரியான முறையில் பாதுகாக்க செய்த ஏற்பாடு கள் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தது.

கடந்த ஆண்டும் பெரியார் திடலில் நடந்த புத்தகச்சங்கமத்தில் கலந்துகொண்டேன். இந்த ஆண்டு அதைவிட நன்றாக உள்ளது என்று தனது அனுபவத்தைக் கூறினார்.

புத்தகச்சங்கமத்தின் தினசரி குலுக்கல் முறையில் பரிசுகளை வென்றவர்கள்

சென்னை புத்தகச் சங் மத்தின் இறுதியில் குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவிக் கப்பட்டு தேர்ந்தெடுத்த 15 வயதுக்குட்பட்ட குழந்தை களில் 10 பேருக்கு பெரியார் பிஞ்சு 10 மாத சந்தாவும், சிறப்பு பரிசாக ஒருவருக்கு திறன்பேசி (டேப்லெட்) வழங்கப்பட்டுவருகிறது.

கடந்த இரண்டு நாட் களாக நடந்த குலுக்கலில் செஞ்சியைச்சேர்ந்த முனியப் பன் மற்றும் மையிலாப்பூ ரைச் சேர்ந்த ஜி.பாஸ்கர் ஆகியோருக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பரி சுகளை வழங்கி பாராட்டி னார். இந்த நிகழ்ச்சியில் புத்த கச் சங்கம ஒருங்கிணைப்பா ளர்கள் கோ.ஒளிவண்ணன், புகழேந்தி மற்றும் வேணு கோபால் போன்றோர் உட னிருந்தனர்.

நான்காம் நாள் புத்தகச் சங்கமத்தின் சிறப்பு பரிசான திறன்பேசி (டேப்லட்)யை சென்னை கோபால புரம் மனோகரனுக்கு சென் னைப் புத்தகச் சங்கம ஒருங் கிணைப்பாளர் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக புகழேந்தி வழங்கி பாராட்டினார்.

நான்காம் நாள் நிகழ்வில் திரைப்பட இயக்குநர் ராம், நக்கீரன் துணை ஆசிரியர் கோவி.லெனின், மற்றும் பல் வேறு பெருமக்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/79107.html#ixzz2zfYjw9cn

தமிழ் ஓவியா said...


சென்னையில்ஒருபுத்தகச்சோலை! அறிவுத்தேனருந்தவாரீர்!வாரீர்!!

இன்று உலகப் புத்தக நாள்! ஆங்கில மகாக் கவிஞன் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளை - உலகம் பொருத்தமாகப் புத்தக நாள் என்று கொண்டாடுகிறது. அந்த வகையில் சென்னை - இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஓர் அறிவுச்சோலை உங்களை அறிவுக்கரம் கொண்டு அன்பு தவழ, பொன்முறுவல் பூத்து அழைக்கிறது.

நீங்கள் அங்கு ஏன் வர வேண்டும்? அங்குதான் 200 புத்தக அரங்குகள் சங்கமித்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த பதிப்பகங்கள் மட்டுமல்ல; டில்லி, மும்பை ஆகிய மாநிலங்களிலிருந்தும் அரங்குகள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டிலும் கோவை, மதுரை, ஈரோடு முதலிய மாவட்டங்களிலிருந்தும் பதிப்பகத்தார்கள் தங்கள் வெளியீடுகளை அணி வகுக்கச் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் உலகப் புத்தக நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் தொடங்கப்பட்டது.

பதிப்பகத்தார்கள் போட்டி போட்டுக் கொண்டு அரங்குகளை அமைக்க முன் வந்ததால், இடவசதி கருதி ஓய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

விரிவான ஏற்பாடுகள், வந்தவர்கள் வியப்படைகிறார்கள் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் எல்லாம் உண்டு.

நூறு தமிழ்ப் பதிப்பகத்தார்கள்
35 ஆங்கில நூல் வெளியீட்டாளர்கள்
10 மல்டி மீடியா நிறுவனங்கள்

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பல் துறை மணம் கமழும் நூல்கள் எனும் அறிவு சார் கருவூலங்கள்!

மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சி கள், பட்டிமன்றம், ஆய்வரங்கம், பொம்ம லாட்டம், பறை இசை எனும் செவி விருந்துகள்!

நாவிற்கு விருந்தில்லையா என்று கேட்டு விடாதீர்கள் - வந்து பாருங்கள் நேரில் அனுபவித்தால்தான் அதன் அருமை எத்தகையது என்பது விளங்கும்; ஏட்டுச் சர்க்கரை என்றால் இனிக்காதே!

10 முதல் 50 விழுக்காடு வரை (பழைய நூல்கள்) தள்ளுபடி செய்து தரும் நூல் களும் உண்டு.

விருந்தாகவும் - மருந்தாகவும் பயன் படக் கூடிய நூல்கள் அணி அணியாகக் கண்களையும், கருத்துக்களையும் பறிக் கின்றன.

தேர்தல் சந்தடியிலும்கூட குடும்பம் குடும்பமாக மக்கள் மொய்த்த வண்ணமே உள்ளனர். சென்னையின் நடுநாயகமான இடத்தில் இது அமைந்துள்ளதைப் பொது மக்கள் பாராட்டுகின்றனர்.

கற்றது கை மண்ணளவு

கல்லாதது உலகளவு

என்பதை மறந்து விடாதீர்கள்!

புத்தகத்தைப் படிப்பது குறித்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறுவதைக் கவனியுங்கள்.

நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்? படிப்பது என்பது அறிவு உண்டாவ தற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்த கம் எல்லாம் மடமை வளர்ச்சிக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படு கிறது. அதனால்தான் நம் மக்கள் பகுத்தறிவற்றிருக்கிறார்கள்.

நீங்கள் குடிஅரசு, பகுத்தறிவுப் பதிப்பக புத்தகம் வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதியாவீர்கள். இந்தப் புத்தகங்கள் மதம், ஜாதி நம் அரசியல் முதலிய துறைகளில் அவற் றில் உள்ள புரட்டுகளை விளக்கி உங் களைப் பகுத்தறிவுவாதிகளாக்கும்.

விலை மிக மிக மலிவுக்கு பொது நலத்தை முன்னிட்டே நட்டத்திற்கு பதிப்பிக்கப்படுகிறது!

1962இல் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது இது பெரியார் இயக்க நூல்களும் இடம் பெறுகின்றன என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறோம்.

மேலும் யார்க்கு எது விருப்பமோ அந்த வகையில் அறிவு ருசிக்கான நூல்கள் தடபுடலாக இருக்கின்றன. குழந் தைகள் முதல் தொண்ணூறைத் தாண்டும் முதியோர் வரை பலன் பெறும் பழ முதிர்ச்சோலை இது!

18ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் புத்தகச் சங்கமம் 27ஆம் தேதி முடிய நடைபெற உள்ளது. பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனமும், தேசிய புத்தக நிறுவனம் (ழிஙிஜி) இணைந்து நடத்துகின் றன காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!
கடைசியாக ஒரு கொசுறு.

நண்பர் ஒருவர் ஆப்ரகாம் லிங்கனி டம் படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை; பின் ஏன் நீங்கள் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு லிங்கன் நான் பணம் சேர்ப்ப தற்காகப் படிக்கவில்லை. பணம் வரும் போது எப்படிப் பண்போடு வாழ வேண் டும் என்பதைத் தெரிந்து கொள்வதற் காகப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பல ஆண்டுகள் கழித்து அமெ ரிக்கக் குடியரசுத் தலைவராக ஆன பிற கும்கூட இதே பணிவோடுதான் இருந்தார்.

இதற்குமேல் எந்த எடுத்துக்காட்டு தேவை?

நல்லதோர் வாய்ப்பெனும் விருந்து நழுவ விடலாமா! இடையில் இன்னும் நான்கு நாள்களே!

- கவிஞர் கலி. பூங்குன்றன்

Read more: http://viduthalai.in/page-2/79122.html#ixzz2ziZULGR2

தமிழ் ஓவியா said...


நாட்டோரே, நல்ல தீர்ப்பு வழங்குவீர்!


ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்ற அனுமதிக்கலாமா?

தேர்தல் ஆணையமும், காவல்துறையும் ஆளும் கட்சிக்குச் சாதகமான நிலை!

நாட்டோரே, நல்ல தீர்ப்பு வழங்குவீர்!

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அமோக மாக வெற்றி பெற வைக்க, தமிழக மக்கள் - குறிப்பாக வாக்காளர்கள் தயாராகியுள்ள நிலையில், ஆளும் கட்சி சார்பில் ஆங்காங்கு பண மழை பொழியத் துவங்கி இரண்டு நாள்கள் ஆகின்றன! தஞ்சை, நீலகிரி, வடசென்னை - முதலிய தொகுதிகள் உட்பட விலையில்லாத மதிப்புள்ள வாக்குகளை 500, 1000 ரூபாய்களுக்கு விலை வைத்து வாங்கி விடுவதன் மூலம் தேர்தலில் தங்களைத் தழுவும் தோல்வியைத் தடுக்கலாம் என்று அந்த முறையைக் கையாண்டு வருகின்றனர்.

எவ்வளவு எதிர்ப்புக் காட்டப்பட்டாலும், காவல்துறை, தேர்தல் ஆணையம் கண்டும் காணாதவர்களைப் போல் ஆளும் அ.தி.மு.க. அணிக்கே சாதகமாக உள்ளார்கள்.

புகார் தருகின்ற தி.மு.க. மற்ற கட்சி நண்பர்கள் மீதே பொய் வழக்கும் போடத் தவறுவதில்லை!

நாளை நடைபெறும் தேர்தலுக்காக 144 தடை உத்தரவா? பணம் பட்டுவாடாவுக்கு வசதியான ஏற்பாடா? என்பதே பலரின் கேள்விக் குறியாக உள்ளது!

ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்ற அனுமதிக்கலாமா?

வாக்காளர்களே, கடமையாற்றிட வேண்டிய காவல்துறையினரும், நீதியை நிலை நிறுத்தும் தேர்தல் கமிஷனும் இப்படி கண்டும் காணாத காட்சிகளை அரங்கேற்றலாமா?

நாளை நல்ல தீர்ப்பு வழங்குங்கள் வாக்காளர்களே!

ஜனநாயகம் காக்கப்பட வேண்டாமா?

Read more: http://viduthalai.in/e-paper/79128.html#ixzz2zlOODGuX

தமிழ் ஓவியா said...


அன்று கொலையாளி! இன்று.....?


கலவர பூமியில் கறைபடிந்த கத்தியுடன் ஆக்ரோசமாக காட்சிதரும் அசோக் மோச்சி, மனம் வருந்தி திருந்தி மாற்றம் பெற்ற மனிதனாய்..... மோச்சியின் வாக்குமூலம்: அன்று உற்சாகமாக கலவரம் செய்ய அழைக்கும் போது முதல் ஆளாக கலந்துகொண்டு வன்முறையில் ஈடுபடும் போது எதிரில் உள்ள இஸ்லாமியர்களின் முகத்தில் தெரியும் மரண பயத்தைக்கண்டு இரசித்து ஆரவாரம் செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், அன்று நான் எப்படி இருந்தேனோ அதில் சிறிதளவு மாறாமலேயே இன்றும் இருக்கிறேன்.

நான் சொல்வது கலவரம் செய்பவனாக அல்ல, என்னுடைய வாழ்வியல் அன்றுபோல் இன்றும் அன்றாட தேவைகளுக்கு கூட போராடும் ஒரு நிலையிலேயே தான் இருக்கிறேன். ஆனால் என்னைப்பயன் படுத்திக்கொண்டவர்கள் இன்று நாட்டின் உயர்பதவியைப் பிடிக்க, மீண்டும் என்னைப்போன்றே ஏமாந்த இளைஞர் கூட்டத்தை பயன்படுத்தி அதில் இவர்கள் குளிர்காய இன்றும் தங்களுடைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த இளைஞர்களிடம் இப்போது கூறினால் நிச்சயம் கருத்தில் கொள்ளமாட்டார்கள், என்னைப் போன்றே ஒரு நாள் அவர்களும் உணர்வார்கள் இப்போது அந்த இஸ்லாமியர்களை நேரில் பார்க்கும் போது ஏற்படுகின்ற குற்றவுணர்விற்கு அளவே இல்லை.

Read more: http://viduthalai.in/e-paper/79131.html#ixzz2zlOcPvoM

தமிழ் ஓவியா said...


இந்து மதத்தை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் ஆர்.எஸ்.எஸ்.


போபால் ஏப்.23- மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை சமூகத் தினர் நூறு விழுக்காடு வாக்குகளை செலுத்தி வர லாறு படைக்க வேண் டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரப் பிரச்சா ரம் மேற்கொண்டு வருகிறது.

மத்தியப் பிரதேச மாநி லத்தில், பாரத் விஜய் அபி யான் என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பி னர் துண்டுப் பிரசுரங் களை விநியோகித்து வருகி ன்றனர்.

அதில் சிறுபான்மைச் சமூகத்தினரை திருப்திப் படுத்துவதற்காக, பெரும் பான்மைச் சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், பா.ஜ.க., காங் கிரஸ் கட்சிகளின் பெய ரைக் குறிப்பிடாமல், இது நாட்டில் தேசியவாத அரசு அமைவதற்கான தருணம்.

இந்த நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள் ஏழ்மையில் தவிக்க விட்டு விட்டனர். சிறுபான் மையை திருப்திப்படுத்து வதிலேயே கவனம் செலுத் தினர். சிறுபான்மையினருக் காக பெரும்பான்மை சமூ கத்தை பிளவுபடுத்தினர். தற்போதைய தேர்தலில் இந்த நிலைமையை மாற் றிக் காட்ட வேண்டும்.

பெரும்பான்மை சமூ கத்தினர் நூறு விழுக்காடு வாக்குகளை ஒற்றுமையாக செலுத்தி வரலாறு படைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

(இந்து என்று சொல் லாமல் மறைமுகமாக பெரும்பான்மையினர் என்று கூறும் தந்திரத்தைக் கவனிக்க வேண்டும்.)

Read more: http://viduthalai.in/e-paper/79132.html#ixzz2zlOmZMXE

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வருவது அபாயகரமானது! அண்டை நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும்!


இங்கிலாந்தைச் சேர்ந்த 75 பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

இலண்டன், ஏப்.23- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 75 கல்வியாளர்கள், பேராசிரியர்கள் நரேந்திர மோடி இந்தியாவின் பிரத மர் ஆனால் அது இந்தி யாவுக்கு ஆபத்து மட்டு மல்ல - மற்ற நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர். இந்தியாவைப் பூர்வீக மாகக் கொண்ட (இங்கி லாந்தில்) வாழ்ந்துவரும் கல்வியாளர்கள், அறிஞர் கள் இந்தியாவில் நடை பெறும் தேர்தல்குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பாஜக சார்பில் மோடி அதிகாரத் துக்கு வருவது மிகுந்த அச்சத்துக்கிடமானது என்று கூறுகின்றனர்.

75 பேராசிரியர்களும் கல்வியாளர்களும் மோடி அதிகாரத்துக்கு வரும் எண் ணமே எங்களை அச்சத்தில் மூழ்கடிக்கிறது என்கின் றனர். தி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் டுடே என்கிற இதழில் பேராசிரி யர் சேட்டன் பட், கவுதம் அப்பா ஆகியோர் தலை மையில் 75 பேராசிரியர்கள் மற்றும் இங்கிலாந்தில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்க லைக்கழகத்தில் பணிபுரி பவர்கள் ஆகியோர் கூட் டாக வெளியிட்டுள்ள திறந்த மடலில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல் குறித்து தங்களின் கருத்தை வெளியிட்டுள்ளனர். அதை அப்படியே லண்டனிலி ருந்து வெளிவரும் தி இண்டிபென்டன்ட் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது: இந்தியாவில் அடுத்த அரசைத் தேர்வு செய்யுமிடத்தில் மக்கள் உள்ளனர்.

மோடியின் தலைமையிலான பாஜக அரசு அமைந்துவிட்டால்

இந்தியாவில் ஜனநாய கம், பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண் பாடுகள் என்று பிரிந்திருந் தாலும் அவற்றின்மீதான சகிப்புத்தன்மை மற்றும் மனித உரிமைகள் ஆகி யவை மிகுந்த சவாலுக்கு உள்ளாகும் என்பதை எண்ணி மிகவும் கவலை கொள்கிறோம் என்று கூறி யுள்ளனர்.

மோடியின் எண்ணங் கள் அதிகாரம் பெறுவது நம்மை அச்சத்தில் மூழ் கடிக்கிறது என்கிற தலைப் பிலான அக்கடிதத்தில்,

நரேந்திர மோடி ஹிந்துத் தேசியவாத அமைப்பின் வலையில் உள்ளவர். ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்கள் கடந்த காலங்களில் சிறுபான்மை யருக்கு எதிரான வன்முறை யில் ஈடுபட்டுள்ளன. அண் மையில் பொதுமக்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக் குதல்களையும் நடத்தி உள் ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத் தில் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, நடிகர் அனீஷ் கபூர் மற்றும் பலரும் தி கார்டி யன் இதழில் எழுதியதன் தொடர்ச்சியாகவே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


அக்கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாக இன்டிபென் டண்ட் இதழில், குஜராத் தில் ஆட்சியிலிருந்தபோது நடைபெற்ற வன்முறை கள், பல்வேறு சம்பவங் களுக்கு மோடிதான் முழுப் பொறுப்பாளி என்று பல்வேறு தரப்பினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட தகவல்கள் வெளியாயின. மேலும், அவற்றுக்கு சாட்சி யாக தற்போதைய மூத்த பாஜக தலைவர்களின் பேச்சுக்களும் அமைந்துள் ளன. இந்த முறையிலான அரசு நிச்சயமாக ஜனநாய கத்தைப் பலவீனப்படுத்தி விடும். பொதுத்துறை நிறுவனங்கள் அதோ கதி!


அதோடு, மோடி-பாஜக வின் மாதிரி பொருளாதார வளர்ச்சி என்பது பெரிய வணிகர்களுடன் தொடர் புள்ளதே. பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்குத் தாரை வார்த்து, ஏழைமக்களுக்கு எதிராக வும், அவர்களை வாட்டி வதைப்பதற்கு ஒப்பாக வும், செல்வத்தையும், அதி காரத்தையும் பெரும் பணக்காரர்களிடம் ஒப் படைப்பதே ஆகும். மோடியின் வெற்றி என்பது நீதியின்மீது, அதன் கொள்கைகள்மீது விடுக் கப்படும் சவாலாகும். குறிப்பாக, மகளிர்மீதான தடைகள், கண்காணிப்பு கள் ஏற்படுத்தி, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி விடும். இந்தியாவில் மட்டு மின்றி அண்டை நாடுகளி லும் அப்பதற்றம் ஏற் பட்டுவிடும் அபாயம் உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.

பிரிட்டீஷ் குறிப்பிடத் தக்க பல்கலைக்கழக மாகிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவரான பேரா சிரியர் நந்தினி கூப்து மற்றும் கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் பணிபு ரிபவராகிய ஜோயா சாட் டர்ஜி ஆகியோர் குறிப் பிட்ட தகவல்களை கல்வி யாளர்கள் கடிதத்தில் மீண் டும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டீஷ் இதழ்களி லும், பிற ஊடகங்களிலும் அதிக இடத்தை இக்கடி தம் பிடித்துள்ளது. இக் கடி தத்தில் குறிப்பிடப் பிட்டுள்ள படி,

13ஆண்டுகள் மேற்கு மாநிலமான குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த மோடி அரசின் அயோக் கியத்தனத்துக்கு ஆதார மாக கோத்ரா கலவரம் உள்ளது. 2002இல் குஜ ராத்தில் எல்லைகடந்த வன் முறையாக ஹிந்துக்களால் கலவரம் ஏற்பட்டு ஆயிரக் கணக்கிலானவர்கள் குறிப் பாக முசுலீம்கள் இறந் தனர். இந்த வன்முறை வெறியாட்டம் மோடியின் ஆட்சியில்தான் நடைபெற் றது. இந்த வன்முறையில் மோடியின் பங்கு குறித்து, வன்முறை சம்பவங் களுக்கு அனுமதியும், அவற்றை வேகப்படுத்தி யதுமான மோடியின் பங்கு கள் குறித்து மூத்த அதிகாரி கள், காவல்துறை அதிகாரி கள் ஒப்புதல் வாக் குமூலங் களில் தெரிவித்துள் ளனர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79127.html#ixzz2zlOvCOSO

தமிழ் ஓவியா said...

பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள்மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 23- சென்னை உயர்நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழில்முருகன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ்நாடு பிச்சை எடுப்பு தடுப்புச் சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்த தலைமைச் செயலாளர், உள் துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இதே கோரிக்கைகளை கொண்ட மனு கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த உயர்நீதிமன்றத்தில் தொட ரப்பட்டது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சாலைகளில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள், குழந்தைகள் நல ஆணையத்திடம் ஒப் படைக்கப்படுகின்றனர். பிச்சைக்காரர்களின் எண் ணிக்கையைப் பொறுத்து, மாவட்டத்துக்கு ஒரு பிச்சைக்காரர்கள் காப்பகம் கட்டப்படுகிறது.

இதற்காக 70 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள், வழி பாட்டு தலங்களில் பிச்சை எடுப்பவர்களை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அவர்களை முகாம்களில் அடைத்து வருகிறோம். பிச்சை எடுப் பதை தடுக்கும் அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டு இருந்தது.

எனவே இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவு களை பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், இந்த உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில், தகுந்த நடவடிக் கையை பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது தமிழக அரசு எடுக்க வேண்டும்.

- இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/79112.html#ixzz2zlPe8chU

தமிழ் ஓவியா said...


கரணம் தப்பினால் மரணம்!


மிகவும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இதைத் தவறவிட்டால் அடுத்த அய்ந்தாண்டுகள் மட்டுமல்ல - அதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகள் எதிர் காலத்தை இருளாக ஆக்கக் கூடியவை!

பி.ஜே.பி. என்பது பத்தோடு பதினொன்று என்று கருதப்படக் கூடிய ஓர் அரசியல் கட்சியல்ல! சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் வருணாசிரம வெறி கொண்ட ஹிந்துத்துவா அமைப்பு.

இந்தியாவில் தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையும், பி.ஜே.பி. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையையும், ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை எவ்வளவுத் துல்லியமானது என்பது எளிதில் விளங்கும்.
நியாயமாக இந்தத் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் கூட பி.ஜே.பி. தேர்தலில் நிற்க சட்டப்படி தகுதி உடையதல்ல என்று அறிவித்திட வாய்ப்புண்டு. தேர்தல் ஆணையம் அந்தக் கடமையை செய்யவில்லை.

எந்த அளவுக்கு இவர்கள் சென்றுள்ளார்கள்? பீகார் மாநில பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், மக்களவைத் தேர்தல் வேட்பாளரும், பீகார் மாநில முன்னாள் அமைச்சருமான கிரிராஜ்சிங் என்பவர் என்ன கூறினார்? பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும் என்று சொல்லுகிறார்.

மிகக் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி, அது அடங்குவதற்குள், இந்தத் தேர்தலில் முன்னணிப் படையாகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய அங்கமான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியா, மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் என்ன பேசி இருக்கிறார்?

ஹிந்துக்கள் பெரும்பான்மையாகக் குடியிருக் கும் இடங்களில் சிறுபான்மை மக்களான முஸ்லீம் கள் வீடுகள் வாங்கினால் அவர்களை விரட்டி யடியுங்கள்; கல்லால் தாக்குங்கள்; டயரைக் கொளுத்தி அவர்களின் வீடுகள், வியாபார நிறுவனங்கள்மீது எறியுங்கள் என்று பச்சையாக பாசீச வெறித்தனத்தோடு பேசி இருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாகவே இவர்கள் இப்படி வெறியாட்டம் போடுகின்றனர் என்றால், தப்பித் தவறி இந்தக் கூட்டம் ஆட்சி அதிகாரத்துக்கு வருமேயானால் நாடே கலவரப் பூமியாகி விடும். மனித ரத்த வெள்ளம் நாளும் ஓடும் அபாய நிலைதான் ஏற்படும். இவற்றையெல்லாம் நரேந்திரமோடி கண்டிப்பதாகச் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

மோடியைப்பற்றித் தெரிந்தவர்கள் மோடியின் இந்த மறுப்பை ஏற்க மாட்டார்கள்.

இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் குஜராத்தில் கொன்று குவிக்கப்பட்டதை - நாய்க் குட்டி ஒன்று காரில் அடிபடுவதால் ஏற்படும் அனுதாபத்தோடு ஒப்பிட்டுப் பேசியவர் தானே மோடி!

2007இல் தெகல்கா எனும் புலனாய்வு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் நேரில்கண்டு அவற்றைப் பதிவும் செய்தது. அப்படி பதிவு செய்யப்பட்டவர்களுள் ஒருவர் குஜராத் மாநில அரசின் சிறப்பு வழக்குரைஞர் அரவிந்த்பாண்டியா; அவர் மிகவும் வெளிப்படை யாகவே கூறியதை தெகல்கா வெளிப்படுத்தியதே!

மோடி முதல் அமைச்சராக இருந்திருக்கா விட்டால், அவர் வெடி குண்டையும் வீசியிருப் பார்! என்று கூறியிருக்கிறார் என்றால் மோடி, பிரவீன் தொகாடியாவுக்கு எந்த வகையிலும் ஹிந்துத்துவா வெறித்தனத்தில் குறைந்தவர் அல்லர் என்பது விளங்குமே! இவற்றின் அடிப்படையில் பா.ஜ.க.வையும் அதனோடு கூட்டணி வைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளையும் மிக மோசமான தோல்விக்கு ஆளாக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த அணியை மட்டுமல்ல; நேரடியாக இந்த அணியோடு கூட்டு இல்லையென்றாலும், அடிப்படையில் பி.ஜே.பி.யின் சிந்தனையை உள்வாங்கிக் கொண்டி ருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. வையும் தோற்கடித்துக் காட்ட வேண்டியது மிகவும் அவசிய மாகும்.

இதற்கு மூன்று முக்கிய அடிப்படைக் காரணங்கள் உண்டு; இதுவும் ஹிந்துத்துவா உணர்வைக் கொண்டது என்பது ஒன்று. பிஜேபி ஆளும் மாநிலத்தில்கூட நிறைவேற்றப்படாத மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் இந்த ஜெயலலிதாதான். ராமன் பெயரை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கியிருப்பவரும் இவரே!

இரண்டாவது காரணம் ஒன்றும் முக்கியமாக இருக்கிறது மதங்களை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளாத தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கொள்கைகளுக்கு மாறாக நடந்து கொண்டு, அதே நேரத்தில் அத்தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்தும் துரோகத்தனத்திற்குக் கண்டிப்பாகப் பாடம் கற்பித்தாக வேண்டும்.

மூன்றாவது இந்த அம்மையாரின் மூன்றாண்டு ஆட்சி என்பது எந்தவித வளர்ச்சிக்கும் இடம் இல்லாதது - சட்டம் ஒழுங்கு மிகக் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது. இதற்கும் சேர்த்து இந்தத் தேர்தலில் தண்டனை கொடுத்தாக வேண்டும். தமிழக வாக்காளர் களே கரணம் தப்பினால் மரணம் என்பதை மறவாதீர்!

விழிப்புணர்வு கொள்க! ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வென்றிட ஆவன செய்க!

Read more: http://viduthalai.in/page-2/79120.html#ixzz2zlQFYCWi

தமிழ் ஓவியா said...


இன்று (23.4.2014) உலக புத்தக நாள்


சென்னை கடற்கரையில் வாசிக்க வாங்க நடைப்பயணம் சென்னை, ஏப். 23- உலகப்புத்தக நாளான இன்று (23.4.2014) காலை சென்னை மெரினா கடற்கரையில், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக வாசிக்க வாங்க! என்ற வாசகத்துடன் பதாகைகளை ஏற்றி குழந்தைகள், மாணவர்கள், வாச கர்கள், பங்கேற்ற புத்தக வாசிப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான இன்று ஏப்ரல் 23, யுனெஸ்கோ அமைப்பால் 1995 ஆம் ஆண்டு உலக புத்தக நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வோராண்டும் உலகம் முழுவதும் கொண் டாடப்படுகிறது.

உலகப்புத்தக நாளைக் கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு சென்னை புத்தகச் சங்கமம் கடந்த 18-ஆம் தேதி முதல் தொடங்கி, வரும் 27-ஆம் தேதி வரை சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாசிக்க வாங்க எனும் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் இன்று (23.4.2014) உலக புத்தக நாளாக கொண்டாடும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெற்றது.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழிப்புணர்வு நடைபயணம் காலை 7 மணி முதல் 8.30 மணி வரை சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற்றது. குழந்தைகள், மாணவர்கள், வாசகர் கள் பெருமளவில் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் மு.தவமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம் 3230 மாவட்ட ஆளுநர் ஸிலீ ஏ.பி.கண்ணா முன்னிலை வகித்தார். இந்நடை பயணத்தில் பேராசிரியர் இராஜசேகர் புத்தக வாசிப்பு குறித்த அரிய தகவல்களை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தார்.

இந்நடைப் பயணத்தின் முடிவில் இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், காலைச் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. புத்தகம் வாசிப்பு குறித்த அறிஞர்களின் கருத்துகள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. உலகப்புத்தக நாள் பெருவிழா வையொட்டி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை பெரியார் மணியம்மை பல் கலைக்கழகமும், ரோட்டரி இன்டர் நேஷனலும் சென்னை புத்தகச் சங்கமத்துடன் இணைந்து நடத்தின.

வாசிக்க வாங்க! என்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப் பாளரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளரு மான வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித்தலைவர் த.வீரசேகரன்.

சென்னை புத்தக சங்கமத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், விழிகள் பதிப்பகம் தி.வேணு கோபால், எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண் ணன், மற்றும் சிக்ஸ்த் சென்ஸ் கே.எஸ்.புகழேந்தி, திரா விடர் கழக மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் தைச் சேர்ந்த இரா.தமிழ்ச் செல்வன், கோவி.கோபால், ராமு.

சென்னை புத்தக சங்கமத்தின் மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், சி.வெற்றிச் செல்வி, பெரியார் மாணாக்கன், புரசை அன்புச் செல்வன், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவிகள், ரோட்டிராக்ட் மாணவர்கள், ஆனந்தன், சுரேஷ், அம்பேத்கர்,வை.கலையரசன், கலைமணி, விமல்ராஜ், தமிழ்க்குடிமகன், லோகேஷ்குமார், சக்திவேல், அருண், சங்கர் மற்றும் திரளான பொது மக்களும் பங்கேற்று சிறப்பித் தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் ஏப்.27ஆம் தேதி வரை நடைபெறும் சென்னை புத்தகச் சங்கம நுழைவுச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/79147.html#ixzz2zlQqcvM4

தமிழ் ஓவியா said...


மதச் சண்டைக்குத் தூபம் போடுகிறார்கள்! பி.ஜே.பி.,பற்றி கலைஞர் பேட்டி

சென்னை, ஏப். 23- பி.ஜே.பி.யில் சில தலைவர்கள் மதச் சண்டைக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். நாட்டில் நல்லாட்சி அமைவதற்கு தி.மு.கழகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பு அளித்த பேட்டியில் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

கலைஞர் அவர்கள் நேற்று (22.4.2014) காலை சென்னை யில் வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்வதற்காக தமது இல்லத்திலிருந்து புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிவருமாறு:

செய்தியாளர்: வாக்காளர்களுக்கு ஏதாவது வேண்டு கோள் விடுக்கிறீர்களா?

கலைஞர்: நாட்டில் நல்லாட்சி அமைவதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து வாக்களிக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடக்கிறதா?

செய்தியாளர்: தேர்தல்ஆணையம் நடுநிலையாக நடக்கிறதா?

கலைஞர்: நடுநிலையா? நடுநிலை போல் நடிக் கிறார்களா? என்பது தெளிவாகத் தெரியவில்லை!

செய்தியாளர்: மோடிசிறந்த நிர்வாகம் படைத்தவர் இல்லை! தான்தான் சிறந்த நிர்வாகம் படைத்தவர் என்று ஜெயலலிதா நேற்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: நிலைக் கண்ணாடி முன்னால் நின்று சொல்லியிருப்பார்.

செய்தியாளர்: தேர்தல்ஆணையம் எந்தத் தேர் தலிலும் இல்லாத வகையில் மக்களைப் பயமுறுத்து வதைப் போல 144 தடைவிதித்திருக்கிறார்கள் சி.பி.எம். போன்ற கட்சிகள் அதனை எதிர்த்து இருக்கின்றன. அது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன?

கலைஞர்: பயமுறுத்துவதைப் போலத் தெரிய வில்லை. எந்த எண்ணத்தோடு அதைப் பிறப்பித்திருக் கிறார்கள் என்று இப்போது கூற முடியாது.

மதக்கலவரத்தைத் தூண்டுதல்

செய்தியாளர்: இந்தியாவிலுள்ள பா.ஜ.க. தலை வர்கள், பிரவீன் தொகாடியா போன்றவர்கள் சிறு பான்மை மக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டி ருக்கிறார்கள். அது அபாயகரமான விஷயமாக உள்ளது. நீங்கள் தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் ஆதரவோடு இந்தத் தேர்தலைச் சந்திக்கிறீர்கள். பா.ஜ.க.வினர் இவ்வாறு மோடி பிரதமரானால் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே?

கலைஞர்: அவ்வாறு ஒரு சிலர் பேசுகின்ற கருத்து களால் சிறுபான்மையினரை பயமுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத சண்டைக்கு என்னென்ன வேண் டுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். இந்தச் சூழலில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்பதுதான் என்னுடையகருத்து.

தமிழ்நாட்டில் மோடி அலை இல்லை!

செய்தியாளர்: பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெரிய அபாயம் என்றுநினைக்கிறீர் களா?

கலைஞர்: அப்படிக் கருதாமல் இருக்க முடியாது.

செய்தியாளர்: தமிழகத்தில் மோடி அலை இருப்ப தாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். அப்படி மோடி அலை இருக்கிறதா?
கலைஞர்: தமிழகத்தில் அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/79114.html#ixzz2zlRtLVO9

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


மோடியை எதிர்த்தவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்ற நஞ்சைக் கக்கிய பிஜேபி பிரமுகர் கிரிராஜ் பிரச்சாரத்துக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு - 39, புதுச்சேரி - 1, மே.வங்காளம் - 6, உத்தரப் பிரதேசம் - 12, ராஜஸ்தான் -5, மகாராஷ் டிரம் - 19, மத்தியப் பிரதேசம் - 10, ஜார்க்கண்ட் - 4, காஷ்மீர் - 1, சத்தீஸ்கர் - 7, பீகார் - 7, அசாம் - 6 ஆகிய மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முதலாக வாக்குப் பதிவையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி உள்பட தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்களன்று மட்டும் ஒரு நாள் பெருங்குடி மக்கள் வாங்கிய மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.173 கோடியாம்!

தேர்தல் பணிகளுக்காக தமிழ்நாட்டில் ஈடுபடுத்தப் பட்டுள்ள காவல் துறையினர் 1.43 லட்சம்.

அதிமுகவினர் லாட்ஜில் பணம் பட்டுவாடா செய்ததை எதிர்த்து நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசா தோழர்களுடன் நள்ளிரவில் மறியல் செய் தார்.

தமிழ்நாடு முழுவதும் தேர்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.50 கோடி! பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2835.

மோடியைப் பார்த்து முசுலீம்கள் அச்சப்படுகின்றனர் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

குஜராத் மாநில அமைச்சர் புருசோத்தம் சோலங்கி (பி.ஜே.பி.) வந்த ஹெலிகாப்டரிலிருந்து ரூ.1.75 லட்சம் பணம் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒவ்வொருவரும் வாக்களித்தால் இந்த நாடு நன்றியு டையதாகவிருக்கும் என்கிறார் குடியரசு முன் னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

Read more: http://viduthalai.in/page-8/79123.html#ixzz2zlT7ClHy

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டில் அன்றாடம் கொலை, கொள்ளை, திருட்டு என்று நடைபெற்றுக் கொண்டிருக்க, இந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலம், சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று துணிச்சலாக சட்டமன்றத் திலேயே கூறும் முதல்வரைப்பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? ஆம்! அவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா!

Read more: http://viduthalai.in/page-8/79154.html#ixzz2zlTEU1iW

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வில்தான் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அதிகம் தன்னார்வ அமைப்பு தகவல்


புதுடில்லி, ஏப். 23- பாஜக ஆட்சிக்கு வந்தால் குற்றப்பின்னணி கொண்ட மக்களவை உறுப்பினர் கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தன் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார்.

ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம்

இந்நிலையில், ஜன நாயக மறுசீரமைப்புக் கான சங்கம் (ஏடிஆர்) சார்பில் இது தொடர்பான புள்ளி விவரம் வெளி யிடப்பட்டுள்ளது.

முதல் ஆறு கட்ட தேர்தலில் போட்டியிடும் 5,380 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு வில் உள்ள விவரங்களின் அடிப்படையில் இத்தக வல்கள் தொகுக்கப்பட் டுள்ளன.

குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

மொத்தமுள்ள 5,380 வேட்பாளர்களில் 879 பேர் (16%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 533 பேர் மீது கொலை, பாலி யல் வன்முறை, வழிப் பறி உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

காங்கிரஸின் 287 வேட் பாளர்களில் 13 சதவீதத் தினர் அதாவது 36 வேட் பாளர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள் ளன.

பாஜகவில் 48 வேட்பாளர்கள்

பாஜகவின் 279 வேட் பாளர்களில் 88 பேர் (32%) மீது தீவிர குற்ற வழக்கு கள் பதிவாகியுள்ளன. ஆம் ஆத்மியின் 291 வேட் பாளர்களில் 29 பேர் (10%) மீதும், பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 39 பேர் (12%) மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதி வாகியுள்ளன.

காங்கிரஸின் 287 வேட்பாளர்களில் 75 பேர் (26%), பாஜகவின் 279 வேட்பாளர்களில் 88 பேர் (32%), ஆம் ஆத்மியின் 291 வேட்பாளர்களில் 44 பேர் (15%), பகுஜன் சமாஜின் 318 வேட்பாளர்களில் 65 பேர் (20%) மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/page-8/79121.html#ixzz2zlTNDmMn

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் வளர்ச்சி தி.மு.க. ஆட்சியிலா - அ.தி.மு.க. ஆட்சியிலா?


தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி களுக்கு முக்கிய காரணம் திராவிட இயக்கமும் திமுக வும்தானே. கலைஞர் ஆட்சி செய்த இறுதியாண்டில் (2011) நிஞிறி எனப்படும் பொருளாதார மொத்த உற்பத்தி யானது 13.12 சதவிகிதமாக இருந்தது, இதே கால கட்டத்தில் மோடியின் குஜராத் மாநில நிஞிறி வெறும் 10 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவில் நான்காம் இடத்தில் தமிழ்நாடு இருந்தது, குஜராத் இருந்ததோ ஏழாம் இடத்தில்!

ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றே ஆண்டுகளில் நிஞிறி 4.14 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. தொழில்துறை, உற்பத்தித்துறை, விவசாயத் துறைகளின் வீழ்ச்சியால், தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது.

கலைஞர் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் நான்காம் இடத்திலிருந்த தமிழ்நாடு, ஜெயாவின் ஆட்சி யில் கடைசி இடத்துக்கு வந்துவிட்டது. ஜெயா அறிவித்த எல்லா திட்டங்களும், முதலீடுகளும் வெறும் ஏட்டள வில்தானே உள்ளது.

இப்பொழுது சொல்லுங்க, தமிழகம் அடைந்துள்ள சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கு முக்கிய காரணம் திமுக ஆட்சிதானே!

Read more: http://viduthalai.in/page-8/79119.html#ixzz2zlTV5q6l

தமிழ் ஓவியா said...

மோடியிடம் தினமணியின் அவசரப் பேட்டி - ஏன்?


தினமணி, பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். ஏடு என்று நாம் சுட்டிக்காட்டிய போதெல்லாம் - அதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்காதவர்கள்கூட, இந்தத் தேர்தலில் அது நடந்து கொண்டு வரும் போக்கினை நிதானமாகச் சிந்தித்தால் - திராவிடர் கழகத்தின் கணிப்பு விடுதலை யின் - மதிப்பீடு மிகவும் துல்லியமானதே என்று புரிந்து கொள்வார்கள்.

இதற்காக வெகு தூரத்திற்குச் சென்று ஆராய்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டாம்.

இன்று தமிழ்நாடெங்கும் - புதுவையும் சேர்த்து 40 இடங்களில் வாக்குப் பதிவு; இந்தக் கால கட்டத்தில் நேற்றைய தினமணி (23.4.2014) அவசர அவசரமாக தினமணியின் ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான திருவாளர் நரேந்திரமோடியைப் பேட்டி கண்டு, தினமணியின் முதல் பக்கத்தில் விரிவாக வெளியிடு கிறார் என்றால் இதன் அவசியம் என்ன? இதன் பின்னணி என்ன? என்பது - தமிழ்நாட்டில் கோலி விளையாடும் கோவணம் கட்டத் தெரியாத சிறுவன் கூடப் புரிந்து கொள்வானே!

பேட்டிக்கு முகவுரையாக தினமணி ஆசிரியர் அய்யர்வாள், மோடிபற்றிக் கொடுக்கும் முன்னுரை அவரின் முகவரியைப் பச்சையாகக் கட்டம் கட்டி வெளிப்படுத்தக் கூடியதாகும்.

ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய மோடியின் அரசியல் பயணம் பிரமிப்பை ஏற்படுத்தும், இவரது சுறுசுறுப்பும், மன வலிமையும் நிகரற்றது. சொலல் வல்லன், சோர்வு இலன் அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்கிற வள்ளுவப் பேராசானின் குறளுக்கு நரேந்திர மோடியை உதாரணம் கூறலாம்.

இப் போது குஜராத் முதல்வர், தேர்தல் முடிவானால் அனேகமாக இந்தியப் பிரதமர்

என்று மோடிக்கு தினமணி ஆசிரியர் இப்பொழுதே பிரதமர் என்கிற மணிமுடியைச் சூட்டி விட்டார். தமது ஆசையைக் குதிரையாக்கி சவாரியும் செய்து விட்டார்.

மோடி என்றால் இதுதானா? மோடி என்றால் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் என்ற விலாசம் கிடையாதா?

மோடி என்றால் சிறுபான்மை மக்களுக்குப் பயங்கரமான எதிரி, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லீம்கூட வேட்பாளராக பி.ஜே.பி. சார்பில் போட்டியிட வாய்ப்புத் தராதவர் என்ற அறிமுகம் அவரைப் பற்றிக் கிடையவே கிடையாதா?

பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முஸ் லிம்கள், ஒருவர் சீக்கியர்; இந்து ஒருவரும் கிடையாது என்ற நிலைப்பாடு, மோடி எத்தகைய பாசிஸ்டு என்பதை உலகுக்கு அறிவிக்கவில்லையா?

வெளிநாடுகளில்கூட கல்வியாளர்கள், பேராசிரி யர்கள் பல்துறைகளைச் சேர்ந்த பெரு மக்கள், இந்தியாவில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் நாடு மரண பூமியாகும் - அண்டைய நாடுகள்கூடப் பதற்றம் அடையும் என்று கையொப்பமிட்டு அறிக்கை களே கொடுத்து இருக்கிறார்களே - அவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் அற்பம்தானா?

அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை மோடி தங்கள் நாட்டுக்கு வந்திட விசா கொடுக்க மறுத்து வருவது - ஏன்? இதுபற்றியெல்லாம் வைத்திய நாதய்யர் களுக்குத் தெரியவே தெரியாதா?

நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிர்மாணிக்க 11,00 ஏக்கர் நிலத்தை சதுர அடி ரூ.900-க்கு அடி மாட்டு விலைக்கு விற்றதால் மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் என்ன?

சதுர அடி ரூ.10,000 சந்தை மதிப்பு!

அதே டாட்டாவுக்கு 0.1 சதவீத வட்டியில் ரூ.9750 கோடியை 20 வருடத்தில் திருப்பி செலுத்த வாய்ப்பு அளித்தவரும் இந்த மோடிதானே. இவர்கள் கண்ணோட்டத்தில் டாட்டா பரம ஏழையோ!

மோடியைப் பிரதமர் ஆக்குவதில் 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் - ஆர்வத்துடன் அந்தரத்தில் பறந்து கொண்டு இருக்கிறார்களே - உயர் ஜாதி ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றனவே - இந்தப் பின்னணிகளைக் கொண்ட பிற்போக்குவாதிகள் என்ற அடையாளம் வெகு மக்கள் மத்தியில் அறவே அழிக்கப்பட வேண்டும் என்ற தந்திரம் தானே இந்தத் தினமணியின் அவசரப் பேட்டிக்கான அவசியம்!

தமிழ் ஓவியா said...

மோடியை நோக்கி தினமணி ஆசிரியர் வைக்கும் கேள்விக்குள்ளேயே விடையிருக்குமாறு தேர்ந்தெடுத் தல்லவா மோடி முன் வைக்கிறார்.

மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் - அவரைத்தானே இந்த அக்கிரகாரவாசிகள் முன் வைக்கின்றனர் என்ற வினா எழலாம்.

ஒரு வகையிலே அவர்களின் கெட்டிக்காரத்தனம் இது; பச்சையாகப் பார்ப்பனர்களை முன்னிறுத்தும் போது, வெகு மக்கள் அந்த வன்மத்தை, நச்சுக் கோப்பையையும் பளிச்சென்று புரிந்து கொள்வார்கள்.

தந்தை பெரியார் மொழியில் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் நிஜப் புலிகளை விட, வேடம் தரித்த புலிகள் அதிகம் குதிக்கும். அதனால்தான் இந்த வேடப் புலியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். அதுவும் ஆர். எஸ்.எஸில் பயிற்சிக் கொடுத்துப் புடம் போடப்பட்ட வரைப் பயன்படுத்தி, தங்களின் மனுதர்ம ஹிந்துத்துவா சாம்ராஜ்ஜியத்துக்கு அடிகோல நினைக்கிறார்கள்.

இந்த ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் தான் சோ ராமசாமிகளின், தினமணி வைத் தியநாதய்யர் அண்ட் சோக்களின் விஷம ஊற்று எங்கே, எப்படி மய்யம் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/79163.html#ixzz2zqtksBtE

தமிழ் ஓவியா said...


அவ(ன்)ள்


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்புப் பெண். தென்னாப்பிரிக்காவிலும் குக்கிராமம். படிப்பும் சொல்லும்படியாக ஏதும் இல்லை. பெண்ணின் பெயர் காஸ்டர் செமன்யா.

சிறிய வயதிலிருந்தே காற்றைக் கிழித்து ஓடுவது - அந்தச் சிறுமியின் பொழுதுபோக்கு! ஆனால் சர்வதேச ஓட்டப் பந்தய மைதானணீத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் என்று கனவிலும் எதிர் பார்க்கவில்லைதான்.

ஆனாலும், அந்தப் பெண் 18 வயதில் பெர்லின் மைதானத்தில் நின்றார். துப்பாக்கிச் சத்தம் கேட் டது - அவ்வளவுதான் கால் கள் தரையில் பாவவில்லை - காற்றைக் கிழித்தார் 800 மீட்டர் தூரத்தை 1.55:45 நேரத்தில் கடந்து எல்லோர் புருவங்களையும் உயர்த் தக் காரணமாக இருந்தார்.

2009இல் அது உலக சாதனை! 1500 மீட்டரிலும் அதற்கு முன்னிருந்த சாதனையைவிட 25 வினாடிகள் குறைவில் முறியடித்தார்.

உடனே ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன; அவர்கள் எல்லாம் ஆண்கள்தான். ஒரு பெண்ணா - இவ்வளவு தூரத்தை இவ் வளவுக் குறுகிய நேரத்தில் கடந்தார்? ஆச்சரியமாக இருக்கிறதே - நம்ப முடி யாது. ஒருக்கால் இவள் ஓர் ஆணாக இருப்பாளோ? அல்லது போதைமாத்திரை சாப்பிட்டு இருப்பாளோ? சந்தேகக் கரையான் அரித்துத் தின்ன ஆரம்பித்து விட்டது. காற்றைக் கிழித்து ஓடி முதல் பரிசுக் கோப்பையைப் பெற்ற பெண் அந்த மகிழ்ச்சியைக் கூட அனுப விக்கவில்லை.

அதனால் என்ன? எந்த பரிசோதனைக்கும் தயார்! மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்?

ஆனாலும் இந்தச் சோதனைகள் எல்லாம் முடிக்கப்பட்டு, அவள் பெண்தான்; எந்தப் போதை மருந்தையும் உட் கொள்ளவில்லை என்று அறிவிப்பதற்கு ஓர் ஆண்டு தேவைப்பட்டது என்பதுதான் கொடுமை யாகும். அதன் விளைவு ஓர்ஆண்டு ஓட்டப் பயிற் சிக்குக்கூட ஓய்வு கொடுத் ததுதான் மிச்சம். குற்றமற்றவர் என்று நெருப்பில் குளித்து வெளியில் வந்ததும், மீண்டும் தடகளப் போட்டிக்குள் குதித்தார். அதே பெர்லின் தான் அந்தப் போட்டியில் முதலிடம் பெற்றார் என்றாலும் முன் சாதனையை விட இரு வினாடிகள் அதிகமாகப் போய் விட்டது.

இந்தக் கொடுமையை என்ன சொல்வது! இதற்கு யார் தான் பொறுப்பு!

தமிழ்நாட்டில்கூட புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியைச் சேர்ந்த சாந்தி 2006 - தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப் பரிசு பெற்ற நிலையில் இப்படித்தான் முத்திரை குத்தப்பட்டார்.

பெண்ணென்றாலே இப்படி ஒரு நிலைதான். நம் நாட்டில். வானதி சீனி வாசனும், டாக்டர் தமிழி சையும் வறட்டுத் தவளைகளாக தொலைக் காட்சிப் பெட்டிகளில் கட்சிக்காகக் கத்தினாலும் காரியம் என்று வரும் பொழுது - தேர்தல் களத்தில் ஒதுக்கத் தானேபடுகிறார்கள்? அதுவும் பெண்ணென்றால் பேயென்று பேசும் இந்து மதக் கட்சியில் வேறு எதைத் தான் எதிர்பார்க்க முடியும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/79178.html#ixzz2zqvsun3B

தமிழ் ஓவியா said...


நாடெங்கும் மோடிக்கு எதிர்ப்பு அலை!


மும்பை கல்லூரி முதல்வர் மும்பை, ஏப்.24-மும் பையை சேர்ந்த செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி முதல் வரான டாக்டர் மாஸ்கரன் ஹஸ் தங்களது மாணவர் களுக்கு அனுப்பிய மின் அஞ்சலில் மோடிக்கு வாக் களிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவர் அனுப்பிய மின் அஞ் சலில் கூறப்பட்டுள்ளதா வது; குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக என்ன நடந் துள்ளது என்பது குறித்து மனித அபிவிருத்தி தொடர் பான அட்டவணை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் கல்வித்துறை அங்கு மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித் துள்ளது. உயர்கல்வி ஒரு கட்டத்திற்கு மேல் வளர முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. வளர்ச்சி என்பது எது? வியாபாரம் பெரிய அளவில் நடைபெறுவதா? அதிக லாபங்களை ஈட்டு வதா? உற்பத்தியில் சாதனை படைப்பதா? இதையா மக்கள் வளர்ச்சியாக கருது கிறார்கள் என்றால் இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும்.

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், இன்றி யமையாத பொருட்களின் தேவைகள் சரியாகவும், நியாயமான விலையில் கிடைப்பதே உண்மையான வளர்ச்சியாக இருக்கும். ஆனால் இதிலெல்லாம் அம்மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வித சாத னையையும் நிகழ்த்த வில்லை. எனவே எதிர் காலத்தை தீர்மானிக்கும் வகையில் மாணவர்கள் கவனமுடன் மோடிக்கு வாக்களிக்காமல் தவிர்க்க வேண்டும் என்று அந்த மின் அஞ்சலில் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மின் அஞ் சலில் அனுப்பப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளதுடன், தேர்தல் ஆணையத் திலும் இது குறித்து புகார் அளித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.

சீதாராம் யெச்சூரி புதுடில்லி, ஏப்.24-தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வளர்ச்சி மற்றும் நல்லாட்சி குறித்து பேசு வதும், அதன் பின்னணியில் சிலர் தீவிர மதப்பிரச்சாரம் செய்வதும், பாஜகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றஞ் சாட்டியுள்ளார். இது குறித்து புதுடில்லியில் அவர் கூறி யதாவது: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசி வருகிறார். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த சிலர் இதன் பின் னால் தீவிர மதப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள் ளது. பாஜ, விஎச்பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்க ளான அமித்ஷா, கிரிராஜ் சிங், பிரவின் தொகாடியா ஆகி யோர், இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக வெளிப்படையாக செயல் பட்டு வருகின்றனர். மோடி யின் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சார பொய்த் தோற்றத்தின் கீழ் மதவாதப் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. அவைகள் குறிப்பாக உத்தரப் பிரதே சம் மற்றும் பிகாரில் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இதன் மூலம், மதவாத சிக்கலும், பிரிவினைவாத வெறுப்புணர்வும் உருவா வதை மறைக்க முடியாது. இந்துத்துவத்தை விமர்சிப் பவர்களை, தேச விரோதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆதர வாளர்கள் என்று முத்திரை குத்துவது சங்பரிவாரின் பழைய தந்திரமாகும். முஸ்லிம்களை தாக்குவதன் மூலம், அவர்கள் எப்போ தும் பாகிஸ்தானிற்கு விசு வாசமாக இருப்பார்கள் என்று மாயையை உரு வாக்குகிறார்கள் என்றார் யெச்சூரி.

சிரஞ்சீவி

விசாகப்பட்டினம், ஏப்.24- தனது முன்னேற்றத்துக்காக கட்சியின் மூத்த தலைவர் களை ஓரம் கட்டிய பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந் திரமோடி ஒரு ஹிட்லர் என ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் சிரஞ்சீவி கூறினார்.

விசாகப்பட்டினத்தில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மோடி ஒரு ஹிட்லர். அவர் தனது சுயநலத்துக்காக கட்சி யின் மூத்த தலைவர்களை ஓரம் கட்டினார். அவர் பிரதமரானால், தொழில திபர்கள் நாட்டை ஆட்சி செய்வர். சாதாரண மக் களுக்கு எந்த இடமும் இல்லை. அவருடன் சந்திர பாபு நாயுடு எப்படி கூட்டு சேர்ந்தார்? கடந்த 2004ஆம் ஆண்டு பா.ஜ மீது குற்றம் சுமத்தி தே.ஜ கூட்டணியில் இருந்து விலகியவர்தான் இந்த சந்திரபாபு நாயுடு. பா.ஜ.வுடன் கூட்டு வைத் தது வரலாற்று பிழை என் றார். தற்போது பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந் துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி இடங்களை விற்றுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். பணம் மூலம் ஆட்சிக்கு வர முயற் சிக்கின்றனர். ஆட்சியை கைப்பற்ற அவர்கள் வெறித் தனமாக இருக்கின்றனர்.

இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் குஜராத் மாநிலம் 8ஆவது இடத்தில் உள்ளது. காங்கிரசுக்கு வீழ்ச்சி என்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் மக் களை திசை திருப்புவதற் காக சில கட்சிகள் செய்த ஏற்பாடு என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/79181.html#ixzz2zqwB7EJT

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

மாற்றி யோசி!

செய்தி: தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடக்க செங்குன்றத்தில் வீரமா காளியம்மன் கோயிலில் பூசணிக்காய் தீபம்.

சிந்தனை: பனங்காய் தீபம் நடத்தியிருந்தால் பணப் பட்டு வாடாவைத் தவிர்த் திருக்கலாமோ!

Read more: http://viduthalai.in/e-paper/79186.html#ixzz2zqwLjR2K

தமிழ் ஓவியா said...


குஜராத்தின் வளர்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் 17%; மோடி ஆட்சியில் வெறும் 9% தான் சரத்பவார்!!


மும்பை ஏப்.24- குஜராத் மாநி லத்தை காங்கிரஸ் ஆண்டபோது இருந்த பொருளாதார வளர்ச்சியைவிட மிக மோசமாகத்தான் மோடி ஆட்சிக் காலத்து பொருளாதார வளர்ச்சி இருக் கிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பாரதீய ஜனதா வின் நிறுவனர்களில் ஒருவர் அத்வானி. அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கூட. அவர் போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால், அவரது விருப் பத்துக்கு மாறாக காந்திநகரிலேயே அவர் போட்டியிட வைக்கப்பட் டுள்ளார்.

அதேபோல் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. அவர் தாம் முன்பு போட்டியிட்ட தொகு தியிலேயே போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் வேறு தொகுதிக்கு மாற்றப்பட்டார். ஜஸ்வந்த்சிங்.. திறமை யான வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.. நல்ல நிதி அமைச்சர். சிறந்த நாடாளுமன்றவாதி.. அவரும் அப் படியே பந்தாடப்பட்டார். ஹிட்லராகிறார் மோடி... மோடியைப் பொறுத்தவரையில் பாஜகவை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார். நாம் வரலாற்றில் ஹிட்லரை பார்த்திருக் கிறோம். அவர் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதிகாரம் அனைத்தும் தம்மிடமே குவிந்திருக்க வேண்டும் என்று செயல் பட்டவர். அப்படி அதிகாரம் குவிந்த தால் யூதர்களை எப்படியெல்லாம் அவர் கொன்றொழித்தார் என்பதை இந்த உலகமே கண்டது. இன்று அதே நிலை மைதான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த்சிங் ஆகியோரெல் லாம் ஒதுக்கப்பட்டு மோடியின் வசம் அந்த கட்சி சென்று கொண்டிருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கால முதல்வர்களாக மாதவ்சிங் சோலங்கி, சிமன்பாய் படேல் இருந்தனர். அப் போது அம்மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 16 முதல் 17.5 சதவீதம் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் இது 9சதவீதம் ஆக குறைந்தது. இதுதான் சிறந்த நிர்வாகமா? ஏன் வளர்ச்சி விகிதம் குறைந்தது? கடந்த கடைசி 3 ஆண்டு காலத்தில் மகாராஷ்டிரா ரூ.1.42 லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள் ளது. ஆனால், ஏராளமான நிதி மாநாடு களை நடத்துகிற குஜராத்தால் மகாராஷ் டிராவின் அளவில் 20 சதவீதம்கூட ஈர்க்க முடியவில்லையே? அப்படியானால் எங்கே என்ன ஆட்சி நிர்வாகம் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது? வாஜ் பாயோ இந்திரா காந்தியோ தங்களுக் காக ஓட்டுக் கேட்டதே இல்லை.. தங் களது கட்சிக்காக ஓட்டுக் கேட்டார்கள்.. ஆனால், மோடியோ எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார் என்றார் சரத்பவார்.

Read more: http://viduthalai.in/page-2/79173.html#ixzz2zqxBXJ48

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. - (விடுதலை, _ 22.6.1973)

Read more: http://viduthalai.in/page-2/79162.html#ixzz2zqxIx07f

தமிழ் ஓவியா said...


உத்தரப்பிரதேசத்தில் சரிவை நோக்கி பாஜக


லக்னோ.ஏப்.24- கடந்த சில நாட் களாக, பாஜகவின் உத்தரப்பிரதேச பொறுப்பாளர்; பாஜக பொதுச் செய லாளர் அமித்ஷா தேர்தலில் வாக்குப்பதி வில் இரண்டு சுற்றுகள்வரை உபியில் 21 இடங்களில் 18 இடங்களைப்பெறும் என்று தெரிவித்திருந்தார்.

மேற்கு உபியில் கடந்த ஆண்டில் முசாபர்நகர் கலவரம் ஏற்பட்ட பகு தியை கவனத்தில் கொள்ளாமல் கூறி யுள்ளார். ஆனாலும், காவித் தொண்டர்களின் உற்சாக ஓட்டம் பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது. உபியின் மற்ற பிற கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பல தரப்பட்ட வகுப்புப்பிரிவுகள் உள்ளதால் பாஜகவுக்கு மேற்கில் உள்ள நிலையைவிட மோசமாகவே அமையும். கிழக்கு உபியில் அதிகபட்சமாக 32 இடங்கள் பெறுவதற்கே போராடும் நிலைதான். அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுபோல், ஈட்டா, ஏட்டாவா, மணிப்புரி, கண்னோஜ் ஆகிய பகுதிகள் (ஏப்.24இல் தேர்தல்) முலாயம்சிங் யாதவ் கட்டுப்பாட்டில் வருபவை. அதேபோல், மத்திய உபியில் (ஏப்.30இல் தேர்தல்) அமேதி, ரரேபரேலி உள்ளிட் டவை ராகுல் காந்திக்கான பகுதிகளாக இருப்பினும், உபி முழுவதுமே அவர்க ளின் செல்வாக்கில் உள்ளன. 16 இடங்கள் மத்திய உபியில் கணக்கில் கொள்ளலாம்.

கிழக்கு உபியில் (மே 7, மே 12இல் தேர்தல்) நிலைமை சரியானதாக இல்லை. இந்த பகுதிகளில் ஜாதிகளின் கூட்டு பாஜகவின் தந்திர அணுகு முறையில்தான் உள்ளது. தலித்துகள், முஸ்லீம்கள், பார்ப்பனர்கள் இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரே வாக்குவங்கிகளாக உள்ளனர். இவர் களில் யாருமே காவி அணிக்கு ஆதர வளிப்பதாக தெரிவிக்கவில்லை. முஸ் லீம்களைப்பொறுத்தவரை பாஜகவை எதிர்ப்பதற்கு எளிதான காரணங்கள் உள்ளன. பார்ப்பனர்களைப் பொறுத்த வரை பாஜக தலைவர் ராஜ்நாத்தின் தாகூர் பிரிவினரின் ஆதிக்க அரசியலால் நம்பகத்தன்மையில்லாத நிலையில் உள்ளனர்.
தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் பல அடுக்குமுறைகளில் இருப் பது போலவே, பிரிந்து காணப்படு கின்றனர்.

கோஷ்டிச் சண்டைகள்!

ராஜ்நாத்சிங், மோடி இருவருமே அவர்களுக்குப் பாதுகாப்பான தொகு திகள் என்று கூறப்பட்ட பகுதிகளில் இதுபோன்ற தடைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. லக்னோவின் முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தாகூர்களின் தலைவராகக் கருதப்படுப வருமான லால்ஜி டாண்டன் மற்றும் அவர்தரப்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி தேர்தலில் ராஜ்நாத்சிங்குக்கு சரிசெய்ய முடியாதபடி எதிராக உள்ளது. மோடி போட்டியிடும் வாரணாசியிலும் அதே நிலைமைதான். வாரணாசியிலிருந்து கான்பூருக்கு அனுப்பப்பட்டுள்ள முரளி மனோகர் ஜோஷியின் ஆதரவாளர்கள் மற்றும் புனித நகர் எனப்படும் வாரணாசியில் உள்ள பார்ப்பனர்களின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளார் மோடி. எவ்வித முறையுமின்றி ஜோஷியை வாரணாசியிலிருந்து அனுப்பியதால் பார்ப்பனர்கள் மோடிக்கு வாக்களிக்க மாட்டார்கள். யார் பெரியவர்?

கான்பூரில் பாஜக அரசா, மோடி அரசா என்றே சுவரொட்டி சர்ச்சை கிளம்பியுள்ளது. பாஜக அலை இருப் பினும், மோடி அலை இல்லை என்கிற வாதங்களும் ஏற்பட்டன. அதன்பிறகே, கான்பூரில் மோடியுடன், ஜோஷியும் இருக்கும் படத்துடன் வெளியிட்டு பாஜகவில் சச்சரவை முடிவுக்கு கொண்டு வந்து, மோசமான நிலையை சரிப்படுத்த முயன்றுள்ளது.

பல இடங்களிலும் பாஜக இதே போன்று உடைபட்ட நிலையில்தான் உள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பின ரான ஜெய் பிரதாப் சிங் அவர் மனைவியை காங்கிரஸ் சார்பில் பாஸ்தி (கிழக்கு உபி) தொகுதியில் களமிறங்கி விட்டார். சமதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஷியாம் சரண் குப்தாவை பாஜக வேட்பாளராக களமிறக்கியதால், அலகாபாத்தில் பாஜக தலைவரும், விதான் சபா பேச்சாளரு மான கேசரி நாத் திரிபாதி தேர்தல் பிரச்சாரத்தில் பங்குபெற மறுத்துவிட் டார். உபி பாஜகவின் முன்னாள் தலைவரும், பிற்படுத்தப்பட்ட குர்மி இனத்தின் செல்வாக்குள்ள தலைவரு மான (கிழக்கு உபி) ஓம் பிரகாஷ் சிங் தன் மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தேர்தல் செயல்களில் அவர் ஈடுபட வில்லை. அதேபோல், மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவரான சூர்ய பிரதாப் ஷாஹிக்கு தியோரியா(கிழக்கு உபி)வில் போட்டியிட வாய்ப்பு மறுக் கப்பட்டதால், அவருடைய ஆதர வாளர்களும் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். முன்னாள் பஜ்ரங்தள் தலைவரும், குர்மித் தலைவரும், கட்சியின் ஹிந்துத் துவா தலைமைப்பேச்சாளராக இருந்த வருமான வினய் கட்டியார் அவருக்குச் சொந்த ஊரான ஃபரிதாபாத்தில் போட் டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது போன்ற மறுப்புகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால், பாஜகவால் உபியில் சுவர் எழுத்து எழுதுவதற்கு கூட ஆட்களை உற்சாகப்படுத்த முடிய வில்லை.

-டி.என்.ஏ. இந்தியா, 23-4-2014

Read more: http://viduthalai.in/page-2/79165.html#ixzz2zqxQKrOj

தமிழ் ஓவியா said...


16 ஆவது மக்களவைத் தேர்தல்: கலைஞர் - மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் வாக்களித்த பின்னர் கலைஞர் பேட்டி


சென்னை, ஏப்.24- தமிழகத்தில் இன்று (24.4.2014) நடைபெறும் 16 ஆவது மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டா லின் மற் றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர்.

கலைஞர்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் இன்று காலை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

செய்தியாளர்: தேர்தல் வாக்குப் பதிவு நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. நீங்கள் வாக்களித்திருக் கிறீர்கள். இந்தத் தேர்தல் தி.மு.க. அணிக்கு சாதகமாக இருக்குமா?

கலைஞர்: சாதகமாக இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே, சாதகமாக இருக்கு மென்று நம்புகிறேன்.

செய்தியாளர்: தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? கடந்த முறை பெற்றதைவிட அதிகமான இடங்களை தி.மு.க. பெறுமா?

கலைஞர்: நிச்சயமாகப் பெறும்.

செய்தியாளர்: தோல்வி பயம் காரணமாக அ.தி. மு.க. எல்லா இடங்களிலும் பணப் பட்டுவாடா செய் திருக்கிறதே?

கலைஞர்: அ.தி.மு.க. பணத்தில் புரளுகின்ற கட்சி. எனவே, அவர்கள் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

செய்தியாளர்: தொடர்ந்து தி.மு. கழகத்தின் சார்பாக அ.தி.மு.க.வின்மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் கூறி வருகிறீர்கள். அதில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

கலைஞர்: நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தெரியவில்லை.
அதேபோன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின் இன்று காலை 10.10 மணியளவில் கோபால புரத்தில் உள்ள சாரதா பள்ளியில் உள்ள வாக்குச் சாவ டியில் வரிசையில் நின்று தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். மத்திய சென்னை வேட்பாளர் (தி.மு.க.) தயாநிதி மாறனும் வாக்களித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/79176.html#ixzz2zqyb6rfE