Search This Blog

4.11.12

பாரீர், பார்ப்பனரை! இன்றைக்கும் பிராமணாளாம்; பூணூலாம்! எண்ணிப் பாரீர்!



சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் சரி, எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் சரி, பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்று டாக்டர் டி.எம். நாயர் கூறினாலும் கூறினார். அவர் உயிரோடு இருந்தால் அவர் வாயில் சர்க்கரையை அள்ளிக் கொட்ட வேண்டும்.
பார்ப்பான் தமிழ்மீது கொண்டுள்ள அக்கறை எத்தகையது என்பதை அறிஞர் அண்ணாவும் அழகுபடக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ண மெல்லாம் வடமொழியாகிய சமஸ் கிருதத்தின் மீதுதான் (திராவிட நாடு 2.11.1947 பக்கம் 18).
தனித் தமிழ் கேட்டால் மொழி வளம் குன்றும் என்பர்; தமிழ் இசை கேட்டால் சங்கீதக் கலை க்ஷீணமடை யும் என்று கூறுவர். தமிழருக்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்டால் ஆட்சியிலே திறமை குறையுமே என்று கூறுவர்; தமிழருக்குச் சம உரிமை வேண்டும் என்று கேட்டால், பழங்காலப் பக்குவம் பாழாகுமே என்று பகருவர். தமிழனுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்டால் பாரத மாதா பிரலாபிப்பாளே என்று பசப்புவர். இது அவர்களின் ஆரியர்களின் பழைய பல்லவி! இது இனி பலிக்காது (_ -தமிழரின் மறுமலர்ச்சி -அறிஞர் அண்ணா பக்கம் 35)
அண்ணாவின் இந்த அளவு கோலையும் வைத்து ஆர்.எஸ்.எஸ். காரரான திருவாளர் வைத்திய நாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி ஏட்டில் (20.10.2012 பக்கம் 8) வெளி வந்துள்ள திருவாளர் லா.சு. ரங்கராஜன் என்பார் எழுதிய கோயில்களில் தமிழ் காந்திஜி கூறியது என்ன? என்ற கட்டுரையைப் படித்துப் பார்த்தால், அறிஞர் அண்ணா இன்று இருந்தால் அவர் வாயிலும் சர்க்கரையைக் கொட்டலாம் தான்.
தங்களுக்குத் தேவைப்படும்போது  ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவது தான் எனது இலட்சியம் எனது ஆசை என்று காந்தியார் சொன்ன பொழுது மகாத்மா காந்தி என்று பறை சாற்றிய அதே பார்ப்பனர்கள் நான் சொல்லும் ராமன் வேறு _ இராமாயணம் கூறும் ராமன் வேறு என்று காந்தியார் சொன்ன பொழுது, துப்பாக்கி ரவைகளால் எமலோகத்துக்கு அனுப்பியவர்கள் அல்லவா பார்ப்பனர்கள்.
அதே முறையில் தான் காந்தியாரையும் இப்பொழுது இழுத்துக் குளிர் காயப் பார்க்கிறார்கள்
இந்தியா பூராவும் ஹிந்து சமயச் சடங்குகளிலும் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று காந்தியார் கூறி விட்டாராம். எனவே இதில் வேறு கண்ணோட்டம் கூடாதாம் தமிழில் வழிபாடு என்ற பேச்சையே எடுக்கக் கூடாதாம்.
காந்தியார் என்ன தமிழை கரைத்துக் குடித்தவரா? ஏதோ தென்னாப்பிரிக்காவில் ஒரு தமிழர் தமிழில் கையொப்பம் போட கற்றுக் கொடுத்ததாலேயே காந்தியார் அத்துப்படியானவர் என்று பொருளா?
அப்படியே பார்க்கப் போனாலும் தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் ஹிந்துக்களா? ஹிந்து என்பதை தமிழ் நாட்டில் உள்ள தமிழ் அறிஞர்கள் கா.சு. பிள்ளையோ, மறைமலைஅடிகள் போன்ற மேதைகளோ ஏற்றுக் கொள்ளவில்லையே.
ஹிந்து என்ற சொல் தமிழ்ச் சொல்லா? தமிழர்களே ஹிந்து இல்லாதபோது, தமிழ்நாட்டுக் கோயில்களில் சமஸ்கிருத இருமல் மொழிக்கு ஏது இடம்?
காந்தியார் இதை மட்டுமா சொன்னார்? தமிழ் நாட்டுக் கோயில்களைப் பார்த்துவிட்டு, இன்னொன்றையும் சொல்லியுள்ளாரே _ அது வசதியாக மறந்து போய் விட்டதா?
இந்தக் கூட்டத்தில் (கானாடு காத்தானில்) நகரத்தார்களுக்குக் கசப்பாகத் தோன்றக் கூடிய தம் கருத்து ஒன்றையும் காந்தியார் சொன்னார்.
ஆலயங்களை நிர்மாணிப்பதில் நீங்கள் தாராளமாகப் பணத்தைச் செலவிடுகிறீர்கள் என்று அறிகிறேன். ஆலயம் என்று ஒரு கட்டடத்தைக் கட்டி விட்டால் மட்டும் கடவுள் அங்கு இருக்கிறார் என்று எண்ணுவது மூடநம்பிக்கை. தாசி வீட்டில் எந்த அளவு இறைவன் இருப்பாரோ, அந்த அளவே அவர் இருக்கும் ஆலயங்கள் பலவற்றை நான் அறிவேன்
(தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 533)
என்று காந்தியார் சொல்லி இருக்கிறாரே - தினமணி ஏற்றுக் கொள்கிறதா?
விபச்சார விடுதியாக கோயில் ஆகி விட்ட பிறகு  -_ அங்கு சமஸ்கிருதம் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று காந்தியார் கருதி இருப்பாரோ என்னவோ!

பண்டைய தமிழ் மன்னர்கள் தாங்கள் எழுப்பிய ஆலயங்களில் முழுக்க முழுக்க தமிழ் வழிபாட்டு முறை மட்டுமே வேண்டும் என்று முயற்சி செய்ததில்லை. ஏன் எனில் அவர்களில் பலருக்கு இவ்விரு மொழிகளிலும் புலமையும், ஈடுபாடும் இருந்தன
சங்க காலத் தமிழ்ப் புலவர்களோ சைவ சமயத்திருக்குரவர்கள் நால்வர்களோ அல்லது வேறு யாருமோ வடமொழி வேறுபாட்டை ஆட்சேபித்ததாகக் கூட தகவல்கள் இல்லை. பிற மாநிலங்களில் தாய்மொழி அபிமானிகளான மலையாளிகளோ, கன்னடியர்களோ, தெலுங்கர்களோ கூட  தாய்மொழியில்தான் வழிபாடு வேண்டும் என்று வாதாடவில்லை. தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டு இறுதிவரை இத்தகைய பிரச்சினை எழவில்லை.
மக்களுக்குப் புரியாத வடமொழி எதற்கு? என்று கேட்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியப் பாடல்களைப் படித்துக் காட்டினால் இப்போதுள்ள தமிழனுக்குப் புரிய வில்லை என்பதற்காக அந்தச் சங்க காலப் பாடல்களை இனி மறந்து விடலாம் என்றால் எவ்வளவு சரியோ, அவ்வளவு சரி வடமொழியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் என்று நீட்டி முழங்கித் தள்ளியுள்ளார் திருவாளர் லா.சு. ரங்கராஜன் அய்யர் வாள்!
தொடக்கத்திலேயே ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளார். பண்டைய தமிழ் மன்னர்கள் தாங்கள் எழுப்பிய ஆலயங்களில் முழுக்க முழுக்க தமிழ் வழிபாட்டு முறை மட்டுமே வேண்டும் என்று முயற்சி செய்ததில்லை என்று எழுதுகிறாரே - இதன் பொருள் என்ன?
தமிழில் வழிபாடு இருந்தது என்று ஒப்புக் கொண்டு இருக்கிறாரா _ இல்லையா?
தமிழில் வழிபாடு இருந்தது என்பதை ஒப்புக் கொண்டபின் - இந்தக் கட்டுரைக்கு அவசியம் எங்கிருந்து வந்தது?
தமிழகக் கோயில்களில் வடமொழி செல்வாக்கு பெற்றது எப்பொழுது? பிற்கால சோழ மன்னர்கள் காலத்தில் தானே? அதற்கு முன் தமிழ்நாட்டில் கோயில்களே கிடையாதா? அப் பொழுது தமிழர்கள் பூசை செய்ய வில்லையா? தமிழில் அதனை நடத்தவில்லையா!
ராஜராஜன் காலத்திலும் அதன் பின்னர் நாயக்கர், மராட்டியர் என்று தமிழைத் தாய் மொழியாகக்  கொள்ளாதவர்களின் ஆட்சியில் கோயில்களில் எந்த மொழியில் வழிபாடு இருந்தால் என்ன என்று அலட்சியமாக இருந்தனர் என்பது தானே உண்மை.
மலையாளிகளோ, கன்னடர்களோ, தெலுங்கர்களோ சமஸ்கிருதத்தை எதிர்க்கவில்லையென்றால் அதற்குக் காரணம் அம்மூன்று மொழிகளும் பெரும்பாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டதுதான்: தமிழ் அந்நிலைக்கு ஆளாகவில்லை என்பது நினைவில் இருக்கட்டும்.
பழந் தமிழர் இலக்கியப் பாடல்கள் புரியவில்லை என்பதற்காக அதனை மறந்துவிட முடியுமா என்று திறமை யாகக் கேள்வியை எழுப்புகிறாராம்.
சங்கத் தமிழ்ப் பாடல்களின் மூலத்தைப் புரிந்து கொள்ள முடியா விடினும், அதன் பொழிப்புரைகள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
வடமொழி அப்படி அல்லவே! அதைச் சொல்லுகிறவர்களுக்கும் பொருள் புரியாது என்று இதே கட்டு ரையில் ரங்கராஜன் கூறியுள்ளாரே
அர்ச்சனை செய்கிற அர்ச்சகனுக்கே புரியாத ஒரு மொழியை ஏன் பயன்படுத்த வேண்டும்?
கடவுள் என்று சொல்லும் பொழுது வடமொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால், கடவுள் கூட வடமொழி வெறியர்தானா? அல்லது அவருக்கு அந்த ஒரு மொழிதான் தெரியும் என்றால் - அவர் என்ன சர்வ சக்தி வாய்ந்த கடவுள்?
சைவ சமயக்குரவர்கள் நால்வரும் கோயில் கோயிலாகச் சென்று தமிழில் பாடியதெல்லாம் வெறும் குப்பைகள் தானா? அவற்றைக் கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதையாவது தினமணி கூட்டத்தார் வெளிப் படையாகச் சொல்லட்டும் பார்க்கலாம்.
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் - என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறியதாக எழுதி வைத்துள்ளனரே! இதன் பொருள் என்ன? இறைவன்! நீ தமிழில் பாடு, தமிழே நமக்கு அர்ச்சனை என்று சொன்னார் இறைவன் என்பது பொருள்.
இதற்கு என்ன பதில்? இதெல்லாம் புரூடா என்று சொன்னாலும் சொல்லும் தினமணிக் கூட்டம். சமஸ்கிருதமா கடவுளா என்றால் சமஸ்கிருதம்தான் என்று சொன்னாலும் சொல்லுவார்கள். யார் கண்டார்?
தை முதல் நாள் என்றால் எதிர்ப்பு - தமிழ் செம்மொழி மாநாடு என்றால் குதர்க்கம்; பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை என்றால் தினாவெட்டான எழுத்து, விளம்பரப்பலகைகளில் தமிழ்  என்றால், மொழி நக்சலிசம் என்ற நக்கல் இவற்றின் ஒட்டு மொத்த வடிவம் தான் பார்ப்பனர்கள். இன்றைக்கும் பிராமணாளாம்; பூணூலாம்! எண்ணிப் பாரீர்!
மீண்டும் ஒருமுறை தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள அண்ணாவின் கூற்றை படித்துப் பாருங்கள். உண்மை உணர்ச்சிகரமாகவே புரியும்!
தமிழா இனவுணர்வு கொள்!
தமிழா தமிழனாக இரு!

- தமிழர் தலைவர் கி.வீரமணி
----------------------- மின்சாரம் அவர்கள் 3-11-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

சிறீரங்க முழக்கம்!


நேற்று (4.11.2012) கழக வரலாற்றில் மறக்க முடியாத எழுச்சிப் பாசறை தீட்டிய உணர்ச்சிக் காவியம்!

சிறீரங்கத்தைச் சேர்ந்த திருவானைக்காவலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டம் அது! பொதுக் கூட்டமா அது! பொங்கி எழுந்த இனவுணர்வின் பிரவாகம்! வெடித்தெழுந்த தன்மான உணர்வின் தணல் மலை!!

இருக்காதா? இந்த 2012-லும் இந்நாட்டுக்குரிய திராவிட மக்களை - எங்கள் தேவடியாள் பிள்ளைகளே! என்று சொல்லக் கூடிய திமிர்வாதம், ஒண்ட வந்த ஒரு கூட்டத்துக்கு வருமேயானால், மானம் ஒன்றே நல் வாழ்வெனக் கொண்ட மறவேந்தர்கள் பூனைகள் அல்லர் புலி நிகர் தமிழ் மாந்தர் என்று வெடித்துக் கிளம்ப மாட்டார்களா?

அந்த எழுச்சிக் கோலத்தைத்தான் நேற்று காண முடிந்தது. அதுவும் இன இழிவை ஒழிக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்குக் காவல்துறை மூன்று முறை அனுமதி மறுத்தது என்றால் அதனை எப்படி எளிதாக எடுத்து கொள்ள முடியும்?

திருவானைக்காவலில் நேற்று திரண்ட மக்கள் கடல் -அவர்கள் கண்களில் வெடித்த கோபக் கனல் -முகம்காட்டிய போர்க் குணம் காவல்துறையினரைக் கூட தவறு செய்தது நாம்தான் என்ற எண்ணத்தை உணரச் செய்திருக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடம் இல்லை.

அவ்வளவுப் பெரிய எழுச்சிக் கடல் அமைதி காத்த அந்தப் பாங்கு - நடுநிலையாளர்கள் மத்தியிலேகூட ஆச்சரியக் குறியை எழுப்பி இருக்கும்.

திராவிடர்கழகம் மேற்கொண்டிருக்கும் இந்தத் தன்மான போர்பற்றி தங்கள் கவனத்தை இதுவரை எந்தக் காரணத்தாலோ செலுத்தாத அரசியல் வாதிகள் - அமைப்புகள் மத்தியில்கூட சிந்தனை அலைகளைத் தட்டி எழுப்பிய போர்க்களக் கூட்டம் அது என்றால் மிகையாகாது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துகள், அறிவித்த அறிவிப்பு மிக மிக முக்கியமானவை.

1) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51a(h) குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்னும் பகுதியில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்ற அந்த அடிப்படைக் கடமையினைத் தானே திராவிடர் கழகம் செய்கிறது. அதற்கு எப்படி அனுமதி மறுக்கலாம்?

2) எம்.ஜி.ஆர் அரசு, தெருக்கள் பெயரில் ஜாதி இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அவர் வழி வந்ததாகக் கூறும் அ.இ.அ.தி.மு.க. அரசு, அதன் முதல் அமைச்சர் பிராமணாள் பெயரை - அதுவும் அவர் தொகுதியில் எப்படி அனுமதிக்கலாம்?

3) சூத்திரர் இழிவு ஒழிப்பு என்பது ஏதோ திராவிடர் கழகப் பிரச்சினையல்ல, ஒட்டு மொத்தமான தமிழர்களின், திராவிடர்களின் தன்மானப் பிரச்சினை.

கட்சிகளைத் தூக்கி எறியுங்கள் - உங்கள் மான உணர்வை - சுயமரியாதை உணர்வை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

4) பிராமணாள் என்ற வருணாசிரம ஆதிக்கப் பெயர் நீக்கப்படாவிட்டால் டிசம்பர் முதல் தேதியன்று சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் போராட்டத் திட்டம் அறிவிக்கப்படும். அந்த ஆணவப் பெயர் நீக்கப்படும் வரை தொடர் போராட்டமாக இருக்கும்.

5) கழகம் நடத்தும் எந்தப் போராட்டத்திலும் அமைதிக்குக் குந்தகம் ஏற்படாது. அந்த அறப் போராட்டம் தந்தை பெரியார் வகுத்த வழியில் தொடரும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

டிசம்பர் முதல் தேதி என்ன? இப்பொழுதே தயாராகி விட்டார்கள் கழகத் தோழர்கள். சில மணி நேர அளவிலேயே திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்கள் 500 பேர்கள், கையொப்பமிட்டு போராட்ட வீரர்களின் பட்டியலை திருவானைக்காவல் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவரிடம் ஒப்படைத்து விட்டார்களே.

பட்டியல் விடுதலையில் தொடரும்.

கழகத் தோழர்களே!

தன்மான தமிழ்ப் பெருங்குடி மக்களே!

கட்சிகளைத் தூக்கி எறிந்து தன்மானம் காக்க போர்க் கொடி தோளில் ஏந்துவீர்!

பெரியார் இல்லை; அண்ணா இல்லை; புரட்சிக் கவிஞர் இல்லை என்று பூச்சாண்டிக் காட்டிப் பார்க்கலாம் என்று ஆரியக் கூட்டம் பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறது.

தந்தை பெரியார் மறைந்தாலும் அவர் மூட்டிய தணல் தணிந்து போய்விடவில்லை என்பதை நிரூபிக்க நீறு பூத்த நெருப்புகளே, தயாராவீர்! தயாராவீர்!! 5-11-2012

தமிழ் ஓவியா said...


பிராமணாள் இனியும் தலை காட்டக் கூடாது!


சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் பிராமணாள் என்னும் ஓட்டல் 6.11.2012 ஆம் நாள் இரவோடு இரவாகக் கடையைக் கட்டிக் கொண்டது.

திராவிடர் கழகத் தோழர்கள் கேட்டுக் கொண்ட போதே அந்தப் பிராமணாள் பெயரை நீக்கி யிருந்தால், இப்பொழுது அந்த உணவு விடுதியையே மூடிவிடும் அவல நிலை ஏற்பட்டு இருக்காது.
பார்ப்பனர்கள் உணவு விடுதி நடத்தக் கூடாது. அவர்கள் பிழைப்புக்காக எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற அற்பப் புத்தி நமக்கொன்றும் இல்லை.

பார்ப்பனர்கள் நன்றாகவே பிழைக்கட்டும்; நன்றாகவே சகல சம்பத்துகளுடனும் வாழட்டும் நமக்கொன்றும் அட்டியில்லை.

பார்ப்பான் பணக்காரனானால் என்ற கட்டுரையை குடிஅரசு இதழில் (9.11.1946) தந்தை பெரியார் தெளிவாகவே எழுதியுள்ளார்.

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது; அவன் ஏழையாக இருக்க வேண்டும் என்பதல்ல.

ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக கோடீஸ்வரனாக வும், லட்சாதிபதியாகவும் ஆகி விட்டாலும் சரியே எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும் மடாதிபதிகள் உட்பட எவரும், சிறிதுகூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்று தெளிவாக, நீரோட்டமாகக் கூறியுள்ளாரே!

பிராமணாள் உணவு விடுதி என்பதில் உள்ள பிராமணாள் என்பதை ஒழிப்பது என்பதற்கான விளக்கம் இதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறதே!

பார்ப்பனர்களுக்கு இது தெரியாதா? பிராமணாள் என்பது உயர் வருணத் தன்மையைப் பறைசாற்றக் கூடியதென்று தெரிந்துதானே அதனை இன்றளவும் நிலைநாட்டிடத் துடிக்கின்றனர் - அடம் பிடிக்கின்றனர்.

அரசர்கள் முதல் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து விட்டதாலும், வருணாசிரம தர்மத்தில் உயர் ஆளுமை அவர்களுக்கு எல்லா வகையிலும் வசதி வாய்ப் புள்ளதாக இருப்பதாலும் அதனை விட்டுக் கொடுக்க மனம் இர(ற)ங்கி விடுவதில்லை.

பிராமணாள் என்று தங்களை உச்சமான இடத்தில் ஆசனம் போட்டு உட்கார வைத்தாலும் கூடப் பரவாயில்லை; அந்த வருணாசிரமத் தன்மையில் பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் என்று சுட்டுவதுதான் சகிக்க முடியாததாக இருக் கிறது. ஏன் சகிக்க முடியாதது என்று சொல்லு கிறோம்? சூத்திரன் ஏழு வகைப்படுவான். அதில் ஒன்று தமது விபச்சாரி மகன் என்று பார்ப்பான் எழுதி வைத்திருப்பதுதான்.

பிராமணாள் ஒழிப்புப் போராட்டத்தை எதிர்த்து எழுதுவோர்கூட, திராவிடர் கழகம் எடுத்து வைக்கும் இந்தக் குற்றச்சாற்றுக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், பிரச்சினையைத் திசை திருப்பும் தன்மையில் எழுதுகோல் பிடிப்பது பரிதாபமே!

சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் நடத்திய உணவு விடுதியில் இடம் பெற்ற பிராமணாள் ஒழிப்பு - இத்தோடு முடிவுக்கு வந்தாக வேண்டும். மறுபடியும் சிறீரங்கத்திலோ, வேறு இடங்களிலோ பிராமணாள் முளைப்பதை அனுமதிக்க முடியாது, முடியவே முடியாது.

அப்படி எந்த ஊரிலாவது பிராமணாள் தலை காட்டுமேயானால் முதலில் கோரிக்கையை நேரிடையாக வையுங்கள். நாகரிகமாகப் பிரச் சினையை முடித்துக் கொண்டால் பிரச்சினை இல்லை; முரண்டு பிடித்தால் உடனே தலைமைக்குத் தெரிவிக்குமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். உரிய முயற்சியைத் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு மேற் கொள்ளலாம்.

திராவிடர் கழகத்தின் முறையான முயற்சியும், பண்பாட்டுடன் கூடிய அணுகுமுறையும்தான் இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

கொள்கையும் முக்கியம் - வழிமுறையும் முக்கியம் என்பதை எந்தக் காரணத்தோடும் கழகத் தோழர்கள் மறந்துவிட வேண்டாம். இந்தப் பிரச்சினையில் முழு முயற்சியுடன் செயல்பட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.8-11-2012