tag:blogger.com,1999:blog-1474608369333206681.post9052597420892851605..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பாரீர், பார்ப்பனரை! இன்றைக்கும் பிராமணாளாம்; பூணூலாம்! எண்ணிப் பாரீர்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42558578995429448582012-11-08T19:46:52.305+05:302012-11-08T19:46:52.305+05:30
பிராமணாள் இனியும் தலை காட்டக் கூடாது!
சிறீரங்கத...<br />பிராமணாள் இனியும் தலை காட்டக் கூடாது!<br /><br /><br />சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் பிராமணாள் என்னும் ஓட்டல் 6.11.2012 ஆம் நாள் இரவோடு இரவாகக் கடையைக் கட்டிக் கொண்டது.<br /><br />திராவிடர் கழகத் தோழர்கள் கேட்டுக் கொண்ட போதே அந்தப் பிராமணாள் பெயரை நீக்கி யிருந்தால், இப்பொழுது அந்த உணவு விடுதியையே மூடிவிடும் அவல நிலை ஏற்பட்டு இருக்காது.<br />பார்ப்பனர்கள் உணவு விடுதி நடத்தக் கூடாது. அவர்கள் பிழைப்புக்காக எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற அற்பப் புத்தி நமக்கொன்றும் இல்லை.<br /><br />பார்ப்பனர்கள் நன்றாகவே பிழைக்கட்டும்; நன்றாகவே சகல சம்பத்துகளுடனும் வாழட்டும் நமக்கொன்றும் அட்டியில்லை.<br /><br />பார்ப்பான் பணக்காரனானால் என்ற கட்டுரையை குடிஅரசு இதழில் (9.11.1946) தந்தை பெரியார் தெளிவாகவே எழுதியுள்ளார்.<br /><br />எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது; அவன் ஏழையாக இருக்க வேண்டும் என்பதல்ல.<br /><br />ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக கோடீஸ்வரனாக வும், லட்சாதிபதியாகவும் ஆகி விட்டாலும் சரியே எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும் மடாதிபதிகள் உட்பட எவரும், சிறிதுகூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்று தெளிவாக, நீரோட்டமாகக் கூறியுள்ளாரே!<br /><br />பிராமணாள் உணவு விடுதி என்பதில் உள்ள பிராமணாள் என்பதை ஒழிப்பது என்பதற்கான விளக்கம் இதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறதே!<br /><br />பார்ப்பனர்களுக்கு இது தெரியாதா? பிராமணாள் என்பது உயர் வருணத் தன்மையைப் பறைசாற்றக் கூடியதென்று தெரிந்துதானே அதனை இன்றளவும் நிலைநாட்டிடத் துடிக்கின்றனர் - அடம் பிடிக்கின்றனர்.<br /><br />அரசர்கள் முதல் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து விட்டதாலும், வருணாசிரம தர்மத்தில் உயர் ஆளுமை அவர்களுக்கு எல்லா வகையிலும் வசதி வாய்ப் புள்ளதாக இருப்பதாலும் அதனை விட்டுக் கொடுக்க மனம் இர(ற)ங்கி விடுவதில்லை.<br /><br />பிராமணாள் என்று தங்களை உச்சமான இடத்தில் ஆசனம் போட்டு உட்கார வைத்தாலும் கூடப் பரவாயில்லை; அந்த வருணாசிரமத் தன்மையில் பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் என்று சுட்டுவதுதான் சகிக்க முடியாததாக இருக் கிறது. ஏன் சகிக்க முடியாதது என்று சொல்லு கிறோம்? சூத்திரன் ஏழு வகைப்படுவான். அதில் ஒன்று தமது விபச்சாரி மகன் என்று பார்ப்பான் எழுதி வைத்திருப்பதுதான்.<br /><br />பிராமணாள் ஒழிப்புப் போராட்டத்தை எதிர்த்து எழுதுவோர்கூட, திராவிடர் கழகம் எடுத்து வைக்கும் இந்தக் குற்றச்சாற்றுக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், பிரச்சினையைத் திசை திருப்பும் தன்மையில் எழுதுகோல் பிடிப்பது பரிதாபமே!<br /><br />சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் நடத்திய உணவு விடுதியில் இடம் பெற்ற பிராமணாள் ஒழிப்பு - இத்தோடு முடிவுக்கு வந்தாக வேண்டும். மறுபடியும் சிறீரங்கத்திலோ, வேறு இடங்களிலோ பிராமணாள் முளைப்பதை அனுமதிக்க முடியாது, முடியவே முடியாது.<br /><br />அப்படி எந்த ஊரிலாவது பிராமணாள் தலை காட்டுமேயானால் முதலில் கோரிக்கையை நேரிடையாக வையுங்கள். நாகரிகமாகப் பிரச் சினையை முடித்துக் கொண்டால் பிரச்சினை இல்லை; முரண்டு பிடித்தால் உடனே தலைமைக்குத் தெரிவிக்குமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். உரிய முயற்சியைத் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு மேற் கொள்ளலாம்.<br /><br />திராவிடர் கழகத்தின் முறையான முயற்சியும், பண்பாட்டுடன் கூடிய அணுகுமுறையும்தான் இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது.<br /><br />கொள்கையும் முக்கியம் - வழிமுறையும் முக்கியம் என்பதை எந்தக் காரணத்தோடும் கழகத் தோழர்கள் மறந்துவிட வேண்டாம். இந்தப் பிரச்சினையில் முழு முயற்சியுடன் செயல்பட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.8-11-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47537352994410651072012-11-05T17:35:26.929+05:302012-11-05T17:35:26.929+05:30சிறீரங்க முழக்கம்!
நேற்று (4.11.2012) கழக வரலாற்...சிறீரங்க முழக்கம்!<br /><br /><br />நேற்று (4.11.2012) கழக வரலாற்றில் மறக்க முடியாத எழுச்சிப் பாசறை தீட்டிய உணர்ச்சிக் காவியம்!<br /><br />சிறீரங்கத்தைச் சேர்ந்த திருவானைக்காவலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டம் அது! பொதுக் கூட்டமா அது! பொங்கி எழுந்த இனவுணர்வின் பிரவாகம்! வெடித்தெழுந்த தன்மான உணர்வின் தணல் மலை!!<br /><br />இருக்காதா? இந்த 2012-லும் இந்நாட்டுக்குரிய திராவிட மக்களை - எங்கள் தேவடியாள் பிள்ளைகளே! என்று சொல்லக் கூடிய திமிர்வாதம், ஒண்ட வந்த ஒரு கூட்டத்துக்கு வருமேயானால், மானம் ஒன்றே நல் வாழ்வெனக் கொண்ட மறவேந்தர்கள் பூனைகள் அல்லர் புலி நிகர் தமிழ் மாந்தர் என்று வெடித்துக் கிளம்ப மாட்டார்களா?<br /><br />அந்த எழுச்சிக் கோலத்தைத்தான் நேற்று காண முடிந்தது. அதுவும் இன இழிவை ஒழிக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்குக் காவல்துறை மூன்று முறை அனுமதி மறுத்தது என்றால் அதனை எப்படி எளிதாக எடுத்து கொள்ள முடியும்?<br /><br />திருவானைக்காவலில் நேற்று திரண்ட மக்கள் கடல் -அவர்கள் கண்களில் வெடித்த கோபக் கனல் -முகம்காட்டிய போர்க் குணம் காவல்துறையினரைக் கூட தவறு செய்தது நாம்தான் என்ற எண்ணத்தை உணரச் செய்திருக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடம் இல்லை.<br /><br />அவ்வளவுப் பெரிய எழுச்சிக் கடல் அமைதி காத்த அந்தப் பாங்கு - நடுநிலையாளர்கள் மத்தியிலேகூட ஆச்சரியக் குறியை எழுப்பி இருக்கும்.<br /><br />திராவிடர்கழகம் மேற்கொண்டிருக்கும் இந்தத் தன்மான போர்பற்றி தங்கள் கவனத்தை இதுவரை எந்தக் காரணத்தாலோ செலுத்தாத அரசியல் வாதிகள் - அமைப்புகள் மத்தியில்கூட சிந்தனை அலைகளைத் தட்டி எழுப்பிய போர்க்களக் கூட்டம் அது என்றால் மிகையாகாது.<br /><br />தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துகள், அறிவித்த அறிவிப்பு மிக மிக முக்கியமானவை.<br /><br />1) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51a(h) குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்னும் பகுதியில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்ற அந்த அடிப்படைக் கடமையினைத் தானே திராவிடர் கழகம் செய்கிறது. அதற்கு எப்படி அனுமதி மறுக்கலாம்?<br /><br />2) எம்.ஜி.ஆர் அரசு, தெருக்கள் பெயரில் ஜாதி இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அவர் வழி வந்ததாகக் கூறும் அ.இ.அ.தி.மு.க. அரசு, அதன் முதல் அமைச்சர் பிராமணாள் பெயரை - அதுவும் அவர் தொகுதியில் எப்படி அனுமதிக்கலாம்?<br /><br />3) சூத்திரர் இழிவு ஒழிப்பு என்பது ஏதோ திராவிடர் கழகப் பிரச்சினையல்ல, ஒட்டு மொத்தமான தமிழர்களின், திராவிடர்களின் தன்மானப் பிரச்சினை.<br /><br />கட்சிகளைத் தூக்கி எறியுங்கள் - உங்கள் மான உணர்வை - சுயமரியாதை உணர்வை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.<br /><br />4) பிராமணாள் என்ற வருணாசிரம ஆதிக்கப் பெயர் நீக்கப்படாவிட்டால் டிசம்பர் முதல் தேதியன்று சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் போராட்டத் திட்டம் அறிவிக்கப்படும். அந்த ஆணவப் பெயர் நீக்கப்படும் வரை தொடர் போராட்டமாக இருக்கும்.<br /><br />5) கழகம் நடத்தும் எந்தப் போராட்டத்திலும் அமைதிக்குக் குந்தகம் ஏற்படாது. அந்த அறப் போராட்டம் தந்தை பெரியார் வகுத்த வழியில் தொடரும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர்.<br /><br />டிசம்பர் முதல் தேதி என்ன? இப்பொழுதே தயாராகி விட்டார்கள் கழகத் தோழர்கள். சில மணி நேர அளவிலேயே திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்கள் 500 பேர்கள், கையொப்பமிட்டு போராட்ட வீரர்களின் பட்டியலை திருவானைக்காவல் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவரிடம் ஒப்படைத்து விட்டார்களே.<br /><br />பட்டியல் விடுதலையில் தொடரும்.<br /><br />கழகத் தோழர்களே!<br /><br />தன்மான தமிழ்ப் பெருங்குடி மக்களே!<br /><br />கட்சிகளைத் தூக்கி எறிந்து தன்மானம் காக்க போர்க் கொடி தோளில் ஏந்துவீர்!<br /><br />பெரியார் இல்லை; அண்ணா இல்லை; புரட்சிக் கவிஞர் இல்லை என்று பூச்சாண்டிக் காட்டிப் பார்க்கலாம் என்று ஆரியக் கூட்டம் பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறது.<br /><br />தந்தை பெரியார் மறைந்தாலும் அவர் மூட்டிய தணல் தணிந்து போய்விடவில்லை என்பதை நிரூபிக்க நீறு பூத்த நெருப்புகளே, தயாராவீர்! தயாராவீர்!! 5-11-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com