Search This Blog

1.11.12

தீபாவளி தத்துவமும் இரகசியமும்!

தீபாவளி தத்துவமும் இரகசியமும்!

வளவன்
- சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே.

ராம் - சரி கேள்.

வளவன் - வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் சரிதான்?

ராம் - சரி.

வளவன் - இது இரண்டும் எப்படி கலவி புரியும்? எப்படி கருத்தரிக்கும்?

ராம் - பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது. கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யுமல்லவா?

வளவன் - என்னப்பா இராமானுஜம் பாத்தியா பாத்தியா என்று சாய்பு மாதிரி பாத்தியா கொடுக்கிறே. இது ஒரு பெரிய செக்சுவல் சையன்சு சங்கதி இதைக் கேட்டால் போக்கிரித்தனமான கேள்வி என்கிறாய். சரி! இதைப்பற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ராம் - அந்தப் பிள்ளைதான் நரகாசூரன்.

வளவன் - இந்தப் பெயர் அதற்கு யார் இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ராம் - யாரோ அன்னக்காவடிகள்! இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய்? எனக்கு அவசரம் நான் போகவேண்டும். என்னை விடு.

வளவன் - சரி போகலாம், சீக்கிரம் முடி அப்புறம்?

ராம் - அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான் அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

வளவன் - அட பாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத்தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

ராம் - இல்லேப்பா, இந்த நரகாசூரனின் பொல்லாத வேளை தேவர்கள்கிட்டே இவன் வாலாட்டினான். அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா?

வளவன் - அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்திசொல்லாமல் ஒரே அடியாகக் கொன்று விடுவதா?

ராம் - அது அவர் இஷ்டம் அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்தொழுகலான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார் ஆதலால் நாம், அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

வளவன் - சரி கொன்றார். அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ராம் - அதைக் கொண்டாட வேண் டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காக, அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.

வளவன் - தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ராம் - வான் தேவர்கள் வானத்தில் (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள், பூதேவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள்!

வளவன் - இந்த பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராம் - அட முட்டாள்! அது கூடவா தெரியாது. அதுதான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள் தானே அகராதியைப்பார்.

வளவன் - பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு.

ராம் - என்ன வகுப்பு? நாங்கள் தான்?

வளவன் - நீங்கள் என்றால், நீ அய்யங்கார் நீங்களா?

ராம் - நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சார், சாஸ்திரி சர்மா தீட்சதர் முதலியவர்கள்.

வளவன் - அப்படி என்றால் பார்ப்பனர்கள் யாவரும் பூதேவர் என்கிறாய்.

ராம் - ஆமா! ஆமா!! கல்லாட்டமா ஆமா!!!

வளவன் - சரி, தொலைந்து போகட்டும், நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், இராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களை எதற்கு ஆக பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டும்?

ராம் - இங்கேயே அசுரர் இராட்சதர் இல்லை என்கிறாய், இந்த கருப்புச்சட்டைக்காரர்கள் சு.மக்குகள், திராவிட கழகத்தார்கள் இவர்கள் எல்லாம் யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள். அவர்களைப் போல் வாழ வேண்டுமென்பவர்கள். வேத சாஸ்திர புராண இதிகாசங்களைப் பகுத்தறிவில் ஆராய்ச்சி செய்கிறவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராக்கதப் பதர்கள். இரக்கமே இல்லாத அரக்கர்கள் தெரிந்ததா? அவர்களுக்கு பாபம் உண்டாக்குவதற்கு ஆக தேவர்களுக்கு இடையூறு செய்தால் நாசமாய்ப் போய் விடுவாய் என்று அறிவுறுத்துவதற்கு ஆகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும் இதுதான் இரகசியம். மற்றபடி கதை எப்படி இருந்தால் என்ன?

வளவன் - அப்படியா? நீங்கள் 100-க்கு 3 பேர். நீங்கள் அல்லாதவர்கள் 100-க்கு 97 பேர் எப்படி எத்தனை நாளைக்கு இப்படி மிரட்ட முடியும்?

ராம் - அதைப் பற்றிக் கவலைப் படாதே! காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூறு பேர்களில் ஒரு பகுதி விபீஷணர்களாக அனுமார்களாக இருந்து பிராமண தொண்டாற்றவும், எதிரிகளை ஒழிக்கவும் பயன்படுத்துவதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம் படித்து விட்டு உத்தியோகத்துக்குக் காத்துகிடக்கும் கூட்டம், கோவில் மடம், தர்மஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம், பூசாரிக் கூட்டம், பிரபுக்கூட்டம், பாதிரிக் கூட்டம், மேற்பதவி வகிக்கும் உத்தியோகஸ்தர் கூட்டம், நாடகைப் பிழைப்புக் கூட்டம், கலைவித்துவான்கள் கூட்டம், அரசியல் பிழைப்புக்காரர் கூட்டம், தேசபக்தர்கள், தியாகிகள் கூட்டம் இப்படியாக இடறிவிழும்படி சர்வம் பிராமண அடிமையாம் என்பது போல் இருக்கும் போது 100-க்கு 3 100-க்கு97 - என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

வளவன் - ஓஹோ! அப்படியா? சரி சரி தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்து கொண்டேன், நன்றி வணக்கம்.

ராம் - சரி நமஸ்தே, ஜெய்ஹிந்த்!

-------------------------------------(சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தை பெரியார் எழுதியது. தீபாவளி பற்றி சித்திரபுத்திரன் எழுதியுள்ள ஆராய்ச்சி உரையாடலை தருகிறோம். பாமரர்களில் பல்லாயிரவர் உண்மை தெரிந்து வெறுத்துத் தள்ளியுள்ள தீபாவளியைப் படித்த கூட்டத்தார் கூடக் கொண்டாடுகிறார்களே! அதுதான் வெட்கக்கேடு! சைவர்கள் என்பவர்கள் கூடக் கொண்டாடுகிறார்களே! அது இன்னும் பெரிய வெட்கக்கேடு! எல்லோருமே இதைப் படித்துப்பார்க்கட்டும்! -ஆசிரியர் 'விடுதலை')

0 comments: