Search This Blog

21.11.12

டெசோவின் பயணம்


டெசோவின் அடுத்த கட்ட கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்று (19.11.2012) நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டெசோவைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் விமர்சித்தவர்கள்கூட இப்பொழுது அதன் செயல்பாட்டை நேர்மையான முறையில் உள்வாங்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

12.8.2012இல் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு - அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் -  மற்றும் அதன் விளக்கம் அடங்கிய மனுவினை அய்.நா. செயலாளரிடம் அளித்தது; ஜெனிவா மனித உரிமை ஆணையரிடமும் அளித்து விளக்கம் தெரிவித்தது; லண்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற (7.11.2012) மாநாட்டில் பங்கேற்றது - என்று தொடர்ச்சியாக, ஆற்றொழுக் காக டெசோ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆக்க ரீதியானவை -  ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் ஆகும்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அசாதாரண கொடுமைகளுக்குப் பிறகு - எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் என்பது முக்கியமாகக் கையில் எடுத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதே நேரத்தில்  ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரரான ராஜபக்சேமீது இனப் படுகொலை குற்றச்சாற்று என்பதிலும் கவனம் கொண்டு அந்தத் திசையிலும் காய்கள் நகர்த்தப்பட்டும் வருகின்றன.

இலங்கை அரசு, மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறது என்ற கருத்தாக்கம் மனித உரிமை ஆணையத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்பொழுது வெளிப்படையாகவே அய்.நா. தன் வாயைத் திறந்துள்ளது. அய்.நா. மன்றம் தன் கடமையைச் செய்யத் தவறி இருக்கிறது என்று அம்மன்றத்தின் பொதுச் செயலாளரே வெளிப் படையாக ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களைப்பற்றி குற்றவாளியான நாடே விசாரிப்பது என்னும் முடிவு - நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது போன்றதாகும்.

இலங்கை அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலைகள் குறித்து சுதந்திர மான விசாரணை நடத்திட பல நாடுகள் கொண்ட குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென அய்.நா. மன்றத்துக்கு லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு மிக மிகச் சரியானதாகும்.
இந்தக் கருத்தைத் தொடக்க முதலே நாம் கூறிக் கொண்டும் வந்திருக்கிறோம். லண்டன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைத் தொடர்ந்து நேற்று சென்னையில் கூடிய டெசோ கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் சிறப்பானது.

அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பு நாடுகளான 47 நாடுகளின் இந்தியாவிற்கான தூதுவர்களையும் டெசோ சார்பில் நேரில் சந்திப்பது என்பது  - இந்த வகையில் மேலே முன்னேறுவதற்கான படிக்கட்டு என்பதில் அய்யமில்லை.
இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு என்ற கருத்தாக்கம் உருவாக்கப்படுவதற்கு மேலும் மேலும் வலுவான அழுத்தத்தை நாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாக்கெடுப்பு -  ஒன்றும் புதிதான ஒன்றல்ல; இதற்கு முன் மாதிரிகளும் உண்டு.

ஒரு பக்கம் எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, இன்னொரு பக்கம் ஈழத் தமிழர் அழிவுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை என்கிற இரண்டு தண்டவாளத்தில் நிதானமாக அதே நேரத்தில் உறுதியாக டெசோ தன் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும் என்பதில் அய்யமில்லை.
வெறும் உணர்ச்சிகளை  ஒரு பக்கத்தில் ஒதுக்கி அதே நேரத்தில் சரியான உணர்வுடன் செயல்படும் பொழுதுதான் வெற்றி என்பது உறுதிப்படும். அந்த வகையில்தான் டெசோவின் செயல்பாடு இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
                               -----------------------------"விடுதலை” தலையங்கம் 20-11-2012

28 comments:

தமிழ் ஓவியா said...

டெசோவின் அடுத்த கட்ட நடவடிக்கை


மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பு நாடுகளான

47 நாடுகளின் இந்தியாவுக்கான தூதுவர்கள் சந்திக்கப்படுவர்

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஆதரவு கோரப்படும்!

டெசோ கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்


டெசோ அமைப்பின் கூட்டம் நேற்று (19.11.2012) அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்ற தி.மு.க., குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார், அசன் முகமது ஜின்னா ஆகியோர் உள்ளனர்.

சென்னை, நவ. 20 - மனித உரிமைப் பாது காப்பு ஆணையத்தின் உறுப்பு நாடுகளாக இருக்கக் கூடிய 47 நாடுகளின் - இந்தியாவுக் கான தூதுவர்களை டெசோவின் பிரதி நிதிகள் சந்தித்து, டெசோ மாநாட்டுத் தீர்மா னங்களுக்கு ஆதரவாக அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் குரல் கொடுக்கக் கேட்டுக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.

டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் நேற்று (19-11-2012) அண்ணா அறிவால யத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரும், அய்.நா.விற்குச் சென்று வந்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்றக் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, லண்டன் மாநாட்டில் கலந்து கொண்ட தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மற்றும் ரவிக்குமார், அசன் முகமது ஜின்னா ஆகியோரும் கலந்து கொண் டனர். இந்தக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு :-

தமிழ் ஓவியா said...

சென்னை மாநாடு

1) 12-8-2012 அன்று சென்னையில் நடை பெற்ற டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அடங்கிய தலைவர் கலைஞர் அவர்களின் மனுவைத் தி.மு. கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் 1-11-2012 அன்று அய்.நா. மன்றத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு யான் லியாசன் அவர்களிடமும், 6-11-2012 அன்று அய்.நா. மன்ற மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் மாண்புமிகு நவநீதம் பிள்ளை அவர்களி டமும் நேரில் அளித்துள்ளனர். மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற் கொள் வதாக உறுதியளித்துள்ள அய்.நா.அவையின் தலைமைப் பொறுப்பாளர்களுக்கு டெசோ அமைப்பு, தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தூதுவர்கள் சந்திப்பு 2) 12-8-2012 அன்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை அய்க்கிய நாடுகள் அவையில் தலைமைப் பொறுப்பாளர்களிடம் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பு நாடுகளான 47 நாடுகளின், இந்தியாவிற்கான தூதுவர்களையும், டெசோ சார்பில் நேரில் சந்தித்து, அந்நாடுகள் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஆதரவாக அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

3) 2009 மே திங்கள், முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு நடத்திய இனப் படுகொலையின் போது, ஈழ மக்களைப் பாதுகாக்கவும், போரைத் தடுத்து நிறுத் தவும் வேண்டிய அய்.நா. அதிகாரிகள் வெளியேறிய செய்தி தற்போது வெளியாகியுள்ள அய்.நா. உள் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

அய்.நா. அதிகாரிகளே வெளியேற வேண்டிய அளவுக்கு அவர்களை அச்சுறுத்திய சிங்கள அரசையும், அதன் அதிபர் ராஜபக்சேவையும் டெசோ வன்மையாகக் கண்டிக்கின்றது.

தேவை சுதந்திரமான விசாரணை

4) பிரிட்டானிய தமிழர் பேரவையும் தமிழர் களுக்கான இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து கடந்த 7-11-2012 அன்று லண் டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய மாநாட் டில், இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப் படுகொலைகள் குறித்து சுதந்திர மான விசாரணை நடத்திட பல நாடுகள் கொண்ட குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென அய்.நா. மன்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மான மொன்றை நிறைவேற்றியுள்ளது. மேலும் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை எதிரொலிக் கும் வகை யிலும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள பிரித் தானிய தமிழ்ப் பேரவை மற்றும் தமிழர்களுக் கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் குழுவிற்கும் டெசோ அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


வீரமணி முழக்கியுள்ள விவேக மணி!


சென்னை, நவ.20- 17.11.2012 நாளிட்ட விடு தலையில் 2 ஜி ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன? ஆ.இராசா குற்றவாளியா? நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும் என தமிழர் தலைவர் விடுத்த அறிக்கை குறித்து கலைஞர் இன்று முரசொலியில் எழுதியுள்ள கேள்வி பதில் வருமாறு:
கேள்வி:- ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீட்டினை ஏலத்தின் மூலமாக கொடுத் திருந்தால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத் திருக்கும் என்ற தணிக்கைக் குழுவின் அறிக்கை; தவறு என்று தற்போது நடைபெற்ற ஏலத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளதே?

கலைஞர்:- இதைப்பற்றி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. மனீஷ் திவாரி அவர்களே விளக்கமாகச் சொல்லி யிருக்கிறார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இரண்டாண்டு களுக்கு முன்பு தணிக்கைக்குழு அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந்த 1.76 லட்சம் கோடி எங்கே? தற்போது ஏலத்தில் கிடைத்த தொகை, சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் தான். எனவே தணிக்கை அதிகாரி தனது மதிப்பீடு குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இதுவாகும் என்று அவர் கூறியிருக்கிறார். இதை வைத்து இரண் டாண்டுகளாக அரசியல் நடத்திய பா.ஜனதா வும், இதர எதிர்க்கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமும் இதுவாகும் என்று திரு.மனீஷ் திவாரி சொல்லியிருக்கிறார்.

மத்திய இணை அமைச்சர் திரு. வி. நாராயண சாமி அவர்கள், 2ஜி அலைக் கற்றையை முன்பே ஏலத்தில் விட்டிருந்தால், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்குமென தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கை தவறானது என்று மத்திய அரசு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் ஏற்கெனவே கூறி வந்ததைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தற்போது இந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கே வருவாய் கிடைத்துள்ளதன் மூலம், தவறான அறிக்கை அளித்த தலைமைத் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் திரு.நாராயணசாமி தெரி வித்திருக்கிறார்.

எப்படியோ தணிக்கைத் துறை அறிக்கை யில் ஒருபெரும் தொகையைக் குறிப்பிட்டு, அதை ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப; அந்தத் தொகை இழப்பு என்பதற்குப் பதிலாக, அவ்வளவு தொகை யையும் ஏதோ கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டதைப்போல குற்றஞ்சாட்டி, அதை ஏடுகளும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து நாட்டையே அதிர்ச் சிக் கடலில் ஆளாக்கினார்கள். அவர்கள் எல்லாம் இதற்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?


தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் விடுதலையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்று ஊரெல்லாம் கூச்ச லிட்டவர்களே, ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன? ஆ. இராசா குற்றவாளியா? நடு நிலையாளர்கள் சிந்திக்கட்டும் என்று அருமையான தொரு அறிக்கையை வெளியிட் டுள்ளார். பலரை சில நாள் ஏமாற்றலாம்; சிலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாதல்லவா?

கேள்வி:- தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென 50 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக தமிழக முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை பற்றி தாங்கள் ஏற்கனவே எழுதியி ருந்தீர்கள். அ.தி.மு.க. வைச் சேர்ந்தவர்களை காவல் துறையிலே நுழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிதான் அது என்று பரவலாகப் பேசப் படுகிறதே?

கலைஞர்:- அதைத்தான் நான் முன்பே எழுதி யிருந்தேன். அங்கன்வாடிக்கும், சத்துண வுக்கும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பரிந்துரை களைத் தந்தார்கள் என்பதையும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதன் காரணமாக அந்தப் பணியா ளர்களைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அளவுக்குச் சிரமப்பட்டார்கள் என்பதையும், பரிந்துரை செய்தவர்கள் மீது அ.தி.மு.க. அரசு எந்தவிதமான நடவடிக்கை களையும் எடுக்காத தையும் தமிழ் நாட்டு மக்கள் நன்றாக அறிவார் கள். ஏடுகளிலேயே அந்தச் செய்திகள் ஏற்கெனவே விரிவாக வந்தன. அதே வழியில் சிறப்புக் காவல் இளைஞர் படை என்ற பெயரில் மேலும் கட்சிக் காரர்களை பணியிலே சேர்ப்பதற்கான முயற்சி யிலே அ.தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்புக் காவல் இளைஞர் படையினரை மாவட்டக் காவல்துறை கண் காணிப்பாளர்களும், சென்னை யில் போலீஸ் கமிஷனரும் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் 110வது விதியின் கீழ் இதற்கான அறிக்கையைப் படித்த போதே, சிறப்புக் காவல் இளைஞர் படையில் ஓராண்டு காலம் பணி நிறைவேற்றினால், காவல் துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளப் படுவார்கள் என்று சொல்லி யிருப்பதில் இருந்தே, காவல் துறையினரை முறைப்படித் தேர்ந்தெடுப் பதற்குப் பதிலாக தங்கள் கட்சியினரை முதலில் சிறப்புக் காவல் இளைஞர் படையிலே நுழைத்து, ஓராண்டிற்குப் பிறகு அவர்களைக் காவல் துறையிலே சேருவதற்கு வழிவகுத்து விட்டால், காவல் துறையிலே கட்சிக்காரர்களைச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு செய்யப்படும் இந்தக் காரியத்தை கட்சிப் பாகுபாடு பாராமல் அனைத்துக் கட்சியினரும் எதிர்க்க முன் வர வேண்டும். அதுபோலவே கூட்டுறவுத் துறை மூல மாகவும் கட்சியினரை உள்ளே நுழைப்பதற் கான முயற்சியிலே அ.திமு.க. அரசு ஈடுபட்டி ருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதைப் பற்றியும் நன்றாகக் கவனித்து, மக்கள் மத்தியில் அதனை தெளிவுபடுத்திட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


கேள்வி:- மத்திய தணிக்கைத் துறைத் தலைவர் பதவியில் ஒருவருக்குப் பதிலாக மூன்று பேரை நிய மிக்க வேண்டுமென்ற கருத்து சரியானதா?

கலைஞர்:- இதுபற்றி இரண்டு விதமான கருத் துகள் சொல்லப்படுகின்றன. இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு -148இன் கீழ் மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பு (ஊஹழு)ஒன்று வரையறுக்கப் பட்டு, அதற்கு ஒரு அலுவலரும் நியமிக்கப்படுவது இதுவரை இருந்து வரும் நடைமுறையாகும். இவ்வமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவினங்களை தணிக்கை செய்து தனது அறிக்கையை முறையே நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத் திற்கும் அனுப்பி வைப்பதும்; அவ்வறிக்கை களை பொது கணக்குக்குழு (PAC) ஆய்வு செய்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதும் நடைமுறையில் உள்ளது.

இதேபோன்று, இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு-324ன் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் ஒன்று வரையறுக்கப்பட்டு, அதற்கு ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரும் - இரண்டு தேர்தல் ஆணை யர்களும் நியமிக்கப்பட்டு வருவது நடைமுறையில் உள்ளது. சுமார் 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சுதந்திரமாகவும் - நேர் மையாகவும் தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தை கட்டமைக்கின்ற பணியில் இவ்வமைப்பு இயங்கி வருகிறது. தேர்தல் குறித்த எல்லா முடிவுகளையும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்கள் சேர்ந்தே விவாதித்து எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட அலுவலர்களைக் கொண்டு உருவாக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக வந்த தகவல்களை இந்தி யாவில் இருக்கின்ற பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் - நிலக்கரி ஒதுக்கீட்டிலும் அரசுக்கு முறையே 1.76 லட்சம் கோடி;

1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பு அளித்த அறிக்கையை மறைத் திட மத்திய அரசு இவ்வமைப்பின் செயல்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என்று காரணம் கூறி, இந்த விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இரண்டு கோணங்களில் எதிர்க்கட்சிகளின் விமர் சனம் ஏற்புடையதா? என்பதை நடுநிலை யாளர்கள் சிந்திக்க வேண்டுகிறோம். 1) பல்வேறு மதம், இனம், மொழி, மாநிலப் பிரிவுகள் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் வெளிப்படையாகவும் - நேர்மை யாகவும் தேர்தல் நடத்தும் ஒரு அரசியல் சட்ட அமைப்பு மூவர் கொண்ட அமைப்பாக இயங்கும் போது, அதே போன்று ஒரு வருக்கும் மேற்பட்ட அரசியல் சட்ட அமைப்பாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பும் இருக்கலாம் என்று கருத்து தெரிவிப்பது எந்த வகையில் தவறாகும்?

2) இதே மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பு 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டில் 3ஜியைப்போல ஏல முறையைத்தான் பின்பற்றி இருக்க வேண்டுமென்றும், அந்த அடிப்படையில் 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்றும் செய்த அறிக்கை முற்றிலும் தவறு என்று இப்போது நடைபெறுகின்ற 2ஜி ஏலம் நிரூபித்துள்ளது. இத்தகைய முரண் பாடான முடிவுகளை எதிர் காலத்தில் தவிர்த்திட, இந்த அமைப்பை ஒரு வருக்கும் மேற்பட்ட அமைப்பாக மாற்றுவது என்ன தவறு?

இந்தப் பிரச்சினை குறித்து அண்மையில் நடை முறையில் ஏற்பட்ட சிக்கலை மனதிலே வைத்து மத்திய அரசு இந்தியாவில் உள்ள மூத்த அறிஞர்கள் கருத்துக்களை மேலும் விரிவாக அறிந்து தக்கதோர் முடிவினை எடுக்க வேண்டும் என்பது நம் கருத்தாகும்.

தமிழ் ஓவியா said...


பிளேக் நோய் தீர்த்த ஸ்லோகமாம்!


சிருங்கேரிகள் பற்றி புரூடாக்கள்!

- ஊசி மிளகாய்

நம் நாட்டில் ஒரு சொலவடை உண்டு; இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை. அப்படியானால் கந்தப் புளுகு தான் புளுகுகளின் மெகா தொகுப்பு போலும்!
இவ்வாரக் கல்கி ஏட்டில் (25.11.2012) சிருங்கேரி சங்கராச்சாரியார்பற்றி - சிருங்கேரி மடம் - ஒரு ஆய்வு என்ற தலைப்பில் வெளியான ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு நூல் அறிமுகம் என்ற பகுதியில் மதிப்புரை எழுதப்பட்டுள்ளது.

அதன் தலைப்பு என்ன தெரியுமா? ஸ்லோகத்தால் ப்ளேக்கை விரட்டினார் - இது சிருங்கேரி மடத்தின் சாதனையாம்! நூல்களின் தனி ரகப்புளுகுகள் அவர்களால் ஏமாற்றப்படும் பக்த கோடிகளும், பக்த கேடிகளும் அன்றாடம் பலியாவதால் உச்ச வரம்பின்றி புளுகி, கோணிப்புளுகன் கொயபெல்ஸையும் கூடத் தோற்கடித்து விடுகின்றனர்!

... பல ஆண்டுகளுக்கு முன்னால் பிளேக் என்னும் ஆட்கொல்லி நோய் பரவியபோது ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகளின்

ஏதாவந்தம் ஸமயம் ஸ்வாபத் பயோசபி
ரக்ஷணம் க்ருத்வா!... என்று தொடங்கும்

தமிழ் ஓவியா said...

துர்காஸ்தவம் ஸ்லோகத்தை மனமுருகிப்பாடி, நோய் பரவாமல் காத்தார் என்று எழுதுகிறார் இந்த ஆய்வாளர். நல்ல நூல் என்கிறார் மதிப்புரையாளர்.

ஸ்லோகங்களினால் - அதுவும் சிருங்கேரி சங்கராச்சாரியார் உச்சரித்த சில மந்த்ர ஸ்லோகங்களில் இப்படி பிளேக் போன்ற கொடிய நோய்களையே சொஸ்தப்படுத்தி விட்டார் என்றால் இதை விட நமக்கு வேறு மருத்துவமனையோ, டாக்டர்களோ, மருந்துக் கடைகளோ தேவையா? தேவையே யில்லையே!
பாழும் புற்று நோய் பல பேர்களைக் கொல்லும் நோயாகிறதே.

இருதயம் - மாரடைப்பு, சர்க்கரை நோய் - இப்படி பலப்பல நோய்களால் மனித குலம் மாள்கிறதே அதற்கு சிருங்கேரியார் ஸ்லோகம் போதுமே!

பின் ஏன் அனாவசியமாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கி பொருள்களை கோடிக்கணக்கில் செலவழிக்க வேண் டும்? அவரையே - சிருங்கேரி சங்கராச் சாரியையே தேசியமயமாக்கி ஒரு அவசரச் சட்டத்தை உடனே மத்திய அரசு போட்டு, எந்த நோய்க்கு எந்த ஸ்லோகம் என்று அவாளையே விட்டு சொஸ்தப் படுத்திடக் கேட்டுக் கொள்ளலாமே!

அந்தக் காலத்தில் ஈரோட்டில் பிளேக் நோயால் பல நூறு மக்கள் செத்தபோது, ஈரோடு நகரத்தில், நகரத் தந்தை நிலையில் இருந்து, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று அருகில் இருந்து பிணங்களை அப்புறப்படுத்தி, சிகிச்சை சரியாக நடைபெற நேரிடையாக களத்தில் நின்று பாடுபட்டு வரலாறு படைத்தார் தந்தை பெரியார் அவர்கள்.

அதையெல்லாம் உணர்ந்துதான் சில ஆண்டுகள் கழித்து, சிருங்கேரிபீடம் பெரியாருக்கு ஸ்ரீமுகம் எழுதி, தாங்கள் பாரியாள் (நாகம்மையார்) சகிதமாக சிருங்கேரி மடத்திற்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார் போலும்!

இந்த ஸ்லோகத்தை அவர் ஏன் பிளேக் வந்த பகுதிக்குச் சென்று அப்போது ஓதிடவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். (இதெல்லாம் நாஸ்தீகாளின் விதண்டாவாதம் என்கிறீர்களா?)

இப்போது டெங்கு காய்ச்சலால் பல பேர் அவதிப்படுகின்ற நிலையும், இறக்கும் கொடுமையும் உள்ளதே, சிருங்கேரி மடத் தலைவர் இந்த மாதிரி டெங்கு காய்ச்சலுக்கும் ஒரு ஸ்லோகத்தை ஓதி - மந்த்ரம் ஜெபித்து, குணமாக்கப்படாதோ! பகவத் கிருபையின் புண்யம் பரலோகம் வரை பரவாதோ!

முன்பு, திராவிடர் இயக்கத்திலிருந்து திடீர் பக்தர் ஆகிய ஒரு முன்னாள் அமைச்சர், காஞ்சிப் பெரியவாளை காஞ்சி மடத்தில் சந்தித்தபோது, மழை பெய்ய வில்லையே என்று பெரியவாளிடம் கேட்டாராம்; அவாள் அதெல்லாம் பெய்யும் என்று அவாள் திருவாய் மலர்ந்தருளினாராம். இவர் காஞ்சியி லிருந்து சென்னைக்கு காரில் திரும்பும் போது, ஸ்ரீபெரும்புதூர் வரும் போதே மழை கொட்டியதாம்! இந்த திடீர் 777 பக்தர் கோடிகள் நெஞ்சும் நெக்குருகி பெரியவாள் வாக்கு பலித்ததோ என்று மகிழ்ந்தனராம்!

இப்படி ஒரு கப்சா - புரூடா - சில வருஷத்துக்குமுன்!

இப்போது மேட்டூர் தண்ணீர் வராத தால் தஞ்சை - காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது; விவசாயிகள் கவலைப்படு கின்றனர்!

ஓடி தலைக்காவிரிக்கே சென்று தங்கிய வரலாறு படைத்தவாள்தான் இப்போது பெரியவாள்; இவாள் மந்த்ரம் ஜெபித்து மழையை வரவழைக்க முடியாதோ! நிச்சயம் முடியும் என்கிறார் பக்த கேடிகள் - ஆனால் அவாளுக்கு நேரமில்லை - பெயில் - கோர்ட் - வழக்கு இத்தியாதி இப்படி என்பதால்!

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கடா அட போக்கத்தவர்களே!

- என்ற உடுமலையார் பாட்டு அதோ கேட்கிறது.

தமிழ் ஓவியா said...


கங்காதேவி பலி கொண்டாளோ!


பாட்னா, நவ.20-பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த சாத்பூஜா விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாயினர். தீபாவளி பண்டிகை கொண்டாடிய ஆறு நாட்களுக்கு பின், சூரிய கடவுளை வணங்கும் சாத்பூஜா விழா வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னா அருகேயுள்ள அதாலத் கன்ச் என்ற இடத்தில் உள்ள கங்கை ஆற்றின் கரையில் நேற்று ஏராளமான மக்கள் கூடி சாத்பூஜா வழிபாடு நடத்தினர். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மூங்கில் பாலத்திலும் ஏராளமான மக்கள் கடந்து சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பாலம் திடீரென உடைந்தது. இதனால் மக்கள் பீதியில் முண்டியடித்துக் கொண்டு பாலத்தை கடக்க முயன்றனர். இதனால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 20 பேர் பலியாயினர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...


முன்னேற்றம்


தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை; பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே! (விடுதலை, 21.6.1

தமிழ் ஓவியா said...


டெசோ மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்படும்


ஈழத் தமிழர்களின் நலனுக்காக இந்திய அரசை வலியுறுத்துவோம்
செய்தியாளர்களிடம் டெசோ தலைவர் கலைஞர்


சென்னை, நவ. 20- டெசோ மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் வரையில் அதற்கு உறுதுணையாக இந்திய அரசு இருக்க வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்துவோம் என்றார் டெசோ தலைவர் கலைஞர்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ அமைப் பின் கூட்டம் நேற்று (19.11.2012) மாலை நடைபெற்றது. கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட இனப் படுகொலையைத் தடுக்க அய்.நா. அவையே தவறி விட்டது என்பதைப் போல உள் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் அய்.நா. மன்றத்தில் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களைக் கொடுத்ததால் என்ன பலன் கிடைக்கும்? கலைஞர் :- நிச்சயமாக பலன் கிடைக்கும். ஏனென்றால் இலங்கையிலே ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தவும், எதிர் காலத்தை ஒளிமயமாக ஆக்கவும் தேவையான தீர்மானங்களை எல்லாம் டெசோ மாநாட்டிலே நிறைவேற்றி அவற்றை மனித உரிமை ஆணையத் திலும், அதைப் போலவே அய்.நா. மன்றத்திலும் வழங்கியிருக்கிறோம். எனவே அவைகளை எல்லாம் உரிய நேரத்தில் அவர்கள் கவனிப்பார்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இன்று நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தில் எங்களுடைய தொடர் நடவடிக்கைகள் என்ன என்று சொல்லி யிருக்கிறோம். அந்தத் தீர்மானத்தின் அடிப்படை யில் எங்களுடைய தொடர் நடவடிக்கைகள் இந்தக் கூட்டத்தையொட்டி தொடங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர் :- இலங்கைத் தமிழர் பிரச்சி னையை தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் அரசியல் ஆக்குவதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சொல்லி யிருக்கிறாரே, அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கலைஞர் :- மத்திய இணை அமைச்சர் நாரா யணசாமி என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அப்படிச் சொல்லியிருந்தால், அல்லது அவ்வாறு வேறு யாராவது சொன்னால், அது அபத்தமானது.

செய்தியாளர் :- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இலங்கையிலே போய் என்ன நடக்கிறது என்று பார்த்து வந்திருப் பதாகவும், மற்ற யாரும் போகவில்லை என்றும், எஸ்.எம். கிருஷ்ணா போய்ப் பார்த்து விட்டு வந்திருக்கிறார், இவர்கள் யாராவது பார்த்து விட்டு வந்திருக்கிறார்களா என்று நாராயணசாமி கேட்டிருக்கிறாரே?

கலைஞர் :- எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் மத்திய அமைச்சர் என்ற தகுதியில் இலங்கைக் குச் சென்று பார்த்தார். கட்சிக்காரராக யாரும் சென்று பார்க்கவில்லை.

செய்தியாளர் :- தி.மு.க. பொது வாக் கெடுப்பு எடுக்க வேண்டுமென்றும், மத்திய அரசு அதில் உறுதியாக இருக்க வேண்டு மென்றும் சொல்லி யிருக்கிறீர்கள். ஆனால் பொது வாக்கெடுப்பு என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை இல்லை என்று சொல்கிறார்களே?

தமிழ் ஓவியா said...

கலைஞர்:- மத்திய அரசு எங்களுக்கு ஆதரவாக ஒத்துழைக்க வேண்டுமென்று, மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

செய்தியாளர் :- உங்களுடைய இன்றைய தீர்மானத்தில் பல நாடுகளைக் கொண்ட குழுவினை அமைக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். இதில் இந்தியாவை யும் நீங்கள் வலியுறுத்துவீர்களா?

கலைஞர் :- ஆமாம், இந்தியாவை வலியுறுத் தியதால்தான் அவர்கள் நமக்கு சார்பாக வாக்களித் தார்கள். ஏற்கனவே இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தரவேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகமும், அதையொத்த வேறு சில கட்சிகளும் வற்புறுத்திய காரணத்தால் தான், இந்தியா அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

செய்தியாளர் :- அன்னிய நேரடி முத லீட்டுப் பிரச்சினையில் தி.மு.க. வின் நிலைப் பாடு என்ன?

கலைஞர் :- அது என்ன இலங்கையிலா நடக் கிறது? (சிரிப்பு) அன்னிய நேரடி முதலீட்டிற்கு நாங்கள் ஆதரவாக இல்லை. இலங்கைப் பிரச்சி னைக்காக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம்

தமிழ் ஓவியா said...

செய்தியாளர் :- இலங்கைப் பிரச்சி னைக்காக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவீர்களா?

டி.ஆர்.பாலு:- தீர்மானம் கொடுத்திருக் கிறோம்.

செய்தியாளர் :- 2 ஜி அலைக்கற்றை ஏலத் தொகை மிகவும் குறைவான விலைக்குத்தான் போயிருக்கிறது. ஆனால் ராஜா மீதும், கனிமொழி மீதும் குற்றம் சுமத்தியதற்கு விரோதமாக இது உள்ளதே?

கலைஞர்:- தமிழ்நாட்டில் சில பத்திரி கைகளில் ஒரு பக்கம் நிரம்பி, அடுத்த பக்கத்திற் கும் சென்று 0 0 0 0 0 0 என்று வெளியிட் டிருந்தார்களே? ஞாபகம் இருக்கிறதா? இப்போது என்ன ஆயிற்று?

செய்தியாளர் :- டெசோ மாநாடுகள் தொடருமா?

கலைஞர் :- டெசோ மாநாடுகள் தேவைப் பட்டால் தொடர்ந்து ஒன்று, இரண்டு, மூன்று என்று நடத்தப்படும். நாங்கள் வலியுறுத்தி, வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் வரையில் அதற்காக பக்க பலமாக இருக்க வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத் துவோம்.

செய்தியாளர் :- அ.தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றால் சட்டம் ஒழுங்கு சீரடையும் என்று சொன்னார்கள். ஆனால் பரமக்குடி துப்பாக்கி சூடு, மருது பாண்டியர் குரு பூஜையில் பிரச்சினை, தேவர் குரு பூஜையில் பிரச்சினை, தர்மபுரியில் சாதிக் கலவரம் என்று தமிழ்நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கு மீறல் நடக்கிறதே, இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

கலைஞர் :- இவை எல்லாம் பத்திரிகைகளில் - ஒரு பக்க விளம்பரங்களில் - சால்வ் செய்யப்படு கிறது.

செய்தியாளர் :- அலைக்கற்றையை ஏலத்தில் விட்ட போது சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் அதை இமாலய ஊழல் என்றெல் லாம் சொன்னார்களே, இதைப் பற்றி மக்களிடம் சென்று நீங்கள் விளக்குவீர்களா?

கலைஞர் :- இந்தக் கேள்வி கேட்கப்பட வேண் டிய இடம் வேறு. இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

இச்செய்தியாளர்கள் சந்திப்பின்போது திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளா ளர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தொல்.திருமாவளவன் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங் கோவன் மற்றும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ் ஓவியா said...

அய்.நா.வில் டெசோ!


சென்னையில் நடைபெற்ற டெசோ ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானங்களை அய்.நா. மாமன்றத்தின் செயல்பாட்டிற்காக, அதன் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் கடந்த ஒன்றாம் தேதி (நவம்பர் 2012) அய்.நா. தலைமையகத்துக்கு (நியூயார்க் மேன் ஹாட்டினில்) மானமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்களும் சென்று சுமார் அரை மணிநேரம் விளக்கமாக எடுத்துரைத்து, முள்வேலிக்குள்ளும், இராணுவ வளையத்துக் குள்ளும் அவதியுற்றுக் கொண்டுள்ள ஈழத் தமிழர் வாழ்வின் பல வகை அவலங்களைப் போக்க, விடிவு காண வற்புறுத்தித் திரும்பியுள்ளனர்!

அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் அவர்கள் மிகுந்த பரிவுடன் கேட்டு, அதனை பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அவர்களிடம் உடனடியாகக் கொண்டு சென்று, பரிகாரம் எப்படி, எந்த அளவுக்குத் தேடிட முடியுமோ, அதைச் செய்வதாக, ஆக்க ரீதியாக (றிஷீவீஸ்மீ க்ஷீமீஜீஷீஸீமீ) செய்துள்ளார்கள்.

அதன்பிறகு அதே தீர்மானங்களை தற்போது சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில், சிங்கள இராஜபக்சே அரசுமீது பற்பல நாடுகளும் சரமாரி போர்க் குற்றங்களை, அத்துமீறல்களையெல்லாம் பற்றிப் பேசியுள்ளனர்!

இலங்கை அரசின் சார்பானவர்கள் அதைத் தக்க வகையில் எதிர்கொள்ள இயலாத நிலையும், மழுப்பலான வகையிலும் - மறுக்க தங்களுக்கு இடம் உள்ளது என்று பொத்தாம் பொதுவிலும்தான் பேசியுள்ளார்கள்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் இப்போதுதான் தக்க வகையில் சர்வதேச நாடுகளின் பார்வையை ஈர்த்துப் பரிகாரம் தேடிடும் ஈர நெஞ்சக் குரலொலி கேட்கத் தொடங்கியுள்ளது!

இதற்கு முன்னர் இலங்கை அரசின் தவறான பிரச்சாரத்தை நம்பி, இது ஒரு சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை - மனித உரிமைப் பிரச்சினை என்று பார்க்காமல், ஏதோ தீவிரவாதம், பயங்கரவாதிகளை எதிர்த்து அந்நாட்டு அரசுப் போராடுவதாகவே தவறாக நினைத்திருந்தார்கள்.

இப்போதுதான் அந்தப் போலிப் பொய்யுரை பனிமூட்டம் விலகத் தொடங்கியுள்ளது!

2008 இல் தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற சாக்கில் எப்படி ஒரு இனப் படுகொலை பட்டாங்கமாய் நடந்தது என்பது அய்.நா. போர்க்குற்றம் பற்றிய குழு அறிக்கை மூலம் தொடங்கி, அது மெல்ல மெல்ல ஆனால், உறுதியாக விரிவாகி, பன்னாடுகளும் விளங்கிக் கொள்ளும் வெளிச்சமாகி வருகிறது.

அதனை மேலும் வளர்த்து, மனித உரிமையோடு, வாழ்வுரிமையை அம்மக்களுக்குப் பெற்றுத் தர, டெசோ உருவாக்கப்பட்டு மாநாடும் நடத்தப்பட்டு சிறப்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. காழ்ப்புணர் வாளர்களின் காமாலைக் கண்களுக்கு இது சரியாகத் தெரியாது; அதுபற்றி கவலைப் படாமல் முடிந்ததை முயற்சியில் எதுவும் பாக்கியில்லை என்று செய்வது நம் கடமை என்ற உணர்வோடு நடந்த அம்மாநாட்டின் தீர்மானங் களை நேற்று ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தின் கமிஷனர் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களிடம் அளித்துள்ளனர் -

நியூயார்க் அய்.நா. துணைப் பொதுச்செயலாளரது சந்திப்புக்குப் பின்!

அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவரான அம்மையாரிடம், அரசியல் தீர்வுக்கு ஒரே தீர்வு மற்ற சில நாடுகளில் அய்.நா. தலையிட்டுச் செய்ததைப்போல, வாக்கெடுப்புதான் சரியான ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

அவர்களும் அதனைப் புரிந்து, அனுதாபத்தோடு கேட்டு, ஆவன செய்வதாக வாக்களித்துள்ளார்கள் என்பது பன்னாட்டளவில் நமது உள்ளங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு அவசர முதலுதவி மருத்துவம் செய்ததுபோல உள்ளது!

ஜெனீவாவிலிருந்து சகோதரர்கள் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும் தொலைபேசியில் முதலில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் விளக்கி விட்டு, நம்மிடம் தொடர்பு கொண்டு விளக்கமாகச் சொன்னார்கள். அடுத்து இலண்டன் சென்று இப்பிரச்சினை உரிய முறையில், பிரித்தானிய தமிழர் பேரவையில் கலந்து, உரிய பிரிட்டிஷ் எம்.பி.,க்க ளிடம் எடுத்துச் சொல்லவிருப்பதாகக் கூறினார்கள்.

நாம் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.

இலண்டன் மாநகரில் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் நடத்தப்பட்ட உலகத் தமிழர் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டிலும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க. முன்னணியினரும் பங்கேற்றதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற தலைசிறந்த ஆக்கபூர்வக் கருத்தினை அம்மாநாட்டில் எடுத்து வைத்து முழங்கிய மு.க. ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டுக்காகப் பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம்.

போற்றுபவர், தூற்றுபவர்பற்றிக் கவலைப் படாமல் நம் கடன் பணி செய்து முடிப்பதே என்று டெசோ தனது பயணத்தை நடத்திடுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...



பக்தியின் விளைவு இதுதான்.

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் 6 மாத கைக் குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்கிய பெண் பரிதாபமாக தவறி விழுந்து தீக்காயமடைந்தார். அவர்களைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினர் விரைகின்றனர்.

நெருப்புக் கங்குகள் மீது ஓடுவது மனித உடலின் ஆற்றலுக்கு உட்பட்டதுதானே தவிர, அது ஒன்றும் கடவுள் அருள் அல்ல என்பதை பல ஆண்டுகளாக பகுத்தறிவாளர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

அண்மைக்காலமாக கார்ப்பொரேட் நிறுவனங்கள்கூட மனத் தின்மையை உறுதிப்படுத்துவதற்காக தமது ஊழியர்களுக்கு நெருப்பில் இறங்கும் பயிற்சியை அளிக்கின்றன. ஆனால், இந்த அறிவியல் விளக்கச் செய்திகளை அரசு சார்ந்த செய்தி ஊடகங்களும், தனியார் செய்தி ஊடகங்களும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில்லை.

மாறாக இது போன்ற மூடநம்பிக்கை விழாக்களை பெருமையாக பத்திரிகைகள் வெளியிடு வதும், தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டுவதும் தொடர்கின்றன.

இதனால் மக்களின் பகுத்தறிவு பாழடிக்கப்பட்டு விபரீத விபத்துகள் நிகழ்ந்து உயிருக்கே ஆபத்தான நிலைகளும் அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகின்றன.

சினிமா, அரசியல் தொடர்பாக நிகழும் சம்பவங் களை ஒட்டி சம்பந்தப்பட்டவர்களைப் பேட்டிகண்டு வெளிவரும் செய்திகள் போல, மூடநம்பிக்கையால் நிகழும் கேடுகளை விளக்கி சம்பந்தப்பட்ட மருத்துவரிடமோ, நிபுணர்களிடமோ, பகுத்தறிவாளர்களிடமோ ஏன் ஊடகங்கள் உண்மை நிலை அறிந்து செய்தி வெளியிடுவதில்லை? இது மூடநம்பிக்கைக்கு துணைபோகும் செயல் அல்லவா?

தமிழ் ஓவியா said...




வேலைவாய்ப்பில் மட்டுமின்றி, பதவி உயர்விலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று 1923 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் நீதிக்கட்சி அரசு ஆணையிட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

ஜாதி காக்கும் நீக்கும் திருமணங்கள்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் உணர்த்திய உண்மையை உணராத தமிழன், ஆரிய வேத மதத்தில் வீழ்ந்ததால் தமக்குள்ளே பிளவுபட்டுக் கிடக்கும் நிலை இன்னும் நீடிக்கிறது.

தென் மாவட்டங்களில் இரு சமூகங்களுக் கிடையே நடந்த மோதலால் கடந்த ஆண்டு 7 உயிர்களும் இந்த ஆண்டு 4 உயிர்களும் இழக்கப்பட் டன.

கடந்த சில நாட்களுக்கு முன் வட மாவட்ட மான தருமபுரி யில் நத்தம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வீடுகள் கொளுத்தப்பட்டு, 35 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

வளர்ந்த நகரங்களில் காதல் திருமணங்க ளால் ஜாதி மறுத்து தமிழர்கள் ஒன்றாகி வரும் சூழலில் கிராமங்களில் இன்னும் ஜாதி வேறுபாடு களை முன்னிறுத்தி தமிழர்கள் தமக்குள் உயிர்ப்பலி வாங்கும் அளவுக்கு ஜாதி வெறி தலைவிரித் தாடுகிறது.

வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் தமக்குள் மனம் ஒப்பி திருமணம் செய்வதை சங்ககாலத் தமிழர் களே அனுமதித்துள்ளனர்.

நாகரிக காலமும் அறிவி யல் மனப்பான்மையோடு இதனை அங்கீகரித்து ஜாதி, மத, இன, நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து மனித இனம் ஒன்றுபட்டுவரும் காலத்தில், இன்னும் ஜாதிப் பழைமை பேசும் இழி நிலையை அகற்ற வேண்டிய சூழலில்,நவீன வசதிகளைக் கொண்ட திருமண மையங்கள் எப்படி இயங்குகின்றன என்பது குறித்தும் இனி திருமண மையங்கள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் இந்தஇரு கட்டுரைகள் ஆய்கின்றன.

திருமண இணையதளங்களில் ஜாதி

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மக்கள் பரவல் காரணமாக தங்கள் ஜாதிக்குள் வரன் பார்க்கும் பழக்கத்தினால் திருமண தகவல் மையங்கள் தோன் றின, முதலில் உயர்ஜாதிகளுக்கான திருமண தகவல் மையங்கள்தான் தோன்றின, இட ஒதுக்கீட்டு பிரச் சினை காரணமாக பிற மாநிலங்கள் நகரங்கள் என தனியார் நிறுவனங்களில் பணியாற்ற உயர்ஜாதியினர் சென்றுவிட அவர்களுக்கான ஜாதியில் பெண்/ ஆண்களுக்கான தகவல் சொல்ல திருமண தகவல் மையங்கள் தோன்றியன, திருமண தகவல் மையங்கள் தோன்றியது 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான்.

திருமண தகவல் மையங்களின் ஆரம்ப நோக்கமே ஒரே மதத்தில் இருந்து ஒரே ஜாதியில் இருந்து ஒரே பிரிவில் இருந்து என்றுதான் இருந்தது, முதலில் பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட திருமண தகவல் மையங்கள் வருவாய் பெருக்கத் திற்காக அவை அனைத்து ஜாதியினருக்கும் என புதிய உருவெடுத்தது, இந்த நிலையில் 1990 களுக்கு பிறகு தொழில் நுட்பவசதிகள் பெருகிய உடன் அயல்நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக இணைய தளங்கள் உருவாக்கப்பட்டன, 1996ம் ஆண்டு மும்பையில் உருவாக்கப்பட்ட shaadi.com என்ற இணையதளம் தற்போது உருவாகியுள்ள இணையதளங்களுக்கு எல்லாம் முன்னோடி. 1990களின் இடையிலான காலகட்டங்களில் முக்கியமாக அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்காக துவங்கியது, ஆரம்ப கட்டங்களில் இந்த இணையதளத்தில் ஜாதிகளுக்கு என்று பிரிவுகள் இல்லாமல் பொதுவாக இந்தியன் இந்து, தமிழ் இந்து, குசராத்தி இந்து என்று இருந்து வந்தது, ஏனெனில் இவற்றை பயன்படுத்துபவர்கள் பொரும்பாலும் உயர் ஜாதியினராக இருந்தால் இவர்களுக்கு ஜாதிப்பிரச்சனை ஏற்படவில்லை, இதற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து புற்றீசல் போல் பல இணையதளங்கள் உருவாகின, முதல் 10 இடங்களில் உள்ள இணையதளங்கள்.

1. shaadi.com

2.jeevansathi.com

3.bharatmatrimony.com

4.indianmatrimony.com

5.lifepartenarindia.com

6.vivahbhandan.com

7.matrimonialsindia.com

8.shublagan.com

9.merasathi.com

10.hamarasathi.com

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில சுயம்வர, கேஎம்மெட்ரொமோ னியல், தமிழ்மெட்ரமொனியல், போன்ற திருமணதகவல் மையங்கள் உள்ளன. இந்த திருமண தகவல் மையங்களில் பதிவிடும்போதே, ஜாதி, கோத்திரம், பிரிவு உட்பிரிவு, உப பிரிவு என பல பிரிவுகள் உள்ளது,

மக்களின் விருப்பம்

திருமண தகவல் மையங்கள் ஜாதியை மையமாக வைத்துதான் ஆரம்பிக்கப்பட்டன, தங்கள் பகுதியில் தங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லாத சூழ்நிலை யில் இந்த தகவல் மையங்களை நாடுவார்கள், இந்த தகவல் மையங்கள் பெற்றோர் களிடம் இருந்த தகவல்களை வாங்கும் போதே ஜாதி குறித்த விவரங்கள், அவர்களின் ஜாதியில் உட்பிரிவுகள் போன்றவற்றை கேட்டுபெற்றுக் கொள்வார்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் தேடலில் வரும்வரனை பற்றி அவர்கள் தகவல் கூறி ஜாதி திருமணத்தை நடத்தி வைப்பார்கள், இணையதளங்கள் தோன்றிய பிறகு சாட்டிலைட் டீவிக்களில் ஒரு புதிய ஜாதி திருமண நிகழ்ச்சிகள் தோன்றியது, தமிழகத்தில் தான் இதற்கு முதற்புள்ளி வைக்கப்பட்டது,

தமிழ் ஓவியா said...

கல்யாணமாலை என்னும் நிகழ்ச்சியின் மூலம் இந்த வீட்டிற்குள்ளேயே இந்த ஜாதி இந்த ஜாதிக்குள் இந்த பிரிவில் இருந்துதான் வேண்டும் என்று கேட்கும் அவலம் ஏற்பட்டது, நிறுவனத்தாரும் அது வரன்கேட்டு வருபவர்களின் விருப்பம் என்று கூறி தப்பித்தாலும் மறைமுக மாகவே அவர்கள் இதை ஆதரிக்கின்றனர், தங்களது ஜாதிப்பெயர்களும் அங்கு காட்டப் படும் போது வரன் தேடுவோர் தங்களுக்கான ஜாதியை கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர், இது ஒரு மறைமுக ஊக்கப்படுத்தலே ஆகும்

ஜாதிவேண்டாம் பிரிவு வேண்டாம்

இணையதளங்களில் உள்ள பிரிவில் ஜாதி வேண்டாம் என்று கூறுபவர்களை பொதுவாக பார்த்தால் தங்களுடைய ஜாதி பிரிவில் எது வேண்டுமானாலும்? என்று தான் கூறுவார்கள், ஜாதி வேண்டாம் என்றவார்த்தையே இங்கு நகைச்சுவையாகி விடுகிறது, எடுத்துக்காட்டிற்கு பிராமணர்களிடம் பல பிரிவுகள் உள்ளன. இங்கு பிராமணர்களின் எந்த பிரிவும் எங்களுக்கு ஒத்துவரும் என்றுதான் இணையதளங்களில் பெரும்பான்மையான் மக்கள் பதிவு செய்கின்றனர்.

ஆண்\பெண் வரன்கள்

இணையதளங்களில் பதிவு செய்பவர்களில் 60% மேற்பட்ட ஆண்கள் நேரடியாகவே தங்கள் விவரங் களை பதிவு செய்கின்றனர், இதர உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆண்களும் சரி உறவினர்களும் பெற்றோர்களும் தங்களுக்கு ஏற்ற வரன் பார்த்து பதிவிடும் போது ஜாதி குறிப்பிடுகின்றனர்.

இளைஞர்களில் மிகவும் சொற்பமாகவே எந்த ஜாதிமதமும் தேவையில்லை என்ற பிரிவில் பதிவு செய்கிறனர், ஆனால் இந்து இளைஞர்களில் 99% பேர் தங்கள் ஜாதியை பதிவு செய்து விடுகின்றனர், அப்படி செய்யும் போது அவர்கள் உயர்ஜாதியாக இருந்தால் உயர்ஜாதி வரன்கள், அதிகம் அவர்களை நாடுகிறார்கள், தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத் தப்பட்ட ஜாதியாக இருந்தால் அது அவர்களுக்கு அவர்களை சார்ந்த வரன்கள் தான் அதிகம் தொடர்புகொள்கிறார்கள், பெண்களில் 25% பெண்கள் தாங்களாகவே தங்கள் தகவலை பதிவு செய்து கொள்கின்றனர், இங்கு 3 அல்லது 4% பெண்கள் மட்டுமே ஜாதியில்லா என்ற பிரிவில் பதிவு செய்கின்றனர், இவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் ஜாதிபெயரை கட்டாயம் பயன்படுத்துகின்றானர், சாதிக்கென்றே communitymatrimonial.com தளம் உருவாகி தொலைக்காட்சிகளில் விளம்பரம் வந்தது, அதில் ஒரு பொது இடத்தில் தங்கள் மகள் ஆடவனுடன் பேசும் போது அந்த பெண்ணின் அம்மா அந்த பையன் எந்த ஜாதியோ நம்ம குடும்ப மானம் போய்டுமே என்கிறாள், உடனே பின்குரலாக கவலைபடாதீர்கள் உங்களுக்காக communitymatrimonial.com இருக்கிறதே என்று குரல் ஒலிக்கும் உடனே பெண்ணின் பெற்றோர் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்

தாழ்த்தப்பட்டவர்களும் திருமண இணையதளங்களும்

சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் திருமண இணையதளங்களிலும் அவமானபடுத்தப்படும் சூழல் நிலவுகிறது, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் தன்னுடைய தகவலை பதிந்தால் dஅவர் வசதியாக இருந்தால் மட்டுமே தாழ்த்தப்பட்ட வரன்களே தொடர்பு கொள்கின்றனர், உயர் ஜாதியினரோ அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோ தாழ்த்தப்பட்ட பிரிவு வரனை பார்ப்பதே இல்லை, இணையத்தில் தேடும் பகுதிக்கு சென்று தேடினால் வரும் வரன்களில் ஒன்று கூட தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் வருவதில்லை, கூகில் தேடும் படலத்தில் தேவை மணப்பெண்\மணமகள் என்று எழுதி தேடினால் முதலில் கிடைப்பது பிராமணர், அடுத்து இதர என வருகிறது, பல பக்கங்களுக்கு சென்ற பிறகும் கூட தாழ்த்தப்பட்ட பிரிவு என வருவதில்லை, அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மணமகன்\மணமகள் என்று எழுதினால் வருவதெல்லாம் நீண்டகாலமாய் பதிக்கப்பட்ட அல்லது காலாவதியான விவரங்களே,

உயர் ஜாதியினரின் ஆதிக்கம்

திருமண தகவல் இணையதளங்களை பொருத்தவரை உயர்ஜாதியினரின் ஆதிக்கமே அதிகம் மேலோங்கி நிற்கிறது, அது செயற்கைக்கோள் தொலைகாட்சியிலும் காணலாம், முக்கியமாக தமிழகத்தில் ஒலிபரப்பாகும் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் 90% உயர்ஜாதியினரின் வரன்களாகத்தான் இருக்கும் தாங்களை பொதுவாக காட்டிக்கொள்ளவே சில தாழ்த்தப்பட்ட வரன்களை கூட்டி வந்து வணக்கம்மா என்று ஆரம்பிப்பார்கள், மற்றபடி இவர்களுக்கு தாழ்த்தப்பட்ட வரன்கள் முக்கியத்துவம் இல்லாதவைகள்தான், இணையதளங்களிலும் பெரும்பாண்மையான பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வரன்களே அதிகம் பார்க்கப்படுகிறது,
ஜாதி மறுப்பு திருமணங்கள்

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்பு திருமணங்கள் இது குறித்து infochangeindia என்ற இணையதளத்தில் திரு அசோக் கோபால் என்பவர் நடத்திய ஜாதிமறுப்பு திருமணங்கள் என்ற ஆய்வில் முடிவில் கூறியது இணையதளத்தில் ஜாதிமறுப்பு திருமணங்கள் என்பது ஒரு நகைச்சுவையான ஒன்றுதான், ஜாதி மறுப்பு திருமணம் என்றால் ஒரு தளமோ அல்லது வரன் தேடும் நிறுவனமோ இங்கு எந்த ஜாதி வரனும் கிடைக்காது ஜாதிவேண்டாம் என்று கூறுபவர் களுக்கு மட்டுமே என்று எழுதி இருக்கவேண்டும் ஆனால் இந்தியாவில் இருக்கும் 4635 பிரிவுகளுக்கும் அதில் இந்துக்கள் மட்டும் 3000 பிரிவுகளையும் உள்ளடக்கி இணையதளங்கள் வரன் தேடும் விவரங்களை வெளியிடுகிறது அதில் இறுதியில் ஜாதி வேண்டாம் என்ற பிரிவையும் சேர்க்கிறது என்றால் இதை எப்படி ஜாதிமறுப்பு திருமணம் என்று நாம் கூறலாம், என்கிறார்,

மதம் தொடபான விவரங்கள்

இணையதள திருமண தகவல்கள் மேலும் புதிய புரட்சியை இந்தியாவில் செய்து வருகிறது, அதாவது மதமாற்றத்தை தடுக்கும் ஒரு புதியயுக்தியாக இதை பார்க்கலாம், சமீபத்தில் சென்னையை சேர்ந்த புத்தமதத்தவர் சென்னையில் புத்த மதத்தில் உள்ள குடும்பத்தில் இருந்து பெண் எடுக்க முயற்சி செய்தார். ஆனால், இங்கு அவருக்கு பெண்கிடைக் காததால் மராட்டிய புத்த மதத்தை சேர்ந்த ஒருபெண்ணை இணையதளம் மூலமாக தேடி திருமணத்திற்கான தேதியை குறிப்பிட்டு விட்டார், இவருக்கு மராட்டி இந்தி தெரியாது, பெண்ணிற்கு தமிழ் சுத்தமாக தெரியாது ஆங்கிலம் அதுவும் சுமாராகத்தான் இந்த திருமண இணைப்பு பந்தத்தில் ஒரே மதம்சார்பான மொழி தெரியாவிட்டாலும் இணையும் புரட்சியை? இணையதளம் செய்துள்ளது, துணையை இழந்தோர், மணமுறிவு பெற்றவர்கள் மற்றும் ஊனமுற்றோர் இணையதள திருமண தகவல் மையங்களில் இவர்கள் பாவப்பட்டவர்கள் போலும் பொதுவாக இவர்களுக்கு என்று தனிப்பிரிவே உள்ளது, இவர்களில் பெரும்பாலும் குழந்தையை பார்த்துக்கொள்ள, கவனித்துக்கொள்ள, வீட்டை பராமரிக்க என்று ஒரு வேலைக்காரரையோ வேலைக்காரியையோ தேடுவது போல் தான் தகவல்கள் பதிவு செய்கின்றனர், சமீபத்திய பதிவுகளை பார்த்த போது ஒரு பதிவு கூட வாழ்க்கை துணைநலன் தேவை என்று இல்லாமல் வீட்டு வேலைக்காக ஆள் எடுப்பவர்கள் என்பது போலவே பதிவு செய்கின்றனர், இங்கு ஜாதி மதம் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாமல் பதிவு செய்தாலும் ஒன்றுதான், அசோக் கோபால் கூறியது போல் ஜாதி மதமறுப்பு திருமண தகவல் மையம் என்பது நேரடி யாக எந்த ஒரு ஜாதி மதத்தை குறிப்பிடாமல் இருக்கவேண்டும் ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவு உட்பிரிவு துணைப்பிரிவுகளை போட்டு ஒரே ஒரு வார்த்தை மட்டும் ஜாதி தேவையில்லை என்று கூறும் இந்த இணையதளங்கள் மற்றும் திருமண தகவல் மையங்கள் அனைத்தும் ஜாதி வளர்க்கும் நவீன உபகரனங்கள் தானே தவிர வேறொன்று மில்லை, காரணம் இணையதளங்களில் எனக்கும் ஜாதியில்லை, எனது துணையாக போகிறவர் களுக்கும் ஜாதியில்லை என்று கூறுபவர்களில் இந்து 0.27% முகமதியர்கள் 4% கிருத்துவர்கள் 15% மட்டுமே.

- சரவணா இராஜேந்திரன்



ஜாதி மறுப்பே!

சமூகக் காப்பு!

இந்தியாவிற்குப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகளுள் ஆகப் பெரியது ஜாதியாகும்!

தமிழ் ஓவியா said...

உலகில் வாழும் மக்களுக்குள் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. அவை மாறக் கூடியதும், மறையக் கூடியதும் ஆகும். ஆனால் ஜாதியானது, உலக நஞ்சுகளில் எல்லாம் தலையானது.

ஜாதிக்கு எதிரான போராட்டம், பல காலம் நாட்டில் நடந்துள்ளது. ஆனால் அதற்கென்ற தொடர்ச்சி இன்றி, தொய்வாகிப் போனது. ஈரோட்டின் ஈ.வெ.இராமசாமி, தமிழ்நாட்டின் பெரியாரான போது புதிய வரலாறு எழுந்தது. அதன் விளைவாய் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.

இன்றைக்கு நாம் அனுபவிக்கும் அத்தனையும் அதில்தான் அடங்கும். அன்றைய வலியும், வரலாறும் புரியாதவர்கள் பெரியாரைப் பெரிது செய்யாமல் இருக்கக் கூடும். ஆனால் எத்தனை நாள் தெரியாமலும், தெரிந்தும் புரியாமலும், புரிந்தும் ஏற்காமலும் இருக்க முடியும்?

தமிழ் ஓவியா said...

உலக நஞ்சுகளில் மிக முக்கிய ஜாதிய நஞ்சால், இன்றைக்கு எத்தனை மரணங்களை கண்டு வருகிறோம். வாழை மரங்களைப் போல, மனிதர்களை வெட்டுகிறார்கள். நம் நாட்டில் அரிவாளை தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பொருளையும், அதனதன் தேவைக்கே பயன்படுத்த வேண்டும். அறிவியல் அதைத்தான் சொல்கிறது. இன்றைக்கு மொத்த அறிவியலையும் அனுபவித்துக் கொண்டு, ஆனால் காட்டுமிராண்டி யாய் சமூகத்திற்குத் தொல்லைக் கொடுப்போம் என்றால், எப்படி அதை அனுமதிக்க முடியும்?

எனவே எல்லா வகையிலும் ஜாதி என்பது வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டியது அவசர, அவசியமாகும் ! அதற்கான வழிகளைகளையும் பெரியார் ஏராள மாய் சொல்லிச் சென்றுள்ளார். அவற்றை ஏற்று நடந்தாலே, இச்சமூகம் எழில் கொஞ்சும் பூங்காவாக மாறிப் போகும். அந்த வழிகளில் ஒன்றுதான் ஜாதி மறுப்புத் திருமணங்கள். "திருமண செய்ய ஒரு பெண்ணுக்கு ஆண் வேண்டும். ஒரு ஆணுக்குப் பெண் வேண்டும். இதற்கு ஜாதி ஏன் வேண்டும்?" என்பது சாதாரண மனிதக் கேள்வி ஒரே ஜாதிக்குள், அதுவும் ஒரே பிரிவிற்குள் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர்கள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லி மாளாது. ஒரே பிரிவில் இரண்டு, மூன்று மாப்பிள்ளைகளே இருப்பார்கள்.

தமிழ் ஓவியா said...


அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்படும். ஒரே பிரிவின்றி, வேறு சில பிரிவுகளிலும் மாப்பிள்ளைத் தேடினால் பத்து, இருபது தேறும். ஜாதியின் அனைத்துப் பிரிவுகளிலும் தேடும் போது முப்பது, நாற்பது தேறும். இதையே ஜாதிகளை மறுத்துப் பார்த்தால் நூற்றுக்கணக்கில் வாய்ப்புகள் குவியும். ஆக விசாலமான சிந்தனைகளுக்கு ஏற்ப நமக்கு வாய்ப்புகளும் , வசதிகளும் வந்து சேரும். நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொண்டால் பாதிப்புகள் பல உருவாகலாம் என மருத்துவம் கூறுகிறது. அதேபோல ஒரே ஜாதிக்குள் திருமணம் முடிப்பதால் சிறப்புப் பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை. இந்தப் பெண் நம்முடைய ஜாதிதான், எனவே வரதட்சணை வாங்க வேண்டாம் என யாரும்முடிவெடுப்பதில்லை. மாறாக ஒரே ஜாதியில் நடைபெறுகின்ற திருமணங்கள் ஆயிரக்கணக்கில் விவாகரத்தில் வந்து நிற்கின்றன.

இதை எந்த ஜாதித் தலைவரும், சங்க உறுப்பினர்களும் வந்து சரி செய்வதில்லை. ஆனால் ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யக் கூடாது என மிரட்டுகிறார்கள். இவர்கள் சமூகம் வளர்ச்சி பெறக்கூடாது என விரும்புகிறவர்கள், ஜாதி மறுப்புத் திருமணங்கள் என்பது, ஏதோ இருவர் தொடர்புடைய தனி விசயமல்ல. அது ஒரு அற்புதமான சமூக மாற்றத்திற்கான வித்து. ஜாதிகள் கலக்கும் போது மனிதர்கள் பிறப்பார்கள். மனிதர்களாக உருவாகும் போது மனிதநேயமும் சேர்ந்து வரும், ஒற்றுமை உணர்வு வரும், உதவும் மனப்பான்மை எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும்.

இதன் தொடர்ச்சியாய் சமூகம் மீது நமக்கு நம்பிக்கை உருவாகும். பக்கத்து மனிதனை நேசிக்கத் தொடங்குவோம். பொறாமை, பழி வாங்குதல்கள் நின்று போகும் வாழ்கையில் பிடிப்பு வரும். வாழ்வதற்கு ஆசை ஏற்படும் ! இது நமக்கான தனி மனித பலன்கள். சமூகப் பிரச்சினைகளில் வேற்றுமை குறையும். ஒருமித்த உணர்வு பிறக்கும். உரிமைக்குக் குரல் கொடுக்க அது உதவும். மொழிப் பிரச்சினை, காவிரி, பெரியாறு பிரச்சினைகள், ஈழப் பிரச்சினை, ஒரே ஒரு தமிழன் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவனை மீட்கும் உணர்வு என நாம் அடையும் நன்மைகள் ஏராளம், ஏராளம்!

இவை எல்லாம் நம் கற்பனைப் புதினம் அல்ல. உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் வாழ்வியல் நடைமுறை இதுதான். அவற்றை நோக்கி நம் பாதைகளை திசை திருப்ப வேண்டும்.

ஜாதிப் பிரச்சினைகளை ஒழித்து, மேற்சொன்ன மனித வாழ்வை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகாரத்தால் முடியும். ஆனால் சுய (பெரு) நலம் கருதி அவர்கள் இதைச் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு தனி மனமும் முடிவு செய்யும் போது, நாமே இதைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம். இவ்வளவு பயன்களும் இருப்பதால்தான் காதலை நாம் வரவேற்கிறோம். காதல் திருமணங்கள் பெரும்பாலும் ஜாதி மறுத்த, சமூக நலனாகவே இருக்கும். காதலர்களுக்கு ஜாதி மறுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை எனினும் ஜாதியை விட காதல் பெரிது என்கிற முடிவு துணிச்சலானது.

அந்தக் காதல் விரும்பியவரோடு சேர்ந்து வாழ வைக்கிறது, ஜாதியைச் சிதைக்கிறது, சக மனிதர்களை நேசிக்கத் தூண்டுகிறது. அதேநேரம் காதல் என்பதை உணர்ச்சிகளின் வடிகாலாகவும், புரிந்து கொள்ளாமலும் தொடரும் போது அது தோல்வியில் முடிகிறது. அந்நிலைகள் மாற வேண்டும். எனவே சமூகம் மாறவேண்டும் என நினைக்கிற ஒவ்வொரு மனிதரும், கட்டாயம் ஜாதியை மறுக்க வேண்டும். பெரியார் சிந்தனையாளர்கள், மொழிச் சிந்தனையாளர்கள், கம்யூனிச தோழர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களும் ஜாதி மறுத்த மனிதர்களாக உலா வர வேண்டும். பிறகு படிப்படியாகப் பொது மக்களையும் அந்நிலைக்கு அழைக்க வேண்டும். அப்படி செய்கிற போது, மேற்சொன்ன நன்மைகள் முதலில் நமக்குக் கிடைக்காவிட்டாலும், ஜாதீயப் பிரச்சினைகள் வலுவிழந்து போகும் ! ஆகவே தோழர்களே ! இந்தச் செய்திகளையெல்லாம் முன்வைத்துத் தான் திராவிடர் கழகம் சார்பில் எதிர்வரும் நவம்பர் 25,சென்னை பெரியார் திடலில் "மன்றல்" எனும் தலைப்பிட்டு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு பெரும் வாய்ப்புகளையும், வழிகளையும் உருவாக்கிட முனைந்துள்ளது.

பெரியார் சுமரியாதைத் திருமண நிலையம் எனும் அமைப்பு இப்பணியை பல்லாண்டுகள் செய்து வருகிறது. அதன் வீரியத் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுவதையும் ஒருங்கிணைத்து, பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளை ஒன்றுபடுத்தி செய்யவிருக்கிறது. இதில் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் என எந்த வேறுபாடுகளும் இல்லை. நாம் ஜாதி மறுத்த மனிதர்களாக, தமிழர்களாக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். திரள்வீர் ! திரள்வீர் !! உங்களோடு உறவினர்களும், உங்களோடு நண்பர்களும் திரள்வீர்! சமூக அமைப்புகள் இச் செய்தியைத் திக்கெட்டும் கொண்டு சேர்த்து, மாற்றத்திற்கான பயணத்தில் கரம் சேர்ப்பீர்! சிந்திப்போம்... பின்னர் சந்திப்போம்! நவம்பர் 25!

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

நான் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை. மனிதர்களைக் கொண்டாடுபவன். யார், என்ன மதம் என்று பார்ப்பதில்லை.

- நடிகர் கமல்ஹாசன்

தமிழ் ஓவியா said...

சோஷலிசம் என்பது நம் முன்னோர்களின் திட்ட த்தை அப்படியே நகல் எடுப்பது அல்ல. கொள்கைகளை அப் படியே நகல் எடுத்ததுதான் 20-ம் நூற்றாண் டில் நாம் செய்த மிகப் பெரிய தவறு. தனித்தன்மையோடு, இப்போதுள்ள வேறுபாடு களோடு ஒவ்வோர் இனத்தில் இருந்தும் உருவாகும் மக்கள் சக்தியில் இருந்தும் நாம் அந்தந்தப் பகுதி சார்ந்த, மண் சார்ந்த சோஷலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

- ஹியூகோ சாவேஸ் (வெனிசூலா நாட்டு அதிபர்)

தமிழ் ஓவியா said...

படித்ததில் பிடித்தது...வரலாற்று உண்மை!

புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது நெருக்கமான நண்பர்களாக, சால்வே கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பூ.ஆ.பெரியசாமி, பங்காரு பத்தர், திருப்புளிசாமிஅய்யா, பாரதிதாசன் போன்றோர் இருந்தனர்.

சில சமயங்களில் பாரதியார் இலக்கணப் பிழையுடன் எழுதுவது கண்டு பூ.ஆ.பெரியசாமிக்கு வருத்தம் இவரெல்லாம் பாட்டெழுத வரலாமா - இலக்கணம் தெரியாமல் என்று குமுறுவாரே தவிர, பாரதியிடம் வெளிப்படையாக சுட்டிக்காட்டத் தயக்கம். எவருக்கும் அஞ்சாப் பாவேந்தர் பாரதிதாசன், நால்வரில் இவர் மட்டும் துணிந்தார்.

அங்கு + போனான் என்பதை அங்குப் போனான் என்றே எழுத வேண்டும் எனச் சுட்டிக் காட்டி, சுட்டுச் சொல்லுக்கு பின் வல்லினம் மிகும் என்ற இலக்கண விதியை எடுத்துக்காட்டினார். அதற்கு பாரதி, அங்குப் போனான் என்று எழுதினால் என்னவோ போல் உள்ளதே! இயற் கைக்கு முரணாக ஒலிக்கிறதே! என்றார். அதற்குப் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார். நீங்க இலக்கணத்திற்குக் கட்டப்பட்டவரே தவிர, இயற்கைக்கு அல்ல என்று பாரதிதாசன் அடித்துக் கூறி, பாரதியை இலக்கண வேலிக்குள் கொண்டு வந்தார்.

- அக்டோபர் 16-31 2008 "உண்மை" இதழிலிருந்து

தமிழ் ஓவியா said...

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

எங்கள் மகள் தீட்சண்யா ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது சலூன் வைத்திருந்த நண்பர் ஒருவரை வீட்டுக்கே வரவழைத்து மொட்டையடித்துவிடுமாறு வேண்டினோம். தாய்மாமன் மடியில் வைத்து முடியெடுப்பதுதானே வழக்கம் என்று அவர் தயங்கினார். பரவாயில்லை அப்பன் மடியில் கிடத்தினாலும் ரேஷர் மழிக்கும்தானே என்று அவரை ஒத்துக்கொள்ள வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது. கிளினிக் ஒன்றுக்கு தூக்கிப்போய் காதும் குத்திவிட்டோம். காதணிவிழா என்று ஒன்றை நடத்தாதது குறித்து எங்களிருவரின் பெற்றோர்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். கடுக்கண், தோடு என்று தாய்மாமனை ஏமாற்றி தங்கம் பிடுங்குகிற வேலைகளை நாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டு அவர்களை வாயடைக்க வைத்து விட்டேன். சடங்குகள் எதுவும் இல்லாமல் மொட்டையடித்து காதுகுத்திவிட்டோம் என்று இறுமாந்திருந்த ஒருநாளில் என்மகள் கேட்டாள்: எனக்கு ஏன் காது குத்தினீர்கள் என்று. அந்த கணத்தில்தான் உறைத்தது அதுவே ஒரு சடங்குதான் என்று.

குறிப்பிட்ட வயதை அவள் கடந்ததும், பெரிய மனுசியாகிட்டாளா? வயசுக்கு வந்துட்டாளா, ருதுவாகி விட்டாளா, மேஜராகிவிட்டாளா என்று ஒருபொருட் குறித்த பன்மொழிக்கேள்விகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவளது வயதையொத்த ஆண்குழந்தை உள்ள பெற்றோர்களிடம் இவர்கள் ஏன் இப்படியான கேள்வி எதையும் எழுப்புவதில்லை? அவனது உள்ளாடையில் கறை எதுவும் இருக்கிறதா என்று தினமும் ஆராய்ச்சி செய்வார்களா? இயல்பாக ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டுதானாக வேண்டும் என்றில்லை. திரட்டி/ மஞ்சள் நீராட்டுவிழா நடத்தினால் தான் தீட்டு கழியும் என்று எங்களிடம் பலரும் திரும்பத்திரும்பச் சொன்னார்கள். பூப்பு/ மாதவிலக்கு உதிரத்தை வளமையின் குறியீடாக கருதி தங்களது வேளாண் நிலங்களில் தெளித்த இந்த மண்ணின் பாரம்பரியத்தைப் புறந்தள்ளி அதை தீட்டாக தோஷமாக பார்த்து கழிப்புச் சடங்கு நடத்தும் போக்கு எப்போது உருவானது? தீட்டு/ தோஷம் என்கிற கருத்தாங்களை உருவாக்கி , நிவர்த்தனச் சடங்குகளை நடத்தி புண்ணியார்த்தனம் செய்துவிக்கும் எந்தப் பார்ப்பனராவது தம் வீட்டுப் பெண்களுக்கு திரட்டி நடத்தியிருக்கிறாரா என்று யோசிக்கவில்லையெனில் அப்பறமென்ன பகுத்தறிவு நாத்திகம் முற்போக்கு...?

இதேபோன்ற அபத்தங்களோடுதான் புதுவீடு புகுவதும் நடக்கிறது. நல்ல காற்றோட்டமும் சூரிய ஒளியும் புழங்குவதற்கான விஸ்தாரமும் கொண்டதாக வீட்டைக் கட்டுவதற்கு பதிலாக கடைக்கால் எடுப்பதிலிருந்தே சடங்குகள் தொடங்கிவிடுவதைப் பார்க்கிறோம். வடக்கு/ கிழக்கு பார்த்த வாசல் என்பதில் தொடங்கி கழிப்பறை வரை எல்லாவற்றிலும் வாஸ்து பார்ப்பதும் வாஸ்து குறைபாடிருப்பதாக சொல்லப்படும்போது பரிகாரங்கள் செய்வதுமான முறைகேடுகள் இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் நடக்கின்றன. மனிதர்களுக்குள் ஏற்படுத்திய உயர்வு தாழ்வு பேதத்தை அவர்கள் வசிக்கும் இடத்திற்கும் விரித்தவர்கள் இப்போது ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இந்த பேதத்தை நிறுவுகிறார்கள். இப்படி கட்டப்படுகிற வீட்டை சும்மா திறந்துகொண்டு போய் குடியேறிவிட முடியுமா? அதற்கென்று தனித்த சாஸ்திர சம்பிரதாயங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

வீட்டுக்கடன்களை வழங்கும் முறைகள் சற்றே எளிமையாக்கப்பட்டுள்ள இந்தநாட்களில் குடி புகுவதற்கான சடங்குகள் கடுமையாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது கட்டுமானச்செலவின் ஒரு பகுதியாகவே இந்தக் குடியேறும் செலவும் மாற்றப்பட்டுள்ளது. குடியேறுவதில் என்ன செலவு? அவ்வளவும் சடங்குகளுக்கானவை. சடங்குகள் அவ்வளவும் பார்ப்பனர்களுக்கானவை. கிரஹப்பிரவேஷம் என்று அவர்கள் சொல்வது உண்மைதான். கிரகம் விட்டு கிரகம் போவதற்காகும் செலவளவுக்கு தட்சணை கோருகிறார்கள். பார்ப்பனர் வந்து நடுவீட்டில் ஹோமம் வளர்த்து மாட்டு மூத்திரத்தை தெளித்தால்தான் புதுவீடு விளங்கும் என்கிற நம்பிக்கை நீக்கமற பெருகி வருகிறது. பார்த்தால் தீட்டு தொட்டால் தோஷம் என்று இவர்களையெல்லாம் பார்ப்பனர்கள் ஒதுக்கி வைத்திருந்தக் காலத்தில் இவர்கள் எந்த மூத்திரத்தைப் பிடித்து யார்மீது தெளித்தார்கள் அல்லது குடித்தார்கள்? ஊர்க்கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்காக அதிகாலை மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள்ளாக புகைமூட்டம் போட்டு புளுகுகளை ஓதி புண்ணியார்த்தனத்தை முடித்துக் கொண்டு பிறகு ஏழெட்டு மணிக்கு நம்மைக் கூப்பிட்டு வீட்டை சுற்றிக்காட்டுகிறார்கள். இந்த மோசடிக்கும் முறைகேட்டுக்கும் பிறகு அந்த வீட்டில் மார்க்ஸோட மூலதனம் இருந்தால் என்ன மனுஸ்மிருதி இருந்தால் என்ன?

தமிழ் ஓவியா said...

" திராவிட இயக்க சாதனை - டி.எம்.நாயரின் அரிய உரை :

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு இணங்க, ஆரியர்களால் எவ்வளவு புரட்டுக்களும், பித்தலாட்டங்களு
ம் நடைபெற்றாலும், இங்குக் கூடியிருக்கும் நீங்கள் அனைவரும், உங்களைத் "திராவிடர்கள்' என்று அழைத்துக் கொள்வதில் பூரிப்பும், பெருமையும் கொண்டிருக்கிறீர்கள்.

வீரத் திராவிடர்களே! (பெருத்த ஆரவாரம்! கைதட்டல்! தியாகராயர் வாழ்க! டாக்டர் நாயர் வாழ்க! நீதிக்கட்சி நீடூழி வாழ்க! என்ற முழக்கங்கள்!) என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன்! இலண்டனிலும், சென்னையிலும் எல்லோரும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்லுகிறார்கள்! நான் ஒரு எம்.டி. பட்டதாரி!

எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது. எனக்காகும் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் திரு. பிட்டி தியாகராயர் அவர்களைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக்கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன்! (டாக்டர் நாயர் வாழ்க! தியாகராயர் வாழ்க!)

இவ்வாறெல்லாம் இருந்தும், என் பிறந்த இடமான கேரளத்தில், நானோர் "சூத்திரன்'தானே! (நகைப்பு! வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்! இத்தகைய இந்துமத சாதி அக்கிரமங்களை, எந்தப் பார்ப்பன "லோக' குருவாவது, அல்லது "லோக்கல்' குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? (வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்)

இந்த மூஞ்சிகளுக்குத்தான், தனி ஆட்சி நடத்த, "தன்னாட்சி அரசு வேண்டுமாம்! (வெட்கக் கேடு! வெட்கக் கேடு! என்ற ஆரவாரம்)

இன்னும் கேளுங்கள்! "நசூத்ராய மதிம் தத்யா' என்பது மற்றோர் சுலோகம்! அதன் பொருள் என்னவென்றால், “சூத்திரன் படிக்கக்கூடாது!'' என்பதாகும். அப்படியானால், “நீ எப்படிப் படித்தாய்?'' என்று நீங்கள் கேட்பீர்களேயானால், இந்தச் சண்டாளப் பூனைக் கண்ணன்! "செம்பட்ட மயிரன்' ஆன வெள்ளைக் காரனுடைய "யூனியன் ஜாக்' கொடி அல்லவா இப்பொழுது நாட்டில் பறக்கிறது! அதன் தயவால் தான் நான் படித்து முன்னேறினேன். (கைதட்டல்! ஆரவாரம்!)

அசல் "ஆரிய இந்து தரும' ஆட்சி நடக்குமானால், இங்குக் காவிக்கொடி தான் பறக்கும் என்ற நிலை இருக்குமேயானால், இராம ராஜ்ய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்குமேயானால், அவ்வளவுதான்! சூத்திர சம்பூகன் கதிதான் எனக்கும், என் தலைவர் திரு. பிட்டி தியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் (வெட்கம்! வெட்கம்! இந்து மதம் ஒழிக! என்ற ஆரவாரம்!)

இவ்வளவுக்கு நீங்கள் எல்லோரும் மதிக்கும் என்னை, எங்கள் கேரள நாட்டு "நம்பூதிரிப் பார்ப்பான்', “ஏடா நாயரே!'' என்று சர்வ சாதாரணமாகக் கேவலமாக அழைக்கக் கூடிய, சாதிக் கர்வம் படைத்திருக்கிறான்!

உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற சர் சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, ஒரு நம்பூதிரிப் பார்ப்பான், சர் சங்கரன் நாயர் வீட்டு வாசலிலேயே வந்து நின்றபடி, “எடா! சங்கரா! நீ உயர் நீதிமன்ற நீதிபதியாமேடா'' என்று கேட்டானாம். “ஆமாம் சாமி! எல்லாம் உங்கள் கடாட்சந்தான்!'' என்று கூறியவாறே, வெளியே ஓடோடியும் வந்து, நம்பூதிரிப் பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக், கைகட்டி வாய் பொத்தி நின்றாராம், அவர்.

(1917 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 7 ஆம் நாள், சென்னை எழும்பூர் ஸ்பர்டங் சாலையில் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டி.எம். நாயர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)