Search This Blog

26.7.12

தமிழ்த்தேசிய குருட்டுக் கண்களுக்குத் தெரியுமா?


இன்றைக்கு 15 ஆண்டுகளுக்குமுன்....

இன்றைக்குச் சரியாக 15 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில்தான் (1997) இரோமேசுவரத்தில் தமிழக மீனவர் பாதுகாப்பு மாநாடும் - கச்சத் தீவு மீட்பு மாநாடும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறப்புரையாற்றினார். தமிழக மீனவர்களை இலங்கைக் கப்பல் படை சுட்டுக் கொல்லுவதை எதிர்த்து உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றார் பெர்னாண்டஸ். மாநாட்டில் மருத்துவர் இராமதாசு, பழ. நெடுமாறன், கா. காளிமுத்து, பொன். முத்துராலிங்கம், இரா. சனார்த்தனம், கா. ஜெகவீரபாண்டியன் முதலியோர் பங்கேற்றனர்.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்றும் அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலேயே இலங் கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்த்த இந்திய அரசு, கசப்பான அனுபவங்களுக்குப் பிறகாவது கச்சத் தீவை மீட்டிட மீசையை முறுக்க வேண்டாமா?

நமக்குச் சொந்தமான கச்சத்தீவு அருகில் நம் தமிழர்கள் மீன் பிடிக்கச் சென்றால் குற்றமாம்! இரவ லாகப் பெற்றவர்கள் தீட்டிய மரத்தில் கூர்ப் பாய்ச்சுவது போல நம் மக்களையே சுட்டுக் கொல்லுவதா? இதனைத் தட்டிக் கேட்கா விட்டால் நம் நாட்டுக்கே சுயமரியாதை இல்லை என்று பொருளாகி விடாதா?

கொடுக்கத் தெரிந்தவர்கள்தான் மீட்டுக் கொடுப்பதற்குமான பொறுப்பை ஏற்க வேண்டும் - அதுதான் அறிவு நாணயமும் தன்மானமும் ஆகும்.

ஈழத்திலே தமிழர்களைக் கொல்லுவது மட்டுமல்ல. இந்தியாவில் இருக்கும் தமிழர்களான மீனவர்களையும் படுகொலை செய்கிறது என்றால் இதனைத் தடுத்து நிறுத்திட இந்தியாவுக்குக் கடமை இருக்கவில்லையா?

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் சரி, இந்தியத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் சரி - கொல்லப்படுவது தமிழர்கள் என்றால், எங்கள் நிலை இதுதான் என்று இந்தியா சொல்லுவதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ!

கடல் எல்லையைத் தாண்டாதீர்கள் - தாண்டினால் இலங்கைக் கடற்படை சுடத்தான் செய்யும் என்று 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் சொல்லுவதற்குக் கூச்சப்பட வேண்டாமா?

வேலியில் ஓடும் ஒணானை எடுத்துக் காதில் விட்டுக் கொண்ட கதையாக அல்லவா இருக்கிறது.

யாரைக் கேட்டு கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்தார்கள்! 1974இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் காணப்பட்ட மீன்பிடிக்கும் உரிமை கவட்டுத்தனமாக விட்டுக் கொடுக்கப்பட்டது எப்படி?

இந்திய ஜனநாயக நாடு தானே! நாட்டு மக்களுக்குத் தெரியாமல் நடுராத்திரியில் ஒப்பந்தங்கள் மாற்றப்படு கின்றனவா?

இந்த ஒப்பந்தத்திற்கு மட்டும் கறார் பேசும் இந்திய அரசு, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி இலங்கை ன் வடக்கு - கிழக்கு மாவட்டம் இணைக்கப்படுவதில் - தம் சூரத்தனத்தை இந்தியா காட்டாதது ஏன்?

ஒப்பந்தம் காப்பாற்றப்படுவதாக இருந்தாலும் சரி, மீறப்படுவதாக இருந்தாலும் சரி, அங்குப் பாதிக்கப் படுபவர்கள் தமிழர்கள் மட்டும் என்பது தான் எழுதப்படாத ஒப்பந்தமா?

டெசோ மாநாடு இந்த உணர்வுகளின் கொந்தளிப்புக்கிடையேதான் நடைபெறுகிறது.

அதே கச்சத் தீவு மாநாட்டில் தான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். கச்சத்தீவு மீட்கப்படுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழர் தலைவரின் அந்த ரிட் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசிம்மபாபு அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு (29.7.1997) இன்று வரை நிலுவையில் உள்ளது.

திராவிடர் இயக்கத்தில் இந்தத் தொடர் செயல் பாடுகள் எல்லாம் தமிழ்த்தேசிய குருட்டுக் கண்களுக்குத் தெரியாது. செவிட்டுக் காதுகளிலும் விழாது! எல் லோருக்கும் சென்னை டெசோ மாநாட்டில் (12.8.2012) புரிய வைப்போம் வாரீர்!
--------------”விடுதலை” 26-7-2012

11 comments:

தமிழ் ஓவியா said...

ஆக.12ஆம் தேதி டெசோ மாநாடு கலைஞர், க. அன்பழகன், கி. வீரமணி சரத்பவார் முதலியோர் பங்கேற்பு

சென்னை, ஜூலை 26: தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு, ஆய்வரங்கம் ஆகஸ்டு 12ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கு திமுக தலைவர் கலைஞர் தலைமை தாங்குகிறார். மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் பேரா சிரியர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர்கள் சரத்பவார், பரூக் அப்துல்லா, எம்பிக்கள் சரத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், ராம் கோபால் யாதவ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண் டியன், நைஜிரியா நாட்டு அமைச்சர் ஒசிகேனா போய் டொனால்டு, அப்துல் ரசாக் மோமோ (நைஜிரியா) நசீம் மாலிக் (சுவீடன்) டைடா முகமது, அபெகோ முபாரக் (மொராக்கோ) கெமால் இஸ்திரிம் (துருக்கி ) பேசுகிறார்கள். மாநாட்டில் இலங்கை தமிழர் தலைவர்கள், எம்பிக்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இந்த தகவலை டெசோ அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

இவர்தான் சாகுமகராஜ்



சாகு மகராசர் தனது நிர்வாகத்துக் குட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு அனைத்து வேலைகளிலும் 50 சதவீத இடங்களை ஒதுக்கவேண்டும் என்று 1902 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார். இது போன்ற ஒரு சமூகநீதி ஆணை பிறப்பிக்கப்பட்டது அதுவே இந்தியாவில் முதன் முறை! பிறகு தென்னகத்தில் பல பகுதிகளில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதற்கு இதுவே வழிகாட்டியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து 1921 ஆம் ஆண்டு மைசூர் அரசாங்கமும் அதே ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி நடந்த சென்னை மாகாண அரசாங்கமும் - இதே போன்ற ஆணைகளைப் பிறப் பித்தன. பின்னர் 1925 ஆம் ஆண்டு பம்பாய் அரசாங்கமும் இதே போன்ற ஆணையைப் பிறப்பித்தது.

கோலாப்பூரில் 1894 இல் 71 அலு வலர்களில் 60 பேர் பார்ப்பனர்கள். 1912 இல் 95 அலுவலர்களில் 35 பேர் மட்டுமே பார்ப்பனர்கள்! இட ஒதுக்கீட்டால் ஒடுக்கப்பட்டவர்கள் வாய்ப்புகளைப் பெற வழி ஏற்பட்டது.

சாதி ஒழிப்பு

பிற்காலத்தில், இரண்டாம் கட்டத்தில், சாதி அமைப்பையே ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார், சாகுமகராசர்.
தாம் சார்ந்த மராத்திய சாதியாரின் சார்பாக நின்று, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த பொழுது, சாகுமகராசருக்கு அவர்கள் பலமான ஆதரவு அளித்தனர். ஆனால் அவரே, பிற்காலத்தில், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும் உழைத்தபொழுது அவர்கள் முகம் கோணினர். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் இவர் தம் பணியைத் தொடர்ந்தார்.

தாழ்த்தப்பட்டோர்

தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியும், பதவியும் பெறுவதில் சாகு மகராசர் தனிக் கவனம் செலுத்தினார். அவர்களுக்கு என மாணவர் விடுதி ஒன்றை நிறுவியதை ஏற்கெனவே கண்டோம்.

அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் அவர்களையும் சம மாகக் கவனிக்கவும், நடத்தவும் ஏற்பாடு களைச் செய்தார்.

நிருவாகத்தில் அவர்களைப் பணியமர்த்தம் செய்தார்

அரசுக் கல்வி நிறுவனங்களிலும், மான்யம் பெற்று வந்தவைகளிலும் சாதி யின் பெயரால் மாணவர்களைப் பிளவு படுத்திப் பாகுபாடு காட்டக்கூடாது என்று ஆணையிட்டார்.

கோலாப்பூர் நகர சபைக்குச் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்தார். தீண்டப்படாதவர் களுக்கும் போதிய இடங்களை அளித்தார். இவர் காலத்தில் முதன் முறையாகத் தாழ்த்தப் பட்டவர் ஒருவர் நகரசபையின் தலைவர் ஆனார்.

கிணறுகள், குளங்கள் முதலிய பொது இடங்களில் மற்றவர்களுடன் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சம உரிமை அளித்தார். அவர்களுக்கெனத் தனியாக இருந்த பள்ளிகளை மூடிவிட்டுப் பொதுப் பள்ளி களில், எவ்வித வேறுபாடும் இன்றி அவர்களையும் சேர்க்கச் சொன்னார்.

தீண்டப்படாதவர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய அனுமதி அளித்தார்

கிராமங்களில் எல்லாச் சாதியாரும் கணக்குப் பிள்ளைகளாக (குல்கர்னி களாக) நியமனம் பெற ஆணையிட்டார். அந்தப் பதவியில் மிகப் பெரும்பான்மை யாக இருந்த பார்ப்பனர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், சாகுமகராசர் அதைப் பொருட்படுத்தவில்லை. தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்கள் இந்தச் செல்வாக்கான பதவியில் அமர்ந்தனர். இந்த நடவடிக்கையால் பிற்காலத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன.

மகர்வடன்

மகர் என்ற தீண்டப்படாத சாதியார், கிராமத்தாருக்கும் அரசுக்கும் தண்டல், தலையாரி போன்ற வகையில் அடிமட்ட ஊழியம் செய்யவேண்டும். அதற்காக அவர்களுக்குச் சிறிது நிலம் அளிக்கப் பட்டது. அதற்கு மகர்வடன் எனப் பெயர். இரவு - பகலாக எல்லா வகையான கடின மான வேலைகளையும் கட்டாயமாகச் செய்து, அதற்காக அளிக்கப்பட்ட நிலத்தில் போதாத ஊதியமே பெற்று வந்தனர். சட்டப்படி வேலையை விட்டுவிட முடியாது. இவ்வாறு வேண்டாத வகையில் மகர்கள் நிலத்தோடு இறுகக் கட்டப் பட்டனர். இந்த முறையை ஒழிப்பதற்காக 1928 ஆம் ஆண்டு முதல், அவர் இறந்த 1956 ஆம் ஆண்டு வரை அண்ணல் அம்பேத்கர் பல வழிகளில் போராடினார்; முடியவில்லை. 1958 இல்தான் சட்டப்படி மகர்வடன் முறை ஒழிந்தது. அம்பேத்கர் பிற்காலத்தில் நிகழ்த்த விரும்பிய சீர்திருத்தத்தை, சாகுமகராசர் 1918 ஜூன் 25 இல் நிகழ்த்தினார். அந்த ஆண்டில் கோல்ஹாப்பூர் அரசின் மகர்வடன் முறையை ஒழிக்க ஆணை பிறப்பித்தார். ஆணையை மீறுவோர் தண்டத் தொகை செலுத்த வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும்.

(நூல் சமூகப் புரட்சியாளர் சாகுமக ராசர் - பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான்)

குறிப்பு: இன்றுதான் சாகுமகராசர் முதல் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்த நாள் - 1902.
26-7-2012

தமிழ் ஓவியா said...

விளையாட்டிலும் வருண தர்மமே!

லண்டனில் ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட உள்ளது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இதில் எதைச் சாதிக்கப்போகிறது என்பது கேள்விக் குறியே!

ஆற்றலும், வலிமையும் கொண்ட மக்கள் கிராமப் புறங்களில், ஒடுக்கப்பட்ட மக்க ளிடையே பல்லாயிரக் கணக்கில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

வருணாசிரம ஜாதிய ஆதிக்கச் சிந்தனை குடி கொண்ட இந்துத்துவா மனப்பான்மை என்பது இந்தியாவில் இருக்கும் வரைக்கும் உலக சாதனைகள் என்பது கனவு உலகத் தில்தான் இருக்கும். பார்ப்பனியத் தன்மை கொண்ட கிரிக்கெட் போன்றவைதான் இந்தியாவில் கொழிக்க முடியும்.

இங்கு மதம் என்பது வெறும் நம்பிக்கை என்பது மட்டுமல்ல, மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அடிப்படை நீரோட்டத்தைக் கொண்டது.

தலையெழுத்து நம்பிக்கையும், எதையும் பகவான் பாதத்தில் போடு என்கிற சோம்பேறி சித்தாந்தங்களும், அவற்றுடன் தொடர்பான கோயில் அமைப்பு முறைகளும், பண்டிகை களும் திருவிழாக்கள், சடங்குகள், சாத் திரங்களும் இந்தியாவில் வேர் பிடித்திருக்கும் வரை இங்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல்கள் வெடித்துக் கிளம்புவதற்கான அடிப்படை வாய்ப்புகளே கிடையாது.

கீதையைப் படிப்பதை விட ஒரு உதைப் பந்தைக் கற்றுக் கொள் என்று விவேகானந்தர் கூற்றையும் கூட கவனத்தில் எடுத்துக் கொள் ளலாம். தகவல் ஒன்று - புதுக்கோட்டை விடுதலை செய்தியாளர் தோழர் கண்ணன் மூலம் கிடைத்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த சத்தக் குறிச்சியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்று, உலக அளவில் நட்சத்திரமாக மின்னினார். தென்னாசியப் போட்டியில் தங்கம் வென்றார்.

இப்படி சாதனை படைத்த சாந்தியின் இன்றைய நிலை என்ன? வறுமைத் தேள் கொட்டப்பட்ட நிலையில், செங்கல் சூளையில் கற்களைச் சுமந்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.

ஏன் இந்த நிலை? மத்திய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுத் துறைகள் இருக் கின்றனவே. இவை எதை வெட்டி முறிக் கின்றன? சாந்தி போன்றவர்களை அடையாளம் கண்டு தேவையான அறிவியல் ரீதியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உலக அளவில் நடக்கும் போட்டிகளில் சாதனை களைப் படைக்க ஏன் ஆக்க ரீதியாகச் சிந்திக்கக்கூடாது - செயல்படக்கூடாது?

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் என் றால், ராணுவத்தில் கூட பிரிகேடியர் தகுதியில் பணியமர்த்தம் செய்து, உயரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. எந்தப் பணியையும் செய்யாமலேயே அந்தப் பதவிக் குரிய சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்து விடுகிறது. பெரிய பெரிய தனியார் நிறு வனங்களும் இதே போலவே பணியமர்த்தம் செய்து விளம்பரம் பெறுகின்றன.

ஆனால் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தும் தடகளப் போட்டிகளில் ஏன் இந்த வாய்ப்பு இல்லை? காரணம் தெரிந்ததே! தடகளப் போட்டிகளில் எந்தப் பார்ப்பனரும் ஒளிர்வதில்லை. கிரிக்கெட் போன்றவை பார்ப்பன தர்மம். தடகளப் போட்டிகள் சூத்திர, பஞ்சம தர்மம்.
இந்த வருணாசிரம தர்மம் ஒழிக்கப்படும் வரை கிராமப்புறத்துச் சாந்திகளுக்கு வாய்ப்பு ஏது?

இன்னொரு உண்மை தெரியுமா? சகோதரி சாந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாடு சுதந்திரம் பெற்றுவிட்டதாம். மக்கள் விடுதலை பெற்றுவிட்டார்களாம் - வெட்கக் கேடு! மகா வெட்கக்கேடு!! 26-7-2012

தமிழ் ஓவியா said...

எங்கு பார்த்தாலும் கோவில் விழாக்களில் கலவரம்

விருதுநகர்,ஜூலை 26- அருப்புக் கோட்டை அருகே கோவில் திருவி ழாவில் ஏற்பட்ட குழு மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்த னர். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கள்ளாக்காரி பஞ்சா யத்து தலைவராக இருப்பவர் வள்ளி. உள்ளாட்சி தேர்தலின் போது இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மற்றொரு வள்ளி. இவர்களுக்கு இடையே தேர்தல் சம்பந்த மாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் அப் பகுதியில் உள்ள கோவிலில் விழா நடந்தது. இதில் பஞ்சாயத்து தலைவர் வள்ளி ஆதரவாளர்களுக்கும், மற்றொரு வள்ளி ஆதரவாளர் களுக்கும் இடையே குழு மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில், மலையான், வேல்மயில், ராஜமயில், நாகம் மாள், சந்தானம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பரளச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெயபாண்டி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

அவதானப்பட்டியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் தொடர்ந்து பதற்றம்

கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகைக்கு பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த அடி-தடி மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட் டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து கோவில் முன்பு அதிரடிப் படை காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி அருகேயுள்ள அவதானப் பட்டியில் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அவதானப்பட்டி மாரியம் மன் கோவில். இந்து அறநிலையத்துறை கண்காணிப்பில் உள்ள இந்த கோவிலை பரம்பரையாக உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.

இந்த கோவிலில் 6 மாதத்திற்கு ஒருமுறை உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருகிறது. இந்த பணத்தை கோவில் நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவில் நிர்வகிப்பது சம்பந்தமாக அவதானப்பட்டியைச் சேர்ந்த முனியப்ப கவுண்டர் தரப்பிற்கும், திருப்பதி கவுண்டர் தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வருகிறது. இதையடுத்து இருதரப்பினரும் நீதிமன்றத்துக்கு சென்று வழக்குகள் நடந்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு ஆண்டு திருவிழா சமயம் மற்றும் உண்டியல் திறப்பின் போது இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் தலையிட்டு இருதரப் பையும் அமைதிப்படுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் உண்டியல் திறக்கப்பட்ட போது இருதரப் பினரையும் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவில் விழாவிற்காக நேற்று கோவிலை சுற்றி பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது முனியப்ப கவுண்டர் தரப்பினருக்கும், திருப்பதி கவுண்டர் தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

இருதரப்பினரும் ஒருவரையொருவர் கட்டையாலும், கம்பாலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் லட்சுமண கவுண் டர் உள்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இருதரப்பினரும் வயல் வெளிகளில் ஓடிச் சென்று ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் ஆய்வாளர் கன்னையன் தலைமையில் அதிரடிப் படை காவல்துறையினர் கோவில் முன்பு குவிக்கப் பட்டனர். இதனால் நிலைமை சற்று கட்டுக் குள் அடங்கியது. இருப்பினும் இருதரப் பினரும் மீண்டும் மோதிக் கொள்ளலாம் என காவல்துறையினர் கருதுவதால் காவல்துறை யினர் தொ டர்ந்து அவதானபட்டி கிராமம் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் தொ டர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அவதானப்பட்டி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிருஷ் ணகிரி தாலுகா காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். 26-7-2012

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுவாதமும் மார்க்சியமும்

மதம், சாதி ஆகியவற்றின் அடிமைத்தளத்திலிருந்து உழைப்பைச் சுதந்திரமாக்கினால் மட்டுமே இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும். உழைப்பைச் சுதந்திரமாக்குவது என்றால், தொழிலாளியைச் சுதந்திரமானவனாக்குவது என்பதே பொருள். இந்தியத் தொழிலாளி இன்றும் மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிமையாகவே இருக்கிறான். சுகோமல் சென் கூறுகின்றார்: ....சுதந்திரத்திற்குப் பின் புரட்சியை வென்றெடுக்க வேண்டிய மிகக் கடினமான பணியை தொழிலாளி வர்க்கம் எதிர்கொண்டுள்ளது. மூலதனத்தின் ஆட்சி முடிவுறவும், சோசலிசத்தை, அதன் உண்மையான பொருளில் - மனிதனை மனிதன் வஞ்சிக்காத ஒரு சமூகத்தை - நிறுவுவது என்பதுதான் இந்தப் புதிய இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைய தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு சோசலிச உணர்வாக வளர வேண்டியிருக்கின்றது. இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் பெரும் பகுதி இன்னும் இந்த உணர்வை அடைய வேண்டியிருக் கின்றது. தொழிலாளிக்கு, அவனுடைய அறிவு ஆற்றலைப் பயன்படுத்தவும் சுதந்திரமாகச் சிந்திக்கவும் இயலாத காலம் வரை இந்த உணர்வு உண்டாகாது என்பதை இதுவரை உள்ள பட்டறிவு புகட்டுகின்றது. தெய்வீகத்திலிருந்து மானுடத்தை நோக்கிய மாற்றத்தினால் மட்டுமே தொழிலாளியை சோசலிச உணர்வுடையவனாக ஆக்க முடியும். இந்தக் கட்டத்தில் தொழிலாளிக்கு உதவ வேண்டியது பகுத்தறிவுவாதம் தான்.

மத ரீதியான மந்தப் போக்கிலிருக்கும் மக்களுக்கும் உண்மையை உணர்த்த வெறும் மார்க்சிய கல்வி மட்டும் போதாது என்றும், கடவுள் மறுப்புப் பிரச்சாரம் தேவையானது என்றும், லெனின் தன்னுடைய நூல்களில் தெளிவாகக் கூறுகின்றார். சி.பி.அய். (எம்.), சி.பி.அய். ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கோட்பாடு ரீதியாக முழுமையாக அங்கீகரிக் கின்ற நிலைப்பாடே இது. ஆனால், பகுத்தறிவாளர் களுடன் ஒத்துழைத்து கடவுள் மறுப்புச் சிந்தனையையும் ஆராய்ச்சி அறிவையும் மக்களிடையில் ஏற்படுத்தும் பணிக்கு, கட்சித் திட்டங்களில் அவர்கள் முன்னுரிமை அளிக்கவில்லை. காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தேர்தல்களில் மதம், சாதி ஆகியவற்றின் செல்வாக்குகளைப் பயன்படுத்தக் கூடிய கட்டாயத்துக்கு அவர்களும் உள்ளாவதைக் காண்கிறோம்.

மறுமலர்ச்சி இயக்கத்தின் வழியாகப் பரவிய பகுத்தறிவுச் சிந்தனைதான் அய்ரோப்பாவில் மார்க்சியத்தின் வளர்ச்சிக்கு உதவியது என்பதையும், 1830இல் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு பிளாங்கி நிறுவிய சமத்துவத்திற்காக போராடுபவர்களுடைய குழு தான் கம்யூனிஸ்ட் லீக் ஆக வளர்ந்தது என்பதையும், அந்த முன்னணிக்காகத்தான் மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தயாரித்தார்கள் என்பதையும் அவர்கள் அறியச் செய்ய வேண்டும்.7-7-2012

தமிழ் ஓவியா said...

லண்டனில் இருந்து ராஜபக்சவை ஓட ஓட விரட்டுவோம்-பிரிட்டன் தமிழர் ஒன்றியம்


லண்டன், ஜூலை 27- லண்டனில் நடை பெறும்ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்சவை ஓடஓட விரட் டியடிக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று பிரிட்டன் தமி ழர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் தமிழர் ஒன்றியம் வெளியிட் டுள்ள அறிக்கை:

லண்டனில் இன்று தொடங்கும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள இலங்கைத் தீவின் இன வெறி அரச அதிபரான மகிந்த ராஜபக்சவை எதிர்த்துகுரல் கொடுத்து தமிழர்களின் ஒருமித்த பலத்தின் மூலம் பிரிட்டனை விட்டுவெளியேற்ற வேண்டிய காலத்தை பிரிட்டன் தமிழர்கள் எதிர்கொண்டு நிற்கின் றனர்.

ஏற்கனவே பிரிட் டன் தமிழர்களின் கடும் எதிர்ப்பு போராட் டங்களால் லண்டன் வருகை தந்திருந்த மகிந்த ராஜபக்ச தனது நிகழ்ச்சிகளை ரத்துச் செய்து உடனடியா கவே இலங்கை திரும் பியிருந்தார்.

இருப்பினும் மீண்டும் தமிழர்களுக்கு சவால் விடுகின்ற வகை யில் லண்டன் வரும் மகிந்தவை ஒன்றுபட்ட தமிழர்களாக பிரிட் டன் வாழ் தமிழர்கள் அனைவரும் எதிர் கொண்டு விரட்டியடிக்க வேண்டியது அவசியமா கிறது.

போராட்டம் நடைபெறும் இடம்

இந்த வகையில் ஹளயீந றயல , இல்அமைந்துள்ள க்ஷடைடபேளபயவந குளை ஆயசமநவ முன்பாக இன்று மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெற வுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரிட்டன் வாழ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரிட்டன் தமிழர் ஒன் றியம் கேட்டுக்கொள் கிறது.

இலங்கைத் தீவில் தமிழர்களை அழித்து, தமிழர்களின் வாழ்விடங் களை பறித்து சிங்கள, பவுத்த மயமாக்கும் முயற்சியில் ஆட்சி நடாத்திவரும் இனப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை ஒரே அணி யில் தமிழர்கள் என்ற உணர்வோடு, விரட்டிய டிப்போம்.

இதன் மூலம் பிரிட்ட னில் இம்முறை ஒலிம் பிக் போட்டிகளில் கலந் துகொள்ள வருகைதரும் 150 நாட்டு தலைவர் களுக்கும், 1000 க்கும் மேற்பட்ட இராஜதந்தி ரிகளுக்கும், பத்தாயிரத் துக்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், பல இலட்சம் மக்க ளுக்கும் தமிழர்களின் உள்ளக் குமுறலையும், தமிழர்களுக்கு இளைக் கப்பட்ட அநீதிகளையும் எடுத்துச் சொல்லும் ஓர் அரிய வாய்ப்பாகவும் அமையும்.

இது போன்றதொரு அரிய சந்தர்ப்பம் எமக்கு இனி எப்போது கிடைக் கும் என்பது தெரியாது. எனவே இச் சந்தர்ப் பத்தை பயன்படுத்தி 2009 இல் எவ்வாறு இரண்டு இலட்சத்திற் கும் அதிகமாக தமிழ் மக்கள் கூடி போராட் டங்களைநடத்தி னோமோஅதே போன்று பெருமளவில் தமிழர்கள் ஒன்று திரண்டு இப் போராட்டத்தை நடத்த வேண்டி யது முக்கியமா கிறது.

இப்போராட்ட மானது பிரிட்டன் அர சிற்கு எதிரானதாகவோ, ஒலிம்பிக் நிகழ்வுகளை குழப்பும்நோக்கம் கொண்டதாகவோ, அன்றி ஒலிம்பிக்கின் புனித நோக்கத்தை புரிந்து கொள்ளாதவ ராகவும், மனித நேயத்தை மதிக்கத் தெரியாதவ ராகவும் விளங்கும் மகிந்த ராஜபக்ச இவ் விழாவில் கலந்து கொள்ள அருகதை யற்றவர் என்பதை எடுத்துணர்த்தும் போராட்டமாகவே தமிழர்களால் முன்னெ டுக்கப்படவேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும் புகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
27-7-2012

தமிழ் ஓவியா said...

நாவலர் பாரதியார்


இவர் கடவுள் மறுப் பாளர் அல்லர் - மத மறுப் பாளரும் அல்லர். உண் மையைச் சொல்லப்போ னால் சைவ மெய்யன்பர்.

கம்ப இராமாயணத்தை யும், பெரிய புராணத்தையும் தீயிடக்கூடாது என்று அறிஞர் அண்ணாவுடன் சேலத்தில் விவாதப் போர் புரிந்தவர்.

அந்த சேலம் சொற் போரில் அவர் என்னதான் பேசினார்?

என்னுடைய 14 வயதில் எனக்குக் கல் யாணம் நடந்தபோது நேரிட்டதைச் சொல் கிறேன். எட்டையபுர சமஸ்தானத்தில் ஒரு கிராமத்திலே நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன், நல்ல சைவன். இப்போது இருக்கும் சைவம் போன் றதல்ல. என்னுடைய சிவநெறி வேறு.

இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண் மையே எனக்குச் சைவம்! எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறி னார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்திற்கு அப்புறம் நுழையக் கூடாது.

வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கல் யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல் வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல் வேலி பண்டிதர்கள் கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையில் இருந்த பண்டிதர்கள் பையன் சொல்லுவது உண்மை தான். ஆகமம் அப்படித் தான் கூறுகிறது என்று சொன்னார்கள்.

-என்று நாவலர் சோம சுந்தர பாரதியார் பேசினார் சேலத்தில். (14-3-1948)

அந்த நாவலர் சோம சுந்தரபாரதியர் அவர்களின் பிறந்தநாள் இந்நாள் (1879).

1938 இந்தி எதிர்ப்புப் போரில் தந்தை பெரியார் சேனையில் தளகர்த்தராகத் திகழ்ந்தவர்.

ஒரு நாயக்கரும், புலவரும்தானே (நாவலர் பாரதியார்) இந்தியை எதிர்க்கிறார்கள் என்று பிரதமர் ராஜாஜி சட்டசபை யில் சொன்னபோது, சர் ஏ.டி.பன்னீர்செல்வம் சொன்னது என்ன தெரியுமா? ஆமாம், இந் தியை எதிர்ப்பவர்கள் இந்த இரண்டு பேர்கள்தான். ஆனால் ஆதரிப்போர் நீங்கள் ஒரே ஒருவர்தானே என்றாரே பார்க்கலாம்!

- மயிலாடன் 27-7-2012

தமிழ் ஓவியா said...

பார்ப்பனப் புத்தி என்பது இதுதான்


டெசோ மாநாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து உள்நாட்டிலிருந்தோ முக்கிய தலைவர்கள் யாரும் வரப் போவதில்லை என்று தங்கள் ஆசையைக் குதிரையாக்கி அக்கப் போர் செய்திகளை வெளியிட்டு வந்தது தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள்.

மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியானவுடன் சரத்பவார் வந்தாலும்கூட பருக் அப்துல்லா, சரத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், முதலியோர் வருவார்களா? சந்தேகம் தான் என்று தினமலர் எழுதுகிறதே - இதற்குப் பெயர்தான் வெட்கம் - விவஸ்தையில்லாத பார்ப்பனத்தனம் என்பது! தினமலர் - செய்தி தரும் நாளேடா? பார்ப்பனர் சங்கத்தின் அதிகாரப் பூர்வப் பத்திரிகையா? 27-7-2012

தமிழ் ஓவியா said...

தமிழ் செம்மொழி: நீதிக்கட்சியின் தீர்மானம்



தமிழைச் செம்மொழி என அறிவிக்க 1918ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம்.

1918 மார்ச் 30, 31 நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பன ரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:

தீர்மானம் 8(ஆ)

எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பல திறப்பட்ட இலக்கியங் களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக்கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.



முன்மொழிந்தவர்: திரு.ஜே.பி. நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை

வழிமொழிந்தவர்: திரு. ந.மு.வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

ஆதரித்தவர்: திருமதி அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.

தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணை யிலும் பதிவு செய்யப்பட்டது.

(தகவல்: பேராசிரியர் பு.இராசதுரை, விடுதலை 29.6.2008)

தமிழ் ஓவியா said...

சொர்க்கத்திற்கு குறுக்குவழி

பார்ப்பனர்களே நீங்கள் சொர்க்கத்திற்கு போக வேண்டுமா? இதோ ஒரு சார்ட்கட் என்ற தலைப்பில் 1555இல் விடுதலையில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி திருவிளை யாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம் அதன் சுருக்கம்:

அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகு டையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான். அவளும், நாணம், வெட்கம் எல்லா வற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை அவள் மகன் ஒரு இரவில் கொன்று மயானத்தில் இறுதிச் சடங்கை செய்தான். ஊரில் உள்ளவர்கள் தகப்பனைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானைப் பற்றி இழிவாகப் பேசவும், தாயும், மகனும் சொந்த ஊரை விட்டு ஓடி ஊர், ஊராக சுற்றிக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது சோமசுந்தர கடவுள் வேடன் உருவத்தில் வந்து இவனிடம் சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி 108 முறை கோவிலை வலம் வரும் படி சொன்னார். அந்தப் பார்ப்பானும் அப்படியே செய்து அவன் செய்த பாவமெல்லாம் தீர்ந்து சொர்க் கத்திற்கு போனானாம்.

தாயைப்புணர்ந்து தகப்பனை கொன்ற பார்ப்பானுக்குச் சொர்க்கம்

சொர்க்கத்திற்கு குறுக்கு வழி 2

சொர்க்கத்திறகு போக இதோ இன்னொரு சுலபமான வழி பார்ப்பனர்களே, ரிக்வேதத்தில் குறிப் பிட்டுள்ளபடி நடந்தால் போதும் சுலபமாக சொர்க் கத்திற்கு போய் விடலாம். ரிக்வேதம் தாத்தாக்கிரி மெய் சகத்தில் குறிப்பிட்டுள்ளபடி செய்யுங்கள். நீங்கள் உடனே மோட்சத்திற்கு போய் விடலாம். இதோ அந்த சுலோகம்.

வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண் ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவ மெல்லம் போய்விடும். நாசமாகிவிடும். கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

வேதம் படித்து, பூஜை புனஸ்காரங்களை செய்யும் பார்ப்பனர்களே, அவை எல்லாம் இனிமேல் தேவையில்லை. ரிக் வேதத்தில் சொல்லியபடி உடனே சிவப்பு விளக்கு பகுதிக்குப் போங்கள் சொர்க்கத்தை அடையலாம். காலம் தாழ்த்தினால் இடம் கிடைக்காது. எல்லாம் புக் ஆகிவிடும். ஓடுங்கள் சிவப்பு விளக்குப் பகுதிக்கு. 28-7-2012

தமிழ் ஓவியா said...

புறம்போக்கு ஜெபவீடு இடிப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், செந்துறை அரசு மருத்துவமனை எதிரில் நீர்வரத்து புறம்போக்கில் அத்துமீறி கட்டியிருந்த ஏசு அலொலியா ஜெப வீடு அரசு அதிகாரிகள் உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் செந்துறை வட்டாட்சியர் அன்பழகன், செந்துறை கிராம நிர்வாக அலுவலர்கள், செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் இடித்துத் தள்ளப்பட்டது. சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எந்த மதத்தின் வழிபாட்டு அமைப்புகளாக இருந்தாலும் அவை இடிபட வேண்டியதே!

உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதி மன்றமும் இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஆணை பிறப்பித்துவிட்டது. தமிழ்நாடு அரசு இந்தப் பிரச் சினையில் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. சட்ட விரோதமாகக் கட்டப் படும் கோயில்களை எதிர்த்து திராவிடர் கழகம் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.