Search This Blog

20.8.14

டாஸ்மாக் பக்தியோ பக்தி!



தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சிறீமாளிகை பாறை கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கொடைவிழாவை முன்னிட்டு அக்கோயில் பூசாரி சுவாமிமுருகன் மது அருந்தி அரிவாள் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார்.

இதனால் பல்வேறு இடங்களிலி ருந்தும் பக்தர்கள் அவருக்கு மதுபானத்தை காணிக்கையாக வழங்குவது வழக்கமாகும். இந்தாண்டு கோயில் கொடைவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கி  16.8.2014 வரை நடந்தது. 16 ஆம் தேதி காலை பொங்கலிடுதல், 7 மணிக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து 10 மணியளவில் பூசாரி முருகன் வந்தபோது அங்கு போதுமான அளவிற்கு மதுபானம் இல் லாததால் கோபத்துடன் வெளியேறினார். அப்போது பக்தர்கள் அவரை வணங்கி 15.8.2014 அன்று டாஸ்மாக் கடை விடுமுறை என்பதால் சரக்குகள் வாங்க முடியவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டு பூசாரியை அழைத்து வந்தனர்.


அதன்பின்பு வந்த மதுபானங்களை அப்படியே நீர் கலக்காமல் ராவாக குடித்த பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். அப்போது பெண் பக்தர் ஒருவர் தனக்கு குழந்தை பாக்கியம் கேட்டார். உடனே சுவாமி முருகன் அடுத்தாண்டு நீ இங்கு குழந்தையுடன் வருவாய். அப்போது 30 மதுபாட்டில்களை வாங்கி வரவேண்டும் என்று கூறினார்.


மேலும் பலருக்கு அருள்வாக்கு கூறிய தோடு இந்த வருடம் போதுமான அளவுக்கு மழை பெய்யும், இதனால் விவசாயம் செழிக்கும் என்றார். அருள்வாக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. (தினகரன் 17.8.2014).


பக்தியின் யோக்கியதை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இதைவிடவா ஓர் எடுத்துக் காட்டு வேண்டும்? கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கும் வேறு என்ன ஆதாரம் தேவை?


அருள் வந்து ஆடிய பூசாரி ராவாக டாஸ்மாக் சரக்கை அடித்தானாம் - அப்படி என்றால் அந்த அருள் எங்கிருந்து வந்தது? அந்தக் கடவுளுக் கும் போதை ஏறி இருக்க வேண்டும் - அப்படித் தானே?


மது பாட்டில் குறைவாக இருந்ததால் பூசாரி கோபித்துக் கொண்டு போய் விட்டாராம். குழந்தைவரம் கேட்ட பெண்ணுக்கு வரம் அளித்த அந்த ஆசாமி, அடுத்த ஆண்டு 30 பாட்டில்கள் மது வாங்கி வர வேண்டும் என்றானாம். (ஆசாமி பலே கில்லாடிதான்!)


திருவண்ணாமலையில் இப்படித்தான் பீர் சாமியார் என்று சொல்லி ஒரு பெண் ஆடினார். ஆட ஆரம்பித்தார், கூட்டம் கூடியது. உண்டி யலும் நிரம்பியது. திராவிடர் கழகத் தலைவர் தலையிட்டார்; கண்டனப் பொதுக் கூட்டம் கூட நடத்தப்பட்டது. அப்பொழுது கலைஞர் ஆட்சி நடந்ததால் அந்த ஏமாற்று வசூல் நாடகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.


கடவுள்களிலே இரண்டு வகையான கேட்டகரியா? சைவக்கடவுள் - அசைவக் கடவுள்! டாஸ்மாக் கடவுள் - மது விலக்குக் கடவுள் என்று பிளவுபட்டு இருக்கிறதோ!

இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் இந்தக் குப்பைக் கூளங்கள் எல்லாம்!

நம்புங்கள் - கடவுள் உருவம் அற்றவர் எதை யும் விரும்பாதவர் எல்லாவற்றிற்கும் அப்பாற் பட்டவர் ஆசாபாசம் அற்றவர்!
வெட்கக் கேடு!

                          -----------------------"விடுதலை” 20-08-2014

58 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஸ்பெஷலிஸ்டா?

எனக்குத் திருமண மாகி 34 வருடங்கள் ஆகின்றன. எனது கணவர் பிற பெண்களுடன் தகாத உறவு வைத்துள்ளார். இவர் குடும்பத்திலுள்ள அனை வருமே இப்படி இருந் திருக்கிறார்கள். இது முற்றுப் பெற என்ன செய்ய வேண்டும்? - ஒரு வாசகி

இவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் சந்திரன் சுக்கிரனுடனோ மாந்தி யுடனோ அல்லது சனியு டனோ சேர்ந்திருந்தாலும், ஏழுக்குடையவர் நீசம், 9ஆம் அதிபதி நீசம், 2, 8ல் பாபிகள் என்று பல துர் விஷயங்கள் தென்படு கின்றன. மிகப் பெரிய அளவில் நவசண்டீ மஹா ஹோமத்தை தேவி உபாச கரைக் கொண்டு நடத்த வேண்டும். இந்த ஹோ மத்தை திருவொற்றியூர் வடிவடை அம்மன் தெற் குப் பிரகாரத்தில் அமைந்த ஸ்ரீ சங்கரமடத்தில் நடத் தலாம். நவாக்ஷரீ மந்திர தாயத்தை எல்லோரும் கட்டிக் கொள்ள வேண்டும். மறக்காமல் குலதெய்வ வழி பாட்டை தொடர்ந்து மூன்று மாதங்கள் நடத்துங்கள்.

ஆன்மீக இதழ் ஒன்றில் இப்படியொரு கேள்வி பதில்:

அவர் ஏற்கெனவே பக்தர்தான். நம்பிக்கை உள்ளவர்தான். அப்படிப் பட்டவர்க்கு இந்தக் கொடுமை, மன உளைச் சல் ஏற்படாமல் அவர் பக்தி செலுத்தும் எந்தக் கட வுளும் தடுக்கவில்லையே ஏன்? இந்த யோக்கியதை யில் இன்னொரு கோயிலைக் கை காட்டுவது ஏன்? திருவொற்றியூர் கடவுள் இதில் என்ன ஸ்பெ ஷலிஸ்டா?

Read more: http://viduthalai.in/page1/85372.html#ixzz3B2J0hCWN

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படி யான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படு கின்ற மூட நம்பிக்கை ஒழியவேண் டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.
(விடுதலை, _ 22.6.1973)

Read more: http://viduthalai.in/page1/85381.html#ixzz3B2JHISs0

தமிழ் ஓவியா said...


உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 - 7


குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்த யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது தாய்ப் பால் வார விழா. முதன்முதலில் 1992ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட தாய்ப்பால் வாரம் தற்போது 170 நாடுகளில் பிரபலமடைந்துள்ளது.

உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதே உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடுவதன் நோக்கம்.குழந்தை பிறந்த முதல் இரண்டு தினங்களில் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்துசொல்வதுண்டு. தாய்ப்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன. தாய்ப்பாலில் மட்டும்தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால், அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது.

அது போலத்தான் பசும்பாலில் உள்ள புரத மூலக்கூறுகள் இரட்டை தன்மை கொண்டவை இதை ஆங்கிலத்தில் டை புரோட்டின் அல்லது சியாசின்வே (ceasinwhey) எனக்கூறுவர் ஆனால் பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ ஒற்றை மூலக்கூறு கொண்ட whey
புரதம் தான். இந்த whey புரதம் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. பசும்பாலில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் குடலில் அலர்ஜி உண்டாகும். இந்த அலர்ஜி குழந்தைகளின் மலக்குடலை புண்ணாக்கும் வாய்ப்புள்ளது. தாய்ப்பாலால் குழந்தைக்கு மேற் சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்ப்பாலில் உள்ள நுண்சத்துக்கள் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தை களுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.

தாய்ப்பாலில் இல்லாத சத்து!

ஆம். ஒரு குறை உண்டு. தாய்ப்பாலில் வைட்டமின் D இல்லை என்பது இரண்டு ஆண்டிற்கு முன் நிரூபிக்கப் பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் D சொட்டு மருந்தும் தரவேண்டும். குழந்தை பெற்ற பெண்களும் இதை கேட்டு வாங்க வேண்டும். நமது நாட்டு தட்பவெப்ப நிலையில் தான் வெயில் அதிகமாயிற்றே. நமக்கு இயற்கையாகவே வைட்டமின் D கிடைக்குமே. என நீங்கள் நினைத்தால் அது தவறு. நமது கருந்தோல் அவ்வளவு விரைவில் வைட்டமின் D யை உள் வாங்கும் தன்மை வாய்ந்ததாக இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு தாய்க்கு வைட்டமின் D பற்றாக் குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் D பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் Dசொட்டுமருந்தும் கொடுத்துப் பழக்கவேண்டும். முக்கியமாக தாய்ப்பால் மறக்கும் பருவத்தில் குழந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் காரம் தவிர்த்த எளிதில் செரி மானம் ஆகும் உணவு வகைகளை தரும்போது குழந்தைகளின் செரிமான சக்தி பெருகி அது எதிர்காலத்தில் எந்தவித உணவு வகையையும் எளிதில் செரிமானம் செய்யும் வகையில் உணவு மண்டலத்தை வலுவாக்கி விடுகிறது.

Read more: http://viduthalai.in/page1/85383.html#ixzz3B2JUaVyq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

லட்சுமி விரதமாம்

இன்று லட்சுமி விரதமாம். இவள் தனத் தானிய செல்வங்களின் அதிபதியாம். மகாவிஷ் ணுவின் மனைவியான லட்சுமியின் அருள் வேண் டியும் தாலி பாக்கியம் நிலைக்கவும். இன்றைக் குப் பெண்கள் வரலட்சுமி விரதப் பூஜை நடத்து கிறார்களாம்.

ஆண்டுதோறும் இந்தப் பூஜையை நடத் திக் கொண்டு தானே இருக்கிறார்கள். தானிய விளைச்சல் ஓகோ என்றா இருக்கிறது? தமிழ் நாட்டை வறட்சி மாநில மாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் நிலைதானே?

சரி, இந்த லட்சுமிக் கடவுளைப்பற்றி காதம் பரி காவியம் என்ன கூறு கிறது? இமயமலைச் சாரலில் லட்சுமி கடவுள் தனித்திருந்தபோது ஒரு முனிபுங்கவரைக் காதலித்து ஒரு குழந் தையைப் பெற்றதற்காக, கணவனான விஷ்ணு சண்டாளப் பெண்ணாகப் பிறக்குமாறு சாபமிட் டான் என்று இருக்கிறதே இப்படிப்பட்ட ஒரு பெண் ணுக்காக வரலட்சுமி விரதம் ஒரு கேடா?

Read more: http://viduthalai.in/page1/85455.html#ixzz3B2K90G6h

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்! குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு


சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்!

குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு

கழகத் தோழர்களே, பொது மக்களே குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாது என்று சுப்பிரமணியசாமி குடியரசு தலைவரிடம் மனு கொடுத்துள்ளது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்ளிட்டவர்கள் புதுவை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுவை மாநில அரசு முடிவு செய்ய ஆளுநரின் அனுமதியும் பெற்றாகி விட்டது. சட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன.

யார் இந்த சுப்பிரமணியசாமி?

இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சாமி என்பவர் அதிகப் பிரசங்கித்தனமாக குடியரசு தலைவரிடம் மனு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதுவை ஆளுநர் அளித்த அனுமதியைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிஜேபியின் நிலைப்பாடு என்ன?

பிஜேபியைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், இந்தக் கருத்து பி.ஜே.பி.யின் கருத்தா? அல்லது பிஜேபி தலைமையிலான அரசின் கருத்தா? என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து பிஜேபி கட்சி தலைமையும், பிஜேபி ஆட்சித் தலைமையும்தான் தெரிவிக்க வேண்டும்.

ஒரு மாநில ஆட்சி முடிவெடுத்து, ஆளுநரும் அனுமதியளித்த நிலையில், குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று ஒருவர் சொல்லுவது, அரசமைப்புச் சட்டத்தில் மதிப்புறு நிலையில் வைக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரையே தேவையில்லாத சிக்கலில் மாட்ட வைக்கும் முயற்சி என்று கருதிடவும் இடம் இருக்கிறது.

ஏற்கெனவே சில சாமியார்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே!

ஏற்கெனவே பிரேமானந்தா சாமியார் என்பவர் செய்த குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது நித்யானந்த சாமியும் செய்த குற்றங்களுக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதும் செய்யப்பட்டார்.

தமிழர்கள் வேறு வகையில் சிந்திக்க மாட்டார்களா?

இப்படிப்பட்ட ஒரு சூழலில் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கொலை குற்றம் உள்ளிட்ட வழக்கில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற்குக் குடியரசு தலைவரின் அதிகாரச் செல்வாக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் வேறுவிதமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அதிலும் குறிப்பாக சங்கரராமன் கொலை வழக்கில் மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ்சாட்சி என்பது இதற்கு முன் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்றே!

கொலை செய்யப்பட்ட சங்கரராமன் குடும்பத்தினரும் இந்த வழக்கில் மேல் முறையீடு தேவை என்பதை வலி யுறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் குடியரசு தலைவர் இதில் விலகியிருப்பது அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்?

குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக

கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

The President of India
Rashtrapati Bhawan
New Delhi

Honourable Sir,

The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.
The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.

Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 8.8.2014

Read more: http://viduthalai.in/page1/85456.html#ixzz3B2KJ88oW

தமிழ் ஓவியா said...


அய்யோ இந்து மதமே!


இஸ்லாம், கிறிஸ்தவம் போல இந்து மதக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்படவில்லை. அதற்கு சரித்திர ரீதியில் ஒரு அமைப் பாளரும் கிடையாது.

ஒன்றல்ல - பல கடவுள்களைக் கொண்டது. இந்துவாகி இருப்பதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்து மதம் என்று சொல்லப்படும் இதில் முரண்பாடுகள் செழித்து மலிந்து கிடக்கின்றன.

எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ அமைப்புகளோ ஒன்றும் கிடையாது.

இந்து மதத்திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக்கையும் - ஏதாவது ஒரு இந்து கூட்டத்தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

- இன்டர்நேஷனல் என் சைக்கிளோபீடியா ஆஃப் சோசியல் சயின்ஸ்,பக்கம் 358, தொகுதி 6

Read more: http://viduthalai.in/page1/85458.html#ixzz3B2MUhfCR

தமிழ் ஓவியா said...

எல்லா முயற்சிகளும் தோல்வி!

இந்துமதம் என்பது ஒரு சமூக நாகரிகமாகவும், பல் வேறு மதங்களின் இணைப்பாகவும் இருக்கின்றது. அதற்கு ஒரு ஆரம்பமோ, ஆசிரியரோ, ஒரு மத்திய அதிகாரமோ, அமைப்போ, நிறுவனமோ கிடையாது.

இந்து மதம் என்றால் என்ன என்று வரையறுக்க மேற் கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஒரு வழியில் திருப்தி அற்றுத்தான் முடிந்திருக்கின்றன.

இந்துக்கள் உள்பட, மிகச்சிறந்த இந்திய அறிஞர்கள் - இந்து மதம் என்ற இதன் ஒரு பகுதியை அல்லது மற்றதை வலியுறுத்தி பல்வேறு காலங்களில் சொல்லியிருப்பதால் - இந்த வரையறை வேலை மேலும் திருப்தியற்றதா யிருக்கின்றது.

- என்சைக்கிளோ பீடியா பிரிட்டானிகா, 1974, தொகுதி 8, பக்கம் 88

Read more: http://viduthalai.in/page1/85458.html#ixzz3B2MbX6kP

தமிழ் ஓவியா said...

கயிலாயத்தில் ஒரு உரையாடல்!

பார்வதி: நாதா! நாடெங்கும் மூளைக் காய்ச்சலாமே! நாம் நம் பக்தர்களைப் பாதுகாக்கப் புறப்படலாமா?

பரமசிவன்: அடியே! அறிவிலி! பக்தர்களுக்கு எப்படியடி மூளைக் காய்ச் சல் வரும்! மூளை இருப்ப வர்களுக்கல்லவா அது வரும்!

Read more: http://viduthalai.in/page1/85458.html#ixzz3B2Mh1FWn

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இராம இராவணப் போரில் இராமனுக்கு அனுசரணையாக இனத் தையே காட்டிக் கொடுத்த விபீடணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் ஆகிய வர்களைப் போல இன்றைக்கும், நமது இனத்தைப் பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், பதவி பெறவும் எண்ணுகின்றவர்கள் இருக் கின்றார்கள்.

Read more: http://viduthalai.in/page1/85462.html#ixzz3B2MtsMVk

தமிழ் ஓவியா said...


இவர்களும் மூடர்கள்தானே!


வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையில் ஒரு கதை வருகிறது. ஒரு குரு, அவருக்குத் துணையாக அய்ந்து சீடர்கள், ஒருநாள் குருவின் ஆடை கிழிந்து விட்டது.

குரு அந்த அய்ந்து சீடரையும் ஊசி ஒன்றினை வாங்கி வருமாறு அனுப்பினார். அய்ந்து சீடர்களும் ஊசி வாங்கச் சென்றனர். ஒரு கடையில் ஊசி ஒன்றினை வாங்கினர். ஆனால், எதிர்பார்த்தப்படி அவ்வளவு பெரிதாக இல்லை.

இவ்வளவு சிறிய பொருளை வாங்கவா அய்வரையும் அனுப்பினார் என்று அவர்களுக்குள் அய்யம். அதனால் ஒரு பனைமரம் ஒன்றினை வாங்கி அதன்மீது அந்த ஊசியை செருகி அய்வரும் தூக்கி வந்தனர்.

இக்கதை நம் ஊரில் நடக்கும் சம்பவம் ஒன்றினை நினைவூட்டுகிறது. நம் ஊரில் சாமி புறப்பாடு செய்வார்கள். அரை அடி அல்லது ஒரு அடி இருக்கும் அந்தச் சிலை. அந்த சிலையை ஒரு சிறுவன் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். ஆனால் நடப்பது என்ன?

பல மரங்களை பாடைபோல் கட்டி அச்சிலையை அதன்மேல் வைத்து பத்து இருபது பேர் தூக்கிச் செல்வர். இதைப் பார்க்கும் போது பரமார்த்த குரு கதை சீடர்கள் ஊசி வாங்க வந்த கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மூடர்களுக்கும் இந்த மூடர்களுக்கும், என்ன வேறுபாடு?

தகவல்: கோ.இராமச்சந்திரன், அருந்தவபுரம்

Read more: http://viduthalai.in/page1/85464.html#ixzz3B2N6droE

தமிழ் ஓவியா said...



இன்றைய ஆன்மிகம்?

அம்மை

ஆடி வந்து விட்டாலே ஆன்மீக விதிகளைச் சொல்லிக் கொண்டு பெண்கள் அதிக அளவில் ஆலயங்களிலும் தோழியர் இல்லங்களிலும் நடமாடு வதைக் காணலாம். கூழ் வார்த்தல் எனப்படுகிற முக்கிய நிகழ்ச்சியும் பூஜையும் எல்லா அம்மன் கோவில்களிலும் நடை பெறும். இதற்கு ஒரு புராணச் செய்தி உள்ளது. ஒரு சமயம் கார்த்த வீர் யன், ஜமதக்கினி முனிவர் மீது பகை உணர்வு கொண் டிருந்தான். அவனது மகன்கள் இருவர் முனி வரைக் கொன்று விட் டனர். கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாத ரேணுகாதேவி தீயை உண்டாக்கி அதில் விழுந்து விட்டாள். இதைக் கண்டு வருந்திய இந்திரன், வருண பக வானை அழைத்து மழையை பெய்விக்கும் படி கூறினான். மூட்டிய தீயில் விழுந்த ரேணு காவை மழை வந்து நனைத்துவிட வெற்று உடலோடு இருந்தவள் அருகிலிருந்த வேப்பமர இலைகளால் தன் உடலை மூடிக் கொண்டாள்.

வயிற்றுப் பசி ஏற்பட்ட போது அருகிலிருந்த கிராம மக்களிடம் உணவு கேட்டாள். அப்போது அவர்கள் மகரிஷி மனை வியான நீங்கள், எமது உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி, பச்சரிசி மாவு, வரகு, வெல்லம், பானகம், இளநீர், காய், கனிகளைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு கூழ் தயாரித்துச் சாப் பிட்டுத் தன் பசியைத் தீர்த்துக் கொண்டாள் ரேணுகாதேவி.

அச்சமயம் சிவபெரு மான் அவள் முன் தோன்றி, சக்தியின் அம்ச மாக இந்தப் புவியில் அவரித்த நீ பூமியில் பாவங்களைக் களைந்து மனிதர்களுக்கு ஏற்படும் தீ நோய்களைக் கட்டுப் படுத்துக. உனக்கு ஏற் பட்ட அம்மைக் கொப் புளங்கள் உன் பக்தர் களுக்கு வரும் போது, உடனே நீங்கிட உன் வேப்பிலையே கண் கண்ட மருந்து, பச்சரிசி மாவு பானகம், வெல்லம், இளநீர், கூழ் படைக்கும் போது.. நீ மாரிதேவியாக அருள் காத்து அவர் களுக்கு வந்த நோய் களை நீக்குவாயாக என் றார். எனவே தான் மாரித் தாயின் சன்னதிகளில் கூழ் படைக்கிறார்களாம்.

அம்மை வருவது ஒருவகை கிருமியால், அது தடுக்கப்பட்டது அம்மைத் தடுப்பூசியால்; இதில் எங்கு வந்தாள் ரேணுகாதேவி?

அம்மைக்குக் கார ணம் கடவுளா? கிருமியா? ஆன்மிகவாதிகளுக்கு நோய் வந்தால் கோயி லுக்குச் செல்வார்களா? மருத்துவரிடம் செல் வார்களா? சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85490.html#ixzz3B2NqgMMt

தமிழ் ஓவியா said...

கோயிலில் தங்கக் குவியல்

குட்டி மாநிலமான இமா சலப் பிரதேசத்தில் 29 கோயில் களில் 400 கிலோ தங்கம், 15,800 கிலோ வெள்ளிக் கட்டிகள் தூங்குகின்றனவாம்! (இவற்றை எடுத்து மக்கள் நலனுக்குப் பயன்படுத்தக் கூடாதா?)

Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz3B2OA3a6D

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)

Read more: http://viduthalai.in/page1/85500.html#ixzz3B2OXnJ8e

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம் ஜனநாயக விரோதம்!

- சுப. வீரபாண்டியன்

அரசின் நிதி ஒதுக்கீடு ஆண்டு தமிழ் சமஸ்கிருத மேம்பாட்டுக்கு மேம்பாட்டுக்கு 2008-09 4.47 கோடி 72.10 கோடி
2009-10 8.61 கோடி 99.18 கோடி 2010-11 10.16 கோடி 108.75 கோ

சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்கிறார், ஆர். நடராஜன் (தி இந்து 07.08.2014). ஒரு பன்மைச் சமூகமான, பல மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் வாரம் கொண்டாடுவது தவறு என்றே குறிப்பிடுகிறோம். 120 கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழியை மட்டுமே உயர்த்திப் பிடிப்பது தவறு என்பதை மனச்சான்று உள்ளவர்களால் உணர முடியும். தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே செம் மொழிகள். ஆனால், நிதி ஒதுக்கீட்டில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு நிலவுவது ஏன்? 03.08.2011 அன்று நாடாளு மன்றத்தில், மனித வள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர், தந்துள்ள புள்ளிவிவரம் கீழே:

அரசின் நிதி ஒதுக்கீடு

ஆண்டு தமிழ் மேம்பாட்டுக்கு சமஸ்கிருத மேம்பாட்டுக்கு

2008-09 4.47 கோடி 72.10 கோடி

2009-10 8.61 கோடி 99.18 கோடி

2010-11 10.16 கோடி 108.75 கோடி

மேற்காணும் நிதிஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது. முன்னதாக, வாஜ்பாய் ஆட்சிக் காலத் திலும், இப்போது மோடியின் ஆட்சிக் காலத்திலும் நிலை இதேதான்! இந்த உண்மையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத கட்டுரையா சிரியர், தமிழ் வாழ்கஎன எழுதி வைக்கப் பட்டுள்ள பெயர்ப் பலகையைக் கண்டு சினம்கொள்வது வேடிக்கை! நம்மைப் பொறுத்தமட்டில் சமஸ் கிருதம், இந்திக்கு மட்டும் அல்ல; உலகில் எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்லர். நாம் பேசுவதெல்லாம், இந்திய மொழி களுக்கு இடையிலான சமத்துவம் குறித்தே. சமஸ்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழுக்கும் வங்க மொழிக் கும் வாரம் எப்போது? அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வாரங்கள் எப்போது? இந்தியாவில் சமஸ்கிருதத் துக்கு மட்டும் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளனவே, மற்ற மொழிகளுக்கான பல்கலைக்கழகங்கள் எங்கே? இந்த அடிப்படையில் இன்னும் சில உண்மை களையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண் டியுள்ளது. சமஸ்கிருதம் என்பது வட்டார மொழிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளில் ஒன்று என்பதைத் தவிர, அம்மொழிக்குச் சட்டத்தில் வேறு எந்தத் தனிச் சிறப்பும் வழங்கப்படவில்லை. மேலும், சமஸ்கிருதம் எந்த ஒரு வட்டாரத் திலும் பேசப்படவில்லை என்னும் உண் மையையும் இங்கே பேசியாக வேண்டும். 1961-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சமஸ் கிருதம் பேசுகிறவர்களின் எண்ணிக்கை 2,544 மட்டுமே. 1991-ல் அது 49,000 ஆக உயர்ந்ததாகக் காட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் அந்த எண் ணிக்கை 15,000-க்கும் குறைவானதாக ஆகியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில், 15-க்கும் மேற்பட்ட மொழிகள், கோடிக் கணக்கான மக்களால் பேசப்படுகின்றன.

காஷ்மீரி, சந்தாலி போன்ற மொழிகள் லட்சக்கணக்கா னோரால் பேசப்படுகின்றன. ஆயிரக் கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே! அவ்வளவு குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு, 120 கோடி மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது என்ன நியாயம்? ஏனைய எல்லா மொழி களையும் புறக்கணித்துவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழி களுக்கு மட்டும் கோடிக் கணக்கில் நம் வரிப்பணத்தைக் கொட்டி மத்திய அரசு இப்படி வாரம்கொண்டாடுவது ஜனநாயக விரோதம் இல்லையா? சுப. வீரபாண்டியன், பேராசிரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர். தொடர்புக்கு: தீணீஸ்மீமீ11ரீனீணீவீறீ.நீஷீனீ நன்றி: தமிழ் இந்து ஆகஸ்டு 8, 2014

Read more: http://viduthalai.in/page1/85502.html#ixzz3B2Ojotx1

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

பொருளாதாரத்தில் சரிபண்ணி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன் தானே! பறையன் பறையன்தானே!

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PZwHaU

தமிழ் ஓவியா said...

வருணாசிரமத் தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாசிரமத் தர்மம் என்கிற ஓர் உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PfoMdt

தமிழ் ஓவியா said...


ஒரு யோசனை


சென்ற மே மாதம் 25 ஆம் தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் ஒரு யோசனை என்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் தொகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக யிருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டிருந்தோம்.

அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங் களில் சுமார் பத்து பேர்களேதான் அதற்கு சம்மதம் கொடுத்திருக் கிறார்கள். சுமார் 300க்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப்பற்றி கவலை இல்லையென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள். நிற்க, மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள், கண்டிப்பாகப் பக்கங்களை குறைக்கக் கூடாது என்றும் சௌகரியப் பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே வாசகர்களின் பெரும்பான் மையோர்களுடைய அபிப்ராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடிஅரசு பத்திரிக்கையில் பக்கங் களையாவது சந்தாவையாவது மாற்றுவது என்கின்ற விஷயத்தை நிறுத்தி வைத்திருக்கிறோமென்பதைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 06.07.1930

Read more: http://viduthalai.in/page1/85537.html#ixzz3B2PltWeW

தமிழ் ஓவியா said...

கதர்

கதர் பிரச்சாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம் பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது. இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை.

துணியோ சாணித்துணிக்கும் உதவாது. விலையோ டக்காமசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது. பஞ்சு விலை கண்டி1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும் அரிசி ரூ. 1 க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள்.

இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூ க்குள் மிக்க சவுதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது.

520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும்.

10 கிராம் உள்ள 50 இஞ்சு பீசு 3 ராத்தல் அல்லது மூன்றேகால் ராத்தல் எடை இருக்கும். இந்த மூன்றேகால் ராத்தலுக்குக் கிரயம் ரூ 1 - 10 - 0 நூற்பு கூலி ரூ 1. நெசவு கூலி 1 - 14 ஆக 10 கஜத்திற்கு ரூ 4 - 8 - 0 ஆகும். சிலவும் லாபமும் 5 அணா சேர்த்தால் 4 - 14 - 0 க்கு விற்கவேண்டியது நியாய மாகும்.

இப்போது 10 கஜம் 6 ரூபாயிக்கு மேலாகவே விற்கப் படுகின்றது. ஈரோட்டில் 6-8-0க்கும் கூட கிடைப்பதில்லை. ஆகவே தேசிய கிளர்ச்சியின் பயனாய் பல வியாபாரிகள் இன்சால் வென்டாகவும் பல வியாபாரிகள் கொள்ளையடிக்க வும்தான் வழியேற் படுவதைத் தவிர மற்றபடி உண்மையான பலன் ஒன்றையும் ஏழைகள் அனுபவித்ததாகத் தெரியவில்லை,

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page1/85537.html#ixzz3B2Pu7EBs

தமிழ் ஓவியா said...


விக்ரஹம்


ஏடு நடத்தும் பார்ப் பனர்கள் ஒன்றை மறக் காமல் செய்வார்கள். அது வேறு ஒன்றும் இல்லை. அவர்களின் லோகக் குருவான சங்கராச்சாரியார் படத்தைப் போடுவார்கள். அவாளின் அருள்வாக்கு களை வெளியிடுவார்கள்.

அதுபோல்தான் கல்கி (10.8.2014) மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியா ரின் அருள்வாக்கு ஒன்றை வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவார ஓலைச் சுவடி களை தில்லை நடராஜன் கோயிலில் ஓர் அறையில் போட்டுப் பூட்டி வைத்து விட்டனர் தீட்சிதர்கள்.

சிதம்பரம் சிற்றம் பலத்திலே ஓதுவார் ஆறு முகசாமி திருவாசகப் பாடல்களைப் பாடியபொ ழுது இப்பொழுதுதான் தில்லை தீட்சிதர்கள் தடுத் தனர், அடித்தனர் என்று கருதிட வேண்டாம்! அந்தக் காலத்திலேயே அவை தமிழில் உள்ளன என்ற துவேஷப் புயலால் அவற்றை வெளியிலேயே விடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தால் அவற்றை ஓர் அறையில் போட்டுப் பூட்டினர் என் பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த ஓலைச் சுவடி களை தீட்சிதர்களிடமி ருந்து மீட்க ராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பியுடன் தில்லை நட ராஜன் கோயிலுக்குச் செல்கிறான்.

தில்லை வாழ் கோயில் தீட்சதர்களோ மன்ன வனே வந்து விட்டான்; மரியாதையாக தேவார ஓலைச் சுவடிகளை கொடுத்து விட வேண்டி யதுதான் என்று நினைக்க வில்லை; மாறாக தேவாரம் பண்ணிய அந்த சாட்சாத் மூவரும் நேரில் வந்து கேட் கட்டும்; அப்பொழுதுதான் தருவோம் என்று ஆணவ மாகச் சொற்களை வாரி இறைத்தனர்.

இராஜராஜன் என்ன செய்தான்? அப்பர், சம் பந்தர், சுந்தரர் உருவப் பொம்மைகளை (விக்ர ஹங்களை) கொண்டு வந்து காட்டி, அந்த ஓலைச் சுவடிகளைத் தருமாறு வேண்டினான்; அப்பொ ழுதும் தீட்சிதர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இவை சிலைகள்தானே? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று வினவிய நேரத்தில் ராஜராஜன் அப்படியானால் நடராஜப் பெருமானும் சிலையல் லவோ? என்ற வினாவைத் திருப்பிப் போட்டான்.

அதற்கு மேலும் தடை செய்தால்.. வந்தவன் ராஜா ராஜன் ஆயிற்றே! கெஞ்சி னால் மிஞ்சுவதும், மிஞ் சினால் கெஞ்சுவதும்தான் பார்ப்பனர்களின் நிலை! நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த ஓலைச் சுவடிகள் குவிந்து கிடந்த அறையைத் திறந்தனர். கரையான் புற்று மூடிக் கிடந்தது. பெரும்பாலா னவை அழிந்தும் போய் விட்டன!

சங்கராச்சாரியார் இது பற்றி என்ன சொல்கிறார்? கல்கி கூறுகிறது: ராஜராஜன் கொண்டு வந்தது விக்ர ஹம்தான் என்றாலும் ப்ராண பிரதிஷ்டை ஆன படியால் அது ப்ராண னுள்ள மூர்த்திகளே என்ப தால் தேவாரத்தை தீட்சி தர்களிடமிருந்து மீட்க முடிந்தது என்று கதை விடுகிறார். எப்படி இருக்கிறது? தீட்சிதர்களைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85616.html#ixzz3B2QDyySF

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்


தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

Read more: http://viduthalai.in/page1/85652.html#ixzz3B2RJWkyA

தமிழ் ஓவியா said...

குளிர்காலத்தில் பக்கவாதம், மாரடைப்புக்கு வாய்ப்பு அதிகம்


சாதாரண நேரங்களைக் காட்டிலும் குளிர் காலங்களில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பத்துடன் கூடிய தட்பவெப்ப நிலையே அதிக காலங்கள் நீடிக்கிறது.

ஆனால், குளிர்காலம் வரும்போது இந்தியர்களின் உடல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாறும்போது நோய்கள் பாதிக்கும் அபாயங்கள் இருந்து வருகின்றன. ஆனால், இதற்கான காரணிகள் குறித்து ஏராளமானவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை.

பொதுவாக குளிர்காலங்களில் மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் குளுமை காரணமாக சுருங்கிவிடும். இதனால் இதயம் அதிக செயல்பட வேண்டிய கட்டாயத் திற்கு தள்ளப்படும்.

குளிர்காலத்தில் காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு, குறைந்து காணப்படும். இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்டை அணுக்கள் மற்றும் பைபர்நோஜன் மூலக்கூறு ஆகியவை அதிகரிக்கும். இதனால் மற்ற காலங்களைக் காட்டிலும் குளிர்காலத்தில் மனித உடலில் உள்ள கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது.

இதனால் வழக்கத்திற்கு மாறாக ரத்தம் உறையத்தொடங்கி, மூளை மற்றும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

ரத்தக்குழாயும் சுருங்கி, ரத்த ஓட்டமும் குறைவதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இ

ந்தியாவில் மலைப்பிரதேசங் களில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மற்ற பிரதேசங்களில் வசிப்பவர்களை காட்டிலும் 50 சதவீதம் அதிகம் உள்ளது.

இதை எப்படி நாம் தெரிந்துகொள்வது என்ற சந்தேகம் எழலாம். குளிர்காலத்தில் மார்பில் அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், அதுதான் ரத்த ஓட்டம் குறைந்ததற்கான முதல் அறிகுறி.

குளிர்காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பதால், இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்தக்கொதிப்பு ஏற்படும். இது போன்ற பாதிப்பு வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படும்.

மேலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மனித உடலில் உள்ள வெப்பம் 80 பாரன்ஹீட்டுக்கு குறையும்போது விளைவுகள் விபரீதமாக இருக்கும். உடல் நடுக்கம் தொடங்கி, மயக்கநிலை, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page1/85645.html#ixzz3B2SE96ZO

தமிழ் ஓவியா said...


பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்


அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணு கின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் செரிமானமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாகத் துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக் கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்ப வர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையை யும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படு பவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் குடிக்கவேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும்.

இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பயன்கள் உண்டு. பீட்ரூட்டின் முக்கியப் பயன்கள்: புற்றுநோய் பரவு வதை தடுக்கும்.

* மலச்சிக்கலைப் போக்கும்.

* பித்தத்தைக் குறைக்கும்

* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.

* சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

Read more: http://viduthalai.in/page1/85650.html#ixzz3B2Sbrpiw

தமிழ் ஓவியா said...


சாமி நகையைத் திருடிய அர்ச்சகர்

மைசூரு, ஆக.12-_ மைசூரு, மேல் கோட்டை செலுவநாராயணசாமி கோவிலில், 800 கிராம் தங்க நகை திருடு போனது. இது தொடர்பாக, அர்ச் சகர் நரசராஜபட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், தங்க நகைகளை, முரளிதர் ஜெகந்நாத் என்பவர் அன்பளிப்பாக கொடுத்த பின், மூன்று மாதங்கள் வரை, நரசராஜபட் அதை கோவில் செல்வத்தில் ஒப்படைக்காமல், வீட் டிலேயே வைத்திருந்தது தெரியவந்தது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களில், பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண் டும் என, தலித் சங்கர்ஷ சமிதி அமைப்பாளர் சீனிவாஸ், பாண்டவபுரா நீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்தார். நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, நரசராஜபட் மீது புதிய குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளது. சமிதி அமைப்பாளர் சீனிவாஸ் கூறுகையில், "புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததிலிருந்து முந்தைய விசாரணை, அர்ச்சகரை காப்பாற்றும் வகையில் தயாரித்திருப்பது நிரூபணமாகியுள்ளது. தற்போது எடுக்கப்பட் டுள்ள முடிவு, உண்மையை வெளி கொண்டுவரும் என, நம்புகிறேன், என்றார்.

Read more: http://viduthalai.in/page1/85700.html#ixzz3B53ZKrhi

தமிழ் ஓவியா said...


இந்தியா இந்து நாடா?


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித் துள்ள கருத்து - நாட்டில் தேவையில்லாத பிரச்சி னைக்குக் கொடியேற்றி வைத்துள்ளது. இந்தியா இந்து நாடு என்று அவர் தெரிவித்துள்ள கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று விடுதலையில் மிக முக்கியமான அறிக்கையினை காலங் கருதி வெளியிட்டுள்ளார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் தானே அறிவித்துள்ளார் என்று அலட்சியப்படுத்தி விடவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ். தான் பா.ஜ.க.வுக்குத் தாய் நிறுவனம்! இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் ஆல் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டவர்தான் பிஜேபி வேட்பாளரான நரேந்திர மோடி என்பதைத் தெரிந்து கொண்டால் ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவர் தெரிவித்த கருத்தின் அபாயம் எத்தகையது என்பது எளிதிலேயே விளங்கி விடும்.

ஆர்.எஸ்.எஸ்-இல் தயாரிக்கப்பட்டவரே பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக வர முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் விதிமுறையாகும். 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி பச்சையாக ஒப்புக் கொண்ட ஓர் உண்மை உண்டு.

ஆர்.எஸ்.எஸின் அறிவுரையைக் கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்ததாகக் கூறிடவில் லையா? இதற்கு மேல் என்ன வேண்டும்? ஆர். எஸ்.எஸ்., என்ன சொல்லுகிறதோ, என்ன நினைக் கிறதோ, அதன்படி செயல்பட வேண்டிய கட்டாயம் மத்திய பிஜேபி அரசுக்கு இருக்கிறது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அதனை நிறைவேற்றுவதைத் தவிர பிஜேபி தலைமை யிலான அரசுக்கு வேறு வழியும் கிடையாது - கிடையவே கிடையாது!

பிஜேபியின் தேர்தல் அறிக்கையை எடுத்துக் கொண்டாலும் 370ஆவது சட்டப் பிரிவு திருத்தம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கென்றுள்ள சிறப்பு உரிமைகளை நீக்குவது, பசு பாதுகாப்பு, கங்கையைச் சுத்தப்படுத்துவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-இன் அஜண்டா கம்பீரமாக இடம் பெற்று இருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமாகக் கருத்தூன்றத் தக்க விடயம் உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

இந்தச் சூழலில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறுவது பச்சையாக அரசமைப்புச் சட்டத்தை அத்துமீறுதல் ஆகாதா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிப் படையாக அறிவித்த பிறகும்கூட, பிரதமரோ அல்லது பிஜேபியின் தலைவரோ ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்தை அரசைக் கட்டுப்படுத்தாது; பிஜேபியைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? ஏன் சொல்லவில்லை? மவுனம் சம்மதத் துக்கு அடையாளம் என்கின்ற உலகியலை ஏற்றுக் கொண்டால் ஒரு மணித்துளி அளவுகூட ஆட்சியில் நீடிக்க முடியாது - கூடாது!

நாடாளுமன்றத்தில் மதச் சார்பற்ற கட்சிகள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

மத்தியில் ஆட்சி அமைத்து 60 நாட்களுக்குள் ளாகவே மத்திய ஆட்சியின் மதச் சார்பற்ற தன்மையின் மீது அய்யத்துக்கு இடமின்றி சந்தேக நிழல்கள் படரத் தொடங்கி விட்டன.

குடியரசு தலைவர் அழைத்த இப்தார் விருந்தையே பிரதமர் மோடி புறக்கணித்தது சாதாரணமானதல்ல.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் மீதான கருத்தை வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கத் தயங்குவதும் இந்தப் பட்டியலில் வைக்கத் தகுந்ததே!

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்குப் பச்சை யான இந்துத்துவாவாதியைப் பொறுக்கி எடுத்து அறிவித்திருப்பதும் அந்த வகையில்தான்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டு இருப் பதும், அதற்காக மக்கள் வரிப் பணத்தைக் கோடி கோடி யாகக் கொட்டுவதும், இந்துத்துவாவின் கூர்மையான நடவடிக்கையே!

சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியில்தான் மத்திய அரசு பணியாளர்கள் கடிதத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இதற்கு முன் ஆணை பிறப்பித்ததும் இந்துத்துவாவின் செயல்பாடே!

இத்தகைய செயல்பாடுகள் மூலம் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் பிளவு மனப்பான்மையை உண்டாக்குவது - எத்தகைய விபரீதமானது!

வேற்றுமையில் ஒற்றுமை என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டதெல்லாம் பழங்கதைதானா? கட்சிகளை மறந்து இந்துத்துவாவாதிகளின் இத்தகைய மதவெறிப் போக்கை வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் வழக்கம் போலவே தக்கதோர் தருணத்தில் முன் குரல் கொடுத்து முழங்கியுள்ளார் - மதவாத சக்திகளை முறியடிக்க ஓரணியில் திரளுவோம்! திரளுவோம்!!

Read more: http://viduthalai.in/page1/85704.html#ixzz3B53tgcf4

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாது

பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது. - (விடுதலை, 11.7.1954)

Read more: http://viduthalai.in/page1/85703.html#ixzz3B543vJcV

தமிழ் ஓவியா said...


ஏ! தாழ்ந்த தமிழகமே!

வணக்கம், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று யுனெஸ்கோ ஹிழிணிஷிசிளி நிறுவனத்தால் விருது வழங்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில், தமிழர் தலைவர் முனைவர் மானமிகு கி.வீரமணியார் ஓயாது பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வரும் தமிழ் மண்ணில் இன்னும் சில ஊர்களில் வெட்கக்கேடான செயல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

31.7.2014 தேதிய தொலைக்காட்சியில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் உள்ள பல்லேனஹள்ளி என்ற கிராமத்தில் முனியசாமிக்கு ஒரு கோயில். அந்தக் கோயிலுக்கு அருகில் ஒரு பெரிய அரச மரம் உள்ளது. அந்த அரசமரத்தில் நூற்றுக் கணக்கான வவ்வால்கள் தங்கி வருகின்றன. அந்த வவ்வால்கள் அந்த கிராம மக் களுக்குக் கடவுளாம்! அந்த வவ்வால்களின் கழிவுகளை அந்த கிராம மக்கள் பிர சாதமாக மதிக்கிறார்களாம்!

முனியசாமியை வேண்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செய்தால் நினைத்த செயல் கைகூடுகிறதாம். படிப்பில் மந்தமாக இருந்த சில பெண்கள் முனியசாமியை வேண்டிக் கொண்டதில் பட்ட வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகள் ஆகியிருக்கிறார்களாம்!

கோயிலில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் தாய்மார்களிடம் சில இளம் பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடிப் பிச்சை வாங்குகிறார்கள்! ஒரு கிராமத்தில் மழை வேண்டி இரு கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக் கிறார்கள்! கழுதைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று திருமணம் செய்து வைக்கும் அறிவிலிகள் சிந்திப்பதே இல்லை.

மற்றொரு கிராமத்தில் பெண்களுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று பேயை விரட்ட பெண்களைக் கோயில் பூசாரி சவுக்கால் அடிக்கிறான்! எந்த பார்ப்பனப் பெண்ணா வது பேய் பிடித்திருக்கிறது என்று தன்னை பூசாரி சவுக்கால் அடிக்க சம்மதிப்பாளா?
கரூர் அருகே மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் பெண்கள் தலையில், நேர்த்திக் கடன் என்று சொல்லி பூசாரி தேங்காயை உடைக்கிறான். சில பெண்கள் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டு இரத்தம் வடிகிறது. அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள்!

ஒரு கோயில் தேர்த்திருவிழாவில் தேரின் சக்கரம் பக்தரின் உடலில் ஏறி பக்தர் இறந்தே போகிறார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் பண்டித நேரு பின்வரும் வேண்டுகோளை விடுத் துள்ளார். இந்தியா தனது மத மவுடீகங் களைக் களைந்து விஞ்ஞானப் பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங் களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச் சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

திருவண்ணாமலை கார்த்திகைத் தீப விழாவிற்கும், திருச்செந்தூர் சூர சம்மாரத் திற்கும் பக்தர்கள் 15 இலட்சம், 20 லட்சம் என்று கூடுகிறார்கள்! இதனால் மக்களின் நேரம், நினைப்பு, உழைப்பு, பணம் ஆகி யவை செலவே தவிர தமிழகத்திற்கு எவ் வகை நன்மையும் கிடையாது. சேத்துப் பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சை யம்மன் கோவிலில் தீமிதி விழாவில் தீ மிதிப் போரைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

என்பது வள்ளுவரின் பொன்மொழி, தந்தை பெரியார், மானமிகு கி.வீரமணியார் ஆகிய அறிஞர்களின் கருத்துக்களைக் கேட்டாலே சான்றோர் மூடநம்பிக்கைகளி லிருந்து திருந்திவிடுவார்கள். தமிழகத்தில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் திருந்தி இருக்கிறார்கள். ஆனால் கீழ்மக்கள் கரும்பு போல் பிழிந்தால் தான் திருந்துவார்கள். ஆகவே பகுத்தறிவுக் கொள்கையையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்திய அரசியல் சட்டத்தை பின்பற்றும் தமிழ்நாடு அரசு சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பேய் விரட்டுதல், தலையில் தேங்காய் உடைத்தல், நெருப்பு மிதித்தல் போன்ற மூடப்பழக்கங்களைத் தடை செய்ய வேண்டும். தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் கொடியில் ஏந்தி இருக்கும் அண்ணா திமுக அரசு செய்ய வேண்டிய கடமை ஆகும் இது.

- இர.செங்கல்வராயன்
முன்னாள் துணைத் தலைவர், ப.க.,

Read more: http://viduthalai.in/page1/85706.html#ixzz3B54D9GoN

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்துத்துவா பேச்சுக்குக் கண்டனங்கள்


கட்டாக், ஆக. 12_ இந்தி யர்களின் கலாச்சார அடை யாளம் இந்துத்துவா என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள் ளார். ஒடிசா மாநிலம், கட் டாக் நகரில் ஒடியா மொழி வாரப் பத்திரிகை ஒன்றின் பொன்விழா ஆண்டை யொட்டி நடந்த நிகழ்ச்சி யில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:

இங்கிலாந்தில் இருப்ப வர்கள் ஆங்கிலேயர்கள், ஜெர்மனியில் இருப்பவர் கள் ஜெர்மானியர்கள், அமெரிக்காவில் இருப் போர் அமெரிக்கர்கள். ஆனால், இந்துஸ்தானில் இருப்பவர்கள் மட்டும் இந்துக்கள் என அழைக்கப் படவில்லை. இந்தியர்க ளின் கலாச்சார அடையா ளம் இந்துத்துவா. தற்போது இந்தியாவில் இருப்பவர் கள் எல்லாம் இந்த உயர்ந்த பண்பாட்டிலிருந்து வந்த வர்கள்தான்.

இந்துத்துவா தான் வாழ்க்கை வழிமுறை. இந்துக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக் கலாம், எந்த கடவுளையும் வணங்கலாம் அல்லது எந்த கடவுளையும் வழிபடா மல் இருக்கலாம். விவேகா னந்தர் எந்த கடவுளையும் வணங்கவில்லை. இதற்காக அவர் நாத்திகராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் மீது நம் பிக்கை இல்லாதவர்தான் நாத்திகர். பழங்காலத்தி லிருந்து பல வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா ஒருங்கிணைந்து இருப்ப தற்கு அடிப்படையே இந் துத்துவாதான் என்பதை உலகம் உணர்ந்துள்ளது.

ஆனால், இதை இந் தியாவில் இருப்பவர்கள் உணராததுதான் கவலை அளிக்கிறது. இது தொடர் பாக எப்போது ஆலோ சனை நடந்ததாலும், இது பற்றி பேசுபவர் மதவாதி என தவறாக முத்திரை குத்தப்படுகிறது. எல்லா இடங்களில் இருள் சூழ்ந் துள்ள நிலையில் உலக நாடுகள் ஆறுதலுக்காக இந்தியாவை பார்க்கின் றன.

ஏனென்றால் இந்தியா சரியான பாதையில் முன் னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தர்மம் நீடிக் கும் வரை, உலக நாடுகள் இந்தியாவை மதிக்கும். தர்மம் போய் விட்டால், பூமியில் எந்த சக்தியாலும் நாடு சிதைவதை தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

திக்விஜய் சிங் தாக்கு

உள்துறை அமைச்சகத் தின் செயல்பாடு குறித்து மாநிலங்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், நாடு சந்திக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் தீவிர வாதம். இதை வளர்ப்பது மதவாத கொள்கை. தலிபான் கொள்கை பிரச்சினை உருவாக்குகிறது. அதே போல் சங் பரிவார் கொள் கையும் அமைதியை கெடுக் கிறது.

சங் அமைப்பு நாட் டில் பதிவு செய்யப்பட வில்லை. அதில் யாரும் உறுப்பினர் கிடையாது. புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மதவாத கொள்கை பரப் பப்படுகிறது. மைக்கேல் பார்க்கர் எழுதிய ஹார் வஸ்ட் ஆப் ஹேட், காந்த மால் இன் கிராஸ்பயர், பிரானன் எழுதிய ஒரிசா இன் கிராஸ்பயர் ஆகிய புத்தகங்களை இந்தியா பவுண்டேஷன் வெளியிட் டுள்ளது.

ஆனால் வெளி யீட்டாளர் பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்த புத்தகங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னுரை எழுதியிருக்கிறார். மதக் கலவரத்தை பரப்பும் இது போன்ற புத்தகங்களை தடை செய்து அரசு விசா ரணை நடத்த வேண்டும் என்றார்.

மக்களவை தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்றதற்கு மோடி, ராஜ் நாத், அமித்ஷா ஆகி யோரின் கூட்டணிதான் காரணம் என கடந்த சனிக் கிழமை நடந்த பா.ஜ தேசிய கவுன்சில் கூட்டத் தில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

இதற்கு மறுநாள் ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத், தேர்தல் வெற்றிக்கு எந்த ஒரு தனி மனிதரோ, தனிக் கட்சியோ, அமைப்போ காரணம் அல்ல. ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்பியதால், இந்த மாற்றம் ஏற்பட்டது என கூறினார்.

இந்த கருத் துக்கு பா.ஜ விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இப்படி ஒரு கருத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறியுள்ளது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இடையே நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மோகன் பகவத் கூறிய தற்கு அரசியல் கட்சி தலை வர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மனீஷ் திவாரி:

அரசமைப்பு சட்டத்தை படிக்கும்படி மோகன் பகவத்துக்கு அறிவுறுத் தப்பட வேண்டும். அதில் இந்தியா பாரத் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்துஸ்தான் என எங்கும் குறிப்பிடப் படவில்லை என்றார்.

சீதாராம் யெச்சூரி:

அரசமைப்பு சட்டத்தை நம்புகிறாரா இல்லையா என்பதை பகவத் தெளிவு படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

சரத்யாதவ்:

சுதந்திரம் பெற்றதில் இருந்து அரசமைப்பு சட் டத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. எதிர்காலத்திலும் இந்தியா இதே வழியைத் தான் பின்பற்றும் என்றார்.

மாயாவதி:

அரசமைப்பு சட்டம் பற்றி மோகன் பகவத்துக்கு சரியாக தெரியவில்லை. இந் தியாவில் உள்ள மக்கள் பல மதங்களை பின்பற்று கிறார்கள் என்பதை மன தில் வைத்துதான் அம்பேத் கர் அரசமைப்பு சட்டத்தை எழுதினார். அரசமைப்பு சட் டத்தை படித்தபின் மோகன் பகவத் தனது கருத்தை தெரி விக்க வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page1/85724.html#ixzz3B54paWaU

தமிழ் ஓவியா said...

செத்துப் போன சமஸ்கிருதத்தின் பரிதாப நிலை


தமிழ்நாட்டில் ஒருவர்கூட சமஸ்கிருதம் பேசவில்லை!

சென்னை, ஆக.13_ நாட்டின் வடகிழக்குப் பகுதியில் சமஸ்கிருதம் பேசக்கூடியவர் ஒருவர்கூட கிடையாது. மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களைக் கடந்து நாட்டின் கிழக்கு மாநிலங்களில் 2001 புள்ளிவிவரத்தின்படி சமஸ்கிருதம் பேசக்கூடியவர் ஒருவர்கூட கிடையாது.

தமிழ்நாடு தன்னித்தன்மையுடன் உள்ளது. 1921 ஆம் ஆண்டின் புள்ளிவிவரக் கணக்கின்படி மெட் ராஸ் மாகாணம் இந்தியாவிலேயே சமஸ்கிருதம் பேசுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இந்தியா முழுவதுமாக சமஸ்கிருதம் பேசுபவர்களில் 356 பேரில் தமிழ்நாட்டில் 315 பேர் இருந்துள்ளனர்.

சமஸ்கிருதம் பேசுபவர்களில் ஒரே நிலையில் இல்லாமல் 1981 ஆம் ஆண்டில் 6,106 பேரும், அதி லிருந்து 1991 ஆம் ஆண்டில் 49,736 பேரும், அதே 2001 ஆம் ஆண்டில் 14,135 பேருமாக இருப்பதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் 14 ஆயிரம்தான்

இவ்வளவு மாறுதல்களுக்குக் காரணம் புள்ளி விவரம் எடுக்கப்பட்ட முறைகளில் உள்ள குறைபாடு அல்ல. அன்றன்றைய அரசியல் சூழல்களுக்கு ஏற்ப மக்கள் தங்கள் மொழியின்மீதான ஈடுபாடுகளை மாற்றிக் கொள்வதுதான் காரணமாக உள்ளது என்று மக்களின் மொழியியல் குறித்து புள்ளிவிவரம் தொடர் பான பேராசிரியர் கணேஷ் தெவி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உள்ள அரசியல் விருப்பங்கள் அல்லது சூழல்களைப் பொறுத்து அமைந்திருப்பதை புள்ளிவிவரத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. 1991 ஆம் ஆண்டுக்கும், 2001 ஆம் ஆண்டுக்கும் இடையே மேற்கு இந்தியப் பகுதி களில் உள்ள பழங்குடியினத்தின் பல்வேறு குழுக்கள் பேசக்கூடிய மொழிகள் குறித்த பில்(வில்) வழக்கில் குறிப்பிட்டுள்ளபடி, மொழிகளைப் பேசக் கூடிய வர்களின் எண்ணிக்கை இருமடங்காக உள்ளது. அந்த மக்களின் விருப்பங்களை வெளிக்கொணர்வதாக இருந்தமையால், ஜார்கண்ட் என்கிற புதிய மாநிலமே 1990 ஆம் ஆண்டுகளில் உருவானது என்று தெவி கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது,

மேற்கு வங்காளத்தில்...

இந்திக்குப் பின்னர் அதிகம் பேசக்கூடியவர்களாக வங்க மொழியைப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். கடந்த முப்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, மேற்கு வங்கத்தின் மக்கள் தொகையைக் காட்டிலும், வங்க மொழி பேசுபவர் களின் எண்ணிக்கை மிகுந்து காணப்படுகிறது. அதற்குக் காரணம் வங்க தேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் மொழி உருதுவாக இருப் பினும், வங்க மொழி என்று இந்தியக் குடியுரிமையைக் கோருவதற்காகக் கூறிவருவதும் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

புள்ளிவிவரங்கள் ஒரு பொருட்டாகத் தெரியா விட்டாலும், அதுதான் மொழிகளைப் பேசுபவர்களின் அரசியல் கூறுகளை அளப்பதற்கான சரியான கருவியாக உள்ளன.
செம்மொழிகளுக்கான மய்யத்தைச் சேர்ந்த பி.மல்லிகார்ஜூன் கூறும்போது, நினைவில் வைத்துக்கொண்டு பேசக்கூடியதை மட்டும் கொண்ட பழைய சமஸ்கிருதத்தை உண்மை யாகவே தாய்மொழியாகக் கொண்டுள்ளவர்கள் நீண்டகாலத்துக்கு யாரும் கிடையாது. சமஸ்கிருதத்தை அப்படி தாய்மொழியாகக் கூறுபவர்கள் உயர்வான கவுரவத்துக்கும், அரசியல் சட்ட ரீதியாக பலன் பெறுவதற்காக மட்டுமே அப்படி சமஸ்கிருதத்தைத் தாய்மொழி என்று சொந்தம் கொண்டாடுபவர்களாக உள்ளனர் என்று கூறுகிறார்.

ஒரே ஒரு ஊரில்...

பேராசிரியர் கணேஷ் தெவி கூறும்போது,

இல்லாத ஒரு மொழியான சமஸ்கிருதம் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது; நாட்டின் எங்கோ ஒரு மூலையில் சமஸ்கிருதம் பேசப்படுவதாகத்தான் எண்ண முடிகிறது. கருநாடகாவில் உள்ள மத்தூர் கிராமத்தை சமஸ்கிருத கிராமமாகக் குறிப்பிடுவது வாடிக்கையாக உள்ளது. அங்கு தாய்மொழியாக உள்ள தாகவும் கூறப்படுகிறது. இறுதியாக, சமஸ்கிருதம் எங்குமே இல்லாவிட்டாலும், எங்கேயாகிலும் இருந்தாலும், அது சித்தாந்தங்களின்மூலம் நம்மி டையே இருப்பதாகக் கூறப்படுகிறது.

உணர்ச்சிகரமான தொடர்பு அந்த மொழிவாயிலாக உள்ளது. இதிகாசங்கள் மற்றும் சடங்குகள் சமஸ்கிருதத் திலிருந்து வெளியேறிவிட்டால் மற்றொரு மொழியால், அந்நிலையை மாற்ற முடியும் என்று தெவி கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page1/85756.html#ixzz3B55C8rsX

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் பேசுவோர் எங்கே?

பில்லியனுக்கும் அதிகமான அளவில் மக்கள் உள்ள இந்நாட்டில் 14 ஆயிரம் பேர் சமஸ்கிருதத்தைத் தங்கள் தாய் மொழியாகக் கூறியுள்ளதாக புள்ளி விவர எண்ணிக்கை கூறுகின்றது.

மத்திய அரசு மாவட்டந்தோறும் தேவ பாஷை என்று கூறி, சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாட முனைப்பு காட்டி வருகிறது. 2011 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் இன்னமும் வெளியிடப்படாத நிலையில், 2001 ஆம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்களின்படி, உத்தரப்பிரதேசத்தின் மய்யப்பகுதி, வட தெலங்கானா, தெற்கு ராஜஸ்தான், நாக்பூர் மற்றும் அரித்துவார் ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சமஸ்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர். உத்தரப்பிரதேசம் சீதாபூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 550 பேர் சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page1/85756.html#ixzz3B55LF69a

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரி-யார்?

ஜெகத்குரு என்று சங்கராச்சாரியாரைக் கூறுகிறார்களே! உண்மையில் சங் கராச்சாரியார் ஜெகத்துக்கே (உலகத்துக்கே) குருவா? முதலில் உள்ளூரில் இவரை அனைவரும் குருவாக ஏற் றுக் கொள்வார்களா? இந்து மதத்தில்தானாகட்டும் வை ணவர்கள் இவரைக் குரு வாக ஒப்புக்கொள்வார்களா?

உண்மை இவ்வாறு இருக்க, இவரை லோகக் குரு என்றும், ஜெகத்குரு என்றும் ஜெய பேரிகை கொட்டுவதில் மட்டும் குறைச்சலில்லை.

சங்கராச்சாரியார்களி லேயே மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யைத் தூக்கி வைத்துப் பேசுவார்கள்; புனிதர் என்று போற்றுவார்கள்.

உண்மை என்னவென் றால், துவேஷத்தில் தும் பிக்கை யானையைவிடப் பலம் வாய்ந்தவர்.

தீண்டாமைபற்றிப் பேச பாலக்காடு சென்று, காந்தி யார் அவரைச் சந்தித்தார் (16.10.1927). மகாத்மா என்று மக்கள் போற்றும் அந்தத் தலைவரை மாட்டுக் கொட் டகையில் உட்கார வைத் துத்தான் பேசினார் அந்த சங்கராச்சாரியார்.

பேசி என்ன பயன்?

ஹரிஜன ஆலயப் பிர வேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர் கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் - இம்சைக்கு ஒப்பாகுமென்று தாம் முடி வுக்கு வரவேண்டியிருக்கின் றது என்று ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித் தார். (ஆதாரம்: தமிழ்நாட் டில் காந்தி, பக்கம் 575, 576).

தீண்டாமைக் கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட வர்களின் வலிகள் சங்கராச் சாரியார்களுக்கு முக்கிய மல்ல; மாறாக, அதற்குக் காரணமானவர்கள் மனம் நோவதுதான் சங்கராச்சாரி யார்களுக்கு முக்கியம்.

இருப்பதிலேயே மகாபுரு ஷர் என்று பார்ப்பனர்களால் போற்றப்படும் அவர் நிலையே இப்படி! அவர் குறித்து தந்தை பெரியார் தெரிவித்த கருத் தும், தகவலும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குரியவை!

12 வருடத்திற்கு ஒரு முறை ஈசன் தண்ணீர் விடு வதாகக் கூறியபடி, 12 வருடத் திற்கு ஒருமுறை (கும்ப கோணம்) மகாமகம் வரு கிறது. முன் மகாமகம் 1945 ஆம் ஆண்டில் வந்தது. அதற்குமுன் 1933 இல் வந்தது. அதன்படி 12 வருடத் துக்கு ஒருமுறை இருக்க, இப்போது 1957 ஆம் ஆண்டில் வரவேண்டும்.

ஆனால், 1956 ஆம் ஆண்டிலேயே வருகிறது. இதன் காரணம், சங்கராச் சாரிக்கு இப்போது உடல் நிலை சரியில்லையாம். அவர் அடுத்த வருடம்வரை உயி ருடன் இருப்பாரோ? இருக்க மாட்டாரோ? என்ற சந்தேகத் தின்மீது, அவர் இப்பொழுது இருக்கும்போதே கொண்டா டிவிடவேண்டும் என்பதற் காக அடுத்த வருடம் கொண் டாடவேண்டியதை, இந்த வருடம் முன்பாக ஒத்தி வைத்துக் கொண்டாடுகிறார் களாம்.

இதன்படி ஈசன் இப் போது சங்கராச்சாரியாருக்கு உடல்நிலை சரியில்லை என் பதற்காக, 11 வருடத்திலேயே தண்ணீர் விடுகிறார்கள் என்று ஆகிறது. இப்படிப் பார்ப்பான் மனது வைத்தால் ஈசனுடைய செய்கையையும் மாற்றிவிட முடியும். அப்படி யானால், கடவுளும், வெங் காயமும் எங்கே போனதோ தெரியவில்லை (திருவத்தி புரத்தில் தந்தை பெரியார் பேசியது, விடுதலை, 6.2.1956).

இதற்கு விளக்கமும் தேவையா? இந்து மதம், சங்கராச்சாரியார்களின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வீர்! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85755.html#ixzz3B55RQ3AY

தமிழ் ஓவியா said...

அங்கன்வாடி பணியாளர்கள் பிரச்சினை: தமிழர் தலைவர் வேண்டுகோள்!


அங்கன்வாடி பணியாளர்கள் பிரச்சினை:

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் செயல்படுத்த முன்வரவேண்டும்

தமிழர் தலைவர் வேண்டுகோள்!

பெரியார் பணி முடிப்பவர்களுக்கு ஓய்வு, சலிப்பு கிடையாது!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி - சத்துணவுப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களேயாவர்.

தி.மு.க. ஆட்சியின்போது பதவி உயர்வு உள்ளிட்ட உயர்வுகள் அளிக்கப்பட்டன. அதற்குப் பின் இந்தப் பணியாளர்கள் மேம் பாட்டுக்காக தமிழ்நாடு அரசு எதையும் செய்யவில்லை.

இவ்வளவுக்கும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க. முக்கிய வாக்குறுதியைக் கொடுத்திருந்தது.

சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப் பட்டு, முடிவுகள் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மூன்றாண்டுகள் ஓடியும், இந்த வாக்குறுதிகள் காப்பாற்றப் படவில்லை; இதில் வறட்டுக் கவுரவம் பார்க்காமல், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய இப்பணியாளர்கள்மீது கருணை செலுத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page1/85758.html#ixzz3B55aQRH7

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம் >>>

உடைமை எது?

1.8.2014 விடுதலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ் வியல் சிந்தனைகள் கட்டுரையான உண்மையான உடைமை (சொத்து) எது? மனிதர்கள் அனைவரும் மிகவும் சிந்தித்துத் சீர்தூக்கி பார்க்க வேண்டிய சிறப்புக் கட்டுரை.
மனிதர்களான நம்மில் பலரும் உடைமை என்றால் செல்வம் என்று பொருள் கொள்ளும்போது பணத்தைத் தான் செல்வம் என்று இரு பொருள் கொள்கின்றனரே தவிர அதைவிட விரிவான அழியாச் செல்வங்களான பல பண்புகள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர் என்று ஆசிரியர் அவர் கள் கட்டுரையில் அழகாகக் குறிப்பிடு கிறார்.

குறளில் 133 அதிகாரங்களில் உள்ள தலைப்பில் உள்ள 10 உடைமைகளை விவரித்துக் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து எழுதுகிறபோது ஒரு இலட்சிய மனிதன் சிறந்த மனிதரின் பண்பு நலன்களில் இந்த பத்தும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவனை வெல்லுதல் - யார்க்கும் அரிதினும் அரி தாகும் என்று குறிப்பிடுகிறார். இன்றைய காலகட்டத்திலே மனிதர்களுக்குத் தேவையான அற்புதமான கட்டுரை.

அடக்கமின்மை, ஆடம்பரம், அதிகார போதை, தன்னை அசைக்க இனி எவராலும் முடியாது என்ற இறுமாப்பு முதலியவை அவர்களை விரைவில் குழியில் தள்ளிவிடும் என்ற நிலையை நாம் கண் எதிரிலேயே காண்கிறோமா இல்லையா? என்று கட்டுரையை நிறைவு செய்கிறார். இன்றைய கால கட்டத்திற்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது- ஆசிரியர் அவர்களின் வாழ் வியல் சிந்தனைகள் அனைத்து மக் களின் நல வாழ்வுக்கும், வளவாழ்வுக் கும், சுயமரியாதை வாழ்வுக்கும், பகுத் தறிவுச் சூரியன். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! வெல்க வாழ்வியல் சிந்தனைகள்!

- தி.க.பாலு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)

Read more: http://viduthalai.in/page1/85780.html#ixzz3B55zmKFs

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்திமீது நம்பிக்கை இல்லை


முக்கிய கோவில்களில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்களாம்!

இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!

மதுரை, ஆக.14-_- இந்து சமய அறநிலையத் துறை கோயில்கள் அனைத் திலும் பாதுகாப்புக்காக கட்டாயம் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட வேண்டும் என, அறநிலை யத் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயி லுக்கு தீவிரவாத அச்சுறுத் தல் தொடர்வதால், பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் திருக்கோயில்களின் பாது காப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிகம் கூடும் இந்து சமய அற நிலையத் துறைக்குச் சொந்தமான சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட கோயில்களில் பாதுகாப்பு காரணமாக, கண்காணிப் புக் கேமராக்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், திரு மோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் பக்தர்கள் அதிகம் கூடுவர். எனவே, அக்கோயிலில் தற்போது 16 இடங்களில் கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின் றன. இதேபோன்று, கோயில் மய்யத்தில் இரும்புக் கோபுரம் அமைத்து, அதில் இடி தாங்கியும் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக் கப்பட்டு வருகிறது.

யா.ஒத்தக்கடை மலை அடிவாரத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயி லிலும் கண்காணிப்புக் கேமராவும், இடிதாங்கியும் அமைக்கப்பட உள்ளதாக, கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், திருவாதவூர் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில் களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளன. ஏற்கெனவே கண்காணிப்புக் கேம ராக்கள் உள்ள கோயில் களில் கூடுதலாக கேம ராக்களை பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித் தன.

கோயிலில் உள்ள கடவுள்கள் வெறும் சிலைகள்தான் அவை களுக்குச் சக்தியில்லை என்று இந்து அறநிலை யத்துறை கூறாமல் கூறு கிறது - அப்படித் தானே!

Read more: http://viduthalai.in/page1/85822.html#ixzz3B56ne2D6

தமிழ் ஓவியா said...


காஸாவில் இனப்படுகொலை!


ஒருபுறம் எகிப்தையும், இன்னொருபுறம் இசுரேலையும் எல்லைப் பகுதியாகக் கொண்ட காஸா, இனப்படுகொலைக்குப் பெரிய அளவில் ஆளாகிக் கொண்டு வருகிறது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பிறகு, சொன்னதுபோல அய்.நா. தன் கடமையைச் செய்ய தவறி விட்டது என்று இந்த காஸா பிரச்சினையிலும், சொன்னால் ஆச்சரியப்படுவதற் கில்லை. உலக நாடுகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன என்பது வெட்கக்கேடாகும்!

இவ்வளவுக்கும் ஒரு சிறிய பிரச்சினையில் ஆரம்பித்த விவகாரம் பெரிய அளவில் ஆயிரக்கணக் கான மக்கள் ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

சில வாரங்களுக்கு முன் காஸா பகுதியில் மூன்று இசுரேலிய மாணவர்கள் காணாமல் போனார்கள். அவர்களைத் தேடி உள்ளே நுழைந்த இசுரேல் படையினர் அந்த மூன்று மாணவர்களும் குண்டடி பட்டு இறந்து கிடந்ததைக் கண்டனர். அந்தப் படுகொலைக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் இஸ்ரேலிய வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டார். இதிலிருந்து துவங் கியது தான் இன்றைக்குப் பெரும் போராக உரு வெடுத்து விட்டது என்று கூறப்படுகிறது.

இது ஏதோ ஒரு காரணம் என்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு - பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி யூதர்களின் குடியிருப்புப் பகுதியாக ஆக்கப்பட்டது.

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாக, கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்ரமிக்கத் தொடங்கி விட்டனர் என்பது தான் உண்மை.

இசுரேல் மாணவர்கள் கொல்லப்பட்டதற்கு யார் காரணம் என்று தெரியாமலேயே, தானே நீதிபதியாகி தாதாவாக மாறி விட்டது இஸ்ரேல். அதற்கு முட்டுக் கொடுக்கிறது அமெரிக்கா.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள் என்று எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் சகட்டு மேனியாகத் தாக்குதலைத் தொடுத்து வருகிறது இஸ்ரேல். காஸா இனி அவ்வளவுதான் - அதன் கதை முடிந்தது என்று காட்டுத்தனமாகச் செயல்படுகிறது இசுரேல்.

இந்திய அரசு இதில் நடந்து கொள்ளும் போக்கு வெட்கப்படத்தக்கது. இலங்கையில் எப்படி சிங்கள வெறியர்களுக்கு இந்தியா கொடி பிடிக்கிறதோ அதே நிலைதான் இப்பொழுதும் இசுரேலுக்குக் குடை பிடித்துக் கொண்டு இருக்கிறது மறைமுகமாக.

மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட - முன்னாள் இராணுவ அதிகாரி சிறீகாந்த் புரோகித் என்பவரின் மடிக் கணினியை ஆய்வு செய்தபோது, திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இசுரேலில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து ஒரு போட்டி இந்துத்துவா ஆட்சியை இந்தியாவில் நடத்துவது உட்பட வரைபடங்கள், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை வடிவமைக்கப்பட்டு இருந்தன என்பதை நினைவு கூர்ந்தால் இன்றைய பி.ஜே.பி. அரசு - இசுரேல் மேற்கொண்டுள்ள இனப்படுகொலைபற்றி மூச்சு விடாமல் இருப்பதற்கான அந்தரங்கம் புரியும்.

மாநிலங்களவையில் இதுபற்றிப் பேச இருந்த நிலையில் வெளியுறவுத் துறைஅமைச்சரின் எதிர்ப்பால் அதுபற்றி விவாதம் நடைபெறவில்லை என்பது முக்கியமானதாகும்.

எது எப்படி இருந்தாலும், வலுத்தவன், இளைத் தவனை வேட்டையாடுவது என்பது இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கு நியாயத்திற்கோ, மனித உரிமைகளுக்கோ கிஞ்சிற்றும் இடம் இல்லா தொழிந்து விட்டது. அய்.நா. இருந்தும் பயனில்லை; அது வெறும் கொலு பொம்மை என்கிற அளவுக்குத்தான் சுருங்கிப் போய் விட்டது.

கடவுள் எனக்கு ஆணையிட்டார் என்று கூறி ஈராக் கில் புகுந்து துவம்சம் செய்ததே அமெரிக்கா! அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேனைத் தூக்கில் போட்டுக் கொன்றதே அமெரிக்கா - யார் என்ன செய்ய முடிந்தது?

மொத்தத்தில் அறிவியல் வளர்ந்த அளவுக்கு மனிதம் வளரவில்லை என்பதும், இயந்திரத் தன்மை யுடைய விலங்காக பெரும்பாலும் மனிதன் ஆகி விட்டான் என்பதும் மறுக்கப்படவே முடியாது!

Read more: http://viduthalai.in/page1/85831.html#ixzz3B57EuJZd

தமிழ் ஓவியா said...


தாண்டவமாடுகின்றன...


இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனை யற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற் றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன. - விடுதலை, 30.4.1958

Read more: http://viduthalai.in/page1/85830.html#ixzz3B57M7xOw

தமிழ் ஓவியா said...

வாயைக் குவித்து வேகமாக ஊதினால் காற்று குளிர்ச்சியாக இருக்கிறதே எப்படி?


வாயைக் குவித்து வேகமாக ஊதினால் நமது மூச்சுக் காற்று வெப்பமாகத் தானே இருக்க வேண்டும். காற்று குளிர்ச்சியாக இருக்கிறதே ஏன்? அதற்கு என்ன காரணம் தெரியுமா?

வாயைக் குவித்து வேகமாக ஊதினால் நமது மூச்சுக்காற்று வெப்பமாகத் தானே இருக்க வேண்டும். காற்று குளிர்ச்சியாக இருக்கிறதே ஏன்? அதற்கு என்ன காரணம் தெரியுமா?

இந்த கேள்வி சுவாரசியமானது. வாயை அகலத் திறந்து கையின் பின்புறத்தில் வெளி மூச்சை விட்டால் அது வெப்பமாக இருக்கும். உடம்பின் வெப்பத்தை நுரையீரலிலிருந்து எடுத்துக்கொண்டு வருவதால் வெளிமூச்சு வெப்பமாக இருக்கிறது.

யாருக்காவது கையில் சூடுபட்டுக் கொண்டால் உடனே வாயைக் குவித்து வேக மாக காற்றை ஊதுகிறோம். அது குளிர்ச்சியாக இருக்கிறது.

எப்படி? கையை தொலைவாக வைத்துக்கொண்டு காற்றை வேகமாக ஊதும்போது நீங்கள் எதிர்பார்ப்பது போல அது வாயிலிருந்து வரும் மூச்சுக் காற்று அல்ல. அட அப்படியா? பின் எந்தக் காற்று அது.

அக்கம் பக்கத்தில் உள்ள அறை வெப்பக் காற்றுதான் அது. நீங்கள் ஊதும் காற்று அறைக் காற்றை முட்டித் தள்ளி கையில் பட வைக்கிறது. கையை வாய் அருகே வைத்து ஊதிப் பாருங்கள் நேரடியாக நுரையீரலி லிருந்து வருவதால் அது வெப்பமாக இருக்கும். சூடு பட்டவர்கள் ஊதாதே ரொம்ப சூடாக இருக்கிறது என்பார்கள்.

நீங்கள் நினைக்கலாம், நெருப்பு ஜுவாலையுடன் எரிவதற்கு வாயால் ஊதுகிறோம். வெளி மூச்சில் ஆக்ஸிஜன் குறைவாகத்தானே இருக்கும் எப்படி நெருப்பு பற்றிக்கொள்கிறது என்று வியக்கலாம்.

இப்போது சொல்வீர்கள் வாயிலிருந்து வரும் காற்றல்ல நெருப்பை ஜுவாலை விடச் செய்வது. அக்கம் பக்கத்தில் உள்ளக் காற்றை வாயிலிருந்து வரும் மூச்சுக் காற்று மோதித் தள்ளி நெருப்பில் பட வைக்கிறது. அதிலுள்ள இருபது சதவீதம் ஆக்ஸிஜன் நெருப்பை ஜுவாலை விடச் செய்கிறது.

Read more: http://viduthalai.in/page1/85857.html#ixzz3B580VOAm

தமிழ் ஓவியா said...

பிரைமரி நிறங்கள் என்பவை என்னென்ன?

இந்த விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. உங்களுக்கு அந்தக் குழப்பம் ஏற் படாது. ஏனெனில் நீங்கள் ஒளி நிறங்களை பிரித்து தெரிந்துகொள்ளப்போகிறீர்கள். கணினி திரை, தொலைக்காட்சி திரை ஆகியவற்றிலிருந்து நாம் நேரடியாக ஒளியைப் பெறுகிறோம்.

புத்தகத்தில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள கலர் படத்தைப் பார்க்கும்போது நாம் பிரதிபலிப்பு நிறங் களைப் பார்க்கிறோம். இந்த வித்தியாசம் மிகவும் முக்கியம்.

தொலைக்காட்சி திரையிலிருந்து வரும் நிறங்களில் பிரைமரி நிறங்கள் சிவப்பு, நீலம், பச்சை. சிவப்பு, நீலம், பச்சை நிற ஒளி களைக் கலந்தால் வெள்ளை ஒளி கிடைக்கும். இவை பிரைமரி நிறங்கள்.

இந்த நிறங்களை வேறு நிறங்களிலிருந்து பெற முடியாது. அதனால் இவை பிரைமரி நிறங்கள். மற்ற நிறங்களை இவற்றை பல அளவுகளில் கலப்பதன் மூலம் பெறமுடியும். அப்படி பெறப்பட்ட நிறங்கள் செகண்டரி நிறங்கள்.

Read more: http://viduthalai.in/page1/85857.html#ixzz3B58AjVCj

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவிருக்கும் பக்தர்களுக்குப் புராணம் கூறும் ஒரு செய்தி.
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம்.

உடனே விஷ்ணு என்ன செய் தான் தெரியுமா?

தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம்.

கறுப்பு மயிர் கிருஷ்ண னாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ண னாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

நாங்கள் சொல்லுவ தல்ல - அபிதான கோசம் - புராணம் கூறுகிறது.

இந்தக் கிருஷ்ணனுக்குத்தான் ஜெயந்தியா?

சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85879.html#ixzz3B5950adv

தமிழ் ஓவியா said...

உண்மையான தமிழன் யாரப்பா?

இந்த வார துக்ளக்கில் (13.8.2014) உண்மையான தமிழன் யார்? அதென்ன உண்மையான தமிழன்; பொய்யான தமிழன்; உண்மையும், பொய்யும் கலந்த தமிழன் என்றெல்லாம் வித்தியாசம் உண்டா என்ன? என்று பூணூலுக்கே உள்ள குயுக்தியுடனும், சேட்டையுடனும், கேவலப்படுத்தும் நோக்கத்துடனும் எழுதி இருக்கிறார் திருவாளர் சோ.

அவர் தமிழராக இல்லாததால் (வெளியில் அப்படி சொல்ல மாட்டார்கள்) இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதக் கூடிய வசதி இருக்கிறது.

தமிழ் பேசுவதால் தமிழன் ஆக மாட்டார் என்று கழகம் சொல்லுவது எவ்வளவுத் துல்லியமானது என்பது - இப்போதாவது நமது அப்பாவித் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி.

இதுவே பார்ப்பனர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால், சங்கரமடம் பிரச்சினையாக இருந்தால் இந்தக் கிண்டல், கேலி. நையாண்டி, விஷமம் இருக்குமா என்பதைத் துக்ளக்கைக் காசு கொடுத்து வாங்கும் நண்பர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது மட்டுமல்ல; தமிழ், தமிழர் என்று சொன்னாலே அக்ரகாரவாசிகளுக்கு அக்னிக் குண்டத்தில் விழுந்தது போலத்தான்.

கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் தமிழர் இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே

சோ பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! (துக்ளக் 19.8.2009). புரிகிறதா?

கேட்ட கேள்வி என்ன? சோவின் பதில் என்ன?

ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

நீண்ட காலமாக பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு எடியூரப்பா ஒத்துக் கொண்ட ஆத்திரம் இதில் பிரதிபலிக்கவில்லையா?
அவருடைய நோக்கம் திருவள்ளுவர் சிலையை அவமதிக்க வேண்டும் என்பதே - அதனை வேறொரு முறையில் எழுதுகிறார் தூண்டுகிறார் - அவ்வளவுதான்.

சென்னை மாநகரில் வணிக விளம்பரங்கள் தமிழில் எழுதினால்! இது என்ன மொழி நக்சலிசம் (துக்ளக் 15.9.2010) என்று எழுதிடவில்லையா?

அதே நேரத்தில் சமஸ்கிருதத்தைப்பற்றிச் சொல்லிப் பாருங்கள். கோயிலில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள் - அடேயப்பா பூணூல் துருத்திக் கொண்டு வந்து தண்டால் எடுக்கும். தமிழில் பாடினால் பொருள் இருக்கும். ஆனால், புனிதம் இருக்காது. மொழிக்கு முக்கியம் அல்ல - சமஸ்கிருத ஒலிக்குத் தான் முக்கியம் (துக்ளக் 18.11.1995). கடவுளுக்குக்கூட மொழி ஆசாபாசம் ஒலி ரசனைகள் உண்டாம்!

தமிழ் என்றால் அதற்கொரு விளக்கம் சமஸ்கிருதம் என்றால் சுற்றி வளைத்து அதற்கொரு வியாக்கியானம்!

உண்மையான தமிழன் யார்? பொய்யான தமிழன் யார்? என்று கேள்வி கேட்கிறாரே திருவாளர் சோ அதற்கான விடை இந்த இடத்தில் விளக்கமாகக் கிடைத்து விட்டதா இல்லையா?

இந்தப் பதிலில் இன்னொன்றையும் அதென்ன உண்மையான தமிழனின் கலாச்சாரம்?

அதுதான் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டோமே என்று கேள்வி எழுப்புகிறார்.

மேற்கத்திய கலாச்சாரத்தை சோ கூட்டம் கடைப் பிடித்தாலும் - ஆவணி அவிட்டத்தை அனுஷ்டிக்காமல் இருக்கிறதா? பூணூலைப் புதுப்பிக்காது இருக்கிறதா?

திருமதி சிவசங்கரிக்குப் பதில் சொன்னாரே - நினைவிருக்கிறதா? சோ கேட்ட இதே கேள்வியைத் தான் தமிழர் தலைவரிடமும் கேட்டார் சிவசங்கரி.

கேள்வி: தமிழர் பண்பாடு தமிழர் பண்பாடு என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன?

தமிழர் தலைவர் பதில்: இதுஒரு நல்ல கேள்வி. தாயை மகனும், மகளைத் தகப்பனும் போடி, வாடி என்று சொல்ல மாட்டோம் - அதுதான் தமிழர் பண்பாடு (குமுதம் 22.121983) என்று சொன்னதுதான் திருவாளர் சோ ராமசாமிக்கும் பதிலடி!

கொலை வழக்கில் சிக்கி சிறைச்சாலை வரை சென்று வந்த ஒருவரை ஜெகத் குரு என்று சொல்லும் இனப்பற்று பார்ப்பனர்களே, உங்களுக்கு இருக்கும் பொழுது, தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்றோ தமிழன் என்ற இனப் பற்றோ இருக்கக் கூடாதா?

இன்னும் பேசுங்கள் - இப்படியே எழுதுங்கள், அப்பொழுதாவது தமிழனின் தடித்த தோலுக்குச் சுயமரியாதை உணர்வு வருகிறதா என்று பார்ப்போம்!

- மின்சாரம்

Read more: http://viduthalai.in/page1/85891.html#ixzz3B59CpAoh

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது.

- விடுதலை, 26.2.1968

Read more: http://viduthalai.in/page1/85896.html#ixzz3B59Z1Xsb

தமிழ் ஓவியா said...

இந்தியா என்பது இந்துஸ்தானா? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு, சீத்தாராம் யெச்சூரி பதிலடி!

புதுடில்லி, ஆக. 15_ -மாநிலங் களவையில் புதனன்று உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் மீதான விவாதத்தில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி 2013இல் 823 வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இப்போதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது? உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 2013இல் 247 வன்செயல்கள் நடந்துள்ளன. 2014இல் ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடையில் 149 வகுப்புவாத மோதல்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் தொகுதிகளில்தான் வகுப்புவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்த அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மே 16க்குப் பின்னர், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 605 வகுப்புவாத வன்செயல்கள் நடந்துள்ளன. இவற்றில் மூன்றில் இரு பங்கு நிகழ்வுகள் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் 12 தொகுதிகளில் நடந்துள்ளன. இதே போன்றே சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பீகாரிலும் நடை பெறுவதாக செய்திகள் வருகின்றன.

தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு மதவெறித் தீ விசிறிவிடப்படுகிறது. இது நாட்டின்ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட் டுக்கும் உதவாது.ஆர்எஸ்எஸ் தலைவர் கட்டாக்கில் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு செய்தித்தாள்களில் வெளியாகி யுள்ளது. சென்ற ஞாயிறு அன்று, இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஆங்கி லேயர்கள் என்றால், ஜெர்மனியில் வசிப்பவர்கள் ஜெர்மனியர்கள் என்றால், அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக் கர்கள் என்றால், இந்துஸ்தானில் வசிப்பவர்கள் மட்டும் ஏன் இந்துக்களாக அறியப்படக்கூடாது என்று பேசி யிருக்கிறார். அனைத்து இந்தியர்களின் கலாச்சார அடையாளம் இந்துத்துவா. நாட்டில் இன்றையதினம் வசிப்போர் அனைவரும் இந்த மாபெரும் கலாச்சார மரபின் வழி வந்தவர்களாவர் என்று அவர் மேலும் பேசியிருக்கிறார்

.மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா

நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் நீண்ட நெடிய விவாதத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தினை மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தின் மீதுதான் நிறைவேற்றியிருக்கிறோம். நமது நாடு இந்துஸ்தானா அல்லது பாரதமா அல்லது பரதவர்ஷாவா அல்லது பரதகண்டமா - எப்படி அழைப்பது என்பது குறித்து அரசியல் நிர்ணய சபையில் நீண்ட நெடிய விவாதமே நடந்தது. அரசியல் நிர்ணயசபையில் நடைபெற்ற விவாதங் களை முழுமையாக பார்த்தோமானால், இறுதியாக , 1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்புச் சட்டத்தின் 1ஆவது பிரிவில் கூறியுள்ளபடி, இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றி யமாக இருக்கும், என்பதை நாமனை வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

பாரத் என்றால் என்ன என்பது குறித்தும் இந்த அவையில் பல முறை நாம் வரையறுத்திருக்கிறோம். பாரத் அல்லது பாரதம் என்பதுதனிப்பட்ட எந்தவொரு மதத்திற்கோ, ஒரு சாதிக்கோ, ஓர் இனத்திற்கோ, ஓர் இனக்குழுவினருக்கோ சொந்தமான தல்ல, மாறாக அது மனிதகுலத்தின் முன்னேறிய பல்வேறு நாகரிகங்களின் கலவையால் உருவான ஓர் அற்புதம். இங்கே அனைத்து இனத்தினரும் பரஸ்பரம் கூடிப் பழகி வருகின்றனர். அனைத்துக் கலாச்சாரங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் இந்தியா என்னும் சிந்தனையை உருவாக்கி இருக்கின்றன. இன்றையதினம் அத்தகைய சிந்தனைக்கு அச்சுறுத்தல் வருமானால், அது மிக மிக ஆபத்தான ஒன்று. அதனை நாம் நம் நாட்டில் அனுமதித்திடக்கூடாது.

நமது நாடு எல்லாவகைகளிலும் முன்னேற வேண்டும் என்று விரும்பு கிறோம், நமது நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று விரும்பு கிறோம். நமது நாடு ஜி-20எனப்படும் முன்னேறிய நாடுகளின் கூட்டமைப்பில் அமர வேண்டும் என்று விரும்புகிறோம். இவைஅனைத்துக்கும் நாம் ஆசைப் படுகிறோம். ஆனால், நாட்டின் ஒற் றுமையும் ஒருமைப்பாடும் சீர்குலையு மானால் இவை அனைத்தும் நாசமாகி விடும். குறுகிய தேர்தல் ஆதாயத் திற்காக அத்தகைய உயர்ந்த சிந் தனையை அழித்து விடாதீர்கள். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

Read more: http://viduthalai.in/page1/85901.html#ixzz3B59hxBSo

தமிழ் ஓவியா said...


ஜாதிப் புழுக்கள்!


கல்வி என்பது தண்ணீர் அதைச் சமூகமென்னும் பெரு மரத்தின் வேரில் ஊற்றினால் நம் வேலை ஆகி விட்டது என்று நினைத்தேன். ஆனால், இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதி வேற்றுமையும், கெட்ட எண்ணமும், பணத்துக்கு அடிமைத்தனமாகிய புழுக் களா அதை வளர விடப் போகின்றன? இந்த புழுக்கள் சாக வேண்டும்.

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3B5Aexenn

தமிழ் ஓவியா said...

சிந்தனைக்குத் தடை

பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்குதல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது. சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது.

ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திக வாதி என்று அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப்பெரும் சுயசிந்தனையா ளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும் பாடுபட நேர்ந்தது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார்.

அதற்காக இரண்டு சிந்தனையாளர் களையும் நியமித்தார். ஆனால், இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3B5AmCbyN

தமிழ் ஓவியா said...



ஜாதி ஆச்சாரங்களைக் கை யாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனிதமானது என்ற உணர்ச் சியை உண்டு பண்ணிய மதமே உண்மையிலே குற்றவாளி. ஆத லால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல.

ஜாதி ஆச்சாரங் களைப் புனித மென்று வற் புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3B5Are7XM

தமிழ் ஓவியா said...

மூவரும் முழுப் பொய்யர்களே!

ஆசிரியருக்கு கடிதம் 15.10.78 ஆனந்த விகடனில் இருவரும் ஒரே தொழில் என்ற தலைப்பில் (பக்கம் 93) ஓடத்தில் ஏற்றிச் சென்ற தற்கான, கூலியை ராமன் கொடுக்க குகன் வாங்க மறுத் தான் என்று வாரியார் கூறியதைக் கேட்க நகைப்புத்தான் ஏற்பட்டது. ஏனெனில் அயோத்தியை விட்டு அடவிக்குச் செல்லும்போது ராமன், லட்சுமணன், சீதை மூவரும் அணிந்திருந்த ஆடையாபரணங்களை அந்தணர்களுக்கு அளித்து விட்டு மர உரிதரித்து சென்றான் என்று கம்ப ராமாயணத்தில் எழுதி இருக்கின்றது.

கள்ளுக்கடை மயக்கத்தில் கவிதைகள் எழுதி கம்பனார் கானகத்தில் கனமான மூட்டையை அனுமான் கொடுக்க, அம்மூட்டையில் உள்ள ஆடையாபரணங்கள் ராவணன் எடுத்துச் சென்ற சீதையின் பொருளே என்று விளக்கியுள்ளன.

இதை படித்த தந்தை பெரியார், மர உரி தரித்து வந்த மூவர்களுக்கும் குறிப்பாக, சீதைக்கும், காட்டில் எப்படி ஆடையாபரணம் கிடைத்தது என்றும், அதிலும் சீதையைச் தேடச் சென்ற அனுமானிடம் கணையாழி கொடுத்தனுப்பியதும் - அதனைப் பெற்ற சீதையும் பதிலுக்கு தன்னுடைய கணையாழியை ராமனிடம் கொடுக்கும்படி அனுமானிடம் கொடுத்ததையும் பற்றி கேள்வி மேல் கேள்வி போட்டு கம்பனின் கயமையைப் பற்றி சொல்லியதை நாம் அறிவோம்.

அதுபோதாதென்று மேலும் கம்பனை பழிக்கவோ என்னவோ ஆனந்த விகடனைக் கொண்டு கம்பனை மேலும் பொய்யனாக்க வாரியார் ராமன் கூலி கொடுக்க, குகன் மறுத்தான் என்று சொல்லுவது கம்பனுடைய ஞாபக மறதியை மேலும் காற்றாடிபோல் பறக்கச் செய்கிறது. அயோத்தி விட்டு மூவரும் மர உரி மட்டும் மாட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு கூலி கொடுக்க என்ன இருந்தது? அப்படி இருந்தால் அயோத்தியில் இருந்து திருடி வந்தார்களா? ஏனெனில், எல்லாம் பரதன் சொத்து தானே.

அப்படி திருடி வந்தால் பஞ்சமா பாதகத்தில் ஒரு பாதகமல்லவா? ஆனதால் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவது முழுப் பொய்யல்லவா? ஆகவே கள்ளுண்டு கவிதைகள் எழுதிய கம்பனும் பொய்யன்! அக்கம்பனின் கவிதைகளை படித்து மோட்சம் போக எடுத்துச் சொல்லும் வாரியாரும் ஒரு பொய்யன்!! அதனை பிரமாதமாக வெளியிடும் ஆனந்த விகடனும் ஓர் பொய்யன்!!! ஆகவே மூவரும் மகா பொய்யர்கள் என்பது நன்கு தெரிகின்றதல்லவா?

ஆம்பூர் சீ.கோ.வெற்றியழகன், சென்னை

Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3B5BAPly5

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ரமண ரிஷி

கடவுள் பக்தன்மீது கருணை கொண்டு அவ னது முன்னேற்றத்திற்குத் தக்கபடி வெளிப்படு கிறார். பக்தன் கடவுளை மனிதனென்று நினைத்து எதிர்பார்த்து நிற்கிறான். ஆனால், கடவுள், பக்த னுக்குள் இருந்து அவன் தவறுகளை உணர்த்தி நல்வழியில் செல்ல உதவுகிறார். - ரமணரிஷி

கொலைகாரனுக்கு எப்படி உதவுகிறார்? பக்தர்கள் தந்த கொள்ளைப் பணத்தை தனது உறவின ருக்கு எழுதி வைத்த இந்த ரமண ரிஷியையும் இப்படித்தான் வழி நடத்தினாரோ!

Read more: http://viduthalai.in/page1/85948.html#ixzz3B5BtDFlI

தமிழ் ஓவியா said...


தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும்


தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும்

விருத்தாஜலம் தாலுகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாட சாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப்பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர் நமக்குச் செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர். இவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம். அவர்களிட மிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்பந்தமாய் கவனித்திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன? ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடை பெறுகிறது, அது சம்பந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விவரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளு கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.09.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DB7t76

தமிழ் ஓவியா said...

கோவை முனிசிபல் நிர்வாகம்

கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் 1929-30ஆம் வருஷத்திய நிர்வாக ரிப்போர்ட் வரப்பெற்று அதை முற்றிலும் படித்துப் பார்த்தோம். சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் கல்வி, பொருளாதாரம், பொதுஜன சுகாதாரம் முதலிய எல்லாத் துறைகளிலும் முற்போக்கடைந்திருக்கிறது. வரி வருமானம் ரூ 2,74,707-லிருந்து ரூ 2,96,171-க்கு உயர்ந்திருக்கிறது. பொது நிதி இருப்பிலிருந்து சிறுவாணி தண்ணீர் சப்ளை வேலைத்திட்டத்திற்காகக் கொடுக்கப்பட்ட ரூ 1,51,500ம் போக வருஷ முடிவில் ரூ 1.64 லட்சம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இம்முனிசிபா லிட்டியைப் பற்றி சர்க்கார் எழுதிய குறிப்பில் வெகுவாகப் புகழ்ந்து கோவை முனிசிபாலிட்டி யின் நிர்வாகம் இம்மாகாணமற்றெல்லா முனிசிபல் நிர்வாகங்களை விட தலை சிறந்து விளங்குவதாய் குறிப்பிட்டு விட்டு அதன் தலைவர் திரு. இரத்தினசபாபதி முதலியாரவர்களையும் அவரது சகாக்களையும் பாராட்டி எழுதப்பட்டிருக்கிறது.

தக்க பலனளிக்கும் முறையில் பொது ஜனசேவை செய்து வரும் கோவை முனிசிபல் தலைவரவர்களையும் அவரது சகாக்களின் கூட்டுறவையும் நாம் மிகுதியும் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.09.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DIiu3t

தமிழ் ஓவியா said...



மலாய் நாட்டு வக்கீல்களின் தேசியம்

மலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன் அவர்கள் சுமார் 3, 4 ஆண்டுகளாக பிரபல பாரிஸ்டராக இருந்து வருகின்றார்கள். அவர் இப்போது தன்னை கு.ஆ.ளு. பாரிலும் வக்கீலாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோலாலம்பூர் சீப் ஜட்ஜிக்கு விண்ணப்பம் போட்டதில் அவரைச் சேர்த்துக் கொள்வதற்குக் கோலாலம்பூர் வக்கீல்கள் ஜட்ஜிக்கு ஆட்சேபணை சொன்னதாகவும் அவ்வாட்சேபணை என்ன வென்றால் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் ராஜத் துரோக விஷயமாய் சிறைசென்றவர் என்று சொன் னார்களாம். அதற்குப் பாரிஸ்டர் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் தான் வைக்கம் சத்தியாகிரகத் தில் ஈடுபட்டதால் சிறை செல்ல நேரிட்டதென்றும் மதராஸ் ஹைகோர்ட்டில் மிக்க செல்வாக்குப் பெற்ற பாரிடர் என்றும் எடுத்துக் காட்டி னாராம். இதற்காக கனம் ஜட்ஜ் அந்த விண்ணப்பத்தைப் பைசல் செய்ய 2 மாதம் வாய்தா தள்ளிப் போட்டிருப்பதாகத் தெரியவரு கின்றது. மலாய் நாட்டு வக்கீல்கள் இந்த விஷ யத்தில் இவ்வித ஆட்சே பனைக் கொண்டு வந்ததை நாம் பலமாகக் கண்டிக் கின்றோம். வக்கீல்கள் அரசியல் சம்பந்த மான கிளர்ச்சிகளில் ஈடுபடு வதும், தண்டனைகள் அடை வதும் அவர்களின் இப்போ தையத் தொழில் முறையில் முக்கிய அம்சமாகி விட்டது. இந்தியாவில் அனேக வக்கீல் கள் தண்டனை அடைந்து இப்பொழுது வக்கீல்களாகவே இருக்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க திரு. மு. ஞ. கேசவமேனன் அவர்கள் ராஜத் துவேஷ விஷயமாய்ச் சிறைச் சென்றவர் அல்லவென்று உறுதியாய்ச் சொல்லு வோம் சென்னை ஹைகோர்ட்டில் அவர் மிக்க பிரபல வக்கீலாக இருந்தவர். இந்தியாவில் பிரபலமாயிருந்த கனவான்கள் யாராவது தேசச் சேவையின் பலனாய் உண்மையான தியாகம் செய்தவர்கள் இருப்பார்களானால் அவர்களில் திரு. மு.ஞ.மு.மேனன் முதன்மையான வராவார். மலையாள தேச முழுமையும் மு.ஞ.மு. மேனன் என்றால் கண்களில் நீர் விடுவார்கள். அப்பேர்பட்ட உண்மையான தியாகியானவர். திருவாங்கூர் ராஜியத்தில் வைக்கம் என்னும் ஒரு பிரபல கோயில் உள்ள ஊரில் உள்ள பொதுத் தெருவில் ஈழவர்கள், நாடார்கள், முதலியவர்கள் கூட நடக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட தெருவில் அவர்களுக்குத் தெருப்பாத்தியம் வாங்கிக் கொடுக்கச் செய்யப்பட்ட முயற்சியில் திருவாங்கூர் அரசர் என்னும் சுதேச ராஜாவால் 6 மாதம் தண்டிக்கப்பட்டு ஜெயிலிலும் மிக்க மரியாதையாய் நடத்தப்பட்டவர். அத்தண்டனையின் போது நாமும் அவரும் திருவாங்கூர் ஜெயிலில் ஒன்றாகவே தண்டனை அனுப் பவித்தவர்களாவோம். கடைசி யாக காலாவதி தீருமுன் எங்களை விடுதலை செய்து விட்டதோடு திரு. கே. பி. கே. மேனனை எதற் காகத் தண்டித் தார்களோ அந்த காரியமான வைக்கம் ரோடுகளை எல்லோரும் நடக்கும் படியாக உத்தரவு கொடுத்து விட்டார்கள்.

ஆகவே திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் செய்த காரியம் குற்றமா? அல்லது திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைபடுத்தினது குற்றமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

ஆகவே இப்படிப்பட்ட திரு. மேனன் அவர்களை மலாய் வக்கீல்கள் சிலர் ஆட்சேபித் திருப்பதிலிருந்து அவர்களது தேசியமும், சமுக சீர்திருத்தமும், அரசியல் முற்போக்கு முயற்சியும் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை ஒருவாறு உணரலாம். நம்மைப் பொறுத்தவரை இவ்வித ஆட்சேபணைகள் அறியாமையினாலோ அல்லது பொறாமையாலோ தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றோம். இது வக்கீல் தன்மையின் பிறவிக் குணமாம் போலும்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 03.08.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DPnImS

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத்தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DWCYqc

தமிழ் ஓவியா said...

சாரதா சட்டம்

சாரதா சட்டம் பிறந்து அமலுக்கு வந்து 3 மாதம் ஆகி 4ஆவது மாதம் முடிவதற்குள்ளாகவே அதற்கு பாலாரிஷ்டம் வந்துவிட்டது. என்னவெனில் ராஜாங்க சபையில் சட்டத்தின் ஜீவ நாடியை அறுத்தெரியும் மாதிரியில் அதாவது பெண் களுக்கு 14 வயதிற்குள்ளும் ஆண்களுக்கு 18 வயதிற் குள்ளும் விவாகம் செய்ய மனசாட்சியோ குடும்ப நிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்குச் சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டு களுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காரரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக் கின்றார்கள்.

இந்தப் பிரேரேபணை சர்க்காரர் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.

சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற்கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர்கள் (பார்ப்ப னர்கள்) சட்ட மறுப்புக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும் அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேறும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக் காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக்கடியைச் சமாளித்துக் கொள்ளவே இந்தத் தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நிற்க. மனசாட்சியை உத்தேசித்து நடக்க ஒவ்வொரு வருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தைத் திருத்துவதனால் இந்தியன் பீனல்கோடும் சிறைச் சாலைகளும் அழித்து பொசுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாட்சி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனசாட்சி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும். மூடனுடைய மனசாட்சி முட்டாள்தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப்பதனால் சட்டமும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களானால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DcRM9t

தமிழ் ஓவியா said...


பெரியாரை கொச்சைப்படுத்தலாமா?



சேலம் - பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைப்பாதை மற்றும் துணைவேந்தர் பஙகளா ரூ.25 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்படு கிறதாம்.

எதற்காகத் தெரி யுமா? இப்பொழுதுள் ளவை வாஸ்துப்படி சரி யானதாக இல்லையாம். வாஸ்து சாத்திரப்படி மாற்றி அமைக்கிறார் களாம்.

கட்டடம் ஒன்றும் பழுதுபட்டு விடவில்லை. சிறப்பாகத்தான் இருக் கிறது; புதிய துணை வேந்தராக வந்துள்ள சுவாமிநாதன் என்பவர் சிறப்பாக உள்ள துணை வேந்தர் பங்களாவுக்குள் சென்று குடியேறாமல் விருந்தினர் மாளிகை யிலேயே தங்கி உள்ளாராம்.

கட்டடத்தை மாற்றி அமைக்கும் பணியைக் கூட பொதுப் பணித் துறையிடம் ஒப்படைக்கா மல் தனியார் வசம் ஒப் படைக்கப்பட்டுள்ளதாம்.

எப்படி இருக்கிறது? தந்தை பெரியார் பெய ரால் ஒளிரக் கூடிய ஒரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் அவர் களின் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக - வாஸ்து பார்த்து, நல்ல கட்டடத்தை இடித்து விட்டுக் கட்டுகிறார்கள் என்றால் இந்தக் கொடு மைகளை என்னென்று சொல்லுவது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி (51A(h)) மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இங்கு துணைவேந்தராக இருக்கக் கூடியவரே வாஸ்து பார்க்கும் மூட நம்பிக்கைவாதியாக இருந் தால், எங்குப் போய் முட்டிக் கொள்வது?

வாஸ்து என்றால் என்ன என்று விளக்கு வாரா துணைவேந்தர்? வாஸ்து சாத்திரப்படி கழிப்பறை கட்டலாமா?

வாஸ்து சாத்திரத்தில் கழிப்பறைக்கு இடம் உண்டா? ஆந்திர மாநி லத்தின் முதல் அமைச் சராகவிருந்த என்.டி. ராமராவ் தலைமைச் செயலகத்தின் வாச லையே மாற்றி அமைத் தாரே - விளைவு என்ன?

விளக்கெண் ணெய்க்கும் கேடாய் முடிந்ததே தவிர, பிள்ளை பிழைத்த பாடில் லையே! அதுவும் அரசு பணத்தை மூடநம்பிக் கையின் வாயில் போடலாமா?

பெரியார் பல்கலைக் கழக சிண்டிகேட் என்ன செய்கிறது? ஒருவர்கூட பெரியார் சிந்தனை உள்ளவர் கிடையாதா? விஞ்ஞான நோக்குடை யோர் யாரும் இல் லையா? மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் எச்சரிக்கை!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85997.html#ixzz3B5Dty2NM

தமிழ் ஓவியா said...

60 சதவீத மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் இல்லை இல்லாத சரசுவதி நதி ஆராய்ச்சி தேவையா?


புதுடில்லி, ஆக.17_- 60 சதவீத மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் இல்லாத நாட்டில் இல் லாத கற்பனை சரசுவதி நதியைத் தேடும் ஆய்வில் மத்திய பிஜேபி அரசு இறங்கியுள்ளது.

கங்கை சீரமைப்பு

தற்போது நீர் வளம், ஆறு வளர்ச்சித்துறையில் (Water Resourse, River Development)கங்கை சீர மைப்பு என்பது அந்த பட்டியலில் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதாக உள் ளது. அதற்கான காரணங் களாக எதையும் இது வரை காண முடிய வில்லை. மிகவும் சிக்கல் களைக் கொண்டுள்ளவற் றில் வளத்தை ஏற்படுத் துவது என்பது மக்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய அளவில், எந்த ஒரு அரசின் வளர்ச்சி அல் லது வளர்ச்சித் திட்டங் களை பாதிக்கக் கூடிய தாகவும் இருக்கின்றது. இந்நிலையில், உமாபாரதி அமைச்சகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டுள்ளார்.

திறமை காட்டவேண்டிய பிரச்சினைகள்

பல ஆண்டுகளாக தண்ணீர்ப் பிரச்சினை களில் இந்தியா எதிர் கொண்டுள்ள சவால்கள், குடிநீர்ப் பிரச்சினைகள், ஆற்றின் மாசுபாடுகள், நீண்ட காலங்களாகவே தண்ணீர் இன்றி, நிரப்பப் பட வேண்டியவைகளாக பெயரளவில்மட்டுமே உள்ள நீர்வளங்களாக இருப்பவை என்று இவற் றின் மீதே உமாபாரதி அவருடைய திறமையைக் காட்ட வேண்டும் என்று தான் எவர் ஒருவரும் எதிர்பார்ப்பார்.
ஆறுகளில் மற்றும் ஆற்றுக்கு வெளியே உள்ள ஆற்றங்கரைப் பகுதிகளிலும் உள்ள பிரச்சினைகள், பீகாரில் உள்ள கோசி போன்ற ஆற்றில் கட்டுப்படுத்த வேண்டிய வெள்ளம் ஆகிய பிரச்சினைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களாக இருக்கின் றன. தட்பவெப்ப மாற்றங் களால் நீர்வளம் அதிகரித் துள்ளதால் இயற்கைக்குத் தான் நன்றி கூற வேண்டும்.

இல்லாத சரசுவதி

ஆனால், அமைச்சர் தன்னுடைய நேரத்தை கதையில் வரக்கூடிய சரசுவதி ஆறு இருக் கிறதா? இல்லையா? என்று ஆராய செலவிடு கிறார். ஏற்கெனவே, சரசுவதி ஆற்றைக் கண் டறிய புவியியல் வல்லுநர் கள், அறிவியலாளர்கள் ஆராய்ந்து பார்த்தபோது, அதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை என்று தெரியவந்தது.

சரசுவதியைக் கண்டுபிடிப்பதாக உமாபாரதி

அமைச்சர் உமாபாரதி தற்போது சரசுவதி நதி யைக் கண்டுபிடித்துவிடுவ தாக கூறிவருகிறார். இதையே மக்களவையிலும் அவர் அறிவித்துள்ளார். அலகாபாத்தில் உள்ள கோட்டையினுள் கிணற்று நீரை எடுத்து ஆய்வு செய்து நீர்வளத்தை யும் மற்றும் சரசுவதி ஆற்றின் பாதையையும் கண்டறியுமாறு மத்திய நிலத்தடிநீர் வாரியத்தை யும் கேட்டுக்கொண்டுள் ளார். நாடாளுமன்றத்தில் மத்தியப்பிரதேசத்தின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன் லால் கடாரியா என்பவர் சரசு வதி ஆராய்ச்சி நிறுவ னத்தை அமைக்க வலி யுறுத்தி ஒரு தீர்மானத்தை யும் நிறைவேற்றுமாறு கோரி உள்ளார்.

அமைச்சராக இருப் பவர், அவருடைய குழு வில் உள்ள அலுவலர்கள் மற்றும் கடாரியா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகப் படியான ஆர்வத்தை சரசுவதி ஆற்றைத் தேடு வதில் காட்டிவருகிறார்கள். அவர் முன் குறித்த நேரத் தில் செய்து முடிக்க வேண் டிய சவாலான பணிகள் ஏராளமாக இருக்கின்றன.

60% மக்களுக்கு குடிநீர் இல்லை

மாபெரும் திட்டமான கங்கையைத் தூய்மைப் படுத்தும் பணி (அண்மை யில் உச்சநீதிமன்றம் அப் பணியில் எதுவும் செய்ய வில்லை என்று அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது) குடிமக்களுக்கு பாது காப்பான குடிநீர் வழங்க வேண்டிய பணிகள் (இந் தியாவில் மக்கள் தொகை யில் 60 விழுக்காட்டின ருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடையாது), நீர் சேகரிப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டியது மற்றும் வீணாகும் நீரை மறுசுழற்சிப்படுத்துவது என்று இதுபோன்று நூற்றுக்கும் மேலாக உள்ளன. ஆனால், அமைச் சர் இதுவரை இல்லாத தும், இதுவரை முன்னுரி மைப் பட்டியலில் இல்லா ததுமான ஒரேயொரு விவ காரத்தில் மட்டுமே தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/85998.html#ixzz3B5EQ3CYP

தமிழ் ஓவியா said...


இந்தியாவை உடைக்கத் திட்டமா?


இந்தியாவை உடைக்கத் திட்டமா?

இந்தியா இந்து நாடே! மீண்டும் கொக்கரிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

மும்பை, ஆக.18_ இந்தியா ஒரு இந்து நாடு, இந்துத்துவா அதன் அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் பேசியிருப் பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஸ்டமி நிகழ்ச்சி யில் ஆர்.எஸ்.எஸ். தலை வர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசிய தாவது:

இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்துவா என் பது அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர் களையும் உள்ளடக்கிய ஒரு மதம்.
அடுத்த 5 ஆண்டு களில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிட மும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.

அனைத்து இந்துக் களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும். ஒரே இடத்தில் பிரார்த் தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல் அவர்கள் இறந்த பிறகு உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.

இந்தியா, இந்துக்களின் நாடு' என்று மோகன் பகவத் கூறிஇருப்பது புதிய சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது. ஏற்கெ னவே கடந்த வாரம் ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியர்களின் கலாச்சார அடையாளமே இந்து மதம் தான். தற்போது வாழும் இந்துக்கள் அனைவரும் மிக பெரிய கலாச்சாரத்தின் சுவடுகள். ஆங்கிலேயர்களின் வழித் தோன்றல்கள் ஆங்கிலே யர்களாகவும், ஜெர்மனி யர்களின் சந்ததிகள் ஜெர்மனியர்களாகவும் இருக்கும்போது இந்துக் களின் வழித்தோன்றல்கள் ஏன் இந்துஸ்தானில் வாழ்ந்து வருவோர் இந்துக்களாக இருக்கக் கூடாது என்று கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ராமர் கோயில் கட்டப்படுமா!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வாக் குறுதி விரைவில் பூர்த்தி செய்யப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலை வர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். இதே போன்று தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு பேட்டி அளித்த பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்ய நாத், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்ட ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் நடைபெறும் என தெரி வித்துள்ளார்.
தொகாடியா பேசுகிறார்

விஸ்வஹிந்து பரிஷத் உலகத்தலைவர் பிரவீன் தொகாடியா பேசும்போது, விஸ்வஹிந்து பரிஷத், இந்து சமாஜங்கள் அடுத்த 10லிருந்து 20 ஆண்டு களுக்குள் சரியான இடத்தைப் பெறக்கூடிய வகையில் வளர்ந்துவிடும். 50ஆண்டுகாலத்தில் ராமன்கோவில் இயக்கம் விஸ்வஹிந்து பரிஷத்தின் குறிப்பிடத்தக்க பணியாக இருந்துள்ளது. ராமன் கோவில் கட்டப்படும் வரையிலும் நம்மிடம் (ஹிந்துக்கள்) இந்த நாட் டில் சம்மான் (கவுரவம்) இருக்காது.

அடுத்த 25 ஆண்டு களில் அனைத்து கிராமங் களிலிருந்தும் மாநகர் மூலைமுடுக்குவரையிலும் விஸ்வஹிந்து பரிஷத் அடித்தளமாக இயங்கும் என்று தொகாடியா கூறி னார்.

(டில்லி _ விசுவஹிந்து பரிஷத் பொன் விழாவில் பேசியது)

Read more: http://viduthalai.in/page1/86075.html#ixzz3B5FG9FIa

தமிழ் ஓவியா said...

தலைவரின் பயணங்கள் - தமிழின் பெருமையை உணர்த்தட்டும்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

தலைவரின் பயணங்கள் - தமிழின் பெருமையை உணர்த்தட்டும்

அண்மையில் தலைவர் வீரமணி அய்யா அவர்கள் ஆந்திர மாநிலத்தில் அய்தராபாத்தில் நடைபெற்ற நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய நிகழ்வினை இரண்டு பாகமும் படித்து மகிழ்ந்தேன்.

ஆந்திர மாநில நீதியரசர்கள், அறிஞர் கள், சமூக ஆர்வலர்கள் எப்படியெல்லாம் நம் தலைவரைச் சிறப்பித்து உரையாற்றினர் என்பதை அறிந்து பெருமைப்படுகிறேன். எப்பொழுமே ஆந்திர மாநில மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் காங்கிரஸ் பேரியக்க காலமாகட்டும் - ஜஸ்டிஸ் கட்சி காலமா கட்டும் அல்லது பொதுவுடைமை இயக்க காலமாகட்டும் ஏன் நம் திராவிட இயக்க காலமாகட்டும் நல்லுறவே நிலவி வந்துள்ளது.

பண்டைய வரலாற்றுக்குள் புகுந்தால் ஒரு காலத்தில் ஒரே இனமாக - ஒரே மொழி பேசி வந்தவர்கள்தான் தமிழர் - தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என மாறி வேற்று இனத்தவரோ என நினைக்கும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அந்த புண்ணி யத்தைக் கட்டிக்கொண்ட மொழிதான் சமஸ்கிருதம் எனும் செத்த மொழியாகும். வடபுலத்திலிருந்து பிழைப்பை நாடி தென்புலம் வந்த ஆரியர்களை... வந்தாரை வாழவைக்கும் பண்பால் வரவேற்று தகுந்த உதவிகள் செய்தவர்களை பல வகையிலும் மூளைச் சலவை செய்து புனைகதைகளின் மகத்துவம் கூறி அறிவை மழுங்கடித்தனர். ஆர்வமாக கதை கேட்டு அயர்ந்திருந்த நேரத்தில் தங்களின் பண்பாட்டைத் திணித்தனர். தங்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தால் - நம்மவர்கள் பேசி வந்த மொழியை சிதைக்கலாயினர். அப்படி ஏற்பட்ட தெலுங்கு - கன்னடம் - மலையாள மொழிகள். தங்கள் சொந்த மொழிச் சொல்லை மறந்து வடமொழிச் சொல்லைக் கையாள முற்பட்டனர், பெருமைப்பட்டனர்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டு மானால் தமிழில் நீர் என இருப்பது போன்றே தெலுங்கு நீலு என்பர் எனினும் (கண்ணீர் - செந்நீர் என இலக்கிய மொழியில் தெலுங்கிலேயே வார்த்தைகள் உண்டு) ஜலம் என பேச எழுத விழைந் தனர். கன்னடத்தில் நீர் என்றே உள்ளது. மலையாளம் வெள்ளம் என்பதும் - தமிழ்தான். தந்தை திரிந்து தன்றி என்பதை விட்டு பிதா ஏன் ஆனது. அம்மா - தாய் மறந்து மாதாவாக மாற்றம் ஏன்? இப்படித் தான் தேவையில்லாமல் வலியப் போய் வடமொழிச் சொற்களை ஏற்று சிதைந் துள்ளோம்.

தமிழ்நாட்டு அறிவாளிகள் மட்டும் கொஞ்சம் ஆபத்தை உணர்ந்து தூய தமிழ் - வடமொழி கலவாத தமிழ் என்ற திசை நோக்கி செயல்பட்டதால் தமிழ் தனித்தியங்க முடிந்துள்ளது. தனித்தமிழியக்கத்தின் செயல் பாடுகளால் ஓரளவு நிம்மதி பெற்றிருந்த நாம் அண்மையில் மய்ய அரசு அறிவித்த சமஸ்கிருத வார விழா அறிக்கையால் எழுச்சி பெற்று போர் முழக்கம் செய்துள் ளோம். நாம் வெற்றி பெறுவது உறுதி. வழக்கம் போல் அவர்கள் தோல்வியை தான் காண்பர்.

ஆனால் தமிழ் அளவுக்கு தெலுங்கு கன்னட, மலையாள மொழியினை தனித் தன்மை கொண்ட மொழியாக செயல் படுத்த இயலுமா எனில் சிரமமான காரியம். தமிழ் தவிர மற்ற மொழிகள். வடமொழி சாயலில் தான் க ச ட த ப ற எழுத்துக்களை கொண்டுள்ளன. வடமொழி இலக்கணமாக ஏக வசனம் - பஹ வசனம் என பேசுகின்றன, இவற்றை கண்டிப்பாக மாற்ற முடியும்.

அங்கு தமிழ்நாட்டுத் தலைவர்களான பெரியார் - மறைமலை அடிகள், சோம சுந்தர பாரதியார் - பாரதிதாசன் அண்ணா போன்று உருவாக வேண்டும். அப்படி உருவாக்கும் தன்மையை நம் ஆசிரியர் தலைவர் வீரமணி அவர்களால் கண்டிப் பாக முடியும். கால்டுவெல் செப்பனிட்ட பாதை உள்ளது. குதர்க்கம் பேசாத தமிழ்நாட்டு நல்ல உள்ளங்கள் வேண்டும். சமஸ்கிருத பெருமையை நாம் நினைத் தால் சமஸ்கிருத சாயலையே தென்னாட் டிலிருந்து துரத்த முயற்சி நடக்கிறதே என்று அவர்கள் அடங்க வேண்டும். ஆசிரியரின் அடுத்தடுத்த பயணங்கள் தனித்தெலுங்கு, தனி கன்னடம், தனி மலையாளம் என்ற இலக்கை நோக்கி செயல்படட்டும். எல்லாம் தமிழாகவே மீண்டும் என என்கனவினை இணைக்கிறேன்.

- வேலை. பொற்கோவன், வேலம்பட்டி

Read more: http://viduthalai.in/page1/86065.html#ixzz3B5FdWRJb

தமிழ் ஓவியா said...



தனிச் சலுகை


ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத் தினர்க்குத் தனிச் சலுகை தரப்பட வேண்டும். - (விடுதலை, 8.12.1967)

Read more: http://viduthalai.in/page1/86056.html#ixzz3B5FlE8ko

தமிழ் ஓவியா said...

சிறுநீரக நோயை குணப்படுத்த மாதுளம் பழச்சாறு சாப்பிடுங்க


சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்வில் தெரியவருகிறது, இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது.

ஏனெனில், மாதுளம் பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர். மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Read more: http://viduthalai.in/page1/86094.html#ixzz3B5Gd0ncc

தமிழ் ஓவியா said...

கண்ணில் தெரியும் புற்றுநோயின் அறிகுறி


புற்றுநோயை காட்டிக் கொடுப்பதில் கண்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு என்றால் நம்ப முடிகிறதா?

உடலின் எந்த பாகத்தில் புற்றுநோய் வந்தாலும், அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்குமாம். ஆச்சரி யமான, அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் கண் சிகிச்சை நிபுணர் பிரவீண் கிருஷ்ணா. கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசிவது, விழித்திரை பிரச்சினை... வயசானவங்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும் பாலும் முதுமையின் அறிகுறிகள் என்று அலட்சியப்படுத் தறவர்கள்தான் அதிகம்.

வயதானால் பார்வை மங்குவதும், பூச்சி பறக்கிறதும் இயல்புதான்னு விட்டுவிடுவார்கள்.

ஆனால், அதெல்லாம் அவங்க உடம்பில் எங்கயோ புற்றுநோய் தாக்கியிருக்கிறதுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று யாருக்கும் யோசிக்கத் தோன்றாது. நடுத்தர வயசுக்குப் பிறகு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்குகிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக் கங்கள் மாறிப் போறது, இருமல், ரத்தத்தோட வெளியேறும் சளி... இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி, கண்களிலேயும், அதைக் கண்டுபிடிக்கலாம்.

மனித உடம்பில் அதிகப்படியான ஆக்சிஜன் ரெட்டினா என்று சொல்கிற விழித்திரைக்குத்தான் போகிறது. அந்த ஆக்சிஜன், விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோரா யிடு-ங்கிற பகுதி மூலமாகத்தான் விழித்திரைக்குப் போகும். உடம்போட ரத்த ஓட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைந்து போகும். அதனால், ரத்தத்தில் உள்ள புற்று நோய் செல்கள், கோராயிடு மூலமாக, விழித்திரைக்கு போகும். விழித்திரையில் தண்ணீர் கசிஞ்சு, விழித்திரை முன்னாடி வரும். திடீர் பார்வைக் குறைபாடுதான் இதற்கான அறிகுறி.

சிலருக்கு ‘non hodgkin's lymphoma - என்று சொல்லக் கூடிய ரத்தப் புற்றுநோய் இருக்கும். கண்களில் பூச்சி பறக்கிறது, வெளிச்சம் அதிகமாகத் தெரிவதையும் முதுமையோட அறிகுறிகளாகவும், மறதி, நடக்கும்போது ஏற்படுகிற பிரச்சினைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்புப்படுத்திப் பார்த்து, வேறு வேறு சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால்தான் அதை சரியாகக் கண்டுபிடிக்க முடியும்.

பி ஸ்கேன் மூலமாக விழித்திரையைப் பரிசோதித்து, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங்கிறதையும் கண்டுபிடிப்பாங்க. பிறகு விழித் திரவத்தை எடுத்து சோதனைக்குட்படுத்தி, புற்றுநோய் இருக்கிறதா என்பதை உறுதி செய்து, அப்படி உறுதியானால், அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் பிரவீண்.

Read more: http://viduthalai.in/page1/86092.html#ixzz3B5Gzixy6