Search This Blog

30.8.11

பார்ப்பனர்களிடம் ஒழுக்கம், நேர்மை, நாணயம் காண முடியுமா?




சாதாரணமாகப் பெரும்பாலும் பார்ப்பனர்களிடம் ஒழுக்கமோ, நாணயமோ காணமுடிவதில்லை. எப்படிப்பட்ட உயர்தரப் பார்ப்பனர்களாக இருந்தாலும் நம் மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதில் கருத்துக் கொண்டவர்களாகவேதான் காணமுடிகிறதே தவிர, அவர்களது பொது நடத்தையில் உண்மையையும், நாணயத்தையும் காணமுடிவதில்லை.

இந்த மாதிரியான - அதாவது நம்மை ஏய்த்துத் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வதை அவர்கள் தங்களது மத, (இன) தர்மமாகவே கருதுகிறார்கள். இதற்குக் காரணம் அதாவது, பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் தந்திரம், சூழ்ச்சி, பித்தலாட்டம், மக்களை ஏய்த்து வஞ்சிப்பது இந்தமாதிரி காரியங்களாலேயே தங்கள் வாழ்க்கைத் திட்டங்களை ஏற்பாடு செய்து கொள்வது முதலாகிய காரியங்கள் அவர்களது ஜாதிப் புத்தி என்றே சொல்லலாம்.

எனக்கு ஜாதியில் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் ஏன் ஜாதிப்புத்தி என்கிறேன் என்றால், அது பரம்பரை தர்மம் என்பதால். பரம்பரை என்பது ஒரு சமுதாயத்திற்கு - பெரிதுமே ஓர் இனத்திற்கு அவரவர்கள் வாழ்க்கை தர்மத்தைப் பொறுத்ததே ஆகும். வாழ்க்கை தர்மமானது அவரவர்கள் தொழில் தர்மத்தைப் பொறுத்ததே ஆகும். இந்த மாதிரியான தர்மங்களுக்குத் தனியாக ஒரு ஜாதி, அதாவது மனித சமுதாயத்தில் தனிப்பட்ட ஒரு பிறப்பு என்பது கிடையாது. இவை எந்த மனிதனிடத்திலும் காணக்கூடியதே. ஆனாலும் அந்தத் தர்மங்களை ஏற்று அந்த தர்மங்களில் புகுந்து, அத்தர்மங்களை நடத்தி வருபவர்கள் கோஷ்டியாக ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்தக் கும்பல் அந்தத் தர்மங்களையே அதாவது தொழில் முறைகளையே வாழையடிவாழையாக தலைமுறை தலைமுறையாக அப்பன் தொழிலில் மகன் என்ற முறையில் நடத்தி வருவார்கள் என்று ஆகிவிடுகிறது. தொழில் - வாழ்க்கை முறைதான் ஜாதிகள், வகுப்புகள் இனங்கள் என்பவைகளாகப் பிரிக்கச் செய்கிறது.

உதாரணமாக நாம் ஒழுக்கம், நாணயம், நேர்மை, யோக்கியம், உண்மை என்பதற்கு மனிதச் சமுதாயத்திற்குக் கொண்டிருக்கிற தன்மையின்படி, இவற்றை ஒரு தாசித் தொழில்காரியிடம், ஒரு வக்கீல் தொழில்காரனிடம், எதிர்பார்க்க முடிகிறதோ? இத்தொழில்கரர்களுக்கு ஒரு பரம்பரைச் ஜாதி தேவையில்லை. இதில் பிரவேசித்து இத்தொழிலைக் கைக்கொண்டவர்கள் - கொள்பவர்கள் யாராய் இருந்தாலும் ஒரே அளவில் அவர்களது தொழில் தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

ஒரு பரம்பரைத் தாசி மகன், மற்றொரு பரம்பரைத் தாசி அல்லாத ஒரு தாசியால் வளர்க்கப்பட்ட மற்றொரு பரம்பரைத் தாசி அல்லாதவனாய் இருந்து, தாசித்தொழிலில் ஈடுபட்ட தாசியிடம் ஏமாந்து தன் சொத்துக்களை இழந்து கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்பட்டு ஓட்டாண்டி ஆகித் திரிய நேரிட்டுவிடுகிறது.

ஆகவே, இந்த மோசடி, துரோகம் முதலாகியவை தொழில் தர்மமே ஒழிய, பிறவிப் பரம்பரைத் தர்மம்கூட அல்ல.

மற்றும் கிராம விவசாயிகள், சாதாரணமாக நகர வியாபாரிகளிடம் இலேவாதேவிக்காரர்களிடம் ஏமாந்து பொருளிழந்து ஓட்டாண்டி ஆவது இயற்கை என்று சொல்லலாம். இந்தப்படிப் பணம் இழந்து, குடும்பமே அழிந்து ஓட்டாண்டியாகும் தறுவாயில் உள்ள ஒரு கிராமத்துப் பட்டிக்காட்டுக் குடியானவன், மிஞ்சிய சிறிய முதலோடு நகரத்துக்கு வந்து இப்படிக் கைவசத்தால் வியாபாரமும் இலேவாதேவியும் ஆரம்பித்து, வியாபார தர்மத்திலும் கெட்டிக்காரன் ஆகிய குடியானவன் வேறு அநேக குடியானவர்களை ஏமாற்றித் துரோகம் செய்தும், வேறு பல பரம்பரைக் குட்டி வியாபாரிகளை வஞ்சித்துப் பாப்பராக்கிப் (பரம ஏழையாக்கி) பணம் சம்பாதிக்கவும் தகுதி உடையவனாக ஆகிவிடுகிறான்.

இது போலவே வக்கீலால், வியாஜ்ஜியத்தால், நாசமான சில குடும்பங்கள். அதில் ஒருவன் தப்பித்தவறிப் படித்து வக்கீலாகி வக்கீல் தர்மத்தின் மேலோங்கிய பரம்பரை வக்கீல் அல்லாத ஒருவன் பிரபலமடைந்து செல்வவானாகவும் உயர் பதவியினன் ஆகவும் ஆகிவிடுகிறான். இப்படி எல்லாம் ஆவதற்குச் ஜாதி, பிறவி, பரம்பரை முக்கியமல்ல பின் எது முக்கியம் என்றால் தொழில் தர்மம்தான் என்பேன். அதுபோலவே தொழில் தர்மத்தில், போர்ட்டருக்கு ஒரு புத்தி; ஜட்கா வண்டி, ரிக்ஷா வண்டிக்காரர்களுக்கு ஒரு புத்தி; வாத்தியார்களுக்கு ஒரு புத்தி; பியூன்களுக்கு ஒரு புத்தி; போலீஸ்காரருக்கு ஒரு புத்தி; தொழிலாளிக்கு ஒரு புத்தி; முதலாளிக்கு ஒரு புத்தி என்பனபோல் தொழில் தர்மம் என்கின்ற தொழில் புத்தி ஏற்படுவது இயல்பாகும். இந்தத் தன்மை முற்றி இவை ஒரு கும்பலுக்கு, ஓர் இனத்திற்கு என்று பெரும்பான்மையாகப் போய் அடைகின்றபோது, இதற்குச் ஜாதிப் புத்தி என்று பெயர் ஆகிவிடுகிறது.

சாதாரணமாக நாம் மற்றவர்களைக் கண்டிக்க முற்படும் போது அவர்களை நாம் வசவு கூறப் பயன்படுத்தும் சொற்களில்,

"இந்தத் தேவடியாபுத்தியைக் காட்டாதே"

"இந்த வியாபாரப் புரட்டைக் காட்டாதே"

"இந்த வக்கீல் பித்தலாட்டத்தை என்னிடம் காட்டாதே" என்கிறோம்.

ஒரு புலவன் பாடி இருக்கிறான் "கம்மாளனுக்குப் பயந்தல்லோ பரமசிவன் பாம்மை ஆபரணமாய் அணிந்து கொண்டிருக்கிறான்" என்று.

இது தொழில் தர்மமே ஒழிய சமூக தர்மம் அல்ல. ஓர் ஆசாரி ஒரு பாங்கில் காஷியராய் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு பழைய சல்லிக் காசுகூட திருடமுடியுமா? அல்லது வெள்ளிப் பணத்தில் கொஞ்சம் உரைகல்லிலாவது உரைத்துக் கொள்ள முடியுமா? ஆனதால் ஜாதி தர்மம் என்பது பெரிதும் தொழில் தர்மமேயாகும்.

பார்ப்பனனின் ஜாதிப் புத்தி, ஜாதி தர்மம் என்பது அவர்களுடைய தொழில் தர்மம். தொழில் புத்தி என்றுதான் கொள்ளத்தக்கது ஆகும். தொழில் என்பது மனிதன் வாழ்க்கைக்கு வகுத்துக் கொள்ளப்பட்ட வகை.

இதன் தத்துவம்தான், ஜாதி தர்மத்துக்கு, "வர்ணாசிரம தர்மம்" என்பதற்கு, அடிப்படையாகத் தொழிலை முக்கியமாக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக நம்மில் மக்கள் "கடவுளால் - மதத்தால்" வேத சாத்திரங்களால் இரண்டு ஜாதியாகத்தான் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் ஜாதிக்கு அடிப்படை என்ன என்றால் ஒருவன் உழைக்காமல், சரீரத்தினால் பாடுபடாமல் வாழவேண்டிய ஜாதி என்பதும், ஒருவன் சரீரத்தால் உழைத்துக் கொண்டே வாழவேண்டும் என்பதான உழைப்பு தர்மம்தான் என்பதாகும். இதில் உழைக்கிற ஜாதியைச் சேர்ந்தவர்கள் தாம் நாம். உழைக்காத ஜாதியைச் சேர்ந்தவர்கள் தாம் பார்ப்பனர்கள் என்பது. ஆக ஜாதி தர்மம் இருந்து வருகிறது. ஆகவே உடலால் உழைக்காமல் ஒருவன் வாழ வேண்டும். ஆனால் உடலுழைப்பவனை ஏமாற்றாமல், மோசம் செய்யாமல், வஞ்சகம் துரோகம் செய்யாமல் ஒரு சக்தியுள்ள மனிதனால் வாழமுடியுமா?

உழைப்பவனை வஞ்சிப்பது - துரோகம் செய்வது என்றால், உழைப்பின் பயனை உழைப்பாளி சரிவர அடையாமல், மேலும் உழைக்க ஜீவன் (உயிர்) இருக்கும்படியான அளவுக்குக் கூலிதான் என்று வரையறுக்கப்பட்டிருப்பதே ஆகும். அதிலும் பார்ப்பன தருமம் என்பதில், உழைப்பாளி ஜாதிக்கு உயிர் வாழும் அளவுக்கு என்றுகூட இல்லாமல், உயிர் இருக்கும் வரை வேலை வாங்கவேண்டியது. கூலி கொடுப்பது பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை என்பதுதான் பார்ப்பன தருமம் என்பதாக (பார்ப்பானுக்குத் தர்மமாக) ஆக்கப்பட்டு இருக்கிறது. இது எந்த அடிப்படையைக் கொண்டு என்றால், மேலே சொல்லியபடி பார்ப்பான் தொழில் - தர்மம் அதாவது வாழ்க்கைத் தர்மம் பாடுபடாமல் வாழவேண்டியது என்ற அடிப்படையில்தான்.

ஆகவே பாடுபடாமல் பிறர் உழைப்பின் பயனை அனுபவித்துக கொண்டே வாழ்வது என்பதைத் தர்மமாகக் கொண்ட எவனிடம் நாம் ஒழுக்கம், நாணயம், நீதி, நேர்மை, வஞ்சகமற்ற தன்மை, துரோகம் - மோசடி அற்ற தன்மை, முதலியவைகளைக் காண முடியும்?

இப்படி இருக்கையில் உழைக்காமல் ஊரார் உழைப்பில் வாழ்வது என்பதைத் தர்மமாக - வாழ்க்கைத் தர்மமாக மாத்திரமல்லாமல் "இது கடவுள், மதம், சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளை" என்று சொல்லுகிற எவனிடம்தான் நாம் நாணயம், ஒழுக்கம், நேர்மை, வஞ்சகமற்ற - துரோகமற்ற - புரட்டு - பித்தலாட்டம் - பாதகம் அற்ற தன்மையைக் கிரமமாகக் காணமுடியும்? அதுவும் இந்தத் தன்மையைப் பரம்பரைப் பிறவித் தர்மமாகக் கொண்ட எந்தப் பிறவிச் ஜாதியிடம்தான் எதிர்பார்க்க முடியும்? எனவே பார்ப்பன சாதி என்ற கூட்டத்திற்கு - கோஷ்டிக்கு எந்தக் காரணம் கொண்டும் எந்த விதத்திலும் ஒழுக்கம் - நாணயம் - யோக்கியமான நடத்தை என்பவைகள் இருக்காது என்பதுடன், இருக்கவும் முடியாது. இந்தத் தன்மையைப் பார்ப்பனர்கள் தங்களுக்குப் பரம்பரை உரிமை, தர்மம் என்று சொல்லி, பாத்தியம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஏற்பவே தங்கள் பரம்பரையைச் சிருஷ்டித்துக் கொண்டு இருக்கிறார்கள். பரம்பரை மாத்திரமல்லாமல் இந்த மாதிரியான பார்ப்பனத் தர்மத்தையே தாங்கள் கடவுள், மதம், சாஸ்திர - புராணம், அவதாரம் ஆகியவற்றிற்கும் பொருத்தி அவற்றை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இனி அடுத்த கட்டுரையில் இன்று தங்களைப் பிராமணாள் உயர்ந்த பிறப்பாளர்கள், பாடுபடாமல் - உழைக்காமல் மற்ற மக்களிடம் வேலை வாங்கி அவர்கள் உழைப்பால் வாழ வேண்டிய உயர் குல தர்ம மக்கள் என்ற உரிமைக் கொண்டாடும் பார்ப்பன மாந்தர்களின் மூதாதையர் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களான கடவுள்கள், அவர்கள் மனைவி மக்கள், அவதாரங்கள், அம்சங்கள் பற்றியும், பார்ப்பனர்களால் பதிவிரதைகள் - சக்தி அம்சங்கள் என்று பாராட்டப்படும் பெண்கள், பெண் தெய்வங்கள் முதலியவர்கள் பற்றியும், இவர்களால் செய்யப்பட்டதாக - அருளப்பட்டதாக - நடந்து காட்டப்பட்டதாகக் கூறப்படும் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி - சுருதிகள், புராணங்கள் - இதிகாசங்கள் முதலியவைகளைப் பற்றியும் அவர்களின் - அவைகளின் ஒழுக்கம், நாணயம், நீதி, நேர்மை, சத்தியம், சாந்தம், அன்பு, கருணை ஆகியவை பற்றியும் பல நூல்களில் உள்ளபடி ஆதாரங்களோடு எடுத்துக்காட்டலாம் என்று இருக்கிறேன்.

எதற்காக என்றால், இப்படிப்பட்டவர்களிடம், இப்படிப்பட்ட கடவுளர்களை, மூதாதையர்களைக் கொண்டவர்களிடம், இப்படிப்பட்ட வேத, சாஸ்திர, புராண, இதிகாச, ஸ்மிருதி, சுருதிகளை வழிகாட்டியாய்க் கொண்டவர்களிடம் உண்மை, ஒழுக்கம், நன்றி அறிதல், நாணயம், நீதி, நேர்மை முதலிய நற்குணங்களும், வஞ்சகம், துரோகம், செய்ந்நன்றி மறுத்தல், குடிகெடுத்தல் முதலிய தீயகுணங்கள் அற்ற தன்மையையும் எதிர்பார்க்க முடியுமா என்பதை உணர்த்தி, மக்களை உஷார்படுத்தவேதான் எடுத்துக்காட்டலாம் என்று கருதுகிறேன். இவற்றைக் கண்மூடி நம்பாமல் நல்லவண்ணம் படித்து ஆராய்ந்து, தங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு தள்ளுவதைத் தள்ள - ஏற்பனவற்றை ஏற்க வேண்டிக் கொள்கிறேன்.

ஏனெனில் இந்தப் பார்ப்பனர்களால் நாம் சித்திரவதை செய்யப்படுகிறோம்.

-------------- தந்தைபெரியார் -- ”விடுதலை” தலையங்கம் 27-10-1960

0 comments: