Search This Blog

1.7.15

நினைவு நாள் கொண்டாடுவது எதற்காக?-பெரியார்

பன்னீர் செல்வம் நாள்
- தந்தை பெரியார்



தோழர்களே! பன்னீர்செல்வம் நினைவுநாள் என ஒரு நாளை நாம் கொண்டாடுகிறோம். எத்தனையோ பேர் தினம் சாகிறார்கள். ஏதோ இரண் டொருவர் களுக்குத்தான் நினைவு நாள் கொண்டாடுகிறோம். 

செத்துப்போனவர் களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமார்த்தியம் முதலியவைகளைப் பற்றியோ  எவருக்கும் நாம் நினைவுநாள் கொண் டாடுவதில்லை. இவை காரணமாக நாம் எவரையும் போற்றுவதில்லை, துதிப் பதுமில்லை; பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத் தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரெரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டு மானால் என்சைக்கிளோபீடியா, ரேடியோ முதலியவை ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியான அனேகவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவு என்பவையெல்லாம் இவை களை உத்தேசித்ததல்ல.


மற்றெதற்கு ஆக என்றால் மனிதர் களாக மனிதத் தன்மை உடையவர்களாக இருந்து மறைந்த மனிதர்களுக்கு ஆக இரங்கி அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி மற்றவர்களையும் மனிதர் களாக ஆகுங்கள் என்பதற்கு ஆகவே யாகும்.

அப்படியானால் செத்துப்போன மற்றவர்களும் இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல் லவா என்று கேட்பீர்கள். அவர்களை யெல்லாம் மனிதர்கள் என்று சொல்லு கிறோமே ஒழிய, மற்ற ஜீவப்பிராணி களுக்கும், மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனி தர்கள் என்று சொல்வதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவ பேதம் அல்ல; நடப்பிலும் நடப்பால் ஏற் படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.

உலகிலுள்ள எல்லா ஜீவப்பிராணி களுக்கும் மனிதர்கள் என்பவர்கள் உட்பட உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.

ஜீவன் என்றால்?

ஜீவன் என்றால் பிறத்தல், தன் நல னுக்காக வாழ்தல், இனத்தைப் பெருக் குதல், இறத்தல் ஆகியவைகளைக் கொண்டதேயாகும். இந்தத் தத்துவங் களைப் பார்த்தால் செத்த மனிதர்களும் இருக்கும் மனிதர்களும் முக்காலே மூன்று வீசம் முக்காணி அரைக்காணி பேரும் அதற்கும் மேற்பட்ட எண் ணிக்கை உடையவர்களும் மேற்கண்ட குணங்களுடைய ஜீவப்பிராணி என் பதில் சேர்ந்தவர்களாக ஆகாமல் அவை களில் நின்றும் உயர்ந்தவர்களாகக் கருதப்படவேண்டிய மனிதத்தன்மை உடையவர்களாக இருக்க நியாயம் எங்கே இருக்கிறது?

ஜீவன் என்றால் சுய   உணர்ச்சி என்றுதான் கருத்து. சுய உணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய, தன் வாழ்வைப் பற்றிய, தன் பாதுகாப்பைப் பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான் முடியும். இந்தத் தன்மையை உடையவர் களை ஜீவப் பிராணிகளில் நத்தை, சங்கு, ஈ, எறும்பு, பாம்பு, தேள், குயில், கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை, ஆடு, மாடு, குரங்கு, மனிதன் என்பதாக மனிதனை மற்றவைகளோடு சேர்த்துச் சொல்லுவதற்கு அல்லாத தனிக்குணம் வேறு என்ன பெரும்பாலான மனிதர்களி டம் இருக்கிறது என்று கருதிப் பாருங்கள்.


மனிதனுக்கு ஆறு அறிவு இருக்கிறது என்று சொல்வது மனிதனை ஜீவப் பிராணிகளிடம் இருந்து பிரிப்பதற்குப் போதுமான காரணமாகாது. சிந்திக்கிற குணம் எல்லா ஜீவப்பிராணிகளிடமும் இருக்கிறது. ஜீவத்தன்மை எந்தெந்த ஜீவனுக்கு இருக்கிறதோ, அவற்றிற்கெல் லாம் சிந்திக்கும் தன்மை உண்டு. ஆனால் அதில் அளவு வித்தியாசம் இருக்கிறது என்பது உண்மை. அதனால் எதுவும் வேறுபட்ட உயர்ந்த ஜீவனாக ஆகிவிடாது. அதன் பலனாலும் ஏதும் உயர்ந்ததாக ஆகிவிடாது.


தேன் ஈக்களால் மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள்; மாடுகளால் மக்கள் பால் சாப்பிடுகிறார்கள்; ஆடு, கோழி களால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள்; நாய்களால் காக்கப்படுகிறார்கள்; கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடை கிறார்கள். இப்படி எத்தனையோவற்றால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை. அப்படித் தான் மனித ஜீவனும் பல வழிகளில் பல காரணங்களால் வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்பட லாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிட மாட்டான்.

எதனால் மனிதன் உயர்ந்தவன்?

மற்றபடி எதனால் மனிதன் மற்ற ஜீவப் பிராணிகளுடன் சேராத உயர்ந்தவனாக லாம் என்று கேட்கப்படலாம். அதைச் சொல்லத்தான் இவ்வளவு சொன்னேன்.


ஜீவ சுபாவ உணர்ச்சியான தன்மை உணர்ச்சியும், தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட் சியம் செய்து,
அதாவது தன்னைப் பற்றிய கவலையும், தனது நலத்தையும், தன் மேன்மையையும் பற்றிய கவலையும், தனது மேல் வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து மனித சமுதாய வாழ்வில் மேன்மைக்காக பணியாற்றவே மற்ற ஜீவன்களுக்கு இருக்க முடியாத வசதி, எண்ணும் தன்மை, தொண் டாற்றும் சக்தி ஆகியவை இருக்கிறது என்று கருதித் தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ் வாகக் கொண்டிருக்கிறானோ அவன்தான் மற்ற ஜீவப்பிராணிகளில் இருந்து வேறு பட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனா வான். மனிதஉரு ஜீவப்பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவு நாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்கு ஆகத்தான் இருக்கலாமே ஒழிய வேறு ஒன்றுக்காக இருக்க முடியாது.


ஒரு மனிதனுக்கு அவனது மலமும், மூத்திரமும் உயர்ந்த நறுமணமுள்ளதாக இருந்தாலும் அதனால் மனிதன் மேன்மை யானவனாகவோ, மதிக்கத் தகுந்தவனா கவோ ஆகிவிட மாட்டான். சிற்சில புல் பூண்டுகளுக்கு நறுமணம் உண்டு. சில ஜந் துக்களின் மலங்களுக்கும் நறுமணமுண்டு, அவற்றை நாம் மதிக்கிறோமா? போற்று கிறோமா?


அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கி றோமா? அல்லது தெய்வங்கள் என்பவர் களையாவது மதிக்கிறோமா? மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை, மடாதிபதி களை மதிக்கிறோமா? இவர்களையெல் லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும் தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள்தான் மதிப்பார்கள். மற்றவர்கள் ஏன் மதிப் பார்கள்? ஏன் என்றால் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பவனை யார் எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன் அன்னதானப் பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர் குருநாதனாவானா? தாசி காதலியாவாளா? என்பதுபோல்தான். தன் தன் நலத்துக்குத் தன் தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் எப்படிப் பட்டதாயிலும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழியப் போற்றக்கூடியதாகாது. அப்படியல் லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிற வன் மதிக்கப்பட்டே தீருவான். அத் தொண்டால் பாதகமடையும் தனிப்பட்ட வர்கள் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் மதிக்காமல் இருக்கலாம். அவமதிக்கலாம். அது பொதுவாய் மதிக்காததாகாது.

ஆகவே, நாம் நினைவு நாள் கொண் டாடும் மக்களை உண்மையான மனிதர்களாய்க் கருதி அவர்களது மனிதத் தன்மையை மதித்து மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டும் என்கின்ற ஆசைக்காக எடுத்துக்காட்டுக்காக, பிரசாரத்துக்காகக் கொண்டாடுகிறோம்.

நம் பன்னீர்செல்வம்

நம் மறைந்த பன்னீர்செல்வம் அப்படிப் பட்ட கொண்டாடவேண்டிய குழுவில் சேர்க்கப்பட வேண்டியவர் என்றே சொல் லலாம். அவர் நம் இனத்திற்குத் தன்னல மின்றிப் பல தொண்டாற்றினார். இன்னும் பல தொண்டாற்ற ஆவலாய் இருந்தார். அவர் நமக்காகத் தம்மை ஒப்படைத்தார்.


அவர் நம் இயக்கத்தில் ஓர் உண்மை யான பின்பற்றுகிறவராக இருந்தார்; தலை வருக்கு அடங்கி இருப்பதுதான் ஓர் இயக் கத்துக்கு, ஒரு கட்சிக்குச் சரியான கட்டுப் பாடு என்று பலதடவை பொது மேடை களில் பேசி அதுபோல் நடந்து வந்தார்.


இன்று சிலர் தாங்கள் கட்டுப்பாட்டுக்கும், ஒழுங்கு முறைக்கும் விரோதமாக நடந்து கொண்டு கட்சியில் கட்டுப்பாடு இல்லை என்றும், அதேசமயத்தில் தலைவர் சர்வாதி காரியாய் இருந்து கட்டுப்பாட்டைக் குலைக் கிறார்கள் என்றும் பேசி கலவரம் செய்து வருவதைப் பார்க்கிறோம். அந்தக் குணம் நம் பன்னீர் செல்வத்தினிடம் இல்லை. சிலர் தலைவர் என்பதற்கும், சர்வாதிகாரம் என்பதற்கும் பொருள் விளங்காமல் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓர் இயக்கம் அல்லது ஒரு ஸ்தாபனமாய் இருந்தால் அதில் உள்ள எல்லோருக்கும் தங்கள் இஷ்டப்படி பேசவும் நடக்கவும் உரிமை உண்டு என்பது பொருத்தமாகாது. நீ சர்வாதிகாரம் செய்கிறாய் என்று இங்கு (தஞ்சையில்) ஒரு கேள்வித்தாள் எனக்குக் கொடுக்கிறார்கள். இதற்குச் சமாதானம் சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.

இயக்கத்தின் - ஸ்தாபனத்தின் கொள் கைத் திட்டம் ஆகியவைகளைப் பற்றிச் சர்ச்சை செய்யும் போதும், தீர்மானிக்க விவாதிக்கும் போதும், பேசும்போதும் அதில் (இயக்கத்தில்) உள்ள ஒவ்வொருவருக்கும் தங்கள் அபிப்பிராயம் தெரிவிக்கும் உரிமை இருக்கும். அது முடிந்த பிறகு அதற்கு அடங்கி இருப்பதுதான் கட்டுப்பாடாகும். அதை மீறினவர்கள், குறை கூறுகிறவர்கள் செய்கையும் பேச்சும் கட்டுப்பாட்டுக்கு மாறுபட்ட காரியமாகும்.


ஒரு முதலாளி (எஜமான்) கீழ்இருந்து காரியம் பார்ப்பவர்களுக்கும், ஒரு இயக்கத்தில் ஒரு தலைவன் பின்னிருந்து பின்பற்றுகிறவர்களுக்கும் சுதந்திரம் இருக்க முடியாது. கொள்கைத் திட்டம் முடிந்து விட்டால் பேசாமல் பின்பற்ற வேண்டியது தான். அது தனக்குப் பிடிக்காவிட்டால் வெளியேறிவிட வேண்டியதுதான். வெளி யேறித் தனித்து வாழ முடியாவிட்டால் எதிர்த்துக்கொண்டு இருப்பதைச் சிலர் தங்கள் சமத்து என்று கருதுகிறார்கள். இதனால் இயக்கத்துக்குத் தொல்லை கொடுத்து தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதாகச் சிலர் கருதுகிறார்கள். அது அறியாமை என்பது மாத்திரமல்லாமல் தங்கள் நிலை தாழ்வடைவதையும் அறியாத வர்களாகிறார்கள்.


நம் இயக்கம் ஏதோ சிலர் மாத்திரம் சேர்ந்து தன்னலம் அடையும் (லிமிடெட்) கூட்டுக் கம்பெனியாய் இருந்தால் மாத் திரமே ஒவ்வொரு கூட்டாளியும் உரிமை கொண்டாடலாம். பலரது (பொது) நலனுக்கு என்று சிலர் பொது நலம் கருதி வந்ததாகச் சொல்லிக் கொண்டுவந்து சேர்ந்து அதில் தங்கள் நலனுக்குத் தக்கபடி நடைமுறை இல்லையானால் கலகம் செய்வது என்பதும், அப்படிக் கலகம் செய்து கொண்டு ஸ்தாபனத்தையும், தலை வரையும் கட்டுப்பாடு இல்லை; ஒழுங்கு இல்லை; சர்வாதிகாரம் நடக்கிறது என்பதும் வெறுக்கத்தக்கது என்பதோடு முடியாதது மாகும்.


யுத்தத்தில் சேர்ந்த யுத்த வீரன் ஊதிய மில்லாமல் சேவை செய்பவனானாலும் தளகர்த்தனைவிட அதிகம் தெரிந்தவனா னாலும் யுத்தக் காரியத்தில் தளகர்த்தன் சொல்வதைக் கேளாமல் தளகர்த்தன் சொல்வதைக் தவறு சொல்லிக் கொண்டி ருந்தால் அது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதா என்று பாருங்கள். யுத்தத்தில் சேரும்போது யோசித்தே சேர வேண்டும். அல்லது தளகர்த்தன் இன்னான் என்று தெரிந்த உடன் இவன் கீழ் நம்மால் தொண்டாற்ற முடியுமா என்று சிந்தித்துத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.


இரண்டும் இல்லாமல் தளகர்த்தனை ஏமாற்றி அதிகாரம், கலவரம் செய்து பயன டைந்து விடலாம் என்று கருதி உடுப்பைப் போட்டுக்கொண்டு முன்னணியில் நின்று சலாம் செய்து விட்டு யுத்த முறை தனக்குக் கஷ்டமாய் இருக்கிறது என்று தெரிந்த உடன் தளகர்த்தனை, சர்வாதிகாரியாய் இருக்கிறான், கட்டுப்பாடில்லாதவனாய் இருக்கிறான் என்றால், இப்படிப்பட்ட வர்கள் தன்னைத்தான் ஏமாற்றிக் கொண் டவர்களாவார்கள். இது சாதாரண மக்க ளுக்கும் புரிந்திருக்க வேண்டிய காரியம். ஆசை நேர்மை அறியாது என்பதற்கு ஒப்பாக இப்படிப்பட்டவர்கள் காரியங்கள் இருக்கின்றன. என்றாலும் மற்றவர்கள் நடைமுறைகளை, திட்டங்களை, கொள் கைளை உணர்ந்து தம்மால் கூடுமானால் ஒத்துழைக்கவும், கூடாவிட்டால் விலகிக் கொள்ளவும் பழகிக்கொள்ளவேண்டும்.

தற்கால அரசியல்

மந்திரி பதவி சீக்கிரம் ஏற்படும் என் கின்ற உணர்ச்சியே சிலர் கலவரம் செய்யக் காரணமாகிவிட்டது. முதுகில் ஒரு கையும், காலில் ஒரு கண்ணும் முளைத்தாலும் முளைக்கலாம், சண்டை முடியுமுன் மந்திரி பதவி ஏற்படப் போவதில்லை; ஏற்பட்டா லும் வங்காளம், சிந்து முதலியவை போல் சிரிப்பாய்ச் சிரிக்க வேண்டித்தான் இருக் கும்; நமக்கு ஒன்றும் பலன் இருக்காது. ஆனால், அதனால் நமக்குச் சரியான வேலையும் உற்சாகமும் இருக்கும். சாப்ரூ கமிட்டி என்பது ஒரு ஜாலவித்தையாகும். அறியா மக்கள் அதை மந்திரம், குட்டிச் சாத்தான் வேலை என்பார்கள். அறிந்த வர்கள் அது ஜாலவித்தை என்பார்கள்.


எல்லாக் கட்சி மாநாடாக இருந்து பிறகு அது கட்சி இல்லாதார் மாநாடாகி சாப் ரூவின் தனி முயற்சி ஆகி காந்தி - ஆச்சாரி கூட்டுச் சூழ்ச்சி ஆசீர்வாதம் பெற்றதாகி இப்போது சந்தி சிரிக்கும் தந்திரமாக ஆகி விட்டது. அதைப்பற்றி நமக்குக் கவலை வேண்டியதில்லை.

சென்பிரான்சிஸ்கோ மாநாட்டுப் பிரதிநிதி

சென்பிரான்சிஸ்கோ மாநாட்டுக்குச் சர். இராமசாமி முதலியார் பிரதிநிதியாய்ப் போவது தகுதி இல்லை என்று பார்ப் பனர்கள் சொல்லுகிறார்கள். அவர்களது அடிமை தேசியவாதிகளும் ஆமாம் போடு கிறார்கள். சர். ராமசாமிக்குப் பூணூல் இல் லாததால்தான் தகுதி இல்லை என்று சொல் லுகிறார்களே தவிர வேறு அவரைவிட கெட்டிக்காரர், விஷயம் தெரிந்தவர் யார் என்று இவர்கள் கருதுகிறார்கள் என்பது விளங்கவில்லை! இவர்கள் குட்டு வெளியாய்விடும் என்று கருதித்தான் தேசியவாதிகள் ஆட்சேபிக்கிறார்கள். திராவிட நாடு வேண்டாம், பாகிஸ்தான் வேண்டாம் என்று சொல்லி நான் காங் கிரசுக்காரனுமல்ல என்று சொன்னால் சென்பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பப்பட லாம் என்று கருதி சிலர் கரணம் போட்டும் பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம் அடைந் தார்கள். 

---------------------------மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ் நாட்டிலுள்ள திருச்சி, தஞ்சை, கும்பகோணம் முதலிய பல இடங்களில் நடந்த பன்னீர்செல்வம் நினைவு நாள் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சுகளின் தொகுப்பு------ - குடிஅரசு - சொற்பொழிவு - 14.04.1945


Read more: http://www.viduthalai.in/page-2/103244.html#ixzz3d1vbXJf4

17 comments:

தமிழ் ஓவியா said...

கோயில் சிலைகள் திருட்டு

வத்தலக்குண்டு, ஜூலை. 3 வத்தலக்குண்டு திண்டுக்கல் மெயின் ரோட்டில் அருணாச்சலபுரம் என்ற இடத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களாக பல்வேறு சுவாமிகளுக்கு கற்சிலைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் கோவில் அருகே நின்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் அவர்களை விசாரித்து விட்டு அனுப்பி விட்டனர்.

நேற்று காலை கோவிலில் இருந்த ஆஞ்சநேயர், துர்க்கையம்மன், பாலமுருகன் ஆகிய சிலைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம் ஆகிய சிலை களை எடுக்க முயன்று அது முடியாமல் போகவே அந்த சிலைகளை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் மின்னல் கொடி, செயலாளர் வேலுச்சாமி, துணைத் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆய்வாளர் வினோஜி தலைமையிலான காவலர் அங்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...

கோவில் விழா கூட்டத்தில் மோதல்  பிளேடு கத்தி வெட்டு
பண்ருட்டி, ஜூலை. 3 பண்ருட்டியை அடுத்த எம்.ஏரிப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல் வருகிற ஆடி மாதத்தில் திருவிழா நடைபெற உள்ளது.

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் அந்த கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராமத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருவிழாவுக்காக அந்த ஊரில் உள்ள குடும்பங்களுக்கு வரி விதிப்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. வேலைக்காக வெளியூர் சென்றவர்களுக்கு வரிவிதிக்க பல இளைஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் உருவாகி தகராறு ஏற்பட்டது. இதில் சீத்தாராமன் என்ற இளைஞர் தாக்கப்பட்டார். உடனே ஆத்திர மடைந்த அவர், தனது சட்டை பையில் இருந்த பிளேடால் தன்னை எதிர்த்தவர்களை சரமாரியாக தாக்கினார்.

இதில் பிளேடு வெட்டு விழுந்து படுகாய மடைந்த அழகுகண்ணன் (32), வெங்கடகிருஷ்ணன், பாலமுருகன் (42), மணிகண்டன் (29) ஆகியோர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சக்கரபாணி ஆகி யோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

இந்து மதத்தால் ஏற்பட்ட விபரீதம்!
கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?

உயர்நீதிமன்ற மதுரை கிளை சுட்டிக்காட்டி கண்டனம்




மதுரை, ஜூலை3_ ஜாதீய முறைகளினால் ஏற்பட்டுவரும் கொடுமை கள் மனிதன் செத்த பிற கும்கூட விட்டபாடில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளது.

இந்து மதத்திலிருந்து வெளியேறி கிறித்துவத்தில் சேர்ந்த பிறகும்கூட ஒவ் வொரு ஜாதியினருக்கும் வெவ்வேறான சுடுகாடு களைக் கோருகின்ற அவல நிலை உள்ளது. சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எஸ்.மணிக் குமார் மற்றும் ஜி.சொக்க லிங்கம் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் அமர்வு முன்பாக பொதுநல வழக்கு நேற்று (2.7.2015) விசாரணைக்கு வந்தது. திண்டுக்கல் வட் டத்தைச் சேர்ந்த ஏ.வெள ளோடு கிராமத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மற்றும் பெந்தகோஸ்தே பிரிவு கிறித்தவர்களுக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதாக அவ்விரு பிரிவினருக்கும் என தனித்தனியே சுடுகாடுகள் கோரி பொதுநலவழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் நீதிபதி கள் குறிப்பிடும்போது, கிறித்துவத்தில் ஜாதீய முறை கிடையாது. இந்து மதத்தில் உள்ளதும், அதன டிப்படையில் பழக்கங் களின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஜாதீய முறை கிறித்துவத் திலும் ஊடுருவிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கிறித்துவ பைபிள் இவைகளை அனுமதிக் கிறதா என்பதுதான் ஆச்ச ரியமாக இருக்கிறது. அதற்கு காரணமான ஜாதியை பெருமையின் அடையாளமாக பார்க் கிறார்கள். ஜாதீயமுறைகளால் செத்த பிறகும் தனித்தனி இடங்களுக்காகப் போரா டும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து நீதிபதிகள் வேதனையை வெளிப் படுத்தினார்கள்.

சட்டப்படியான நடை முறைகள் இருந்தபோதி லும், வருவாய்த்துறை அலு வலர்கள் சமாதானக் கூட் டங்களை நடத்துவதற்கு தள்ளப்படுகின்றனர்.

நீதிபதி எஸ்.மணிக் குமார் கூறும்போது, வாழும் காலங்களில் மக்கள் பழமைகளின் பெயரால், தனிப்பட்ட வகையிலும், சொத்து களுக்காகவும் இன்னும் மற்றவைகளுக்காகவும் பல்வேறு உரிமைகளுக் காகப் போராடிவருகின்ற னர். ஆனால், எங்களுக்கு வேதனையெல்லாம் அவர்கள் இறந்தபிறகும் அவர்களைப் புதைக்க வேண்டிய இடத்துக்காக வும் போராட்டம் தொடர் கிறது என்பதுதான். கல் லறைகள் அமைதியான இடங்களாக இருக்க வேண்டியவை. இறந்தபிறகு நாம் விரும்புவதுகூட அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், உண்மை நிலை, இந்த வழக்கில் உள்ள சூழ்நிலைப்படி பார்க்கும் போது, மனிதன் உயிருடன் இருக்கும்போது மட்டு மன்றி இறந்தபிறகும்கூட அமைதியே இல்லாமல் இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது என்று குறிப் பிட்டுள்ளார்.

அமர்வில் நீதிபதிகள் மேனாள் நீதிபதி கே.சந்துரு எடுத்துக்காட்டிய 1956ஆம் ஆண்டில் வெளியான ரம்பையின் காதல் தமிழ்த் திரைப்படப் பாடல் சமரசம் உலாவும் இடமே.... 2008ஆம் ஆண்டு வழக்கில் முடிவாக அவர் அளித்த தீர்ப்பில், குறைந்தபட்சம் இந்த உலகைவிட்டு நீங்கும் போதாவது ஒற்றுமை உணர்வு இருக்க வேண் டும் என்பதை சுட்டிக் காட்டினார்கள். மேலும் மதுரை தத்தனேரி சுடு காட்டுப்பகுதியில் வெவ் வேறு ஜாதியினருக்கு வெவ்வேறு சுடுகாடுகள், புதைக்கும் இடங்கள் என்று சமூக பாகுபாடு களுக்கு இடமில்லாமல் மதுரை மாநகராட்சி அலுவலர்கள் செயல் படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே இவ்வழக்கில், திண்டுக்கல் வருவாய்த்துறை கோட் டாட்சியர் சமாதானக் கூட்டத்தில் எடுத்த முடி வாகிய பெந்தகோஸ்தே பிரிவினருக்கான சுடுகாட் டுக்கான தனி இடத்தை, அரசமைப்புகூறும் சமத் துவம் மற்றும் சகோதரத் துவம் ஆகிய இலட்சியங் களின்படி மாவட்ட ஆட்சியர் முழுமையான தீர்வு காணும்வரை தற் காலிகமாக மட்டுமே பயன் படுத்திக் கொள்ள   வேண் டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட் டுள்ளனர்.

மேலும் அமர்வின் சார்பில் நீதிபதிகள் குறிப் பிடும்போது, மதத் தலைவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் கூட்டங்களில், அறிவுரைகளில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சகோதரப் பாசங்களை எடுத்துக்கூறுங்கள் என்பது தான் என்று குறிப்பிட் டுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...

ஊழல் சகதியில் பிஜேபி

 

பொருளாதார மோசடிக்குற்றவாளியான லலித் மோடிக்கு உதவிய விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். இந்த நிலையில் அரசுக்குச் சொந்தமான அரண்மனையை தனது பெயருக்கு மாற்றினார் என்றும் இந்த விவகாரத்தில் லலித்மோடி வசுந்தரா ராஜேவிற்கு உதவியுள்ளார் என்று அது தொடர்பான ஆவணங்களுடன் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சில ஆவணங்களை தலைநகர் டில்லியில் வெளியிட்டார்.

தவுல்பூர் அரண்மனை ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமானது. 1954-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான வருவாய்த்துறை ஆவணங்களில் இந்த அரண்மனை அரசுக்குச் சொந்தமானது என்றே காணப்படுகிறது. 1980-ஆம் ஆண்டு இது தொடர்பாக வசுந்தரா ராஜேயின் கணவர் ஹேமந்த் சிங் அளித்த வாக்குமூலத்திலும், தவுல்பூர் அரண்மனை  ராஜஸ்தான் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்றே கூறி இருக்கிறார். வசுந்தரா ராஜேவும் கூட அதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

2013-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது வசுந்தரா ராஜே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் நிறுவனத்தில் தனது மகன் துஷ்யந்த் சிங், மருமகள் நிஹாரிகா மற்றும் லலித் மோடி ஆகியோருக்கும் பங்குகள் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்த அரண்மனையை துஷ்யந்த் சிங், தான் நடத்தும் நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் ஓட்டலாக மாற்றிக்கொண்டுவிட்டார். இந்த நிறுவனம் லலித் மோடியும், வசுந்தரா ராஜேவும் இணைந்து நடத்துவதாகும். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், வசுந்தரா ராஜே, அவருடைய குடும்பம் மற்றும் லலித் மோடி ஆகியோர் இணைந்து ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான இடத்தில் சொகுசு ஓட்டலை கட்டி இருக்கின்றனர். இதில் மாநிலத்தின் பங்களிப்பு இல்லாமலேயே ரூ.100 கோடியை இருவரும் முதலீடு செய்தும் உள்ளனர்.

இந்த ஓட்டலை கட்டுவதற்கு மொரீஷியஸ் வழியாக லலித் மோடி பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இது திட்டமிட்டே அரசாங்க சொத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டதாகும். சட்டவிரோதமும் ஆகும். இதன் மூலம் தலைமறைவாக உள்ள லலித் மோடியுடன், வசுந்தரா ராஜே வர்த்தக தொடர்பு கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது.       லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். வெளிப் படையான ஆட்சி, ஊழலில்லாத ஆட்சி என்று கூறிக்கொண்டு வந்த மோடி இப்போது அவரது அமைச்சரவையிலேயே பலர் தொடர்ந்து ஊழல் வழக்குகளில் சிக்கிவருகின்றனர். இது குறித்து இன்னும் பதில் ஏன் கூறவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது என்றாலும் இது மக்கள் முன் வெகுவாக எழுந்து நிற்கும் கேள்வியும்கூட!

ஓராண்டு பிஜேபி ஆட்சியின் சாதனை என்ன என்று கேள்வி கேட்டால், ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்திருக்கிறோமே அது போதாதா என்று நெஞ்சை நிமிர்த்தியும், குரலை உயர்த்தியும் பேசிக் கொண்டிருந்த வர்களுக்கு லலித்மோடி தொண்டைக்குள் சிக்கிய முள்ளாகி  விட்டார்.

ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் மட்டுமல்ல; இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பலமாக சிக்கிக் கொண்டு விட்டாரே - பிரதமர் நரேந்திர மோடியோ மவுன சாமியாராகி விட்டார். மன்மோகன் சிங்கைத்தான் அப்படி அழைத் தார்கள். அவரின் இயல்புப்படி அதிகம் பேசாதவர்! அவர்கூட நாடாளுமன்றத்தில் தேவைப்பட்ட நேரத்தில் எழுந்து பேசததான் செய்தார்.

ஆனால், 56 அங்குல மார்பளவு கொண்ட மாபெரும் வீரரான வாய் நீளம் காட்டும் மோடியோ இப்பொழுது - மன்மோகன் சிங்கையே தோற்கடிக்கும் அளவுக்குத் தமக்குத் தாமே தம் வாய்க்குள் அலிகார் பூட்டைப் போட்டுக் கொண்டு விட்டாரே ஏன்? மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பது இது தானோ?

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியின் சங்கடம்

கொள்ளையடித்த பணம் கொள்ளை போயிற்று

தற்சமயம் காசியில் தங்கியிருக்கும் ஸ்மார்த்த பிராமணக் கூட்டத்தின் தலைவரான லோககுரு சங்கராச்சாரியாரிடம் இருந்த ஏராளமான சொத்துக்கள் திருட்டுப் போய்விட்டன.

அவருடைய பூஜையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 விக்கிரகங்களும், இரண்டரை தோலா தங்கம் வைத்துக் கட்டப்பட்டிருந்த பெரிய சங்கு ஒன்றும் திருட்டுப் போய் விட்டனவாம். இவற்றின் விலை பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளதென்று கூறுகிறார்கள்.

பூஜையில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களுக்கோ, அல்லது லோககுரு என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றித் திரிகின்ற சங்கராச்சாரியாருக்கோ, ஏதாவது சக்தி யென்பது இருந்தால் திருடர்கள் அவைகளை எடுத்துக் கொண்டு போயிருக்க முடியுமா? என்று இப்பொழுதுதான் மூட ஜனங்கள் யோசித்துப்பார்க்க ஆரம்பித் திருக்கிறார்கள்.

ஒன்றுந் தெரியாத பாமர மக்களையும், பார்ப்பனர்களின் தயவு பெற அவர்கள் காலை வருடிக் கொண்டு கிடக்கும் பார்ப் பனரல்லாத பணக்காரர்களையும் ஏமாற்றிப் பாத காணிக்கை யென்னும் பேரால், பகிரங்கப் பகற்கொள்ளை போல் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பொருள் நிஜமாகவே கொள்ளை போனதில்ஆச்சரியப்படத் தக்க விஷயம் என்ன இருக்கிறது? என்று உண்மை தெரிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

திருடர்களைப் கண்டுபிடிக்கப் காவல்துறையினரும் அதிதீவிர முயற்சி செய்து வருகிறார்களாம்! அய்யோ! பரிதாபம்! சங்கராச்சாரியார் அவர்களே! சங்கடப்படவேண்டாம்! தேசத்தில் இன்னும் எவ்வளவோ முட்டாள்களிருக்கிறார்கள்.

மற்றொரு சுற்றுப்பிரயாணத்தைத் தடபுடலாக விளம் பரத்துடன் நடத்தினால் இழத்த பொருளையும், அதற்கு மேலான பொருளையும் சம்பாதித்துக்கொள்ளலாம், முட்டாள்கள் இருக்கும் வரையில் தங்களுக்கு ஏன் கவலை ? ஆகையால் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லு கிறோம்.

(குடிஅரசு - 1935)

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்


மகன்: எதிர்த்த வீட்டு ஜோசியரு ஜாதக பொருத்த மெல்லாம் பார்க்க ரொம் பவும் ராசி யான ஆளா? 50, 100ண்ணு அங்க வர்றவங் கள்ளாம் தட்சணை கொடுக்கிறாங்களே... அந்த பணத்தை எல்லாம் அவரு என்ன பண்ணுவாரு?

தந்தை: அங்க வர்றவங்கள்ளாம் தர்ற தட்சணைப் பணத்தை எல்லாம் சேர்த்து வச்சு தம் பொண்ணுக வரனுக்கு வரதட்சணையா கொடுப்பாரு!

தமிழ் ஓவியா said...

யார் கெட்டிக்காரர்கள்?

சந்திரலோகத்தைக் கண்டு விடமுடியும்



இந்தப்பூலோகத்துக்கும், சந்திரலோகத்துக்கும் 250000 இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல்தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு  2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம்  போகக்கூடிய பறக்கும் யந்திரத்தின் மூலம்  100 நிமிட நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திர மண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தை  நமது இந்திய  மகாத்மாக்களும், சங்கராச்சாரிகளும் பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக்கோட்டையென்றோ, வீண்கனவென்றோ தான் சொல்லுவார்கள்.

ஆனால் மணி ஒன்றுக்கு  700 மைல் வேகம் போகக்கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது. இனியும் இதிலிருந்து பல அபிவிருத்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள்.

ஆகவே மேல் நாட்டு மக்களுடைய ஆசையும், முயற்சியும் இந்தமாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன. நம்முடைய முயற்சிகள்  கிருஷ்ணன் மனிதனா -கடவுளா ?

ராமாவதாரம் முந்தியா -கிருஷ்ணாவதாரம் முந்தியா ?
பூமியை ஆதிசேஷன்  தாங்கினால், ஆதிசேஷயைர் தாங்குகிறார் ?

உலகத்தை இரணியாஷதன் பாயாய்ச்சுருட்டிக்கொண்டு சமுத்திரத்துக்குள் புகுந்து கொண்டான். என்றால் அப்போது சமுத்திரம் எங்கு? எதன் மேல் இருந்தது ?

மகாவிஷ்ணு, பன்றி அவதாரமெடுத்தபோது  என்ன ஆகாரம் சாப்பிட்டார்?

சிவனும் விஷ்ணும் (ஆணும் ஆணும்) சேர்ந்தால்  பிள்ளை எப்படி பிறந்திருக்கும்?

இந்திரியத்தை வாய் வழி உட்கொண்டால் பிள்ளை பிறக்குமா? அப்படியானால், இப்போது ஏன் அப்படி  எவருக்கும் பிள்ளை பிறப்பதில்லை? என்பது போன்ற  முட்டாள்தனமானதும்  போக்கிரித் தனமானதுமான பிரச்சினையில் நமது சாஸ்திரிகளுடைய ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. இவ்வளவோடு நின்றுவிடுகின்றோமா ?

சந்திரலோகத்தைப் பார்க்க இப்போது தான் நமது வெள்ளைக்காரர்கள் நினைத்து இருக்கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் எத்தனையோ காலத்துக்கு முன் சந்திரனைப் பார்த்தாகிவிட்டதென்றும், நம்முடைய குருவின்மார்  மனைவிகள் சந்திரனைப் புணர்ந்து, புதனைப் பெற்று இருக்கிறார்கள் என்றும் அதற்காகப்புருஷர்கள் அந்தச்சந்திரன்  மீது  கோபித்து அவனை மாதத்திற்கு ஒரு முறை தேயவும்,

வளரவும் செய்து விட்டார்கள் என்றும், அதுமாத்திரமல்லாமல்,  சந்திரனையும் அவனுக்கு வெகுதூரத் திலிருக்கும் சூரியனையும், சராசரி வருஷத்துக்கு  ஒரு  முறையானது (ராகு) கடிக்கச்செய்து அந்த விஷமிறங்க நம்ம  சாஸ்திரிகள் ஜபம் செய்கிறார்கள்.

என்றும் சொல்லி விடுகிறோம். ஆகவே வெள்ளைக்காரர்களுடைய அறிவிற்கும், நம் சாஸ்திரிகளுடைய அறிவுக்கும்  எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதையும்  யார் கெட்டிக்காரர்கள் புத்திசாலிகள் என்பதையும் நீங்களே கண்டு பிடியுங்கள். (குடிஅரசு - 1935)

தமிழ் ஓவியா said...

சமூகப் புரட்சி


ஒரு பெரிய சமூகப் புரட்சி உண்டாகாமல் அபேத வாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும்.

ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர்வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்க ளுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தா லொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள்.

ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேத வாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

மதக்கோட்பாடுகள்



நாம் நம்மைப்பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கி யிருக்கிறோமே தவிர, நம்மைச்சுற்றி இன்று என்ன நடக்கிறது  என்று அறிந்து கொள்ள முயல்வதில்லை. அறியத் தவறிவிடுகிறோம். இதற்குக் காரணம் நம்முடைய மதக் கோட்பாடுகள்தான்.

ஆகவே நாம் குறுகிய மதக்கோட்பாடு களிலிருந்தும், இயற்கைக்கு மீறிய சக்திகள் உள்ளன என்ற அர்த்தமற்ற  மாயையிலிருந்தும் விடுபடவேண்டும். இந்த வாழ்க்கை -இந்த உலகம் -இந்த இயற்கை என்று நிகழ்காலத்தைப் பற்றியே நாம் கெட்டியாகப் பிடித்து எண்ணிப்பார்க்கவேண்டும்.

சில இந்துக்கள் நாம் வேதகாலத்திற்குச் செல்வதைப்பற்றியே பேசுகிறார்கள். சில முஸ்லீம்கள் இஸ்லாமிய மத ஆட்சியைப் பற்றியே கனவுகாண்கிறார்கள். இவைகள் யாவும் சோம்பேறித்தனமான கற்பனைகளாகும்.

ஏனெனில் இனி நாம் பின் நோக்கிச் செல்வது என்பது முடியாத காரியம். போகவும் முடியாது. காலமென்னும்பாதை ஒரு வழிப் பாதையே (One Way Traffic)  எனவே திரும்பி வருவதென்பது விரும்பத்தக்கதாக நினைத்தாலும் கூட நாம் இனி திரும்பிவருவதற்கில்லை. உலகத்தை ஒட்டி முன் சென்றே ஆகவேண்டும்.

***************************
பழைமை எண்ணங்கள்

நன்மை தீமைகளை நாம் பிரித்துக்காட்டும் போது மாறுபட்ட பல கருத்துக்கள் தோன்றும். இவைகளை நாம் கோடிட்டுப் பிரிக்கவேண்டிய அவசியமுமில்லை, ஏனெனில், மாறிமாறி  வரும் வாழ்வும், அதில்  தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளும் நமக்கு நன்மை எது? தீமை எது.? என்று காட்டிவிடும்.

எந்தவிதமான முன்னேற்றமும், விஞ்ஞானமோ அல்லது தத்துவார்த்தமோ எதிலும் அந்த முன்னேற்றம் நம்முடைய சமூகத் தேவைகளுக்கும், சொந்த வாழ்க்கைக்கும் தொடர்புடையதாக இருக்கவேண்டும்.

முன்பு நாம் பல்வேறுபட்ட எண்ணக் கூறுகளைத் தொகுத்து ஒன்றாக்கி  அதன் (Synthetic approach) மூலம் அறிவைப்பெற  முயன்றோம், இன்று இதன் மூலம் அறிவை நாடுபவர்கள் வெகு சிலரேயாவர்.

இந்த முறையில் அறிவை அணுகுவதற்கு இங்கே முட்டுக்கட்டைப்  போடப்பட்டது. அதனால் இந்த முறை  வேறொன்றுக்கு வழி விட வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது. இந்தப்  புதிய வசதி (Analytical approach)  பழைமையாயிருந்து வந்தவைகளுக்கு நேர் எதிர்மாறானதாகும்.  -நேரு, டிஸ்கவரி ஆஃப்  இந்தியா

தமிழ் ஓவியா said...

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு
மழைக்காக பூஜை செய்ய உத்தரவிடுவதா?

தலைமைப் பொறியாளருக்கு மதுரை உயர்நீதிமன்றம் தாக்கீது




மதுரை, ஜூலை 2_ மழை பெய்வதற்காக பூஜை செய்யச்சொல்லி ஆணை பிறப்பித்த நீர்வளத்துறைத் தலைமைப் பொறியாளர் மீது திராவிடர் கழக வழக் குரைஞர் அணியைச் சேர்ந்த மதுரை வழக் குரைஞர் ந.இளங்கோ அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திற் கும் மாநில, மத்திய அரசு களின் ஆணைகளுக்கும் எதிராக எப்படி இத்தகைய ஆணையைப் பிறப்பிக்க லாம் என்பதற்குப் பதில் அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை 2 நீதி பதிகள் அடங்கிய அமர்வு தலைமைப் பொறியாள ருக்கு தாக்கீது பிறப்பித் துள்ளது.

தமிழ் ஓவியா said...

பூஜை செய்தால் மழை வருமாம் பொறியாளரின் புதிய கண்டுபிடிப்பு

திருச்சியில் நீர்வளத் துறையில் தலைமைப் பொறியாளராக பணி புரிந்து வருபவர். எஸ். அசோகன். எம்.இ. ஆவார். அவர் கடந்த 26.05.2015இல் தனக்கு கீழ் பணிபுரியும் அனைத்து பொறியாளர் களும் அந்தந்த கோட்டங் களின் ஆளுகைக்கு உட் பட்ட கோயில்களில் 1.06.2015 அன்று சிறப்புப் பூஜைகள் செய்யவேண்டும்  என்றும் இந்த விவரத் தினை 2.6.2015 அன்று காலை 10 மணிக்குள் மின் னஞ்சல் மூலம் தெரிவித் திட வேண்டும் என்றும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி யிருந்தார். இதனை ஆட் சேபித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக் குரைஞரும், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி யைச் சேர்ந்தவருமான ந.இளங்கோ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். திராவிடர் கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீர சேகரன் மனுதாரர் சார் பில் வாதாடினார்.

அந்த மனுவில் தமிழக அரசு பிறப்பித்த 29.04.1968 தேதியிட்ட குறிப்பாணை மற்றும் 13.12.1993 தேதி யிட்ட தமிழக அரசின் அரசாணை எண். 426, 18.08.1994இல்  தமிழக அர சின் தலைமைச் செயலர், மற்ற துறைச் செயலாளர் களுக்கு அனுப்பிய கடிதம், மத்திய அரசின் உள்துறை இணைச்செயலாளர் அனைத்து மாநிலச் செய லாளர்களுக்கும் அனுப்பிய கடிதம் ஆகியவற்றின் நகல்களை தாக்கல் செய்து, அவற்றில் அரசு அலுவல கங்களில் எவ்வித மதச் சடங்குகளோ, பூஜை களோ, செய்யக்கூடாது என்றும், கடவுளர் படங்கள், சிலைகள், மதம் சம்பந்தப் பட்ட வாசகங்கள் அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாது என்றும், அரசு அலுவலகங்களுக்கு அறி வுரை கூறப்பட்டிருக்கிறது என்றும், அதையும் மீறி இதுபோன்ற அரசு அலு வலர்கள் தங்களது அரசு கடமைகளைச் செய்யாமல், மத காரியங்களில் ஈடு படுவது அரசு ஆணை களை மீறிய செயலாகும் என்றும் அரசு ஊழியர் களின் நன்னடத்தைச் சட்டம் பிரிவு 14இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதாகும் என்றும் தனது மனுவில் கூறியிருந் தார். அதோடு இதே மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர்கள் இப்ராஹிம் கலிபுல்லா, மற்றும் வாசுகி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ் சில் 17.03.2010இல்  பிறப் பிக்கபட்ட உத்தரவில், அரசாணை 426 மிகவும் கடுமையாக பின்பற்றப் படவேண்டும் என்றும் தவறு செய்யும் அரசு ஊழியர்களின் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அறிவுரை வழங்கியிருந்தது.

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்த உத்தரவுக்கு பின்னரும் பல அரசு அலு வலகங்களில் மதச் சடங் குகளும், பூஜைகளும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், திருச்சி நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் மழைக்காக கோயில்களில் பூஜைகள் நடத்திட தனக்கு கீழ் பணி புரியும் அனைத்துப் பொறி யாளர்களையும், பூஜை நடத்த கட்டளையிடுவது மதச் சார்பின்மைக்கு எதிரானது மட்டுமல்லா மல், அரமைப்புச் சட்டத் தில் அத்தியாயம் 4-எ பிரிவு 51-எ (எச்)- ல் அறிவுறுத்தப் பட்டுள்ள அடிப்படை கடமைகளுக்கு விரோத மானதாகும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்  என்றும் ஆராய்ச்சி மனப்பான்மையில் ஈடு படவேண்டும் என்றும் அப்பிரிவில் வலியுறுத்தப் பட்டிருக்கும் நிலையில், இந்த பொறியாளரின் அறிக்கை, மேற்படி அரச மைப்புச் சட்ட விதிகளுக் குப் புறம்பானதாகும். மழைக்காக பூஜை செய்ய வேண்டும் என்ற முறை அந்த பொறியாளர் படித்த பி.இ அல்லது எம். இ பட்டபடிப்பில் பாடத் திட்டங்களில் ஒன்றாக இல்லாத நிலையில், ஒரு பொறியாளர் அதுவும் அரசு அதிகாரியாக இருக் கும் ஒருவர் இவ்வாறு சுற்றறிக்கை விடுவது கேலிக்குரியதாகும். மேலும் அரசு ஊழியர்கள் பெரும் பாலும் மேய்ப்பன் இல் லாத ஆடுகளாகவே பணிபுரிந்து வருகிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம்.

ஏனெனில் உயர் நீதிமன்றம் தலைமைச் செயலாளருக்கு இது போன்ற மத சம்பந்தமான நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின் பும் இது தொடர்கிறது என்பதே சான்றாகும்  என்று மனுதாரர் வழக் குரைஞர் ந. இளங்கோ கூறியிருந்தார்.    இந்த மனு 30.06.2015இல் நீதியரசர்கள் மணிக்குமார் மற்றும் ஜி. சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ் சில் விசாரணைக்கு வந்த போது நீதியரசர் மணிக் குமார் அவர்கள் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அவர்களிடம் எவ்வாறு ஓர் அரசு அதிகாரி மத சார்பான, ஓர் உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்குக் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அனைத்து மத கோயில்களிலும் பூஜை நடத்தத்தான் உத்தரவிட் டிருந்தார் என்று பதில் கூறியபோது அதுவும் மதச்  சார்பின்மைக்கு விரோத மானதுதானே என்று கூறிய நீதியரசர் விரிவான எதிருரையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தலைமைப் பொறியாளர் அசோகன் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் உரை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டு மனு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.

தமிழ் ஓவியா said...

இன்னும் எத்தனை இளவரசன்கள் தேவை?


தருமபுரி மாவட்டத்தில் தான் ஜாதித் தீ பிடித்து அலைக் கழித்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசன்களை ஜாதித் திமிங்கலம் பலி கொண்டது. அது தற்கொலையா? கொலையா? என்று ஆய்வு செய்வதைவிட எதுவாயினும் ஜாதி என்னும் கொலை தத்துவம்தான் அவனைக் கொன்று பசி வெறியைத் தீர்த்துக் கொண்டது.

2013 ஜூலை 4ஆம் தேதி அந்தக் கட்டிளங்காளை தர்மபுரி ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தான் என்றால் இன்னொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளஞ்சிங்கம் ஈரோடு அருகே கிழக்குத் தொட்டிப்பாளையம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தான் என்பது அதிர்ச்சிக்குரியது.

காதலர்களுக்கெல்லாம் இரயில்வே தண்ட வாளங்கள்தான் தண்டனை மெத்தைகளா?

இளவரசன் மரணத்தின் மர்மங்களுக்கு இன்னும் கூட விடை கிடைக்காத நிலையில் கோகுல் ராஜின் மரணத்தின் பின்னணிக்கான வெளிச்சம் என்றைக்குத் தெரியப் போகிறதோ?

சுவாதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோகுல் ராஜும் காதலித்ததுதான் பெரும் பாவமாகப் போய் விட்டது போலும்!
ஜாதியை வைத்து அரசியல் நடத்தும் பிற்போக்கு வாதிகள் இத்தகைய மரணங்களுக்கு அல்லது படுகொலைகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

ஏடுகளில் வெளிவந்த தகவல்களைப் பார்க்கும் பொழுது குற்றவாளிகள் யார் என்பது அனேகமாகக் காவல் துறையினருக்குத் தெரிந்திருக்கும்.

உயர் ஜாதிக்காரர்களா? வளமான பொருளாதாரப் பின்னணி உள்ளவர்களா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் காவல்துறை, தன் கடமையைச் செய்ய வேண்டும்.

காதலிப்பது ஒன்றும் பஞ்சமா பாதகமல்ல - சட்ட விரோதமான செயலும் அல்ல; ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்கிறதா என்பதுதான் முக்கியமே தவிர எந்த ஜாதி என்பது முக்கியமல்ல.

தந்தை பெரியார் பிறந்து முக்கால் நூற்றாண்டுக் காலம் பாடுபட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணிலே பாழும் அரசியலுக்காக ஜாதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஜாதிக் கூட்டணி வைத்து, ஜாதியின் பிரதாபங்களை முழங்கும் பேர் வழிகள் - இத்தகைய மரணங்களுக்குப் பிறகாவது மனம் திருந்த வேண்டும்.

வெட்கம் கெட்ட செயலுக்குப் பெயர் கவுரவக் கொலையாம். எது கவுரவம்? ஜாதி ஒழிப்பு - மறுப்பு என்பதுதானே உண்மையான கவுரவம்!

பகுத்தறிவும், முற்போக்குச் சிந்தனைகளும் சக மனிதனை மதிப்பதும், சகோதரத்துவ உணர்வும் தானே கவுரவத்துக்கான இலக்கணம்!

ஜாதிப் பித்து என்பது எப்படி பகுத்தறிவு உள்ள மனிதனுக்குக் கவுரவமானதாக இருக்க முடியும்?

ஜாதி என்பதற்கு என்னதான் அடையாளம்? பத்து பேர்களை வரிசையாக நிற்க வைத்து, யார் என்ன ஜாதி என்று யாராலாவது சொல்ல முடியுமா? குரங்கிலிருந்து தோன்றிய மனிதனுக்கு எங்கிருந்து ஜாதி வந்து குதித்ததாம்?

மூதாதையர்களான குரங்குகளிலேதான் ஜாதி உண்டா? உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் சேர்த்துத்தானே குரங்கு மூதாதை? அந்த நாடுகளில் எல்லாம் ஜாதிகள் இல்லையே - இங்கு மட்டும் எங்கிருந்து வந்தது ஜாதி?

கபிலர் பாடியது போல மற்ற நாடுகளில் எல்லாம் ஜாதியில்லாமைக்குக் காரணம் அங்குப் பார்ப்பனர் இல்லாமையால் தானே இன்னொன்றையும் முக்கிய மாகக் கவனிக்க வேண்டாமா? தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், முன்னேறியோர் என்று நமக்குள் பிரித்துக் கொண்டு மட்டத்தில் உசத்தி என்று நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் நம் எல்லோரையும் பார்ப்பான் ஒட்டு மொத்தமாகச் சேர்த்துத்தானே சூத்திரன் - பிர்மாவின் காலில் பிறந்தவன் என்று இழிவுபடுத்துகிறான்?
சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்றுதானே பொருள்! இந்த இழிவை ஒழிக்க நமக்குச் சூடு வரவில்லை, சொரணை பிறக்கவில்லை.

மூலத்தை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவது புத்திசாலித்தனமாகுமா? இன்னும் தமிழன் கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் போக முடியவில்லை - கோயிலைக் கட்டிய பரம்பரையைக் கம்பிக்கு வெளியே நிற்க வைக்கிறான் - இது ஏன் என்று சிந்திக்கும் யோக்கியதை வரவில்லை இன்னும் எவ்வளவுக் காலத்துக்கு நமக்குள் கீழ் ஜாதி மேல் ஜாதி என்று நினைத்துக் கொண்டு உயிர்களைப் பலி கொடுப்பது? சிந்திக்க வேண்டாமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் கவுரவக் கொலைகள் என்ற பெயரில் கொலைகள் நாளும் விழுந்து கொண்டு தானிருக்கின்றன.

அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துக் கொண்டால் போதுமா? தந்தை பெரியார் உருவத்தை சுவரொட்டிகளில் பொறித்துக் கொண்டால்தான் போதுமா? அவர்களின் கொள்கை களை மதிக்க வேண்டாமா?

கவுரவக் கொலைகளுக்கு ஒரு முடிவு ஏற்பட்டாக வேண்டும்; கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்தாக வேண்டும் - அதனை விரைவுபடுத்தவும் வேண்டும். அப்பொழுதுதான் குறைந்தபட்சம் ஜாதி வெறியர்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். ஆட்சி விரைந்து செயல்படட்டும்!

தமிழ் ஓவியா said...

முயற்சிக்கவேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கை யின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.
_ (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...

இஸ்ரோ!

இஸ்ரோ என்பது (Indian Space Research Organi sation) இந்திய விண்வெளி ஆய்வு மய்யமாகும். இதன் பெயரிலிருந்தே இதன் அறிவியல் தன்மை என்ன வென்று விளங்கும்.

விண்வெளி என்றாலே வானுலகம் என்று கருதிய மூடத்தனம் ஒரு காலத்தில் நிலவியிருக்கலாம். சூரி யனை, சந்திரனை, நட்சத் திரங்களை கடவுள்களாகக் கும்பிட்ட காலம் ஒன்று இருந்தது. சந்திரன், குரு பத் தினியைக் கற்பழித்ததால், அவனுக்குக் கொடுக்கப் பட்ட சாபமே  தேய்பிறை என்ற கதைகள் எல்லாம் கவைக்கு உதாவதவை என்று தூக்கி எறியப்பட்ட காலத்தில், பார்ப்பனர்கள் என்னதான் விஞ்ஞானம் பேசினாலும், அஞ்ஞானக் குப்பையை நடு வீட்டில் குவிப்பதில் மட்டும் எப்பொ ழுதுமே குறியாக இருப் பார்கள்.

மூடநம்பிக்கைதான் அவர்களின் மூலதனம் - அது இருந்தால்தான் மக் களின் மூளைத்தனத்தைக் களவாடிக் காசுப் பறிக்க லாம் - தங்களின் ஜாதி ஆதிக் கத் தர்பாரில் பறக்கும் பிறவி முதலாளித்துவக் கொடியையும் இறக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
திருநெல்வேலி - மகேந் திரகிரியில் உள்ள இஸ்ரோ அலுவலகம் தொடர்பான ஒரு செய்தி: 29.6.2015 அன்று காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டுள் ளதாம். எதற்காக? அந்த அலுவல கத்தின் நீட்சியாகக் கட்டப் படும் கட்டடத்திற் கான பூமிபூஜை! கடந்த 29 ஆம் தேதி அன்று காலை கண பதி ஹோமத்துடன் நடத் தப்பட்டுள்ளது. இதனை நடத்தியவர் அந்த அலுவல கத்திலேயே உள்ள பார்ப் பனப் பணியாளர்.

நாடு எந்த யோக்கிய தையில் இருக்கிறது? விஞ் ஞான மனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட் டம் பிரிவு  4 (51A(h)) வலி யுறுத்தும் நிலையில், ஒரு விஞ்ஞான நிறுவனத் தில் கணபதி ஹோமம் நடத்தப் படுகிறது என்றால், இது சட்ட விரோதம் அல்லவா? இதற்குக் காரணமானவர் கள் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டாமா?

இஸ்ரோவின் தலைவ ராக இருந்த கேரளாவைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர், இப் படித்தான் விண்வெளியில் ராக்கெட் ஏவப்படும் பொழு தெல்லாம் திருப்பதி, காள ஹஸ்தி கோவில்களுக் கெல்லாம் சென்று திட்ட நகலை அந்தக் கடவுள் களின் காலடியில் வைத்துக் கொண்டிருந்தார்.

பவுதீக அறிவியலாள ரான பாரத ரத்னா சி.என். ஆர்.ராவ் இதனைக் கண் டித்து பெங்களூரு பிரஸ் கிளப்பில் பேசியது நினை வில் இருக்கலாம் (செய்தி 24.11.2013).

இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் திருப்பதிக் கடவுளின் கருணையில் ராக் கெட்டுகளை விடுகிறதா என்ற வினாவை எழுப்பினார்.

கல்வியறிவு அற்ற மனி தர்கள் நம்பிக்கைகளை வைத்துள்ளனர். அவர்கள் எது நடந்தாலும், அது கட வுளின் செயல் என்று கூறி கடவுளுக்குக் கணிக்கை செலுத்துவார்கள். ஆனால், மிகவும் புகழ்பெற்ற அறி வியல்அறிஞர்கள் நிறைந்த இஸ்ரோவிலும் இதே மூடத் தனம் தொடர்கிறதே என்று பேசினார்.

இதைவிட எப்படித் தான் சவுக்கடி கொடுக்க முடியும்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

முஸ்லிம் ஒருவருக்குப் பிறந்தவர் நேருவாம்! மோடி அரசின் தகவலால் பரபரப்பு!



புதுடில்லி, ஜூலை 1_ மோடி அரசு இன்று டிஜிட்டல் இந்தியா என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது.  இந்த நிகழ்ச் சியின்போது இந்திய வர லாறு மற்றும் தலைவர் கள் தொடர்பான பல் வேறு தகவல்கள் பல் வேறு இணையதளங் களில் வெளியாகின. இதில் ஜவஹர்லால் நேரு பற்றிய விவரங்களும் இந்திய அரசால் வெளி யிடப்பட்டு அது விக்கி பீடியா என்ற இணைய தளத்தில் வெளியானது. இந்த இணையதளத்தில் ஜவஹர்லால் நேரு முஸ் லிமிற்கு பிறந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.    இது குறித்து காங் கிரஸ் செய்தித்தொடர் பாளர் ரனதீப் சூரஜ் வாலா கூறும்போது: மோடி அரசு, மிகவும்  கேவலமான ஒரு காரி யத்தைச் செய்திருக்கிறது. நாட்டின் முக்கிய தலை வரும், இந்தியாவின் பெரு மையை உலக அரங்கில் மிளிர வைத்தவரும், நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படுபவருமான ஜவஹர்லால் நேருவை முஸ்லிமிற்கு பிறந்தவர் என்று விக்கிபீடியா இணையதளத்திற்கு தகவல் கொடுத்து எடிட் செய்து வெளியிட்டுள் ளது.    ஜூன் 26 ஆம் தேதி விக்கிபீடியாவில் நேரு குடும்பம் பற்றிய செய்தி யில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தன.

இதில் ஆதாரம் (sourses) என்பதில் இந்திய அரசு என்றும் எழுதியிருந்தது. மேலும் திருத்தப்பட்ட கணினியின் அடையாளக் குறியீடு (அய்.பி. எண்) தேசிய தகவல் அமைச்ச கத்தின் குறியீடு ஆகும். இந்த அமைச்சகமும் மோடியின் நேரடிக் கட் டுப்பாட்டின் கீழ் தான் வருகிறது.    இந்த விவ காரம் தொடர்பாக மோடி, நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண் டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.   ஆங்கிலத்தில் விக்கிபீடி யாவில் வெளியான அந்த தகவலின் தமிழாக்கம் வருமாறு:

Moti Lal Nehru family?

மோதிலால் நேருவின் குடும்பம்

Motilal Nehru had one real wife and 4 other illegal wives.

மோதிலால் நேரு விற்கு ஒரு உண்மையான மனைவியும், சட்டவிரோ தமாக 4 மனைவியும் உள்ளனர்.

(1) Mrs Swaroop Rani (married wife) had two children with her.

சுவரூப் ராணி சட்டப் படி மணந்த மனைவி அவருக்கு மோதிலால் நேருவின் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

(2) Thussu Rahman Bai – already had 2 children from her previous marriage to Mubarak Ali (employer of Motilal Nehru)

மோதிலால் நேரு  வீட்டில் வேலைபார்த்த முபாரக் அலி திடீர் மரணம் அடைந்தார். அவரது மனைவியான தவுசு ரகமான் பாய் என் பவரை இரண்டாவதாக மணம் முடித்துக்கொண் டார். முபாரக் அலியின் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருவர்தான் ஜவஹர்லால் நேரு.

a. Jawaharlal Nehru (Mubarak Ali was the real father). Moti inherited his wealth, business and kept his wife and children like a true Muslim)

மோதிலால் நேரு விற்கு இரண்டு குழந்தை கள் இருந்தாலும் முபாரக் அலி மூலம் பிறந்த ஜவ ஹர்லால் நேரு மிகவும் புத்திசாலி மற்றும் மூத்த வராகையால் சொத்து முழுவதிற்கும் தானே உரிமையாளராக ஆவ ணங்களை மாற்றிவிட் டார். இரானிய விபச்சாரி ஒருவருடனும் குடும்பம் நடத்தினார். அவருக்கு ஒரு மகள் பிறந்தார்.  தன்னுடைய ஆசிரியரின் மகள் ஒருவருடனும் சட்ட விரோதமாக குடும்பம் நடத்தினார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். -   sources- biography of MO Mathai (Jawaharlal Nehru’s personal assistant

தமிழ் ஓவியா said...

நம்பாதவன் நாத்திகனாம்


இப்பொழுது மத சம்பந்தமாகவோ, சாஸ்திர சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்டுகளுக்கெல்லாம் ஒரே சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால், நம்பாதவன் நாத்திகன் என்பதுவே.
_ (குடிஅரசு, 3.11.1929)