Search This Blog

6.8.14

மண்டையை உடைக்க ஒரு கோயில் திருவிழாவா?



கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலெட்சுமி கோயிலில் 600-க்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளம் வயதினர் என அனைவரும் வரிசையாக கோயில் வளாகத்தில் உட்கார வைக்கப் பட்டு இருந்தனர். இந்நிகழ்ச்சியைக் காண்பதற்காக, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது பூசாரி பெரியசாமி கோயில் வளாகத்தில் வந்து மழுங்கி போன வாள் போன்ற ஆயுதத்தை கையில் ஏந்தி அனைவருக்கும் முன்பாக அருள் வந்ததாக நாடகமாடி அங்கு வேண்டுதலை நிறைவேற்றுதல் என்ற பெயரில் அமர்ந்திருந்த அறியாமை கொண்ட பொது மக்கள் தலையில் பல்லை கடித்துக் கொண்டு வெறித்தனமாக நிதானமின்றி சுமார் 600 பேர் வரை தேங்காய் உடைத்ததில் 70 பேருக்கு மண்டை உடைந்தது.


அதில் ஏராளமானோர் பெண்களும், வயதான வர்களும்தான்; மொட்டைத் தலையுடனும் இருந்தவர் களுக்கு பூசாரி பெரியசாமி ஓங்கி அடித்ததில் இரத்தம் பீறிட்டு வந்தது. உடனே உடனிருந்த பூசாரியின் உதவி பூசாரிகள் மஞ்சள், குங்குமம், திருநீற்றை கொண்டு இரத்தத்தை அடைத்தனர். இதில் பலர் சாமி குற்றம் ஆகிவிட்டது என்றதாக கூறி அரசின் முதலுதவி சிகிச்சை வண்டி இருந்தும் அங்கிருந்து சென்று விட்டனர். 20 பேர் மட்டும் அரசின் முதலுதவி வாகனத்தில் சிகிச்சை பெற்றனர். சண்முகம் (வயது 58) கடந்த 5 ஆண்டுகளாக தலையில் தேங்காய் உடைத்து கொண்ட அவர் மொட்டை தலையுடன் தேங்காய் உடைக்கும் போது மண்டை உடைந்தது. அவருக்கு 6 தையல் போடப்பட்டது. பூசாரி அருள் வந்து நிதானமின்றி என் தலையில் தேங்காய் உடைத்ததே எனது காயத்திற்கு காரணம் என்றார். சதீஷ் வயது (45), குளித்தலையைச் சேர்ந்த அவர் கூறியபோது நான் புதியதாக தலையில் தேங்காய் உடைத்து அதன் மூலம் ஏற்பட்ட காயத்தினால் 4 தையல் போடப்பட்டது. என் மண்டை மீது தேங்காய் உடைக்கும் போது மண்டை மூளையே கலங்கியதாக கூறினார். காயத்திரி (வயது 35) அவர் மண்டையில் தேங்காய் உடைத்தவுடன் மண்டையை தேய்த்துக் கொண்டு மயங்கி விழுந்தார்.


உடனிருந்தவர்கள் அவர்மீது தண்ணீர் தெளித்து அவரை உட்கார வைத்து அழைத்துச் சென்றனர். இந்தக் கோயிலில் நடப்பது ஒன்றும் புதிதல்ல; பல ஆண்டுகளாகத் தொடர் கதையாகவே நடந்து வருகிறது. பக்தி என்ற பெயராலே எதையும் செய்யலாம் என்பது ஆபத்தானதாகும்.
தலையில் தேங்காய் உடைப்பதால் எந்த அளவு மூளை பாதிப்புக்கு ஆளாகிறது என்று நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
சென்னையின் பிரபல நரம்பியல் மருத்துவர், டாக்டர் என்.திலோத்தம்மாள் அவர்கள் மருத்துவ ரீதியான உடல் நலம் பாதிப்பு பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.


தேங்காயைக் கையில் உடைக்கும்போது எலும்பு, சதை மட்டும் தான் உடைந்து பாதிப்பு ஏற்படும். ஆனால் தேங்காயை தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும்.


அதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கராத்தே பயிற்சியில் கையில் உடைப்பது, போல் ஏன் செய்யலாமே என்று கேட்கலாம். தலையில் உள்ள எலும்புடன மட்டும் சிக்கல் நிற்காது. உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லிமாதிரி இருப்பதுதான் மூளை ஒரு குழந்தையை குலுக்கினாலே கூட மூளை ஆடலாம். அதனால் பிரச்சினை வரலாம். மூளையில் இரண்டு மூன்று வகை உண்டு அதில் நான் சொல்வது அதிர்ச்சி (Concussion)  அடுத்து, அடிப்பட்டு கன்னிப் போதல்  (Contussuion) மூன்றாவதுNuronal Damage, Oxonol Damaage/ Oxonal  என்பதுதான் அடிப்படை செல். அதாவது நரம்புகள் சிதறிப்போவது; பிய்ந்து போவது. 


குத்துச்சண்டையில் பத்து அடி அடித்த வுடன் பார்த்தால், அடிவாங்கியவர் தள்ளாடி தள்ளாடிப் போய் குடிகாரன் மாதிரி மயக்கமாகி விழுவார். இதே சூழ்நிலை தேங்காய் உடைக்கும் போது தேங்காய் இரண்டாக உடைந்தால் சரி, அப்படி இல்லாமல் 2,3 தடவை உடைத்தால் தலையில் காயம் ஏற்படும்.


தலையில் எந்த இடத்தில் உடைக்கிறார்கள் என்பது தான் மிக முக்கியம் தலையின் மேல் பக்கம் புடைத்த மாதிரி உள்ள இடத்தில் தான் தேங்காய் உடைப்பார்கள், அந்த இடம் கனமாக இருக்கும், அப்படி அடிக்கும் போதுகூட தேங்காயைப் பொறுத்து அடிக்கும் வேகத்தைப் பொறுத்து தலையில் பாதிப்பு ஏற்படலாம். இந்த மாதிரி மூன்று விதத்திலும் எது மாதிரியும் உடையலாம். இது பிரைமரி டேமேஜ் ஆகும். இதனால் உள்ளே இருக்கும் ரத்தக்குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம். இது உடனேயும் நடக்கலாம். தாமதமாகவும் ரத்தக்கட்டி வரலாம். ஹெமட்டோ மா மூளையில் உள்ளேயும் இருக்கலாம் வெளியேயும் இருக்கலாம். அதன் அழுத்தம் அதிகரித்து மூளை நசுங்க ஆரம்பிக்கும் அதனாலேயும் தொந்தரவு ஏற்படும் என்கிறார் மருத்துவ நிபுணர்.


பக்தியின் பெயரால் நடக்கும் இந்த காட்டு விலங்காண்டித்தனத்தைத் தடுத்து நிறுத்தாவிட்டால்  அதனைத் தடுக்கும் அறிவியல் பணியில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

                      ------------------------------------"விடுதலை” தலையங்கம் 5-8-2014

18 comments:

தமிழ் ஓவியா said...


மத்திய தேர்வாணைய அய்.ஏ.எஸ்., தேர்வில் வினாத்தாள் இந்தி, ஆங்கிலத்தில் இருப்பது சரியல்ல! - கி.வீரமணி


மத்திய தேர்வாணைய அய்.ஏ.எஸ்., தேர்வில் வினாத்தாள் இந்தி, ஆங்கிலத்தில் இருப்பது சரியல்ல!

அனைத்து மொழிகளிலும் வினாத்தாள் இருக்க வேண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கி.வீரமணி

குடிமைப் பயிற்சி (அய்.ஏ.எஸ். உள்ளிட்டவை) தேர்வில் வினாத்தாள்கள் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் இருப்பது இந்த இரு மொழிகளையும் தாய்மொழியாகக் கொள்ளாத மொழியினருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் வினாத்தாள்கள் இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற தேர்வுகள் இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் வெவ்வேறு மொழி பேசுவோர் அனைவருக்கும் உண்மையான சமவாய்ப்பு அளித்து சமூகநீதியை (அரசியல் சட்டம் வழங்கியுள்ள உத்தரவாத உரிமை, சலுகை அல்ல) வழங்கிடும் வகையில் நடத்தப்படுதல் வேண்டும்.

அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22.

இவைகளில் சமஸ்கிருதம் தவிர மற்ற பல மொழிகளும் மக்களின் பேச்சு வழக்கில் உள்ளவை. எழுத்து வழக்கில் எல்லா மொழிகளும் உள்ளன. தமிழ் செம்மொழியாகும் என்ற அந்த அறிவிப்பு - கலைஞர் அவர்களின் பெரு முயற்சி காரணமாக வெளி வந்த பிறகே உயர் தனிச் செம்மொழி என்ற பட்டியலில் கூறப்பட்ட சமஸ்கிருதம் என்ற வடமொழிக்கும் அந்த சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

தமிழ் ஓவியா said...

வட மாநில, மாணவர்களுக்குச் சாதகம்!

இந்நிலையில் மத்திய தேர்வாணையம் சார்பில் (U.P.S.C.) நடத்தப்படும் தேர்வுகளில் ஆங்கில அறிவை செம்மைப்படுத்தும் வகையில் தேர்வுக்கான பாடம் மிகக் கடினம் என்று பெரும்பாலான வடமொழிகளின் மாநில ஹிந்தி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று, அந்த மதிப்பெண் - தேர்வுக் கணக்கில் கொள்ளப்படாது என்று நேற்று நாடாளுமன்றத்தில் அத்துறைக்குரிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் அறிவித்து, இந்தி பேசும் வட மாநில மக்களின் நலனுக்கு வகை செய்து கொடுத்துள்ளார்.

அதே நேரத்தில், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து தேர்வெழுதும் மாணவர்களின் கோரிக்கையான அவரவர் தாய் மொழியில் கேள்வித் தாள்கள் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை ஏனோ இன்னமும் ஏற்கத் தயங்குகிறது மத்திய அரசு.

இதில் என்ன பெரிய சுமை மத்திய அரசுக்கு உள்ளது என்பது நமக்குப் புரியவில்லை! ஆங்கிலத்தின் கடுமையான சோதனையைக் குறைக்கலாமே தவிர, ஆங்கிலத்தின் மதிப்பெண் அறவே எடுத்துக் கொள்ளப்படாது என்றால், மறைமுகமாக இந்தியை ஆட்சிமொழியாக்கும் முயற்சி என்றே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தை அறவே விலக்குவதன் நோக்கம் என்ன?

ஆங்கிலம் அனைத்து மாநில மக்களுக்கு (கிழக்கு மாநிலங்களைத் தவிர) அதிகம் புழக்கத்தில் இல்லாத - தாய் மொழி போன்ற மொழி அல்ல என்பதால், போட்டி களிடையே, ஏற்படும் சோதனை அனைத்து மாநில மக்களுக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்பட்டு, மற்ற வைகளைக் கொண்டு மதிப்பிடும் வாய்ப்பு அதன்மூலம் ஏற்படக்கூடும். (The disadvantage is equally distributed to all State Candidates) அதனை ஓரளவு கணக்கில் எடுத்துக் கொள்வது தேவையே. அது மட்டுமல்லாமல், பல மொழிகள் பேசும் மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்று, மூன்றில் ஒரு பகுதி, பிற மாநிலங்களுக்கு அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். காரர்கள் அனுப்பப்படும்போது இணைப்பு மொழி அங் குள்ள நிர்வாகத்தோடு தொடர்புக்கு, மத்திய அரசின் தொடர்புக்கும், ஆங்கில மொழி அறிவு முக்கியம் அல்லவா?

ஆங்கிலத்தை அறவே ஒழித்து விட்டால் அந்த இடத்தில் உடனடியாக மாநில மொழிகள் இடம் பெறாது; மாறாக, ஹிந்தி மொழிதான் சந்தடி சாக்கில் கந்தப் பொடியைத் தூவிய கதையாக, உள்ளே நுழைந்த திடீர் மணமகனாகி விடும் நடைமுறை அபாயம் அதனுள் ஒளிந்திருக்கிறது என்பதை ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத மாநில மக்கள் (தமிழ் மக்கள் மட்டுமல்ல) உணர வேண்டும்.

அனைத்து மொழிகளிலும் கேள்வித்தாள் இருந் தால்தான் (உதாரணமாக தமிழ்நாட்டிலிருந்து செல்பவர் களுக்கு தமிழில் வினாத்தாள் அவசியம் தேவை) அவர் களால் அதனை நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுத முடியும்.
சமூகநீதி, சமவாய்ப்புத் தேவை!

இப்பிரச்சினையில் மத்திய அரசும், மத்திய தேர் வாணையமும், ஒரு தெளிவான, இணக்கமான அனைத்து மாநில,. மொழியாளர்களான இந்தியக் குடி மக்களுக்கு சமூகநீதி, சம வாய்ப்பு அதன் மூலம்தான் வாய்ப்புகள் ஏற்படுத்த முடியும்.



கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
5.8.2014

Read more: http://viduthalai.in/e-paper/85279.html#ixzz39buSqmrp

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

தெலங்கானா நல கொண்டா மாவட்டத்தில் உள்ள லட்சுமிதேவி கூடம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கோம்பல்லி சைது - கீதா ஆகிய பெற்றோருக்கு ஒரே குழந்தை ஜான்சி (8 மாதம்).
ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகின்றனர்.

வளர்ப்புக் கோழி குழந்தை யின் தலையில் கொத்திய தால் ரத்தம் பீறிட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பல னில்லை - பரிதாபமாக பெற்றோரின் ஒரே குழந்தை இறந்து விட்டது.

செல்லப் பிராணிகளை குழந்தை களுடன் விளையாட அனு மதிக்க வேண்டாமே!

Read more: http://viduthalai.in/e-paper/85271.html#ixzz39buvQ9br

தமிழ் ஓவியா said...

கடவுளுக்கு நன்றியா?

உண்பதற்கு முன்னால் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற உணவுக்காக நன்றி தெரிவித்தாலோ அல்லது வழிபாடு செய்தாலோ அவர்களின் உணவுக் கட்டணத் தில் 15 விழுக்காடு தள்ளுபடி செய்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் உணவகம்.

அப்படியானால் தங்களுக்கு உணவு கிடைக்காமல் பட்டினியால் சாகும் கோடானு கோடி மக்கள் கடவுளை என்ன செய்ய வேண்டுமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/85271.html#ixzz39bv5ZohM

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page-2/85264.html#ixzz39bvJ4Kj2

தமிழ் ஓவியா said...


தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக தேசிய நெடுஞ்சாலை துறை


ஆசிரியருக்குக் கடிதம் >>>


தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக தேசிய நெடுஞ்சாலை துறை

சாலைகள் என்பது பொதுமக்களின் பயணத்திற்கு இதயத்துடிப்பாக, முதுகெ லும்பாக விளங்குகின்றன. சாலைகளுடைய தரம் மிகவும் உயர்ந்திருந்தால் தான் பயணிகளின் பயணங்கள் விபத்தில்லாமல் சிறப்பாக இருக்கும். இந்திய அரசின் தங்க நாற்கர சாலைத்திட்டம் என்பது மிகவும் ஒரு சிறப்பான திட்டம். அந்த சாலைகள் மிகவும் நீண்ட சாலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் மாநிலங்களையும் இணைக்கும் சாலைகளாக அச்சாலைகள் விளங்குகின்றன.

ஒரு மாவட்டத்திற்குள் பயணம் செய்யும்போது அந்த மாநில சாலைகள், மாவட்ட சாலைகள் மற்றும் கிராம சாலைகள் மிகவும் பயன்படுகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான சாலை மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த சாலையைத் தவிர மற்றும் அனைத்துச் சாலைகளும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

இந்நிலையில் சென்னை - திருவனந்த புரம் சாலையை இணைக்கின்ற சாலை நாகர் கோவில் பார்வதிபுரம் முதல் காவல்கிணறு சந்திப்பு வரை உள்ளது. இந்த சாலையானது தேசிய நெடுஞ்சாலை 47 பி என்று அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலேயே மிகமிக மோசமான பராமரிப்பு இல்லாத சாலை இது தான்.

பார்வதிபுரம் முதல் காவல் கிணறு வரை இந்த சாலையை சுற்றி ஏராளமான ஆக்கிர மிப்புகள் வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகள், விளம்பர தட்டிப் போர்டுகள் என்று இந்த சாலை முழுக்க முழுக்க ஆதிக்கவாதிகளின் ஆக்ரமிப்பில் தான் உள்ளது.

இந்த சாலையை தினமும் ஒவ்வொரு வரும் ஆக்ரமித்து வருகின்றனர். இதன் கோட்டப் பொறியாளர் அலுவலகம் திருநெல்வேலியிலும், உதவிக்கோட்டப் பொறியாளர் அலுவலகம் நாகர் கோவிலி லும் உள்ளது. இந்த ஆக்ரமிப்புகள் தொடர் பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும் எந்தவித நடவடிக் கையும் அந்த அதிகாரிகள் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வருத்தப்படுகிறார்கள்.

ஆக்ரமிப்புகள் மட்டுமா? இந்த சாலை மிகவும் பழுதடைந்து எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த வித நடவடிக் கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

மேலும் இந்த சாலையில் பல்வேறு இடங்களில் மிக மிக குறுகலான பாலங்கள் தான் இருக்கின்றன. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இந்த பாலங்களையாவது அதிகாரிகள் அகலப் படுத்துகிறார்களா என்றால் இல்லை. இந்த சாலையை சீர்படுத்தவும் ஆக்ரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நாகர் கோவிலில் இருக்கும் உதவிக்கோட்டப் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றால் அங்குள்ள உதவிக்கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர்கள் பொதுமக்களிடம் எரிச்சலுடன் பேசுகின்றனர். அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று பொது மக்கள் வருந்துகிறார்கள்.

தமிழக அரசு ஏன் இந்த தே.தெ.சா. 47 பி - யை கவனிக்கவில்லை குமரிமாவட்டம், தமிழகத்துடன் தான் இருக்கிறதா? தமிழக தேசிய நெடுஞ்சாலைத் துறையும் செயல் படுகிறதா? இல்லை தூங்கிக் கொண்டிருக் கிறதா என்பது புரியாத புதிராகவே உள்ளது. உடனடியாக இந்த சாலையை செப்பனிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஆதிக்கவாதிகள் ஆக்கிர மித்து இந்த சாலை ஒற்றையடிப்பாதையாக மாறிவிடும். நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு

- கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்ட விடுதலை, செய்தியாளர்.

Read more: http://viduthalai.in/page-2/85270.html#ixzz39bvQmrPU

தமிழ் ஓவியா said...


விவசாயப் புரட்சியாளர் பத்மசிறீ, முனைவர் வேங்கடபதியின் திசு வளர்ப்பு மய்யம் தமிழர் தலைவர் பாராட்டு


புதுச்சேரி, ஆக.5_ பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் அறிவியல் துறைக்கான மதிப்புறு முனைவர் பட்டம் புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயப்புரட்சியாளர் வேங்கடபதி (ரெட்டியார்) பெற்றுள்ளார். பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்கள் வேங் கடபதி அவர்களை அடை யாளம் கண்டு பாராட்டும் வகையில் அறிவியல் மதிப்புறு முனைவர் பட்டத் தை அவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தி உள் ளார்கள். 30-8-2013 அன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் சார் பில் தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற தேசிய வேளாண் தொழில்நுட்பத் திருவிழாவில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் கருத்துக்காட்சியில் பங் கேற்று விழா மலரை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி வெளியிட பத்மசிறீ விருது பெற்ற முதல் தோட்டக்கலை வித்த கராக வேங்கடபதி விழா மலரைப் பெற்றுக்கொண் டார். வேங்கடபதி விடுத்த வேண்டுகோளை ஏற்று அவருடைய லட்சுமிநாரா யணா திசு வளர்ப்பு மய் யத்துக்கு 2.-8.-2014 அன்று நேரில் சென்று பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி பார்வையிட்டு பாராட்டுக் களைத் தெரிவித்தார். மோகனா வீரமணி, துணை வேந்தர் நல்.இராமச் சந்திரன், ஜெர்மன் கொ லோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் யுல்ரிக், பல் கலைக்கழகத்தின் வேளாண்பிரிவு பேராசிரி யர்கள் குமரன், பாண்டியன், திருச்சி பெரியார் மாளிகை தங்காத்தாள், பெரியார் வீரவிளையாட்டுக் குழுத் தலைவர் ப.சுப்பிரமணியம், புதுவை திராவிடர்கழக மாநிலத்தலைவர் சிவ.வீரமணி, மண்டலத் தலைவர் ராஜி, மண்டல மகளிரணித்தலைவர் விலாசினி ராஜி, திண்டி வனம் மாவட்டத் தலைவர் க.மு.தாஸ், மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை உட்பட பலர் உடன் இருந்தனர்.

கனிவான விருந்தோம்பல்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, பயனாடை அணிவித்து எனது 65 ஆண்டுகாலத்தில் சிறப்பு விருந்தினராக வேந்தர் வருகை உள்ள தாகத் தெரிவித்த வேங்கட பதியும், அவர் வாழ் விணையர் விஜயாள், மகள் சிறீலட்சுமியும் அன்புடன் உபசரித்தனர். பகல் உணவு அளித்ததுடன் அனை வரையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று நாற்றுகள் வளர்ப்பு, திசு வளர்ப்பு மற்றும் பிற பணிகள்குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்கள். அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சீருடையான கருப்பு சட்டைத்துணி யுடன், வெள்ளை வேட்டி யையும் அளித்து தோட் டத்தில் விளைவித்த அளவில் பெரிதான கொய் யாக்கனிகளை பரிசாக வழங்கி மகிழ்ந்தார்கள்.


தமிழ் ஓவியா said...

பாதுகாப்புடன் வளர்க்கப்பட்ட நாற்றுகள்

லட்சுமிநாராயணா திசு வளர்ப்பு மய்யத்தின்மூலம் தோட்டப்பயிர்கள், மலர்ச் செடிகள், சவுக்கு உள் ளிட்ட பல வகைகளுக்கும் உரிய பாதுகாப்புடன் நோய்த்தாக்காத நாற்று களை வழங்கிவருகிறார். பூச்சிகள் தாக்காமல், தா வரங்களில் நோய்த்தொற் றுகள் இல்லாதவாறு நாற்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு அளித்து வருகிறார். விவசாயத்தின் வித்தகராக உள்ள வேங்க டபதி கூறும்போது, நாற் றுகளுக்கு இங்கிருக்கும் வரை பாதுகாப்புதான். அதையே விவசாயிகள் வாங்கிச்செல்லும்போது, அவர்கள் நிலத்தின் தன் மைக்கேற்ப உணவுப் பொருட்களாக இருந்தால் இயற்கை உரங்களையும், பிறவற்றிற்கு இரசாயன உரங்களையும் பயன்படுத்தி பாதுகாக்கலாம் என்று கூறுகிறார்.

வியக்கதகு உருவாக்கம்

நீர்வளம் குறைவாக இருந்தாலும், கிடைக்கும் நீர் உப்பு நீராகவே இருந் தாலும் சவுக்கு போன்ற வற்றை சாகுபடி செய்யலாம் என்று கூறுகிறார். கனகாம்பரம் மலர்ச் செடியில்மட்டும் நூறு வகைகளை உருவாக்கி உள்ளதாகக் கூறுகிறார். அதேபோன்று உணவில் நெய் பயன்படுத்துபவர்கள் பழக்கத்தில் நெய்வாசனை விரும்புவார்கள், ஆனால், கொழுப்பு ஆகாது என் பார்கள். அவர்களைப் போன்றவர்களுக்காக நெய்வாசனையுடன் உள்ள மிளகாய் உருவாக்கி உள்ளதாகக் கூறுகிறார். ரோஜாச் செடியில் முள் ளில்லாத ரோஜாச் செடி யை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். எந்த ஒரு தாவரத்தின் இலையிலும் சிறு அளவு இருந்தால் போதும், அதிலிருந்து பல வகைகளை உருவாக்கிவிட லாம் என்கிறார்.

தமிழ் ஓவியா said...

குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சாகுபடி செய் யக்கூடிய வாய்ப்புள்ள தாவர வகைகளையும் ஆய்ந்து, வெற்றிலைக்கொடி உள்ளிட்டவற்றையும் மற்ற பகுதிகளிலும் சாகுபடி செய்யக்கூடிய தொழில் நுட்பம்தான் அறிவியலில் சாதனை என்று கூறுகிறார். தாவரவியலில் சாத னைக்கு கல்வி ஒரு தடையே இல்லை. தாவரவியலில் அருஞ்சாதனை படைத் துள்ள விவசாயத்தின் வித்தகராக வேங்கடபதி (ரெட்டியார்) உள்ளார். புதுச்சேரியில் உள்ள கூடப்பாக்கம் கிராமத்தில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே கல்விபயின்ற வேங்கடபதி (ரெட்டியார்) தன்னுடைய தொடர் முயற்சி, அயராத உழைப் பின் மூலம் விவசாய பட்டதாரிகளே வியக்கத் தக்க சிகரத்தை எட்டியுள் ளார் என்றால் அது மிகையல்ல. தோட்டக் கலையில் முதல்முறையாக பத்மசிறீ விருது பெற்றவர் வேங்கடபதி ஆவார்.

லட்சுமி நாராயணா திசுக்கள் வளர்ப்பு மய்யம்

அவர் செடிகள் வளர்ப்பு, சவுக்கு, முள் இல்லாத ரோஜா, கனகாம்பரம், வெற்றிலைக் கொடி, நெய் மிளகாய், மலர் சாகுபடி, கொய்யா என்று எந்த தோட்டப்பயிர் எடுத்துக்கொண்டாலும் அதில் சாதனை படைக்கும் ஆற்றலைக் கொண்டுள் ளவராக வேங்கடபதி சாதனை படைத்துள்ளார். அவருக்கு உறுதுணையாக அவர் வாழ்விணையர் விஜயாள், மகள் சிறீ லட்சுமி உள்ளனர். லட் சுமி நாராயணா Lakshmi Narayana Tissue Culture [LNTC] என்கிற பெயரில் திசுக்கள் வளர்ப்பு மய்யம் ஆய்வுச் சாலையாக, தோட்டக் கலைத்துறையில் உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, தாவரங் களுக்கான நாற்றுகள் உரிய தட்ப வெப்பத்தைப் பரா மரிக்கும் அமைப்பு ஆகிய முறைகளில் நோய்த் தொற்றுகள், பூச்சிகள் இவை ஏதுமின்றி நவீன முறையில் வளர்த்து, குறுகிய காலத்தில் அதிக சாகுபடியை செய்யும் வகையில், அறிவியல் ரீதி யாக (குரோமோசோம் களில்) மாற்றங்கள் செய்து, பலவகைகளாக தோட்டப் பயிர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார். இதற்காக அவர் பயணித் துள்ள செலவழித்த காலம், தொலைவுகள் ஏராளம். டில்லி கனகாம்பரம் என்கிற பெயருள்ள மலர்ச் செடியில் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டு ஏராளமான வகைகளில் பல நிறங்களில் கனகாம் பரம் மலர் சாகுபடியைச் செய்து அனைவரின் கவனத் தையும் ஈர்த்துள்ளார்.

புதுவை மற்றும் இந்திய அரசு மற்றும் இந்தியன் வங்கியின் ஒத்துழைப்பு உள்ளதாக பெருமிதத் துடன் கூறுகிறார். அவர் மகள் சிறீலட்சுமி சிறுவய திலிருந்து மிகுந்த ஆர்வத் துடன் இத்துறையில் ஈடுபட்டுவருவதும் குறிப் பிடத்தக்கது. அவர்வாழ் விணையராக உள்ள விஜயாள் அவருடைய முயற்சியில் பெரும்பங்கு வகிப்பதாக வேங்கடபதி கூறுகிறார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் முனைவர் பட்டம்

வேங்கடபதி தோட்ட கலையில் முதல் பத்மசிறீ விருது பெற்றவர். பல்வேறு விருதுகளைப் பெற்றிருந் தாலும், அய்யங்களுக்கு மிக எளிமையாக பதில் கூறு கிறார்.

1972ஆம் ஆண்டு முதல் தோட்டக்கலையில் பெரும் ஆர்வத்துடன் களம் இறங்கிய வேங்கட பதியை நாடி விருதுகளும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற மைகுறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ள தாகக்கூறும் அவர் பல் கலைக்கழகத்துக்கு தன் னால் ஆன அனைத்தும் செய்வதாகக்கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-3/85260.html#ixzz39bvzB6QF

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஸ்பெஷலிஸ்டா?

எனக்குத் திருமண மாகி 34 வருடங்கள் ஆகின்றன. எனது கணவர் பிற பெண்களுடன் தகாத உறவு வைத்துள்ளார். இவர் குடும்பத்திலுள்ள அனை வருமே இப்படி இருந் திருக்கிறார்கள். இது முற்றுப் பெற என்ன செய்ய வேண்டும்? - ஒரு வாசகி

இவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் சந்திரன் சுக்கிரனுடனோ மாந்தி யுடனோ அல்லது சனியு டனோ சேர்ந்திருந்தாலும், ஏழுக்குடையவர் நீசம், 9ஆம் அதிபதி நீசம், 2, 8ல் பாபிகள் என்று பல துர் விஷயங்கள் தென்படு கின்றன. மிகப் பெரிய அளவில் நவசண்டீ மஹா ஹோமத்தை தேவி உபாச கரைக் கொண்டு நடத்த வேண்டும். இந்த ஹோ மத்தை திருவொற்றியூர் வடிவடை அம்மன் தெற் குப் பிரகாரத்தில் அமைந்த ஸ்ரீ சங்கரமடத்தில் நடத் தலாம். நவாக்ஷரீ மந்திர தாயத்தை எல்லோரும் கட்டிக் கொள்ள வேண்டும். மறக்காமல் குலதெய்வ வழி பாட்டை தொடர்ந்து மூன்று மாதங்கள் நடத்துங்கள்.

ஆன்மீக இதழ் ஒன்றில் இப்படியொரு கேள்வி பதில்:

அவர் ஏற்கெனவே பக்தர்தான். நம்பிக்கை உள்ளவர்தான். அப்படிப் பட்டவர்க்கு இந்தக் கொடுமை, மன உளைச் சல் ஏற்படாமல் அவர் பக்தி செலுத்தும் எந்தக் கட வுளும் தடுக்கவில்லையே ஏன்? இந்த யோக்கியதை யில் இன்னொரு கோயிலைக் கை காட்டுவது ஏன்? திருவொற்றியூர் கடவுள் இதில் என்ன ஸ்பெ ஷலிஸ்டா?

Read more: http://viduthalai.in/e-paper/85372.html#ixzz39iNFpSeJ

தமிழ் ஓவியா said...


மோடி சொன்னது....மோடி சொல்ல முடியாதது


மோடி சொன்னது....

ஹிரோஷிமா அணு குண்டு வீச்சில் பலியா னோரை நினைவு கூரும் அதே நேரத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில், உலக அமைதிக்காக பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
- பிரதமர் மோடி

மோடி சொல்ல முடியாதது

குஜராத்தில் இரண்டாயி ரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பலி யானது எனது ஆட்சி யில்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/85379.html#ixzz39iNhFrBZ

தமிழ் ஓவியா said...


இந்திய குடிமைப் பணி தேர்வு: சிக்கலுக்குத் தீர்வு என்ன?

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தேர்வு (அய்.ஏ.எஸ். உள் ளிட்டவை) இப்பொழுது பெரும் பிரச்சினைக்கு ஆளாகியிருக்கிறது.

இதற்குக் காரணம் இந்தியா முழுமையிலிருந்தும் தேர்வு எழுதக் கூடிய இரு பால் மாணவர்களுக்கும் பொதுவானதாக இல்லை என்பதுதான்.

மூன்று நிலைகளில் இதன் தேர்வு முறை இருந்து வருகிறது. ஆரம்பத் தேர்வு, இரண்டாம் நிலைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்பவைதான் அந்த மூன்று நிலைகளும்.

இதில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலை; இதுவே அடிப்படையில் தவறாகும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்குத் தேர்வு எழுதுவது எளிதாக இருக்கிறது. ஆனால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத வர்கள் ஆங்கிலத்தில் எழுத வேண்டியுள்ளது. ஆங்கிலம் இந்த மக்களுக்குத் தாய்மொழி இல்லை.

குடிமைப் பயிற்சித் தேர்வில் இந்தி பேசும் பகுதியில் அதிகமாகத் தேர்வு செய்யப்படுவதற்கு இதுதான் முக்கிய காரணமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் அந்தத் தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வருகிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை என்பது மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுதேகூட உணர முடியும்.

இப்பொழுது தமிழில் தேர்வு எழுதவில்லையா என்று கேட்கலாம்; உண்மைதான் அதில் உள்ள நிபந்தனை என்ன தெரியுமா?

குறைந்தபட்சம் அந்த மொழி பிரிவில் 25 பேர் தேர்வு எழுத வேண்டுமாம். இது என்ன முறை? அறிவியல் வளர்ந்த இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நிபந்தனைகள் தேவைதானா?

தமிழில் தேர்வு எழுத விரும்பும் ஒருவர் 25 பேர்களைச் சேர்க்க அலைந்து திரிய வேண்டுமா?

இதிலும் உள்ள இடர்ப்பாடு என்ன தெரியுமா? இந்தி, ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த மொழியில் தேர்வு எழுதினாலும் கேள்வித்தாள் மட்டும் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும்தான் இருக்குமாம்.

சுற்றிச் சுற்றி வந்தாலும் இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்டவர்களுக்குக் கூடுதல் வசதியும், வாய்ப்பும், சலுகையும் உள்ள வகையில்தான் இந்தத் தேர்வு முறை இருந்து வருகிறது.

இப்பொழுது வடமாநில மாணவர்கள் புதியதோர் கோரிக்கையை முன் வைத்துப் போராடுகிறார்கள்; இது நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளுமே நடத்தப்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விட்டன.

தேர்வில் 400 மதிப்பெண்களில் 22 மதிப்பெண் களுக்குரிய வினாக்கள் ஆங்கில மொழியைச் சார்ந்ததாக இருக்கிறது. இது எங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதுதான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று, குடிமைப் பணியில் ஆங்கிலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்று அறிவித்துள்ளது.

இன்னொரு பிரச்சினையும் இதன் உள்ளீட்டில் உண்டு மாற்றப்பட்டுள்ள தேர்வு முறை என்பது நகரப்புறங்களைச் சார்ந்த மாணவர்களுக்குத்தான் சாதகமாக உள்ளது. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர் களுக்கும், முதல் தலை முறையாகத் தேர்வு எழுதக் கூடியவர்களுக்கு கடினமாகவே உள்ளது.

எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதில் சமூக நீதிப் பார்வை என்பது மிகவும் முக்கியமானது. அத் தகைய கண்ணோட்டம் இல்லையென்றால் சமூகத்தில் சம நிலை என்பது சாய்ந்த தராசாகத்தான் இருக்க முடியும்.

வடமாநிலங்களில் கல்லூரிகளிலேயே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைச் சந்திக்கும் வகையில் பாடத் திட்டங்களை வைத்துள்ளனர். இந்தி பேசும் பகுதிகளைச் சேர்ந்த வர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இது பற்றி தமிழ்நாடு அரசும், கல்வித் துறையும் ஏன் சிந்திக்கக் கூடாது?

மத்திய அரசு நடத்தும் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) நடத்தும் தேர்வு மூலம் அதிக எண்ணிக்கையில் பணியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதில் மெட்ரிக் அளவில்தான் அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும். பட்டதாரி அளவில் அந்த நிலை இல்லை என்பது பாரபட்சமானதாகும்.

அதுபற்றியும் மத்திய அரசு புதிய முடிவை அறிவிக்க வேண்டும். இந்தத் தேர்விலும் தென்னக மாநிலங்களைச் சேர்ந்தவர்களை விட இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருகின்றனர்.

காரணம் மொழிப் பிரச்சினையே; அனைத்திந்திய தேர்வுகள் அனைத்தையும் இந்தியாவில் அங்கீகரிக்கப் பட்டுள்ள 22 மொழிகளிலுமே எழுதலாம் என்று பொதுவான சட்டம் பிறப்பிக்கப்பட்டால் ஆங்காங்கே அவ்வப் பொழுது இதுகுறித்த சர்ச்சைகளும், போராட் டங்களும் வெடிக்காதே!

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திசையில் குரலை உயர்த்த வேண்டும்; தமிழ்நாடு தந்தை பெரியாரின் சமூகநீதி மண்ணாயிற்றே - எடுத்துக் காட்டாகச் செயல்பட வேண்டாமா?

Read more: http://viduthalai.in/page-2/85382.html#ixzz39iPBbfHd

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

விஷ்ணுவின் பிள்ளை களான பிரம்மாவுக்கும், மன்மதனுக்கும் வழிபாடு கிடையாது. இவர்கள் லட்சுமியின் சம்பந்தம் இல்லாமல் பிறந்தவர்கள். விஷ்ணுவின் நாபித் தாமரையில் பிறந்ததால், கமலஜர் என்று பிரம்மா வுக்குப் பெயர். அவர், மன்மதனை மனதால் உண்டாக்கியதால், அவ னுக்கு மனசிஜன் என்று பெயர். இந்த இருவரும் இல்லாவிட்டால், உயிர் கள் மண்ணில் பிறக்க முடியாது. மன்மதனே, மலர்க்கணை தொடுத்து, ஒரு ஜீவனின் உற்பத்திக் குக் காரணமாகிறான். அந்த உயிர் புகுவதற் கான உடலைக் கொடுப்ப வர் பிரம்மா. இப்படி, உயிர்களை, பிறவிப் பிணி யில் சிக்கித் தத்தளிக்கச் செய்வதால், இவர்களுக்கு வழிபாடு இல்லாமல் போய்விட்டது என்று கூறுகிறார், காஞ்சிப் பெரியவர்.

படைப்புக் கடவு ளுக்கே - இந்தக் கதியா? எங்காவது பெண் சம்பந் தம் இல்லாமல் கொப் பூழ்கொடியில் பிறக்க முடியுமா? உயிர்களைப் படைத்தவன் பிறவிப் பிணியில் சிக்க வைக்கத் தானா? அப்படியானால், பெரியவாள் சங்கராச் சாரியாரின் பிறப்பும் அதைச் சார்ந்ததுதானா?

உளறல்களுக்கெல்லாம் ஓர் அளவேயில்லையா?

Read more: http://viduthalai.in/page1/85334.html#ixzz39iQBft5l

தமிழ் ஓவியா said...

நரம்பியல் மருத்துவரின் எச்சரிக்கை

பக்தியின் பெயரால், மத மூடநம்பிக்கை காரணமாக தலையில் தேங்காய் உடைப்பதுபற்றி நரம்பியல் மருத்துவர் என்.திலோத்தம்மாள் கூறுவது:

தேங்காயைக் கையால் உடைக்கும் போது எலும்பு, சதைக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படும். ஆனால் தேங் காயைத் தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும். அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். கராத்தே பயிற்சியில் கையால் உடைப்பதுபோல் செய்யலாமே என்று கேட்கலாம். தலையில் எலும்பு மட்டுமல்ல; உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லி மாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையைத் தூக்கிக் குலுக்கினால்கூட மூளை ஆடலாம்.

மூளையில் மூன்று நிலை உண்டு. முதலில் அதிர்ச்சி (Concussion) அடுத்து அடிபடுவதால் கன்னிப்போதல் (Contusion) மூன்றாவது Nuronal Damage, Oxonal Damage.

ஆக்சோனல் என்பதுதான் அடிப்படை செல். அதாவது நரம்புகள் சிதறிப் போவது.

குத்துச் சண்டையில் பத்து அடி அடித்தவுடன் பார்த்தால், அடி வாங்கியவர் தள்ளாடித் தள்ளாடிப் போய் குடிகாரன் மாதிரி மயக்கமாகி விடுவார். இந்த நிலை தலையில் தேங்காய் உடைக்கும் பொழுதுகூட நிகழலாம்.

இதன் காரணமாக ரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம். இது உடனேயும் நடக்கலாம். தாமதமாகவும் ரத்தக் கட்டி வரலாம். இது உயிருக்கே ஆபத்தில் முடியக் கூடும், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் பிற்காலத்தில் இழுத்துச் செல்லலாம் என்று நரம்பியல் மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/85337.html#ixzz39iQKyP13

தமிழ் ஓவியா said...

வரலாற்றில் திரிபுவாதம்!


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் (5.8.2014) சிறப்பு வாய்ந்ததாகும். வரலாற்று நோக்கும் அதன் திரிபும் எனும் தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் அது.

கூட்டத்தில் கூறப்பட்ட அத்தனைக் கருத்துகளும், தகவல்களும் கருத்து என்னும் கண்களில் ஒத்திக் கொள்ளத்தகுந்த ஒளிமுத்துக்கள்.

இந்தியாவின் வரலாறு என்பது வேத நாகரிகம் என்பதைச் சாதிக்கப் பார்க்கும் போக்கு இருந்தது; உண்மை வரலாறு என்பது காவிரிக் கரையில் தொடங்கப்படவேண்டும் என்ற குரல் அண்மைக் காலமாகத்தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மேனாள் டில்லிப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் டி.கே.வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து முக்கியமானது.

வேதகால பிராமண நாகரிகம் இந்து நாகரிகமாக மாற்றப்பட்டது எப்படி என்பது சிந்தனைக்கு விருந்தளிக்கக் கூடியதாகும். வேத காலத்தில் மாட்டுக் கறியை ஆரியர்கள் உண்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு; இன்றோ பசுப் பாதுகாப்புப்பற்றிப் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். புத்த மார்க்கத் திற்குப் பிறகுதான் ஆரியர்கள் தங்கள் உணவில் மாற்றம் செய்துகொண்டனர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஓர் வரலாற்று உண்மையை எடுத்துரைத்தார்.

வரலாறு என்பது உண்மையின் அடிப்படையிலா னது. புராணம் என்பது அத்தகையதல்ல - கற்பனை மயமானது. இரண்டையும் குழப்புவது ஆபத்தானதாகும்.

ஆனாலும், இந்திய வரலாறு என்பதற்கு கற்பனை வண்ணம் தீட்டி ஆரிய வரலாறாக மாற்றிட பல காலமாக முயன்று வருகின்றனர்.

சிந்துச் சமவெளி நாகரிகம் - திராவிடர் நாகரிகம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். கடந்த பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் கணினிமூலம் திராவிடர்களுக்குரிய எருதினை ஆரியர்களுக்குரிய குதிரையாக மாற்றிக் காட்டவில்லையா?
தொல்பொருள் துறை ஏற்காத சரஸ்வதி நதி என்பது உண்மையானது என்று சாதிக்க முற்படவில்லையா?

இப்பொழுது மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு வரலாற்று ஆய்வுக் கழகத்திற்கு யாரை நியமித்துள் ளது? எல்லப்ப பிரகத சுதர்ஷன் ராவ் என்பவர்; இவர் யார் என்றால் ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப் பான அகில் பாரதீய இதிஹாஸ் யோஜனாவின் (இந்திய வரலாற்றுப் பாதுகாப்பு) ஆந்திர மாநிலத் தலைவர் ஆவார்.

இந்தியாவில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள் யார் இந்த ராவ் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். காரணம், வரலாற்றுப் பேராசிரியர்கள் இவரைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு வரலாற்றுத் துறையில் எந்த சாதனையையும் செய்யாதவர் - குறிப்பிடத்தக்க அளவில் எந்த வரலாற்று நூலையும் எழுதாதவர். இவ ருக்குரிய ஒரே தகுதி நாக்பூரிலிருந்து (ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடத்திலிருந்து) வரும் ஆணைகளை அடியொற்றி அட்டியின்றி நிறைவேற்றுவதுதான்!

சிறப்புச் சொற்பொழிவாளரான திரு.டி.கே.வெங்கட சுப்பிரமணியன் அவர்கள் ஒரு கருத்தை அழகாகச் சொன்னார். அயோத்தியில் ராமன் பிறந்ததாகச் சொல் கிறார்களே - தொல்.பொருள் துறையின் ஆய்வுப் படி அந்தப் பகுதியில் 800 ஆண்டுகளுக்குமுன் மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்கான எந்தவிதத் தடயமும் கிடைக்கப் பெறவில்லை என்று கூறினார். அமெரிக்க அய்க்கிய நாட்டிலிருந்து கொண்டு இந்தியாவின் வரலாற்றை தங்கள் மனப்போக்கிற்கு ஏற்ப திரித்து எழுதுவோரையும் ஒரு பிடி பிடித்தார் பேராசிரியர் வெங்கட சுப்பிரமணியன்.

திராவிடர் இயக்கத்தைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம் இம்மூன்றும் அதன் முக்கிய கோட்பாடுகளாகும். எதையும், அது வரலாற்றுப் பிரச்சினையானாலும் பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கவேண்டும். பகுத் தறிவிற்கு ஒத்துவராத எதையும் நிராகரித்தே ஆக வேண்டும் - விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

தமிழ் ஓவியா said...

கடந்த முறை பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் என்ன செய்தார்கள்? பாடத் திட்டங்களி லிருந்து அவர்களுக்குப் பிடிக்காத, ஒத்துவராத பகுதி களை நீக்கச் செய்தார்கள் - அதனையும் தெளிவாக எடுத்துக் காட்டினார் பேராசிரியர் வெங்கட சுப்பிர மணியன்.

வரலாற்றைத் திரிபுக்கு உட்படுத்த முயலும் இந்தக் காலகட்டத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு இருக்கக்கூடிய முக்கியமான மேலான கடமையை, பொறுப்பை மய்யத்தின் புரவலர் மானமிகு டாக்டர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மய்யத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், புரவலர் தெரிவித்த கருத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே சமுதாய மாற்றத்திற்கான - ஜாதி - தீண்டாமைக்கு எதிரான முதல் போராட்டம் தந்தை பெரியார் முன்னின்று நடத் திய வைக்கம் போராட்டமாகும். அதனை எப்படி யெல்லாம் வரலாற்றில் மறைக்கிறார்கள் என்று மய்யத் தின் புரவலர் சுட்டிக்காட்டியது கவனத்திற்குரியதாகும்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், நேற்றைய சிறப்புக் கூட்டம் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கக் கூடியது என்பதில் அய்யமில்லை.
பி.ஜே.பி. ஆட்சியில் வரலாற்றைப் புரட்டும் வேலைகள் வேகமாக நடக்கலாம்; அதனை எதிர் கொள்ளும் சக்தியை தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண், இந்தியத் துணைக் கண்டத்திற்கே கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page1/85340.html#ixzz39iQY4Gvf

தமிழ் ஓவியா said...


தொழிலாளி அன்று - பங்காளியே!



தொழிலாளி, முதலாளி தன்மை முறை இருக்கவே கூடாது. தொழிலாளர் சங்கம் என்கின்ற பெயரும் இருக்கக்கூடாது. ஒரு தொழிற்சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகள் அல்லாமல், கூலிக்காரர்களாக இருப்பது என்பது முட்டாள்தனம், மானமற்றதனம் ஆகும்.
_ (குடிஅரசு, 6.7.1946)

Read more: http://viduthalai.in/page1/85339.html#ixzz39iQhzuye

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page1/85264.html#ixzz39iUdICmu