Search This Blog

28.4.13

புரட்சிக் கவிஞரின் சிந்தனைகள்!

புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞர் பிறந்த நாள்: 29.4.1891 மறைவு: 21.4.1964

ஆதி சைவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் - ஆதிக்குப் பின் யார் என்றால் காதில் வாங்காத வர் போல் சென்று விடுவார்கள் என்பதை
-ஆதி சைவர்கள் என்பார்      ஆதிக்குப்பின் யார்? என்றால் காதினில்  வாங்காரடி -சகியே       காதினில் வாங்காரடி -    எனக் கவிஞர்  குலத்தால் தம்மை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொண் டிருப்பவரை  எள்ளி நகையாடுகிறார்.
பொருளே குறிக்கோள்  பார்ப்பனர்கள் நடத்தும் சடங்கும், மந்திரமும் அவர் தம் வயிறு வளர்ப்பதற்கேயன்றி உண்மையான பயனை நல்குவன அல்ல என்னும் கருத்தை,
பெரிய தொரு சடங்குண்டே ! மந்திரமுண்டே அந்த எலாம்  செய்யத்தான் வேண்டும் ஆனால்
பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்த மட்டும்  கொடுக்கணுமோ  குடுக்கவேணும்  என்றுரைத்தான் எல்லோரும் சிரிப்பில் ஆழ்ந்தார்
-எனக்கவிஞர் மந்திரத்தை விடப் பொருளிலேயே கருத்தாய் இருக்கும் பார்ப்பானின் செயலை எள்ளி நகை யாடுவது நகைப்பை விளைக்கிறது.
*************
தமிழ்த் திரைப்படம்
தமிழ்த்திரைப்படத்தின் தகுதியைத் திறனாய்வு செய்யும் போக்கில் எள்ளி நகையாடுகிறார்,  அத்திம்பேர், அம்மாமி எனப் பேசும் ஆரியத்தமிழும் , கடவுளர்கள் அட்டை முடி , காகிதப் பூஞ்சோலை,   கண்ணாடி, முத்து வடம் முதலான காட்சிகளும் தமிழ் படத்தில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கின்றன புதுமை சிறிதும் இல்லை பரமசிவன் அருள் புரிய வந்து வந்து போவார், கற்புடைய பெண் களுக்குத் துன்பம் வரும் பின் தீரும்     இதுதான் இன்றைய தமிழ்த் திரைப் படங்களின் நிலை என உரைப்பதன் வாயிலாக நகைச்சுவை  புகட்டுகிறார் கவிஞர்.
*************
அறியாமை
பாண்டியன்  பரிசு காப்பியத்தில் வேலன் பேழையுடன் வருவதை எதிர் நோக்கியிருக்கும் வீரர்களின் அறி யாமையை காட்டும் பகுதி நகைச்சுவை மிக்கது . கழுதையிடம் உதைபட்டு விழுபவனையும், கல்தூணை மற் போருக்கு அழைப்பவனையும், ஆலடியில் நின்றிருந்த கழுதை தன்னை அங்கொருவன் தொட்டுதையும் பட்டு வீழ்ந்தான்
காலடி ஓசை காட்டாதொருவன் சென்று
கல்தூணை மற்போருக் கழைக்க  லானான்
-எனக்காட்டி நிலவு ஒளியிலும் இப்படி
என்றால் மிகு  இருட்டென்றால் என்ன ஆவாரோ?  எனக் கவிஞர் உசா வுவது நகைச்சுவையை மிகுவிக்கின்றது.
*************
பண்டிதர்கள்  பழைய மனப் போக்குடையவர்கள்;  பகுத்தறிவுக்குப் பொருந்தி வராத பழைய கதைகளின் குறைகளுக்கெல்லாம் விளக்கம் சொல் லிச் சரி செய்ய முயல்வது அவர்கள் இயல்பு . இதனை இல்லத்தலைவி வீட்டுப் பணிகள் அனைத்தையும் தணிக்கை செய்வதற்கு ஒப்பிடுகிறார்.
பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக்  கெல்லாம்
பணிக்கையிடல் போல்  அனைத்தும்                   தணிக்கை  செய்தே
-எனக்  காட்டும்போது பழமையை எள்ளுவதன் வாயிலாகப் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்துவதோடு நகைச் சுவையும் தோன்ற வைக்கிறார்.
*************
பாயவந்த சிறுத்தையின் மேல் பாய்ச்சுவதற்கும் கத்தியை எடுத்ததும் சிறுத்தை ஓடி விடுகிறது. அதன் ஓட்டத்திற்குப் பத்தரிசி என்றதும் ஓடிப் பெறுகின்ற பார்ப்பானின் ஓட்டத்தினை உவமையாக்குகிறார் கவிஞர்.
கத்தியினை மேலெடுத்துக்
காட்டினையோ இல்லையோ
பத்திரிக் கோடுகின்ற
பார்ப்பான் போல் ஓடிற்று
வந்த சிறுத்தையது
வாலடங்க ஓடியது _ எனக் கூறுவது பெருஞ் சிரிப்பை நல்குகிறது.
*************
உடம்பில் மட்டுமல்லாது உலகிலு ள்ள எல்லாப் பொருளிலும் முப்பட்டை போடும் அறியாமையைக் கவிஞர் -_
காடி உப்புச்சட்டி கூழ்ப்பானை சீப்பே,
கண்ணாடி குமிழ்ஊசி அரிவாள் கத்தி
கரியடுப்பு மின்விசிறி மின் விளக்கு
நண்ணுமதின் மேற்கவிழ்ப்புத் துடைப்பக் கட்டை
நடையன்கள் மாடாடுதொழுவம் தொட்டி
பிண்ணாக்கு வைக்கோற் போர் பந்தற் கால்கள்
பின்னியபாய் தலையணைகள் போர்வை வேட்டி
தண்ணீர்ச்சால் கிணறு சாக்கடைகள் திண்ணை
தப்பாமல் முப்பட்டை போட வேண்டும்
-_ எனக் காட்டிச் சிரிப்போடு சிந்தனையையும் தூண்டுகிறார்.
இயற்கையின் படைப்பாகிய மலைமீதும் நாமத்தைப் போட்டு, பல நூற்றாண்டுகளாய் மலை வைணவருக்கே உரியது எனக் கூறுவோரையும் நெற்றியில் மார்பில் தோளில் நெடுங்கழுத்தில் சுண்ணாம்பு பற்றிடப் பூசிச் செம்மண் கோடுகள் பாய்ச்சி மூளை அற்றான் போல் வான் பருந்தை அரிகரீ என்றண்ணாந்து
மற்றுமோர் பேதை நானும் மனிதன்தான்
என்று வந்தான்.
எனப் பழமையிலும் அறியாமையி லும் ஆழ்ந்து கிடக்கும் நிலையினைக் கூறுவது சிறப்புக்குரியது.
*************
கற்கண்டு நாடகத்தில் சிறு தொண் டப்பத்தன் கதை சொல்லப்படுகிறது. கதையில் இறைவனுக்கும் சிறு தொண்டப் பத்தனுக்கும் நடக்கும் உரையாடல் நகைச்சுவை பயக்கிறது. சிறு தொண்டப்பத்தன் வீட்டில் சமையல் செய்யப்பட்டிருக்கும் பூசனிக் காய் அய்யருடைய தொப்பையாகவும் கத்திரிக்காய் அய்யருடைய பூசை மணியாகவும் இறைவனுக்குத் தோன்று கிறது. இதனை, பூசனிக்கா அய்யரோட
தொப்பையல்லோ பக்தா - அது
தொப்பையல்லோ பக்தா பூசனிக்கா கறி எனக்கு
வேண்டாமென்றார்
எனக் கவிஞர் காட்டுகிறார்.
*************
இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தில் இரணியன் தூணை உதைத்தவுடன் நாராயணனாக வேடமிட்டு ஒருவன் வெளிப்படுகிறான். அவனைப் பார்த்து, அடே! நான் தூணை உதைத்தேன் நாராயணனாகிய நீ வந்தாய்! உன்னை உடைத்தால் உன்னிடமிருந்து தூண் வெளி வருமா பார்க்கிறேன்! என்று கூறுவது வீரத் தால் விளைந்த வெகுளிநகை எனலாம்.
*************
மதத்தின் பேரால் தேவையற்ற குறியீடுகளை உடம்பில் இட்டுக் கொள்வதை, சைவன் சுயமரியாதைக் காரனானபின், அவனை நிறுத்துப் பார்த்ததில், நிறையில் காற்பலம் குறைவு ஏற்பட்டது. விபூதியிடுவது நீக்கியதால் எனக் கவிஞர் சுட்டிக்காட்டுவது நகைச்சுவை பயக்கிறது.
*************
நினைக்க நினைக்க எனக்குக் கோபம் வருகிறது. ராமனுடைய கணை யாழியைக் கடலைத் தாண்டிச் சென்று சீதையிடம் கொடுத்த குரங்குகள் உள்ள இந்த தேசத்தில், புதுச்சேரியிலிருந்து நேஷனல் சிகரெட்டைக் கொண்டு போய்த் தோழர் அழகிரிசாமியிடம் கொடுக்க ஒரு குரங்குகூட அகப்பட வில்லையே என்பதில் கவிஞரின் நகைச்சுவை தெரிகிறது.
*************
கண்ணபிரானைப் பற்றிய சொற் பொழிவு (உபந்நியாசம்) நடக்கிறது கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரெழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்த ஒருவர் கேள்வி கேட்கிறார்.
ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும், புகைபோல தெரிந்தனவா? திருத்தமாகவா?
உபந்நியாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.
மற்றொரு வேண்டுகோள் அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டுவிடச் சொன்னால்போதும், அவசரமான லெட்டர் ஸ்டாம்பு வாங்கச் காசில்லை.
சிறுவன் வாயில் முழுமையும் தெரி யுமா? எவ்வளவு அறியாமை! மக்களின் அறியாமையைக் கிண்டல் செய்யும் துணுக்குகளில் ஒன்று இது.

                  ----------------------நன்றி:- “விடுதலை” ஞாயிறுமலர் 28-4-2013

64 comments:

தமிழ் ஓவியா said...


வெள்ளுடைவேந்தர்


நவம்பர் புரட்சி என்று பொது வுடைமை உலகம் போற்றிப் புகழும்; பார்ப்பன அல்லாதா ருக்கும் ஒரு நவம்பர் புரட்சி உண்டு. அதுதான் நவம்பர் 20 (1916) அந்த நாளில்தான் பார்ப்பனர் அல்லாதார் மத்தியில் ஒர் உணர்வு பிறந்து வடிவமும் மலர்ந்துள்ளது.

வழக்குரைஞர் டி. எத்தி ராஜூலு முதலியார் இல்லத்தில் சென்னை வேப்பேரியில் பார்ப் பனர் அல்லாத பெரு மக்கள் பலரும் கூடி இதனைப் பெற் றெடுத்தார்கள்.

திவான் பகதூர் பிட்டி தியாகராய செட்டியார், டாக்டர் டி.எம். நாயர், திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், திவான் பகதூர் பி.எம். சிவஞான முதலியார், திவான் பகதூர் பி. இராமராய நிங்கர் (பனகல் அரசர்) திவான்பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமிபிள்ளை, ராவ் பகதூர் ஜி. நாராயணசாமி செட்டி, இராவ் பகதூர் ஓ. தணி காசலம் செட்டி, இராவ்பகதூர் எம்.சி. ராஜா, டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப், ஜே.எம். நல்லசாமிபிள்ளை, வேங்கட்ட ரெட்டி நாயுடு, இராவ்பகதூர் ஏ.பி. பாத்ரோ, டி. எதிராஜு முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார் ஜே.என். இராமநாதன், கான்பகதூர் ஏ.கே.ஜி. அகமதுதம்பி மரைக் காயர், திருமதி அலமேலு மங்கைத் தாயாரம்மாள், ஆற் காடு இராமசாமி முதலியார், திவான்பகதூர் கருணாகர மேனன், டி. வரதராஜூலு நாயுடு, மதுரை வக்கீல் எல்.கே. துளசி ராம், கே. அப்பாராவ் நாயுடுகாரு, எஸ். முத்தையா முதலியார் (வகுப்புரிமைத்தந்தை) மூப்பில் நாடார் ஆக 26 பெரு மக்கள் முதன் முதலாகக் கூடிப் பார்ப் பனர் அல்லாதார் உரிமைக்கான கால்கோள் கொடியை உயர்த் தினர்.

அப்பெரு மக்களுக்கு இந்நாளில் நமது அகங் கனிந்த வணக்கத்தையும், மனம் நெகிழ்ந்த நன்றி உணர்ச்சி மலர்களையும் சூட்டுவோம்!

அன்று அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட அரசியல் கட்சிதான் தென்னிந்திய நலவு ரிமைச் சங்கம் ஆகும். (South Indian Liberal Federation).

அவ்வமைப்பின் செயலாள ரான பிட்டி தியாகராஜ செட்டியார் கையொப்பமிட்டு வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை (20.12.1916) (20.12.1916) (Non Brahmin Manifesto) திராவிடர் இனத் தின் உரிமைச் சாசனமாகும் (Magnacarta).

அதன் விழுமிய நோக் கங்கள் காலப் பெட்டகமாகும்.

1) தென்னிந்தியாவில் பார்ப் பனர் அல்லாத அனைத்து மக்களின் கல்வி, சமுதாய, பொருளாதார அரசியல் தார்மீக ஆக்கப் பூர்வ மேம்பாட்டிற்குப் பாடுபடுவது.

2) பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களைப் பாதுகாத்தல், மேம் படுத்துதல் ஆகிய நோக்கங் களுடன் பொதுப் பிரச்சினை களை விவாதித்துத் தென் னிந்திய மக்களின் கருத்து களையும், நலன்களையும் உள் ளது உள்ளபடியே அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைப்பது.

3) பொதுப் பிரச்சனைகள் குறித்து ஆரோக்கியமான ஜனநாயகக் கருத்துக்களை பொதுக் கூட்டங்கள் மூலமும், பிரசுரங்கள் விநியோகப்பதன் மூலமும். இதர வழிகளாலும் பரப்பி, அதன் மூலம் பொது மக்களின் கருத்தை உருவாக்கு வதும், வகைப்படுத்துவதுமாகும்.

இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் உயர்வுக்கு ஒரு துவக்கத்தைக் கொடுத்த முறை யில் பிட்டி தியாகராயரைக் குறியீடாகக் கொண்டு அப்பெரு மக்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக!

அதற்கான விதை விதைத்த வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்த நாள் இந்நாள் (1852).

- மயிலாடன் 27-4-2013

தமிழ் ஓவியா said...

சர்.பிட்டி தியாகராயரின் மக்கள் தொண்டு

- டாக்டர் கவிஞர் மகாபாண்டியன் பி.எச்.டி.

(மாநில தலைவர், சர்.பிட்டி தியாராயர் பேரவை)

அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற பல்வேறு துறை களில் தமிழகம் கண்ட பல்வேறு அறிஞர்களுள் தலையாய அரசியல் ஞானியாக - தென்னாடு கண்ட திராவிடச் சூரியனாகத் திகழ்ந்தவர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் ஆவார்கள். சென்னை கொருக்குப் பேட்டையில் 27.4.1852இல் தெலுகு தேவாங்க சமூகத்தில் பிட்டி என்ற வீட்டுப் பெயர் கொண்ட குடும்பத் தில் பிறந்தார். மிகப்பெரும் செல்வந்தராய் பிறந்த சர்.பிட்டி தியாகராயர் தன் குலத்திலேயே 1876இல் முதன்முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர்.

அக்காலத்தில் குதிரைகள் பூட் டிய சாரட் வண்டியில் பயணம் செய்தவர். சென்னைக்கு மோட் டார் வாகனம் வந்ததும், அதை வாங்கிப் பயன்படுத்தியவர். அவர் தம் வாழ்நாளில் மக்களுக் காக வாரி வழங்கிய தொகை தற்காலத்து கோடி பல கோடிக்குச் சமமாகும்.

சென்னை மாநகராட்சி உறுப் பினராக அவர் தொடர்ந்து 40 ஆண்டுகள் சேவை புரிந்தார், 1919ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் சட்டப் படி மாநகராட்சிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் தலைவர் அவர் தான். சென்னை நகர மன்றத் தலைவராக 1919 முதல் 1923 வரை இருந்து மகத்தான பணிகள் செய்தார். இவர்காலத்தில் ட்ராம் (Tram) வட சென்னையின் பல பகுதி களுக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து பாதைகள் போடப்பட் டன.

தென்னிந்திய வர்த்தக சபையை ஆரம்பித்தவர்களில் ஒருவரான இவர் 1910 முதல் 1921 வரை அதன் தலைவராகி வர்த்தக வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றினார்.

வெள்ளுடைவேந்தர்

1921 ஜனவரி 12ஆம் நாள் (12.1.1921) சென்னை மாகாணத்து முதலாவது சட்டசபைத் துவக்க விழாவிற்கு கன்னாட் பிரபு சென்னை வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்க சென்னை நக ராட்சி தீர்மானித்தது. அக்காலத் தில் பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கிய தலைவர்களை வரவேற்க தலைப் பாகையும், நீண்ட கறுப்பு அங்கி யும் வெள்ளை முழுக்கால்சட்டை யும் அணிந்திருக்க வேண்டுமெனற் சம்பிரதாயம் இருந்தது. வெண் ணிற ஆடையைத் தவிர வேறு எந்த வண்ண ஆடைகளையும் அணிய மறுத்த சர்.பிட்டி. தியாகராயரை ஆளுநர் வெலிங்டன் பிரவு, வெண் ணிற ஆடையணிந்தே வந்து வரவேற் கும்படி கேட்டுக்கொண்டார். வெள் ளையரின் தாசன் தானல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் வெள்ளுடை வேந்தர் என அழைக்கப்பட்டார்.

இரண்டாம் வள்ளலார்

வள்ளலாரைப் போன்று வெள்ளு டையையே அணிந்தார். நமது தலைவர் 5.10.1923இல் மருதூரில் பிறந்த வள்ளலார் சென்னை ஏழுகிணறுப் பகுதியில் சுமார் 35 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். வள்ளற் பெருமான் 25 வயது வாலிபராக இருந்தபோது அதே வட சென்னைப் பகுதியில் சர்.பிட்டி.தியாகராயர் 27.4.1852இல் பிறந்ததாலேயே, 1876ஆம் ஆண்டு ஏற்பட்ட தாது ஆண்டு பஞ்ச காலத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கள் பகுதியைச் சார்ந்த ஊர்மக்களுக்குப் பசி நீங்க உணவு கொடுத்து உதவியது சர்.பிட்டி.தியாகராயர் குடும்பம். (வள்ளலார் வடலூரில் தருமசாலை ஏற்படுத்தி மக்களுக்கு உணவு வழங்கினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது) இலவச மதிய உணவு திட்டத்தை முதன் முதலில் தன் சொந்த செலவில் செய்தார். சர்.தியாகராயர் வடலூரில் பாடசாலை, பத்திரிகை முதலியவை துவக்கி முதன் முதலில் திருக்குறளுக்கு வகுப்பு எடுத்தவர் வள்ளலார். தியாகராயரும் 3.12.1892இல் இலவச மதிய உணவுடன் கூடிய தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். தன் சொந்த செலவில் ஏற்படுத்தியதோடு, திராவிடன், ஆந்திர பிரகாசிக ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிக்கைள் துவக்கி அதற்காக தானே ஒரு லட்ச ரூபாயை அக்காலத்திலேயே செல விட்டார். இது தற்போது சர்.பிட்டி. தியாகராயர் கல்லூரியாக உயர்ந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மீனவ குடும்பம்சார் எளிய பிள்ளைகளுக்குக் கல்வியறிவு ஊட்டி வருகிறது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராக வும், தலைவராகவும் 1887 முதல் 1924 வரை தியாகராயர் தொண்டாற்றி வந்தார். கண்பார்வையற்றோர் பள்ளி, பிச்சைகாரார் இல்லம், இலவச மருத் துவ வசதி ஆகியன ஏற்படுத்தினார்.

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்த் தாரும் எவரும்
ஒருமையுள ராதல் வேண்டும் - வள்ளலார்.

இதனை உணர்வில் கொண்ட தியாகராயரின் நீதிக்கட்சி ஆட்சி, பஞ்சமர், பறையர் எனக் கூறாது, ஆதி திராவிடர் என்றே அழைக்கப் பட வேண்டும் என சட்டமன்றத்தில் சட்டமே இயற்றியது. வட சென்னை யில் இந்துப் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. மேலும் ஆந்திர பல்கலைக்கழகம் உருவானது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக நம் தலைவரே காரணமா வார். இதே போன்று அஞ்சுமான் இ-முஃபித்-இ-அல்லா-இ இசுலாம் எனும் இசுலாமியக் கல்விக் கழகத்தின் உறுப்பினராக இருந்து இசுலாமியர் தம் கல்வி வளர்ச்சிக் காகவும் பாடுபட்டார். இதனாலேயே, டாக்டர் டி.எம்.நாயர் தமது ஸ்பர்டாங் சாலை பேருரையில் என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி.தியாகராய செட்டி யார் வள்ளலார் அவர்களே என விளித்து நன்றி கூறினார் போலும்!

தமிழ் ஓவியா said...

மது விலக்கு

மதுவருந்தும் பழக்கத்தால் நம் நாட்டு மக்கள் குறிப்பாக விவசாயி கள், நெசவாளர்கள், தொழிலாளர் கள் ஆகியோரின் குடும்பங்கள் அடையும் இன்னல்களைக் கண்ட தியாகராயர் மது ஒழிப்பிற்கு அருந் தொண்டாற்றினார். காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கையை ஆதரித் தார். 1922ஆம் ஆண்டு இவரது தலை மையில் கூடிய நகரமன்றக் கூட்டத் தில், நகரமன்றத்திற்குச் சொந்தமான மரங்களைக் எடுப்பதற்கு குத்தகைக்கு விடுவதில்லை என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டு செயல்படுத்தப்பட் டது.
சட்டமன்றத்திலும் மக்கள் மது அருந்துவதால் கிடைக்கும் கலால் வரியைச் சுட்டிக்காட்டி மதுவின் அடர்த்தியை படிப்படியாகக் குறைத்து வந்தால் மக்களின் உடலுக்குத் தீங்கு ஏற்படாது. மக்கள் தாங்களாகவே மதுப் பழக்கத் தினின்றும் விடுபடுவர் என்றார். இதன் காரணமாக, தியாகராயர் மறைந்த நாளாம் 28.4.1925 அன்று சென்னை உலகப் பற்றாளர் கழகம் (Cosmopolitan Club) இனிமேல் கழகத்தில் மது வகைகள் பயன்படுத் துவதில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

தியாகச் செம்மல்

1916 நவம்பர் 20ஆம் நாளன்று வேப்பேரி எத்திராசுலு முதலியார் இல்லத்தில் பார்பனரல்லாத கூட்டம் கூடியது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உதயமானது. இதன் கொள்கைகளை வெளியிட 1917 பிப்ரவரி 26இல் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏடும், 1917 சூன் திங்களில் திராவிடன் என்ற தமிழ் நாளேடும், ஆந்திர பிரகாசிக என்ற தெலுகு நாளேடும் துவக்கப்பட்டன. நீதி (Justice) என்ற புகழ் பெற்ற ஏட்டின் பெயரே பிற்காலத்தில் நீதிக்கட்சி என்ற பெயர் பெறக் காரணமாயிற்று. இக்கட்சி 1920இல் நடந்த முதல் பொதுத் தேர்தலிலும், 1923இல் நடந்த இரண்டாவது பொதுத் தேர் தலிலும் வென்றது. இக்கட்சியின் தலைவரான தியாகராயரை அன் றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு அமைச்சரவை அமைக்க அழைத் தார். இரு முறையும் தாம் முதல் அமைச்சர் ஆகாமல் தவிர்த்தார். முதலில் திவான் பகதூர் ஏ.சுப்ப ராயலு ரெட்டியாரையும், இரண் டாம் முறையாக பனகல் அசைரை யும் முதல்வராக்கி மகிழ்ந்தார். நமது தியாகராயராம் தியாகச் செம்மல்.

தற்காலத்தில் மேனாள் மேயர் திரு.ஸ்டாலின் அவர்கள் தியாகராய நகரில் பனகல் பார்க் எதிரில் தியாகராயர் கலையரங்கம் கட்டி நன்றி பாராட்டினர். மேனாள் முதல் வர் கலைஞர் அவர்கள் வெள் ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாக ராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக் டர் நடேசனார் ஆகிய நீதிக் கட்சியின் முப்பெரும் தலைவர் களுக்கு மத்திய அரசின் சார்பாக கவுரவ அஞ்சல்வில்லைகள் வெளி யிட்டுப் போற்றியமை இன்று நினைவு கூரத்தக்கது. விரைவில் மணிமண் டபம் அமைத்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...


ஓர் ஆன்மிகவாதியின் பலே மோசடி!



கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலாகி விட்டது என்ற தகவல் ஏடுகளில் முக்கியமான இடத்தை நிரப்பிக் கொண்டு விட்டது.

ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சாரதா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தில் மே.வங்காளம் அசாம், திரிபுரா மாநிலங்களிலிருந்தெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள்.

இதனுடைய உரிமையாளர் சுதிப்தா சென் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப் பட்டுள்ள நிதிகளைக் கொண்டு ரியல் எஸ்டேட், பிஸ்கட் பேக்டரி முதலிய துறைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இவ்வளவுத் தூரம் கொடி கட்டிப் பறந்த ஒரு நிறுவனம் திவாலானதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் குறிப்பாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தி பெருந் தொகையைப் பெற்றுக் கொண்டனர் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் கூறப்படுகிறது.

யார் இந்த சுகிப்தாசென்? சாரதா என்ற பெயரில் இவ்வளவு நிறுவனங்களை நடத்து வதன் பின்னணி என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து நிறுகின்றன.

இவர் ஆன்மீகத்தில் மூழ்கி முத்து எடுக்கக் கூடியவராம்; ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதாதேவியின் தீவிரப் பக்தராம்; அதனால்தான் அவர் நடத்தும் நிறுவனங்களுக் கெல்லாம் அந்த அம்மையாரின் நாம கரணத்தைச் சூட்டியிருக்கிறார்.

தொடக்கத்தில் நக்சலைட்டு இயக்கத்தில் இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் ஆன்மீகத் துக்குத் திரும்பியிருக்கிறார். இதுதான் சரியான வேடம் என்று தெரிந்து கொண்டு இராம கிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா அம்மையாரின் பக்தராக வலம் வந்தார்.

நிதி நிறுவனத்தை இந்தப் பின்னணியில் ஆரம்பித்தவுடன் மக்களும் நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் உண்மை.

ஏமாற்றுக்காரர்களுக்கு வசதியான வேடம் ஆன்மீகம் தானே - அதன் மூலம்தானே நம்ப வைத்துக் கழுத்தறுக்கலாம்.

இந்த ஆசாமியின் பாஸ்போர்ட்டில் உள்ள தந்தையாரின் பெயர் வேறு; வேறு ஆவணங்களில் வேறாக இருக்கிறதாம்.

பக்தி வேடம் போட்டால் எளிதில் மக்களை ஏமாற்றலாம் என்பது வெளிப்படை!

சாமியார்களும், சாயிபாபாக்களும் எந்தவித முதலீடும் செய்யாமல் மக்களைச் சுரண்டுவது எந்த அடிப்படையில்? சுதிப்தா சென் என்பவராவது ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ஏமாற்றியிருக்கிறார். சாயிபாபாவும், சாமி யார்களும் எந்தவித நிறுவனத்தையும் நடத் தாமல், எந்தவித முதலீட்டையும் செய்யாமல், மக்களின் பக்தி முட்டாள்தனத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அன்றாடம் சுரண்ட வில்லையா?

சாயிபாபாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழிலைச் செய்தார்?

பகவான் சாயிபாபா என்ற பிரச்சாரம் - அதனை நம்பி, விளக்கொளியைக் கண்டு பாய்ந்து வரும் விட்டில் பூச்சிகளாக மக்கள் அவர் வலையில் விழுந்தனர். பணத்தைப் பணம் என்று பார்க்காமல் கொட்டிக் கொட்டிக் கொடுத்தனர்.

எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியானார்! முதலில்லா வியாபாரம் என்பது மதமும், பக்தியும் இவற்றைச் சார்ந்த சேர்ந்த ஆன்மீகம்தானே?

இவ்வளவு நடந்தாலும் படித்த, படிக்காத பாமர மக்களின் பக்திப் போதை தெளிவ தில்லையே! ஒரு சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்படுவதோடு சரி. அதற்குப் பிறகு வழக்கம்போல பக்தி வேடக்காரர்களின் பகற் கொள்ளைத் தொழில் ஜாம் ஜாமென்றுதானே நடக்கிறது.

பக்தி ஒழுக்கத்திற்குத் துணை போகிறதா?

மோசடிக்குத் துணை போகிறதா?

சிந்திப்பீர்! 27-4-2013

தமிழ் ஓவியா said...

மறக்க முடியுமா?

1985 இதே நாளில் தான் (27.4.1985) வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்த நாள் பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு உரையாற்றித் திரும்பிய நேரத்தில் வடசென் னையில் ஆர்.எஸ்.எஸ். கூலிகள் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்மீது கொலை முயற்சி தாக்குதலை மேற்கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

மடிசார் மாமி!

மடிசார் மாமி என்று ஒரு திரைப்படம் தயாரிக் கப்பட்டு வருகிறது. இந்தத் தலைப்பை மாற்ற வேண்டும்; பார்ப்பனப் பெண்களின் உடையைக் கேலி செய்வதுபோல் இருக்கிறது என்று தமிழ் நாடு பார்ப்பனர் சங்கம் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஏன் அய்யர் ஆத்து மாமிகள் எல்லாம் இப்பொ ழுது மடிசார் கட்டுவ தில்லையோ! சுடிதார் போட ஆரம்பித்து விட் டனரோ!
இன்னொன்று: மடிசார் கட்டுவது கேவலம் என்று பார்ப்பனர்களே நினைக்க ஆரம்பித்து விட்டனரோ!

தமிழ் ஓவியா said...


கடவுளின் பெயரால்


திருக்கோவிலூர் சர்வே எண். 219இல் உள்ள நந்தவனம் சர்வே எண் 218 அனுமார் கோவில் இடம் மற்றும் 224இல் உள்ள பிருந்தாவனம் போன்ற வற்றை திருக்கோவிலூர் திருவிக்கிர மசாமி கோவிலுக்கான மடாதிபதி ஜீயர் அவர்கள் தனது பெயரில் (அ) அருள்மிகு. திருவிக்கிரமசாமி பெய ரில் பட்டா போட்டு அதை பல லட்சங்களுக்கு விற்றுவிடுவார் அல் லது 90 வருடங்களுக்கும் 3 வருடங்களுக்கும் வாடகைக்கு விட்டு தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார். திருவிக்கிரமசாமி கோவிலைச் சுற்றி உள்ள இடத்தையும், தேர்போகும் இடத்தில் தேர்வடம் போக்கி என பல இடத்தை தனதாக்கிக் கொண்டு கொள்ளை அடிக்கிறார். கோவிலை சுற்றியுள்ள இடத்தை பல கோடிக்கு விற்று பணம் ஆக்கிக் கொண்டு போக்குவரத்திற்கு மிக இடைஞ் சலாகவும், கோவிலை சுற்றி வர முடியாமலும் இருக்கிறது. அந்த இடத்தில் உள்ள வழக்கை திருக் கோவிலூர் பேரூராட்சி நீதிமன்ற முறையீடு செய்யாமல் இருந்ததால் எக்ஸ்பார்ட் தீர்ப்பு வாங்கி போக்குவரத்திற்கு இடைஞ்சலான அந்த இடத்தை தனதாக்கி கொண் டார்.

அந்த வழக்கை திரும்பநடத்த திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உத்தரவு இடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் இப்பொழுது பட்டா போட கேட்கும் இடத்தில் சமாதியும், குரங்கு கோயிலும் உள்ளன. அந்த இடத்தில் தற்போது பல சமூக விரோத செயல்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. சமாதியின் மேல் கும்பலாக அமர்ந்து குடிப்பது, சீட்டு ஆடுவது போன்ற செயல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அரசு புறம்போக்கு இடத்தில் கோவில்கள், சமாதிகள் இருக்கக் கூடாது இருந்தால் அந்த இடத்தினை அரசு செலவில் காலி செய்து பொதுமக்களின் பயன்பாட் டிற்கு அந்த இடத்தினை விடலாம் என உச்சநீதிமன்றமும், உயர்நீதி மன்றமும் பல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளன. அந்த உத்தர வின்படி இடத்தை காலி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடலாம். கடவுளின் பெயரால் தனிமனிதனுக்கு உரிமை யாகாமல் இருக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
தி. பாலன், (நகர தலைவர், திராவிடர் கழகம், திருக்கோவிலூர்)

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகச் சங்கமம் ஒன்பதாம் நாள் விழா

இராமாயணத்தையும் நளாயினிக் கதைகளையும் படித்துக் கொண்டிருந்த சமுதாயத்தில்

தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார்!

மேனாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி பகுத்தறிவு முழக்கம்!

திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, அரிமா சங்கர், மேனாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு மற்றும் நூல்களை வழங்கிச் சிறப்பு செய்தார் - திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்.

சென்னை, ஏப்.27- இராமாயணம், பெரிய புராணம், நளாயினிக் கதைகளைப் பெரிய எழுத்தில் படித்துக் கொண்டிருந்த மக்கள் மத்தியிலே தலைகீழான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் தந்தை பெரி யார் என்றார் மேனாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி.

புத்தகம் படிப்பது சிலருக்கு மட்டுமே உரி யது என்று ஆயிரக்க ணக்கான ஆண்டுகள் வழக்கில் இருந்தது. தந்தை பெரியார் வந்த பிறகுதான் அனைவரும் படிக்கலாம் என்ற நிலை வந்தது என்றும், எழு தப்படுகிற கருத்துக் களைவிட எழுதப்படு பவர் யார் என்று கவ னிக்கப்படுகிற அவல நிலை என்றைக்கு மாறும் என்றும், மேனாள் அமைச்சர் வேங்கடபதி, திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு ஆகியோர் சென்னை புத்தக சங்க மத்தின் ஒன்பதாவது நாள் கருத்தரங்கில் உரை யாற்றினர்.

வீதி நாடகம்

சென்னை புத்தகச் சங்கமத்தில் ஒரு முக்கிய மான சிறப்பு கூர்ந்து கவனித்ததில் பிடிபட் டது. அதாவது, மற்ற புத்தக கண்காட்சியில், பார்வையாளர்களும், புத்தகம் வாங்குபவர் களும் சேர்ந்து வருவார் கள். போவார்கள். ஆனால், இங்கு வருகின் றவர்கள் அனைவருமே புத்தகங்களை வாங்கிச் செல்வதை கவனிக்க முடிந்தது. அப்படிப் பட்ட சிறப்பைப் பெற்ற சங்கமத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று (26.04.2013) சிறப்பாக நடந்தேறியது.

தொடக் கத்தில், தெற்கு நத்தம் சித்தார்த்தன் குழுவின ரின் வீதி நாடகம் நடை பெற்றது. இதில், மக் களின் காலமும், நேர மும், பொருளும், சுய மரியாதையும் எப்படி யெப்படியெல்லாம் ஊடகங்களால், விளை யாட்டு என்ற பெயரி லும், விளம்பரங்கள் என்ற பெயரிலும் சூறை யாடப்படுகின்றது என்பதை காட்சி மூலம் செய்து காட்டி மக் களின் வரவேற்பைப் பெற்றனர்.

இ- பத்திரிகையெல்லாம் இருந்தும் புத்தகத்திற்கு மதிப்பு

வீதி நாடகத்தை தொடர்ந்து, கருத்தரங் கம் நடைபெற்றது கருத்தரங்கத்திற்கு திரா விடர் கழகத்தின் செய லவைத் தலைவர் சு. அறிவுக்கரசு தலைமை யேற்று சிறப்பித்தார். தொழிலதிபர் அரிமா என்.எஸ். சங்கர் முன் னிலை வகித்தார். மேனாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி சிறப்புரை வழங்கினார். பிரின்சு என்னாரெசுப் பெரியார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக வீதிநாடகக் குழுவினருக்கு சிறப்பு செய்யப்பட்டது. செயலவைத் தலைவர் தமது தலைமையுரை யில், அரங்கத்தில் அமர்ந்திருந்த மக் களைப் பார்த்து படிக் கின்ற மக்களைப் பார்க் கின்ற போது மகிழ்ச் சியாக இருக்கிறது என்று தொடங்கினார். அடுத்து, மக்களுடைய அறிவையும், மகிழ்ச்சி யையும், எழுச்சியையும் எழுதுகின்ற எழுத்தாளர் கள் எத்தனை பேர் தமிழ் நாட்டில் இருக்கிறார் கள் என்ற வினாவை எழுப்பியவர், மேலும் அதையொட்டி தான் சொல்ல வந்ததை இன் னும் தெளிவாக்குவது போல, எழுதப்படுகின்ற கருத்துக்களை கவனிப் பதை விட எழுதப் படுபவர்கள் யார் என்று கவனிக்கப்படுகிறார்கள் என்ற வர்ணப் பாகு பாட்டை நுட்பமாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய செயலவைத் தலைவர், மணிக்கொடி காலத்தை குறிப்பிட்டு, வி.எஸ். ராமையா புது மைப்பித்தனை ஒதுக்கி யதை சுட்டிக் காட்டி னார். பார்ப்பனர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த மௌனி, லால்குடியைச் சேர்ந்த இராமமிர்தம் ஆகியோரை ஏடுகள் எப்படி புகழ்ந்தன என்றும், அப்படி புகழப்பட்ட அவர்கள் புதுமைப்பித்தன் அளவுக்கு மக்களுடைய அறிவையும், மகிழ்ச்சியையும், எழுச்சியையும் எழுதவில்லையே என்று வினாவெழுப்பினார். தொடர்ந்து, புதுமைப்பித்தனின் சிறப்பை இன்னும் ஒருபடி மேலே சென்று, புரட்சி எழுத்தாளர்களான எமிலிஜோன், மாப்பசான், பால்சாக்கு போன்ற எழுத்தாளர்களுக்கு இணையாக எழுதியவர் என்று புதுமைப்பித்தனை உச்சத்தில் ஏற்றியதும் மக்கள் தம்மை மறந்து கை தட்டினர். அத்தோடு விடவில்லை அவர், வடக்கே பிரேம்சந்த், முல்க்ராஜ் இங்கே புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என்று உலகளாவிய எழுத்தாளர்களோடு ஒப்பிட்டதோடு விடாமல், இந்திய அளவிலும் ஒப்பிட்டுக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...

எப்படிப்பட்டவர்கள் இவர்கள்

ஒப்பிட்டதோடு விடாமல் தொடர்ந்த அவர், பிரேம்சந்த், முல்க்ராஜ், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையைச் சொன்னார்கள் என்று கூறி, சிதம்பரம் மௌனி, லால்குடி இராமாமிர்தம் போன்றவர்களை இன்னமும் தெளிவாக அடையாளப்படுத்தினார்.

துப்பாக்கியை விட சிறந்த ஆயுதம் எழுதுகோல்

மாவீரன் நெப்போலியனின் துப்பாக்கியால் சாதிக்க முடியாததை, பால்சாக், மேடம் பவார் ஆகிய எழுத்தாளர்கள் சாதித்தார்கள் என்பதையும், இன்னும் ஒரு படி மேலே சென்று பால்சாக், நெப்போலியனுக்கே சவால் விட்டு, அவரின் துப்பாக்கி சாதிக்காததை தனது எழுதுகோல் சாதிக்கும் என்று கூறியதையும், மேடம் பவாரின் எழுத்துக்கள் அதை மெய்பித்தன என்ற அரிய புத்தக வரலாற்றையும் பளீர் என்று உறைக்கும் விதமாக எடுத்து வைத்தார்.

அங்கிருந்து அண் ணாவுக்கு வந்தார். அதாவது, அமெரிக்காவில் பேரறிஞர் அண்ணா தனக்கு ஏற்பட்ட புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்ததையும், அண்ணா ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந் ததால், அதை முடிக்கும் முன்பு அறுவை சிகிச் சையில் தான் இறந்துவிடக்கூடாது. படித்து முடித்து விட்டே அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று மருத்துவரிடம் கூறியதையும் எடுத்து புத்தகத்தின் அருமையை ஆழமாக மக்கள் நெஞ்சங்களில் பதிய வைத்தார்.

புத்தகங்களின் சாதனை

தொடர்ந்து பேசிய அவர், ஜே.டி.எச்.லாரன்ஸ் என்பவர் எழுதிய லேடி சேட்டலிஸ் லவ்வர்ஸ் புத்தகத்தை குறிப்பிட்டு விட்டு அந்தப் புத்தகம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை சொன்னதும், புத்தகத்தின் அருமையும் பெருமையும் இன்னமும் தெள்ளத் தெளிவாக புரிந்தது அதாவது, லேடி சேட்டலிஸ் லவ்வர்ஸ் - என்ற புதினத்தை படித்த இங்கிலாந்து இளவரசி ஒரு குதிரைக் காரனைக் காதலித்தார் என்பதையும், எலிசபெத்தின் சகோதரி ஆனி ஒரு குதிரைக்காரரை திருமணமே செய்து கொண்டதையும் குறிப்பிட்டு, அந்த புதினத்தை எழுதி டி.எச்.லாரன்ஸ் மீது ஆபாசமாக எழுதியிருக்கிறார் என்று வழக்கு போடப் பட்டதையும் அவர் அதில் வென்றதையும் சொல்லி, அப்படி என்ன எழுதியிருக்கிறது, அந்தப் புத்தகத்தில் என்ற ஆவலையும், ஒரு பிரபுவின் மனைவி குதிரைக்காரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று கற்பனை செய்து எழுதியிருந்தார் என்றும் போட்டுடைத்தார். தொடர்ந்து, எப்படி வர்க்கப்புரட்சியை அந்தப் புத்தகம் ஏற்படுத்தியது என்பதை சொன்னதும் பார்வையாளர்கள் வியந்து போயினர்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் இதைச் செய்யவில்லையே

இப்படியெல்லாம் எங்கெங்கோ சிறகு விரித்து பறந்த செயலவைத் தலைவர் மீண்டும் தனது கருத்தோட்டத்திற்கு திரும்பி வந்தார். அதாவது, இப்படியெல்லாம், மக்களின் மொழியில், மக்களின் வாழ்வியலை பார்ப்பனர்கள் எழுதவில்லையே என்று கூறியதோடு மட்டும் அல்லாமல், குற்றம் கூறுவதற்காக இதை கூறவில்லையே என்று மெய்ப்பிப்பதற்காக கர்நாடகத்தில் எழுதப்பட்ட சம்ஸ்காரா- நூலினையும், அதில் வரும் சோமன்துடி என்ற கதாபாத்திரத்தையும் நினைவூட்டி, ஏன்? இதுபோல தமிழ்நாட்டில் இல்லை என்று வினா எழுப்பினர். தொடர்ந்து சென்னை புத்தக சங்கமத்தின் சிறப்பைச் சொல்லி தனது உரையை முடித்துக் கொண்டார்.

சமஸ்கிருதம் உயிரோடு இல்லை

தொடர்ந்து முன்னிலை வகித்து உரையாற்றிய அரிமா என்.எஸ். சங்கர், அனைவரும் வியக்கும் வண்ணம் தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசத் தொடங்கினார். இதை அவரே வியந்து கொண் டதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, அரிமா சங்கத்தின் இயக்க ஏடுகளில் வந்த செய்தி என்பதை குறிப்பிட்டே சொன்னார். மேற்கத்திய மொழி களில் கிரேக்கம், லத்தீன் ஹீப்ருவும், தெற்கத்திய மொழிகளான தமிழ், சீனம், சமஸ்கிருதமும் ஆகியவைகளில் மேற்கத்திய மொழிகள் இன்று உயிரோடு இல்லை. தெற்கத்திய மொழிகளில் சீனம் சொல்லி கொள்ளும்படியாக இல்லை. சமஸ்கிருதம் செத்துப் போய் விட்டது. தமிழ் மட்டும்தான் செம்மொழியாகி சிறப்பாக இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டு அந்தப் பெருமையை தொடர்ந்து காப்பாற்றுவது நம் கையில் தான் உள்ளது என்று கூறி, தனதுரையை நிறைவு செய்து கொண்டார்.

புத்தகங்கள் தான் நம் அறிவுக்கண்களைத் திறக்கும்

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து இன்றைய கருத்தரங்கத்தின் சிறப்பு பேச்சாளர் மேனாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி பேசினார். உண்மையி லேயே புத்தக கண்காட்சியை நடத்த வேண்டிய இடம் பெரியார் திடல்தான் என்று தொடங்கினார். புத்தகங்கள் இங்கே எல்லோரும் வாங்கி படிக்கும் வகையில் இருக்கிறது. ஆனால், ஆயிரம் ஆண்டு களுக்கு முன் புத்தகம் படிப்பது சிலருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. நாம் படிக்காமல் தடுக்கப் பட்டோம். தந்தை பெரியார் வந்தார். நாம் படித்தோம்! என்று பெரியாரின் சிறப்புகளை கூறிவிட்டு, புத்தகங்கள் என்று சொல்லும் போது அண்ணாவை நினைக்காமல் இருக்க முடியுமா என்பது போல புத்தகங்கள் தான் நம் அறிவுக் கண்ணைத் திறக்கின்றன என்ற அண்ணாவின் பொன் மொழியை நினைவூட்டினர்.

நமது கடந்த காலம் எப்படி இருந்தது?

தொடர்ந்து பேசிய அவர், தன் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். அன்றைக்கு அவருடைய ஊரில் ஒவ்வொருவர் வீட்டிலும் எது இருக்கிறதோ இல்லையோ, இராமயணமும், மகாபாரதமும் கண்டிப்பாக இருக்கும் என்று கூறிவிட்டு, தன்னுடைய சொந்த அனுபவத்தையே உதாரண மாக்கினர். அதாவது, சென்னையிலிருந்து சென்று அவருடைய சொந்தகாரர் ஒருவரை பார்த்து பேசிவிட்டு சற்று நகர்ந்தவுடன், அய்யோ... என்று ஒரு குரல் கேட்டதாகவும் தனது உறவினருக்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று பதட்டத்துடன் விரைந் தாரம். மீண்டும் அய்யோ... என்ற குரல் எழுந்ததாம். பார்வையாளர்களும் கூட பதட்டத்துடன் தான் கேட்டுக் கொண்டிருந்தனர். இவர் பக்கத்தில் செல்வதற்குள் அய்யோத்தி ராமன்... என்று அந்தக்குரல் தொடர்ந்ததாம் என்று சொன்னவுடன் சிரிப்பு வெடித்து கிளம்பியது. தொடர்ந்து அவர் இப்படி மூடநம்பிக்கையிலேயே மூழ்கிக்கிடந்து, தம் வாழ்நாளையே தொலைத்துவிட்டது நம் சமூகம் என்பதைக் கூறிவிட்டு, இப்படிப்பட்ட புராணங் களால் நம் சமூகம் கண்ட பலன் என்ன? என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பினார்.

தமிழ் ஓவியா said...

இப்படி தொடர்ந்து நளாயினி, இயற்பகை நாயனார் என்ற புராணங்களைச் சொல்லி இதைத்தான் நாம் வரலாறு என்று எண்ணிக் கொண்டு இருந்ததையும் குறிப்பிட்டு, இதை யெல்லாம் தலை கீழாக மாற்றி மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொன்ன தந்தை பெரி யார்தான் - அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்த கங்கள் தான் படித்ததில் எனக்குப் பிடித்தவை என்று பலத்த கையொலிப்பினூடே தலைப்புக்கு தொ டர்ந்து, வந்தார். பெரியாரையே சிறந்த புத்தகமாக கருதிக் கொண்டு, பெரியார் செய்த சமூக சீர்த்திருத்தங்களை வரிசையாக பட்டியலிட்டார்.

இறுதியில் பெரியார், வீரமணி ஆகியோரின் கருத்துக்களை படித்தால் நாம் நன்றாக வாழ்வோம் என்று கூறி தனது சிறப்புறையை நிறைவு செய்தார். துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மூவருக்கும் சிறப்பு செய்தார். தொடர்ந்து நேற்றைய பரிசுகள் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றைய தேர்வு தொடங்கியது. சிறப்புப் பரிசை வழக்கறிஞர் வேங்கடபதியும், முதல் பரிசை செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசும், இரண் டாவது பரிசை சங்கர் ஆகியோர் தெரிவு செய்து கொடுத்தனர்.

தொடர்ந்து வினித்குமார், நாகராஜன், கிருஷ்ண மூர்த்தி, மாலதி, சிவகங்கை சூரியா, சசிகுமார், திருப்பத்தூர் குமார், இனியன், செங்கல்வராயன், பெரம்பூர் ஜீவரத்தினம், செ.கனகா, விஜயா, ரத்தினசபாபதி, திருச்சி விஜய், காஞ்சிபுரம் கருப்பசாமி, நிஜாமுதீன், அரியலூர் அருண், பூபதி ஆகியோர் அடுத்தடுத்த பரிசுகளை பெற்றனர்.

நிகழ்ச்சியில் கோ.கருணாநிதி, நடராஜன், புக ழேந்தி, ச.தமிழ்செல்வன், வேணுகோபால், பெரம்பூர் ராஜீ, தமிழ்மணி, சென்னியப்பன், வெற்றிச்செல்வி, பெரியார் மாணாக்கன், தாம்பரம். முத்தையா, கோவி.கோபால், வீரமர்த்தினி, தமிழ்நாடன், திருமகள் இறையன் மனோகரன், பூமிநாதன், ஆனந்த், தமிழ்குடிமகன், வளர்தொழில் ஜெய கிருஷ்ணன். வி.கி.வில்வம், தமிழன் பிரசன்னா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



புத்தக வங்கியில்...

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புத்தக வங்கிக்கான மய்யங்கள் தொடங்கப்பட்டு மக்களின் பெருத்த ஆதரவைப் பெற்று வருகிறது. சென்னை புத்தகச் சங்கமத்தில் நேற்று (26.4.2013) பெரம்பூரைச் சேர்ந்த ப.பானு, அயனாவரத்தைச் சேர்ந்த பஷீர், சென்னை முகப்பேரைச் சேர்ந்த நாகராஜன், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த லட்சுமணன், பெரியார் திடலைச் சேர்ந்த செல்வ ராஜ் ஆகியோர் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை புத்தக வங்கிக்கு அளித்து பெருமை சேர்த்தனர்.

குழந்தைகள் படைத்த குட்டிக்குட்டி கவிதைகள்

கதை, ஓவியம், சூழலியல் ஓவியம், மேடைப் பேச்சு ஆகிய தனித்திறன்களை வளர்க்கவும், குழந்தைகளை இத்திறன் களின் அடிப்படையில் அடையாளம் காணவும், இதன் மூலம் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சியாக சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒரு கூறாக நடைபெற்றுக் கொண்டிருந்த குழந்தைகளுக் கான பயிற்சிகளில் இன்று (26.04.2013) குழந்தைகளுக்கான கவிதை எழுதும் போட்டி நடைபெற்றது. ஆச்சரியப்படத்தக்க வகையில், அவர் களின் கவிதைகள் இருந்தது. போட்டியின் இறுதியில் ஜூனியர்களுக்கான முதல் பரிசு சாந்தினிக்கும், இரண்டாவது பரிசு ஸ்வேதா, மோகாசிறீ ஆகிய இரு வருக்கும், சீனியர்களுக்கான முதல் பரிசு கௌசிகா, பைசா பாத்திமாவுக்கும், இரண்டாவது பரிசு மோமஸ்கந்தன் - பூங்குழலி ஆகிய இருவருக்கும் பதக்கங்களுடன் சான்றிதழ், கோப்பை ஆகியவை வழங்கப்பட்டது. பங்கேற்ற மற்றவர்களுக்கு சான்றிதழும், புத்தகங்களும் வழங்கப் பட்டன. பரிசுகளை அன்றில் பதிப்பகத்தை சேர்ந்த கி.நா. பனசை அரங்கன் அளித்து சிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் நேசனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இணைந்து வெற்றிகரமாக நடத்திய பயிற்சிப்பட்டறை!


சென்னை புத்தகச் சங்கமத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்ற பதிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் பங்கற்ற பதிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ராஜ்மோகன் பதிப்பகத்தின் ஆதம் சாக்ரடீஸ், புதுதில்லி நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா பிரதிநிதி மதன்ராஜ், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தி, எமரால்டு ஒளிவண்ணன்.

உலகப்புத்தக நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பதிப்பாளர்கள் \ எழுத்தாளர் \ மற்றும் வாசகர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் நேசனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இணைந்து நடத்திய இப்பயிற்சிப் பட்டறையைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் தொடங்கிவைத்தார்கள். இந்த பயிற்சிப்பட்டறையைப் பல முன்னணி தொழில் நுட்ப வல்லுநர்கள், பதிப்பக உரிமையாளர்கள், எழுத் தாளர்கள் கலந்து கொண்டு பயிற்சிப்பட்டறையின் முக்கியத்துவத்தையும், நவீன தொழில்நுட்பத்தை யும் பகிர்ந்து கொண்டார்கள்.

பதிப்பகம் குறித்த ஆசிரியரின் அனுபவங்கள் மற்றும் பதிப்புத்துறையில் விடு தலை தினசரியின் பயணங்களைப் பற்றி குறிப்பிடும் போது ஆரம்ப காலங்களில் பெரியார் திடலில் அச்சு இயந்திரத்தின் ஓசை தினத்தந்தி அலுவலகம் அருகில் வரும் போதே கேட்கும் அளவிற்கு அதிக ஓசை எழுப்பக்கூடிய இயந்திரம் இயங்கி வந்ததை யும், விலை அதிகமிக்க அச்சு உலோகங்கள் எழுத்துக் களாகப் பயன்படுத்தப்பட்டதையும், அவை தொழி லாளர்களால் எடுத்துச்செல்லப்பட்ட நிலைகளை யும் குறிப் பிட்டார்.

இந்த நிலை அனைத்து அச்சகங்களிலும் நடந்து வந்ததை நினைவு கூர்ந்தார். மேலும் தந்தை பெரியார் மற்றும் ஆசிரியர் முக்கிய தலைவர்களிடமும் பேசிக்கொண்டு இருக்கும் பொது போர்மேன் எவ்வித தயக்கமும் இல்லாமல் இடைமறித்து, பதிப் பிற்குச் செல்லவேண்டிய செய்திகள் இருப்பதையும், தலையங்கம் சரிபார்த்து பதிப்பிற்கு அனுமதியளிக் கச்சொல்லி எங்களை அழைத்துச்செல்வார் என்றார். முக்கியமாக கிளிமிஷின் என்ற முக்கிய செய்தி (போஸ்டர்) அச்சடிக்கும் இயந்திரம் குறித்து சுவை யான செய்தி ஒன்றைக் கூறினார்கள். சிங்கப்பூரில் பழம்பொருள் சேகரிக்கும் நிறுவனம் ஒன்று கிளி இயந்திரத்தைக் கேட்டதாகவும் ஆனால் அதன் மதிப்பு தெரியாமல் விற்று விட்டதை அறிந்து வருத்தப்பட்டதைக் குறிப்பிட்டார்கள். பதிப்புத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான தமது அனுபவத்தைக் கூறி தொழில் நுட்பவளர்ச்சியை நினைவு கூர்ந்தார்கள்.

தமிழ் ஓவியா said...

கோ.ஒளிவண்ணன்

Basic of book publication- steps to publishingஎன்ற தலைப்பில் முதல் வகுப்பை எடுத்த எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.கோ. ஒளிவண்ணன் அவர்கள் பயிற்சிப்பட்டறையில் பதிப்பகம் பற்றிய பல வரலாற்றுத் தகவல்களைத் தந்து முதல் வகுப்பை நிறைவு செய்தார்.

கே.எஸ் புகழேந்தி

Costing and Estimation& Pricing Strategy for a Book என்ற தலைப்பில் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக நிறுவனர் கே.எஸ்.புகழேந்தி அவர்கள் தமது பதிப்பகத்துறையின் வியாபார அனுபவத்தின் மூலம் பதிப்பாளர்களுக்கு ஏற்படும் வீண்செலவினம், அவற்றை நீக்கும் வழிமுறை குறித்து, மிகவும் தெளிவாக விளக்கினார். பதிப்பகங்களுக்கு எளிய விற்பனை விதியை விளக்கி, இனிவரும் காலங்களில் பதிப்பாளர்களுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகள் அவற்றைத்தவிர்த்து, வருவாயை அதிகரிப்பது குறித்தும் விளக்கினார். எதிர்காலத்தில் பதிப்பகங் கள் மேற்கொள்ளும் சவால்களையும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார், புதிதாக பதிப்பகம் தொடங்குபவர்களுக்கு இவரின் அனுபவ அறிவுரை கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

கே.எஸ்.பத்பமாபன்

Effective Book Marketing என்ற தலைப்பில் தமது வகுப்பைத்தொடங்கிய அவர், சென்னை யில் முதல் புத்தகக் கண்காட்சியை நினைவுபடுத் தினார். அப்புத்தகக் கண்காட்சியில் இருந்து சென்னைப் புத்தகச் சங்கமம் வரை தொடரும் தனது வர்த்தக ரீதியான அனுபவங்களைத் தெளிவாக விளக்கினார். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கு மிடையே உள்ள உறவுமுறையைப் பற்றியும், எவ்வாறு தங்களுடைய புத்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்றும் அதற்கான வழி முறைகள் குறித்தும், புத்தக விற்பனையாளர்களை வழி நடத்தும் விதம், புத்தக விற்பனைகளுக்கான தொழில் நுணுக்கங்களையும் பயிற்சிப்பட்டறைக்கு வந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டார்

சிறீதர்

Globalization of Publishing Industry என்ற தலைப்பில் சர்வதேச பதிப்பாளர்களும் இந்திய பதிப்பாளர்களுக்குமுள்ள வேறுபாடு, மற்றும் பதிப்பகத்தை மேம்படுத்தும் முறை பற்றி மிகவும் சுவையாக எடுத்துரைத்தார். சர்வதேச புத்தக விற்பனைத்துறையில் 30ஆண்டுகளாகச் சிறந்த அனுபவம் வாய்ந்த திரு. சிறீதர் சர்வதேச அரங்கில் இந்திய பதிப்பாளர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சில சிக்கல்கள் குறித்துக் கூறும்போது, கொல்கத் தாவை சேர்ந்த ஒரு பதிப்பாளருக்கு ஏற்பட்ட அனு பவத்தை நினைவுறுத்தினார், ருஷ்யாவில் இருந்து 50,000 அகராதிகள் அச்சிட்டுத் தருமாறு வியாபார ஒப்பந்தம் கிடைத்தது. பல சிரமங்களுக்கு இடையில் தயாராகி கப்பல் மூலம் ரஷ்ய துறைமுகத்தைச் சென்றடைந்தது, அகராதிகள் வந்த கண்டெய் னர்களைத் திறந்த உடன் அங்கு இருந்த இரண்டு பெண் ஊழியர்கள்

தமிழ் ஓவியா said...

மயக்கமடைந்தததாகவும், இந்த விவரம் தெரியவந்தவுடன், துறைமுக நிர்வாகம் அந்த புத்தகங்களை எல்லாம் ரஷ்ய நாட்டிற்குள் கொண்டு வராமல் கப்பலிலேயே வைத்துவிட அதனால், பெருத்த இழப்பை எதிர்கொள்ளவேண்டிய தருணத் தில் புத்தகத்திற்குப் பயன்படுத்திய பசையின் காரண மாக பல மாதங்களாக பூட்டிய கண்டய்னர்களை திறந்ததும் அந்தப் பசையின் நாற்றம் தாங்காமல் பெண் ஊழியர்கள் மயக்கமடைந்ததையும், பிறகு அவற்றை இறக்கி வெயிலில் உலரவைத்துப் பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக்கொண்டதையும் இந்த இடைப்பட்ட காலங்களில், இந்திய பதிப்பாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலால், அவருக்குத் தீவிர இரத்த அழுத்த நோய் ஏற்பட்டதையும் குறிப் பிட்டார். மேலும் பெரிய புத்தகங்களை அச்சடித்து சில மாதங்கள் வரை கூட காயவைக்கும் காலம் அன்று இருந்ததாகவும் ஆனால் இன்று உடனுக் குடன் பசையிட்டு உலர்வதற்குள், சில மணிநேரங் களிலேயே அவற்றை படிக்க முடியக்கூடிய நிலை உள்ளது. அச்சுக்குக் கொடுத்த உடனேயே விற் பனைக்கான வேலைகளை தாம் துவங்கிவிடுவ தையும் விரிவாக எடுத்துரைத்தார். அயல்நாட்டில் இருந்து வரும் வியாபார ஒப்பந்தங்களில் ஏற்படும் சிக்கல்களையும் அதனை எதிர்கொள்ளும் சவால் களையும் மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக்கூறினார்.

பத்மஜா ஆனந்த்
(Copy Editing and Role of Copy Editor)

ப்ளாக்சுவான் பதிப்பகத்தின் மூத்த எடிட்டர் திருமதி பத்மஜா ஆனந்த் அவர்கள் எடிட்டிங் பற்றி தம்முடைய நீண்டகால அனுபவத்தைக் கூறினார். முக்கியமாக வாசகர்களுக்கு ஏற்றவாறு எடிட்டிங் செய்வது, மற்றும் தங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி, அதை மக்களிடம் நூல் வடிவில் வெற்றி கரமாக இளையதலைமுறையின் விருப்பத்திற்கு ஏற்ப, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் புதிய தலைப்புகளை அறிமுகபடுத்தவேண்டிய அவசி யத்தை மிகவும் சுவைபடக் குறிப்பிட்டார்.

சோ.ம வள்ளியப்பன்

((Working With Team))

திரு.சோ.ம.வள்ளியப்பன் குழுவாகச் சேர்ந்து பணியாற்றும்போது ஏற்படும் சாதக பாதங்களை பற்றி விளக்கினார். மற்றும் நிர்வாகத்துறையில் ஏற்படும் குறைபாடுகளையும் அவற்றைக் கண்டறி யும் முறை குறித்தும், அந்த குறைபாடுகளைச் சரியான சமயத்தில் களைவதெப்படி என்றும், நம்முடைய குறைபாடுகளைக் கவனிக்காமலோ அல்லது கவனித்தும் அதை காணாதது போல் இருந்துவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் சிக்கல்களால் பல முன்னணி பதிப்பகங்கள் பெரும் இழப்பிற்கு உள்ளானதைக் குறித்தும் விளக்கினார். சோம.வள்ளியப்பனின் அனுபவம் மிகுந்த உரை பதிப்பகத்தாருக்கு மிகவும் பயனளிக் கும் வகையில் இருந்தது. சென்னை புத்தகச் சங்க மத்தின் அழைப்பை ஏற்றுபுத்தகப் பதிப்பாளர் களுக்கான பயிற்சிப்பட்டறைக்கு வருகை தந்து தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட முக்கிய விருந்தினர்களுக்கு சென்னை புத்தகச்சங் கமத்தின் சார்பாக நினைவுப் பரிசுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு.சரவணன், திரு. புகழேந்தி, திரு.வேணுகோபால் ஆகியோர் வழங் கினர். முதல் நாள் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட அனைவரும் பதிப்புத்துறையில் மிகவும் பயனுள்ள பல தகவல்களை பெற்றுக்கொண்டனர்.

இரண்டாம் நாள் பயிற்சிப்பட்டறை

அருள்வேல்
(Innovation of key success)

பயிற்சிப்பட்டறையின் தொடர் நிகழ்வாக திரு.அருள்வேல் மார்க்கெட்டிங் துறையில் விளம்பரங்கள் குறித்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பதிப்பகம் தன்னுடைய நூல்களை மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்பதையும், மக்களின் மனதில் அந்த பதிப்பகம் மற்றும் வெளியிடும் நூல்கள் பற்றியும் அந்நூல்களை விளப்பரப்படுத்த வேண்டிய தன் அவசியத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார். பதிப்பகங்கள் தமக்கென்று சில அடையாளங்களை உருவாக்கி மக்கள் மனதில் பதியவைக்க விளம் பரங்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டார். முக்கியமாக சில விளம்பரக் காட்சி களின் மூலம் தங்களின் புத்தகங்களை மக்களின் மனதில் பதியவைக்க புதிய அணுகுமுறைகளை உருவாக்கும் விதம் போன்றவற்றை எடுத்துக் கூறினார். இறுதியில் பிரபல நாளிதழில் விளம்பரத் தின் பங்கு மற்றும் நாளிதழ்கள் மக்களிடம் கொண்டு போய்ச்சேர்க்கும் விதம் பற்றி குறிப்பிட் டார். திரு அருள் அவர்களின் 35 வருட விளம்பரத் துறை அனுபவங்களைப் பயிற்சிப்பட்டறைக்கு வந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் புதிய பதிப்பாளர்கள் தங்கள் நூல்களை விளம்பரப் படுத்தி விற்பனையைப் பெருக்கும் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

லேனா தமிழ்வாணன்
(Motivational talk)

கல்கண்டு ஆசிரியரும் மணிமேகலை பதிப்பக உரிமையாளருமான லேனா தமிழ்வாணன் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று பதிப்பகங்கள் வாடிக்கை யாளர்களுக்கு இடையிலான உறவுகளைப் பற்றி விளக்கினார். உலக நாடுகளின் சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு பிற மக்களுக்கும், தமிழக மக்களுக்கும்இடையேயுள்ள வேறுபாடுகளை எடுத்துக்கூறினார். முக்கியமாக அந்தமானில் இன்றுவரை காட்டுவாசிகளாகவே வாழும் ஜாரவாஸ் இனமக்களுடன், தான் பழகியது பற்றி குறிப்பிட்டார். மற்ற நாட்டவரை விட தமிழர்களிடம் தேவையானவற்றை ஆராய்ந்து எடுத்துக்கொள்ளாமை, தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவம், பிரச்சினைகளை மறைத்து பிறருக்கு தொல்லை தரும் குணங்கள் போன்றவை தமிழர்களுக்கு அல்லாமல் தமிழ் நாட்டில் வாழும் பலருக்கு இருப்பதை குறிப்பிட்டார். தன்னுடைய முதல் பத்திரிக்கை அனுபவத்தைப் பற்றி குறிப்பிடும் போது அனுபவமில்லாத இளம் வயதில் தந்தை மறைவின் காரணமாக பதிப்பகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று சில நூறு நூல்களின் தலைப் புடன் இருந்த மணிமேகலை பதிப்பகம் இன்று சுமார் 3000 தலைப்புகளைத் தாண்டி தமிழகத்திலேயே முதல் பதிப்பகமாக வந்ததையும் இந்த வளர்ச்சிக்கு முக்கியமான சில காரணங் களையும் மனம்திறந்து பகிர்ந்து கொண்டார். ஒரு நிறுவனம் வெற்றிகரமாக வளருமானால் ஏதாவது ஒரு வகையில் அங்கு பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு நன்மையே, ஆனால் அந்த நிறுவனம் இழப்பில் இயங்குமானால் முதலில் பாதிக்கப் படுவது தொழிலாளர்கள்தான். ஆகவே தொழிலாளர்கள் பதிப்பகத்திற்கு ஓர் இன்றியமையாத அங்கம் என்றார்.

புத்தகக்கடைகளில் புத்தகங்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் முறை கள் பற்றி தன்னுடைய சொந்த அனுபவங்களின் மூலம் தெளிவாக விளக்கினார். சென்னை நகரின் சிற்றுண்டி கடையின் வாசல் மண்ணை தொட்டு நெற்றியில் இட்டுக்கொள்ளும் ஒரு முதலாளியின் நடவடிக்கையை சுவையாக எடுத்துகூறினார், ஓர் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் வாடிக் கையாளர்களே அவர்களின் பங்கில்தான் அந்த நிறுவனம் நடக்கிறது என்று குறிப்பிட்டார். முக்கியமாக தமிழர்களிடம் உள்ள கவலைப்படும் குணத்தை எடுத்துக்காட்டி அதனால் ஒரு நன்மையும் கிடைக்காது ஆகையால் கவலையை மறந்து தீர்வைத்தேடுங்கள் என கூறி தனது 50 நிமிட உரையை ஒரு நொடிகூட முன் பின் ஆகாமல் சரியாக முடித்துக்கொண்டார்.

தமிழ் ஓவியா said...

இளங்கோவன்

(Impacts of E-book and digital era)

திரு.லேனா தமிழ்வாணனின் தன்னம்பிக்கையூட் டும் உரையைஅடுத்து டிஸ்காப் நிறுவனத்தின் இளங்கோவன் தனது வகுப்பைத் துவங்கினார்.

கணினித்திரையில் இனி புத்தகம் படிக்கும் காலம் வரும் டிஜிடல் புத்தகங்களை பற்றிய தனது உரை யில் இளங்கோவன் குறிப்பிட்டதாவது.

தற்போது புத்தகங்கள் மின்னணு திரையில் வாசிக்கும் பழக்கம் பெருகிக்கொண்டு இருக்கிறது, 2010-11இல் வெறும் 20 சதவீதமாக இருந்த மின்னணு புத்தகம் வாசிக்கும் பழக்கம் 2011-2012இல் 47 சதவீதமாக மாறியது பற்றி குறிப்பிட்டார், மேலும் இந்தியாவில் தற்போது மொபைல், கம்யூட்டர், டேப்லட் மற்றும் ஈ புத்தகங்களை படிக்கும் கின்-டல் போன்ற உபகரணங்களை பற்றியும் அது செயல்படும் தளங்களான எச்டிஎம் எல்-5 மற்றும் இதர ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் குறித்த பல சந்தேகங்களை தகுந்த விளக்கங்களோடு தந்தார். டவுண்லோட் செய்வது, வாசிப்பது, வாசிக்கும் போதே குறித்துக்கொள்வது, எழுத்தளர்களுக்கு தங்களது கருத்தை அப்போதே எழுதுவது, போன்ற வசதிகளை எப்படி பயன்படுத்துவது மற்றும் வார்த்தை தேடல் போன்ற பல புதிய செய்திகளை எடுத்துரைத்தார். இவரது உரையின் இறுதியில் தமிழர் தலைவர் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள் வருகை தந்து பயிற்சிபட்டறையில் வந்தவர்களுடன் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். பேரப்பிள்ளைகள்

கற்றுத்தந்த புதிய தொழில் நுட்பம்

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் அவர்கள் புதிய தொழில் நுட்பத்தை குறிப்பிடும் போது புதிதாக வாங்கி இருந்த கின்-டல் உபகரணத்தை இயக்கும் விதம் குறித்து ஆசிரியரின் பேரன் விளக்கியதை சுவையாக எடுத்துரைத்தார்.
இன்று ஒரு உபகரணம் வாங்கினால் நாளை அது பழையதாகி விடுகிறது மற்றும் அந்த உபகரணத்தை பழக்கிக்கொள்வதற்குள் பல உபகரணங்கள் வந்துவிடுகிறது, என தொழில்நுட்பம் செல்லும் வேகத்தை குறிப்பிட்டார். மேலும் புதிய தொழில் நுட்பத்தின் வேகம் காரணமாக இன்று புதியதாக இருக்கும் தொழில்நுட்பம் நாளை பழையதாகி விடுகிறது, கின்-டல் உபகரணம் இன்னும் பெருவாரியாக இந்தியமக்களை சென்றடையும் முன்பே பீட்டா கின்-டல் மற்றும் கின்-டல் 5 என புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய தளங்கள் உரு வாகிவிட்டன என்று குறிப்பிட்ட ஆசிரியர் அவர் கள் தன்னுடைய நேரடி அனுபவமாக சென்னை விமான நிலையத்தில் பிரபல அரசியல்தலைவர் புதிய மின்னணு உபகரணம் ஒன்றை இயக்குவதற் கான வழிமுறைகள் தெரியாமல் இருந்ததையும் அதில் சிலவற்றை, தான் விளக்கியதையும் குறிப் பிட்டார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து திரு.இளங்கோ புதிய தொழில் நுட்பம் பற்றி செயல்முறை விளக்கங்களை தந்தார். மேலும் டிஜிடல் பதிப்பகத்தில் உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்களையும் எடுத்துரைத்தார்.

தமிழ் ஓவியா said...

சப்னம்
(GBO-frankfufurt world book fair)

திரு இளங்கோ அவர்களின் டிஜிடல் புத்தகம் பற்றிய விளக்கத்தை தொடர்ந்து டில்லியில் இருந்துவந்த சிறப்பு விருந்தினரான Frankfurt book fair பிரதிநிதி திருமதி சப்னம் சர்வதேச நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள் ஒன்று கூடும் Frankfurt book fair பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஜெர்மன் புத்தக நிறுவனம் நடத்தும் Frankfurt book fair உலகப் பதிப் பாளர்கள் ஓரிடத்தில் கூடும் இடமான Frankfurt book fair கலந்து கொள்வது மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், கலந்து கொள்ள வேண்டிய வழிமுறை கள், கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்குள்ள விதிகள், எழுத்தாளர் கலந்தாய்வு பற்றி கூறினார்.

கிருபாசங்கர்

(Marketing techniques for new age-social media)

இறுதியாக சமூக வலைதளங்களின் பயன்பாடு குறித்து கிருபாசங்கர் அவர்கள் விரிவான உரையாற்றினார்.

விலையில்லா விளம்பரங்கள்

இணைய தளபயன்பாடு வந்த பிறகு உலகம் முழுவதிலும் விளம்பரங்களில் பெரும்மாற்றம் ஏற்பட்டு வருகிறது, இந்த மாற்றம் முக்கியமாக நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே நெருங்கிய உறவைவளர்த்து விட்டது, இதன் நேரடிப்பயன் தயாரிப்பாளர்கள் தான் தயா ரிக்கும் பொருளை ஊடகம் மற்றும் விளம்பரங் களை நாடாமல் தாமே நேரிடையாக நுகர்வோரி டம் கொண்டு செல்லும் எளியவழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார். பயிற்சிப்பட்ட றையில் கலந்து கொண்டவர்களை குழுவாக பிரித்து அந்த குழுவினரிடையே இணையதளம் குறித்த ஆலோசனைகளை திரட்டி அதை 6 தலைப்புகளாக எடுத்து சுருக்கமாக விவரித்தார். முக்கியமாக பல லட்சங்கள் செலவழித்து பத்திரிகையில் கொடுக்கும் விளம்பரம் மாலையில் சாலை ஓரக்கடையில் சுண்டல் மடிக்க பயன்படுவதும், பிரபல சிற்றுண்டி உணவகங்கள் எந்தவித செலவும் இன்றி சமூக வலைத்தளங்கள் மூலம் எளிதாக பல லட்சம் மக்களிடம் தங்கள் தயாரிப்புகளை கொண்டு சேர்ப்பது போன்றவற்றை மிகவும் எளிமையாக விளக்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட சாந்தி பதிப்பகத் தின் உரிமையாளர் லட்சுமி பயிற்சிப்பட்டறை அனுபவத்தை பற்றிக் கூறும்போது இதுவரை பதிப்பகத்துறையின் முன்னெடுப்பிற்கான வழி முறைகள் குறித்து பலரிடம் இருந்து நீண்ட ஆண்டு களாக ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு வந்தேன். ஆனால் இரண்டு நாட்களிலேயே எதிர் காலத்தில் பதிப்பகத்தை முன்னெடுத்துசெல்வதற் கான நல்லபல தகவல்கள் கிடைத்தது. இது போன்ற பயிற்சிப்பட்டறையைக் குறுகிய கால இடை வெளியில் அடிக்கடி நடத்தும் போது பலருக்கும் பயன்படும் என்று கூறினார்.

ராஜ்மோகன் அவர்கள் குறிப்பிடும் போது 1970ஆம் ஆண்டு களில் இருந்து சென்னையில் நடைபெற்றுவந்த புத்தக கண்காட்சிகளில் பங்கேற்று இருக்கிறேன், சென்னை புத்தக சங்கமத்தின் ஒரு பகுதியாக பெரியார் மணியம்மை பல்கலைகழகம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா இணைந்து நடத்திய இந்த பயிற்சிப்பட்டறை இனி வரும் காலங்களில் எனது பதிப்பகத்தை வெற்றிகரமாக நடத்த பேருதவியாக இருக்கும் என்று கூறிய அவர், புத்தகத்தால் புத்தகம் படிப்பவர்கள் புத்தாக்கம் பெறுவார்கள் ஆனால் பதிப்பகத்தார்களாகிய நாங்கள் இந்த இரண்டு நாள் பயிற்சிப்பட்ட றையினால் புதிய ஊக்கம் பெற்றோம் என தமது அனுபவத்தைக் கூறி நன்றி தெரிவித்தார்.

பயிற்சிப்பட்டறை வகுப்புகளின் இறுதியில் சென்னை புத்தகச் சங்கமத்தின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் வீ.அன்புராஜ் அவர்களும் மற்றும் நேசனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியாவின் சார்பில் திரு.மதன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினர். பயிற் சிப்பட்டறை வெற்றிகரமாக நடைபெற காரண மாக இருந்த சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பக உரிமையாளர் திரு.கே.எஸ்.புகழேந்தி, விழிகள் பதிப்பகத்தின் சார்பில் திரு.தி.வேணுகோபால், எமரால்டு பதிப்பகம் திரு.ஒளிவண்ணன் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைகழக துணைப்பேராசிரியர், திரு.எம்.ரமேஷ் அவர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக சென்னை புத்தகச் சங்கமத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட பதிப்பக உரிமையாளர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தமிழ் ஓவியா said...


சபர்மதி, ராஜியின் முறிவு


சுயராஜ்யக் கட்சியாருக்கும் பரஸ்பர ஒத்துழைப் பாளர்களுக்கும் வெளிப்படையாய் உள்ள வித்தியாச மெல்லாம் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங் களை ஏற்றுக்கொள்வ தென்பது முன்னவருக்கும், கவர்ன்மெண்டார் எவ்வளவு இணங்கி வருகிறார் களோ அவ்வளவுக்குத் தகுந்தபடி 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக் கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வதென்பது பின்ன வருடையதுமான வெளிப்படை கொள்கைக ளாகும்.

இந்த கொள்கைக்கும் மிதவாதம், ஜஸ்டிஸ், பெசண்டம்மையார் ஆகியோர்களுடைய கட்சிக் கொள்கைக்கும் யாதொரு விதமான வித்தியாசமும் வெளிப்படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக் கட்சிக்கும் மேற்கண்ட மற்ற கட்சிகளுக் கும் அந்தரங்கத்தில் யாதொரு விதமான வித்தியாசமு மில்லை. சுயராஜ்யக் கட்சி சாத்தமுதில் மலஅமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப் போல்வாறு என்பது போல் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தி யோகம் ஏற்றுக் கொள்வதென்று சொல்லுவது ஓட்டர் களை ஏமாற்றுவதற்குத் தமிழ்நாட்டு அய்யங்கார் கோஷ்டிகள் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல.

ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி யாரைப் போலவும், மிதவாதக் கட்சியாரைப் போலவும், தாங்களும் உத்தியோகம் பெற்றுக் கொள்ளுவதற்கு வந்துவிட்டோமென்று சொன்னால் பாமர ஜனங்கள் ஏமாற மாட்டார்கள் என்று நினைத்து அதற்காகக் கண்டுபிடித்த தந்திரமாகும். இந்த தந்திரக்காரரே சுயராஜ்யக் கட்சியிலும் காங்கிரஸிலும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களானதினால் அவைகளிலும் தங்கள் தந்திரங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

பம்பாய்க்காரரும், மஹாராஷ்டிரக்காரரும் இவர்களைப் போலவே உத்தியோக வேட்டைக்காரர்களானதினாலும், அங்குள்ள பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு இவ்வளவு தந்திரம் வேண்டியதில்லையானதினாலும், அவர்கள் இவர்களுடைய தந்திரத்தை வெளிப்படுத்த முன் வந்தார்கள்.

அவர்கள் கட்சி வலுக்க ஆரம்பிக்கவே அவர் களை எதிர்த்து நிற்க யோக்கியதையில்லாத சுயராஜ்யக் கட்சியார், பம்பாய்-மராட்டா மாகாணக்காரர்களின் காலுக்குள் நுழைந்து அவர்களுடன் ராஜி செய்து கொள்ள சபர்மதி ஆசிரமத்தின் பெயரையும் மகாத் மாவின் பெயரையும் உபயோகப்படுத்திக்கொண்டு புதுத் திருடன், பழைய திருடன் ஆகிய இருவரும் இனிமேல் திருடப் போவதில் ஒரே முறையைத்தான் உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர ஆளுக்கு ஒரு முறையை அனுசரித்து ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கலாகாது என்ற ராஜிக்கு வந்தார்கள்.

இந்த ராஜியை மேற்கண்ட திருட்டில் பங்குள்ளவர்களெல்லாம் ஆனந்தமாய்ப் பாராட்டினார்கள். ஆனால், தமிழ்நாட்டி லுள்ள பங்குக்காரர் களுக்கு இதற்கு முன்னமேயே மூக்கு அழுகிப் போயி ருந்த படியினால் இந்த ராஜியைப் பாராட்ட ஆரம்பித்தால் மூக்கில் புழு உண்டாகி விடுமோவென்று அஞ்சி அந்த ராஜியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள் போல் பொய்யழுகை அழுதார்கள்.

தமிழ்நாட்டுக்குப் பெரிய சந்தோஷ சமாச்சாரம் கொண்டுவருவது போல் இந்த ராஜி சங்கதியைக் கொண்டுவந்த அய்யங்கார் கோஷ்டிக்குத் தமிழ்நாட்டுப் பங்குக்காரர்களின் அழுகை பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இவ்வெச்சரிக்கையைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் ஆமதாபாத்துக்கு ஓடினார்கள். தலைவர் பண்டிதநேருவைப் பிடித்து ஒரு கரணம் போடச் சொன்னார்கள். அவர் அப்படியே ஒரு அந்தர் அடித்தார்.

இவ்வந்தரை ஜெயகர், கெல்கர் கூட்டத்தார் மதிக்காமல் அவரவர் கையாலானதை அவரவர் பார்த்துக் கொள்வதென்பதன் முடிவின் பேரில் ராஜி முறிந்தது என்கிற பெயரோடு கலைந்து விட்டார்கள். இந்த ராஜி முறிவுக்குப் பண்டிதநேரு ஒரு சமாதானம் சொல்லு கிறார்.

அது எதுபோலென்றால், தேங்காய் திருடுவதற் காக ஒரு திருடன் தென்னை மரத்தின்மேல் ஏறினான்; மரக்காரன் கண்டு கொண்டவுடன் திருடன் தானாகவே கீழே இறங்கி வந்தான்; மரக்காரன் திருடனைப் பார்த்து ஏன் மரத்தின் மேல் ஏறினாய் என்று கேட்டான்; திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன் என்று சொன்னான்; அதைப்போல் பண்டிதநேரு என்கிற பிராமணர் சமாதானமும், தமிழ்நாட்டு அய்யங்கார் என்கிற பிராமணர் சமாதானமுமிருக்கிறது.

பண்டித நேரு யோக்கியமான நிலைமையில் இந்த சமாதானம் செய்து கொண்டிருப் பாரேயானால் தனது சமா தானத்தைத் தன்னைப் பின்பற்றுவோர் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவுடனே தலைமைப் பதவியி லிருந்து விலகியிருப்பார். இதுதான் சுயமரியாதைக்கு லட்சணம். அதைவிடுத்து நான் அப்படி நினைத்தேன்; இப்படி நினைத்தேன்; கன்றுக்குட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன்;

இல்லாததால் திரும்பி வந்துவிட்டேன் என்று சொல்லுவது சுயராஜ்யக் கட்சியின் யோக்கியதையைப் பற்றியும் அது பிராமண ருடைய கட்சியென்பதாகவும், அது யோக்கியமான கட்சி அல்லவென்றும் நாம் இதுவரையிலும் எழுதியும் பேசியும் வந்ததை வெட்ட வெளிச்சமாய் மெய்ப்பித்துக் காட்டி விட்டது என்றே திருப்தி அடைகிறோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 09.05.1926

தமிழ் ஓவியா said...


சபர்மதி, ராஜியின் முறிவு

சுயராஜ்யக் கட்சியாருக்கும் பரஸ்பர ஒத்துழைப் பாளர்களுக்கும் வெளிப்படையாய் உள்ள வித்தியாச மெல்லாம் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங் களை ஏற்றுக்கொள்வ தென்பது முன்னவருக்கும், கவர்ன்மெண்டார் எவ்வளவு இணங்கி வருகிறார் களோ அவ்வளவுக்குத் தகுந்தபடி 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக் கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வதென்பது பின்ன வருடையதுமான வெளிப்படை கொள்கைக ளாகும்.

இந்த கொள்கைக்கும் மிதவாதம், ஜஸ்டிஸ், பெசண்டம்மையார் ஆகியோர்களுடைய கட்சிக் கொள்கைக்கும் யாதொரு விதமான வித்தியாசமும் வெளிப்படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக் கட்சிக்கும் மேற்கண்ட மற்ற கட்சிகளுக் கும் அந்தரங்கத்தில் யாதொரு விதமான வித்தியாசமு மில்லை. சுயராஜ்யக் கட்சி சாத்தமுதில் மலஅமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப் போல்வாறு என்பது போல் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தி யோகம் ஏற்றுக் கொள்வதென்று சொல்லுவது ஓட்டர் களை ஏமாற்றுவதற்குத் தமிழ்நாட்டு அய்யங்கார் கோஷ்டிகள் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல.

ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி யாரைப் போலவும், மிதவாதக் கட்சியாரைப் போலவும், தாங்களும் உத்தியோகம் பெற்றுக் கொள்ளுவதற்கு வந்துவிட்டோமென்று சொன்னால் பாமர ஜனங்கள் ஏமாற மாட்டார்கள் என்று நினைத்து அதற்காகக் கண்டுபிடித்த தந்திரமாகும். இந்த தந்திரக்காரரே சுயராஜ்யக் கட்சியிலும் காங்கிரஸிலும் ஆதிக்கம் செலுத்துகிறவர்களானதினால் அவைகளிலும் தங்கள் தந்திரங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

பம்பாய்க்காரரும், மஹாராஷ்டிரக்காரரும் இவர்களைப் போலவே உத்தியோக வேட்டைக்காரர்களானதினாலும், அங்குள்ள பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு இவ்வளவு தந்திரம் வேண்டியதில்லையானதினாலும், அவர்கள் இவர்களுடைய தந்திரத்தை வெளிப்படுத்த முன் வந்தார்கள்.

அவர்கள் கட்சி வலுக்க ஆரம்பிக்கவே அவர் களை எதிர்த்து நிற்க யோக்கியதையில்லாத சுயராஜ்யக் கட்சியார், பம்பாய்-மராட்டா மாகாணக்காரர்களின் காலுக்குள் நுழைந்து அவர்களுடன் ராஜி செய்து கொள்ள சபர்மதி ஆசிரமத்தின் பெயரையும் மகாத் மாவின் பெயரையும் உபயோகப்படுத்திக்கொண்டு புதுத் திருடன், பழைய திருடன் ஆகிய இருவரும் இனிமேல் திருடப் போவதில் ஒரே முறையைத்தான் உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர ஆளுக்கு ஒரு முறையை அனுசரித்து ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கலாகாது என்ற ராஜிக்கு வந்தார்கள்.

இந்த ராஜியை மேற்கண்ட திருட்டில் பங்குள்ளவர்களெல்லாம் ஆனந்தமாய்ப் பாராட்டினார்கள். ஆனால், தமிழ்நாட்டி லுள்ள பங்குக்காரர் களுக்கு இதற்கு முன்னமேயே மூக்கு அழுகிப் போயி ருந்த படியினால் இந்த ராஜியைப் பாராட்ட ஆரம்பித்தால் மூக்கில் புழு உண்டாகி விடுமோவென்று அஞ்சி அந்த ராஜியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள் போல் பொய்யழுகை அழுதார்கள்.

தமிழ்நாட்டுக்குப் பெரிய சந்தோஷ சமாச்சாரம் கொண்டுவருவது போல் இந்த ராஜி சங்கதியைக் கொண்டுவந்த அய்யங்கார் கோஷ்டிக்குத் தமிழ்நாட்டுப் பங்குக்காரர்களின் அழுகை பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இவ்வெச்சரிக்கையைத் தூக்கிக் கொண்டு மறுபடியும் ஆமதாபாத்துக்கு ஓடினார்கள். தலைவர் பண்டிதநேருவைப் பிடித்து ஒரு கரணம் போடச் சொன்னார்கள். அவர் அப்படியே ஒரு அந்தர் அடித்தார்.

இவ்வந்தரை ஜெயகர், கெல்கர் கூட்டத்தார் மதிக்காமல் அவரவர் கையாலானதை அவரவர் பார்த்துக் கொள்வதென்பதன் முடிவின் பேரில் ராஜி முறிந்தது என்கிற பெயரோடு கலைந்து விட்டார்கள். இந்த ராஜி முறிவுக்குப் பண்டிதநேரு ஒரு சமாதானம் சொல்லு கிறார்.

அது எதுபோலென்றால், தேங்காய் திருடுவதற் காக ஒரு திருடன் தென்னை மரத்தின்மேல் ஏறினான்; மரக்காரன் கண்டு கொண்டவுடன் திருடன் தானாகவே கீழே இறங்கி வந்தான்; மரக்காரன் திருடனைப் பார்த்து ஏன் மரத்தின் மேல் ஏறினாய் என்று கேட்டான்; திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன் என்று சொன்னான்; அதைப்போல் பண்டிதநேரு என்கிற பிராமணர் சமாதானமும், தமிழ்நாட்டு அய்யங்கார் என்கிற பிராமணர் சமாதானமுமிருக்கிறது.

பண்டித நேரு யோக்கியமான நிலைமையில் இந்த சமாதானம் செய்து கொண்டிருப் பாரேயானால் தனது சமா தானத்தைத் தன்னைப் பின்பற்றுவோர் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று சொன்னவுடனே தலைமைப் பதவியி லிருந்து விலகியிருப்பார். இதுதான் சுயமரியாதைக்கு லட்சணம். அதைவிடுத்து நான் அப்படி நினைத்தேன்; இப்படி நினைத்தேன்; கன்றுக்குட்டிக்குப் புல்லுப் பிடுங்கப் போனேன்;

இல்லாததால் திரும்பி வந்துவிட்டேன் என்று சொல்லுவது சுயராஜ்யக் கட்சியின் யோக்கியதையைப் பற்றியும் அது பிராமண ருடைய கட்சியென்பதாகவும், அது யோக்கியமான கட்சி அல்லவென்றும் நாம் இதுவரையிலும் எழுதியும் பேசியும் வந்ததை வெட்ட வெளிச்சமாய் மெய்ப்பித்துக் காட்டி விட்டது என்றே திருப்தி அடைகிறோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 09.05.1926

தமிழ் ஓவியா said...


இந்து மகாசபை


இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெரு வகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால் தான் முடியும் என்பது ஒரு பழமொழி.

அப்பழமொழிக் கிணங்கவே சர்க்காராரும் பிரித்தாள பல தந்திரங்கள் செய்து அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். அது போலவே நமது பிராமணர்களும் பிராமணரல்லாதாரை அடக்கியாள அவர்களுக்குள் பிரிவினையுண்டாக்கி ஒருவருக்கொருவர் துவேஷமும் பொறாமையும் நிரந்தரமாய்க் கொள்ளும்படி பல தந்திரங்கள் ஆதியிலிருந்தே செய்து வந்திருக்கிறார்கள்.

அவை களின் குறிப்புதான் இன்றைய தினம் இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வர்ணா சிரமமும் பஞ்சமர் என்னும் ஜாதியும்.இதை மகாத்மா எப்படியா வது ஒழித்து விடுதலை சம்பாதிக்கலாம் என்று எண்ணியவு டன், நமது பிராமணர்கள் புதுதந்திரம் ஒன்று செய்திருக் கிறார்கள். அதுதான் இந்து மகா சபை. அது இந்துக் களை மாத்திரம் நிரந்தரமாய்ப் பிரித்து வைப்பதோ டல்லாமல் இந்து முஸ்ஸீம் ஒற்றுமையும் நிரந்தரமாய் ஏற்படாமலிருப்பதற்குச் செய்த சூழ்ச்சியாகும்.

தற்காலம் தேசமெங்கும் ஏற்பட்டிருக்கும் இந்து முஸ்லீம் கலவரத்திற்கு இந்து மகாசபையே காரணம் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். தற்கால பிராமணீயம் உள்ள வரை தேசம் உருப்படப் போவ தில்லை என்பது நிதர்சனமாகி வருகிறது.

- குடிஅரசு துணைத் தலையங்கம் 09.05.1926

தமிழ் ஓவியா said...


காந்தியின் மகிமை


இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷணை

சாமுண்டி: ஏ,அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக்கிறதா?

மதுரை வீரன்: மகிமை என்றால் என்ன?

சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லைக் கற்கண்டு செய்கிறது; சாணியைச் சந்தனம் செய்கிறது; கள்ளைப் பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான்.

மதுரைவீரன்: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல் லாம் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் செய்து விடுவார்கள். அதிலும் தமிழ் நாட்டிலிருக்கும் குட்டி மகாத்மாக்கள் இப் பொழுது கூட செய்து வருகிறார்கள். இது ஒரு அதிசயமா?

சாமுண்டி: அதிசயம் சொல்லுகிறேன் கேளு. சேலம் ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டி யாருக்கு வடஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பரா யிருக்கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம் சென்னைக் கார்பொரே ஷனைப் பாரு. பார்த்தாயா? இன்னம் கேளு; இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன் பார். ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரி யாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது. இதைவிட இன்னும் என்ன பெரிய சித்து வேணும். இந்த சித்துக்கள் எல்லாம் அவருடைய பெயர் என்கிற மந்திரத்தைச் சொன்னதினாலேயே ஏற்பட்டது. இனி இந்த வருஷத்திற்கு அவருடைய சிஷ்யர்கள் குட்டி மகாத்மாக்கள் வேலை செய்யப் போகிறார்கள். அப்பொழுது மகாத்மாவின் மகிமையை ஒரு கை பார்க்கிறாயா?

மதுரை வீரன்: ஓட்டைக் காசு, உடைந்த சலங்கை, செல்லாக் காசு, செம்பு, பித்தளைத் துண்டு இதுகள் எல்லாம் இந்தியா சட்டசபைக்கும் சென்னை சட்டசபைக்கும் போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அய்யம்மார் சொற்படி ஆடப் போகின்றதுகள். இதைவிட இன்னும் என்ன மகிமை வேண்டும்?

சாமுண்டி: அடேயப்பா! இது போதாதா? போதும் போதும். மகாத்மாவின் பெயரைச் சொன்னாலே இவ்வளவு காரியம் நடக்கிறதா! இனி அந்த மகான் தங்களுக்குச் சுவாதீனமாய் விட்டால் எவ்வளவு நடக்காது? சரி சரி, இனிமேல் பேசுவதில்லை!

- குடிஅரசு - உரையாடல் - 09.05.1926

தமிழ் ஓவியா said...


காந்தியின் மகிமை


இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷணை

சாமுண்டி: ஏ,அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக்கிறதா?

மதுரை வீரன்: மகிமை என்றால் என்ன?

சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லைக் கற்கண்டு செய்கிறது; சாணியைச் சந்தனம் செய்கிறது; கள்ளைப் பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான்.

மதுரைவீரன்: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல் லாம் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் செய்து விடுவார்கள். அதிலும் தமிழ் நாட்டிலிருக்கும் குட்டி மகாத்மாக்கள் இப் பொழுது கூட செய்து வருகிறார்கள். இது ஒரு அதிசயமா?

சாமுண்டி: அதிசயம் சொல்லுகிறேன் கேளு. சேலம் ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டி யாருக்கு வடஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பரா யிருக்கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம் சென்னைக் கார்பொரே ஷனைப் பாரு. பார்த்தாயா? இன்னம் கேளு; இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன் பார். ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரி யாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது. இதைவிட இன்னும் என்ன பெரிய சித்து வேணும். இந்த சித்துக்கள் எல்லாம் அவருடைய பெயர் என்கிற மந்திரத்தைச் சொன்னதினாலேயே ஏற்பட்டது. இனி இந்த வருஷத்திற்கு அவருடைய சிஷ்யர்கள் குட்டி மகாத்மாக்கள் வேலை செய்யப் போகிறார்கள். அப்பொழுது மகாத்மாவின் மகிமையை ஒரு கை பார்க்கிறாயா?

மதுரை வீரன்: ஓட்டைக் காசு, உடைந்த சலங்கை, செல்லாக் காசு, செம்பு, பித்தளைத் துண்டு இதுகள் எல்லாம் இந்தியா சட்டசபைக்கும் சென்னை சட்டசபைக்கும் போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அய்யம்மார் சொற்படி ஆடப் போகின்றதுகள். இதைவிட இன்னும் என்ன மகிமை வேண்டும்?

சாமுண்டி: அடேயப்பா! இது போதாதா? போதும் போதும். மகாத்மாவின் பெயரைச் சொன்னாலே இவ்வளவு காரியம் நடக்கிறதா! இனி அந்த மகான் தங்களுக்குச் சுவாதீனமாய் விட்டால் எவ்வளவு நடக்காது? சரி சரி, இனிமேல் பேசுவதில்லை!

- குடிஅரசு - உரையாடல் - 09.05.1926

தமிழ் ஓவியா said...


ஈழத்தமிழர் இழப்புகள் தொடர்கிறது: பறிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலங்கள் மீட்கப்பட வேண்டும் தி.மு.க. தலைவர் கலைஞர் கடிதம்

சென்னை, ஏப்.27- இலங்கை இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலங்கள் மீட்கப்பட வேண்டும். இதில் இந்திய நாடும், உலக நாடுகளும் தலையிட்டு உரியன செய்யப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் - டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முரசொலியில் இன்று (27.4.2013) அவர் வெளியிட்டுள்ள கடிதம் வருமாறு:-

இலங்கை ராணுவத்தினரிடமிருந்து தப்பித்து - தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கடல் கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட 45 ஈழத் தமிழர்கள் பிடி பட்டனர். துபாயில் இறக்கி விடப்பட்ட அவர்களுள் 19 பேரை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்ப அய்.நா. உத்தர விட்டுள்ளது என்றும்; 8 பேரை ஸ்வீடன் அரசு ஏற்றுக் கொண்டது என்றும்; அமெரிக்கா 11 பேருக்குத் தஞ்சம் தருவதாக வாக்களித் துள்ளது என்றும்;

ஏற்கெனவே 7 பேரை கொழும்பு வுக்குத் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில் எஞ்சி யிருக்கும் 19 பேருக்குத் தஞ்சம் தர நாடுகள் எதுவும் முன்வரவில்லை என்றும்; அவர்களை துபாய் அரசு கொழும்புவுக்கே திருப்பி அனுப்பத் தயாராகி வருவதாகச் செய்திகள் நமக்கு வந்துள்ளன என்றும்; அவர்களின் துயரினைக் களைய உடனடி யாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 23-4-2013 அன்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

23ஆம் தேதி முரசொலியில் வெளிவந்த என்னுடைய இந்த வேண்டுகோளைப் படித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், அதை மத்திய அரசு பரிசீலித்ததாகவும், துபாயில் உள்ள அந்த 19 ஈழத் தமிழர்களும் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப் பப்பட மாட்டார்கள் என்றும் தகவல் அனுப்பி யுள்ளார். துபாயில் பிடிபட்டிருந்த அந்த ஈழத் தமிழர் களிடமிருந்தும் அதுபற்றி எனக்குத் தகவல் வந்துள் ளது.

இதற்காக மத்திய அரசுக்கும், நிதியமைச்சர் அவர்களுக்கும் ஈழத்தமிழர் களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றா லும், இலங் கையில் தொடர்ந்து நடைபெறுகின்ற ஈழத் தமிழர் களுக்கு எதிரான இன்னல்களைக் களைவதில் இந்திய அரசு இன்னமும் மெத்தனமாகவே இருக் கிறது என்பதைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ் ஓவியா said...

இராணுவ அமைச்சர் சொல்கிறார்

மேலும், 22ஆம் தேதியன்று மக்களவையில் இந்திய ராணுவ அமைச்சர் அந்தோணி அவர்கள், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, சர்வதேச கடல் எல்லைக்கு அருகே வரும் மீனவர்களைத் தாக்கக்கூடாது என்றும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவும், இலங் கை ராணுவத்துக்கு உத்தரவிட இலங்கை அரசை இந்தியா அறிவுறுத்தியுள்ளது என்றும், இந்திய மீனவர்களின் நலன் காக்க இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் மக்களவையில் கூறும் போது, இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது; அதன்படி இந்திய மீன்பிடி படகுகள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடக்கூடாது; இந்தியக் கடல் பகுதியில் சட்டவிரோத நடவடிக் கைகள் நடை பெறுவதைத்தடுக்கவும், நமது கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் தாக்கப் படுவதைத் தடுக்கவும் பாக் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கடற்படை கப்பல்களும், கடலோர பாதுகாப்புப் படை கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்.

எனினும், எந்த உடன் பாட்டை யும் மதிக்காத சிங்கள அரசு, இந்த உடன்பாட்டையும் கொஞ்சமும் மதித்து நடக்கவில்லை என்பதை 2008ஆம் ஆண்டிற்குப் பிறகும்கூட தொடர்ந்து தமிழக மீனவர்கள் அங்கே தாக்கப்பட்டு வரும் கொடிய நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் மனதிலே கொண்டு தான் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது என்று டெசோ சார்பில் நாம் கூறி வருகிறோம்.

இதற்கிடையே 23-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலே கூட, காமன்வெல்த் சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்-டவுன் நகரத்தில் நடைபெற்றது பற்றியும் அந்த மாநாட்டில் காமன் வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டு, ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், 26-4-2013 அன்று லண்டன் மாநகரத் திலே நடைபெறும் காமன்வெல்த் அமைச்சர்கள் சார்ந்த நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி பரிசீலனை செய்து காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்;

தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படைக் கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியத்துவம் பெறுகிறது; காமன் வெல்த் மாநாட்டை இலங் கையில் நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என் றெல்லாம் காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதன் தொடர்ச்சி யாக, இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட தோடு காமன்வெல்த் நாடுகளின் தூதுவர்களைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து அதற் கான வேண்டுகோளை விடுத்து வருகிறார்கள்.

தலைமை நீதிபதி பதவி நீக்கம்


தமிழ் ஓவியா said...

நமது வேண்டுகோளுக்கு மேலும் வலிவு சேர்க்கும் வகையில், மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் என்பார், இலங் கையில் தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப் பட்டார்; பத்திரிகைகள் ஒடுக்கப்படுகின்றன; அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டு, மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன; இப்படிப்பட்ட நாட்டில், காமன் வெல்த் மாநாடு நடந்தால், அது இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாகிவிடும்.

மனித உரிமை மீறல் விஷயத்தில், இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, அந்நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது, இது தொடர்பாக, லண்டனில் நடக்கும் கூட்டத்தில் விவாதித்து, இலங்கையை எச்சரிக்க வேண்டும். மனித உரிமையை மதிக்காத நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழர்களின் 6381 ஏக்கர் - சிங்கள இராணுவம் ஆக்கிரமிப்பு

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவுகடந்து போகின்றன என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, இலங்கையிலே தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த 6,381 ஏக்கர் நிலங்கள் சிங்கள ராணுவத்தினரால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு முதலே யாழ்ப்பாணத் தின் வலிகாமம் பகுதி சிங்கள ராணுவத்தின் கட்டுப் பாட்டில் வந்தது முதல் இந்த ஆக்கிரமிப்பு நடை பெற்று வருகிறது.

இலங்கையில் போர் முடிவுற்ற பிறகு, இந்த நிலங்கள் திரும்பவும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர் பார்த்திருந்த நிலையில், இந்த நிலங்களை சிங்கள ராணுவத்திற்கே சொந்தமாக ஆக்கிக் கொள்வதற்கான உத்தரவினை சிங்கள அரசு தற்போது பிறப்பித்திருக்கிறது. இந்த மாதிரியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் யாழ்ப் பாணப் பகுதியிலே மட்டுமல்ல; தமிழர்களுக்குச் சொந்தமான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திரிகோண மலை, மட்டக் களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் தமிழர்களுக்குச் சொந்த மான இந்த நிலப்பகுதியில், யாழ்ப்பாணம் மண்டலத்திற்கான ராணுவ தலைமை அலு வலகத்தைக் கட்டுவதற்கும் இலங்கை அரசு திட்ட மிட்டிருக்கிறதாம். தமிழர்கள் வழிபட்டு வந்த சுமார் 2,500 கோவில்களும், 400 கிறித்தவ தேவாலயங்களும் இடிக்கப்பட்டு, அங்கே சிங்கள வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாம். இதைப்பற்றியெல்லாம் அங்கிருந்து தகவல் அனுப்பியிருப்பதோடு, இதனைக் கண்டித்து தமிழர்கள் சார்பில் அங்கே அறப்போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டுத் தீர்மானம்

ஈழத் தமிழர்களின் இந்தக் கோரிக்கை பற்றித் தான் ஏற்கனவே 12-8-2012 அன்று சென்னையில் பிரமாண் டமாக நடைபெற்ற டெசோ மாநாட்டிலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானத்தில், இன்றைய இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைக்குப் பதிலாக இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இராணுவம், அதன் நடவடிக்கைகளுக்காக, தமிழர் பகுதிகளில் தமிழர் களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகளை கையகப்படுத்திக் கொண்டுள்ளது.

காலியாக உள்ள வீடுகளைத் தன் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளும் இராணுவம், அவற்றைக் காலி செய்ய மறுக்கிறது. இராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் வீடுகளில் எந்த சமூக நிகழ்ச்சிகளும் நடத்த முடியாது. இராணுவத்தினரே அங்கு மாவட்ட ஆட்சியராகவும் அரசு நிர்வாகி களாகவும் நியமிக்கப்படுகின்றனர். இன்றையத் தமிழ் ஈழம் ஓர் இராணுவ முகாம் போலக் காட்சியளிக்கிறது. ஜனநாயக அடிப்படை யிலான உள்ளாட்சி அமைப் புகள் இல்லாததால் அங்குள்ள தமிழர்களுக்குத் தங்களது குறைகளை எடுத்துக் கூறவும், பேசவும், அமைதியான முறையில் போராடவும் வழியில்லை.

அவர்கள் எப்போதும் பெரும் பீதியில் உறைந்து கிடக்கின்றனர். எனவே தமிழீழப் பகுதிகளிலிருந்து உடனடியாக இராணுவத்தைச் சிங்கள அரசு விலக்கிக் கொள்வதற்கு அய்க்கிய நாடுகள் அவையும் உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இராணுவத்தைத் திரும்பப் பெறுவதை நேரடியாகக் கண்காணிப்பதற்கு, அய்க்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டுக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும்; பன்னெடுங்காலமாகத் தமிழ் மீனவர்கள் வாழ்ந்து வந்த வடக்கு, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாகத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே அப்பகுதி களிலிருந்து திருப்பி அனுப்புவதோடு, மீண்டும் தமிழர்கள் தங்களின் தொழில், வணிக மற்றும் இயற்கை வள ஆதாரங்களின் மீது உரிமை கொண்டோராய் அறிவிக்கப்பட வேண்டும். தமிழர் களின் வாழ்வில் இயல்பு நிலை ஏற்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, அய்.நா. அவை இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

சிங்கள இராணுவம் வெளியேறட்டும்!

இலங்கையில் இவ்வாறு தமிழர்கள் வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளை யெல்லாம் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்று கின்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில், இந்தப் பிரச்சினையில் முக்கியமாக நமது இந்திய அரசும் மற்றும் உலக நாடுகளும், அய்க்கிய நாடுகள் அமைப்பும் உடனடியாக தலையிட்டு, ஈழத் தமிழர் களுக்கு உரிய இந்த நிலங்களை மீட்டு, தொடர்ந்து அவர்கள் அங்கே வாழவும், தமிழர்கள் வாழ்ந்த இந்தப் பகுதி களிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள,
மு.க.

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்பி கண்ட பலன்?

கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி

வண்டலூர், ஏப்.27- சென்னை வியாசர்பாடி சின்னதம்பி தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 23). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் மறைமலைநகரை அடுத்த அனுமந்தபுரம் அகோரவீரபத்திரன் கோவிலில் நடந்த விழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்தினருடன் சென்றார்.

சாமி கும்பிடுவதற்கு முன்னர் குளிப்பதற்காக மணிகண்டன் அங்குள்ள கோவில் குளத்தில் குளித்தார். அப்போது சேற்றில் சிக்கிய அவர் தண்ணீரில் மூழ்கினார். நீண்ட நேரம் ஆகியும் மணிகண்டன் திரும்பி வராததால் பெற்றோர்கள் மற்றும் அங்கு நின்றவர்கள் குளத்தில் இறங்கித் தேடினர். அப்போது சேற்றில் சிக்கிய மணிகண்டனின் உடல் மீட்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பல்லக்கு ஊர்வலத்தில் தீ விபத்து: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

வேலூர், ஏப்.27- சித்ரா பவுர் ணமியை முன்னிட்டு வேலூரில் மின்விளக்குகள் அலங்காரத்தில் புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் நடந்தது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஜெனரேட்டர் தீப் பிடித்து எரிந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓடினார்கள். வேலூர் மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமியன்று புஷ்ப பல்லக்கு விழா நடைபெறும் வேலூரில் நேற்று ஜலகண் டேஸ்வரர் கோவில் சார்பில் அகிலாண்டேசுவரி சமேத ஜலகண்டேஸ் வரர் புஷ்ப பல்லக்கு, அரிசி மண்டி சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர் புஷ்ப பல்லக்கு, வெல்ல மண்டி சார்பில் தோட்டப் பாளையம் தாரகேஸ்வரர் புஷ்ப பல்லக்கு, வேம்புலிஅம்மன் கோவில் சார்பில் வேம்புலி அம்மன் புஷ்ப பல்லக்கு, மோட்டார் வாகன அனைத்து பணிமனை உரிமையாளர் சங்கம் சார்பில் விஷ்ணு துர்க்கையம்மன் புஷ்ப பல்லக்கு, புஷ்ப வியாபாரிகள் சார்பில் லட்சுமி நாராயணா புஷ்ப பல்லக்கு ஆகிய 6 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு தொடங்கியது.

புஷ்ப பல்லக்குகள் அனைத்தும் அந்தந்த அமைப்புகள் சார்பில் மின்விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டு அந்தந்த இடத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் கிருபானந்தவாரியார் சாலையில் (லாங்குபஜார்) ஒன்றாக சேர்ந்தபிறகு பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக கமிசரி பஜார், பில்டர்பெட் ரோடு, அண்ணாசாலை வழியாக வேலூர் கோட்டை முன்பு உள்ள காந்தி சிலை நோக்கி சென்றது.

5 ஆவது பல்லக்காக வந்த தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் புஷ்ப பல்லக்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தெற்கு காவல் நிலையம் எதிரில் உள்ள சாலையை கடந்தது. அப்போது முன்னால் சென்ற புஷ்ப பல்லக்கு வேகமாக சென்றதால் பின்னால் வந்த ஜெனரேட்டரின் வயர் திடீரென அறுந்தது. இதனால் ஜெனரேட்டரில் புகை வந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் புஷ்ப பல்லக்கில் இருந்தவர்களை உடனடியாக கீழே இறங்க கூறினார்கள். பின்னர் ஜெனரேட்டர் எரிவதை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வாகனம் வந்தது. ஆனால் அதற்குள் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

தமிழ் ஓவியா said...

மனித குலத்தை ஒன்று சேர்க்கும் தத்துவம், ஒரே அமைப்பு தந்தை பெரியார் உருவாக்கிய பகுத்தறிவு அமைப்பாகும்
பகுத்தறிவாளர் கழகக் கருத்தரங்கில் புரவலர் கி.வீரமணி உரை

திருச்சி, ஏப்.27- மனித குலத்தை ஒன்று சேர்க்கும் ஒரே அமைப்பு, தத்துவம் தந்தை பெரியார் உருவாக்கிய பகுத்தறிவு அமைப்பாகும் என்று தமிழர் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

திருச்சி புத்தூரில் உள்ள வெக்காளி யம்மன் திருமண அரங்கில் 26.4.2013 அன்று பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மதவாத எதிர்ப்புக் கருத்தரங்கம் மாலை 6 மணிக்குத் தொடங்கியது

கருத்தரங்கம்

இக்கருத்தரங்கிற்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் வரவேற்புரையாற்றினார். திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் ஆசிரியர் மு.நற்குணம் தலைமை யேற்றார்.

கவிஞர் நந்தலாலா

இலக்கியத்தில் மதவாத எதிர்ப்பு என்ற தலைப்பில் த.மு.எ.க.ச.வின் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா உரையாற்றினார்.

தமதுரையில், பல்வேறு அறிஞர் பெருமக்கள் எழுதிய இலக்கிய நூல் களை மேற்கோள்காட்டி இலக்கியத்தில் மதவாத எதிர்ப்பு பல்வேறு கால கட்டத்தில் எப்படி மனிதர்களை அழித்தது என்பதை எடுத்துக் கூறினார். எந்த மதத்திலும் சீடர்களாக உள்ளவர் களில் ஒருவர்கூட பெண்கள் இல்லை என்பதை எடுத்துக்கூறி, திராவிடர் இயக்கத்தில் மட்டுமே தந்தை பெரியார், அன்னை மணியம்மையாரை முன்னிலை படுத்தியதையும், பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியும் உரையாற்றினார்.


தமிழ் ஓவியா said...

நடைமுறை வாழ்க்கையில் மதவாத எதிர்ப்பு என்ற தலைப்பில் பகுத்தறி வாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் வீ.குமரேசனும்,
நிர்வாகத்தில் மதவாத எதிர்ப்பு என்ற தலைப்பில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் முனைவர் வா.நேருவும்,
மதவாதத்தால் நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற மோதல் களைச் சுட்டிக்காட்டி, மதம் மனிதர் களை அழிப்பது எவ்வாறு என்பதை எடுத்துக்கூறி கழகப் பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் சிறப்புரை

நிறைவாக, கருத்தங்கத்திற்கு முத் தாய்ப்பாக தமிழர் தலைவர் பகுத்தறி வாளர் கழகப் புரவலர் கி.வீரமணி அவர்கள் தமதுரையில், மதவாத எதிர்ப் புக் கருத்தரங்கத்திற்கு வேறு ஒரு பெயர் வைக்கவேண்டும் என்றால், மனிதநேய வளர்ப்புக் கருத்தரங்கம் என பெயரிட வேண்டும்.

நாமெல்லாம் மனிதநேயத்தை விரும் பக்கூடியவர்கள். சமத்துவம், சகோத ரத்துவம், சுதந்திரம் ஆகிய மூன்றையும் மதவாதத்தில் பொருத்திப் பாருங்கள்; இது மதவாதத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும்.

இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கம் யாரையும் புண்படுத்து வதற்காக அல்ல; மதவாதம் என்பது மக்களை வேறுபடுத்தி காட்டுவதாகும். மதம் மக்களை ஒன்றுபடுத்தி இருக் கிறதா? ஜாதி மக்களை ஒன்றுபடுத்தி இருக்கிறதா? மதத்திலும், ஜாதியிலும் பிரிவுக்குள் பிரிவு, அப்பிரிவுக்குள் மற் றொரு பிரிவு என்று நீண்டுகொண்டே செல்கிறது.

மதம் இல்லை என்றால், மதவாதமே இருக்காது; அரசாங்கம் என்பது மதத் திற்குத் தொடர்பில்லாமல் இருக்கவேண் டும். அதுதான் மதசார்பின்மையாகும்.

மனித குலத்தை ஒன்று சேர்க்கும் தத் துவம், ஒரே அமைப்பு, தந்தை பெரியார் உருவாக்கிய பகுத்தறிவு அமைப்பாகும்.

மேலும் மதத்தின் பெயரால், கட வுளின் பெயரால் மதுரையில் ஆண்டு தோறும் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார், ஆற்றில் இறங்குகிறார் என்று 200 ஆண்டுகாலமாக மீண்டும் மீண்டும் நடைபெற்று வருவதையும், கிறித்துவ மதம், இஸ்லாமிய மதம் போன்றவற்றில் நடைபெறக்கூடிய மூட நம்பிக்கைகளையும் எடுத்துக் கூறி அரிய தொரு சிறப்புரையாற்றினார் பகுத்தறி வாளர் கழகப் புரவலர் கி.வீரமணி அவர்கள்.

நிகழ்ச்சியின் நன்றியுரையை திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் மலர்மன்னன் கூறினார்.

தமிழ் ஓவியா said...

புரட்சிக் கவிஞரும் ஈழத் தமிழர்களும்

புரட்சிக் கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29. (1891) இந்நாளில் ஈழத் தமிழர் நிலை குறித்து அப்பொழுதே நேரு பிரதமராக இருந்த போதே நிலைமை என்ன?

இதோ புரட்சிக் கவிஞர் பாடலை ஒரு முறை படித்துப் பாருங்கள்.

நம் இனத்தார் செம்மைத் தமிழர்கள்

இலங்கை அரசினால் எய்தும் இன்னலை

ஆதரித்தது நேருவின் ஆட்சி

மலையகத் தமிழர்கள் நிலைமை நன்றெனில்

நெஞ்சு கொதித்தது நேருவின் ஆட்சி!

அங்குள்ள தமிழர்கள் தொல்லை அடைந்திடில்

ஆம் ஆம் என்றது அறமிலான் ஆட்சி!

தமிழை அழிக்கத் தமிழனைத் தேடிக் காசு தந்து அலுவல் காட்டி

ஊக்கம் செய்தது உயர்விலான் ஆட்சி!

என்று பாடினாரே புரட்சிக் கவிஞர்! இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே இந்தப் பிரச்சினையில் நீதிக் கட்சி அக்கறை காட்டியுள்ளது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் நிருவாகக் கமிட்டிக் கூட்டம். 10.8.1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர். ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாறு. இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பது முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது (விடுதலை 11.8.1939 பக்கம் 3)

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்த இயக்கத்துக்குள்ள தொடர்பையும் அக்கறையையும் விமர்சிக்க யாருக்கும் யோக்கியதை போதாது.

தமிழ் ஓவியா said...

செய்திகளின் பின்னணியில் அமெரிக்காவில் திருவையாறாம்


- மின்சாரம்

பார்ப்பனர்கள் சந்திர மண்டலத் திற்குச் சென்றாலும் அவாளின் கலாச்சாரத்தைக் கால்கோள் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பாரதியார் சங்கம் என்று கூறிப் பிள்ளையார் சுழி போடுவார்கள். அதன் மூடு திரையில் அவாள் சமாச்சாரங்கள் ஜாம் ஜாமென்று சலங்கை கட்டி ஆடத் தொடங்கி விடும்.

அமெரிக்காவில் குடியேறிய பார்ப்பனர்களால் அமெரிக்காவின் செனட் சபையில் ரிக்வேதம் உபநிஷத், பகவத் கீதையிலிருந்து சில பாடல்களைப் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜன்சேட் என்னும் சமஸ்கிருதப் பண்டிதரும் அதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.6.2007).

அமெரிக்காவில் வாசிங்டன் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற துளசி கப்பார்ட் என்ற இந்து மதப் பார்ப்பனப் பெண் நாடாளுமன்றத்தில் கீதையின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார்.

(பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும், பாவயோனியில் பிறந்தவர்கள் -_ கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32).

ஒரு கால கட்டத்தில் ருசியாவிலும் இந்தக் கேடு கெட்டத்தனம் வாலை நுழைத்து, அதை ஒரு வழியாக்கி விட்டது.

இப்பொழுது என்னடா என்றால் அமெரிக்காவில் திருவையாறாம்! திருவையாறில் தொடங்கிய வியாதி இப்பொழுது அமெரிக்காவிலும் குடி யேறி விட்டது. தியாகராஜர் ஆரா தனை விழாவுக்குக் கொடியேற்றி விட்டார்கள். மார்ச்சு 30 தொடங்கி ஏப்ரல் 7 வரை பிர்மாண்டமாம்! சூத்திர ஏடான குமுதம் (24.4.2013 பக்கம் 102-_104) குதூகலிக்கிறது. சென்னையி லிருந்து நூறு கலைஞர்கள் இதற்காகப் படையெடுத்துச் சென்றிருக்கிறார்கள். (அமெரிக்காவுக்கு நூறு பேர் செல்லுவது என்றால் இதற்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு வசதி இருக்கிறது என்பதைக் கவனிக்கவும்)

சுதா ரகுநாதன், திருச்சூர் ராமச் சந்திரன், நெய்வேலி சந்தான கோபால கிருஷ்ணன், கே. காயத்ரி எல்லாம் அவாள் பட்டியல்தான்.

தவில், நாதஸ்வரம் என்று தவிடு பொடிதான், 500 அமெரிக்கா வாழ் குழந்தைகள் தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை ஓகோவாம்!

36 வருடங்களுக்கு முன்பே சாதா ரணமாகத் தொடங்கியது இப்பொழுது இந்த அளவுக்கு உச்சத்திலாம்!

இதில் சிறப்பு விருந்தினராக ஒருவர் கலந்து கொண்டு இருக்கிறார். அவரை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதர் நிருபமாராவ். இவரும் அவாள் ஆத்துப் பெண்தான்.

இந்தியாவின் வெளி நாட்டுச் செய லாளராக இருந்து அவர் பங்குக்கு இலங்கையில் ஈழத் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னாலான கைங்கரியத்தைச் செய்தவர்! இல்லாவிட்டால் பதவி ஓய்வுக்குப் பிறகு தனியே அழைத்து அம்மை யாரைக் கவனித்து, உபசரித்து அனுப் புவாரா இலங்கை அதிபர் ராஜபக்சே?

வெறும் பாட்டுக் கச்சேரி மட்டு மல்ல; - நடன நிகழ்ச்சிகளும் உண்டு - அதற்கும் அவாள் ஆத்துப் பெண்கள்தான் ஏற்றுமதி.

எங்கே போனாலும் தமிழ்க் குரல்தான், நம்ம சங்கீதம்தான், நம்ம பேச்சுத்தான் அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற உணர்வே துளியும் உண்டாகவில்லை.

அமெரிக்காவிலிருந்து செய்தி படங்கள் யோகா! (ஆகா எப்படி!) _ குமுதம் இவ்வாறு கூறுகிறது.

இதெல்லாம் உண்மைதானா? எங்கே போனாலும் தமிழ்க் குரல்தானா? நம்ம சங்கீதம் தானா?

இங்கே திருவையாற்றில் நடக்கும் தியாகராஜர் ஆராதனையிலேயே தமிழ் கிடையாது; - ஆம், மருந்துக்கும் தமிழ் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது அங்கு எங்கு பார்த்தாலும் தமிழ் என்பது யாரை ஏமாற்ற? பெயருக்குத் தமிழ் என்ற நாமகர்ணம் அவ்வளவுதான்; பாடல்கள் எல்லாம் தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகள்தாம்.

திருவையாறு தியாகராஜர் விழாவில் தண்டபாணி தேசிகர் சித்தி வினாயகனே! என்ற தமிழ்ப் பாடலை (இவ்வளவுக்கும் அது பக்திப் பரவசப் பாடல்தான்!) பாடியதற்காக சந்நிதானம் தீட்டாயிடுத்து என்று கூறி, தீட்டுக் கழிக்கும் சடங்குகளைச் செய்த பிறகு தானே அரியக்குடி ராமானுஜ அய்யங் கார் திருவாய்த் திறந்து தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடினார்.

அதனைக் கண்டித்து தீட்டா யிடுத்து! என்று தலைப்பிட்டு குடி அரசில் அப்பொழுதே (9.2.1945 பக்கம் 7) கட்டுரை தீட்டியவர்தான் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

தமிழ் ஓவியா said...

சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் நடைபெற்ற தமிழிசை விழாவில், முதல் அமைச் சராகக் கலந்து கொண்ட கலைஞர் அவர்கள் (21.12.1989) செம்மங்குடி சீனி வாசய்யர், அக்கிரகாரத்து அம்மணி யாகவே ஆகிவிட்ட எம்.எஸ். சுப்பு லட்சுமி அம்மையார் ஆகியோரை அருகில் அமர வைத்தே நினை வூட்டினாரே (இவருக்குப் பெயர்தான் கலைஞர் என்பது) உள்ளபடியே தமிழிசைமீது தீராத காதல் அமெரிக்கா வாழ் இந்தத் தமிழர்களுக்கு(?) இருந்திருக்குமேயா னால் இந்தத் தியாகராஜருக்கு முன்னோடியான _- காலத்தால் முந்தியவர்களுமான மும்மணிகளான சீர்காழி முத்துத் தாண்டவர் (1525_-1600), அருணாசலக் கவிராயர் (1711-_1779) தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) ஆகியோருக்கு அல்லவா அமெரிக்காவில் விழா எடுத்திருப்பார்கள்!

பார்ப்பனர்களின் இந்தப் பம்மாத் துக்களை நம் தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ!

இந்த நேரத்தில் இன்னொன்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

உண்மையான தமிழிசை மும்மணிகளாகிய சீர்காழி முத்துத் தாண் டவர். அருணாசலக் கவிராயர், தில்லை விடங்கன் மாரி முத்தாபிள்ளை ஆகியோரைச் சிறப்பாக நினைவு கூரும் வண்ணம் சீர்காழியிலேயே மணி மண்டபம் ஒன்றை ரூ.1.51 கோடி செலவில் கடந்த தி.மு.க. ஆட்சியிலே மானமிகு மாண்புமிகு முதல் அமைச் சர் கலைஞர் அவர்கள் உருவாக்கி, நிறைவு பெறும் கால கட்டத்தில் ஆட்சி போயிற்று. அக்கிரகார ஆட்சி அதனைத் திறப்பு விழா செய்யுமா என்பது கேள்விக் குறிதான்!

தமிழ் ஓவியா said...


கிரிமினல்களின் கூடாரமாகி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்



திருச்செந்தூர் அழகான ஒரு சுற்றுலாத் தலம். கோடைக் காலத்தில் கூட குளிர்ந்த காற்று வீசும் இடம் இது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும்கூட இங்கே வந்து செல்கின்றனர்.

இங்கு மாதத்தில் சில நாள்களைத் தவிர, மீதி அனைத்து நாள்களிலும் அய்ந்தாறு மண்டபங்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை அன்னதானம் நடக்கும்.

தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கே மக்கள் தங்குவதற்கான வசதியும் அதிகம். இலவசமாகவும் தங்கலாம். ரூ.100, ரூ.200, ரூ.300-_-க்கு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலைச் சார்ந்த விடுதிகளில் அறைகள் உள்ளன. இவை தவிர தினமும் ரூ.10 அளித்தால் பெட்டக வசதியுடன் தங்கும் இடங்கள் செந்தி லாண்டவர் விடுதியிலும் இடும்பன் மண்டபத்திலும் உள்ளன.

பசியின்றி மாதத்தில் பெரும்பாலான நாள்கள் உணவு உண்ணலாம் என்ப தால் மருமகள்களுடன் ஒத்துப் போகாத மாமியார்கள் பலர் இங்கே தஞ்ச மடைந்திருக்கின்றனர். அதே போல கிரிமினல்கள் பலரும் இங்கே தலை மறைவு வாழ்க்கை வாழ்கின்றனர்.

தேவி என்கின்ற பெண் மதுரையைச் சேர்ந்தவர். இவர் தன் கணவனைக் கொன்று விட்டு, நான்கு வயது மகனுடனும் காதலருடனும் செந்திலா ண்டவர் விடுதியில் இரண்டு மாதங் கள் தங்கியிருந்தும்விட்டு, தற்பொழுது கோயிலுக்கருகிலுள்ள மணல் மேடு என்கின்ற இடத்தில் வசிக்கின்றார்.

கவிராஜா என்பவர் பல பெண் களின் வாழ்க்கையிலும் தான் பணி யாற்றிய வங்கியிலும் விளையாடி விட்டு தன் தாயுடன் தலைமறைவாக இங்கே இருக்கின்றார். அடுத்ததாக, எந்தப் பெண்ணை வலையில் சிக்க வைக்கலாம் என்ற யோசனையில் அம்மாவும் மகனும் உள்ளனர்.

இவர்களைப் போன்று பலர் இங்கே உலா வருகின்றனர். இவர்களால் திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையத்தில் வருகின்ற பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை வந்ததும், கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணிக்கு வேண்டும் என்ற கோரிக் கையை திராவிடர் கழகம் முன் வைத் தது. அதை சென்னை சரக இருப்புப் பாதை காவல்துறை கண் காணிப்பாளர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, திருநெல்வேலி அரசு இருப்புப் பாதை காவல்நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். அவர் களும் அதை ஏற்று உரிய பாதுகாப்பு வழங்குவதால் திருச்செந்தூர் தொடர் வண்டி நிலை யத்தில் தற்பொழுது கிரிமினல்களின் நடமாட்டம் இல்லை.
_- அமலா, திருச்செந்தூர்

தமிழ் ஓவியா said...


G-நாம் அறிந்து கொள்ள வேண்டியது

4G என்பது இந்தியாவில் வரப்போகும் Mobile Telecommunication standard ஆகும். சில நாடுகளில் வந்தும் விட்டது. எவ்வளவோ உள்ளன அதைப் பற்றி தெரிந்து கொள்ள. எனக்கு தெரிந்த அளவு தங்களுக்கு இந்த பதிவில் பகிர்ந்து உள்ளேன்.
அதற்கு முன் நான் எழுதிய முந்தைய பதிவான 3G பற்றி தெரிந்து கொள்ளலாம் என்ற பதிவை படித்து விட்டு வரவும். அத்துடன் 4ஜி பற்றி என்னை எழுதத் தூண்டியவர் hajasreen.
சரி 4G என்றால் என்ன?
4G என்பது 3G ஸ்டாண்டர்டின் அடுத்த தலைமுறை ஆகும். இது LTE (Long term evolution) of 3G எனவும் சொல்லலாம். அதாவது 3G யின் கடைசி தான் 4G யின் ஆரம்பம். இது வாய்ஸ், டேட்டா,வீடியோ தரவிறக்கம, மொபைல் டி‌வி போன்றவற்றை பயனர்களுக்கு "Anytime Anywhere"என்ற அடிப்படையில் தரும்.
இந்த 4G ஆனது நிற்கும் மட்டும் மெதுவாக நகரும் பயனாளிகளுக்கு 1ஜி‌பி அளவிலான ஸ்பீட் டேட்டா ரேட் தரும். அதே நேரம் கார் மற்றும் ரயில் போன்றவற்றில் உள்ள வேகமாக நகர்பவர்களுக்கு 100எம்‌பி வேகம்(4G standard பொறுத்து இது கூடும் அல்லது குறையும்).
நீங்கள் 3ஜி யில் இருப்பதற்க்கும் 4ஜி யில் இருப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் கீழே படத்தில் காணலாம்.



2002 ஆம் ஆண்டு 4ஜி க்கான திட்டங்களை ITU-T கூறியது. 2005 ஆம் ஆண்டு தென் கொரியா WiMax தொழில்நுட்பம் உடன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து மற்ற சில நாடுகளும் இந்த சேவையினை தரத்தொடங்கின. 3G போலவே இது ஒயர்லெஸ் மோடம் ஆகவும் பயன்படுகிறது.
இதுவும் 3ஜி போலவே
---> வீடியோ காலிங்
---> மொபைல் டி‌வி
---> மிக வேகமான டேட்டா சர்வீஸ்
---> மிக அதிகமான ஏரியா கவரேஜ்
---> ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சர்வீஸ்
---> வீடியோ கான்பரன்சிங்
போன்றவற்றை தரும்.
மிக அற்புதமான பயன் என்றால் நீங்கள் 4ஜி மொபைல் சிஸ்டத்தை வேறு எந்த மொபைல் ஸ்டாண்டர்டிலும் பயன்படுத்தலாம்.அதாவது 3G, 2G போன்றவற்றில்.


அத்துடன் இது இணைய பயன்பாடுகளுக்கு ipv6 முறையை கையாளும்.(நாம் பயன்படுத்துவது ipv4) இதனால் மிக அதிக எண்ணிக்கையிலான wireless சர்வீஸ்கள் பயன்படுத்த முடியும்.
இது மிக அதிக திறன் வாய்ந்த அட்வான்ஸ்டு ஆன்டெனாக்களை பயன்படுத்துகிறது. இதனால் சிக்னல் கவரேஜ் ஆனது மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும். இது முழுவதுமாக IP based Integrated Network. இதில் செய்திகள் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும்.
4ஜியிலும் பல வகையான சேவை முறைகள் உள்ளன. இதில் WiMax (சில இடங்களில் WiFi ) ஆனது மொபைல் இன்டெர்நெட் சேவைக்கும் LTE ஆனது பொதுவான 4ஜி பயன்பாடுகளுக்கும் பயன்படுகிறது. இவை அனைத்துக்கும் 4G ஆனது 3ஜி UMTS களையே பயன்படுத்துகிறது.
நோக்கியா சீமென்ஸ் ஆனது 2006 இல் 4ஜி யில் டவுன்லிங்கில்(Antenna to Mobile) இரண்டு பயனர்கள் HD-TV வீடியோ ஸ்ட்ரீமிங்கும் மற்றும் அப்லிங்கில் (Mobile to Antenna) Online Gaming போன்றவற்றை செய்தும் காட்டியது. இதன் பின்னர் எரிக்சன், மோட்டரோலா, எல்‌ஜி போன்றவை இதன் மேம்பட்ட பயன்பாடுகளை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை அறிமுகம் செய்தன.
4Gயில் மிகக் குறைவான cost இல் டேட்டா சர்வீஸ்களை பயன்படுத்த முடியும். ஆனால் இது இந்த சர்வீஸ் தருகின்ற ஆபரேட்டர் பொறுத்தது.
- See more at: http://www.karpom.com/2011/05/4g.html#sthash.bG26NONw.dpuf

தமிழ் ஓவியா said...


பெண்களுக்குப் பாதுகாப்பு


பாலியல் கொடுமைகளிலிருந்து மகளிரைக் காப்பாற்றக் கூடிய "ஷாக்' அடிக்கும் உள்ளாடைகள் வந்து விட்டன. சென்னையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பொறியாளர்கள் பிரா போன்ற பெண்களின் உள்ளாடையில் 3800 கிலோ வாட் ஷாக் அடிக்கும் அமைப்பு, குளோபல் நிலைநிறுத்தும் சிஸ்டம் (GPS) மற்றும் மொபைல் தொலை தொடர்பு (GSM) கருவிகளை இணைத்து புதியதொரு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மனிஷா மோகன், ரிம்பி திரிபாதி, நீலாத்ரி பாசுபால் ஆகிய மூவரும் இணைந்து மேற்சொன்ன சாதனத்துக்கு "சமூக கவச சாதனம்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்த உள்ளாடையை பயன்படுத்தும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போது காவல்துறை மற்றும் பெண்ணின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும். சம்பவம் நடைபெறும் இடத்தை ஜி.எஸ்.எம். கருவி காட்டிக் கொடுத்துவிடும். இதுமட்டுமின்றி, 3800 கிலோ வாட் திறன் கொண்ட மின்சாரத்தை வெளிப்படுத்தி ஷாக் அடிக்கும். பெண்ணை நாடி வந்தவன் அப் பெண்ணைத் தொடுவதற்குக் கூடப் பயப்படுவான். இந்தக் கருவி 82 முறை இதுபோல ஷாக் அடிக்குமாம்!

தமிழ் ஓவியா said...

மனிதன்

ஆபத்து வந்தபோது

அருகிலிருந்து உதவிய

அரிய உறவை, நட்பை

அன்றே மறந்திடும்

மனிதன்....

கற்பனை என்றாலும்

கற்சிலை என்றாலும்

மறக்க மாட்டானாம்

கந்தனை!

கடவுளை!

வல்லமை யாருக்கு...?

பாதி மனதில்

தெய்வம் இருந்து

பார்த்துக் கொண்டதாம்!

மீதி மனதில்

மிருகம் இருந்து

ஆட்டி வைத்ததாம்!

அப்படியானால்

வலிமை யாருக்கு?

வெறுமனே

பார்த்துக் கொண்டிருந்த

வெட்டி தெய்வத்துக்கா?

அன்றாடம் ஆட்டிவைத்த

ஆளுமைமிகு மிருகத்துக்கா?

- _ சிவகாசிமணியம்

தமிழ் ஓவியா said...

ஓர் திறந்த மடல்


டாக்டர் இள.பதக், அகமதாபாத் பெண்கள் செயற்குழுவை நிறுவியவர்; இன்றைய அதன் தலைவர்.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, இந்திய வணிக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (Ficci)
பெண்கள் அமைப்பின் 29ஆவது அமர்வில் பேசி யுள்ளதை ஊடகங்கள் செய்தியாக்கி யுள்ளன. அந்த பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு டாக்டர் பதக் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதம் தான் இது:

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலிருந்து நமது முதல்வர் நரேந்திரமோடியின் சரளமான பேச்சைக் கண்டும் கேட்டும் நீங்கள் வியப்படைந்திருப்பீர்கள். குஜராத்தில் உள்ள பெண்களைப் பற்றியா அவர் பேசியுள்ளார்? இல்லை. குஜராத்தில் உள்ள உண்மை நிலையை உங்களுக்குத் தெரிவிக்க ஆசைப்படுகிறோம்.

குஜராத்தில் பெண்களின் எண் ணிக்கை குறைந்து போய் விட்டது. 2001-இல் 1000 ஆண்களுக்கு 921 பெண்கள் இருந்தனர். 2011இல் 918 ஆகக் குறைந்துவிட்டது. இதே பத்தாண்டுகள் கட்டத்தில் டில்லியில் அது 45ஆகவும் ராஜஸ்தானில் 4 ஆகவும் உயர்ந்துள்ளது.

18ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பெண் சிசுக் கொலையைப்பற்றி மோடி பேசியுள்ளார்.

2011இல் அரசு பெண் களுக்கான சோனோகிராபி (Sonography) மருத்துவமனைகளை மூடியுள்ளது 2012லும் மற்றும் சில மூடப்பட்டன. மேற்கொண்டு எந்த செயல்பாடும் இல்லை. இதுதான் மோடியின் அரசு!

திருமணமான பெண்களைப்பற்றிய 2006ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 முதல் 49 வயதான பெண்களில் 55லு விழுக்காடு சோகை நோய் பிடித்தவர்களாக உள்ளனர்.

60.8 விழுக்காடு கருவுற்ற பெண்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்களாகவும் சோகை பிடித்தும் உள்ளனர். 1998-_99 இல் 74.05 விழுக்காடு பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோரின் 6.-38 மாதங்கள் வயது கொண்ட குழந்தைகள் ஊட்டச் சத்து குறைந்தவர்களாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005-_2-006ல் அந்த எண்ணிக்கை 79.8 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. சென்ற தேர்தலின் போது இது எடுத்துப் பேசப்பட்ட பொழுது, அதற்கான அமைச்சர், குழந்தைகளுக்கான செறிவூட்டப்பட்ட அந்த உணவுப் பொட்டலங்கள் எங்கே என்று தேடப் போனார்? இதுதான் குஜராத்தின் நிர்வாகம்!

தாய்மார்களின் மரண எண் ணிக்கையும் சிசுக்களின் மரண எண் ணிக்கையும் குறையவில்லை. குஜராத் தில் ஒன்று, அவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லது நோஞ் சான்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர்!

அரசு மருத்துவமனைகளிலும், தாலுகா அல்லது மாவட்ட மருத்துவ மனைகளிலும் மகப் பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படாததால், இளம் தாய்மார்கள் மடிகிறார்கள். பெரும் நகரங்களில் அத்தகைய மருத்துவர்கள் உண்டு. அதனால் பல பெண்கள் ஆம்புலன்சுகளிலும், பேருந்துகளிலும் குழந்தை பெற நேரிடுகிறது. இளம் பெண்களின் உயிர் பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இளம் பெண்களின் உயிர் பற்றியோ, ஏன் இளம் ஆண்களின் உயிர் பற்றியோ அரசு கவலைப்படுவதாகத் தெரிய வில்லை. அவர்களைக் காப்பாற்றுவதற் கான எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மருத்துவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தார். குஜ ராத்தில் பலர் பறவைக் காய்ச்சலால் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கான கல்வி இலவசம் என்று சொல்லப்படுகிறது. சென்ற இரண்டு வருடங்களாக, அதற்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் ஊக்குவிப்பதை நிறுத்தி விட்டது. நல்ல கல்வி வேண்டுமானால் தற்பொழுது பெண்கள், மிக அதிகமான பணம் கொடுத்தால்தான் பெற முடியும் அதுதான் குஜராத்தின் நிர்வாகம்! உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண் களுக்கு 50 விழுக்காடு இடம் வேண்டும் என மோடி பேசுகிறார். ஆனால், டாக்டர் திருமதி க. மாலானி குஜராத்தின் கவர்னர்தான் ஒரு பெண்ணாக இருந்தும் கூட அந்த சட்டம் நிறைவேறுவதற்கான கையெழுத்தை இடவில்லை. ஏனென் றால், கட்டாய வாக்களிப்பு பற்றிய மற்றொரு தீர்மானத்துடன் அது இணைக்கப்பட்டிருந்தது. தனித் தனியாகப் பிரித்து சட்டமுன் வரைவு களை நிறைவேற்றி அனுப்பினால், தான் கையெழுத்து இடத் தயாராக இருப்ப தாகச் சொல்லி, கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார். அதற்காக கவர்னர் தான் ஒரு பெண்ணாக இருந்தும், கையெழுத்திடாமல் திருப்பி விட்டார் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. அவர் பெண்ணாக இருந்தாலும்கூட என்பது அழுத்தம் கொடுத்துச் சொல்லப் படுகிறது. இதே போல அரை உண்மைகளே மட்டும் சொல்வதுதான் மோடியிசத்தின் சிறப்பு.

மோடி, குஜராத் கவர்னரைச் சிறுமைப்படுத்த வேண்டும். ஏனென் றால், அவர் விரும்பாத லோக் ஆயுக் தாவை நிறுவ கவர்னர் நடவடிக்கை எடுத்தார். நீண்ட நாட்களாக கொண்ட அந்தத் தொடர் சண்டை உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

2012 மே மாதத்தில் குஜராத்தில் 422 மகளிர் பஞ்சாயத்துக்கள் அமைக்கப் பட்டன. ஓட்டெடுப்பு இல்லாமல் ஒப்புதல் மூலமே பெண்கள் நியமிக்கப் பட்டனர். இந்த முறை ஜனநாயக உரிமையை மறுப்பதுடன், கிராம அளவில் வல்லமையோ செல்வாக்கோ மிக்கவர்களுக்கே சாதகமாக அமையும். பல நேரங்களில் கணவன்மார்களின் பிரதிநிதிகளாக பெண்கள் செயல் புரிய நேருகிறது. பெண்கள் தனிமைப் பொறுப்பிலிருக்கும் பஞ்சாயத்துக் களைப் பற்றி பெருமையாகப் பேசும் மோடி, அரசியல் சட்டப்படி உயர்நிலையிலுள்ள ஒரு பெண்ணான கவர்னரைப்பற்றி, சுயமரியாதைபற்றி கவலைப்படவில்லை. கூட்டம் முடிந்த வுடன் மக்கள் சிரித்துக் கொண்டே வீடு திரும்பும் வரை மோடியின் ஒட்டுகளுக்கும் பஞ்சமில்லை. அதனால் அவர் ஏன் மற்றவர் மான மரியாதை பற்றி கவலைப்பட வேண்டும்?

சென்ற பத்தாண்டுகளாக குஜராத் தில் குற்றங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொள் ளைகள், முதியவர் மற்றும் பெண்கள் கொலைகள் கூடி வருகின்றன.

குற்றம் ஆண்டு ஆண்டு 2001 2012

பாலியல் வன்முறை 235 413

ஆட் கடத்தல் 731 1329

மற்ற குற்றங்கள் குறைந்தனவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. காவல் நிலையங்கள் குற்றங்களைப் பதிவு செய்ய விரும்புவதில்லை. காரணம், குற் றங்கள் மிகுந்தால், அவர்கள் கண்டிக் கப்படுவார்கள். அரசின் கண்ணோட் டத்தில் குறைந்த குற்றப் பதிவுகள், மாநிலத்தை குற்றமில்லாததாகக் கூட்டும் அல்லவா?

வாணிகம் குஜராத்திகளின் ரத்தத் தில் ஊறிப்போன ஒன்று பல பெண்கள் சொந்தத் தொழில்களை நடத்துகின்றனர்.

அவர்கள் உணவு வகைகள் மட்டுமில்லாமல் ஆடை அணிகலத் தொழில் உரிமையாளர்களாகவும் உள்ளனர்; சிறந்தும் விளங்குகின்றனர். ஆனால் லிஜ்ஜாத் அப்பளம் பழங்குடி பெண்களால் தயாரிக்கப்படுவதில்லை. அது ஒரு தவறான செய்தி.

மோடி முதல்வராக இருந்தும்கூட, குஜராத்தில் நீண்ட நாட்களாக பெண்கள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


தன்னைப் பற்றி பெரியார்


பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர் (நெ.து. சுந்தரவடிவேலு) நூலில் 10ஆம் பக்கத்தில் இருப்பது:

எனது வார்த்தைகளும், எழுத்துக்களும், செய்கைகளும் தேசத்துரோகமென்றும், வகுப்புத் துவேஷமென்றும், சிலர் சொல்லவும், ஆத்திரப்படவும் ஆளானேன்.

அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும், என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? என்று யானே யோசிப்பதுண்டு.
சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்!

நாம் ஏன் இக்கவலையும் தொல்லையும் அடைய வேண்டும்?

நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி சம்பார்த்தனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவி உண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா? இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடைபிடிப்பது போல் இருக்கிறது என்பதாகக் கருதி விலகி விடலாமா? என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்?

ஏறக்குறைய நமது ஆயுட்காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ, அய்ந்தோ அதிகமாக இருந்தால் பத்து வயதுக்காலமோ இருக்கலாம்.

இந்தக் கொஞ்சக் காலத்தையும் ஏன் நமது மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது?

விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகின்றோம்? என்பதாகக் கருதி உழன்று கொண்டிருக்கின்றோமேயல்லாது வேறில்லை.

இக்கஷ்டமானதும் மனதுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடியதுமான காரியத்தில் இறங்கி விட்டோம்.

உலகம் ஒப்புக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, நமக்கு அதைப்பற்றி கவலையில்லை.

- என்று பெரியார் எழுதியிருப்பது, அவருக்கிருந்த ஒட்டு மொத்தமான எதிர்ப்பைக் காட்டுகின்றன.

சமுதாயத்தின் மேல்தட்டில் இருந்து கொண்டு நாட்டை இயக்கிக் கொண்டிருந்தோர் அனைவரும் எச்சம் சொச்சம் இல்லாமல் எதிர்த்தனர்.

இந்த உண்மையை மிகத் தெளிவாக விளக்கும் பெரியாரின் இத்தலையங்கத்தை உலகப் புகழ் வாய்ந்த தன்னிலை விளக்கக் கட்டுரைகளில் தலைசிறந்ததாகக் குறிக்கலாம்.

கற்றவர், அறிந்தவர், தெரிந்தவர், பொது நலத் தொண்டர் யாவரும் முழுமையாக எதிர்த்தனர் என்றால், மற்றவர் நிலையை நாம் என்ன எண்ண முடியும்.

மற்றவர்கள் பெரியாருடைய கூட்டங்களை நடத்த விடாமல் கலகம் செய்யும் நிலையில் தொடங்கிப் பெரியாரை அடிக்கின்ற அளவுக்கு முன்னேறி நின்றனர்.

இந்திய நாட்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட எவரும் இவ்வளவு பெரிய எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.

தன்னுடைய கைப்பணத்தைச் செலவு செய்து கொண்டுதான் அவருடைய கருத்துக்களை விளக்கினார்.

படித்த இளைஞரில் சிலர் அவ்வப்போது பெரியாருடன் சேருவதும் பிறகு பிரிந்து போவதும் எதிரணியில் சேர்ந்து கொள்ளுவதுமாக இருந்தனர்.

- க. பழனிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


இந்தியை எதிர்க்கும் வடகிழக்கு இந்திய மாணவர்கள்

வடகிழக்கு இந்திய மாணவர்கள், கட்டாய இந்தி திணிப்பு /நவீன இந்திய மொழிகள் திணிப்பினை எதிர்த்து டில்லி பல்கலைக் கழகத்தில் ஒரு பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் டில்லியில் உள்ள சுமார் 2500 மாணவர்கள் பங்கு பெற்றனர். அதில், டில்லி, அருணாசல மாநில மாணவர் சங்கம், டில்லி மணிப்பூர் மாணவர் சங்கம், டில்லி மேகாலயா மாணவர் சங்கம், மிஸ் ஷிங் மாணவர் சங்கம், டில்லி மிசோ ஜிர்லாய் பாவுல், டில்லி நாகா மாணவர் சங்கம், டில்லி சிக்கிம் மாணவர் சங்கம், டில்லி சியாம்சின் பார்வி ஈழ, டில்லி திரிபுரா மாணவர் சங்கம், ஆகியவை இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டுள்ளன.

போராட்டக்காரர்கள் கலைத்துறைக் கட்டடத்தின் முன்பு ஒன்று கூடினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, மாணவர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். துணைவேந்தரைச் சந்தித்து நேரில் தங்களது கருத்துக்களை விளக்கிச் சொல்ல மாணவர்கள் விரும்பினர். துணைவேந்தர் இல்லாததால், இணைவேந்தர் பேராசிரியர் பச்சூரி மாணவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கை மனுவினைப் பெற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, இணைவேந்தர், இந்தி, நவீன இந்திய மொழிகள், அரபி, பெர்சியன் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய அடிப்படைத் திட்டத்தின்கீழ் உள்ள மொழிகளுக்குப் பதிலாக ஆங்கில இலக்கியத்தாளை ஒரு பாடமாக ஆக்க டில்லி பல்கலைக் கழகம் முடிவு எடுத்திருப்பதாகச் சொன்னார். அதை மாணவர் குழு ஒட்டு மொத்தமாக நிராகரித்து விட்டது.

ஏனென்றால், இந்தக் கட்டுப்பாடுகள், தங்கள் படிப்பின்போது, இந்தியையோ மற்ற நவீன இந்திய மொழி களையோ படிக்காதவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும்.இந்தப் பிரச்சினைகளுக்கு டில்லி பல்கலைக் கழக நிர்வாகம் எப்படி செயல்படப் போகிறது என்பது உன்னிப்பாகக் கவனிக்கப் படுகிறது. மாணவர் குழு தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட முடிவெடுத்துள்ளது. மாணவர்களது கோரிக்கைகள் முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கப்படும் என்ற இணை வேந்தரின் வாக்குறுதியை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இணைவேந்தரிடம் மாணவர்கள் அனைத்து கோரிக்கைப் பட்டியலில், கூறியிருப்பதாவது:

1) நாங்கள் வடகிழக்கு மாநிலங்களின், பல மிக வேறுபட்ட மொழிகளைக் கொண்டவர்கள். இன அடையாளத்திற்கும், அரசியலுக்கும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மொழி ஒரு சாதனமாகவும் உணர்ச்சியின் பாற்பட்டதாகவும் உள்ளது.

தமிழ் ஓவியா said...

2) மாவட்ட கிழக்கு மாநிலங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழிக் கொள்கை உடையதாக விளங்குகிறது. தற்பொழுது நடை முறையில் உள்ள தேசிய மொழித் திட்டமான பல்வேறுபட்ட மக்கள் அமைப்புகளுக்கும் பொருந்தாதன ஆகும்.

3) பொதுவான கண்ணோட்டத்துக்கு எதிராக இந்தியா மற்ற நவீன இந்திய மொழிகளோ, உயர் செகண்டரி கல்வி அளவிலோ (பிளஸ்2) சமமான முறையில் கற்பிக்கப்படவில்லை. மெட்ரிகுலேசன் அளவில்கூட இல்லை.

4) டில்லி பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் பெரும்பான்மை வடகிழக்கு மாநில மாணவர்கள் பல கல்வி போர்டுகளைக் குழு மங்களையோ, பல்கலைக் கழகங்களையோ சேர்ந்தவர்கள் அங்கெல்லாம் முதல் மொழியாக,, இரண்டாம் மொழியாக, ஏன் மூன்றாம் மொழியாக ஆங்கிலம் தான் பயிற்றுவிக்கப்படுகிறது.

ஆகவே,

கிரெடிட் மற்றும் அல்லாத பாடங்களுக்கு திட்டமிட்டுள்ள கட்டாய இந்தி/நவீன இந்திய மொழிகள் திட்டத்தை மாற்றி, பதிலுக்கான ஆங்கில பாடத்தையோ, அல்லது ஆங்கில வழிப் பாடங்களையோ இடம் பெறச் செய்ய வேண்டும்.

எங்களுக்கு நாங்கள் எந்த தனிச் சலுகையும் கேட்கவில்லை; ஆனால் எங்கள் பள்ளிக் கல்வியானது நாட்டின் மற்ற பகுதிகளைவிட எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறோம். திட்டமிடப்பட்டுள்ள கட்டாய இந்தி/நவீன இந்திய மொழிகள் எங்கள் விருப்பத்திற்கு மாறானது என்பதை நாங்கள் கடுமையாக உணரு கிறோம் அது, வடகிழக்குப் பகுதியில் உள்ள கல்வி நிலையை முற்றிலும் உணராதது மட்டுமல்ல; உயர் கல்வியை அனுபவிப்பதற்கும் அடைவதற்கும் உண்டான எங்கள் அடிப்படை உரிமையையே மறுப்பதாகும்.

விரைவில் அறிவு பூர்வமான முடிவு எடுக்கப் படா விட்டால், எங்கள் மாணவர்கள் மேல் கல்வியைத் தொடர முடியாமல் போய்விடும்.

இப்படிக்கு

கட்டாய இந்தி/நவீன தேசிய மொழிகள்) திணிப்பு மாணவர் எதிர்ப்புக் குழுவினர்

தமிழ் ஓவியா said...


தலைசிறந்த மனிதநேயம்


வாழ்க்கையில் மனிதநேயம் கொண் டவர்களை எப்போதாவது நாம் சந்திப்பதுண்டு. அந்நேரங்களில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்! நாமும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனை அப்போது எழும்!

சக மனிதர்களின் குறைகளையே பேசிக் கொண்டிராமல், நம்மால் முடிந்த உதவிகளையும், நற்பண்பு களையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மைப் பின்பற்றியும் சிலர் உருவாகக்கூடும்.

சிலர் நம் நெருங்கிய நட்பு வட் டாரத்தில் இருப்பர். அவர் சிறந்த மனிதநேயராக, பண்பாளராக இருப் பார். ஆனால் அதுகுறித்து நாம் அறியாமல் இருப்போம். ஏதோ ஒரு கட்டத்தில் தெரிய வரும்போது, ஆகா! எவ்வளவு சிறந்த மனிதநேயர் என மகிழ்ந்து போவோம். அப்படியான மனிதர் தான் தி.மா.சரவணன் (வயது 44)

இவர் திருச்சி, கே.கே.நகர் பகுதியில் வசிக்கிறார். தனது 20 ஆவது வயதில் நூல்களை வாசிப்பதிலும், அதனைச் சேகரிப்பதிலும் ஆர்வம் காட்டி யுள்ளார். தனது மாத வருவாயின் ஒரு பகுதியை நூல்களுக்காகவே செலவழித் துள்ளார். (இன்றைக்கு அவரிடம் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் உள்ளன)

இந்நிலையில் அவர் குடியிருந்த வீட்டிற்கு அருகில் கோமதி (வயது 17) என்கிற பெண், தனது பெற்றோருடன் வசித்துள்ளார். கோமதிக்குப் பிறக்கும் போதே பல்வேறு இருதய நோய்கள் இருந்திருக்கிறது. பல இடங்களில் சிகிச்சை அளித்தும், பயன் இல்லாத தால் அவரின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

இந்நிலையில்தான் தி.மா. சரவணன் வருகிறார். கோமதியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என முனை கிறார். திருச்சி, மதுரை,சென்னை எனப் பல்வேறு ஊர்களுக்கும் கோமதியை அழைத்துச் செல்கிறார்.ஆனால் அவரின் இருதய நோய்க்கு உரிய சிகிச்சை இல்லை எனவும், அப்படியே அறுவை சிகிச்சை செய்தாலும் அவரின் உடல்நிலை ஏற்காது எனவும் மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஆக கோமதியின் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என அவரின் பெற்றோர் முடிவுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் கோமதி என்கிற இளம்பெண்ணை, தி.மா.சரவணன் எனும் இளைஞர் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றது விமர்சனம் ஆக்கப்படுகிறது. எப்படி ஒரு பெண்ணை இவர் அழைத்துச் செல்லலாம் என்கிற கேள்விகள் வெளிவரத் தொடங்கின?

உயிருக்குப் போராடும் ஒரு பெண்ணை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தவறில்லை என்கிற சிந்தனையுடன் தி.மா. சரவணன் இருந்துள்ளார். எதையுமே கொச்சை யாகவே பார்க்கத் தெரிந்த சமூகம் இதை ஏற்க மறுத்துள்ளது. இந்நெருக்கடியில் தான் தி.மா.சரவணன் ஒரு முடிவுக்கு வருகிறார். கோமதியைத் தானே வாழ்க்கைத் துணைவராக ஏற்பது என்பதுதான் அந்த முடிவு.

இயல்பாகவே கோமதிக்கு இருதயநோய் இருக்கிறது. இந்நிலையில் இம் மனிதர்களால் கோமதிக்குப் புதிய நோய் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார். அவரின் இம்முடிவு உறவி னர்கள், நண்பர்கள் வட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவரின் குடும்பத்தில் இதை ஏற்க மறுத்து, அழுதுபுலம்பியுள்ளனர். இன்றோ, நாளையோ இறக்கப் போகும் ஒரு பெண்ணை ஏன் திருமணம் செய்கிறாய்? எனக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கோமதியை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார்.

இப்போது திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றோ, நாளையோ எனக் கருதப்பட்ட ஓர் உயிர் 20 ஆண்டுகள் கடந்து வந்திருக் கிறது. அந்த உயிர் 26.04.2008 நின்று விட்டது. கோமதியின் பெற்றோரே ஒரு கட்டத்தில் கைவிட்ட பிறகு, தி.மா.சரவணன் எனும் பெரியாரியத் தோழர் அப்பெண்ணின் மீது நேசம் காட்டி, வாழ்க்கைத் துணைவராக ஏற்று, எந்த மருத்துவமும் இன்றி, அவரின் அன்பினாலும், காதலாலும் 20 ஆண்டுகள் பிழைக்க வைத்திருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு செய்தி என்ன தெரியுமா? இவர்களுக்குக் குழந்தை இல்லை. காரணம் என்ன தெரியுமா? உடலுறவுக்கு ஏற்ற உடல்நிலை கோமதிக்கு அமைய வில்லை. இவையனைத்தையும் தெரிந்து தான் தி.மா.சரவணன் இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் மனைவியின் கடைசி நாளில் அவரைச் சந்தித்த போது, இயல் பாகவே எனக்குத் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமில்லை. இந்நிலை யில்தான் கோமதியைச் சந்தித்தேன். வாழ்நாளோடு போராடும் ஒரு பெண் ணுக்கு நாம் ஏன் நல்ல தோழனாக இருக்கக் கூடாது என்கிற சிந்தனை எனக்குள் வந்தது. இப்போது அந்தத் தோழமை என்னைப் பிரிந்து சென்று விட்டது எனக் கண்ணீர் வடித்தார்.

அக் கண்ணீரில் இச்சமூகம் மனித நேயத்தைப் பெருக்கிக் கொள்ளட்டும்!

- வி.சி. வில்வம்

தமிழ் ஓவியா said...


Pan Card என்பது...

Pan (பேன்) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number)
என்பது இந்திய வருமான வரி சட்டம் 1961இன் கீழ் வழங்கப்படும் தனித்தன்மை வாய்ந்த எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்டதாகும். இந்திய வரித்துறையின்கீழ் உள்ள Central Board for Direct Taxes (CBDT)-ன் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படுகிறது. இது தேசிய அடையாள எண்ணிற்கு சமமாக கருதப்படுகிறது. இதனை சிறந்த அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

வங்கிகளில் கணக்கு தொடங்குதல், வரி விதிக்கப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள சொத்துக்களை வாங்குதல், விற்பனை செய்தல் போன்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு Pan எண் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் அடையாளம் காண்பது மற்றும் வரி ஏய்ப்பை தடுத்தல் ஆகியவையே. . Pan கார்டின் பிரதான நோக்கமாகும். தனித்த, தேசிய அளவிலான நிரந்தர ஒன்றாகும். குடியிருக்கும் முகவரி மாற்றத் தின் போதும் பாதிக்கப்படாத ஒன்றாகும். அதாவது மாநில அளவில் இருப்பிடத்தை மாற்றுபவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. . Pan ன் வடிவம் AAAAA9999A என்ற முறையில் அமையும்.

முதல் 5-ம் எழுத்துக்களாகவும், அடுத்த 4ம் எண்களாகவும் அடுத்துள்ள கடைசி ஒன்று எழுத்திலும் காணப்படும். ஒவ்வொரு உறுப்பும் தனித் தன்மை வாய்ந்தது.

C - Company P - Person H - HUF(Hindu Undivided Family) A - Association of Persons (AOP) F - Firm T - AOP (Trust) B - Body of Individuals (BOI) L - Local Authority J - Artificial Juridicial Person G - Government

Pan இன் 5ஆவது உள்ள உறுப்பு முதல் உறுப்பாக அமையும். நான்காவது எழுத்து தனி நபரின் பெயர் அதாவது Personal Pan Card எனில் P அல்லது நிறுவனத்தின் பெயர் Company/HUF/Film/AOP/BOI/Local Authority/Artifical Jurdical Person//Govt. இவற்றை பொறுத்து ‘’C, H, F, A,T, B,L, J, G” எனவும் அமையும். தற்போது வெளிவரும் களின் புகைப்படத்தின் வலது புறம் Pan Card வெளியிடப் படும். நாள் DOI-Date of Issue குறிப்பிடப்படுகிறது. Know your PAN என்ற மத்திய அரசின் புதிய ஆன்லைன் சேவையை பயன்படுத்தி பழைய மற்றும் புதிய பேன் எண்ணைப்பற்றி அறிந்து கொள்ளலாம். இதற்காக https://incometaxindiaefilling.gov.in/portal/know pan.do என்ற இணையதளத்தை பார்க்கலாம். வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் ஒவ்வொருவரும் Pan கார்டு வைத்துக் கொள்வது அவசியம். ஆடிட்டர்கள் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

தமிழ் ஓவியா said...


ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!


ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார் தந்தை பெரியார், ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா?

இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!

தமிழர் தலைவரின் காலங் கருதிய அறிக்கை

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் ஒற்றுமை மிகவும் தேவை, ஜாதி தீயை மூட்டி இன ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம். இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கக் கழகம் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சில மாதங் களுக்குமுன் தருமபுரியிலும், சில நாட்களுக்கு முன் மரக்காணம் பகுதியிலும் ஜாதியை வைத்து நடைபெற்று இருக்கிற கலவரங்கள், தீவைப்புகள், கொலைகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன.

தந்தை பெரியாரின் கோட்பாடு

ஜாதிகளால் பிளவுபட்ட தமிழர்கள் மத்தியில் முக்கால் நூற்றாண்டு காலம் அயராது பாடுபட்டு, தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மனப்பான்மையை அகற்றி தமிழர் என்ற ஓரினக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.

பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் ஒழிந்திருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் என்பது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும். இந்த நிலையில் அண்மைக் காலத்தில் இந்த நிலை மாற்றப்படுவதற்குக் காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்கள்!

வன்னியர், தேவர், நாடார் போன்ற மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைப்பாட்டுக்கு உரியவர்கள் அல்லர் என்றாலும், கல்வி உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப்பட்டு வந்த உடலுழைப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் இவர்களின் முன்னேற்றம்தான் சமுதாயத்தின் முன்னேற்றமாக இருக்க முடியும்.

இந்நிலையில் இவர்கள் ஒன்றுபட்டு நின்றால் தான், போராடினால்தான் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு சமூகத்தில் சுயமரியாதைக்கான தகுதிகள் கிடைக்க முடியும்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூகப் புரட்சித் தலைவர்கள் இந்த அடிப்படையில்தான் கருத்துக்களைக் கூறி வந்துள்ளனர். பாடுபட்டும் வந்திருக்கிறார்கள்.

இதனை தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உணர்ந்திட, உணர்ந்து நடந்திடத் தவறக் கூடாது.

ஏணிப்படி ஜாதிமுறை

வருணாசிரம அமைப்பு முறையில் ஏணிப்படி ஜாதி முறை (Graded Inequality) என்பதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அவ்வப்போது நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

தந்தை பெரியார் தெளிவாகவே மிக திட்டவட்டமாகவே பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது! என்று சொன்னதை பார்ப்பனர் அல்லாதார், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களும், அவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்புள்ள தலைவர்களும் உணர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழு நிலவு இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாஸ் அவர்களும், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரின் உரைகளும், எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை, இவற்றைப் பேசியவர்கள் ஒலி நாடா மூலமாகவோ, வீடியோ மூலமாகவோ போட்டு மறுபடியும் கேட்டுப் பார்க்கட்டும்.

தமிழ் ஓவியா said...


சமூக நல்லிணக்கத்தை வளர்க்கக் கூடிய உரைகளா அல்லது தீண்டத்தகாத மக்களாக ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பகைமை, வெறுப்பு உணர்வை தூண்டக் கூடியவைகளா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

18 சதவிகித இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதா?

ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள்மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை என்று இடை இடையே பேசிக் கொண்டே, ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி, அதன்மீது எதிர் விமர்சனம் செய்தது எந்த அடிப்படையில்?

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களும் இணைந்து இருவரும் கைகோர்த்து பண்பாட்டுக் களத்தில் வலம் வந்தபோது அக மகிழ்ந்தோம்.

இன்று அந்த நிலை, சீர்குலைவு அடைந்தது நியாயம்தானா?

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெறுவது சமுதாயக் குற்றமா?

இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டாமா?

அங்கொன்றும், இங்கொன்றுமாக காதல் திருமணத்தில் சில பிழைகள் நடந்திருந்தால்கூட அதனைச் சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அதனை ஒட்டு மொத்தமாக ஒரு சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாகப் பெரிதுபடுத்தி, ஏதோ ஒரு தத்துவார்த்தம் போல திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யலாமா?

இளைஞர்களைப் பெரும் திரளாகக் கூட்டி தாழ்த்தப்பட்டவர்கள்மீது வெறுப்புத் தீயை மூட்டும் பணி பொறுப்பானதுதானா?

தலைவர்கள் என்றால் யார்?

தலைவர்கள் என்றால் நெருக்கடியான ஒரு சூழலிலும் கூட பொறுமை காட்டி மக்களை ஆற்றுப்படுத்தி வழிகாட்ட வேண்டும். அதற்கு மாறாக எரியும் நெருப்பில், பெட்ரோலை ஊற்றும் வகையில் நடந்து கொள்ளலாமா?

பிரச்சினைக்கே சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது அவர்கள் யாராக இருந்தாலும் நியாயம்தானா?

அவர்களின் வீடுகளும், கடைகளும் கொளுத் தப்படுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
அருள்கூர்ந்து சமுதாயத்துக்கு வழிகாட்டும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

தந்தை பெரியார் தமிழர்களை ஒன்று படுத்தினார் - சிலர் ஒன்றுபடுத்தப்பட்ட தமிழர் களை - பார்ப்பனீயத்தின் தொங்கு சதையாக மாறி மீண்டும் ஜாதி பிளவுக்குள் தள்ளுவது மன்னிக்கப் படக் கூடியதா? ஜாதிக் கலவரம் போன்ற நிகழ்வுகள் நடை பெறும்போது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது - அரசியல் ஆதாயம் என்ற தூண்டிலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படக் கூடாது.

இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; கடைசியாக ஒரு வேண்டுகோள்: தமிழ்நாட்டுத் தலைவர்கள், அமைப்புகள் கட்சிகளை மறந்து, ஜாதித் தீ எங்கு மூட்டப்பட்டாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்திட, நான் முந்தி, நீ முந்தி என்று முன்வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். யாரோ ஒரு பக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதாகக் யாரும் கருதக் கூடாது.

நல்லிணக்கத்தை உருவாக்கத் தயார்!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு! ஜாதி ஒழிந்த சமத்துவ - ஒப்புரவுச் சமுதாயம் மலர வேண்டும் என்பதற் காகவே பாடுபடக் கூடிய இயக்கம் திராவிடர் கழகம்.

தேவைப்பட்டால் இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் என்றுமே தயாராக இருக்கிறது.

முன்பு தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் மூண்டபோதுகூட இதே கருத்தைத்தான் முன் வைத்தோம் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
ஒழியட்டும் ஜாதித் தீ!

ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை உணர்வு!

இனமானம் வளரட்டும் - ஜாதி அபிமானம் மடியட்டும்! வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
28.4.2013

தமிழ் ஓவியா said...


சமாதி


புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்யசாயி மஹோத் சவம் எனும் தலைப்பில் தினமலர் (25.4.2013 பக்கம் 3) ஆறு பத்தி தலைப்புடன் செய்தியை வெளியிட்டுள்ளது.

சத்யசாயிபாபாவின் இரண்டாம் ஆண்டு மகா சமாதி தினத்தை முன்னிட்டு, சத்ய சாயி மகாசமாதி அமைந்துள்ள, பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாயி ஆராதனை மற்றும் மஹோத்சவம் சிறப்பாக நடை பெற்றது. மூன்று நாட்கள் நடை பெற்ற விழாவில் ஏராளமான பண்டிதர்களும், பக்தர்களும் கலந்து கொண்டு பாபாவின் அருளாசி பெற்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. பாபா செத்துப் போனாலும் அவரின் சமாதி ஆசீர்வாதம் செய்கிறதாம். அவர் ஆசீர்வாதத்துக்கு அவ்வளவு சக்தியிருந்தால் சாய்பாபா ஏன் ஒரு மாத காலம் நோய்த் துன்பத்தில் படாத பாடுபட்டார்? (அதன்மீது நமக்கு அனுதாபம் உண்டு!)

எவ்வளவுத் தீவிரமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன! மிகப் பெரிய மருத்துவ நிபுணர்கள் எல்லாம் மண் டையைக் கசக்கியும் (கோடிக் கணக்கில் செலவு செய்தும்) நவீன மருத்துவ வசதிகளைக் கையாண்டும் கடைசியில் பயனில்லையே!

விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைக்க வில்லை என்று கிராமங்களில் ஒரு பழமொழியைச் சொல்லு வார்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது. சாயிபாபா குளியல் அறை யில் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து சக்கர நாற்காலியில் நடமாடினார். புட்டபர்த்தியில் அவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓடிப் போய் அறையைத் தாழிட் டுக் கொண்டதால் உயிர் தப்பினார். இவை எல்லாம் நம் சொந்த சரக்குகள் அல்ல! அப் பொழுதே ஏடுகளில் சாங்கோ பாங்கமாக வெளி வந்தவை தான். பிரபல மேஜிக் நிபுணர் பி.சி. சர்க்கார் நேரிடையாகவே சாயிபாபாவைச் சந்தித்து சாயி பாபாவின் மாயா ஜாலத்தை அவருக்கு எதிரிலேயே செய்து காட்டி அசத்தவில்லையா? (பி.சி. சர்க்கார் பேட்டி (இம்பிரிஸ்ட் ஜூன் 1983).

இவற்றிற்கு மேலும் சாயி பாபாவிடம் மனிதனுக்கு மேலாக தெய்வ சக்தி ததும்பி வழிந்தது என்று சொல்ல வருவார்களே யானால் சொல்லுகிறவர்கள் அசல் ஏமாற்றுக்காரர்கள், அவற்றை நம்புபவர்கள் அசல் ஏமாளிகள் - மடையர்கள் என்ப தல்லாமல் வேறு என்னவாம்?

பாபா மறைந்த நிலையில் அங்கு சமாதி கட்டி அதற்கு அற்புதங்களை உண்டாக்கி மறுபடியும் பக்தி வியாபாரம் கிளம்பி விடும் என்று புட்ட பர்த்திக்கு நேரில் சென்று பார்வையிட்ட திராவிடர் கழகப் படை எழுதியது. (உண்மை 15.1.2011) அதுதான் இப்பொழுது நடக்கிறது.

சமாதி என்று சொன்ன வுடன் நேரில் பார்த்துச் சொன்ன தந்தை பெரியாரின் ருசிய நாடகக் கதைதான் நினைவிற்கு வருகிறது.

பாதிரியார் ஒருவர் தன் மகனிடத்தில் ஒரு கழுதையைக் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள் என்று வெளி யூருக்கு அனுப்பி வைத்தார்.

அந்தக் கழுதை நடக்க முடியாமல் இடையில் செத்து விட்டது. மகன் என்ன செய் தான்? அந்தக் கழுதையை அதே இடத்தில் புதைத்துவிட்டு மகான் அடக்கமாகி விட்டார் என்று கிளப்பி விட்டான். பக்தர் கள் பணத்தைக் குவித்தனர். பெரிய பணக்காரன் ஆகி விட்டான். இதைக் கேள்வியுற்ற தந்தை பாதிரியார் அங்கு வரு கிறார். மகன் நடந்ததைச் சொன்னான்.

மகன் அப்பாவைப் பார்த்துக் கேட்டான் நீங்கள் பணம் சம் பாதித்தது எப்படி? அப்பா பாதிரி யார் சொன்னார் புன்னகையோடு செத்துப் போன குட்டிக் கழுதையின் அம்மாதான் என் றாரே பார்க்கலாம் சமாதியின் லட்சணம் இது தான்!

- மயிலாடன் 28-4-2013

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதற்கு துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்லதல்ல! கலைஞர் பேட்டி


சென்னை, ஏப். 28 - தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதன் காரணமாக துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்ல அறிகுறியல்ல என்று தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (27.4.2013) செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தபோது தெரிவித்தார்.

கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- மரக்காணத்தில் நேற்றைய தினம் பெரிய கலவரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது? கலைஞர் :- அதைப்பற்றித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், ரவிக்குமாரும் இந்நேரம் வரை என்னைச் சந்தித்துப் பேசினார்கள். தமிழ் நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும், அதன் காரணமாக துப்பாக்கி முனை யிலே பதில் சொல்வதும் தமிழ்நாட்டிற்கு நல்ல அறிகுறியல்ல. உடனடியாக காவல் துறை தகுந்த கவனம் செலுத்தி, அமைதியை உருவாக்க முன்வர வேண்டும். கட்சித் தலைவர்களும் தங்கள் கடமை யை மறவாமல் பிரச்சினையை அக்கறையோடு அலசி, அவர்களும் அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

செய்தியாளர் :- மாமல்லபுரத்தில் நடை பெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் எல்லா கட்சிகளின் தலைவர்களையும் ஒருமையில் சாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கெல்லாம் திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்று கூறி யிருக்கிறார். ஜாதிகளை யெல்லாம் அடையாளப் படுத்திப் பேசியிருக்கிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- ராமதாஸ் பேசியதைப் பற்றி பத்திரிகையாளர்களாகிய உங்கள் உணர்வு என்ன? அதிலே உங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வுதான் எனக்கும்.

செய்தியாளர் :- நிலக்கரி சுரங்க ஊழலில் மத்திய சட்ட அமைச்சர் சி.பி.அய். விசாரணையிலே தலையிட்டார் என்று சி.பி.அய். இயக்குநரே உச்ச நீதிமன்றத்திலே அறிக்கை தாக்கல் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- நேர்மையாக எல்லாம் நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

செய்தியாளர் :- தமிழகச் சட்ட சபையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை யெல்லாம் வெளி யேற்றி வருகிறார்கள். அதைப் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் கேட்டுக் கொண்டும், அரசு அதற்கு செவி சாய்க்க வில்லையே?

கலைஞர் :- உங்கள் முடிவுக்கே விட்டு விடு கிறேன். -இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ் ஓவியா said...


ஜாதிக்கலவரத்தை அனுமதிக்க கூடாது: மார்க்சிஸ்ட் தீர்மானம்


சென்னை, ஏப். 28 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (27.4.2013) சென்னை யில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவுக்கு வாகனங்களில் வந்த பாமகவினர் புதுவையை அடுத்து வழிநெடுகிலும் வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சமூக நீதி பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் ஜாதி கலவரத்தை திட்டமிட்டு உருவாக்க முனை வதை அனுமதிக்கக் கூடாது.

உழைப்பாளி மக்களாக உள்ள பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் சக்திகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு


ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!

மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க இருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாடு - ஜாதி ஒழிப்புக்குத் திட்டம் தரும் மாநாடு - சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு என்று குறிப்பிட்டு பெரியார் பிஞ்சுகள் முதல் அனைவரும் ராஜபாளையத்திற்கு வருகை தருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 1944-இல் எழுதினார் தமது குடிஅரசு வார ஏட்டில்: நான் ஒருவரை வாலிபர் என்று சொல்வது அன்னாருடைய வயதைப் பொறுத்தது அல்ல; என்னைப் பொறுத்த வரை எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர, வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபனாகவே (இளை ஞனாகவே) இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது என்றார்.

உற்சாகம் பொங்க வாரீர்!

நமது இயக்கத்தின் புதிய ரத்த ஓட்டமான புத்துணர்ச்சி பொங்கும் எமது ஈடு இணையற்ற லட்சியப் படை வீரர்களான இளைஞர்களே, எம் அரும் தோழர்களே, (தோழியர்களும் இதில் அடக்கம்).

உங்களை உற்சாகம் பொங்க ஓடிவர அழைக்கிறோம் - ராஜபாளையம் நோக்கி! ஆம் -தென் திசையில் நடைபெறும் நமது மாநில இளைஞரணி மாநாடு இதுவே முதல் தடவை! கழகத்தின் கறுஞ்சிறுத்தைப் பட்டாளத்தைக் கண்டு தென் திசை திகைக்க வேண்டும்! அழைப்பது கேளிக்கைக்காக அல்ல; சுற்றுலா இன்பம் சுவைக்க அல்ல, சுயமரியாதைச் சூரணம் உண்டு; சூடேற்றி சோர்விலா லட்சியப் போரில் ஈடுபட்டு பெரியார் பணி முடிக்க, அணி திரண்டு வாருங்கள்! இச்சமுதாயத்தின் பிணி - ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை முதலியவை ஒழிக்க அறுவை சிகிச்சை செய்ய, அய்யா வழியில் அரும்பணி ஆற்றிட ஆற்றல் மிகு இளைஞர்களே, எம் அருந்தோழர்களே, புறப்படத் தயாராகுங்கள் - ராஜபாளையம் நோக்கி!

சங்கடமில்லை - சபலமில்லை!

நமது அறிவு ஆசான் வாலிபத்திற்குக் கூறிய வரையறையினைத்தான் யானும், பெரியார் தந்த புத்தியையே கொண்டு சொந்த புத்தியை ஒதுக்கி வைத்து விட்டு, நாளும் பணியாற்றிடும் நிலைக்கு என்னுள் நியாயம் கற்பித்துக் கொள்ளுகிறேன்.

சலிப்பில்லை; சங்கடமில்லை. சபலமில்லை; சலனமில்லை. பயணம் தொடர்கிறது; காரணம் நாம் நடைபோடுவது - அதிலும் வீர நடைபோடுவது பெரியார் பாதையில்,

இணையற்ற ஈரோட்டுப் பாதையில் இந்த லட்சியப் பயணத்தில் நம்மை நோக்கி இருட்டடிப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்கு முறைகள், தரமற்ற நாலாந்தர நரகல் நடைப் பேச்சுகள், ஏச்சுகள் வீசப்படுவதை அலட்சியம் செய்து, குறிக்கோள்தான் நமது குறியேதவிர, குதர்க்கப் புத்திக் குறும்பர்களுக்கு, பதிலை சொல்லி நமது காலத்தை, கருத்தை, உழைப்பை ஒருபோதும் வீணாக்க மாட்டோம்!

குக்கல்கள் குரைக்கட்டும்!

குரைக்கும் குக்கல்கள் எத்தனையோ பெரியார் காலந்தொட்டு இன்றுவரை; அவை இன்று குப்பைத் மேடுகளுக்குள் மக்கிச் சீரழிந்து கொண்டுள்ளன!

அந்தக் குப்பைகளை நமது கொள்கைப் பயிர் களுக்கு உரமாக்கி; நல்ல செழிப்பான கொள்கைக் கதிர் மணிகளை அறுவடை செய்து காட்டியவர் நம் தலைவர்.
அவர் வழியே நம் வழி!

எனவே அவர் இட்ட பணி முடிக்க, நம் இனத்தின் பழி துடைக்க, இழிவை நீக்க, அடுத்து போராட்ட களம் ஆயத்தப் பாடிவீடுதான் - பாசறைக்கான போர்ச்சங்கு முழக்கிடத்தான் ராஜபாளையத்தில் உங்களைச் சந்திக்க விழைகிறோம் தோழர்களே!

95 வயது நிறைந்த இளைஞர்தான் நமது தலைவர்

குடும்பம் குடும்பமாகப் புறப்படுங்கள், எல்லா வயதினருமான நம் இயக்கத்தின் இளைஞர்களே!

காரணம் - 95 வயது நிறைந்த இளைஞர் தான் தலைவர்தான் இறுதி மூச்சடங்கும் வரை நம்மை வழி நடத்திட்ட தலைவர்!

வயது இடைவெளி - இவ்வியக்கம் அறியாத சமவெளி என்பதை மறவாதீர்!

இருபாலரும் - ஏன் பெரியார் பிஞ்சுகளும்கூட - குடும்பம் குடும்பமாகத் திரள வேண்டும்!

அதைப் பார்த்து அந்த ஊர் சிறுக்க (குறுக) வேண்டும்!

உலகம் வியக்க வேண்டும்!!

இயக்கத்தவர்களை சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் வழியனுப்பு மாநாடு! சங்கமிப்போம் வாரீர்!

ராஜபாளையம் - நமக்கு, ராஜபாட்டையைக் காட்டி, பெரியார் பணி முடிக்க, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் எழுந்து நடமாடிடும் வண்ணம் செய்ய, சமரசமற்ற கொள்கைச் சமரில் ஈடுபட நாம் அனைவரும் சங்கமிப்போம்! வாரீர்! வாரீர்!!

கருங்கடல் பொங்கட்டும்! தியாக தீபங்களின் சுடரொளியாக வெளிச்சம், நமது வெற்றிப் பாதைக்கு வழிகாட்டட்டும்!

வாருங்கள், தோழர்களே வாருங்கள்!

அன்போடு அழைக்கும் உங்களின் ஓய்வு விரும்பா

தொண்டன் தோழன்



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை, 29.4.2013

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் அவசரம் காட்ட வேண்டும்


தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மான்யக் கோரிக்கைமீது கடந்த வெள்ளிக்கிழமையன்று (26.4.2013) இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்லிஸ்ட்) உறுப்பினர் ஏ. லாசர், அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தொடர்பாக மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு முறையை அமலுக்குக் கொண்டு வர வேண்டும். தகுதித் தேர்வில் உயர் ஜாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை மத்திய அரசு தீர்மானித்துள்ளது; ஆந்திரத்தில்கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். முற்பட்ட மக்களுக்கு (உயர் ஜாதியினருக்கு) 60 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண், தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 40 சதவீத மதிப்பெண் என்று தனித் தனியே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

ஆனால் தமிழ்நாட்டில் ஒரே தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன உரிமையான இடஒதுக்கீடு முற்றிலு மாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சி.பி.எம் உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினை மிகவும் முக்கிய மானது.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கையினை விடுதலையில் (2.4.2013) வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அறிக்கைக்கு 24 நாட்களுக்குப் பிறகு சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. மாநில அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா?

சட்டமன்ற, உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைக்குக் கல்வி அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இன்னொரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு, ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனைப் பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனைப் பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணிய மர்த்தப்படுகின்றனர் என்று பதில் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர் கூறிய பதிலைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட பிரச்சினை என்ன என்பதை அறியாமல் பதில் சொல்லியிருக்கிறார் என்றே கருத வேண்டி யுள்ளது.

குற்றச்சாற்று - தகுதித் தேர்வுக்குத் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் என்ற பிரிவுகளுக்குத் தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படாதது ஏன்?
சகட்டுமேனியாக உயர் ஜாதியினருக்கு என்ன மதிப்பெண்ணோ, அதே மதிப்பெண் 60 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நிர்ணயித்திருப்பது இடஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமானதாயிற்றே என்பதுதான் குற்றச்சாற்று.

இதற்குக் கல்வி அமைச்சரின் பதில் என்ன என்பதுதான் பிரச்சினையே - அதற்கு நேரிடையான பதில் சொல்லாமல், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார்.

தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இன்னும் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருப்பார்களே, அந்த வாய்ப்பு இப்பொழுது பறிக்கப் பட்டுள்ளது என்பதுதான் முக்கிய குற்றச்சாற்று.

இன்னொரு பிரச்சினையையும் சி.பி.எம். சட்டமன்றக் குழுத் தலைவர் தோழர் சவுந்தரராசன் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.

தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும், அதிக மதிப்பெண் ஒருவர் பெற்றால் அவரைப் பொதுப் பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்; அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை என்று கூறியிருக்கும் குற்றச்சாற்று மிகவும் கடுமை யானது. இதனை அலட்சியப்படுத்தவும் கூடாது. சி.பி.எம். உறுப்பினர் கூறிய குற்றச்சாற்றின் பொருள் தெளிவானது. இடஒதுக்கீடு இத்தனை சதவிகிதம் என்று சட்டப்படி பெற்றிராத உயர் ஜாதியினருக்குத் திறந்த போட்டிக்குரிய 31 சதவீதம் ஒட்டு மொத்தமாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவுப் பெரிய கொடுமை! சமூக அநீதி! முதல் அமைச்சர் விரைந்து இதற்கு நியாயமான தீர்வு காணாவிட்டால் கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

முதற்கட்டமாக மக்கள் மத்தியில் பெரும் அளவில் எடுத்துச் செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 29-4-2013

தமிழ் ஓவியா said...


இனக்குறையைப் போக்க, புரட்சிக்கவிஞர் அழைக்கிறார்!


- மின்சாரம் -

உனக்குமா ஓர் இயக்கம்? அதைக்
கலைக்க என்ன தயக்கம்?
இனக் குறையை நீக்கப் பெரியார்
இயக்கம் நாட்டில் இருக்கையிலே
- உனக்குமா ஓர் இயக்கம்?
என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த பொன்னாள் இந்நாள் (1891).

இனக்குறையை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் புறப்பட்ட தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாம் திராவிடர் கழகம் நாட்டில் இருக்கையில், ஏன் உனக்கு இன்னொரு கட்சி என்ற வினாவை எழுப்பியுள்ளார் நம் புரட்சிக் கவிஞர்.

உண்மைதானே, இந்த இனத்துக் குள்ள குறை என்ன? இன்றும் சாஸ் திரப்படியும், சட்டப்படியும் நாம் சூத்திரர் கள்தானே - பார்ப்பனர்களின் வைப் பாட்டி மக்கள் தானே!

இதனைச் சுட்டிக்காட்டி எம்மின மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தித் தன்மானத் தீயை மூட்டும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எது?

இந்த இழிவை நீக்க இராமாயணத் தில் தீப்பரவட்டும் என்று எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனை எரித்த தீரர்கள் கொண்ட கோட்டம் திராவிடர் கழகம்தானே!
ஜாதியைப் பாதுகாக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவை பட்டப் பகலில் பகிரங்கமாக எரித்து, அதன் சாம்பலைப் பிரதமருக்கு அனுப்பி வைத்த ஆற்றல் - சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு காலத் தண்டனை என்று இதற்காகவே சட்டம் கொண்டு வந்தபோதும்கூட அச்சம் இல்லை - அச்சம் இல்லை என்று கூறி பத்தாயிரக் கணக்கில் சட்டத்தை எரித்து மூன் றாண்டுகள் வரை கடும் தண்டனை யைச் சிரித்த முகத்தோடு ஏற்றுச் சிறைக் கோட்டம் ஏகிய இலட்சிய வீரர்களை கொண்ட இவ்வியக்கம் அல்லாமல் வேறு எங்கு இருக்கிறது என்று கேட்கிறார் புரட்சிக்கவிஞர். எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் நம் இனத்திற்கு? ஜாதித் தீயை மூட்டும் பிற்போக்குச் சக்திகள் தலை தூக்கப் பார்க்கின்றன! சவால்களைச் சந்திக்க வேண்டியது நாம்தானே!

30 கல் தொலைவில் உள்ள நமது ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கிறனரே!

தமிழின மீனவர்களை சிங்கள கடற்படை நாள்தோறும் வேட்டையாடிக் கொண்டு இருக்கிறதே!

அந்த இயக்கத்தின் இளைஞர் சேனை ராஜபாளையத்தில் ஓர் எழுச்சி மாநாட்டை நடத்துகிறது வரும் மே 4ஆம் நாள்.

சமூகநீதித் துறையில் நாம் செல்ல வேண்டிய தூரம் - இன்னும் இருக்கிறது.

நூற்றண்டுக்கு மேலாக நமது கனவிலே இருந்த சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் - கைக்கு எட்டி வந்த நேரத்திலே அதனைத் தட்டிப் பறிக்கும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

காவிரி நீர்ப்பிரச்சினையிலும் இன்னும் நாம் கையேந்தும் நிலைதான்!

முல்லைப் பெரியாறு பிரச்சினை யிலும் மூக்கு அறுந்துதான் தொங்கு கிறது!

நமது ஒகேனக்கல் பகுதிக்கே வந்து கருநாடகத்துக்காரன் கலாட்டா செய்கிறான்.

ஆந்திரக்காரனோ பாலாற்றின் குறுக்கே அணையைக் கட்டி, உன்னால் ஆனதைப் பார் என்கிறான்.

தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழுக்கு முழு உரிமை கிடையாது. தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழன் அர்ச்சகனாக முடியாது.

இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவு தான் என்ன? வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டை மீட்டெடுப்பது யார் பொறுப்பு?

பண்பாட்டுத் தளத்தில் படை நடத்துவோர் யார்?

புரட்சிக்கவிஞர் இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் குயிலில் (3.3.1959) குரல் கொடுத்தாரே - அடையாளம் காட்டினாரே அந்த இயக்கமான திராவிடர் கழகத்தின். தலையில்தானே தமிழர் பிரச்சினைகள் விடிந்திருக்கின்றன.

நம்முன் னிற்கும் இந்தக் கடமை களை ஒரு கணம் நினைத்துப் பார்த் தால், ராஜபாளையத்தில் நமது கழகம் நடத்தும் இளைஞரணி மாநில மாநாட் டின் அருமை என்னவென்று புரியும்.

வெறும் பொழுது போக்கு மாநாடல்ல - கேளிக்கைகளுக்கு இடமில்லை.

இலட்சிய முழக்கம் இருக்கும், ஈடேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வெடிக்கும்.

இளைஞர்களின் அணிவகுப்பு மிக முக்கியமானது. சமூக காப்பணியின் வேழ நடை வீர உணர்வைத் தூண்டக் கூடியது. இயக்க வரலாற்றிலும் ஒரு பொன் னேடு - புகழேடு

- புறப்படு தோழா புறப்படு!
போர்ப்பாட்டுப் பாடுவோம்
புறப்படு தோழா புறப்படு!
தனிமனிதனாக அல்ல
குடும்பம் குடும்பமாகப் புறப்படுக! புறப்படுக!!

பெரியார் இயக்கத்தின் மாட்சியை அது கையில் எடுத்துக் கொண்டிருக் கும் மீட்சியின் பட்டியலைக் காணப் போகிறோம்!

வா தோழா வா! தொல்லுலகுக் குள்ளே அல்லல் அறுப்பதென் தோள் தோள் தோள்.

வல்லவன் உன்னை வெல்ல நினைப் பவன் தூள் தூள் தூள்! என்று புரட்சிக் கவிஞர் அழைக்கிறார்.

ராஜபாளையம் - புது ராஜபாட் டையைக் கொடுக்கப் போகிறது புறப்படு! புறப்படு!

தமிழ் ஓவியா said...


மே தின வாழ்த்துக்கள்


நாளை மே முதல் நாள் - மேதினியெங்கும் கொண்டாடப்படும் உழைப்பாளர்களின் உரிமையை மீட்ட உன்னதத் திருநாள்!

உழைப்பவரே உயர்வானவர் என்பதனை மறுக்கும் ஜாதி உள்ள சமுதாயத்தில், மீண்டும் ஒரு புதிய புரட்சி பூத்து, சமத்துவ சமூகத்தை உருவாக்கிட உறுதியேற்க வேண்டும் - நம் நாட்டில் உழைப்பே உயர்வுதரும் என்று சொன்னால் மட்டும் போதாது; உழைப்பவரையும் உயர்த்திடும் உரிமை பெற்ற புதியதோர் சமுதாயம் பூக்கட்டும்!

தந்தை பெரியார் விரும்பிய தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் உரிமையும், லாபத்தில் பங்கும் தந்து - முதலாளி - தொழிலாளி பேதம் மறைந்து பங்காளிகள் அனைவருமே என்ற சமத்துவம் மலரச் சங்கநாதம் செய்வோம்!

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
30.4.2013

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது

சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை

திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

சென்னை, ஏப்.30- ஜாதிவெறியைத் தூண்டி கலகம் விளைவிப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தீர்மான எண் (1)
இரங்கல் தீர்மானம்

30.4.2013 செவ்வாயன்று சென்னை பெரியார் திடலில் - துரை சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தினத்தந்தி அதிபரும், தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி சாதனை படைத்தவருமான டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் (76) அவர் களின் மறைவிற்கும் (19.4.2013).

தி.மு.க. தொழிற்சங்கத் தலை வரும், மக்களவை முன்னாள் உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான செ. குப்புசாமி (வயது 87) மறைவு (19.4.2013) அவர் களின் மறைவிற்கும் இச்செயற் குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரரும், பெரியார் உரைகளை ஒலிநாடா மூலம் பதிவு செய்து தமிழர்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த வருமான திருச்சி து.மா. பெரியசாமி (வயது 80) அவர் களின் மறைவிற்கும் (12.03.2013), திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர், சீரிய இயக்க வீரர், குடவாசல் வீ. கல்யாணி அவர் களின் மறைவிற்கும் (15.3.2013) இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மான எண் (2)

ஜாதி உணர்வைத் தூண்டுவதற்குக் கண்டனம்!

(அ) தாழ்த்தப்பட்ட - மக் களுக்கு எதிராக ஜாதி உணர் வைத் தூண்டும் சக்திகளுக்கு இச்செயற்குழு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. ஜாதி வெறியை ஊட்டித் தவறான திசைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போரைப் புறந் தள்ளுமாறும் இச்செயற்குழு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத் தப்பட்டோர் ஒற்றுமை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமானது என்ற உணர் வைத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஊட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது. ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண் டுமென்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

(ஆ) ஜாதி ஒழிப்புத் திசையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட் டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதால், இதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வெற்றிப் பெறச் செய் வதில் நமது பணியை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மே 4-இல் நடைபெற இருக்கும் இளை ஞரணி மாநில மாநாட்டில் அதற்கான போராட்டத் திட்டத்தை அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மான எண் (3)
இராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாடு

இராஜபாளையத்தில் வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிப் பெறச் செய்ய முனைப்புக் காட்டுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பெரியார் பிஞ்சு முதல் முதியோர் வரை குடும்பம் குடும்பமாக வருமாறு இச்செயற்குழு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது.30-4-2013

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில்....

இன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் கழகத் தலைவர் தெரிவித்த பொறுக்கு மணிகள்:

தலைமைக் கழகம் தொடர்ந்து கிளைக் கழகம் வரை ஒரு வலைப்பின்னல் (Network).

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு வரும்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர் களுக்குப் பொறுப்பான மாவட்டங்கள் பற்றிய இயக்க செயல்பாடுகள் உள்ளிட்ட அறிக்கை தாக்கல்.

மாவட்டக் கழகத் தலைவர்கள் ஒன்றிய வாரியாக சுற்றுப் பயணம் மாதம் ஒரு முறை.

பிரச்சார முறையில் புதிய அணுகுமுறைகள், இணைய தளம், கணினி இவற்றையும் பயன்படுத்துதல் அவசியம். கழகச் செயல்பாடுகள், மறுப்புகள், பொதுச் பிரச்சினகளில் நமது செயல்பாடுகள் அவ்வப்போது இணையதளத்தில் இடம் பெற வேண்டும்.

கழகத்தின் செயல்பாடுகள் அதிகம். ஆனால் அவை பற்றிய விளம்பரம் குறைவு; சரி செய்யப்பட வேண்டும்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை புத்தக சங்கமம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு; மாநகரங்களில் இது விரிவுபடுத்தப்பட வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய வாரியாக நடைபெற வேண்டும். தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சரிவர நிறைவேற்றப் பட உறுதி செய்ய வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில் பெண்களைப் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் புரட்சி மொழிகள் - சிந்தனைகளை விரிவாகப் பரப்புவதற்கு உரிய நேரமாக இக்கால கட்டத்தைக் கருத வேண்டும்.

ராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான போராட்டத் திட்டம் அறிவிப்பு வெளி வரும்.

ராஜபாளையம் மாநாட்டை ஏதோ இளைஞரணி மாநாடாக மட்டும் கருதாமல் அனைத்து அணியினரும் குடும்பம் குடும்ப மாகத் திரள வேண்டும்.

பயிற்சிப் பட்டறை ஆண்டு முழுவதும் சனி, ஞாயிறுகளில் நடத்தப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


அவசியம்



கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டமும் அ.இ.அ.தி.மு.க.வும்



சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டுக்கு காலா காலத்திற்கும் பதில் சொல்லித் தீர வேண்டும்.

தமிழ் நாட்டுக்கு அதிகாரப் பூர்வமாக செய்யப்பட்ட துரோகம் என்பதில் கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.

150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கனவு காணப்பட்ட திட்டம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுகவைச் சேர்ந்த திரு. டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து, அந்தக் கனவுத் திட்டத்தை நனவு திட்டமாக மாற்றப்படும் ஒரு கால கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. இத்தகைய முட்டுக் கட்டையைப் போட்டு வருகிறது.

இவ்வளவுக்கும் இக்கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; திராவிட இருக்கிறது; அந்த அண்ணாவின் கொள்கை நிலைப்பாட் டுக்கும் திராவிட இயக்கத்தின் நோக்கத்துக்கும் முற்றிலும் விரோதமாக செயல்படுவது மன்னிக் கவே முடியாத பெருங் குற்றமாகும்.

இவ்வளவுக்கும் 2001 சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களில் அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப் பட்ட திட்டமாகும்.

2001 மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவையின்போது அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (பக்கம் 84 மற்றும் 85)யில் என்ன கூறப்பட்டுள்ளது?

இந்திய தீபகற்பத்தை சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டு மானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம் இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும் இலங்கை யின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்..

இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது; இருப்பினும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு. இத்திட்டத்திற்கான உரிய கவனத் தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்க வில்லை என்று இவ்வளவுத் திட்டவட்டமாக அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு அதற்கு முற்றிலும் முரணாக அந்தத் திட்டத்தையே கை விட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உச்சநீதி மன்றத்திற்குச் செல்லுவது ஏன்?

இப்படி முரண்பட்டதற்கு நியாயமான காரணத்தை இதுவரை செல்வி ஜெயலலிதா கூறியதுண்டா?

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமானால் அதன் அரசியல் இலாபம் தி.மு.க.வுக்குப் போய் விடும்.

தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து செயல்படுத்தப் பட்டதால் தி.மு.க.வுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு விடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும்தான் இதற்குள் புதைந்து கிடக்கின்றன.

நாட்டு நலனைவிட அரசியல் நலன்தான் முக்கியம் என்று கருதுகிற மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கிறது.

முதலில் ராமன் பாலம் - அதனை இடிக்கக் கூடாது என்று சொன்னவர் இப்பொழுது இந்தத் திட்டமே கூடாது என்று சொல்லுகிறார் என்றால் இதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

அடுத்த தேர்தல்களில் தங்கள் வெறுப்பை - எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் ஓவியா said...


ஜெயங்கொண்டத்தில் ஜெயபேரிகை!


ஜெயங்கொண்டத்தில் தோழர்களே, ஜெயபேரிகை கொட்டப் போகிறோம்.

மே 2 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் முழக்கமிடுகிறார்.

வட்டார மாநாடாக அது நடைபெறப் போகிறது.

மண்டல செயலாளர் தோழர் சி.காமராஜ், சுற்று வட்டார மாவட்டக் கழகத் தோழர்களின் அரும் ஒத்துழைப்பால் மாநாட்டின் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகின்றன.

எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - அவை செந்துறைவரை நீண்டு விட்டது. இந்தப் பக்கம் கடலூர் மாவட்டம் வரை நீள்கிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மாநாட்டு நடவடிக்கைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் அலை அலையான மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள் - புரட்சிப் பெண்கள் மாநாடு - அடுத்து ராஜபாளையத்தில் மாநில இளைஞரணி மாநாடு! (மே 4)

இயக்க வரலாற்றில் வேறு எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாநாடுகளின் அணிவகுப்புகள்.
ஒவ்வொரு மாநாட்டிலும் முத்து முத்தான தீர்மானங்கள் - உரை முழக்கங்கள் - கருத்தரங்குகள் - பட்டிமன்றங்கள் என்று கருத்துப் பிரச்சாரம் கனமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது.

ஜெயங்கொண்டம் மாநாட்டில் தமிழர் தலைவருடன் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன் முதலியோர் கொட்டு முழக்கமிடுகின்றனர்.

நமது இயக்க வரலாற்றில் இந்தப் பகுதிகளுக்கென்று தனித்த சிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் எல்லாம் சாதனைகள் பல புரிந்து, களங்கள் பல கண்டு வெஞ்சிறைகள் பல ஏற்று என்றென்றும் பேசப் படும் பெரியார் பெருந்தொண்டர்களாக - சுயமரியாதைச் சுடரொளிகளாக மறைந்தும் மறையாமல் நமது நெஞ்சங் களில் பசுமைத் தோட்டமாக நிறைந்து இருக்கிறார்கள்.

அந்தத் தலைமுறையோடு இயக்கம் முடிந்துவிட வில்லை. இப்பொழுதெல்லாம் அந்த வட்டாரங்களில் இளைஞர்களின் அணிவரிசை! இயக்கப் பொறுப்பாளர்கள் எல்லாம் இளைஞர்கள்.

இனமுரசு இயக்கம் இதுதான்!
சமூகநீதி இயக்கம் இதுதான்!
பகுத்தறிவு இயக்கம் இதுதான்!
பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம் இதுதான்!
ஜாதி ஒழிப்பு இயக்கம் இதுதான்!
சகோதரத்துவம் பேணும்,
சமத்துவ இயக்கம் இதுதான்!
நோய் வந்த பின் வைத்தியம் பார்க்கும் இயக்கமல்ல;
வருமுன் காக்கும் தொலைநோக்கு இயக்கம் இதுதான்!
அறிவை மட்டுமல்ல,
ஒழுக்கத்தை உயிரினும் மேலாக
ஓம்பும் கொள்கை
இதனிடம்தான் உள்ளது.

இது ஓர் உலக இயக்கம்;

மதமற்ற அமைதி உலகினைப் படைத்திடும் இயக்கம் இதுதான்!

இவற்றை உணர்வதால், இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வருகிறார்கள் - நேரில் காண வாருங்கள் தோழர்களே!

மதவாதம் தலைதூக்காமல் மானுடத்தை வழிநடத்துவோம்!

ஜாதீயம் தலை தூக்காமல் சமத்துவம் படைப்போம்!

ஜெயங்கொண்டத்தில் கொடுக்கும் குரல் ஜெகம் எங்கும் கேட்கட்டும்!

ஜெயபேரிகை கொட்டுவோம் வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!

மே 2 ஆம் தேதி மாலை உங்களுக்கான இடம் ஜெயங்கொண்டம்; ஜெயங்கொண்டம்;

கேட்கட்டும் ஜெயபேரிகை!

- மின்சாரம்

தமிழ் ஓவியா said...

பெரியார் என்னை ஈர்த்தார் - நம்பூதிரிபாத்

எங்களுடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட நான், என்னுடைய இளம்வயதில் ஒரு பக்தி உணர்ச்சியுடைய இந்துவாக இருந்தேன். நான் பங்கெடுத்திருந்த சமூக சீர்திருத்த இயக்கம்கூட இந்துமதவாதத்தின் வடிவமைப்பிற்குள்ளேயே சமூகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று கருதி வந்ததாகும். சுவாமி விவேகானந்தரைக் குறித்தும் நான் ஏராளமாகப் படித்தேன். நான் பள்ளிக்குச் செல்லும் முன்பு எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர், விவேகானந்தரின் தீவிரமான அனுதாபியாவார். எனவே, இந்துமகாசபை மீது எனக்கு சிறிது பற்றுதல் இருந்தது. அதனுடைய தலைவர்களான பண்டிட் மாளவியா, டாக்டர் மூஞ்சே ஆகியோர் கேரளத்திற்கு ஒரு முறை வந்தனர். எனினும் படிப்படியாக நான், தமிழ்நாட்டிலிருந்த ராமசாமி நாயக்கரின் போதனைகளினாலும், கேரளாவிலிருந்த பகுத்தறிவுவாத கோஷ்டியினர் செய்த பிரச்சாரத்தினாலும் ஈர்க்கப்பட்டேன்.

(இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதிய ஓர் இந்தியக் கம்யூனிஸ்டிக் நினைவலைகளில் என்னும் நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...

கேள்வியும் - பதிலும்

- சித்திரபுத்திரன்

கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.

குடி அரசு - வினா விடை - 29.10.1933