Search This Blog

31.1.13

காந்தியார் படுகொலையும் பெரியார் எச்சரிக்கையும்!


காந்தியார் படுகொலை செய்யப்பட்டது குறித்து, தந்தை பெரியார் தம் ஆறாத் துயரத்தை வெளிப் படுத்தினார். இவ்வளவுக்கும் காந்தியாருடன் பல பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்தினைக் கொண்டவர் தந்தை பெரியார் என்றாலும், அவர் காந்தியார் வன்முறையால் படுகொலை செய்யப் பட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் நாடெங்கும் இரங்கற் கூட்டங்களை (29.2.1948) நடத்தச் சொன்னார்.  அதில் எத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அறிக்கை வாயிலாக வெளியிட்டார்.

திராவிடர் கழகத்தார் சார்பாகக் கூட்டப் பட்டதும் திராவிடர் கழகத்தார் பெரிதும் கூடி உள்ளதுமான இக்கூட்டமானது, உலக மக்களால் போற்றப்பட்ட வரும், இந்திய தேசிய காங்கிரஸ் நடப்புக்கு மூல காரணமாயிருந்து, அதை நடத்தி வந்த முக்கிய தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை முதலிய உயர் குணங்களை சதா சர்வ காலம் போதித்து வந்த உத்தமரும் ஆன ஒப்பற்ற பெரியார் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரண மடைந்தது குறித்து தனது ஆழ்ந்த துக்கத்தையும், அனுதாபத்தையும் தெரி வித்துக் கொள்கிறது.

இந்த மரணத்துக்குக் காரணமாயிருந்த கொலை பாதகனையும், அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும், மக்களையும் வெறுப்புக் காட்டி கண்டிக்கிறது.

இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவைப் படிப்பினையாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் யாவரும் ஜாதி, மத, இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி யில்லாமல் ஒன்றுபட்டு வாழ்வாராக!

அன்பும், அறிவும், சத்தியமும் என்றும், எங்கும் நிகழ்வதாகுக!

இந்தத் தீர்மானத்தை மத்திய நிலையத்துக் கும், காந்தியார் மகன் தோழர் தேவதாஸ் காந்திக்கும், ஜவகர்லால் நேருவுக்கும் அனுப்ப வேண்டியது. செய்தியை எல்லாப் பத்திரிகை களுக்கும் அனுப்பவும். - ஈ.வெ.ராமசாமி 
                                  --------------------------------(விடுதலை 19.2.1948)

மேற்கண்ட தந்தை பெரியார் அவர்களின் அறிக்கையில் உள்ளடக்கமாகக் கொண்ட கருத்துக்கள் கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.

காந்தியாரின் இயற்கைக்கு மாறான மரணம் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டு, இந்த மரணத்துக்குக் காரணமாக  இருந்தவர்களையும், ஸ்தாபனங்களையும் வெறுப்புக் காட்டிக் கண்டிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

ஜாதி, மத வேறுபாடு காரணமாய் ஏற்படும் உணர்ச்சிகளையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

ஆம், பார்ப்பன மதமான இந்து மதம், அதனைச் சார்ந்த பார்ப்பனர் ஒருவரால் திட்டமிட்டு காந்தியார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த இந்து உணர்வு, பார்ப்பன உணர்வு காந்தியாரின் படுகொலையோடு மரணம் அடைந்து விட்டதா என்றால் அதுதான் இல்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

அந்த இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எசும், இந்து முன்னணியும், பஜ்ரங்தள்ளும், விசுவ ஹிந்து பரிஷத்தும் மற்றும் பல்வேறு பெயர்களில் இன்றுவரை நடமாடிக் கொண்டுதானிருக்கின்றன.

நாதுராம் கோட்சேக்களும், இந்த அமைப்பு களைச் சார்ந்தோரும் அதே நஞ்சைக் கக்கிக் கொண்டே இருக்கின்றனர்.

மை நாதுராம் கோட்சே போல்தே எனும் பெயரில் பிரவின் டால்மி என்பவரால் எழுதப்பட்ட நாடகம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்தபோது மும்பை, டில்லி போன்ற நகரங்களில் அரங்கேற்றப்பட்டது.
நான்தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்! என்பது பொருள். அதில் கோட்சே கடவுளாகவும், காந்தியார் அரக்கனாகவும் சித்திரிக்கப்பட்டு இருந்தார்கள்.
காந்தியார் படுகொலை செய்யப்பட்டு 60 ஆண்டு களுக்குப் பிறகும் இந்துத்துவா வெறியர் களான பார்ப்பனர்களின் மனப்பான்மையில்  மாற்ற மில்லை என்பது அடிக்கோடிட்டுக் கவனிக்கத் தக்கதாகும்.

இத்தகைய அமைப்புகள், ஆட்கள்மீது வெறுப்புக் காட்டிக் கண்டிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் 1948இல் சொன்னதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
             -----------------------------"விடுதலை” தலையங்கம் 31-1-2013

13 comments:

தமிழ் ஓவியா said...


பெரிய மூடன்


தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.
(விடுதலை, 21.6.1964)

தமிழ் ஓவியா said...


கமல்ஹாசன் விஸ்வரூபம் தடை பற்றி...

வெளியே வந்துவிட்டது பூனைக்குட்டி!

கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,

கலைஞானி தம்பி கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத் திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைதான் தமிழகத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்திட்ட பிரச்சினை யாகும். 29-1-2013 அன்று மட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதியரசர் கே.வெங்கட்ராமன் முன்னி லையில் ஆறு மணி நேரம் இதுபற்றிய வழக்கு விசா ரணை நடை பெற்றுள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத் தில் ஜனவரி 25ஆம் தேதியன்று வெளியிடப் படுவதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து ஒரு இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக அரசு விஸ்வ ரூபம் திரைப்படத்தை தமிழகத்திலே வெளி யிட தடை பிறப்பித்தது.

தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தொடர்ந் தது. அந்த வழக்கு விசாரணைதான் ஆறு மணி நேரம் நடை பெற்றுள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தின்பால் நானோ, தம்பி கமல் அவர்களோ, நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களோ எந்த அளவிற்கு பாசமும் பற்றும் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை இந்தப் பிரச்சினை எழுந்தவுடன் 26-1-2013 நான் விடுத்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டி ருந்தேன்.

அந்த அறிக்கையில் மேலும் உலகில் எந்தவொரு பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் விமர்சனங்களையோ, கிளர்ச்சி களையோ, நானும் என் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் ஆதரித்தது இல்லை என்பதைக் குறிப்பிட்டதோடு, விஸ்வரூபம் திரைப்படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை மேலும் நீட்டிக்காமல், ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும், சட்டம், ஒழுங்கு, அமைதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப் பிலே உள்ள தமிழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பல தரப்பினரும் என்ன கூறுகிறார்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் விடுத்த அறிக்கை யிலும், இஸ்லாமியர்களுக்கு வேண்டு கோள் விடுத்து, இந்தத் திரைப்படத்தை வெளியிட உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. தலைவர் பொன். ராதா கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன், அமீர் போன்றவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்று அறிக்கைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டனர்.


தமிழ் ஓவியா said...

மேலும் அவர்கள் அறிக்கையில் கமல் எப்படிப் பட்டவர் என்பதையும், யாருடைய மனதையும் புண் படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்ப தையும் எடுத்து எழுதினார்கள். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சுமூகமான தீர்வு ஏற்படுத்த முதலமைச்சர் கமலஹாசனை அழைத்துப் பேசவேண்டுமென்று அறிக்கை விட்டிருந்தார். இவ்வளவிற்கும் மேலாக, கலைஞானி கமல் அவர்களே விடுத்த அறிக்கையில் தான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், இந்தப் படமும் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லீம்கள் தனக்கு சகோதரர்கள் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும் தமிழக அரசு தான் விதித்த தடையைத் திரும்பப் பெற முன் வரவில்லை.

தமிழக அரசு இந்த அளவிற்குக் கடுமையாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் ஒரு சாரார், இந்தத் திரைப்படத்தை அ.தி.மு.க.விற்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடி மாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் படத்தைத் தயாரித்தவர்கள் தாங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திரைப் படத்தைத் தயாரித்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்க மறுத்து விட்டு, அதிக விலைக்கு வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள். அதைப் போலவே, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கலைஞானி கமல் பேசும்போது, வேட்டி கட்டிய ஒரு தமிழன், பிரதமராக வர வேண்டும் என்று ப.சிதம்பரம் அவர்களைக் குறிப்பிட்டுப் பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை.

இந்த வழக்கினை விசாரிக்கும் உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களே, இந்தப் படத்தினை சிறப்புக் காட்சியின் மூலமாக நேரிலே பார்த்தார். அதன் பிறகு 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களே, இரு தரப்பினரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என்று தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை.

இந்து ஏடு என்ன கூறுகிறது?

29-1-2013 தேதிய இந்து நாளிதழ் இந்தப் பிரச்சினை பற்றி ஒரு நீண்ட தலையங்கமே Quash the Ban, Screen the Film அதாவது தடையை நீக்கு, திரைப்படத்தை வெளியிடு என்ற தலைப்பிலே எழுதியுள்ளது. அதில், The delay in overturning the unjustifiable ban on Kamal Haasan’s Vishwaroopam is beginning to appear every bit as unjustifiable. It was only two years ago that the Supreme Court set aside the two-month ban on the Hindi film Aarakshan on the ground that States cannot proscribe films that have been cleared by the Central Board of Film Certification on the mere apprehension that screening them may cause a law and order problem. As we pointed out recently, the landmark case that set the tone for such judgments was S.Rangarajan v/s P. Jagajivan Ram, where the Supreme Court held that “freedom of expression cannot be suppressed on account of threat of demonstrations and processions and threat of violence”. The ban on Vishwaroopam must be quashed and the police directed to provide adequate protection to threatres and moviegoers.”

(கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் நியாயமில்லாத தடையை விலக்கிக் கொள்வதில் ஏற்பட்டு வரும் தாமதம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய உச்சநீதி மன்றம் அரக்ஷன் என்ற இந்தித் திரைப்படத்திற்கு விதிக்கப் பட்டிருந்த இரண்டு மாதத் தடை உத்தரவை ரத்து செய்தது. அப்படி ரத்து செய்யும்போது மத்திய தணிக்கைக்குழு ஒரு திரைப்படத்திற்கு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படம் திரையிடப்படுவது சட்டம் ஒழுங்கு பிரச்சி னையை ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது. இந்திய உச்சநீதி மன்றம் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும் வழங்கி யுள்ளது. எஸ்.ரெங்கராஜன் என்பவருக்கும் பி.ஜெக ஜீவன்ராம் என்பவருக்கும் இடையே நடைபெற்ற ஒரு வழக்கில், உச்சநீதி மன்றம் வன்முறைக்கு வழி வகுக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்பதற்காக பேச்சுரி மையை நசுக்கக் கூடாது என்று தீர்ப்பு அளித் துள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப் பட்டுள்ள தடை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். வெளியிடப்படும் திரை யரங்குகளுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் தேவையான பாது காப்பைத் தர வேண்டும்)

- என்று இந்து ஏட்டில் தலையங்கத்திலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இந்து நாளிதழ் இவ்வாறு எழுதியதற்குப் பிறகும் தமிழக அரசு முன்வந்து தான் விதித்த தடையைத் திரும்பப் பெற்றிட முன் வந்ததா? முன் வந்திருந் தால்தான் மனித நேயமிக்க அரசாக அமைந்து விடுமே?

எந்த அளவுக்கு ஜனநாயகம்?

தமிழக அரசு முன் வராத காரணத்தால்தான் நேற்றையதினம் உயர் நீதி மன்றத்தில் ஆறு மணி நேரம் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.

அந்த வழக்கில் கமலுக்காக வாதாடியவர் யார் தெரியுமா? கழக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக திறம்படப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தான்! அவர் நீதி மன்றத்தில், விஸ்வரூபம் திரைப் படம் இந்திய முஸ்லீம்கள் யாரையும் அவமானப் படுத்த வில்லை என்றும், தமிழகம் முழுவதும் 31 மாவட்ட கலெக்டர்களும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று ஊகித்து ஒரே நேரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்றும், இந்தத் திரைப் படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்கும் போது, தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றும், தணிக் கைக் குழு அனுமதி வழங்கிய பிறகு, மாநில அரசு தடை விதிக்க முடியாது என்றும், இந்தப் படத்தில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் கமல்ஹாசன் முதலீடு செய்திருக்கிறார் என்றும் அடுக்கடுக்காக தன் வாதங்களை எடுத்து வைத்திருக் கிறார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் வெங்கட்ராமன் அவர்கள் தனது தீர்ப்பினை இரவு 10.15 மணிக்குத் தான் அளித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

அதில் இந்தத் திரைப்படத்திற்கு அரசு விதித்திருந்த 144 தடையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித் திருக்கிறார். ஆனால் இதற்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு மனம் இரங்கியதா? இல்லை, இரவோடு இரவாக நள்ளிரவில் 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பிலே உள்ள நீதியரசர் எலிபி தர்மாராவ் அவர்களின் வீட்டிற்கே சென்று, தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மனு கொடுத்திருக்கிறார் கள். தலைமை நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு இன்று (30-1-2013) காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன?

துப்பாக்கி திரைப்படம்

ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று இன்றைய டைம்ஸ் ஆப் இண்டியா ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை முஸ்லீம் வாக்கு வங்கியை ஈர்த்திடும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளதா? என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது.

அதில், முஸ்லீம்களையும் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அவர்களுடைய ஆட்சேபனைகளையும் அ.தி.மு.க. அரசு ஆதரிப்பது; முஸ்லீம் வாக்கு வங்கியை ஈர்த்துக் கொள்வதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் துப்பாக்கி திரைப்படத்திற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டபோது, முதலமைச்சர் ஜெயலலிதா உள்துறை செயலாளரிடம் இரு தரப்பினரையும் அழைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய தாகவும் முஸ்லீம் தலைவர் ஒருவர் தெரிவித்தார் என்று எழுதப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

கரசேவை - நினைவிருக்கிறதா?

டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியவாறு ஜெயலலிதா எப்படியாவது இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைப் பெற முயற்சித்தாலும், அவருக்கு இஸ்லாமியர்கள் பால் எந்த அளவிற்கு உண்மையான பற்று உண்டு என்பதற்கு கரசேவை நடைபெற்றபோது அவர் எவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தார் என் பதும், சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டுமென்று அறிக்கை விட்டவர் என்பதும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என்று கேள்வி எழுப்பியவர் என்பதும், கரசேவைக்கு அ.தி.மு.க. சார்பில் ஆட்களை அனுப்பியவர் என்பதும் இன்னும் மறந்திருக்க முடியாத நிதர்சன உண்மை களாகும்.

ஆனால் கமல் படத்திற்கு ஜெயலலிதா இந்த அளவிற்கு எதிர்ப்பினைக் காட்டுவதற்கு என்ன தான் காரணம்? இந்தப் பகை என்பது இப்போது ஏற்பட்ட தல்ல; அன்பு நண்பர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிரோடு இருந்தபோதே ஏற்பட்ட பகையாகும். கமல் அவர்கள் நடித்த விக்ரம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட போது, அம்மையார் ஜெயலலிதா தன் கைப்பட எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில்,
கமலஹாசனின் விக்ரம் படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில் நீங்கள் கலந்து கொள்ள சம் மதித்தும், உங்களை அவமானப்படுத்தும் விதத்தில் விளம்பரமே செய்யாமல் விட்டானே - அதை வேறு யாராவது உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தார்களா? நமக்கென்ன என்று மற்ற எல்லோரும் இருந்து விட்டார்கள். ஆனால் என்னால் அப்படி யிருக்க முடியவில்லை. அடுத்த நாளே - கமலஹாசன் படம் ரிலீஸ் ஆன நாளன்று - ஒவ்வொரு நாளேட் டிலும் முழு பக்க விளம்பரங்கள் கொடுத்தானே? நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ - நான் கவனித் தேன். தனக்காக விளம்பரம், முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலஹாச னுக்குத் தெரிகிறது - ஆனால் உங்களை, இவ்வளவு மக்கள் செல்வாக் குடைய முதலமைச்சரை அழைத்து விட்டு விளம் பரமே செய்யவில்லை என்றால் - அவன் உங்களைக் கிள்ளுக்கீரை என்றா நினைத்தான்? என்றெல்லாம் கைப்பட எழுதியதை நினைவுகூர்ந்தால்;

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப் பட் டுள்ள தடைக்கான உண்மைக் காரணம் தெரிகிறதா அல்லவா? பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று தந்தை பெரியார் அடிக்கடி கூறுவாரே; எதற்காக இந்தத் தடை என்பது இப்போது புரிகிறதா இல்லையா?

அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 31.1.2013)

தமிழ் ஓவியா said...


ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் எப்படி இருக்கும்?


ஈழத்தில் 90 தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டு இருக்கின்றன

ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் எப்படி இருக்கும்?
4 ஆம் தேதி டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்படும்!

தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

டில்லியில் பல்வேறு நாட்டுத் தூதர்களைச் சந்தித்து சென்னை திரும்பிய டெசோ அமைப்பு குழுவினர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், பேரா. சுப. வீரபாண்டியன், டி.ஆர். பாலு எம்.பி., தொல். திருமாவளவன் எம்.பி., ஆகியோர் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். (சென்னை, 30 .1.2013)

சென்னை, ஜன. 31 - 90 தமிழ் ஊர்களின் பெயர் களை சிங்கள மொழியில் மாற்றம் செய்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் - அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை வரும் 4ஆம் தேதி சென்னையில் கூடவிருக்கும் டெசோ அமைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் -டெசோ தலைவர் கலைஞர் அவர்கள்.

டில்லி சென்று திரும்பிய `டெசோ குழுவினரின் சந்திப் புக்குப் பின் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி!

புதுடில்லியில் பல்வேறு நாட்டுத் தூதர்களைச் சந்தித்து `டெசோ அமைப்பின் தீர்மா னங்களை வழங்கிவிட்டு சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை யிலான குழுவினர் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை நேற்று (30.1.2013) மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து விளக்கம் அளித்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கலைஞர் அவர்கள், டெசோ குழுவினர் டில்லி சென்று குடியரசுத் தலைவர், வெளிநாட்டுத் தூதர் களைச் சந்தித்து ஈழத் தமிழர்களின் துன்ப வாழ்வில் விடியல் காண்பதற்கான கருத்துக்களை - திட் டங்களை விளக்கியுள்ளனர். இதில் அமெரிக்கா முக்கியப் பங்காற்றும், அதற்கு அழுத்தம் கொடுக் கவே தூதர்களைச் சந்தித்துள்ளனர் என்றும் ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரலைக் காட்ட அதன் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை டெசோ குழு தீர் மானிக்கும். ஈழத் தமிழர்களின் விடிவு காலத்தை விரைவுபடுத்து வதற்கான தொடர் நடவடிக்கைகள் பற்றி வரும் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள `டெசோ இயக்கம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.


தமிழ் ஓவியா said...

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியா ளர்களிடம் கூறியதாவது : -

தி.மு.க. தலைவர் கலைஞர் :- டெசோ வகுத்த திட்டப்படி, இந்த அமைப்பிலே உள்ள குழு வினர் டில்லி சென்று, அங்குள்ள வெளி நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர்கள் நிலை குறித்த விளக்கங்களையும், அவர்களின் துன்ப வாழ்வு விடியல் காண் பதற்கான கருத்துக்களையும், திட்டங்களையும் டெசோ இயக்கத்தின் சார்பில் விளக்கியிருக்கிறார்கள்.

டில்லி சென்ற இந்தக் குழுவில் தளபதி மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கழகத் தலைவர் தொல். திருமா வளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற தி.மு. கழகக் குழுவின் தலைவருமான டி.ஆர். பாலு ஆகியோர் சென்று திரும்பியுள்ளார்கள். இவர்கள் மான்டி நீக்ரோ, யு.எஸ்.ஏ., ரஷ்யா, இத்தாலி, மலேசியா, எஸ்டோனியா ஆகிய நாடுகளின் தூது வர்களைச் சந்தித்து டெசோ இயக்கத்தின் தீர்மானங் களையும் கருத்துக்களையும், ஈழத் தமிழர்களின் விடிவுகாலத்தை விரைவுபடுத்து வதற்கான முயற்சி களில் குறிப்பிடப்பட்ட இந்த நாடுகளும் உதவிக் கரம் நீட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டி ருக்கிறார்கள். சென்று திரும்பியுள்ள குழுவினர் வருகிற 4ஆம் தேதி நடைபெறவுள்ள டெசோ இயக்கத்தின் கூட்டத்தில் இவற்றை விளக்கி தொடர் நடவடிக் கைகள் பற்றி டெசோ இயக்கம் முடிவெடுத்து அறிவிக்கும்.

நான் குறிப்பிட்ட மற்ற நாடுகளின் தூதுவர்கள் அன்னியில், இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களையும் சந்தித்து, அவருடைய ஆதரவையும் கோரியுள்ளார்கள்.
விஸ்வரூபம் படப் பிரச்சினை:

விளக்கமளித்து நீண்ட கட்டுரை!

செய்தியாளர் :- விஸ்வரூபம் படப் பிரச் சினையால் கமல்ஹாசன் இந்தியாவை விட்டே வெளியேறப் போவதாகச் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- நான் இதைப் பற்றி முரசொலியில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். அதைப் படித்தால் விளக்கம் பெறலாம்.

செய்தியாளர் :- காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டு மென்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எந்தவித மான எதிர்ப்பும் பெரிதாக இல்லாமல் வேறு விஷயங்களில் அரசின் கவனம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?

தமிழ் ஓவியா said...

கலைஞர் :- உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் எல் லாம், அதனுடைய விளைவுகளைப் பற்றித் தான் சொல்ல முடியுமே தவிர, நீதிமன்றத்தின் தீர்ப்பு களைப் பற்றி விமர் சிக்க இயலாது, கூடவும் கூடாது.

செய்தியாளர் :- கடந்த அய்.நா. மன்றத்தில் இலங்கை பற்றி இயற்றப்பட்ட தீர்மானத்திற் கும், வரும் மார்ச் மாதத்தில் மனித உரிமை ஆணையத்தில் எந்த விதமான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று டெசோ மூலம் வலியுறுத் தப்படுமா?

கலைஞர் :- அதைப் பற்றியெல்லாம் 4ஆம் தேதிக்குப் பிறகு சொல்கிறோம்.

செய்தியாளர் :- அமெரிக்க நாட்டுத் தூதரைச் சந்தித்தபோது, டெசோ குழுவினருக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருந்தது?

கலைஞர் :- அமெரிக்கா முக்கியப் பங்காற் றும் என்று எதிர்பார்க்கிறோம், நம்புகிறோம். அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இப்போது தூதுவரைச் சந்தித்திருக்கிறோம்.

செய்தியாளர் :- மத்திய அரசு பத்ம விருதுகளை அளிப்பதில் தென்னகம் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பாடகி ஜானகி அம்மையார் அந்த விருதையே மறுத்திருக்கிறாரே?

தமிழ் ஓவியா said...


கலைஞர் :- அந்த விவரங்கள் எனக்குத் தெரி யாது. அந்த விருதைப் புறக்கணித்த இசையரசி ஜானகி அம்மையாரிடம்தான் முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

செய்தியாளர் :- அந்த அம்மையார் தெரிவித்த; தாமதமாக இந்த விருது கிடைத் திருக்கிறது என்ற கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?

கலைஞர் :- நான் அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் செய்தி யாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தி.மு.க. நாடா ளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் சுகவனம் மற்றும் தி.மு.க. சென்னை மாவட்டச் செய லாளர் ஜெ. அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.



ராஜபக்சே வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் எப்படி இருக்கும்?

செய்தியாளர் :- கடுமையான எவ்வளவோ எதிர்ப்புகளையும் மீறி ராஜபட்சே இந்தியாவிற்கு வரப்போவதாகத் திட்டமிட்டிருக்கிறார். அப்போது டெசோ இயக்கம் என்ன செய்யும்?

கலைஞர் :- இப்போது தமிழீழத்தில் தமிழ் மொழி, பண்பாடு - இவற்றையெல்லாம் அறவே ஒழிப்பதற்கு சிங்கள அரசு திட்டமிட்டு, அதற்கு அடையாளமாக இதுவரையிலே ஏறத்தாழ 90 ஊர்களின் தமிழ்ப் பெயர்களை, சிங்களப் பெயர்களாக மாற்றியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை ஏற்கெனவே கொன்று குவித் ததற்கு ஈடான செயலாகவே இந்தப் பெயர் மாற்றங்களை நாங்கள் கருதுகிறோம். எனவே எங்கள் எதிர்ப்புக் குரலைக் காட்ட ராஜபட்சே வரும்போது எங்கள் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை டெசோ குழு தீர்மானிக்கும்.

செய்தியாளர் :- மொத்தம் 47 நாடுகளின் தூதுவர்களைச் சந்திக்கப் போவதாகச் சொல்லப்பட்டது. மீதமுள்ள நாடுகளின் தூதுவர்களையும் சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?

கலைஞர்:- முதற்கட்டமாக தற்போது இந்த நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்திருக்கிறார்கள். அதற்கடுத்த கட்டங்களில் மற்ற நாடுகளின் தூதுவர்களையும் இந்தக் குழுவிலே உள்ளவர்கள் சந்திப்பார்கள்.

செய்தியாளர்:- புதிய தலைமைச் செயலகத்தில் அவசரமாக இன்றைய தினம் மருத்துவமனையைத் தொடங்கியிருக்கிறார்களே?

கலைஞர்:- தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற இதுபோன்ற காரியங்களைப்பற்றி, நான் என்ன சொல்ல முடியும்?

தமிழ் ஓவியா said...


அப்பா - மகன்


சுலப வழி

மகன்: நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந் தால் ரூ.25 லட்சம் சன் மானம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறி வித் துள்ளதே - அப்பா!

அப்பா: பரவாயில்லையே, வேலையில்லாதவர்கள் நக்சலைட்டுகள் ஆகி ரூ.25 லட் சம் ஜாக்பாட் பரிசைத்தட்ட இது சுலப மான வழிதான், மகனே!

தமிழ் ஓவியா said...


அண்ணாவும் - காமராசரும்!

தி.மு.க. பெரிய வெற்றியடையும் செய்தி மகிழ்ச்சியுடன் வந்து கொண்டுள்ளது. பெருந் தலைவர் காமராசர் தோற்று விட்டார் என்று தி.மு.கவினர் மகிழ்ச்சியுடன் கூறுகின் றனர். அறிஞர் அண்ணா அனைவரையும் அமைதி காக்கச் சொல்லி மிகவும் வருத்தப் பட்டாராம். காமராசர் வெற்றி பெற்று புது டில்லி சென்றால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்வார்.நம்மால் அவ்வளவு செய்ய முடியுமா என்றாராம். உலகத் தமிழ் மாநாடு மிகச் சிறப்பாகச் சென்னையில் நடக்கின்றது. முதல்வர் அறிஞர் அண்ணா காமராசரை அழைத்துச் சிறப்பிக்கின்றார். சிலர் கிண்டல் செய்கின்றார்கள். காமராசர் என்ன தமிழறிஞரா என்று அறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுச் சென்னை அரசு மருத்துவமனையிலே இருக்கின்றார். பார்க்க வந்த காம ராசர் மருத்துவர்களிடம் கேட்கின்றார். சரியான பதிலை அளிக்காமல் திணறுகின்றனர். உடனே காமராசர் அமெரிக்கா கொண்டு சென்று மருத்துவம் பார்க்க உடனே ஆவன செய்யுங்கள் ஆம்! என்று ஆணையிடுகின்றார் !

மும்பை விமான நிலையத்திலே நள்ளிரவு நேரத்திலே மாநில ஆளுநர் வந்திருக்கின்றார். அண்ணா அவர்கள் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அவர் பெருந்தலைவர் காமராசரின் ஆணை! உங்களை இங்கு பார்த்து அனுப்பிவைக்கச் சொன்னார் என்றாராம் .

அது தமிழகம்! இன்று நீங்களே சொல்லுங்கள்!

- சோம. இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


கமல்ஹாசன் மீது பார்ப்பனர் சங்கம் திடீர் பாய்ச்சல்!


சென்னை, பிப். 3- இஸ்லாமியர்கள் பிரச்சினையை முடித்து விட்ட கமல்ஹாசன் அடுத்து பார்ப்பனர்களிட மிருந்து புது எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக பார்ப்பனர் சங்கம் ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் அந்த சங்கம் புகார் மனுவைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக புகார் மனுவைக் கொடுத்த அதன் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்பு கொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது. இது எங்களின் உணர்வை புண்படுத்து கிறது. கமல் முற்போக்குவாதி, அறிவுஜீவி என்று சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பார்ப்பனராக அங்கீ கரித்தது கிடையாது. பூணூல் என்பது சொறிந்துகொள் வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பார்ப்பனராக இருக்க முடியும். விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டு வதைவிட ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து தேங்காய் உடைத்திருந்தால் விஸ் வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும் என்றார். இன்னொரு பார்ப்பனர் சங்கம் தடை கூடாது என்கிறது இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத் தலைவர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் படத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தியிருப்பதால் அப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேறு பார்ப்பன சங்கத்தினர் புகார் தெரிவித்திருகின்றனர். அப்படி படத்தை தடை செய்யக்கூடாது. ஒருவனை அழவிட்டு கண்ணீரை வேடிக்கை பார்ப்பவன் பார்ப்பனன் அல்ல. அதனால் படத்தை எதிர்க்கக்கூடாது. அவர் மிகுந்த பொருட் செலவில் படத்தை எடுத்திருப் பதால் தடை செய்யக்கூடாது. ஆனால், கமலஹாசனை நாங்கள் ஒரு மனிதனாகவே மதிப்பது கிடையாது. தாய்நாட்டையும், தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டி புதைக்கும் பணியை கமல் காலம் காலமாக செய்து வருகிறார். தன் வீட்டு பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் இருப்பதாக கமல் கருதுகிறார். அவர் வீட்டு பெண்கள் எப்படி இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும், அதே நிலைப்பாட்டுடன் தேசத்தில் உள்ள அனைவரையும் எண்ணுதல் கூடாது. கமல் எங்கள் இனத்தை கேவலப்படுத்தி காட்சி வைத்திருந்தால் அவர் அழிந்து போகவேண்டும் என்று நினைக்க மாட்டோம். அவராகவே தன் தவறை உணர வேண்டும் என்றார்.