Search This Blog

27.12.10

அய்யப்பனும் பம்பா நதியும்


பம்பா நதி

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக பம்பா நதியில் முழுக்குப் போடுவார்கள். பொதுவாகவே கோயிலையொட்டி இருக்கும் குளம் அல்லது நதிகளில் போடும் முழுக்குக்குப் பெயர் புண்ணிய முழுக்காம்.

கும்பகோணம் மகாமகத்தில் குளிப்பது என்பதுதான் பிரதானம்! 12 வருடம் செய் யும் பாபங்கள் ஒரே முழுக்கில் (Whole Sale) காலி!

இப்படி பாவங்களைத் தைரியமாகச் செய்யத் தூண்டும் ஏற்பாட்டுக்கு - லைசென்சுக்குப் பெயர்தான் கோயில் வழிபாடு - புண் ணிய முழுக்கு - இத்தியாதி... இத்தியாதி!

நாட்டில் குற்றங்கள் பெருகினால்தான் மதச் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் அனைத்திற்கும் கொள்ளை லாபமும் - கொண்டாட்டமும்!

கடவுள்களே குற்றங்கள் செய்தார்கள் - கொலை செய்தார்கள் - கொள்ளை அடித்தார்கள் - கற்பழித்தார்கள் என்று எழுதி வைத்திருப்பதும் - அவற்றிற்காக விழாக்கள் கொண்டாடுவதும் எல்லாம் மக்கள் மத்தியில் ஒழுக்கம் பரவவேண் டும் என்பதற்காக அல்ல - மாறாகக் குற்றங்கள் பெருக வேண்டும்; அதன்மூலம் பிராயச்சித்தம் - கழுவாய், நேர்த்திக் கடன் என்று கூறி மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கலாம் - பொருளைச் சுரண்டலாம் என்பதுதான் இந்த முடிச்சுக்குள் பதுங்கி யிருக்கும் இரகசிய சதி!

இந்த வகையில் ஒவ் வொரு கோயிலுக்கும் - நதிகள் மற்றும் ஆறுகளுக் கும் தலப் புராணங்கள் எழுதி வைத்துள்ள சூழ்ச்சியும் இதுதான்.

காந்தியாரைச் சுட்டுக் கொன்றதற்கே காஞ்சிசங் கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன கூறினார் தெரியுமா? தோஷங்களுக்கெல்லாம் பரிகாரம் ஸ்நானம்தான் என்றார். இதன் பொருள் காந்தியாரை இந்து மத வெறியன் - பார்ப் பான் சுட்டுக் கொன்றதுகூட ஒரு குளியலில் (ஸ்நானத் தில்) தீர்ந்து போய்விடுமாம்.

அறிவியல் ரீதியில் உண்மை என்னவென்றால், இந்தப் புண்ணிய நதிகள் என்று விளம்பரப்படுத்தப்படுபவை எல்லாம் நோய்களின் ஒட்டுமொத்தமான உறைவிட மாகும். கிருமிகள் மொத்த குத்தகை எடுத்துக் கொண்டு குலாவும் இடமாகும்.

அய்யப்பப் பக்தர்கள் பம்பா நதியில் குளித்துக் குதித்தாடும் காட்சிகளை ஏடுகள் படம் எடுத்துப் போட்டுள்ளன.

இதனைப் பார்க்கும் பொழுது, படிக்கும்பொழுது நமது மனிதநேய நெஞ்சம் பதைபதைக்கிறது. பக்தி புத்தியைக் கெடுத்து உடல் நலனையும் கெடுத்துத் தொலைக்கிறதே என்கிற பரிதாபம்தான் பகுத்தறி வாளர்களுக்கு.

பம்பா நதிபற்றி இதற்கு முன் வந்த தகவல்களைக் கொஞ்சம் அறிவுத் தராசில் எடை போட்டுப் பார்க்கட்டும்!

நூறு லிட்டர் பம்பா நதியில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கண்டு பிடித்துச் சொல்லியுள்ளனர். 1999-2000 ஆம் ஆண்டில் இந்த அளவு 2 லட்சத்து 55,000 கிருமிகள் இருப்பதாகக் கூறப்பட்டது. பெரும் பாலும் பம்பா நதி மனிதக் கழிவுகளால் பாழ்பட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்த வகை பாக்டீரியாக் கள் 500 என்ற அளவில் இருந்தாலே ஆபத்து - இரண்டரை லட்சம் என்கிற போது தலையே சுற்றுகிறது!

மனிதநேயப் பகுத்தறிவுவாதிகள் பரிதாபப்படுகிறார்கள் - பதறுகிறார்கள். மத வாதிகளோ சபாஷ் போட்டு, சுரண்டலுக்குக் கோணிப்பைகளைத் தயாராக வைத் துள்ளனர்!

--------------- மயிலாடன் அவர்கள் 17-12-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments: